அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 24, 2012

ரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது?

 

அன்புள்ள தம்பிக்கு,

உனக்க சமாதானம் உண்டாவதாக,

தம்பி இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றி உனக்கு எழுதப்போகிறேன். இதை முழுவதுமாக படித்துப் பார். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாங்களில் இது மிகவும் அடிப்படையான வித்தியாசமாகும்.

பொதுவாக சொல்லவேண்டுமென்றால், உலக மார்க்கங்களை இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம், 1) கிருபை மார்க்கம் 2) கிரியை மார்க்கம்.

கிறிஸ்தவம் கிருபை மார்க்கமாகும், இஸ்லாம் கிரியை மார்க்கமாகும். 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்று பைபிள் கூறுகிறது. அதாவது நாம் தேவனுடைய இரட்சிப்பை பெறுவதற்கு நம்முடைய கிரியைகள் உதவாது, அவர் தம்முடைய கிருபையினாலே நம்மை இரட்சித்து இருக்கிறார்.

ஆனால், இஸ்லாமை நாம் எடுத்துக்கொண்டால், அது கிரியை மார்க்கமாக உள்ளது.  இஸ்லாமிலே மன்னிப்பு என்பது அல்லாஹ்வின் கிருபை மீதும், அதோடு கூட ஒரு மனிதன் செய்யக்கூடிய கிரியைகள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மனிதன் செய்யும் கிரியைகள் பாதி, அல்லாஹ்வின் கிருபை பாதி.   நியாயத்தீர்ப்பு நாளிலே ஒரு முஸ்லிமுடைய நற்கிரியைகள் அவனது தீய கிரியைகளை விட அதிகமாக இருந்தால், மேலும் அல்லாஹ் விரும்பினால் தான் அந்த மனிதனின் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் அடையமுடியும்.

ஆக இஸ்லாமிய இரட்சிப்பை கீழ்கண்ட விதமாக கூறலாம்:
இஸ்லாமிய இரட்சிப்பு = மனிதனின் கிரியைகள் + அல்லாஹ்வின் கிருபை (அ) விருப்பம்

1) இஸ்லாமிய இரட்சிப்பு (கிரியைகள் மீது அதிகமாக சார்ந்து இருத்தல்)

தம்பி, இந்த இரண்டு வசனங்களை படி:

ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.  (குர்-ஆன் 5:9)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.  (குர்-ஆன் 8:29)

"இல்லை இல்லை… அல்லாஹ் கிருபையுள்ளவன், எனவே அவனது மன்னிப்பை பெற நாங்கள் அதிகமாக ஒன்றும் செய்யவேண்டுவதில்லை" என்று நீ கூறலாம். 

அல்லாஹ் கிருபையுள்ளவன் என்று குர்-ஆன் சொல்கிறது, அது சரி தான், ஆனால், அதே குர்-ஆன் இப்படியும் கூறுகிறதே:

. . . . ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன். (குர்-ஆன் 2:105)

அதாவது ஒரு  முஸ்லிம் எவ்வளவு தான் செய்தாலும், அல்லாஹ் தான் விரும்பியவரை தெர்ந்தெடுத்துக் கொள்கிறான். நான் செய்யும் நற்செயல்களைக் கொண்டு பார்த்தால், அல்லாஹ் என்னை நிச்சயம் அங்கீகரிப்பான், இரட்சிப்பான் சொர்க்கத்தில் சேர்ப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமும் கூறமுடியாது. மேற்கண்ட வசனங்களில் (5:9, 8:29), ஒரு முஸ்லிமுடைய இரட்சிப்பு அவனது கிரியைகள் மீது ஆதாரப்பட்டுள்ளது என்பதை சொல்கிறது.

முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்று விரும்பினால், இன்னொரு காரியமும் அவர்கள் செய்யவேண்டும், அது என்ன? அது தான் "கலப்பற்ற முறையில், தூயமனதுடன்" மன்னிப்பு கேட்பதாகும்.

குர்-ஆன் 66:8ஐ படிப்போம்:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற  முறையில் பாவ மன்னிப்புத் தெடுங்கள், உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடக்கூடும் .... (பீஜே தமிழாக்கம்).

