அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 31, 2008

தான் சார்ந்திருக்கும் மதத்தைகாக்கப்பாடுபடும் எழில் சகோதரரே......அதுக்காக இப்படியா திரித்து கூறுவது????.




சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "
பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          
Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon
 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
  
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
 
     
Sis. Evangeline Paul
 
 
       Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.



http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html

அங்க ஆமையும் புகைபிடிக்குதுங்க(படத்துடன்) எல்லா உங்கல பாத்துதான்!!!!!!!!!!!!!!!

ஜிலின் : சீனாவின் வடகிழக்குப்பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக 'தம்' அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்ல பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக !!!!!! வைத்தாராம்.






















அது பிடித்துப்போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்பீதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பராண்டுமாம். அப்போது முதல் 'தம்' முக்கு அடமிஅயாகிவிட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.

http://www.dinakaran.com/daily/2008/mar/31/jannal.asp



பார்த்திங்களா கதையை ... உங்க பிள்ளைங்களும் இந்த மாதிரி பழக்கமெல்லாம்

பழகாம இருக்கனும்னா நீங்க முதல்ல அடிக்காம இருங்க. சரியா!!!!!!!! இல்லை ஆமை
கதைதான்

March 30, 2008

தற்கொலை எதற்கும் முடிவல்ல????? வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே!!!!!!

இன்றையதினம் பத்திரிக்கையை எடுத்து பார்ப்போமானால் அதில் தவறாமல் இடம்பிடிக்கும் செய்தி தற்கொலை செய்தியாகத்தான் இருக்கும். நளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகாக இப்படிப்பட்ட தற்கொலைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஏன் இப்படிப்பட்ட தற்கொலைகள் அதிகரிக்கிறது என்று இதைகுறித்து கொஞ்சம் யோசித்துபார்த்தேன் வலைதளங்களிலும் இதைக்குறித்ததான செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். தற்கொலை செய்துகொள்ளும் நபர் கூறும் பிரச்சனைகள் இன்று உலகில் எல்லோருக்கும் உள்ள பிரச்சனைகளாகாதான் இருக்கும் அப்படிப்பார்த்தால் உலகில் எல்லோருமே தற்கொலை செய்துகொள்ளவேண்டியது தான்.
 

 சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் தற்கொலை செய்துகொள்வதை நாம் பார்க்கிறோம். தேர்வில் தோற்றத்திற்காக, தேர்வில் காப்பி அடிக்கும்போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அவமானம் தாங்கமுடியாமல், ஹோம் வர்க் பண்ணவில்லையே என டீச்சர் திட்டினதிற்காக, காதல் தோல்வியினால் இப்படியே பலப்பல காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள்

இப்படி தற்கொலைகள் செய்துகொள்வதிற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் ஏழை முதல் பணக்காரன் வரைக்கும், பாமரன் முதல் படித்தவன் வரைக்கும் இப்படி இதில் எந்த ஏற்றதாழ்வும் இல்லாமல் இவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இதைக்குறித்து ஆராய்ந்த சில ஆராய்ச்சியாளர்களின் கருத்தை அறியாலாம்.

எமில் த‌ர்க்ஹெம் : ச‌முக‌ கலாசார‌ விஷ‌யங்க‌ளில் ஒட்டுத‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளிடையே த‌ற்கொலை அதிக‌மாக‌ இருப்ப‌தாக‌ சொல்லியுள்ளார்

சிக்ம‌ண்ட் பிராய்ட் : விரும்பிய‌‌வைக‌ளின் இரு வேறுநிலைக் குழ‌ப்ப‌ங்க‌ளின் விளைவாக‌ தாக்குத‌ல் ம‌ற்றும் கோப‌ உண‌ர்வுக‌ளைத் த‌ன்மேல் திருப்பிக்கொள்வ‌த‌ன் வெளிப்பாடுதான் த‌ற்கொலை என்கிறார்.

கார‌ண‌ங்க‌ள்:
 
குடிப்ப‌ழ‌க்க‌ம்:
த‌ற்கொலை செய்ப‌வ‌ர்க‌ளில் 5ல் ஒருவ‌ர் குடிப்ப‌ழ‌க்க‌திற்கு அடிமையான‌வாராக‌ உள்ளார். எனவே குடிப்ப‌ழ‌க்க‌த்திற்கும்  த‌ற்கொலைக்கும் நெருங்கிய‌ தொட‌ர்புள்ள‌து.

ம‌ன‌வருத்த‌ம்:
ம‌ன‌வ‌ருத்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ளின் உட‌லில் ஹைட்ராக் இண்டோல் அசிடிக் அமில‌த்தின் அள‌வு குறையும் போதும் த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள் அதிக‌மாக‌ தோன்றுகிற‌து. இதினால் த‌ற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணீக்கை அதிகம்

போதை ம‌ருந்துக‌ள்:
இதுவும் ஒரு கார‌ண‌மாக‌ க‌ருதுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுக்கு தேவைப்ப‌டும்நேர‌த்தில் போதை ம‌ருந்துக‌ள் கிடைக்காத‌ போது அது த‌ற்கொலைக்கு நேராக‌ ந‌ட‌த்துகிற‌து.

பொதுவான‌ கார‌ணிக‌ள்:
ம‌ன‌தைரிய‌ம் இல்லாமை, தாழ்வு ம‌ன‌ப்பான்மை, எதிர்கால‌த்தில் ந‌ம்பிக்கையில்லாமை, ம‌றுஜென்ம‌ ந‌ம்பிக்கை, பிற‌ர் சொல்லும் காரிய‌ங்க‌ளை அப்ப‌டியே ந‌ம்புவ‌து, த‌னிமையை உண‌ர்த‌ல், வாழ்க்கையில் ஒரு வெறுப்பு இப்ப‌டி ப‌ல‌கார‌ண‌ங்க‌ள் உண்டு
 
தீர்வு :
தற்கொலை செய்யும் மனநிலையுள்ளவர்கள் எதையும் எதிர்ம‌றையாக‌ பேசுவார்க‌ள். அடிக்க‌டி த‌ற்கொலையைப் ப‌ற்றி பேசுவார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ந‌ல்ல‌ ஆலோச‌னை சொல்லுங்க‌ள். முடிந்தால் ந‌ல்ல‌ ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் அழைத்துசெல்லுங்க‌ள்.

ந‌ம்பிக்கையுண்டும் புத்தக‌ங்க‌ளை ப‌டிக்க‌ சொல்லுங்க‌ள்..

