அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2013

விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும்.

விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும்.

இந்த விதியைக் கடைபிடிக்காத காரணத்தால் அநேக தவறான கருதுக்களும்
கொள்கைகளும் பரவியிருக்கின்றன. நகைப்பிற்கேது வான சில விளக்கவுரைகளை நாம்
பிரசங்க பீடங்களில் கூறப்பட்டு வருகின்றன.

உதாரணமாக திறமை வாய்ந்த போதகர் "பாளையம்" என்ற வார்த்தையின் பேரில்
பிரசங்கத்தை ஆயத்தஞ் செய்ய விரும்பி ஒத்தவாக்கிய அகராதியில் "பாளையம்"
என்ற சொல்லைக் கண்டுபிடித்தார். அகராதியில் இருந்த ஏராளமான வசனங்களுள்
பிரசங்கமளிப்பதற்குப் பொருத்தமாயிருப்பதாக தான் நினைத்த பத்து வசனங்களைத்
தேர்ந்தெடுத்து (யாத்திரகாமம் முதல் வெளிப்படுத்தல் முடிய) செய்தி
அளித்தார். அவ்வசனங்களில் யாத். 32:17, 18 யைப் பற்றி பேசுகையில்
கிறிஸ்தவ பாளையத்தில் பாடல்தொனி கேட்க வேண்டும் என்றார். ஆனால் முன்
பின்னுள்ள தொடர் வாக்கியங்களைப் பார்த்தால் அந்தப் பாடல்
கண்டிக்கப்படத்தக்க அவலட்சணமான பாடலின் இரைச்சலாயிருந்தாகத் தெரிகின்றது.
இந்த மாதிரிப் பாடல் கிறிஸ்தவ பாளையாமாகிய திருச்சபையில்கேட்கப்பட
வேண்டுமா? பின்னும் உபாகமம் 23:14 'உன் தேவனாகிய கர்த்தர்…. உன்
பாளையத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கிறார்." என்ற வசனத்தையும்
குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முன்னுள்ள 13ம் வசனத்தை அவர் விளக்கஞ்
செய்யாமல் விட்டுவிட்டார். நாம் வேதவசனத்தின் கருத்தைத் திரித்துக்
கூறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு ஒத்த வாக்கிய அகராதியைப்
பயன்படுத்துவது தவறான கருத்துக்களை நாமாகவே உருவாக்கிக் கொள்ளும்
குற்றத்திற்கு ஏதுவாகும்.




1. ஓரே சொல்லுக்கு முன் பின்னுள்ள வசனங்களுக்குகேற்ப வெவ்வேறு
கருத்துக்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக விசுவாசம், மாம்சம்
இரட்சிப்பு என்ற சொற்களைக் குறித்து ஆராய்வோம்.


(அ) விசுவாசம் : இந்தச் சொல்லுக்குக் குறைந்தது நான்கு பொருள் கூறலாம்
I. விசுவாசம் – நற்செய்தி கலா. 1:23; 1 தீமோ 3:9 4:1

II. விசுவாசம் – நல் மனச்சாட்சி ரோமர் 14:23
"விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே – ப.தி ; பு.தி. அல்லது உறுதியான
மனநிலையோடு (நல்லெண்ணத்தோடு) செய்யாதது பாவமாகும்" (R.C.V)

III. தெய்வீக உண்மைகளைப் பற்றும் தன்மை எபி. 11:6 இந்தக் கருத்தில்
விசுவாசம் தன்னம்பிக்கைக்கு ஒத்ததாயிருக்கின்றது.

IV. பாவ மன்னிப்பு, பரிசுத்தம் இவைகளுக்கு ஆதாரமான கிறிஸ்துவையும்,
அவருடைய பிராயச்சித்தத்தையும் (atonement) மனப்பூர்வமாய் பற்றும் தன்மையே
ரோ 3:28 இல் பார்க்கிறோம். இதுவே இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் பவுல்
அப்போஸ்தலன் இந்தக் கருத்தை மனதில் கொண்டு அடிக்கடி இந்தச் சொல்லைப்
பயன்படுத்துகின்றார்.

(ஆ) மாம்சம்.: இந்தச் சொல்லுக்கு குறைந்த்து மூன்று பொருள் உண்டு.
I. சாதாரண கரத்து : யோவான் 1:14, ரோமர் 1:5, 9:3 மனிதத் தன்மை மாமிசம்
என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. பாவம் என்பதைப் பற்றிய எண்ணமேயில்லை.

II. பாவத்தால் தீட்டுப்பட்டுப்போன மாம்சம் அல்லது மனிதத் தன்மை. ரோமர்
8:5, எபே. 2:3

III. மாம்சம். – சடங்கு கலா. 3:3, 6:12, பிலி. 3:3

(இ) இரட்சிப்பு : என்ற சொல்லுக்கு குறைந்தது ஐந்து பொருள் உண்டு.
I. இரட்சிப்பு – சரீர அல்லது நாட்டுப் பாதுகாப்பு. யாத். 14:13, நியா.
2:16, 3:9,15 அப். 7:25
இந்த இரட்சிப்பு … ஆன்மீக இரட்சிப்புக்கு நிழலாட்டமாயுள்ள ஒரு
முன்னடையாளமாயிருக்கலாம்

II. இரட்சிப்பு – உடல் நலம் யாக். 5:15 விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை
இரட்சிக்கும் (ப.தி)

III. இரட்சிப்பு – இப்பொழுது அனுபவித்து வருகின்ற மீட்பு எபே. 2:8, லூக் 1:77

IV. இரட்சிப்பு – வருங்காலத்தில் வெளிப்படப்போகின்ற மீட்பு ரோமர் 13:11;
1 பேதுரு 1:5

V. இரட்சிப்பு – நற்செய்தி எபி. 2:4



2. முன்பின்னுள்ள வாக்கியங்கள் ஒரு சொல்லின் கருத்தை மட்டுப்படுத்தக் கூடும்.

(அ) "என் நீதியின்படி என்னை விசாரியும்" சங். 7:8, 18:20
தான் முழுவதும் நீதிமான் என்பது தாவீதின் கருத்தன்று. ஆனால் "கூஷ்"
தன்பேரில் சாட்டின குற்றத்தில் தான் தாவீது கூறுகிறார். யோபும்
இதேகருத்துடன் அடிக்கடித் தன்னை நீதிமான் என்று அழைக்கின்றார்.

(ஆ) இவன் செய்த பாவமுமல்ல…" (யோவான். 9:3)
இவனும் இவன் பெற்றோரும் எந்தப் பாவத்தையும் செய்த்தில்லை என்பது இதன்
கருத்தன்று. இவனுடைய குருட்டு நிலைமைக்கு இவன் பெற்றோரோ அல்லது இவனது
முன்னோரோ காரணம் அல்ல என்று ஆண்டவர் கூறுகின்றார்.

(இ) "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்" (யாக். 5:15)
பிணியாளியைக் குணக்மாக்கும் என்பது பொருள் ரோமன் கத்தோலிக்க பாதிரியின்
அவஸ்தை பூசைக்கோ (Extreme Unction) அல்லது தெய்வீக சுகமளிக்கும் மாபெரும்
நற்செய்திக் கூட்டங்களுக்கோ இங்கு ஆதாரமில்லை என்பதைக் கவனிக்கவும்.

(ஈ) "பெண்ணைத் தொடாமலிப்பது நல்லது (1 கொரி. 7:1)
திருமணம் செய்யாதிருப்பது நல்லது என்பது கருத்தன்று. (திருமணம்
அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக என்று எபி. 13:4 கூறுகின்றது)
அக்காலத்தில் நிலவிய பயங்கர சூழ்நிலையினிமித்தம் திருமணம்
செய்யாதிருப்பது நலமாயிருக்கும் என்று பவுல் எண்ணியிருக்கலாம்.
திருமணம் செய்யாத வாலிபர்கள் பெண்ணைத் தொடமலிருப்பது நல்லது என்ற
பொருளும் இவ்வசனத்தில் காணக்கூடும். திருமணமான பின் கணவன் தன் மனைவியைத்
தொடாமலிருப்பது குற்றமாகலாம். (1 கொரி. 7:3-5)


3. வஞ்சிப்புகழ்ச்சி அல்லது பரியாச முறையில் சொல்லப்படும் கூற்றுக்களைச்
சொல்லுக்குச் சொல் பொருள் செய்யாமல் உடக்கருத்தைக் கவனிக்க வேண்டும்

(அ) பிலேயாம் தான் போகவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தபின் தேவனின்
அனுமதியைப் பெறும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்த்தின் விளைவாக கடவுள் "போ" என்று அனுமதி அளித்தார். (எண். 22:20)
ஆனால் பிலேயாம் செல்வது கடவுளுக்குச் சித்தமில்லை என்பது தெளிவு. (எண்.
22: 22)

(ஆ) "போம், உமக்கு வாய்க்கும்" (1 இரா. 22:15) தீர்க்கதரிசி இந்த
வார்த்தைகளைப் பரியாசமாகப் பேசியதாக அரசரே அவனுடைய தொனியினாலோ முகத்
தோற்றத்தினாலோ தெரிந்துகொண்டார். மிகாயாவின் உண்மையான கருத்து 17ஆம்
வசனத்திலுள்ளது.

(வளரும்)


IP Logged
http://paralogapathi.blogspot.com/

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=2658&Itemid=287

September 9, 2013

கோழி முட்டையிடும் TNTJ

கோழி முட்டையிடும் TNTJ

 

பதறிப்போய் நடுநடுங்கி, என்ன பேசுகிறேன் என்றே தெரியாமல் தட்டுத்தடுமாறி, ஜெரி தோமஸ் என்ற பெயர் தவறியாவது தன் வாயில் வந்துவிடகூடாது என்று கமராவைகூட பார்க்காமல் இவ்வளவுகாலம் விவாத அழைப்பு விடுத்துவந்த, பீஜே இஸ்லாத்தின் விவாதங்களுக்கு பொறுப்பான செய்யிது இப்ராஹிம் திடீரென்று இனிய அழைப்பு விடுகிறதை கண்டு ஒருகணம் திடுக்கிட்டுவிட்டேன்.

 

ஆம், பீஜே இஸ்லாத்தின் மெகா சீரியல் பற்றி நான் எழுதிய ஒரு சிறிய கட்டுரையை வாசித்து, அச்சமடைந்து, நடுநடுங்கி, உடனேயே பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி, மெகா சீரியலில் நான் நடிகர்கள் என்று பெயர் குறிப்பிடாத சிலரையும் வைத்து, ஜெரி தோமஸ் உள்ளிட்ட சான் குழுவினருக்கு எதிராக, 'அவர்கள் தான் இப்படி கட்டுரை எழுதினார்கள்' என்று ஒவ்வொருவரும் பக்கத்திலிருந்து பார்த்தது போல், அறிக்கையிட்டு, கடைசியில் சான் குழுவின் ஒரு ஊழியரான பிரதர் வெங்கடேஷ் அவர்களிடம் மிக மிக அருமையாக வாங்கிக் கட்டிகொண்டதை இன்னும் செய்யிது இப்ராஹிம் மறக்கவில்லை என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.

 

விவாத அழைப்பு இனிய அழைப்பாக மாறியம் இரகசியம்தான் என்ன? https://www.facebook.com/photo.php?v=382765591850926&set=vb.338454826173538&type=2&theater

 

அடுத்த கட்டமாக TNTJ யின் உத்தியோகபூர்வ விவாத பேச்சாளராக டைரக்டர் செய்யிது இப்ராஹிமால் காண்பிக்கப்பட்ட ஜெய்சங்கரை நடுரோட்டில் விட்டுவிட்டதை இந்த நாடகத்தை தொடர்ந்து பார்த்த யாரும் அனுமதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பிரதர் வெங்கடேஷ் அவர்கள் "நாங்கள் தனிநபர்களுடன் விவாதிப்பதில்லை. TNTJ யின் உத்தியோகபூர்வ ஈமெயிலில் இருந்து ஈமெயில் அனுப்புங்கள்" என்று மிக மிக தெளிவாக சொல்லியும் அப்படி செய்யாமல் ஜெய்சங்கரின் தனிப்பட்ட ஈமெயில் ஐடியில் இருந்து பதில் வருகிறதை பார்த்தவுடன் ஜெய்சங்கரின் அப்பாவித்தனத்தை பார்த்து மிகவும் மனவேதனையடைந்தேன்.

சரி, பீஜே கோட்டை ஆட்டம் கண்டுவிட்டது என்று பரிதாபப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் சான் குழுவிலிருந்து அடுத்த வீடியோ வருகிறது "TNTJ யின் இன்னுமொரு நாடகம் அரங்கேற்றம்அதனை பார்த்தவுடன் ஜெய்சங்கர், துண்டைக்காணம் துணியைக்காணம் என்று ஓடிவிட்டார். டைரக்டர் செய்யிது இப்ராஹிமும் இன்றுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. பலநாட்களுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் மறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய நாடகத்துடன் மேடையேறியிருக்கிறார் இந்த மகா நடிகர்.

நான் இப்பொழுது ஒரு சவாலை TNTJ க்கு முன்வைக்கின்றேன். புலனாய்வு ரிப்போட் எடுப்பதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பில் இருக்கும் நீங்கள் உங்கள் புலனாய்வு திறமையை பயன்படுத்தி, இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் போன்ற அற்புத ஆராதனை கூட்டங்கள் நடாத்துகிற கிறிஸ்தவ அமைப்புகளுக்குள் உங்கள் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி, அந்த அமைப்புகளுக்கு நாள்தோரும் எத்தனை இஸ்லாமியர் தொலைபேசியில் பேசுகிறார்கள்? நாளுக்கு எத்தனை கடிதங்கள் வருகிறது? எத்தனை செல்வந்த இஸ்லாமியர் எத்தனை இலட்சம் ரூபாய்களை நன்கொடையாக வாரி வழங்குகிறார்கள் என்ற ஒரு அறிக்கையை செய்து, புலனாய்வு ரிப்போட்டை வீடியோவாக போடுவீர்களா?

 

அப்படி செய்வீர்களானால் உங்கள் கோட்டை மட்டுமல்ல அனைத்து இஸ்லாம்களும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. என்ன, TNTJ கோழி முட்டையிடுகிறது. கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஆமைமுட்டையிடுகின்றனர். இதுதான் இரகசியம்.

