அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 10, 2014

ஷாஜஹானுக்கு கல்லரையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 7

ஷாஜஹானுக்கு கல்லரையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 7

[கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4,
பாகம் 5 மற்றும் பாகம் 6 ஐ படிக்க சொடுக்கவும்.]

மும்தாஜுக்காக ஷாஜஹான் ஒரு கல்லரையை கட்டினார், அதனை காதலர்கள் சின்னமாக
அனேகர் கருதுகின்றனர். தாஜ்மஹாலின் வெளிப்புற அழகும், அதைக் கட்டி தன்
காதலை வெளிப்படுத்திய ஷாஜஹானின் உள்ளான காதலும் பல நூற்றாண்டுகளாக
பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

மும்தாஜ் தன் காதலன் ஷாஜஹானுக்காக கல்லரையை கட்டிய கதையை கேட்டு
இருக்கிறீர்களா? இது ஒரு விசித்திரமான கதை, ஏனென்றால், ஷாஜஹான் உயிரோடு
இருக்கும் போதே, இந்த மும்தாஜ் அவனுக்காக கல்லரையை கட்டிவிட்டாள்.
மும்தாஜ் ஏன் கல்லரையை கட்டினாள்? மேலும் படியுங்கள்.

இஸ்லாமிய ஷாஜஹான்களை காதலிக்கும், கிறிஸ்தவ மும்தாஜ்களுக்கு இந்த
மும்தாஜ் ஒரு எச்சரிப்பு மணியாக இருக்கட்டும். முன்கதை சுருக்கம் இங்கு
விளக்கத் தேவையில்லை, நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம், கதையின்
பின்னணியை நீங்கள் தொடர்ந்து படிக்கும் போது அறிந்துக்கொள்வீர்கள்.

ஷாஜஹானுக்கு கல்லரையை கட்டிய மும்தாஜ்

எஸ்தர்: டாடி, நீங்க சொன்னது போலவே, நான் "அம்மான்"ஐ இன்று மாலை நம்
வீட்டிற்கு அழைத்துள்ளேன்.

[இந்த கதையில் வரும் ஷாஜஹானின் பெயர் "அம்மான்"]

மொர்தெகாய்: சரிம்மா. நானும் சரியா ஐந்து மணிக்கு இன்று வீட்டிற்கு
வந்துவிடுகிறேன்.

எஸ்தர்: நான் வெளியே தைரியமாக இருக்கிறபடி காட்டிக்கொண்டாலும்,
உள்ளுக்குள் ஒரு வகையான பயம் இருக்கு டாடி.

மொர்தெகாய்: நீ கவலை படாதேம்மா, எல்லாம் நல்லபடியாக முடியும்.

எஸ்தர்: அவர் வந்தவுடன், நீங்க தான் முதல்லே பேச்சை ஆரம்பிக்கனும்.

மொர்தெகாய்: சரிம்மா.

[மாலை ஐந்து மணி, எஸ்தர் வீட்டு வாசலில் நின்றபடி காத்துக்கொண்டு
இருக்கிறாள். அவளின் தந்தையின் பெயர் "மொர்தெகாய்" ஹாலில் பேப்பர்
படித்துக்கொண்டு, அம்மானுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். சில
நொடிளிலேயே அம்மான் தன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார்.
எஸ்தர் அவரை தன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருகிறார், இனி தொடரும்
உரையாடலை படியுங்கள்]

எஸ்தர்: டாடி, இவர் தான் அம்மான். என் நண்பர். ரொம்ப நல்லவர்.

அம்மான்: குட் ஈவனிங் அங்குள்.
மொர்தெகாய்: குட் ஈவனிங் அம்மான். எப்படி இருக்கீங்க?

அம்மான்: நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மொர்தெகாய்: நானும் நல்லா இருக்கேன் தம்பி.

எஸ்தர்: உங்க இரண்டு பேருக்கும் காபி கொண்டுவரேன்.
டாடி, நீங்க பேசிக்கிட்டு இருங்க.

மொர்தெகாய்: தம்பி, வீட்டில் எல்லாரும் சவுக்கியமாக இருக்காங்களா? உங்க
வீட்டிலே எத்தனை பேர் இருக்காங்க?

அம்மான்: அங்குள் எங்க வீட்டிலே நாங்க ஆறு பேர் இருக்கோம். அப்பா துணிகடை
வியாபாரியாக இருக்காரு. அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு ஒரு அண்ணனும், இரண்டு
அக்காக்களும் இருக்காங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நான் தான்
வீட்டிலே கடைசி.

மொர்தெகாய்: ஓ அப்படியா! நீங்க தான் வீட்டிலே செல்லப்பிள்ளை என்றுச் சொல்லுங்க.

அம்மான்: ஆமாம், நான் தான் வீட்டிலேயே செல்லப்பிள்ளை.

எஸ்தர்: காபி ரெடி, அம்மான் எடுத்துக்குங்க. அப்பா நீங்களும் எடுத்துக்குங்க.

அம்மான்: தாங்க்ஸ் எஸ்தர்

[அம்மான் காபி எடுத்துக்கொண்டார், எல்லாரும் காபி குடிக்கிறார்கள்.]

அம்மான்: அங்குள், ஏதோ எங்கிட்டே பேசனும் என்று நீங்க விரும்புவதா எஸ்தர்
சொன்னாங்க.

மொர்தெகாய்: ஆமாம் தம்பி, நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்ட கொஞ்சம் மனம்
திறந்து பேசனும் என்று விரும்புகிறோம்.

அம்மான்: சொல்லுங்க அங்குள், எதையும் மறைக்காமல் கேளுங்க.
மொர்தெகாய்: தம்பி, நாங்க இப்படி பேசுவோம் என்று மனதில் ஒன்றும்
வைத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான், இருந்தாலும்,
பேசித் தான் ஆகனும்.

கடந்த ஆறு மாதங்களாக, எஸ்தரும் நீங்களும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக
எஸ்தர் சொன்னாள். அதைக் கேட்டதும் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கவலையாக
இருந்தது. ஆனாலும், நீங்க ரொம்ப நல்லவர் என்று எஸ்தர் சொன்னாள், எனக்கு
மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு போன மாதம் தான் உங்களைப் பற்றிச் சொன்னாள். தாய் இல்லாத பொண்ணு
கொஞ்சம் செல்லமாக வளர்த்துவிட்டேன். இவளுக்கு கொஞ்சம் பக்தி அதிகம்.
வாரம் தவறாம என்னோடு சர்சுக்கு வருவாள். நீங்களும் அதிக பக்தியுள்ளவர்கள்
என்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் நீங்கள் தொழுகைக்கு போவீங்க
என்றும் சொன்னாள்.

அம்மான்: ஆமாம், அங்குள். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நான்
என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன், நல்ல சமயமாக பார்த்து இந்த
மாதத்துக்குள் என் அப்பாவிடமும் சொல்லிவிடலாம் என்று விரும்புகிறேன்.
அவர் நிச்சயமாக எஸ்தரை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வார். இன்னும் நான்கு
மாதத்துக்குள் நான் சௌதி அரேபியாவிற்கு வேலைக்குப் போகிறேன். அதற்குள்
அப்பாவிடம் சொல்லி, எஸ்தரை திருமணம் செய்துக்கொண்டு, அவளையும் சௌதி
அரேபியாவிற்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்று விரும்புகிறேன். உங்களிடம்
கூட சொல்லச் சொல்லி, நம் திருமணத்திற்கு அனுமதி வாங்கு என்று நான்
எஸ்தருக்கு சொல்லியிருந்தேன்.

மொர்தெகாய்: ரொம்ப சந்தோஷம் தம்பி.

அம்மான்: அங்குள், நேரடியாக நான் கேட்கிறேன், உங்களுடைய மகளை எனக்கு
கொடுக்க உங்களுக்கு விருப்பம் தானே! நாங்க இருவரும் மற்றவங்க போல
அங்கும் இங்கும் ஊர் சுத்தவில்லை, சினிமா பீச்சு என்று எங்கும்
சுத்தவில்லை. கம்பனியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம், ஒருவரை ஒருவர்
அதிகமாக விரும்புகிறோம்.

மொர்தெகாய்: உங்களுக்கு என் மகளை கொடுக்க எனக்கு பரிபூரண சம்மதம். ஆனால்,
ஒரு மாதத்துக்கு முன்பு, எங்க சர்சு பாஸ்டருக்கு தெரிந்த இன்னொரு
பாஸ்டருடைய சபையில் 'சில இஸ்லாமிய வகுப்புக்கள், கேள்வி பதில்
நிகழ்ச்சிகள்' நடந்தது. நானும் அந்த வகுப்புகளில் பங்கு பெற்றேன்.
மேலும், அந்த பாஸ்டருடைய மகள் எஸ்தருக்கு தோழியாவாள். அவளிடம் எஸ்தர்
"ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்வது பற்றிய" விவரங்களை
சேகரித்து இருக்கிறாள். (படிக்க பாகம் 5 -
http://isakoran.blogspot.in/2013/03/5.html)

மேலும், கடந்த ஒரு மாதமாக, நானும் எஸ்தரும் இஸ்லாம் பற்றிய அனேக
புத்தகங்கள் வாங்கி படித்துள்ளோம், அனேகரை சந்தித்து, சில முக்கியமான
விஷயங்களை அறிந்துக்கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் எஸ்தருக்கு சில
சந்தேகங்கள் உள்ளன. அவைகளை எனக்கு முன்பாக உங்களிடம் கேட்டு தெரிந்துக்
கொள்ளவேண்டும் என்று எஸ்தர் விரும்புகிறாள்.

அம்மான்: ஓ.. இது தானா விஷயம். அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இஸ்லாம்
பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்களே!?!

மொர்தெகாய்: தம்பி, இப்படி கேட்கிறோம் என்று மனசுலே எதையும் வெச்சிக்காதிங்க.

அம்மான்: அங்குள், அப்படியெல்லாம் எனக்கு உங்கள் மீது கோபமில்லை.
எனக்கும் சகோதரிகள் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் செய்தபோது,
நாங்களும் ரொம்ப பயந்தோம். மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தான்
எல்லா அப்பாமார்களும் விரும்புவாங்க.

நீங்க கேளுங்க… கேள்விகளை நீங்க கேட்கிறீங்களா அல்லது எஸ்தர் கேட்பாங்களா?

மொர்தெகாய்: தம்பி, நீங்க ரொம்ப பக்குவமா பேசுறீங்க.

அம்மான்: என்ன எஸ்தர், ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்க
போலிருக்கு. எனக்கு சொல்லவே இல்லே. நான் சௌதி அரேபியாவிற்கு போவது பற்றி
உனக்கு சொன்ன பிறகு உன்னிடத்தில் பேசும் போது கொஞ்சம் மாற்றம்
காணப்பட்டது. ஆனால், நீ இஸ்லாம் பற்றி இப்படியெல்லாம் படித்து, விவரங்கள்
சேகரித்து இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.

எஸ்தர்: சாரி அம்மான். நான் என்ன செய்வது? நான் கேள்விப்பட்ட விஷயங்கள்
கொஞ்சம் என்னை சிந்திக்கச் செய்தது. நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
என்று உனக்கே தெரியும்.

அம்மான்: சரி, விஷயத்துக்கு வருவோம். சொல்லு உனக்கு என்ன சந்தேகம்?

எஸ்தர்: நான் கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாக தெரியும்,
இருந்தாலும் வேறு வழியில்லை. வாழ்க்கை என்பது வெறும் காதல் மட்டுமல்ல,
அதையும் தாண்டி, திருமணம், குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்று
தொடர்ச்சியாக மரணம் வரை தொடருவது தான் வாழ்க்கை.

எனவே, சில முக்கியமான விஷயங்களை திருமணத்திற்கு முன்பே பேசி
தீர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதினால், இந்த சந்திப்பை
வைக்கும்படி நான் டாடியிடம் கட்டாயப்படுத்தி சொன்னேன்.

அம்மான்: [சிரித்துக்கொண்டே] ம்ம்ம்… பெரிய பெரிய விஷயங்களை பக்குவமாய்
பேசுகிறாய். சரி உன் கேள்விகளை கேட்கலாம்.

[மொர்தெகாய் மனதுக்குள் 'இரண்டு பேரும் முத்திப்போன கத்திரிக்காய்கள்
தான்' என்று சொல்லிக்கொள்கிறார்.]

எஸ்தர்: அம்மான், என்னுடைய முதலாவது கேள்வி என்னவென்றால், நாம் திருமணம்
செய்துக்கொண்ட பிறகு, கட்டாயமாக சௌதி அரேபியாவிற்கு போய்த் தான்
ஆகவேண்டுமா? அப்படி போனாலும், எத்தனை ஆண்டுகள் அங்கே இருக்கப்போகிறோம்?

அம்மான்: எஸ்தர், இது தான் உன் சந்தேகமா?
தற்போது செய்கின்ற வேலையை விட பல மடங்கு அதிக சம்பளம் எனக்கு சௌதியில்
கிடைக்கிறது. எனவே, நான் அங்கு சென்று வேலை செய்வது தானே
புத்திசாலித்தனம், நீயே சொல்லு?

மேலும், எத்தனை ஆண்டுகள் அங்கு நாம் இருப்போம் என்று என்னால் இப்போது
சொல்லமுடியாது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் இந்தியாவிற்கு
வந்து, நம் பெற்றோர்களைப் பார்த்துச் செல்லலாம்.

