அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 29, 2009

கை வீசம்மா கை வீசு, பாகிஸ்தான் போகலாம் கை வீசு, தீவிரவாதி ஆகலாம் கை வீசு,


200 சிறுவர்களை தற்கொலை தீவிரவாதிகளாக மாற்றினர், இவர்கள் மீட்கப்பட்டார்கள்

ஆறிலிருந்து பதிமூன்று வயது வரை இருக்கும் 200 சிறுவர்களை தற்கொலைப் படைக்காக இரகசிய இடத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டு இருந்தது, இவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை மீட்டது.  இந்த சிறுவர்கள் பழைய நிலைக்கு திரும்ப மருத்துவ உதவி செய்யப்படுகிறது.

பஷீர் பிலர் என்ற பாகிஸ்தான் மந்திரி கூறும் போது:

"இந்த சிறுவர்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டார்கள் என்றால், இவர்கள் இப்போது தங்கள் பெற்றோர்களை கொல்லவும் தயாராக இருக்கிறார்கள்"


கை வீசம்மா கை வீசு,
பாகிஸ்தான் போகலாம் கை வீசு,

தீவிரவாதி ஆகலாம் கை வீசு,
துப்பாக்கி வாங்கலாம்   கை வீசு,
குண்டு வாங்கலாம் கை வீசு
மனிதர்களை சாகடிக்கலாம் கை வீசு
நாமும் சாகலாம் கை வீசு

கை வீசம்மா கை வீசு,
பாகிஸ்தான் போகலாம் கை வீசு.

Source:  http://in.news.yahoo.com/43/20090728/876/twl-200-boys-groomed-as-suicide-bombers.html

200 boys groomed as suicide bombers rescued in Pakistan
 
Tue, Jul 28 04:37 AM

Peshawar, July 28 (IANS) Two-hundred boys, who were being trained at a secret location to carry out suicide attacks, were rescued by the security forces in northwest Pakistan, a media report said Monday.

The boys, aged from six to 13 years, were rescued in Mardan in North West Frontier Province (NWFP), Geo TV said.

Meanwhile, the children were shifted to a rehabilitation centre where they will receive psychiatric treatment.

'These children have been brainwashed in a way that now they even want to kill their own parents,' Bashir Bilour, a minister in the provincial government said, adding that the children were not administered any drugs during training.

Source: http://in.news.yahoo.com/43/20090728/876/twl-200-boys-groomed-as-suicide-bombers.html



July 23, 2009

இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகள் உண்டா?


இயேசுவின் சில கட்டளைகள்



இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்


தொகுத்தவர்: தாவுத் ஜபால்


இஸ்லாமிய நண்பர்கள் இப்படியாக கூறுவார்கள், அதாவது "இயேசு ஒரு நபியாக இருந்தார் மற்றும் அவர் இறைவனின் செய்தியையும் கட்டளைகளையும் கொடுத்தார். இன்ஜிலில் இருந்த இயேசுவின் போதனைகள் கட்டளைக‌ள் அனைத்தின் சாராம்சம், அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்‍ஆனில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது, எனவே குர்‍ஆனை நாங்கள் படித்தால் போதும் என்பார்கள். பைபிளில் உள்ள‌ இன்ஜிலில் சொல்லப்பட்ட‌ இயேசுவின் கட்டளைகளை படிக்கும் போது, அவைகளின் மேன்மை "இயேசுவின் கட்டளைகள் உள்ளன" என்றுச் சொல்லும் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்பதை அறியலாம்.


இயேசுவை ஒரு நபி என்றுச் சொல்லும் எல்லா இஸ்லாமியர்களும் அவரது வார்த்தைகளை படிக்கவேண்டும். இயேசுவின் வசனங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்த உலகம் வாழுவதற்கு மிகவும் இனிதான இடமாக மாறும். சில இஸ்லாமியர்கள் இயேசு எப்படி தொழுதுக்கொண்டாரோ அதன் படி தொழுதுக்கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இதனை கீழ் கண்ட பகுதிகளில் 6:5-8 மற்றும் 6:9-13ல் காணலாம்.


கீழே தரப்பட்டுள்ள கட்டளைகள் அனைத்தும் மத்தேயு எழுதின சுவிசேஷமாகிய இன்ஜிலிலிருந்து எடுக்கப்பட்டது, அவைகளுக்கு அதிகார மற்றும் வசன எண்களும் தரப்பட்டுள்ளது. சில நேரங்களில் இயேசு தன்னை பின்பற்றும் சில சீடர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகமான பொது ஜனங்களுக்கு கொடுத்த கட்டளைகளும் தரப்பட்டுள்ளது, அவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  • என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (5:11-12)

  • நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (5:17)

  • இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (5:16)

  • ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (5:23-24)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், …... பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….; எருசலேமின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், …... உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (5-34-37)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. (5:39)

  • உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:42)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (5:44).

  • ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (5:48)

  • மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.(6:1,3)

  • அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (6:5-8)

  • நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (6:9-13)

  • நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (6:16-18)

  • பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (6:19-21)

  • ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (6:25)

  • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். (6:33-34)

  • நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (7:1-2)

  • கேளுங்கள், … தேடுங்கள், … தட்டுங்கள், … உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (7:7:11)

  • ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். (7:12)

  • இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:13-14)

  • கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? … பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை … ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். … நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (7:15-27)

  • அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (8:21)

  • பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;… (9:13)

  • ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.(9:38)

  • வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (11:28)

  • நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (11:29-30)

  • ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.. …. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (13:18-23)

  • வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (13:24-30)

  • …ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (18:21-22)

  • இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார். (19:14-15)

  • …அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (22:15-21)

  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். (24:4-5)

  • யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. (24:6)

  • ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (24:26-27)

  • உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். (24:42-44)

ஆங்கில மூலம்: Some of the Commands of Jesus, the Prophet Authoritatively recorded in the Injil



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/dawud/commands.html

 


 

பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை


பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை



ஒரு கிறிஸ்தவ பார்வை



செப்டம்பர் 11ம் தேதியன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, வன்முறை மற்றும் மதம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இஸ்லாமின் பெயரில் நடக்கும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இறைவனின் பெயரில் நடக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை சம்பவங்களைக் காட்டி இஸ்லாமியர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனை கிறிஸ்தவர்களும் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடும் சிலரும் கண்டிக்கும் போது, உடனே இஸ்லாமியர்கள் "பைபிளில் வன்முறை உள்ளது, முக்கியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளது , சபையின் சரித்திரங்களில் கூட வன்முறை இருக்கிறது, எனவே பைபிளை விட்டுவிட்டு குர்‍ஆனின் வன்முறையை மட்டும் அதிகப்படுத்திக் காட்டுவது சரியானது அல்ல என்று கூறுகிறார்கள்.



ஒரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், பரீத் ஜகரியா என்பவர், நியூஸ் வீக் (News Week) என்ற பத்திரிக்கையில் "அவர்கள் நம்மை ஏன் எதிர்க்கின்றனர், இஸ்லாமிய வன்முறையின் வேர் எது? இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கீழ் கண்ட விதமாக எழுதுகிறார்.


"சரித்திர ஆசிரியர் பால் ஜான்சன் என்பவர், 'இஸ்லாம் ஒரு கொடூரமான தீவிர வன்முறையைக் கொண்ட மற்றும் சகிப்புத் தன்மையற்ற மதமாக உள்ளது' என கூறுகிறார். ஆனால், இதர அறிஞர்கள் இதனை மறுத்து, 'இஸ்லாம் பாமர மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறது மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு தடைவிதிக்கிறது' என்றுச் சொல்கிறார்கள். இப்போது "உண்மையான இஸ்லாம்" எது என்று தேடுவதினாலேயோ அல்லது குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள் காட்டுவதினாலேயோ எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. குர்‍ஆன் என்பது பெரிய புத்தகம், குழப்பம் தரக்கூடிய கவிதை நடையில் உள்ள புத்தகம் மற்றும் பல முரண்பாடுகளைக் கொண்ட (பைபிளைப் போல) ஒரு புத்தகமாகும்". குர்‍ஆனில் நீங்கள் யுத்தங்களை எதிர்க்கக்கூடிய வசனங்களை காணமுடியும், மற்றும் சண்டைப்போடுவதை தூண்டும் வசனங்களையும் காணமுடியும். இன்னும் சகிப்புத்தன்மை பற்றிய அழகான வசனங்களையும் காணமுடியும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்கும் பற்றி கடுமையான வசனங்களையும் காணமுடியும்.


குர்‍ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் வசனங்களை வைத்து, இஸ்லாமை அல்ல, இதற்கு பதிலாக,இந்த வசனங்களை மேற்கோள் காட்டக்கூடிய நபரைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மதமும் அனேக நல்ல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே போல, மனித இனத்திற்கு எதிரான விவரங்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சபையின் மிக நீண்ட சரித்திர பின்னணியைக் கண்டால், அதில் யூதர்களுக்கு எதிரான சண்டைகளை அது ஆதரித்துள்ளது, பல அடக்குமுறையை அது ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் மனித உரிமைகளையும், சமுதாயத்திற்கு நன்மை செய்வதையும் அது ஆதரித்துள்ளது."



மேலே கூறப்பட்ட விமர்சனத்திற்கு கிறிஸ்தவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்? இறைவனின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்/இதர தீவிரவாதிகள் பின்பற்றும் வேதத்திற்கும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கும் வித்தியாசமே இல்லையா? நம்முடைய சபையின் இருண்ட சரித்திரத்தைப் பற்றியும், பழைய ஏற்பாட்டில் சில உவமைகளாகவும் படங்களாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நாம் எப்படி பதில் தரப்போகிறோம்? நம்முடைய பாரம்பரிய சபை சரித்திரம் அதிக வெளிச்சத்தில் இல்லாமல் காணப்படுகிறதே! இதற்கு நம்முடைய பதில் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளின் விளைவு தான் இந்த கட்டுரையாகும். நேரமின்மையால் நான் ஒவ்வொரு தலைப்பையும் அதிகமாக விவரிக்கப்போவதில்லை, ஆனால், மேலே கண்ட பிரச்சனைகளை நாம் புரிந்துக்கொள்ள இந்த விவரங்கள் நமக்கு உதவியளிக்கும் என்று நான் நம்புகிறேன்.



1. கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த‌ குர்‍ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய‌ முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்‍ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும், 1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும் 2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).


ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல‌, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!



2. இப்போது நாம் பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.


ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் த‌ன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



3. இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், கானானிய சில பட்டணங்களை அழிக்கும் படி தேவன் கொடுத்த கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் தேவன் இஸ்ரவேல் நாடானது, மற்ற நாடுகள் மீது தானாகச் சென்று போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, தற்காப்பிற்காகவோ, அல்லது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய இஸ்ரவேலின் தேவன் பற்றிய நம்பிக்கையை பரப்புவதற்காகவோ கூட தேவன் இப்படி மற்றவர்களின் நாடுகளின் மீது வலியச் சென்று சண்டையிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. ஆனால், குர்‍ஆனில் பல பொதுவான வசனங்களை நாம் காணலாம், அதாவது இஸ்லாமின் எதிரிகளை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா மக்களையும் கொல்லும் படியான வசனங்கள் குர்‍ஆனில் உண்டு. முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு அவரை பின்பற்றினவர்கள் தனித்தனியாக பிரிந்துச் சென்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டதும், கொலைகள் செய்துக்கொண்டதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமாகிறது. இஸ்லாமிய சரித்திரத்தில், அன்று முதன் இன்றுவரை தங்கள் எதிரிகளை அழித்து கொல்லும் இஸ்லாமியர்கள் தங்களின் இந்த வன்முறைகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய வசனங்களையே ஆதாரமாக காட்டி வருகின்றனர்.



4. இந்த சிறிய கட்டுரையை இஸ்லாமியர்கள் "உண்மை என்று நம்பும் தங்கள் கோட்பாட்டை" சொல்லி நிறைவு செய்யலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்களை பொருத்தமட்டில், இஸ்லாம் மட்டுமே கடைசியான ஓர் இறைக்கொள்கையுடைய மார்க்கமாகும், இதனால், இஸ்லாம் யூத மற்றும் கிறிஸ்தவத்தை விட உயர்ந்தது என்று நம்புகிறார்கள். மத்திய கிழக்கு நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும், இஸ்லாமிய நாட்டில் நான் வளர்ந்தவன் என்பதாலும், எங்களுக்கு அடிக்கடி கீழ் கண்டவிதமாக கூறுவார்கள். அதாவது, யூத மார்க்கம் என்பது ஒரு ஆரம்ப பள்ளியைப் போன்றது, கிறிஸ்தவ மார்க்கம் என்பது மேல்நிலைப்பள்ளியைப் போன்றது, மற்றும் இஸ்லாம் என்பது பல்கலைக் கழகத்தைப் போன்றது என்று கூறுவார்கள். இந்த எல்லா மார்க்கமும் இறைவனிடமிருந்து வந்தது, ஆனால், ஒவ்வொரு மார்க்கமும் தனக்கு முன்பு இருந்த மார்க்கத்தைவிட சிறந்ததாக விளங்கியது என்று கூறுவார்கள். ஆனால், இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகள் கட்டளைகளை விட எந்த விதத்தில் இஸ்லாம் சிறந்த நற்குணங்களை, கட்டளைகளை கொண்டு விளங்குகிறது? அதாவது இஸ்லாம் வன்முறையை பின்பற்றுகிறது, இது ஒரு வகையில் யூத பாரம்பரியங்களில் காணப்பட்டது போல இருக்கின்றதே! எப்படி இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட சிறந்ததாக இருக்கமுடியும்? இஸ்லாம் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு மேலாக இன்னும் சிறந்த மார்க்கமாக இல்லாமல் போனதுமட்டுமல்ல, இந்த நன்னடத்தையில் இஸ்லாம் இன்னும் கிறிஸ்தவத்திற்கு முன்னால் அனேக நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளது.



தற்காலத்தில் குர்‍ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வன்முறையைப் பற்றி ஒரு சில சந்தேகங்களுக்கு இந்த சிறிய கட்டுரை உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகையும், பைபிளையும் மற்றும் எதையானாலும் காணக்கூடிய கண்ணாடியாக இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையுள்ளது. கடைசியாக, இந்த சிலுவைத் தான் இறைவன் யார் என்று நமக்கு காட்டுகிறது, அவர் எப்படி இருப்பார் என்று காட்டுகிறது, அவர் எப்படி நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை இதே சிலுவைத்தான் நமக்கு காட்டுகிறது.


ஆங்கில மூலம்: Violence in the Bible and the Qur'an - A Christian Perspective



இந்த தலைப்பு சம்மந்தப்பட்ட இதர கட்டுரையை படிக்கவும்: The Goodness of God


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/violence.html

 


 

July 21, 2009

இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை


இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை



ஜேம்ஸ் அர்லண்ட்சன்


ஒரு முஸ்லீம் ஆண் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றான், ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதியில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியருடன் நடந்த‌ நேர்க்காணலை கேட்டது என் நினைவிற்கு வருகிறது. அந்த நேர்க்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இஸ்லாமியரிடம் "நீங்கள் திருமணமானவரா?" என்று பேட்டி எடுப்பவர் கேட்டார். இதற்கு அந்த இஸ்லாமியர் "இஸ்லாம் மிகவும் சகிப்புத்தன்மையும் சுதந்திரமும் கொண்டது, எனவே நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன்" என்று கூறினார். இஸ்லாம் பாகுபாட்டை அல்ல சமத்துவத்தை குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.


உடனே, பேட்டி எடுப்பவர் துரிதமாக "அப்படியானால் ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?" என்று கேட்டார். அந்த இஸ்லாமிய‌ விருந்தாளியின் உற்சாகம் சிறிது குறைந்து போனது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. வானொலி நிகழ்ச்சியாளர் அந்த விருந்தாளியிடம் "உங்களுடைய முதல் கூற்று கொஞ்சம் தவறாக வழிகாட்டுவதாக உள்ளது இல்லையா" என்று துருவி துருவி கேட்டார். அவர்கள் அதைப் பற்றி ஒரிரூ நிமிடங்கள் விவாதித்தார்கள். பிறகு, அந்த விருந்தாளியின் சிரமத்தை உணர்ந்து பேட்டியெடுப்பவர் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.


ஒரு இஸ்லாமிய தளத்தின் கட்டுரைகள், கலப்புத் திருமணம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது:



ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு முஸ்லீம் அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்ய அனுமதியில்லை.


ஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் கீழ் அனுமதி உண்டு.

1) அந்தப் பெண் பெயரள‌வில் அல்லது தத்து எடுக்கப்பட்டதினால் அவள் ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணாக இருக்கக்கூடாது, இதற்கு பதிலாக‌, அவள் ஒரு உண்மையான யூத / கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த‌ பெண்ணாக இருக்கவேண்டும்.


2) அவள் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கோ அல்லது யூதமதத்திற்கோ மாறியிருக்கக் கூடாது.



ஏன் இந்த திருமணம் ஒரு பக்கமாக சாய்ந்து ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏழாம் நூற்றாண்டு அரபி கலாச்சாரம் பதிலளிக்கும். ஒரு பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாமல் இருந்தாலும் சரி, குர்‍ஆன் அப்பெண்ணை மதிப்பதில்லை.

