அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 20, 2015

எல்லா நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து மட்டும் நபிகளா?

ஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன் ஆபிரகாமின் சந்ததி பட்டியலை தாறுமாறாக கூறுகிறார்?


குர்-ஆன் 29:27ல் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய
சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு
அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர்
நல்லவர்களில் ஒருவராவார். (குர்-ஆன் 29:27)*

*அனைத்து மேற்கோள்களும் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து
எடுக்கப்பட்டது.

மேற்கண்ட வசனத்தில் வரும் "அவருடைய சந்ததியிலே" என்ற சொற்றொடர் பற்றி
பலர் பலவிதமாக கருத்து கூறுகின்றனர்:

1. கடைசியாக பெயர் குறிப்பிடப்பட்ட "யாக்கோபு உடைய சந்ததியிலிருந்து
நபித்துவமும், வேதமும் வரும்" என்று பொருள் கொள்ளவேண்டும் என்று சிலர்
கூறுகிறார்கள்.

2. வேறு சிலர் "ஆபிரகாமின் சந்ததி அனைவரிலிருந்தும் நபித்துவமும்,
வேதங்களும் வரும்" என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.

நாம் இந்த இரண்டு விளக்கங்களில் எதனை அங்கீகரித்தாலும், "நபித்துவம்"
என்பது ஆபிரகாமின் சந்ததியில் உள்ளவர்களுக்குத் தான் என்று ஏற்றுக்
கொள்ளவேண்டும்.

குர்-ஆன் 29:27ன் படி, எல்லா நபிமார்களும் (தீர்க்கதரிசிகளும்)
ஆபிரகாமின் சந்ததியிலிருந்து தான் வருவார்கள் என்றால், அதே குர்-ஆன்
16:36ம் வசனம் சொல்வது எப்படி சாத்தியமாகும்? அதாவது இந்த வசனத்தின் படி
எல்லா நாட்டு மக்களுக்கும் அவர்களிலிருந்தே நபியை அல்லாஹ்
அனுப்பியுள்ளார் என்பது எப்படி சாத்தியமாகும்?

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள்
வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று
(போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . . .. (குர்-ஆன்
16:36)

இவ்விரு வசனங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது, எல்லா நாடுகளுக்கு
அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து
வந்தவர்கள் தான் என்று யாராவது சொல்லமுடியுமா?

இதில் எது சரியானது? குர்-ஆன் 29:27ன் படி, நபித்துவம் ஆபிரகாமின்
சந்ததிக்கு மட்டும் கொடுக்கப்பட்டதா? அல்லது குர்-ஆன் 16:36ன் படி,
நபித்துவம் என்பது எல்லா நாடுகளுக்கும் / சமூகத்தினருக்கும்
கொடுக்கப்பட்ட ஒன்றா?

ஆபிரகாமின் சந்ததியிலிருந்து நபித்துவம் வந்தது என்ற குர்-ஆனின்
வசனத்தில் உள்ள பிரச்சனையை இங்கு (ஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன்
ஆபிரகாமின் சந்ததி பட்டியலை தாறுமாறாக கூறுகிறார்) சொடுக்கி படிக்கலாம்.

மூலம்: http://www.answering-islam.org/Quran/Contra/qi038.html

இதர குர்-ஆன் முரண்பாடுகள்

Source: http://www.answeringislam.org/tamil/quran/contra/qi038.html


--
Source : http://isakoran.blogspot.in/2015/10/blog-post_4.html

ஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன் ஆபிரகாமின் சந்ததி பட்டியலை தாறுமாறாக கூறுகிறார்

எல்லா நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து
மட்டும் நபிகளா?




குர்-ஆன் ஸூரா 6:83-89:

83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்குஅவருடைய
கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை
(மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும்
பேரறிவும் உள்ளவன்.

84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்)
கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்;

இதற்கு முன்னர் நாம் நூஹையும்

அவருடைய சந்ததியிலிருந்து

தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன்

ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்;

இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் -

இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் -

இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

6:87. இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய
சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம்
தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

6:88. இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை
விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்)
அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை
விட்டு அழிந்துவிடும்.

6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும்,
நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை
நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
(குர்-ஆன் 6:83-89)

அல்லாஹ், பெயர்களின் பட்டியலை கொடுக்கும் போது அவைகளை தாறுமாறாக மாற்றி
கொடுக்க காரணம் என்ன? ஏன் குர்-ஆனில் பெயர்கள் ஒரு வரிசை கிரமமாக
கொடுக்கப்படாமல் இருக்கின்றது?

மேற்கண்ட நபர்கள் வாழ்ந்த காலங்களின் படி, அவர்களை வரிசைப்
படுத்தவேண்டுமென்றால், அவைகளை கீழ்கண்ட விதமாக வரிசைப்படுத்தி
பட்டியலிடவேண்டும்.

ஆபிரகாமின் சந்ததியிலிருந்து:

இஸ்மாயில், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, ஆரோன், மோசே, தாவீது, சாலொமோன்,
எலியா, எலிஷா, யோனா, ஜகரிய்யா, யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசு.

இது குர்-ஆனின் மிகப்பெரிய பிழை என்று சொல்லமுடியாது, ஆனால்,
சர்வத்தையும் அறிந்த அல்லாஹ்விற்கு எப்படி இந்த குழப்பம் வந்தது என்பது
தான் கேள்வி?

குர்-ஆனின் இவ்வசனங்கள் பற்றி பல கேள்விகள் எழுகின்றன:

முதலாவதாக, லோத்தும் யோபுவும் ஆபிரகாமின் சந்ததி இல்லை என்பதை
கவனிக்கவும். லோத்து ஆபிரகாமின் சகோதரனுடைய மகன் ஆவார், தனக்கு
பிறந்தவரல்ல. ஆபிரகாம் இஸ்ரவேல் நாட்டிற்கு சென்ற போது, அவரோடு கூட
சென்றவர் தான் லோத்து. இந்த நேரத்தில் ஆபிரகாமுக்கு பிள்ளைகள்
பிறக்கவில்லை (பார்க்க ஆதியாகமம் 11:27-30, 12:4-5).

அடுத்தபடியாக, யோபுவைப் பற்றி பார்ப்போம். இவரைப் பற்றி அதிகமாக
விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும், இவர் வேறு ஒரு நாட்டில் /
இடத்தில் வாழ்ந்தவராவார். இவர் ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர் அல்ல.
குர்-ஆனின் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ள வகையை கூர்ந்து கவனித்தால், அவைகள்
ஆபிரகாமைப் பற்றியும், அவரது சந்ததியில் வந்தவர்கள் பற்றியும்
பட்டியலிட்டுத் தருகின்றது. இந்த பட்டியலில் உள்ளவர்களோடு ஆபிரகாமுக்கு
ஒரு உறவுமுறை இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

நோவா மட்டுமே ஆபிரகாமுக்கு முன்பு வந்தவர். மற்ற பெயர்கள் அனைத்தும்
ஆபிரகாமுக்கு பிறகு வந்தவர்கள் என்றும், அவரது சந்ததி என்ற வகையிலும்
குர்-ஆன் பேசுகின்றது.

இதுமட்டுமல்ல, குர்-ஆன் 89ம் வசனம், "இவர்களுக்குத் தான் நாம்
வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்" என்று
சொல்கிறது.

இவ்வசனம் குறிப்பிடும் "வேதம்" (the Book) எது? இதற்கு பதிலாக, "இவர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு வேதம் (a Book) கொடுக்கப்பட்டது" என்று
சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும் அல்லவா? இவர்கள் அனைவருக்கும்
எப்படி ஒரே வேதம் கொடுக்கப்பட்டிருக்க முடியும்? அது எந்த புத்தகம்?

குர்-ஆனின் இதர இடங்களில் வாசிக்கும் போது மோசேக்கு தோரா கொடுத்ததாகவும்,
தாவீதுக்கு ஜபூர் கொடுத்ததாகவும், இயேசுவிற்கு இன்ஜில் கொடுத்ததாகவும்
தனித்தனியாக சொல்லப்படுகின்றது. ஆனால், மேற்கண்ட வசனத்தை படித்தால்,
இவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது "ஒரே வேதத்தை தானா?" என்ற கேள்வி
எழுகின்றது.

இஸ்லாமிய நபி முஹம்மதுவிற்கும் "ஒரு வேதம்/புத்தகம்" கொடுக்கப்பட்டது.
அப்படியானால், இந்த கணக்கு சரியாக இருக்குமா?

இவைகள் அனைத்தையும் ஒரு வேதம்/புத்தகம் என்று அழைக்கமுடியுமா?

தோரா = ஜபூர் = இன்ஜில் = குர்-ஆன்?

அதாவது தோரா என்றுச் சொன்னாலும், ஜபூர் என்றுச் சொன்னாலும், இன்ஜில்
என்றுச் சொன்னாலும், கடைசியாக குர்-ஆன் என்றுச் சொன்னாலும் அது ஒரு
புத்தகத்தையே குறிக்கும் என்று கருதமுடியுமா?

(சிலர் ஆம், மேற்கண்ட கணக்கு சரியானது என்றுச் சொல்கிறார்கள், இதைப்
பற்றி அறிய இங்கு சொடுக்கி படிக்கவும் -
http://www.answering-islam.org/Quran/Versions/004.159.html).

குர்-ஆன் சொல்வது போல "எல்லோருக்கும் ஒரே வேதம் கொடுக்கப்பட்டது" என்று
குர்-ஆனுக்கு முன்பு வந்த பைபிளில் சொல்லப்படவில்லையே! வேதக்காரர்களிடம்
இருக்கும் தோராவும், ஜபூரும்(சங்கீதம்), இன்ஜிலும் (சுவிசேஷங்கள்)
தனித்தனி வேதங்களாகவும், புத்தகங்களாகவும் இருக்கின்றன, அதே போல
குறிப்பிடப்பட்டும் இருக்கின்றன.

யோவான் ஸ்நானகனின் தந்தை ஜகரியாவிற்கு எந்த வேதம் கொடுக்கப்பட்டது?
இதுமட்டுமல்ல, யோவான் ஸ்நானகனுக்கு கொடுக்கப்பட்ட வேதம் எது? அதன் பெயர்
என்ன? இஸ்மாயிலுக்கு கொடுக்கப்பட்ட வேதம் எது? அதன் பெயர் என்ன?
தேவனுடைய உண்மையான வெளிப்பாடாக இருக்கும் பைபிளின் படி பார்க்கும் போது,
குர்-ஆனின் இவ்விதமான கூற்றுக்கள் அனைத்தும் ஒன்றையொன்று முரண்படுகின்றதை
காணமுடியும். இது மட்டுமல்ல, குர்-ஆனின் ஒரு வசனம், இதர வசனங்கள்
சொல்லும் விவரங்களோடும் மற்றும் இதர இஸ்லாமிய ஹதீஸ்களோடும் மோதுகின்றன /
முரண்படுகின்றன. இந்த ஹதீஸ்கள் அல்லாஹ்விடம் இருக்கும் "தாய்
புத்தகத்திலிருந்து" கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகள் அல்ல என்பதை கவனத்தில்
கொள்ளவும்.

இதே போல ஒரு வசனத்தை நாம் குர்-ஆன் 29:27ல் காணலாம், இதிலும் ஒரு தவறு உள்ளது.

மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய
சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு
அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர்
நல்லவர்களில் ஒருவராவார். (குர்-ஆன் 29:27)

மேற்கண்ட வசனத்தில் வரும் "அவருடைய சந்ததியிலே" என்ற சொற்றொடர் பற்றி
பலர் பலவிதமாக கருத்து கூறுகின்றனர்:

சிலர், கடைசியாக பெயர் குறிப்பிடப்பட்ட "யாக்கோபு உடைய சந்ததியிலிருந்து
நபித்துவமும், வேதமும் வரும் என்று பொருள் கொள்ளவேண்டும்" என்று
கூறுகிறார்கள்.
வேறு சிலர் "ஆபிரகாமின் சந்ததி அனைவரிலிருந்தும் நபித்துவமும், வேதமும்
வரும்" என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.

நபித்துவம் என்பது ஆபிரகாமின் சந்ததிக்கு உரியது என்று இவ்வசனம்
சொல்கிறது. இவ்வசனத்திற்கு முன்புள்ள (29:26) மற்றும் பின்புள்ள (29:28)
வசனங்களை கவனித்தால், அதில் லோத்தைப் பற்றி குர்-ஆன் பேசுகின்றது. லோத்து
ஆபிரகாமின் சந்ததியும் அல்ல, யாக்கோபின் சந்ததியும் அல்ல என்பதை
கவனிக்கவும். இதே போல, யோபுவும், நோவாவும் ஆபிரகாமின் சந்ததிகள் அல்ல.
இதனைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்: குர்-ஆன் 16:36ன் முரண்பாடு (எல்லா
நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து மட்டும்
நபிகளா?)

இன்னொரு பிரச்சனை: இக்கட்டுரையில் பார்த்த வசனத்தின் படி, புத்தகம் (அல்
கிதாப் – வேதம்) கொடுக்கப்பவர்களின் பட்டியலில் இஸ்மாயிலும் இருக்கிறார்.
ஆனால், குர்-ஆன் 6:156-157ன் படி, "வேதம்" என்பது இவருக்கு முன்பு இரண்டு
சமுகத்தாருக்குத் தான் கொடுக்கப்பட்டது, இவர்களில் அரபியர்களின் சமூகம்
இல்லை.

6:156. நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது -
ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி
விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;

6:157. அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால்,
நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று
நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே
உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும்
வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து,
அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்?
நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக்
கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.

இது எப்படி சாத்தியமாகும்? இதன்படி பார்த்தால், குறைஷிகள் இஸ்மாயிலின்
சந்ததியிலிருந்து வந்தவர்கள் இல்லையா? இஸ்மாயிலின் சந்ததிக்கு
கொடுக்கப்பட்ட வேதத்தை குறைஷிகள் பெறவில்லையா? இவ்வசனங்களில் உள்ள
பிரச்சனைகளை தனிக் கட்டுரையாக பிறகு காண்போம்.

மூலம்: http://www.answering-islam.org/Quran/Contra/qb012.html

குர்-ஆன் முரண்பாடுகள் பற்றிய கட்டுரைகள்

Source: http://www.answeringislam.org/tamil/quran/contra/qb012.html







--
Source : http://isakoran.blogspot.in/2015/10/blog-post.html

October 7, 2015

9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது தேவனின் கைவேலையா? பாகம் 2

9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது தேவனின் கைவேலையா? பாகம் 2

முன்னுரை: இந்த தலைப்பில் எழுதப்பட்ட முதல் பாகத்தை இங்கு படிக்கவும்:

9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது அல்லாஹ்வின் கைவேலையா? பாகம் 1

மக்காவில் நடந்த கிரேன் விபத்தில் அல்லாஹ்வின் அற்புதம் (செயல்) ஏதாவது
காணப்படுகின்றதா? என்பதை கவனியுங்கள் என்று முஸ்லிம்களுக்கு ஒரு கேள்வியை
முதல் பாகத்தில் முன்வைத்தேன்.

இரண்டாம் பாகத்திற்கான நோக்கம்:

இந்த விபத்துப் பற்றி சில தளங்களில் நான் பல பின்னூட்டங்களைப் படித்தேன்.
இந்த கிரேன் விபத்தை பைபிளின் தேவன் தான் செய்திருக்கிறார் என்று
சிலர்பின்னூட்டமிட்டிருந்தனர். அவைகள் என்னை சிறிது கலங்க வைத்துவிட்டன.
முக்கியமாக, சில கிறிஸ்தவர்களும், நாத்தீகர்களும் கொடுத்த பின்னூட்டங்கள்
ஆழமாக சிந்திக்காமல் கொடுத்த மேலோட்ட விவரங்கள் என்பதை உணர்ந்துக்
கொண்டேன். எனவே இதைப் பற்றி, சில விஷயங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக்
கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த இரண்டாம் பாகத்தை எழுதுகிறேன்.
முக்கியமாக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் பற்றியும், அவைகளால்
பாதிக்கப்படும் கிறிஸ்தவ திருச்சபை மற்றும் இதர மக்கள்
அறியவேண்டியவைகளைப் பற்றியும் என் புத்திக்கு எட்டியதை நான்
இக்கட்டுரையில் எழுதுகிறேன். இதனை கேள்வி பதில் நடையில் எழுதுகிறேன்.

கேள்வி 1: இவ்வாண்டு 9/11ம் அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மையம்
இருந்த இடத்தில் "தீவிரவாத தாக்குதலால் மரித்தவர்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டபோது" வானத்தில் வானவில் காணப்பட்டது. அதே நாள் மக்காவில்
காபாவிற்கு அருகில் மின்னல் தோன்றியது, பலத்த காற்று கிரேனை விழ வைத்தது.
இது உடனிகழ்வு (co-incident) அல்ல. இது நிச்சயமாக தேவச்செயலாகத் தான்
இருக்கவேண்டும்? பைபிளின் தேவன் தான் இதனை செய்திருக்கவேண்டும்!

உமரின் பதில்: இந்த செய்தி உண்மையானதா என்பதை இதுவரை யாரும் சரி
பார்க்கவில்லை. அந்த நாள் உண்மையாகவே அமெரிக்காவில் வானவில் காணப்பட்டதா,
மக்காவில் மின்னல் காணப்பட்டதா, இந்த புகைப்படங்கள் அந்த குறிப்பிட்ட
நாட்களில் எடுத்தவைகளா?

http://toprightnews.com/breaking-you-wont-believe-who-owned-the-crane-that-collapsed-in-mecca-today/
https://twitter.com/DefendGlenn/status/642460402912247813/photo/1
https://twitter.com/RT_com/status/642386111780798464/photo/1

ஒருவேளை அமெரிக்காவின் வானவில்லும், மக்காவின் மின்னலும் உண்மையாக
இருந்தாலும், இதனால் எந்த ஒரு சத்தியமும் நிலைநாட்டப்படப்போவதில்லை.
ஏனென்றால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதுவும் இம்மாதங்களில் (இலையுதிர்
காலம்) மழையும், வானவில்லும் தெரிவது சர்வசாதாரணமே. அதே போல, சௌதி
அரேபியாவில் காற்றும் மணற்புயலும் இக்காலங்களில் சாதாரணமாகும். இது ஒரு
உடனிகழ்வு (co-incident) என்றுச் சொல்லமுடியுமே தவிர, இது இறைச்செயல்
என்றுச் சொல்லமுடியாது. இக்கட்டுரையில் உள்ள அனைத்து பதில்களையும்
படித்தால் இதனை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்.

கேள்வி 2: மக்காவின் கிரேன் விபத்து 9/11 அன்று நடந்ததால், பைபிளின்
தேவன் தான் இதனை செய்தார் என்று கருதலாம் அல்லவா?

உமரின் பதில்: நிச்சயமாக இல்லை. இதனை பைபிளின் தேவன் செய்யவில்லை என்று
என்னால் சொல்லமுடியும். நாம் திரும்ப கேட்கும் கேள்வி: ஏன் தேவன்
மக்காவில் விபத்தை 9/11 அன்று செய்யவேண்டும்?

தேவனுக்கு தேவைப்பட்டால் அவர் எந்த நாளிலும் செய்வார், இதே நாளில்
செய்யவேண்டிய அவசியமில்லை. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியில்
இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு தீய செயலை நடத்தினார்கள், அதற்காக தேவன் 14
ஆண்டுகள் கழித்து ஏன் பழி வாங்குவார்? இதற்கு முன்பு 13 செப்டம்பர்கள்
வந்தது, அப்போது ஏன் தேவன் இதனைச் செய்யவில்லை? மேலும் மனிதனைப்போல தேவன்
பழி வாங்க மாட்டார். அவர் ஞானத்தை யாரும் அறியமுடியாது.

அமெரிக்காவில் தீவிரவாத செயலுக்கு தேவன் பழி வாங்கினால், இந்தியாவில்
நடந்த தீவிரவாத செயலுக்கு எப்போது பழி வாங்குவார்? மேலும் இதர
நூற்றுக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களுக்கு எப்போது அவர் பழி
வாங்கப்போகிறார்? தன் சொந்த ஜனங்கள் என்று பழைய ஏற்பாட்டில் வாக்குக்
கொடுத்த யூத ஜனங்கள் மீது (இஸ்ரவேலில்) நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
எப்போது பதில் தரப்போகிறார்?

எனவே, தேவன் தான் இந்த நாளில் மக்காவில் கிரேன் விபத்தை செய்யவைத்தார்
என்றுச் சொல்வது, தேவனைப் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்கள் சொல்லும்
விவரமாகும். ஆனால், ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டும், அது
என்னவென்றால், "தேவனுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும் என்பதாகும்,
அதாவது இந்த விபத்து அவருக்கு தெரிந்தே நடந்துள்ளது, அதனை அவர்
தடுக்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்". முஸ்லிம்களும் இதே
நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள், அதாவது அல்லாஹ்விற்கு இந்த விபத்து
பற்றித்தெரியும் ஆனால், அவர் அதனை தடுக்காமல், அது நிகழ அனுமதித்துள்ளார்
என்பதாகும். ஏன் இறைவன் விபத்துக்களை உலகில் அனுமதிக்கிறார், அதுவும்
தன்னை வணங்குமிடங்களிலும் ஏன் அனுமதிக்கிறார்? என்று நாத்தீகர்கள்
கேட்கும் கேள்விக்கு இக்கட்டுரையில் பதில் தரமுடியாது, அது மிகப்பெரிய
தலைப்பாகும், அது இக்கட்டுரையின் தலைப்பிற்கு அப்பாற்பட்டதாகும்.

கேள்வி 3: 9/11ல் மரித்தவர்கள் 3000 பேரில், 100 பேர் தேவனால்
பழிவாங்கப்பட்டனர், மீதமுள்ளது 2900 பேர். கணக்கு சரி தானே!

உமரின் பதில்: இந்த கேள்வியைப் பார்த்தால், அமெரிக்காவிற்காக மட்டுமே
தேவன் செயல்படுகிறார் என்று சொல்வது போல் இருக்கிறது. நீங்கள் கேட்பது
உண்மை என்று நினைத்தால், உலகில் எந்த நாட்டில் தீவிரவாத செயல்
நடைப்பெற்றாலும், அந்த நாட்டுக்காக தேவன் தனிப்பட்ட முறையில் பழி வாங்க
வேண்டும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை
மறக்கவேண்டாம்.

மேலும் பழிவாங்க வேண்டுமென்றால், பின் லாடனின் தீவிரவாத குழுவில்
உள்ளவர்களை அல்லவா தேவன் பழி வாங்கி இருக்கவேண்டும்? அதை விட்டுவிட்டு,
மக்காவில் விபத்தை செய்வித்து ஏன் அப்பாவி முஸ்லிம்களை கொல்லவேண்டும்?
உங்கள் கணக்கு சரியில்லை. உங்கள் கணக்கில் அனேக பிழைகள் உள்ளன.

கேள்வி 4: உபாகமம் 32:35ல் பழிவாக்குவது எனக்கு உரியது, அதனை நான்
செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார். இதன் படி, கர்த்தர் பழி வாங்கினார்
என்று சொல்லலாம் அல்லவா?

உமரின் பதில்: இல்லை, கர்த்தர் பழி வாங்கினார் என்று சொல்லமுடியாது. ஒரு
மனிதனை இன்னொரு மனிதன் பழி வாங்க துடிக்கக்கூடாது என்றும், மனித
சமுதாயத்தில் பழிவாங்கும் எண்ணமுடையவர்களால் அதிக தீமைகள் விளையும்
என்பதாலும் கர்த்தர் "பழிவாங்குவதும், பதில் அளிப்பதும்" எனக்கு உரியது.
அதனை மனிதர்களே, நீங்கள் செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளார். இதைத்
தான் உபாகமம் 32:35ல் படிக்கிறோம்.

உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள்
சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.

இந்த ஒரு வசனமல்ல, பைபிளில் அனேக இடங்களில் இதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

ரோமர் 12:19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே
பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று
எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு
இடங்கொடுங்கள்.

எபிரேயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை
நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

இந்த வசனத்தோடு, மக்காவின் கிரேன் விபத்தை முடிச்சு போடுவது சரியானதன்று.
இவ்வசனங்கள் தனி மனிதன் வாளை ஏந்தி பழி வாங்கக்கூடாது என்றும், அதனை
அரசாங்கம் செய்யவேண்டும், அல்லது இறைவன் பார்த்துக் கொள்வான் என்றும்
தெரிவிக்கவே சொல்லப்பட்டது.

கர்த்தர் பழி வாங்குவது உண்மை தான், ஆனால் இப்படி விபத்துக்களினால் அல்ல.
மேலும், கிறிஸ்தவத்தின் படி, இவ்வுலகை இப்போதைக்கு அவர் கிருபையின் கீழ்
விட்டுள்ளார். மனிதன் உலகில் செயல்படுத்தும் ஒவ்வொரு வன்முறை செயலுக்கும்
தேவன் இவ்வுலகிலேயே இப்போதே பழிவாங்க வேண்டுமென்றால், உலகம் ஒரே நாளில்
சுடுகாடு ஆகிவிடும்.

உலக வர்த்தக மையத்தை விடுங்கள், அது மதசார்பற்ற ஒரு வியாபார ஸ்தலம்.
இப்போது இதை கவனியுங்கள். இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சபைகள்
எரிக்கப்படுகின்றன, சபைகளில் தீவிரவாதிகள் நுழைந்து ஆராதனை செய்துக்
கொண்டு இருக்கும் மக்களை சுட்டுத்தள்ளுகிறார்கள். சமீப காலமாக ஐஎஸ் என்ற
பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம்,
திருச் சபைகளை இடித்து, கிறிஸ்தவர்களை சுட்டுத் தள்ளுகிறது, இஸ்லாமிய நபி
முஹம்மது செய்தது போல, பெண்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு இருக்கிறது,
பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தேவன் உடனே பழிவாங்க வேண்டுமென்றால், இந்த இயக்கத்தில் இருப்பவர்களை
அல்லவா கொல்லவேண்டும்? அதை விட்டுவிட்டு, ஏன் அப்பாவி முஸ்லிம்களை
மக்காவில் கொல்லப்போகிறார்? லாஜிக் புரிகின்றதா?

கர்த்தருடைய நேரம் இன்னும் வரவில்லை, அவருக்கென்று ஒரு காலத்தை நியமித்து
இருக்கிறார். அந்த நேரம் வரும்வரை, வெளிப்படுத்தின விசேஷத்தில்
சொல்லியபடி, நாம் நம் வேலையை செய்துக் கொண்டு இருப்போம்.

வெளி 22:10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள
தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்;
அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன்
இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு
நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

எனவே, உபாகமம் 32:35ம் வசனத்துக்கும், இந்த மக்காவின் கிரேன்
விபத்துக்கும் சம்மந்தமில்லை.

கேள்வி 5: இஸ்லாமியர்களின் புனித வணக்கஸ்தலம் மக்காவில்
விபத்துக்களினால்/நோய்களினால்/நெரிசல்களினால் முஸ்லிம்கள் மரிப்பது
வித்தியாசமானதாக இருக்கின்றதல்லவா? இப்படி மற்றவர்களின்
வணக்கஸ்தலங்களில் நடப்பதில்லையே! இது நமக்கு எதனை காட்டுகிறது?
முஸ்லிம்களுக்கு எதிராக இறைச்சக்தி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை
காட்டுகின்றதல்லவா?

உமரின் பதில்: இஸ்லாமுக்கு எதிராக இறை சக்தி செயல்பட்டுக்கொண்டு இருப்பதை
நான் அறிவேன், ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக அது செயல்படவில்லை என்பதை
நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக, முஸ்லிம்களுக்கு ஆதரவாக
தேவ அன்பு தன் இரு கரங்களை நீட்டி அழைத்துக் கொண்டு இருக்கிறது, அவர்களை
பரலோக பிரஜைகளாக மாற்றுவதற்கு முழூமூச்சில் ஊழியங்கள்
நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன, இதனை மறந்துவிடவேண்டாம்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

புனித ஸ்தலங்களில் அல்லது வணக்க ஸ்தலங்களில் மக்கள் மரிப்பது இஸ்லாமுக்கு
மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு மதத்திலும் இது நடைப்பெற்றுக் கொண்டு
இருக்கிறது. முக்கியமாக, கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களிலும் மக்கள்
மரிக்கிறார்கள். இதனை கர்த்தர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால், இம்மரணங்களுக்காக யார் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு
அய்யோ!

கிறிஸ்தவ மதத்தலங்களில் மரணங்கள்:

உலகிலேயே இதர மக்களின் கரங்களில் மாட்டிக்கொண்டு அதிகமாக அவதிப்படும்
மக்கள் "கிறிஸ்தவர்கள் தான்" என்று ஒரு செய்தியில் படித்த ஞாபகம்.

முதலாவதாக, சுனாமி, பூகம்பம் மற்றும் இதர விபத்துக்களினால் எல்லா வகையான
மார்க்க மக்களும் மரிக்கிறார்கள். இதில் கிறிஸ்தவர்களும் உண்டு, இதில்
எந்த பாகுபாடும் இறைவன் காட்டுவதில்லை.
இது போதாது என்று, இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அவர்கள்
தங்கள் திருச்சபைகளில் தொழுதுக் கொண்டு இருக்கும்போதே, இஸ்லாமிய
தீவிரவாதிகளால் தாக்கப்படுகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
சில இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சிறுமிகள், வாலிபப் பெண்கள் சில
முஸ்லிம்களால் கடத்தப்பட்டு, பல நாட்கள் அவர்கள்
கற்பழிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு கற்பழித்தவனே திருமணம் செய்துக்
கொள்கிறான், அப்பெண்களை முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள்.
சரி இந்தியாவிற்குள் இருக்கும் கிறிஸ்தவர்களாவது சுதந்திரமாக தொழுதுக்
கொள்ள முடிகிறதா? என்று பார்த்தால், அவ்வப்போது சில சர்சுக்கள் சில
இந்துக்களால் கொலுத்தப்படுகின்றன, கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
இது போதாது என்றுச் சொல்லி, சமீப காலமாக, ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத
இயக்கம், தன் பங்கிற்கு மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவர்களையும், அவர்கள்
வணக்கஸ்தலங்களையும் தீக்கிரையாக்கிக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவர்களை
அவர்கள் வணக்கஸ்தலங்களிலேயே தாக்குவது தீவிரவாதிகளுக்கு ஒரு
பேஷனாகிவிட்டது.

இஸ்லாமிய மதத்தலங்களில் மரணங்கள்:

சில இஸ்லாமியர்களால் கிறிஸ்தவர்களும், இதர மக்களும்
பாதிக்கப்படுகிறார்களே! குறைந்தபட்சம் தங்கள் சொந்த இனமாகிய
இஸ்லாமியர்களாவது சுகமாக இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டால் அதுவும்
இல்லை.

என் கருத்துப்படி, கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக, அதிகமாக அவதிக்குள்
உட்படுத்தப்படுவது முஸ்லிம்கள் என்றுச் சொல்லுவேன். நான் கருத்துக்
கணிப்பு எதுவும் எடுக்கவில்லை. அனுதினமும் செய்தித் தாள்களைப்
பார்த்தால், ஒரளவிற்கு இதனை அறிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு:

சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம் மசூதிகளில் வெடிகுண்டு வைக்கிறார்கள்.
ஷியா முஸ்லிம் தீவிரவாதிகள் சுன்னி முஸ்லிம் மசூதிகளில் வெடிகுண்டு
வைக்கிறார்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தானே, எப்படி
அவர்களால் வேறு விதமாக செயல்படமுடியும்?
ஈரான் ஈராக் சண்டைகள், சத்தாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு. இதில்
மரித்த முஸ்லிம்கள்.
இது போதாவது என்று மேற்கத்திய நாடுகள் இடையில் நுழைந்து "நான் உதவி
செய்கிறேன் என்றுச் சொல்லி உதவிக் கரம் நீட்டியதால்", நடந்த சண்டைகள்
இவைகளில் மரித்த முஸ்லிம்கள்.
இதுவரை இக்கட்டுரையை மூச்சு பிடித்துக் கொண்டு படித்துவிட்ட முஸ்லிம்கள்
எதிர்ப்பார்க்கும் அடுத்த பாயிண்ட் எதுவாக இருக்கும்? ஆம் அதுதான்,
மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துக் கொண்டு இருக்கும் டாம் அண்டு ஜெர்ரி
சண்டை (Tom & Jerry). இன்னுமா உங்களுக்கு புரியவில்லை? அது "இஸ்ரவேல்
மற்றும் பாலஸ்தீனா சண்டை" ஆகும். இதில் மரித்த முஸ்லிம்கள், மரித்துக்
கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் மரிக்கப்போகும் முஸ்லிம்கள்.
இப்போதைக்கு மரித்த யூதர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம்.
இப்படி பல வகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டு இருக்கும்
முஸ்லிம்களுக்கு புதிய தலைவலியாக மாறியது ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத
இயக்கம். இந்த ஐஎஸ் தீவிரவாதத்தை உருவாக்கியது யார் என்று தெரிந்துக்
கொள்ள, ஐஎஸ் தீவிரவாதிகளின் நம்பிக்கைகள் என்ன? அவர்கள் எவைகளை உலகில்
ஸ்தாபிக்க நினைக்கிறார்கள்? போன்றவற்றை இணையத்தில் தேடிப்பார்த்து
படித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தால், குர்-ஆனையும்,
ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கையையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்,
ஓரளவிற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய துப்பு கிடைக்கும்.
உலகிலேயே, தன் இன மக்களால் தாங்களே அதிகமாக கொல்லப்படும் அவல நிலை
முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ளது என்றுச் சொன்னால், அது மிகையாகாது.
அவ்வப்போது ஆங்காங்கே இப்படி தங்கள் இனத்தை அழிக்க துடிக்கும்
சர்வாதிகாரிகள் தங்கள் இனத்திலேயே உருவாக்கப்பட்டது உண்டு, ஆனால், இந்த
இஸ்லாமில் மட்டுமே, அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே
இருக்கிறார்கள், இன்னும் இஸ்லாம் உலகில் இருக்கும் வரை உருவாகிக்கொண்டே
இருப்பார்கள்.
சௌதி அரேபியாவிற்கு வெளியே மசூதிகளில் மரிக்கும் முஸ்லிம்களை ஆறுதல்
படுத்தும் விதமாக, அவ்வப்போது இஸ்லாமின் புனித பூமியாகிய மக்காவிலும்,
முக்கியமாக காபா இருக்கும் ஸ்தலத்திலும் பல மரணங்கள் நிகழ்ந்து
விடுவதுண்டு. இவ்வாண்டு (2015) காபாவிற்கு அருகில் ஒரு கிரேன் விழுந்து
100க்கும் அதிகமானோர் மரித்தனர். நேற்று ஹஜ்ஜின் போது 700க்கும்
அதிகமானோர் நெரிசலினால் மரித்தனர். இவையெல்லாம் வணக்க ஸ்தலங்களில்
நடக்கும் மரணங்கள். நல்லவேளை, ஒவ்வொரு கிறிஸ்தவனும் எருசலேமுக்கு ஒவ்வொரு
ஆண்டும் புனித யாத்திரை செய்யவேண்டும், அங்கு சென்று சாத்தானை
கல்லெரியவேண்டும் போன்ற மூடநம்பிக்கைகள் கிறிஸ்தவத்தில் இல்லை. எனவே,
நெரிசலில் சிக்கி மரிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை கிறிஸ்தவர்களுக்கு
இல்லை என்பது ஆறுதல் படுத்தும் செய்தியாகும்.

இந்து மதத்தலங்களில் மரணங்கள்:

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்களில் மரண அவலங்கள்
உண்டு என்று சொன்னேன். இந்து மதத்தலங்களில் மரணங்கள் இல்லையா என்று
யாரும் கேட்காதீர்கள். இயற்கைக்கு மதமில்லை, அது மதசார்ப்பற்ற ஒன்றாகும்.
என்னுடைய இந்த கட்டுரை இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நோக்கி நகர்வதால்,
இந்துக்கள் பற்றி சில வரிகளை மட்டுமே எழுதி தொடர்ந்து செல்ல
விரும்புகிறேன்.

இந்து மதத்தலங்களின் மரணங்களுக்கு பெரும்பான்மையான காரணம், அதிக
பக்தியும், கூட்டமும் நெரிசலும் தான்.
இந்துக்களின் சில கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்கள் மலைகளிலும், மிகவும்
ஆபத்தான இடங்களிலும் இருக்கும். சில நேரங்களில் இயற்கை தன் கைவரிசையைக்
காட்டும். சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மலைச்சரிவுகளினாலும், மழை
வெள்ளங்களினாலும் மரித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
தங்கள் இறைவனை காண புனித யாத்திரைச் சென்ற அனேகர், வீடு திரும்பவில்லை.
யாரைக் குற்றப்படுத்துவது?
இது போதாது என்பதற்காக, சில குறிப்பிட்ட விசேஷித்த திருவிழாக்களில்
மக்களின் கூட்டம் அதிகமாகும் போது, நெரிசலில் மாட்டிக் கொண்டு
மரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் தீவிரவாதிகளால் தீய செயல்கள் வெற்றிகரமாக அமுல் படுத்தும்
போது, இதில் மரிப்பவர்களில், இந்துக்களின் எண்ணிக்கை மற்றவர்களை விட
அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, இறைவன் பாகுபாடு இன்றி எல்லா இன
மக்களையும் மரிக்கச் செய்கின்றான். முக்கியமாக தன்னை வணங்கும்
ஸ்தலத்திலேயே மக்களின் உயிர்கள் எடுக்கப்பட அவன் அனுமதிக்கிறான் என்பது
மட்டும் உண்மை. அது விபத்தா? தீவிரவாதமா? அல்லது இயற்கை சீற்றமா? என்பது
இடத்தைப் பொறுத்து, நாட்டைப் பொறுத்து, முஸ்லிம்களின் சதவிகிதத்தைப்
பொறுத்து அமைகிறது.

எனவே, மக்காவில் மரிப்பவர்களின் எண்ணிக்கை நமக்கு எதனையும்
காட்டுவதில்லை. சரியாக நிர்வாகம் செய்யாததால் விபத்து நேரிடுகிறது, சில
நேரங்களில் இயற்கை தன் சீற்றத்தைக் காட்டுகிறது, அவ்வளவு தான்.

கேள்வி 6: இஸ்லாமிய தீவிரவாத வன்முறைகளில் சிக்கித் தவிக்கும் கிறிஸ்தவ
திருச்சபை என்ன செய்யவேண்டும்?

உமரின் பதில்: இது கடினமான கேள்வியாகும். கிறிஸ்தவ சபை இருக்கும்
இடைத்தைப் பொறுத்து செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மாறுபடும். நான் திருச்சபை இருக்கும் இடத்தை மூன்றாக பிரிக்க
விரும்புவேன்.

1) இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்

2) முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்.

3) முஸ்லிம்கள் சிறும்பான்மை நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்.

இஸ்லாமிய நாடுகளில் திருச்சபைகள்:

என்ன சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்களாக
பிறப்பது பாவமா? அல்லது இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிமாக இருந்து கிறிஸ்துவை
பின்பற்ற முடிவு செய்வது பாவமா? இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ திருச்சபை
படும் அல்லல்களை சொல்வது சுலபமல்ல. இணையத்தில் தேடி படித்துப் பாருங்கள்.
முஸ்லிம்களின் சுலபமான இலக்கு கிறிஸ்தவர்களாவார்கள்.

திருச்சபை என்ன செய்யவேண்டும்? பழிக்கு பழி வாங்கக்கூடாது. முஸ்லிம்கள்
திருச்சபைகளில் குண்டு வைக்கிறார்கள் என்பதற்காக, கிறிஸ்தவர்கள்
மசூதிகளில் குண்டு வைக்கக்கூடாது. அவர்களை வழி நடத்துகின்ற அவர்களின்
வேதம் என்ன சொல்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்வார்கள். ஆனால்,
கிறிஸ்தவர்கள் தேவனை சார்ந்து மட்டுமே இருக்கவேண்டும். ஞானமாக நடந்துக்
கொள்ளவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒற்றுமையாக
இருந்து, உரிமைகளுக்காக நியாயமான முறையில் போராடவேண்டும். அந்த மக்கள்
மனந்திரும்ப ஜெபிக்கவேண்டும்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இருக்கும் திருச்சபைகள்:

இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்
நாடுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. திருச்சபை அதே எதிர்ப்பு
மற்றும் வன்முறைக்கு ஆளாகவேண்டி வரும். இஸ்லாமின் ஷரியா சட்டம் அமுலில்
இல்லாமல் இருப்பதினால், திருச்சபை தன் உரிமைகளுக்காக நியாயமான முறையில்
போராட முடியும். முஸ்லிம்களால் வஞ்சிக்கப்படாமல் திருச்சபை எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

முஸ்லிம் சிறும்பான்மை நாடுகளில் இருக்கும் திருச்சபைகள்:

இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருப்பதினால்,
அமைதி மார்க்க புறாக்கள் போல முஸ்லிம்கள் காணப்படுவார்கள். திருச்சபையை
வஞ்சிக்க தீவிரமாக செயல்படுவார்கள். மற்ற நாடுகளில் படும் அல்லல்கள் போல
இல்லையென்றாலும், திருச்சபை எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திருச்சபை
விசுவாசிகள் புறாக்களைப்போல கபடற்றவர்களாக இருப்பதோடு கூட, சர்பத்தைப்போல
எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சபையில் இஸ்லாமிய விஷம் அமைதியாக பரவும்
அபாயம் இருப்பதால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிவேஷத்தைக் கண்டு,
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நம்பி திருச்சபை ஏமாறக்கூடாது.

கேள்வி 7: ஒரு சொற்பமான சதவிகித முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில்
ஈடுபடுவதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கவேண்டும்?
பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதி விரும்பிகளாகவும், அமைதியை
நிலைநாட்டுபவர்களாகவும் இருக்கிறார்களே! இது சமுதாயத்திற்கு போதாதா?
ஒவ்வொரு மார்க்கத்திலும் சொற்ப சதவிகிதத்தினர், வன்முறையில்
ஈடுபடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்களே! இஸ்லாம் மட்டும் எப்படி
தனித்து விளங்குகிறது?

உமரின் பதில்: சொற்பமான சதவிகிதம் என்ற வார்த்தைகளை கவனிக்கும் போது,
நீங்கள் சொல்வது சரி தான் என்று தோன்றும், சொற்ப சதவிகித மக்கள் என்ன
செய்துவிடப்போகிறார்கள் என்று எண்ணத்தோன்றும். ஆனால், புள்ளி விவரங்களோடு
பார்க்கும் போது, விஷயம் விஷமாக மாறுவதை காணமுடியும்.

முஸ்லிம்களில் வெறும் சொற்ப சதவிகித மக்கள் தான் தீவிரவாத செயல்களில்
வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், மீதமுள்ள பெரும்பான்மையானவர்கள்
அமைதியானவர்களாகவும், ஆபத்தை விளைவிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள், இது
உண்மை தான். ஆனால், ஒரு சிறிய புள்ளிவிவர கணக்கை இப்போது காண்போமா!

இந்த "சொற்ப சதவிகிதம்" என்பதற்கு ஒரு எண்ணை (சதவிகிதத்தை) கொடுத்து
கணக்கு பார்ப்போமா?

1) நூறில் ஒருவன் - 100:1

2) ஆயிரத்தில் ஒருவன் – 1,000:1

3) லட்சத்தில் ஒருவன் – 1,00,000:1

4) பத்து லட்சத்தில் ஒருவன் - 10,00,000:1

இந்திய ஜனத்தொகை கணக்கெடுப்பு 2011ன் படி, இந்தியாவில் முஸ்லிம் மக்களின்
சதவிகிதம் 14.23% ஆகும், எண்ணிக்கையில் பார்த்தால், 17.22 கோடி மக்கள்
முஸ்லிம்கள் ஆவார்கள் (http://www.census2011.co.in/religion.php).

1) நூறில் ஒருவன் என்று கணக்கிட்டால், 17.22 கோடியில்,
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,22,000 நபர்கள் ஆவார்கள்.

2) ஆயிரத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 1,72,200 நபர்கள் ஆவார்கள்.

3) லட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 1722 நபர்கள் ஆவார்கள்

4) பத்து இலட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 172 நபர்கள் ஆவார்கள்.

முதலாவது, நூறில் ஒருவன்: நாம் நியாயமாக எழுதவேண்டுமென்றால், இந்தியாவில்
1% முஸ்லிம்கள் தீவிரவாதி செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சொல்லமுடியாது.
ஏனென்றால், இந்திய கணக்கெடுப்பின் படி பார்த்தால், 17.22 லட்ச நபர்கள்
இந்த வகையில் வருகிறார்கள்.

இரண்டாவது, ஆயிரத்தில் ஒருவன்: இதுவும் 1.72 லட்ச நபர்கள் வருகிறார்கள்.
இந்தியாவின் முஸ்லிம்களின் நிலையை கணக்கில் கொண்டு பார்த்தால், இதனையும்
நாம் கருத்தில் கொள்ள வேண்டாம் (வேண்டாம் என்றுச் சொன்னேன் "எடுத்துக்
கொள்ள முடியாது என்று சொல்லவில்லை").

மூன்றாவது, லட்சத்தில் ஒருவன்: கணக்கு 1722 நபர்கள் என்று வருகிறது. இதனை
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 17 கோடி ஜனத்தொகையில் 1722 நபர்களுக்கு
இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருக்குமா
என்று கேட்டால், தற்காலத்தில் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாத செயல்களை
பார்க்கும் போது, "இது சரியான கணிப்பு தான்" என்று சொல்லமுடியும்.

கடைசியாக, பத்து லட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 172 பேர் வருகிறார்கள்.

நாம் கேள்வியில் பார்த்ததின் படி "சொற்ப சதவிகிதம்" என்பதற்கு நாம் 1722
அல்லது 172 என்ற எண்களை தரலாம். முஸ்லிம்களின் மீது வைத்துள்ள அன்பின்
காரணமாக, நான் 172யே உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.

இந்த 172 தீவிரவாதிகளால், 121 கோடி இந்திய மக்களுக்கு ஆபத்து உண்டா இல்லையா?
இந்த சொற்ப எண்ணிக்கையுள்ள 172 பேர், எப்படி 121 கோடி மக்களுக்கு ஆபத்தாக
கருதமுடியும்?

நாம் மேலே படித்த கேள்வியைத் தான், புள்ளிவிவரங்களோடு நான்
கொடுத்துள்ளேன். இப்பொழுது பிம்பம் எப்படி தெரிகின்றது? இன்னும்
புரியவில்லையென்றால், கீழ்கண்ட விவரங்களை பாருங்கள்:

அ) உலக வர்த்தக மையம் தாக்குதல் – 19 தீவிரவாதிகள், 2996 பேர் மரணம்.
மரித்தவர்களின் இந்த எண்ணிக்கையில் உலகத்தின் 90 நாடுகளின் குடிமக்கள்
மரித்துள்ளார்கள். பல ஆயிர கோடி மதிப்புள்ள பொருளாதாரம் நட்டமடைந்தது.

ஆ) மும்பை தாக்குதல் – 10 தீவிரவாதிகள், 164 பேர் மரித்தனர், 308 பேர் காயமுற்றனர்.

இந்த விவரங்களை நன்றாக கவனியுங்கள். 19 பேர், 3000 பேரை கொல்லமுடியும்,
90 நாடுகளின் குடிமக்களை கொல்லமுடியும், பல ஆயிர கோடி பொருளாதாரத்தை
நஷ்டப்படுத்த முடியுமென்றால், 172 பேர் எவ்வளவு பெரிய ஆபத்தை
உண்டாக்கமுடியும் என்று கணக்கு போட்டு பார்க்கமுடியுமா?

19 பேர் என்பது சொற்ப எண்ணிக்கைத் தான்

10 பேர் என்பது சொற்ப எண்ணிக்கைத் தான்

ஆனால், இவர்களினால் உண்டான உயிர் நஷ்டம், பொருளாதார நஷ்டம் போன்றவற்றை
பாருங்கள், கண்கள் பிதுங்கி விடும்.

இந்திய முஸ்லிம் ஜனத்தொகை 172,245,158 யில், 172 பேரை கழித்துவிடுவோம்,
மீதமுள்ள 17 கோடியே, 22 இலட்ச நல்ல முஸ்லிம்களினால், இந்த 172 மக்களினால்
உண்டாகவிருக்கும் ஆபத்திலிருந்து இந்தியாவை காக்கமுடியுமா?

மக்கள் சொற்பம் தான், ஆனால் ஆபத்தோ சொற்பமல்ல, அது பிரமாண்டம்.

எனவே, சொற்ப சதவிகித மக்கள் தானே இப்படியெல்லாம் தீவிரவாதம் என்று
திரிகிறார்கள், எனவே நாம் அதனை கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்று
சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது, இது அறிவுடமையாகாது. மக்கள் அதிகம்
கூடும் இடத்தில் ஒரே ஒரு தீவிரவாதி, தற்கொலை தாக்குதல் நடத்தினால்,
எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள், எவ்வளவு ஆபத்து உண்டாகும் என்பதை நாம்
கவனிக்கவேண்டும்.

எனவே சொற்ப எண்ணிக்கையே என்று சும்மா இருந்துவிடமுடியாது, தீவிரவாதத்தை
தூண்டும், எதுவாக இருந்தாலும் சரி, அதனை அடியோடு அழித்துவிடவேண்டும்,
ஒருவேளை பெரும்பான்மை மக்கள் அதனை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி.

அடிக்குறிப்புக்கள்:

https://en.wikipedia.org/wiki/September_11_attacks#Casualties

https://en.wikipedia.org/wiki/2008_Mumbai_attacks

கேள்வி 8: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 நபர்கள் அனைவரும்
பாகிஸ்தானியர்கள், இந்திய முஸ்லிம்கள் இல்லை. இது நமக்கு எதனை
காட்டுகிறது? இந்திய முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை
என்று காட்டுகின்றதல்லவா? இதனால் இந்திய முஸ்லிம்களால் ஆபதில்லை என்று
புரிந்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் அல்லவா?

உமரின் பதில்: இது இன்னும் ஆபத்தான விஷயமாகும். நான் மேலே சொன்ன சொற்ப
எண்ணிக்கை (172 நபர்கள்) இந்திய முஸ்லிம் ஜனத்தொகையிலிருந்து எடுத்துச்
சொன்னேன். இப்போது ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. அதாவது, ஒரு நாட்டில்
தீவிரவாத செயல் நடந்தேறினால், அதற்கு அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள்
மட்டுமே காரணம் என்று இருந்தால், ஆபத்தின் சதவிகிதம் குறைவே. ஆனால்,
அவர்களோடு மற்ற நாட்டு முஸ்லிம் தீவிரவாதிகளும் சேர்ந்து செயல்படுவார்கள்
என்று சொல்லும் போது, ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது.

ஆக, இந்திய மண்ணில் தீவிரவாத செயல் புரிய, இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில்
சொற்ப சதவிகித மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அதோடு
சேர்த்து உலகமனைத்திலும் உள்ள முஸ்லிம் ஜனத்தொகையில் சதவிகிதத்தையும்
கணக்கிடவேண்டும்.

ஆக, சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், உலகத்தில் உள்ள எந்த ஒரு நாட்டிலும்
ஒரு இஸ்லாமிய தீவிரவாத செயல் நடந்தேற, அந்நாட்டு முஸ்லிம்களின்
கைமட்டுமல்ல, உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின்
கைகளும் இருக்கும். எனவே, சொற்ப எண்ணிக்கை மக்கள் தான் தீவிரவாத செயலில்
ஈடுபடுகிறார்கள் என்ற வாதம் அர்த்தமற்ற வாதமாகும்.

உதாரணத்திற்கு, உலக ஜனத்தொகையில் அந்த சொற்ப சதவிகிதத்தை (பத்து
லட்சத்தில் ஒருவன் என்ற) கணக்கிட்டுப் பார்ப்போம்.

கவனிக்க: இந்திய மண்ணில் மட்டுமே நாம் எடுத்துக் காட்டுக்காக பத்து
லட்சத்தில் ஒருவன் என்ற சதவிகிதத்தை கொள்ளமுடியும், ஆனால், இஸ்லாமிய
நாடுகளில் நூற்றுக்கு சிலர் இந்த தீவிரவாத வகையில் இருப்பார்கள் என்பதை
கவனத்தில் கொள்ளவும். இந்த கணக்கு ஒரு மதத்தை சார்ந்து இருப்பதினாலும்,
நாம் வேண்டுமென்றே இவ்விஷயத்தை பூதாகாரமாக காட்டுகின்றோம் என்று
மற்றவர்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, பத்து லட்சத்தில் ஒருவர்
என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டு கணக்கிடுகிறோம்.

2010ன் கணக்கெடுப்பின் படி, முஸ்லிம்களின் உலக ஜனத்தொகை 157 கோடியாகும்.
(https://en.wikipedia.org/wiki/Islam_by_country)

நம்முடைய சொற்ப சதவிகிதத்தை கணக்கிடும் போது: 1570 நபர்கள் வருகிறார்கள்.

ஆக, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த 1570 நபர்களால் ஆபத்து உள்ளது
என்று தாராளமாகச் சொல்லமுடியும், ஏனென்றால், இவர்கள் உலக இஸ்லாமிய
உம்மாவின் குடிமகன்கள் ஆவார்கள். உலக வர்த்தக மையத்தை தாக்கியவர்கள்,
அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அல்ல, அவர்களில் அனேகர் சௌதி
முஸ்லிம்கள். மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய முஸ்லிம்களல்ல,
அவர்கள் பாகிஸ்தான் முஸ்லிம்கள்.

ஆக, இந்த சொற்ப எண்ணிக்கை வாதம் அடியோடு அடிபட்டுப் போகிறது. சொற்ப
மக்களால் இப்படிப்பட்ட ஆபத்து நிகழுமானால், உண்மையில் சதவிகிதம் இன்னும்
அதிகமாக இருப்பதினால், ஆபத்து எவ்வளவு பெரியது என்று
கணக்கிட்டுப்பாருங்கள்.

கேள்வி 9: முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தின் பெயரில் நடக்கும் தீவிரவாத
வன்முறை செயல்களுக்கு தகுந்த பதிலடியை எப்படி கொடுக்கவேண்டும்? இஸ்லாமை
சீர்திருத்தி "தீவிரவாதிகளே இல்லாத மதமாக" அதனை மாற்றமுடியும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளது. இஸ்லாமை சீர்திருத்த சிலர் ஏற்கனவே
எழும்பிவிட்டனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். சீக்கிரத்தில் இதனை
நாம் கண்டு களிக்கப்போகிறோம். இது உங்களுக்குத் தெரியுமா?

உமரின் பதில்: முடவன் கொம்புத் தேனுக்கும் ஆசைப்படலாம், ஆனால், இஸ்லாமை
சீர்திருத்த ஆசைப்படுவது மிகவும் கடினமான காரியம், மன்னிக்கவும் அது
முடியாத காரியமாகும். இஸ்லாமை சீர்திருத்த விரும்புபவர்களுக்கு, ஒன்று
இஸ்லாமின் அடிப்படை தெரியாமல் இருக்கவேண்டும், அல்லது அவர்களுக்கு
பயித்தியம் பிடித்திருக்கவேண்டும். இந்த பயித்தியம் தெளிவதற்கு முன்பு
அவர்களின் உயிர் இஸ்லாமியர்களாலே பிடுங்கி எறியப்பட்டுவிடும்.

இந்த தொடுப்புக்களை ஒரு முறை படித்துப் பாருங்கள்:

https://en.wikipedia.org/wiki/Liberal_Muslim_movements
http://www.answering-islam.org/authors/abraham/reforming_islam.html
http://www.frontpagemag.com/fpm/243473/you-cant-reform-islam-without-reforming-muslims-daniel-greenfield
http://www.theguardian.com/commentisfree/2015/may/17/islam-reformation-extremism-muslim-martin-luther-europe

மேற்கண்ட நான்காவது கட்டுரையில் கீழ்கண்ட வரிகள் முடிவுரையாக கொடுக்கப்பட்டுள்ளது:

With apologies to Luther, if anyone wants to do the same to the
religion of Islam today, it is Isis leader Abu Bakr al-Baghdadi, who
claims to rape and pillage in the name of a "purer form" of Islam –
and who isn't, incidentally, a fan of the Jews either. Those who cry
so simplistically, and not a little inanely, for an Islamic
reformation, should be careful what they wish for.

ஒரு மார்க்கத்தை சீர்திருத்தவேண்டுமென்றால், அந்த மார்க்கம் தூயதாக
இருந்திருக்கவேண்டும், அதனை சிலர் தவறாக பயன்படுத்தி
இருந்திருக்கவேண்டும், அப்போது அந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில்
திரும்ப கொண்டுவர அதாவது சீர்திருத்த முயற்சி எடுக்கலாம். ஆனால்,
இஸ்லாமைப் பொறுத்தமட்டில், குர்-ஆனும், ஹதீஸ்களும் சொல்லும் வழியில் தான்
தற்கால இஸ்லாம் இஸ்லாமிய நாடுகளில், ஐஎஸ், அல்கய்தா போன்ற
தீவிர்வாதிகளால் பின்பற்றப்படுகிறது. எனவே, இஸ்லாம் தன் உண்மை வடிவில்
வாழ்ந்துக் கொண்டு இருக்கும் தற்காலத்தில் அதனை எப்படி
சீர்திருத்தவாதிகள் கெடுக்கமுடியும்? அதனை எப்படி தற்கால இஸ்லாமிய
இமாம்கள், மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?

இந்த முயற்சியை எடுத்தவர்கள், எடுப்பவர்கள் கொல்லப்படுவார்கள்,
விமர்சிக்கப்படுவார்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். கடைசியாக அவர்களின்
முயற்சி எடுபடாது.

முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாத
செயல்களுக்கு "சீர்திருத்தம்" என்ற பதிலடி கொடுக்கமுடியாது. பதிலடி
கொடுப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தீவிரவாதிகளுக்கு
முஸ்லிம்கள் உதவி செய்யாமல் இருந்தாலே அது அந்நாட்டுக்கு அவர்கள்
செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதற்கு மேலே முஸ்லிம்கள் ஏதாவது
செய்யவேண்டுமென்றால், அமைதியாக இஸ்லாமை விட்டு வெளியேறவேண்டும், இதைத்
தவிர்த்து வேறு எந்த ஒரு வழியையும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம்
வைத்துவைக்கவில்லை.

முடிவுரை: இது வெறும் ஆரம்பம் தான். இஸ்லாமிய தீவிரவாதத்தை புரிந்துக்
கொள்ள குர்-ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும்
நாம் படிக்கவேண்டும். முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் இருக்கும் தற்கால
இமாம்கள், இஸ்லாமிய தலைவர்கள் பேசும் பேச்சுக்களை கேட்கவேண்டும்.
மசூதிகளில் கொடுக்கப்படும் சொற்பொழிவுகளை கூர்ந்து கவனிக்கவேண்டும்.
இவர்களின் பேச்சுக்களில் காணப்படும் வெறுப்புணர்வையும், கோபத்தையும்,
இரத்தம் சிந்ததுடிக்கும் வேகத்தையும் பார்த்து ஆய்வு செய்யவேண்டும்.
இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஆணிவேர் "குர்-ஆனும், ஹதீஸ்களும்" ஆகும் என்பதை
உணரும் முஸ்லிம்கள்,அமைதியாக அதை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சிலர்
அதனை வெளியே சொல்லாமல், பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்ந்துக் கொண்டு
இருகிறார்கள்.

தொடரும்...

________________________________

உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/general-topics/crane_accident_911_part2.html




--
Source : http://isakoran.blogspot.in/2015/09/911-2.html

9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது அல்லாஹ்வின் கைவேலையா? பாகம் 1

9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது அல்லாஹ்வின் கைவேலையா? பாகம் 1

முன்னுரை:

பார்க்கும் அனைத்திலும் அல்லாஹ்வின் அற்புதங்களை கண்டுபிடிக்கும்
முஸ்லிம்களுக்கு இந்த மக்காவின் விபத்தில் அல்லாஹ்வின் அற்புதம் ஏதாவது
தெரிகின்றதா?

கணினியும், நவீன தொழில் நுட்பமும் உலக மக்களை முன்னேற்றத்தை நோக்கி
அழைத்து சென்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் இன்னும்
தக்காளியில் அல்லாஹ்வின் அற்புதம், பச்சிளம் குழந்தைகளின் தோலில்
அல்லாஹ்வின் அற்புதம், வானத்தில் அல்லாஹ்வின் அற்புதம் என்று நவீன தொழில்
நுட்பத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டும், தங்களையும் மற்றவர்களையும்
ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள் (பார்க்க: அல்லாஹ்வின் தக்காளி
அற்புதம்).

முஸ்லிம்களின் இந்த நவீன அற்புதங்களில் கணிதமும் சேர்ந்துவிட்டுள்ளது.
எண்களைக் கொண்டு, பல மாஜிக்குகளை செய்துக் காட்டி, பாமர முஸ்லிம்களையும்,
இதர மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கீழ்கண்ட
தொடுப்புகளை பார்க்கவும். குர்-ஆனில் அல்லாஹ் கணித அற்புதத்தை
வைத்துள்ளான் என்றுச் சொல்லி, பல பொய் மூட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக
அடுக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

www.miraclesofthequran.com/mathematical_03.html
www.quran-islam.org/main_topics/miracle_of_the_quran_(P1313).html
www.answering-islam.org/authors/katz/rebuttals/taslaman/allahs_timing.html
wikiislam.net/wiki/The_Miracle_of_19

இச்சிறிய கட்டுரையில், இம்மாதம் மக்காவில் ஏற்பட்ட விபத்து பற்றிய சிறிய
குறிப்பை முஸ்லிம்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன். இச்செயலிலும்
அல்லாஹ்வின் அற்புதம்(கைவரிசை) உள்ளதா? என்பதை கவனிக்குமாறு வாசகர்களை
கேட்டுக்கொள்கிறேன்.

அன்று 9/11 – உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட நாள்

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் உலக வர்த்தக மையம்
இஸ்லாமிய தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 3000 பேர்
மரித்தனர். பின் லாடனின் தீவிரவாத இயக்கமாகிய அல்கய்தா இந்த செயலை
வெற்றிகரமாக செய்து முடித்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள்
அந்த நாளை சந்தோஷ நாளாக கொண்டாடினர். இது ஒருபுறமிருக்கட்டும். இப்போது
இதே நாளில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

இன்று 9/11 – முஸ்லிம்களின் புனித மக்காவில் விபத்து – அப்பாவி மக்கள் மரித்தனர்.

2015ம் ஆண்டு, அதே செப்டம்பர் 11ம் தேதி, முஸ்லிம்கள் புனிதமாக கருதும்
மக்காவில் ஒரு கிரேன் உடைந்து விழுந்தபடியினால், 100க்கும் அதிகமானோர்
மரித்தனர், அனேகர் காயமுற்றனர். மரித்தவர்களின் குடும்பங்களுக்கு என்
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கவனிக்கவேண்டிய ஒரு
முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்கு காரணமான கிரேன் பின்
லாடனின் தந்தைக்கு சொந்தமான கட்டுமான கம்பனியுடையதாக்கும்.

இது யாருடைய செயல்?

முஸ்லிம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.
முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும், அதற்கு காரணம் யூதன் ஆவான். யூதனுக்கு
அடுத்தபடியாக இருப்பது "அமெரிக்கா" ஆகும். மக்காவில் நிகழ்ந்த
விபத்துக்கு "யூதர்கள்" அல்லது "அமெரிக்கா" காரணம் என்று சில முஸ்லிம்கள்
சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. முஸ்லிமல்லாத எந்த ஒரு நபரும் மக்கா
நகரில் நுழைய முடியாது, அவ்வளவு பாதுகாப்பு அங்குள்ளது. மேலும், காபா
இருக்கும் பள்ளிவாசலில் நிச்சயமாக முஸ்லிமல்லாத நபர் இருக்கமுடியாது.
இப்படி இருக்கும்போது எப்படி இந்த விபத்து நேரிட்டது? எல்லாவற்றிலும்
அல்லாஹ்வின் அற்புதங்களை கற்பனைச் செய்யும் முஸ்லிம்கள், இந்த
நிகழ்வுக்கு பின்னால் அல்லாஹ்வின் அற்புதம் (செயல்) இருக்கின்றதா? அல்லது
மற்றவர்களின் கைவரிசை இருக்கிறதா என்று சிந்தித்துச் சொல்லமுடியுமா?

365 நாட்களில் ஏன் 9/11ம் நாள் குறிப்பிட்டு விபத்து நேரிடவேண்டும்?

கணிதம் மூலமாக எண்களின் மூலமாக அல்லாஹ் அற்புதத்தை செய்கிறான், மேலும்
குர்-ஆனில் 19 என்ற எண்ணைக் கொண்டும் அற்புதத்தை வைத்திருக்கிறான் என்று
பெருமைப்பட்டுக் கொள்ளும் சில முஸ்லிம்கள், மக்காவில் விபத்து நடந்த
தேதியை கவனிப்பார்களா?

உலக வர்த்தக மையம் தகர்த்தப்பட்டதும், மக்காவில் விபத்து நடந்த தேதியும்
செப்டம்பர் 11ம் தேதியாகும். எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் அற்புதங்களைப்
பார்க்க விரும்பும் முஸ்லிம்களுக்கு இந்த தேதி பற்றிய விஷயத்திலும்
அல்லாஹ் அற்புதத்தை செய்து இருக்கிறான் என்று சொல்லமுடிகின்றதா?

இது அல்லாஹ்வின் செயலா? வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது, 365
நாட்கள் இருக்கும் போது, ஏன் இந்த நாளில் விபத்து நேரிட்டது? அதுவும்
மக்காவில், காபாவிற்கு பக்கத்தில் ஏற்பட்டது? இதில் முஸ்லிம்களுக்கு கணித
அற்புதம் தெரிகின்றதா?

காற்றும் மழையும் காரணமா? அல்லது அல்லாஹ் காரணமா?

இந்த மக்காவின் விபத்துக்கு காரணம், அன்று அதிகமாக வீசிய காற்றும், மழைச்
சூழலும் தான் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். முஸ்லிம்களின் படி,
இயற்கையை கட்டுப்படுத்துவது அல்லாஹ் ஆவான். அவனே, இந்த தேதியிலே
நூறுபேரின் உயிரை குடித்த இவ்விபத்தை செய்திருக்கவேண்டும்!

இதன் மூலமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் எதையாவது கூற விரும்புகிறானா?

ஒருவேளை இந்த செயல், யூதர்களின் கைவரிசை என்றும், அமெரிக்காவின் செயல்
என்றும் சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இப்படிப்பட்டவர்கள்
கவனிக்க தவறும் விஷயம் என்னவென்றால், காபாவையும், புனித பள்ளிவாசலையும்
பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்கு கொடுத்திருக்கிறான் என்பதாகும். இவ்வாண்டு
அவன் தோல்வி அடைந்துவிட்டானா? அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தாண்டி,
மனிதன் ஊடுருவிச் சென்று விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றுச் சொல்வது
அல்லாஹ்விற்கு இழுக்கு ஆகும், மேலும் அல்லாஹ்விற்கு தன் வணக்கத்தலத்தை
காக்க சக்தியில்லை என்று எண்ணவேண்டி வருகிறது. எனவே முஸ்லிம்களே,
மக்காவிற்குள் நடக்கும் விபத்துக்ளுக்கு மனிதனை குற்றப்படுத்தாதீர்கள்,
முக்கியமாக இஸ்லாமிரல்லாதவர்களை குற்றப்படுத்தாதீர்கள்.

தீவிரவாத செயல்களை மற்ற நாடுகள் மீது நடத்துவதை நிறுத்துங்கள் என்று
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மறைமுகமாகச் சொல்ல முயலுகின்றானா?

வருடத்தில் 365 நாட்கள் இருக்கும் போது, இந்த குறிப்பிட்ட நாளில்
காபாவிற்கு அருகே இப்படிப்பட்ட விபத்தை அல்லாஹ் அனுமதித்ததால்,
முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் ஒரு மறைமுக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
என்று கருதலாமா?

முஸ்லிம்களே! தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்
சொல்ல வருகின்றானா? முக்கியமாக, பின் லாடனின் தீவிரவாத இயக்கத்தை
ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி அல்லாஹ் இதனை
செய்தானா?

எது எப்படியோ! அப்பாவி மக்கள் மரித்துப் போனார்கள். கர்த்தர் இம்மக்களின்
குடும்பங்களை அறுதல்படுத்துவாராக.

முடிவுரை: புனித ஸ்தலங்களுக்குச் சென்றால் அதிக புண்ணியம் என்று நம்பும்
மக்கள் இருக்கும்வரை, பல விபத்துக்கள் வணக்கஸ்தலங்களில் அவ்வப்போது
நடப்பதை தடுக்கமுடியாது. ஹஜ் நெரிசலில் சிக்கி மரித்தவர்கள்,
விபத்துக்களில் மரித்தவர்கள், வயதானவர்கள் தங்கள் வயதின் காரணமாக
மரித்தவர்கள் என்று பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது.

உண்மை தெய்வத்தை எங்கும் தொழுதுக் கொள்ளலாம் என்ற சத்தியத்தை முஸ்லிம்கள்
அறியும்வரை, மக்கா போன்ற வணக்கஸ்தலங்களில் அவ்வப்போது நடக்கும்
விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களில் மரிப்பவர்கள் இருக்கத்தான்
செய்வார்கள்.

இதுவும் அல்லாஹ்வின் செயலா (அ) உடனிகழ்வா(Co-incident)?

செப்டம்பர் மாதம் 11ம் தேதி, மக்காவின் விபத்து செய்தியை
தொலைக்காட்சியில் பார்த்த பின்னர், நான் இந்த கட்டுரையை எழுத
ஆரம்பித்தேன், மீதியை அடுத்த நாள் எழுதி முடிக்கலாம் என்று நினைத்தேன்.
அடுத்த நாள் 12ம் தேதி, நான் சுகவீனமடைந்தேன், மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினேன். பலவீனத்தின்
காரணமாக கட்டுரையை தொடரமுடியவில்லை. இதுவும் அல்லாஹ்வின் செயலா அல்லது
உடனிகழ்வா?

நேற்று (தேதி 24) இரவு, முழுவதுமாக சுகமடைந்து, பாதியில் விட்ட கட்டுரையை
தொடர்ந்தேன். இன்று காலை (தேதி 25) கட்டுரையை முடித்துவிட்டு, இரண்டாம்
பாகத்திற்கு விவரங்களை சேகரித்துவிட்டு, இக்கட்டுரையை இணையத்தில்
பதிக்கலாம் என்று நினைத்த போது, இன்னொரு திடுக்கிடும் தகவலை அறிந்தேன்.
மக்காவில் நேற்று இன்னொரு விபத்து நிகழ்ந்துள்ளது. நெரிசலில் சிக்கி
700க்கும் அதிகமானோர் மரித்தனர். முக்கியமாக, இவ்வாண்டு ஹஜ்ஜுக்காக என்
உறவினர்களில் இரண்டு பேர் செல்லவேண்டி இருந்தது, பல தடங்கல்களினால்
அவர்கள் செல்லவில்லை. இந்த செய்தியை கேள்விப்பட்டதும், அவர்கள் ஹஜ்ஜுக்கு
செல்லாமல் இருந்தது நல்லதாக ஆகிவிட்டது என்று பெருமூச்சு விட்டேன்.
ஆனால், அவர்கள் அடுத்த ஆண்டு ஹஜ் செய்ய முயற்சிகளை எடுத்துள்ளார்களே!
மக்காவில் என்ன நடக்கிறது? ஏன் வணக்கஸ்தலங்களில் மரணங்கள் தொடர்கின்றன?
கர்த்தருக்கு சித்தமானால், வேறு கட்டுரையில் சிந்திப்போம்.

தொடுப்புக்கள்:

கிரேன் விபத்து குடித்த அப்பாவி உயிர்கள். பலவீனமான மனநிலையுள்ளவர்கள்,
இந்த வீடியோக்களை பார்க்கவேண்டாம். மக்கள் விபத்தில் சிக்கிக் கொண்டு
இரத்தம் தோய்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=obXLaxv1hbY
https://www.youtube.com/watch?v=oBDcdmGEM8E

2015 ஹஜ்ஜின் போது நெரிசலில் சிக்கி 700க்கு அதிகமானோர் மரித்தனர்:

http://www.nytimes.com/2015/09/25/world/middleeast/mecca-stampede.html?_r=0
indianexpress.com/article/india/india-others/after-mecca-stampede-kills-over-400-maharashtra-govt-issues-advisory-for-pilgrims/
http://www.cbc.ca/news/world/deadly-mecca-events-1.3241553

உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்.

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/crane_accident_911.html






--
Source : http://isakoran.blogspot.in/2015/09/911-1.html

தேவன் மனிதனாக வந்ததை புரிந்துக் கொள்வதெப்படி?

தேவன் மனிதனாக வந்ததை புரிந்துக் கொள்வதெப்படி?

சாம் ஷமான்

பரிசுத்த பைபிளில் "தேவன் மனிதாக வருதல்" பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனை கிறிஸ்தவம் எப்படி விவரிக்கிறது என்பதை இக்கட்டுரையில்
காணப்போகிறோம். இந்த விவரங்கள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கும். தேவன் மனிதனாக வந்தார் என்ற அத்தியாவசியமான உபதேசத்தை சரியாக
புரிந்துக்கொள்ளவும், திரித்துவ தேவனை விமர்சிக்கும் முஸ்லிம்களுக்கு
சரியான பதிலைத் தரவும் இக்கட்டுரை உதவியாக இருக்கும்.

கிறிஸ்து நித்திய வார்த்தையாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார். இவர்
மனித சரீரம் மற்றும் இரத்தத்தை உடையவராகவும் அதே நேரத்தில்
பாவமில்லாதவராகவும் வெளிப்பட்டார். பரிசுத்த ஆவியின் வல்லமை
நிரைந்தவராய், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு கன்னிப்பெண்ணின்
கர்ப்பத்தில் உருவாகி, ஒரு மனிதனாக பிறந்தார்.

இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள்
யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே,அவள்
பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய
யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய்
அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச்
சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில்
அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய
மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது
பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு
இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி
அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே
உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை
கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று
பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன்
நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:18-23)

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள
நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற
நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு
தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த
வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர்
உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்
என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த
வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில்
கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு
இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய
குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின்
சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை
என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே
என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல்
வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில்
பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா
1:26-35)

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த
வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர்
மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான
ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ
அவரை அறியவில்லை. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய
மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற
மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:1-4, 9-10, 14)

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம்
செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப்
பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி,
மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8:3)

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன்
அனுப்பினார். (கலாத்தியர் 4:5)

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர்
தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின
பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து,
மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது
சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
(பிலிப்பியர் 2:5-8)

இயேசு உண்மையான மனிதனாக வருவதற்காக, மனிதனிடம் காணப்படும் பலவீனங்களை
தானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதனை விவரிக்கவே வேதம் அவரைப்
பற்றிச் சொல்லும் போது அவர் "ஆவியிலே பெலன் கொண்டு ஞானத்தினால்
நிறைந்தார்" என்றுச் சொல்கிறது.

பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய
கிருபையும் அவர்மேல் இருந்தது. . . . இயேசுவானவர் ஞானத்திலும்,
வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய்
விருத்தியடைந்தார். (லூக்கா 2:40,52)

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
(எபிரேயர் 5:8)

மனிதனாக வந்ததால், கிறிஸ்து மனிதனைப் போல சோர்வு அடைவார், அவருக்கு
ஓய்வும், உறக்கமும் தேவை, மேலும் மனிதனைப் போலவே அவரும் உணவு
உட்கொள்வார், தண்ணீர் குடிப்பார்.

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே
வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள்
உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (மத்தேயு 4:1-2)

அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம்
வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர்
படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட
இருந்தது. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக,
அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை
வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள்
மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். (மாற்கு 4:35-38)

யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே
இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். அங்கே
யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய்
அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி
வேளையாயிருந்தது. அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி
ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார்.
(யோவான் 4:5-8)

இதுமட்டுமல்ல, இயேசு மனிதனாக வந்ததினால், அவர் படைப்பின் ஒரு அங்கமாக
மாறிவிட்டார். எப்போது அவர் படைப்பின் ஒரு பாகமாக மாறினாரோ, அப்போதே பிதா
அவருக்கும் தேவனாக மாறிவிட்டார். இதைத் தான் இந்த வேத பகுதியும் நமக்கு
தேவனைப் பற்றிச் சொல்கிறது. அதாவது தேவன் எல்லா மனிதர்களுக்கும் இறைவனாக
இருக்கிறார்.

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத
அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? எரேமியா 32:27

இப்போது இந்த வசனங்களை கவனியுங்கள்:

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,
நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு
ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)

மற்றும்:

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால்
அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப்
பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்;
இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும்
என்கிறார்கள்.

நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான்
உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.

கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்
தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். நாய்கள்
என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை
வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே
பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். உம்முடைய நாமத்தை
என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். (சங்கீதம்
22:1, 6-10, 16-18, 22)

புதிய ஏற்பாட்டின்படி, மேற்கண்ட சங்கீதம், மேசியா பற்றிய சங்கீதமாகும்,
அதாவது மேசியாவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவரது மகத்துவத்தை
தீர்க்கதரிசனமாக சொல்லும் சங்கீதமாகும்.

ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று
மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன்
என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மாற்கு 15:34)

அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய
வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத்
தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று
தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவர்கள்
அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அன்றியும்
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன்
யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக
வைத்தார்கள். அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய
இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில்
அறையப்பட்டார்கள். அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத்
துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை
நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி
வா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்
மூப்பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான்
ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது
சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே;
அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்
என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே
அவரை நிந்தித்தார்கள். (மத்தேயு 27:35-44)

போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை
எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்;
அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி
முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. அவர்கள்: இதை நாம் கிழியாமல்,
யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே
பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம்
நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். (யோவான்
19:23-24)

எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும்
பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே
உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர்
வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில்
உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; (எபிரேயர் 2:11-12)

இதுவரை கண்ட விவரங்களின் படி, "மேசியா மனிதனாக கருவுற்ற
சமயத்திலிருந்து" பிதாவானவர் அவருக்கு தேவனாக கருதப்படுகிறார் என்பதை
அறியலாம்.

மேலும் கிறிஸ்து ஒரு ஊழியக்காரனாக இருக்கிறார் என்பதையும் அறியமுடியும்.
மேசியா ஊழியக்காரராக இருப்பதினால், பிதாவாகிய தேவன் அவரை விட அந்தஸ்தில்
பெரியவராக காணப்படுகிறார்.

இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள்
அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,தம்மைப்
பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். ஏசாயா
தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன்
உரைத்ததாவது: இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என்
ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல்
அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை
ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்
பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை
அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார்
நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. (மத்தேயு 12:15-21)

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும்,
அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
(மாற்கு 10:45 – மேலும் பார்க்க மத்தேயு 20:28)

பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன்
அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல்
இருக்கிறேன். (லூக்கா 22:27)

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான்
உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில்
அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான்
சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும்
பெரியவராயிருக்கிறார். (யோவான் 14:28 – மேலும் பார்க்க 13:3-17)

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின்
தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள்
ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது,
அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள்
பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய
பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை
அனுப்பினார்என்றான். (அப்போஸ்தலர் நடபடிகள் 3:13, 26)

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட,
நீர் அபிஷேகம் பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு
விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய
இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து,
பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய
ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி
அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். (அப்போஸ்தலர் நடபடிகள்
4:28, 30)

மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை
உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசு கிறிஸ்து
விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; (ரோமர் 15:8)

மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்;பரலோகத்திலுள்ள மகத்துவ
ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த
ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான
கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர்
நமக்கு உண்டு.." (எபிரேயர் 8:1-2)

கிறிஸ்துவிற்கு மேலே ஒரு தேவன் இருக்கிறார் என்பதை காட்ட பல வசனங்களை
மேற்கோள் காட்டினோம். இயேசு மேசியாவாக வந்து தேவனுக்கு கீழ்படிந்து
ஊழியம் செய்தார். அதாவது ஒரு சராசரி மனிதன் எப்படி தன் எஜமானனுக்கு
கீழ்படிந்து ஊழியம் செய்வாரோ அதே போல மேசியாவாக வந்து இயேசுவும் ஊழியம்
செய்தார். இயேசு மனிதனாக வந்து இப்படி ஊழியம் செய்தது, பைபிளில்
சொல்லப்பட்ட தேவ குமாரன் என்ற நிலைப்பாட்டிலிருந்து அந்தஸ்திலிருந்து
அவரை குறைத்துவிடுவதாக இருக்காது.

இதே போல, இயேசு தேவனல்ல அல்லது பிதா அல்ல என்பதை விளக்கும் வசனங்களை
மேற்கோள் காட்டினாலும், இயேசுவின் தெய்வீகத்தன்மைக்கு எந்த களங்கமும்
ஏற்படாது. ஏனென்றால், இயேசு பிதா அல்ல என்று திரித்துவத்தை நம்பும்
கிறிஸ்தவர்களுக்கு தெரியும். ஆனால், இயேசு பிதாவின் நித்திய நேசகுமாரனாக
இருக்கிறார். புதிய ஏற்பாட்டில், "தேவன்" என்ற வார்த்தை பிதாவை
குறிக்கும் சொல்லாக இருக்கிறது, இதனை கீழ்கண்ட வசனங்களின் மூலம்
அறியலாம்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே
உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன்
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான
குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்
தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:16-18)

அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா
என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள்
அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். (யோவான் 5:18)

இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி
அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப்
பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும்
பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும்
எழுதுகிறதாவது; நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இயேசு
கிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப்
பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி
வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், (ரோமர்
1:1-4)

இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய
பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய
சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை
ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு
அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:31-32)

அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப்
பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை
நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை
எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும்
இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; (கலாத்தியர் 1:15-16)

மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று
கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில்
அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ
புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
(கலாத்தியர் 4:6-7)

ஆகையால், புதிய ஏற்பாட்டில் பொதுவாக "தேவன்" என்று வரும் வார்த்தைகள்
அனைத்தும் பெரும்பான்மையாக பிதாவை குறிப்பிடுவதாக இருக்கும், ஏனென்றால்,
இயேசு பிதா இல்லை. இவ்வசனங்களில் தேவனிடமிருந்து இயேசுவை பிரித்துக்
காட்டும் விவரங்களை காணமுடியும்.

இப்போது அடுத்த முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இயேசு கூட இறைவனாக
இருக்கிறார், அவரும் மாற்றமில்லாதவராகவும், இயற்கையால்
பாதிக்கப்படாதவராகவும் காணப்படுகிறார் என்பதை இப்போது காண்போம்.

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி
நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச்
சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும்
உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின்
சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே
தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை
உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே
உட்கார்ந்தார். குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம்
என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள
செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை
வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்
பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்;
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள்
உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோம்; நீரோ
நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; ஒரு
சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ
மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும்
சொல்லியிருக்கிறது. (எபிரேயர் 1:1-3, 8-12)

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். (எபிரேயர் 13:8)

இயேசு சர்வ ஞானியாக இருக்கிறார்:

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன்
பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த
வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன்
ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள்
இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே
இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து,
அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன்
படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே
பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள்
அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன்
படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச்
சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை
எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும்
ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி,
தேவனை மகிமைப்படுத்தினார்கள். (மாற்கு 2:5-12)

அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல்,
வெளிப்படையாய்ப் பேசுகிறீர். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்
என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது
அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று
விசுவாசிக்கிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். (யோவான் 16:29-31)

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை
நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம்
தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே,நீர்
எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும்
நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான்
21:17 – மேலும் பார்க்க 2:23-25; 1 யோவான் 3:20)

அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு,
பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை
அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும்
உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.அவருக்குள் ஞானம் அறிவு
என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஏனென்றால்,
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள்
வாசமாயிருக்கிறது." (கொலோசெயர் 2:2-3, 9)

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை
போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன்
சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும்,
உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும்
பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். . . .
. அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே
பலனளிப்பேன். (வெளிப்படுத்தின விசேஷம் 2:18-19, 23b)

மேலும், இயேசுவாகிய இறைவன், படைப்புகளின் தேவனாக இருப்பதினால்,
படைப்புக்கள் மற்றும் இயற்கை மீது முழு அதிகாரம் உடையவராக இருக்கிறார்:

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு
என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அவர்
அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம்
இல்லாமற்போயிற்று என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும்
கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள். (மாற்கு 4:39-41)

இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு
முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர்
ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி,
சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாகப் படவு
நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால்
அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து,
அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு,
கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு
அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து
உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார்.
அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல்
நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்:
ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி
அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள்
படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து:
மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப்
பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 14:22-33 – மேலும் பார்க்க யோபு 9:8;
சங்கீதம் 65:5-8; 77:19; 107:22-32)

மேலும், தம்மிடம் வருபவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும்,
இளைப்பாறுதலையும் தருபவராக இயேசு இருக்கிறார்:

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா
தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை
வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை
அறியான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும்
என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான்
சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல்
ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என்
சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:27-30)

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே
உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக்
கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
(யோவான் 14:27)

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை
உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும்
திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். (யோவான் 16:33)

ஆன்மீக தாகத்தோடு தன் மீது நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரின் ஆன்மீக
தாகத்தையும் பசியையும் முழுவதுமாக பூர்த்தி செய்கிறவராக கிறிஸ்து
இருக்கிறார்:

யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை
நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில்,
தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப்
பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று
உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே
அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக்
கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள
உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை
எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.

இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய
யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர்
மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். இயேசு அவளுக்குப்
பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும்
தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ
ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர்
அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
(யோவான் 4:9-14)

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற
போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக்
கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி
நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற
கிரியையாயிருக்கிறது என்றார். இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து
வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ
வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று,
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்திலிருந்திறங்கி,
உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும்
எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம்
நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். நீங்கள் என்னைக்
கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில்
வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை
அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி
வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி
நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன்
நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை
அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே. உங்கள்
பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே
புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன்
என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின்
ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம்
மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
(யோவான் 6:27-29, 32-40, 47-51, 54-55)

பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு:
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ,
அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை
விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும்
அருளப்படவில்லை. (யோவான் 7:37-39)

கிறிஸ்து மனிதனாக வந்தார் என்ற கோட்பாடு பற்றி ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு
இருக்கும் தவறான புரிந்துக் கொள்ளுதலுக்கு இப்போது பதில் கிடைத்து
இருக்கும் என்று நம்புகிறேன். இதனை அறிந்துக் கொண்டால்,
கிறிஸ்தவரல்லாதவர்களும், திரித்துவத்தை எதிர்க்கிறவர்களும் ஏற்படுத்தும்
குழப்பங்களுக்கு சரியான பதிலை கிறிஸ்தவர்கள் கொடுக்கமுடியும். இவர்கள்
அறியாமையில் செய்தாலும் சரி, தெரிந்தே வேண்டுமென்றே குழப்பத்தை
உண்டாக்கினாலும் சரி, கிறிஸ்தவர்கள் சரியான பதிலை அமைதியாக கொடுக்க
இவ்விவரங்கள் உதவும் என்று நம்புகிறேன்.

மூலம்: http://www.answeringislam.org/authors/shamoun/the_incarnation.html

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

Source: http://www.backend.ai-deutschland.de/tamil/authors/sam-shamoun/the_incarnation.html





--
Source : http://isakoran.blogspot.in/2015/09/blog-post_9.html