அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 27, 2008

சரப்ஜித் சிங்கை விடுதலையை எதிர்த்து பாகிஸ்தான் மாணவர் அமைப்பினர் போராட்டம்.. எங்கே மனித நேயம்....

உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தான் சிறையில் வாடும் தூக்கு தண்டனை எதிர் நோக்கியுள்ள இந்தியாவின் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்யவேண்டும் எனகோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரின் தண்டனை ரத்து செய்யப்படும் நாளை  உலக மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள இந்நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மாணவர் அமைப்பு அவரின் விடுதலையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் அவரை விடுதலை செய்யக்கூடாது. அவ்வாறு விடுதலை செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 Sarabjit Singh
நம் இந்தியர் செய்யாத தப்புக்கு ஏற்கனவே மிகப்பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார். தயவு செய்து அவர் விடுதலையாகி தாயகம் திரும்பும்படி இறைவனிடம் நாம் ஒருமித்து மன்றாடுவோம்
 
 
Amidst appeals for clemency for Sarabjit Singh by his family and human rights activists, hundreds of students in this Pakistan city took to the streets demanding that the Indian death row prisoner should not be pardoned.

The students marched in the city on Friday and sought withdrawal of all official moves to pardon Sarabjit, sentenced to death for alleged involvement in the 1990 blasts in Punjab province. They also said he should not be made a ''hero''.

The demonstrators termed former Pakistani human rights minister Ansar Burney, who has sent a mercy petition on behalf of Sarabjit to President Pervez Mushrraf, an ''Indian agent'', The News daily reported on Saturday.

The students said if Sarabjit is released, they would launch a joint movement against the government.
.......
 

என்ன கொடுமைடா இது...அல்லா தரவிருக்கும் கன்னிகளின் -------, ------ புகழுகிறார் ஒரு இஸ்லாமிய மதகுரு

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm)  படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)


புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
-----------
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம் 
 
சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு "உமர் அல்-ஸ்வைலெம்" என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.


இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm)  படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)

உமர் அல்-ஸ்வைலெம்:  நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை "ஹரித் இபின் அல்‍முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)" என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும்.

என்னே கூந்தல்!,
என்னே மார்ப்புகள்!
என்னே வாய்!
என்னே க‌ன்ன‌ங்க‌ள்!
என்னே உருவ‌ம்!
என்னே மார்ப‌க‌ங்க‌ள்!
என்னே தொடைக‌ள்!
என்னே கால்க‌ள்!
என்னே தோலின் வெண்மை!
வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை

அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.

அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள்.

அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள்.

அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம்.

இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு "மது" வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில்  உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல.

English Transcript Source: http://www.memritv.org/clip_transcript/en/1741.htm

இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை  நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும்.
 
 
English Transcript:
 
Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise 
 
Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original.

Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face - praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come.
 

April 24, 2008

ஒரு இஸ்லாமிய நாட்டில் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு "மரண தண்டனை" கொடுக்கப்படுகிறது? Dr. ஜாகிர் நாயக்கின் பதில்

ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

 
என்ன இது தொடர்ந்து படியுங்க புரியும்


Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:

யார் தேசத் துரோகி?

முன்னுரை: இந்திய இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருத்துவர் ஜாகிர் நாயக் ஆவார். இவரது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் இவர் மாற்று மதச்சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் நிகழ்ச்சியில் பேசினால், இஸ்லாமியர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். ஆனால், இவர் சொல்லும் எடுத்துக்காட்டுக்கள், புள்ளிவிவரங்கள் உண்மையை திசை திருப்புவதாகவே பெரும்பான்மையாக அமையும்.இதை இஸ்லாமியர்கள் சோதித்து தெரிந்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்த கட்டுரையில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் சொன்ன கருத்துக்களைக் காண்போம். இவர் ஒருவரை தேசத்துரோகி என்கிறார்? அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார்? இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார்? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா? என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1. இஸ்லாமைவிட்டு வெளியே சென்றால், உனக்கு மரண தண்டனை நிச்சயம்:

திரு ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய இந்த வார்த்தைகளை இந்த வீடியோவில் ( http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI ) காணலாம்.
 
அவரின் பேச்சை இந்த வீடியோவில் உருதுவில் கேட்கலாம், அதை சுருக்கமாக ஆங்கிலத்தில் வீடியோவின் கீழே கொடுத்துள்ளார்கள், அதை நான் தமிழில் கொடுக்கிறேன்.
நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு "மரண தண்டனை" கொடுக்கப்படுகிறது?

ஒரு முஸ்லீம், இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மத‌ம் சரியானது என்று நினைக்கும்போது அல்லது ஒரு முஸ்லீம் அல்லாதவர் முதலில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, பிறகு தன் முந்தைய மதத்திற்கே சென்றுவிட்டால், ஏன் இஸ்லாம் இப்படிப்பட்ட நபர்களுக்கு "மரண தண்டனையை" விதிக்கிறது?

Dr. ஜாகிர் நாயக் அவர்கள்: ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும்.

நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள், அதாவது, ஒரு தேசத்துரோகம் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைப் போல, தன் மதத்தை மாற்றிக்கொள்பவனுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் "தேசத்துரோகம்" குற்றத்திற்கு "மரண தண்டனை" விதிப்பது போல, இஸ்லாமும் தன் மதத்தை மாற்றிக்கொள்ளும் முஸ்லீமுக்கு மரண தண்டனையை நியாயமாக விதிக்கிறது


Interviewer: Why is there a "Capital Punishment" for a Muslim – living in an Islamic State – who chooses to adopt any other religion?

If a Muslim finds any other religion more appealing or If a Non-Muslim, after accepting Islam, decides to return to his/her previous religion then Why does Islam impose a "Death Penalty" for such a person?

Naik Response: If a Muslim becomes a Non-Muslim and propagates his/her new religion then it is as good as Treason. There is a "Death Penalty" in Islam for such a person. In many countries the punishment for Treason is also Death. If an army General discloses his army's secrets to another country then there is a "Death Penalty" or life imprisonment for such a person according to the laws of the most of the countries. Similarly If a Muslim becomes Non-Muslim and propagates his/her new religion then there is "Death Penalty" for such a person in Islam.

Interviewer: You have explained a very important point that the Death Penalty is more due to Treason than due to Changing the religion. Since in most of the countries the punishment for Treason is Death therefore Islam is also justified in declaring a "Death Penalty" for a Muslim converting to any other religion.

Source : http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

2. இராணுவ தளபதியின் தேசத்துரோகத்திற்கும், இஸ்லாமை விட்டு வெளியே வருவதற்கும் என்ன சம்மந்தம்?

இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்குச் செல்லும் முஸ்லீமை இஸ்லாம் சட்டப்படி கொல்ல வேண்டும். ஜாகிர் நாயக் அவர்கள் இதை சிறிது மாற்றி , "இப்படி மாறுபவன் அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால்" கொல்லப்படுவான் என்றுச் சொல்கிறார். ஆனால், இஸ்லாமை விட்டு வெளியேறினாலே போதும், அவனுக்கு மரண தண்டனை உண்டு என்பதை நாம் அறிவோம். இப்போது பிரச்சனை இதுவல்ல.

ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதா? என்பது தான் கேள்வி

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுகளை கேட்டு,முஸ்லீம்கள் புல்லரித்துப்போவார்கள், ஆனால், இவர் கொடுக்கும் எடுத்துக்காட்டு சம்மந்தம் இல்லாமல் இருக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா? மேலும் படியுங்கள்.

தேசத் துரோகத்திற்கு விகிபீடியா கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறது: (இதையே ஜாகிர் நாயக் அவர்கள் "இராணுவ தளபதி" என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்)

In law, treason is the crime that covers some of the more serious acts of disloyalty to one's sovereign or nation. Historically, treason also covered the murder of specific social superiors, such as the murder of a husband by his wife (treason against the king was known as high treason and treason against a lesser superior was petit treason). A person who commits treason is known as a traitor.

Oran's Dictionary of the Law (1983) defines treason as: "...[a]...citizen's actions to help a foreign government overthrow, make war against, or seriously injure the [parent nation]." In many nations, it is also often considered treason to attempt or conspire to overthrow the government, even if no foreign country is aided or involved by such an endeavour.

Source: http://en.wikipedia.org/wiki/Treason

அதாவது தன் சொந்த நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் புரிதல், அல்லது தன் நாட்டு அரசாங்கம் கவிழும்படி, தோற்கும் படி தன் நாட்டின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுதல், போன்ற குற்றத்திற்கு Treason என்பார்கள். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டிற்கு பெரும் இழப்பை தரும் செயல் ஆகும்(அரசனை கொல்லுதல், இராணுவ இரகசியங்களை விற்றுவிடுதல் போன்றவை).

3. எதை அடிப்படையாகக் கொண்டு ஜாகிர் நாயக் அவர்கள் இதை உதாரணமாகச் சொன்னார்கள்?

ஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீமாக மாறி பிறகு தன் பழைய மதத்திற்கு மாறும் நபர் எந்த வகையில், ஒரு தேசத்துரோகம் புரிந்த அளவிற்கு மிகப்பெரிய குற்றவாளியாக மாறுகிறார்?

நான் ஜாகிர் நாயக் அவர்களிடமும், மற்ற முஸ்லீம்களிடமும் கேட்க விரும்பும் கேள்விகள்:

a) ஒரு இராணுவ தளபதி தனக்கு மட்டும் தெரிந்த நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியங்களை, மற்ற நாட்டிற்கு விற்றால், தன் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு வர காரணமாகிறார்.

b) ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்குச் சென்று தன் புதிய மதத்தையோ அல்லது தான் விட்டுவந்த பழைய மதத்தையோ பிரச்சாரம் செய்தால், இந்த செயல் எந்த வகையில் "இஸ்லாமின் பாதுகாப்பிற்கு" பாதிப்பை உண்டாக்குவதாக அமையும்? விவரியுங்கள்?

c) இராணுவ தளபதிக்கு தெரிந்த இரகசியங்கள் என்பது தன் நாட்டு குடிமகன்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வைக்கும் முக்கியமான தகவல்கள், இப்படி இஸ்லாமில் என்ன இரகசியம் இருக்கப்போகிறது?இப்படி மற்ற மதங்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் இரகசியம் என்ன சொல்லுங்கள்?

d) இராணுவ தளபதி என்பவன் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வகிப்பவன் அதற்காகவே அவருக்கு சம்பளம், பதவி, அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீமுக்கும் இப்படி ஒரு இராணுவ தளபதிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? சொல்லுங்கள்.

e) ஒரு இராணுவ தளபதி தன் நாட்டின் ஆயுத கிடங்கு இருக்கும் இடம், தகவல்கள், ஆவணங்கள், போன்ற விவரங்களை மற்ற நாட்டிற்கு விற்பது போல, இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன இரகசியங்கள் இருக்கின்றன?

f) புதிதாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவனுக்கு என்ன பரம‌ இரகசியங்களை நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்? அதை அவன் வேறு மதத்திற்கு மாறி மற்றவர்களுக்கு சொல்வதினால், இஸ்லாமுக்கு ஆபத்து வந்துவிடும் அளவிற்கு?

4. இஸ்லாமில் இரகசிய பிரமாணம் எடுக்கின்றீர்களா?

பொதுவாக, ஒரு அரசாங்க, அல்லது ஒரு இராணுவ ஊழியம் செய்ய ஒருவன் நியமிக்கும் போது, அவனுக்கு இரகசிய பிரமாணம் அல்லது பதவி பிரமாணம் கொடுப்பார்கள். இராணுவ தளபதி பிரமாணம் எடுக்கும் போது: "நாட்டின் இரகசியங்களை வெளியே சொல்லமாட்டேன், நம்பிக்கையுள்ளவனாக இருப்பேன், அதை மீறினால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கலாம்" என்றுச் சொல்லி பிரமாணம் செய்வார்.

இப்படி ஏதாவது ஒரு பிரமாணத்தை இஸ்லாமுக்கு வருபவன் எடுக்கிறானா? அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா? அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா? சொல்லுங்கள்.

5. புகைபிடித்தல், மதுபானம் பற்றிய எச்சரிக்கை வாசகம், போல இஸ்லாமுக்கு உண்டா?

பொதுவாக, அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் என்ற நோக்கில், சிகரேட், பீடி மற்றும் மதுபானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதே நேரத்தில், மக்களுக்கு இவைகளினால் உண்டாகும் தீமையை விளக்கும் வண்ணமாக, சில வாசகங்களை பதிக்கும்படி அரசாங்கம் கட்டளையிடுகிறது.

உதாரணத்திற்கு:

சட்ட எச்சரிக்கை: புகை பிடித்தல் உடல் நலத்திற்குகேடு


Statutory Warning : "Cigarette smoking is injurious to health"

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு


போன்ற வரிகளை நாம் காணுவோம்.( இந்த எச்சரிக்கை வார்த்தைகளை படித்து மக்கள் இவைகளை விட்டுவிடுகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஒரு தீமை உண்டு என்று தெரிந்தும் அனுமதி அளிக்கும் போது, அதைப்பற்றி எச்சரிப்பு அவசியம் என்பதால் அரசாங்கம் இதை கட்டாயமாக்கியுள்ளது என்று சொல்லவருகிறேன்.)

"உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், இந்த வாசகங்கள் கட்டாயம்" என்பதை எந்த நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியேறினால் அவனது உயிரே போகும் என்ற தீமை அல்லது ஆபத்து இருக்கும் போது, ஏன் இஸ்லாமியர்கள் இதை முன்பே இஸ்லாமுக்கு வருபவனுக்குச் சொல்லி எச்சரிப்பதில்லை என்றுக் கேட்கிறேன்.

யாருக்காவது குர்‍ஆனை கொடுக்கும்போது, அல்லது எங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் கூட்டத்திற்கு வந்து இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள் என்று சொல்லும் போது, நீங்கள் அந்த கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ, அல்லது நாத்தீகனுக்கோ "பாரு தம்பி, ஒரு வேளை இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டு பிறகு எனக்கு வேண்டாம்" என்று இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனை நிச்சயம் உண்டு என்பதை தெரிந்துக்கொள், இதை அங்கீகரித்து ஸ்டாம்ப் காகிகத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் நீ முஸ்லீமாக மாறனும் என்று சொல்கிறீர்களா?

Statutory Warning: After accepting Islam, becoming Non-Muslim is Injurious to Life.

முதலில் முஸ்லீமாகி பின்பு காபிரானால், மரணம் நிச்சயம்


என்ற வாசகத்தை உங்கள் நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி விவரிக்கும் போது சொல்லமுடியுமா? நான் "புகைப்பிடித்தல் மற்றும் மதுபான" எடுத்துக்காட்டு சொன்னேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டை விட ஓர் அளவிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

6. நல்ல குடும்பம் நாசனமான கதை:

நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.

அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.

நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.

7. யார் தேசத்துரோகி?

இப்போது சில கேள்விகள் நம் கண்முன் நிற்கின்றன.

இந்த நபர் மரித்ததால்:

இவர் மனைவி இப்போது "விதவை" கோலத்தில் கண்கலங்கி நிற்கிறாள்?

இவரது பிள்ளைகள் தந்தையில்லா அனாதைகளாய் தெருவில் நிற்கிறார்கள்?

இவரது பெற்றோருக்கு இனி வாழ எந்த வழியும் தெரியாத கஷ்டத்தில் இருக்கிறார்கள்?


இந்த நிலையில் "இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே"! நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்?


1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா? அல்லது

2. இவனுக்கு இஸ்லாமைப்பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா? அல்லது

3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகியா?


இந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றால் மனது சம்மந்தப்பட்டது இல்லையா? மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா? அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா? இது தவறா?

யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்த மரித்த நபர் உயிரோடு இருந்திருப்பாரானால், மறுபடியும் முஸ்லீமாக மாறி, இஸ்லாமை பரப்பி ஒரு சிறந்த இஸ்லாமியனாக கூட மாறி எல்லாரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு மாறி இஸ்லாமுக்கு ஒரு நல்ல தூணாகவும் மாற்றப்பட்டு இருக்கலாம்? இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?

8. சரி, மாற்று மதத்திலிருந்து முஸ்லீமாக மாறுபவன் "தேசத்துரோகி" இல்லையா?

இஸ்லாம் சொல்லும் தண்டனை சரியானது தான், இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே! ஒரு வேளை இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறுபவனை "தேசத்துரோகி" என்றுச் சொல்லி, அவனுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி சொல்கிறதோ அதே போல மரண தண்ட்னை அளித்தால்?

ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் இது தேசத்துரோகம் குற்றத்திற்கு சமம் என்றுச் சொல்லி, அவனை கொல்லும் சட்டத்தை அமுல் படுத்தினால் எப்படி இருக்கும்?

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய சட்டம் போலவே, யாரும் தங்கள் மத‌த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறக்கூடாது, அது தன் தாய் நாட்டிற்கு துரோகம் செய்த குற்றத்திற்கு சம‌ம் என்றுச் சொல்லி, முஸ்லீமாக மாறுபவனுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை அமுல் படுத்த உங்களுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சம்மதமா? நீங்கள் உண்மையாளர்களாக நேர்மையாளர்களாக இருப்பீர்களானால், இதை ஏற்றுக்கொள்வீர்கள்.

இஸ்லாமுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி! இது சரியா?

9. இஸ்லாமை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பா! இனி எப்படி அறிமுகப்படுத்தப்போகிறீர்கள்?

இனி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, சிகரேட் பாக்கெட்டில் இருப்பது போலவும், மதுபான கடையின் பெயர் பலகையில் எழுதியிருப்பது போலவும், இஸ்லாமை விட்டு வெளியேறினால் ஏற்படும் தீமையையும் சொல்ல விருப்பமா? ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ இஸ்லாமைப் பற்றி சொல்லும்பொது, அவன் மனைவியின் முகம் உங்களுக்கு முன்பாக வருவதாக, அவன் பிள்ளைகளின் பிஞ்சு முகங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக வருதாக.

இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை, இஸ்லாம் இப்படி எல்லாம் செய்ய சொல்வதில்லை என்று சொல்லவேண்டாம், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மக்கள் மிகவும் நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

10. இரட்டை தண்டனை எதற்கு:

இஸ்லாமை விட்டு வெளியேறுபவனுக்கு இரட்டை தண்டனை எதற்கு?

முதல் தண்டனை: ஷரியா சட்டம் மூலமாக அவனுக்கு மரண தண்டனை

இரண்டாம் தண்டனை: இஸ்லாமை அவன் விட்டுச்சென்றதால், அல்லா அவனை நரக நெருப்பினால் தண்டிப்பார்

இஸ்லாமை விட்டு வெளியேறினவனுக்கு இந்த உலகத்தில் மரண தண்டனை கொடுத்துவிட்டால், பின் ஏன் அவனுக்கு நரக நெருப்பினாலும் அல்லா இரண்டாம் முறையும் தண்டிக்கவேண்டும். ஏன் இரட்டை தண்டனை?

அல்லது இந்த உலகத்தில் மரண தண்டனையை அவன் பெற்றுவிட்டதால், அல்லா அவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி அளித்துவிடுவாரோ?

இது உண்மையானால், இஸ்லாமை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனின் நிலையே மிகவும் நல்லது. ஏனென்றால், அவன் இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பதினால், இந்த உலகத்திலாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு மரிப்பான். இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருந்தால் தானே இவன் அல்லாவினால் தண்டிக்கப்படப்போகிறான்.

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் ஜாகிர் நாயக் அவர்கள் செய்துள்ளார்கள்.

ஜாகிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகள்:

1. இஸ்லாமின் மரண தண்டனை சட்டத்தோடு, மற்ற நாடுகளின் சட்டத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டும் ஜாகிர் நாயக் அவர்களே, இதே போல மற்ற நாடுகளின் சட்டத்தை வேறு சில இஸ்லாமிய சட்டத்தோடு ஒப்பிட நீங்கள் தயாரா?