 

இப்போது சொல்வீர்கள். அப்படி ஜெபத்தேவைக்காக யாராவது இஸ்லாமியன் கால்பண்ணுவானேயானால் அவனுக்கு இஸ்லாம் சரியாக தெரியாது என்று. அதையேதான் நானும் சொல்கிறேன். யாராவது ததஜவிடம் கால்பண்ணி இஸ்லாம் சரியானது என்று யாராவது கிறிஸ்தவர் சொல்வாரேயானால் அவர் லேபல் கிறிஸ்தவரேயாவார். இறைவனின் வேதமாம் பைபிளை சரியாக ஆராய்ந்து படிக்காத காரணத்தினாலேயே இப்படி இச்சிக்கிற, போதனைகளில் சிக்குண்டு நிரந்தர நரகவாதிகளாக தங்களை தாங்களே அடையாளம் காட்டிகொள்கிறார்கள்.

இதிலிருந்து கிறிஸ்தவ ஊழியர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், தயவு செய்து இறைவார்த்தையை ஒழுங்காகவும் தெளிவாகவும் தியானித்து பிரசங்கியுங்கள். உங்கள் அஸ்திபாரம் இறைவாத்தையாம் பைபிளில் இருக்கட்டும். விதைவிதைப்பவனின் உவமையை அடிக்கடி ஞாபப்படுத்திகொள்ளுங்கள்.

 

பாமர இஸ்லாமியருக்கு நான் சொல்வது. நானும் ஒரு காலத்தில் உங்களைபோன்று இமாம்கள், உலமாக்கள், மௌலவிமார் சொல்வதையே நம்பி வாழ்ந்தேன். ஆனால் எனது பாவங்களுக்காக, நான் மரிக்கவேண்டிய இடத்தில் மரித்து, எனது பாவங்களுக்கான விலையை செலுத்தி, நரக நெருப்பிலிருந்து என்னை விடுவித்த, ஈஸா அல் மஸீஹை எனக்கு குர்ஆனிலிருந்து, தான் யார் என்பதை வெளிப்படுத்தினார். இறைவன் தன்னை வெளிப்படுத்தாவிட்டால் அவரை கண்டடைவது முடியாத விஷயம். ஆகவே அவர் தன்னை வெளிப்படுத்துமாறு உங்கள் உள்ளத்திலிருந்து வேண்டுதல்களை செய்யுங்கள். ஆசை காட்டி மோசம் போக்குகிற இந்த வழிகேடர்களான உலமாக்களிடமிருந்து உங்களை காத்துகொள்ள எப்போதும் விழிப்பாக இருங்கள்.

மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.

 

SELECTED FROM : http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2688&Itemid=287

September 2, 2013

திருமறையை விளக்கும் முறை

Subject :Re:திருமறையை விளக்கும் முறை 

5. பெயர் வழக்கங்கள்

(அ) பல அரசர்களுக்கு ஒரே பெயர் இருந்தது. 

I.  பார்வோன் : ஆபிரகாம் காலம் முதல் தானியேலின் காலம் வரை எகிப்து நாட்டின்  அரசர்களுக்       
    கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது. 

II.  பித்தொலொமி : பேரரசன் அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின் மூன்று நூற்றாண்டுகளாக எகிப்து நாட்டின
     அரசர்களுக்கு பித்தொலொமி என்ற பெயர் வழங்கப்பட்டது. 

III.  அபிமெலேக்கு : பெலிஸ்திய அரசர்களுடைய பொதுப் பெயர்  (ஆதி. 20:2 ; 26:1; சங். 34 தலைப்பு)

IV. பெனாதாத் : சீரியா நாட்டின் அரசர்களுடைய பொதுப் பெயர்  (1 இராஜா 20:1, 2 இராஜா 8:7; 13:24)

V. ஏரோது : புதிய ஏற்பாட்டில் நான்கு அரசர்களுக்கு ஏரோது என்ற பெயர்  வழங்கப்பட்டது. 


(ஆ) சிலருக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.

I. மேசேயின் மாமனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாகத் தெரிகின்றது.  எத்திரோ(யாத். 3:1) ஓபாப். (நியா 4:11)

II. லேவி. (மாற். 2:14) (மத்தேயு 9:9; 10:3)

III. திதிமு எனப்பட்ட தோமா(யோவான் 11:16; 20:24;21:2) திதிமு என்பது இரட்டைப் பிள்ளைகளைக் 
     குறிக்கும்.
 நான்காம் சுவிஷேசத்தில் மட்டும்  திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

IV. சவுல் (அப். 7:58 முதல் அப். 13:9 முடிய)
        பவுல் (அப். 13:9 முதல் இறுதி வரை)

V. சீலா (அப். 18:5 சில்வானு (2 கொரி. 1:19)


(இ) ஒரே பெயர் கொண்ட இருவர்

I.  யாக்கோபு யோவானுடைய சகோதரன் பன்னிருவரில் ஒருவன் (மத். 10:2) சிரச்சேதம் பண்ணப்பட்டவன்.
    (அப். 12:2)
    யாக்கோபு இயேசுவின் சகோதரன் (மத். 13:55; கலா. 1:19) எருசலேம் சபை மூப்பர் (அப். 15:13) நிருபத்தை 
     எழுதியவர் (யாக். 1:1)

II.     பிலிப்பு பன்னிருவரில் ஒருவன் (மத். 10:3)
        பிலிப்பு எழுவரில் ஒருவன் (அப். 6:5; 21:8) நற்செய்திப் பணி செய்தவன் (அப். 8:5; 21:8)


(ஈ) வெவ்வேறு இடங்களுக்கு ஒரே பெயர்

I. செசரியா – பிலிப்பு செசரியா மத். 16:13
கலிலேயா கடலுக்கு வடக்கே, யோர்த்தான் நதிக்கு கிழக்கே, எர்மோன் மலைக்குத் தெற்கே, செசரியா துறைமுகம் அப். 10:1; 12:19;23:23 முதலியன கடலோரமாயுள்ளது. சமாரியா நாட்டிலுள்ளது. 

தமிழ் வேதாகமப் புத்தகத்தில் மூன்றாவது தேசப்படத்தில் (பலஸ்தீனா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்) இவ்விரண்டு செசரியா பட்டணங்களும் தெளிவாக்க் காட்டப்பட்டிருக்கின்றன.)

II. அந்தியோக்கியா- சீரியா நாட்டு அந்தியோக்கியா (அப். 11:20,26: 13:1) தமஸ்குவுக்கும் தீரு சீதோனுக்கும் வடக்கே சீப்புரு தீவுக்கும் கிழக்கே உள்ளது. 

இது நான்காவது பாடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். கலாத்தியா என்ற நாட்டின் பெயருக்குப் பக்கமாகவும் "க" என்ற எழுத்துக்கும் "ல" என்ற எழுத்துக்கும் நடுவாகவும் போட்டிருக்கிற புள்ளிதான் பிசீதியா நாட்டு அந்தியோகியா


(உ) ஒரே இடத்திற்கு மூன்று பெயர்கள் 

I.  எகிப்து நாடு
       காம் (சங். 78:51; 105:23) என்றும் ராகப் (சங். 87:4; 89:10;  ஏசாயா 51:9)  என்றும் அழைக்கப்பட்டது. ஏசாயா 30:7 இல் 
       சும்மாயிருப்பது இறை மக்களுக்கப் பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
       வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய 
       திருப்புதலைப் பார்க்கவும்)

II.  எருசலேம் 
       சீயோன் (சங். 137:1 என்றும் தாவீது வாசம் பண்ணின அரியேல் (ஏசாயா 29:1) என்றும் அழைக்கப்பட்டது.

III. சீனாய்மலை
     ஓரேப் (சங். 106:19) என்றும் அழைக்கப்பட்டது.

IV. கலிலேயா கடல்
       திபேரியா கடல்(யோவான் 21:1) என்றும் கின்னரேத் கடல் (எண். 34:11)  என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 

V. சாக்கடல் (Dead Sea)
      இந்தப் பெயர் வேதத்தில் இல்லை. மாறாகச் சமபூமயின் கடல் (2 இரா. 14:25)  என்றும் கீழ்க் கடல் (எசேக். 34:3,12) 
       என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. 