இதன்படி ஒரு முஸ்லிம் தூயமனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறான் என்று வைத்துக்கொள்வோம், அப்படியானால், அதன் பிறகு அந்த மனிதன், "ஆம் நான் தூயமனதுடன் பாவ மன்னிப்பு கோரிவிட்டேன்" என்றுச் சொல்லி, "நிச்சயமாக, நான் அல்லாஹ்வின் மன்னிப்பை பெற்றுவிட்டேன், இனி எனக்கு பயமில்லை, நான் நிச்சயமாக சொர்க்கம் அடைந்துவிடுவேன்" என்று கூறமுடியுமல்லவா? இப்படி கூறுபவனை மற்ற இஸ்லாமியர்கள் எப்படி பார்ப்பார்கள்? இது பெருமை என்ற பாவமாக கருதப்படுமல்லவா?

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அந்த மனிதன் தூயமனதுடன், கலப்பில்லாமல் பாவ மன்னிப்பு கோரினார் என்பதை எதன் மூலம் அவன் அறியக்கூடும்? தான் 100% கலப்பில்லாமல் மன்னிப்பு கோரினான் என்று எப்படி அவனால் இந்த உலகில் இருக்கும் போது கூறமுடியும்?  ஒருவேளை தான் முழுமனதோடு பாவமன்னிப்பு கோரியதாக நினைத்துக்கொள்ளலாமே தவிர அவனால் நிச்சயமாக திட்டவட்டமாக கூறமுடியாது.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், இஸ்லாமிய இரட்சிப்பு என்பது அதிகமாக கிரியைகள் மீது சார்ந்துள்ளது. எனவே:

1) அல்லாஹ்வின் முன்பு நிற்கும் அந்த நியாயத்தீர்ப்பு நாளில், நான் பூமியில் இருக்கும் போது செய்த நற்கிரியைகளுக்காக எனக்கு அல்லாஹ் நிச்சயமாக சொர்க்கம் அளிப்பான் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் சொல்லமுடியுமா?
 
2) அனேக முஸ்லிம்களின் கூற்றின் படி, அந்த நாளில் தங்களின் நற்செயல்கள், தீய செயல்களை விட அதிகமாக இருக்குமா இல்லையா? என்று அவர்களுக்கு தெரியாது. அல்லாஹ் அன்று அவர்களுக்கு சொர்க்கத்தை நிச்சயமாக தருவார் என்ற நம்பிக்கை இன்று எங்களுக்கு இல்லை, அது அல்லாஹ்வின் விருப்பம் என்று கூறுகிறார்கள். இப்படி தங்களின் நித்தியம் பற்றிய நிச்சயம் இல்லாமல் முஸ்லிம்கள் வாழுகிறார்கள், தம்பி உன் நிலை என்ன? உனக்கு இந்த நிச்சயம் உண்டா?
 
3) முஸ்லிம்களால் ஒன்று செய்யமுடியும், தங்களின் நற்கிரியைகள், தீயகிரியகளை விட அதிகமாக இருக்கும்! என்று எதிர்ப்பார்த்து, மற்றும் அல்லாஹ் எப்படியாவது தங்களை அங்கீகரித்துக்கொள்வான் என்று நம்பி, அறைகுறை நிச்சயத்தோடு இவ்வுலகில் வாழவேண்டியது தான்.

தம்பி, உன் நிலைக்கு  வருவோம், இதுவரை நீ செய்த கிரியைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, "என்னை அல்லாஹ் கண்டிப்பாக அந்த நாளில் ஏற்றுக்கொள்வான் என்று உன்னால் கூறமுடியுமா?" உன் கிரியைகள் அல்லாஹ்வை நிச்சயமாக மெச்சிக்கொள்ளச் செய்யும் என்ற விசுவாசம் உனக்கு உண்டா?

2) கிறிஸ்தவ இரட்சிப்பு (விசுவாசத்தின் மூலம் கிருபையினால் வருவது)

தம்பி இதுவரை இஸ்லாமிய இரட்சிப்பு பற்றி கூறினேன். இப்போது கிறிஸ்தவ இரட்சிப்பு பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உண்டு (யோவான் 6:47, 1 யோவான் 5:13).  கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது மனிதன் சம்பாதிப்பது அல்ல, அது இறைவனிடமிருந்து இலவசமாக கொடுக்கப்படுகின்ற பரிசு ஆகும் (ரோமர் 4:3, எபேசியர் 2:8-9).  கிறிஸ்தவத்தில் மன்னிப்புக்காக நாங்கள் இயேசு நிறைவேற்றிய கிரியை மீது முழுவதுமாக சார்ந்து இருக்கிறோம். எங்களின் நற்கிரியைகள் மீதல்ல, நம்முடைய நீதியெல்லாம் ,கந்தை துணியைப்போல இருப்பதினால் அவரது கிரியை மீது சார்ந்து அவர் மீது விசுவாசம் வைக்கிறோம். தேவனுடைய கிருபை நம்மை இரட்சிக்கிறது. அவர் நமக்கு கொடுத்த கிருபையின் மகிழ்ச்சியில் நாங்கள் நீதியோடும் உண்மையோடும், நற்கிரியைகள் செய்து வாழ்ந்து காட்டுகிறோம். எங்கள் இரட்சிப்பிற்கு ஆதாரம் கிருபையே தவிர எங்கள் கிரியை அல்ல.

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு என்பது இறைவனை மையமாகக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமில் இரட்சிப்பு என்பது மனிதனை மையமாகக்கொண்டு இருக்கிறது.  

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் "இறைவன் மீது நம்பிக்கை/விசுவாசம்" வைக்கவேண்டும் என்று போதிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் தேவன் மீது நாம் வைக்கும் விசுவாசமே நம்மை இரட்சிக்க பொதுமானதாக உள்ளது (ரோமர் 5:1, எபேசியர் 2:8-9). ஆனால், இஸ்லாமில் நம்பிக்கை மட்டும் போதாது, அதோடு  கூட அவன் முதலாவதாக ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும், அவன் செய்யும் நற்செயல்கள், அவனது தீய செயல்களை விட அதிகமாக இருக்கவேண்டும், அவன் கலப்பில்லாமல் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கவேண்டும், இவைகளோடு கூட அந்த நாளில் அல்லாஹ் இவனை மன்னிக்க விரும்பவேண்டும். இத்தனையும் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அப்போது தான் அவனது இரட்சிப்புக்கு ஒரு நிச்சயம் கிடைக்கும். இவைகள் எல்லாம் இந்த உலகில் இருக்கும் வரை நடக்காது, மரித்த பிறகு தான் நிர்ணயிக்கப்படும், ஆகையால் தான் இஸ்லாமியர்கள் "எனக்கு என்ன ஆகும் என்று எனக்கே தெரியாது, ஏதோ சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பூமியில் வாழலாம்" என்று பதில் அளிக்கிறார்கள்.

தம்பி, ஒரு இணைய தளத்தில் சில வரிகளை படித்தேன், அவைகள் உனக்கு உபயோகமாக இருக்குமென்று இங்கு பதிக்கிறேன்:

[Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்]
இஸ்லாம் - "I obey-therefore I'm accepted" நான் கீழ்படிகிறேன், ஆகையால் ஏற்றுக்கொள்ளப்படுவேன்.
 
கிறிஸ்தவம் - "I'm accepted–therefore I obey" நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஆகையால் நான் கீழ்படிகிறேன்.
 
 
[Motivation - உற்சாகமூட்டுதல்]
இஸ்லாம் - Motivation is based on fear and insecurity – அல்லாஹ்வை பின்பற்றுதல் பயத்தோடும், பாதுகாப்பு இல்லாமலும் செய்யப்படும்.
கிறிஸ்தவம் - Motivation based on grateful joy. தேவனை பின்பற்றுதல் ஒரு மகிழ்ச்சிகரமாக அனுபவம்.
 
 
[Obedience - கீழ்படிதல்]
 
இஸ்லாம் - I obey God in order to get things from God. – நான் இறைவனிடமிருந்து ஏதோ பெற்றுக்கொள்வதற்காக நான் கீழ்படிகிறேன்.
கிறிஸ்தவம் - I obey God to get God–to delight and resemble him – நான் இறைவனையே பெறுவதற்காக, மகிழ்ச்சியோடு அவரை பிரதிபலிக்கிறேன், கீழ்படிகிறேன்.
 