மொர்தெகாய்: எஸ்தர், நீ என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை வந்து உன்னை சௌதியில் பார்த்துவிட்டுச் செல்வேன்.

எஸ்தர்: ஓகே டாடி. இது பிரச்சனை இல்லை.
அம்மான், சௌதிக்கு சென்றுவிட்ட பிறகு நான் வேலைக்குச் செல்லலாம் இல்லையா?
அதாவது சௌதி அரேபியாவில் நானும் வேலைக்கு போவேன்.

அம்மான்: ம்ம்ம்… நான் என்ன நினைக்கிறேன் என்றுச் சொன்னால், நீ சௌதியில்
வேலைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது. எஸ்தர், கல்யாணத்திற்கு பிறகு நீ
வேலைக்குப் போவது எனக்கு பிடிக்காது.

எஸ்தர்: என்ன அம்மான், தலையிலெ குண்டு துக்கிப்போடுறே? நானும்
வேலைக்குப்போனால் தானே இன்னும் கொஞ்சம் பணம் சேரும். நம்முடைய பொருளாதார
நிலை கூட உயரும்?

அம்மான்: என் ஒருவனுடைய சம்பளத்தை வைத்தே நாம் நல்ல வாழ்க்கை வாழலாம்
எஸ்தர், புரிஞ்சுக்கோ.

எஸ்தர்: திருமணத்திற்கு பிறகு நான் வேலைக்குப் போகலாம், எந்த
பிரச்சனையும் இல்லை என்று நீயே ஒருமுறை சொல்லியிருக்கிறாய்! இப்போது ஏன்
மாற்றிச் சொல்கிறாய்.

அம்மான்: அப்போது எனக்கு சௌதி அரேபியாவிற்கு செல்லும் பிளான் இல்லாமல்
இருந்தது. இந்தியாவில் நாம் இருந்தால், இப்போதும் சொல்கிறேன், நீ
வேலைக்குப் போகலாம். ஆனால், நாம் சௌதிக்கு சென்றுவிட்டால், சௌதியில்
பெண்கள் வேலைக்குச் செல்வது சரியல்ல. என் அப்பா அம்மாவும் இதற்கு
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சௌதியில் பெண்களுக்கு பாதுகாப்பு அவ்வளவு
இல்லை. உனக்கு எந்த செலவாக இருந்தாலும் சரி, அதனை நான் செலவு செய்வேன்,
நீ எதற்கும் பயப்படாதே!

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர், நீ வேலைக்கு போகாமல், வீட்டிலேயே இராணி
மாதிரி சந்தோஷமாக வாழு, சரியா? அம்மான் உன்னை நல்லபடியாக
பார்த்துக்கொள்வார்.

எஸ்தர்: ம்ம்ம்ம்… சரி, உன் விருப்பம் அம்மான். அப்படியே ஆகட்டும்.

அம்மான்: அடுத்தது என்ன? உன் சந்தேகங்கள் தீர்ந்ததா?

எஸ்தர்: இல்லை அம்மான், என் கேள்விகள் முடியவில்லை, இன்னும் இருக்கு.
இப்போது நான் கேட்பது மிகவும் முக்கியமான கேள்வி.

அம்மான், ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களை செய்துக்கொள்ளலாம் என்று
இஸ்லாம் சொல்கிறது என்று நான் கேள்விபட்டுள்ளேன், இது உண்மையா?

அம்மான்: ஆம், இது உண்மை தான். இஸ்லாமில் ஒரு முஸ்லிம் நான்கு
திருமணங்களை செய்துக்கொள்ளலாம்.

எஸ்தர்: அப்படியானால், ஒரு முஸ்லிம் இரண்டாம், மூன்றாம் திருமணம்
செய்யும் போது, அவன் முதல் மனைவியின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லையா?

அம்மான்: இல்லை, அனுமதிபெறத் தேவையில்லை.
எஸ்தர், உனக்கு ஏன் இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுகிறது? இதற்கும்
நமக்கும் என்ன சம்மந்தம் சொல்லு?

எஸ்தர்: சம்மந்தம் இருக்கு அம்மான். நான் இப்படி கேட்கிறேன் என்று கோபம்
கொள்ளவேண்டாம். இஸ்லாம் அனுமதி அளிப்பது போல, நீ எதிர் காலத்தில்
இரண்டாவது, மூன்றாவது நான்காவது திருமணம் செய்துக்கொள்வாயா?

மொர்தெகாய்: என்னம்மா! இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? நீ வேறு எதையோ
கேட்பதாக நான் நினைத்தேனே!

எஸ்தர்: டாடி, இது என் வாழ்க்கை. காதலுக்கு கண்ணில்லை என்றுச்
சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால், காதலுக்கு பார்க்கின்ற கண்கள்,
கேட்கின்ற காது, சிந்திக்கின்ற அறிவு இருக்கவேண்டும்.

அம்மான்: பாரு எஸ்தர், நீ தான் என் மனைவி, நான் உன்னையே உயிரினும் மேலாக
நேசிக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே. உன்னைத் தவிர வேறு யாரையும் நான்
விரும்பமாட்டேன் சரியா? இப்போது சந்தோஷமா?

எஸ்தர்: ரொம்ப சந்தோஷம் அம்மான். ஆனால், என் கேள்விக்கு முழுமையான பதில்
இன்னும் கிடைக்கவில்லை. அதே கேள்வி மறுபடியும் வருகிறது. நாம் சௌதியில்
வாழப்போவதினால், ஒருவேளை நீ இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு,
திடீரென்று ஒரு பெண்ணை கொண்டு வந்து என் முன் நிறுத்தினால், நான் அந்த
நேரத்தில் என்ன செய்யவேண்டும்?

உன்னுடைய இந்த இரண்டாவது திருமணம் செல்லாது என்றுச் சொல்லி, உன் மீது
வழக்கு தொடர எனக்கு அனுமதி உண்டா? அல்லது உன்னை விட்டு விட்டு, என்
பெற்றோர்களிடம் வந்துவிடவேண்டுமா? அல்லது ஒரு முஸ்லிமுக்கு வாழ்கை
பட்டதினால், இது தான் என் தலைவிதி என்றுச் சொல்லி என்னை நானே
நொந்துகொண்டு ஒரு நடைப்பிணம் போல வாழ வேண்டுமா?

அம்மான்: ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய், என் மனது வேதனை அடைகிறது.

எஸ்தர்: அம்மான். நான் என்ன செய்யட்டும்? எனக்குச் சொல்லு?

அம்மான்: உன்னை சரியாக யாரோ குழப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எஸ்தர்: அம்மான், இது குழப்பமல்ல, இது நிஜம். அனேகரின் வாழ்க்கையில்
நடக்கும் நிஜம். எனக்கு உன் பதிலைச் சொல்லு?

அம்மான்: என் மீது வழக்கு தொடர உனக்கு இஸ்லாமிய சட்டத்தில் அனுமதி இல்லை.
மேலும் சௌதியில் நாம் வாழும் போது, என் அனுமதி இன்றி நீ வெளியே
செல்லமுடியாது, உன் பெற்றோர்களை பார்க்க இந்தியா வரமுடியாது.
எல்லாவற்றுக்கும் என் அனுமதி வேண்டும்.

நீ நினைக்கிற மாதிரி நடக்காது, என்னை நம்பு எஸ்தர், நான் அப்படியெல்லாம்
செய்யமாட்டேன்.

எஸ்தர்: உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு அம்மான், நீ இப்படியெல்லாம்
செய்யமாட்டாய். ஆனால், காலம் இப்படியே இருக்கப்போவதில்லை. சௌதியில்
மற்றவர்களின் செய்கைகளைக் கண்டு ஒருவேளை நீ மாறிவிட்டால் எப்போது என்
நிலை என்ன?

[அம்மானின் முகநாடி சிறிது மாறியது, கோபமாக அவர் பேச ஆரம்பிக்கிறார்]

அம்மான்: சரி எஸ்தர் இதற்கு பதில் சொல்லு, ஒரு வேளை நீ ஒரு கிறிஸ்தவனையே
திருமணம் செய்துக்கொண்டாலும், அவன் இரண்டாவது மனைவியை அல்லது
வைப்பாட்டியை வைத்துக்கொள்ளமாட்டன் என்று என்ன நிச்சயம்? அப்போது நீ என்ன
செய்வாய்?

எஸ்தர்: நல்ல கேள்வி கேட்டாய் அம்மான். ஒரு கிறிஸ்தவனையோ, இந்துவையோ ஒரு
பெண் திருமணம் செய்துக்கொண்டால், அவன் இரண்டாவது திருமணம்
செய்துக்கொள்ளும் போது, அல்லது வைப்பாட்டியை வைத்துக்கொள்ளும் போது,
சட்டப்படி அவன் மீது வழக்கு தொடர ஒரு பெண்ணுக்கு அதாவது முதல் மனைவிக்கு
இந்தியாவில் உரிமை உண்டு? ஆனால், இதே உரிமையை இஸ்லாம் பறித்துக்கொண்டு,
எங்களை நடு ரோட்டில் அநாதையாக விட்டுவிடுகிறதே! இதற்கு என்ன பதில்?

கிறிஸ்தவ சமுதாயத்தில், இந்து சமுதாயத்தில் ஒருவன் பகிரங்கமாக இரண்டாவது
திருமணம் செய்துக்கொண்டால், அவனை சட்டம் தண்டிக்கும், சமுதாயம் அவனை
கேவலமாக பார்க்கும். ஆனால், இஸ்லாமிய சட்டமே ஒரு ஆணுக்கு நான்கு
மனைவிகள்வரை அனுமதி அளிக்கும் போது, அந்த முதல் மனைவியின் நிலை எப்படி
இருக்கும்? அவள் மனது என்ன பாடு படும்?

என் மனைவி எனக்கு மட்டுமே மனைவியாக இருக்கவேண்டும் என்று ஒரு ஆண்
விரும்புவது நியாயம் என்றுச் சொன்னால், என் புருஷன் எனக்கு மட்டுமே
புருஷனாக இருக்கவேண்டும் என்று ஏன் பெண்கள் கருதுவது குற்றமாக
இஸ்லாமுக்கு தெரிகின்றது?

அம்மான்: நீ வரம்பு மீறி பேசுகிறாய்.

எஸ்தர்: மன்னிக்கனும் அம்மான், என் வாழ்க்கையின் வரம்பு எதுவென்று நான்
தெரிந்துக்கொள்ளவேண்டாமா?

நான் இரண்டாவது திருமணத்தைச் செய்யமாட்டேன் என்று எனக்கு உறுதி மொழி கொடு!

அம்மான்: எஸ்தர் உனக்கு உலக அறிவு குறைவு, நீ பேசுகிறது என்னவென்று
உனக்கே தெரியவில்லை.

எஸ்தர்: எனக்கு உலக அறிவு குறைவாக இருக்கலாம், ஆனால், இஸ்லாம் பற்றிய
அடிப்படை அறிவு உள்ளது. எனக்கே புருஷனாக இருக்க உங்களால் வாக்கு
கொடுக்கமுடியுமா? கிறிஸ்தவத்திலே திருமணம் நடக்கும் போது, "நான் உனக்கே
கணவனாக கடைசிவரை வாழுவேன்" என்று ஆண் வாக்கு கொடுக்கிறான். எதிர்
காலத்தில் அவன் அப்படி செய்வானோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால், திருமண
நாள் அன்று தன் மனைவியிடம் இப்படி கணவன் சொல்வது, அந்த பெண்ணுக்கு
எவ்வளவு நிம்மதியாக இருக்கும் தெரியுமா? அந்த நிம்மதி, இஸ்லாமிலே
எங்கே? தன் கணவன் விரும்பினால், இன்னும் மூன்று பேரை கல்யாணம்
செய்துக்கொள்ளலாம் என்ற பயம் வாழ்நாளெல்லாம் அந்த பெண்ணை
வாட்டிக்கொண்டேஇருக்குமே!

அம்மான்: சரி, உன் வழிக்கே வருகிறேன். ஒரு பேச்சுக்காக இன்று பொய்யாக
உன்னிடம் வாக்கு கொடுத்துவிட்டு, எதிர் காலத்தில் உண்மையாகவே இரண்டாவது
திருமணம் செய்தால் உன்னால் என்ன செய்யமுடியும் சொல்லு"?

எஸ்தர்: ஓஹோ.. இப்படி கூட ஆண்களாகிய நீங்கள் செய்வீர்களோ! அப்படியானால்,
வெறும் வாய் வழியாக வரும் வாக்கு எனக்குத் தேவையில்லை. எழுத்து மூலமாக
எழுதி கொடுங்கள், "எஸ்தரின் கணவனாக இருக்கின்ற அம்மான் என்கின்ற நான்,
இரண்டாவது திருமணமே செய்துக்கொள்ளமாட்டேன், அப்படி செய்துக்கொண்டால், என்
மீது வழக்கு தொடர எஸ்தருக்கு உரிமை உள்ளது" என்று எழுதிக்கொடுங்கள்.

அம்மான்: என்ன நீ? இப்படியெல்லாம் பேசுகிறாய். இது கொஞ்சமும் நல்லா இல்லை.

எஸ்தர்: அம்மான், நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் என்னால்
வாழுவது கடினம். இந்த அக்கரையினால் தான் நான் இப்படி கேட்கிறேன். நீ
எனக்கு முழுவதுமாக வாழ்வின் துணையாக இருக்கவேண்டும் என்று நான்
விரும்புவது தவறா?

