அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 24, 2009

சு. சாமிக்கு வெற்றி

இன்று ஒரே ஒரு மனிதரால் இணைந்து செயல் படவேண்டிய இரண்டு முக்கிய துறைகளே எதிரும் புதிருமாக நிற்கிறது. காக்கி சட்டையும் கருப்பு சட்டையும் இன்று அழுக்கு சட்டையாகி வருகிறது. ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சு சாமிக்கோ மிகுந்த கொண்டாட்டாம். "அப்பாடி இலங்கை தமிழருக்காக போராடி வந்த இந்த வழக்கறிஞர்களை இன்று அவர்களுக்காகவே போராடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன். இனிமே இலைங்கையை யார் நினைக்க போறாங்க. இவங்க பிரச்சனை முடியவே கொஞ்சம் நாளாகும். அது வரைக்கும் நாமா நிம்மதியா தூங்குவோம் என்று சொல்லிகொண்டே சென்றார் அந்த சு.சாமி

ஆஸ்கர் ஒன்றும் ஒலிம்பிக் அல்ல: நடிகர் கமல்ஹாசன்

இந்தியாவின் சார்பில் ஸலம்டாக் மில்லினியர் என்ற திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை தட்டிசென்றதில் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு புறம் இது முழுமையான வெற்றி என்று சொல்லமுடியாது. ஏனெனில் முதலாவதாக இது இந்திய மொழிகளில் எடுக்கபடவில்லை. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுத்த திரைப்படம். மேலும் அதின் இயக்குனர் தொடங்கி அதில் பணியாற்றிய பெரும்பாலனவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான் இத்திரைப்படம் அமெரிக்கவரை சென்று ஆஸ்கரையும் தட்டி வந்துள்ளது. அவர்களீன் அறிவு திறமையினால் தான் இது எடுக்கப்பட்டது. என்ன இந்தியர்களின் திறமையை பயன் படுத்திகொண்டார்கள் அவ்வளவே. மேலும் இந்த் திரைப்பட பெயரிலேயே பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தெருநாய் என்று சேரியில் வாழும் மக்களை குறிப்பிடுவதாக சொல்லி போரட்டாமே நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இந்தியாவை அவதித்தாகவே கருத வாய்ப்புண்டு. அதை தான் கமலும் தனது பேட்டியில் ஆஸ்கர் என்பது அமெரிக்காவின் உயர்ந்த விருது அவ்வளவே. என்று கூறியுள்ளார்.


முழுக்க முழுக்க இந்தியர்களை கொண்டு திரைப்படம் எடுத்து அது ஆஸ்கர் விருது பெற்றிருக்குமானால் அது இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

Kamal said that Oscars is not like Olympics because each entry is judged based on American standards and not on universal standards.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-04/kamal-23-02-09.html

A perfect convergence of factors, not a carefully orchestrated Oscars campaign, propelled Danny Boyle's crowdpleaser to its Academy Awards triumph

Fox Searchlight Oscar Party - Inside

Hitting gold ... the Slumdog Millionaire cast and crew celebrate their Oscars triumph.

February 22, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம்

சென்னையில் நேற்று தீகுளித்த தொண்டர் தன் தலைவருக்குஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு சாதாரண உடன்பிறப்பு ஒருவரின் கடிதமல்ல. உலகெல்லாம் உள்ள தமிழ் நெஞ்சங்களீன் உள்ள குமுரல். இந்த கடிதம் தான் இறுதி கடிதமாக இருக்கட்டும். ஈழத்தில் அமைதி மலரட்டும்


இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றபோது. தி.மு.கவின் தீவிர தொண்டரான மூதாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஹால்டா சந்தியில் மனித சங்கிலி ஊர்வலத்தின்போது தீக்குளித்தவர் தி.மு.க சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி சிவப்பிரகாசம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
60 அகவையுடைய ஓய்வுபெற்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளரான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலர் மு.க.ஸ்ராலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாசம் தீக்குளிப்பதற்கு முன்பு தனது கைப்பைக்குள் எழுதி வைத்திருந்த கடிதத்தை மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ராலினிடம் கொடுத்துள்ளனர்.அக்கடிதத்தில், ‘தமிழக முதலவர் அவர்களே இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். அங்கே கொல்லப்படும் நம் குலத்தை காப்பாற்றுங்கள்’ என்று சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.tamilmann.com/2009/02/21/௧௧0௩
http://www.pathivu.com/news/443/54//d,view.aspx

