அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 4, 2011

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2

(அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)

பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் கொடுத்த முதல் மறுப்பை இந்த தொடுப்பில் படிக்கலாம்: Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1 முதல் பாகத்தில் பீஜே அவர்கள் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 2 மற்றும் 3) நாம் பதிலைக் கண்டோம்.

இந்த தற்போதைய இரண்டாம் மறுப்பில், பிஜே அவர்கள் தம்முடைய புத்தகத்தில் "பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 4 மற்றும் 5) நம் பதிலைக் காண்போம்.

பீஜே அவர்கள் எழுதியது :

பைபிள் ஓர் அறிமுகம்

...

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய் ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது" (பக்கம் 4, 5)

கிறிஸ்தவன் எழுதியது :

"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள், முதலாவது பழைய ஏற்பாடு பற்றிய சிறு குறிப்பை எழுதியுள்ளார். அதன் பிறகு புதிய ஏற்பாடு பற்றி எழுதியுள்ளார். அவர் புதிய ஏற்பாடு பற்றிய எழுதியவைகளில் சில குறைபாடுகள் உள்ளன. அவைகளை நாம் காண்போம்.

பீஜே அவர்கள் "தமது சுயநம்பிக்கையாகிய‌ புதிய ஏற்பாடு நம்பத்தகுந்தது அல்ல என்பதை நிலை நாட்ட விரும்பி " அனேக விவரங்களை மறைத்துவிடுகின்றார். முதலாவதாக அவர் "புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும்" என்று எழுதியுள்ளார். நான் பீஜே அவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால்,

இயேசுவோடு இருந்து

அவரைக் கண்டு,

அவரிடம் பேசி,

அவரை தொட்டுப்பார்த்து

அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட சீடர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டை எழுதியுள்ளார்.

இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவைகளும், இந்த நேரடி சீடர்களுக்கு சீடர்களாக இருந்தவர்கள் எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் பிரசங்கங்களை கேட்டு, விவரங்களை சேகரித்து எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. பீஜே அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இயேசுவை கண்களால் காணாதவர்களால் மட்டுமே புதிய ஏற்பாடு எழுதப்பட்டதாக மறைமுகமாக கூறுகிறீர்கள். இது தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்தேயு:

முதலாவதாக, மத்தேயு என்பவர் இயேசுவின் 12 சீடர்களில் இவரும் ஒருவர். இவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர், கூடவே இருந்தவர், இயேசுவின் அற்புதங்களை கண்டவர், இயேசுவின் போதனைகளை கேட்டவர். ஆக, மத்தேயு என்பவர் இயேசுவிற்கு பிறகு வந்தவர் அல்ல, அவர் இயேசுவோடு வாழ்ந்தவர் என்பதை இஸ்லாமிய அறிஞர் பீ ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்கு:

இரண்டாவதாக, மாற்கு என்பவர் இயேசுவின் காலத்திற்கு பிறகு ப‌ல நூற்றாண்டுகளுக்கு பின்பாக வந்தவர் அல்ல. இவர் பேதுருவின் உடன் ஊழியக்காரர் அல்லது தோழர். இயேசுவின் சீடராகிய பேதுருவோடும்,பவுலோடும் ஊழியம் செய்தவர். பேதுருவிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை, விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதினார். இந்த மாற்கு சுவிசேஷத்திற்கு அடிப்படை பேதுரு ஆவார், இந்த பேதுரு, இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவர் மற்றும் இயேசுவின் நெருங்கிய சீடர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூக்கா:

மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்:

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)

மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா "ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே" என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

யோவான்:

நான்காவதாக, யோவான் என்ற சீடர் எழுதிய நற்செய்தி நூல். இவர் இயேசுவிற்கு மிகவும் பிரியாமான சீடர், மற்றும் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இயேசுவிற்கு அன்பான சீடராக இருந்தார். இவர் ஒரு நற்செய்தி நூலையும், மூன்று கடிதங்களையும் எழுதியுள்ளார். மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் முத்திரையாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற கடைசி புத்தகத்தை எழுதும் படி இயேசுவிடமிருந்து வெளிப்ப்பாட்டைப் பெற்றவர்.

இந்த பிரியமான சீடன், இயேசுப் பற்றி கூற தனக்கு இருக்கும் உரிமை மற்றும் அதிகாரத்தை சாட்சியாக கூறும்போது கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் (1 யோவான் 1:1)

இந்த சீடரின் மேற்கண்ட வார்த்தைகளை சிறிது கவனித்துப் பாருங்கள். "ஆதி முதல் இருந்ததும்" என்று அவர் சொல்வதிலிருந்து, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறிப்பிடுகிறார். மேலும், " நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற" என்று சொல்வதிலிருந்து தன்னுடைய ஐம்புலங்களினால் இயேசுவை அறிந்ததாக கூறுகிறார். அதாவது அவரை தொட்டு பார்த்துஇருக்கிறோம், அவரின் பேச்சை கேட்டு இருக்கிறோம், அவரை கண்டு இருக்கிறோம் என்றுச் சொல்கிறார். ஆகையால், இயேசுவின் ஊழிய வாழ்க்கையை மிகவும் அருகில் இருந்து கவனித்த சீடர்களின் சாட்சியை நாம் பைபிளில் காணமுடியும்.

ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டின் கடைசிவரை இந்த சீடர் உயிர் வாழ்ந்துள்ளார். மற்ற சீடர்கள் கொல்லப்பட்டு மரித்தார்கள். இந்த சீடரின் காலத்திற்கு முன்பே புதிய ஏற்பாட்டின் எல்லா நற்செய்தி நூல்களும், இதர கடிதங்களும் எழுதி முடித்தாகிவிட்டது. கடைசியாக, இவருக்கு "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற உலகத்தின் கடைசி கால நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டது. ஆக, இந்த சீடர் தன் காலத்தில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள், கடிதங்கள் போன்ற எல்லா புதிய ஏற்பாட்டு நூல்களையும் காண வாய்ப்பு உள்ளது. மட்டுமல்ல், எருசலேமின் தலைமை சபையின் தலைவர்களில் பேதுருவோடு சேர்ந்து இவரும் ஒருவராக செயல்பட்டுள்ளார். ஆக, புதிய ஏற்பாட்டு நுல்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டி இருக்கும்.

பேதுரு:

மேலும் இயேசு தன் சபைக்கு தலைவராக நியமித்த சீடர்களில் முக்கியமானவராகிய இருந்த "பேதுரு" என்ற சீடர், மாற்கு சுவிசேஷம் எழுதிய மாற்கு என்பவரின் ஆன்மீக குருவாக இருந்தார். மற்றும், இரண்டு முக்கியமான கடிதங்களை ஆரம்பகால சபைகளுக்கு எழுதியுள்ளார் (1 பேதுரு, 2 பேதுரு). இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பேச தனக்கு அதிகாரம் உள்ளது, மற்றும் அதற்கு தாம் எப்படி தகுதியுள்ளவர் என்பதை கீழ்கண்ட வரிகளில் கூறுகிறார்:

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)

2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு, பேதுரு பற்றி பீஜே அவர்கள் கொடுத்த விமர்சனத்திற்கு நான் மறுப்பை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்: Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு". எனக்கு தெரிந்தவரை இதுவரையில் பிஜே அவர்கள் இந்த மறுப்பிற்கு பதில் அளிக்கவில்லை.

யாக்கோபு:

மேலும் இயேசுவின் சகோதரர் "யாக்கோபு" என்பவரும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு எருசலேம் சபையின் முக்கிய தலைவர்களாகிய பேதுரு யோவான் போன்றவர்களுடன் சேர்ந்து இவரும் ஊழியம் செய்தவர், இவர்கள் அனைவரும் ஆதிகால திருச்சபையின் "தூண்கள்" என்று எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2:9). இந்த யாக்கோபும் இயேசுவைக் கண்டவர் தான் என்பதை பீஜே அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

பவுல்:

இன்னும் நான் பவுலைக் குறித்து சொல்லவேண்டியதில்லை, இயேசுவே சவுலை சந்தித்தார், கிறிஸ்தவ சபையின் முதல் எதிரியை முதல் நண்பனாக இயேசு மாற்றிவிட்டார்.

"இயேசுவிற்கு பிறகு வந்தவர்களால்" என்ற வரிகளின் மூலமாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு நெருங்கியவர்களுக்கு பங்கில்லை, அவரின் சீடர்களுக்கு பங்கில்லை, அவரை கண்டு பேசி அவரோடு வாழ்ந்தவருக்கு பங்கில்லை என்ற தோரணையில் நீங்கள் எழுத ஆரம்பித்தால் அதனை கிறிஸ்தவர்கள் தெரிந்துக்கொள்ளாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தீர்களா பீஜே அவர்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

முடிவுரை: முஹம்மதுவின் மனைவியாகிய ஆயிஷா அவர்கள், மற்றும் அவரின் தோழர்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி போன்றவர்களை நீங்கள் எந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்று கருதுவீர்கள் பீஜே அவர்களே? இவர்களை நாம் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்ற பட்டியலில் சேர்க்கலாமா? அல்லது முஹம்மதுவை கண்டவர்கள், அவரின் வார்த்தைகளை கேட்டவர்கள், அவரை தொட்டுப்பார்த்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கலாமா? இவர்கள் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்று கூறினால், இப்படி கூறுபவர்களை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள்? அதே போலத்தான், இயேசுவை கண்டும், அவரது பேச்சுக்களை கேட்டும், அவரை தொட்டுப்பார்த்தும், அவரோடு பேசியும் இருந்த சீடர்களை "இயேசுவிற்கு பிறகு வந்தவர்கள்" என்றுச் சொல்வது அறியாமையாகும். அந்த அறியாமையில் இருக்கும் உங்களுக்கு தெளிவை உண்டாக்கவே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை இது உங்கள் அறியாமையாக இருக்காது, வேண்டுமென்றே குற்றம் பிடிக்கவேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டும் உங்கள் வஞ்சகமாக இருக்கலாம். உங்கள் நிலை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு சரியான மறுப்புக்களை அளிப்பது கிறிஸ்தவர்களின் கடமை.

பீஜே அவர்களுக்கு ஒரு சவால்: அல்லாஹ்வின் வேதம் என்று நீங்கள் கருதும் குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு, முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் அவரை அறிந்த இதர மக்கள் அறிவித்த ஹதீஸ்கள், சரித்திர நூல்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி "இஸ்லாம் என்றால் என்ன? அதன் தூண்கள் என்ன? ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும்? இன்னும் இதர இஸ்லாமிய கடமைகள், சட்டங்கள்" போன்வற்றை உங்களால் விளக்கமுடியுமா?