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர் இப்படியெல்லாம் கேட்கிறாய்?

எஸ்தர்: டாடி, இது மிகவும் முக்கிமான விஷயம். ஒரு ஆண் தன் முதல்
மனைவிக்கு சொந்தமான அன்பை இன்னொருத்தியிடம் பகிர்ந்துக் கொள்வது
அநியாயம். அதுவும் இஸ்லாமில் இன்னொருத்தி இல்லை, இன்னும் மூன்று பேர்கள்
வர வாய்ப்பு இருக்கிறது.

தன் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு
வந்துவிட்டால் என்ன செய்வது என்று வாழ்நாளெல்லாம் எண்ணி எண்ணி ஒரு
பெண்ணால் வாழமுடியாது.

டாடி, அம்மான் என்ன சொன்னார் என்பதை பாருங்கள், வாக்கு கொடுத்தாலும்,
அதை நிறைவேற்றுவார் என்பதில் என்ன நிச்சயம் என்று கேட்கிறார். அதனால்
தான் எழுதிக்கொடுங்கள் என்று கேட்கிறேன்.

அம்மான்: எஸ்தர், நீ சொன்னது போல, எழுதி கொடுக்கமுடியாது. கணவன்
மனைவிக்கு இடையில் இப்படிப்பட்ட ஒப்பந்தம் போடுவது என்பது சரியாக
தோன்றுகிறதா?

எஸ்தர்: உண்மை தான், கணவன் மனைவி இடையில் இருக்கவேண்டியது அன்பு தானே
தவிர ஒப்பந்தம் அல்ல.

அம்மான்: எனக்கு நம் திருமண வாழ்க்கைப் பற்றி அக்கரையில்லையா? உன்னை
அநாதையாக விட்டுவிடுவேனா?

எஸ்தர்: அம்மான், உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நீ ஒரு ஆண்,
திருமணத்திற்கு பிறகு உன்னை விட, நான் தான் அதிகம் பாதிக்கப்படுவேன்.

அம்மான்: எஸ்தர், இப்படியெல்லாம் நடக்காது? நான் வேறு ஒரு பெண்ணை
திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்.

எஸ்தர்: சரி, நான் நம்புகிறேன். ஒரு ஆணுக்கு இஸ்லாம் நான்கு மனைவிகளை
அனுமதிக்கிறதே, இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

அம்மான்: எஸ்தர், நீ தனிப்பட்ட வாழ்க்கைக்கும், மதத்திற்கும் முடிச்சு
போடுகிறாய்? உன்னை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன்.

எஸ்தர்: இஸ்லாமிலே, தனிப்பட்ட சுய வாழ்க்கை என்று ஒன்று உண்டா அம்மான்?
பெண்களாகிய எங்களை வேலைக்கும் அனுப்பாமல், எங்களுடைய ஒவ்வொரு தேவைக்கும்
வீட்டில் சம்பாதிக்கும் ஆணின் முகத்தையே நாங்கள் பார்த்து
இருக்கவேண்டும். மேலும், ஆண்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ, நீதி
கேட்கவோ எங்களுக்கு இஸ்லாமிலே உரிமை இல்லாத போது, எப்படி எங்களால்
சந்தோஷமாக வாழமுடியும்.

அம்மான், ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று
உண்டா? அவனது எல்லா நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது இஸ்லாமில்லையா?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம்
செய்துக்கொள்வது நியாயமா? அநியாயமா?

அம்மான்: பாரு எஸ்தார், என்னால் இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. நான்
இஸ்லாமை விமர்சிக்கமாட்டேன். அல்லாஹ்வின் கட்டளைகளில் பிழை இருக்காது.

எஸ்தர்: அப்படியானால், ஒரு இஸ்லாமிய ஆண், தன் முதல் மனைவியின்
அனுமதியின்றி, மேலும் மூன்று பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நியாயம்
தான் என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித் தானே?

அம்மான்: ஆம், அப்படித்தான். ஆனால், நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன்,
உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்.

எஸ்தர்: உங்களுடைய சகோதரியின் கணவர், இன்னும் மூன்று பெண்களை திருமணம்
செய்துக்கொண்டால், நீங்கள் வேதனை அடையாமல் இருப்பீர்களா?

அம்மான்: என் சகோதரியின் கணவர் அப்படி செய்யமாட்டார், எனக்கு அவர் மீது
நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதால் எல்லா முஸ்லிம்களும்
அப்படி செய்வதில்லை.

போதும் எஸ்தர் போதும். இஸ்லாம் பற்றிய விஷயத்தில் நீ இனி தலையிடாமல்
இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். உன்னுடைய கேள்விகள் மூலமாக நீ
என்னை உயிரோடு கல்லரையில் வைக்கிறாய்! நான் அதிகமாக வேதனை அடைந்துள்ளேன்.

எஸ்தர்: அம்மான், கோபம் கொள்ளாதே, இப்படியெல்லாம் கேட்கிறேன் என்றுச்
சொல்லி என்னை தப்பாக நினைத்துக்கொள்ளாதே. நான் என்ன செய்வேன் சொல்லு? நீ
சௌதியில் நாம் செட்டில் ஆகிவிடலாம் என்றுச் சொல்கிறாய். இஸ்லாமிய நாடுகள்
பற்றி நான் ஓரளவிற்கு அறிந்துள்ளேன். இஸ்லாமிய நாடுகளில், முஸ்லிம்
குடும்பங்களில் பெண்களின் நிலை பரிதாபமானதே.

நான் உன்னை உயிரோடு கல்லரையில் வைக்கவில்லை, என்னுடைய கல்லரையை நானே
மரணத்திற்கு முன்பாக கட்டிக்கொள்கிறேனோ என்ற பயத்தினால் தான் நான் இப்படி
கேள்விகளை கேட்கிறேன்.

மொர்தெகாய்: அம்மா எஸ்தர், அவர் தான் உனக்கு வாக்கு கொடுத்தார் அல்லவா?
இனி என்ன கவலை உனக்கு.

அம்மான்: அங்குள், நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது போல, எஸ்தர் புரிஞ்சுக்கவில்லை.

எஸ்தர்: அப்படியெல்லாம் சொல்லாதே அம்மான். நான் உன் மேலே அதிகமாக அன்பு
வெச்சிருக்கிறேன்.

அம்மான்: சரி போகட்டும், உன் சந்தேகங்கள் தீர்ந்ததா அல்லது இன்னும் இருக்கா?

எஸ்தர்: இன்னும் இருக்கு அம்மான். நீ இன்னும் என் கேள்விக்கு பதிலே
சொல்லவில்லையே. ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சரி
என்றுச் சொல்கிறாய். நாளைக்கு அந்த சரியான வேலையை நீ செய்யமாட்டாய் என்று
என்ன நிச்சயம்? என் மதம் அனுமதிக்குது, நான் செய்கிறேன் என்று நீ
சொன்னால் நான் என்ன செய்வேன்?

அம்மான்: !?! ம்ம்ம். . . எஸ்தர், என் மதம் எனக்கு முக்கியம். அதை
மற்றவர்கள் விமர்சிப்பதை என்னால் அனுமதிக்கமுடியாது.

எஸ்தர்: மதம் எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வாயா?

அம்மான்: ஆம் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். இனி எந்த கேள்வியையும் என்னிடம்
கேட்கவேண்டாம்.

[இந்த பதிலினால் எஸ்தர் நொந்துப்போய் விட்டாள், விரக்தியாக...மௌனமாக
இருந்துவிட்டாள்]

அம்மான்: சரி நாளைக்கு வருகிறேன். மீதமுள்ளதை அப்போது பேசிக்கொள்வோம்.

நான் வீட்டுக்கு கிளம்புறேன். குட் நைட் அங்குள், நாளைக்கு பார்க்கலாம்.

[அம்மான் எழுந்துச் செல்கிறார்… அவர் பின்னாலேயே எஸ்தர் மௌனமாக
செல்கிறார். எஸ்தர் தன்னை சுதாரித்துக்கொள்கிறாள்.]

எஸ்தர்: அம்மான், என் மிது கோபம் இல்லையே!

அம்மான்: அதெல்லாம் ஒன்னுமில்லை. மனசை குழப்பிக்கொள்ளாமே, நிம்மதியா
தூங்கு. நாளைக்கு பார்ப்போம்.

[அம்மானை வாசல்வரை வந்து வழி அனுப்பிவிட்டு, எஸ்தர் உள்ளே வருகிறாள்]

மொர்தெகாய்: என்னம்மா நீ, இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? அவருக்கு
கோபம் வந்து சென்றுவிட்டால் என்ன செய்வே சொல்லு?

எஸ்தர்: எந்த சந்தேகத்தையும், கல்யாணத்துக்கு முன்பு தீர்த்துக்கொள்வது
தான் சரியானது. கல்யாணம் ஆகிவிட்டால், அதன் பிறகு எதனையும் நாம்
திரும்பிப் பெறமுடியாது. இன்னும் எனக்கு அனேக கேள்விகள் இருக்கு.
நாளைக்கு கேட்பேன், நான் சும்மா விடமாட்டேன். எனக்கு 100 சதவிகிதம்
நம்பிக்கை வரும்வரை என் கேள்விகள் தொடரும் டாடி.

மொர்தெகாய்: ஒருவேளை உன்னுடைய கேள்விகள் அவரை துக்கப்படுத்தி, நான் உன்னை
திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டால் என்ன
செய்வாய்?

எஸ்தர்: உண்மையாக நீங்க சொன்னது போல நடந்தாலும் ரொம்ப நல்லது, ஏனென்றால்,
நான் அவரை காதலிக்கிறேன் என்பதால், முட்டாள் தனமான முடிவுகளை நான்
எடுக்கமாட்டேன். எங்கள் இருவரின் நட்பு இப்போது தான் ஒரு நல்ல நிலைக்கு
வந்துள்ளது, மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா
சந்தேகங்களையும் நான் இப்போது கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை
அவரது நிலையில் எனக்கு திருப்தி இல்லை என்று நான் கண்டுபிடித்தால், நானே
அவரது காதலை முறித்துவிடுவேன்.

டாடி, நான் முட்டாள் இல்லை. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை
மட்டும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் பைபிளில் படிக்கிறோம். அதை
செயல்முறைப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பு இது.

பார்க்கலாம் டாடி, என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு சிறிய தவறு, ஒரு
முஸ்லிமை காதலித்தது. அந்த சிறிய தவறு பெரிய தவறாக மாறாமல் இருக்கத்தான்
இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. எது எப்படியோ, கர்த்தரின் கிருபையால்
தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு சென்றுவிட்டால் நல்லது.
-----------------------------------------------

இதோடு "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 7" முடிவு பெறுகிறது.
அடுத்த பாகத்தில் எஸ்தர் கேட்கும் இதர கேள்விகளுக்கு எப்படி "அம்மான்"
பதில்களைச் சொல்கிறார் என்பதை பார்ப்போம்.

எஸ்தரும் அம்மானும் திருமணம் செய்துக் கொள்வார்களா?
அம்மான் கோபம் கொண்டு, தன் காதலை முறித்துக்கொள்வாரா?
அல்லது எஸ்தர் அம்மானை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிடுவார்களா?

இவைகளை அறிந்துக்கொள்ள அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் வரும் நபர்களின் பெயர்கள் ஏன் மொர்தெகாய்,
எஸ்தர், அம்மான் என்று வைத்துள்ளேன்? சிந்தித்துப் பாருங்கள்.





--
Source : http://isakoran.blogspot.in/

வாலித் சாட்சி - ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.

வாலித் அவர்களின் சாட்சி



எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில்
பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது
(Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள்
மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை
அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித்
என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை
மௌலத்(Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு
சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு
கூறுவதாக அப்பெயர் இருந்தது.

புனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை
ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு
உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.

அமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும்
பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை
அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி
ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது
நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌
நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின்
புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌து பூமியின்
தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.


ஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில்
நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு
"அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்"
என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு
தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌
தெரியாம‌லேயே அப்பாட‌லை ப‌டித்து வ‌ந்தேன்.


புனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த
பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும்
வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல்
யுத்தமாகிய‌ "ஆறு நாள் யுத்தம் - Six Day War" நடந்தது அந்த யுத்தத்தில்
பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள்
கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே
பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.


ஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு
தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு
செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும்
உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது
நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த
யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும்
முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும்,
கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து
ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.


ஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் "ஆறு நாள் யுத்தம் -
Six Day War" என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென்(Goren) என்ற யூத
ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள
"கண்ணீரின் சுவர் - Wailing Wall" என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி
வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா(Joshua) என்ற
தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை
சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி
பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த
வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது
தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற
அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.


யுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை
கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள்
என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான
வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ
அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி
முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே
நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.


பின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை
ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில்(Anglican-Lutheran school)
சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள்
இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும்
சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம்.
நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை
அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக
இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு
வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற
பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு
வந்தான். இந்த "அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்!" என
கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த
ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல்
முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு
நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும்
கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.


அதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில்
சேர்த்துவிட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன்.
என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி
புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும்
யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.