2. அதாவது, இதர காபிர் (இந்தியா போன்ற) நாடுகளில் "திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, இன்னபிற குற்றங்களுக்கு உள்ள தண்டனைகளை, இஸ்லாமிய சட்டத்தில் திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, சம்மந்தப்படுத்த" நீங்கள் தயாரா?

3. பெரும்பான்மையான நாடுகளில் திருட்டிற்கு என்ன தண்டனை கொடுக்கிறார்ளோ அதே தண்டனையை நீங்கள் இஸ்லாம் நாடுகளில் அமுல் படுத்த தயாரா?

4. ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவனின் செயலுக்கு, மிகவும் கொடிய குற்றமாக கருத்தப்படும், நாட்டிற்கே ஆபத்தை விளைவிக்கும் குற்றமாக கருத்தப்படும் தேசத்துரோக குற்றத்தோடு முடி போடுகிறீர்களே, உங்கள் எடுத்துக்காட்டை என்னவென்றுச் சொல்ல? ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா? சிந்தியுங்கள்.

5. அல்லாவின் சட்டத்தில் உள்ள மரண தண்டனையை நியாயப்படுத்த மற்ற நாடுகளின் (காபிர் நாடுகளின்) சட்டத்தில் என்ன குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதோ அதை சம்மந்தப்படுத்தி சொல்லிவிடுகிறீர்கள்? இது போல, மற்ற நாடுகளின் எல்லா சட்டங்களோடு இஸ்லாமிய சட்டத்தை சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த நீங்கள் தயாரா?

முடிவுரை: அருமையான மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களே, மாற்று மதத்திலிருந்து இஸ்லாமியர்களாக மாறியவ‌ர்களுக்கு உங்கள் கண்களுக்கு முன்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உங்களால் சகித்துக்கொள்ளமுடியுமா? ஏனென்றால், அவன் தன் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து தானே முஸ்லீமாக மாறினான்?

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ஜாகிர் நாயக் அவர்களே! நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:


என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


 

இறைவனின் சன்னிதான‌த்தில் கோபம் கொண்டதேன்??? தரிசிக்க வந்தவர்களையும் கொன்றதேன் யானையே???? (படத்துடன்)




 திருச்சூர்: திருச்சூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது. அது தாக்கி மிதித்ததில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது இரிஞாலகுடா. இங்குள்ள கோயிலில் தற்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவில் பங்கேற்ற உன்னிக்கிருஷ்ணன் என்ற யானைக்கு திடிரென மதம் பிடித்தது
 
 
 

 

 
 
கோயிலில் இறைவனை தரிசிக்க சன்னிதானம் வந்த பக்தர்களை மதபிடித்த யானை மிதித்து கொன்று தன்னுடைய கோபத்தை தனித்துகொண்டது. இனிமேல் இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

இறைவனின் சன்னிதான‌த்தில் கோபம் கொண்டதேன்??? தரிசிக்க வந்தவர்களையும் கொன்றதேன் யானையே???? (படத்துடன்)

 திருச்சூர்: திருச்சூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது. அது தாக்கி மிதித்ததில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது இரிஞாலகுடா. இங்குள்ள கோயிலில் தற்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவில் பங்கேற்ற உன்னிக்கிருஷ்ணன் என்ற யானைக்கு திடிரென மதம் பிடித்தது
 
 
 

 

 
 
கோயிலில் இறைவனை தரிசிக்க சன்னிதானம் வந்த பக்தர்களை மதபிடித்த யானை மிதித்து கொன்று தன்னுடைய கோபத்தை தனித்துகொண்டது. இனிமேல் இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

April 21, 2008

இலங்கை படையின் குண்டுத்தாக்குதலில் மனித உரிமைகள் தலைவர் பலி


இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும்
வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின்
தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார்
கொல்லப்பட்டுள்ளார்.

கிளேமோர் குண்டு

இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே
நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும்
இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை
இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார
தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க
வேண்டும் என்றும் அவர் கூறினார்.


April 19, 2008

சேது சமுத்திரம் வழிபாட்டு இடம் அல்ல: உச்ச நீதிமன்றம்

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராகக் கூறப்பட்டு வரும் சமய காரணங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருக்கிறது.

ராமர் சேது பாலம் அல்லது ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் அந்த இடத்தை வழிபாட்டு இடமாக அழைப்பதில் உச்ச நீதிமன்றம் தனது மகிழ்ச்சியின்மையைத் தெரிவித்திருக்கிறது.

"இந்த இடத்தை (ராமர் சேது) வழிபாட்டு இடம் என்று யார் சொன்னது? கடலின் நடுப்பகுதிக்குச் சென்ற யார் வழிபடப் போகிறார்கள்?," என்று நீதிமன்ற குழுவில் இடம்பெற்ற தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

அந்த இடத்திற்கு மக்கள் போகிறார்கள், வழிபடுகிறார்கள் என்று சொல்லாதீர்கள் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

ராமர் சேது இந்துக்களுக்கான வழிபாட்டு இடம் என்பதால் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதித்து அந்த இடத்தைப் பாதுகாக்கும்படி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி (தமிழ் நாட்டின் மீது அக்கரையுள்ள ஒரு தமிழன்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு மேற்கூறியவாறு தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்துக்கள் புனித தலமாக கருதும் ராமர் சேதுவை பழங்கால நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கு ஊறு விளைவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இது வழிபாட்டுக்குரிய இடம் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நானும் ஒவ்வோர் ஆண்டும் அங்கு வழிபடச் செல்கிறேன். நீதிபதி அவர்களே! உங்கள் நம்பிக்கை என்ன என்பதல்ல கேள்வி. இது நாட்டிலுள்ள மக்களின் நம்பிக்கை என்று அப்போது சுப்ரமணிய சுவாமி கூறினார்.
ராமேஸ்வரத்துக்கு தென்கிழக்கில் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடல்பகுதியில் காணப்படும் 30 கிலோமீட்டர் நீள மேட்டுப் பகுதியே ராமர் சேது என அழைக்கப்படுகிறது. 

முன்னதாக இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்கும்படி  நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி தவிர இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்த மற்றவர்கள் சார்பில் வேணுகோபால், அருண் ஜேட்லி ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராயினர்.

மத்திய அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய விளக்கத்தை மீட்டுக் கொண்டது என்றாலும் நீதிமன்றம்  ஆணையிட்ட புதைபொருள் ஆய்வு விசாரணைகள் இன்னும் நடப்பில் உள்ளன என்றும் அவர்கள் நினைவுபடுத்தினர்.

ஆனால் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை நீதிமன்றத்திற்கு வலியுறுத்திச் சொல்ல மனுதாரர்களுக்கு அனுமதியில்லை என்றும் நீதிபதிகள் குழு சொன்னது.
 