ஒரு சராசரி மனிதன் இஸ்லாமியனாக மாறி ஒரு முஸ்லிமாக வாழுவதற்கு தேவையான விவரங்கள் குர்‍ஆனில் எத்தனை சதவிகிதம் உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா?

குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்லாமை நாம் 50 சதவிகிதமாவது புரிந்துக்கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட‌ ஒரு அறைகுறை வேதமாகிய குர்‍ஆனை வைத்துக்கொண்டு, நீங்கள் மற்றவர்களின் வேதத்தைப் பற்றி பேச வந்துள்ளீர்கள். அந்த அறைகுறை வேதத்தையும், அரபியிலேயே படித்தால் நான் நன்மை என்ற மூடநம்பிக்கையையும் மக்களின் மனதில் பதிய வைத்துக்கொண்டு வருகிறீர்கள்.

நான் ஏன் இப்படி கேள்விகளை உங்கள் முன்வைக்கிறேன் என்றால், ஹதீஸ்கள், சீராக்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமுக்கு இல்லையென்றால், இஸ்லாம் ஒரு சூன்யம், குர்‍ஆன் ஒரு மரித்த சடலத்திற்கு சமம், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் அந்த மரித்த சடலத்திற்கு உயிர் போன்றது என்பதை விளக்கவே கேள்விகளை கேட்கிறேன்.

எனவே, முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் என்பதினால், இயேசுவின் நேரடி சீடர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது? கிறிஸ்தவ ஆரம்ப கால சரித்திரத்தை மறுக்கமுடியாது. ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகிய முஹம்மது சொல்வதைக் கேட்டு வாழும் இஸ்லாமியர்களாகிய உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இயேசுவின் அப்போஸ்தலர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது. 

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகமான வார்த்தைகளையும், பொய்களையும் தமிழ் கிறிஸ்தவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள், அவைகளை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி உங்கள் வஞ்சகத்தில் யாரும் விழ தயாராக இல்லை.

"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய இதர வரிகளுக்கு அடுத்த மறுப்பில் பதிலைக் காண்போம்.

  http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html

November 2, 2011

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

("குர்‍ஆன் மூலத்திற்கு" மூலம் முழுவதுமாக‌ எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது?)

முன்னுரை : இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். (குறிப்பு: இதில் சாதாரண சராசரி முஸ்லிமை இழுக்கவேண்டாம், பாவம் அவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான் அது "Allah knows Best" என்பதாகும், ஆகையால், இந்த கட்டுரையில் நாம் படிக்கப்போகும் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

குர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, "அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்" என்று கூறுவார். இப்படிப்பட்டவரில் ஒருவர் தான் பீஜே அவர்கள். அவர் குர்‍ஆன் மூலப்பிரதிகள் பற்றி தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியவைகளை மேற்கோள் காட்டி, நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் (உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மொழிப்பெயர்த்து இருந்தேன்), அதற்கு மறுப்பு எழுதுவதாக "சகோதரர் ஜியா மற்றும் அப்சர்" அவர்கள் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார்கள்.

அந்த கட்டுரையில் அவர்கள் கொடுத்து இருந்த விவரங்களைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. அதாவது பிபிசியில் (இணைய செய்தித்தாள்) ஒரு கிறிஸ்தவர் எனக்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டாராம். மற்றும் எனக்கே தெரியாமல் நான் உண்மையை ஒப்புக்கொண்டேனாம். இப்படியெல்லாம் அவ்விருவர்கள் எழுதியுள்ளார்கள்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும்.

சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.

முன்னுரையை இதோடு நிறுத்திக்கொண்டு நாம் அவர்களின் வரிகளை அலச செல்வோமா?

என் முதல் கட்டுரையில் நான் மேற்கோள் காட்டிய பீஜே அவர்களின் வரிகளை மறுபடியும் படிப்பது நல்லது.

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

இப்போது சகோதரர் ஜியா/அப்சர் அவர்களின் வரிகளுக்கு பதில்களை காண்போம்:

இவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்:

1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.


இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.


முதல் குற்றச்சாட்டு: இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள், "கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.

Source

உமர்:

கட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா?

இஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள்? அதன் தொடுப்பு எங்கே? "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா? நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா? நீங்கள் மட்டும் படித்தால் போதுமா?

நீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே. நீங்கள் நேர்மையானவர்கள் தானா? நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா? "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள்? மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள்? உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

நானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யா?  இஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்?

நீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா?

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா??

பார்க்க: பைபிள் முரண்பாடுகள்

உமர்:

பெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா? (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா?

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதுவரை 280க்கும் அதிகமான கட்டுரைகள் மறுப்புக்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பதிலைச் சொல்லாமல், அவர்கள் கூறும் பைபிள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லச் சொல்கிறார்கள் சகோதரர் ஜியாவும் அப்சரும்.

என் நண்பர் ஒருவர் இப்படியாக கூறினார், "ஏன் நத்திலியை பிடிக்கிறாய், திமிங்கிலத்தை பிடிக்கலாம் அல்லவா?" என்றார், அது என்ன திமிங்கிலம்... நத்திலி என்று குழப்பமாக இருக்கிறதா?

திமிங்கிலமா நத்திலியா?

நம் தமிழ் நாட்டில் சில சிறிய மீன்கள், தங்கள் விஷயங்களை ஒரு பெரிய திமிங்கிலத்திலிருந்து பெருகின்றன, புரியவில்லையா? அதாவது பீஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?", "இது தான் பைபிள்" போன்ற புத்தகங்களிலிருந்து தான் விவரங்களை எடுக்கின்றனர், அவைகளை பதிக்கின்றனர். எனவே, முதலாவது பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" மற்றும் அவரது இதர எழுத்துக்களுக்கு பதிலை கொடுத்தால், அதுவே மற்றவர்களுக்கும் பதிலாக அமையும்.

ஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா?

உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (http://www.answering-islam.org/) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும்.

நீங்களே சொல்லுங்க..பீஜே அவர்களின் புத்தகங்களுக்கு பதிலை அளிப்பது சரியா? அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா? இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்!) பதில் கிடைக்கும். தற்போதைய பதில் உங்கள் சொந்த தயாரிப்பிற்கு கிடைக்கும் என்னுடைய பரிசு ஆகும்

ஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க... 

இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களில் பீஜே அவர்களின் குறைந்தது 10 குற்றச்சாட்டுகளுக்காவது பதிலை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இப்போது இரண்டாவது குற்றச்சாட்டுக்குச் செல்வோம்::


இரண்டாம் குற்றச்சாட்டு: ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

இஸ்லாமியர்களுக்கு பொதுவாக மதவிஷயங்களில் நகைச்சுவை உணர்வு குறைவு, ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும்.

பிபிசி என்ற இணைய செய்தித்தளத்தில் ஒரு கிறிஸ்தவரே எனக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளாராம். இதற்கு ஒரு ஆதார செய்தியையும் இவர்கள் காட்டுகிறார்கள்.

இந்த வேடிக்கையை நிதானமாக படியுங்கள்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.

பார்க்க: கலிFபா உத்மான் அவர்கள் தொகுத்த குர்ஆன்

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death. " முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood ." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று...

உமர்:

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் காட்டிய பிபிசி செய்தியை/கட்டுரையை படித்தாலே போதுமாம், நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையுமாம்.

முதலாவது, நான் ஜியா/அப்சர் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், "ஒரு ஆய்வுக் கட்டுரைக்கும், செய்தித்தாளில் வரும் ஒரு செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? " என்பதாகும்.

ஆய்விற்கும் செய்திக்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் எழுத வந்துவிட்டீர்கள், மட்டுமல்லாமல் என் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா தெரிகின்றதா?

இரண்டாவதாக, அந்த செய்திய வெளியிட்ட "Ian MacWilliam" என்பவர் "தான் ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகள் இவைகள்" என்றுச் சொல்லியுள்ளாரா? அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா? இதனை நான் இப்போது உங்களுக்கு விளக்குவேன்.

மூன்றாவதாக கேட்கவிரும்பும் கேள்வி: ஒழுங்காக உங்கள் இருவருக்கும் ஒரு பக்கம் இருக்கும் ஆங்கிலச் செய்தியை படித்து புரிந்துக்கொள்ள முடியுமா? என்பதாகும்.

ஏன் இப்படி கேட்கிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், மக்களை ஏமாற்ற இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் மறைத்து எழுதுவார்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வெட்கப்படவேண்டி வருமே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. "நாங்கள் கொடுக்கும் ஆங்கில தொடுப்பை யார் படித்து பார்க்கப்போகிறார்கள், யார் ஒவ்வொரு வரியையும் படித்து நமக்கு பதில் சொல்லப்போகிறார்கள்" என்ற "மிதமிஞ்சிய நம்பிக்கை" அவர்களை இவ்வளவு கீழ்தரமாக எழுதவும், நடக்கவும் வைக்கிறது.

சரி, அவர்களின் பிபிசி கட்டுரையை சிறிது அலசுவோமா?

பாவம் இஸ்லாமியர்கள், எது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறுகிறது...

அவர்கள் கொடுத்த பிபிசி கட்டுரையின் தொடுப்பு: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm

அவர்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு: Tashkent's hidden Islamic relic

"தாஷ்கண்டில் மறைக்கப்பட்டிருக்கும்/ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பழமை வாய்ந்த சின்னம்"

கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக எழுதியதாக தெரியவில்லை, அதற்கு எதிராக எழுதியதாக தெரிகிறது, அதாவது இஸ்லாமுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு பழைய குர்‍ஆனை இப்படிப்பட்ட இடத்திலா அக்கரையில்லாமல் வைப்பது அல்லது மறைத்துவைப்பது என்பது போல, இக்கட்டுரை உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருமுறை அந்த தொடுப்பை சொடுக்கி படியுங்களேன், பிளீஸ். இது உமரின் தாழ்வான வேண்டுகோள்.

சரி, அக்கட்டுரையின் முதல் வரியை பார்ப்போமா?

பிபிசி நிருபர்:

In an obscure corner of the Uzbek capital, Tashkent, lies one of Islam's most sacred relics - the world's oldest Koran.