இந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில்(ஹதீஸ்களில்)
கூறப்பட்டுள்ளது, அதன்படி :



"நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை
சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe
of Muslims defeat a tribe of Jews.)"

(Narrated by Abu Hurairah, Sahih Muslim, Hadith #6985; Sahih
al-Bukhari, Vol. 4, #177)



எந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர்
"ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்" என
கூறியுள்ளார்.


எனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய
வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக
பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது
வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத்
மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது.
புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை
அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான
முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:



"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள்
என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே
இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்."(குர்‍ஆன்
3:169)



பள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும்
போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன்.
இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால்
தாக்கவும் ஏவப்பட்டனர். "எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள்
ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே
பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள்(இஸ்ரேலியர்கள்)
நாசமாய் போகட்டும்" என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது
இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில்
நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய
படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.


பள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள்
அல்-அக்சர்-மசூதி(Al-Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின்
மிகப்புனித இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே
எந்த ஒரு கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர்
வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு
யூதர்களை துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை
இஸ்ரேலில் இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.


எதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால்
ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால்
இண்டிஃபடா(Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது
கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன்,
உங்களில் பல‌ர் சி என் என்(CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப்
போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு
மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக
மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே
அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.


எனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக
இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது
நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின்
வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.
யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை
பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர்
என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை
சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான்
வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.


எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு
திரையரங்கில் "முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich" என்ற
படத்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச்
ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள்
ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை
செய்தனர். அதைக் கண்டு "அல்லாஹு அக்பர்", அதாவது அல்லா மிகப்பெரியவன் என
பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள்
இவ்வாறு சந்தோஷப்படுவர்.


இஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து
"யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து
அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா?" என்று கேட்பர். அதற்கு
ஆசிரியர் "அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை
நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி
செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில்
விளக்கப்பட்டுள்ளது" என கூறுவார்கள்.



இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத்
தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன்
4:24)



இன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:



நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த
உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ்
அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம்
உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின்
சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம்
மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் -
இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம்
உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண்
நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால்
அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற
முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற
முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,
அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம்
கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள்
ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக
மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.(குர்‍ஆன் 33:50)



இந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல
அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும்
எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை
மனைவியர் இருந்தனர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது,
எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத்
தெரியாது. தனது வளர்ப்பு மகனின்(Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா
சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப
ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.


பாலஸ்தீனர்களின்(எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம்
உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு
செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும்
ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது
இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று
சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.


ஒரு முறை எஷ்தோத்(Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை
அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை
எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால்
அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம்
செய்யப்பட்டனர்.


எனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் "தேவ திட்டம்" என்று ஒரு காரியத்தை
விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள்
நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான்
நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். "அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்"
என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என
விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால
சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல
கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியும் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான
எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.


ஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக
ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில்
ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம்
ஒய்.எம்.சி.ஏ(YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட
வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள்,
எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.


பல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு
அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது
அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும்
கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன்.
ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு(Museum)
அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது
எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம்
திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள்.
இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.


எனது தாயாரை காபிர்(Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க
வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும்
கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற
வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி,
இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது
தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து
செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து
கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.


பலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால்
தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன்,
அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த
செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ
கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான்
போர்கள், யோம் கிப்புர் யுத்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது
இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை
அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம்
அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.


இஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர்
அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில்
மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு
தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம்
தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த
அடிப்படைவாதியாக மாறினேன்.


உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக
அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல்
நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான்
விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு "ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால்
அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக
செய்து முடிக்கவில்லை" என்பேன்.


ஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில்
வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர்,
யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த
உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு
பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில்
கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை
கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக
வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான்
முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.


எல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர்
இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.


நான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக்,
குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம்
நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை.
இது அனைத்துக்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது
திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக
இருந்தது.


ஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர்
யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை
அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது
ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து
சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும்
பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின்
போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி
செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல
இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும்
சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர்
செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது
ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில்
இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான
நம்பிக்கை.


நான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும்
பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி
நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக
என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக
இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய
மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று
மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல
செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை
படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன்.
என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக
மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட
கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால்
எப்படி முடியும்?


1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி(Grant R. Jeffrey) எழுதிய‌ "Armageddon,
Appointment with Destiny" என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌
புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம்,
உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை
குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள்
பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌!


என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில்
ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு
எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌
கூற‌முடியும்(What also amazed me was to find out that the chances for
a man to predict hundreds of historic events written hundreds and
thousands of years before their occurrences are one in zillions ).
மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை
ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள்
என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌
காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.


என‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌
நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள்
கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால்
க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌
குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌
ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும்
வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை
குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு
ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை
நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு
விள‌ம்பினார்.



"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்,
நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று
திருவுளம்பற்றுகிறார்" வெளி 1:8



யூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:



அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.



இந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும்
இதை போல "நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக
இருக்கிறேன் (I am the beginning of all creation and the last
prophet)." என்று கூறியிருந்தார்.


மேலும் "ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக
இருந்தேன்(I was a prophet of Allah while Adam was still being molded
in clay)." என‌ கூறுகிறார்.


எல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக
பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே
கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.


இந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை
இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும்
தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள்
இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு
செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான்
மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில்
ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும்.
பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக
இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது?


உண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன்
ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது
இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் "இறைவா இந்த‌ பூமி வான‌ம்
அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே
நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர்,
நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை
உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன்,
என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து
அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்" என‌
பிரார்த்தனை செய்தேன்.


என‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக்
போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு
முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.


குர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல
விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது
என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள
விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால்
குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில்
இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று
அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என
கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம்
என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம்
அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த
அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு
இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என
அறிந்தேன்.


ஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள்
நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு
மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற
முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க
முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால்
மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை.
அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி
வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை
குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது
வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு
சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.


இறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:



"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன்,
வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை
ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும்
அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம்
செய்வேன் என்று சொல்லி," (ஏசாயா 46:9,10)



தேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும்
வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின்
நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என
நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில்
முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில்
கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது
நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும்
ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு
இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு
இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக
காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது
அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.


அவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக
இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர்
நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில்
உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல்
கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு
மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை
வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் "தான் ஒருவரே, தனது
வார்த்தை ஒன்றே" என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக
இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன்,
உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள்
நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில்
இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது,
இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம்
இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.


மனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன்
தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை
வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை
அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித
வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை,
பிசாசு தான் மனுக்குலத்தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி
நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள்
எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது
கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என
யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை
அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும்
உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே
கேட்டுக்கொண்டேன், "யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு
அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே
போல், இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு
அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை".


தேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால்
உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக
இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது
சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார்,
இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக
வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு
புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி
ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை
அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில்
காணமுடிகிறது.


பாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முறை
உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி "புதிய உலக வழிமுறை
அல்லது தரம்" என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை "புதிய
பாபிலோன்" என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன்,
சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன்
இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:



"ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்;
நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள்
அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்;
மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை." (சகரியா 14:2)



எனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு
இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை
கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின்
நம்பிக்கையின் படி "மெஹ்தி" என்ற போலியான ஒரு மேசியா வருவதாக
நம்புகிறார்கள்(Antiochos Epiphinias).


முகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும்
உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில்
மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின்
எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு
மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.


இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும்
மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது.
இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது
சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித
பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும்,
கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக
வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர்
அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.


சத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு
எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும்
குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும்
இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின்
நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌,
தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை
உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின்
நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து
அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின்
கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும்
பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது
வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி
அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.



"நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான்
உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா
ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை
விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 29:14)



மெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள்
வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம்
மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில்
வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா
பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:



"இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன்
ஒருக்காலும்பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும்
தாகமடையான்" (யோவான் 6 :35)


பெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு
வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர்
வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக
மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும்,
துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை
ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக்கூடுமோ? இருப்பினும்
அவர் இவ்வாறு சொன்னார்.



"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44)



சத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது
தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான்
அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை
தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான்
திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.



"அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)



எனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக
பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன.
அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை.
ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக்
காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன்.
என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய
ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு
கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.


ஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன்,
அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள்
மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான்
அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான்
பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து
எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும்
வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம்
முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க
வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி



"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப்
பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2)



சத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப
ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து
பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து
விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில்
மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால்
வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு
தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன்.
கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை
ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.


இயேசு கூறினார்:



"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)


உமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.
________________________________
என்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள்.


அன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு
சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி
கட்டுரைகளை படியுங்கள்.


Source: http://www.answering-islam.org/Testimonies/walid.html
________________________________


இன்னும் அனேக இப்படிப்பட்ட சாட்சிகளை படிக்க சொடுக்கவும்.
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/testimonies/walid.html



Isa Koran Home Page Back - Testimonies Index page


--
Source : http://isakoran.blogspot.in/

இஸ்லாமின் அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

இஸ்லாமின் அரச குடும்பம்

ஆசிரியர்: சைலஸ்

பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம்

(உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

ஸஹீஹ் புகாரி 650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார்.

அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம்
என்ன? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்)
அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும்
அவர்களிடம் நான் காணவில்லை!' எனக் கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சி அபூ தர்தாவின் கடைசி காலத்தில் நடந்தது, மேலும் உஸ்மான்
ஆட்சியின் போது நடந்தது)

ஸஹீஹ் புகாரி 3655. இப்னு உமர்(ரலி) கூறினார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார்,
இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச்
சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும்
பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக
மதிப்பிட்டு வந்தோம்.

ஸஹீஹ் புகாரி 3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்
மதீனாவில் அவர்களை பார்த்தேன். . . . . இப்படி அவர்கள் சொல்லி நான்கு
நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி)
குத்தப்பட்டு வட்டார்கள்.

உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை
அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும்
இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும்
இருக்கவில்லை.

. . . (அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை
நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து,
இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள்,
'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில்
இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித்
தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி
படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி),
உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ
வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின்
பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின்
மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில்
அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று
கூறினார்கள்.

. . . .

(கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி)
இறந்துவிட்டார்கள். . . . அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு
பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று
தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக,
ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று
பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி),
'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்"
என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான்
அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு
ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப்
அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி-
அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக்
கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம்.

அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர்.
உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள
வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி)
அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்)
அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான்
(தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக்
கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்!
(உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது
அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்)
அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில்
உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக்
கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம்
செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள்.
உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு
செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு
இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி)
அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின்,
'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி
- அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்)
செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி)
அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும்
(மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

ஸஹீஹ் புகாரி 4024. . . . .

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறினார்

முதல் குழப்பமான உஸ்மான்(ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது
பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு
இரண்டாம் குழப்பமான 'ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்
படிக்கையில் பங்கு கொண்ட மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு
ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.

சிந்தனைக்கு விருந்து:

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன்
சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்; .. . .. (மத்தேயு 5:21,22)

இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது
பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக்
கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;
மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ
வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். . .
. .. (குர்-ஆன் 5:32)

ஸஹீஹ் புகாரி 4590. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள்
(அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து
வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக்
கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக்
கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை
செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93
வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும்
குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும்
மாற்றிவிடவில்லை' என்று கூறினார்கள்.

முக்கிய நபர்கள்:

உஸ்மான் (உத்மான்): இஸ்லாமை தழுவியவர்களில் உஸ்மான் நான்காவது நபர்
ஆவார். இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவர் உம்மயத்
என்ற சிறப்புமிக்க வம்சத்தில் வந்தவராவார். மக்காவின் சுற்று
வட்டாரங்களில் வாழ்ந்த மக்களில் இவர் சிறப்புமிக்க வெற்றியுள்ள வாழ்க்கை
வாழ்ந்தவராவார். இவர் ஒரு ஜமிந்தார் என்றுச் சொல்லக்கூடிய நிலையில்
வாழ்ந்தார். இவர் முஹம்மதுவின் மகள் "ருகையா"வை திருமணம் செய்திருந்தார்.
ருகையா அவர்கள் மரித்த பிறகு, முஹம்மதுவின் இன்னொரு மகள் "உம் குள்தும்"ஐ
மணந்தார். கடைசியாக, உஸ்மான் மூன்றாவது "கலிஃபா" ஆனார் (இஸ்லாமிய
தலைவரானார்). முதல் நான்கு கலிஃபாக்களை "நேர் வழி
காட்டப்பட்ட(Rightly-Guided)" கலிஃபாக்கள் என்று அழைப்பார்கள்.