VI. மத்திய தரைக்கடல்
        மத்திய தரைக்கடல் என்ற பெயர் வேதத்தில் இல்லை. வேத்த்தில்  பெலிஸ்தரின் சமுத்திரம் (யாத். 23:31) 
        என்றும் கடைசி சமுத்திரம் (உபா. 11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும்                        வழங்கப்பட்டுள்ளது. 


முதல் விதி நமக்கு கற்றுத் தருவது
இலக்கண விதிகளின்படி வசனத்திலுள்ள சொற்களின் சாதாரணப் பொருளை நாம் முதலாவது கண்டறிய வேண்டும். 
(அத்தியாயம் 2 முற்றிற்று)
(வளரும்)

August 21, 2013

திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் 2- இலக்கணம் இன்றியமையாததே.(2)

Subject :Re:திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் 2- இலக்கணம் இன்றியமையாததே.(2)

4. மொழிமரபுகள்

ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் பொருளை விளங்கிக் கொள்ளச் சிலவேளைகளில் அம்மொழி மரபுகளையும் கவனிக்க வேண்டும். எபிரேய மொழியின் சில மரபு வழக்குகளை ஆங்கில வேதாகமத்திலும் தமிழ் வேதாகமத்திலும் காணலாம். குறிப்பாகப் புதிய திருப்புதலைப் பார்க்கவும். 

(i)  ஏதோ ஒரு முக்கிய பண்புடையவனை அந்தப் பண்பின் மகன் என்ற ழைப்பது ஒரு மொழி வழக்கு. 

1 சாமுவேல் 2:12 "பேலியாளின் மகள்"                       – ப.தி

"ஏலியின் குமாரர் போக்கிரிகளாயிலுந்தார்கள்         – பு.தி

பேலியாள் ஒரு பிசாசின் பெயர் – பேலியாள்             – Worthless

லூக்கா 10:6 சமாதான பாத்திரன்                                   - ப.தி

சமாதான சீலன்                                                               - பு.தி

சமாதானத்தின் மகன்                                                        - பு.தி அடிக்குறிப்பு

எபேசியர் 2:3 கோபாக்கினையின் பிள்ளைகள்            – ப.பு. திருப்புதல்கள்

சினத்திற்கு ஆளாயிருந்தோம்                                          - R.C.V

எபேசியர் 5:6 கீழ்படியாமையின் பிள்ளைகள்                - ப.தி

கீழ்படியாதவர்கள்                                                                  - பு.தி

கீழ்படியாத மக்கள்
                                        - R.C.V
எபேசியர் 5:8 வெளிச்சத்தின் பிள்ளைகள்                      – ப.தி, பு.தி

ஒளியின் மக்கள்
- R.C.V 


(ii) நேசிக்கின்றது" "வெறுக்கின்றது" என்ற சொற்கள் ஒன்றை அல்லது ஒருவனை இன்னொன்றை விட அல்லது இன்னொருவனை விட அதிகமாய் தெரிந்து கொள்ளுதலைக் குறிக்கும். 

லூக்கா 14:26  என்னிடத்தில் வருகிறவன், தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." என்பது செமிட்டிக் மரபுபடி தாய், தந்தையைவிட இயேசுவை அதிகம் தெரிந்துகொள்ளாவிட்டால் (R.C.V அடிக்குறிப்பு) என்பது அர்த்தம். 
ரோமர் 9:13 யாக்கோபின்மேல் அன்புகூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன். இந்த வாக்கியத்திற்கு எபிரேய மொழியின் தனித் தன்மைக்கேற்ற பொருள். ஏசாவிடம் அன்பைவிட யாக்கோபிடம் அதிக அன்பு காட்டுகிறேன் என்பதாகும். (R.C.V. அடிக்குறிப்பு)

அதாவது, ஏசாவுக்கு உலக நன்மைகளை அளித்தேன். யாக்கோபுக்குப் பரம நன்மைகளை அளித்தேன் என்று பொருள்படும். (மத். 10:37, யோவான் 12:25, மல்கியா 1:2,3, ஆதி. 29:31, உபா. 21:15) 


III. சில இடங்களில் அல்ல என்ற பதத்திற்கு மாத்திரமல்ல என்று பொருள்படும். 
உதாரணமாக நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்(ஆதி 45:8)யோசேப்பின் அண்ணன்மார் தங்களுடைய தப்பியை விற்று எகிப்துக்கு அனுப்பிய குற்றவாளிகளாயிருந்தார்கள். என்பதில் ஐயமில்லை. இந்த வாக்கியத்தின் உண்மையான கருத்து என்னவெனில் "நீங்கள் (விரோதங்கொண்டு தீய நோக்கத்துடன்) மாத்திரமல்ல, தேவனே(நல்ல நோக்கங்கொண்டு) உங்களைத் தடுத்தாட் கொண்டு என்னை அனுப்பினார்.

நாங்கள் எம்மாத்திரம் உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது (யாத். 16:8) சபையின் தலைவர்களாகிய எங்களுக்கு விரோதமாக மாத்திரமல்ல. சிறப்பாக எங்களை அபிஷேகித்த ஆண்டவருக்கு விரோதமாகத்தான் கலகஞ் செய்தீர்கள் என்பது கருத்தாகும். 

 என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல(என்னை மாத்திரமல்ல), என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் (மாற்கு 9:37) இயேசுவை ஏற்றுக் கொள்வது அவரை அனுப்பின பிதாவையும் ஏற்றுக் கொள்வதாகும். சிறு பிள்ளைகளையும் (மாற்கு 9:36,37) பலவீனமுள்ளவர்களையும் (ரோமர் 14:1) ஏற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்வது இயேசுவை ஏற்றுக் கொள்வதாகும். 
அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல(மனுஷரை மாத்திரம் அல்ல), .... தேவனையே அசட்டைபண்ணுகிறான்.(1 தெச. 4:8)

IV. சில இடங்களில் பெற்றோரின் பெயர்கள் சந்ததியாருக்கு வழங்கப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக யாக்கோபு என்றும் இஸ்ரவேல் என்றும் ஈசாக்கின் இளைய மகனுக்கு மட்டுமன்று, அந்தக் குடும்பத் தலைவனின் பரம்பரையினர் அனைவருக்குமே பெயர்களாயின.(சங். 14:7; 46:7; 2 இரா 18:17,18) தேவனால் யாக்கோபுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பெயர் இன்றைக்கு யூதக்குலம் வாழ்ந்து வருகின்ற இஸ்ரவேல் நாட்டுக்குப் பெயராயிற்று. 