February 20, 2009

படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்






படங்கள் : http://stop-the-vanni-genocide.blogspot.com/


























படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்

ஐயகோ என் இறைவா துப்பாக்கி சப்தங்கள் ஒழியனுமே
அமைதியின் காற்று வீசனுமே


இந்த அமைதியின் காற்று வீச‌ நம்மால் என்ன செய்ய இயலும் யோசித்தோம். முடிவு

கிறிஸ்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ வ‌ரும் மார்ச் 1 ந்தேதி இணைந்து இல‌ங்கையின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறோம் நீங்க‌ளும் அன்று இருக்கும் இட‌ங்க‌ளில் ஒரு நிமிட‌ம் பிரார்த்த‌னை செய்வீர்க‌ளா??

கிறிஸ்துநேசன்

February 17, 2009

பாகிஸ்தானும் தாலிபானும் கூட்டு சேர்ந்தனர். அதன் விளைவு???

பாகிஸ்தான் ஒரு பக்கம் தாலிபான்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிகொண்டாலும் ஒரு சில இடங்களில் அவர்களுடன் இணக்கமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது தற்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது.
இதன் விளைவு பாகிஸ்தானின் ஒருபகுதியில் இஸ்லாமிய சட்டம் அமல்.
இனி பெண்கள் படிக்கவோ வேலைக்கு செல்லவோ அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் முடியாது. ஆம் சுவாட் எனப்படும் பகுதியில் தாலிபான்களுடம் கூட்டு சேர்ந்த பாகிஸ்தான் அரசாங்கம் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து அங்கு முழு ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.



The New York Times

The Taliban have demanded Shariah law in Swat and the surrounding region.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்தபோது அங்கும் இஸ்லாமிய சட்டம் அமல் படுத்தப்ப‌ட்டது. அதின் விளைவுகள் எப்படியிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெண்கள் தங்கள் முகங்களை முழுமையாக மறைத்துகொள்ளவேண்டும். கல்விசாலைகளுக்கு செல்லக்கூடாது. செவிலியர் போன்ற எந்த வேலைக்கும் செல்லகூடாது போன்ற பெண் அடிமைதனங்களை நாம் பார்த்ததுதானே. தற்போது பாகிஸ்தானின் இந்த சுவாட் மாநிலத்திலும் அந்த நிலைமையே வரப்போகிறது. ம் என்ன செய்ய.. அங்குள்ள மக்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது

source : http://www.nytimes.com/2009/02/16/world/asia/16pstan.html?ref=world

February 16, 2009

காலம் கெட்டு போச்சுங்க. 13 வயதில் சிறுவன் தந்தையானான்



இந்த விடியோவை பாருங்க. யாரையும் இந்த காலத்தில் நம்பமுடியாதுங்க. வெறும் பதிமுன்று வயதான சிறுவன் 15 வயதான சிறுமியின் மூலமாக குழந்தையை பெற்றுகொண்டான். எங்கும் அங்கிரமம் பெருகிவிட்டதைதான் இது காட்டுகிறது. பதிமூன்று வயதென்பது நம்மூர்ல எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவ பருவம். இந்த வயதிலையே இப்படி வரம்பு மீறி நடக்கிறான் என்றால் பார்த்துக்கோங்க. குழந்தை பிறந்ததினால் விஷயம் வெளியே வந்துள்ளது. இல்லையானால்..... அப்பப்பா இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் உலகெங்கும் நடக்குதோ.. இந்தியாவில் சிறுமிகளிடம் சில்மிசம் செய்த பெரியவர்களை தான் இதுவரை நாம் கேள்விபட்டுகொண்டிருக்கிறோம். இனி இப்படிப்பட்ட செய்திகள் வருமோ என்ற அச்சம் தான் மேலோங்கியுள்ளது. அப்படிஎதுவும் நடைபெறக்குடாது என்பது தான் அனைவரின் விருப்பாமாக இருக்கிறது. எல்லாவற்றிலும் அளவுக்கு மீறி தெரிந்துகொள்வதும் ஆபத்தில்தான் போய் முடியுமோ?????