ஜியா/அப்சர் அவர்களின் பிபிசி நிருபர் எழுதிய தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை "Obscure" கவனிப்போம், அதன் பொருளை "http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp" என்ற அகராதியிலிருந்து எடுத்தேன்.

உம‌ர்:

அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், "ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களே, என்ன உங்க பிபிசி கிறிஸ்தவ நிருபர் சொல்வது உங்களுக்கு விளங்குதா?

சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம்.

இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.

பிபிசி நிருபர்:

The Mufti of Uzbekistan, the country's highest religious leader, has his offices there, in the courtyard of an old madrassa.
. . . .
"There are approximately 20,000 books and 3000 manuscripts in this library," said Ikram Akhmedov, a young assistant in the mufti's office .

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல, பாசாங்கு செய்யும் ஜியா அப்சர் போன்றவர்களின் ஆய்வை என்னவென்றுச் சொல்ல.

பிபிசி நிருபர்:

Sacred verses

The Othman Koran was compiled in Medina by Othman, the third caliph or Muslim leader.

Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad were memorised, or written on pieces of wood or camel bone.

உமர்:

மேலே உள்ள வரிகளில் " Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad " என்பதை கவனிக்கவும். அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) " என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன? அதை எழுதுபவருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்லது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாது, ஆனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அப்படி உள்ளது என்று நாசுக்காக சொல்லி முடித்துவிடுவார்கள்.

அய்யா ஜியா மற்றும் அப்சர் அவர்களே, உங்கள் நிருபர் சொல்கிறார் "அல்லாஹ் தம்முடைய வசனங்களை இறக்கியது பற்றி அவர் எழுதியது, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படியாம், தம்முடைய நம்பிக்கையின்படி இல்லையாம் ", இப்போதாவது தெரிகின்றதா?

"முஹம்மதுவிற்கு வசனங்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்களாம்".

அடுத்ததாக, நம் சகோதரர்கள் மேற்கோள் காட்டிய வரிகளைக் காண்போம், ஆனால்,அவர்கள் வேண்டுமென்றே காட்ட விரும்பாத வரிகளையும் பாருங்கள்.

பிபிசி நிருபர்

To prevent disputes about which verses should be considered divinely inspired, Othman had this definitive version compiled. It was completed in the year 651, only 19 years after Muhammad's death.

பிபிசி நிருபர் சொல்கிறார், "எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.

ஆக, எது சுட்ட பழம் எது சுடாத பழம் (இறைவசனம், இறைவசனம் இல்லை) என்ற சண்டையை தீர்க்க உஸ்மான் ஒரு பிரதியை உருவாக்கினார் என்பதை கூறுகிறார் நிருபர்.

இந்த நிருபர், அந்த வாலிய உதவியாளர் சொன்னதைக் கேட்டு அப்படியே எழுதியுள்ளார். பல ஆண்டு கால ஆய்வை மேற்கொண்டு பிறகு தன் முடிவைச் சொல்லவில்லை. "நீ சொல்லும் விவரத்தை நான் நம்பமாட்டேன், நான் ஆய்வு நடத்தி, பிறகு தான் முடிவு செய்வேன், அது உஸ்மான் குர்‍ஆனா இல்லையா?" என்று அவர் கூறியிருந்தால். இந்த செய்தி உங்கள் கைக்கு வந்திருக்காது, அவ்வளவு ஏன், அவர் அந்த நாட்டிலிருந்து இனி செய்திகள் சேகரிப்பது ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.

பிபிசி நிருபர்:

About one-third of the original survives - about 250 pages - a huge volume written in a bold Arabic script.

"The Koran was written on deerskin," said Mr Akhmedov. "It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script."

உம‌ர்:

என்னுடைய வேலையை சுலபமாக்குவதே இஸ்லாமியர்களுக்கு ஒரு வேலையாக போச்சு.

என்னுடைய அடுத்த கட்டுரை "பீஜே அவர்கள் கூறுவது போல, இந்த பழமை வாய்ந்த குர்‍ஆனிலிருந்து பிரதி எடுத்து, அவைகளை முஸ்லீம்களின் கையில் கொடுத்தால், அதில் 114 அத்தியாயங்கள் இருக்காது"... என்பது பற்றியது தான்...

இந்த விஷயத்தை இப்போதே சொல்லும் படி ஜியா/அப்சர் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதாவது, உங்கள் பிபிசி நிருபர் கூறியது படி, மூன்றில் ஒரு பாகம் குர்‍ஆன் தான் அந்த அருங்காட்சியகத்தில்  குர்‍ஆன் பிரதியில் உள்ளதாம், முழு குர்‍ஆன் இல்லையாம்.

இப்போது உங்களுக்கு என் முந்தைய கட்டுரையின் தலைப்பை ஒருமுறை மறு பதிவு செய்கிறேன்:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

இந்த தலைப்பில் "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி" என்ற வார்த்தைகளை பார்க்கவும். இதில் முக்கியமாக "முழு (Complete) " என்ற வார்த்தையை கவனிக்கவும்.

அடுத்த கட்டுரையில் "எத்தனை அதிகாரங்கள் கையெழுத்துப் பிரதியில்" இருக்கிறது என்பது பற்றி நான் விளக்குகிறேன். மற்றும் அந்த பிரதி எந்த எழுத்துவடிவில் உள்ளது என்பதை இன்னும் விவரமாக விளக்குவேன்.

பிபிசி நிருபர்:

It is said that Caliph Othman made five copies of the original Koran. A partial Koran now in the Topkapi Palace in Istanbul is said to be another of these original copies.

உமர்:

செய்திக்கும் ஆய்விற்கும் வித்தையாசத்தை கொடுக்கும் வார்த்தைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். நன்றாக பாருங்கள் "It is said", "is said to be"என்ற வார்த்தைகள் வந்துள்ளது. இதையே ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருந்தால், அதிகாரபூர்வமாக கூறுவார். ஆனால், இந்த செய்தியில் "கூறப்பட்டது, சொல்லப்பட்டது" என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி (என்னுடைய ஆய்வின் படி அல்ல)" என்று சொல்லவேண்டும்.

ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா?

ஆனால், நீங்கள் காட்டிய தொடுப்பிலிருந்து விவரங்களை கொடுப்பதை நான் இன்னும் முடிக்கவில்லை.

இரத்தக்கறை பற்றி என்ன சொல்கிறார் உங்கள் நிருபர் என்பதை பாருங்கள்:

பிபிசி நிருபர்:

Historical text

Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood.

அந்த இரத்தகறை "காலிபாவின் இரத்தகறையாக இருக்கும் என்று எண்ணுகின்றார்களாம்".. யார் இப்படி எண்ணப்போகிறார்கள்.. உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் தான்...

இதனை அவர் " A dark stain on its pages is thought to be the caliph's blood " என்ற வார்த்தைகளோடு சொல்கிறார், இதில் "is thought to be" என்பது மிகவும் முக்கியமான விவரமாகும்.

இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த "A dark stain" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.

நீங்கள் மேற்கோள் காட்டிய பிபிசி கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆனால், தீபாவளி போனஸ்ஸாக, சாரி பக்ரீத் போனஸ்ஸாக, ஒரு சில செய்திகளை அதே பிபிசி செய்தி தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இதனை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக செய்தித்தாளில் ஒரு செய்தியாக வரும் விவரங்களை "பட்டும் படாமலுமாக வெளியிடுவார்கள்", அதாவது "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி", "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி" என்று பலவாறு கூறி நழுவி விடுவார்கள். அதே செய்தித்தாளில், ஒரு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளரின் கட்டுரை வெளிவருமானால், சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். பொதுவாக கூறப்படும் செய்திகளை நாம் ஆய்வு செய்து தான் ஏற்கவேண்டும். அதை ஒரு உண்மையாக நினைத்து, சத்தியத்தை மறைத்து இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல.

உண்மையாக ஆய்வு செய்து வெளியிடப்படும் அனேக ஆய்வுகள், புத்தகங்கள் உள்ளன. அவைகளை படித்து நாமும் ஆய்வு செய்து எழுதுவதை விட்டுவிட்டு, "இதோ நாங்களும் மறுப்பை தருகிறோம்" என்று மார்பு தட்டிக்கொண்டு வருவது சரியானது அல்ல.

சில உதாரணங்கள்: செய்திகளின் யுக்தி:

இஸ்லாமிய முகப்புப்பக்கத்தில் "Muslims believe" என்ற சொற்றொடரை பார்க்கவும்:

Home page : http://www.bbc.co.uk/religion/religions/islam/

Muslims believe that there is only one God. The Arabic word for God is Allah.

ஓ பிபிசி செய்தித்தாளில், ஒரே ஒரு இறைவன் அவன் அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டுக்கொண்டால், எல்லாரும் உங்களை கேவலமாக பார்ப்பார்கள்.

குர்‍ஆன் அறிமுகம் பக்கத்தில் " Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman " என்ற சொற்றொடர்களை கவனிக்கவும்:

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

Although early variants of the Qur'an are known to have existed, Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman.

இவைகளே போதுமென்று நினைக்கிறேன்.. இதுக்குமேலே நீங்க தாங்க மாட்டீங்க. அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்வோமா?


முன்றாம் குற்றச்சாட்டு: என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.

முழுவதுமாக படித்து புரிந்துக்கொண்டு மறுப்பு எழுதும் பழக்கம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சரியாக நிருபித்து இருக்கிறார்கள். இப்போது அவர்களின் கடைசி குற்றச்சாட்டைக் காண்போம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள் வெளியிட்டது...

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

உமர்:

என் கட்டுரையின்பெயர் என்ன? நான் எவைகளை என் கட்டுரையில் சொல்கிறேன். நான் எவைகளை மேற்கோள் காட்டுகின்றேன், போன்றவற்றையெல்லாம் படித்து எழுத இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. முஹம்மது புரிந்துக்கொண்டது போல அறைகுறையாக புரிந்துக் கொண்டு எழுதுவது இவர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது.

என் கட்டுரையின் தலைப்பை இவர்கள் சரியாக படித்து புரிந்துக்கொண்டார்களா என்பது சந்தேகம்.