V. பேரப் பிள்ளைகளை மகன் என்றும் குமாரன் என்றும் சொல்வதுண்டு.
ஆதியாகமம் 46:2 ராகேல் யாக்கோபுக்கு பெற்ற குமாரர் இரண்டுபேர் மட்டுமே (யோசேப்பு, பென்யமீன்) இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் பன்னிரெண்டுபேர். ஆகவே ராகேல் வழியாய் யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் பதினாலு பேர் (ஆதி. 46:19-20) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சவுலின் மகனாகிய மேவிபோசேத்து மேவிபோசேத்மு சவுலுக்கல்ல. சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்தவன். (2 சாமு. 4:4; 9 ஆம் அதிகாரத்தைப் பார்க்க)


VI. சில இடங்களில் பாட்டன் தந்தை என்றழைக்கப்பட்டுள்ளதையும் பார்க்கிறோம். 
தானியேல் 5:18 உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சர் பெல்ஷாத்சாரின் தந்தையல்ல. பாட்டனாராகும். நபோனிதாஸ் (Nabonidas) நேபுகாத்நேச்சரின் மகளை மணந்து அரசானான். தன்னுடன் அரசில் பங்கு கொள்ளும்படி தன் மகன் பெல்ஷாத்சாருக்கு அரச பட்டமளித்தான். இருவருக்கும் கூட்டு பொறுப்பு இருந்தால் பெல்ஷாத்சார் தானியேலுக்கு மூன்றாம் பதவியைப் பரிசாக அளிப்பதாக வாக்களித்தார். தன் தந்தை முதல் பதவியையும் தான் இரண்டாம் பதவியையும் வகித்தமையால் தானியேலுக்கு இரண்டாம் பதவியை அளிக்க முடியவில்லை


VII. சில எண்களுக்கு சொல்லுக்கு செல் (சரியான) கருத்து கூறுவது தவறாயிருக்கலாம். உதாரணமாக "பத்து" என்றால் சில இடங்களில் "பல என்று பொருள்படும். ஆதி. 24:55; 31:7; தானி. 1:20. "ஏழு" என்றும் "எழுபது" என்றும் கூறுவது சில இடங்களில் முழுமையைக் குறிக்கலாம். சங். 119:164; நீதி. 26:16,25. 'ஆயிரம்' என்ற எண் நீண்ட காலத்தைக் குறிக்கும். (வெளி. 20:4,5)


(வளரும்) 
Thanks to Br Colvin

August 16, 2013

திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 2 - இலக்கணம் இன்றியமையாததே.



Subject :திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 2 - இலக்கணம் இன்றியமையாததே. 

திருமறையைச் சரியாய் விளங்கிக் கொள்ளவும் பிறருக்கு விளக்கிக் காட்டவும் நான்கு அடிப்டை விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று முந்திய அத்தியாயத்தில் கண்டோம். அவற்றில் முதலாவது விதியைப் பற்றி இங்கே சற்று விரிவாக்க காண்போம். 


விதி 1- இலக்கணவிதிகளின்படி வேதத்தை விளக்கம் செய்ய வேண்டும்

1. அதிகார வசனப் பகுப்பு

நம்முடைய வேதாகமத்தில் காணப்படும் அதிகார, வசனப் பிரிவுகள் வேததை வாசிக்கவும் ஆராயவும் நமக்குப் பேருதவியாயிருக்கின்றன. ஆயினும் மூலநூலில் இத்தகைய பிரிவுகள் கிடையாது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்தப் பாகுபாடுகள் சரியான முறையில் அமையவில்லை.
  1. II இராஜாக்கள் 7ஆம் அதிகாரத்தின் பொருள் 6:24 ஆரம்பமாகின்றது.
  2. ஏசாயா 53ஆம் அதிகாரத்தின் பெருள் 52:13 இல் ஆரம்பமாகின்றது.
  3. யோசுவா 5:13-15 ஐ 6ஆம் அதிகாரத்துடன் சேர்த்து வாசிக்கவும் 6:1 ஒருவேளை பிறை அடைப்புக் குறிக்குள் (Brackets)போடப்பட்டிருக்க வேண்டும்
  4. யாத்திராகமம் 5:23ஐ வசனத்துடன் நின்று விடாமல் 6:1-13ஐத் தொடர்ந்து வாசித்தல் நலம்
  5. 2 கொரிந்தியர் 7:1 ஆம் வசனம் 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  6. கொலோசேயர் 4:1ஆம் வசனம் 3 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  7. யோவான் 8:1 ஆம் வசனம் 7ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.
  8. ஏசாயா 4:1 ஆம் வசனம் 3ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.



2. நிறுத்தற் குறிகள் 

  1. சங்கீதம் 12:1  இல் கேள்விக்குறி தேவையா?பழைய திருப்புலையும் புதிய திருப்புதலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
  2. யோவான் 12:27 என்னை இரட்சியும்  என்று சொல்வேனோ(ப.தி) அல்லது என்னை இரட்சியும் ஆனாலும் (பு.தி)
  3. ஏசாயா 45:11 ".....கேளுங்கள்… கட்டளையிடுங்கள்" கர்த்தர் ஊக்கத்துடன் ஜெபிக்கும்படி ஏவுகிறார் என்பது வியாக்கியானம்.


    ஆனால் முன்பின்னுள்ள வசங்களை நாம் பார்க்கும்போது கேட்கிறதுக்கும் நீங்கள் யார்? கட்டளையிடுகிறதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் என்றும் பொருள்படும் "வருங்காரியங்களைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறீர்களே! என் பிள்ளைகளைப் பற்றி… எனக்கு கட்டளையிடுவீர்களே! என்ற புதிய மொழிபெயர்ப்பு சரியாகஇருக்கலாம்.
  4. யோவான் 7:37-38 ஜீவனுள்ள நதிகள் விசுவாசியின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? அல்லது இயேசுவின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? 39ம் வசனம் பழைய விளக்கத்திற்கு ஆதரவு அளிக்கின்றதாகத் தெரிகின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டில் அதற்கேற்ற வேதவாக்கியமில்லாத காரணத்தால் ஒரு சிலர் நிறுத்தக் குறிகளைச் சற்று மாற்றி இரண்டாம் விளக்கம் கூறுவர். ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு இந்த இரண்டாம் விளக்கத்திற்கு ஆதரவாக. 

37ம் வசனத்தில் "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்! என்றும்  38ம் வசனத்தில் மறைநூல் கூறுவதுபோல மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்." என்று கூறுகின்றது. (சக. 14:8, எசே. 47:13)

ஆனால் நிறுத்தற் குறிகளை நம் விருப்பப்படி மாற்றியமைப்பது சரியல்ல. ஒரு சிலர் தவறான உபதேசங்களைக் நிலை நாட்ட இவ்விதம் செய்திருக்கின்றனர்.எடுத்துக்காட்டாக யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witness) லூக்கா 23:43 இல் ஒரு கால் புள்ளியைப் பெயர்த்து " இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" என்பதற்கு மாறாக. "உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்"  என்று வேத உண்மையை திருத்திப் போதிக்கிறார்கள். 

இங்கிலாந்து நாட்டில் புகழ்பெற்ற போதகர் ஒருவர் யோவான் 9:3 இல் "அது இவன் செய்த பாவமுமல்ல, இவன் பெற்றோர்  செய்த பாவமுமல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டாக… நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்" என்று வசனத்தை மாற்றி அமைத்தார். கடவுளின் கிரியைகள் இவனிடம் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்." என்ற கருத்து அந்தப் போதகருக்குப் பிடிக்காததால்   தம் விருப்பம் போல நிறுத்தற் குறிகளை மாற்றியது தவறு. தமிழ் வேதாகமத்தில் சரியான கருத்தையே காட்டும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


3. வினைச்சொற்கள்

  1. யோவான் 5:39, 40 ஐ வாசிக்கவும் பழைய திருப்புதலில் "வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்" என்ற வினைச்சொல் ஏவல் வடிவத்தில் உள்ளது. புதிய திருப்புதலில்"வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்" என்று உள்ளது. எது சரி? கிரேக்க மொழியில் இவ்வினைச்சொல்லுக்கு எப்படிப் பொருள் கூறலாம்? எனவே இதன் பொருளை முன் பின்னுள்ள வாக்கியங்களை ஆதாரமாக்க் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும். 