The Sun shows 13-year-old Alfie with daughter Maisie and the baby's mother Chantelle Stedman, bottom ரிக்த்ட்






இலங்கை பிரச்சனைக்காக கல்லூரிகளை மூடினதற்கு எதிர்த்து ஐகோர்டில் வழக்கு

 


தமிழக உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. எதற்கு தெரியுமா? ஜனவரி 31 அன்று திடிரென பள்ளிகளையும் கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடி விடும்படி திடிரென அரசு போட்டதே ஒரு உத்தரவு அதற்கு விளக்கம் கேட்டு தான். அந்த  உத்தரவால் மாணவர்கள் ரொம்பவும்தான் திண்டாடி போயினர். அப்பப்ப அந்த காட்சியை பார்க்கவேண்டுமே சொந்த ஊருக்கு செல்ல பஸ்கிடைக்காமல் ரெயில் கிடைக்காமல் மாணவர்களும் மாணவிகளும் அங்கும் இங்கும் அலைந்தது இந்த அரசுக்கு எங்கே தெரியபோகிறது. இந்த மாதிரி அறிவிப்பு வெளியிடும் முன் அரசு என்ன செய்திருக்கவேண்டும். முறைப்படி நோட்டிஸ் அனுப்பியிருக்கவேண்டும். மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல அதிகப்படியான பேருந்துகள் அதிகபடியான ரெயில்களை இயக்கியிருக்கவேண்டும்.
இது எதுவும் செய்யாமல் இப்படி எடுத்தோம் கவிழ்தோம் என்ற பாணியில் செயல்படுவது அவ்வளவு இராஜதந்திரமாக எடுத்துகொள்ளமுடியாது.
 

February 13, 2009

காப்புரிமை சட்டப்படி தொடுப்பை தாருங்கள் இஸ்லாமிய தளங்களே இல்லையானால்???

முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page

அபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்

 

முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page
 
 

February 11, 2009

போலி உமரும் - உளறல்களும்... ஆதாரம் எங்கே????????

இப்பதான் ஒரு கட்டுரையை படிச்சேன் அதாவது போலி உமரும் - உளறல்களும்... அப்படின்னு

ஆமாய்ய அவரு போலிதான்னு வைச்சுக்கோ சரி அவரு எந்த தளத்தில எழுதினாருன்னு நீங்க‌ ஒரு லிங்க் தரவேண்டியதுதானே அதுதானே வலைதளத்திலிருந்து ஒரு விசயத்தை மேற்கொள் காட்டும்போது கடைபிடிக்கவேண்டிய உலக நியதி. இந்த ஒரு விசயமே போதுமே யாரு பயப்படுகிறார்கள் என்று.. சகோதரரே முதலில் தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. அதை கடைபிடிக்கவேண்டும். உங்களால் போலி என்று அழைக்கப்படும் உமர் அவர்களின் கட்டுரையில் எதற்காவது ஆதார லிங்க் தராமல் இருக்கிறாரா? உண்மையான(???) நீங்களோ அவரின் கட்டுரையை குறிப்பிடும்போது எதற்கும் அதற்கான லிங்க் தருவதில்லையே. இதை வலைதள சகோதரர்கள்தான் நிதானிக்கவேண்டும்.

Source :போலி உமரும் - உளறல்களும்...
http://christianpaarvai.blogspot.com/2009/02/blog-post.html
http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
http://abunoora.com/

February 10, 2009

தண்ணீர் குண்டு என்றால் அது இதுதான்

எத்தனையோ வகைவலையான வெடிகுண்டுகளை கேள்விபட்டிருக்கிறோம். ஆனா தண்ணீர் குண்டு அதுவும் ஹெலிகாப்டரில் சென்று வீசுவதை கண்டிருக்கிறீர்களா? அது இதுதான் குண்டுவீசின இடம் ஆஸ்திரேலியாவில் காரணம் அங்கு ஏற்பட்ட தீ தான் காரணம். அந்த ஊரே பற்றி எரிகிறது அதை அணைக்கதான் இந்த தண்ணீர் குண்டு பயன்படுத்தபடுகிறது.

எரியும் பச்சை மரங்களும் பச்சை மனிதர்களும்

இயற்கையெல்லாம் மாறிகொண்டே வருகிறது.
இந்த வீடியோவை பாருங்கள். ம‌ரங்களும், மனிதர்களூம் பச்சையாகவே எறிந்து போவதை. நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியாவில்தான் இந்த கோர சம்பவம். இன்னும் கொளுந்துவிட்டு எறியும் தீயை அணைக்கமுடியவில்லையாம். உலகில் எல்லாமே மாறிகொண்டே இருக்கிறது. என்னைகேட்டால் இறைவன் ஒருவரை தவிர மற்ற யாவும் நாம் நம்ப முடியாத அளவுக்கு மாறிகொண்டே தான் இருக்கபோகிறது.

8888888888888888888888888888888888888888888888888888






**************************************************





*******************************************************

இலங்கையில் அமைதியை கொண்டுவர காங்கிரசாருக்கு ஒரு யோசனை.


ஆமாங்க இதில உங்களுக்கும் ஒரு பங்கு வேண்டாமா? ஏன்னா நீங்க சர்வ அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கீங்க. அடுத்த தேர்தல்ல தமிழ் மக்களீடம் வரும்போது அவங்க‌ உங்களை பாத்து ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு கேள்வி கேட்பாங்க. நீங்க பதில் சொல்லமுடியாமா மூழிப்பீங்க. அதுக்குத்தான் இந்த ஐடியா..


அதாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஊர் ஊராக பேரணி நடத்துங்க. பொதுகூட்டம் நடத்துங்க. அது போதும் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்தா. ஆமா அப்படி செய்தா, நாங்க அவங்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினோம் இந்த மாதிரி யாராலயும் செய்யமுடியாது. எதிர் கட்சி காரங்களை நம்மாதீங்க. அவங்க சொல்றதெல்லாம் பொய் அப்படியின்னு சொல்லாலம். எப்படி ஐடியா...


அதிகாரத்தில் இருக்கும் நம்மைக்குறித்து சரித்திரம் சொல்லவேண்டும் இவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் வந்தது என்று அப்படியின்னு யரோ ஒருவர் கடைகோடியில் நின்னு முனுமுனுக்கிறது எனது காதிலயும் கேக்கிறது.. என்ன செய்ய அவர்கள் காதில கேக்கலையே...


இறைவா இலங்கையில் யுத்தங்கள் ஓயவேண்டுமே இறை அமைதி தவழவேண்டுமே
வாஞ்சிக்கும்
கிறிஸ்துநேசன்

February 9, 2009

ஒபாமாவின் கவனத்தை திருப்ப தீக்குளித்து இறந்த மலேசிய வாழ் தமிழர் இராஜா

Diaspora Tamil dies in self-immolation

நேற்று மலேசிய தமிழ் நாழிதலில் முதலிடம் பிடித்த இந்த இளைஞர் பெயர் இராஜா. இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வேலைநிமித்தம் தற்போது மலேசியாவில் வசித்து வரும் இளைஞர் இராஜா நேற்று முன்தினம் ஒமாவுக்கும் மா.தி.மு.க பொது செயலாளர் வைகோவும் ஒரு கடிதம் எழுதிவைத்து தீக்குளித்துள்ளார். தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களை நான் முற்றிலும் ஆதரிக்காதவன். ஆனாலும் தன் இனம் பாதிக்கப்டுவதை கண்டு மனம் வெதும்பி இந்த முடிவுக்கு வந்துள்ளதை நினைக்கும்போது எத்தனை அதிகம் அந்த மக்கள் பாதிக்கப்ப்ட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. இதோ அந்த சகோதரரின் படம் வெளிவந்துள்ள செய்திதாளில் படம்


"My name is Rajah, born on 27 May, 1982. I came to Malaysia seeking employment on 02 October, 2006 and I found a good job. Why am I burning myself to death? For permanent ceasefire and immediate peace talks in Sri Lanka," reads a note from his diary.