த‌ற்கொலையினால் அல்ல‌து ஒருவ‌ரின் இழ‌ப்பினால் அவ‌ரை சார்ந்த‌ எத்த‌னைபேர் துன்ப‌ங்க‌ளை அனுப‌விக்கிறார்க‌ள் என்று இலைம‌றை காயாக‌ எடுத்து இய‌ம்புங்க‌ள்.

வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே. இருப்ப‌து ஒரே வாழ்வு. ம‌றுஜென்ம‌மென்று ஒன்று கிடையாது என‌ கூறுங்க‌ள். இருக்கும் இந்த‌ வாழ்க்கையில் நம்மால் இய‌ன்ற‌ உத‌விக‌ளை இந்த‌ ச‌முதாய‌த்துக்கு செய்ய‌வேண்டும் என‌ உற்சாக‌ப்ப‌டுத்துங்க‌ள்.

பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்டு ஒடுவ‌தை விட‌ எதிர் நீச்ச‌ல் போட்டு அதை எதிர் கொள்வ‌தே வாழ்க்கை என‌ உரைத்திடுவீர்.

தற்கொலைக்கு நேராக போய்கொண்டிருக்கிற நம் சகோதரர்களை சகோதரிகளை வாழ வைப்போம். நன்றி
 
வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே.....   வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே....  வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே....
 
 

இறுதியில் ஒரு ந‌ம்பிக்கையூட்டும் ஒரு வேத‌ வார்த்தை :

மத்தேயு 6:27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

விவேகானந்தரின் ஞான தீபம்

 

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

March 29, 2008

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?????? : ஒரு டிப்ஸ்

தத்துவ இயல் வகுப்பு நடத்துவதற்காக அத்துறை பேராசிரியர் சில பொருட்களுடன் வகுப்பறையில் நுழைந்தார்.

மாணவர்கள் முன்பாக தனது பாடத்தை நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் எதுவும் பேசாமல் தனது கையிலிருந்த கண்ணாடி ஜாடியில் சிறிய பந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அந்த ஜாடியை நிரப்ப ஆரம்பித்தார். அந்த ஜாடி நிறைய பந்துகளை போட்டபின் மானவர்களைப் பார்த்து, இந்த ஜாடி நிரம்பிவிட்டதா? என்று கேட்டார். மாணவர்கள் எல்லாரும் ஆம் என்றனர்.

அதன்பின்பு ஆசிரியர் சிறு சரளை கற்களை எடுத்து அந்த ஜாடியில் போட்டு அந்த ஜாடியை சற்றே குலுக்கினார். அப்போது அந்த சிறு கற்கல் பந்துகளுக்கிடையே உள்ள இடைவெளியுள்ள இடங்களில் சென்று இடத்தை நிரப்பியது.

அதன்பின்பு அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து, இப்போது இந்த ஜாடி நிரம்பிவிட்டதல்லவா? என்று கேட்டார். அப்போது மாணவர்கள் மொத்தமாக ஆம் என்றனர்.

அப்போது அவர் பொடிமணல் உள்ள ஒரு பையை எடுத்து அதை அந்த ஜாடியில் கொட்டினார்.அந்த மணல் எங்கும் இடைவெளியில்லாதவாறு எல்லா இடங்களையும் அடைத்துக் கொண்டு அந்த ஜாடியை நிரப்பியது. என்றாலும் அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா? என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒட்டுமொத்தமாக கோரசாக ஆம் நிரம்பிவிட்டது என்றன.

அப்போது அந்த ஆசிரியர் தனது மேஜையின் கீழே இருந்து இரண்டு கப் காபியை எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். அப்போது அந்த காபியானது மணலுக்கு இடையே உள்ள சிறு துவாரங்களையும் அடைத்து முழுவதுமாக அந்த ஜாடியை நிரப்பிற்று. இதைக் கண்ட எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தனர். அந்த சிரிப்பொலியின் மத்தியில் பேச ஆரம்பித்த அந்த ஆசிரியர்,இந்த கண்ணாடி ஜாடி உங்கள் வாழ்க்கையை விளக்கும் ஒரு உதாரணமாய் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறி தனது விளக்கத்தை தொடர்ந்தார்.


அந்த சிறு பந்துகள் - கடவுள்,உங்கள் குடும்பம், குழந்தைகள், உங்கள் தேக சுகம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது - மிகவும் முக்கியமானவை ஆகும். இவை மாத்திரம் உங்களிடம் இருக்குமென்றால் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் வாழமுடியும். வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

சிறு சரளைகற்கள் உங்கள் வாழ்க்கையிலுள்ள மற்ற காரியங்களான உங்கள் வேலை, உங்கள் வீடு மற்றும் உங்கள் கார் போன்ற சொத்துகளை குறிக்கிறது.

பொடிமணலானது உங்கள் வாழ்க்கையிலுள்ள லொட்டு லொசுக்கு காரியங்களான சின்ன சின்ன காரியங்களைக் குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் முதலிலேயே ஜாடியில் இந்த மணலை போட்டிருப்பீர்களெனில், சிறு பந்துகளையும் சரளை கற்களையும் போட இடம் இருந்திருக்காது.

இந்து போலத்தான் உங்கள் வாழ்க்கையும். நீங்கள் உங்கள் வாழ்வில் சின்ன சின்ன காரியங்களுக்கு உங்கள் நேரத்தையும் சக்தியயும் செலவழித்துக் கொண்டிருப்பீர்களெனில், முக்கியமான காரியங்களுக்கு உங்கள் வாழ்வில் இடமில்லாமல் போய்விடும்.ஆகவே உங்கள் மகிழ்ச்சிக்கு தேவையான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள். கடவுளோடு நேரம் செலவழியுங்கள், குழந்தைகளோடு விளையாடுங்கள். உங்கள் மனைவி அலது குடும்பத்தாரோடு நேரம் செலவழித்து அவர்களோடு வெளியே செல்லுங்கள். உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்ற எப்போதுமே நேரம் இருக்கட்டும்.

மிக மிக முக்கியமான காரியம் என்னவெனில் பந்துகளால்(அதாவது முக்கியமானவைகளால்) முதலில் நிரப்ப வேண்டும். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாம் எளிதாகிவிடும் என்று கூறி தனது விளக்கத்தை முடித்தார்.

அப்போது ஒரு மாணவன் தனது கையை உயர்த்தி,
அப்படியானால் காபி எதைக் குறிக்கிறது? என்று கேட்டார். அப்போது புன்னகைத்த அந்த பேராசிரியர் அந்த மாணவரைப் பார்த்து நீ இந்த கேள்வியை கேட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் எவ்வளவுதான் அலுவல்கள் நிறைந்திருந்தாலும் உன் நண்பனோடு அமர்ந்து காபி குடிப்பதற்கும் நேரமும் இடமும் இருக்கிறது என்பதைத்தான் காபி குறிக்கிறது என்றார் அந்த பேராசிரியர்.
 