 

April 18, 2008

இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்களோ??????

உங்ளவர்கள்  எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள்  சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, "இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

முன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் "சொல்லாத விவரத்தை" சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் என் மீது சாற்றும் குற்றம்:

கட்டுரை: 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை'

குற்றச்சாட்டு: இக்கட்டுரையில் "இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் " நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி நான் எழுதினேனா? அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா? என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:

ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
( formats are mine)

1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா?

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

காரணம் 3. ஹதீஸ்கள்:

காரணம் 2. முகமது:

காரணம் 1. குர் ஆன்:

இந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் "தீவிரவாதம்" என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் "தீவிரவாதம்" என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.

2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன? (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)

குறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, "தீவிரவாதம்" பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா? என்று பார்க்கலாம்.

காரணம் 6ல் நான் சொன்ன செய்தி: "தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.

நான் எழுதியது:

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..

…..

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

a) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் "தீவிரவாதம்" பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

b) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா?


இதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.

உண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், "அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே" ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.

நான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்

மாற்று மதத்தவர்களின் "சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்" என்று எழுதினேன், இது உண்மையில்லையா?

சரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:

1."இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை" என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா? தவறா?

2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா? தவறா?

3. "இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது" என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா?

4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.


இந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன? நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

காரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் "அறிக்கைகள், சொற்பொழிவுகள்", மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா?

இதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா?

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: "ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....

http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI

……..

……..

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இந்த தலைப்பிலும், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று" என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா? நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா?

இப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.

இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.

நான் எழுதியது:

………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். .....

……..

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும்…….


மேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா?. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

பெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,

கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி "தீவிரவாதம்" பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு


எப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள்? "பெரும்பான்மையாக" என்ற வார்த்தைக்கும், "குறைந்தபட்சம் ஒரு கேள்வி" என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா?

முடிவுரை:

முடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, "இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் "தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், "இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்" என்று சொல்வார்களோ!

ஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை

2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)



Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page

April 17, 2008

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர் தோட்டத்தைப்பார்க்க ஆசையா????? வாங்க பார்ப்போம்

இந்தியாவின் காஷ்மீரில் அழ‌கு கொஞ்சும் துலீப் தோட்ட‌த்தை அமைத்துள்ள‌து அம்மாநில‌ அர‌சு. பார்ப்ப‌த‌ற்கு மிக‌வும் கொள்ளை அழ‌காக‌ காட்சிய‌ளிக்கும் இந்த‌ தோட்டம் த‌ற்போது அநேக‌ வெளிநாட்டு ப‌ய‌ணிய‌ரும் வ‌ந்து ர‌சித்து செல்லும் இட‌மாக‌ மாறியுள்ள‌து. இவ்வ‌ழ‌கை நாமும் க‌ண்டு ர‌சிப்போமா!!!(நேரில‌ இல்லைங்க‌)

(கண்ணைப்பரிக்கும் இம்மலரை வீடியோவில் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்
http://christhunesan.blogspot.com/2008/04/blog-post_432.html )


A Kashmiri gardener works among tulips growing in a field at Siraj Bagh, on the outskirts of Srinagar, 07 April 2007.  Some 360,000 tulips have started blooming in the fields outside the summer capital of Jammu and Kashmir, in Asia's largest tulip garden, carrying with them iresidents hopes that the array of petals will lure tourists back to a land torn by years of separatist violence.  Some 400,000 domestic and foreign tourists visited Kashmir in 2006 From Getty Images by AFP/Getty Images.

April 16, 2008

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர் வீடியோவுலனா பார்க்க ஆசைன்னா இங்க கிளிக் செய்யுங்க‌

(கண்ணைப்பரிக்கும் இம்மலரை போட்டோவில் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்
http://christhunesan.blogspot.com/2008/04/blog-post_17.html )


பிரியங்காவும் தண்டனை கைதி நளினியும் சிறையில் சந்திப்பு : இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் : சிபிஐ முன்னால் இயக்குனர் கார்த்திகேயன்

.
உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசியது உண்மை என்று முன்னாள் பிரதமரின் மகள் பிரியங்கா வதோரா கூறியிருக்கிறார். (புதுடெல்லி, ஏப். 15:)
.
உணர்ச்சிகரமாக நடந்த இந்த சந்திப்பின் போது தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்ட தற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை நளினியிடம் பிரியங்கா வதோரா கேட்டிருக்கிறார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு (அவரின் 5 வயது மகளை கருத்தில் கொண்டு)சோனியாகாந்தி விடுத்த கோளை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. தற்போது தாய்க்கும் ஒரு படி மேலாக கொலையாளியை மகள் நேரில் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




நளினியை ராஜீ"வ்காந்தியின் மகள் பிரியங்கா வதோரா அண்மையில் வேலூர் சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். கடந்த மாதம் 19ம் தேதி வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு பிரியங்கா வழிபாடு நடத்தச் சென்றார். அப்போது நளினியுடனான பிரியங்காவின் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

இந்த சந்திப்பை குறித்து ராஜிவ் கொலையை விசாரித்த முன்னால் சி பி ஐ டைரக்டர் கூறும்போது இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் என்றார்.

Priyanka visit a positive development: Kaarthikeyan

VELLORE: The former Central Bureau of Investigation Director, D.R. Kaarthikeyan, has termed the meeting of Priyanka Vadra with life convict Nalini at the special prison for women at Vellore a "positive development."

"I am not surprised at her visit. You cannot live with hatred forever. It was her mother [Sonia Gandhi] who made efforts to commute Nalini's death penalty to life sentence. I look at it positively," he told The Hindu on Tuesday.

Mr. Kaarthikeyan, who led the Special Investigation Team that probed the Rajiv Gandhi assassination case, said prison was a place to reform. "While in our custody during investigation, many of those accused in the case regretted their act. Though a few said he was responsible for the Indian Peace Keeping Force operation in Sri Lanka, a majority of others expressed regret," he said.

He said he had great respect and admiration for Rajiv Gandhi as a charismatic leader known for his compassion and culture.

http://www.hindu.com/2008/04/16/stories/2008041655741200.htm

மன்னிப்பை அருளாத அந்த மார்க்கத்தில் நான் ஏன் இல்லை தெரியுமா?????.. (ஆசிரியர், மாணவர்)

இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே..  
 
இனி...
 

என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன். இயேசு உலகத்திலுள்ள எல்லாரையும் அவர்களின் பாவங்களிலிருந்து மீட்பதற்காக வந்தார். நாம் இயேசுவை விசுவாசித்து அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.இந்த பதிலுக்குப் பின் அல்டன் என்னைப் பார்த்து முஸ்லீம்களாகிய நாங்களும் இயேசுவை மேசியாவாக நம்புகிறோம்.அவர் எங்கள் தீர்க்கதரிசிகளிலொருவர்.இன்னும்சொல்லப் போனால் அவர் முகமது நபிக்கு முந்தைய தீர்க்கதரிசிகளில் எல்லாரையும் காட்டிலும் சிறப்பானவர் என்றுசொன்னான்.