புதிய ஏற்பாடு இதைப்பற்றி என்னச் சொல்லுகிறது?

குர்‍ஆன்


இந்த சூரா 5ன் பின்னணியை அறிய இந்த தொடுப்பில் சென்று படிக்கவும்.

சூரா 5: 5ல் குர்‍ஆன் சொல்கிறது.


… முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. …. (குர்‍ஆன் 5:5)



இந்த வசனத்தில் குறிப்பிட்டபடி ஒரு முஸ்லீம் ஆண், இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் ஒரு யூத, கிறிஸ்தவ மனிதன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. (இந்தக் கட்டுரையில் நான் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.)


இந்த சட்டம் வருவதற்கான காரணம் என்ன?


இஸ்லாம் ஒரு குலத் தலைவன் முறையை (Patriarchal) பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகையால், குடும்ப உறவுகளில் மற்ற எல்லா காரியங்களில் ஆணின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். உதாரணமாக சூரா 4:34 சொல்லுகிறது "ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கலாம்", ஆனால் எந்த வசனத்திலும் மனைவி கணவனை அடிக்கலாம் என்று குர்‍ஆன் சொல்லுவதில்லை - குடும்பத்தில் கணவன் மனைவியை எவ்வளவு துன்புறுத்தி கொடுமைப்படுத்தினாலும் சரி, மனைவிக்கு இந்த உரிமையில்லை.


ஆரம்ப காலத்தில் முஹம்மது யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மரியாதை கொண்டு இருந்தார் என்பது உண்மை தான். ஆனால், பிறகு தன் வாழ்நாட்களில் அவரே அவர்களுக்கு எதிராக மாறினார், இதனை இந்த இரண்டு கட்டுரைகள் (Muhammad and the Jews, Islamic Crusades vs. Christian Crusades) விளக்குகின்றன. எனவே இதன்படி ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தில் ஒரு அரபு மனிதன் தன்னுடைய மனைவி அல்லது மனைவிகள் மீது அதிகாரம் செலுத்தலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் இஸ்லாமிய மனைவி மீது அதிகாரம் செலுத்தக் கூடாது.


முழு மனித இனத்திற்கும் இஸ்லாம் தான் இறுதியான சிறந்த மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது, ஒரு முஸ்லீம் ஆண் தன் அடிபணிந்த மனைவியை மதம் மாற்றலாம். ஒரு முஸ்லீம் தீவிர மதப்பற்றுள்ளவனாக இருந்தால் அவனை எந்த பெண்ணாலும் மாற்ற முடியாது என்று ஒரு வேளை முஹம்மது த‌ன் மனதில் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கும் ஒரு முஸ்லீம் தீவிரமாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டைச் சார்ந்தவனாக இருந்தால் அல்லது தீவிர இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் கூட‌ இது உண்மையே.


எனவே கிறிஸ்தவ பெண்கள் ஒரு முஸ்லீம் மனிதனைத் திருமணம் செய்வது பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் ஆண்களுக்கு கொடுக்கும் அதே உரிமைகளை பெண்களுக்கு கொடுப்பதில்லை. உண்மையில் பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்களே என்று குர்‍ஆன் தெளிவாக கூறுகிறது.


இன்னும் எதையும் மூடி மறைக்காமல் மழுப்பாமல் நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், மற்றும் உண்மையைச் சொல்லவேண்டுமானால், "இஸ்லாம் ஒரு கொடூரமான எஜமான்-அடிமை தத்துவம் கொண்ட" ஒரு மதமாகும். முஸ்லீம் ஆண்கள் தங்கள் பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஏன் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக‌ இல்லை என்பதற்கான முக்கியமான பத்துக் காரணங்களை இந்த தமிழ் கட்டுரை விளக்குகிறது. இயேசு நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த நெறியை காண்பித்து ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகும், ஏன் இஸ்லாமிய சட்டங்கள் மித மிஞ்சியதாகவும் இரத்தம் சிந்தச் செய்யக் கூடியதாகவும் மற்றும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கான பத்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. இறுதியாக பெண்களை ஒடுக்கி அவமானப்படுத்தும் குர்‍ஆனின் பத்து முக்கிய சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு உலகமும் அறிந்திருக்கிறபடி, உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அனேக‌ நிகழ்வுகள் நமக்கு "இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை" என்பதை நிருபிக்கின்றன.


ஆகையால், சாதாரண மனிதனாக இருந்து, பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் கொடுமையானவராகவும், கடினமுள்ளவராகவும், பெண்களை வெறுத்தவராகவும் இருந்த, மரிக்கும் தூதுவராக இருந்த முஹம்மதுவிற்காக (சூரா 3:144, 39:30, 41:4), மக்களை விடுதலையாக்குகிறவராகவும், இறைவனின் அன்பை தருபவராகவும் இருந்த தேவக் குமாரனை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை.


ஒரு கிறிஸ்தவ‌ பெண் ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அவள் இயேசு தான் தேவகுமாரன் என்றும், அவர் தான் மேசியாவாகிய தேவன் என்றும் நம்பிக்கொண்டு இருந்தால், குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களாக உள்ள ஹதீஸ் சட்டங்களின் படி அவள் ஒரு தவறான நம்பிக்கைக் கொண்டு இருப்பவளாகவும் மற்றும் அவள் "காஃபிராக"வும் கருதப்படுவாள்.


மேலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்களா அல்லது முஸ்லீமாக அல்லது மதச்சார்பற்றவர்களாக இருப்பார்களா? இஸ்லாம் உறுதியாக பின்பற்றப்படும் போது அதற்கான பதில் தெளிவாக உள்ளது.


எனவே இது எப்படிப்பட்ட திருமணமாக இருக்கும்? கணவனுக்கும் மனைவிக்கும் இறைவனுக்கும் இடையில் காணப்படும் ஆன்மீக வாழ்வு மற்றும் தொடர்பு எப்படி இருக்கும்?



புதிய ஏற்பாடு


புதிய ஏற்பாடு, திருமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு துணையை தெரிந்தெடுப்பதில் சமமான நிலைப்பாடு கொடுத்து தொடங்குகிறது.


புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 7:39 சொல்லுகிறது, கிறிஸ்தவ பெண் ஒரு கிறிஸ்தவ ஆணையே மணம் முடிக்கவேண்டும் (ஆணும் அப்படியே) (மேலும் 2 கொரிந்தியர் 6:14-18 வசனங்களை படிக்கவும்). முதன் முதலில் இந்த புனித ஆலோசனையை படிக்கும் போது, இது மிகவும் கட்டுப்பாடு கொண்டதாக தெரியும், ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது இதில் அதிக ஞானம் இருப்பதை காணமுடியும். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தங்களுடைய ஒரே விதமான நம்பிக்கை மற்றும் கொள்கையுடன் தொடங்கும் போது தங்கள் துணையை மற்ற நம்பிக்கைக்கு மாற்றவேண்டிய பெரும் நெருக்கத்தை தவிர்க்க முடிகிறது. துணையில் ஒருவர் மற்றொருவருக்கு சுவிசேஷம் சொல்லி ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. ஒருவர் இன்னொருவரைக் குறித்து "இவள்/இவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறார் என்றோ, அல்லது காஃபிர் என்றோ" கருதவேண்டிய அவசியமிருக்காது.


பைபிள் காட்டும் கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒரே சரீரமாக மாறுவதற்கு முன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவோடு ஆழமான ஆவிக்குரிய உறவில் பலப்படவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவனோடுள்ள அவர்களுடைய ஆழமான ஆன்மீக‌ நெருக்கமானது அவர்களுடைய தனிப்பட்ட‌ நெருக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.


மேலும் இந்த ஆவிக்குரிய சமத்துவமானது அவர்களுக்குள் உள்ள எல்லா அதிகாரப் பிரச்சனைகளையும் எடுத்துப்போடுகிறது. மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஏற்கனவே மனைவி கணவனோடு ஒருமனப்பட்டு இருப்பதினால், கட்டுப்படுத்துதவற்காகவும் கணவன் மனைவி மீது மதம் சம்மந்தப்பட்ட எந்த சட்டங்களையும், பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை.


ஒருவகையில் சொல்லவேண்டுமானால், இஸ்லாம் கூட இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு முஸ்லீம் பல தெய்வ வழிபாடுகளை பின்பற்றும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற தடை உள்ளது (சூரா 2:221). பல தெய்வ வழிப்பாட்டுக்கும் இஸ்லாமுக்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதே போல, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல தெய்வ வழிப்பாட்டு மார்க்கமாக இல்லாமல் இருந்தாலும், இவ்விரண்டிற்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.