Arputham

உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2


 
ஏகத்துவத்திற்கு பதில்

உவமைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

எசேக்கியேல் 23  மறுவிசாரணை

முன்னுரை: சமீப காலமாக இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக கோபமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு சும்மா இருக்காமல், மற்றவர்கள் பதில்கள் தருவது தான். மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையை மற்றவர்கள் கொஞ்சம் புரட்டி கேள்விகள் கேட்டாலே போதும், அப்படியே கண்கள் சிவப்பாக மாறிவிடுகின்றது. முகமதுவின் மற்றும் அல்லாவின் ஆபாச விவரங்கள் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று, பைபிளில் உள்ள சில பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்துக்கொண்டு இது ஆபாசம், இது சரியா? இது வேதமா? என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, எசேக்கியேல் 23ம் அதிகாரத்தை குறிப்பிட்டு இது ஆபாசம் என்று சொன்னார்கள், நான் அதற்கு பதில் கொடுத்தேன் .

ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1

நான் இந்த பதிலில், தேவன் சமாரியா மற்றும் எருசலேம் என்ற இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக தேவன் பாவித்து, இவர்கள் தன்னைவிட்டு விக்கிரகங்களை வணங்குவதை வேசித்தனத்திற்கு ஒப்பிட்டு இவர்களுக்கு செய்தியை கொடுத்தார், இது உண்மையாக நடந்த கதை அல்ல, இது ஒரு உவமை, அதாவது நாடுகளை பெண்களாக கருதி இவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்கும் வண்ணமாக தேவன் வசனத்தை சொல்லியுள்ளார் என்றேன்.

இதற்கு ஏகத்துவ தள சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

"இல்லை இல்லை இது உவமை இல்லை, இதில் யாரையும் ஒப்பிடவில்லை, வசனங்களில் உவமை என்ற வார்த்தை வருகிறதா? பாருங்கள்"

என்று மறு கேள்வி கேட்டுள்ளார்.

[ஒரு விவரத்தைச் சொல்லும் போது, அதில் "உவமை" என்ற வார்த்தை வந்தால் தான் இவர் "அதில் சொல்லப்பட்டது உவமை" என்று ஏற்றுக்கொள்வாராம். இல்லையானால், அது உவமை இல்லை என்று அடித்துச் சொல்வாராம். என்னே அறிவு! என்னே புலமை! வாழ்க இப்ராஹிம்! வாழ்க இவரது புலமை!]

ஆனால், இதே கட்டுரையில் "முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு வந்தால், மிகவும் அழகான திடமான மார்ப்புகள் உள்ள பெண்களை தருவேன் என்று அல்லா சொன்ன வசனத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன்" அதைப்பற்றி இவர் மூச்சு விடவில்லை, ஏன்? ஏனென்றால், அல்லா இவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களை சொர்க்கத்தில் தருவது, உவமை இல்லை, பொய் இல்லை, அது உண்மை என்று இவருக்கு தெரியும். அதனால், அதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

சரி, இந்த கட்டுரையில்:

ஏகத்துவம் சொன்ன விவரம் சரியா?

எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக‌ தேவன் ஒப்பிடுகிறாரா இல்லையா?

இஸ்லாமியர்களின் ஆராய்ச்சியின் முடிவு சரியா?

இப்ராஹிம் அவர்களுக்கு உண்மைக்கும் உவமைக்கும் வித்தியாசம் தெரியுமா? இல்லையா? வேண்டுமென்றே இவர் இப்படி மாற்றிச் சொல்கிறாரா?


போன்றவைகளைக் காண்போம்.

இதோ ஏகத்துவம் இப்ராஹிம் அவர்கள் எழுதிய வரிகள்:



இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமம?ன பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?
.......
.......
மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?
......
......
இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.


Source:
http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html

1. எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சகோதரிகள் என்பது இரண்டு நாடுகள் ஆகும்.

நம் இஸ்லாமிய நண்பர் என்ன சொல்கிறார் என்றால், இந்த எசேக்கியேல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, உவமை கிடையாதாம், அதாவது இதில் வரும் இரண்டு சகோதரிகள் சமாரியாவிற்கும், எருசலேமுக்கும் ஒப்பிடப்படவில்லையாம். இவருக்கு "உவமை" என்ற வார்த்தை இருக்கனுமாம்.


எசேக்கியேல் 23:1 – 2:

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

இந்த வசனங்களில் வரும் "ஒரே தாய்" என்பது ஆபிரகாமின் மனைவி சாராளை குறிக்கும். அதாவது 12 வம்சங்கள் அனைத்தும் ஆபிரகாம் சாராள் என்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த தாய்க்கு பிறந்தவர்கள் இரண்டு குமாரத்திகள் என்றால் இரு நாடுகள், முதலில் இஸ்ரவேல் என்று ஒரே நாடாக‌ இருந்த 12 வம்சங்கள், இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, அதாவது 12 வம்சங்களில் 10 வம்சங்கள் இஸ்ரவேல் என்றும், 2 வம்சங்கள் யூதா என்றும் இரு நாடுகளாக சாலொமோனின் குமாரனுடைய காலத்தில் பிரிந்தது (1 இராஜாக்கள் 12ம் அதிகாரம்). சமாரியாவை தலைநகரமாகக் கொண்டு "இஸ்ரவேல் நாடும்", எருசலேமை தலைநகரமாகக் கொண்டு "யூதா நாடு" என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.


எசேக்கியேல் 23:4

அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

மூத்தவளின் பெயர் அகோலாள் : சமாரியா அதாவது இஸ்ரவேல் நாடு, இந்த நாட்டை மூத்தவள் என்று தேவன் சொல்கிறார், ஏனென்றால், இரு நாடுகளாக பிரிக்கப்படாமல் இருந்த போது, இஸ்ரவேல் என்று ஒரு நாடாகத்தான் இருந்தது, மற்றும் இந்த புதிய இஸ்ரவேலில் 10 வம்சங்கள் உள்ளன, மற்றும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது. அகோலாள் என்றால் "தன் வீடு அல்லது கூடாரம்" என்று பொருள். அதாவது, தேவனின் உடன்படிக்கை பெட்டி இருந்த இருந்தது இஸ்ரவேல் நாட்டில்.


