அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2013

விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும்.

விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும்.

இந்த விதியைக் கடைபிடிக்காத காரணத்தால் அநேக தவறான கருதுக்களும்
கொள்கைகளும் பரவியிருக்கின்றன. நகைப்பிற்கேது வான சில விளக்கவுரைகளை நாம்
பிரசங்க பீடங்களில் கூறப்பட்டு வருகின்றன.

உதாரணமாக திறமை வாய்ந்த போதகர் "பாளையம்" என்ற வார்த்தையின் பேரில்
பிரசங்கத்தை ஆயத்தஞ் செய்ய விரும்பி ஒத்தவாக்கிய அகராதியில் "பாளையம்"
என்ற சொல்லைக் கண்டுபிடித்தார். அகராதியில் இருந்த ஏராளமான வசனங்களுள்
பிரசங்கமளிப்பதற்குப் பொருத்தமாயிருப்பதாக தான் நினைத்த பத்து வசனங்களைத்
தேர்ந்தெடுத்து (யாத்திரகாமம் முதல் வெளிப்படுத்தல் முடிய) செய்தி
அளித்தார். அவ்வசனங்களில் யாத். 32:17, 18 யைப் பற்றி பேசுகையில்
கிறிஸ்தவ பாளையத்தில் பாடல்தொனி கேட்க வேண்டும் என்றார். ஆனால் முன்
பின்னுள்ள தொடர் வாக்கியங்களைப் பார்த்தால் அந்தப் பாடல்
கண்டிக்கப்படத்தக்க அவலட்சணமான பாடலின் இரைச்சலாயிருந்தாகத் தெரிகின்றது.
இந்த மாதிரிப் பாடல் கிறிஸ்தவ பாளையாமாகிய திருச்சபையில்கேட்கப்பட
வேண்டுமா? பின்னும் உபாகமம் 23:14 'உன் தேவனாகிய கர்த்தர்…. உன்
பாளையத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கிறார்." என்ற வசனத்தையும்
குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முன்னுள்ள 13ம் வசனத்தை அவர் விளக்கஞ்
செய்யாமல் விட்டுவிட்டார். நாம் வேதவசனத்தின் கருத்தைத் திரித்துக்
கூறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு ஒத்த வாக்கிய அகராதியைப்
பயன்படுத்துவது தவறான கருத்துக்களை நாமாகவே உருவாக்கிக் கொள்ளும்
குற்றத்திற்கு ஏதுவாகும்.




1. ஓரே சொல்லுக்கு முன் பின்னுள்ள வசனங்களுக்குகேற்ப வெவ்வேறு
கருத்துக்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக விசுவாசம், மாம்சம்
இரட்சிப்பு என்ற சொற்களைக் குறித்து ஆராய்வோம்.


(அ) விசுவாசம் : இந்தச் சொல்லுக்குக் குறைந்தது நான்கு பொருள் கூறலாம்
I. விசுவாசம் – நற்செய்தி கலா. 1:23; 1 தீமோ 3:9 4:1

II. விசுவாசம் – நல் மனச்சாட்சி ரோமர் 14:23
"விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே – ப.தி ; பு.தி. அல்லது உறுதியான
மனநிலையோடு (நல்லெண்ணத்தோடு) செய்யாதது பாவமாகும்" (R.C.V)

III. தெய்வீக உண்மைகளைப் பற்றும் தன்மை எபி. 11:6 இந்தக் கருத்தில்
விசுவாசம் தன்னம்பிக்கைக்கு ஒத்ததாயிருக்கின்றது.

IV. பாவ மன்னிப்பு, பரிசுத்தம் இவைகளுக்கு ஆதாரமான கிறிஸ்துவையும்,
அவருடைய பிராயச்சித்தத்தையும் (atonement) மனப்பூர்வமாய் பற்றும் தன்மையே
ரோ 3:28 இல் பார்க்கிறோம். இதுவே இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் பவுல்
அப்போஸ்தலன் இந்தக் கருத்தை மனதில் கொண்டு அடிக்கடி இந்தச் சொல்லைப்
பயன்படுத்துகின்றார்.

(ஆ) மாம்சம்.: இந்தச் சொல்லுக்கு குறைந்த்து மூன்று பொருள் உண்டு.
I. சாதாரண கரத்து : யோவான் 1:14, ரோமர் 1:5, 9:3 மனிதத் தன்மை மாமிசம்
என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. பாவம் என்பதைப் பற்றிய எண்ணமேயில்லை.