    ஆண்டவர் யூதத் திருமறை அறிஞர்களுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.  அவ்வேத பாரகர்கள் பழைய ஏற்பாடு முழுவதையும் நுட்பமாக கற்றுத் தேறியவர்கள். பல பகுதிளை மனப்பாடமாக கற்றிருந்தவர்கள். இவர்களிடம்"ஆராய்ந்து பாருங்கள்" என்று இயேசு கூறியது எண்ணுவது பொருந்தாது. ஆனால் அதிகமாக ஆராய்ச்சி செய்தும் திருமறை சுட்டிக்காட்டும் மேசியா இவர்தான் என்று அவ்வேதபாரகர்கள் உணராதிருந்த காரணத்தினால் அவர்கள் இயேசுவிடம் வரவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே, புதிய திருப்புதலின்படிவேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்(ஆயினும் என்னிடம் வர உங்களுக்கு மனதில்லை) என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்கக் கூடும்
  2. ரோமர் 5:1' "சமாதானம் பெற்றிருக்கிறோம்" என்ற பழைய திருப்புதல் சரியா அல்லதுசமாதானமுடையவர்களாக நிலைத்திருப்போமாக" என்ற புதிய திருப்புதல் சரியா? மூலமொழியின் சில சுவடிகளில் (Ectomen) எகோமென் என்ற பாடம் உண்டு. "ஒ" அல்லது "ஓ" அவ்வளவுதான்.

    முன்பின்னுள்ள பகுதிகளைக் கவனிக்குங்கால் பழைய திருப்புதல்தான் சரி என்பது புகழ்பெற்ற பேராயர் ஹண்ட்லி மோல் (Bishop Handley Moule) என்பவரின் முடிவு.
  3. 1 யோவான் 3:9 "கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ் செய்வதில்லை…" என்று கூறுகின்றது. 

    அவன் பாவத்தில் வாழமுடியாது. (R.C.V) என்பதே உண்மையான கருத்து. அவன் சிலவேளைகளில் பாவத்தில் விழலாம். (1 யோவான் 1:7,8; 5:16,17) ஆனால் அவன் பாவநிலையில் தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டான்.
  4. 1 யோவான் 1:7 "சுத்திகரிக்கின்றது என்பது நிகழ்காலத்தையும் தொடர்ச்சியையும் குறிக்கும் வினைச்சொல். ஆகவே இயேசுவின் இரத்தம் எவ்விதப் பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக் கொண்டேயிருக்கின்றது. (Keep in cleansing us) என்று பொருள்படும். 
Thanks to Br Colvin




August 15, 2013

திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 1 -அடிப்படை உண்மைகள்

Subject :திருமறையை விளக்கும் முறை -அத்தியாயம் - 1 -அடிப்படை உண்மைகள் 

அத்தியாயம் - 1


அடிப்படை உண்மைகள் 
 
 
ஓர் உத்தம கிறிஸ்தவன் ஊழியன் மறைநூல் அறிஞானக இருத்தல் அவசியம். அவன் தன் கருவுலத்தினின்று புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கின்ற வீட்டுத் தலைவனுக்கு ஒப்பாவான். (மத். 13:52) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இண்டிலுமுள்ள கருத்து நுணுக்கங்களை அவன் ஆராய்ந்தறிந்து அவற்றை தனக்கு உரிமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி பிறருக்கும் எடுத்துச் சொல்வான். எனவே, வேதத்தை விளக்கம் செய்யும் முறையானது என்பது பற்றிய ஆராய்ச்சி கிறிஸ்துவின் அடியார்க்கு இன்றியமையாததாகும். ஆயினும் இவ்வாராய்ச்சியினைத் தொடங்கும் முன்னர் நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உண்டு.


1. இவ்வாராச்சியின் முக்கியத்துவம்

(அ) வேதாகமம் முழுவதும் தேவனுடைய வார்த்தை ஆகவே அதைப் புரிந்து கொள்ள நாம் சிரத்தை எடுப்பதோடு தகுந்த முயற்சியும் செய்ய வேண்டும். "கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது, அதை மனித வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாமல் தேவ வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்" (1 தெச. 2:13)

(ஆ) வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கும் ஒரு தேவ தூதாகும். நமக்கென்று இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு கடிதமாகும். எனவே, இக்கடிதத்தில் தேவாதி தேவன் நமக்குக் கூறும் செய்தி என்னவென்று நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். தேவன் எழுதுவித்த கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமன்றோ!

(இ) தேவ வார்த்தையாகிய வேதாகமத்தில் அடங்கியுள்ள உண்மைகளைப் பிறருக்கு விளக்கிக் கூறவேண்டியது தூதுவராகிய நமது கடமை. எழுத்தறிவற்ற மக்களுக்கு ஒரு கடிதத்தை படித்துக் காட்டும்போது அதன் உண்மையான கருத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் மிகக்வனமான வாசித்து விளக்குவது போலவே வேதாகமத்தை நாம் நுட்பமாக ஆராய்ந்து மக்களுக்கு விளக்கம் செய்தல் வேண்டும். தேவ தூதுடன் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது. நமது சொந்த கற்பனையின் படி தெய்வீக உண்மையை மிகைப்படுத்தவும் அழகுற வர்ணிக்கவும் கூடாது.

2. இவ்வாராய்ச்சியின் இடர்பாடுகள்

(அ) தேவனுடைய வார்த்தையை அற்ப மக்களாகிய நாம் உடனுக்குடன் விளங்கிக் கொள்வது இயலாததாகும். "உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:9) என்று ஆண்டவர் கூறுகின்றார். வேதாகமத்தில் பல்வேறு கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றலாம்.

(ஆ) திருமறை தெய்வீக அதிகாரமுள்ள நூல் என்றும்" கொள்கை சம்பந்தமான வாக்குவாதத்தில் அதுவே உரைக்கல் என்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் இன்னும் நாம் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டுக்குள் வந்து சேரவில்லை. கள்ள உபதேசத்தைப் பரப்பும் பிரிவினர் கூட வேதாகமத்தை ஆதாரமாக வைத்தே தங்கள் கொள்கைகளைப் பரப்புகின்றனர்எனவே வேதத்தை விளக்குவதற்கேதுவான சரியான விதிமுறைகளையும் விதிகளையும் நாம் கடைபிடித்தால் இந்தத் தவறுகளிலிருந்து நாமும் தப்பலாம். நம்முடன் பிற கிறிஸ்தவர்களையும் தப்புவிக்கலாம்.

(இ) அறுப்பத்தாறு நூற்களடங்கிய வேதாகமம் பல்வேறு இடங்களில் (யூதேயா, பாபிலோன், அரபுநாடு, ரோமாபுரி) வெவ்வேறு காலங்களில் (கி.மு. 1500 கி.பி. 100 வரை) எழுதப்பட்டமையால், இந்நூற்களின் ஆக்கியோன், இடம், காலம் போன்ற விபரங்களைக் குறித்த சர்ச்சைகள் எழலாம். (பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி எபிரேயு மொழியிலும், சிலபகுதிகள் அரேமிய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டமையினால் இம்மொழிகளின் இலக்கணமுறை, மற்றும் ஒப்பனை உருவகச் சொற்கள் ஆகியவற்றை குறித்த சிக்கல்களும் எழும்பக் கூடும்)


3. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான பண்புகள்

வேதத்தை சரியான முறையில் விளங்கி, பிறருக்கு விளக்கம் செய்யத் தேவையான பண்புகள் மூன்றாகும்.