என் கட்டுரையின் தலைப்பு:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

முழுவதற்கும், துண்டுக்கும் வித்தியாசம் இவர்களுக்குத் தெரியுமா? (Complete manuscript Vs Fragments)

என் தலைப்பில் மிகவும் தெளிவாக "முழு கையெழுத்துப் பிரதி" என்று கூறியுள்ளேன். ஆங்கிலத்தில் "Complete manuscript" என்று எழுதியுள்ளேன். இதன் பொருள் என்னவென்றால், கி.பி. 800க்கு முன்பு (அதாவது ஹிஜ்ரி 200க்கு முன்பு) எழுதப்பட்ட "முழு கையெழுத்துப் பிரதி" உலகில் எங்கேயாவது உண்டா? என்பது தான் கேள்வி. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், "குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்திலிருந்து கடைசி அத்தியாயம் (114) கடைசி வசனம் வரை உள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, அதுவும் ஹிஜ்ரி 200க்கு முன்பு எழுதப்பட்ட பிரதி உலகில் உண்டா"? என்பதாகும்.

இரண்டாவதாக, ஒரு இஸ்லாமியருடைய மேற்கோளை நான் எடுத்துக்காட்டினேன். அதில் தெளிவாக எழுதப்பட்ட விவரத்தை புரிந்துக்கொள்ளாமல், "உண்மையை நானாகவே எனக்கு தெரியாமல் ஒப்புக்கொண்டேனாம்", இதனை இவர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளார்கள். இப்போது அதனைப் பற்றி பார்ப்போம்.

நான் மேற்கோள் காட்டியவைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் காண்போம்:

இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.

However, there are also a number of odd fragments of Qur'anic papyri available, which date from the first century

Source: http://isakoran.blogspot.com/2011/10/200-800.html

மேலே சொல்லப்பட்டவைகள் "முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, அவைகள் கையெழுத்துப் பிரதி துண்டுகள்", அதாவது ஆங்கிலத்தில் "Fragments" என்றுச் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு: ஒரு வசனமோ, அறைவசனமோ, அல்லது ஒரு சில வசனங்களோ உள்ள ஒரு சிறிய துண்டு ஆகும். இதைத் தான் Fragments என்பார்கள்.

இந்த துண்டுகள் தான் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன என்று அந்த இஸ்லாமிய அறிஞர் கூறியதை நான் மேற்கோள் காட்டினேன். ஹிஜ்ரி என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் எழுதவில்லை. ஆகையால் தான் Fragments என்ற ஆங்கில‌ வார்த்தையின் மொழியாக்கமாக "துண்டுகள் " என்று எழுதினேன்.

"குர்‍ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில், அதே பிபிசி செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதியை மறுபடியும் இங்கு மேற்கோள் காட்டுவது சிறந்தது.

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

மேலே கண்ட வரிகளில், இஸ்லாமியர்களின் பொய்யை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விவரம் ஒன்று உண்டு, அதனைத் தான் நானும் எழுதினேன், பாவம் இவர்கள் எனக்கு ஒரு தளத்தைக் கொடுத்து உதவினார்கள்.

மேலேயுள்ள வரிகளில், அறைகுறை வசனங்கள் கொண்ட குர்‍ஆன் கையெழுத்து துண்டுகள், 7 அல்லது 8ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன. ஆனால், முழு குர்‍ஆன் கையெழுத்துபிரதி மட்டும் , 9ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்றுச் சொல்கிறது, அதாவது ஹிஜ்ரி 200க்கு (கி.பி.800க்கு) பிறகு எழுதப்பட்ட முழு கு‍ர்‍ஆன் பிரதிகள் மட்டுமே உள்ளன.

ஆனால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் சொல்லும் பொய் என்ன? உஸ்மான் தயாரிப்பில் வெளியான இரண்டு பிரதிகள் அப்படியே இரண்டு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஆனால், இவ்விரு பிரதிகளும் ஹிஜ்ரி 200க்கு முந்தையதா என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதில். மற்றும் இவ்விரு இடங்களில் உள்ள அந்த குர்‍ஆன் பிரதிகள் "முழுவதுமாக உள்ளதா?" அதாவது 114 அத்தியாயங்கள் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்டால்... அதற்கும் பதில் இல்லை...

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் ஒழுங்காக படித்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சரி, இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

1) "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி, அதுவும் கி.பி. 800க்கு முன்பு எழுதப்பட்ட முழு பிரதி" உலகில் எந்த அருங்காட்சியகத்திலாவது உண்டா? (மூக்கு கண்ணாடி இருந்தால், கண்களில் மாட்டிக்கொண்டு "முழு" என்ற வார்த்தையை கவனமாக படிக்கவும்)

2) அதே நேரத்தில், அறைகுறையாக, அல்லது ஒரு சில வசனங்களைக் கொண்ட "துண்டுகள்" அதாவது இங்கொன்று அங்கொன்று என்று வசனங்களைக் கொண்ட Fragments என்கின்ற துண்டுகள், ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டவைகள் உள்ளன என்பதைத் தான் நாங்கள் சொல்லியுள்ளோம்.

எனவே இஸ்லாமிய அறிஞர்களே, ஒழுங்காக படியுங்கள், நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள், மூல தொடுப்புகளை கொடுத்து உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

முடிவுரை:

இந்த கட்டுரையில் சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் பயந்துப்போய், என் கட்டுரையின் தொடுப்பை கொடுத்தால் இஸ்லாமுக்கு ஆபத்து என்பதை கவனத்தில் கொண்டவர்களாக முன்வைத்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலை கொடுத்துள்ளேன். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மறுபடியும் தொடர்ச்சியாக இக்கட்டுரை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்களின் உதவிக்கு வந்த பிபிசி நிருபரின் கட்டுரை இவர்களையே பதம் பார்த்ததை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். இஸ்லாமியர்கள் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் நாம் உடனே அதனை ஆய்வு செய்து சரிபார்க்கவேண்டும், அப்போது நிச்சயமாக அவர்கள் மறைத்த உண்மை வெளியே வரும்.

இது வெறும் ஆரம்பம் தான்... இன்னும் குர்‍ஆனின் மூலப்பிரதியின் ஆய்வு தொடரும்...


 

http://isakoran.blogspot.com/2011/10/blog-post_28.html

October 28, 2011

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா? - பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

பீஜே அவர்கள் கூறியது உண்மையா?

அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?

அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?

முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?

அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

இவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள்,  மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.


இஸ்லாமியர்களுக்கு சவால்

முஹம்மது மரித்த ஆண்டில் இருந்த "குர்‍ஆன் கையெழுத்துப்பிரதி" முழுவதுமாக இன்னும் தங்களிடம் உள்ளது என்ற மாயையை முஸ்லிம்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், விஞ்ஞான உண்மைகள் இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்கைக்கு எதிராக சாட்சி சொல்கிறது.

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்:

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)

உண்மை என்ன?

முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது.

இரண்டு பழங்கால குர்‍ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான‌ முஸ்லிம்க‌ளுக்கு தெரியாத‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இந்த‌ இர‌ண்டு கையெழுத்துப் பிர‌திக‌ளும் "க்யூபிக் (Kufic)" என்ற‌ எழுத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989)

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்‍ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script).

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்‍ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்‍ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".

இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்‍ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷய‌ம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிர‌தி ப‌ற்றி கேட்டால், இந்த‌ பிர‌தியில் எந்த‌ ஒரு ஆராய்ச்சியும் ந‌ட‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த‌ தாப்காபி கையெழுத்து பிர‌தியில் இருக்கும் விவ‌ர‌ங்க‌ளை வெளியிட‌, உலக மக்கள் அவைகளை பார்வையிட‌ இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? குர்‍ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிற‌த‌ல்ல‌வா? இதை இஸ்லாமிய‌ர்களே ஏன் செய்ய‌க்கூடாது?

மிகவும் பழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான்.

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது.

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தின், "குர்‍ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

இஸ்லாமியர்களுக்கு சவால்

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

ஆசிரியர்: சகோதரர் ஆன்ட்ரூ

ஆங்கில மூலம்: Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!


October 25, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3

     

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3

(தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)

முன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1

2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

ஸுயூதியின் இத்கான் புத்தகத்திலிருந்து:

பாக‌ம் 3, ப‌க்க‌ம் 73ல் ஸுயூதி கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்களை த‌ருகிறார்:

"அபீ யூனிஸ் என்ப‌வ‌ரின் ம‌க‌ள் ஹமீதா அறிவித்த‌தாவ‌து, "என் த‌ந்தை 80 வ‌ய‌து உடைய‌வ‌ராக‌ இருந்தபோது, ஆயிஷா அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ குர்‍ஆனை படிப்பவராக இருந்தார்: "இறைத்தூத‌ர் மீது அல்லாஹ்வும் அவ‌ர‌து தூத‌ர்க‌ளும் வேண்டுத‌ல் செய்கிறார்கள், ஓ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளே, அவ‌ர் மீதும் முத‌ல் வ‌ரிசையில் நின்று தொழுது கொள்ப‌வ‌ர்க‌ள் மீது ஆசீர் கூறுங்க‌ள்". மேலும் ஹமீதா கூறியதாவது "இது உஸ்மான் குர்‍ஆனின் பிர‌திக‌ளை மாற்றுவ‌த‌ற்கு முன்பாக‌ குர்‍ஆனில் இருந்ததாகும் ".

பக்கம் 74ல், நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

"அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் அவர்களிடம் உமர் கூறியதாவது, குர்‍ஆன் வசனங்களில் "நீ முதலாவது வந்ததுபோல முயற்சி செய்" என்ற‌ வசனத்தை கண்டாயா? இதை நான் கு‍ர்‍ஆனில் காணமுடியவில்லை. அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் உமரிடம் "குர்‍ஆனிலிருந்து நீக்கபப்ட்ட இதர வசனங்களோடு இந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது " என்று கூறினார்.

அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் என்பவர் சிறந்த நபித்தோழராக இருந்தவர் மற்றும் கலிபா பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.

இத்கான் புத்தகத்தில், அதே பக்கத்தில் (பாகம் 3, பக்கம் 74), நாம் கீழ்கண்ட விவரங்களை படிக்கிறோம்:

"முஹம்மதுவின் தோழர்களிடம் மஸ்லமா அல் அன்ஸார் கூறியதாவது: "உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத இரண்டு குர்‍ஆன் வசனங்களை என்னிடம் யாராவது கூறுங்கள்? ". அவர்களால் அவ்வசனங்களை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை. அதன் பிறகு மஸ்லமா கூறியதாவது:

"ஓ நம்பிக்கையாளர்களே! சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு குடியேறியவர்களே, அல்லாஹ்விற்காக உங்கள் உடைமைகளோடு போராடுகிறவர்களே, உங்களுக்கு நன்மை உண்டாகும், நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். மற்றும் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களிடமிருந்து இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்களே, தங்க இடம் அளித்தவர்களே, உதவி செய்பவர்களே நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய அவர்களின் ஆத்துமாவிற்கு அவர்கள் செய்த செய்கைக்கு தக்க பலன் காத்துக்கொண்டு இருக்கிறது."

ஸுயூதி தம்முடைய இத்கான் புத்தகத்தின் பாகம் 3ல், 73 மற்றும் 74ம் பக்கங்களில், முஹம்மதுவின் தோழர்களின் எல்லா விமர்சனங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று நம்மிடம் இருக்கும் உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் கொடுத்த விமர்சனங்களை அவர் குறிப்பிடுகிறார். அவ்வசனங்கள் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் காணப்படுவதில்லை. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நாங்கள் மேற்கோள் காட்டும் மேற்கோள்கள் அனைத்தும், இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆன் விரிவுரையாளர்களும் "சிறந்தவர்கள்" என்று கருதும் அலி, உஸ்மான், அபூ பக்கர் மற்றும் முஹம்மதுவின் மனையாகிய ஆயிஷா, இப்னு மஸூத் மற்றும் இப்னு அப்பாஸ் போன்றவர்களின் மேற்கோள்களாகும். இவர்களின் மேற்கோள்களை எல்லா இஸ்லாமியர்களும் நம்பகமானது என்று கருதுகிறார்கள். குர்‍ஆனை விவரிக்கவேண்டுமென்றால், முஹம்மதுவின் வாழ் நாட்களில் குர்‍ஆனின் வசனங்கள் எப்பொது எங்கே வெளிப்பட்டது என்பதை அறிய இந்த நபித்தோழர்களின் உதவி நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களை போல இஸ்லாமின் கோட்பாடுகளை விவரிக்க வேறு யாரால் முடியும்?

ஸுயூதியின் இத்கான் புத்தகத்தின் முதல் பாகத்தை நாம் படித்தால், கீழ்கண்ட விவரங்களை அறியலாம் (பக்கம் 184):

குர்‍ஆனின் தலைந்த 157 வசனங்கள்

"மாலிக் கூறியதாவது: ஆரம்பத்தில் 9வது (தௌபா) அத்தியாயத்திலிருது அனேக வசனங்கள் விடுபட்டுவிட்டது. அவைகளில் ஒரு வசனம்: "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்" என்பதாகும். ஸூரா பகராவிற்கு நிகரான வசனங்கள் இந்த தௌபா ஸூராவில் இருந்தன என்பது நம்பகமான விவரமாகும்.

இதன் பொருள் என்னவென்றால், இந்த அதிகாரத்திலிருந்த 157 வசனங்கள் தொலைந்துவிட்டன. மற்றும் ஸுயூதி (பக்கம் 184ல்) கூறும் போது, "இப்னு மஸூத்தின் குர்‍ஆன் பிரதியில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ..." என்ற வசனம் இந்த அதிகாரத்தில் காணப்பட்டது. நம்மிடமுள்ள குர்‍ஆனை பிரதி எடுக்கும் சமயத்தில், உஸ்மான் "இப்னு மஸூத்தின்" குர்‍ஆன் பிரதியை பறிமுதல் செய்து எரித்துவிட்டார்.

குர்‍ஆனிலிருந்து வெறும் வசனங்களை மட்டும் உஸ்மான் விட்டுவிடவில்லை, முழு ஸூராக்களும் நீக்கப்பட்டுள்ளது. இப்படி ஸூராக்கள் நீக்கப்பட்ட குர்‍ஆன் தான் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ளது. ஸூயூதி மற்றும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சிகளின் படி, உபை மற்றும் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன, அதாவது "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்ற இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன. அவைகள் அஸ்ர் என்ற 103வது ஸூராவிற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டு இருந்தன. (பார்க்கவும் பக்கம் 182 மற்றும் 183)

இன்றைய குர்‍ஆனில் காணப்படாத அத்தியாயங்களை தொழுகையில் ஓதுதல், உமரின் வழக்கமாக இருந்தது

ஸுயூதி மேலும் கூறும் போது "அப்துல்லாஹ் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில், ஸூரா 113 மற்றும் 114 என்ற அத்தியாயங்கள் காணப்படவில்லை. இத்கான் 184வது பக்கத்தில், ஸுயூதி கூறும் போது, "உபை இப்னு கஅப்" என்பவரின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு அத்தியாயங்கள் காணப்பட்டன. இந்த அதிகாரங்கள் "ஓ இறைவா, உன்னுடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்" மற்றும் "ஓ இறைவா, உன்னையே நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களின் பெயர்கள் "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்பதாகும். ஸுயூதி, 185வது பக்கத்தில் இறைத்தூதரின் மிகவும் புகழ்பெற்ற தோழராகிய "அலி இப்னு அபி ஸாபித்" என்பவரும் இந்த இரண்டு அத்தியாயங்களை அறிந்திருந்தார் என்பதை தெரிவிக்கிறார். உமர் இப்னு அல் கத்தாப்பும் தமது தொழுகையில் இவ்வதிகாரங்களை ஓதுவது வழக்கமாக கொண்டு இருந்தார் .

"இப்னு அப்பாஸ்ஸின் குர்‍ஆன் பிரதி, அல்லது இப்னு மஸூத் என்பவரின் குர்‍ஆன் பிரதி, ...ஆயிஷா அவர்களின் குர்‍ஆன் பிரதி " என்றெல்லாம் கூறுகின்றீர்களே, இதன் பொருள் என்ன? "அனேக குர்‍ஆன்கள் இருந்தன என்றுச் சொல்கிறீர்களா?" என்று வாசகர்கள் கேட்கலாம்.

இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்லப்போவதில்லை. இதற்கான பதிலை இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களிடமும் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், குர்‍ஆனின் மூல பிரதிகள் எப்படி எரிக்கப்பட்டன, மற்றும் எப்படி ஒரே ஒரு பிரதியை தயார்படுத்தி மற்ற குர்‍ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் அலசி இருக்கிறோம்.

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.

குர்‍ஆனிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு அத்தியாயங்களை தமிழிலும், அரபியிலும் படிக்க:

 சூரா ஹப்த் மற்றும் க்ஹல் - (உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்)

 

http://isakoran.blogspot.com/2011/10/3.html

October 22, 2011

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2


           

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2

[கிறிஸ்தவ போதகரும் உமரும் சந்தித்து உரையாடிய முதல் பாகத்தை இந்த தொடுப்பில் ("கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1") படிக்கவும்.

இப்போது இந்த கிறிஸ்தவ போதகர் தன் சபையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, தன் சபை விசுவாசிகளுடன் உமர் மற்றும் அவருடைய நண்பன் ஜான்சன் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இனி அந்த சபையின் விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை இந்த கட்டுரையில் காண்போம். அந்த போதகர் அறிமுக உரையை முடித்துவிட்டு, நேரடியாக கேள்வி பதில்களுக்கு மீதமுள்ள நேரத்தை கொடுத்துவிட்டார்.]

புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு


உமர்: கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தில் எங்கள் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்னோடு சகோதரர் ஜான்சன் அவர்கள் வந்துள்ளார்கள், அவரும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். உங்கள் போதகர் ஏற்கனவே அறித்தபடி, இன்று நாம் முஹம்மது மற்றும் அவரது நபித்துவம் பற்றிய கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கூட்டத்தில் நாம் இதர தலைப்புகளில் பேசுவோம்.

இப்போது நாம் நேரடியாக முதல் கேள்விக்குச் செல்வோம். உங்களில் யார் முதல் கேள்வியை கேட்கப்போகிறீர்கள்?

[முதல் கேள்வியை கேட்பதற்கு, ஒரு கரம் மேலே எழும்புகிறது, முதல் கேள்வி கேட்கப்படுகின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகும்.]

கேள்வி 1: என் பெயர் ஜெபராஜ். நான் ஒரு கிளைச் சபையின் போதகராக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாமியர்களுக்காக ஜெபித்தால் மட்டும் போதாதா? அவர்களுக்கு சுவிசேஷத்தை அதாவது நற்செய்தியை கூறினால் போதாதா? ஏன் நாம் அவர்கள் வேதமாகிய குர்‍ஆனை படிக்கவேண்டும் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை படித்து இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்? இஸ்லாமை கற்க நாம் ஏன் நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டும்?

உமர்: முதலாவது சில கேள்விகளுக்கு நம்முடைய சகோதரர் பதில் அளிப்பார்கள், ஏனென்றால், அவர் அனேக இஸ்லாமியர்களோடு நேரடியாக உரையாடியுள்ளார், அவருக்கு இந்த விஷயத்தில் அதிக அனுபவம் உண்டு. சகோதரர் ஜான்சன் வாங்க‌.{சகோ. ஜான்சன் பதில் அளிக்கிறார்]

சகோதரர் ஜான்சன்:

கர்த்தருடைய நாமத்தில் உங்கள் அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

நீங்கள் ஒரு அடிப்படையான கேள்வியைத் தான் கேட்டு இருக்கிறீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் இஸ்லாம் பற்றி ஓரளவாவது கற்றுக்கொள்ளுங்கள் என்று போதகர்களுக்கு சொல்லுகிறோமோ! அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

கிறிஸ்தவ போதகர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது, நீங்கள் இஸ்லாமியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் போது, அவர்கள் எதிர் கேள்விகளை கேட்பார்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாட வேண்டுமென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இமாம்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பைபிளுக்கு எதிரான அனேக கருத்துக்களை இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இது மட்டுமல்லாமல், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்ஆன் மறுக்கிறது. உதாரணத்திற்கு கீழ்கண்டவைகளைச் சொல்லலாம்:

1) இஸ்லாமின் படி, இயேசு மற்ற தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவர் தேவகுமாரனல்ல.

2) இஸ்லாமின் படி, இயேசு பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் இரட்சகர் அல்ல (அ) அவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை.

3) இஸ்லாமின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக, தேவன் முஹம்மதுவை அனுப்பினார், எனவே, முந்தையை தீர்க்கதரிசிகள் சொன்ன போதனைகளின் படி வாழும் மக்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ), இப்போது அந்த வரிசையில் வந்த முஹம்மதுவை நம்பவேண்டும். அவரை தம்முடைய வழிகாட்டியாக பாவித்து வாழவேண்டும், வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடவேண்டும்.