அலி: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.

ஜுபைர்: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.

தல்ஹா: இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், இஸ்லாமிய சமுதாயத்தில்
ஒரு முக்கிய நபராகவும், தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய முக்கிய
தலைவர்களில் முதல் 10 நபர்களில் இவரும் ஒருவர் என்று சில ஹதீஸ்கள்
கூறுகின்றன.

முஅவியாஹ்: இவர் அபூ சுஃப்யானின் மகனாவார். அபூ சுஃப்யான் ஒரு காலத்தில்
முஹம்மதுவின் தீவிர எதிரியாக இருந்தவர், தற்போது (முஹம்மது மரித்தபிறகு)
இவர் சீரியாவின் ஆளுநனராக இருக்கிறார்.

பின்னணி:

உமர் அவர்கள் மரண படுக்கையில் இருக்கிறார்கள் (இவரால் ஏமாற்றப்பட்ட ஒரு
அடிமையினால் இவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது).
இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை உமர் சந்தித்து, அடுத்த தலைவர்
(கலிஃபா) யார் என்ற முடிவை எடுக்கவுள்ளார். ஏன் மற்றும் எப்படி உஸ்மான்
அவர்கள் அடுத்த கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பதற்கு பலவகையான
விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றது. மேலும் இந்த தெரிவு செய்யும்
குழுவானது ஒருமனதாக உஸ்மானை அடுத்த தலைவராக தெரிவு செய்யவில்லை. இருந்த
போதிலும் கடைசியாக உஸ்மான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
காலங்கள் செல்லச்செல்ல, உஸ்மானின் தலைமைத்துவத்தை கேள்விகேட்கவேண்டிய
நிலை இஸ்லாமியர்கள் மத்தியிலே ஏற்பட்டது. அனேக முஸ்லிம்களுக்கு வாழ்க்கை
மிகவும் கடினமானதாக மாறியிருந்தது. உஸ்மானுக்கு எதிராக அனேக
குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய சமுதாயத்தில் வைக்கப்பட்டது. அதாவது உஸ்மான்
தன் சொந்த இனத்தவருக்கு தனிச்சலுகை தருகின்றார், பணத்தை சரியாக
கையாளவில்லை மேலும் இவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது என்றும் அனேக
குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக எழும்பின. இதனால் உஸ்மானின்
சிறப்புக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. கடைசியாக, மக்கள்
ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தனர்.

எகிப்து , குஃபா மற்றும் பஸ்ரா நகரங்களிலிருந்து மூன்று குழுவாக மக்கள்
உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டனர். உஸ்மான் தத்து எடுத்த
மகன் கூட இவருக்கு எதிராக எழும்பினான். உஸ்மானுக்கு எதிராக எழும்பிய இந்த
மக்களைப் பற்றி அனேக வகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றன.
ஆனால், நாம் மிகவும் ஆழமாகச் செல்லாமல், பொதுவான விஷயங்களை மட்டுமே இங்கே
அலசுகிறோம். முஸ்லிம்களுடைய மனதில் ஒட்டியிருந்த தீய எண்ணங்கள் சிறிது
சிறிதாக வெளியே தெரிய ஆரம்பித்தது, அது ஆணிவேர் வரை சென்று மரம்
முழுவதும் பரவி அதன் கனிகளின் மூலமாக வெளிப்பட ஆரம்பித்தது. உண்மையான
இஸ்லாமின் கனிகளை மக்கள் சுவைக்க ஆரம்பித்தனர்.

தபரியின் சரித்திரம், வால்யூம் 15, " கலிஃபத்துவத்தின் ஆரம்பகால
தடங்கல்கள்" என்ற உபதலைப்பிலிருந்து சில வரிகள்: [1]

இந்த ஆண்டு (654), உஸ்மான் இப்னு அஃப்பான்அவர்களை எதிர்த்த அனைவரும்
ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டனர். உஸ்மானுக்கு எதிராக அவர்கள்
ஒன்று கூடி, அனேக சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி உஸ்மானோடு நேரடியாக
பேசவேண்டும் என்று திட்டமிட்டனர் (பக்கம் 131).

அனேக முஸ்லிம்கள் அடங்கிய ஒரு குழு, உஸ்மானின் செயல்கள் பற்றி பரிசீலனை
செய்ய ஒன்று கூடியது. இந்த குழு ஒரு தூதனை உஸ்மானிடம் அனுப்பி
பேசவேண்டும் என்று முடிவு செய்தது. அதாவது உஸ்மான் புரிந்த
சர்ச்சைக்குரிய செயல்கள் பற்றி அவரிடம் பேச முடிவு செய்தது.(பக்கங்கள்
135 மற்றும் 136)

(உஸ்மான் அவர்களிடம் அலி கீழ்கண்டவாறு பேசுகிறார்)

அலி கூறினார், "நான் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், உமர்
அவர்கள் யார் யாரையெல்லாம் பதவியில் அமர்த்தினாரோ, அவர்களை கவனமாக அவர்
கண்காணித்துக்கொண்டு இருந்தார். யாராவது அவரைப் பற்றி ஒரு தவறான வார்த்தை
பேசினாலும் சரி, அது உமரின் காதுக்கு எட்டும் போது அவர்களை உமர்
சாட்டையால் அடிப்பித்து, தீவிரமாக தண்டிப்பார். ஆனால், இப்படி நீங்கள்
(உஸ்மான்) செய்யவில்லை. நீங்கள் பலவீனமானவராகிவிட்டீர்கள், உங்கள்
உறவினர்கள் எந்த தவறு செய்தாலும், அவைகளை பார்த்தும் பார்க்காதது போல
இருந்துவிட்டீர்கள்". இதற்கு உஸ்மான், "அவர்கள் உங்களுக்கும் உறவினர்கள்
தானே" என்று மறுமொழி கொடுத்தார். உடனே அலி அவர்கள் "ஆம், உண்மையாகவே
அவர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய உறவினர்களே, ஆனால், மற்றவர்கள்
அவர்களை விட நல்லவிதமான நடந்துக்கொள்கிறார்கள் அல்லவா?" என்று கூறினார்.
மறுபடியும் உஸ்மான் இவ்விதமாக கூறினார், "உங்களுக்கு தெரியுமா? உமர்
அவர்கள் தன் ஆட்சிகாலம் முழுவதும் முஅவியாவை ஆட்சியில்
அமரவைத்திருந்தார்கள் அல்லவா? அதே போலத்தானே நானும் செய்தேன்". உடனே அலி
இவ்விதமாக பதில் அளித்தார், "அல்லாஹ்வின் பெயரில் உங்களுக்கு சொல்கிறேன்,
உமரின் அடிமையாகிய யர்ஃபா என்பவர் உமருக்கு பயப்படுவதைக் காட்டிலும்,
முஅவியா அதிகமாக உமருக்கு பயந்திருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?".
உஸ்மான் "ஆம் எனக்குத் தெரியும்" என்று பதில் அளித்தார். அலி மேலும்
இவ்விதமாக கூறினார், "உண்மை என்னவென்றால், முஅவியா உங்களிடமிருந்து
அனுமதி பெறாமலேயே பிரச்சனைகளுகான தீர்வுகளை சுயமாக எடுக்கிறார். இதனை
நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். மேலும் முஅவியா மக்களிடம் "இது
உஸ்மானின் கட்டளை, இதற்கு யாரும் முரண்படாதீர்கள்" என்றுச் சொல்கிறார்.
இவைகளை உஸ்மானிடம் அலி சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார்.
உஸ்மானும் தன்னுடைய நிலைக்கு திரும்பிவிட்டார். (பக்கங்கள் 142, 143)

எகிப்தியர்களை பொருத்தமட்டில், அடுத்த கலிஃபாவாக "அலி" வரவேண்டும் என்று
விரும்பினார்கள். ஆனால், பஸ்ராவின் மக்கள் "தல்ஹா" கலிஃபாவாக வரவேண்டும்
என்றும், குஃபா மக்கள் "அல் ஜுபைர்" கலிஃபாவாக பதவி ஏற்கவேண்டும் என்று
விரும்பினார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இடத்தை விட்டு
மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். இந்த மக்கள் பலவகையான எண்ணங்களோடு
புறப்பட்டார்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது அது என்னவென்றால்,
ஒரு குழுமட்டுமே வெற்றிப்பெறும், மீதமுள்ள இரண்டு குழுக்கள் தோல்வி
அடையும் (பக்கம் 160).

இந்த புரட்சிக்காரர்கள் தங்கள் தளங்களை அடைந்தவுடன், மதினாவை
சுற்றிவளைத்து அதனை தாக்க தயாராகிவிட்டனர். மதினா மக்களின் மீது திடீர்
தாக்குதல் நடத்தினர். ஆச்சரியப்படும் விதமாக, "அல்லாஹு அக்பர்" என்று
ஒருமித்து கோஷமிட்டு, மதினா பட்டணம் முழுவதையும் கலங்கடித்தனர். அலி,
தல்ஹா மற்றும் அல் ஜுபைர் மூலமாக அமைக்கப்பட்ட பாளைய கூடாரங்களை இவர்கள்
ஆக்கிரமித்துக்கொண்டு, உஸ்மானை சுற்றி வளைத்தனர். "யார் எங்களோடு
கைகோர்த்து நிறபார்களோ, உஸ்மானை புறக்கணிப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக
இருப்பார்கள்" என்று கோஷமிட்டனர்.(பக்கம் 162)

இந்த அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி, மசூதிகளில் உள்ள மக்கள் வெளியே
வரும்வரை அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டு இருந்தார்கள். மசூதியில்
பிரசங்க பீடத்தில் இருந்த உஸ்மான் மயக்க நிலையை அடையும் வரை அவர் மீதும்
கற்களை வீசினர். உஸ்மான் மயக்க நிலையில் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச்
செல்லப்பட்டார். இப்போது எகிப்திய அதிருப்தியாளர்கள், மதினா மக்களில்
வெறும் மூன்று நபர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்தனர், இம்மூவரோடு
கடிதத்தொடர்பை இவர்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள். இம்மூவரின்
பெயர்கள்: முஹம்மது பி. அபூபக்கர் (அபூ பக்கரின் மகன்), முஹம்மது பி. அபீ
உதைஃபா, மற்றும் அம்மர் பி. யாசிர் என்பவைகளாகும். மதினாவின் மக்களில்
ஒரு குழுவானது தங்கள் தலைவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தது. இவர்களின்
பெயர்களாவன, சைத் மாலிக், அபூ ஹுரைரா, ஜையத் பி. தாபித் மற்றும் அல்
ஹசேன் பி அலி (அலியின் மகன்) என்பதாகும். இவர்கள் தன் விட்டைவிட்டு
வெளியேறும்படி உஸ்மான கண்டிப்பாய் உத்தரவிட்டார், உடனே இவர்கள் அவரை
விட்டுச் சென்றுவிட்டார்கள். உஸ்மான் பிரசங்க பீடத்திலிருந்து மயங்கி
விழுந்துவிட்ட பிறகு, இவரை வீட்டில் காண அலி, தல்ஹா மற்றும் அல்ஜுபைர்
சென்றனர். உஸ்மானிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, தங்கள்
வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டனர் (பக்கங்கள் 165, 166)

இந்த அதிருப்தியாளர்கள் உஸ்மானிடம் வந்து இவ்விதமாக கூறினார்கள்,
"குர்ஆனை கொண்டுவரும் படி சொல்லுங்கள்?". உஸ்மான் கட்டளையிட குர்ஆன்
கொண்டு வரப்பட்டது. பத்தாவது அத்தியாயத்தை எடுத்து படியுங்கள் என்று
அவர்கள் கூற உஸ்மான் பத்தாவது அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார்.
கீழ்கண்ட வசனம் வரும்வரை அவர்கள் காத்திருந்தனர், அதன் பிறகு நிறுத்தச்
சொன்னார்கள்:

"(நபியே!) நீர் கூறும்: "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை
நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை
ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்
கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின்
மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"

அவர்கள் உஸ்மானிடம் இவ்விதமாக கேட்டனர்: "சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை
ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்
கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின்
மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?".