(அ) ஜெப சிந்தையோடு கூடிய சுறுசுறுப்பு

(ஆ) சிரமத்தை பாராமல் உழைக்கும் தன்மை.

(இ) இடைவிடாமல் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் 

ஆகியவைகளே

ஜெப வாழ்க்கை இல்லாத வேத ஆராய்ச்சி பயனற்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்திராத கருத்துக்களைச் சுய அறிவினால் போதிப்பதும் பயனற்றதே. வாழ்க்கை முழுவதும் வேதத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யும் கிறிஸ்தவனே நற்போதனாயிருக்க முடியும். "நன்றாய் ஜெபிக்கிறவன் நல்ல வேத அறிவாளியாவான். ஏனெனில் ஜெபிக்கிறவன் வேதத்தைக் கருத்துடன் படிக்கவும் செய்வான்" என்கிறார் ஒருவர். 


வேதத்தை ஆராயும் முயற்சியில் சிறந்த பலனை அடையக்கூடியவன் யார்?

I. ஆவிக்குரிய மனிதன் மறுபடியும் பிறந்த மனிதன் (யோவான் 3:3, 1 கொரி. 2:14) 

II. சாந்தமுள்ள மனிதன் (சங். 25:9)

III. கீழ்படிதல் உள்ள மனிதன் (யோவான். 7:17)

IV. ஜெபம் செய்கிற மனிதன் (சங். 119:18 ; யாக். 1:5)


4. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான நூல்களும் துணைநூல்களும்

(அ) வெகுகாலம் நிலைத்திருக்கக்கூடிய ஒத்த வாக்கிய வேதாகமம்

(ஆ) புதிய திருப்புதலையும் வாங்கி வாசிப்பது நன்று. புதிய மொழிபெயர்ப்பு ஆராய்ச்சிக்கு இன்றியமையாத துணை நூலாகும்.

(இ) திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்டது. (95/96 இல்)

(ஈ) உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த தமிழ் இலக்கியக் கழகம் 1970 இல் வெளியிட்ட புதிய ஏற்பாடு ஓரளவுக்கு பயனுள்ளதாகும். கத்தோலிக்க அறிஞர்கள் முதல் முறையாக்க் கிரேக்க மூலநூலிலிருந்து உயர்ந்த தமிழ்நடையில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள இப்புதிய ஏற்பாட்டைச் சற்று கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும்.மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சிறப்பாக அமைந்திருப்பினும் சில பிழைகளும் உண்டு.அடிக்குறிப்புகள் பயனுள்ளவையாயிருப்பினும் ரோமன் கத்தோலிக்க கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் இந்த அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

(உ) ஆங்கில வேதாகமத்தைப் படிப்பவர்கள் 1611 இல் வெளியான பழைய திருப்புதலுடன் (King James Authorised) ஒரு புதிய திருப்புதலையும் பயன்படுத்தலாம். புதிய மொழிபெயர்ப்புகளில் New International Version மிகவும் சிறந்தாகும்.

(ஊ) வேத அகராதி (Bible Dictionary) ஒன்றும் ஒத்த வாக்கிய அகராதி (Bible Concordance) ஒன்றும் இருப்பின் மிக உதவியாக இருக்கும்

(எ) வேத விளக்க நூல்கள் (Bible Commentaries)

மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கிடைக்காவிடினும் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களிடம் உள்ளவற்றையே ஜெப சிந்தையுடன் பயன்படுத்தலாம்.

5. வேதத்தை விளக்கும் முயற்சியில் கட்டாயமாக்க் கடைப்பிடிக்க வேணடிய நான்கு அடிப்படை விதிகள்

(அ) இலக்கண விதிகளுடன் வேதத்தை விளக்கம் செய்தல் வேண்டும். சொற்பொருளைச் சரியாய் விளக்குதல் அவசியம். (Interpret with a proper regard for grammatical usage and the plain meaning of words)

(ஆ) முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்து அவற்றின் பொருளுக்கு ஏற்ற முறையில் வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the immediate context)

(இ) நாம் விளக்கும் வசனம் வேதாகமத்தின் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ அந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவ்வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the character and purpose of the book in which your text is found)

(ஈ) வேதாகமத்தின் முழு கருத்துக்கும் இசைந்தவாறு வசனத்தை விளக்க வேண்டும். எனவே வசனங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். Interpret with due regard to teaching of the Bible. Scripture is its own commentary compare scripture with scripture.)

(அத்தியாயம் 1 முற்றிற்று)
(வளரும்
Thanks to Br Colvin

August 14, 2013

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்

திருமறையை விளக்கும் முறை – அறிமுகம்
வில்பிரட் கர்ட் ,  பக்கங்கள், 76
தமிழ்நாடு நற்செய்தி பட்டதாரிகள் ஐக்கியம்
குரு மெடிக்கல் ஹால், திருச்சி 600 010

இந்நூலாசிரியரான வில்பிரட் கர்ட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் பாப்திஸ்து திருச்சபை ஊழியத்தில் செலவிட்டார். தெளிவான. அடிப்படை விதிகளைப் பயன்படுத்தி, வேதத்தைத் தமிழ் கிறிஸ்தவர்கள் முறையாக அறிந்துகொள்ள வேண்டும், என்ற இவரது அடங்காத் தாகத்தின் விளைவே இந்நூல் 1977 இல் வெளிவந்த திருமறை விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குகின்றது. 
 
 
திருமறையை சரிவரப் படித்து, வாழ்வில் கைக்கொள்ளாது, எவருமே கிறிஸ்துவில் அன்பு செலுத்தவோ, தம்வாழ்வில் நன்மையடையவோ முடியாது. அவ்வாறு திருமறையை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதை விளங்கிக் கொள்ள அவசியமான வேதத்தில் காணப்படும், பல விதிமுறைகளை நாம் கவனத்தோடு அவதானித்து, அவற்றைப் பயன்படுத்தி, வேதப்பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். வேதத்தைப் படிக்கும்போது மற்ற சாதாரண புத்தகங்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் விதிகளைப் பயன்படுத்தல் அவசியம். இலக்கணம், எழுதப்பட்ட சந்தர்ப்பம், சொற்பிரயோகங்கள், படிக்கும்பகுதி சரித்திர சம்பவமா? உவமானமா? அல்லது போதனையா? என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். பலர், இன்று இவ்விதிமுறைகளைக் கருத்தில் எடுக்காது தாம் நினைத்த விதத்தில் வேதவிளக்கமளிக்க முற்படுகின்றனர். இது திருமறையையும் அதை நமக்குத் தந்த தேவனையும் அவமதிக்கும் செயலாகும். 
 
