அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 7, 2009

முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special


WAS MUHAMMAD A TERRORIST?
 
ஆசிரியர்: சைலஸ்
 
 
நான் இந்த முக்கியமான தலைப்பை மறுபரிசீலனைச் செய்கிறேன், ஏனென்றால், இதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய மற்றும் புரிந்துக் கொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலாகிய 9/11க்கு பிறகு, இன்னும் ஜெர்ரி பால்வெல் (Jerry Falwell) அவர்களின் விமர்சனத்திற்காக ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு இந்த "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற தலைப்பு சிறிது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இதைப் பற்றிய ஆய்வு ஆழமாக செய்யப்படவில்லை.
 


இந்த கட்டுரையில் நான் கீழ்கண்ட தலைப்புகளில் எழுதப்போகிறேன்.
 
 
1) ஜெர்ரி பால்வெல் அவர்களின் விமர்சனம் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்.


2) இஸ்லாமிய சரித்திர விவரங்கள் பற்றி இஸ்லாமிய நூல்களிலிருந்து ஆதாரங்களை முன்வைக்கிறேன். இந்த இஸ்லாமிய ஆதாரங்களை வாசகர்கள் தாங்களே சுயமாகவே படித்து உண்மையை தெரிந்துக்கொள்ளட்டும்.
 


3) முஹம்மதுவின் ஒரு சில செயல்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை கொடுக்கிறேன். இவைகளை படித்தபிறகு முஹம்மதுவின் செயல்கள் வன்முறையாக அல்லது தீவிரவாத நோக்கத்தோடு இருந்ததா என்பதை வாசகர்களே முடிவு செய்துக்கொள்ளலாம். (வார்த்தைகளை விட செயல்கள் போடும் சத்தம் அதிக தூரம் கேட்கும் - Actions speak louder than words).
 
 
முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
 


முஹம்மது தான் இஸ்லாம்.
 

இஸ்லாமின் ஆணிவேர் முஹம்மது ஆவார்.
 


முஹம்மதுவின் செயல்களைக் கண்டு அவைகளை அப்படியே பின்பற்றுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. ஆகையால், முஹம்மதுவின் நடத்தைகளின் பாதிப்பு இஸ்லாமிய நம்பிக்கையின் மீது விழுகிறது, இஸ்லாமை பின்பற்றுகிறவர்களின் வாழ்க்கையில் அது பிரதிபலிக்கிறது. ஒருவேளை முஹம்மது ஒரு தீவிரவாதியாக இல்லாமல் இருந்தால், இதனால் இஸ்லாமில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், அவர் ஒரு வேளை ஒரு தீவிரவாதியாக இருந்தால், அந்த தீவிரவாத செயல்கள் இஸ்லாமில் ஒரு கோட்பாடாக மாறிவிடுகிறது.
 
 
எழுத்தாளர்கள் எழுதியவைகள் எவைகள்?
 


ஜெர்ரி பால்வெல் அவர்களின் விமர்சனத்திற்கு பிறகு அனேக எழுத்தாளர்கள் இந்த தலைப்பு பற்றி பலவிதங்களில் எழுதியுள்ளார்கள். இந்த எழுத்தாளர்கள் "அந்த தலைப்பு" பற்றி ஆராய்வதை எழுதுவதை விட்டுவிட்டு, பால்வெல்லையே அதிகமாக தாக்கி எழுதியுள்ளார்கள். நாம் இங்கு இரண்டு கட்டுரைகளை ஒப்பிடப்போகிறோம். முதலாவது கட்டுரையை டாக்டர் ஜுஆன் கோல் (Dr. Juan Cole) என்பவர் எழுதிய கட்டுரையாகும், இதனை இந்த தொடுப்பில் (http://hnn.us/articles/1018.html) காணலாம்.
 


திரு கோல் அவர்களின் கட்டுரையானவது பால்வெல் அவர்களின் "முஹம்மது ஒரு தீவிரவாதி" என்ற விமர்சனத்தை மறுப்பு தெரிவிப்பதற்காக எழுதப்பட்டது. ஆனால், கோல் அவர்கள் தன் கட்டுரையை தவறான வழியில் கொண்டுச் சென்றுள்ளார். முஹம்மதுவின் செயல்களை குறிப்பிட்டு கேள்வி கேட்டு கேலிச் செய்யும் நபர்களை சாடும் விதத்தில் அவர் தன் கட்டுரையை அமைத்துள்ளார். விமர்சனத்தில் உள்ள தலைப்புப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவை நிராகரிக்கும் மற்றும் இஸ்லாமை விமர்சிக்கும் நபர்களையும், பால்வெல்லையும் அவர் விமர்சித்துள்ளார்.


பால்வெல்லின் விமர்சனம் சரித்திர பூர்வமாக சரியானவைகள் அல்ல என்று கோல் அவர்கள் கூறியுள்ளார். இதற்காக வன்முறையை தூண்டாத ஒரு குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். பிறகு, எப்படி மேற்கத்திய சமுதாயத்தின் "இஸ்லாம் பற்றிய" பார்வை எதிர்மறையாக இருந்தது என்பதை கூறி, இப்பார்வை தற்காலத்தில் சிறிது சிறிதாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்.


கடைசியாக அவர் ஓரிரு பத்திகளில் தான் எழுதவந்த தலைப்பாகிய "முஹம்மது ஒரு தீவிரவாதியா?" என்பதைப் பற்றி சிறிது கூறுகிறார். குர்ஆனிலிருந்து கோல் அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம், ஒடுக்குதல் மற்றும் வன்முறையை க‌ண்டித்து குர்‍ஆன் கூறுகிற‌து:
 

"உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)"

 
 
இந்த வசனத்தை மேற்கோள் காட்டியதின் மூலமாக‌ "இஸ்லாம் பற்றி முழுவதுமாக‌ அறியாதவர்களின் வாயில் உயிர் காக்கும் மத்திரையாக இவ்வசனம் உதவும் என்று" கோல் அவர்கள் நம்பியிருக்கக்கூடும். அதாவது, இந்த வசனம் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி கேள்வி கேட்கும் அறியாதவர்களை திருப்திபடுத்தும் மற்றும் எல்லா பிரச்சனையை தீர்த்துவிடும் என்று அவர் நம்புகிறார். ஆனால், இப்படிப்பட்ட செயலைச் செய்த கோல் அவர்களுக்கு என் பரிதாபங்கள் உரித்தாகுக. அவர் ஒரு சரித்திர ஆசிரியராக இருந்தும் கூட இப்படி மேற்கோள் காட்டியதால், அவர் இதற்காக வெட்கப்படவேண்டும். அதிகமாக ஞானமுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற இப்படிப்பட்டவர்களை விட, வாசகர்களே எவ்வளவோ மேல். குர்ஆன் ஒரு நீண்ட புத்தகம், மற்றும் சலிப்பை உண்டாக்கும் புத்தகமாகும், இது வன்முறையைப் பற்றி அனேக வசனங்களைக் கூறுகிறது.

 
 
அவரின் கட்டுரையை படிக்கும் படி வாசகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். கோல் அவர்கள் தீவிரவாதம் என்ற தலைப்பைப் பற்றி விவாதிக்காமலேயே, அந்த ஒரு வசனத்தை காட்டிவிட்டு தப்பித்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு சரித்திர ஆசிரியராக இருந்தும் கூட, தன் வாதத்திற்கு சரித்திர ஆதாரங்களை காட்டாமலேயே கட்டுரையை முடித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, குர்‍ஆன் 2:190ம் வசனத்தை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். இந்த குர்‍ஆன் வசனம் 2:190ஐ பற்றிய சரித்திர பின்னணியையும், அதைப் பற்றிய விவாதத்தையும் இந்த கட்டுரையில் காணலாம்: Jihad.

 
 
மேலும் இதைப் பற்றிய ஆதாரங்களை இங்கே தருகிறேன்.

 
யூசுப் அலி குர்ஆன் மொழியாக்கம், பக்கம் 77. யூசுப் அலி அவர்களின் விரிவுரை கீழ்கண்ட விதமாக உள்ளது.
 
 
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியானது ஹிஜ்ரா ஆறாம் ஆண்டில் நடைப்பெற்ற ஹுதைபிய்யாஹ் நிகழ்ச்சியாகும். ஆனால், இந்த வசனம் அந்த சமயத்தில் தான் இறக்கப்பட்டதென்று என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. அந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்களில் அனேகர் மக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாவார்கள், ஏனென்றால் மக்காவினரால் இவர்களுக்கு பிரச்சனை அதிகமாக இருந்தது. மக்காவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், தங்கள் வீடுகளுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டார்கள், புனித யாத்திரை காலத்தில் ஹஜ் செய்ய தடை செய்யப்பட்டு இருந்தார்கள். இது மிகவும் கொடுமையான செயலாகும், ஒடுக்கப்படுதலாகும், எனவே இஸ்லாமியர்கள், தாங்களும் அரேபிய குடிமக்கள் என்ற தங்கள் உரிமையை செயல்படுத்த முடிவு செய்தனர், இதனால், ஒரு உடன்படிக்கையை எழுதினர் மற்றும் இஸ்லாமியர்கள் அந்த உடன்படிக்கையின் படியே இருந்தனர்.
 
 
அஸத் தன் "குர்‍ஆனின் செய்தியில் (The Message of the Quran)" பக்கம் 41ல் கீழ்க‌ண்ட‌விதமாக‌ கூறுகிறார்:
 
 
மக்காவைச் சுற்றிய பகுதியில் போர் பற்றிய இந்த வசனத்தின் பின்னணி என்னவென்றால், அச்சமயத்தில் புனித நகரம் இன்னும் குரைஷி மக்களின் பிடியில் இருந்தது, இவர்கள் தான் இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்தினவர்கள் ஆவார்கள்.
 
 
மேற்கூறிய‌ப‌டி, இஸ்லாமியர்களின் வ‌ருட‌க் க‌ண‌க்கு ச‌ரியாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில், அந்த‌ வ‌ச‌ன‌ம் முஹ‌ம்ம‌து ம‌க்காவை கைப்ப‌ற்றிய‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ஹுதைய்பிய்யா உட‌ன்ப‌டிக்கை கால‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌தாகும். இந்த‌ வ‌சன‌ம் முஸ்லிம்கள் மக்காவை கைப்ப‌ற்றிய‌தற்கு முன்பாக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌மாகும், இது ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌தாக‌வே என‌க்கு தென்ப‌டுகிற‌து. இந்த‌ உட‌ன்ப‌டிக்கையின்ப‌டி, ஒரு ஆண்டு அல்லது அதன் பிறகு இஸ்லாமிய‌ர்க‌ள் புனித‌ யாத்திரையாகிய‌ ஹஜ் செய்ய‌ ம‌க்கா‌விற்குள் செல்ல‌லாமே ஒழிய‌, ம‌க்காவை ஆளுவ‌த‌ற்கோ அல்ல‌து ம‌க்காவைச் சுற்றிய‌ இத‌ர‌ ப‌குதிக‌ளை ஆளுவ‌த‌ற்கோ அல்ல‌. இந்த‌ சம‌ய‌த்தில் இஸ்லாமிய‌ர்க‌ள் வ‌லிமையுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர், த‌ங்க‌ளை பாதுகாத்துக்கொள்ளும் அள‌விற்கு அவ‌ர்க‌ளுக்கு வ‌லிமை இருந்த‌து, ஆனால், அந்த‌ ப‌குதியில் அவர்க‌ள் ஒரு மித‌மிஞ்சிய‌ வ‌லிமையுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. அத‌னால், ம‌க்காவின‌ர் அவர்க‌ளை தாக்கினால், த‌ங்க‌ளை பாதுகாத்துக்கொள்ளுங‌கள் என்று முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளுக்கு க‌ட்ட‌ளையிட்டார். முஸ்லிம்க‌ள் வ‌ர‌ம்பு மீற‌க்கூடாது என்று க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து ஏனென்றால், மக்காவினருடன் முஸ்லிம்கள் உட‌ன்ப‌டிக்கையை செய்து இருந்த‌ன‌ர். இப்ப‌டி இருந்த‌ போதிலும், ம‌க்காவிற்கு வெளியே மக்காவினரோடு கூட்டுச் சேராமல் இருக்கும் இஸ்லாமியர‌ல்லாத‌வ‌ர்க‌ளை தாக்க முஹம்மதுவிற்கு சுத‌ந்திர‌ம் இருந்த‌து. இதைத் தான் முஹ‌ம்ம‌து செய்தார்.

 
 
குர்‍ஆன் 2:190ம் வசனத்தின் சரித்திர பின்னணியை ஒருவர் ஆராய்வாரானால், இந்த வசனமானது இஸ்லாமியர்களின் எல்லாவித வன்முறைக்கும் எதிராக இறக்கப்பட்ட வசனம் அல்ல என்பதை அறியமுடியும். மற்றும் இந்த கட்டளையானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்காக அதாவது மக்கா மற்றும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள இதர பகுதியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட கட்டளை என்பதை அறியலாம். கோல் அவர்கள் இவ்வசனத்தின் சரியான சரித்திர பின்னணியை கூறவும், விளக்கத்தைக் கூறவும் தவறிவிட்டார்.

 
 
கோல் அவர்களின் கட்டுரையில் இருக்கும் கடைசி விமர்சனம் பற்றி காண்போம். கோல் எழுதுகிறார்:
 
 
"பால்வெல் அவர்களின் விமர்சனம் சரித்திர பின்னணியில் மட்டுமல்ல, இன்னும் பலவகைகளில் தவறானதாகும். முஹம்மது அவர்கள் கொலை செய்வதையும், குற்றமில்லாதவர்களை கொல்வதையும் தடைவித்தார். தன்னைச் சுற்றியிருந்த இஸ்லாமியரல்லாதவர்களில் பயங்கரமான எதிரிகளுக்கு விரோதமாக அவர் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதே இல்லை."
 
 
 
கோல் அவர்களின் மேற்கண்ட கூற்றானது முற்றிலும் தவறானது என்பதை நாம் இக்கட்டுரையில் பிறகு காண்போம். அதாவது இஸ்லாமியரல்லாதவர்களின் மீது முஹம்மது கொலை செய்வதையும், பயங்கரவாதத்தையும், ஒடுக்குதலையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார் என்பதை நாம் காணப்போகிறோம்.

 
 
இரண்டாவதாக, பால்வெல் அவர்களின் விமர்சனத்தை ஆதரித்து எழுதப்பட்ட அலி சினா அவர்களின் கட்டுரையை இப்போது காணலாம், அதனை இங்கு படிக்கவும்: http://faithfreedom.org/Articles/sina/falwell.htm.

 
 
இந்த கட்டுரையையும் நீங்கள் படியுங்கள். முஹம்மதுவின் நடத்தைகள் பற்றிய உண்மையை அலி சினா அவர்கள் தைரியமாக தெளிவாக கூறியுள்ளார். அலி சினா கீழ்கண்ட விதமாக முஹம்மதுவின் செயல்கள் பற்றிய‌ எடுத்துக்காட்டுகளை கூறியுள்ளார்.
 
 
"பால்வெல் சொன்னதில் எந்த பொய்யும் இல்லை. முஹம்மது அன்று செய்த செயல்களை இன்றையை தரத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமானால், அவைகள் "தீவிரவாத செயல்கள்" தான். முஹம்மது எந்த முன்னெச்சரிப்பும் கொடுக்காமல் பட்டணங்களை கொள்ளையிட்டார். வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போராயுதங்கள் ஏந்தாத மனிதர்ளை கொன்று குவித்தார். வியாபார சந்தைகளில் தங்கள் வியாபார வேலைகள் முடிவடைந்த போது சென்று தாக்கினார். அம்மக்களின் மனைவிமார்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக பிடித்தார், அவர்களில் இளவயது பெண்களை தன் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மற்றும் அப்பெண்களில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களை தனக்காக வைத்துக்கொண்டார், மட்டுமல்ல, அப்பெண்களின் சொந்தக்காரர்களையும், தகப்பன்களையும், கணவர்களையும் கொன்ற அதே நாளில் அப்பெண்களோடு உடலுறவு கொண்டார். இவைகள் அனைத்தும் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல, இவைகள் உண்மை சரித்திர நிகழ்வுகளாகும், இவைகளை இஸ்லாமியர்களே பதிவு செய்து பாதுகாத்துள்ளனர். உதாரணத்திற்கு, கைபர் நகரம் கைப்பற்றப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்..... யார் யாரெல்லாம் இஸ்லாமிய புனித நூல்களாகிய குர்ஆனையும், ஹதீஸ்களையும் படிக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் சுலபமாக இவ்விவரங்களை கண்டுக்கொள்ளலாம்.
 
 
 
அலி சினா எந்த மேற்கோள் ஆதார எண்களை தரவில்லை என்றாலும், அவர் யூதர்களின் பட்டணமாகிய கைபரை முஹம்மது கைப்பற்றிய நிகழ்ச்சியை குறிப்பிட்டுள்ளார். அவர் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மேற்கோள்களை கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஆதார மேற்கோள்களை நான் இக்கட்டுரையில் பிறகு தருகிறேன்.

 
 
மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை அலி சினா கேட்கிறார்:
 
 
"இப்பொழுது கேள்வி என்னவென்றால், இஸ்லாமியர்கள் நம்மீது தாக்குதல் செய்ததால், அவர்களின் இந்தபொய்யை (முஹம்மது ஒரு தீவிரவாதி இல்லை என்ற பொய்யை) பூசி மொழுகி இன்னும் தீவிரவாதம் நாம் நாடுகளில் செழித்து வளர நாம் அனுமதிக்கவேண்டுமா? .... நாம் இஸ்லாமை காப்பாற்றுவதினால், உண்மை பலியாக்கப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டாமா? இஸ்லாமியர்கள் வேதனை அடைவார்கள் என்று நாம் பரிதாப்பட்டு ஒன்றும் பேசாமல் இருந்தால், அது நம் பேச்சுரிமையை பரிக்கிறது என்பதை நாம் உணரவேண்டாமா? இவைகளில் எது தீமைகளிலேயே மிகவும் தீமையானது?
 
 
நெற்றியில் ஆணி அடிப்பது போன்ற ஒரு வரியுடன், அலி சினா தன் கட்டுரையை முடிக்கிறார்:
 
 
"இஸ்லாமிய கோட்பாடுகளின் பின் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய ஒரு கசப்பான உண்மையை இன்றோ அல்லது நாளையோ உலகம் சந்திக்கும். அதாவது இஸ்லாமையும், தீவிரவாதத்தையும் பிரிக்கமுடியாது என்பதை உலகம் அன்று அறிந்துக்கொள்ளும், எப்படி நாஜியிஸாத்தையும், வன்முறையையும் பிரிக்கமுடியாதோ அது போன்று இஸ்லாமும் தீவிரவாதமுமாகும். இஸ்லாமை நாம் மதித்தால், அவர்களின் நம்பிக்கையை நாம் பாதுகாத்தால், அவர்களை வெற்றிகொள்ளலாம், காலப்போக்கில் இஸ்லாமியர்கள் மேற்கத்திய நாடுகளின் சகிப்புத்தன்மையுள்ள கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையானது ஒரு முட்டாள் தனமாக நம்பிக்கையாகும்."
 
 
மேற்கண்ட இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை கவனிக்கவும். ஒரு கட்டுரையை சகிப்புத் தன்மை இல்லாத கல்லூரி பேராசிரியர் எழுதியது. இவர் தலைப்புப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவிற்கும் தீவிரவாதத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை காட்ட மிகவும் நடித்துள்ளார், மற்றும் யார் யாரெல்லாம் இஸ்லாமை விமர்சிக்கின்றார்களோ அவர்களை தாக்கி எழுதியுள்ளார். இரண்டாவது கட்டுரையை ஒரு முன்னாள் முஸ்லிம் எழுதியது. இவர் இஸ்லாமை முதல் தரமாக அனுபவித்தவர் (ஒரு இஸ்லாமியராக, இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்தவர்) இதனால், தன் வாயிலிருந்து துப்பியுள்ளார். கோல் அவர்களின் கட்டுரை, எந்த சரித்திர ஆதாரத்தையும் சார்ந்து இருக்கவில்லை அதே நேரத்தில் அலி சினா முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளார்.

 
 
இங்கு முக்கியமான கருத்து இது தான்: அலி சினா செய்தது போல, இஸ்லாமிய சரித்திர நூல்களை தேடி படித்துப்பாருங்கள், அங்கே நீங்கள் இந்த ஆதாரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் பற்றி அறிந்துக்கொள்வீர்கள.
 
 
சரித்திர நூல்கள்

 
மற்றவர்கள் எழுதுவதையும், நான் எழுதுவதையும் ஏன் நீங்கள் படிக்கவேண்டும்? நீங்களாகவே சரித்திர நூல்களை படித்து தெரிந்துக்கொண்டால் என்ன? நீங்களே படித்து சொந்தமாக ஆராய்ந்துப் பாருங்கள். நான் ஆராய்ச்சி செய்ய விரும்பிய போது, இஸ்லாம் பற்றி சரித்திர ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் எழுதியவைகளை படிக்க ஆரம்பித்தேன். நான் இஸ்லாம் பற்றி அறிய அதிகமாக விரும்பியதால், இஸ்லாமிய நூல்களை கட்டாயமாக படிக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். இவைகள் நாம் படிப்பதற்கு கிடைக்கின்றன, யார் வேண்டுமானாலும் இவைகளை வாங்கி படிக்கமுடியும், ஆராய முடியும், சிந்திக்கமுடியும் மற்றும் தாங்களாகவே சுயமாக இஸ்லாம் என்றால் என்ன என்ற முடிவை எடுக்கமுடியும். இதை செய்ய தேவையானது எல்லாம், திறந்த மனது மற்றும் உண்மைகளை புரிந்துக்கொள்ளக் கூடிய அறிவு மட்டுமேயாகும்.
 