முக்கியமான வித்தியாசமாக கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்தில் அடிப்படையாக உள்ள மற்றும் மாற்றியமைக்கமுடியாத கோட்பாடாக உள்ள, இயேசுவின் தெய்வத்தன்மையை முஹம்மது மறுத்துள்ளார். இது தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும். இயேசு ஒரு சாதாரண நபி என்று இஸ்லாம் தவறாக சொல்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா இடங்களிலும் இயேசுவின் தெய்வத்துவம், குமாரத்துவம் உறுதிசெய்யப்படுகிற‌து.


இதயத்தில் உணரக்கூடிய அளவிற்கு முஸ்லீம்க‌ள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏறறுக்கொள்வதில்லை. உண்மையில் இஸ்லாமிய போதனை பரிசுத்த ஆவியை தவறுதலாக காபிரியேல் தூதனுக்கு சமமாக குறைத்துள்ளது. இதன்படி ஒரு முஸ்லீமுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே திருமணம் சமாதானமானதாக இருக்காது. எனவே ஒரு கிறிஸ்தவளுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன் குடும்ப வாழ்வில், ஆண் ஆதிக்கம் தலை தூக்கும், அப்போது அவளது வாழ்வு இன்பமானதாக இருக்காது.


மனைவிகளின் கை குடும்பங்களில் ஓங்குகிறது என்று அல்லது அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள் என்று இஸ்லாமிய கணவன் நினைத்தால், அவன் தன் மனைவிமார்களை அடிக்க அவனுக்கு குர்‍ஆன் (சூரா 3:43) அதிகாரம் கொடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


இந்த நடைமுறை காரணங்கள் ஒரு புறமிருக்க, ஒரு கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டை சரியாக புரிந்து கொண்டால், அவன் அல்லது அவள் ஆவிக்குரிய மற்றும் இறையியல் காரணங்களுக்காக கண்டிப்பாக ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்யக் கூடாது.


ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய பழக்க வழக்கங்களில் கிறிஸ்துவின் அடியவர்களாக வளர்க்க‌வேண்டும்.



முடிவுரை


என்னுடைய விமர்சனங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான விமர்சனங்கள் அல்ல, மாறாக இஸ்லாமின் மத அமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆரம்பகால‌ வரலாற்று வன்முறைகளுக்கும், முஹம்மது தன் சொந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்ட பிறகு தொடாந்த ஆரம்பகால‌ வன்முறைகளுக்கும் எதிரானதாகும்.


இஸ்லாம் பற்றிய உண்மைகள் நிச்சயம் வெளியே வரவேண்டும்.


இந்த கட்டுரை இனத்தைப் (Race) பற்றி சொல்வதற்காக எழுதப்படவில்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெவ்வேறான‌ இனத் திருமணங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு வெள்ளைக் கிறிஸ்தவன் ஒரு கருப்பின கிறிஸ்தவளை திருமணம் செய்யலாம், எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக அடியவர்களாக இருக்கவேண்டும்.



இந்த கட்டுரையானது நற்குணங்கள் மதிப்பீடுகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் பற்றியதாகும். முக்கியமாக இது இயேசுவுடன் நம்முடைய உறவைக் குறித்ததாகும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் இருந்தால் அது மிகவும் துக்ககரமானது.


இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் மதசம்பந்தமான திருமணத்தில் உள்ள வித்தியாசம் எளிமையாது.


முஸ்லீம் ஆண்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்ய அனுமதியில்லை. எனவே இஸ்லாமின் "திறந்த மனப்பான்மை" "சகிப்புத் தன்மை" மற்றும் "இனபாகுபடற்றது" என்று சொல்வதெல்லாம் ஒருவழிப் பாதையாகும், அதாவது மாய்மாலமாகும். இஸ்லாமிய‌ ஆண்கள் தான் எப்போதும் சர்வ அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் ஆண் ஆதிக்கம் செலுத்தாதவர்களாகவும், இன்னும் சிலர் நற்குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்கள் குர்‍ஆனை பின்பற்றுவார்களென்றால் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் 4:34ல் சொல்லப்பட்டதின் படி, மனைவிகளை அடிக்க அதிகாரம் பெற்று, ஆண் ஆதிக்க அதிகாரத்தை பிரயோகிப்பார்கள்.


முஸ்லீம் மனிதன் - வீட்டிற்குத் தலையாக இருந்து - இஸ்லாமை பின்பற்றும் போது , குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அந்தக் குடும்பம் சரியான ஐக்கியத்தில் ஒருமனத்தில் இருக்காது.


கிறிஸ்தவம் அதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவ திருமணத் தம்பதிகள் சமமாக கிறிஸ்துவின் ஆவிக்குரிய குடும்பத்தில் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி அவர்கள் ஆழமான எந்த இறையியல் வித்தியாசங்களுக்கா கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமையோடு அதை துவக்குகிறார்கள். மனைவி வேறு மார்க்கத்தை பின் பற்றுகிறாளே என்று ஆண் கவலைப் படவேண்டியதில்லை. ஆணுக்கு தன்னுடைய ஆண் ஆதிக்க‌ அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய‌ அவசியமில்லை குடும்பத்தில் நிலவிக்கொண்டு இருக்கும் ஒருமனத்தை அமைதியை காத்துக்கொண்டால் போதும். பிள்ளைகள் இயேசுவின் சிறிய அடியார்களாக கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதினிமித்தம் அந்த் குடும்பம் மிக இணக்கமாக காணப்படும்.


கிறிஸ்துவில் குடும்பங்கள் இணக்கமாக ஒற்றுமையாக‌ இருக்கிறது. இஸ்லாமிய கலப்புத் திருமணங்களில் குடும்ப வேறுபாடுகள், உயர்வு தாழ்வுச் சண்டைகள் காணப்படுகிறது.


மேலதிக விவரங்களுக்காக கட்டுரைகள்


இயேசு பற்றி குர்‍ஆனின் குழப்பம் பற்றி விவரிக்கும் இந்த கட்டுரையின் "முடிவுரையை படிக்கவும்".


ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனைகளை சந்திக்கும் கிறிஸ்த பெண்களின் பிரச்சனையை அலசுகிறது இந்த பக்கத்திலுள்ள கட்டுரைகள், இன்னும் இதர கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.


ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவரின் (திம்மி/ஜிம்மி - Dimmi or Zimmi) வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது, இந்த கட்டுரை. Dimmi என்றால் அது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும், இவர்கள் இஸ்லாமிய நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கிறவர்கள். இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்காது, இன்றும் இதனை காணமுடியும், முக்கியமாக இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளும், இஸ்லாமியரல்லாத பெண்களின் நிலையும் இதே தான்.


ஆங்கில மூலம்: The truth about Muslim-Christian marriages


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/arlandson/mixed_marriage.html

 



 

July 8, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படுகிறது.



இந்த தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே கீழ் கண்ட வரிகள் கொட்டை எழுத்துக்களில் தென்படுகிறது.



THE FIRST AND LARGEST SITES ON IMAN, ISLAM, IHSAN

இந்த தளத்தை நீங்கள் பார்வையிட்டீர்களா? என்று நான் கேட்க மாட்டேன், ஏனென்றால், இதனால் உபயோகமில்லை.


இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், அனேக இஸ்லாமிய அறிஞர்களின் படங்கள் (அஹமத் தீதத் அவர்கள் உட்பட), இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என்று அனேக தொடுப்புக்கள், புத்தகங்கள், குர்‍ஆன் என்று அனேக விவரங்கள் உள்ளன.


சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த தளத்தைக் கண்டு, இது யூதர்களின் தளம் என்றுச் சொல்லமாட்டான்.


குறிப்பு: அல் ஜன்னத் குறிப்பிட்ட தளம் www.allah.com இல்லை, அது www.allah.org என்று பதில் சொல்ல அவசரப்படாதீர்கள் இஸ்லாமியர்களே, இந்த அல்லாஹ் டாட் ஓஆர்ஜி தளமும் ஒரு இஸ்லாமிய தளமாகும் என்பதை மனதில் கொள்ளவும்.


இப்போது அடுத்த தளத்திற்குச் செல்வோம்…



த குர்‍ஆன் தளம் (www.thequran.com)



அடுத்ததாக நீங்கள் "த குர்‍ஆன் டாட் காம்" என்ற தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இதுவும் யூதர்களின் தளம் என்று எழுதியிருந்தீர்கள். நான் இந்த தளத்தையும் பார்வையிட்டேன்.


இந்த தளத்தில் ஆங்கிலம் உட்பட அனேக குர்‍ஆன் மொழியாக்கங்கள் தரப்பட்டு இருந்தன (Arabic, Shakir (English), yusufali (English), Pickthal (English), Al-Hilali (English), Spanish, French and Turkish).


இந்த தளத்தில் குர்‍ஆன் பிழைகள் (Quranic Errors), இரத்து செய்யப்பட்ட வசனங்கள் (Abrogated Verses) மற்றும் ஒரே மாதிரியாக அடிக்கடி வரும் வசனங்கள் (Repeated Verses) என்று ஒரு சில பக்கங்கள் இருக்கின்றன.


இந்த தளம் கண்டிப்பாக ஒரு இஸ்லாமிய தளம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இந்த தளம் ஒரு கிறிஸ்தவராலோ கூட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம்.


குர்‍ஆனின் பிழைகள் என்ற பக்கத்தில் அனேக புதிய ஏற்பாட்டு வசனங்களை குறிப்பிட்டு விவரங்கள் உள்ளன. எனவே, இந்த தளமும் கிறிஸ்தவ தளமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், யூதர்களின் தளம் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை.


ஒரு பேச்சுக்காக இந்த ஒரு தளத்தை மட்டும் யூத தளமாக நாம் கருதினாலும், அல்‍ ஜன்னத் குறிப்பிட்ட நாங்கு தளங்களில் மூன்று தளங்கள் யூதர்களின் தளங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை.




வெட்டு ஒன்று துண்டு மூன்று - அல் ஜன்னத்தின் யுக்தி வேலை செய்யவில்லை




அல் ஜன்னத் பிரசுரித்த விவரங்களின் உண்மை நிலையை நாம் கண்டோம். சில முஸ்லிம்கள் "ஏதோ தெரியாதவிதமாக நடந்துவிட்டது" என்று அல் ஜன்னத்தின் பொய்யுக்கு சாயம் பூசலாம். ஆனால், பல ஆண்டுகளாக இயங்கும் பத்திரிக்கை, இப்படிப்பட்ட விவரங்களைத் தருவது சரியா? இப்படித் தான் எல்லா விவரங்களும் இருக்குமா?



இதில் இவர்களின் (முக்கியமாக முஸ்லிம்களின்) தந்திரமும் தெரியவரும், அதாவது கிறிஸ்தவ தளத்தையும், ஷியா முஸ்லீம்களின் தளத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அவைகள் யூதர்களின் தளம் என்ற பொய்யைச் சொன்னால், தமிழ் முஸ்லிம்களை சுலபமாக முட்டாள்களாக்கி விடலாம் என்று கனவு கண்டது, அல் ஜன்னத் பத்திரிக்கை. ஆனால், அது பகல் கனவாக முடிந்துவிட்டது.



எதெற்கெடுத்தாலும் யூதனை இழுத்தால் போது, முஸ்லிம்களுக்கு அப்படியே கண்கள் சிவக்கும், உடலில் சூடு உண்டாகும், அதனால் இந்த தளங்கள் பக்கமும் தலை வைத்து படுக்கமாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் அல் ஜன்னத் இந்த புதிய வேஷத்தை போட்டது, ஆனால், என்ன செய்யமுடியும், வேஷம் போட்டால் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.



ஷியா இஸ்லாமை எதிர்க்கவேண்டுமானால், நேரடியாகவே எதிர்க்கலாம் அல்லவா? ஏன் இந்த யூத வேஷம் போடவேண்டும்?



அல்லாஹ் டாட் காம் என்ற தளத்தின் முதல் பக்கத்தை பார்த்தலோ போதும், அது ஒரு ஷியா தளம் என்பது தெளிவாக விளங்கும். தமிழ் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்வையிடக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு கட்டுரையை தனியாக எழுதவேண்டியது தானே! இந்த குறிப்பிட்ட தளம் ஷிய தளமாகும், அந்த தளத்தை யாரும் பார்வையிடவேண்டாம், என்று முஸ்லீம்களுக்கு நேரடியாகச் சொல்லவேண்டியது தானே! ஷியா கோட்பாட்டிற்கு மறுப்புக்களோ/பதில்களோ எழுதவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு ஏன் யூதர்களை அழைக்கிறீர்கள்? இஸ்லாமிய அறிஞர்களே, உங்களின் வேஷம் சிறிது சிறிதாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது, இனியும் உங்கள் தந்திரங்கள் வேலை செய்யாது. எவ்வளவு புத்திசாலித் தனமாக நீங்கள் நடந்துக்கொண்டாலும், பொய்யை அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது, என்பதை சொல்லிகொள்கிறேன்.



அல் ஜன்னத்தும் பொய்யும் பித்தலாட்டமும்



அல் ஜன்னத் கீழ் கண்ட வரிகளை யூதர்களுக்கு சூட்டியது, இப்போது இந்த கட்டுரையை படித்த நீங்கள், இந்த வரிகள் அல் ஜன்னத்திற்கு சரியாக பொருந்துவதைக் காணமுடிகிறதா?


யூதர்கள் பற்றி அல் ஜன்னத் கூறியது



பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒரு கிறிஸ்தவ தளம், அதன் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு "யூத சாயம்" பூசி, பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக அல் ஜன்னத் பத்திரிக்கை செயல்படுகிறது. இதற்கு இந்த கட்டுரையில் தரப்பட்ட விவரங்களே போதும்.



அல் ஜன்னத் பத்திரிக்கைக்கு நான் கூறிக்கொள்வது, நீங்கள் யூதர்க்ளை திட்டுங்கள், சபியுங்கள் என்னவாவது செய்துக்கொண்டு போங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தால் பொய்களைச் சொன்னால் மட்டும் சரியான பதில் கண்டிப்பாக தரப்படும்.



நீங்கள் கண்டித்த அதே வரிகளை உங்களுக்குச் சொல்கிறேன், "இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் அல் ஜன்னத் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்".



இதோடு இன்னும் முடியவில்லை, அல் ஜன்னத் கீழ் கண்ட விதமாக எழுதியுள்ளது,



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



7ம் நூற்றாண்டிலிருந்து சமுதாயத்திற்கு, உலகிற்கு யாரால் அதிக நன்மைகள் முஸ்லீம்களாலா அல்லது யூதர்களாலா? என்பதைப் பற்றிய தலைப்பை என் சிந்தையில் நிறுத்திக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/aljannath/aljannathjews1

July 7, 2009

யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?

யார் ஏமாற்றுக்காரர்? 


Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?



முன்னுரை:


பெயித் பிரீடம் (www.faithfreedom.org) தளத்தில் 2007 ம் ஆண்டு Dr. ஜாகிர் நாயக் அவர்களின் "பல தார மணம் பற்றிய பதிலுக்கு" மறுப்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. நான் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு இருந்தேன்.



தமிழில்: ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


ஆங்கிலத்தில்: Deception as a means for support: Dr. Naik's lies uncovered



ஏகத்துவம் தளம் ஜாகிர் நாயக் அவர்களின் இந்த பல தார மணம் பற்றிய கட்டுரையை தமிழில் வெளியிட்டுள்ளார்கள்: இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?


குறைந்த பட்சம் இவர்களாவது (ஏகத்துவம் தளம்) சரியான விளக்கம் அளிப்பார்கள் அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் பொய் என்றுச் சொல்லி இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது, சுருக்கமாக சொல்லவேண்டுமானால், "இஸ்லாமின் பல தார மணத்தை நியாயப்படுத்த ஜாகிர் நாயக் அவர்கள் வேண்டுமென்றே பொய் சொன்னார்" என்று பல ஆதாரங்களோடு இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.


இந்த தமிழ் கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்துள்ளன.


இக்கட்டுரைக்கு பின்னூட்டமிட்டவர்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட பதில் குறித்து ஜாகிர் நாயக் அவர்களிடம் தெளிவு பெறுவதற்கு பதிலாக, என்னை ஏமாற்றுக்காரன் என்றும், ஜாகிர் நாயக்கிற்கு கெட்டபெயர் கொண்டுவர முயற்சிக்கவேண்டாமென்றும் எழுதியுள்ளார்கள். அதாவது, கொடுத்த ஆதாரங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யுக்கும், ஏமாற்று வேலைக்கும் இப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.


சராசரி இஸ்லாமியர்கள் எப்படி இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யான விவரங்களுக்கு கேள்வி கேட்காமல் மயங்கியிருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையில் காணலாம். இக்கட்டுரைக்கு வந்த மூன்று பின்னூட்டங்களுக்கு என் பதிலையும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்கும் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.


இஸ்லாமியரல்லாதவர்களுக்கு பதில் கொடுக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் இஸ்லாமியரல்லாதவர்கள் மற்றும் நாத்தீகர்கள் நேர்மையை எதிர்பார்ப்பது சரியா தவறா?


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி இஸ்லாமியரல்லாதவர்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றி விளக்கமளிக்கிறார், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறார். இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தருகிறார். ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் புள்ளிவிவரங்களை தரும் போது, அல்லது ஒரு ஜனத்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையை தரும் போது, உண்மையான விவரம் தருவது தான் சரியான முறையாகும்.


டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் இஸ்லாமியரல்லாதவர்கள் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்ட முடியாது. அவர் சொல்லும் விவரங்கள் உண்மையா பொய்யா என்று சோதித்துப்பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள் இப்படி அவரது புள்ளிவிவரங்களை பரிசோதிக்க மாட்டார்கள், ஏனென்றுச் சொன்னால், "ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், தவறான விவரங்களை தரமாட்டார்" என்ற நம்பிக்கையில் சரிபார்க்கமாட்டார்கள்.


ஆனால், உண்மை எது என்று பரிசோதித்துப் பார்த்தால், அவர் சொல்லும் விவரங்கள் பொய்யாகவும், ஆதாரமற்றதாகவும் இருக்கின்றன. அவர் சொல்லும் புள்ளிவிவரங்களை சரி பார்க்க அவர் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை, மற்றும் நாமாகவே புள்ளிவிவரங்களை சரி பார்த்தாலும் அது தவறானதாக உள்ளது, முக்கியமாக இந்த பல தார மணம் பற்றிய அவரது பதிலில் உண்மை இல்லை.


மேடை போட்டு, பணம் செலவு செய்து, இஸ்லாமியரல்லாதவர்களை முட்டாள்களாக்குவதை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே, தான் பெயித் பிரீடம் தளத்தில் ஒரு கட்டுரையை சார்லஸ் கோயினிக் என்பவர் (இவர் நாத்தீகர் என்று நினைக்கிறேன்) ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரங்களை அலசி, பதிலை எழுதினார். இதே போல ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும் புள்ளிவிவரங்களோடு கட்டுரை எழுதப்பட்டுள்ளது (இதனை இங்கு தமிழில் படிக்கலாம்).


சரியான தகவல்களை புள்ளிவிவரங்களை ஜாகிர் நாயக் அவர்கள் தரவேண்டும் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் எதிர்ப்பார்ப்பது தவறா? இவர் மட்டுமல்ல, எந்த அறிஞராக இருந்தாலும் சரி, எந்த மார்க்கத்தை சம்மந்தப்பட்டவராக இருந்தாலும் சரி உண்மையான புள்ளிவிவரங்களை தருவது தானே சரியானது?


எனவே, இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்தையும் சோதித்துப்பார்த்து, அவைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஒவ்வொருவரது கடமையாகும்.


நாத்தீகனின் நேர்மையை விட ஆத்தீகனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா?


ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு ஆத்தீகர், அதாவது இறைவன் உண்டு என்று சொல்பவர், நாம் மொழியாக்கம் செய்த ஆங்கில கட்டுரையை எழுதியவர் ஒரு நாத்தீகர். எந்த மதமாக இருந்தாலும் சரி, பொதுவாகவே இறைவன் மீதுள்ள பக்தி, பயம், சொர்க்கம், மற்றும் நரகம் போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கை ஒரு ஆத்தீகனை நேர்மையுள்ளவனாக மாற்றுகிறது என்று எல்லா ஆத்தீகர்ளும் நம்புகிறோம். இப்படி இருக்கும் போது, அல்லாஹ்வை வணங்கும் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மை நாத்தீகரின் நேர்மையை விட குறைவாக இருக்குமானால், யாருக்கு கெட்டபெயர் அல்லாஹ்விற்குத் தானே. இது ஜாகிர் நாயக்கிற்கு மட்டுமல்ல, இறைவன் உண்டு என்று நம்பும் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.


நான் இப்படி சொல்வதினால், நாத்தீகர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஆத்தீகர்களாகிய நாம் "இறைநம்பிக்கை நல்லது, இதனால் நாம் நேர்மையானவர்களாக வாழ்கிறோம்" என்றுச் சொல்கிறோம், தம்பட்டம் அடிக்கிறோம், என்வே, ஆத்திகர்களுக்கு தங்கள் நேர்மையை நிருபிக்கவேண்டிய பொறுப்பு நாத்தீகர்களைவிட‌ அதிகம்.


இறைவன் இல்லை என்றுச் சொல்பவனின் நேர்மையை விட, இறைவன் உண்டு என்றுச் சொல்பவனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா? ஒரு நாத்தீகர் ஒரு ஆத்தீகரை அதாவது ஜாகிர் நாயக் அவர்களை பொய்யர், நேர்மையற்றவர் இது தான் ஆதாரம் என்றுச் சொல்லும் அவமானத்தைவிட வேறு ஏதாவது பெரிய அவமானம் அல்லாஹ்விற்கு உண்டா? இதை இஸ்லாமிய அறிஞர்களும், சராசரி இஸ்லாமியர்களும் உணரவேண்டாமா?


இனி, நம் தமிழ் இஸ்லாமியர்கள் கொடுத்த மூன்று பின்னூட்டங்களுக்கு பதிலைக் காண்போம்.


முதல் பின்னூட்டம்:



பெயரில்லா சொன்னது…



how we can belive your thoughts we think DR thoughts is right plz plz plz we think you want to create bad name about DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE



January 27, 2009 10:49 PM



முதல் பின்னூட்டம் பெயரில்லாமல் (அனானிமஸ்) வந்துள்ளது. இப்போது அவாது வரிகளுக்கு பதிலைக் காண்போம்.


அனானிமஸ் எழுதியது:


how we can belive your thoughts we think DR thoughts is right …



ஈஸா குர்‍ஆன்:


அருமை இஸ்லாமிய நண்பரே, நீங்கள் எங்கள் "எண்ணங்களை, நினைவுகளை" நம்பச் சொல்லவில்லை, நாங்கள் முன்வைக்கும் விவரங்களைப் பாருங்கள், அவைகள் சரியானவையா இல்லையா என்பதை நீங்களே கொடுக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று சரிபாருங்கள். இதே போல, உங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னாலும், உடனே நம்பிவிடாமல், அவர் சொன்னது சரியான தகவலா என்று சரிபாருங்கள்.


நீங்கள் என் தமிழ் மொழியாக்கத்தை படித்து தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் தவறானவைகள் என்று புள்ளிவிவரங்களோடு பதில் எழுதியிருப்பதைக் கண்டும், நீங்கள், நாயக் அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொன்னால், உங்களை என்னவென்றுச் சொல்வது?


நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களுக்கு ஆதாரமே இல்லையே. ஆனால், நாம் புள்ளிவிவரங்களை தேடி கண்டுபிடித்து சரிபார்த்தால், அவைகள் ஜாகிர் நாயக் சொல்வதற்கு எதிராகவே உள்ளதே, இதை கூடவா நீங்கள் படித்துவிட்டு, நாயக் அவர்கள் சொல்வது தான் சரி என்றுச் சொல்கிறீர்கள்?



அனானிமஸ் எழுதியது:


plz plz plz we think you want to create bad name



ஈஸா குர்‍ஆன்:


ஜாகிர் நாயக் அவர்களுக்கு நான் ஏன் கெட்ட பெயரை கொண்டுவரவேண்டும்? அவர் மேடை பேச்சுக்கள் போதுமல்லவா அவருக்கு கெட்டபெயரை கொண்டுவர. அவர் கொடுக்கும் விவரங்கள் போதுமல்லவா அவர் சொல்வது பொய் என்பதை அறிந்துக்கொள்ள?


அவர் உண்மையைச் சொன்னால், சரியான விவரங்களைக் கொடுத்தால் ஏன் கெட்டபெயர் வரப்போகிறது?


அவருடைய பெயர் இதனால் கெடுகிறது என்று உங்களுக்கு அக்கரை இருந்தால், அவர் சொன்ன விவரங்களுக்கு ஆதாரங்களைத் தாருங்கள். அவரோடு தொடர்பு கொண்டு, "உங்களின் புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் அதற்கு ஆதாரங்கள் என்ன?" என்று கேட்டு, தெரிந்துக்கொண்டு எழுதுங்கள், அப்போது கெட்டபெயர் தானாகவே நீங்கிவிடுமே.


ஒரு வேளை நீங்கள் அவர் சொன்ன தகவல்களுக்கு ஆதாரங்களைக் கொடுத்தால், அவைகள் உண்மை என்று நிருபனமானால், நான் இந்த தமிழ் கட்டுரையை நீக்கிவிடுகிறேன். அதே போல, பெயித் பிரீடம் தளத்துடன் தொடர்பு கொண்டு ஆங்கிலத்திலும் இருக்கும் கட்டுரையை நீக்கச் சொல்கிறேன்.


ஜாகிர் நாயக் அவர்களின் பதில் எப்படி உள்ளதென்றால், ஒரு ஆண்டில் அல்ல, எல்லா ஆண்டிலும், எல்லா நாடுகளிலும் பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக உள்ளார்களாம், அதனால், தான் பல தார மணம் என்பது சரியாம். எனவே, எல்லா ஆண்டிலும் அவரது புள்ளிவிவரம் படி, ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும். அப்போது தான் சரியான ஆதாரமாக முடியும்.



அனானிமஸ் எழுதியது:


DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE



ஈஸா குர்‍ஆன்:


பொய்யான விவரங்களை கொடுத்து ஏமாற்றுபவர் ஏமாற்றுக்காரரா அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருபவர் ஏமாற்றுக்காரரா என்பதை நீங்கள் படித்த கட்டுரையை படிப்பவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், உங்களுக்கு மட்டும் புரியவில்லை? ஏன்?


அருமை இஸ்லாமியரே, எது "நான்சன்ஸ்"? மேடைகள் போட்டு, பதில் தருகிறேன் என்றுச் சொல்லி, பொய்யான விவரங்களை சொல்வது நான்சன்ஸா அல்லது அவரது பொய்களை உலகிற்கு எடுத்துக் காட்டுபவர்களின் செயல்கள் நான்சன்ஸா?


அவர் உண்மையிலேயே சரியான விவரங்களை கொடுத்துயிருந்தால் மற்றவர்கள் ஏன் கேள்வி எழுப்பப்போவார்கள்?


எனவே, அருமை இஸ்லாமிய நண்பரே, உண்மையிலேயே உங்கள் மனதிற்கு வேதனையாக இருந்தால், அவருடன் தொடர்பு கொண்டு, என்ன விஷயம்? ஏன் இப்படி சரியில்லாத ஜனத்தொகை புள்ளிவிவரங்களைத் தருகிறீர்கள், உண்மையான விவரம் என்ன என்று கேட்டு எழுதுங்கள். அப்போது உலகம், "ஜாகிர் நாயக் அவர்கள் உண்மை சொன்னார்கள் என்று" அறிந்துக்கொள்ளும். இப்படி பதில் வராத பட்சத்தில் நீங்கள் சொன்ன அந்த "420" யாருக்கு சரியாக பொருந்தும் என்று இந்த கட்டுரைகளை படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சரியாகத் தெரியும்.



இரண்டாவது பின்னூட்டம் அஜீஜுல்லாஹ் என்பவரிடமிருந்து வந்துள்ளது, அதற்கான பதிலை இப்போது காண்போம்.



Azeezullah சொன்னது…



You can talk generally against Dr. Zakir But you can not/never talk with Dr.


If you are ready, why do not you call him for debate in front of the public and let us see your skill.



ஈஸா குர்‍ஆன்:


அருமை அஜீஜுல்லாஹ் அவர்களே உங்களிடம் நான் நேரடியாக கேள்வியை கேட்கிறேன்.


1) டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் விவரங்களாகும்?


2) அவர் எந்த புத்தகத்திலிருந்து விவரங்களை எடுத்துச் சொல்கிறார்? உங்களால் ஆதாரங்களைத் தரமுடியுமா?


இங்கு கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருப்பது, என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக அல்ல?


பல பேர்களின் பொய் முகங்களை உலகிற்கு காட்டுவதற்காக!


இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வரும் பொய்களுக்கு பதில்கள் தருவதற்காக!


இஸ்லாமின் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் உண்மை முகத்தை காட்டுவதற்காக‌ !


கடைசியாக உங்கள் முஹம்மது ஒரு கள்ள / பொய் நபி என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என்பதற்காகவே கட்டுரைகள்,பதில்கள் தரப்படுகின்றனவே தவிர, பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்ல.


டாக்டர் நாயக் அவர்கள் உண்மை முகம் தெரிந்துவிடுகிறதே என்று கவலைப்படும் நீங்கள், ஏன் அவரிடம் கேட்டு பதிலைத் தரக்கூடாது, அவரது தளத்திலேயே, மூல ஆதாரங்களைத் தரலாமே! அப்படி அவர் கொடுத்து இருந்தால், எனக்கு தொடுப்பு தாருங்கள், அவைகள் உண்மையானால், அவரது கருத்துப்படி, உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் எப்போதும் (பெண் சிசுக்கொலை போன்ற‌ சில எதிர்பாராத காரணங்களினால், பெண்கள் குறைவாக இருந்தால் பரவாயில்லை) ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருந்தால், நான் இககட்டுரையை நீக்கிவிடுகிறேன். மற்றும் இக்கட்டுரைக்காக மன்னிப்புக் கோரி, ஒரு பதிவை வெளியிடுகிறேன்.



Azeezullah சொன்னது…



The Islam is truth and it spoke the real and amazing thing for day to day life as well as hereafter.



ஈஸா குர்‍ஆன்:


இதைத்தான் நீங்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் வருகிறீர்களே, பாடிய பல்லவியையே ஏன் மறுபடியும் பாடுகிறீர்கள். இந்த கட்டுரைக்கும் நீங்கள் சொல்லும் விவரத்திற்கும் சம்மந்தம் உண்டா?


கேள்வி எழுப்பியது, இஸ்லாமிய அறிஞர், மேடை பேச்சாளர், பல புத்தகங்களின் ஆசிரியர் உலகம் சுற்றும் அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரத்திற்கு ஆதாரம் எங்கே என்று தான். உங்களை குர்‍ஆன் பற்றி யாரும் கேட்கவில்லை.


ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பின் பற்றும் மார்க்கம் தான் உண்மையானது, அது போல, இஸ்லாமியராக இருப்பவருக்கு குர்‍ஆன் உண்மை என்று தான் நம்புவார், இதனை யாரும் கேட்கவில்லை. குர்‍ஆன் பற்றி வேண்டுமானால், என் தளத்தில் படித்துப்பாருங்கள், விவரம் தெரியும்.


இங்கு உங்கள் அன்பு அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது, அவரது உண்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு பதில் சொல்லமுடியுமா என்று சிறிது சிந்தித்து இருந்தால், நீங்கள் அவருக்கு நன்மை செய்பவராக இருப்பீர்கள்?



Azeezullah சொன்னது…


Do not waste your time and try to learn about Islam if you learn Islam, you will find lots of Miracles.


Azeezullah.


March 25, 2009 9:42 AM



ஈஸா குர்‍ஆன்:


இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்து தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனவே, இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்,


முக்கியமாக இந்த பலதார மணம் பற்றிய கட்டுரையில், ஜாகிர் நாயக் அவர்கள் பேசுவது உண்மையா பொய்யா? உண்மை என்றுச் சொன்னால், அது எங்கே?


குர்‍ஆனில் அற்புதம் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? அதில் அற்புதம் இருப்பதாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள் அவ்வளவு தான். குர்‍ஆன் அற்புதம் என்பவர்கள் இந்த பக்கத்தில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை ( http://www.answering-islam.org/tamil/quran.html) படித்துப்பாருங்கள், உண்மை தெரியும்.


இந்த கேள்வி குர்‍ஆன் அற்புதங்கள் பற்றி கேட்கப்படவில்லை, உங்கள் அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கேள்வி, அதற்கு மட்டும் பதிலைத் தாருங்கள், இதற்கு பதில் வராத வரை, மேலே அனானிமஸ்ஸாக வந்து ஒரு இஸ்லாமியர் சொன்ன 420 யாருக்கு பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.


மூன்றாவது பின்னூட்டம், ஆதம் என்ற பெயரில் வந்துள்ளது



ஆதம் சொன்னது…



உங்கள் நோக்கம் என்ன ,இஸ்லாம் பிழை என்பதா? அல்லது முஸ்லிம்கள் பிழை என்பதா ? அல்லது கிறிஸ்த்துவம் சரி எண்பதா?



ஈஸா குர்‍ஆன்:


நீங்களும் மற்றவர்கள் போலத்தானா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது! அதாவது சொல்லிவைத்தார் போல முஸ்லீம்கள் எப்படி ஒரே மாதிரியாக சிந்திக்கிறீர்கள்? கேட்ட கேள்வியை காற்றிலே விட்டுவிட்டு, எப்படியாவது கதையை திசை திருப்பப் பார்க்கிறீர்களே, அடேங்கப்பா என்னே ஒரு தந்திரம், என்னே ஒரு ஞானம்.


மேலே இரண்டு பின்னூட்டம் கொடுத்தவர்கள் குறைந்தபட்சம் ஜாகிர் நாயக் என்ற பெயரையாவது பயன்படுத்தினார்கள், ஆனால், திசை திருப்ப முயற்சித்தார்கள். ஆனால், நீங்கள் அவரது பெயரை பயன்படுத்தாமலேயே திசை திருப்புகிறீர்கள்.