[Criticism - விமர்சனம்]
இஸ்லாம் - When I am criticized I am furious or devastated because it is critical that I think of myself as a 'good person.'  Threats to my self-image must be destroyed at all costs.
 
நான் விமர்சிக்கப்படும் போது, அதிகமாக கோபம் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஒரு நல்ல மனிதன் என்று எனக்குள் நானே முடிவு செய்துவிட்டு இருக்கிறேன். என்னுடைய சுய பிம்பத்தை விமர்சிக்கிற எல்லாவற்றையும் எப்படியானாலும் அழித்துவிட முயற்சி எடுப்பேன்.
 
கிறிஸ்தவம் - When I am criticized I struggle, but it is not critical for me to because it is critical that I think of myself as a  'good person.' My identity is not built on my record or my performance but on God's love for me in Christ.  I can take criticism. That's how I became a Christian.
 
நாம் விமர்சிக்கப்படும் போது, நான் போராடுகிறேன், ஆனால், இது ஒரு பெரிய பிரச்சனையாகவே எனக்கு இருப்பதில்லை. என்னுடைய அடையாளம் என் நற்கிரியைகள் மீது சார்ந்து இருக்கவில்லை, அது கிறிஸ்துவிற்குள் என்னை நேசிக்கிற தேவன் மிது சார்ந்துள்ளது.  நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் தான் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்.
 
[Prayer – ஜெபம் / தொழுகை]
 
இஸ்லாம் - My prayer consists largely of petition and it only heats up when I am in a time of need. My main purpose in prayer is control of environment.
என் ஜெபங்கள் எல்லாம் வேண்டுதல்களாக இருக்கும், எனக்கு தேவைகள் அதிகமாகும் போது, ஜெபம் சூடுபிடிக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் என்னை சுற்றியுள்ள சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகும்.
 
கிறிஸ்தவம் - My prayer life consists of generous stretches of praise and adoration.  My main purpose is fellowship with him.
என்னுடைய ஜெபம், முழுக்க முழுக்க இறைவனை துதிப்பதிலும், ஆராதிப்பதிலும் இருக்கும். என் ஜெபத்தின் முக்கிய நோக்கம் தேவனோடு ஐக்கியம் கொள்வதாகும்.
 
 
தம்பி, சுருக்கமாக கூறவேண்டுமென்றால், கிருபையால் இறைவனின் மன்னிப்பைப் பெற்று இவ்வுலகில் வாழும் நாட்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு பரிசுத்தமாக வாழ்வது தான் கிறிஸ்தவம் சொல்லும் இரட்சிப்பு ஆகும்.
 
வாழும் நாட்கள் எல்லாம் நம்முடைய நற்செயல்களை எண்ணிக்கொண்டு, தீய செயல்களை கழித்துக்கொண்டு ஒரு கணக்கு போட்டு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய வாழ்க்கை, இவ்வளவு செய்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல், அல்லாஹ்விற்கு பயந்துக் கொண்டு நடுக்கத்தோடு வாழும் வாழ்க்கை தான் இஸ்லாமிய இரட்சிப்பு.  இதில் எதுவேண்டும் என்று நீயே முடிவு செய்துக்கொள்?
 
இஸ்லாமுக்கு வரும் படி கிறிஸ்தவர்களை அழைக்கும் ஒரு நபரைப்  பார்த்து கிறிஸ்தவர்கள் கேட்கும் கேள்வி:
 
"Why should we Christians give up our guarantee of salvation in Jesus for the requirements of your Qur'anic law when you yourselves don't even know if you have done enough good deeds to be saved on the Day of Judgment?"
 
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் இயேசு கொடுத்த இரட்சிப்பின் நிச்சயத்தை ஏன் உங்கள் குர்-ஆனுக்காக விட்டுவிடவேண்டும்? குர்-ஆனை நம்பும் உங்களுக்கே நீங்கள் செய்யும் நற்கிரியைகள் உங்களை நியாயத்தீர்ப்பு நாளிலே இரட்சிக்குமா என்று தெரியாத போது, எங்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை நாங்கள் ஏன் விட்டுவிடவேண்டும்?
 
 
தம்பி, சிந்தித்துப் பார்.
 
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
 
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்
 
பின் இணைப்புக்கள்
 



ரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ நாள் தோறும் மனமாற்றமடைந்து வருவதை நீ எனக்கு அனுப்பிவருகிற மெயில்களிலிருந்து கண்டுவருகிறேன். உன் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகளை காணும்போது நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். நீ தற்பொழுது இருக்கும் நாட்டில் நியாயப்பிரமாண சட்டங்கள் ஷரியா எனும் பேரில் கடைப்பிடிக்க படுவதாக கூறியிருந்தாய். ஆம் நானும் அந்த செய்தியை கேள்விபட்டிருக்கிறேன். நீ பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் பற்றி கேட்டபடியினால், பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையைப் பற்றி உன்னோடு நான் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாகபிறனுடைய வீட்டையும்அவனுடைய நிலத்தையும்அவனுடைய வேலைக்காரனையும்அவனுடைய வேலைக்காரியையும்அவனுடைய எருதையும்அவனுடைய கழுதையையும்பின்னும் பிறனுக்குள்ளயாதொன்றையும்  இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 

பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக, தம்பி இந்த கட்டளையோடு முஹம்மதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுபார். தனது வளர்ப்பு மகன் ஜையத்தின் மனைவியை இச்சித்த சம்பவத்தை நீ அறிந்திருக்கிறாய். இச்சித்தது மாத்திரமா மனைவியாக கொண்டதும் உனக்குத்  தெரியும். இதனை உனது இஸ்லாமிய நண்பர்கள் "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த நபிகளார்" என்று மிகவும் பெருமையாக பேசுவார்கள். இது நியாயப்பிரமானத்தை மீறிய செயலாகும் என்று சொன்னால்,  அவர்கள் திருப்பி கேற்பார்கள் "உங்கள் பைபிளில் சில சம்பவங்கள் இதே போல இருக்கின்றதே காணவில்லையா" என்று. உனது நண்பர்களுக்கு ஒரு விசயம் புரிவதேயில்லை.

 

பைபிளில் நோவா, யாக்கோபு, தாவீது போன்றோர் செய்த பாவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் அவற்றை நியாயப்படுத்தவில்லை. நியாயப்பிரமானம் கொடுக்கப்பட முன் செய்தவர்களின் தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின் செய்தவர்களின் தவறுகளுக்காக பெற்ற தண்டனைகளும் பைபிளில் காணலாம்.

ஆனால் முஹம்மது செய்த பாவங்களை நியாயப்படுத்தி வஹி இறங்குவது தான் வேடிக்கையாகவுள்ளது.

. . . .நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்). உமக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும் . . . . (குர்ஆன் 33:50) 

இந்த வசனத்தை நீ அரபியில் பல முறை ஓதியிருப்பாய். ஒரு முறையாகிலும் சிந்தித்திருப்பாயா? குர்ஆனில் ஒரு சொல்லுக்கு 10 நன்மையெனும் அடிப்படையில் பொருள் புரியாமல் மந்திரம் ஓதுவது போன்று ஓதுவதையே பாமர மக்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் போதிக்கப்பட்டு வருவதை நான் காண்கிறேன். உனக்கும் அப்படித் தான் போதித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்குமாறு சொல்கிறது. அதனாலோ என்னவோ இஸ்லாமியர் சிந்திப்பதேயில்லை. இஸ்லாமியர்கள் குர்-ஆன் வசனங்களை சிந்திக்கவேண்டுமென்றால், முதலாவது அவர்களுக்கு வசனம் புரியவேண்டுமே, அவர்கள் அரபியில் படித்தால் எப்படி புரியும்?

இந்த வசனத்தை சிந்தித்துபார். இது முஹம்மதுவுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்புச் சலுகை! அதாவது எந்த ஒரு முஸ்லிம் பெண்ணையும் முஹமது விரும்பினால் அவளை திருமம் செய்ய முஹம்மதுவுக்கு அல்லாஹ் சிறப்புச் சலுகை கொடுக்கிறான்.

நியாயப்பிரமானம் போதிக்கிறது பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று. ஆனால் குர்ஆன் முஹம்மதுவுக்கு தனது மகனுடைய மனைவியையும் இச்சித்ததால் சொந்தமாக்கிகொள்ள வரம் கொடுக்கிறது. எது இறைவேதமாக இருக்க தகுதியுள்ளது என்று  சிந்தித்தால் உண்மை புரியும்.

 

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.  ( குர்-ஆன் 33:37)

 

தம்பி, எமது ஊரில் அநேக இஸ்லாமியர் பிள்ளைகளை தத்தெடுக்திருக்கின்றனர். அவர்களில் யாராவது இது எனது பிள்ளையில்லையென்று சொல்வதை நீ செவிமடுத்திருக்கிறாயா? கடும் கோபத்தில் சொந்த பிள்ளைகளை கூட "நீ என் பிள்ளையில்லையென்று" சொல்வார்கள். ஆனால் பொதுவாக முழு உலகிலும் வளர்ப்பு மகனையும் மகன் என்று தான் சொல்வார்கள். அந்த காட்டுமிறாண்டி அரபியரும் அப்படிதான் அழைத்தார்கள். ஆனால் முஹம்மது ஜைது மனைவியின் அழகை கண்ட நேரத்திலிருந்துதான் வளர்ப்பு மகன் "மகன் அல்ல" என்ற கட்டளையை அல்லாஹ் இறக்குகிறான். சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினையுண்டு.

 

ஜைதின் மனைவியை முஹம்மது திருமம் செய்ததை "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வுகொடுத்த மாநபி" என்று வர்ணிப்பார்கள். ஆனால் முஹம்மதுவின் மரணத்தின் பிற்பாடு அவருடைய அனைத்து மனைவிகளும் விதவைகள் ஆகிவிட்டார்கள். தனது மரணத்தின் பின்னும் அவர்களை யாரும் திருமம் செய்ய கூடாது என்பதற்காக அவர்களை முஃமீன்களின் தாய்மார்களாக ஆக்கிவிட்டார் முஹம்மது. அப்படியானால் முஃமீன்களின் தகப்பன் யாராக இருக்கவேண்டும்? முஹம்மது தான் தகப்பனாக இருக்கவேண்டும் என்று நீ நினைப்பாய். ஆனால் குர்ஆன் சொல்கிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)

 

பார்த்தாயா இஸ்லாமிய நியாயத்தை? தான் மனைவிகளை தனக்கு பின்பு யாரும் திருமணம் செய்து விட கூடாது என்பதற்காக தனது மனைவிமாரை எல்லா முஸ்லீம்களுக்கும் தாய் ஆக்குகிறார். தனது மகனின் மனைவியை திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் யாருக்கும் தகப்பன் இல்லையென்று வஹி வருகிறது. இங்குள்ள முரண்களும் தில்லுமுல்லுகளும் உனக்கு நன்றாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

வெளியில் இருக்கிற கவர்ச்சியை கண்டு நீ இஸ்லாத்துக்குள் நுழைந்துவிட்டாய். இப்பொழுதுதான் நரக வாயிலிலிருந்துகொண்டு, மிகவும் ங்காரங்கள் நிறைந்த கதவுகளை வைத்து வருகிறவர்களை கவரும் வகையில் காரியங்களை காண்பித்து, அந்த கதவுகளுக்குள் நுழைந்த பிறகுதான் தெரியும் எரி நரகத்துக்குள் வந்துள்ளோம் என்று. இப்பொழுது இதுதான் உனது நிலையாகவுள்ளது எனதருமை தம்பியே!

உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்டுகொள்ளதான் எனது இந்த பிரயாசம். பரலோகக் கதவு உனக்காக இன்னும் திறந்துதான் இருக்கிறது. எனது கர்த்தராகிய இயேசு சொன்ன இந்த வார்த்தைகளோடு இந்த கடிதத்தை முடிவு செய்கிறேன். நாளை சந்திப்போம்.

 

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்குஉரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 

 

இப்படிக்கு,

உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

 

http://isakoran.blogspot.in/2012/08/22.html