4. Aholah--that is, "Her tent" (put for worship, as the first worship of God in Israel was in a tent or tabernacle), as contrasted with Aholibah, that is, "My tent in her." Source: Search Gods Word Commentary

அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்: இஸ்ரவேலிலிருந்து யூதா என்ற சிறிய நாடு இரண்டு வம்சங்களோடு தனியாக பிரிந்தது, அதனால், இளையவள் என்று தேவன் சொல்கிறார். அகோலிபாள் என்றால், என் கூடாரம் அவளிடத்தில் உண்டு என்றுப் பொருள். அதாவது, எருசலேமில் தேவனுடைய ஆலையம் சாலொமோனால் கட்டப்பட்டு இருந்தது, அது இப்போது யூதா நாட்டின் தலைநகரமானது.

அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இந்த இரு நாடுகளோடும் மக்களோடும் தேவன் உடன்படிக்கை செய்துள்ளார், இவர்கள் தனக்கு சொந்தமான நாடுகள் என்று தேவன் சொல்கிறார், இந்த இரு நாடுகளில் உள்ள மக்களும் தன் பிள்ளைகள் என்று தேவன் சொல்கிறார்.

[இப்போது இஸ்லாமியர்களுக்கே உரித்தான முறையில் "தேவன் எப்படி ஒரு நாட்டை திருமணம் செய்துக்கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். அவர் எப்படி மக்களை பெறமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். எல்லாரும் சிரிப்பார்கள். "நாம் இந்தியர்கள், ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்" என்றுச் சொன்னால், எப்படி இது சாத்தியமாகும்? நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா? எப்படி இந்தியர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்றுக் கேட்டு, உங்கள் அறியாமையை உலகம் அறியும் படி செய்யவேண்டாம். மற்றும் இந்த வசனத்தில் தேவன் இந்த இரு சகோதரிகளை(நாடுகள்) தன் மனைவி அல்லது தன்னுடையவர்கள் என்றுச் சொல்வதால், "பார்த்தீர்களா, பைபிளில் உள்ள தேவனும் இரண்டு மனைவிகளை உடையவர் என்று சொல்கிறார், இப்படி இருந்தும், முஸ்லீம்கள் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அல்லா சொன்னதை போய் உலகம் குற்றம் பிடிக்கிறதே" என்று லாஜிக்காக பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசனம் பற்றி ஜாகிர் நாயக் அவர்களுக்கு தெரிந்தால், போதும் இதையும் தன் லாஜிக்கான பேச்சில் ஒரு பாயிண்டாக சேர்த்துக்கொள்வார்.]

தேவன் தனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் எஜமான் வேலைக்காரன் என்ற முறையில் சில உதாரணங்கள் சொல்வார், தான் ஒரு தோட்டக்காரன், தன் மக்கள் திராட்சை கொடிகள் என்றும், தான் ஒரு மேய்ப்பன் என்றும், மக்கள் தன் ஆடுகள் என்றும் சொல்லுவார், சில நேரங்கள் தான் கணவனாகவும், மக்கள் அனைவரும் மனைவியாகவும் சொல்லுவார், சில இடங்களில், நிலத்தை குத்தகைக்கு விட்டுச்சென்ற எஜமானனாகவும், குத்தகைக்கு பெற்றவர்கள் மக்களாகவும் கருதி பேசுவார். இதனை நாம் பைபிளில் பரவலாக காணலாம்.

அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்: இப்போது தான் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்துள்ளோம். அதாவது தான் சொன்ன இரு சகோதரிகள் இரு நாடுகளின் தலை நகரங்கள் என்று மிகவும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள், இப்ராஹிம் அவர்களே, இது இரு நாடுகளின் விழுந்துவிட்ட நிலையை விளக்கிய விவரங்களா அல்லது உண்மையில் இரு பெண்கள் இப்படி வேசித்தனம் செய்த நிகழ்ச்சியா?

ஏதாவது எழுதும் போது, நாம் எழுதும் வசனங்களில் உள்ள பின்னனி என்ன என்று தெரிந்துக்கொண்டு எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தீய வழிகளைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா? இல்லையா?

எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

இந்த வசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சொல்கிறார், நீ அவர்களுக்காக என்னோடு வழக்காட விரும்பினால், முதலில் இந்த இரு நாடுகளுக்கும் தன் தன் அருவருப்புக்களை தெரியப்படுத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டு, திருந்தும்படி சொல் என்கிறார். பொதுவாக, தீர்க்கதரிசிகள் மூலமாக மிகவும் கடுமையான தண்டனைகளை தேவன் சொல்லும் போது, அவர்கள் தங்கள் நாட்டிற்காக வேண்டிக்கொள்வார்கள், அப்படி வழக்காட வேண்டுமானால், முதலில் அவர்களை திருந்தச்சொல் என்று தேவன் சொல்கிறார்.

எசேக்கியேல் 23 : 37 – 39
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

அவர்கள் தங்கள் மக்களை விக்கிரகங்களுக்கு பலியிட்டு, தீக்கடக்க செய்து தங்கள் பிள்ளைகளை கொன்றார்கள் என்று தேவன் குற்றம் சாட்டுகிறார். பிள்ளைகளை பலியிடுவது தேவன் விரும்புவது இல்லை. தேவனின் ஆலயத்திலும் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்கிறார்,

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது இரண்டு விதமான குற்றங்கள், அதாவது மற்ற நாடுகளோடு நட்புறவு வைத்துக்கொண்டது, அதே நேரத்தில் தேவனை மறந்து விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து பிள்ளைகளை கொன்றது.

Outline of Ezekiel 23


A history of the apostacy of God's people from him, and the aggravation thereof.

- In this parable, Samaria and Israel bbear the name Aholah, "her own tabernacle;" because the places of worship those kingdoms had, were of their own devising. Jerusalem and Judah bear the name of Aholibah, "my tabernacle is in her," because their temple was the place which God himself had chosen, to put his name there. The language and figures are according to those times. Will not such humbling representations of nature keep open perpetual repentance and sorrow in the soul, hiding pride from our eyes, and taking us from self-righteousness? Will it not also prompt the soul to look to God continually for grace, that by his Holy Spirit we may mortify the deeds of the body, and live in holy conversation and godliness?

