அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 3, 2014

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்

வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்

வேதாகம மத பழக்க வழக்கங்கள் (BIBLICAL RELIGIOUS CUSTOMS)

சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1
கொரிந்தியர் 11:5-6)
விருத்தசேதனம் (லூக்கா 2:21)
முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)

இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் (MUSLIM PRACTICES)

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்)
சமய சுத்திகரிப்பு, "உளு (wudu)"
பள்ளிவாசலுக்குள் காலணிகளுக்கு அனுமதி இல்லை
சஜ்தா செய்கையில் முழங்கால்படியிடுதல் "sajda"
ஈத் உல்-அதா/ஈத் உல்-குர்பான் (Eid-ul Adha / Eid-ul Qurban) - குர்பானி,
விலங்கு பலியிடுதலின் பண்டிகை
மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்தல், ஹஜ் "hajj"
பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல்
விருத்த சேதனம் (அ) சுன்னத், "khilan"
குழந்தை பிறக்கும்போது அதற்காக பலியிடுதல், அகீகா "akika"
ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருத்தல், சௌம் "saum"
இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை

ஆங்கில மூலம்: Similarities between Biblical and Muslim Cultures

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்

________________________________
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/morin/similar.html


source:
http://isakoran.blogspot.in/2013/01/blog-post.html

நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?

நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?

(Why Do Muslims Eat More During Ramadan?)

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டு
இருக்கும்போது, இஸ்லாமிய பாடப்பிரிவை நான் தெரிவு செய்து இருந்தேன்.
இந்த பாடத்தை நடத்தும் என் பேராசிரியர் (இவர் ஒரு இஸ்லாமியர்) எங்களிடம்
"இதர மாதங்களை விட, ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்"
என்று கூறினார். இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை
உண்டாக்கும், ஏனென்றால், உபவாசம் அல்லது நோன்பு என்றுச் சொன்னால், சரீர
தேவையாகிய உணவை தள்ளிவைத்து, ஆன்மீக விஷயங்களில் அதிக முக்கியத்தும்
காட்டுவது ஆகும். இதை விட்டுவிட்டு, மாலை ஆனவுடனே ஆரம்பித்து, அதிகாலை
வரை அதிகமாக சாப்பிடுவது நோன்பு ஆகாது.

துனிஷியா நாட்டில் ரமளான் மாதத்தில் எப்படி உணவு அதிகமாக
உட்கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்போம்:

புனித மாதத்தில் துனிஷியாவில் உணவு நுகர்வின் அளவு அதிகமாக உள்ளது.
நேஷ்னல் கன்ஸுமர் இன்ஸ்டிடியுட்(INC)ன் செய்திப்பிரிவின் தலைவர் அஹமத்
மெத்லௌதி என்பவர், TAP செய்திக்கு அளித்த விவரமாவது:

வருடத்தின் இதர மாதங்களில் ஒரு நபர் 0.9 லிட்டர் பாலை உட்கொள்கிறார்,
ஆனால், இது ரமளான் மாதத்தில் 2 லிட்டராக உயர்கிறது
யோக‌ர்ட் என்றுச் சொல்ல‌க்கூடிய த‌யிர் இதர மாத‌ங்க‌ளில் ஒரு மாதத்திற்கு
ஒரு நபருக்கு 5.4 பாக்கெட் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, ஆனால் ர‌ம‌ளான்
மாத‌த்தில் 12.9 பாக்கெட்டை ஒரு ந‌ப‌ர் உட்கொள்கிறார்.
சாதாரண மாதங்களில் ஒரு நபர் ஒரு மாத‌த்தில் சராசரியாக 12.8 முட்டைகளை
சாப்பிடுகிறார், ரளமான் மாதத்தில் மட்டும் ஒரு நபர் 26 முட்டைகளை
சாப்பிடுகிறார்.
பெகட் (baguette) என்ற ரொட்டிகளை சாதாரண மாதங்களில் சராசரியாக ஒரு நபர்
600 கிராம் அளவிற்கு உட்கொள்கிறார், ஆனால் ரமளான் மாதத்தில் 1400 கிராம்
உட்கொள்கிறார்.
சாதாரண மாதங்களில் ஒரு நபருக்காக சராசரியாக 1.140 லிட்டர் எண்ணெய்
பயன்படுத்தப்படுகிறது, ஆனால், ரமளான் மாதத்தில் 1.200 லிட்டார்
பயன்படுத்தப்படுகின்றது.
மாமிச ஆகார‌த்தை க‌ண‌க்கிட்டால்:

ர‌ம‌ளானில் 1.100 கிலோகிராம் ஆட்டு மாமிச‌ம் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர
மாத‌ங்க‌ளில் அது 750 கிராமாக உள்ள‌து.
ர‌ம‌ளானில் 0.500 கிலோகிராம் மாட்டு மாமிச‌ம் உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர
மாத‌ங்க‌ளில் 0.220 கிராம்க‌ள் உட்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌து.
ர‌ம‌ளானில் 1.800 கிலோகிராம் இதர மாமிச ஆகார‌ங்க‌ள்
உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து, இதர மாத‌ங்க‌ளில் 1.280 கிலோ கிராம்க‌ள்
உட்கொள்ள‌ப்ப‌டுகிற‌து.


துனிஷியாவின் நுகர்வோர்களில் 57.8 சதவிகித மக்கள் சூப்பர் மார்க்கெட்டில்
பொருட்களை வாங்க விரும்புகின்றனர், 42.2 சதவிகிதத்தினர், இதர சாதாரண
கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள் (மூலம்:
http://www.africanmanager.com/site_eng/detail_article.php?art_id=20518).

முஸ்லிம்கள் நோன்பு இல்லாத காலத்தில் உண்பதை விட, ஏன் நோன்பு இருக்கும்
காலத்தில் அதிகமாக உண்கிறார்கள்? ஏன் தங்களின் பெருந்திண்டி ஆசையின் மீது
"ரமளான் நோன்பு" என்ற முகமூடி போட்டுக்கொள்கிறார்கள்?

இதற்கான பதில் இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ளது என்று நான்
கருதுகிறேன். இஸ்லாம் மக்களை அதிக பரிசுத்தவான்களாகவோ அல்லது
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவோ மாற்றுவதில்லை. வாழ்வில் தங்கள்
அடிமட்ட ஆசைகளை தீர்த்துக்கொள்ள இஸ்லாம் ஒரு வழியை முஸ்லிம்களுக்கு
வகுத்துக்கொடுக்கிறது.

ஒரு இஸ்லாமியரல்லாதவன், பல இரவு நேர கிளப்களை கண்டுபிடித்து, எப்படியாவது
10 பெண்களை கண்டுபிடித்து, அவர்களோடு உடலுறவு கொண்டால், அவனை இஸ்லாம்
"விபச்சாரக்காரன்" என்று கூறி அவனுக்கு தண்டனையை கூறும். ஆனால், அதே
மனிதன், இஸ்லாமியனாக மாறி, 4 பெண்களை திருமணம் செய்து, இன்னும்
போரிலிருந்து பிடிபட்ட 6 பெண் அடிமைகளை வாங்கிக்கொண்டு, அவர்களோடு ஒரே
நாளில் உடலுறவு கொண்டாலும், அல்லாஹ்வின் பார்வையில், இஸ்லாமின்
பார்வையில் அவன் "பரிசுத்தவான்" தான்.

இதே போல, ஒரு மனிதன் ஒரு விபச்சாரியிடம் விலையை பேசி, அவளோடு உடலுறவு
கொண்டால், அவன் இஸ்லாமின் படி பாவம் செய்தவன் ஆவான். ஆனால், அதே மனிதன்
முஸ்லிமாக மாறிவிட்டு, "முடா - Muta" என்ற குறுகிய கால திருமணம் செய்வதாக
கூறி, அதே விபச்சாரியான பெண்ணிடம் பேசி, அதே அளவு பணத்தை கொடுப்பதாகச்
சொல்லி, முன்பு செய்தது போலவே விபச்சாரம் செய்தால், இஸ்லாமின் படி அவன்
பாவம் செய்யவில்லை, இஸ்லாமிய சமுதாயத்தில் வெட்கமில்லாமல் அவன்
நடமாடுவான்.

மனநோய் உள்ள ஒரு மனிதன், கட்டுப்பாடு இல்லாதவன், திடீரென்று ஆண்களையும்
பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், இஸ்லாமின் படி அவன்
நரகம் செல்வான். ஆனால், அதே மனிதன், அல்லாஹ்விற்காக ஆண்களையும்,
பெண்களையும், குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், அவனுக்கு அல்லாஹ்வின்
சொர்க்கத்திற்கு போவதற்கு பயணச்சீட்டு இலவசமாக கொடுக்கப்பட்டுவிடும்.

இஸ்லாமிய நூல்களின் படி, மக்காவினர் கொடூரமானவர்கள், சிற்றின்ப
பிரியர்கள் மேலும் பெருந்திண்டிக்காரர்கள். அவர்களை இஸ்லாமுக்கு மாற்றிய
முஹம்மது அவர்களின் இந்த குணங்களை மாற்றவில்லை. இதற்கு பதிலாக அவர்களின்
வன்முறைகளையும், சிற்றின்பத்தையும், பெருந்தீண்டித் தனத்தையும்,
அல்லாஹ்விற்கு பிரியமானதாக மாற்றிவிட்டார்.

விஷயம் இப்படி இருக்க, ரமளான் மாதம் முழுவதும் நடக்கும் ராஜவிருந்தை
முஸ்லிம்கள் "நோன்பு" என்று அழைத்தால், நாம் ஆச்சரியப்பட
வேண்டியதில்லையே!?!

மூலம்: Why Do Muslims Eat More During Ramadan?

ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?

ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?

கீழ்கண்ட கேள்வியை ஒருவர் எங்களுக்கு அனுப்பியிருந்தார்:

கேள்வி: ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எப்படி
விடுதலை பெறுவது? சிறிது விளக்கமுடியுமா?

அன்பான நண்பருக்கு,

ஜின்கள், தீய ஆவிகள் மற்றும் பில்லிசூனியங்களிலிருந்து எப்படி
விடுவிக்கப்படுவது என்ற கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நன்றி
செலுத்துகிறோம். நான் ஆப்பிரிக்க நாட்டில் வாழுகிறேன். இந்த நாட்டில் தீய
ஆவிகளுக்கு, ஜின்களுக்கு பயந்த வண்ணமாகவே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு வாழும் மக்கள் இந்த தீய இருண்ட சக்திகளிலிருந்து விடுவிக்கப்பட
அனேக வழிமுறைகளை பின் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அனேகர் குர்-ஆன்
வசனங்கள் எழுதப்பட்ட தாயத்துக்களை அணிந்துக் கொள்கிறார்கள். இதன் மூலம்
அந்த தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
அனேகர் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி, தங்கள் வீடுகளில் விக்கிரகங்களை
வைத்துக் கொள்வார்கள். மேலும் சில மருந்துகளை குடிப்பார்கள்,
மந்திரவாதிகளிடம் (சாமியார்கள் போன்று இருக்கும் நபர்களிடம்) சென்று
வருவார்கள். இன்னும் சிலர் வீட்டிற்குள் நுழையும் போதோ அல்லது காரில்
பிரயாணம் செய்வதற்கு முன்போ "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரில்)
என்றுச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு விபத்துகளிலிருந்து பாதுகாப்பு
கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சிலர் தங்கள் குலதெய்வங்களுக்கு
பூஜைகள் செய்வதினால், இதர தீய ஆவிகளிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு
கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட பரிசுத்த வேத எழுத்துக்களாகிய
இறைவனுடைய வார்த்தைகளை அறியாதவர்கள் தான் மேற்கண்ட விதமான அனைத்து
காரியங்களையும் செய்வார்கள். முக்கியமான விவரம் என்னவென்றால், "தீய
ஆவிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்" என்பது பற்றி உண்மையான இறைவனின்
வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது என்பதை நாம் அறியவேண்டும் என்பதாகும்.