இஸ்லாமியர்களின் சிறுவயது முதற்கொண்டு அவர்களுக்கு மேற்கண்ட விதமான போதனைகள் போதிக்கப்படுவதினால், அவர்களுக்கு நற்செய்தியை சொல்லும் போது, அவர்கள் ஒரு சில கேள்விகளையாவது கேட்பார்கள். ஆகையால், குறைந்தபட்சமாக, போதகர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறவேண்டும், இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எவைகள், வேற்றுமைகள் எவைகள் என்பதை அறியவேண்டும்.

ஆகையால், முதலாவது இஸ்லாமியர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும், அதன் பிறகு அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்ல நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். இயேசுவின் நற்செய்தி இஸ்லாமியர்களை சென்றடைய அனேக தடைகள் உள்ளன, அவைகளில் ஒரு தடை, "இயேசு பற்றியும், பைபிள் பற்றியும்" அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தவறான விவரங்களாகும். ஆகவே, அவர்கள் தவறாக புரிந்துவைத்துக்கொண்டுள்ள விவரங்களுக்கு நாம் பதில்களைக் கொடுத்தால், அவர்களின் சந்தேகங்களை நாம் தீர்த்துவைத்தால் தான் சுவிசேஷம் அவர்களை சென்றடையும், அவர்களும் தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக மாறுவார்கள்.

இஸ்லாமை கற்க போதகர்களாகிய நீங்கள் செலவிடும் நேரம் வீணான நேரமல்ல, அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக செலவிடப்படும் சிறந்த முதலீடு ஆகும். எனவே, உங்கள் ஜெப அறையில் அந்தரங்கத்தில் அவர்களுக்காக ஜெபியுங்கள், அதே நேரத்தில் வெளியரங்கமாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து, நற்செய்தியை கூறுங்கள்.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 2: என் பெயர் தாமஸ். நான் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "என்னுடைய முஸ்லிம் நண்பர் "முஹம்மது கடைசி தீர்க்கதரிசி" எனவே, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரை நபி (தீர்க்கதரிசி) என்று ஏற்கவேண்டும் மற்றும் அவரை பின்பற்ற வேண்டும்" என்று கூறுகிறார். முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா? முஹம்மது பற்றிய பைபிளின் கருத்து என்ன?

சகோதரர் ஜான்சன் - பதில் 2:

இது மிகவும் முக்கியமான கேள்வி, அதே நேரத்தில் பைபிளை படிக்கும் ஒரு நபர் சுலபமாக பதில் தரக்கூடிய கேள்வியும் இதுவே. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை தொடர்ந்து படிக்கும் ஒரு நபர் இந்த கேள்விக்கு சுலபமாக பதில் அளித்துவிடமுடியும். இக்கேள்விக்கான பதிலை நான் விவரிக்கும் போது, பைபிளிலிருந்து சில கேள்விகளை உங்களிடம் கேட்பேன், அதற்கு உங்களில் சிலர் பதில் கூறலாம். நீங்கள் கூறும் பதிலே இந்த கேள்விக்கான பதிலாக அமையும்.

இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வந்தாரா?

1) என் முதல் கேள்வி என்னவென்றால், "புதிய ஏற்பாட்டில்" இயேசு எங்கேயாவது தனக்கு பின்பாக ஒரு "தீர்க்கதரிசி" வருவார் அவரை நீங்கள் (கிறிஸ்தவர்கள்) பின் பற்றவேண்டும் என்று கூறியுள்ளாரா?

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று: இயேசு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று கூறவில்லை, ஆனால், தனக்கு பின்பு "ஒரு தேற்றரவாளனை" அனுப்புவதாக கூறியுள்ளார் என்று பதில் அளித்தார்.

சகோதரர் ஜான்சன் : சரியாகச் சொன்னீர்கள், இப்போது அடுத்த கேள்வி: "அந்த தேற்றரவாளன்" வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று இயேசு கூறினார்? 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் அல்லது 600 ஆண்டுகள் என்று இயேசு கூறினாரா?

கூட்டத்திலிருந்து ஒருவர் பதில் கூறுகிறார்: இயேசு எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை, ஆனால், தம்முடைய சீடர்கள், அந்த தேற்றரவாளன் வரும்வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார், அதன் பின்பு தான் "நீங்கள் எனக்கு சாட்சிகளாக ஊழியம் செய்யலாம்" என்று இயேசு கூறியுள்ளார்.

சகோதரர் ஜான்சன்: ஆக, தம்முடைய சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தேற்றரவாளன் வருவார் என்பது தெளிவு. அடுத்த கேள்வி: இயேசு கூறியபடி அந்த தேற்றரவாளன் வந்தாரா? இல்லையா?

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று பதில் கூறுகிறார்:

இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு பல சந்தர்பங்களில் தன்னை உயிரோடு இருப்பவராக காண்பித்து, 40 நாட்கள் அவர்களோடு சம்பாஷித்தார், அதன் பிறகு பரமேரிச் சென்றார், பரிசுத்த ஆவியாவர் வரும்வரை எருசலேமில் காத்திருங்கள் என்றார். அதே போல, சீடர்கள் காத்திருந்தார்கள், 10 நாட்கள் கழித்து பரிசுத்த ஆவியானவர் வந்தார். அதன் பின்பு சீடர்கள் ஊழியம் செய்தார்கள். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.

சகோதரர் ஜான்சன்: ஆக, இயேசு தனக்கு பின்பு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று சொல்லவில்லை, மற்றும் அவர் வருவார் என்றுச் சொன்னவர் "பரிசுத்த ஆவியானவரைத் தான்". பரிசுத்த ஆவியானவரும் சில நாட்களுக்குள்ளேயே வந்தார். இப்படி இருக்கும் போது "தேற்றரவாளன்" என்று இயேசு குறிப்பிட்டது "முஹம்மதுவைத் தான்" என்று இஸ்லாமியர்கள் சொல்வது எல்லாம் சுத்தப் பொய்யாகும். நம்முடைய வேதத்தில் உள்ள விவரங்களை திருத்திச் சொல்லி, நம்மையே வஞ்சிக்க இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் .

இரண்டாவதாக, இன்னொரு கோணத்தில் "முஹம்மது கடைசி நபியா?" என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து காண்போம்.

இயேசு இரட்சிப்பை (அ)  தம் மார்க்கத்தை அறைகுறையாக விட்டுச் சென்றாரா? அல்லது முழுமைப்படுத்திச் சென்றாரா? அதாவது இயேசு "இரட்சிப்பை" முழுவதுமாக முடித்துச் சென்றாரா? அல்லது "நான் பாதியை முடித்தேன், எனக்கு பின்பு ஒரு தீர்க்கதரிசி வருவார் அவர் மீதியை முடிப்பார்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரா?

புதிய ஏற்பாட்டை தன் தாய் மொழியில் அல்லது தனக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர் இதற்கு சுலபமாக பதிலைக் கூறுவார்.

நீங்கள் எல்லாரும் புதிய ஏற்பாட்டை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால், இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று "இயேசு சிலுவையில் மரிக்கும் போது 'முடிந்தது' என்றுச் சொல்லி மரித்தார், அதாவது தாம் எதற்காக வந்தாரோ அதை முடித்துவிட்டேன், எதையும் மீதி வைக்கவில்லை என்றுச் சொல்லி மரித்தார், ஆகையால் இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்தியே சென்றார்" என்று கூறினார்.

சகோதரர் ஜான்சன்: சகோதரரே சரியாகச் சொன்னீர்கள். இது ஒரு முக்கியமான விவரம். அடுத்த விவரத்தை யார் கூறப்போகிறீர்கள்?

இன்னொரு சகோதரர் எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "இயேசு நமக்காக மரித்தது மாத்திரமல்ல, மூன்றாம் நாளில் தாம் சொன்னதுபோலவே உயிர்த்தெழுந்தார். இதோடு நின்றுவிடாமல், தமக்கு அடுத்து "எப்படி ஊழியம் செய்யவேண்டும்?" போன்ற விவரங்களை தம்முடைய சீடர்களுக்கு கூறிவிட்டுச் சென்றார். அவர் பரமேரிச்சென்ற போது, தூதர்கள் "இயேசு எப்படி சென்றாரோ அதே போல வருவார்" என்றுச் சொல்லி "மறுபடியும் இயேசு வருவார்" என்பதை உறுதிப்படுத்தினார்கள், இன்னொரு தீர்க்கதரிசி முஹம்மது என்ற பெயரில் வருவார் அவருக்காக காத்திருங்கள் என்று தேவதூதர்கள் கூறவில்லை. ஆகையால், இயேசு தம்முடைய இரட்சிப்பை அறைகுறையாக விட்டுவிட்டுச் செல்லவில்லை, அதனை முழுமைப்படுத்திச் சென்றார்."

சகோதரர் ஜான்சன்: இதுவும் ஒரு சரியான பதில் தான். மேலும் யாராவது எதையாவது கூறவிரும்புகிறீர்களா?

ஒரு சகோதரி எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "நாம் அப்போஸ்தலர் நடபடிகளை படித்தால், அதில் இயேசு தம் சீடர்கள் ஊழியம் செய்யும் போது எப்படி தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார், எவ்விதம் அற்புதங்கள் அடையாளங்கள் மூலமாக, தம்முடைய இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை பார்க்கலாம்". இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற ஒரு கோட்பாடு அல்லது எதிர்பார்ப்பு வேண்டும் என்று பைபிள் எங்கும் கூறவில்லை. மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எல்லாவற்றையும் முத்தரித்து விடுகின்றது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள், இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது. ஆக, இன்னொரு தீர்க்கதரிசி இல்லை.. வரவேண்டிய அவசியமும் இல்லை. இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார், இன்னொருவர் வந்து இடையில் நுழைவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் பைபிள் அனுமதிக்கவில்லை, முக்கியமாக "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற நூல் அனுமதிப்பதில்லை.

சகோதரர் ஜான்சன்:

நீங்கள் அனைவரும் கூறிய விவரங்கள் சரியான விவரங்களாகும். இதனை தொகுத்து நான் இப்போது சுருக்கமாக கூறுகிறேன்.

இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், இஸ்லாமியர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், "இயேசு தம் மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார்", அதனை அறைகுறையாக விட்டுச் செல்லவில்லை. இதனை நாம் புதிய ஏற்பாட்டில், கீழ்கண்ட விவரங்களை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்.

1) இயேசுவின் சிலுவை மரணம்

2) அவரது உயிர்த்தெழுதல்

3) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தமது சீடர்களுடன் அவர் பகிர்ந்துக்கொண்ட விவரங்கள்

4) தம் சீடர்கள் உலகமனைத்திற்கும் நற்செய்தி கூறுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவருக்காக எருசலேமில் காத்திருக்கும் படி இயேசு கூறிய கட்டளை. இயேசு கூறியபடியே பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வருதல்

5) அதன் பிறகு, அப்போஸ்தலர்கள் தம் ஊழியத்தை செய்தல், சீடர்கள் மூலமாக இயேசு அற்புதங்கள் செய்து அந்த ஊழியத்தை ஆசீர்வதித்தல்.

6) கடைசியாக, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உலகத்தின் முடிவு, மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை, கடைசி நியாயத்தீர்ப்பு போன்றவிவரங்களை தீர்க்கதரிசனங்களாக இயேசு கூறுதல்.

இந்த மேற்கண்ட அனைத்து விவரங்களை நாம் கூர்ந்து கவனித்தால், இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார் என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். இதனை அறிய பெரிய பட்டப்படிப்போ, பல ஆண்டுகால பைபிள் கல்லூரி படிப்போ தேவையில்லை. புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை தனக்கு புரியும் மொழியில் படிக்கும் எந்த ஒரு சராசரி மனிதனும் (முஸ்லிமும்) புரிந்துக்கொள்வான்.

இப்போது நாம் இரண்டு விவரங்களைக் கண்டோம்:

முதலாவது, இயேசு தமக்கு பிறகு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று கூறவில்லை, அதற்கு பதிலாக‌ அவர் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று கூறினார். பரிசுத்த ஆவியானவரும் அவர் கூறியபடியே வந்தார். இரண்டாவதாக, இயேசு தம் இரட்சிப்பை முழுவதுமாக 100 சதவிகிதம் முழுமைப்படுத்தியே சென்றார்.

எனவே, புதிய ஏற்பாட்டின் படி:

1) முஹம்மது என்ற பெயரில் ஒருவர் வருவார் என்று புதிய ஏற்பாடு கூறவில்லை, இயேசுவும் கூறவில்லை.

2) புதிய ஏற்பாட்டில் முஹம்மது பற்றி கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினால் அது மிகப்பெரிய பொய்யாகும். கிறிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தான் செய்யும் சூழ்ச்சியாகும்.

3) இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி உலக மக்களை வழிநடத்த அவசியமில்லை.

4) நம்முடைய தேவன் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி முஹம்மது அல்ல.

5) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பவேண்டிய அவசியமும் இல்லை. கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பினால் தங்கள் இரட்சிப்பை இழந்துவிடுவார்கள்.

எனவே அருமை சகோதர சகோதரிகளே, முஹம்மது கடைசி தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறினால் அது "பொய்" என்பதை அறியுங்கள். உங்கள் பைபிள் முஹம்மது பற்றி கூறுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறினால், "நம்முடைய தாய் மொழியில் பைபிளை படிக்கும் நம்மிடமே வந்து நம்மை வஞ்சிக்க" அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை அறியுங்கள். தன்னுடைய வேதத்தை (குர்‍ஆனை) தன் தாய் மொழியில் படிக்க அவ்வளவாக விரும்பாத இஸ்லாமியர்கள் நம் தாய் மொழியில் நாம் படிக்கும் வேதத்தை நமக்கு கற்றுக்கொடுக்க‌ வருவது என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை கவனியுங்கள்.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 3: என் பெயர் சாமுவேல், என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் படி "முஹம்மது ஒரு தீர்க்கதரிசி" இல்லை என்பது உண்மை, அப்படியானால், புதிய ஏற்பாடு முஹம்மதுவை எப்படி காண்கிறது? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டின் படி நாம் "முஹம்மதுவை" எப்படி அழைக்கலாம் அல்லது புதிய ஏற்பாட்டின் படி "அவர் யார்?".

சகோதரர் ஜான்சன்:

மிகவும் அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு விடையை காண்பதற்கு முன்பாக, நான் உங்களிடம் ஒரு 100 ரூபாய் நோட்டை தருகிறேன், அதனை உங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்து நான் உங்களிடம் கொடுத்த நோட்டு நல்ல நோட்டா? என்பதை பார்த்துச் சொல்லுங்கள்.

[சகோதரர் ஜான்சன் ஒரு 100 ரூபாய் நோட்டை கேள்வி கேட்டவரிடம் தருகிறார், அதனை அவர் வாங்கி தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிடுகிறார், இப்போது சகோதரர் ஜான்ச‌ன் ம‌றுப‌டியும் பேசுகிறார்..]

ஜான்சன்: நான் கொடுத்த நோட்டுடன் உங்கள் நோட்டை ஒப்பிட்டீர்களா?

சாமுவேல்: ஆம் நான் ஒப்பிட்டேன்.

ஜான்சன்: சரி, முடிவு என்ன?

சாமுவேல்: நீங்கள் கொடுத்த நோட்டு, இந்திய அரசாங்கம் அச்சடித்த நோட்டு அல்ல.

ஜான்சன்: சரி, இதனை எப்படி கண்டுபிடிச்சீங்க?

சாமுவேல்: என்னிடமுள்ள நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஆகையால் அது அரசாங்கம் அச்சடித்த நோட்டு இல்லை என்பதை கண்டுபிடித்தேன்.

ஜான்சன்: சரி, அது நல்ல நோட்டு இல்லை என்றுச் சொல்லிவிட்டீர்கள், அதற்கு இன்னொரு பெயர் என்ன?

சாமுவேல்: ம்ம்ம்ம்ம் நல்ல நோட்டு இல்லையானால், அதற்கு பெயர் "கள்ள நோட்டு"...

ஜான்சன்: சரியாக பதில் சொன்னீங்க. இப்போது பைபிளின்படி முஹம்மது "தீர்க்கதரிசி" இல்லை என்று நிருபணமாகிவிட்டதால், அவரை பைபிள் எப்படி அழைக்கும்?

சாமுவேல்: ம்ம்ம்ம்.... "கள்ளத் தீர்க்கதரிசி" என்று பைபிள் அழைக்கும்... 

ஜான்சன்: சரியாகச் சொன்னீர்கள். பைபிளின் படி முஹம்மது ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" ஆவார்.

இயேசு தமக்கு பின்பு அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று எச்சரித்துள்ளார். அவர்கள் கூடுமானவரை கிறிஸ்தவர்களையும் ஏமாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார். புதிய ஏற்பாடு அனேக இடங்களில் இப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள், அவர்களை விசுவாசிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறது. 

முதலாவதாக, பைபிள் "முஹம்மதுவை" கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கிறது: 

முதலாவது புதிய ஏற்பாடு முஹம்மதுவை "கள்ளத் தீர்க்கதரிசி" அல்லது "பொய் தீர்க்கதரிசி" என்று பட்டம் சூட்டுகிறது என்பதை எல்லா கிறிஸ்தவர்களும் மனதில் வைக்கவேண்டும்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். (2 கொரிந்தியர் 11:13-15)

இரண்டாவதாக, பைபிள் அவரை "பொய்யர்" என்று கூறுகிறது:

பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்று வேதம் கூறுகிறது. முஹம்மது "பிதாவையும் குமாரனையும் மறுதலித்தார்", ஆகையால், இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், பைபிள் முஹம்மதுவை "பொய்யன்" என்ற பெயரையும் சூட்டுகிறது.

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.  ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.  நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.  உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன் . (1 யோவான் 2: 22-26)

மூன்றாவதாக, பைபிள் அவரை "சபிக்கப்பட்டவன்" என்று அழைக்கிறது

கீழ்கண்ட வசனங்களின் படி, பைபிள் கூறும் நற்செய்தியை அல்லாமல் "வேறு ஒரு நற்செய்தியை", "வேறு ஒரு இயேசுவை" மனிதர்களுக்கு போதிக்கிறவன், அவன் மனிதனாக இருந்தாலும் சரி, வானத்திலிருந்து வருகின்ற தூதனாக இருந்தாலும், "அவன் சபிக்கப்பட்டவன்" என்று பைபிள் கூறுகிறது.

 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;  வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் . கலாத்தியர் 1:6-9.

ஆக, புதிய ஏற்பாட்டின் படி முஹம்மது "ஒரு பொய்யர்", "கள்ள தீர்க்கதரிசி" மற்றும் "சபிக்கப்பட்டவர்" ஆவார். இஸ்லாமியர்களின் மனம் புண்படும் என்று நாம் இவைகளை மறைத்துவைத்தால், சாத்தான் நம்மை வஞ்சிக்க நாமே அவனுக்கு வழி வகுத்து கொடுக்கிறவர்களாக கர்த்தரின் பார்வையில் காணப்படுவோம்.

முஸ்லிம்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, நம்முடைய வேதம் கூறுவதை நாம் நம்பவேண்டாமா? "இயேசு தேவகுமாரன் இல்லை" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் துக்கப்படுவார்களே என்று அவர்கள் நினைத்து, நம்மிடம் "இயேசு இறைவன் தான்" என்று கூறுகிறார்களா என்ன? இல்லையல்லவா? அதே போலத்தான், சத்தியம் சத்தியமே. அதனை சொல்வது நம்முடைய கடமை.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 4: என் பெயர் எஸ்தர். எனக்கு ஒரு இஸ்லாமிய தோழி இருக்கிறாள், அவள் என்னிடம் "முஸ்லிம்களாகிய நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம், அதே போல நீங்கள் ஏன் முஹம்மதுவை மதிப்பதில்லை, கவுரப்படுத்துவதில்லை" என்று கேட்கிறாள்? இதற்கு நான் எப்படி பதில் கூறுவது?

சகோதரர் ஜான்சன்: உங்கள் தோழியிடம், "மதிப்பு, மரியாதை, கவுரவம்" என்றால் என்ன? என்று கேளுங்கள்.

இயேசுவை அவர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொல்வது "மிகப் பெரிய வஞ்சகமாகும்". "ஒருவரை நாங்கள் மதிக்கிறோம்" என்பது எப்படி வஞ்சகமாகும்? என்ற கேள்வி முஸ்லிம்களுக்கு எழலாம், இதனை நான் இப்போது விளக்குகிறேன்.

இயேசுவிற்கு கவுரவம் எது?

முதலாவதாக, ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றுச் சொன்னால், அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை மதிக்கவேண்டும். அதாவது, இயேசுவை இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொன்னால், "இயேசு இறைக்குமாரனாக இருக்கிறார், அந்த ஸ்தானத்தில் அவரை மதித்தால்" அது உண்மையாக கவுரமாகும். இயேசு தேவகுமாரன் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகள் பொய் என்றுச் சொல்லி குற்றப்படுத்திவிட்டு, கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக, "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்று இஸ்லாமியர்கள் கூறுவது எப்படி உண்மையான கவுரமாகும்? இது வஞ்சகம் அல்லவா?