Source :
Matthew Henry's Commentary

எசேக்கியேலில் 7 உவமைகள்:

நம் ஏகத்துவ தள இப்ராஹிம் அவர்கள், "இது உவமை இல்லை" என்று சாதிக்கிறார், ஆனால், எசேக்கியேல் 15ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் 7 வகையான உவமைகளால் மக்களை எச்சரித்துள்ளார், திருந்தவில்லையானால், தண்டனை நிச்சயம் என்று எச்சரித்துள்ளார். இந்த உவமைகளில் 6வது தான் 23ம் அதிகாரத்தில் உள்ளது. இந்த ஒவ்வொரு உவமையை பயன்படுத்தி தேவன் மக்களை எச்சரிக்க பல வசனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த உவமைகள் ஒருவரியில் சொல்லப்பட்ட உவமைகள் அல்ல, பல வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டுள்ளது.

உவமை 1: இஸ்ரவேல் என்னும் திராட்சைக்கொடி பிரயோஜனமற்றது (எசே 15:1-8)
Parable One -- Israel the Vine is Useless: 15:1-8

உவமை 2: இஸ்ரவேல் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி (எசே 16:1-63)
Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

உவமை 3: இரண்டு கழுகுகள் (நேபுகாத்நேச்சர் மற்றும் பார்வோன் அரசன்) (எசே 17:1-24)
Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

உவமை 4: மிகவும் வலிமையுள்ளதாக நினைத்த இரண்டு சிங்கங்கள்: (எசே 19:1-9)
Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

உவமை 5: காய்ந்து மடிந்துவிட்ட திராட்சைக்கொடி (எசே 19:10-14)
Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

உவமை 6: வேசித்தனம் செய்த சமாரியா எருசலேம் என்னும் இரண்டு சகோதரிகள், மற்றும் அவர்களுக்கு வந்த தண்டனை. எருசலேமை பாபிலோன் நாடும், சமாரியாவை அசீரியா நாடும் மேற்கொள்ளும்படி செய்வேன் என்று தணடனைகள் பிரகடனம். (எசே 23:1-49)
Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

உவமை 7: நகரம் பானையில் கொதிக்கும் தண்ணீரைப்போல தத்தளிக்கிறது
Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

From Bible.org:
எசேக்கியேல் 12ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் இந்த தீர்க்கதரிசி மூலமாக 5 அடையாளங்கள், 6 செய்திகள், மற்றும் 7 உவமைகள் மூலமாக தான் இஸ்ரவேல் மீது கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பை விவரிக்கிறார்.


3. Prophecies of Judgment through Five Signs, Six Sermons, and Seven Parables: Through an interchange of signs, sermons, and parables, the Lord has Ezekiel proclaim the varied nature of the coming judgment upon Jerusalem from Babylon because of the nation's sin 12:1--24:27

a. Sign One--Luggage through the hole in the Wall to Symbolize the Coming Exile: 12:1-6

b. Sign Two--Trembling While Eating to Show Impending Judgment: 12:17-18

c. Message One--The Lord Promises to Judge False Prophets for Their Lies: 13:1-23

d. Message Two--The Lord Will Judge the Elders for Their Idolatry: 14:1-11

e. Parable One-- Israel the Vine is Useless: 15:1-8

f. Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

g. Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

h. Message Three--Each Person Will Be Judged on the Basis of His Own Life, Not for the Sins of their Fathers:4 18:1-32

i. Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

j. Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

k. Message Four--A Review of Israel's Sinful History From Egypt to the Present: 20:1-44

l. Sign Three--Coming Judgment Is Pictured through Ezekiel's Sword and Groaning: 21:1-7

m. Message Five--A Sharpened Sword Will Certainly Come to the Nation: 21:8-17

n. Sign Four--A Signpost Which Shows Babylon the Way to Judah : 21:18-32

o. Message Six--Because of the Sin of the People in the City, Refining Judgment Will Come: 22:1-31

p. Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

q. Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

r. Sign Five--Ezekiel Is to Be Silent with the Death of His Wife to Foreshadow the Loss of the People in the City with the Coming Judgment: 24:15-27

Source:
Bible.Org Commentary

இதுவரை படித்தவர்கள் சிந்திக்கட்டும்: இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது நாடுகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட செய்தியா? உவமை என்ற வார்த்தை வந்தால் தான் அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா? "நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா? அல்லது நாட்டை குறிக்குமா? இதில் உவமை என்ற வார்த்தை வந்தால் தான் நாட்டை குறிக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா?

இவ்வளவு விளக்கியும் "இல்லை இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சி தான், இது ஒரு உவமை இல்லை என்றுச் சொல்வீர்களானால், அதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது". எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருகிறது.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது. (நீதிமொழிகள் 27:22)

முடிவுரை: சரி, என் முன் வைத்த கேள்விக்கு பதிலை அளித்துவிட்டேன். இப்போது இஸ்லாமியர்கள் தான் நான் இதற்கு முன்பு சொல்லியிருந்த விவரம் பற்றி விளக்கவேண்டும். அதாவது,

அல்லா முஸ்லீம்களுக்கு தன் சொர்க்கத்தில்:


கொடுக்கப்போகும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ஒவ்வொரு முஸ்லீமுக்கு எத்தனை பேர்களை அல்லா தருவார்?

சிலர் சொல்வார்கள், ஜிஹாதில் மரிப்பவர்களுக்கு மட்டும் தான் 70 பெண்களை தருவார், சாதாரணமாக மரிப்பவர்களுக்கு இரண்டு பேர் மட்டும் தான் என்பார்கள். இது உண்மையா?

அவர்கள் எப்படி திடமான மார்பகங்களை உடையவர்களாக இருப்பார்கள்?

அல்லா ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் ஏதாவது செய்வாரா?

ஏன் முஸ்லீம்களுக்கு 100 ஆண்களுடைய அந்த வலிமையை அல்லா தருவார்?

ஒரு குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் வாலிபன் மரித்துவிட்டால் அவனுக்கும் இந்த பாக்கியம் உண்டா?

சொர்க்கத்தில் இந்த பெண்களை அல்லா தருவது ஒரு உவமையா? அல்லது ஒரு கற்பனையா ? அல்லது உண்மையா?

ஒவ்வொரு முறை ஒரு முஸ்லீம் உடலுறவு கொண்டால், மறுபடியும் அந்த பெண்ணை கன்னியாக அல்லா மாற்றுவாரா?

ஒரே வயதுடைய பெண்கள் என்று நம் தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்த்தார்களே, அப்படியானால் என்ன பொருள்?

அதாவது, 90 வயதில் ஒரு முஸ்லீம் மரித்தாலும், அவருக்கு 90 வயது பெண்கள் கிடைப்பார்களா?

அல்லது இவரை வாலிபராக 18 வயதுடையவராக மாற்றி 18 வயதுடைய பெண்களை அல்லா கொடுப்பாரா?

 
போன்ற கேள்விகளுக்கு முஸ்லீம்கள் தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.