நான் அல்டனுக்கு பின்வருமாறு விளக்கினேன்:
கடவுள் இந்த உலகிற்கு பல தீர்க்கதரிசிகளைஅனுப்பியிருக்கிறார் என்றாலும் அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். ஆனபடியால் ஒரு தீர்க்கதரிசியை விட இரட்சகர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதன் பின் என் முஸ்லீம் நண்பர் என்னிடம்,- நீங்கள் இயேசுவைக் குறித்து சொல்வது உண்மை என்றால் அல்லா ஏன் முகமதுவை அனுப்ப வேண்டிய அவசியம் வந்தது? இயேசுவைக் குறித்து பைபில் கூறுவது உண்மை எனில் முகமது வரத்தேவையே இருந்திருக்காதே! என்று கேட்டார்.

கிறிஸ்தவம் மூன்று முக்கியமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.இயேசுவே உலக மீட்பர்
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதை பெற்றனுபவிக்க முடியும்.

பைபிள் இதைத்தவிர மற்றபல காரியங்களை போதிக்கிறது என்றாலும் இவையேஅடிப்படையானவை.

1.இயேசுவே உலக மீட்பர்.
இயேசு நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தபடியால் அவரே இரட்சகர்.அவர் எருசலேமில் கி.பி29ல் ரோம போர்சேவகர்களால் சிலுவையிலறையப்பட்டு மரித்தபோது, அவர் நமக்காக மரித்தார். நாம் நம் பாவங்களுக்கு பெறவேண்டிய தண்டணைக்குப் பதிலாக நமக்குப் பதிலாக அவர் அத்தண்டணையை ஏற்றுக் கொண்டார்.

அவருடைய மரணமானது பண்டைய வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது:
சின்னஆசியாவின் கவர்னராகிய பிளைனி என்பவர் ரோம ராயனுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்புகிற கிறிஸ்த்வர்களைக் குறித்த காரியத்தில் ஆலோசனை வேண்டி எழுதியிருக்கிறார்.
டாசிடஸ் என்ற ரோம அரசவை வரலாற்றாசிரியர் இயேசு செய்த அற்புதங்களையும், அவரின் பாடு மரணத்தையும் குறித்து தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஜோசிபஸ் என்றயூத வரலாற்றாசிரியர் இயேசுவின் அற்புதங்கள், அவரின் மரணாம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த அதிகமான தகவல்களை எழுதியுள்ளார்.


மிகவும் முக்கியமாக, பைபிள் பின்வரும் காரியங்களைக் கூறுகிறது:
இயேசுவின் தாயாராகிய மரியாளவரின் சிலுவை மரணத்தின் போதுஅவரருகில் இருந்தததையும்,ரோமசேவகர்கள் தன் மகனின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளடித்து சிலுவையில் அவரை தூக்கினதை பார்த்தாள் என்றும், இயேசு தன் சீடனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைப்பதையும் பைபிள் கூறுகிறது. நிச்சயமாகவே தன் கண்களுக்கு முன்பாக சிலுவையில் தொங்கினது யாரென்றுமரியாளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அதிலே சிறிதும் சந்தேகமில்லை. அவர் இயேசுவேயன்றி வேறொரு நபரில்லை. நாம் நம் பாவங்களுக்காக தேவன் முன்பாக குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தண்டனையிலிருந்து நாம் தப்பிப்பதற்கான தேவனுடைய செயலாகும்.நம்மை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தை நாம் நிராகரித்து விட்டால், நம்மை மீட்பதற்கு வேறெந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கடவுளிடம் நம்மை மீட்க இதை தைத்தவிர வேறொரு திட்டமும் கிடையாது.மருத்துவர் நாம் ஒரு நோயிலிருந்து சுகமடைய ஒரு மருந்தை தரும் போது, நாம் அது கசப்பாயிருக்கிறது என்ற காரணத்திற்காக அவற்றை தள்ளி விடுவதில்லை. அந்த மருந்து நம்மை குணமாகும் என்றசந்தோஷத்தில் நாம் அதை சாப்பிட்டுவிடுவோம். உண்மையில், இயேசுவை என் வாழ்க்கையில் எனது இரட்சகராக அறிந்து கொள்வது எனது மாபெரும் மகிழ்ச்சியானதொரு அனுபவமாக இருக்கிறது.

பைபிள் உண்மை எனில், அல்லா ஏன் முகமதுவை அனுப்பவேண்டிய அவசியம் வந்தது? என்று அல்டன் என்னிடம் கேட்கும் போது அவருடைய கேள்வியிலேயேஅவருக்கு பதிலை காண முடிகிறது. இயேசுவின் சிலுவை மரணம் நமெல்லாருடைய பாவங்களுக்குமான மன்னிப்பை தருகிறது எனில் முகமதுவோ இஸ்லாமோ தேவையில்லை,அவசியமில்லை அப்படிதானே! அவர் இதை உடனடியாக புரிந்து கொண்டு என்னிடம்,'இயேசு உண்மையில் சிலுவையில் மரிக்கவில்லை என்பதை நாங்கள அறிவோம். உண்மையில் இயேசு அல்ல வேறொருவரே சிலுவையில் மரித்தார் என்று குரான் கூறுகிறது" என்றார். இயேசுவை நம்புகிறோம் என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற இயேசு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு அல்ல. அவர்கள் இயேசுவைக் குறித்த ஒரு தவறான கருத்தையே நம்புகிறார்கள்.