என் நோக்கம் அல்லது என் கருத்து வேண்டும், அவ்வளவு தானே, இதோ சொல்கிறேன், பைபிளின் படி கிறிஸ்தவம் இஸ்லாமை கீழ்கண்ட விதமாகத்தான் பார்க்கிறது, இது தான் என் கருத்தும்கூட.



1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).



2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.


3) உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொன்று, மக்களை பயப்படவைத்து கேவலமான நிலையில் இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியெறுபவனை நாங்கள் தாக்குவதில்லை,என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் சட்டம்கொண்டு வந்து அதை சரியாக பின்பற்றட்டும், விரல்விட்டு எண்ணும் ஆண்டுகளில், இஸ்லாமின் நிலை அம்போ கதி தான்.




4) கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம், அதற்கு எதிர் மறையான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாமிய நாடுகளில் இன்னும் எவ்வளவு தான் நீங்கள் கொடுமைப்படுத்தினாலும், கிறிஸ்தவம் இன்னும் வளரும் (கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு கணக்கில்லாமல் பிள்ளைகள் பெற்று கிறிஸ்தவத்தை வளர்க்க விரும்புவதில்லை, படுக்கை அறையில் கிறிஸ்தவத்தை வளர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.)


ஆதம் சொன்னது…



இங்கே நிருபிக்க வந்த விடயத்தின் 1 % கூட உம்மால் முடியவில்லை .



ஈஸா குர்‍ஆன்:


ஜாகிர் நாயக் அவர்களின் முகத்தில் கரியை பூசி, அவர் பொய்யர் என்று இந்த கட்டுரைச் சொல்லும் போது, இத்தனை பேர் நீங்கள் இருந்தும் பல முறை இக்கட்டுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கப்பட்டும், இதுவரை பதிலே சொல்லாமல் இஸ்லாமியர்கள் இதர தமிழ் இஸ்லாமிய தளங்களை நடத்தும் அறிஞர்கள் மௌனமாக இருக்கும் போதே தெரியவில்லையா? எத்தனை சதவிகிதம் இந்த கட்டுரை வெற்றிப்பெற்றுள்ளது என்று?


டாக்டர் ஜாகிர் நாயக்கின் புகழை கூரு போட்டு, நடு ரோட்டில் வைத்து ரூபாக்கு நாலூ என்று விற்பது போல, சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நச்சென்று உண்மையை சொல்லும் போது, இன்னும் 1% கூட இக்கட்டுரையினால் முடியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்களாவது சொல்லுங்களேன், ஜாகிர் நாயக் சொல்லும் விவரங்களின் ஆதாரங்கள் என்ன?


சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நிருபிக்க வந்தது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு "பொ ய் ய ர்" என்பதாகும், அதற்கு ஆதாரங்களும் தரப்பட்டன. ஆனால், நாயக் அவர்கள் உண்மையாளர் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் கொடுக்க அவராலும் முடியவில்லை, அவரது சீடர்களாகிய உங்களாகும் முடியவில்லை. இன்னும் என்ன இருக்கின்றது நிருபிப்பதற்கு?



ஆதம் சொன்னது…



நாங்கள் முஸ்லிமாய் இருக்க வேண்டும் என்றால் இரைதுதர்களை ஏறுக்கொள்ள வேண்டும் இயேசுவை கூட,



ஈஸா குர்‍ஆன்:


அய்யய்யோ யாராவது வந்து காப்பாற்றுங்களேன்!



இந்த கட்டுரைக்கும் நீங்கள் முஸ்லீமாக இருப்பதற்கும் சம்மந்தமில்லை சகோதரரே. இந்த கட்டுரைக்கும் நீங்கள் இறைத்தூதர்களை, இயேசுவை நம்புவதற்கும் சம்மந்தமில்லை.


முதலில் உங்கள் ஜாகிர் நாயக் அவர்களிடம் சென்று கேள்வி எழுப்பி பதிலை கொண்டு வாருங்கள். நீங்கள் முஸ்லீமாகவோ இருங்கள், அல்லது இல்லாமலோ போங்கள், இதனால், இந்த கட்டுரைக்கு என்ன பயன்? அல்லது ஜாகிர் நாயக் அவர்களுக்கு என்ன பயன்? நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் உண்மையாகிவிடுமா என்ன? அல்லது நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், தானாகவே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுமா?



ஆதம் சொன்னது…



பைபிளில் இஸ்லாத்தைப் பற்றியோ முஹம்மதத் அவர்களைப் பற்றியோ சொல்லவிட்டால் பைபிள் திர்க்கதரிசனம் இல்லா மறை நூலா ?



June 15, 2009 2:53 AM



ஈஸா குர்‍ஆன்:


அருமை நண்பரே, ஆயிரம் பேர் "நான் தான் நபி" என்றுச் சொல்லிக் கொண்டு வருவார்கள். முஹம்மதுவிற்கு பிறகும் அனேகர் அப்படி வந்தார்கள். சொந்தமாக நபியாக பிரகடனப்படுத்தி கொள்கிறவர்களை பற்றியெல்லாம் வேதங்களில் இருக்கவேண்டுமானால், அவ்வளவு தான் கதை.


முஹம்மது என்ன உண்மை தீர்க்கதரிசியா? இல்லையே! அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. நீங்கள் இயேசுவை ஒரு நபியாக எண்ணுகின்றீர்கள், அது உங்கள் நம்பிக்கை. அது போல, நாங்கள் உங்கள் முஹம்மது ஒரு பொய் நபி என்று நம்புகிறோம், இது எங்கள் நம்பிக்கை.


உலகத்தில் நபியாக சொல்லிக்கொண்டு வருகிறவர்களை எல்லாம் உங்கள் குர்‍ஆனில் உள்ளதா? ரஷீத் கலிபா என்று ஒருவர்(http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa), அவர் தன்னை நபி என்றுச் சொன்னார், குர்‍ஆனில் பல இடங்களில் தன்னிடம் அல்லா பேசியதாகச் சொல்லி, தன் பெயரை குர்‍ஆனில் புகுத்தியும் விட்டார். இரண்டு குர்‍ஆன் வசனங்களையும் (குர்‍ஆன் 9:128-129) அவர் நீக்கி, அவைகள் இல்லாமலேயே குர்‍‍ஆனை திருத்தியும் விட்டார் .


அவரைப் பற்றி ஏன் உங்கள் குர்‍ஆனில் இல்லை?


ரஷீத் கலிபா பற்றி உங்கள் குர்‍ஆனில் இல்லையானால், உங்கள் குர்‍ஆன் தீர்க்கதரிசனம் இல்லாத மறை நூலா?


பைபிளில் உங்கள் முஹமம்து பற்றியும், இஸ்லாம் பற்றியும் இல்லை என்றுச் சொன்னால், மிகவும் வேதனை அடைவீர்கள் போல் உள்ளது, எனவே, முஹம்மது பற்றியும், இஸ்லாம் பற்றியும், அவ்வளவு ஏன், சில தீவிர இஸ்லாமியர்கள் பற்றியும் உள்ள வசனங்களை பைபிளிருந்து எடுத்துக் காட்டுகிறேன், இப்போது சந்தோஷம் தானே. சரியாக விளங்கும் என்பதற்காக அடைப்பிற்குள் சில வார்த்தைகளை எழுதியுள்ளேன்.



… மேலும் உங்களை (கிறிஸ்தவர்களை)க் கொலை செய்கிறவன் (முஸ்லீம்) தான் தேவனுக்கு (இறைவனுக்கு)த் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். யோவான் 16:2



இன்று முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று விட்டு, நான் அல்லாஹ்வின் தொண்டு செய்கிறேன் என்றுச் சொல்கிறார்கள். இதனை இயேசு அன்றே சொல்லியுள்ளார். இது இஸ்லாம் பற்றியது தானே.



கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு (முஹம்மதுவிற்கு) எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7:15



அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (முஹம்மது) எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11



மேலே உள்ளவைகள் எல்லாம் இஸ்லாம் பற்றிய வசனங்கள், இப்போது திருப்தி தானே.


இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது எந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இடுகின்றோம் என்பதை கவனித்து, அதற்கு பதிலைச் சொல்லப் பாருங்கள். கடைசியாகவும் சொல்கிறேன். ஜாகிர் நாயக் அவர்களின் விவரங்களுக்கு ஆதாரங்கள் தரப்படுமானால், இந்த கட்டுரையையும், இதற்கான மூல தமிழ் கட்டுரையையும் நான் நீக்கிவிடுகிறேன்.


அதுவரை, ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்துக் கொண்டே இருக்கும்…..



1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம்.