 
வில்பரட் கர்ட் தமிழ்மக்கள் மத்தியில் பல வருடங்கள் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. வேதத்தை தவறான முறையில் விளக்குவதற்கு உதாரணமாகத், தமிழ்நாட்டில் தான் ஒரு கூட்டத்தில் கேட்டப் பிரசங்கத்தை அவர் ஓரிடத்தில் இவ்வாறு விளக்குகிறார். "ஆன்மீகக் கூடாரம்" என்ற தலைப்பில் அக்கூட்டத்தில் பேசிய அருளுரையாளர் வேதத்தில் எங்கெங்கு "கூடாரம்" என்ற வார்த்தை காணப்படுகின்றதோ அப்பகுதியெல்லாம் பயன்படுத்தி, அவற்றுக்கு ஆன்மீக விளக்கமளித்ததாகக் கூறுகிறார். இது சொல்லாகரதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு.  இவ்வருளுரையாளர் இச்சொற்கள் காணப்படும் சந்தர்ப்பத்திற்கேற்ற விதத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். அதுமட்டுல்லாது வெறும் தலைப்பை மட்டும் முதலில் தேடிப் பின்னால் அத்தலைப்புக்கேற்ற பேச்சுப்பொருளைத் தேடமுயன்றதால் அவர் வேதத்தைத் தவறான விதத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. 
திருமறையை விளக்கும்போது நான்கு அடிப்படை விதிகளை நாம் அவதானித்தல் அவசியம் என்கிறார். 
 
1. வேதப்பகுதிகளை விளக்கும்போது, அப்பகுதிகளை, அவற்றில் காணப்படும் வார்த்தைகளின் சாதாரண அர்த்த்தின்படியும்,
        இலக்ணத்தின்படியும் விளக்க வேண்டும். 
2. எந்தவொரு வேதப் பகுதியும், அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்திற்கேற்ப (Immediate Context) விளக்கப்பட வேண்டும்
3. அத்தோடு அவ்வேதப்பகுதி அமைந்துள்ள முழுப்பகுதியின் (Large Context) அமைப்பிற்கேற்ற முறையிலும் அது விளக்கப்பட வேண்டும்
4. அவ்வேதப்பகுதி திருமறையின் பொதுவான போதனைகளுக்கேற்பவும் அவற்றிற்கு முரண்படாத வகையிலும் விளக்கப்பட வேண்டும்.
       ஏனெனில் வேதமே வேதத்தை விளக்குகின்றது. வேதம் வேதத்த்தோடு ஒப்பிட்டுப் விளக்கப்பட வேண்டும். 
 
தீர்க்கதரிசனங்கள், முன்னடையாளங்கள், உவமானங்கள், உவமானங்கள், உருவகங்கள், எபிரேய பாடல்கள், அக்காலத்து கலாச்சாரம், நாகரிகம் போன்றவை எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் இந்நூலில் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். முக்கியமாக தீரக்கதரிசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற பகுதி இன்றைய சூழ்நிலையில் அக்கறையோடு படிக்க வேண்டிய ஒரு பகுதி. தமிழில் இத்தகைய நூல்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ள ஆசிரியருக்கு தமிழ்கிறிஸ்தவர்கள் நிச்சியம் கடமைப்பட்டுள்ளார்கள். 
1983ல் இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இலகுவான ஆங்கிலத்தில் எல்லோரும் புரிந்துகொள்ளும் படியாக அதனையும் ஆசிரியரே எழுதியுள்ளார். 
 
கேட்பவர்கள் உணர்ச்சிவசப்படும்படி கதை சொல்லுதல், சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வேத விளக்கமளித்தல் என்ற பாணியில், பொதுவாக பிரசங்கங்களும் போதனைகளும் அமைந்திருக்கும் இந்நாட்களில் அருளுரையாளர்களும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களும், கிறிஸ்தவர்கள் அனைவருமே தவறாது வாங்கி பயனடைய வேண்டிய புத்தகமிது. வேத்த்தின் மூலமாக மட்டுமே கர்த்தர் இன்று நம்மோடு பேசுவதால் அவருடைய வார்த்தையைத் தெளிவாக சந்தேகமில்லாமல் புரிந்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?
 
(நன்றி : திருமறைத் தீபம்)
Thanks : Br.Colvin : 

August 13, 2013

2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்






[முந்தைய ஒன்பது தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1நாள் 2நாள் 3நாள் 4நாள் 5 , நாள் 6, நாள்7 ,  நாள் 8 & நாள் 9]

அன்பான தம்பிக்கு,

நீ எழுதிய கடிதத்தை படித்தேன். 

நீ பொறுமையை இழந்தவனாக மிகவும் சோர்வாக எழுதியிருந்தாய். இனி இஸ்லாமிய போர்கள் பற்றி இம்மாதம் என்னிடம் உரையாடமாட்டாய் என்றும் கூறியிருந்தாய்.  சில மழைத்துளிகளை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் நீ, மகா சமுத்திரமாக இருக்கும் இதர இஸ்லாமிய சரித்திரத்தை எப்படி ஜீரணித்துக்கொள்வாய்.

இதோ இந்த கடிதத்தில், கடைசியாக ஒரு நிகழ்ச்சிப் பற்றி எழுதி, உன் விருப்பத்தின் படி, இவ்வாண்டு ரமளான் தொடரை முடித்துக்கொள்கிறேன்.

உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்:

குரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ  அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான்.  அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் இந்த குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.

இதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம். 

முஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, "இழம்" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார். 

முஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் "இவர்களுக்கு சலாம் கூறினான்".  இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.

பீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 

முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94

முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். 
இந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான்.  இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, "முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது" என்று கூறுகிறார்கள்.

தம்பி, மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது. 

 தம்பி,பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படிப்பாயா? அவைகள் பற்றி சிந்திப்பாயா?

1) முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தாயா?  செல்வத்திற்கு ஆசைப்பட்டு, "நான் ஒரு முஸ்லிம்" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.

2) முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

3) ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள்.  பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்?

4) இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.
5) இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தார் என்று, உன்னால் கண்டுபிடித்து எனக்கு அறிவிக்கமுடியுமா தம்பி?

6) இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறார். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்? 

7) தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே  வாழ்ந்து இருக்கிறார்கள்.

தம்பி, கடந்த 10 நாட்களாக, 11 இஸ்லாமிய வழிப்பறி கொள்ளைகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். இன்னும் அனேக போர்கள், கொலைகள், தனிமனித வெறுப்புக்கள், என்று அனேக இஸ்லாமிய வன்முறைப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. 

தம்பி, ஒரு மனிதனாக உன்னை நினைத்துப் பார்த்து சிந்தித்துப்பார். இப்படியெல்லாம் கொலை வெறியோடு பரவிய மார்க்கத்தைத் தான் நீ இப்போது பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய். இஸ்லாமிய நூல்களை அதிகமாக படி, ஆய்வு செய், சத்தியத்தை அறிய முயற்சி செய். யார் உன்னை கைவிட்டாலும், சத்தியம் ஒரு நாள் உன்னை விடுதலையாக்கும். இந்த நம்பிக்கையில் தான் நான் உன்னோடு உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.

இதோ இன்று ரமளான் மாதத்தின் கடைசி நாள், நாளைக்கு நீ ரமளான் கொண்டாடப்போகிறாய். இந்த புனித மாதத்தில் உலக அளவில் நடந்த இஸ்லாமிய தாக்குதல்கள், தீவிரவாத செய்ல்கள், எத்தனை என்று உனக்குத் தெரியுமா? இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதோ அந்த பட்டியல்:

Ramadan Bombathon
 2013 Scorecard  
Because, if you think all religions are the same, 
then you haven't been paying attention

2013

In the name of
The Religion
 
of Peace

In the name of
ANY Other 
Religion

By 
'Islamo-
 
Phobes'

Terror Attacks

310

0

1*

Suicide Bombings

28

0

0

Dead Bodies

1651

0

0

Wounded

3048

0

0