இதற்கு உஸ்மான் "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது என்று
அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்". ... அவர்கள் உஸ்மானோடு அந்த வசனம்
பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் உஸ்மானோ "இந்த
வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது" என்று பதில்
அளித்துக்கொண்டு இருந்தார். பக்கம் (167)

அதன் பிறகு, இந்த எகிப்திய அதிருப்தியாளர்களின் பிரதிநிதிகள்
திருப்தியோடு எகிப்திற்கு திரும்பி சென்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால்,
ஒரு மனிதன் குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தான். அவன் இந்த குழுவை
தாண்டி சென்றுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து இவன் அவர்களை
மறுபடியும் கடந்துச் சென்றான். இதனைக் கண்ட இவர்கள், அவனை அழைத்து, நீ
என்ன செய்கிறாய்? என்று கேட்டார்கள். நீ எங்களிடம் ஏதோ ஒன்றை மறைக்கிறாய்
என்று அவனிடம் தேட ஆரம்பித்தார்கள். அவனிடம் ஒரு கடிதம் காணப்பட்டது.
அந்த கடிதத்தில் உஸ்மானின் கையெழுத்தும், முத்திரையும் காணப்பட்டது. இது
எகிப்தின் ஆளுநருக்கு எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தில் "அவர்களை
சிலுவையில் அறையுங்கள் அல்லது கொலை செய்துவிடுங்கள் அல்லது கை கால்களை
வெட்டிவிடுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. ஆகையால், இந்த எகிப்திய
பிரதிநிதிகள் மறுபடியும் மதினாவிற்கு திரும்பினர்.(பக்கங்கள் 168, 169)

ஒட்டகத்தில் சென்றுக்கொண்டு இருந்த, உஸ்மானின் ஒரு அடிமையிடம்
கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தை படித்ததும், இந்த எகிப்திய பிரதிநிதிகள்
மதினாவிற்கு உஸ்மானிடம் திரும்பி வந்தனர். அந்த கடிதத்தில், இவர்களில்
சிலரை கொன்றுவிடும்படி, சிலரை சிலுவையில் அறையும்படி எகிப்திய ஆளுநருக்கு
எழுதியிருந்தது. அவர்கள் உஸ்மானிடம் வந்து " இவன் உங்களுடைய அடிமையாவான்"
என்று கூறினர். இதற்கு உஸ்மான், "என்னுடைய அனுமதி இல்லாமல் இவன்
சென்றுள்ளான்" என்று பதில் அளித்தார். அவர்கள் மறுபடியும் உஸ்மானிடம்,
"இது உங்கள் ஒட்டகம் தானே?" என்று கேட்டனர். இதற்கு உஸ்மான், "இவன்
என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றான்" என்று
பதில் சொன்னார். மறுபடியும் அவர்கள் "இது உங்களுடைய அடையாள முத்திரை"
என்றனர், அதற்கு உஸ்மான் "இது என்னுடையது அல்ல, இது போலியான முத்திரை"
என்றார் (பக்கம் 185).

உஸ்மான் தனக்கு நேரிட்ட கொடுமைகளைக் கண்டு, மேலும் தனக்கு எதிராக வந்த
மக்கள் திரளைக் கண்டு, சிரியாவில் உள்ள முஅவியா பி. அபீ சுஃப்யான்
அவர்களுக்கு இவ்விதமாக எழுதினார்: " . . . மதினாவின் மக்கள்
இறைநம்பிக்கை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் கீழ்படிதலை
விட்டுவிட்டார்கள், ஆதரவு கொடுப்பதாக அவர்கள் செய்த வாக்கை புறக்கணித்து
விட்டார்கள். ஆகையால், சிரியாவில் உள்ள இராணுவத்தை என்னிடம் அனுப்பவும்.
உங்களிடமிருக்கும் ஒவ்வொரு நல்ல ஒட்டகத்திலும், வலுவிழந்த ஒட்டகத்திலும்
இராணுவத்தை அனுப்பவும்". இந்த கடிதத்தை முஅவியா பெற்ற பிறகு, அதன் படி
செய்ய தாமதம் செய்தார். ஏனென்றால், இறைத்தூதரின் தோழராகிய உஸ்மானுக்கு
வெளிப்படையாக முரண்பட இவர் விரும்பவில்லை. அதிருப்தியாளர்களின் எண்ணமும்
தன் எண்ணமும் ஒன்று தான் என்பதை முஅவியா அறிந்திருந்தார் (பக்கம் 185).

அதன் பிறகு, உஸ்மானுக்கு எதிராக 600 எகிப்திய மக்கள் மதினாவை நோக்கி
வந்தார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் "அமர் பி புதல் பி.
வர்ஃகா அல் குஜைய்" என்பவராவார். இவர் இறைத்தூதரின் தோழராவார். . . . .
அவர்கள் உஸ்மானுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விதமாக எழுதியிருந்தார்கள்:
"... அல்லாஹ்வின் பெயரில் இதனை அறிந்துக்கொள்ளுங்கள், அதாவது
அல்லாஹ்விற்காக நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம், நாங்கள்
அல்லாஹ்வில் திருப்தி அடைகிறோம். நீங்கள் நேர்மையோடு, குழப்பமில்லாமல்
எங்களிடம் வந்தாலும் சரி, அல்லது உங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல்
வந்தாலும் சரி, நாங்கள் எங்கள் தோள்களில் உள்ள வாள்களை கீழே வைப்பதில்லை
என்று சத்தியம் செய்கிறோம். இது தான் நாங்கள் உங்களுக்கு சொல்ல
விரும்பும் விஷயம் மற்றும் உங்களுக்கு எதிரான முன்வைக்கும்
குற்றச்சாட்டுமாகும். உங்களுக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த செயல்களை
அல்லாஹ் எங்களுக்கு மன்னிப்பானாக. உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.
(பக்கங்கள் 186, 187)

தம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று உஸ்மான் பயந்தார். அவர் தன்னுடைய
குடும்பத்தினர்களிடமும், தமக்கு அறிவுரை கூறுபவர்களிடமும் வினவினார்.
"இந்த அதிருப்தியாளர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்களா?
இதிலிருந்து விடுபடுவது எப்படி?" என்று அவர்களிடம் உஸ்மான் கேட்டார்.
அதற்கு அவர்கள் "அலி" அவர்களை அழைத்து பேசுங்கள் என்று அறிவுரை
கூறினார்கள்.

அலி அவர்களை வரும் படி உஸ்மான் சொல்லியனுப்பினார், அலியும் வந்து
சேர்ந்தார். உஸ்மான் அலி அவர்களிடம் "அபூ ஹசன் அவர்களே, மக்கள் என்ன
செய்தார்கள் என்றும், நான் என்ன செய்தேன் என்றும் நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு
பயமாக இருக்கிறது. என்னை விட்டு சென்றுவிடும்படி அவர்களுக்குச்
சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அவர்கள்
கேட்பதெல்லாம் அவர்களுக்கு செய்வேன், எனக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு
எதிராகவும் அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களுக்கு நியாயம் செய்வேன்.
நான் இரத்தம் சிந்த நேரிட்டாலும் சரி, அவர்களுக்கு நியாயம் செய்வேன். . .
. இவைகளைக் கேட்டு அலி வெளியே வந்து, மக்களிடம் இப்படியாக கூறினார், "ஓ..
மக்களே, நீங்கள் நீதிவேண்டும் என்று கேட்டீர்கள், இதோ உங்களுக்கு நீதி
கிடைத்துள்ளது. . . ". இதற்கு மக்கள் "நாங்கள் இதனை அங்கீகரிக்கிறோம்"
என்றுச் சொன்னார்கள். பக்கங்கள் (187, 188).

. . . உஸ்மான் இவ்விதமாக கூறினார், "எனக்கு அவகாசம் கொடுங்கள், அவர்கள்
கேட்கும் காரியங்களை ஒரே நாளில் செய்யமுடியாது, எனக்கு அவகாசம்
கிடைத்தால், நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்". இதற்கு அலி, "இதர
இடங்களின் காரியங்களுக்கு நீங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள்
கட்டளைகள் அந்த இடங்களுக்குச் சென்றடைய அதிக நாட்கள் ஆகும், ஆனால்
மதினாவின் காரியங்களுக்காக அவகாசம் தரமுடியாது" என்று பதில் அளித்தார்.
உடனே உஸ்மான் அவர்கள், "சரி, மதினாவின் காரியங்களை சரி செய்வதற்கு எனக்கு
மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள்" என்று கேட்டார். இதற்கு அலி ஒப்புதல்
அளித்தார். அதன் பிறகு, அலி வெளியே சென்று மக்களுக்கு இவைகளை
தெரிவித்தார். அலி அவர்கள் அந்த மக்களுக்கும், உஸ்மானுக்கும் இடையே ஒரு
உடன்படிக்கையை உண்டாக்கினார்கள், அதாவது, மூன்று நாட்கள் அவகாசம்
தரப்படுகின்றது, இதற்குள் எல்லா வகையான அநீதி காரியங்களை சரி செய்து,
மற்றும் இந்த மக்கள் வெறுக்கும் ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும்
என்பதாகும். (பக்கம் 188).

ஆனால், உஸ்மான் அவர்கள் போர் செய்வதற்கு தன்னை தயார்படுத்திக்
கொண்டார்கள், ஆயுதங்களை சேகரித்துக் கொண்டார்கள். போரில் கிடைத்த
பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பாகம் கலிஃபாவிற்கு தரப்படும்.
இதன் மூலம் கிடைத்த அடிமைகளை சேகரித்துக்கொண்டு, உஸ்மான் மிகப்பெரிய
இராணுவத்தை தயார் படுத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கடந்துவிட்டது,
இன்னும் உஸ்லாம் அவர்கள் தான் ஒப்புக்கொண்ட காரியங்களை செய்யவில்லை,
அதாவது மக்களுக்கு வெறுப்புண்டாக்கிய எந்த காரியத்தையும் அவர்
ஒழித்துக்கட்டவில்லை, அவர்கள் வெறுத்த ஆளுநர்களை நீக்கவில்லை. இதனால்,
மக்கள் மறுபடியும் இவருக்கு எதிராக புரட்சியில் இறங்கினார்கள். (பக்கம்
189).

இதுவரை நாம் கண்ட விவரங்களின் சுருக்கம்:

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்களுக்கு உஸ்மானுடைய ஆட்சியில்
மகிழ்ச்சியில்லை. இந்த சாம்ராஜ்ஜியங்களில் உள்ள மக்கள் ஒன்று கூடி,
உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். உஸ்மான் தனக்கு கீழே
ஆளுநர்களாக இருக்கும் நபர்களை உதவிக்கு அழைத்தார், ஆனால், யாரும் உதவ
முன்வரவில்லை. இந்த அதிருப்தியாளர்கள் தங்களுக்கு நியாயம்
கிடைக்கவேண்டுமென்று விரும்பி, உஸ்மானை எதிர்த்தார்கள். உஸ்மான் தன்னுடைய
செயல்களுக்காக மன்னிப்புக் கோரி அவைகளை சரி செய்துக்கொள்வார் என்று
எதிர்ப்பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை தாம் நிறைவேற்றுவதாக
உஸ்மான் வாக்குறுதி கொடுத்தார், அதிருப்தியாளர்கள் இதனை அங்கீகரித்து
நிம்மதியாக நாடு திரும்பினார்கள். இந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது,
ஒரு மனிதனை சந்தித்தார்கள், அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. எகிப்து நாட்டு
ஆளுநர்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பாளர்களை
தண்டிக்கும்படியாகவும், கொல்லும்படியாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு
இருந்தது. இந்த முறை இன்னும் அதிக கோபத்தோடு இந்த மக்கள் உஸ்மானை
சந்திக்கச் சென்றார்கள். உஸ்மான் அலியின் உதவியுடன், தன் தவறுகளை சரி
செய்துக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டு
பெற்றுக்கொண்டார். எனினும் தன் தவறுகளை சரி செய்துக் கொள்ளாமல், தன்
வார்த்தையை காத்துக் கொள்ளாமல், உஸ்மான் ஒரு இராணுவத்தை போருக்காக தயார்
படுத்திக்கொண்டார். தன்னுடைய இராணுவத்தால் இந்த புரட்சியாளர்களை
ஒழித்துக்கட்டிவிடலாம் என்று உஸ்மான் எண்ணிவிட்டார். ஆனால், அந்த
எதிர்ப்பாளர்கள் மறுபடியும் உஸ்மானை நோக்கி வந்தார்கள்.

கடைசி நிமிடங்கள்:

முஹம்மது பி. அபி பக்கர் (அபூபக்கரின் மகன்) 13 பேரோடு உஸ்மானிடம்
வந்தார். அவர் உஸ்மானின் தாடியை பிடித்து இழுத்தார், இதனால் அவரது வாய்
ஆட்டம்கண்டது. முஹம்மது பி. அபி பக்கர் உஸ்மானிடம் "முஅவியாவும்
உங்களுக்கு உதவமுடியாது, இப்னு அமரும் உங்களுக்கு உதவமுடியாது, உங்களுடைய
கடிதங்களும் உங்களுக்கு உதவாது" என்று கூறினார்."என் தாடியை விட்டுவிடு,
என்னை போகவிடு என் சகோதரரின் மகனே, என் தாடியை விட்டுவிடு" என்று உஸ்மான்
கூறினார். இப்னு அபி பக்கர், தன் கண்களால் வேறு ஒரு நபருக்கு சைகை
செய்வதை நான் கண்டேன். அந்த நபர் உஸ்மான் மீது பாய்ந்து, அம்புகள் கொண்ட
ஒரு பெரிய இரும்பு கம்பியினால் அவரது தலையில் குத்தினார்…. அவர்கள் ஒன்று
சேர்ந்து உஸ்மானை கொன்றுவிட்டனர். (பக்கங்கள் 190, 191).

"முஹம்மது பி. அபி பக்கர்" அவரிடம் சென்றார் மற்றும் அவரது தாடியை
இழுத்து பிடித்துக்கொண்டு, இவ்விதமாக கூறினார், "அபூ பக்கர் அவர்கள்
எங்களிடம் நடந்துக்கொண்டது போல நீங்கள் எங்களிடம் நடந்துக்கொள்ளவில்லை".
அதன் பிறகு அவர் வெளியே சென்றுவிட்டார். கருப்பு மரணம் என்ற பெயர் கொண்ட
இன்னொரு மனிதன் உஸ்மானின் அறைக்குள் வந்தான், உஸ்மானின் கழுத்தை
நெருக்கிப்பிடித்து அவரை முகத்தில் அறைந்தான். அதன் பிறகு அவன் வெளியே
சென்று "அல்லாஹின் பெயரில் ஆணையிட்டுச் சொல்கிறேன், உஸ்மானின் தோண்டையைப்
போல மிகவும் மிருதுவான தோண்டையை நான் காணவில்லை" என்று கூறினான்.
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டுச் சொல்கிறேன், அவரது கழுத்தை நான்
நெருக்கினேன், ஒரு ஜின்னின் ஆவி பிரிவது போல அவரது ஆவி ஆட்டம் கண்டு
அவரது உடல் நடுங்கும் வரை நான் அவரை விடவில்லை. அதன் பிறகு அவன்
சென்றுவிட்டான்.

ஒரு குறிப்பிட்ட மனிதன் உஸ்மானிடம் சென்றான், அப்போது அவர் குர்-ஆனை
தன்னிடம் வைத்திருந்தார். அவர் அப்போது "உனக்கும் எனக்கும் இடையே
குர்-ஆன் உள்ளது" என்று கூறினார். அந்த மனிதன் தன் வாளை எடுத்துச்
சென்றான், உஸ்மான் தன் கையால் தடுத்தார், அப்போது அவரது கை
துண்டிக்கப்பட்டது. அவரது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டதோ அல்லது
அதிகமாய காயப்பட்டதோ எனக்குத் தெரியாது. பிறகு அவன் "அல்லாஹ்வின் பெயரில்
சொல்கிறேன், குர்-ஆனுக்கு மேலாகச் சென்ற ஒரே கை இதுவாகத்தான் இருக்கும்"
என்றுச் சொன்னான். (பக்கம் 205).

"அமர் பி. அல் ஹமிக்", உஸ்மானின் மீது பாய்ந்து, அவரின் நெஞ்சின் மீது
உட்கார்ந்துவிட்டான். உஸ்மானின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது. இவன்
அவரை ஒன்பது முறை கத்தியால் குத்தினான். அமர் "அல்லாஹ்விற்காக நான்
மூன்று முறை அவரை குத்தினேன், எனக்குள் இருந்த கோபத்தின் காரணமாக ஆறு
முறை குத்தினேன்" என்று கூறினான் (பக்கம் 220).

வீட்டிற்குள் இருந்த படியே அந்த எதிர்ப்பாளர்கள் "பொக்கிஷ
சாலையை(கஜானாவை) பிடியுங்கள், உங்களுக்கு முன்பாக வேறு யாரும் அங்கு
செல்லக்கூடாது" என்று கத்தினார்கள். அந்த பொதுவான பொக்கிஷ சாலையை
பாதுகாத்துக்கொண்டு இருந்த காவலாளிகள், இந்த சத்தத்தை கேட்டவுடன் "ஓடு..
ஓடு… இவர்கள் உலக பொருட்கள் மீது ஆசை கொண்டு வருகிறார்கள், ஓடு" என்று
சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள். அதன் பிறகு அந்த எதிர்ப்பாளர்கள், அங்கு
வந்து அனைத்தையும் கொள்ளையிட்டாரள் (பகம் 216).

உஸ்மான் ஆட்சியின் முடிவு:

உஸ்மான் ஆட்சி செய்த சமயத்தில் அவர் குறைஷி இனத்தில் இருந்த முக்கியமான
நபர்களை உமர் நடத்தியது போல சரியாக நடத்தவில்லை. ஆகையால் இவர்கள்
இஸ்லாமிய ஆட்சி புரியும் அனைத்து இடங்களுக்கும் சென்றார்கள். இஸ்லாம்
ஆட்சி புரிந்த இடங்களில் வாழும் இதர குறைஷி மக்களின் நிலையை இவர்கள்
கண்டார்கள். அவர்களுக்கு இஸ்லாமில் எந்த ஒரு சலுகைகளும், அதிகாரங்களும்
அளிக்கப்படாமல் இருந்தது. ஆகையால், குறைஷிகள் ஒரு கூட்டமாக சேர்ந்து
விட்டனர். குறைஷிகள் அவர்களின் நம்பிக்கையை தட்டி எழுப்பினார்கள், இதன்
மூலம் தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.
இதன் பிறகு அவர்கள் இவ்விதமாக கூறிக்கொண்டார்கள், "குறைஷி மக்கள் சக்தி
வாய்ந்தவர்கள், நாம் அவர்களின் மத்தியிலே புகழைப் பெறுவோம், நமக்கு
முன்னுரிமை இனி கிடைக்கும்படிச் செய்வோம்". இஸ்லாமில் நுழைந்த முதல் தவறு
இது தான். சராசரி மக்களின் மத்தியில் உருவான முதன் முதல் முரண்பாடு இது
தான்.(பக்கம் 224).

புறாக்களை பறக்கவிட்டு, அவைகளை கற்களால் அடித்து, அதன் மூலம் செல்வங்களை
பிரித்துக்கொள்ளும் பழக்கம் மதினாவின் மக்களிடையே பரவியது. இதனை முதன்
முதலில் ஒழித்துக்கட்டியவர் உஸ்மான் ஆவார். உஸ்மான் ஒரு ஊழியரை இதற்காக
அமர்த்தி, அவர் மூலமாக மக்கள் இப்படிப்பட்ட பழக்கத்தில் ஈடுபடாமல்
பார்த்துக்கொண்டார். (பக்கம் 226)

மக்களிடையே குடிப்பழக்கம் தொடங்கியிருந்தது. உஸ்மான் ஒரு குழுவை
உருவாக்கினார். அந்தக் குழு ஊர் முழுவதும் சுற்றித்திரிந்து இப்படிப்பட்ட
குடிக்கும் மக்களை கண்டுபிடித்தது. இதன் பிறகு குடிப்பழக்கம் இன்னும்
அதிகமாக ஊர் முழுவதும் பரவியது. மக்களுக்கு வெளிப்படையாக உஸ்மான்
எச்சரித்தார், அதாவது அல்லாஹ்வின் சட்டத்தின் படி குடிக்கும் மக்கள்
தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். குடிக்கும் போது
கண்டுபிடிக்கப்பட்டால் சாட்டையடி தரப்படும் என்ற தண்டனையை மக்களும்
ஏற்றுக்கொண்டார்கள். மேலும் சிலர் குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டு
சாட்டையால் தண்டிக்கப்பட்டார்கள். (பக்கம் 226)

சாராம்சம்:

உமர் மரிக்கும் வரையில், மக்கள் இஸ்லாமின் பாரமான சட்டதிட்டங்களால்,
தாங்கமுடியாத நுகத்தினால் அதிகமாக சோர்ந்து போய் இருந்தனர்.
இதுமாத்திரமல்ல, உஸ்மான் கலிஃபா ஆனவுடன், முஸ்லிம்கள் உலகத்தின் பல
பகுதிகளுக்குச் சென்று அவைகளை ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்தனர், மேலும்
இவர்களின் கண் உலக ஆசைகளின் பக்கம் சாய்ந்தது. சிலர் தங்களுக்கு
அதிகாரமும், மதிப்பும் வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முஸ்லிம்
தலைவர்களோடு தங்களை இணைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தடைசெய்யப்பட்ட
பில்லிசூனிய மந்திரங்கள் செய்வது, மதுபானம் குடிப்பது போன்ற பழக்கங்கள்
மறுபடியும் மதினாவில் தலை தூக்கியது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள்
இருந்தாலும், காலப்போக்கில் இது அபரிதமாக வளர ஆரம்பித்தது. ஆனால், அரசராக
இருக்கும் உஸ்மான் இப்படிப்பட்டவர்களை கண்டும் காணாதவர் போல
இருந்துவிட்டார், அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மக்கள்
தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளாமல், தங்கள் இச்சைகளை இன்னும் அதிகமாக
பூர்த்தி செய்துக்கொள்ள, தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் அதிகமாக செய்ய ஆர்வம்
இருந்தது. உஸ்மான் அவர்களோ தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு
அதிகமான சலுகைகளைக் கொடுத்தார், மேலும் முக்கியமான பதவிகளை அவர்களுக்கு
கொடுத்தார். இவர்களில் சிலர் நம்பிக்கைத் துரோகிகளாக இருந்தார்கள்,
இன்னும் அதிகார தாகத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள்
அநியாயமாக செயல்பட ஆரம்பித்தார்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்களாக
மாறினார்கள். கடைசியாக, சராசரி மக்களின் கோபமும், பாவ ஆசைகளும்
தலைதூக்கியது,

இவர்கள் உஸ்மானுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். உஸ்மானுடைய இந்த
பாவமான செயல்களினாலும், பொறுப்பற்ற தனத்தினாலும் மக்கள் அதிகமாக
அவதிக்குள் அகப்பட்டார்கள். இதுவரை சகித்துக்கொண்டது போதும் என்ற
நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதும், உஸ்மானுக்கு எதிரான போர்க்கொடியை தூக்க
ஆரம்பித்தார்கள். இது ஒரு புறமிருக்க, உஸ்மான் இந்த மக்களோடு சமரசம்
பேசினார், தன்னுடைய தவறான செயல்களை சரி செய்துக்கொள்வதாக வாக்கு
கொடுத்தார், ஆனால், அவர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு, அதன் பிறகு
அவர்களோடு போர் செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார். உஸ்மானுடைய
தொழர்களாகவும், இன மக்களாகவும் இருந்த, அலி, தல்ஹா, ஜுபைர் மற்றும்
முஅவியா இன்னும் இதர மக்கள், தங்கள் கலிஃபாவை காப்பாற்ற பெரிய முயற்சி
எடுக்கவில்லை, ஏதோ பெயரளவில் உதவி செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு
கடந்துச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் அறிந்திருந்த விஷயம்
என்னவென்றால், உஸ்மான் அழிக்கப்பட்டால், தாங்கள் அடுத்ததாக கலிஃபாவாக
வரமுடியும் என்பதாகும்.

கேள்விகளும் கருத்துப்பரிமாற்றங்களும்:

இஸ்லாமிய சரித்திரத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும், இஸ்லாமிய முகம்
படிப்படியாக கருக ஆரம்பித்தது. முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஒரே ஒரு
வம்சத்திற்குள்ளாகவே, இஸ்லாமின் உண்மை கனிகள் பழுக்க ஆரம்பித்ததை
காணமுடியும். பாருங்கள்! உண்மையான முஸ்லிம்களின் பரிசுத்த இரத்தம் எப்படி
சிந்தப்பட்டது என்று, அதுவும் சிறந்த முஸ்லிம்களாலேயே இந்த காரியம்
நடந்தேரியது. இஸ்லாமுடைய தீவிர எதிரிகள் முஸ்லிம்களே! இஸ்லாமிய
சாம்ராஜ்ஜியத்திற்கு என்ன நடந்தது என்று பார்த்தீர்களா?

முஹம்மதுவின் நெருங்கிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை
செய்துக்கொள்கிறார்கள். தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு, ஆரம்ப காலத்தில்
இஸ்லாமுக்காக போர் புரிந்த இவர்கள், இன்று தங்கள் வாள்களை தோள் கொடுத்து
தாங்கிய தன் இஸ்லாமிய தோழனுக்கு எதிராக காட்டுகிறார்கள். இப்போது
இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தில் நோய் பற்றிக்கொண்டது. தன் நன்னடத்தை,
அரசியல் வலிமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தை இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்
தன் நோயை மதினாவை சுற்றியுள்ள இதர இடங்களுக்கு பரப்பிக்கொண்டு
இருக்கிறது. முஹம்மதுவின் மீது நம்பிக்கை வைத்து அவரை
பின்பற்றியவர்களில் நான்காவதாக இருப்பவர் இவர் என்று கருதப்பட்ட
"உஸ்மான் கலிஃபாவை", முஹம்மதுவின் நெருங்கிய நண்பரின் மகன் கொன்றான்.
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் வலிமை வாய்ந்த பதவி என்று கருதப்படும்,
கலிஃபா என்ற பதவியை வகித்த "உஸ்மான்" தன் சொந்த வீட்டிலேயே கொலை
செய்யப்பட்டார். இஸ்லாமிய சமுதாயம் என்று ஒன்று இருந்ததா என்ற சந்தேகம்
வருகின்றது, தேடிப்பார்த்தலும் அது கண்களுக்கு தென்படவில்லை. தன் அன்பான
கலிஃபாவை காப்பாற்றாமல் அவருக்கு முதுகை காட்டினது இஸ்லாமிய சமுதாயம்.

இவைகளை சரியான கோணத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள இப்போது சொல்லப்போகும்
உதாரணத்தைக் கவனியுங்கள். இயேசுவின் சீடனாகிய யோவான், மற்றோரு சீடனாகிய
பேதுருவிற்கு விரோதமாக சதி செய்து அவரைக் கொன்றால், கிறிஸ்தவத்தைப் பற்றி
நீங்கள் என்ன நினைப்பீர்கள்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நடக்குமென்று
உங்களால் கற்பனையாவது செய்யமுடிகின்றதா?

நீங்கள் இப்போது குர்ஆன் ஸூரா 8:63ஐ பற்றி என்ன சொல்வீர்கள்?
முஹம்மதுவின் தோழர்களுக்கு மத்தியிலே அன்பின் பிணைப்பை உண்டாக்குவதற்கு
பதிலாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டு, பிரிவினையையும், வெறுப்பையும்
உண்டாக்கினார் என்று தோன்றுகிறதல்லவா?