2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை.
இயேசுவைக் குறித்து பைபிள் சொல்லுவது உண்மையா? இயேசுவின் மரணத்தைக் குறித்து 137முறை வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என குரான் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் ஏன் இது நம் பாவ தண்டணையிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவ திட்டம் என்பதையும் விளக்குகிறது.அப்படியெனில் எது சொவது உண்மை?
பைபிள், குறிப்பாக புதியஏற்பாடு தாங்கள் கண்டவைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களாலெழுதப்பட்டது. குரான் அதற்கு பின் 600 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. நேரடிசாட்சிகளின் கூற்றையா அல்லது நூற்றுக் கணக்கானவருடங்கள் கழித்துஎழுதப்பட்ட ஒரு நூலையா? அதை நாம் நம்ப வேண்டும்?
அ)பேதுரு எண்ற வேதாகம ஆக்கியோன் எழுதியதாவது:நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ஆ) தனது பெயரில் நற்செய்தி நூல் எழுதிய யோவான் :அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
இ) இயேசு சிலுவையில் நமக்காக மரிஅத்தார் எனபடகை பிரசங்கித்த பேதுரு தனது பிரசங்கத்தை கேட்டயூதர்களிடமே அதைப்பற்றிய அவர்களின் அறிவை லோருகிறார்.அவர்சொன்னதாவது:னாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று கூறி , நீங்கள் அறிந்திருக்கிறபடி என்று தன் பிரசங்கத்தை அவர் முடிக்கிறதையும் நாம் காண்கிறோம்.
நேரடைசாட்சிகளால் எழுதப்பட்ட பைபிள் மட்டுமள்ள, அகழ்வாராய்ச்சிகளும் பைபிள் உண்மை என்று சான்று பகருகின்றன.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்வில்லியம் ஆல்பிரைட் அகழ்வாராய்ச்சியின்படி பைபிளே மிகவும் உண்மையானதாகும் என்று கூறுகிறார்.பைபிள் உண்மையா? என்ற தலைப்பில் அமெரிக்கசெய்திகள்&உலக அறிக்கையின் 1999ம் வருட அக்டோபர்25ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை பைபிள்சொல்கிற காரியங்கள் எல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிற சமீபத்திய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கூறுகிறது.
இஸ்ரவேல் முற்பிதாக்களைக் குறித்த முக்கிய பகுதிகள், யாத்திராகமம், தாவீதின் ஆட்சி, மற்றும் இயேசுவின் வாழ்க்கை மற்றுமவர்வாழ்ந்த காலம் போன்ற பைபிளின் முக்கியமான காரியங்களை நவீன அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது என அந்த கட்டுரை கூறுகிறது.

பழைமையான கைப்பிரதிகளும் கூட பைபிள் மாற்றப்படவில்லை எனபதற்கு சான்று பகருகிறது. இன்று 4000த்துக்கும் அதிகமான கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் உள்ளன. அவற்றில் சில மிஅக்வும் பழைமையானவை,கி.பி.150௨00 காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.பண்டிதர்கள் இந்த எல்லா புராதன கைப்பிரதிகளையும் ஒப்பிட்டு பிரதிகள் எழுதப்பட்ட கால இடைவெளிகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறனர். அதாவதுகி.பி150 எழுதப்பட்ட பிரதிக்கும் கி.பி1200லெழுதப்பட்ட பிரதிக்குமிடையேபெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நானே கூட இத்தகைய பண்டைய கைப்பிரதிகளில் சிலவற்றை லண்டனிலுள்ள ராயல் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன்.

பண்டைய கைப்பிரதிகளைக் குறித்த புகழ்பெற்ற பண்டிதர்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் துல்லியத்தன்மைக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்:
1.வெஸ்கோட் மற்றும் ஹோர்ட் ஆகியோர் பண்டைய ஆவணங்களைக் குறித்த முகவுமறியப்பட்ட திறனாய்வாளர்கள் ஆவர். அவர்கள் கூறுவதாவது:சந்தேகத்திற்குரிய நம் கருத்துகள் புதிய ஏற்பாட்டின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குக் கூட ஈடாக முடியாது.

2.பண்டைய கைப்பிரதிகளை ஆராய்வதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பண்டிதர் சர்.பிரெடெரிக் கென்யான் என்பார் எழுதியது: பைபிள் எழுதப்பட்ட காலத்திலிள்ளவாறே நாமிடம் இப்போது உள்ளது.இதற்குஎதிரான சந்தேகத்தின்கடைசி அடிப்படையுமிப்போது நீக்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டின் நம்பகத்தனமையும் உண்மைத்தன்மையும் இறுதியாக நிறூபிக்கப்பட்டிருக்கிறது.
3.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ராபர்ட் வில்சன் என்பார் 45 மொழிகளை 30 ஆண்டுகளில் கற்றார். முடிவில் அவர் பைபிள் எல்லா நிலைகளிலும் உண்மையானது என்று அறிவித்தார்.
4. கடவுளுடைய தீர்க்கதரிசியாக இயேசுவால் பொய் சொல்ல முடியாது. அவர் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் சொன்னதாவது:வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்.24:35). இஞ்ஜிலில்(பைபிளில்) குறிக்கப்பட்டிருக்கிற தன்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் அழியாது அல்லது மற்றப்படாது என்று இயேசு வாக்குரைத்தார்.
5.பைபிளில் உள்ளவைகளை மாற்ற முயல்கிறவனை தண்டிப்பேன் என்று தேவனும் எச்சரிக்கிறார்:இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளி.22:18,19). பைபிள் ஒரு போதும் மற்றப்படாது என்று தேவன் நமக்கு உறுதி தருகிறார். தேவன் சொல்கிறதை நாம் நம்பலாம்.
6.தனது வார்த்தை மாற்றப்படுவது அல்லது திரித்துக்கூறப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவன் வல்லமையுள்ளவரா? ஆம்.அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.தனது வார்த்தைகளை ஏதாவது மாற்றுவதற்கு தேவன் அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை.
7.அரபி மொழியில் உள்ள குரானும் கூட யூத,கிறிஸ்தவ வேதங்கள் உண்மை,னம்பத்தகுந்தவை என்று போதிக்கின்றன. சுர10:94 கூறுவது: (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம்(கிறிஸ்தவர்களிடம்,யூதர்களிடம்) கேட்டுப் பார்ப்பீராக¢ நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.மனுக்குலத்துக்கு கடவுள் அளித்த எல்லா வேதங்களையும் குறித்து குரான் கூறும் போது, சுரா10:64:அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

நான் மேற்கண்ட இந்த வசனங்களை என் முஸ்லீம் நண்பரிடம் காட்டி, அல்லாவினால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடு(தவ்றாத்)மற்றும் புதிய ஏற்பாடு(இஞில்) ஆகியவற்றில் உள்ளவார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகளா என்று கேட்டேன். அவர் அல்லாவினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் என்று ஒப்புக் கொண்டு,ஆனால் பிபுஅவை மாற்றப் பட்டுவிட்டன என்றார். பின்பு நான் அவரிடம் அப்படியானால் குரான் பிழையானது,அதில் தவறு உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றேன். ஏனெனில் குரான் அல்லாவின் வார்த்தைகள் ஒருபோதும் மாற்றப்படமுடியாது என்று கூறுகிறது. பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளவை மாற்றப்பட்டிருக்குமானால் குரான் பிழையானதாகிவிடும்.குரான் பிழையற்றது எனில் பைபிளும் மற்றப்பட முடியாது. "எது சரி? பைபிள் மாற்றப்பட்டதா? அல்லது குரான் பிழையானதா>என்று நான் அல்டனிடம்கேட்டேன்.இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது எனா அவருக்கு தெரிய வில்லை.

பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லுகிறவர்கள் பைபிளை தவறாகவிளக்குகிறார்கள் அல்லது மூல எழுத்துகளாகிய எபிரேய கிரேக்க வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளையே காண்கிறார்கள். நான் அரபிமொழியிலுள்ள குரானை பயன் படுத்துகிறேன்.