II. பாவத்தால் தீட்டுப்பட்டுப்போன மாம்சம் அல்லது மனிதத் தன்மை. ரோமர்
8:5, எபே. 2:3

III. மாம்சம். – சடங்கு கலா. 3:3, 6:12, பிலி. 3:3

(இ) இரட்சிப்பு : என்ற சொல்லுக்கு குறைந்தது ஐந்து பொருள் உண்டு.
I. இரட்சிப்பு – சரீர அல்லது நாட்டுப் பாதுகாப்பு. யாத். 14:13, நியா.
2:16, 3:9,15 அப். 7:25
இந்த இரட்சிப்பு … ஆன்மீக இரட்சிப்புக்கு நிழலாட்டமாயுள்ள ஒரு
முன்னடையாளமாயிருக்கலாம்

II. இரட்சிப்பு – உடல் நலம் யாக். 5:15 விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை
இரட்சிக்கும் (ப.தி)

III. இரட்சிப்பு – இப்பொழுது அனுபவித்து வருகின்ற மீட்பு எபே. 2:8, லூக் 1:77

IV. இரட்சிப்பு – வருங்காலத்தில் வெளிப்படப்போகின்ற மீட்பு ரோமர் 13:11;
1 பேதுரு 1:5

V. இரட்சிப்பு – நற்செய்தி எபி. 2:4



2. முன்பின்னுள்ள வாக்கியங்கள் ஒரு சொல்லின் கருத்தை மட்டுப்படுத்தக் கூடும்.

(அ) "என் நீதியின்படி என்னை விசாரியும்" சங். 7:8, 18:20
தான் முழுவதும் நீதிமான் என்பது தாவீதின் கருத்தன்று. ஆனால் "கூஷ்"
தன்பேரில் சாட்டின குற்றத்தில் தான் தாவீது கூறுகிறார். யோபும்
இதேகருத்துடன் அடிக்கடித் தன்னை நீதிமான் என்று அழைக்கின்றார்.

(ஆ) இவன் செய்த பாவமுமல்ல…" (யோவான். 9:3)
இவனும் இவன் பெற்றோரும் எந்தப் பாவத்தையும் செய்த்தில்லை என்பது இதன்
கருத்தன்று. இவனுடைய குருட்டு நிலைமைக்கு இவன் பெற்றோரோ அல்லது இவனது
முன்னோரோ காரணம் அல்ல என்று ஆண்டவர் கூறுகின்றார்.

(இ) "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்" (யாக். 5:15)
பிணியாளியைக் குணக்மாக்கும் என்பது பொருள் ரோமன் கத்தோலிக்க பாதிரியின்
அவஸ்தை பூசைக்கோ (Extreme Unction) அல்லது தெய்வீக சுகமளிக்கும் மாபெரும்
நற்செய்திக் கூட்டங்களுக்கோ இங்கு ஆதாரமில்லை என்பதைக் கவனிக்கவும்.

(ஈ) "பெண்ணைத் தொடாமலிப்பது நல்லது (1 கொரி. 7:1)
திருமணம் செய்யாதிருப்பது நல்லது என்பது கருத்தன்று. (திருமணம்
அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக என்று எபி. 13:4 கூறுகின்றது)
அக்காலத்தில் நிலவிய பயங்கர சூழ்நிலையினிமித்தம் திருமணம்
செய்யாதிருப்பது நலமாயிருக்கும் என்று பவுல் எண்ணியிருக்கலாம்.
திருமணம் செய்யாத வாலிபர்கள் பெண்ணைத் தொடமலிருப்பது நல்லது என்ற
பொருளும் இவ்வசனத்தில் காணக்கூடும். திருமணமான பின் கணவன் தன் மனைவியைத்
தொடாமலிருப்பது குற்றமாகலாம். (1 கொரி. 7:3-5)


3. வஞ்சிப்புகழ்ச்சி அல்லது பரியாச முறையில் சொல்லப்படும் கூற்றுக்களைச்
சொல்லுக்குச் சொல் பொருள் செய்யாமல் உடக்கருத்தைக் கவனிக்க வேண்டும்

(அ) பிலேயாம் தான் போகவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தபின் தேவனின்
அனுமதியைப் பெறும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்த்தின் விளைவாக கடவுள் "போ" என்று அனுமதி அளித்தார். (எண். 22:20)
ஆனால் பிலேயாம் செல்வது கடவுளுக்குச் சித்தமில்லை என்பது தெளிவு. (எண்.
22: 22)

(ஆ) "போம், உமக்கு வாய்க்கும்" (1 இரா. 22:15) தீர்க்கதரிசி இந்த
வார்த்தைகளைப் பரியாசமாகப் பேசியதாக அரசரே அவனுடைய தொனியினாலோ முகத்
தோற்றத்தினாலோ தெரிந்துகொண்டார். மிகாயாவின் உண்மையான கருத்து 17ஆம்
வசனத்திலுள்ளது.

(வளரும்)


IP Logged
http://paralogapathi.blogspot.com/

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=2658&Itemid=287