சரி, இப்போது இதன் விளைவுகள் என்ன என்பதை கவனிப்போம்.

1) வெறுப்புணர்வும் கொலையும்:

இஸ்லாமிய சமுதாயத்தின் இதயத்தில் எவ்வளவு பாவம் புகுந்துவிட்டதென்றால்,
அவர்கள் தங்களை அடக்கிக்கொள்ளாமல், கொடுமையான வன்முறையிலும் ஈடுபடவும்
தயங்கவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் (கலிஃபா) கொலை செய்யப்பட்டு
சாய்க்கப்பட்டார்கள். இது ஏதோ ஒரு நபர் செய்த கொலையில்லை. முஹம்மதுவின்
அனேக தோழர்கள் தங்கள் முந்தைய தொழருக்கு எதிராக புறப்பட்டு அவரை கடுமையாக
கொலை செய்கிறார்கள்.

2) இருமனப்போக்கு:

உஸ்மானை பாதுகாக்கவேண்டிய முஸ்லிம்கள், அவரை விட்டுச்சென்றுவிட்டனர்.
உஸ்மான் தனக்கு வரும் பிரச்சனைகளை தானே சந்திக்கட்டும் என்று அவரை
தனிமையாக விட்டுவிட்டார்கள்.

3) ஆன்மீக ஊழல்

பதினைந்து ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமுதாயம் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது.
முஹம்மதுவோடு தோளோடு தோள் கொடுத்து போர் புரிந்த அதே முஸ்லிம்கள், அவரோடு
கூட வறுமையில் வாழ்ந்த அதே முஸ்லிம்கள், இன்று முஹம்மது கற்றுக்கொடுத்த
அனைத்து காரியங்களையும் விட்டுவிட்டு தங்களை வன்முறைக்கு
விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருந்தது,
அவர்களுக்கு செல்வத்தின் மீது ஆசை இருந்தது. அவர்களுக்கு வரட்டு கௌரவம்
அதிமுக்கியமான காரியமாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவரை
ஒருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரை ஒருவர் கொன்றார்கள். நாம் இங்கே
பார்ப்பது என்னவென்றால், ஒரு வயதான மனிதர், வலுவிழந்த மனிதர், கன்னத்தில்
அறையப்பட்டார், கேவலப்படுத்தப்பட்டார், தன் எதிரிகளால் கழுத்து
நெருக்கப்பட்டார், கடைசியாக, குர்-ஆன் படித்துக்கொண்டு இருக்கும்போது,
வெட்டப்பட்டார், அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியும்
காயப்படுத்தப்பட்டார்கள்.

விமர்சனம்:

ஒரே ஒரு தலைமுறை கடந்துச்செல்வதற்கு முன்பே, இஸ்லாமிய சமுதாயத்தில்,
ஒருவரைப் பார்த்து ஒருவர் குரைத்துக்கொள்ளும் நாய்களின் கூட்டம் போல
மக்கள் மாறிவிட்டார்கள். இவர்களின் ஆன்மீக நிலை மிகவும் மோசமான நிலையை
அடைந்துவிட்டது. இந்த நிலை கலிஃபா நாற்காலியிலிருந்தே தொடங்கியது. இந்த
ஆன்மீக மரணம் இஸ்லாமிய சமுதாயத்தில் தன் கனிகளை பெற்றெடுக்க
ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமிய சமுதாயத்தில் என்ன நடந்தது என்று
பார்த்தீர்களா? உண்மையான இஸ்லாம் என்னவென்று இப்போது உங்களுக்கு
புரிந்ததா?

குறிப்புக்கள்:

1) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul
wa'l-muluk), State University of New York Press 1993

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Silas/rf3_uthman_murder.htm

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

________________________________
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.

Tamil Source: http://www.backend.ai-deutschland.de/tamil/authors/silas/rf3_uthman_murder.html

http://www.isakoran.blogspot.in/2013/12/3.html




--
Source : http://isakoran.blogspot.in/

இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்

அல்லாஹ் என்ற வார்த்தையை பிறமதத்தவர்

பயன்படுத்தக் கூடாதா..??



அல்லாஹ் என்ற வார்த்தையை பிறமதத்தினர் பயன்படுத்தக் கூடாது என்ற மலேசிய
நீதிமன்ற தீர்ப்பை உலக இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாத்துக்கு ஒரு
வெட்கமாகவும் தலைகுனிவாகவும் கருதும்போது, TNTJ அந்த சட்டத்தை அல்லாஹ்வே
போட்ட சட்டமாக நினைத்து அதனை ஆதரித்து அறிக்கையிடுவது அவர்களின்
அறியாமையை காட்டுகிறதா? இல்லை TNTJ எது சொன்னாலும் சரியாகதான் இருக்கும்
என்று தலையாட்டும் அப்பாவி இஸ்லாமியரை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதை
காட்டுகிறதா? என்பதுதான் இப்போதுல்ல சந்தேகம்.



முஹம்மது நபியின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பதில் எந்த இஸ்லாத்தை
சேர்ந்தவர்களுக்கும் இதுவரை கருத்துமுரண்பாடு வந்ததாக தெரியவில்லை. (இந்த
கட்டுரையை வாசித்துவிட்டு TNTJக்கு வரலாம்). முஹம்மது பிறக்கும்போது
மக்காவில் இஸ்லாத்தை பின்பற்றுகிறவர்கள் யாரும் இருக்கவில்லை என்பது
இஸ்லாமியரின் கருத்து. ஏன் முஹமதுவை வளர்த்து, வியாபாரம் சொல்லிகொடுத்த
முஹமது நபியின் சித்தப்பாவும் இஸ்லாத்தை தழுவ வில்லை என்றே இஸ்லாமிய
சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாத்துக்கு
முன்பு இருந்தது என்பதற்கு சிறந்த ஆதாரம் முகமது நபியின் இனிஸியல் ஆகும்!



அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாத்துக்கும் இஸ்லாமியருக்கும்தான் சொந்தம்
என்று சொல்லும் TNTJ முஹமது இப்னு அப்துல்லாஹ் என்ற முஹமது நபியின்
முழுபெயரில் வரக்கூடிய அப்து – அல்லாஹ் என்பது இஸ்லாத்துக்கு மட்டும்
சொந்தமான பெயர் என்று சொல்வீர்களானால் முஹமது நபி தனது 40 வது வயதின்
பின்புதான் தனது தகப்பனார் அல்லாஹ்வின் அடிமையாகதான்
இருந்திருக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் தனது பெயருடன் அப்துல்லாஹ்
என்று தந்தையின் பெயரை சேர்த்துகொண்டார் என்ற முடிவுக்கு
வரவேண்டியிருக்கும். அதாவது 40 வயது வரைக்கும் முஹமது தந்தை யார் என்று
தெரியாமல் இருந்தார் என்ற முடிவுக்கே வரவேண்டிவரும். இதனை எந்த
இஸ்லாமியரும் ஏற்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆகவே அல்லாஹ் என்ற
சொல் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே பாவிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமே
முஹமது நபியாவார்.



அதிகாலையிலேயே TNTJ ரசிகர்களை குஷிபடுத்தும் TNTJ நடிகர் சங்க நகைச்சுவை
நாயகம் செய்யிது இப்ராஹிம் அவர்கள் "அல்லாஹ் என்ற வார்த்தையை
கிறிஸ்தவர்கள் பாவிப்பதால் அல்லாஹ் அழுதார் போன்றெல்லாம் சொல்லி
அல்லாஹ்வை கேவளப்படுத்துவார்கள்" என்று சொன்ன ஜோக் TNTJ தலையாட்டிகளுக்கு
நல்லதொரு விருந்தாகவே அமைந்துவிட்டது. ஆனால் குர்ஆனை விடவும் பழைமையான
அரபு பைபிளில் தேவன் என்ற இடத்தில் அல்லாஹ் என்ற சொல்
பாவிக்கப்பட்டுள்ளது மலேசிய நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால்
பைபிளை கரைத்து குடித்தமாதிரி பேசும் இந்த TNTJ இஸ்லாமியருக்கு
தெரியவில்லையே?



பைபிளின் முதல் புத்தகத்தின் முதல் வசனம் "ஆதியிலே தேவன் வானத்தையும்
பூமியையும் படைத்தார்." என்ற வசனம் அரபு பைபிளில் "பில்பித்இ கலக –
அல்லாஹு சமாவாதி வல் அர்ழ்" என்றுதான் உள்ளது. இது குர்ஆனுக்கு
முற்பட்டது என்பதை சரித்திரம் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அப்போஸ்தலர்

2 அதிகாரம்

6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள்
பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ,
பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக்
கேட்கிறோமே, இதெப்படி?

9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா,
கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச்
சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே
சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய
மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.



பெந்தேகோஸ்தே நாளில் அரபிகள் இருந்ததையும் அரபு மொழியில் தேவனுடைய
மகத்துவங்களை பேசகேட்ட இந்த அரபிகள் தேவன் எந்த சொல் வரும் இடத்தில் எந்த
அரபு சொல்லை கடவுள் தேவன் என்பதற்கு அரபியில் பாவித்திருப்பார்கள் என்ற
இஸ்லாமிய யூகத்தையும் TNTJ தங்கள் தலையாட்டி ஆதரவாளர்களுக்கு
தெளிவுபடுத்தினால் நலமாகயிருக்கும் என்றே கருதுகிறேன்.



கடைசியாக கசாப்புக்கடை உதாரணம் ஒன்றை சொல்லி கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்று
சொல்வதில் எந்த தப்பும் இல்லை என்று சொல்லாமல் சொன்னார் செய்யிது
இப்ராஹிம். தயவு செய்து அந்த கசாப்பு கடை உதாரணத்தை இன்னுமொரு முறை
அவதானியுங்கள். "கசாப்புக்கடையில் இருந்து தலையை வெட்டு என்பதற்கும் போர்
களத்திலிருந்து தலையை சீவு என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்றார். நான்
நினைக்கிறேன் வெட்டுவது சீவுவது என்ற இரண்டு சொற்களையும் தலையை
துண்டித்தல் என்ற அர்த்ததில் சொன்னாலும் சொல்லும் இடத்தை பொருத்து
வேறுபடுகிறது என்பதை அவர் சொல்லவந்தாலும். தங்களின் பொய்
பிரச்சாரத்துக்கு அது எதிராக இருக்கிறது என்பதை பற்றி எந்த கவலையும்
அவருக்கு இல்லை. ஏனெனில் தனது நகைச்சுவையை ரசிக்கும் கூட்டத்துக்கு
சிந்திக்கதெரியாது என்ற தைரியம் அவருக்கு!



ஆம் கசாப்புக்கடையிலிருந்து தலையை வெட்டு என்பதற்கும் போர்களத்தில் தலையை
வெட்டு என்பதற்கும் எப்படி ஒற்றுமையில்லையோ அதேபோல பைபிளில் அல்லாஹ்
என்பதற்கும் குர்ஆனில் அல்லாஹ் என்பதற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை.
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இந்த நிலைப்பாட்டில்
ஏகோபித்த கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவ அறிஞர்கள் பல
ஆண்டுகளாக அல்லாஹ் என்ற வார்த்தையை பாவிக்கவே வேண்டாம் என்று சொல்வதை
நாங்கள் அவதானித்து வருகிறோம். ஆனாலும் அரபு கிறிஸ்தவர்கள் அரபியில்
கடவுள் என்ற வார்த்தைக்கு அல்லாஹ் என்பதை விட்டு வேறு வார்த்தை
இல்லாததாலும் குர்ஆனுக்கும் இஸ்லாத்துக்கும் முன்பே அரபு கிறிஸ்தவர்கள்
தேவன் என்ற இடத்தில் அல்லாஹ் என்றும் கர்த்தர் என்ற இடத்தில் ரப்பு
என்றும் பாயன்படுத்தி வந்தபடியாலும் இன்றும் அந்த வார்த்தையை
பாவிக்கின்றனர்.



உண்மையில் அரபு கிறிஸ்தவர்களுக்கும் அரபு பைபிளுக்கும் சொந்தமான அல்லாஹ்
என்ற வார்த்தையை ஒரு சூழ்ச்சிக்காரனுக்கு கொடுத்த இஸ்லாமியருக்கு
விரோதமாக கிறிஸ்தவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கவேண்டும்! ஆனால்
கிறிஸ்தவர்கள் அகில உலகை படைத்த ஏக இறைவனின் கிருபையால் இஸ்லாமியரும்
இரட்சிக்கப்படவேண்டும் என்ற வாஜ்ஜையில் அவர்களுக்கா இறைவனிடம் கையேந்திக்
கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியரோ சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து
அவற்றில் தங்களுக்கு உதவிகளை எதிர்பார்த்து நீதிமன்றங்களில் கைகளை
ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஏகத்துவம் என்பதுபோல
தமாஷ்பண்ணிகொண்டிருக்கிறார்கள் இந்த TNTJ.



குறிப்பு - மலே மொழியில் இறைவன் என்பதற்கு என்ன என்ன சொற்கள் உள்ளது.
ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் எந்த சொல்லை பாவித்தார்கள் என்று அதுகுறித்த
அறிவுள்ள யாராவது ஒரு கட்டுரையை எழுதினால் உதவியாக இருக்கும்.





--
Source : http://isakoran.blogspot.in/