"American President Obama should go to Sri Lanka immediately," was the desperate message of the letter.

"Indian Prime minister Manmohan Singh, Tamil Nadu Chief Minister Karunanidhi, Norway's Peace Envoy and Vaiko, the General Secretary of Tamil Nadu MDMK, should accompany the American President," the letter further read. "I want this diary to be given to Vaiko so that he could fulfill my final wishes," was the last sentence in the letter.

Diaspora Tamil dies in self-immolation
Diaspora Tamil dies in self-immolation
Diaspora Tamil dies in self-immolation







Diaspora Tamil dies in self-immolation
Diaspora Tamil dies in self-immolation
ஆதாரம் : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28344




இலங்கையில் வரவேண்டும் வெகு விரைவில் சமாதானம். இதுவே எனது இறைவேண்டுதல்
கிறிஸ்துநேசன்

February 8, 2009

ஆளுங்கட்சி எதிர்கட்சிகளீன் வேலையை செய்யக்கூடாது. பழ நெடுமாறன்

கடந்த வாரம் தமிழ் சேனலில் ஈழத்தமிழர் இயக்கத்தின் தலைவர் நெடுமாறனுடம் ஒரு பேட்டி நடந்துகொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. இதில் அவருடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வரும் உங்க பேரவையைபோலவே ஒரு ஈழத்தமிழர் விடுதலை பேரவையை துவக்கியிருப்பதைக்குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இவ்வாறு பதிலளித்தார். நாங்கள் எதிர்கட்சி வேலையை செய்கிறோம். அவர் ஆளுங்கட்சி வேலையை செய்யட்டும். அவரும் எதிர்கட்சி செய்யும் வேலையை செய்யக்கூடாது. இவரிடம் மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்ககூடிய அளவுக்கு எம்.பிக்கள் கைவசம் உள்ளது. அதை வைத்து மத்திய அரசை பணீய வைக்கலாம். ஆனால் எங்களால் அவ்வாறு செய்ய இயலாது என்றார். குரல் மட்டுமே கொடுக்கமுடியும். நிர்பந்திக்க முடியாது என்றார் சரியான கேள்விதானே..இதற்கு ஒரு உதாரணமும் சொன்னார் மகாராஷ்டிரா பிரிப்பதற்கு முன் குஜாராத் மக்களால் மகாராஷ்ரிய மக்கள் தாக்கப்பட்டபோது அப்போது பிரதமாராக இருந்த நேருவிடம் தன்க்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தேஷ்முக் என்பவரர் தனி மாநிலமாக கேட்டு வாங்கியதை இங்கு நினைவு கூர்ந்தார்.

சரி மாநில அரசு என்னதான் செய்யபோகிறது இனியும் எத்தனை பேரணிதான் நடத்தபோகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

இலங்கையில் தாக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைவேண்டி இறைவனிடம் இறைஞ்சும்
கிறிஸ்துநேசன்

February 6, 2009

சினிமாதனம் இல்லாமல் ஒரு டிவி சேனலை நடத்தமுடியுமா?????