3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதைபெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அது தேவன் நம்மை நேசிக்கிறார், நமக்கு ஒரு புது வாழ்வைஅவர் அளிக்கவிரும்புகிறாரென்பதே. நாம் நம் தண்டனைக்கு தப்பும்படிஅவர் வைத்துள்ள திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாகில் அவர் நம் பாவங்களை மன்னித்து சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நம் வாழ்வை நிரப்ப அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.னாம் இன்று உலகில் காண்பவை தேவனுடைய திட்டமல்ல. நாம் போர்,பசி,குற்றம்,வெறுப்பு,கொலைபோன்ற காரியங்களைக் காண்கிறோம்.இந்த எல்லா தீஸ்செயல்களும் மனுக்குலம் தேவனுக்கு விரோதமாக வாழ்வதினாலேயே உண்டாகின்றன.அவர்கள் தேவனுடைய பரிபூரன திட்டத்தை தள்ளிவிட்டு தங்களுக்காகவே வாழ்வதைதெரிந்துகொண்டனர்.ஒவ்வொருவனும் தனகாகவே வாழும் போது அவன் தானாகவே ட்ய்கங்களுக்காக வாழ்கிற மற்றவர்களிடம் முரண்படுகிறான். அதன் விளைவைத்தான் நாம் காண்கிறோம். தனிப்பட்ட -நிலையில், தேவனுக்கு விறோதமான மனிதனின் முரட்டாட்டத்தின் விளைவுகளான வெறுப்பு,கோபம்,பொறாமை போன்றவைகளை நாம் காண்கிறோம். தனிமை,குழப்பம்,கலக்கம், குடிவெறி, கிலேசம் ஆகியவற்றையும் நாமெல்லாரும் வாக்கையில் சந்திக்கிறோம். இவை எல்லாவற்றையும் மாற்றுவதுதான் தேவனுடைய திட்டமாகும். அவர் தனது சமாதானம், அன்பு, சந்தோசம்,பொறுமை ஆகியவற்றை நமக்கு தரவிரும்புகிறார். ஆகவேதான் அவரியேசுவை உலகிற்குஅனுப்பினார். நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தவும், நமக்கு ஒரு புதியவாழ்வை தருவதற்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார்.இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பாவமன்னிப்பையும் ஏற்றுக் கொள்ளுதலையும் நாம் நம் வாழ்வில் அறிந்து அனுபவிக்கமுடியும்.

எனக்கு ஏன் ஒரு இரட்சகர் ட்Hஏவை? என்று சிலர் கேட்கின்றனர். நாமெல்லாரும் பாவிகளாயிருக்கிறபடியால் நமக்கு ஒரு இரட்சகர் தேவை. உயிர்வாழ்கிற ஒவ்வொருவரும் சமயங்களில் தவறிழைத்துவிடுகிறோம். பைபிள்மிகவும்தெளிவாகக் கூறுகிறது: எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை(சங்.53:3) நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக இருக்கிறோம். நாம் செய்த தீமைகளுக்காக அவர் நம்மை தண்ண்டிப்பார். பைபிள் கூறுவது:பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.... துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்(எசே.18:20). நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே வழி இயேசுவே. ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் இயேசு ஒருவரே பாவமில்லாதவர்.ஆகவே அவர் ஒருவரேனம்மை நம்பாவங்களிலிருந்து இரட்சிக்கக் கூடியவர்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் அவர் ஒருவரே நம் பாவங்களுக்காக மரித்தார்.ஆகவே அவரொருவரேனம்மைஇரட்சிக்க முடியும்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி?ஏனெஇல் இயேசு ஒருவரே உயிர்த்தெழுந்து தானே உலக இரட்சகரென்பதை நிரூபித்தார்.பைபிள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. இயேசுவின் மீதுள்ள எளிய விசுவாசத்தினாலும்,அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதினாலும் நாம் தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையுமறிந்து நித்திய ஜீவனை அளிக்கிற இரட்சிப்பை பெற்றனுபவிக்க முடியும். பைபிள்தெளிவாகக்கூறுகிறது:உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1பேதுரு1:18,19).
மற்ற அனைவரும், தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூட தேவனுடன் ஒப்புரவாக்கப்படல் அவசியமான இரட்சகர் தேவையான பாவிகளே.முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான். ஆபிரகாம்,மோசே, தாவீது ஆகிய எல்லாரும் தேவனுக்கு விரோதமாக பாவம்செய்தார்கள். குரான் கூறுகிறபடி,முகமது நபியும் கூட மன்னித்தல் தேவையான ஒரு பாஅவிதான்(சுரா47:19,48:1- 2 பார்க்கவும்).இயேசு ஒருவரே நம் இரட்சகராக இருக்க முடியும்.ஏனெனில் அவர் ஒருவரே பாவமில்லாதவர். தேவன் நம்மை மிகவும் நேசித்த படியால் அவர் இயேசுகிறிஸ்துவை நம்மை இரட்சிக்க உலகிற்கு அனுப்பினார் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது.பைபிள் கூறுகிறதாவது:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்(யோவான்3:16- 17).

இஸ்லாம் மன்னிப்பை அருளுவதில்லை. முகமது நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய் பரலோகத்திற்குசெல்லப் போகிறோம் என்பதை நம் அறிந்து கொள்ளமுடியும் என்று குரான் போதிக்கவில்லை. இஸ்லாம் மார்க்கம் நம் இரட்சிப்பிற்கான உறுதியை நமக்கு தர வில்லை.இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மாத்திரமே அதைச் செய்ய முடியும்.


இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே!


source:http://www.menorah.org/why%20I%20am%20not%20a%20muslim.html 

http://isaforall.blogspot.com/2008/04/blog-post_14.html

http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=250

 

April 14, 2008

என்னது...தன்னுடைய கடைசி தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற இறைவனுக்கு சக்தியில்லையா????

...."உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" ....அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார்...........அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன்,


இவ்வளவும் எதற்கு இங்கு மேலோட்டமாக சொல்கிறோம் என அறிய  தொடர்ந்து படியுங்கள்
 
The Challenge of Mark 16

மாற்கு 16ன் சவால்

Sam Shamoun


அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)

இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.

இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)

இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)

அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)

இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)

இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்

கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!


பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
(அல்-புகாரி)


பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
(அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)



விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது



பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)

இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து

ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"

மற்றும்

அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.

அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )

அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".

இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.

தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.

இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மூலகட்டுரை:
http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு:

1.
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2.
ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்)

மேலும் படிப்பதற்கு:


4. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 1

5.
Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 2

6.
More on Muhammad and Poison:(Examining Abdullah Smith's War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission)