அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 8, 2008

உத்தப்புரம் பிரிவினை மதில் இடிப்பு. மனதில் படிந்த பிரிவினை மதில் இடிப்பு எப்போ????

உத்தப்புரம் பிரிவினை மதில் இடிப்பு. மனதில் படிந்த பிரிவினை மதில் இடிப்பு எப்போ????

மதுரை உத்தப்புரம் பகுதியில் இருபது வருடமாக மேல் வகுப்பு மக்களால் தலித் மக்களுக்கு எதிராக அவர்கள் தங்கள் பகுதிக்கு வராமல் இருக்க  அவர்களுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த  மதில் காவல் துறையின் மிகுந்த பாதுகாப்புக்கிடையே அரசு அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. ஒருப்பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும்  அந்த மதிலை கட்டிய மேல்வகுப்பு மக்கள் தாங்களாகவே முன்வந்து இடித்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அதற்கு பதில் மதிலை இடிப்பதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குடியிருப்பை காலி செய்து அருகிலுள்ள மலைக்கு சென்றுவிட்டார்கள். அரசு அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. அவர்கள் மனதில் குடிபுகுந்துள்ள ஜாதி வெறி என்னும் மதில் இடிந்து விழும் நாள் தான் உண்மையான மகிழ்ச்சியின் நாளாகும்..
 


FREEING THE FETTER: A portion of the wall, which was built across the common path at Uthapuram, was razed on Tuesday.
 
 
நன்றி http://www.hindu.com/2008/05/07/stories/2008050757930100.htm

0 comments: