அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 31, 2008

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 
How Muhammad's Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam
 

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:

1. முகமது ஒரு பொய்யர்(A Liar):

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):

"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்)
"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல!
"இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்)
பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும்
அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன் 25:5)

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)

3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள்
"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்
"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)

4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):

"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது)
ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)

5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., "jinn-possessed")

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "
அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)

முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad's integrity then by the same token the unbelievers' claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm

 

 
 setstats1


http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/mhd_amin2.html"

July 30, 2008

உயிரை பணயம் வைக்கும் காவல்துறையினர்

சமீபத்தில் குஜராத்திலும் கர்நாடகத்திலும் நடந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்களில் அநேகர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அநேகர் முடமாக்கப்பட்டுள்ளனர். தீவீரவாதீகளின் இந்த வெறிசெயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நம் கண்ணிரஞ்சலி செலுத்துவதுடன் இறைவனின் கரம் ஆறுதல் படுத்தவும் நாம் மன்றாடுகிறோம்.

இந்த கடுமையான  சூழ்நிலையில் இன்னும் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து செயல்படும் நம் நாட்டு காவல்துறையினரை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படங்களைபாருங்கள். தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருப்பை தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என தெரிந்தும் செயல்பட்டு சக்திவாய்ந்த குண்டுகளை செயலிக்கசெய்த சாதனையை மெச்சிகொள்ளதான் வேண்டும்.‌

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
[IP_Ahmedabad+Bomb+(4).jpg] 
 
 
 
 
 

இஸ்லாம் கல்விக்கு பதில்: மதுபானம் ஒர் பார்வை‍ பாகம் -1

[குறிப்பு: இக்கட்டுரை "இயேசுவும் திராட்சை ரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்" என்ற கட்டுரையிலிருந்து எடுத்த ஒரு பகுதியாகும். அதாவது, இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி, மக்களுக்கு குடிக்கக் கொடுத்து அவர்களை போதையூட்டினார் என்று இஸ்லாம் கல்வித் தளம் குற்றம் சாட்டியபோது, அதற்கு பதிலாக எழுதப்பட்ட கட்டுரையாகும். அந்த பதிலில், "அல்லா முஸ்லீம்கள் குடித்துவிட்டு நமாஜ் செய்ய அனுமதித்தார்" என்று நான் எழுதியிருந்தேன், அதற்கு இப்போது இஸ்லாம் கல்வி தளம் பதில் அளித்துள்ளது. நான் அளித்த பதிலில் சொல்லியபடி, இப்போது "இஸ்லாமும் மதுபானமும்" என்ற தலைப்பில் நான் அவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்புகளும், அதே நேரத்தில் அவர்கள் பைபிள் மீது திராட்சை ரசம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில்களும் இந்த தொடர் கட்டுரைகளில் அளிக்க உள்ளேன்.]

இஸ்லாம் கல்வி எழுதிய மறுப்பு: மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-1)

இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரைக்குத் தான் இஸ்லாம் கல்வி மறுப்பு அளித்துள்ளது. நான் இக்கட்டுரையை மறுபதிவு செய்கின்றேன், ஏனென்றால், இஸ்லாம் கல்வி தளம் எந்த கட்டுரைக்கு பதில்/மறுப்பு அளிக்கிறது என்ற விவரத்தை/தொடுப்பை கொடுக்காமல் எழுதியது. எனவே, தான் இக்கட்டுரையை மறுபதிவு செய்கிறேன், மட்டுமல்ல, அவர்களின் பதிலுக்கு என் கருத்தை அடுத்த கட்டுரையில் கர்த்தருக்கு சித்தமானால் தருகிறேன்.



முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.

1. குடிக்க அல்லாவின் அனுமதி:

மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)


இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.

2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!


(குர்‍ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.


இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.

The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:

Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59


சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்‍ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?

இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்‍ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்கள், போதை மூளைக்கு ஏறினால் வார்த்தைகள் எப்படி சரியாக இருக்கும். எனவே, அல்லா, தம்பிகளா, நமாஜுக்கு வரும் போது மட்டும் குடிக்காதீர்களடா! ஏனென்றால், வார்த்தைகள் சரியாக வராது என்று வசனத்தை இறக்குகிறார். ஆக, மதுபான தடை வசனம் வரும் வரை முஸ்லீம்கள் குடித்தார்கள். இதற்கு முகமதுவும் அனுமதி அளித்துள்ளார்.


16:67 பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(And from the fruits of date palms and grapes, you derive strong drink) This indicates that it was permissible to drink it before it was forbidden. It also indicates that strong drink (i.e., intoxicating drink) derived from dates is the same as strong drink derived from grapes. Also forbidden are strong drinks derived from wheat, barley, corn and honey, as is explained in detail in the Sunnah.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2965&Itemid=71


வெங்காய பூண்டு வாடை, மதுபான வாடையை விட தீயது:

சிறிது இங்கு கவனியுங்கள், பல ஆண்டுகள் மக்கள் குடித்துவிட்டு, குடித்த வாடையோடு வந்தாலும் அல்லா தொழுகைக்கு அனுமதியளித்துள்ளார். ஆனால், பூண்டு, வெங்காயம் என்பது மிகவும் தீய‌ வாடையாக‌ மாறிவிட்டது. பூண்டு வெங்காய வாசனையை விட மதுபான வாசனை அல்லாவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. பூண்டு வெங்காயம் உண்பவர் தொழுகைக்கு வரவேண்டியது இல்லை என்று முகமது சொல்லியுள்ளார்.இதை உண்டு முகமதுவுடன் தொழக்கூடாது ஏன்? "பூண்டு வெங்காய வாடை" வரும். ஆனால், மதுபானம் அறுந்தினவர் தொழலாம். இப்படி மதுபானத்திற்கு சொல்லியிருப்பாரா? [பூண்டு வெங்காய வாடை நல்லது என்று நான் சொல்ல வரவில்லை]


பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

3. கடைசியாகத்தான் அல்லா மதுபான தடையை கொண்டுவந்துள்ளார்:

பல ஆண்டுகள் முஸ்லீம்கள் குடித்தார்கள், வெறித்தார்கள், தப்பு தப்பாக குர்‍ஆன் சூராக்களை ஓதினார்கள், அல்லா நாமாஜ் செய்யும் போது மட்டும் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆனால் தடை விதிக்கவில்லை. கடைசியாகத்தான் அவர் கட்டளை கொடுக்கிறார்.

(குர்‍ஆன் 5:90 )ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.


குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? இந்த வசனத்திற்கு பிறகு முஸ்லீம்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இதன் பிறகு மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும், பிரயாணத்தின் போது இடையில் சண்டை போட்டுக்கொண்டு எங்கே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று அல்லா நினைத்து இவ்வசனத்தை இறக்கியுள்ளார் என்று கீழ்கண்ட தொடுப்பில்(http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm) சொல்லப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், முகமது நபித்துவம் வகித்தார், குர்‍ஆனில் உள்ள 114 அதிகாரங்கள் உள்ளன. இந்த மதுபானம் தடை செய்யப்பட்ட அதிகாரம் 5ம் அதிகாரம் ஆகும், இது கடைசியில் வெளிப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது அதிகாரங்கள் வெளிப்பட்ட வரிசையைச் சொன்னால், இந்த 5வது அதிகாரம் 112வதாக வெளிப்பட்டதாம்(Source : http://www.submission.org/Q-T.html).

அதாவது கிட்டத்தட்ட 18-19 வருடங்கள், குடித்துள்ளார்கள முஸ்லீம்கள். கடைசியாகத்தான் அல்லாவிற்கு கொஞ்சம் ஞானம் வந்து,அவர் மதுபானத்தை தடை செய்துள்ளார்.

Maududi says that Sura 5 was revealed in the timeframe of AD 628 and 629, so it is a late sura (Muhammad dies of a fever in AD 632). It lays down rules for a growing community after the Treaty of Hudaybiyah in AD 628 in which Muslims were promised a free and unmolested pilgrimage to Mecca a year later, which took place. So it was important for Muslims to prepare themselves and to give up all intoxicants. Hence, these two verses came down from Allah:

5:90 You who believe, intoxicants and gambling, idolatrous practices, and [divining with] arrows are repugnant acts—Satan's doing: shun them so that you may prosper. 91 With intoxicants and gambling, Satan seeks only to incite enmity and hatred among you, and to stop you remembering God and prayer. Will you not give them up?

Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm Formats mine


நான் இதோடு என் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி: அல்லா முகமது மூலமாக தன் வசனங்களை 18 வருடங்கள் இறக்கும் போது கூட முஸ்லீம்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள், அதுவும் போதையில்லாத திராட்சை இரசமல்ல, போதையுள்ள ரசத்தை குடித்தார்கள்.

அதாவது கி.பி. 628-29 என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு அல்லா இதன் தடை விதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

ஆனால், எம். எம். அக்பர் அவர்கள் எப்படி இயேசு போதையுண்டாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார்?

உங்கள் அல்லா தான் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் என்றுச் சொல்லும் நீங்கள், அவர் மதுபானத்தை தடை செய்தது முகமதுவின் கடைசி காலத்தில் அல்லவா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் குடிக்க அனுமதி அல்லா கொடுத்துள்ளார் என்று தான் பொருள் அல்லவா?

ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், புதிய ஏற்பாடு மதுபானத்தை ஏற்கனவே தடை செய்துவிட்டது. அப்படியானால், மதுபானம் தீமை என்பதை அல்லா தெரிந்துக்கொள்வதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் தேவன் அதை தடை செய்துள்ளாருங்கோ...


இந்த கட்டுரையை நான் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளேன், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்கள் எனக்கு கேள்விகள் கேட்டாலோ, மறுப்பு எழுதினாலோ, பதில் எழுதினாலோ, அப்போது விவரமாக இஸ்லாமும் மதுபானமும் என்ற பொருளில் எழுத முயற்சிப்பேன்.. இஸ்லாமிய அறிஞர்களே, எம். எம். அக்பர் அவர்களே, இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி தன் சிடர்களுக்கு குடிக்கவில்லை, இயேசுவின் சீடர்கள் யாரும் குடித்துவிட்டு, போதையுடன் ஜெபிக்கவில்லை. மற்றும் அது போதை தரும் ரசமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு விவரம், உங்கள் குர்‍ஆனில் அல்லா மதுபானம் தடை செய்தது உண்மையானால், இயேசுவின் காலத்தில் உள்ள மக்கள் அதை உண்பதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு காரணம் அல்லா தானே. இனி எந்த குற்றச்சாட்டையும் பைபிள் மீது வைக்கும் போது, முதலாவது உங்கள் குர்‍ஆனில் அது பற்றி என்ன சொல்லியுள்ளது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொண்டு எழுதினால்... உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும், எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இஸ்லாமில் மதுபானம் பற்றி மேலும் அறிய விரும்பினால், கீழ்கணட தொடுப்புகளில் படிக்கலாம்:


1. Muhammad, the Quran, and Prohibition(Islam's punishments for drinking and gambling)

2. Qur'an Contradiction: Fully Detailed Or Incomplete? E.g., The Statements On Wine

3. Islam And Wine Consumption Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

4. Wine: Allah's Provision or Shaitan's Abomination?

5. WINE IN ISLAM



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


5. காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?


 
 

July 29, 2008

அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் சுவையான‌ உரையாடல்(பாகம் - 3)

[அப்துல்லாவும் அப்ரஹாமும் நெருங்கிய நண்பர்கள், இவர்கள் அடிக்கடி தங்கள் மார்க்க விவரங்களைப் பற்றி பேசுக்கொள்வதுண்டு. இப்படி இவர்கள் பேசிய ஒரு உரையாடலே இந்தக் கட்டுரை. அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு இரவு 9 மணிக்கு போன் செய்து பேசுகிறார்.]
 
அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்

கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா

பாகம் - 3


 

அப்துல்லா: ஹலோ, அப்ரஹாம் எப்படி இருக்கே?

அப்ரஹாம்: ஹலோ, அப்துல்லாவா, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே, என்ன இந்த சமயத்திலே போன் செய்யரே?

அப்துல்லா: ஒன்னுமில்லே, ஒரு கட்டுரையை படிச்சேன், அதைப் பற்றி உன் கருத்து என்ன என்று கேட்கலாம் என்று தான் போன் செய்தேன்.

அப்ரஹாம்: அப்படியா, சொல்லுடா, என்ன கட்டுரை, எதைப் பற்றியது?

அப்துல்லா: நீ அந்த கட்டுரையில் எழுதியிருப்பதை படித்தால், அவ்வளவு தான் ஆடிப்போயிடுவே.

அப்ரஹாம்: அப்படி என்னடா, அந்த கட்டுரையில் எழுதியிருக்கு, சீக்கிரம் சொல்லுடா, சஸ்பண்ஸ் வேண்டாம்.

அப்துல்லா: சரி, சொல்றேன் கேளு, கட்டுரையின் பெயர், திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு". இஸ்லாம் கல்வி என்ற தளம் அதை வெளியிட்டு இருக்கு, உனக்கு நான் நாளைக்கு அதை அனுப்புறேன், அதை படிச்சு, உன் பதில் என்ன என்று நீ சொல்லனும்.

அப்ரஹாம்: ஓஹோ, அந்தக் கட்டுரையா, நான் ஏற்கனவே, அதை படிச்சுட்டேனே. நேரம் கிடைக்கும் போது, உன்னோடு பேசலாம் என்று நினைத்தேன், நீயே கேட்டுட்டே.

அப்துல்லா: நல்லதாப் போச்சு, சரி சொல்லு, உன் கருத்து என்ன? அந்தக் கட்டுரையில் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டுள்ளது, மனிதர்கள் பைபிளின் வசனங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது? அல்லா யூதர்களுக்கு இறக்கிய வேதத்தை அவர்கள் மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது, அதைப்பற்றி நீ என்ன சொல்றே? உன்னால், இப்போதைக்கு ஏதாவது பதில் சொல்ல முடியுமா? இல்லே உனக்கு இன்னும் அவகாசம் தேவையா? சொல்லு சொல்லு பார்க்கலாம்.

அப்ரஹாம்: அப்போ, நான் பதில் சொல்லித்தான் ஆகனும் அப்படித்தானே?

அப்துல்லா: உன்னால் முடிந்தால்! பதில் சொல்லு பார்க்கலாம்.
அப்ரஹாம்: சரி, நான் பதில் சொல்கிறேன், அதற்கு முன்பு ஒரு கதை சொல்றேன் கேளு, பிறகு அந்த கதையின் அடிப்படையில் நான் சில கேள்விகளை நான் கேட்பேன், நீ பதில் சொல்லு, அந்த பதிலில் தான், இந்த கட்டுரைக்கு என் பதில் அடங்கியிருக்கு. என்ன கதையை ஆரம்பிக்கட்டுமா?
அப்துல்லா: என்ன எப்போ பாத்தாலும், கதை, எடுத்துக்காட்டு என்று சொல்றே. சரி, சொல்லு கேட்கிறேன்.

அப்ரஹாம்: கவனமாக கேட்கனும், கடைசியில் நான் கேள்வி கேட்பேன். ஒரு ஊரிலே ஒரு இராஜா இருந்தான், அவன் மிகவும் அறிவாளி, அவனைப்போல உலகத்தில் வேறு யாரும் அவ்வளவு அறிவாளி கிடையாது. அவருக்கு பல இலட்ச போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவன் தன் கோட்டையைச் சுற்றி தண்ணீர் விட்டு, முதலைகளை அதில் விட்டுவைப்பான், யார் வந்தாலும் சரி, முதலைகள் திண்றுவிடும். அந்த கோட்டைக்குள்ளே போகனும் என்றால், ஒரே வாசல் தான், அந்த வாசலின் முன்பும், பின்பும் பல நூறு காவலாளிகள் 24 மணி நேரமும் காவல் காப்பார்கள்.

அப்துல்லா: சரிடா, சீக்கிரமாக விஷயத்துக்கு வா

அப்ரஹாம்: இதோ வரேன்.அந்த இராஜாவிற்கு உள்ள ஒரு வினோத சக்தி என்னவென்றால், தன்னை யார் எதிர்க்க வந்தாலும், அதை அவர் தன் சக்தியால் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய கோட்டைக்குள் எந்த ஒரு மனிதன் வரவேண்டுமானாலும், பல பரிசோதனைகள் செய்துவிட்டுத் தான் வரவேண்டும். மட்டுமல்ல, இராஜாவை எதிர்க்க, அல்லது கொல்லவதற்காக ஒரு வேளை யாராவது நல்லவர்கள் போல நடித்து உள்ளே வரமுடியாது, ஏனென்றால், மனதில் உள்ளதை அறியும் சக்தியும் அவருக்கு உள்ளது.

அப்துல்லா: ரொம்ப நல்லா இருக்கே, கண்டினியூ பண்ணு.

அப்ரஹாம்: அதாவது, எப்படி இறைவனுக்கு முன்பாக எதுவும் மறைக்கமுடியாதோ, இறைவனை தோற்கடிக்கமுடியாதோ அது போல, இந்த இராஜாவும். இந்த இராஜா ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் தன் சட்டங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார். மற்றும் அந்த சட்டப்புத்தகம், தன் அரண்மனையிலேயே தன்னிடமே வைத்துக்கொண்டு இருக்கிறார். மட்டுமல்ல, அந்த புத்தகத்தில் உள்ள விவரங்களை, மக்களுக்குச் சொல்லி, இவர் பெருமைப்பட்டுக்கொண்டு இருப்பார், மக்களும் இவரின் ஞானத்தை மெச்சிக்கொள்வார்கள். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகத்தை இந்த இராஜா தவிர மற்ற யார் தொட்டாலும், உடனே, அம்மனிதர், கல்லாக மாறிவிடுவார். இராஜாவின் அனுமதி இல்லாமல், யாரும் கோட்டைக்குள் வரமுடியாது, மற்றும் அப்புத்தகத்தை தொடவும் முடியாது. இராஜா அனுமதி கொடுத்தால், அப்புத்தகத்தை தொடலாம், படிக்கலாம்.

அப்துல்லா: அடேங்கப்பா! ரொம்ப வினோதமாக உள்ளதே. சரி, மேலே சொல்லு.

அப்ரஹாம்: இப்படி இருக்கும்போது, அந்த ஊரிலே இருக்கும், ஒரு ஏழை விவசாயிக்கு இந்த இராஜா மீது பொறாமை வந்தது. எப்படியாவது, அந்த கோட்டைக்குள் நிழைந்து, அவர் எழுதிய புத்தகத்தை கிழித்துவிட்டு வரவேண்டும் என்று இவரது ஆசை. இதற்காக, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இந்த ஏழை விவசாயி.

அப்துல்லா: அப்படியானால், இந்த திட்டத்தை அந்த இராஜா தெரிந்துக்கொண்டு இருப்பாரே?

அப்ரஹாம்: கண்டிப்பாக, இந்த விஷயம் இராஜாவிற்கு தெரியும், ஏனென்றால், இப்படிப்பட்ட வினோத சக்தி அந்த இராஜாவிற்கு இருக்கிறதே

அப்துல்லா: சரி, பிறகு என்ன ஆச்சு, அந்த ஏழை விவசாயி, எப்படி பலத்த பாதுகாப்பு உள்ள கோட்டைக்குள் நிழைந்தார், இராஜாவின் சட்ட புத்தகத்தை கிழித்தாரா இல்லையா? சொல்ல? சஸ்பண்ஸ் வேண்டாம், சீக்கிரம் சொல்லு.

அப்ரஹாம்: திடீரென்று ஒரு நாள், அந்த இராஜா ஒரு அறிக்கையிட்டார், அது என்னவென்றால், தன்னிடம் உள்ள புத்தகத்தை யாரோ ஒரு மனிதர் கிழித்துவிட்டு சென்று விட்டதாக சொன்னார். மக்கள் எல்லாம் அதிர்ந்துப்போனார்கள், ஆச்சரியப்பட்டார்கள்.

அப்துல்லா: நிறுத்து, அது எப்படி சாத்தியமாகும்? இந்த இராஜாவிற்கு தான் சகல அதிகாரமும், சக்தியும் பாதுகாப்பும் உண்டே, பின் எப்படி ஒரு மனிதன் நிழைந்து இராஜாவிற்கு தெரியாமல் அப்புத்தகத்தை கிழிக்கமுடியும், மட்டுமல்ல, இராஜாவின் அனுமதி இல்லாமல் அதை தொடுபவன் கல்லாக மாறிவிடுவானே? இது எப்படி முடியும்?

அப்ரஹாம்: ஆனால், அந்த இராஜா மிகவும் நம்பிக்கையாகச் சொல்கிறார், தன்னிடம் உள்ள சட்டபுத்தகம் கிழிக்கப்பட்டதாம். ஒரு மனிதன் கோட்டைக்குள் நுழைந்து இதைச் செய்தானாம். இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இராஜா பொய் கூட சொல்வதில்லை. எனவே, எல்லாருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி இருக்கும் போது, இது எப்படி சாத்தியம் சொல்லு?

அப்துல்லா: வாய்ப்பே இல்லை, NO CHANCE.

அப்ரஹாம்: என்னை பொருத்தவரையில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

அப்துல்லா: முட்டாள்தனமாக பேசாதே! இவ்வளவு திறமையுள்ள அரசனை ஏமாற்றி, கோட்டைக்குள் நிழைந்து செல்வது என்பது முடியாத காரியம். சரி, சொல்லு, என்ன வாய்ப்பு இருக்கு?

அப்ரஹாம்: நான் சொல்வதை கவனமாக கேளு. இதற்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

1) ஒரு ஏழை அல்லது தன்னைவிட பலவீனமானவன் தன் கோட்டைக்குள் நிழையும் போது, அதை அறிந்து இராஜாவே, அம்மனிதனை உள்ளே வர அனுமதி அளித்தால், அந்த மனிதன் உள்ளே வர வாய்ப்பு இருக்குமல்லவா? மற்றும் அந்த புத்தகத்தை தொட்டால் அம்மனிதன் கல்லாக மாறிவிடுவான், எனவே, இராஜாவே அந்த ஏழைமனிதனுக்கு தன் சட்டபுத்தகத்தை கிழிக்க அனுமதி அளித்தால், அந்த ஏழை அதை கிழிக்கலாம் அல்லவா?

ஆக, முதலாம் வாய்ப்பாக நான் சொல்லவருவது, அந்த இராஜாவே தன் சுயவிருப்பத்தின் படி தன் சட்டபுத்தகத்தை அந்த ஏழை விவசாயி கிழிக்க அனுமதி வழங்கி விட்டுக்கொடுப்பது தான். இப்படி விட்டுக்கொடுக்க வில்லையானால், காவலாளிகள் அவனை கோட்டையின் கதவுக்கு முன்பே அவனை கொன்று இருப்பார்கள், அப்படியே அவன் உள்ளே வந்தாலும், அப்புத்தகத்தை தொட்ட மாத்திரத்தில் கல்லாக மாறியிருப்பான்.

அப்துல்லா: இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது, தன் சக்தியை பிரயோகம் செய்யவில்லையானால், தான் அந்த பலவீனமான ஏழை விவசாயி இப்படிப்பட்ட செயலை செய்யமுடியும். சரி, இரண்டாவது வாய்ப்பு என்ன?

அப்ரஹாம்: இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால், அந்த ஏழை விவசாயி, அந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும், அதாவது, கோட்டைக்கு முன்பாக உள்ள பல நூறு பேரை கொன்றுப்போடும் சக்தி உடையவனாக அவன் இருக்கவேண்டும். மற்றும் உள்ளே செல்லும் வரையில் வரும் அனேக எதிர்ப்புக்களை சமாளித்து வெற்றியுள்ளவனாக அவன் இருக்கவேண்டும்.

இன்னும் அந்த புத்தகத்தை தொட்டால் கல்லாக மாறவேண்டும் என்ற இராஜாவின் சக்தியை மிஞ்சி, அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டு ஒரு புது சக்தியை பயன்படுத்தி அந்த சட்டபுத்தகத்தை கிழிக்கவேண்டும். அதாவது, இராஜாவின் சக்தியைவிட இந்த ஏழை விவசாயி சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: இதுவும் சரியாகத் தான் தோன்றுகிறது.

அப்ரஹாம்: அதாவது, இராஜாவிற்கு நான் சொன்ன தகுதிகள், சக்திகள் இருப்பது உண்மையானால், அந்த இராஜா, தன் புத்தகத்தை யாரோ கிழித்துவிட்டார்கள், என்றுச் சொன்னதும் உண்மையானால், இந்த இரண்டு வாய்ப்புக்கள் தவிர வேறு எந்த செயலாலும், இக்காரியத்தை செய்யமுடியாது? நீ என்ன நினைக்கிறே?

1) இராஜாவே தன் சுய விருப்பத்தின்படி தன் சட்டப்புத்தகம் கிழிக்கப்பட விட்டுக்கொடுக்கவேண்டும்

அல்லது

2) அந்த ஏழை இந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக, பலசாளியாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: சரி, இதை நான் அங்கீகரிக்கிறேன், இப்போ இந்த கதைக்கும், யூதர்களுக்கு அல்லா இறக்கிய வேதங்களை மனிதர்கள் மாற்றினார்கள் என்று நாங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்? கொஞ்சம் விவரமாகச் சொல்லு?

அப்ரஹாம்: சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லு. குர்‍ஆனை இறக்கியது யாரு?

அப்துல்லா: அல்லா தான் குர்‍ஆனை இறக்கினார்.

அப்ரஹாம்: குர்‍ஆனை யாராவது மாற்ற முடியுமா?

அப்துல்லா: முடியவே, முடியாது, குர்‍ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார், அவரே பொருப்பேற்று உள்ளார், எனவே, மனிதனால் எந்த ஆபத்தும் வராது?

அப்ரஹாம்: ஏன் மனிதனால் முடியாது?

அப்துல்லா: ஏனென்றால், மனிதனை விட அல்லா மிகவும் சக்தியானவர், மனிதன் ஒன்றும் செய்யமுடியாது

அப்ரஹாம்: சரி அடுத்த கேள்விக்கு வருகிறேன். முந்தைய வேதங்கள் என்று குர்‍ஆன் சொல்லும் வேதங்களை யார் இறக்கியது?

அப்துல்லா: முந்தைய வேதங்களை இறக்கியது அல்லா தான்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும்,
இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(இன்னும் பார்க்க‌ குர்-ஆன் 2:4, 2:285)


அப்ரஹாம்: அல்லா இறக்கிய முந்தைய வேதங்களில் அல்லா என்ன சொல்லியிருந்தார்?

அப்துல்லா: முந்தைய வேதங்களில் நேர் வழியும், ஒளியும், நல்லுபதேசங்களும் இருந்தன மற்றும் அது நேர் வழிகாட்டியாகவும் இருந்தது. இதில் எந்த சந்தேகமுமில்லை.

குர்-ஆன் 5:44 நிச்சயமாக
நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக
நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்;
அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
(குர்-ஆன் 5:44, 21:105, & 5:46 )

அப்ரஹாம்: சரி, ரொம்ப சந்தோஷம், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் இப்போது அப்படியே உள்ளதா? அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டதா?

அப்துல்லா: முந்தைய வேதங்களின் வசனங்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டதாக அல்லா தெள்ளத்தெளிவாகச் சொல்கிறான். இதோ அந்த வசனம், குர்-ஆன் 5:41.

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்.
மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)


அப்ரஹாம்: ஆக, அல்லா இறக்கிய வேதத்தை மனிதர்கள் மாற்றினார்கள், அப்படித்தானே?

அப்துல்லா: அப்படித்தான், இதில் துளியளவும் சந்தேகமில்லை.

அப்ரஹாம்: குர்‍ஆனில் சொல்லப்பட்டதை அப்படியே முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? அதாவது, குர்‍ஆன் வசனம் சொல்வது உண்மைத் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அப்துல்லா: 100 சதவிகிதம் நம்புகிறோம், குர்‍ஆனின் வசனங்கள் உண்மை, அதில் சொல்லப்பட்ட விவரங்களும் உண்மைத் தான்.

அப்ரஹாம்: இப்போது, நான் உனக்கு இதற்கு முன்னால் சொன்ன அந்த இராஜாவின் கதையோடு இந்த விவரங்களை சம்மந்தப்படுத்தி சில கேள்விகள் கேட்கிறேன். அல்லா சக்தியுள்ளவரா?

அப்துல்லா: ஆமாம்.

அப்ரஹாம்: அப்படியானால், அந்த இராஜாவைப் போல அல்லாவும் சக்தியுள்ளவர், அதாவது அந்த இராஜாவை விட வல்லமையுள்ளவர்.
இப்பொழுது நான் சொன்ன கதைக்கும், அல்லாவின் அறிக்கைக்கும் உள்ள சம்மந்தத்தைச் சொல்கிறேன் கேள்.

நான் இந்த கதையில் சொன்ன இராஜா தான் "அல்லா".
அந்த இராஜாவின் சட்டபுத்தகமே அல்லா இறக்கிய‌ முந்தைய வேதங்கள்.
அந்த ஏழை விவசாயி தான், யூதர்களும், கிறிஸ்தவர்களும்.

அந்த இராஜா சொன்னது போலவே, அல்லாவும் குர்‍ஆனில், என் முந்தைய வேதங்களை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்கிறார்.

இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

அல்லாவின் வேதங்களை மண்ணுக்கு சமமான மனிதர்கள் திருத்தவேண்டுமானால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலாவதாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாவை விட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் அல்லாவே இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்தமுடியும். ஒரு பலவானை கட்டி அவனை செயலிழக்க செய்யாமல் எப்படி ஒரு பலவினமானவன் அந்த பலவானுடைய வீட்டில் உள்ள பொருளை திருடமுடியும்?

இரண்டாவதாக‌, மனிதர்கள் தன் வேதத்தை திருத்த தானே அனுமதி அளித்து இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், குர்‍ஆனை எப்படி அல்லா பாதுகாத்தாரோ அப்படி முந்தைய வேதங்களை அல்லா பாதுகாக்கவில்லை.


என்ன அப்துல்லா கேட்டுக்கொண்டு இருக்கிறாயா?


அப்துல்லா: சொல்லு, கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அப்ரஹாம்: ஆகா, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று குர்‍ஆன் சொல்வதால், இரண்டு குற்றச்சாட்டை நான் அல்லாவின் மீது வைக்கிறேன்.

a) அல்லா மிகவும் பலவீனமானவர், அதாவது சக்தியில்லாதவர், தன் படைப்பின் மீது வல்லமை இல்லாதவர், அதனால், தான் மனிதர்கள் திருத்தும் போது, தடுக்க திராணியில்லாமல், கையாளாகாதவராக இருந்துவிட்டார்.

b) அப்படி இலலை, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம், அல்லாவிற்கு சக்தி இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொன்னால், அல்லா வேண்டுமென்றே மக்கள் தன் வேதத்தை திருத்த அனுமதி அளித்துள்ளார்? மட்டுமல்ல, தன் முந்தைய வேத்ததை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளிக்கும் போது, குர்‍ஆனை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளித்து இருக்கமாட்டார் என்று எப்படி நம்புவது?

நண்பா, அப்துல்லாவே, உனக்கு நான் இரண்டு தெரிவுகளை தருகிறேன், நீ ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1) முதலாவது, அல்லா பலவீனமானவர், சக்தியற்றவர். ம‌ற்றும் யூத‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் அல்லாவை விட‌ ச‌க்தியுள்ள‌வ‌ர்க‌ள்.

அல்ல‌து

2) அல்லா ஒரு அநீதிக்கார‌ர், அநியாய‌க்கார‌ர், அவ‌ரிட‌ம் நீதி நியாய‌ம் இல்லை, த‌ன் முந்தைய‌ வேத‌த்தை அழிக்க‌விட்டு, பிந்தைய‌ வேத‌த்தை பாதுகாக்கிறார்.


இதில் நீ எதை தெரிந்தெடுத்தாலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சனையும் இல்லை.

ஒரு வேளை, இரண்டாவது தெரிவை நீ தெரிந்தெடுத்தால், இன்னும் ஒரு பிரச்சனை முளைக்கும், அதாவது, தன் முந்தைய வேதம் அழிக்க அனுமதி அளித்த ஒரு இறைவனிடம், அதாவது அல்லாவிடம் எப்படி நாம் நியாயம் நீதியை எதிர்ப்பார்ப்பது, அதே நேரத்தில், குர்‍ஆனை அவர் பாதுகாத்தார் என்று எப்படி நம்பமுடியும்? இதையும் அவர் திருத்தப்பட அனுமதி அளித்து இருக்கலாம் அல்லவா?

அந்த இராஜாவின் கதைக்கும் அல்லாவின் கதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான்.
உன் பதில் என்ன சொல்லு?



அப்துல்லா: ....

அப்ரஹாம்: என்ன சத்தத்தை காணோம்

அப்துல்லா: இல்லே, இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயம் தான். யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

அப்ரஹாம்: நீ யோசித்து முடிவு சொல்லு பரவாயில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் அப்துல்லா, அது என்னவென்றால், உன்னைப்போல யார் யாரெல்லாம் முந்தைய வேதங்களை மனிதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று பொய்யான தகவலைச் சொல்வார்களோ, அவர்கள் முதலாவது இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

அல்லாவிற்கு சக்தியில்லையா அல்லது அவர் ஒரு அநியாயக்காரரா? சொல்லுங்கள்.

அவரே அனுமதி அளித்துவிட்டு, அவரே இப்போது மனிதர்கள் மீது குற்றப்படுத்தினால், நாங்கள் என்ன காதில் காலிப்பிளவர் பூவா வைத்துள்ளோம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டு தலை ஆட்டுவதற்கு?

முதல்லே, இறைவன் கொடுத்துள்ள மூளையை பயன்படுத்தி கொஞ்சம் யோசித்துப் பாரு. அந்த இராஜாவின் செயல்களைப் பார்த்தால், உனக்கு என்ன தோனுது, அவன் ஒரு பொய்யன் அல்லது அநியாயக்காரன். அது போல, குர்‍ஆன் வசனங்களின் படி அல்லா ஒரு பொய்யான் அல்லது அநியாயக்காரன். ஏன் பொய்யன் என்றுச் சொல்கிறேன், தனக்கு சக்தி இல்லாதிருந்தும், தான் ஒரு பலசாளி என்று சொல்லிக்கொண்டான் அல்லவா அந்த இராஜா, அப்படியானால், அந்த இராஜா(அல்லா) பொய்யன் தானே. இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாயானால், அவர் ஒரு அநியாயக்காரர், தானே அழிக்கவிட்டு, தானே இப்போது ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்.

அப்துல்லா: அல்லா பொய்யனும் இல்லை மற்றும் அநியாயக்காரரும் இல்லை. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அப்ரஹாம்: அப்படியில்லையானால், இந்த அல்லாவின் பிரச்சனையை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் நீங்கள்.

அப்துல்லா: சரிடா, நான் உனக்கு நாளைக்கு போன் பண்றேன். இப்போ குட் நைட்.

அப்ரஹாம்: குட் நைட், பாய்.




அப்துல்லாவின் மற்றும் அப்ரஹாமின் இதர உரையாடல்கள்:

1. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 1( ஏன் அரபியில் மட்டும்.... )

2. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 2(குர்-ஆன் தொகுப்பு, அபுபக்கர் காலத்தில்...)


 

 

July 27, 2008

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்களா? (American=Christian?)

கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?

அல்லது

கிறிஸ்தவம் மேற்கு...கிழக்கு...வடக்கு ம‌ற்றும் தெற்கத்திய மார்க்கமாகும்!

Why Christianity is Western
Or
Christianity is Western ... And Eastern and Southern, and Northern!

உங்கள் மனதின் சிந்தனையை கிளறி, சிந்திக்க‌த் தூண்டும் சில‌ வரிக‌ளை நான் சொல்ல‌ட்டும்.

எல்லா யூதர்களும் பணக்காரர்கள்

எல்லா கருப்பின மக்களும் நல்ல விளையாட்டு வீரர்கள்

எல்லா பிரன்சுக்காரர்களும் க‌ரடுமுரடானவர்கள்

எல்லா மெக்ஸிக்கோகாரர்களும் சோம்பலானவர்கள்

எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள்


இப்படிப்பட்ட சுருக்கமான, சுலபமான வார்த்தைகளைத் தான் மக்கள் கலாச்சாரத்தை விவரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவைகள் தவறானவைகளாக இருக்கின்றது. எனக்குத் தெரியும், பல பணக்கார யூதர்கள் இருப்பது உண்மை தான், பிரன்சுக்காரர்களில் சிலர் கரடுமுரடானவர்கள் இருப்பதும் உண்மை தான், மற்றும் சோம்பளுள்ள மெக்ஸிக்கோகாரகள் இருப்பதும் உண்மை தான். அதே போல, கருப்பர்களில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், மற்றும் சில அரபியர்கள் தீவிரவாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நாட்டிற்கும், இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பொதுவான பெயரைத் தருவது சரியானதல்ல. பல‌வித்தியாசமான கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதவர்களும், தெரியாத விவரங்களைப் பற்றி தெரிந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறவர்கள் சொல்லும் வார்த்தைக‌ள் தான் இந்த‌ வ‌ரிக‌ளாகும். உண்மையில் அவ‌ர்க‌ள் த‌வறாக‌ புரிந்துக் கொண்டுள்ளார்க‌ள். இன்னொரு முக்கிய‌மான‌ வ‌ரியைச் சொல்கிறேன்.

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள்.

நான் ஒரு அமெரிக்க பிரஜையாகவும், அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவளாக‌னாகவும் இருப்பதினால், மேலே சொல்லப்பட்ட வரியும் உண்மைக்கு முரணாக உள்ளதென்பதை நான் நிச்சயமாக சொல்லமுடியும். நான் சொல்வதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால், "கிறிஸ்தவன்" என்றால் என்ன பொருள் என்று அமெரிக்காவிற்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.

ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள் மத கொடுமைகளிலிருந்து தப்பித்து இந்த அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள் என்றும் இப்படிப்பட்ட மக்களால் தான் இந்த அமெரிக்க நாடு உருவாக்கப்பட்டது என்றும் நம் எல்லாருக்கும் தெரியும். (இதே "கிறிஸ்தவ" மனப்பான்மை தான் குருசேடர்கள் என்ற பெயரில் முஸ்லீம்களை கொன்றது, ஆனால், தங்களுக்கு இதே பிரச்சனை வரும்போது, அதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - the same "Christian" mentality that slaughtered Muslims during the Crusades turned its attention to others of which it didn't approve!), நம்முடைய சுதந்திரமும் மற்றும் சட்டங்களும் பைபிளில் அவர்கள் கண்ட சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சுதந்திரத்தில் ஒரு சுதந்திரம் தான், நம் சமய கோட்பாடுகளுக்கேற்ப நமக்கு விருப்பமான இறைவனை நாம் வணங்கவும் அல்லது வணங்காமல் இருக்கவும் கொடுக்கபப்டும் சுதந்திரம். இக்காரணங்களை முன்னிட்டு, மக்கள் பாதுகாப்பாகவும் மற்றும் சுயஅதிகாரம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக‌, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசாங்கம் குறைவான அதிகாரங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே சமயத்தில் தேவைப்படும் போது சட்டம் மீறப்படும் சமயங்களில், அதே அரசாங்கம் தன் நீதித்துறையின் அதிகாரத்தின் மூலமாக மக்களை பாதுகாக்கிறது.

இன்னுமுள்ள சுதந்திரங்களில் குறிப்பிடத்தக்கது, அரசாங்கம் மக்களை அநியாயமாக கொடுமைபடுத்தக் கூடாது என்ற சுதந்திரமாகும்.

இந்த சுதந்திரங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சரித்திர பூர்வமாக உள்ள ஒரு கலவை உருவாக உதவுகின்றன, அது என்னவென்றால், வித்தியாசமான பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருமித்து வாழ கற்றுக்கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழும் கலவையாகும். ஒருவன் நீங்கள் நம்புவதை நம்பாமல் வேறு ஒன்றை நம்புகின்றார் என்பதற்காக சட்டத்தை பயன்படுத்தி அவனை கொடுமைப்படுத்தக்கூடாது. இந்த சுதந்திரத்தை மக்கள் சரியாக பின்பற்றவில்லையானாலும், இந்த சுதந்திரத்தின் அடித்தளம் நேரடியாக தேவனின் யோசனையிலிருந்து வந்ததாகும், "யூதனென்றும் கிரேக்கன் என்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனன் என்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை" நீங்கள் எல்லாரும் அவருடைய பார்வையில் சமமாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).

எப்ப‌டியாயினும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் உருவான‌ நாட்க‌ள் முத‌ற் கொண்டு, ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌, ம‌ற்றும் ந‌ம் சுத‌ந்திர‌ங்க‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் சிறிது சிறிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ ம‌ற்றும் அல‌ட்சிய‌ம் செய்ய‌ப்பட்டுள்ள‌ன‌. ந‌ம்முடைய‌ நாடு கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுக‌ளின் மீது உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை கூட‌ ம‌க்க‌ள் ச‌ரியாக‌ தெரிந்துக் கொள்ளாம‌ல் இருக்கிறார்க‌ள். இது ம‌ட்டுமா, குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ "கிறிஸ்த‌வ‌ அடிப்ப‌டை கோட்பாடுக‌ள்" என்றால் என்ன‌ என்ப‌தையும் தெரிந்துக் கொள்ளாம‌ல், "கிறிஸ்த‌வ‌ன்" என்றால் ஒரு கலாச்சார‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தையாக‌ க‌ருதிக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஒருவ‌னின் பெற்றோர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால், அவ‌ன் கூட ஒரு கிறிஸ்த‌வ‌ன், ச‌ரியா? என்று கேட்டால், பதில் தவறு என்பதாகும்.

இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள், கிறிஸ்தவத்தை நாட்டின் அங்கீகரிக்கபப்ட்ட மதமாக ஆக்கியிருந்தாலும், நாம் குழப்பமடையத் தேவையில்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு முக்கியமான அடிப்படை கோட்பாடு என்னவென்றால், இறைவனை நம்பும் படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாகும். தேவன் அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் பக்கம் நீங்கள் உங்கள் சுய விருப்பத்தின் படி திரும்ப வேண்டும் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள் அவர்களால் முடிந்த ஒன்றை செய்து விட்டு சென்றுள்ளார்கள், அது என்னவென்றால், இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு எதிர் காலத்தில் வரும் ஒவ்வொரு சந்ததியும் பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள் (So our founders did the only thing they could—they left the question of faith to be answered by each succeeding generation).

ஆகையால், நம் நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு நாமே பொறுப்பு வகிப்பதையே சுதந்திரம் என்கின்றோம். துரதிஷ்டமாக, மக்கள் இயேசுவின் போதனைகளை நம்புவதைக் காட்டிலும், எதையும் நம்பாமல் இருப்பது மிகவும் சுலபம் என்று எண்ணி விடுகின்றனர். இதைவிட மிகவும் கொடூரமானது என்னவென்றால், மக்கள் தங்களுக்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள போதகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால், தங்கள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுத்தும் போதகத்தை தள்ளி விடுகின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மைத் தான் "கிறிஸ்தவன்" என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை மறைக்கச் செய்கிறது. "கிறிஸ்தவன்" என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்றால், அவன் "கிறிஸ்தவ" பெற்றோருக்கு பிறந்தவனாக இருக்கலாம், அல்லது "சரியான ஒன்றைச் செய்கிறவனாக" இருக்கவேண்டும் . நீங்கள் மற்றவர்களை சரியாக நேர்மையாக நடத்தவிரும்பினால், அவர்களை சபிக்காதீர்கள், அல்லது அவர்களை மது அருந்தச் செய்யாதீர்கள், இப்படி நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் கிறிஸ்தவராக நடந்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். இன்று நாம் பொதுவாக‌ "கிறிஸ்தவம்" என்ற வார்த்தைக்கு கொடுக்கும் பொருளில், அன்று இயேசு வாழவில்லை. இன்றுள்ள கிறிஸ்தவம் என்ற வார்த்தையின் பொருளுக்குள் அவரை நாம் அடைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளை மிகவும் ஆர்வத்துடன் நம்புகின்ற எங்களைப் பற்றி இப்போது நீங்கள் கற்பனை செய்துப் பார்க்க முடியும். நாம் நம் அயலகத்தாருடன் நம் நம்பிக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பாக சில பழக்கப்பட்ட வார்த்தைகளின் உண்மை பொருள் என்ன என்பதை வகையறுக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், "சர்ச் அல்லது கிறிஸ்தவ சபை" என்ற வார்த்தையும் தன் முழு அர்த்தத்தை இழந்து விட்டது எனலாம். இப்போது இவ்வார்த்தைக்கு "இயேசுவின் சரீரம்" என்று பொருள் இல்லை, இதற்கு பதிலாக சர்ச் என்பது ஒரு கட்டிடம், அங்கே மத சம்மந்தப்பட்ட மக்கள் கூடுவார்கள் அல்லது ஆன்மீக உற்சாகம் உள்ளவர்கள் கூடும் ஒரு இடம் என்று பொருளாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்பம் நம்முடைய எல்லைக்குள் உள்ளவர்களிடையே இருக்கிறது, அப்படியானால், வேறு ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் புரிந்துக் கொள்ளவிலலை என்றுச் சொல்வதில் ஆச்சரியமில்லை.

[கீழ் கண்ட பத்தியை படிப்பதற்கு முன்பாக ஒரு சிறு தமிழாக்க‌ குறிப்பு: அமெரிக்காவில் சோப் ஆபுரா என்று ஒரு நாடகத்தை (மெகா சீரியல்) தொலைக் காட்சிகளில், வானொலிகளில் ஒளி(லி)பரப்புகிறார்கள். இந்த நாடகங்கள் பெரும்பான்மையாக உயர்மட்ட பணக்கார பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைக் கதை அல்லது நாவலாக தயாரித்து ஒளி(லி)பரப்புவார்கள். இந்நாடகங்களில் பெரும்பான்மையாக செக்ஸ் அல்லது உடலுறவு, மற்றும் கள்ளத் தொடர்புகளுள்ள உறவுகள்  பற்றிய கதைகள் தான் மேலோங்கி இருக்கும். இந்நாடகங்களைக் காணும் அமெரிக்கர் அல்லாத நாட்டு மக்கள், அமெரிக்காவின் வாழும் மக்களின் உண்மை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். மேலும் அறிய இங்கே Soap-Opera  சொடுக்கவும்.]

இப்படி மக்கள் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக் கொள்வதினால், பல திடுக்கிடும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு இது காரணமாகிவிடுகிறது. ஒரு முறை நான் துருக்கியில் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு முறை நானும் என் சிநேகிதியும் துருக்கி நாட்டுக்கு பிரயாணப்பட்டு இருந்தோம், துருக்கியில் சந்திக்கும் நபர்களிடம் நம் குடும்ப நபர்களின் புகைப்படங்களை கொண்டுச்சென்று காட்டும் படி எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. என்னோடு வந்த அந்த சிநேகிதி, தன் வீட்டில் விட்டுவந்த தன் நான்கு பிள்ளைகளின் புகைப் படங்களை தன்னோடு கூட கொண்டு வந்தாள், மற்றும் அவைகளை மற்றவர்களிடம் காட்டும் போது மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டே காட்டினாள். துருக்கியில் எங்களோடு வந்த வழிகாட்டி(மொழி பெயர்ப்பாளர்) எங்களிடம் "துருக்கி மக்களாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை தந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்" என்றுச் சொன்னபோது, நாங்கள் இருவரும் அதிர்ந்து போனோம்! இவர்கள் இப்படி கேட்பதற்கு, "சோப் ஆபுரா – Soap Opera" என்ற வானோலி மற்றும் தொலைக்காட்சி மெகா சீரியல் தான் காரணம். இந்த Soap Opera என்ற நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அமெரிக்காவில் உள்ள வாழ்க்கைப் பற்றி எதிர்மறையாக உலகமனைத்திற்கும் சொல்கின்ற பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் நாடகங்களை உலக மக்கள் கண்டு, இப்படித் தான் ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்க்கையும் கீழ் தரமாக‌ இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். என்னுடைய சிநேகிதி, துருக்கியிலுள்ள மற்ற புதிய சிநேகிதிகளுக்கு "என் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு தந்தை தான் இருக்கிறார் என்று" எடுத்துக்கூறினாள். ஆனால், எங்கள் உள்ளங்களில்  அந்த உரையாடல் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கி விட்டது. அதாவது, சோப் ஆபுரா = அமெரிக்கர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் = அமெரிக்கர்கள் என்றுச் சொன்னால், சோப் ஆபுராக்கள் = கிறிஸ்தவர்கள் என்று பொருளா! அப்படியானால், இவ்வுலத்திற்கு இயேசு கொண்டு வந்த சுவிசேஷத்தின் நற்செய்தி என்ன ஆவது?

அப்படியானால், இயேசு என்பவர் யார்? அவர் ஒரு வெள்ளைத் தோலோடு, நீல கண்களோடு கூடிய ஒரு மேற்கத்திய நாட்டவரா? ஆனால், என் பைபிள் சொல்கிறது, அவர் ஒரு யூதனாக பிறந்தார், அதனால், வெள்ளைத் தோலையும், நீலகண்களையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவர் அந்த இடங்களில் வாழ்கிற மக்களைப் போலவே இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் ஒரு யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் மற்றும் தன் முழு வாழ்க்கையையும்  இஸ்ரவேல் என்ற நாட்டிலேயே கழித்தார். அப்படியானால், மத்திய கிழக்கு யூத நாட்டை மையமாகக் கொண்ட‌ ஒரு மதம், எப்படி ஒரு மேற்கத்திய மார்க்கமாக கருதப்படுகிறது? (How could the religion that is centered on a Middle Eastern Jew came to be regarded as Western?)

இயேசுவின் போதனைகளில் முத்துக்களால் பதிக்கப்படவேண்டிய ஒரு போதனை என்னவென்றால், "இறைவனை நாம் உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக் கொள்ள வேண்டும்" என்பதாகும். அவருடைய இரட்சிப்பின் செய்தியானது நாடு மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லைகளைத் தாண்டி இறைவனிடம் திரும்பும் வாய்ப்பை பெறவேண்டும் என்ற நோக்கில் இறைவன் தன் இரட்சிப்பு திட்டத்தை உருவாக்கினார். முழு உலகமும் அவரை தொழுதுக் கொள்ள ஏற்ற இடமாகும்(இந்த இடத்தில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை); எல்லா மொழிகளும் தேவ ஆட்டுக் குட்டியாகிய இயேசுவை புகழ மற்றும் ஆராதிக்க தகுதியுடையது. நாம் வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான கலாச்சார மொழிகள் உள்ள சமுதாயங்களில் வாழுகின்றோம் என்று அவருக்குத் தெரியும், மற்றும் அவருடைய கிருபையின் சிங்காசனத்தை நெருங்க நம்மால் முடியும். ஆகையால், தேவன் ஒருவர் மட்டுமே, மனித வர்க்கம் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதால் மீட்பு அடைய முடியும் என்ற மிகவும் சுலபமான வழிமுறையை உருவாக்க முடியும்.

தற்போது, உலகத்தின் மற்ற பாகங்களை விட, மேற்கத்திய நாடுகளில் அதிக சதவிகித கிறிஸ்தவர்கள் இருப்பதாக நாம் காண முடியும். ஆனால், எப்போதும் இது போல‌ இருந்த‌தில்லை, எதிர் கால‌த்தில் இப்ப‌டியே இருக்க‌ப் போவ‌துமில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. நம்மில் ஒவ்வொருவரும் இப்படியே இருக்கப் போவதுமில்லை, மற்றும் சரித்திரமும் இன்று போலவே இருக்கப் போவதுமில்லை. கிறிஸ்தவம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கிற்கு பரவியதும், இறைவனின் திட்டங்களில் ஒன்று தான். இன்று அனேக ஆப்ரிக்க மக்கள் இயேசுவின் பெயரை பறைசாற்றுகிறார்கள். ஆசியாவில் இயேசுவின் சபை செழித் தோங்கிக் கொண்டு இருக்கின்றது (கொரியா தன் மிஷனரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி க்கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!). இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் உருவம் என்று இதுவரைஅச்சடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் உருவமானது கருப்பாக மாறும் மற்றும் அவருடைய கண்கள் பாதாம் கொட்டைகள் போல வண்ணத்தில் அச்சடிக்கப்படும். இப்படி இயேசுவின் உருவப் படத்தை மாற்றுவதினால், நற்செய்தியின் சாராம்சம் மாறாது, அது அப்படியே இருக்கும்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

மூலம்:  தமிழ் - அமெரிக்கர்=கிறிஸ்தவர்? | ஆங்கிலம் - American=Christian?




Isa Koran Home Page Back - Christianity Index
setstats1

July 26, 2008

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"



"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"

முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை   என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.


ChristianPaarvai said:
//

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//

Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.

உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.

எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.

//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//

7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?
நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?

நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது?  கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?


ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //


Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.

1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில்  கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.

2)  பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.

3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல,  என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன்.  உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.

4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.

 

ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //

 
Umar said:
 
என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா?  இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.

என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007)  நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:

-----------------

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.

Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710


நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?

இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.

எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
---------

ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //

Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு?  யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.

என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?

உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?

முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?

உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.

யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால்,  ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும்  கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.

ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //

Umar said:

எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார்  போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி.  இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?

எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?

ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு,  எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?


நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?

என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

//

Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? 

மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?

இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.

உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா?  வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.

நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும்  காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
 அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம். 

நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?

உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?

யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------

ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம்.  அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.


ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.

உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?

எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.

இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?
குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?
எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?

எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி  செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.
 
 

July 7, 2008

க‌ட‌வுளுடைய‌ சொந்த‌ நாடு கேர‌ளா!!!!!!!இனி????? (3)வீடியோ

கேரளாவில் நடந்த ஒரு ஹர்த்தாலில் நடந்த ஒரு அராஜகத்தைப் பாருங்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் அந்த சம்பவம் அப்படியே படம்பிடிக்கப்பட்டுள்ளது. பெண்களை மதிக்கிற கட்சியாம் அந்த கட்சி ஆனால் பெண்களை எப்படி நடத்துகிறார் என பாருங்கள். ஏதோ காமிராவில் பதிவானதினால் நமக்கு தெரியவருகிறது. பதிவு செய்யாத சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.... ம்ம்ம் ( நம்மால் ம் கொட்டத்தானே முடியும்..)

அழகு நிறைந்த இந்த கேரளம் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளால் அழிந்துவிடாமலிருக்க் நாம் இறைவனிடம் மன்றாடுவதைதவிர வேறுவழி யில்லை.

நன்றி.

க‌ட‌வுளுடைய‌ சொந்த‌ நாடு கேர‌ளா!!!!!!!இனி????? (2)

இதுதான் கடவுளுடைய சொந்த நாட்டில் நடந்த ஹர்த்தாலின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இவைகள் இவற்றிற்கு விளக்கம் தேவையில்லை எனகருதுகிறேன்
 

 

 

 

 

 

 

Next