ஏனென்றால், நாங்கள் விளக்கமளித்தால் அது இஸ்லாமுக்கு அவதூறு என்றுச் சொல்லி திட்டுவீர்கள், அதனால், நீங்களே விளக்கிவிடுங்கள்.

இந்த விவரங்கள் என் சொந்த கருத்துக்கள் இல்லை, இவைகள் விகிபீடியாவில் உள்ளது மற்றும் இஸ்லாமிய தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டால், "ஆமாம், அல்லா இப்படிப்பட்ட பெண்களை தருவார் என்று பதில் அளித்துள்ளார்கள்." அதாவது, அந்த பெண்களின் கை கால்களைப்பார்த்தால், ஒரு பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அடுத்த பக்கம் இருக்கும் பொருள் தெரியுமாம், அதாவது அந்த உடல் அப்படி கண்ணாடிப்போன்று இருக்குமாம், எலும்புகளும் அப்படியே கண்ணாடிப்போன்று இருக்குமாம். இந்த இஸ்லாமிய தள கட்டுரையை படியுங்கள், ஒரு நபர் சொர்க்கத்தில் உடலுறவு இருக்குமா என்று கேட்டதற்கு குர்‍ஆன் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது (Question:
I'm wondering will the men from amongst the human race that enters paradise, will they have sexual intercourse with the "HOURIS" women in the paradise .  - http://www.islamqa.com/index.php?ref=10053&ln=eng )


From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

Description:

The houri have variously been described as being

"chaste females"[8],
"restraining their glances"[8][9],
"modest gaze"[4],
"wide and beautiful/lovely eyes"[8][10][11][12][3],
"untouched / with hymen unbroken by sexual intercourse"[9][13],
"like pearls"[14],
"virgins"[15],
"voluptuous/full-breasted"[16][5],
"with large, round breasts which are not inclined to hang"[17],
"companions of equal age"[16][2],
"non-menstruating/urinating/defecating and childfree"[17][18],
"60 cubits [27.5 meters] tall"[19][20][18],
"7 cubits [3.2 meters] in width"[18],
"transparent to the marrow of their bones"[17][21],
"eternally young"[22],
"hairless"[22]
with "appetising vaginas"[23],
"pure"[21],
"beautiful"[21],
"white"[24],
"revirginating"[23],
"splendid"[1] and much more besides.

இந்த மேலே உள்ள பட்டியலில் bold செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு தமிழில் என்ன பொருள் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு தகுதிகள், இந்த தகுதிகள் இருக்கும் பெண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுக்காமல், இந்த பூமியிலேயே இதில் சொல்லப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள பெண்களை படைத்து இருந்தால்,இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும் வேறு ஒரு பெண் பக்கம் தன் பார்வையை திருப்புவானா? திருப்பவே மாட்டான்.

இதை நான் ஏன் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றுச் சொன்னால், இது கற்பனையா அல்லது உண்மையா என்று முஸ்லீம்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தான். ஒரு உவமையை சொன்னதால், அது வேதமாக இருக்கமுடியாது என்று நிபந்தனை போடும் முஸ்லீம்கள், இப்படிப்பட்ட பெண்களை அனேகரை முஸ்லீம்களுக்கு தருவேன் என்றுச் சொன்னது உண்மையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்று தான்.

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/ezekielPart-2.html

Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page
setstats1

March 28, 2008

எறையூரில் மதம்மாறவிரும்பும் கிறிஸ்தவர்களே உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன்

எறையூரில் மதம்மாறவிரும்பும் வன்னிய கிறிஸ்தவர்களே உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன்

ஏனய்யா உங்கள் ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்களை ஏற்றுகொள்ளமுடியாதா??     அவர்களையும் உங்க சகோதரர்களா அங்கிகரிக்கமுடியவில்லையா???

ஆண்டவரே எல்லோரையும் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுகொள்ளும் போது அவரை வழிபடுகிறோம் என்று சொல்லுகிற  நீங்கள்  மட்டும் ஏற்றுகொள்ளமாட்டோம் என்கிறீர்களே.....

இயேசு கிறிஸ்துவின் பிற‌ப்பு ஏற்க‌ன‌வே தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ப‌டியால் அவ‌ர் எப்ப‌டியும் என் வ‌யிற்றில் பிற‌க்க‌வேண்டும் என‌ எத்தனையோ அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரை பெண்க‌ள் த‌வ‌மிருந்த‌போதும் அவ‌ர் சாதார‌ண குடும்ப‌த்தை சேர்ந்த‌ மரியாளிட‌ம் பிற‌ந்தாரே.. அப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கிற‌ நீங்க‌ளா இப்ப‌டி சொல்வ‌து

எனவே  உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன் தயவு செய்து கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுங்கள்.

அவ‌ரின் பிற‌ப்பு முத‌ன்முத‌ல் யாருக்கு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து தெரியுமா..இராஜாக்களுக்கு அல்ல மததலைவர்களுக்கல்ல. சாதாரண ஆடுக‌ளை மேய்த்துகொண்டிருந்த மேய்ப்ப‌ர்க‌ளுக்குதான்!!!! அப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கிற‌ நீங்க‌ளா இப்ப‌டி சொல்வ‌து???

இந்தியாவில் காண‌ப்ப‌ட்ட ச‌தி கொடுமைக‌ள் ம‌ற்றும் தீண்டாமை கொடுமைக‌ள் ஒழிய‌ கார‌ண‌மாயிருந்த‌ இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

எல்லோருக்கும் க‌ல்வி செல்வ‌த்தைத‌ந்து எல்லொரையும் ம‌னித‌னாக‌வும் சிந்திக்கிற‌வ‌னாக‌வும் மாற்றின‌   இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

இந்து ம‌னுத‌ர்ம‌ சாஸ்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து போல‌வா உங்க‌ளை ஆண்ட‌வ‌ர் ப‌டைத்தார் என்று வேத‌ம் போதிக்கிறது????. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தை திற‌ந்து வாசியுங்க‌ள். உங்க‌ள் அறிவு க‌ண்க‌ள் திற‌க்க‌ப்ப‌டும்.  அங்கே ஆணும் பெண்ணுமாக‌ சிருஷ்டித்தார் என்று சொல்லும்  இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

உல‌கிலே அன்பை போதிக்கிற‌ ஒரே தெய்வ‌ம் இயேசு கிறிஸ்து . அவ‌ரின் அவ‌தார‌ம் யாரையும் ப‌லிவாங்க‌ அல்ல‌ த‌ன்னையே ப‌லியாக்க‌ வ‌ந்தார். இப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கும் நீங்க‌ளா இப்ப‌டி சொல்லுவ‌து?????

எத்த‌னையோ பேர் க‌ட‌வுளை கண்டுகொள்ளவும் தொழுதுகொள்ளவும் எத்த‌னை பிராய‌ச‌ங்க‌ள் முய‌ற்சிக‌ள் அப்பப்பா... சரிர‌த்திலே எத்த‌னை வேத‌னையை ச‌கிக்கிறார்க‌ள். ஆனால் இப்ப‌டி எதுமே செய்யாம‌ல் இல‌வ‌ச‌மாய் கிருபையாய் நாம் அவரை தொழுதுகொள்ளவும் க‌ண்டுகொள்ள‌வும் செய்கிறாரே!!!!   இப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கும் நீங்க‌ளா இப்ப‌டி சொல்லுவ‌து?????

வாழ்வது ஒரே வாழ்வு அதுவும் அவருக்காக  என உங்களுக்கு முடிவெடுக்கமுடியாதா???
இல்லையில்லை எனக்கு ஜாதி தான் முக்கியம் எல்லோரையும் என்னால் சகோதரர்களாக அங்கிகரிக்கமுடியாது என சொல்கிறாயா???
 
அப்படியானால்...அப்படியானால்..  உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன் தயவு செய்து கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுங்கள்.

 

 

இன்றைக்கு வந்த முக்கியமான செய்தி தினமலரில் மட்டும் காணாமல் போனது என்னவோ?????????

 தினமலரில் வரும் செய்திகள் எப்போதும் கொஞ்சம் சூடாகவே இருக்கும் (அதுதான் சூடான செய்தியோ!!!) இதற்காக இவர்கள் கையாளும் யுக்தி சிறியதாக‌ புகை வருகிதுனா எதோ எரிந்து கொண்டிருப்பதுபோல செய்தி வெளியிடுவது. அதாவது சின்ன பொறியை ஊதி ஊதி பெரிதாக்குவது. தமிழகத்தில் எங்கோ ஒரு முலையில் நடக்கும் சின்ன பிரச்சனையை ஏதோ நாடே கப்பலில் முழ்கிபோச்சுன்னு சொல்லுவாங்க..


அப்படிப்பட்டவங்க இன்றைக்கு அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.ஆர் கிருஷ்னமூர்த்திக்கும் வெளியீட்டாளர் திரு.லட்சுமிபதிக்கும் தவறான(பொய்யான) செய்தியை வெளியிட்டு ஒரு தலைமையாசிரியர் பணியிலக்க காரணமாயிருந்த காரணத்துக்காக‌  நிதிமன்றம் ஒன்று மூன்று மாதம் சிறைதண்டனையை  விதித்துள்ளது.

என‌வே ந‌ட‌க்காத‌ செய்தியே வ‌ரும்போது இது க‌ண்டிப்பாக‌ ந‌ட‌ந்த‌செய்தி என்வே இன்றைக்கு ப‌த்திரிக்கையில் வ‌ந்திருக்கும்னு நினைச்சு வாங்கி பாத்த‌ எந்த‌ மூலையில‌யும் இது வ‌ர‌வேயில்லை.
என்ன‌ கார‌ண‌மோ????

ஒ... ஒ.. இதுதான் ப‌த்திரிக்கை த‌ர்ம‌மோ!!!!!!!

வாய்மையே வெல்லும் 

Complaint filed against Tamil daily by retired headmaster of government school


R. Krishnamurthy

CHENNAI: A Magistrate Court in Egmore has sentenced Dinamalar Editor R. Krishnamurthy and its publisher R. Lakshmipathi to undergo three months' simple imprisonment in a defamation case filed by a retired headmaster of a government school.

A. Sethuraman, who worked as headmaster of the Government Boys Higher Secondary School, Oothukottai, filed a complaint against Dinamalar for publishing a news item on March 16, 2001 stating that he helped students to indulge in copying in the public examination.

Suspended

Following the publication of the report, he was placed under suspension.



R. Lakshmipathi

The news item was wrong, malicious and baseless, he contended.

The order was passed by the XIII Metropolitan Magistrate, Bhagya Jothi.
 

March 27, 2008

அனைவரும் படிக்க : ஏன் நாம் இஸ்லாமியரின் கட்டுரைகளுக்கு பதிலளித்து வருகிறோம்??????????

   உங்கள் தளத்தின் நோக்கம் என்ன, பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in
கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

 
2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.

4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...

http://isakoran.blogspot.com/2007/09/1.html

 


 

பில்கேட்ஸும் ஸ்கிரின் சேவரும் :(மன்னிக்கவும் ஆங்கிலத்தில்)

Bill Gates passes away and goes up to heaven where
he is met by God.

"Well, Bill," said God, "I'm really confused on
this one. I'm not sure whether to send you to Heaven or Hell. After
all, you enormously helped society by putting a computer in almost
every home in the world, and yet you created that ghastly Windows.

"I'm going to do something I've never done before.
I'm going to let you decide where you want to go."

Bill replied, "Well thanks, God . What's the
difference between the two?"

God said, "You take a peek at both places briefly
if it will help you decide. Shall we look at Hell first?"

"Sure" said Bill, "Let's go!"

Bill was amazed! He saw a clean, white sandy beach
with clear waters. There were thousands of beautiful men and women
running around, playing in the water, laughing and frolicking about.
The sun was shining and the temperature was perfect.

"This is great!" said Bill. "If this is Hell, I
can't wait to see heaven."

God replied, "Let's go!" and so off they went to
Heaven. Bill saw puffy white clouds in a beautiful blue sky with
angels drifting about playing harps and singing.

It was nice, but surely not as enticing as Hell.

Bill Gates thought for only a brief moment and
rendered his decision. "God, I do believe I would like to go to Hell."

"As you de! sire," said God.

Two weeks later, God decided to check up on the
late bill ionaire to see how things were going. He found Bill Gates
shackled to a wall, screaming amongst the hot flames in a dark cave.
He was being burned and tortured by demons.

"How ya doin', Bill?" asked God.

Bill responded with anguish and despair, "This is
awful! This is not what I expected at all! What happened to the beach
and the beautiful women playing in the water?"

"Oh THAT?!" said God. "That was the SCREEN SAVER !."
 

மாணவன் கேட்டான் சார்.., குளிர்ச்சி என்று ஒன்று இருக்கிறதா?????????

 பேசுவதில் பேர்வாங்கின(பேர்போன) ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்தார். எள்ளி நகையாடுவார்
இப்படியாக ஒரு செமஸ்டரில்.....
 