சாத்தானும் அவனது தீய சக்திகளும், உண்மையாகவே சில அற்புதங்களை
செய்வார்கள் என்று தேவனுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. தீய ஆவிகள்
சக்தி வாய்ந்தவைதான், ஆனால், அவைகளின் சக்தி ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு
உட்பட்டதாகும். அவைகளுக்கு எல்லாவற்றையும் செய்யும் சக்தி இல்லை.
உலகத்தில் உள்ள அனைத்து தீய சக்திகள், பில்லிசூனியங்கள் போன்றவைகளை ஒன்று
சேர்த்தாலும், அவைகளை காட்டிலும் அதிக வல்லையுள்ளவர் தேவன் ஆவர். அவருடைய
வார்த்தைகளை கேட்டு, அவருக்கு கீழ்படிகின்றவர்கள் இப்படிப்பட்ட தீய
சக்திகளுக்கும், ஜின்களுக்கும் மற்றும் பில்லிசூனியங்களுக்கும்
பயப்படத்தேவையில்லை என்று வேதம் நமக்கு போதிக்கின்றது.

தேவனுக்கு கீழ்படிந்து வாழுகிறவர்கள் இவ்வித ஆவிகளுக்கு பயந்து வாழத்
தேவையில்லை. நம்முடைய நம்பிக்கையை நாம் அவரின் மீது வைக்கவேண்டும் என்று
தேவன் விரும்புகிறார். மத சம்மந்தப்பட்ட சடங்குகள், விக்கிரகங்கள்,
சாமியார்கள் என்றுச் சொல்லக்கூடிய மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தல்
போன்றவைகளை நாம் விட்டுவிடவேண்டும், தேவன் மீதே நம்பிக்கை வைக்கவேண்டும்.
உண்மையான தேவன் மீது வைக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டு வேறு பொருட்களின்
மீது நாம் நம்பிக்கை வைத்தால், அது விக்கிர ஆராதனையாகும். விசேஷித்த
வகையில் செய்யப்படும் பூஜைகள், தாயத்துக் கட்டிக்கொள்ளுதல், மேலும்
வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜித்தல் போன்றவை எல்லாம் நமக்கு தீய
ஆவிகளிலிருந்து விடுதலையை கொடுக்காது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், தீய
சக்திகள், தங்கள் நோக்கங்களை பூர்த்தி செய்துக்கொள்ள மேற்கண்ட வழிமுறைகளை
தங்கள் ஆயுதங்களாக பயன்படுத்திக்கொண்டு நம்மை தாக்கும்.

பரிசுத்த இன்ஜிலில் நாம் இப்படி வாசிக்கிறோம்:
"கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின்
வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து
நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்
தரித்துக்கொள்ளுங்கள்." (எபேசியர் 6:10,11).

முக்கியமாக தேவனுடைய சர்வ ஆயுதம் என்பது 16ம் வசனத்தில், "விசுவாசம்
என்னும் கேடகம்" என்று சொல்லப்பட்டுள்ளது:

"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்
அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும்
கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்". (எபேசியர் 6:16).

தீய ஆவிகளின் வல்லமையை நாம் ஜீவனுள்ள தேவன் மீதும் அவரது வார்த்தையின்
மீதும் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மேற்கொள்ள முடியும் என்று வேதம்
நமக்கு போதிக்கின்றது. விசுவாசம் என்று நாம் சொல்லும் போது
கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், "நாம் எவ்வளவு விசுவாசம்
வைத்திருக்கிறோம்" என்பதல்ல, "நாம் யார் மீது விசுவாசத்தை
வைத்திருக்கிறோம்" என்பது தான். பரிசுத்த வேதத்தின் படி, நம்மை தீய
சக்திகளிலிருந்து விடுவிக்கிறவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அந்த
ஒருவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அவர் தான் இயேசு,
மரியாளுக்கு பிறந்த பரிசுத்த குமாரன். அவர் பரலோகத்திலிருந்து வந்தார்,
ஒரு பரிசுத்த மனிதனாக பிறந்தார், அவரிடத்தில் பாவம் காணப்படவில்லை.
பரிசுத்த வேதம் அவரைப் பற்றி இப்படி கூறுகிறது, இயேசு இவ்வுலகில்
வந்ததின் நோக்கம் "பிசாசின் கிரியைகளை (செயல்களை) அழிப்பதற்கு ஆகும்"
(இன்ஜில் - 1 யோவான் 3:8) .

நம்முடைய பாவங்களிலிருந்தும், தீய ஆவிகளின் சக்தியிலிருந்தும், நித்திய
தண்டனையிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்கே இயேசு வந்தார். இயேசு இதர
தீர்க்கதரிசிகளை விட உயர்ந்தவர். அவர் சர்வ வல்லவர், நித்திய தேவனுடைய
வார்த்தையாக இருக்கிறார், அவரே "நம்முடன் வாழுவதற்கு மனிதனாக வந்தார்"
(இன்ஜில் யோவான் 1:1-3, 14).

அவரைப் பற்றி வேதம் இவ்விதமாக கூறுகிறது:

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்;
மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே
அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே
அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும்
அப்படியானார். (இன்ஜில் – எபிரேயர் 2:14-15)

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், அவர் எப்படி தீய ஆவிகளை மேற்கொண்டார்
என்பதைப் பற்றி அனேக நிகழ்ச்சிகளை இன்ஜில் பதிவு செய்துள்ளது.
அவைகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

(இன்ஜில் - மாற்கு 5:1-20)
பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன்
பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய
குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட
ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும்
சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து,
விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து,
கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை
வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த
சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த
மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.

அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்:
நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, தங்களை
அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும்
வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள்
கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி:
பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை
வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள்
புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம்
பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே
பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப்
பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது
சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; இயேசுவினிடத்தில்
வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து,
உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக்
கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். அப்பொழுது தங்கள்
எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட
இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு
அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய்,
கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு
அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச்
செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில்
பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.



ஆம், தீய சக்திகள் மீது இயேசுவிற்கு அதிகாரம் உள்ளது. இதுமட்டுமல்ல,
எல்லா வகையான வல்லமைகள் மீதும் அவருக்கு அதிகாரம் உள்ளது, அதாவது
சாத்தான் மீதும், வியாதிகள் மீதும், இயற்கை மீதும், மரணத்தின் மீதும்
அவருக்கு அதிகாரம் உள்ளது, ஏனென்றால், இயேசு தான் பரலோகத்திலிருந்து
நம்மிடத்தில் வந்த "ரூஹ் அல்லாஹ்" (தேவனின் ஆவி) மற்றும் "கலிமத்
அல்லாஹ்" (தேவனின் வார்த்தை) ஆவார். அதனால் தான் இயேசு ஒரு வார்த்தை
பேசியவுடன், அந்த பிசாசு பிடித்திருந்த மனிதனிடமிருந்து தீய ஆவிகள்
வெளியேறின. இன்று இயேசு பரலோகில் இருக்கிறார் அவருக்கு "பூமி மற்றும்
வானத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது" (இன்ஜில்
மத்தேயு 28:18).

இவர் மீது நம்பிக்கை வைக்கும் எந்த மனிதனும், இனி எந்த ஒரு தீய ஆவிக்கும்
பயப்படத்தேவையில்லை.

தேவனுடைய அளவில்லாத அனைத்து வல்லமைகளும் இயேசுவிற்குள் வாசம் செய்கிறது.
ஆகையால், இயேசுக் கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த
இரட்சகராகவும், தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டால், இனி நீங்கள் எதைப்
பற்றியும் பயப்படத்தேவையில்லை, அதாவது மரணம், உவ்வுலக வாழ்க்கை, தீய
ஆவிகள், பில்லிசூனியங்கள், நிகழ் கால வாழ்க்கை, எதிர் கால வாழ்க்கை என்று
எவைகள் பற்றியும் பயப்படத் தேவையில்லை. இயேசு உங்களை பாதுகாக்கிறார்
எனவே, நீங்கள் எந்த ஒரு தாயத்தையும் கட்டத்தேவையில்லை, இதர மந்திரவாதிகளை
கண்டு அறிவுரை கேட்கத்தேவையில்லை. பரிசுத்த வேதம் இவ்விதமாக கூறுகிறது:

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள்
வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும்
தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
(இன்ஜில் கொலொசியர்2:9,10)

: "In [Jesus] Christ all the fullness of the Deity lives in bodily
form, and you have been given fullness in Christ, who is the head over
every power and authority!" (Injil: Col. 2:9,10)


சாத்தான் மீது இயேசு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இயேசுவின் பெயரின்
மூலமாக எல்லாவாகையான தீய சக்திகளை மேற்கொள்ளலாம். இயேசுவின் பெயரில்
வல்லமை உண்டு. அவரது பெயரில் உள்ள இந்த வல்லமையை நீங்கள்
அனுபவிக்கவேண்டும் என விரும்பினால், முதலாவது நீங்கள் அவர் மீது
நம்பிக்கை வைக்கவேண்டும், மேலும் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொள்ளவேண்டும்.

நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று தேவன்
விரும்புகிறார். இந்த இயேசு தான் "உலகத்தில் உள்ள அனைத்து
அதிகாரங்களுக்கும் வல்லமைகளுக்கும் மேலானவர்". நாம் இப்படிப்பட்டவர் மீது
நம்பிக்கை வைக்காமல் "இவ்வுலகத்தில் குறைவான அதிகாரமுடையவர்கள்" மீது
நம்பிக்கை வைப்பதை தேவன் விரும்புவதில்லை. பரிபூரணமான இரட்சகராக
இருக்கின்ற இயேசுவின் மீது நாம் விசுவாசம் வைக்கும் போது, நமக்கு
பரிசுத்த ஆவியானவரின் உதவி கிடைக்கும் என்று தேவன் வாக்கு கொடுக்கிறார்.
இந்த இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மேலும்
மரணத்தின் மீது வெற்றி பெற்று மூன்றாம் நாளில் வெற்றிகரமாக உயிரோடு
எழுந்தார். தங்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை பெற்று இருக்கின்ற
சகோதர சகோதரிகள், தேவனின் கீழ்கண்ட வாக்குறுதியை பெற்று
அனுபவிப்பார்கள்:

"ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும்(சாத்தான்) உங்களிலிருக்கிறவர்(பரிசுத்த
ஆவியானவர்) பெரியவர்." (1 யோவான் 4:4)

ஆப்பிரிகாவில் எனக்கு அனேக நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த
காலத்தில் எப்போது பார்த்தாலும் தீய சக்திகளுக்கும், ஜின்களுக்கும்,
பில்லிசூனியத்திற்கும் பயந்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது
இவர்களுக்கு அந்த பயம் இல்லை, பயமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
வருகிறார்கள். அவர்களை தேவனுடைய வார்த்தை விடுதலை செய்துள்ளது. இவர்களின்
சாட்சிகளை நீங்கள் அறிய விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள், நான்
இவர்களிடம் கேட்டு, இவர்கள் எப்படி இயேசுவால் விடுதலை பெற்றார்கள் என்பதை
எழுதச் சொல்லி உங்களுக்கு அனுப்புவேன்.