 

நான் மூன்று நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யட்டும், இவை அனைத்தையும் எழுதியவர்கள் இஸ்லாமியர்களே. <//font>
 
 
1) இபின் இஷாக் எழுதிய "சீரத் ரஸூலல்லாஹ்" (மொழியாக்கம் குல்லேம் - Guillaume) ["Sirat Rasulallah" by Ibn Ishaq, (translated as "The Life of Muhammad" by A. Guillaume and published by Oxford Press),]

2) தபரி எழுதிய சரித்திரம் தொகுப்பு 6 லிருந்து 10 வரை. ["Tabari's History", volumes 6 through 10, translated by various authors and published by SUNY]
 

3) இபின் ஸத் அவர்களின் "கிதாப் அல்-தபாகத் அல்-கபீர்" [Ibn Sa'd's, "Kitab al-Tabaqat al-Kabir" (The Book of the Major Classes)]
 
 
இஸ்லாம் பற்றி படிப்பதற்கான தகுதியுள்ள எந்த கட்டுரையை எழுதும் எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவர் இபின் இஷாக்கின் வரிகளை மேற்கோள் காட்டுவார். தபரி எழுதிய சரித்திரம் அமேஜான் தளத்தில் வாங்கிக்கொள்ளலாம் (Amazon.com). குல்லேம் அவர்களின் சுருக்கமான தொகுப்பு இப்போது புத்தக பதிப்பில் இல்லை, இருந்தாலும் நாம் தேடினால் நமக்கு கிடைக்கும் (தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்). நம்முடைய மேற்கோள்களுக்காக குல்லேம் தொகுப்பை நான் "LoM - Life of Mohammad" என்று குறிப்பிடுகிறேன்.

 
 
முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள், இந்த மேற்கண்ட இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
 
 
அந்த சரித்திர உண்மைகள் தான் என்ன?

(கவனிக்கவும், வார்த்தைகளை விட செயல்கள் போடும் சத்தம் அதிக தூரம் கேட்கும்.)
 
 

முஹம்மதுவின் ஆன்மீக மத வாழ்க்கை 23 ஆண்டுகளைக் கொண்டது. அவர் தன் ஆன்மீக பயணத்தை ஒரு ஒடுக்கப்பட்ட பிரச்சாரக்காரராக ஆரம்பித்தார், ஆனால், ஒரு சக்தி வாய்ந்த ஆட்சியாளராக முடித்தார். இந்த 23 ஆண்டு கால கட்டத்தில் அவர் பல விதங்களில் செயல்பட்டார், பல பதவிகளில் இருந்தார், பல உணர்வுகளை வெளிக்காட்டினார், பலவற்ற செய்தும் முடித்தார், அவைகளில் நன்மைகள் தீமைகள் இரண்டும் அடங்கும்.

 
 
ஆனால், அவர் ஒரு தீவிரவாதியைப் போல நடந்துக்கொண்டாரா? இது தான் நம்முடைய கட்டுரையின் நோக்கம், மற்றும் இதற்காக நாம் சரித்திர பதிவுகளை அலசப்போகிறோம் மற்றும் அவைகளில் சொல்லப்பட்ட விவரங்களை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்ட சரித்திர நூல்களிலிருந்து நான் நேரடியாக என் மேற்கோள்களை முன்வைக்கிறேன், அதன் அடிப்படையில் பிறகு என் வாதத்தை முன்வைக்கிறேன். நான் 5 நிகழ்ச்சிகள் பற்றி சுருக்கமாக எழுதுகிறேன் மற்றும் அவைகளின் சரித்திர நூல்களின் குறிப்புக்களை கொடுக்கிறேன். இன்னும் இது போல பல நிகழ்ச்சிகளை நாம் சொல்லமுடியும், ஆனால், இந்த ஐந்து நிகழ்ச்சிகளே போதும், முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதற்கு.
 
 
1) வியாபார வழிப் பிரயாணிகள் மீது திடீர் தாக்குதல்

 
 
முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, இஸ்லாமியரல்லாதவர்கள் மீது பயங்கரவாதத்தை காட்ட அனுமதி கொடுத்தார் மற்றும் தானும் அதில் ஈடுபட்டார்.

 
 
அது அவரின் மத பிரச்சாரம் ஆரம்பித்து 13ம் ஆண்டு ஆகும். இதற்கு முன்பாக, மக்காவில் முஹம்மது இருந்த நேரத்தில், அவரும் அவரது சகாக்களும் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர், எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபட அவர்களால் முடியாமல் போனது. ஒருவேளை மக்காவில் இருந்த சமயத்தில் முஹம்மதுவும் அவரது கூட்டாளிகளும் வன்முறையில் ஈடுபட்டு இருந்திருந்தால், மக்காவினர் இவரையும், இவரது கூட்டாளிகளையும் மொத்தமாக கொன்று போட்டு இருந்திருப்பார்கள்.

 
 
கடைசியாக, முஹம்மதுவிற்கு எதிராக மக்காவினர் செய்த கொடுமைகள் தீவிரம் அடைந்தது, இதனால், முஹம்மது தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதினாவிற்கு தப்பி ஓடினார். மதினா அடைந்த பிறகு, முஹம்மது தன் மனிதர்களை வழிப்பறிக் கொள்ளை அடிக்க அனுப்பினார். (இந்த நேரத்தில் மக்காவில் இருந்த முஹம்மதுவின் எதிரிகள், அவரை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அவர்களுக்கு தேவையாக இருந்தது எல்லாம், முஹம்மது மதினாவிற்கு சென்றுவிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது என்று சும்மா இருந்து விட்டார்கள். தபரி தன் சரித்திரத்தில் கூறும் போது, மக்காவினரின் வியாபாரிகளை முஹம்மது தாக்கியதால் தான், அவருக்கும் மக்காவினருக்கு மறுபடியும் போர் மூண்டது என்று கூறுகிறார்). முஹம்மதுவின் இந்த வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்தது, இஸ்லாமிய திருடர்களால் பல வியாபாரிகள் கொல்லப்பட்டனர். முஹம்மதுவின் இந்த தாக்குதல் போர் சட்டங்களையும் மீறிவிட்டது. முஹம்மது தன் குற்றங்களை நியாயப்படுத்த தனக்கு ஒரு சிறப்புச் செய்தி வருகிறது என்றுச் சொன்னார், இதனை "அல்லாஹ்விடமிருந்து வந்த வெளிப்பாடு" என்று கூறுவர். இந்த நிகழ்ச்சிக் குறித்து நீங்கள் தபரி தொகுப்பு 7, பக்கங்கள் 10-22, மற்றும் LoM (Life Of Muhammad) பக்கங்கள் 181 லிருந்து 189ம் வரையிலான பக்கங்களிலும் படிக்கலாம்.

 
 
இந்த நிகழ்ச்சிகளை நாம் அலசுவோம். வியாபாரிகளுக்கு எதிரான முஹம்மதுவின் இந்த தாக்குதல்கள் வழிப்பறி கொள்ளைகள் (highwaymen's robberies) ஆகும். தற்காலத்தில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன, அதாவது இந்த வழிப்பறி கொள்ளைக்காரர்கள், பொருட்களை கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் வண்டிகளை நிறுத்துவார்கள், சில சமயங்களில் ஓட்டுனர்களை கொன்று விட்டு, வண்டிகளை கொண்டுச் சென்றுவிடுவார்கள், இதனைத் தான் முஹம்மதுவும் அன்று செய்தார். ஆனால், சாதாரண குற்றவாளிகளைப் போல அல்லாமல், முஹம்மது தன் செயல்களுக்கு சாதகமாக தனக்கு அல்லாஹ்விடமிருந்து இதற்காக சிறப்புச் செய்தி கிடைத்தது என்று கூறினார்.

 
முஹம்மதுவின் இந்த செயல்களை நாம் பின்பற்ற தகுதியுடையவைகளாக இருக்கின்றனவா?
 
 
2) வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் கொலை

 
 
மதினாவில் இருந்த எல்லா இனத்தவர்களும், பிரிவினர்களும் முஹம்மதுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அனேகர் இவரது நபித்துவத்தை நிராகரித்தனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த இன மக்களுக்காக வேதனைப்பட்டனர், மற்றும் தான் ஒரு நபி என்று நடித்துக்கொண்டு இருக்கும் முஹம்மது குறித்து விமர்சித்தனர். இவர்களில் ஒருவர் தான் 120 வயதுள்ள முதியவர் அபூ அஃபக் என்பவராவார். அபூ அஃபக் தன் இதயத்தில் இருந்ததை பேசினார் மற்றும் முஹம்மதுவை பின்பற்றும் தன் இனத்தவர்களை கடிந்துக்கொண்டார், இது தவிர அவர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. நம்முடைய தற்காலத்தில் கூட மதத்தின் பெயரில் உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் மதத்தலைவர்களை நாம் எப்படி பார்க்கிறோமோ அது போலத் தான் அபூ அஃபக்கும் முஹம்மதுவை கண்டார். தன் இனத்தவர்களிடம் முஹம்மதுவின் நபித்துவத்தை நம்பாதீர்கள் என்று கூறினார். ஆனால், தன் நபித்துவம் பற்றி எந்த விமர்சனத்தையும் சகிக்கும் நிலையில் முஹம்மது இல்லை, அவர் தனது சகாக்களை அழைத்து அபூ அஃபக்கை கொலை செய்யும் படி கூறினார். ஒரு நாள் இரவு நேரத்தில் அபூ அஃபக் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டார்.

 
 
ஒரு முஸ்லிம் அபூ அஃபக்கின் நெஞ்சில் ஒரு ஈட்டியை பாய்ச்சினார். இந்த கொலைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: http://answering-islam.org/Silas/abu-afak.htm

 
 
முஹம்மது அபூ அஃபக்கிற்கு செய்த குற்றத்திற்கும், சத்தாம் உசேன் தன்னை விமர்சித்தவர்களுக்கு செய்த குற்றத்திற்கும் இடயே இருக்கும் வித்தியாசம் சிறிதளவே. அதாவது, அச்சமயத்தில் முஹம்மது (சத்தாம் உசேனைப் போல) நாட்டின் ஆளுநராக இருக்கவில்லை, அப்படி இருந்தும், தான் ஒரு குற்றவாளியாக இருந்தும், தன்னை ஒரு இராஜாவாக கருதிக்கொண்டு அவர் செயல்பட்டார். சத்தாம் உசேன் மற்றும் முஹம்மதுவின் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மதினாவில் நீங்கள் இருந்திருந்து, அவரது நபித்துவத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் எதிராக நீங்கள் விமர்சித்து இருந்திருந்தால், உங்களை அவர் கொல்லாமல் விட்டு இருக்கமாட்டார். இந்த நிகழ்ச்சிப் பற்றி "Life Of Muhammad" பக்கம் 675ல் படிக்கலாம், மற்றும் தபாகத் தொகுப்பு 2, பக்கம் 32ல் கூட படிக்கலாம்.
 
 
3) ஐந்து பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டாள்

 
 
முஹம்மதுவின் கொடூரமாக கொலைகள் பற்றி அஸ்மா பின்ட் மர்வான் என்ற பெண் விமர்சித்தாள். தன் இன மக்கள் முஹம்மதுவோடு கூட்டு சேர்ந்துள்ளதை அவள் கடிந்துக்கொண்டாள். முஹம்மது மறுபடியும் விமர்சனத்தை எதிர்க்கொண்டார். அவரால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. இந்த முறையும் அப்பெண்ணை கொன்று விடும்படி முஹம்மது கட்டளையிட்டார். இந்த முறையும் ஒரு முஸ்லிம் இரவு நேரத்தில் அப்பெண்ணின் வீட்டில் நுழைந்து அவளை கத்தியால் குத்தி கொலை செய்தார். அந்த நேரத்தில் அவளின் பிள்ளைகளும் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த கொலைப் பற்றிய அதிக விவரங்கள் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: http://answering-islam.org/Silas/asma.htm

 
இந்த பெண் முஹம்மதுவை பயமுறுத்தியிருந்திருப்பாள் இதனால் பயந்து முஹம்மது இந்த பெண்ணை கொலை செய்ய கட்டளையிட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
 
 
4) கடைவியாபாரியின் கொலை

 
 
இஸ்லாமியரல்லாதவர்களோடு முஹம்மது நல்ல உறவுமுறையோடு நடந்துக்கொள்ள அவரால் முடியவில்லை. யூதர்களுடன் அவருடைய நட்புறவு சீக்கிரத்திலேயே மறைந்துவிட்டது. யூதர்கள் இவரின் நபித்துவத்தை நிராகரித்தது இவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. யூதர்களின் விமர்சனத்தை அடக்கவேண்டும் என்று முஹம்மது விரும்பினார். இதன் பயனாக நிகழ்ந்த நிகழ்ச்சியை பாருங்கள்.
 
 
"இறைத்தூதர் கூறினார்: "உங்கள் அதிகாரத்திற்கு உட்படும் அனைத்து யூதர்களையும் கொன்றுவிடுங்கள்". இதனால், முஹய்யிஸா இபின் மஸுத் என்பவர் இபின் சுனன்யா என்ற யூதனின் மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டார். இந்த யூதரோடு அவர்களுக்கு நல்ல சமூக உறவுமுறையும், வியாபார தொடர்புகளும் இருந்திருந்தன. முஹய்யிஸாவின் சகோதரர் ஹுவய்யிஸா என்பவர் ஒரு முஸ்லிமில்லாதவராக இருந்தார், இவர் குடும்பத்தின் மூத்த சகோதராக இருந்தார். முஹய்யிஸா அந்த யூதனை கொன்றதை ஹிவய்யிஸாவிற்கு தெரிந்த போது, அவர் முஹய்யிஸாவை அடிக்க ஆரம்பித்தார், பிறகு அவனை நோக்கி "இறைவனின் எதிரியே, உன் வயிற்றில் இருக்கும் கொழுப்பெல்லாம் அந்த யூதன் மூலமாக வந்த செல்வத்தின் மூலமாக அல்லவா, அப்படியிருந்தும் நீ அவனை கொன்றுவிட்டாயே" என்று கூறினார். இதற்கு பதிலாக யூதனைக் கொன்ற முஹய்யிஸா (தம்பி) "அந்த யூதனை கொல்லச் சொன்னவர் உன்னைக் கொல்லும் படி சொல்லியிருந்தால், நான் உன்னையும் கொன்று இருப்பேன்" என்று கூறினார். (Life of Mohamamd பக்கம் 369)
 
 
இதே நிகழ்ச்சி சுனான் அபூ தாவுத் என்ற ஹதீஸ் தொகுப்புகளில் கூட கூறப்பட்டுள்ளது, தொகுப்பு 19, எண் 2996:
 
 
முஹய்யிஸா கூறியது: "அல்லாஹ்வின் இறைத்தூதர் "யூதர்களின் மீது உனக்கு வலிமை கிடைக்குமானால், அவர்களை கொன்றுவிடு" என்றுச் சொன்னார். ஆகையால், முஹய்யிஸா சுபய்யாஹ் என்ற யூத வியாபாரியின் மீது பாய்ந்து அவரை கொன்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இருந்தும், அவர் யூதனை கொன்றுவிட்டார். முஹய்யிஸாவின் சகோதரனாகிய ஹுவய்யிஸா இன்னும் இஸ்லாமியராக ஆகாமல் இருந்தார். இவர் முஹய்யிஸாவை விட வயதில் மூத்தவராவார். அவன் யூதனை கொன்ற போது, ஹுவய்யிஸா அவனை (தம்பியை) அடித்து "அல்லாஹ்வின் எதிரியே, நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், நீ கொன்ற அந்த யூதனின் செல்வத்திலிருந்து அதிகபடியான கொழுப்பு உன் வயிற்றில் இருக்கிறது" என்று கூறினான்.
 
 
(முஹம்மதுவின் செயல்கள் அல்லது போதனைகள் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தான் சுனான் அபூ தாவுத் ஆகும்)

 
 
முஹம்மதுவின் இந்த கட்டளை "உங்கள் கையின் ஆளுகைக்குள் கிடைக்கும் எந்த யூதனையும் கொன்றுவிடுங்கள்" மிகவும் சகிப்புத்தன்மையற்றது,. முஹம்மது நீதியோடும், நியாயத்தோடும் சிந்திக்கவில்லை. இதற்கு பதிலாக அவர் கொலை செய்யவும், தன் நபித்துவத்தை மறுக்கும் அனைவரையும் பயமுறுத்தவும் தலைப்பட்டார். இதே போலத்தான் இன்றுள்ள அடிப்படைவாத முஸ்லிம்களும் கூறுகிறார்கள் "எல்லா அமெரிக்கர்களையும், பிரிட்டீஷ்காரனையும் அல்லது யூதனையும் கொன்றுவிடுங்கள்...". அதாவது யார் யாரெல்லாம் தங்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்களோ அவர்களை கொல்லும் படி முஹம்மது சொன்னதுபோலவே, தற்கால அடிப்படைவாதிகளும் கூறுகிறார்கள். முஹம்மது அக்காலத்தில் எதை செய்தாரோ அதனையே இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 
முஹம்மதுவின் இந்த கீழ்தரமான செயல்கள் பின்பற்றத்தகுந்தவைகளா? மனிதன் என்றுச் சொல்கிறவன் இதைவிட நல்ல செயல்களைச் செய்யலாம் அல்லவா?
 
 
5) கஜானாவை அடையும் படி கொடுமைப்படுத்தி கொலை செய்த முஹம்மது

 
 
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஹம்மது கெய்பர் நகரத்தை கைப்பற்றிய விவரம் குறித்து அலி சினா எழுதிய கட்டுரையைக் குறித்து குறிப்பிட்டு இருந்தேன். இதோ அந்த கேவலமான கொலைப் பற்றிய முழு விவரங்கள்:
 
 
கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான் (T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் "நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள் (Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (LoM Page 515)
 
 
நாம் இப்போது முழு விவரங்களையும் ஆராய்வோம். முஹம்மது கெய்பர் என்ற பட்டணத்தை தாக்கி அதனை கைப்பற்றினார். அந்த பட்டணத்தில் பொக்கிஷங்கள் அல்லது பூமிக்குள் மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷங்கள் இருக்கின்றன என்ற ஒரு வதந்தி இருந்தது. முஹம்மதுவிடம் கினானா என்ற பெயர் கொண்ட ஒரு யூத தலைவன் கொண்டு வரப்பட்டான். அவனிடம் அந்த பொக்கிஷம் இருக்கும் இடம் பற்றிய விவரம் கேட்கப்பட்டது. அவன் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றுச் சொன்னான். பண ஆசை பிடிந்த முஹம்மது அம்மனிதனை கொடுமைப்படுத்த கட்டளையிட்டார். அவனின் மார்பில் நெருப்பு வைத்தார்கள், இதன் வலியினால் அவன் பொக்கிஷம் உள்ள இடத்தை சொல்லக்கூடும் என்று எண்ணினார்கள். ஆனால்,கினானா புதைக்கப்பட்ட எந்த பொக்கிஷம் பற்றி எதுவும் சொல்லவில்லை. கடைசியில், அவன் தலை துண்டித்து விடுங்கள் என்று முஹம்மது கட்டளையிட்டார்.

 
முழு மனித இனமும் பின்பற்றத் தகுந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இதுதானா?

 
 
இந்த நிகழ்ச்சி பற்றிய ஆழமான விவரங்களுக்காக இந்த கட்டுரையை படிக்கவும்: http://answering-islam.org/Silas/kinana.htm.
 
 
முடிவுரை

 
 
முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா? ஆம், இதில் என்ன சந்தேகம். இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து மட்டுமே ஆதாரங்கள் காட்டப்பட்டன என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். முஹம்மது செய்த இன்னும் அனேக குற்றங்களை நாம் பட்டியலிட முடியும். இந்த கட்டுரை மிகவும் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் ஐந்து எடுத்துக்காட்டுகளை மட்டுமே முன்வைத்தேன்.

ஆம், முஹம்மது ஒரு தீவிரவாதி தான்.

ஆம், தீவிரவாதம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆம், இஸ்லாமை நிராகரிக்கும் ஒவ்வொருவரோடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சண்டையிட ஆயத்தமாகியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் இஸ்லாமிய சட்டப்பூர்வமான ஆயுதம் தீவிரவாதமாகும்.

 
 
இஸ்லாமிய வன்முறை மற்றும் ஜிஹாத் பற்றி ஆழமாக நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், மற்றும் ஜிஹாத் எப்படி காலப்போக்கில் மாறியது என்பதைப் பற்றி அறிய இந்த நீண்ட கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளவும்: http://answering-islam.org/Silas/jihad.htm
 
 
ஒரு முக்கியமான கேள்வி:

 
 
அக்கால இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாக்கம் இக்கால இஸ்லாமில் எப்படி உள்ளது? இக்காலத்தில் அனேக இஸ்லாமியர்கள் இஸ்லாமை அன்று முஹம்மது எப்படி அதனை பரப்பினாரோ அது போல பரப்ப முயற்சி எடுக்கிறார்கள், அதாவது, வன்முறை மூலமாக. பயங்கரவாதத்தோடு கூடிய வன்முறை குர்ஆனினாலும், ஹதீஸ்களினாலும் முஹம்மதுவின் செயல்களினாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீவிரவாத இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் அடிச்சுவடிகளில் நடந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 
 
இஸ்லாமிய தீவிரவாதிகள் முழு உலகத்திலும் இதுவரை என்ன செய்துள்ளார்கள், இனி என்ன செய்ய உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

 
 
இந்த தீவிரவாத பயங்கரவாதம் என்பது இஸ்லாமின் கோட்பாடுகளில் ஒன்றர கலந்துள்ளதால், இன்று, இன்னொரு ஒசாமா பின் லாடன், ஜான் வாக்கர் லின்ந், அல்லது ஜான் முஹம்மது, போன்றவர்களை உருவாக்க அடித்தளம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை அறிய உங்களுக்கு அதிக நாட்கள் பிடிக்காது. ஆனால், நாளை!?! (கவனிக்கவும்: இந்த தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் அல்ல, தீவிரவாதிகள் அரபியர்களாகவும், வெள்ளைக்காரர்களாவும் கருப்பின மக்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் எல்லா இன மக்களிடமும், ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் காணப்படுகிறது)
 
 
ஒரு விசித்தரமான கேள்வி:

 
 
முஹம்மது தன்னை நிராகரித்தவர்களிடம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்துக்கொண்டார்? நான் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்து புரிந்துக்கொண்டதால், அவரை முதன் முதலில் சந்தித்த அந்த காபிரியேல் என்ற தூதன் என்றுச் சொல்லக்கூடிய அந்த ஆவியினால் அவர் அடைந்த பயம் தான் என்று நான் நம்புகிறேன். இந்த ஆவி தான் அவரை முதன் முதலில் குகையில் சந்தித்து அவரை பயப்படவைத்தது, மற்றும் முதல் "வெளிப்பாட்டைக்" கொடுத்தது. இந்த அனுபவம் முஹம்மதுவின் மனதில் எவ்வளவு தாக்கம் உண்டாக்கியது என்றால், அதன் பிறகு சில ஆண்டுகள் அவர் அடிக்கடி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுக்கும் அளவிற்கு அது அவரை பாதித்தது. தன் நபித்துவத்தை யாராவது நிராகரித்தால், அவர்களை பழிக்கு பழி வாங்கினார், ஏனென்றால், இது அவரது அந்த பயமுள்ள அனுபவத்தோடு சம்மந்தப்பட்டது என்பதினால் என்று நான் நம்புகிறேன். முஹம்மது பிசாசினால் ஆளப்பட்டு இருக்கவேண்டும், அல்லது அதைக் கண்டுபயந்து இப்படி செய்திருக்கவேண்டும் அல்லது அவர் பயித்தியமாக மாறியிருப்பார். அந்த ஆவியின் அனுபவத்தை சந்திக்க அவரால் முடியவில்லை, எனவே தன் நபித்துவத்தை நிராகரிக்கும் நபர்களை இவர் கொன்று தீர்த்தார். தன்னைப் பொருத்தவரையில் தான் ஒரு அல்லாஹ்வின் நபி அல்லது பிசாசு பிடித்தவர்.

 
 
இன்னொரு தற்கொலை முயற்சி அவர் எடுக்காமல் இருப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தான் ஒரு நபி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டு இருப்பது தான்.

 
 
முஹம்மதுவின் தற்கொலை முயற்சி பற்றி இன்னும் ஆழமாக அறிய படிக்கவும்:

 
 
 
முஸ்லிம்களுக்கு சவால்

 
 
இப்படிப்பட்ட நபரையா நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இவர் மீது வைக்கும் நம்பிக்கையா சொர்க்கத்தின் வாசல்வரை உங்களை கொண்டுச் செல்லும்? நாம் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டை இயேசுவின் வாழ்க்கையில் இறைவன் காண்பித்துள்ளார், நான் அல்ல.

 
 
உண்மையைச் சொல்கிறேன், முஹம்மதுவை விட நல்ல குணநலன்களோடும், அவரை விட அதிக அன்போடும், மன்னிக்கும் சுபாவத்தோடும் அவரை விட நல்ல நடத்தையுடனும் இருக்கின்ற மனிதர்கள் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நாம் பின்பற்றக்கூடிய அளவிற்கு நல்ல நடக்கையுடன் இருக்கின்ற வேறு ஒரு நபரை இறைவன் தெரிந்தெடுத்து இருப்பார், முஹமம்துவை நிச்சயமாக இறைவன் தெரிந்தெடுத்து இருக்கமாட்டார்.
 
 
மீட்புக்காக ஒரு விண்ணப்பம்

 
இந்த ஜெபம் அல்லது விண்ணப்பம் எல்லாருக்காக எழுதப்படுகிறது. இதில் உண்மையை அறிய விரும்பும், இறைவனோடு ஒரு தனிப்பட்ட நட்பை வைக்க விரும்பும் இஸ்லாமியர்களும் அடங்குவர்.

 
 
"எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன். நீர் இறைக்குமாரன் என்றும் ஆண்டவர் என்றும் நம்புகிறேன். நீர் என் குற்றங்களுக்காக மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தீர் என்பதை நம்புகிறேன். நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என் உள்ளத்தில் வரும்படி உம்மை அழைக்கிறேன். என் குற்றங்களிலிருந்து என்னை கழுவும் என் குற்றங்களை மன்னியும். நான் உம்மை பின்பற்ற மற்றும் கீழ்படிய விரும்புகிறேன். என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன். நீர் என் மஸிஹா என்று நான் அங்கீகரிக்கிறேன், என் வாழ்க்கை முழுவதும் உமக்கே அர்பணிக்கிறேன்." ஆமென்.

மாரநாதா, வாரும் இயேசு ஆண்டவரே.
 
 
செப்டம்பர் 25, 2003

 
 
ஆங்கில மூலம்: Was Muhammad a Terrorist?

 
 

© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 
 
 

November 24, 2009

இஸ்லாம் பற்றிய உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?



ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

 இஸ்லாம் பற்றிய உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?

தேதி:
டிசம்பர் 4, 2004

 
தலைப்பு: வெறுப்பு

 
அன்பான‌ "ஆன்சரிங் இஸ்லாம் தள‌குழுவினரே", உங்கள் தளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டக்கூடியதாக தெரிகிறது. ஏன் நீங்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதக்கூடாது, அதாவது ஓர் இறைக்கொள்கையைப் பற்றி இன்னும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதலாமே. உங்களுக்கு ஒரு அமைதியான உலகம் தேவையானால், எங்களுடன் சகோதர அன்பில் கைகளைக் கோர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய‌வெறுப்புணர்ச்சி என்ற தீயை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

 
நம்முடைய பதில்:

 
 
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 
 
உங்கள் மனவேதனையை தெரிவிக்க நேரம் ஒதுக்கியமைக்காக உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் ஆசிரியர்களின் ஒரு நபராக நான் என் கருத்தைச் சொல்கிறேன், அதாவது இந்த தளத்தில் எழுதும் அனைவரும் இஸ்லாமிய மக்களாகிய உங்கள் மீது தூய‌அன்பும் அக்கரையும் கொண்டுள்ளவர்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான காலம், அதாவது 23 ஆண்டுகளை 98 சதவிகிதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் பட்டணத்தில் கழித்துள்ளோம். எங்களுக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதிகமாக நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்துக்கொண்டு, கைகோர்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டு, எங்களுக்கு இடையே இருக்கும் பொதுவான விவரங்களை மட்டும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று பொருள் அல்ல. இல்லை, நாங்கள் வீணாக காலம் கழிக்க பொதுவானவைகளை மட்டும் பேசுவதில்லை. நாங்கள் எங்கள் இஸ்லாமிய நண்பர்களை நேசிக்கிறோம், அதனால், தேவனுடைய வசனங்களை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். ஒரு வேளை, அவர்களின் சிறுவயது முதல் அவர்களுக்கு போதிக்கப்பட்டவைகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, சத்தியத்தை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். சத்திய வேதம் கூறுகிறது "மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும், வெளிப்படையான அடிந்துக்கொள்ளுதல் நல்லது" (நீதிமொழிகள் 27:5) மற்றும் "பரியாசக்காரனை கடிந்துக்கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள், அவன் உன்னை நேசிப்பான்" (நீதிமொழிகள் 9:8)

 
 
நம்மில் ஒவ்வொருவரும், "வெறுப்புணர்ச்சியை பரப்புவது" மற்றும் "உண்மை அன்புடன் சத்தியத்தை சொல்லுவது" (எபேசியர் 4:15) என்பவைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பகுத்தறிய கற்றுக் கொள்ளவேண்டும். கண்பார்வை இல்லாத ஒரு மனிதன், ஒரு ஆபத்தான இடத்தில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கிறார் என்பதைக் காணும் போது, அவரை எச்சரித்து சரியான வழியைக் காட்டுவது "வெறுப்புணர்ச்சி" ஆகுமா அல்லது "அன்புடன் எச்சரிப்பது ஆகுமா?" சொல்லுங்கள்.

 
 
சாலொமோன் நபி இவ்விதமாக கூறுகிறார்: "மனுஷனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரண வழிகள்" (நீதிமொழிகள் 14:12). இப்படி எச்சரிக்கும் வார்த்தைகளை நீங்கள் "வெறுப்புணர்ச்சியை தூண்டும்" வார்த்தைகள் என்பீர்களா அல்லது அக்கரையுள்ள வார்த்தைகள் என்பீர்களா?

 
 
மஸிஹா இயேசு கூறுகிறார்: "... நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாய் இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்,ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு" (வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18;3:19).

 
 
மேற்கண்ட விதமாக இயேசு கடிந்துக்கொண்டு கூறுவதினால், அவர் "வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறார் அல்லது வெறுக்கிறார்" என்று பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 
 
நீங்கள் இதனை அங்கீகரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்: அதாவது ஒரு நபர் மீது நீங்கள் அக்கரை உள்ளவராக இருந்தால், அவர் துக்கப்படுவார் என்று தெரிந்திருந்தாலும், அவருக்கு நிச்சயமாக உண்மையை கூறுவீர்கள். இப்போது இதனை கவனியுங்கள்...

 
 
இஸ்லாமியர்கள் முஹம்மது என்ற ஒரு மனிதர் சொன்னதை மட்டுமே நம்புகிறார்கள். ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கட்டுரை எழுதுபவர்கள் அனைவரும், பதுகாக்கப்பட்ட பரிசுத்த வேதமாகிய பைபிளை நம்புகிறார்கள், பைபிளில் நாற்பதுக்கும் அதிகமான தீர்க்கதரிசிகளால் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் உள்ளன, மற்றும் அவைகளை அப்போஸ்தலர்கள் கூட அங்கீகரித்துள்ளனர். ஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்து தீர்க்கதரிசனங்களையும், இயேசுவாகிய மேசியாவினால் நிறைவேறியது. ஆனால், முஹம்மது ஒரு புதிய செய்தியைக் கொண்டுவந்தார். இறைவனின் உண்மையான வேதம் பைபிள் தான் என்றும், குர்ஆன் உண்மையான வேதம் இல்லை என்றும் நாங்கள் 100 சதவிகிதம் நம்புகிறவர்களாக இருந்தும், இந்த உண்மையை இதர மக்களுக்குச் சொல்ல ஒரு சிறு முயற்சியையும் நாம் எடுக்கவில்லையானால், நாங்கள் எப்படிப்பட்ட துர்பாக்கிய மக்களாக இருப்போம். இதன் மூலமாக உண்மை எது பொய் எது என்று மக்களுக்கு புலப்படுமே.

 
 
துரதிஷ்டவசமாக, இஸ்லாமின் செய்திக்கும், பைபிளின் செய்திக்கும் பொதுவாக இருப்பது சொற்ப விவரங்களே! இவ்விரண்டு புத்தகங்களும் இறைவனுக்காக பேசுகின்றன. ஆனால், இரண்டும் அடிப்படியிலேயே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. நம்முடைய வாழ்வு குறுகியது, ஆனால், நித்தியம் என்பது நீண்டது, இதனால், பொய்யான அமைதியை நம்பாமல் இருப்போமாக. நாம் கணக்கு ஒப்புவிக்க ஒரு நாள் சர்வ வல்லவராம் இறைவனின் முன்பு நிற்பதற்கு முன்பாக அவரோடு ஒப்புரவாகி, சமாதானம் அடைந்தோமா இல்லையா என்பது தான் முக்கியமானது.

 
 
இந்த சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். ஒரு வேளை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் பதித்த கட்டுரைகளில் உண்மைக்கு புறம்பான விவரம் இருக்குமானால் அதனை எங்களுக்கு அறியத் தாருங்கள். எங்கள் தளம் கீழ்கண்ட வாக்குறுதியைத் தருகிறது:
 
 
If you find any factual mistakes [whether misprints or a false representation of doctrines] on these pages, or things that are worded in an offensive way, contact us, we would like to correct that. See our site policies.
 
 
இந்த வாக்குறுதியில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எங்கள் தளத்தில் உண்மைக்கு புறம்பான விவரம் இருப்பதாகவோ அல்லது "வெறுப்பை" வளர்க்கும் விதமாக விவரங்கள் இருப்பதாகவோ நீங்கள் கண்டால், அதனை தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். ஆனால், சரியாக குறிப்பிட்டு எழுதுங்கள். அதாவது, எந்த கட்டுரையில் நீங்கள் பொய்யையும், வெறுப்பையும் கண்டீர்கள் என்றும், மற்றும் ஏன் அக்கட்டுரை வெறுப்பானதாக தெரிகிறது என்பதையும் தெளிவாக எழுதுங்கள். இப்படி தெளிவாக நீங்கள் எழுதாக பட்சத்தில், இவர்கள் வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சொல்வதை நிறுத்தி விடுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

 
 
இதற்கு இடையில், அன்பு என்றால் என்ன என்பதை தேவன் எப்படி கூறுகிறார் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன் (அன்புக்கு நேர் எதிரானது வெறுப்பு ஆகும்):

 
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும்,
அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
 
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,
சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும்,
மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,
அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 
 
 
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும்,
என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,
அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 
 
 
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;
அன்புக்குப் பொறாமையில்லை;
அன்பு தன்னைப் புகழாது,
இறுமாப்பாயிராது, 
அயோக்கியமானதைச் செய்யாது,
தற்பொழிவை நாடாது,
சினமடையாது,
தீங்கு நினையாது,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,
சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்.
 
 
அன்பு ஒருக்காலும் ஒழியாது.... (1 கொரிந்தியர் 13ம் அதிகாரம்)

 
 
எங்கள் தளம் "அன்பு" என்ற வார்த்தைக்கு தேவன் கொடுத்த விளக்கத்திற்கு பொருந்துகிறதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

 
தாழ்மையுடன்
பிராஹிம்

 
ஆங்கில மூலம்: Does telling the truth equal spreading hatred?

 

© Answering Islam, 1999 - 2009. All rights reserved
 
 

November 21, 2009

இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு

 
திமிட்ரியஸ் & ஷாம் ஷமான்
 
 

இறைவனின் பரிசுத்த வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் "மற்றவர்களின் மனைவிகள் மீது விருப்பம் கொள்வதை" கண்டிக்கிறது.

 
 
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)
 
 
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 
 
 
இன்னும் மற்றவனின் மனைவி மீது மோகம் கொள்வபவன் "விபச்சாரம்" என்ற பாவத்தை செய்பவனாக கருதப்படுவான் என்று பைபிள் சொல்கிறது.
 
 
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 
 
 
முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைகளை அல்லாஹ் கொடுத்துள்ளார், இது வேறு யாருக்கும் தரப்படவில்லை என்று குர்ஆன் சொல்கிறது.
 
 
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (குர்ஆன் 33:50) 
 
 
இன்னும், ஜையத் தன் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், அல்லாஹ் அந்தப் பெண்ணை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக குர்ஆன் கூறுகிறது.
 
 
 
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (குர்ஆன் 33:37-38) 
 
 
இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, இந்த ஜையத் என்பவர் "ஜையத் இபின் ஹரிதா" என்பவராவார். இவர் முஹம்மதுவின் முதல் மனைவியாகிய கதிஜாவின் முன்னால் அடிமையாவார். பிறகு இவரை தன் வளர்ப்பு மகனாக முஹம்மது தத்து எடுத்துக்கொண்டார். இஸ்லாமிய நூல்களில் சொல்லியிருக்கிற படி, ஒரு முறை முஹம்மது ஜையத்தை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற போது, ஜையத்தின் மனைவியாகிய ஜையத் பி. ஜேஷ் என்பவரை திரையில்லாமல் காண்டுவிட்டார் மற்றும் அவரின் அழகில் மயங்கிவிட்டார். முஹம்மது தன் அழகை புகழ்வதை ஜைனப் கேள்விப்பட்டார் அதனை தன் கணவருக்கும் தெரிவித்தார். இந்த செயல் ஜையத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது, இதனால், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார், இதன் மூலம் முஹம்மவது தன் மனைவியை திருமணம் செய்யமுடியும் என்று கருதினார். இந்த தலைப்பு பற்றிய விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்.

 


 
 
சிறந்த இஸ்லாமிய விரிவுரையாளர்களில் ஒருவராக கருதப்படும், "அல் குர்துபி (al-Qurtubi)" என்பவர், முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த "சலுகைகளை" பட்டியலிடுகிறார். இஸ்லாமிய விரிவுரையாளர் அல் குர்துபி அவர்கள் சூரா 33:50க்கு கொடுத்த விரிவுரையை கீழே காணலாம். (எழுத்துக்களில் தடிமனம் (bold), மற்றும் அடிக்கோடு (underline) நம்முடையது)

 
 
…அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)…
 
 
 
இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
 
 
 
 
1) போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்

 
 
2) போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

 
 
3) அல் விசல் - Al Wisal (திமிட்ரியஸ்: இது நோம்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)

 
 
4) நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்

 
 
5) தன்னை முஹம்மதுவிற்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்தபெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").

 
 
6) ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")

 
 
7) மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").

 
 
8) மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.

 
 
9) தான் செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள அனுமதியுண்டு.

 
 
10) முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யவேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு பரிசுத்த மசூதிகளின் தாசரும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".

 
 
11) இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.

 
 
12) மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.

 
 
13) மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.

 
 
14) அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத்தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் "சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.

 
 
15) முஹம்மதுவின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.

 
 
16) ஒரு பெண்ணை முஹம்மது விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்துக்கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
 
 
 
"Yas-tan-kih" என்ற வார்த்தை "Yan'kah" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, "Ajab" என்ற வார்த்தையை "Ista-jab" என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை "Nakaha" மற்றும் "Istan-kaha" என்றும் கூறலாம். "என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?" அல்லது "என்னோடு உடலுறவு கொள்கிறாயா?" என்று பொருள்படும்படி கூற‌ "Istan-kaha" என்ற‌ வார்த்தையை பயன்படுத்த‌ அனுமதியுண்டு. (ஆதாரம்).

 
அரபி மூலம்:
 
 
 
وَأَمَّا مَا أُحِلَّ لَهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَجُمْلَته سِتَّة عَشَرَ : الْأَوَّل : صَفِيّ الْمَغْنَم . الثَّانِي : الِاسْتِبْدَاد بِخُمُسِ الْخُمُس أَوْ الْخُمُس . الثَّالِث : الْوِصَال . الرَّابِع : الزِّيَادَة عَلَى أَرْبَع نِسْوَة . الْخَامِس : النِّكَاح بِلَفْظِ الْهِبَة . السَّادِس : النِّكَاح بِغَيْرِ وَلِيّ . السَّابِع : النِّكَاح بِغَيْرِ صَدَاق . الثَّامِن : نِكَاحه فِي حَالَة الْإِحْرَام . التَّاسِع : سُقُوط الْقَسْم بَيْن الْأَزْوَاج عَنْهُ , وَسَيَأْتِي . الْعَاشِر : إِذَا وَقَعَ بَصَره عَلَى اِمْرَأَة وَجَبَ عَلَى زَوْجهَا طَلَاقهَا , وَحَلَّ لَهُ نِكَاحهَا . قَالَ اِبْن الْعَرَبِيّ : هَكَذَا قَالَ إِمَام الْحَرَمَيْنِ , وَقَدْ مَضَى مَا لِلْعُلَمَاءِ فِي قِصَّة زَيْد مِنْ هَذَا الْمَعْنَى . الْحَادِيَ عَشَرَ : أَنَّهُ أَعْتَقَ صَفِيَّة وَجَعَلَ عِتْقهَا صَدَاقهَا . الثَّانِي عَشَرَ : دُخُول مَكَّة بِغَيْرِ إِحْرَام , وَفِي حَقّنَا فِيهِ اِخْتِلَاف . الثَّالِث عَشَر : الْقِتَال بِمَكَّة . الرَّابِع عَشَر : أَنَّهُ لَا يُورَث . وَإِنَّمَا ذُكِرَ هَذَا فِي قِسْم التَّحْلِيل لِأَنَّ الرَّجُل إِذَا قَارَبَ الْمَوْت بِالْمَرَضِ زَالَ عَنْهُ أَكْثَرُ مِلْكه , وَلَمْ يَبْقَ لَهُ إِلَّا الثُّلُث خَالِصًا , وَبَقِيَ مِلْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا تَقَرَّرَ بَيَانه فِي آيَة الْمَوَارِيث , وَسُورَة " مَرْيَم " بَيَانه أَيْضًا . الْخَامِسَة عَشَر : بَقَاء زَوْجِيَّته مِنْ بَعْد الْمَوْت . السَّادِس عَشَر : إِذَا طَلَّقَ اِمْرَأَة تَبْقَى حُرْمَته عَلَيْهَا فَلَا تُنْكَح .