முஹம்மதுவிற்கு கவுரவம் எது?

இன்னொரு உதாரணத்தை இஸ்லாமிய நிலையிலிருந்து பார்ப்போம். அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் கீழ்கண்டவாறு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், இதனை இஸ்லாமியர்கள் எப்படி காண்பார்கள்? " எங்கள் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எவ்வளவாக மதிக்கிறார்கள் பார்த்தீர்களா?" என்று சந்தோஷப்படுவார்களா? அல்லது வஞ்சகம் என்பார்களா?

1) கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உங்கள் முஹம்மதுவை உங்களைவிட அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

2) முஹம்மது ஒரு நல்ல மனிதர், நேர்மையானவர்.

3) முஹம்மது ஒரு இறைத்தூதர் அல்ல, அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே.

4) முஹம்மதுவை ஜிப்ராயீல் தூதர் சந்திக்கவில்லை.

5) முஹம்மதுவிற்கு இறைவனிடமிருந்து தூதுகள் வரவில்லை.

6) முஹம்மதுவிற்கு குர்‍ஆன் இறங்கியது என்று இஸ்லாமியர்கள் சொல்வது சுத்தப் பொய்யாகும், முஹம்மதுவிற்கு அப்படிப்பட்ட வெளிப்பாடு ஒன்றும் வரவில்லை.

7) முஹம்மதுவை நாங்கள் அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

மேற்கண்ட விதமாக கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பற்றி கூறி, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு அதிகமாக முஹம்மதுவை மதிக்கிறோம் என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று நம்பி, பிறகு அவரை நாங்கள் மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் அது உண்மையான கவுரமாக இருக்குமே ஒழிய, முஹம்மதுவின் "நிலையை" அதாவது அவரது நபித்துவத்தை மறுத்துவிட்டு, குர்‍ஆனை மறுத்துவிட்டு, அவரை மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால், அது எப்படி மரியாதை செலுத்துவதாகும்? என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

இதே போலத்தான், இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்துவிட்டு, அவர் உண்மையாக யாராக இருந்தார் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகளை உள்ளடக்கிய‌ பைபிளை குற்றம் கூறிவிட்டு, பலவீனமான கிறிஸ்தவர்களிடம் வந்து "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்றுச் சொல்வது எப்படி உண்மையான மரியாதையாக கருதப்படும்?

கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை...எச்சரிக்கை...

சாத்தனுடைய சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்தவர்களாக, இப்படிப்பட்ட இஸ்லாமிய வாதங்களை நம்பவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன்.

உங்களுடைய நித்தியம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இனி எந்த இஸ்லாமியராவது , "நாங்கள் உங்கள் இயேசுவையும், அவரது தாயாகிய மரியாளையும், உங்களை விட அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று உங்களிடம் கூறினால். அதற்கு நீங்களும், "ஆமாம், நாங்களும் உங்கள் முஹம்மதுவை மதிக்கிறோம், அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால், இறைத்தூதர் அல்ல, அவருக்கு குர்‍ஆன் இறங்கவில்லை, ஆனாலும்,அவர் நல்ல மனிதர், நாங்கள் அவரை அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று  சொல்லிப் பாருங்கள். மரியாதை என்றால் என்ன கவுரவம் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

இயேசுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால்,  பைபிள் "அவரை" எப்படி அடையாளம் காட்டுகிறதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.

முஹம்மதுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால், குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவரை எவ்விதம் அடையாளம் காட்டுகின்றதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.

இவ்விருவருடைய மூல ஆதாரங்களை மறுதலித்துவிட்டு, தங்கள் சொந்த நூல்களின் படி அவரை கவுரப்படுத்த முயன்றால், அது "வஞ்சகமாகும்". இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன், "கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை "முஹம்மது நபி (Prophet Muhamamd)" என்ற நிலையில் மதிப்பதில்லை, முஹம்மதுவை "திரு. முஹம்மது (Mr. Muhamamd)" என்ற நிலையில் மதிக்கிறோம்" அவ்வளவே.

முடிவுரை:

இந்த பாகத்தில் "புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் (கேள்வி பதில்களாக) கண்டோம், அடுத்த பாகத்தில் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றி இன்னும் மேலதிக விவரங்களைக் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம்... „

தமிழ் கிறிஸ்தவ உலகமே... கடைசி காலங்களில் அனேக வஞ்சகர்கள் எழும்பி, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது... இஸ்லாமியர்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... ஒருவேளை இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ போதகராக இருப்பீர்களானால், "உங்கள் மீது உங்கள் ஆடுகள் பற்றிய கணக்கு கேட்கப்படும் என்பதையும், ஆடுகளை மேய்ப்பதில், அவர்களை சரியான ஞானத்தில் நடத்துவதும் உங்கள் கடமை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்". இஸ்லாம் பற்றி உங்கள் சபை விசுவாசிகளுக்கு எச்சரிக்கையிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் கேள்விகள் தொடரும்..

 

http://isakoran.blogspot.com/2011/10/2_16.html

October 14, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2



பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2


(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

இப்னு ஹஜ்ம் (Ibn Hazm) தம்முடைய புத்தகத்தில் தொகுப்பு 8, பாகம் 2, பக்கங்கள் 235 மற்றும் 236ல் கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்:

"கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனமும், மார்பக பாலூட்டுதல் வசனமும் ஆயிஷா அவர்களிடம் இருந்த குர்‍ஆன் பிரதியில் இருந்தது. முஹம்மது மரித்த சமயத்தில், மக்கள் அவருடைய அடக்கத்திற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டு மிருகம் வீட்டில் நுழைந்து அந்த குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது ".

"The verses of stoning and breast feeding were in the possession of A'isha in a (Qur'anic) copy. When Muhammad died and people became busy in the burial preparations, a domesticated animal entered in and ate it ."

ஆயிஷா அவர்களும் தம்முடைய வசத்தில் இருந்த வசனங்கள் எவைகள் என்பதை அறிந்திருந்தார்கள். ஜமக் ஷாரி(Zamakh-Shari) என்பவரின் "al-Kash-shaf" என்ற புத்தகத்தை, பரிசீலித்து சீர்படுத்திய "முஸ்தபா ஹுசைன்" என்பவரும் இந்த விவரத்தை தம்முடைய புத்தகத்தின் பாகம் 3, பக்கம் 518ல் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் போது, "ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்ட நிகழ்ச்சியை அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள்" என்றும் அவர்களில் "அப்துல்லாஹ் இப்னு அபூ பக்கர் ம‌ற்றும் ஆயிஷா" அவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியை "Dar-al-Qutni", "al-Bazzar" மற்றும் "al Tabarani" போன்றவர்கள் முஹம்மது இப்னு இஷாக் என்பவரிடமிருந்து கேட்டதாக கூறியுள்ளார்கள். மேலும் முஹம்மது இப்னு இஷாக் என்பவர் இந்நிகழ்ச்சியை அப்துல்லாஹ்விடமிருந்து கேட்டதாகவும், அப்துல்லாஹ் இதனை ஆயிஷாவிடமிருந்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பேராசிரியர் முஸ்தபா "இந்த குர்‍ஆன் வசனங்களை வீட்டு மிருகம் சாப்பிட்ட நிகழ்ச்சிக்கு முன்பே இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருக்ககூடும்" என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட விவரங்களை நாம் படிக்கும்போது, சில கேள்விகள் நமக்கு எழுகின்றன:

1) "அந்த கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏன் உமர் அவர்கள் அதனை குர்‍ஆனில் சேர்க்கவேண்டும் என்று மறுபடியும் கொண்டுவருகிறார்?" (முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1).

2) இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், முஹம்மது மரித்துவிட்ட பிறகும் மக்கள் ஏன் "மார்பக பாலூட்டுதல் குர்‍ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டு இருந்தார்கள்"?

3) இந்த பாலூட்டுதல் வசனங்களை மக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக ஓதிக்கொண்டே இருக்கும் போது முஹம்மது மரித்துவிட்டதால், அவரது மரணத்திற்கு பின்பு இவ்வசனங்களை "அதிகார பூர்வமாக இரத்து செய்தவர்கள் யார்?". ஒருவேளை அந்த வீட்டு மிருகம் அவ்வசனங்களை இரத்து செய்துவிட்டதா?

இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதற்கு, முஹம்மதுவின் தோழர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஆயிஷா அவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

முடிவுரை: முதல் பாகத்தில் நாம் கண்டது போல, நூற்றுக்கும் அதிகமான குர்‍ஆன் வசனங்கள் தொலைந்துவிட்டன. இந்த இரண்டாம் பாகத்தில் நாம் கண்டோம், ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது. குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திய வசனங்கள் அப்படியே நம்மிடம் உள்ளது என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது பொய். முஹம்மதுவின் தோழர்கள், மற்றும் அவரின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சியின் படி நம்மிடம் உள்ள குர்‍ஆன் "பாதுகாக்கப்பட்ட ஒரு வேதமல்ல" என்பது தெளிவாக புரிகிறது.

இப்னு உமர் அல்கத்தாப்பின் கூற்றுப்படி, எந்த ஒரு இஸ்லாமியரும் "தன்னிடம் முழு குர்‍ஆன் உள்ளது என்று கூறக்கூடாது", ஏனென்றால், மூல குர்‍ஆனில் உள்ள அனேக வசனங்கள் காணாமல் போய் உள்ளன.

இன்னும் "தொலைந்த குர்‍ஆன் வசனங்கள்" தொடரும்....

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.


 



October 5, 2011

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

1.கல்லை வணங்குதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் "நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்" என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.

2.கும்பாபிஷேகம்
யாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது " யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்" இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் "நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே". கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.

3.பூசாரிமார்கள்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 "ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்." இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.

4.கற்ப கிரக பிரவேசம்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 "ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக." என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.

5.பூஜையில் மணி அடித்தல்
பூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 "அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்."

6.பலி செலுத்துதல்
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 "ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்" யாத்திராகமம்:24:5,8 "கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்"

7.நந்தி வழிபாடு
இன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

8.குத்துவிளக்கு
ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.

9.புனித நீராடல்
இந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

10.மாதவிலக்கு முறைமை
சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை "தூரமானாள் உள்" என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

 

 

http://www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html?showComment=1316604656119#comment-c859660790133803902