தேவனா தீமையை உண்டாக்கினார்?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசுவதில் பேர்வாங்கின(பேர்போன) ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்தார். அவர் ஒவ்வொரு செமஸ்டரிலும் தனது முதல் வகுப்பில் இங்கு யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவர்களை எழுப்பி விட்டு அவர்களை கிண்டல் பண்ணி அவர்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை எள்ளி நகையாடுவார். இப்படியாக ஒரு செமஸ்டரில் யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது ஒரு மாணவன் தன் கையை உயர்த்தி எழுந்து நின்றான்.

அவனைப்பார்த்து அந்த பேராசிரியர் 'தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறாரா?' என்று கேட்டார்.

அவன் அதற்கு' யெஸ் சார். அவரே உண்டாக்குகிறார்' என்றான்.

அப்போது அந்த பேராசிரியர், ' தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறார் என்றால் தீமையையும் அவர்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் . அப்படிதானே?' என்று கேட்டார்.

அந்த மாணவன் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தா. அந்த பேராசிரியர் மீண்டும் ஒரு முறை கிறிஸ்தவ விசுவாசத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட பெருமிதத்தில் இருந்தார்.

அப்போது வேறொரு மாணவன் எழுந்து நின்று, சார், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றான்.

சரி கேள் என்றார் பேராசிரியர்.

சார், குளிர்ச்சி என்று ஒன்று இருக்கிறதா? என்று அந்த மாணவன் கேட்டான்.

ஆம் இருக்கிறது. என்ன மடத்தனமான கேள்வி கேட்கிறாய். நீ ஒரு போதும் குளிர்ச்சியை உணர்ந்ததில்லையா என்று அவர் பதிலளித்தார்.

அந்த மாணவன் பதிலாக, சார், உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாத ஒன்றை தான் நாம் குளிர்ச்சி என்று கருதுகிறோம். முற்றிலும் வெப்பம் இல்லாமல் போகும் போது முற்றிலும் குளிர்ச்சியாகிவிடுகிறது. உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாதபோது நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் நாம் குளிர் என்ற ஒரு பதத்தை உண்டாக்கியிருக்கிறோம் என்று கூறிய அந்த மாணவன் தோடர்ந்து, சார் இருள் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அந்த பேராசிரியர் மீண்டுமாக, ஆம் இருக்கிறது என்றார்.

அதற்கு அந்த மாணவன், சார், உண்மையில் இருள் என்று ஒன்று இல்லவே இல்லை. வெளிச்சமின்மையைதான் நாம் இருள் என்று கூறுகிறோம். வெளிச்சம் இல்லாதபோது என்ன நடக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உருவாக்கிய பதமே இருள் என்பதாகும் என்றான்.

கடைசியாக அந்த மாணவன், சார் தீமை என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு பதிலளித்த பேராசிரியர், ஆம் இருக்கிறது.உலகமெங்கும் கற்பழிப்புகளும் கொலைகளும் மற்றும் வன்முறைகளும் நடக்கிறதே. இது தீமையானது அல்லவா? என்றார்.

இதற்கு பதில் கூறிய மாணவன், சார், உண்மையில் தீமை என்று ஒன்று இல்லை. ஒரு காரியத்தில் தேவனின்மையே தீமை ஆகும். தேவனின்மையைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உண்டாக்கிய பதமே தீமை ஆகும். தேவன் தீமையை படைக்க வில்லை. எப்படி வெப்பம் இல்லாமையால் குளிர் உண்டாகிறதோ அல்லது ஒளி இல்லாமையால் இருள் உண்டாகிறதோ அது போல தேவன் இல்லாத நிலையே தீமை என்று நாம் கூறலாம் என்று சொல்லி முடித்தான்.

அந்த பேராசிரியர் சொல்லுவதற்கு வகை தெரியாமல் மரமாய் நின்றார்.
 
Bro.Arputham

உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்ததே ஒரு அத்தாட்சி

இதுவே பிறப்புக்கும் வாழ்ந்ததற்கும் அசைக்க முடியாத அத்தாட்சி

உலக வரலாற்றை இரண்டாக பிரித்தவர் இயேசு கிறிஸ்து. வரலாற்று புத்தகங்களில் வருடங்களை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படும் கி.பி என்பது "கிறிஸ்துவுக்கு பின்" எனவும், கி.மு என்பது "கிறிஸ்துவுக்கு முன்" எனவும் பொருள்படும். இதுவே கிறிஸ்துவின் பிறப்புக்கும் அவர் உலகில் வாழ்ந்ததற்கும் அசைக்க முடியாத அத்தாட்சி

BC - Before Christ

AD - Anno Domini (Latin : "In the year of (Our) Lord")(சிலர் After Death என்பர்).C.E அதாவது Christian Era என்பதுவும் இக்காலத்தையே குறிக்கும்.

ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்
"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-20-11-1993 மாலைமலர் தேன்மலர்

மாற்கு 15:38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

Mark 15:38 And the veil of the temple was rent in twain from the top to the bottom.

வித்வான் H.A.கிருஷ்ண பிள்ளையின் வரிகளில் :வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்

 வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்

மகா வித்வான் H.A.கிருஷ்ண பிள்ளை அவர்கள் (H.A. Krishna Pillai 1827-1900) கிறிஸ்து குறித்து இரட்சன்ய யாத்திரிகம் (Iratcaniya Yattirikam ) எனும் நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்

கன்னி பாலனாய்க் காசினி தனில் அவதரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப் பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை அஞ்சலித் திடுவோம்.

முனைவனை அறிய வேண்டில் முற்றும் நீ இயற்றும் பாவ
வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்
இனிவரும் தேவ கோபம் எரிந்திடா திருக்க வேண்டில்
மனுவுரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனியிடத் திருந்து பாவச் சழக்கினைக் கருதி,ஆவி
அனுமதி பெற்றுத் தேவ அன்பினை இதயத் துன்னி
கனியும்உள் ளன்பி நோடு கண்கணீர் ததும்ப நின்று
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனுகரணங்கள் ஓய்ந்து தளர்ந்து மூச் சொடுங்குங் காலை
மனைமகார் துணையா வாரோ மருங்கிருந் தழுவதல்லால்
அனவர தமும் உனக்கோர் ஆம் துணை விரும்பில் இன்னே
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

உலகம் மகிழ்ந்தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற,
அலகை உளந் திகில் ஏற, அகண்டபரி பூரணனார் அருள் மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நர உருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை ஏறிய மெய்ஞ் ஞான சூரியனடியைச் சிந்தை செய்வோம்.

மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

Malachi 4:2 But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.