இப்படிக்கு,
உங்கள் சகோதரன்
பிரஹிம் செனெ

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Authors/Sene/blackmagic.ht

பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா? இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?

பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா?
இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?


(இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?)

இஸ்லாமை ஏன் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்?
எங்கு தாக்குதல் நடந்தாலும், சிந்திக்காமல் உடனே விரல்கள்
முஸ்லிம்களுக்கு நேராக நீட்டப்படுகின்றது?
காவல்துறை ஆய்வு செய்து "தீவிரவாதிகள் இவர்கள் தான்" என்று அடையாளம்
காட்டப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று
சொல்லப்படுகின்றது?
உலகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாகவும், மற்றவர்களுக்கு
தொந்தரவு கொடுக்காமலும் வாழுகிறார்கள் அல்லவா? இப்படி இருக்கும் போது ஏன்
இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்?


இஸ்லாமியர்கள் மனவேதனை அடைந்து மேற்கண்ட விதமாக கேள்வி கேட்கிறார்கள்.
இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஏதோ ஒரு சில முஸ்லிம்கள் தீவிரவாத
செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதர வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக
இஸ்லாமை விமர்சிப்பது சரியா?

இதே போல, இதர மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், பெரும்பான்மையான மக்கள்
நல்லவர்களாக வாழுகிறார்கள், சமுதாயத்திற்கு தீமை விளைவிக்காமல்
வாழுகிறார்கள். சில சதவிகித மக்கள் மட்டுமே சமுதாயத்திற்கு கேடு
விளைவிக்கிறார்கள்.

ஆனால், உலகம் இதர மார்க்கத்தை அதிகமாக விமர்சிப்பதில்லை, இஸ்லாமை மட்டும்
அதிகமாக விமர்சிக்கிறது? இது ஏன்?

இந்த கேள்விகளுக்கு நாம் பதிலை கீழ்கண்ட தலைப்புக்களில் காணலாம்:

1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?

2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக
விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.

3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?

4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது

5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு
(யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது

6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு
(முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது

முடிவுரை
--------------------------------------


1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)?

இதில் என்ன சந்தேகம்? இஸ்லாம் கூட மற்ற மதங்களைப் போலவே ஒரு மதம் தானே
என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பிரச்சனை இங்கே தான் இருக்கிறது.

இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு மதம் அல்ல.
இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சியாகும். இஸ்லாமுடைய முக்கிய நோக்கம்,
உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும் இஸ்லாமியர்களாக
மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், உலகத்தை ஒரு அரசாங்கத்தின் கீழ்
கொண்டு வருவதாகும். அதாவது அலேக்சாண்டர் ஆசைப்பட்டது போல, உலகம்
அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாமின் முக்கிய
நோக்கம்.

இஸ்லாமில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால்,
அதையும் தாண்டி, உலகம் அனைத்திலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு
கொண்டுவருவது தான் முஸ்லிம்களின் பிரதானமான நோக்கம்.

இதனை அறிய, நீங்கள் உலக செய்திகளை பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று
திரண்டி கோஷமிட்டால் என்ன சொல்வார்கள் என்று கவனித்துப்பாருங்கள்.
முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள்
போட்டுக்கொண்டு, செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பெயர் பலகைகளை
பார்த்தால்:

• "இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்"
• "அமெரிக்காவிற்கு மரணம்"
• "முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்"
• "எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்."
• "இஸ்லாமை கேவலப்படுத்தியவை கொல்லுங்கள்"

போன்றவைகளை நாம் காணமுடியும். இஸ்லாமியர்களின் மேற்கண்ட விதமான செய்திகள்
அடங்கிய படங்களை காண இந்த கூகுள் தொடுப்பை சொடுக்குங்கள்: -
http://www.google.co.in/search?q=islamic+violence+banners&bav=on.2,or.r_qf.&biw=1366&bih=667&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=S5-8UcTRNIHtrAftm4G4CQ

ஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மார்க்கத்தை
விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது? இஸ்லாமை
விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான்? இஸ்லாம் ஒரு
மதமாக மட்டும் இருக்குமானால், இப்படியெல்லாம் அவன் சிந்திப்பானா?

இதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே அது
ஏன்? கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், அப்படி
விமர்சிப்பவன், கேவலமாக பேசுபவன் கொல்லவேண்டும் என்ற உணர்வு அல்லது
எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை?

இப்படி நடந்துக்கொள்ளும் படி ஒரு முஸ்லிமை தூண்டுவது எது?

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது
ஒரு மதம் பிடித்த அரசியல் யானை? தனக்கு முன்பு எது வந்தாலும், அந்த யானை
மிதித்துப்போட்டு, நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின்
குட்டிகள் தான் "உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்" என்றுச் சொல்லி கோஷமிடும்
அந்த சில முஸ்லிம்கள்.

ஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.

2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக
விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.

நாம் உலக மதங்களின் சரித்திரத்தை கவனித்தால், ஏதோ ஒரு கால கட்டத்தில்
அவைகளின் பெயரை வைத்துக்கொண்டு சில சமூக சீர்கேடுகள் அல்லது வன்முறைகள்
நடந்து இருப்பதை காணமுடியும்.

உதாரணத்திற்கு, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு கால கட்டத்தில்,
கத்தோலிக்க போப்புக்கள் அனேக தீய செயல்களுக்கு காரணமாக இருந்தார்கள்,
தங்கள் சபை சொல்வதற்கு எதிராக விமர்சிப்பவர்களை இரக்கமின்றி
தண்டித்தார்கள், மேலும் சிலுவைப்போர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால், அதே கத்தோலிக்க சபையில் இருந்த பாஸ்டர்கள், சீர்திருத்தம் தேவை
என்பதை உணர்ந்தார்கள், பைபிளுக்கு எதிராக சில தீய மனிதர்கள் செய்த
கொடுமைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள். இது பைபிளுக்கு எதிரான போதனை
என்பதை உலகம் அறியும் படி செய்தார்கள். சீர்திருத்தம் வந்தது, மக்கள்
மறுபடியும் பைபிளுக்கு நேராக திரும்பினார்கள்.

இன்னொரு உதாரணம், நம் இந்தியாவில் நடந்த மத சம்மந்தமான சமூக கேடுகளைச்
சொல்லலாம். அதாவது சிறுவயதில் திருமணம் செய்தல், கணவன் மரித்துவிட்டால்,
அவனோடு கூட அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுதல் போன்ற தீய செயல்கள்
ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், அனேகரின் முயற்சியால், இந்த தீய
பழக்கம் இப்போது விடப்பட்டுள்ளது, ஒருவகையாக எல்லா இந்துக்களும் அந்த தீய
செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து மத மறுமலர்ச்சியை
ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், இஸ்லாம் இப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்று
பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இஸ்லாமும்
இஸ்லாமியர்களும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமில் உள்ள தீய
காரியங்களை வெளியே சொல்லும் போது, இவர்கள் அதனை எதிர்க்கிறார்கள், உண்மை
சொல்பவர்களை தாக்குகிறார்கள். இவர்களுக்கு துணையாக குர்-ஆன் உள்ளது. மூல
நூல்கள் சரியாக இருந்து, அதனை பின்பற்றுபவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும்
போது சீர்திருத்தம் சாத்தியமாகும். ஒரு கால கட்டத்தில், அந்த மூல நூல்களை
மக்கள் படித்து, உண்மையை அறிந்துக்கொள்ளும் போது, அந்த மார்க்கம்
சீர்திருத்தம் அடைந்துவிடும். சிலுவைப்போர்கள், இதர சமூக கேடுகள்
அனைத்தும், பைபிளை மக்கள் கைகளிலிருந்து மறைத்த போது காணப்பட்டன. ஆனால்,
மக்கள் பைபிளை படித்து உண்மை எது என்று அறிந்துக்கொண்டபோது, மதத்தின்
பெயரால் செய்யப்பட்ட தீய செயல்கள் மறைந்துவிட்டன.

இஸ்லாமை பொறுத்தமட்டில், சமூக தீய செயல்களுக்கு காரணம் முஸ்லிம்கள்
குர்-ஆனை தவறாக புரிந்துக்கொண்டதால் உண்டாகவில்லை. குர்-ஆனே அவைகளை
செய்யச் சொல்வதினாலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்த சில விஷயங்களை
முஸ்லிம்கள் பின்பற்றுவதினாலுமே இந்த சீர் கேடுகள் நடக்கிறது. எனவே,
மக்கள் தங்கள் மதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருந்தால், அவர்களின்
மதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரலாம், ஆனால், இஸ்லாமின் மூல நூலே
சமூகத்திற்கு கேடு விளைக்கிறது என்பதினால், இஸ்லாமை சரி செய்ய அல்லது
அதில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரமுடியாது.

இதனை புரிந்துக்கொண்ட உலகம், இஸ்லாமை விமர்சிப்பதில் எந்த ஒரு
ஆச்சரியமும் இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இஸ்லாம் இல்லை,
இதற்காகவே அது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமில் சீர்திருத்தம்
கொண்டுவர முயற்சித்த இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப்பட்டு
கொல்லப்பட்டுள்ளார்கள். இனி இஸ்லாமுக்குள் சீர்திருத்தம்
கொண்டுவரமுடியாது என்பதை உலகம் அறிந்துக்கொண்டு விமர்சிக்கிறது.

3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு தீய செயல்களில் வன்முறைகளில்
ஈடுபடாமல் அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும்
தீவிரவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க
ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்? அதனை பின்பற்றுபவர்களில் 99% (+)
சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா? இப்படி இருக்க ஏன்
இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்? என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.

மேலோட்டமாக பார்த்தால், இவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும்.
ஆனால், இந்த வாதம் சரியானதா என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும், இதனை
அறிந்துக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.

அனேக ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களில்
பெரும்பான்மையானவர்களுக்கு புற்று நோய் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே
புகைபிடிப்பதினால் புற்று நோய் வருகிறது. உண்மை இப்படி இருக்க,

• மக்கள் புகை பிடிக்கக்கூடாது என்றுச் சொல்லி. சிகரெட் பெட்டிகளில் ஏன்
புற்று நோய் பற்றிய எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் வெளியிடுகிறது?
• ஆங்காங்கே புகை பிடிப்பதினால் உண்டாகும் ஆபத்தை ஏன் அரசாங்கம்
விளம்பரப்படுத்துகிறது?
• புகைபிடிப்பதற்கு எதிராக ஏன் அனேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது?
• புகைபிடிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது?