" أَنْ يَسْتَنْكِحهَا " أَيْ يَنْكِحهَا , يُقَال : نَكَحَ وَاسْتَنْكَحَ , مِثْل عَجِبَ وَاسْتَعْجَبَ , وَعَجِلَ وَاسْتَعْجَلَ . وَيَجُوز أَنْ يَرِد الِاسْتِنْكَاح بِمَعْنَى طَلَب النِّكَاح , أَوْ طَلَب الْوَطْء .
 
 
முடிவுரை
 
 
முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனேக சலுகைகளைக் கொடுத்தார், இவைகளில் சில சலுகைகள் அல்லாஹ்வின் கட்டளைகளை முறித்தும் விடுகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான்கிற்கும் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளும் சலுகையைச் சொல்லலாம். மேலே நாம் கண்ட சலுகைகளில் மிகவும் தர்மசங்கடமான சலுகை என்னவென்றால், முஹம்மது ஒரு பெண்ணை விரும்பினார் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யச் சொல்லும் சலுகையாகும். இந்த விளக்கம் தவறானது, இது அல் குர்துபி அவர்களின் தவறான விரிவுரை/விளக்கமாகும் என்றும், அல்லாஹ் முஹம்மதுவிற்கு ஜைனப்பை திருமணம் செய்து ஜையத்தை விவாகரத்து செய்தவிதம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமியர்கள் வாதம் புரியமுடியாது. ஏனென்றால், இஸ்லாமியபாரம்பரிய நூல்கள் மேலதிக விவரங்களை நமக்குத் தருகின்றன, அதாவது, ஜைனப்பை முதலில் முஹம்மது ஆசைப்பட்டார் இதனால் ஜையத் விவாகரத்து செய்ய நேரிட்டது என்று தெளிவாக பாரம்பரியங்கள் விளக்குகின்றன.

 
 
இதுமட்டுமல்ல, இன்னும் விஷயம் மோசமாக மாறுகிறது, அதாவது சில குறிப்பிட்ட இடங்களில் குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.
 
 
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24) 
 
 
இந்த வசனம் முஹம்மதுவிற்கும், மற்றும் எல்லா முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதினால், முஹம்மதுவும், இதர இஸ்லாமியர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த அல்லது தங்களிடம் அடிமைகளாக இருக்கும் திருமணமான இதரபெண்களோடு விபச்சாரம் செய்ய (உடலுறவு) கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

 
 
இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு. இந்த தலைப்பு பற்றிய விவரங்கள் அறிய இக்கட்டுரையை படிக்கவும்.

 
 
ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் தன் இறைத்தூதர் தன் அயலானின் மனைவி மீது ஆசைக் கொள்ள அனுமதித்துள்ளார் இதனால் அவர் தன் உள்ளத்தில் விபச்சாரம் செய்துள்ளார்.(உண்மையில் இந்த பெண் முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியாவாள்). இதுமட்டுமல்லாமல், அல்லாஹ் முஹம்மதுவோடு கூட, இதர இஸ்லாமியர்களும் (இன்றைய இஸ்லாமியர்களும்) தங்களுக்கு போரில் கிடைக்கும் திருமணமான பெண்களோடு அல்லது அடிமைப்பெண்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். உண்மையான இறைவேதமாம் பைபிளின் வெளிச்சத்தில் இதை கண்டால், அல்லாஹ் என்பவர் ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் இல்லை என்றும், முஹம்மது என்பவர் ஒரு "உண்மையான இறைத்தூதர் (தீர்க்கதரிசி) இல்லை" என்றும் நாம் முடிவு எடுக்க தள்ளப்படுகிறோம்.
 
 

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள், விவாதங்களை இங்கு படிக்கவும்:
 
 
 
 
 
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 

November 20, 2009

முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்



 

முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள்

 

முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்

 

ஷாம் ஷமான்

 
அதிகார‌பூர்வமானதாக‌ கருதப்படும் ஹதீஸ்களின்படி, முஹம்மது தொழுகையில் (நமாஜ்) இருக்கும் போது, யாராவது அவருக்கு சலாம் (வணக்கம்) கூறினால், உடனே அவர்களுக்கு அவர் சலாம் கூற மறுத்துள்ளார். 

 
கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவும்:
 
 
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3875
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
 
 
நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக! தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது" என்று பதிலளித்தார்கள்.
 
 
 
 
பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1217
ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
 
 
அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர். 
 
 
 
இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுதுக்கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப்போகிறது? 

 
 
ஆனால், முஹம்மது இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முஹம்மது அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ விவரம் என்ன‌வென்றால், அந்த‌ முஸ்லீம் தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்!
 
 
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4647
அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

 
 
நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்  அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். பிறகு, 'நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்' என்று கூறினார்கள்.
 
 
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5006
அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

 
 
நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் '(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள். 
 
 
தன்னை படைத்த இறைவனை தொழுதுக்கொள்ளும் செயலைவிட தனக்கு மதிப்பு அதிகமாக தரவேண்டும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த விவரம் பற்றி மேலதிக விவரங்களுக்காக‌ கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்: 
 
 
 
 
இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் முரண்பட்ட செயலுக்கான இன்னொரு உதாரணமாகும். அதாவது தான் எதை பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே (முஹம்மதுவே) பின்பற்றவில்லை. தன்னை பின்பற்றுகிறவர்கள் தங்கள் தொழுகையை பாதியிலே நிறுத்திவிட்டு, தனக்கு பதில் தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், ஆனால் அதே போல அவர்களுக்கு இவர் செய்யவில்லை. 

 
 
ஆங்கில மூலம்: Muhammad and the (non-)Priority of Prayer
 
 
ஷாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved
 
 
 

October 22, 2009

Live Assembly Election Leads Update

 
Live Assembly Election Leads Update


 Maharashtra Leads Wins
  Cong + NCP 143 
  BJP + Shiv Sena 91 
  MNS 13 
  Others 38 
 Total 4  285 
 Haryana Leads Wins
  Congress 40 
  INLD + 32 
  BJP
  Others 14 
 Total 0  90 
 Arunachal Pradesh Leads Wins
  Congress 41 
  BJP
  Others 15 
 Total 1  58 

September 28, 2009

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?



பொதுவான கேள்விகளுக்கான தொடர் பதில்கள்

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

ஷாம் சாமான்
 
 
கேள்வி:


சுவிசேஷ நூல்களில், இயேசு சாப்பிட கனிகள் ஏதாவது இருக்குமா என்று பார்க்க ஒரு அத்திமரத்தினிடம் செல்கிறார் (மத் 21:18-22; மாற்கு 11: 12-14, 20-21). அந்த மரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டபோது அவர் அந்த மரத்தை சபித்தார். இந்த சம்பவத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மாற்கு 11:13ம் வசனத்தின் படி, அந்த காலம் அத்தி மரம் கனி கொடுக்கிற காலமல்ல. இயேசு "இறைவனாக" இருந்தால் "அது அத்திப் பழத்திற்கான காலம் (Season) இல்லை" என்பதை ஏன் அறியாதிருந்தார்? அந்த காலம் அத்திப் பழ காலமாக இல்லாமலிருந்தது மரத்தினுடைய குற்றமாகாதபோதும் அதை அவர் ஏன் சபிக்க வேண்டும்?
 
 
பதில்:

 
அத்திமர காலமாக இல்லாதபோதும் இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார் என்பதற்கு சரியான காரணம் உள்ளது. அத்திமரமானது கனி காலம் (Season) தொடங்குவதற்கு முன்பே சிறிய உருண்டை வடிவிலான அத்தி கனிகளை கொடுக்கும், அதை வழிப்போக்கர்கள் உண்பார்கள். புகழ்பெற்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் காலஞ் சென்ற எப்.எப். புரூஸ் (F.F. Bruce) அவர்கள் கிழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்:
 
 
'இயேசு செய்த இன்னொரு அற்புதம் என்னவென்றால் "கனிகொடாத அத்தி மரத்தை சபித்த அற்புதமாகும்." (மாற்கு 11:12-14), இந்த அற்புதம் அநேகருக்கு ஒரு இடறுதலாக காணப்படுகிறது. அவர்கள், இந்த அற்புதத்தை இயேசு செய்து இருக்கமாட்டார், யாரோ ஒருவர் "நடந்ததை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும்", அல்லது ஒரு உவமையாக சொல்லப்பட்டதை நடந்த ஒரு அற்புதமாக திரித்துக் கூறியிருக்கிறார்கள், அல்லது அதைப் போல ஏதாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். மற்றொருபுறம், சிலர் அந்த சம்பவத்தை வரவேற்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கு இந்த சம்பவமானது இயேசுவும் சில சந்தர்ப்பங்களில் காரணமில்லாமல் கோபப்படக் கூடிய சாதாரண ஒரு மனிதனே என்று காட்டுகிறது என்று நம்புகிறார்கள். எப்படியிருந்தாலும், அத்திமரத்தைப் பற்றிய புரிந்துக்கொள்ளுதல் அல்லது முழு அறிவு கிடைக்குமானால் இப்படிப்பட்ட தவறான விளக்கங்கள் தடுக்கப்பட்டிருக்கும். "அத்திப்பழக் காலமாயிரதாபடியால்" என்று மாற்கு எழுதுகிறார், ஏனென்றால் அது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக, "நல்ல அத்திப்பழமாக முழுமையடைவதற்கு" ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன் நடந்தது. உண்மையாக, இந்த வார்த்தைகளை அவர் சேர்ப்பதன் மூலம் தான் எதைப்பற்றிச் சொல்லுகிறார் என்பதை மாற்கு நன்கு அறிந்திருந்தார்.மார்ச் மாத இறுதியில் அத்தி இலைகள் காணப்படும் போது அவைகளோடு சேர்ந்து கொத்தாக சிறிய உருண்டை அத்திப்பழங்களும் தோன்றும், அதை அரபியர்கள் "டக்ஷ்" (taqsh) என்று அழைத்தனர். அவைகள் உண்மையான அத்திப் பழங்களுக்கு முன்னோடியாக தோன்றுபவை. இந்த "டக்ஷ்" என்ற பழங்களை விவசாயிகள் மற்றம் வழிப்போக்கர்கள் பசியாக இருக்கும் போது சாப்பிடுவார்கள். உண்மையான அத்திப்பழ காலத்தின் அத்திப்பழங்கள் உருவாகும் போது அவைகள் உதிர்ந்து விடும். ஒருவேளை அந்த அத்தி இலைகள் அந்த "டக்ஷ்களோடு" சேர்ந்து தோன்றவில்லை என்றால் அந்த மரமானது அந்த வருடத்தில் கனி கொடுக்காது என்று பொருள். எனவே, அந்த மரத்தில் அப்போதைக்கு பசியாற்றுவதற்கு ஏதாவது "டக்ஷ்" கிடைக்குமா என்று திரும்பிய நம்முடைய ஆண்டவருக்கு டக்ஷ் இல்லாமாலிருப்பது உண்மையான அத்திப்பழங்கள் வருவதற்கான காலத்திலும் அங்கே அத்திப்பழங்கள் இருக்காது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. எனவே அந்த மரத்தில் அத்தனை அழகான இலைத்தொகுப்புகள் இருந்தும் அந்த மரமானது ஒரு கனியற்ற, நம்பிக்கையற்ற மரமாகும்." (Bruce, Are The New Testament Documents Reliable? [Intervarsity Press; Downers Grove, Ill, fifth revised edition 1992], pp. 73-74; bold emphasis ours)
 
 
மற்றொரு குறிப்படப்படும் சுவிசேஷ அறிஞர் கிரெய்க் எஸ். கீனர் (Craig S. Keener) பின்வரும் ஆய்வை அளிக்கிறார்.
 
 
"பஸ்கா பண்டிகையின் நாட்களில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒலிவ மலைக்கு கிழக்கில் அத்தி மரங்கள் இலைகள் மிகுந்ததாக காணப்படும். வருடத்தின் இந்த சமயத்தில் அந்த அத்தி மரங்கள் பச்சையான தொடக்க அத்திப் பழங்களை மட்டும் கொண்டிருக்கும்.(அரபியர்கள் அவைகளை டக்ஷ் என்று அழைப்பார்கள்), அவைகள் ஏறக்குறை ஜூன் மாதத்தின்போது பழுக்கும் அல்லது அதற்கு முன்பே பச்சையான இலைகளை மட்டும் விட்டுவிட்டு உதிர்ந்து விடும். எனவே இலைகள் நிறைந்த ஒரு அத்திமரம் தொடக்க அத்திப் பழங்களை இழந்திருந்தால் அந்த வருடத்தில் அம்மரம் நிச்சயமாக கனிகளை கொடுக்காது". (Keener, A Commentary on the Gospel of Matthew [Wm. B. Eerdmans Publishing Company, July 1999], p. 504)
 
 
அவ்வாறாக, புதிய ஏற்பாட்டின் உண்மைக்கு எதிரான உதாரணம் என்று கருதப்பட்டவை உண்மையில் அதன் (புதிய ஏற்பாட்டின்) வரலாற்று ரீதியான நம்பகத்தன்மைக்கு வலிமையான விவாதமாக மாறுவதில் முடிவடைந்திருக்கிறது! இது சுவிசேஷ நூல்களின் உண்மைத் தன்மையை காட்டுகிறது, அதாவது எந்த இடத்தில் எந்த காலத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன என்பவற்றை "பஸ்கா பண்டிகையின் போது நடந்தது" என்றும், அத்திமரங்கள் ஒலிவ மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் மிக நுட்பமான காரியங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் இது மத்தேயு, மாற்கு சுவிசேஷ நூல்கள் இதர சுவிசேஷ நூல்களுக்கு முன்பாக எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது அல்லது எருசலேமின் வீழ்ச்சிக்கு முன் எழுதப்பட்டவைகள் என்று அதன் பழமைக்கு தகுந்த ஆதாரங்களை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த விளக்கங்களின் முழு விவரங்கள் எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுதும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

 
 
இன்னும் அதிகமாக, அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்த இந்த காரியம் ஒரு உவமையாகவும் காட்டப்பட்டுள்ளது, இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு காரியமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது. மெசியானிக் அறிஞர் டேவிட் ஸ்டெர்ன் (David Stern) கூறுகையில்:
 
 
'…இயேசு அந்த மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்ததற்கு காரணம், பசியாற்ற வந்தவருக்கு அது கனி தராமல் ஏமாற்றியது தான், இனி அந்த மரம் வேறு யாருக்கும் பயன்படப்போவதில்லை, எனவே, மேசியாவே அதற்கு சரியான தண்டனையைக் கொடுத்தார். இதனால், இயேசு இங்கே ஒரு தீர்க்கதரிசன நாடகத்தை உவமையாக நடத்துகிறார் (லூக் 13:6-9 ல் கூறியது போல ஒரு உவமை). "தனக் (Tanakh)" என்று யூதர்கள் அழைக்கும் பழைய ஏற்பாட்டில் எரேமியா 19ம் அதிகாரத்தில் "ஒரு களிமண் பாண்டத்தை" கொண்டுவந்து உடைக்கும் படி" தேவன் கூறுகிறார். இதே போல எசேக்கியேல் 4,5ம் அதிகாரங்களில் "எருசலேமின் ஒரு மாதிரியைச் செய்து அதை எரித்துப் போடும் படி" எசேக்கியேலுக்கு தேவன் கட்டளையிடுகிறார். இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லி, செய்துக்காட்டிய எடுத்துக்காட்டுகளாகும். இதே போல ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் 21:10-11 வசனங்களில் காணலாம்.

 
 
கனி தரும் காலம் இல்லாத போதும் ஒரு அத்தி மரம் இலைகளோடு காணப்படுகிறது - அது தொலைவிலிருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு இலைகளோடு இருந்திருக்கிறது (வசனம் 12) - கனிகளுக்கான நிச்சயத்தை அளிப்பதாக இருந்தது. சாதரணமாக இஸ்ரவேல் தேசத்தில் அத்திப் பழங்களுக்கான தொடக்க காலம் ஜூன் ஆகும். ஆனால் பச்சையான பழங்களின் தொடக்க காலமானது (உன்னதப்பாட்டு 2:13) பஸ்கா பண்டிகைக்கு முன்பதாக இன்னும் வசந்தகால இலைகள் கிளைகளில் தோன்றுவதற்கு முன்பே தோன்றும்.

 
 
தேவனுடைய ஜனங்கள் நீதியென்னும் கனிகளை கொடுக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பதும், மற்றும் கனி தராத கிளைகளை அக்கினியிலே போடப்படும் என்பதும் நமக்கு தெரியும் (மத் 7:16-20; 12:33; 13:4-9, 18-23; யோவான் 15:1-8). இவ்வாறாக அந்த அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகப் பண்ணியது என்பது இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பாகும். நீதிமொழிகள் 27:18ன் படி "அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்". இயேசு இங்கே தன்னுடைய சீடர்களுக்கு தங்கள் எஜமானகிய தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது என்ன என்பதை கற்றுக் கொடுக்கிறார். அதாவது தேவனிடத்திலிருந்து வரும் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் (வசனம் 22). அப்படியிராவிட்டால் அவர்கள் உதிர்ந்துவிடுவார்கள். இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் தன்னுடைய கோபத்திலோ அல்லது மனம்போன போக்கிலோ ஒரு மாயவித்தைக்காரன் செய்வது போல செய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு அற்புதமும் ஒரு ஆவிக்குரிய முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது.' (Stern, Jewish New Testament Commentary [Jewish New Testament Publications, Inc., Clarksville Maryland, Fifth edition 1996], pp. 95-96; bold emphasis ours)
 
 
பழைய ஏற்பாடு அத்திமரத்தை இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்பிட்டுக் அடிக்கடி குறிப்பிடுகிறது.
 
 
"அவர்களை முற்றிலும் அழித்துப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களை விட்டுத் தாண்டிப் போகும் என்று சொல்." எரேமியா 8:13

 
 
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக் குறித்தும், இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப் பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 29: 15-19

 
 
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப் போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். ஓசியா 9: 10,16

 
 
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்தமுதல் அறுப்பின் கனியும் இல்லை (none of the early figs that I crave). தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. மீகா 7:1-4

 
 
உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப் போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். நாகூம் 3:12
 
 
 
எனவே மேலேயுள்ள மேற்க்கோள்கள் இயேசு ஏன் அத்திமரத்திற்கு அப்படி செய்தார் என்பதை விளக்குகிறது. பழைய ஏற்பாடு கூறுவது போல யேகோவா தேவன் குறிப்பாக இஸ்ரேவேல் ஒரு கனிகொடுக்கும் ஒரு மரம், மலடோ பட்டுப் போனதோ அல்ல என்பதற்கான அடையாளத்தை தேடுகிறார், அதையே கிறிஸ்துவும் தேடுகிறவராக வந்தார். எனவே ஆவிக்குரிய ரீதியில் இஸ்ரவேல் ஜீவனோடுதான் இருக்கிறது மேலும் தன்னுடைய தேவனை திருப்தி படுத்தக் கூடிய கனிகளை கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டிய தொடக்க அத்திப்பழங்களை (ஒசியா 9:10; மீகா 7: 1) காண்பதற்கு பதிலாக தேசம் ஆவிக்குரிய ரீதியில் மலடாகவும் மரித்தும் இருப்பதை கிறிஸ்து கண்டார். இஸ்ரவேலின் ஆவிக்குரிய மலட்டுத்தன்மையின் காரணமாக தேவன் தன்னுடைய அத்தி மரங்களை, தன்னுடைய திராட்சை செடிகளை வெட்டி அக்கினியில் சுட்டெரித்துப்போடுகிறார்.
 
 
 
"அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்." லூக்கா 13:6-9

 
 
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? " மாற்கு 12:1-9

 
 
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். " மத்தேயு 23:37-39

 
 
"அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்." லூக்கா 19:41-44
 
 
 
இயேசு அத்தி மரத்தை சபித்ததின் அர்த்தம் இதுதான், ஒரு அடையாளமாக தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்களிடத்தில் ஆவிக்குரிய கனிகளை தேடி வந்தார் ஆனால் ஒன்றையும் காணாத அவர், அவர்கள் மீது தண்டனையை கொண்டு வருவார்.

 
 
எனவே அவர் அத்திமரத்தை சபித்ததில் எந்த தவறும் கிடையாது அதோடு இந்த செயல் அவருடைய பரிபூரண தெய்வீகத் தன்மையை குறைப்பதாகவும் இல்லை.

 
 
 

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.