இந்த தொலைக்காட்சி சேனலில் காதலர்கள் மரத்தை சுற்றி சுற்றி ஓடும் சினிமா பாடல்கள் இல்லை. காக்கவலிப்பு நடனங்கள் இல்லை. வீட்டு நிம்மதியை கெடுக்கும் பெண்களை செயற்கையாக அழவைக்கும் நீண்ட சீரியல்கள் இல்லை. மாறாக தமிழ் உணர்வு ஊட்டக்கூடிய நிகழ்ச்சிகள். தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விலையாட்டு. தமிழ் கிராமிய கலாச்சாரத்த்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிகழ்ச்சிகள். தமிழில் தவறலில்லாமல் பேச வைக்கும் நிகழ்ச்சிகள் இப்படி சொல்லிகொண்டே போகலாம் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் அந்த சேனல்தான் மக்கள் தொலைக்காட்சி. (இது அந்த சேனலுக்கான விளம்பரம் இல்லை)

வர்த்தக ரீதியாக வெற்றியடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் பயனுள்ள நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.

நாங்கள் தமிழை வளர்க்கிறோம் என்று சொன்னவர்களெல்லாம் தங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தபோது அதை தமிழுக்காக செலவிட்டது மாதிரி தெரியவில்லை. மாறாக தங்களை அரசியலில் தக்கவைக்கவே அது பயன்பட்டு வருகிறது. வேண்டுமானால் இந்த மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஒரு சில தமிழ் வார்த்தைகளை தற்சமயம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உதாராணமாக லைவ் என்பதை நேரலை என்றும் இன்னும் பிற தமிழ் சொற்களை காப்பியடிக்கிறார்களேயொழிய முழுமையான தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளை அளிக்க யாரும் தயாரில்லை. காரணம் வியாபாரம் போய் விடும் என்பதுதான். அப்போ தமிழ் தமிழ் என்று முழங்கியதெல்லாம்........ நானொன்றும் சொல்ல விரும்பவில்லை.


இருந்தாலும் தமிழை வளர்க்க ஒரு சேனல் என்றால் தமிழ் நாட்டினர் அனைவரும் வரவேற்கவேண்டுமென விரும்புகிறேன்.

இறைவ‌ன் தொட‌ர்ந்து இந்த‌ சேன‌லை ந‌ட‌த்த‌ அத‌ன் நிர்வாக‌த்தின‌ருக்கு பெல‌ன் த‌ர‌வேண்டுமென‌ வாஞ்சிக்கிறேன்.

கிறிஸ்துநேச‌ன்

இதோ அவ‌ர்க‌ளை தொட‌ : http://www.makkal.tv/

February 3, 2009

சிங்கள இராணுவத்தின் வெறிச்செயல். ஆஸ்பத்திரி மீது தாக்குதல்

ஐயோ என் தம்பி ஐயோ என் தம்பி போயிட்டியடா.. கண்ணுதுறந்து பாருடா.. இதுதான் அந்த ஆஸ்பத்திரியில் கேட்கும் அழுகுரல்.






சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தினர் எப்படியும் தமிழ் மக்களை அழித்துவிடுவதில் குறியாக இருப்பதுபோல் தெரிகிறது. அப்பாவி பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனைமீதே தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது என உலக இராணுவ நீயதி இருக்கும்போது எதைக்குறித்தும் கவலைப்படாமல் தாக்குதல் நடத்திருப்பதை பார்க்கும்போது அப்பாவி தமிழர்களை அழிப்பதுதான் ஒரே குறியாக இருப்பது போல் தெரிகிறது.

உலகத்தின் பார்வை இலங்கைமீது விரைவில் பட வாஞ்சிக்கிறேன். உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்தவேண்டுமெனவும் வாஞ்சிக்கிறேன்

கிறிஸ்துநேசன்

February 2, 2009

சகோதரர் முத்துகுமாரின் இறுதி ஊர்வலம் ‍

உலகமெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள் முத்துகுமாரின் பூத உடலுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்பட்டனர். உலகத்தின் பார்வையை தன் மரணத்தின்பால் ஈர்த்து தமிழ் மக்கள் ஈழத்தில் படும் கொடுமையை உணர்ந்துகொள்ள செய்த முத்துகுமாருக்கு உலகமெங்கும் இருந்து வந்திருந்து முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர். இதோ அதின் காட்சி தொகுப்புகள் சில:


**********************************************************



*******************************************



***************************************************



*****************************************************