இப்படி புகைபிடிப்பவர்கள் கேள்வி கேட்டால், இவர்களை நாம் என்னவென்றுச் சொல்வோம்?

இதைப்போலத் தான் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் இருக்கிறது. புகை
பிடிப்பதினால் பெரும்பான்மையானவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லை
என்பதற்காக, நாம் புகை பிடிப்பதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா? புகை
பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு
விழிப்புணர்ச்சியை கொடுக்காமல் இருக்கமுடியுமா? இதைப்போலவே, அனேகர்
அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி
கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத்
தான். அந்த ஒரு சிலரை உருவாக்குவது யார்? அவர்களை உற்சாகப்படுத்துவது
எது? அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு ஆசை காட்டுவது
யார்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "இஸ்லாமும், குர்-ஆனும்,
அல்லாஹ்வும், அவனது இறைத்தூதரும் தான்". எனவே, இஸ்லாமை படித்து கேள்வி
கேட்பது சரியானதே.
4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது

அருமையான இஸ்லாமியர்களே, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த உங்களுக்கே
இஸ்லாமை கேள்விகேட்கவும், அதனை விமர்சிக்கவும் உரிமை உள்ளது. ஏனென்றால்,
அது உங்கள் மார்க்கம், அதனை முழுவதுமாக அறிந்துக்கொள்வது உங்கள் உரிமை,
இதனை யாரும் தடுக்க முடியாது. குர்-ஆனை அரபியில் ஓதுங்கள் என்று
சொல்லும் உங்கள் அறிஞர்களுக்கு, நீங்கள் குர்-ஆனை தமிழில் படிப்பதை தடை
செய்யமுடியாது. உங்கள் மூல நூல்களை நீங்கள் படிக்க முன்வரும் போது,
அவைகளை படிக்கவேண்டாம், நாங்கள் சுருக்கமாக உங்களுக்கு அறிவிக்கிறோம்,
நாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படியுங்கள் என்றுச் சொல்ல
அவர்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கும் போது, அதிகமாக கேள்விகளை
கேட்கவேண்டாம் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. முஹம்மதுவின்
வாழ்க்கை சரித்திரத்தை அனேக மூல நூல்களில் நீங்கள் படிக்க
முன்வரவேண்டும். உங்களை விட உங்கள் முஹம்மதுவின் நடத்தைகள்
மேன்மையுள்ளதாக இருக்கின்றனவா என்று நீங்கள் ஆய்வு செய்து
பார்க்கவேண்டும்.

நீங்கள் உங்கள் இஸ்லாமை கேள்வி கேட்க மறுத்தால், இஸ்லாமியரல்லாதவர்கள்
கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். முதலாவது இஸ்லாமை முழுவதுமாக அறியும்
உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்கவேண்டாம்.

5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க கிறிஸ்தவர்களுக்கு
(யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது

அது எப்படி? கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) இஸ்லாமை விமர்சிக்க
கேள்வி கேட்க அடுத்தபடியான உரிமை உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது கிறிஸ்தவ யூத மார்க்க வேத
நூல்களில் உள்ள விவரங்களை குர்-ஆன் எடுத்துக்கொண்டு, அவைகளை மாற்றி
எழுதியுள்ளது. மேலும் முஹம்மது தன்னை பைபிளின் வழியாக வந்த தீர்க்கதரிசி
என்றும், பைபிளின் தேவன் தான் அல்லாஹ் என்றும் இஸ்லாம் கூறுவதினால்,
கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இஸ்லாமை ஆய்வு செய்ய, விமர்சிக்க
கேள்வி கேட்க அதிக உரிமை பெறுகிறார்கள்.

மேலும், அனேக பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆன் மறுப்பதினால்,
பைபிளை அது எதிர்ப்பதினால், குர்-ஆனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி
குறுக்குவிசாரனை செய்ய கிறிஸ்தவர்களுக்கு அதிக உரிமை உள்ளது, இதனை யாரும்
கிறிஸ்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது.

கிறிஸ்தவர்களே, நம்முடைய பைபிளை விமர்சிக்கும் குர்-ஆனின் உண்மை நிலையை
பரிசோதிக்க நமக்கு அதிக உரிமை உள்ளது என்பதை மறக்கவேண்டாம். நீங்கள்
கண்டுபிடித்த இஸ்லாம் பற்றிய உண்மைகளை இதர மக்களுக்கு அறிவிப்பது உங்கள்
மேல் விழுந்த கடமையாகும். அநீதியைப் பார்த்து "நீ அநீதியாக
செயல்படுகிறாய்" என்றுச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. "பொய்யைப் பார்த்து
நீ பொய்" என்றுச் சொல்ல நமக்கு உரிமை உள்ளது. கிறிஸ்தவர்களே, இஸ்லாம்
பற்றி விழிப்புணர்வு அடையுங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்ச்சியை
உண்டாக்குங்கள்.

6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க மற்றவர்களுக்கு
(முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது

முஸ்லிம்களுக்கு முதலாவது உரிமை உண்டு என்று சொன்னீர்கள், சரி, இதனை
ஏற்றுக்கொள்ளலாம், அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு என்றுச்
சொன்னீர்கள், அதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இங்கு இந்துக்கள் எங்கே
வந்தார்கள்? அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது? என்று சிலர்
சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம். இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது.
அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது அவனை
தடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா? நீங்கள் சாலையில்
சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை
திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து
உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா?
உங்கள் பதில் "ஆம், எனக்கு உரிமை உண்டு" என்றுச் சொல்வீர்கள்.

இதே போலத்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் நம்மீது வெடிகுண்டு வீசுகிறார்கள்.
வெடிகுண்டுகளை தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு, பேருந்து நிலையங்களிலும்,
இரயில் நிலையங்களிலும், வெடிக்கச்செய்து நம் குடும்பங்களை
அழிக்கிறார்கள். ஓட்டல்களை பிடித்து, மக்களைத் தாக்கி குண்டு மழை
பொழிந்து நாட்டில் இரத்த வெள்ளம் ஓடச்செய்கிறார்கள். இப்படி செய்பவர்கள்,
ஒரு சிலராக இருந்தாலும், அந்த ஒரு சிலர் பின்பற்றும் மதத்தை
அறிந்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு, கேள்வி கேட்க உரிமை உண்டு.
இந்துக்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமை
உண்டு. தீவிரவாதிகளின் செயல்களால் அனைத்து மக்களும்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே எல்லாருக்கும் இஸ்லாமை கேள்வி கேட்க உரிமை
உண்டு.

முடிவுரை:
பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை
விமர்சிக்காமல் இருக்கமுடியாது? அந்த இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுவதினால்
தான் அந்த சிலர் தீவிரவாதிகளாக இருப்பதினால், இஸ்லாம் விமர்சனத்திற்கு
உட்படுத்தப்படவேண்டும். குர்-ஆன் படிக்கப்படவேண்டும், ஹதீஸ்கள்
மக்களுக்கு சென்றடையவேண்டும், மக்களுக்கு வரும் உண்மையான கேள்விகளுக்கு
பதில்கள் சொல்லப்படவேண்டும். முஹம்மதுவின் உண்மையான வாழ்க்கை சரிதை
முழுவதுமாக மக்களை சென்றடையவேண்டும். மக்களுக்கு வரும் சந்தேகங்கள்
தீர்க்கப்படவேண்டும். விமர்சிப்பவர்கள் தாக்கப்படக்கூடாது. மதங்கள்
விமர்சிக்கப்படவில்லையென்றால், அவைகளால் சமுதாயத்திற்கு ஆபத்து வரும்.

எல்லா மதங்களும், மனித கோட்பாடுகளும் ஆராயப்படவேண்டும்,
விமர்சிக்கப்படவேண்டும். அவைகளினால் சமுதாயத்திற்கு கேடு விளயுமானால்,
அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களுக்குத் தரவேண்டும். இதைத் தான்
இஸ்லாமைப் பற்றி உலகம் செய்துக்கொண்டு இருக்கிறது. ஏன் இஸ்லாம் அதிகமாக
விமர்சிக்கப்படுகிறது என்று வேதனை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை
படிக்கவேண்டும், ஹதீஸ்களையும் அறியவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கையை
படித்து வரும் சந்தேகங்களுக்கு பதிலைக் காண முயலவேண்டும்.

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதை பிடித்துக்கொள்ளவேண்டும்,
தீயதை விட்டுவிடவேண்டும், மற்றவர்களும் அவைகளை விட்டுவிட நம்மால்
முடிந்ததை செய்யவேண்டும்.

தமிழ் படிக்கத் தெரிந்த முஸ்லிமே, இந்த சிறிய கட்டுரையை படித்த பிறகும்,
உன் வீட்டில் ஒரு தமிழ் குர்-ஆன் வரவில்லையானால், நீ குர்-ஆனை தமிழில்
படிக்க ஆரம்பிக்கவில்லையானால் உன் இஸ்லாமை, மற்றவர்கள் கேள்வி கேட்பதை
உன்னால் தடை செய்யமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள். நீ முதலாவது
இஸ்லாமை அறிந்துக்கொள், கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றுவிடு, அப்போது
தான் உன்னால் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்களை தரமுடியும்.



--
source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post_17.html

குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?

குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள்
பெற்றெடுத்தார்களா?

முன்னுரை: பொதுவாக முஸ்லிம்களிடம் "குர்-ஆன்" எப்படி வேதமாகும் என்று
இதர மார்க்கத்தார்கள் கேட்டுவிட்டால் போதும், உடனே ஒரு பெரிய விஞ்ஞானி
போல பேச ஆரம்பித்து விடுவார்கள். குர்-ஆனில் இந்த விஞ்ஞானம் உண்டு, அந்த
கண்டுபிடிப்பு உண்டு, இந்த கண்டுபிடிப்பு சமீப காலத்தில் தான்
கண்டுபிடித்தார்கள் என்று சொல்லிக்கொண்டே செல்வார்கள். ஒரு சராசரி
முஸ்லிமே இந்த நிலையில் பேசினால், ஒரு முஸ்லிம் அறிஞர் எவ்வளவு பேசுவார்?
இப்போது நம் இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களின் குர்-ஆன்
விளக்கவுரையிலிருந்து ஒரு விஞ்ஞான அற்புதத்தை நாம் கண்டுகளிப்போம்.

இந்த கட்டுரையை நாம் கீழ்கண்ட உபதலைப்புகளில் படிப்போம்.

1) நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு

2) 7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய
விஞ்ஞானம். பீஜே அவர்களின் விளக்கம்.

3) இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?

4) பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை
உலுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்

5) குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை

6) முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமிய வாதிகளின்
கண்டுபிடிப்பு தான்.



பீஜேவிற்கு கேள்வி: மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?

1) நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு

சமீப காலமாக நீருக்குள் பிரசவம் என்பது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு,
ஆய்வு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் நன்மைகளும் உண்டு,
தீமைகளும் உண்டு. நீருக்குள் பிரசவம் நடைப்பெறும் போது பிரசவ வலி
குறையும் என்பது ஒரு நன்மையாகும். ஆனால், தாய்க்கும், பிள்ளைக்கும்
ஆபத்துக்கள் இதன் மூலம் அதிகமாக ஏற்படலாம், பிறந்தவுடன் நீருக்குள்
மூச்சு திணறி குழந்தை மரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான தாய்,
நார்மல் பிரசவம் நடைப்பெறும் என்று மருத்துவர்களால்
எதிர்ப்பார்க்கப்படும் பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும், ஆனால்,
பிரசவத்தின் போது எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு விட்டால், தாய் மற்றும்
குழந்தையின் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும், உயிருக்கு ஆபத்தாக
முடியும்.

இந்த கட்டுரையின் நோக்கம், நீருக்குள் பிரசவம் என்பது நல்லதா கெட்டதா
என்பதைப் பற்றி ஆய்வு செய்வதல்ல, எனவே, இந்த விஞ்ஞான விரவம்
தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி சில விவரங்களை
படித்துக்கொள்ளலாம், மேலும் இணையத்தில் கிடைக்கும் விஞ்ஞான ஆய்வு
மருத்துவ கட்டுரைகளையும் படித்துக்கொள்ளலாம்.

http://en.wikipedia.org/wiki/Water_birth

2) 7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய விஞ்ஞானம்.

பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கவுரையில்
கீழ்கண்டவாறு எழுதுகிறார் (எண் 436 – நீருக்குள் பிரசவம்):

436. நீருக்குள் பிரசவம்

19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற
கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு
பிடித்துள்ளது

பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது
இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது
மனதளவில் தைரியத்தைத் தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை
நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள்
பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில்
நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும்
போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே
குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால்
குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ
மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார்
நிலையில் உள்ளன.

குர்-ஆன் ஒரு இறைவேதம் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் நம்பவேண்டும் என்று
இஸ்லாமிய அறிஞர்கள் அனேக யுக்திகளை கையாளுகிறார்கள், அதில் ஒன்று இன்றைய
விஞ்ஞானம் அன்றைய குர்-ஆனில் காணப்படுகின்றது என்பது பற்றியதாகும். இந்த
வரிசையில், பீஜே அவர்கள் தன் பங்கிற்கு என்ன செய்யமுடியுமோ அதனை
செய்துக்கொண்டு இருக்கிறார்.

ஒருவர் பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கவுரைகள் அனைத்தையும் அவரது
குர்-ஆன் தமிழாக்கத்தில் படித்தால், தொலைக்காட்சியில் விஞ்ஞான உலக
செய்திகளை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு உண்டாகும். டிஸ்கவரி
சானல்(Discovery Channel), நாஷ்னல் ஜியாக்கிரபிக் (National Geographic
channel) போன்ற விஞ்ஞான, சரித்திர, பூகோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

எப்படியாவது குர்-ஆனிலிருந்து ஏதாவது சில வசனங்களை எடுத்துக்கொண்டு,
அவைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசி, "இதோ எங்கள் வேதம், 14
நூற்றாண்டுகளுக்கு முன்பே, இன்றைய விஞ்ஞானம் பற்றி துள்ளியமாக சொல்கிறது"
என்று நாகூசாமல் பொய்களை பீஜே அவர்கள் அள்ளிவிசுகிறார்.

பீஜே அவர்களின் ஒரு சில கட்டுரைகள், புத்தகங்கள், பேச்சுக்களை
கேட்பவர்கள், "ஆஹா.. எவ்வளவு அருமையாக இவர் பேசுகிறார், விவரிக்கிறார்"
என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்டே
இருந்தால், குறிப்பாக அவரது குர்-ஆன் விரிவுரைகளை முழுவதுமாக படித்தால்,

"அய்யய்யோ.. எவ்வளவு பொய்களை இவர் அள்ளி வீசுகிறார்... இதை கேள்வி கேட்க
யாருமில்லியா?" என்று சொல்லத்தோன்றும்.

நான் சொல்வதை நம்பவில்லையானால், நீங்களே அவரது அனைத்து ஆக்கங்களையும்,
பேச்சுக்களையும், குர்-ஆன் விளக்கவுரைகளையும் படித்துப் பாருங்கள்.

ஆக, குர்-ஆன் வசனங்களுக்கு அவர் பூசிய விஞ்ஞான முலாமை இப்போது நாம்
சோதிக்கப்போகிறோம். இப்போது இந்த விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட குர்-ஆன்
வசனங்களை காண்போமா?

3) இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?

பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய இரண்டு (விஞ்ஞான!) வசனங்களை அவரது
மொழியாக்கத்திலிருந்து படிப்போம்.

குர்-ஆன் 19:23: பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின்
அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு
மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.

குர்-ஆன் 19:24: 'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை
ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர்
அழைத்தார்.

வாசர்களாகிய நீங்கள், மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்கு இரண்டு முறை
படித்துக்கொள்ளுங்கள், நாம் அவைகளை ஆராயப்போகிறோம்.

இந்த வசனத்தில் வரும் பெண், இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். அவருக்கு
பிரசவ வலி ஏற்பட்டது, அவர் வலி தாங்க முடியாதவராக "நான் இதற்கு முன்பே
செத்து போய் இருக்கலாமே" என்றுச் சொல்லி வேதனையடைகிறார். அப்போது அங்கே
ஒரு ஊற்றை அல்லாஹ் உருவாக்கினார் என்றும், அதைப் பற்றி மரியாளுக்கு
அறிவிக்கப்பட்டது என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

விஞ்ஞான வசனம் குர்-ஆன் 19:24: மேற்கண்ட இரண்டு வசனங்களை படித்தால்,
"ஆம், பீஜே சொல்வது சரி தான், பிரசவ வேதனையுள்ள ஒரு பெண்ணுக்காக ஒரு
ஊற்றை அல்லாஹ் உருவாக்குகிறான் என்றால் (19:24), கிட்டத்தட்ட பீஜே
சொன்னது போல் அல்லவா இது இருக்கிறது" என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும்.

ஆனால், இப்படிப்பட்ட விளக்கவுரை, அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது,
அவைகளுக்கு பதில் தர பீஜே அவர்களால் முடியுமா? இவ்வசனங்கள் உண்மையாகவே
நீருக்குள் பிரசவம் பற்றி தான் பேசுகின்றதா?

இவைகளை இப்போது விளக்குவோம்.

4) பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை
உளுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்

குர்-ஆன் 19ம் அதிகாரம், 23, 24 வசனங்கள் முழு விவரங்களையும்
சொல்லவில்லை. பிரசவ வலியால் துடிக்கும் மரியாளுக்கு உண்மையாகவே அல்லாஹ்
என்ன சொல்லவருகிறார் என்று அறிய இன்னும் 3 வசனங்களை நாம் சேர்த்து
படிக்கவேண்டும். குர்-ஆன் 19:22 லிருந்து 26 வரையுள்ள வசனங்களை
படிப்போம். விஞ்ஞானம் உள்ளது என்று பீஜே அவர்கள் குறிப்பிட்டது 23, 24
வசனங்களையாகும்.

பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.(குர்-ஆன் 19:22)

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு
சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக
இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.(குர்-ஆன் 19:23)

'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்'
என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். (குர்-ஆன் 19:24)

'பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான
பழங்களைச் சொரியும்' (என்றார்) (குர்-ஆன் 19:25)

நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால்
'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன்.
எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக! (குர்-ஆன் 19:26)

மேற்கண்ட ஐந்து வசனங்களை படித்துவிட்டு, இப்போது சொல்லுங்கள், இந்த
வசனங்கள் நீருக்குள் பிரசவம் என்ற நவீன விஞ்ஞானம் பற்றி பேசுகின்றதா?

இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:

1) மரியாள் கருவுற்ற கருவுடன் தூரமான இடத்திற்குச் செல்கிறார்.

2) பிரசவ நேரம் வந்த போது, பிரசவ வலியால் துடிக்கிறார், வலியின்
வேதனையை தாங்க முடியாமல், தான் இதற்கு முன்பே மரித்துப்போய் இருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று சொல்கிறார்.

3) அல்லாஹ் ஒர் நீருற்றை ஏற்படுத்துகிறார், அதே போல, பேரிச்ச
மரத்தை உலுக்குபடி கேட்டுக்கொள்கிறார்.

4) பிறகு, அல்லாஹ் மரியாளிடம் நீரை குடித்து, பேரிச்ச பழங்களை
சாப்பிடு என்றுச் சொல்கிறார்.

இது தான் அவ்வசனங்கள் சொல்லும் விவரங்கள். குடிப்பதற்காக தண்ணிரும்,
சாப்பிடுவதற்காக பேரிச்ச பழங்களையும் இருக்கின்றன என்று அவருக்கு
சொல்லப்படுகின்றது. ஆனால், பீஜே அவர்கள் முழு பூசணிக்காயை அப்படியே
மறைத்துவிட்டு, அந்த நீருற்று என்பது மரியாளுக்காகத் தான் அதுவும்,
மரியாளுடைய பிரசவ வலியை நீக்குவதற்கு அல்லாஹ் உருவாக்கியது என்கிறார்.
மரியாள் அந்த நீருற்றில் இறங்கினால், அவரின் வேதனை குறையும் என்று தன்
சொந்த விரிவுரையை இவர் கூறுகிறார். பீஜே அவர்கள் தன்னைத் தவிர மற்றவர்கள்
அனைவரும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்றும், இவர் சொல்வதை
அப்படியே நம்பிவிடுவார்கள் என்றும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

இந்த குர்-ஆன் வசனங்களில் அனேக சிக்கல்கள், தவறுகள் உள்ளன. அவைகளை
இப்போது காண்போம். பீஜே அவர்களோ, அல்லது இதர இஸ்லாமியர்களோ, தங்கள்
விஞ்ஞான அறிவை பயன்படுத்தி இந்த சிக்கல்களை அவிழ்க்கட்டும்.

1) பிரசவ வேதனை அடைந்து, துக்கிக்கும் ஒரு பெண்ணிடம் போய், நீ
பேரிச்ச மரத்தின் அடியை பிடித்து உலுக்கு அது உனக்கு பழங்களைத் தரும், நீ
சாப்பிடலாம் என்று அறிவுள்ள மனிதன் எவனாவது கூறுவானா?

2) பசியால் துடிக்கும் ஒரு பெண்ணிடம் வேண்டுமானால் சொல்லலாம்,
ஆனால், பிரசவ வேதனை என்பது மிகவும் கொடுமையானது என்றுச் சொல்வார்கள்,
பெண்கள் படும் பாடுகள் மிகவும் அதிகம், அதனை நம் குடும்பங்களில் நாம்
கண்டுள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பேரிச்ச மரத்தை உலுக்கு என்றுச்
சொல்வது அறிவுடமையாக தெரிகின்றதா?

3) இப்படிப்பட்ட அறிவுரையை கூறுபவன் ஒரு இறைவனா? இது நடைமுறையில் சாத்தியமா?

4) ஒரு நீருற்றை அற்புதமாக ஏற்படுத்திக்கொடுத்த அல்லாஹ், ஏன்
காற்றை அனுப்பி பேரிச்ச பழங்கள் கீழே உதிர வைத்திருக்கக்கூடாது? ஒரு நிறை
மாத கர்ப்பிணி, அதிலும் பிரசவத்தின் வலியால் துடிக்கும் பெண்ணிடம்
சாப்பாடு பற்றியா பேசுவது? மரியாள் தனக்கு பசிக்கிறது, சாப்பாடு
தாருங்கள் என்று கூறினாரா? இல்லையே! அல்லாஹ் எப்படி வலியால் துடிக்கும்
பெண்ணிடம் சாப்பாடு சாப்பிடு என்றுச் சொல்கிறார்? அதுவும், பேரிச்ச
மரத்தை உலுக்கும் படி கேட்கிறார்? மரியாள் என்ன அந்த காலத்து கர்னம்
மல்லேஸ்வரியா? பேரிச்ச மரத்தை உலுக்குவதற்கு? ஒருவேளை கர்னம்
மல்லேஸ்வரியாக இருந்தாலும், பிரசவ வேதனை கொடுமையாக இருக்கும் போது,
இப்படி மரத்தை பிடித்து உலுக்க முடியுமா என்பது தான் கேள்வி? அல்லாஹ்வின்
ஞானம் எவ்வளவு தரம் குறைந்து காணப்படுகின்றது என்பதை பாருங்கள்.

5) மேலும், ஆரம்ப காலத்திலே மரியாளுக்கு அல்லாஹ் அற்புதமாக
சாப்பாட்டை கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறது:

குர்-ஆன் 3:37 : அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில்
ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு
ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற
போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து
கிடைத்தது?'' என்று கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது.
அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்)
கூறினார்.

சாதாரணமாக மரியாள் இருக்கும் போது, தானாகவே உணவை கொடுத்த அல்லாஹ், ஒரு
கர்ப்பிணியாக இருந்து பிரசவ வேதனை அடையும் போது மரத்தை உலுக்கச் சொல்வது
வேடிக்கையாக உள்ளது.

இன்னும் அனேக சிக்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது மேலதிக
விவரங்கள் கேட்டால், அப்போது அவைகளை தனிக் கட்டுரையாக காண்போம்.

இப்போது விஞ்ஞானம் பற்றிய விவரத்திற்கு வருவோம்.

5. குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை

இதுவரை நாம் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்ற கருத்தில் பீஜே அவர்கள்
கொடுத்த விளக்கத்தையும், அந்த விளக்கம் எப்படி அடிப்படையற்றது என்பதையும்
கண்டோம். குர்-ஆன் சொல்லாத ஒன்றை பீஜே போன்றவர்கள் சுயமாக கற்பனை
செய்துக்கொண்டு விளக்குகிறார்கள், அல்லது மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த விளக்கத்தை கொடுத்த பீஜே அவர்கள் உண்மையில் எதனை முடிவுரையாகச்
சொல்லவருகிறார்? இப்போது அதற்கான கேள்விகளைக் காண்போம், பீஜே அவர்கள்
இதற்கு பதில் அளிப்பாரா?

பீஜே அவர்களுக்கு சில கேள்விகள்:

1) பீஜே அவர்களே, உங்களின் விளக்கத்தின் படி, இயேசுவின் பிறப்பு
நீருக்குள் நடந்தது என்றுச் சொல்கிறீர்களா?

2) "ஆம்", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் தான் பெற்றெடுத்தார்
என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்த குர்-ஆன் வசனங்களில் இதற்கான
ஆதாரங்களை காட்டுங்கள்.

3) "இல்லை", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் பெற்றெடுக்கவில்லை
என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், பின் ஏன் விளக்கவுரையில் இப்படி நவீன
விஞ்ஞானம் என்று கதைக் கட்டி மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?

4) அல்லாஹ் மரியாளுக்காக ஒரு நீருற்றை ஏற்படுத்தியது, மரியாளின்
தாகத்தை தீர்ப்பதற்காகவா, அல்லது அதற்குள் இறங்கி பிரசவ வலியை குறைத்துக்
கொள்வதற்காகவா?

5) "நீர் உண்டு, பருகி" என்று 19:26ல் அல்லாஹ் சொல்வதின்
அர்த்தமென்ன? "முதலில் தண்ணீர், அதன் பிறகு பேரிச்சம் பழங்கள்" என்று
அல்லாஹ் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லி, அதன் பிறகு "நீ உண்டு பருகி"
என்றுச் சொல்வதிலிருந்து, அவர் மரியாளின் பசிக்காகத்தான் நீருற்றை
உண்டாக்கினார் என்பது நமக்கு புரிகின்றது அல்லவா? இங்கு விஞ்ஞானம்
எங்கேயிருந்து வந்தது?

6) நீருக்குள் பிரசவம் என்பது இன்றைய கண்டுபிடிப்பாக இருந்தாலும்,
அது இன்னும் முழுமைப் பெறாத ஆராய்ச்சியாகவே உள்ளது, அதில் அனேக
பிரச்சனைகள் உள்ளது, அதாவது பிறக்கும் குழந்தை நீருக்குள் முச்சுத் திறணி
மரிக்கும் அபாயம் உள்ளது. இப்படி இருக்க, எந்த ஒரு மருத்துவச்சியின்
உதவியின்றி, இதர பெண்களின் உதவியின்றி எப்படி மரியாள் நீருக்குள் சென்று
குழந்தை பெற்று இருக்கமுடியும்?

7) இந்த வசனத்தில் அல்லாஹ் விஞ்ஞானத்தை வைத்திருந்தால், ஏன் அவர்
தெளிவாகச் சொல்லவில்லை? அதாவது கீழ்கண்ட போல அவர் வசனங்களை ஏன் தெளிவாக
இறக்கவில்லை?

"மரியாளே, நான் ஒரு நீருற்றை உண்டாக்கியுள்ளேன், அதில் நீ இறங்கினால்,
உன் பிரசவ வலி குறையும், நீ தண்ணீருக்குள்ளேயே குழந்தையை பெற்றேடு.
தண்ணீர் பிரசவத்தில் உனக்கு உதவி செய்ய ஒரு பெண்ணை நான் அனுப்புகிறேன்"

மேற்கண்டபடி அல்லாஹ் சொல்லியிருந்தால், இந்த நீருக்குள் பிரசவம் என்ற
அறிய கண்டுபிடிப்பை, 7ம் நூற்றாண்டிலிருந்தே உலகம் பின்பற்றி
இருந்திருக்குமே (நம்முடைய காலத்தில் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல்
பரிசு கூட கிடைத்திருக்கும்).

உண்மையில், 7ம் நூற்றாண்டிலிருந்து அல்ல, முதல் நூற்றாண்டிலிருந்தே இந்த
விஞ்ஞானம் உலகிற்கு தெரியவேண்டும் என்று அல்லாஹ் நினைத்து
இருந்திருந்தால், அவரால் முடிந்திருக்கும். புதிய ஏற்பாட்டு காலத்தில்
இயேசுவிற்கும், சீடர்களுக்கும், இதர யூதர்களுக்கும் மரியாள்
சொல்லியிருந்தால், இந்த அற்புத பிரசவ யுக்தியினால் உலக பெண்கள், இத்தனை
நூற்றாண்டுகளாக நன்மை பெற்று இருந்திருப்பார்கள். ஆனால், 2000 ஆண்டுகளாக,
(குறைந்தபட்சம் 14 நூற்றாண்டுகளாக) இந்த அற்புதம் பற்றி அல்லாஹ் மூச்சு
விடவே இல்லை. ஏதோ பீஜே அவர்களின் புன்னியத்தினாலும், இவரைப்போன்ற
இஸ்லாமிய அறிஞர்களின் புன்னியத்தினாலும் இந்த அற்புதம் குர்-ஆனில்
இருப்பது இப்போது தான் உலகிற்கு வெளிப்பட்டது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமியரல்லாதவர்கள் நீருக்குள்
பிரசவம் பற்றி கண்டுபிடித்த பிறகு, பீஜே போன்றவர்களுக்கு அல்லாஹ்
வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போது மிகவும் முக்கியமான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, இவைகளை
படியுங்கள், வேடிக்கை இன்னும் உச்சக்கட்டம் அடைகிறது. இவைகள் பீஜே
அவர்களின் விளக்கவுரையின் விளைவுகள்:

அ) முதலாவது, நீருக்குள் பிரசவம் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பாக
அல்லாஹ்வினால் மரியாளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆ) மரியாள் இந்த அறிய கண்டுபிடிப்பை உலகிற்கு சொல்லாமல்
மறைத்துவிட்டார்கள். ஆனால், மரியாள் மட்டும் நீருக்குள் இறங்கி இயேசுவை
வலியில்லாமல் பெற்றேடுத்துவிட்டார்கள்.

இ) மரியாள் மறைத்த இந்த அற்புதம் பற்றி, ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ்
மறுபடியும் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தி, குர்-ஆனில் பதிவு
செய்துவிட்டார்.

ஈ) 7ம் நூற்றாண்டில் அல்லாஹ் எடுத்த இரண்டாவது முயற்சியும் தோல்வி
அடைந்துள்ளது, அதாவது, கடந்த 14 நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட அறிய
கண்டுபிடிப்பு குர்-ஆனில் இருப்பது யாருக்குமே பொறிதட்டவில்லை. அதாவது,
எந்த ஒரு இஸ்லாமிய அறிஞருக்கும் 1400 ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்பு
குர்-ஆனில் உள்ளது என்ற விஷயம் கூட தெரியாமலே போய்விட்டது. எல்லாரும்
என்ன நினைத்தார்கள் என்றால், மரியாளுக்கு குடிக்க தண்ணீரை அல்லாஹ்
ஏற்படுத்தினான் என்றே எண்ணியிருந்தனர். மறுபடியும் அல்லாஹ்வின் வசனத்தை
இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

உ) கடைசியாக, இஸ்லாமியரல்லாத விஞ்ஞானிகள் அல்லது காஃபிர்கள், சுயமாக
சிந்தித்து, நீருக்குள் பிரசவம் என்பதை கண்டுபிடித்த பிறகு, பீஜே
போன்றவர்களுக்கு குர்-ஆனின் உண்மை (அல்லாஹ்வினால்) வெளிப்பட்டது.

பீஜே அவர்களுக்கு இப்போது தன்னுடைய தவறு என்ன என்று புரிகிறதா?
புரியவில்லையானால், புரியவைக்கும் படி அல்லாஹ்விடம்
வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு விளங்கினால், அடுத்த குர்-ஆன் பதிவில்
அந்த விளக்க குறிப்பை நீக்கிவிடுங்கள், நீங்கள் மனசாட்சியின் படி
நேர்மையாக நடப்பவராக இருந்தால்.

6. முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமிய வாதிகளின்
கண்டுபிடிப்பு தான்.

குர்-ஆனில் விஞ்ஞானம் என்று ஒன்றுமில்லை. இந்த கட்டுரையை படிக்கும்
வாசகர்கள் கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

· நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? ('குர்-ஆனில்
விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு)

· குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!

· குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்

குர்-ஆன் ஒரு வேதம் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காக, இப்படி
பொய்களை இட்டுக்கட்டக்கூடாது. பீஜே அவர்களே! நீங்கள் இட்டுக்கட்டியது
என்ன ஆனது, அஸ்திபாரத்தோடு இடிந்துப்போனது. உங்களைப் போன்றவர்கள் இப்படி
இல்லாத ஒன்றை இருப்பது போல சொல்வது என்பது, மிகவும் கேவலமானது. இந்த
கேவலம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் அல்லாஹ்விற்கும், அவனது
வேதத்திற்கும், இஸ்லாமுக்கும் தான்.

ஒருவேளை இந்த கட்டுரையைக்கு யாராவது மறுப்பு எழுதினால், நான் மேலதிக
விவரங்களோடு பதில் தர தயாராக இருக்கிறேன்.

வாசகர்களே, இஸ்லாமியர்கள் உங்களிடம் வந்து குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு
என்றுச் சொன்னால், நம்பவேண்டாம். அவர்கள் சொல்லும் விவரங்களை சரி
பார்த்து செயல்படுங்கள்.

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? COMPARING THE BIBLE
AND THE QUR'AN (How to do it Accurately)
ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!)
குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)
பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)
ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌
விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?(Mis-Quotations in the Arabic
Text of the Qur'an?)
மூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு (Quran Text)
பலவகையான குர்‍ஆன் மொழிப்பெயர்ப்புக்கள் (Quran Versions)
குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும் (Quran Contradictions)
குர்‍ஆன் ஓர் அற்புதமா? என்ற தலைப்பில் இதர கட்டுரைகளை படிக்கவும்
குர்-ஆன் விரியுரை கட்டுரைகள் - A different kind of Tafsir
குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - கட்டுரைகள்
பைபிளை குர்-ஆன் எப்படி காண்கிறது? (அனேக கட்டுரைகள்)

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய
வெளியீடு) ஒப்பீடு

பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1)
பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2)
பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3)
பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)


Source : http://isakoran.blogspot.in/2013/04/blog-post_8.html

போப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அறிவிக்கவேண்டுமாம்

போப் பிரான்ஸிஸ் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம்

முன்னுரை:
அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் (எகிப்து) பிரதிநிதி, போப் பிரான்ஸிஸ்
அவர்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்த வேண்டுகோள்
ஒரு வேடிக்கையான ஒன்றாகும்.

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று போப் அறிவிக்கவேண்டும்:
அல்-அஜர் பல்கலைக்கழக பிரதிநிதி(முஹம்மத் அப்துல் கவப்), தற்போதைய போப்
பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

வாடிகனோடு நல்லுறவை வைத்துக்கொள்ள மற்றும் புதுப்பித்துக்கொள்ள
விரும்புகிறோம். தற்போது போப்பாக இருக்கும் பிரான்ஸிஸ் அவர்கள், இதற்காக
முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு அடையாளமாக அவர் "இஸ்லாம் ஒரு அமைதி
மார்க்கம்" என்று தன் சொற்பொழிவுகளில் அறிவிக்கவேண்டும்.

வாடிகனோடு எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இதற்கு முன்பாக
போப்பாக இருந்தவரோடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அல் அஜர் பல்கலைக்
கழகத்தின் கதவுகள் இப்போது திறக்கப்பட்டு இருக்கின்றது.

பிரான்ஸிஸ் அவர்கள் தற்போது புதிய போப்பாக இருக்கிறார். எங்களோடு
நல்லுறவிற்காக அவர் முன்னுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
அதாவது அவர் ஏதாவது ஒரு சொற்பொழிவில், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
என்றும், இஸ்லாமியர்கள் போர் புரியவும், வன்முறைகளில் ஈடுபடவும்
விரும்புகிறவர்கள் அல்ல" என்றும் அவர் அறிவிக்கவேண்டும். இப்படி அவர்
கூறிவிட்டால், அவர் எங்களோடு நல்லுறவு வைத்துக்கொள்ள முன்வருகிறார் என்று
நாங்கள் கருதமுடியும்.

"An envoy from Al-Azhar in Cairo, raised the prospect of restoring
ties with the Vatican yesterday but called on Pope Francis to take "a
step forward" by declaring that Islam is a peaceful religion.
"The problems that we had were not with the Vatican but with the
former pope. Now the doors of Al-Azhar are open," Mahmoud Abdel Gawad,
diplomatic envoy to the grand imam of Al-Azhar, Ahmed Al-Tayyeb, told
Italian daily Il Messaggero in Cairo.

"Francis is a new pope. We are expecting a step forward from him. If
in one of his addresses he were to declare that Islam is a peaceful
religion, that Muslims are not looking for war or violence, that would
be progress in itself," he said."

மூலம்: அரப் நியூஸ் - Mending Vatican ties: Al-Azhar wants pope to
declare Islam peaceful - http://www.arabnews.com/news/454370



இது அறியாமையா? அல்லது வஞ்சகமா?

மேற்கண்ட அறிவிப்பை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும். இது
முஸ்லிம்களின் அறியாமையா அல்லது வஞ்சகமா? இதைப் பற்றி சிறிது அலசுவோம்.

1. இஸ்லாமும் முன்னால் போப்பின் அறிக்கையும்:
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு
சொற்பொழிவில் கூறினார்:

Show me just what Muhammad brought that was new and there you will
find things only evil and inhuman, such as his command to spread by
the sword the faith he preached.[118]

புதிதாக முஹம்மது என்ன கொண்டு வந்தார்? என்று எனக்கு காண்பியுங்கள்.
அவர் கொண்டு வந்தவைகளில் தீய செயல்களும் மனிதாபமற்ற செயல்களும் தான்
காணப்படும், அதாவது முஹம்மது நம்பிக்கையை வாளின் முனையில் பரப்புவதற்கு
கட்டளை கொடுத்து போதனை செய்துள்ளார்.
மூலம்: http://en.wikipedia.org/wiki/Pope_Benedict_XVI#Islam



போப்பின் இந்த அறிவிப்பிற்கு பிறகு அனேக வன்முறைகள் இஸ்லாமியர்களால்
ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டது, திருச்சபைகள் தாக்கப்பட்டன, சொமாலியாவில்
ஒரு பெண் துறவி கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் இவரை கண்ட
இடத்தில் கொள்ளுங்கள், தாக்குங்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டார்கள்.
(மூலம்:
http://www.danielpipes.org/3968/pope-benedict-criticizes-islam ).

போப் எதை அறிக்கை செய்தாரோ, அதை இஸ்லாமியர்கள் செய்து காட்டி அவரது
கூற்றை உண்மையாக்கினார்கள். இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுவிட்டு,
ஒன்றுமே தெரியாதவர்கள் போல, போப்பின் கூற்றினால் நாங்கள் மனவேதனை
அடைகிறோம் என்று கூறுகிறார்கள்.

இதை நாம் என்னவென்று அழைக்கமுடியும்? அறியாமையா? அல்லது வஞ்சகமா?

2. இஸ்லாமும் தற்போதய போப்பிடம் வைத்த வேண்டுகோளும்:

முன்னாள் போப் இஸ்லாமை விமர்சித்தார். அவரது விமர்சனத்தில் உண்மையில்லை
என்று வார்த்தைகளால் சொல்லும் இஸ்லாமியர்கள், தங்கள் செயல்களால், அவர்
சொன்னது உண்மைத் தான் என்பதை நிருபித்தார்கள். இப்போது போப்பாக
இருப்பவர், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டுமாம்.
அப்போது தான் வாடிகனோடு இவர்களது உறவு மேம்படுமாம். இஸ்லாமியர்களின்
இந்த வேண்டுகோளை நாம் சிறிது ஆழமாக கவனித்தால், கீழ்கண்ட கேள்விகள்
நமக்கு எழும்:

அ) வாடிகனோடு எங்களுக்கு பிரச்சனை இல்லை, முன்னாள் போப்போடு தான்
எங்களுக்கு பிரச்சனை உள்ளது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அதாவது
உலகில் யார் யாரெல்லாம் இஸ்லாமை உண்மையாக விமர்சிக்கிறார்களோ, அவர்களோடு
முஸ்லிம்களுக்கு பிரச்சனை உண்டு. அவர்களை கொலை செய்யவும், கொலை
மிரட்டல்கள் விடவும், விமர்சனங்களை அடிப்படையாக வைத்துகொண்டு
வன்முறைகளில் ஈடுபடவும் இவர்கள் ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி
செய்யும் இவர்களுக்கு புதிய போப்பிடம் வேண்டுகோள் வைக்க என்ன
தகுதியிருக்கிறது?

ஆ) மாற்று மத தலைவர்களிடம் சென்று "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம்
என்று அறிவிப்பு செய்யுங்கள்" என்று கேட்க இவர்களுக்கு வெட்கமாக
தோன்றவில்லையா?

இ) ஒரு வேளை வேண்டுகோள் வைத்தாலும், அதனை எப்படி வைக்கவேண்டும்? அதாவது
புதிய போப் அவர்களே, எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இதனை சரியாக
புரிந்துக்கொள்ளாமல் உங்கள் முன்னாள் போப் விமர்சித்துவிட்டார், எனவே,
நீங்கள் இஸ்லாமை படித்து தெரிந்துக்கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
என்று கேட்டு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இப்படி செய்வதை
விட்டுவிட்டு, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு
செய்யுங்கள்" என்றுச் சொன்னால், எப்படி ஒருவர் இஸ்லாம் பற்றி
தெரிந்துக்கொள்ளாமல் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கமுடியும்?
இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்திற்கும் சிந்திக்காமல் தலையாட்டும்
பொம்மைகளாக கிறிஸ்தவர்கள் எப்போது மாறினார்கள்?

ஈ) குர்-ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை
சரித்திரத்தை படியுங்கள், இஸ்லாமிய ஆரம்பகால நடவடிக்கைகளை படியுங்கள்,
அதன் பிறகு நீங்கள் இஸ்லாமைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று
சொல்வதை விட்டுவிட்டு, நேரடியாக "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்றுச்
சொல்லவேண்டுமாம். உலக அரசியல் தலைவர்களைப்போலவும், ஒன்றுமறியாத பாமர
முஸ்லிம்களைப்போலவும், கிறிஸ்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று இவர்கள்
நினைத்துவிட்டார்களா?

உ) உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று மற்றவர்கள் ஏன்
சொல்லவேண்டும்? அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல ஏன்
சொல்லவேண்டும்? உலக மக்களுக்கு சுயமாக படித்து தெரிந்துக்கொண்டு பேசத்
தெரியாதா?

ஊ) உண்மையாகவே, உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கமாக இருந்திருந்தால்
மற்றவர்களின் கால்களில் விழுந்து, "எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம்
என்றுச் சொல்லுங்கள்" என்று கெஞ்ச வேண்டியதில்லை?

எ) இஸ்லாமியர்களால் முடிந்தால், அனேக குர்-ஆன் பிரதிகளை போப்பிற்கு
அனுப்பிவையுங்கள், ஹதீஸ் (புகாரி, முஸ்லிம் போன்ற) தொகுப்புக்களையும்,
குர்-ஆன் விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும்,
இஸ்லாமிய ஆரம்பகால சரித்திரத்தையும் அனுப்பிவையுங்கள் (நீங்கள்
எழுதுகின்ற புத்தகங்களை அனுப்பவேண்டாம், அவைகளால் ஒரு நன்மையும் இல்லை).
அவைகளை படித்து, இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நீங்களே
அறிந்துகொள்ளுங்கள் என்று சவால் விடுங்கள். அதே நேரத்தில் எந்த விமர்சனம்
வந்தாலும் அதனை வன்முறையில்லாமல் சந்திக்க தயார் என்று சவால் விடுங்கள்.
இப்படி செய்தால், ஓரளவிற்கு உங்கள் மார்க்கம் பற்றி போப்பிற்கு நல்ல
அபிப்பிராயம் வரும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, "இஸ்லாம் அமைதி
மார்க்கம்" என்று சொல்லச்சொன்னால், என்ன அர்த்தம்? கிறிஸ்தவர்களின்
காதில் பூ வைக்க ஏன் முயற்சி செய்கிறீர்கள்?

ஏ) ஒரு வேளை இந்த போப் கூட இஸ்லாமை அறிந்துக்கொண்டு, விமர்சித்தால்
நீங்கள் என்ன செய்வீர்கள்? இவருக்கும் கொலை மிரட்டல் விடுவீர்கள் அல்லவா?
வன்முறையில் இறங்குவீர்கள் அல்லவா? முதலாவது இஸ்லாம் அமைதி மார்க்கம்
என்பதை "முஸ்லிம்களே" நீங்கள் உங்கள் செயல்களால் நிருபியுங்கள், அதன்
பிறகு மற்றவர்கள் இஸ்லாம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி
சிந்திப்போம்.

இஸ்லாமுக்கு மாற மறுத்து, இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட 800 இத்தாலிய
கிறிஸ்தவர்களை கவுரவித்த தற்போதய போப்:

தற்போதை போப், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்று அறிவிக்கவேண்டும்
என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள், ஆனால், தற்போதைய போப் பிரான்ஸிஸ்
அவர்களோ, இஸ்லாமுக்கு சரியான பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
அதாவது கடந்த மே மாதம்12ம் தேதி, போப் அவர்கள், 15ம் நூற்றாண்டில்,
இஸ்லாமுக்கு மாற மறுத்ததால், இஸ்லாமியர்களால் கொடுமையாக கொல்லப்பட்ட 800
கிறிஸ்தவர்களை கவுரவித்தார். தான் பதவிக்கு வந்த பிறகு அவர் செய்த இந்த
செயல், இஸ்லாம் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மறைமுகமாக
சொல்லிவிட்டார்.

பதினாறாம் போப் பெனடிக்ட், வார்த்தைகளால் இஸ்லாமை விமர்சித்தார்,
தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, செயல்களால் இஸ்லாமை முழுவதுமாக
விமர்சித்துவிட்டார்.

மூலம்:
1) Thousands pack St Peter's Square as Pope Francis canonises 800
Italian saints who were slaughtered for refusing to convert to Islam
http://www.dailymail.co.uk/news/article-2323410/Thousands-pack-St-Peters-Square-Pope-Francis-canonises-800-Italian-saints-slaughtered-refusing-convert-Islam.html

2) Pope Francis canonizes 800 martyrs at Vatican Mass
http://www.diopitt.org/pittsburgh-catholic/pope-francis-canonizes-800-martyrs-vatican-mass


முஸ்லிம்களே, உங்கள் வார்த்தைகளால் மட்டும் "இஸ்லாம் அமைதி மார்க்கம்"
என்றுச் சொல்லிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலாவது, உங்கள் செயல்களால்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிருபித்துக் காட்டுங்கள், அப்போது உலகம்
தானாக உண்மையை சொல்ல ஆரம்பிக்கும்.

போப் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லிவிட்டால் !?!

ஒரு வேளை உங்கள் வார்த்தைகளின் படியே, போப் அவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி
மார்க்கம்" அறிவித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.

• இந்த அறிக்கையைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள் வன்முறையை கைவிடுவார்களா?
• இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு எதிராக நடத்தபப்டும்
வன்முறை செயல்கள் நிறுத்தப்படுமா?
• இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டப்படுமா?
• எதிர்காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை தாக்கும் செயல்கள் நிறுத்தப்படுமா?

இப்படியெல்லாம் செய்வோம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் உறுதி அளித்தால்,
நாங்கள் போப்பிடம் சென்று, நீங்கள் முஸ்லிம்கள் சொல்வது போலவே
சொல்லுங்கள், ஏனென்றால், உலக நன்மைக்காக ஒரு பொய்யைச் சொல்வதில் எந்த
தவறும் இல்லை என்று நாங்கள் அவர்களிடம் கூறுவோம்.

ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களை கழுவிய போப்:

போப் பிரான்ஸிஸ் அவர்கள், இயேசு காட்டிச் சென்ற வழியில் சென்று, அனேகரின்
கால்களை கழுவினார். ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களையும் கழுவினார். இது
அவரது தாழ்மையையும், இயேசுவின் வழியையும் காட்டுகிறது. இப்படி இவர்
செய்தார் என்றுச் சொல்லி, "ஆஹா. முஸ்லிம்களின் கால்களை போப் கழுவும்
அளவிற்கு தாழ்ந்துவிட்டார்" என்று நினைக்கவேண்டாம். ஒருவேளை நீங்கள்
இப்படி எண்ணம் கொண்டு இருந்தால், அதனை மாற்றிக்கொள்ளுங்கள். உலகை
ஜெபிப்பவர்கள் எப்போதும் உலகத்தில் சாந்தி சமாதானத்தை நிலை நாட்டுபவர்களே
தவிர, கைகளில் வாளை ஏந்தியவர்கள் அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால், உலக
தலைவர்களின் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உங்கள் முஹம்மதுவையும்
சேர்த்து.

முடிவுரை:
இஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை மற்றவர்களை கட்டாயப்படுத்தியே
வாழ்ந்துவருகிறீர்கள், இனியாவது சிறிது மாறுங்களேன்.

1) உலக அளவில் கிறிஸ்தவ சபைகளையும், இதர மார்க்க வணக்க ஸ்தலங்களையும்,
மக்களையும் தாக்குவதை நிறுத்துங்கள்.
2) இஸ்லாமை விட்டு வெளியேறி நாத்தீகர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ,
இந்துக்களாகவோ மாறுபவர்களை கொல்வதை, தாக்குவதை நிறுத்துங்கள்.
3) உலக அளவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.
4) உங்களைப் போலவே, மற்ற மக்களையும் நேசியுங்கள்.
5) இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நீங்கள் நம்பினால், அதனை
மற்றவர்களுக்கு எப்படி காட்டப்போகிறீர்கள், நிருபிக்கப்போகிறீர்கள்?
அமைதியாகவா அல்லது அராஜகத்தாலா? சிந்தியுங்கள்.

Source : http://isakoran.blogspot.in/2013/06/blog-post.html

குர்-ஆனை விமர்சிப்பவர்கள் அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

குர்-ஆனை விமர்சிப்பவர்கள் அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

மெயில் பெற்றுக்கொண்ட தேதி: 31 அக்டோபர் 2004

பொருள்: குர்-ஆனின் பிழைகள்.

குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக திரு கட்ஜ் அவர்கள் கட்டாயமாக அரபி
மொழியை கற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த அறிவுரை
குர்-ஆனுக்கு மட்டுமல்ல, அவருக்கு தெரியாத இதர மொழி புத்தகங்களுக்கும்
பொருந்தும்.

________________________________

எங்கள் பதில்:

அன்பானவரே,

உங்கள் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி.

நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். இவைகள் உங்கள்
விமர்சனத்திற்கும் பதிலாக அமையும்.

எந்த ஒரு மனிதனானாலும் சரி, குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக, கட்டாயமாக
அவன் அரபி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள்
நினைக்கிறீர்களா?அல்லது இந்த சட்டத்தை எனக்கு மட்டுமே நீங்கள்
முன்வைக்கிறீர்களா?

குர்-ஆனைப் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடலை, கேள்விகளை முன்வைக்கும்
மனிதன், ஏன் அரபியை கற்றுக்கொள்ள வேண்டும்?

குர்-ஆனை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் விதிக்கும் இந்த சட்டங்கள்,
பைபிளை விமர்சிப்பவர்களுக்கும் பொறுந்தும் என்று நீங்கள்
நினைக்கிறீர்களா? எனவே, நாம் இப்படி சொல்லலாமா? அதாவது பைபிளை விமர்சிக்க
விரும்புகிறவர்கள் கட்டாயமாக, பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம்,
கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட பிறகு தான் பைபிளைப் பற்றி
பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், அதுவரை அவர்களுக்கு பைபிளை
விமர்சிக்க உரிமையில்லை.

நீங்கள் எனக்கு விதித்த சட்டத்தை பைபிளுக்கும் பொறுந்தும் என்று நீங்கள்
நினைத்தால், இதுவரை பைபிளை வெளிப்படையாக விமர்சிக்கும் இஸ்லாமிய
அறிஞர்களை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? அவர்கள் செய்வது தவறு என்று
அவர்களிடம் புகார் கூறியதுண்டா? அதாவது அஹமத் தீதத், ஜமால் பதாவி,
ஷப்பீர் அலி, ஜாகிர் நாயக், ஹம்ஜா மாலிக் போன்றவர்கள் செய்வது தவறு என்று
அவர்களை நீங்கள் கண்டித்ததுண்டா? இல்லை நான் இவர்களை கண்டிக்கவில்லை
என்றுச் சொல்வீர்களானால், ஏன் கண்டிக்கவில்லை என்று எனக்கு விளக்கவும்.
அவர்களும் எபிரேயம், கிரேக்க மொழிகளை கற்றுக்கொள்ளாமல் தானே
விமர்சிக்கிறார்கள்? [உமரின் வரிகள்: தமிழ் நாட்டின் இஸ்லாமிய
அறிஞர்களாகிய பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும், இன்னும் இதர அறிஞர்களும்
எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டு தான் பைபிளை
விமர்சிக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா?]

ஒருவேளை, குர்-ஆனுக்கு பொறுந்தும் இந்த சட்டமானது, பைபிளுக்கு பொறுந்தாது
என்று நீங்கள் கருதினால், ஏன் இப்படி பொறுந்தாது என்று விவரமாக தயவு
செய்து எனக்கு விளக்கவும்?

கடைசியாக, உங்களுடைய இந்த கோட்பாடு உங்களுக்கே ஒரு பிரச்சனையாக
மாறுகிறது. அதாவது அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள்
அங்கீகரிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. இந்த கிறிஸ்தவர்களின் தாய்
மொழி அரபியாக இருப்பதினாலும், அவர்கள் தாராளமாக குர்-ஆனை விமர்சிக்கலாம்
என்று நாம் கருதலாம் இல்லையா? அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க
நீங்கள் வரவேற்ப்பீர்கள் என்று நம்புலாமா?

குர்-ஆன் பற்றி நான் சொல்லும் விவரங்களில் விமர்சனங்களில் ஏதாவது தவறு
இருக்குமானால் அதனை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதனை நான் சந்தோஷத்தோடு
சரி செய்துக்கொள்வேன். என்னுடைய எந்த இணைய பக்கமானாலும் சரி, அதில் தவறு
இருக்கிறது என்று நீங்கள் நிருபித்தால், அதனை சரி செய்துக்கொள்ள நான்
ஆவலாக உள்ளேன்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

யோகன் கட்ஜ்

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/learn_arabic.htm

இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்.

________________________________
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
Source: http://www.backend.ai-deutschland.de/tamil/emails/learn_arabic.html

source : http://isakoran.blogspot.in/2013/09/blog-post.html