அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 29, 2008

சூரியனை நிரூபிக்க முடியுமா?

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!

சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

February 21, 2008

நாத்திகருக்கு நச்சுன்னு ஒரு கேள்வி

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ருசித்துப் பார்...



ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்

Psalm 34:8
Taste and see that the LORD is good;

1 Peter 2:17
fear God

February 19, 2008

கண்ணதாசன் கண்ட கிறிஸ்து

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவது
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

-கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" நூலிலிருந்து.(Kannadasan - "Yesu Kaviyam")

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16-ல் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

அப்போஸ்தலர் 1:11
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

வெளி 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

Acts:1:11
"Men of Galilee," they said, "why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven."

Revelation:5:10
You have made them to be a kingdom and priests to serve our God,
and they will reign on the earth."

February 17, 2008

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

   

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


"இயேசுவிற்கு மனிதர்களை சரியாக மதிப்பிடத் தெரியவில்லை, தனக்குப் பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு நியமித்தது சரியானது அன்று" என்று "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் பிஜே அவர்கள் கேள்வியை எழுப்புகிறார்.

பிஜே அவர்களது கணிப்பு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் என் முதல் கட்டுரையில் விளக்கினேன். இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று கூட தெரிந்துக்கொள்ளாமல் பிஜே அவர்கள் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார். பிஜே அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு என் முதல் பதிலை கீழ் கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

பாகம் 1 : Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்


பாகம் 2 :

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"


இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். ( மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Source:
http://www.onlinepj.com/book/mahana11.htm



1. பேதுருவை தயார்படுத்திய இயேசு:

இயேசு தன் ஊழிய ஆரம்ப காலத்திலிருந்தே பேதுருவையும், யோவானையும், அவன் சகோதரன் யாக்கோபையும் பல முக்கியமான சந்தர்பங்களில் தன்னோடு கூட அழைத்துச் சென்றார். அற்புதங்கள் செய்யும் போது, இவர்களை தன்னோடு அழைத்துச்சென்றார்.

a) இயேசு பேதுருவை தன் சீடனாக அழைக்கும்போதே "கல்" என்ற பொருள் வரும் "கேபா" என்ற பெயரை வைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் எது நடந்தாலும் அசையாமல் உறுதியாய் இருக்கும்படி இயேசு பெயரை மாற்றுகிறார்.

யோவான் 1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து, நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.



b) ஒரு ஜெப ஆலைய தலைவனின் மகள் மரித்த செய்தி கேட்டவுடன் , இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு சென்று அற்புதம் செய்தார் (மாற்கு 5:35-42, லூக்கா 8:49-56). இந்த மூவர் தான் இயேசுவிற்கு பிறகு எருசலேம் சபைக்கு தலைமை தாங்கி வந்தனர்.

c) ஒரு முறை இயேசு இந்த மூவரை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுச் சென்று அங்கு அவர்கள் முன்பு "மறுரூபமானார்". மற்றும் எலியாயும், மோசேயும் இயேசுவோடு பேசியதை இவர்கள் கண்டார்கள். மட்டுமல்லாமல், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்கு செவிகொடுங்கள்" என்று சொல்லிற்று. (மாற்கு 9:2-10 , மத்தேயு 17:1-9, லூக்கா 9:28-36).

இந்த நிகழ்ச்சியை குறித்து பேதுரு சபைக்கு கடிதம் எழுதும் போது கூட, நாங்கள் கட்டுக்கதைகளை கேட்டு இப்படி ஊழியம் செய்யவில்லை, இயேசுவின் மகிமையை எங்கள் கண்களால் கண்டதால் பேசுகிறோம் என்று ஆணித்தரமாக எழுதுகிறார் (2 பேதுரு 1:16-18).

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)



இப்படியாக இயேசு தன் மகிமையை இந்த மூன்று முன்னனி சீடர்களுக்கு காட்டினார்.

d) எல்லா சீடர்களுக்கும் பிரதிநிதியாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசு கருதினார் . சில சயமங்களில் எல்லா சீடர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, பேதுருவிடம் இயேசு கேள்விகள் கேட்கிறார்.

பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி , நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு 26:40) & (மாற்கு 14:37)

அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்(லூக்கா 22:8)

தேவ தூதனும் அப்படியே சொன்னான்:

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான். (மாற்கு 16:7)



e) கெத்சமனே தோட்டத்தில் கூட இந்த மூன்று சீடர்கள் மிகவும் நெருங்கி இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பி, மற்ற சீடர்களை தூரமாக இருக்கவைத்து, இந்த மூன்று சீடர்களை மட்டும் தன்னோடு வரும்படி, ஜெபிக்கும்படி இயேசு சொல்லியுள்ளார்.

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். (மத்தேயு 26:36-37)



f) கடைசியாக தன் சபையை மேய்க்கும் பொறுப்பை பேதுருவிடம் இயேசு தருகிறார்

அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி; யோனாவின்குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர், என்ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைநேசிக்கிறாயா என்றார், என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக்கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு, ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான்உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு, என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்றார்(யோவான் 21:15, 17).



இப்படியாக இயேசு பேதுருவை பல முக்கியமான சமயங்களில் தன்னோடு வைத்துக்கொண்டு, பேதுருவை தயார்படுத்தினார். பேதுருவை மட்டுமல்ல யோவானையும், யாக்கோபையும் அப்படியே தயார் படுத்தினார், ஆனால், பேதுருவிடம் அதிக பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால், பிஜே அவர்கள் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துக்கொள்ளாமல், ஒரு நிகழ்ச்சியில் இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டதை மிகப்பெரிய குற்றமாக பாவித்து, பேதுரு தலைவன் பொறுப்பிற்கு தகுதியானவன் அல்ல என்று ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார். தவறே செய்யாதவன் தலைவன் இல்லை, தவறுகளை திருத்திக்கொள்பவன் தான் தலைவன் ஆவான்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றியது மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கு தேவையான குணங்கள் இயற்கையாக பேதுருவிடமும் இருந்தது, ஒரு துடிப்புள்ள தலைவனாக பேதுரு செயல்பட்டார், துன்ப நேரங்களில் முன் வரிசையில் நின்றார் இந்த பேதுரு.

பேதுருவின் தலைமைத்துவ குணங்கள் என்னவென்று சுருக்கமாக காணலாம்


a) மற்ற சீடர்களின் பிரதிநிதியாக பேதுரு தானே முன்வந்து பேசியுள்ளார்.

ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று தன் நண்பர்களுக்காகவோ, தன் கூட இருப்பவர்களுக்காகவோ வாய்ப்பு கிடைக்கும் போது முதலாவது பேசி விவரங்களை தெரிந்துக்கொள்வது. இதை பேதுரு செய்துள்ளார். இயேசுவோடு 12 பேர் இருந்தாலும், அவர்களில் பல சந்தர்பங்களில் பேதுரு மற்றவர்களுக்காக பேசியுள்ளார்.

அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். (மத்தேயு 15:15)

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)



இயேசு பொதுவாக எல்லா சீடர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு, பேதுரு தானே முந்திக்கொண்டு பதில் அளித்தார்.


அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:15-16)



b) இயேசுவின் மீது திடமான நம்பிக்கை உள்ளவர் பேதுரு:

இயேசு ஒரு முறை "தன் மாம்சம் போஜனம் என்றும், தன் இரத்தம் பானமாக இருக்கிறது என்றும், இதை புசித்து, பானம் பண்ணுகிறவன்" என்றேன்றும் பிழைப்பான் என்று சொல்லும் போது, இது கடினமான உபதேசம் என்றுச் சொல்லி பல சீடர்கள் பின்வாங்கிப்போனார்கள், அப்போது இயேசு என்னை விட்டு போக மனதாக இருக்கிறீர்களா? என்று எல்லாரையும் கேட்டபோது, பேதுரு "ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நாங்கள் எங்கே போவோம், நீர் கிறிஸ்து" என்று அறிக்கையிட்டார். பல சீடர்கள் முறுமுறுக்கும் போது கூட,பேதுரு தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கு பதிலாக தானே பேசினார்.

அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:66-69)



c) விசுவாச வீரர் பேதுரு:

ஒரு முறை சீடர்கள் படகில் செல்லும் போது, காற்று பலமாக அடிக்கும் நேரத்தில், இயேசு தண்ணீரில் நடந்து அவர்களிடத்தில் வரும்போது, நீர் இயேசுவானால் நானும் தண்ணீரில் நடக்கட்டும் என்று தைரியமாக சொல்லி, இயேசுவின் அனுமதி பெற்று தண்ணீரில் நடந்தவர் இந்த பேதுரு. அப்படி நடந்து வரும் போது, காற்றையும், அலைகளையும் கண்டு பயந்து மூழ்கும் போது, இயேசு பேதுருவை பிடித்து தூக்கி எடுத்து மறுபடியும் இருவரும் படகு வரை தண்ணீரில் நடந்து வந்தது, ஒரு சாதாரண மனிதனான பேதுருவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. (மத்தேயு 14: 28-32)



பேதுரு தண்ணீரில் நடந்தாலும், பிறகு சந்தேகப்பட்டு மூழ்கினார் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தைகளை நம்பி தண்ணீரில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு அதிக விசுவாசம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

d) பேதுருவின் அதிக அன்பு, இயேசுவின் வருகையை புரிந்துக்கொள்ள தடையாக இருந்தது:

பேதுரு மற்ற சீடர்கள் போல இயேசுவின் மீது அதிக அன்பு வைத்து இருந்தார், இன்னும் சொல்லப்போனால, அவர்களை காட்டிலும் அதிகமாகவே அன்பு வைத்து இருந்தார், பேதுரு இயேசுவை "மேசியாவாகிய கிறிஸ்து" என்று நம்பியிருந்தார், ஆனால், அந்த மேசிய எப்படி மக்களுக்கு விடுதலையை கொடுப்பார் என்பதை அறிந்துக்கொள்ள வில்லை. அதனால், தான் இயேசு தன் மரணம், பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, பேதுரு புரிந்துக்கொள்ளாமல், இயேசுவை தனியாக அழைத்து இப்படி உமக்கு நடக்ககூடாது என்று கடிந்துக்கொண்டார்.

இயேசுவின் மீதுள்ள அதிகமான அன்பு அவரை இப்படி பேசச்சொல்லியது, நாம் நேசிக்கும் நபர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம்? அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா? இல்லை அல்லவா? அது போலவே, உங்களுக்கு சிலுவை பாடு வேண்டாம், மரணம் வேண்டாம், உயிர்த்தெழுதலும் வேண்டாம் என்று அறியாமையினால் இயேசுவிடம் சொல்லும் போது, இயேசு பேதுருவை கடிந்துக்கொள்கிறார்.

சிலுவை மரணம் வேண்டாமென்றும், உயிர்த்தெழுதல் வேண்டாமென்றும் சொன்ன பேதுருவைப் பார்த்து, இயேசு "பின்னாகப்போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கு ஏற்றதை சிந்திக்கிறாய்" என்று கடிந்துக்கொள்கிறார்.

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16: 21-23)



ஆனால், பிஜே அவர்கள் இயேசு ஒரு முறை பேதுருவை கடிந்துக்கொண்டதை பெரிதுபடுத்தி "பேதுரு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் இல்லை" என்று முடிவு செய்துவிட்டார்.

நாம் நம் பிள்ளைகளை கடிந்துக்கொள்வதில்லையா? ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா? நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா? அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா? இல்லை பிஜே அவர்களே இல்லை, இன்று பெரிய பதவிகளில் இருக்கும் நபர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் எத்தனை முறை பெற்றோர்களால், ஆசிரியர்களால் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வார்கள். அவர்கள் வகுப்பில் பட்ட அந்த அவமானமே அவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டுவந்தது என்று பெருமையாக சொல்லி இன்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை" என்று ஓயாமல் 1400 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை இயேசு என்ன சொல்லிக்கொண்டு இருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

எனவே, ஒரு முறை இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டது ஒன்றும் பெரிய தவறில்லை.

e) இயேசுவை பாதுகாப்பதாக நினைத்து, வாளை எடுத்த பேதுரு:

இயேசுவிற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, யுதர்கள் சிப்பாய்களோடு வந்து இயேசுவை கைது செய்யும் போது, வாளை எடுத்து ஒரு சிப்பாயின் காதை வெட்டியவர், இந்த பேதுரு. இவர் செய்தது தவறு என்று இயேசு சொன்னது உண்மையென்றாலும், 12 சீடர்கள் இருக்கும் போது, தன் தலைவனுக்கு ஒரு தீங்கு வரும் போது அதை எதிர்த்து நின்ற இந்த பேதுருவை இயேசு தன் சபைக்கு தலைமை தாங்க நியமித்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான் 18:10-11)



இங்கு நான் பேதுரு செய்தது சரியானது என்று சொல்லவில்லை, ஆனால், உலகபிரகாரமாக பார்க்கும் போது தன் குருவிற்கு வரும் ஆப‌த்தை கண்டு பேதுருவினால் சும்மா இருக்கமுடியவில்லை என்று சொல்லவந்தேன்.

f) இயேசுவிற்கு என்ன நடக்கும் என்று அறிய ஆவலோடு நீதிமன்றம் வரை சென்றவர் இந்த பேதுரு:

சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:15-16)

பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு 26:58)



இயேசுவை யூத ஆசாரியர்கள் பிடித்துச் சென்ற போது, பேதுருவும் மற்ற சீடர்களும் ஓடிச்சென்றவர்கள் தான், ஆனால், பேதுருவும் இன்னும் ஒரு சீடனும் இயேசுவை கொண்டுச்சென்ற பிரதான ஆசாரியன் வீடுவரைக்கு சென்று முடிவு என்ன ஆகிறது என்று பார்க்க சென்றார்கள்.

மற்ற 9 பேர் ஓடிப்போனார்கள். இந்தச் செயல் மற்ற சீடர்களை விட பேதுருவும், இன்னொரு சீடனும் சிறிது முக்கியமானவர்களாக பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ? இவர்களைத் தான் பிஜே அவர்கள் தன் புத்தகத்தில் பேதுருவை விட சிறந்த்வர்கள் என்று குறிப்பிடுகிறாரோ?

அப்படியானால், பேதுரு ஏன் இயேசுவை அங்கு மறுதலித்தார்? என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் "பொய் சொல்கிறார் ". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா? அது தான் முக்கியம்.

எந்த வாய் இயேசு எனக்கு தெரியாது என்று சொன்னதோ, அதே வாய் அதே எருசலேமில் பல ஆயிரம் மக்களுக்கு இயேசுவைப்பற்றி பிரசங்கம் செய்தது, முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கின்றது.

பிஜே அவர்களே, நீங்கள் பேதுரு எப்படி விழுந்தார் என்று பார்க்கிறீர்கள், ஆனால்,இயேசு பேதுரு விழுந்து எழுந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தார். நீ குணப்பட்ட பின்பு என் மந்தையை மேய்ப்பாயாக என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றி சொல்கிறார்.

g) சபை பொறுப்பை பேதுருவின் கையில் கொடுத்த இயேசு:

பேதுரு சுருசுருப்பானவர், மற்ற சீடர்களை விட சிறிது அதிக பிரசங்கித்தனம் உள்ளவர் (முந்திரிக்கொட்டை என்று சொல்வோமே அதுபோல), விசுவாசத்தில் தீரர், தண்ணீரில் நடந்தவர், தன் குருவை காப்பாற்ற முன்வந்தவர், அதே நேரத்தில் அறியாமையினால் பேசும் போது, இயேசுவால் கடிந்துக்கொள்ளப்பட்டவர். இயேசுவோடு பல அற்புதங்கள் நடைபெறும் போது, அவரோடு இருந்தவர்.

நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று 12 சீடர்களை இயேசு கேட்டபோது, "நீர் ஜீவனுடைய தேவனுடைய குமாரன், கிறிஸ்து" என்று அறிக்கையிட்டவர் பேதுரு. இப்படிப்பட்டவரிடம் பரலோகத்தின் திறவுகோலை இயேசு கொடுப்பேன், என்று சொன்னது ஆச்சரியமில்லையே.

h) முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசிய சுவிசேஷகர் பேதுரு:

இயேசு பரமேறிய பிறகு பெந்தகோஸ்தே நாளன்று, பல ஆயிரம் பேர் கூடி இருக்கும்போது, தான் பொய் சொன்ன அதே மக்களைப் பார்த்து, தைரியமாக எழுந்து நின்று, முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசி, 3000 பேரை தேவனின் மந்தையில் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் இந்த பேதுரு அல்லாமல் வேறு யார் இருக்கமுடியும்?


அப் 2:14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய், யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

அப் 2:23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

அப் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

அப் 2:41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.



இப்பொழுது சொல்லுங்கள், பேதுரு ஒரு கோழையா? வீரனா? மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது, எழுந்து நின்று அவர்கள் குழப்பதை தீர்த்தார் இந்த பேதுரு. இது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியா இல்லையா? இவைகள் உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே?

i) அரசர்களுக்கு, ஆசாரியர்களுக்கு முன்பாக‌ தைரியமாக சாட்சி கொடுத்த பேதுரு:

பேதுரு யோவானோடு சேர்ந்து தேவாலயத்திற்கு சென்ற போது அங்கு ஒரு முடவன் நடக்க இயேசுவின் பெயரிலே அற்புதம் செய்து, பிறகு அதே தேவாலயத்தில் மிகவும் நீண்ட பிரசங்கம் செய்தார் ( அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 3, 4).

யூதாஸுக்கு பதிலாக இயேசுவை கண்களால் கண்டவர் ஒருவர் சாட்சியாக வேண்டும் என்றுச் சொல்லி ஒரு சீடனை 11 பேரோடு சேர்த்துக்கொள்ள முயற்சி எடுத்தவர் இந்த பேதுரு (அப் 1:15-1:26 வரை).

பேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் கைது செய்து, விசாரிக்கும் போது பேதுரு தன் நம்பிக்கையை குறித்து மிகவும் தைரியமாக சாட்சி சொன்னார். இவரது தைரியத்தை குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பயந்து பொய் சொன்ன அதே பேதுரு, இங்கு அரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் முன் நின்று தைரியமாக சாட்சி பகருகின்றார். "ஆமாம், இயேசு உயிர்த்தெழுந்தார் " என்று சாட்சி சொல்கிறார். இதை தைரியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்றுச் சொல்வது. இதை பிஜே அவர்கள் கவனிக்கவில்லையோ?

அப் 4:13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.14. சொஸ்தமாக்கப்ட்ட மனுஷனன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.

இன்னொரு முறை, ஆசாரியர்கள் இனி இயேசுவைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது, பயப்படாமல், உனக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிவது நல்லது என்று தைரியமாக பேசினார் இந்த பேதுரு.

அப் 5: 28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் . தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.



எருசலேமில் மாத்திரம் அல்லாமல், சமாரியாவிற்கும் சென்று ஊழியம் செய்தார். பேதுரு மிஷனரி ஊழியராக லித்தா, யோப்பா நாடுகளுக்கும் சென்று வந்தார் (அப் 9, 10 அதிகாரங்கள் ). இன்னும் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம்.

கல்லை மாணிக்கம் ஆக்கும் இயேசு:

பைபிளை பொருத்தமட்டில், ஒரு மனிதன் பழைய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, புதிய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, அவனை தேவன் தெரிந்தெடுக்கும் போது, அவன் பூரண குண லட்சணங்கள் உடையவனாக, தகுதி உடையவனாக இருப்பதில்லை, தேவன் அவனை அழைத்து தன் வேலைக்காக அவனை தகுதிப்படுத்தி, கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொடுத்து, பயன்படுத்திக்கொள்கிறார். இதே போலத்தான் பேதுருவும், கோழையாகவும், சிந்திக்காமல் சீக்கிரத்தில் பேசுகிறவராகவும் இருந்தார், இயேசுவை மறுதலித்தார், இருந்தாலும் அவரையே இயேசு பயன்படுத்திக்கொண்டார். இதோ இன்று நம்முன் "கிறிஸ்தவம் இயேசுவின் தெரிந்தெடுப்பு மிகச்சரியானது என்று சாட்சி பகருகின்றது". இதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பேதுருகூட ஒரு காரணம் என்றுச் சொன்னால், அது மிகையாகாது.

முடிவுரை:

கடைசியாக, பிஜே அவர்களே உங்கள் கணிப்பு தவறு, இயேசுவின் தெரிந்தெடுப்பு தான் மிகச்சரியானது என்பதை இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

பிஜே அவர்களுக்கு ஒரு சவால்: உங்கள் கணிப்பு சரியானது என்றும், பேதுருவைத் தவிர மற்ற சீடர்கள் 9 பேர் (உங்கள் கணக்குப்படி) தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று நிருபியுங்கள். பேதுரு தான் மிகச்சரியானவர் என்பதை நான் விவரித்தேன், என் பங்கு முடிந்துவிட்டது, உங்கள் பங்கு உள்ளது அதை நிருபித்து, உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றுகிறேன் என்றுச் சொல்லி, மற்ற சீடர்களை குறைவாக மதிப்பிடவில்லை, இதற்கு பதிலாக "உங்களில் தலைவனாக இருக்கவிரும்புகிறவன் மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று சொல்லி எச்சரித்தார் ". இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தானே சீடர்களின் கால்களை கழுவினார். தன்னை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றார் (இயேசு(கடவுள்) சீடர்களின் கால்களை கழுவலாமா? என்ற தலைப்பில் பிஜே அவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்கு என் பதிலை மற்றுமொரு கட்டுரையில் விவரிக்கிறேன்.)

மற்ற சீடர்களும் பேதுருவின் தலைமையை மிகவும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தார்கள்.

இன்று இஸ்லாமுக்கு சவால் விட்டு வீரநடை போட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசு என்றுச் சொன்னால், அதன் மிது தலை நிமிர்ந்து நிற்கும் தூண்கள், அவரது சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் ஆவார்கள். அவர்களில் ஒரு தூண் தான் பேதுரு என்பவர். கிறிஸ்தவம் இன்று ஒரு ஆலமரம் போல மிகப்பெரிய மரமாகி எல்லாருக்கும் நிழல்கொடுத்துக்கொண்டு இருக்கிறதென்றால், இதற்கு முதல் காரணம், அன்று இயேசு எடுத்த சரியான முடிவு தான் என்பதை தாழ்மையுடம் இஸ்லாமிய உலகிற்கு முக்கியமாக பிஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

இதோடு பிஜே அவர்களின் "இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிட தெரியவில்லை " என்ற தலைப்பிற்காக என் பதில்களை முடித்துக்கொண்டு, என் அடுத்த பதிலை சந்திக்கும் வரை கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக என்று கூறி முடிக்கிறேன்.



பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3.
பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4.
பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

7.
Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1
TAKEN FROM : http://isakoran.blogspot.com/2008/02/answering-pj.html

February 14, 2008

இங்கர்சாலும் கிறிஸ்தவமும்

கிரியையில்லாத கிறிஸ்தவம்...



நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்:
"சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"

இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

February 10, 2008

நாத்திகர் ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

இங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

February 9, 2008

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

            
முன்னுரை: தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல், இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

என்னுடைய இந்த கட்டுரை, கிறிஸ்தவ மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு இவர்கள் புது அர்த்தத்தை கொடுத்துள்ளதைப் பற்றி அலசுகிறது. இந்த வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் உள்ளது. கிறிஸ்தவர்களை மாற்றுமத நண்பர்கள் " அல்லேலூயா கூட்டம் " என்று கூடச் சொல்வார்கள்.


இக்கட்டுரையில் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "தமிழ் முஸ்லீம்" தளம் என்ன பொருள் சொல்கிறது என்றும், உண்மையில் இவ்வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றும், இப்படி இஸ்லாமியர்கள் மாற்றுமத வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கற்பிப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் பார்க்கப்போகிறோம்.

1. தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரை:

கீழ் கண்ட தொடுப்பில், தமிழ் முஸ்லீம் தளத்தின் " பிற மத வேதங்களில் இஸ்லாம் " என்ற கட்டுரையை படிக்கலாம்.

பிற மத வேதங்களில் இஸ்லாம் தொடர் 3 http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3-4.htm

இக்கட்டுரையில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நான் இக்கட்டுரையில் "கிறிஸ்தவ வேதத்தில் காணப்படும் அல்லேலூயா" என்ற வார்த்தையைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி மட்டும் சொல்லப்போகிறேன். மற்ற விவரங்களைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால், தனி கட்டுரையாக பார்க்கலாம். இக்கட்டுரையில் தமிழ் முஸ்லீம் தளம் எழுதிய வரிகள் பச்சை வண்ணத்தில்(and Bold) கொடுக்கப்படுகிறது


அல்லேலூயா என்ற வார்த்தையைப் பற்றி தமிழ் முஸ்லீம் தளம் கூறியது :


தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!



இனி இவ்வார்த்தைக்கு உள்ள உண்மை பொருளைப்பற்றி பார்க்கலாம்.

2. Hallelujah, Halleluyah, or Alleluia (அல்லேலூயா) வார்த்தையின் பொருள் என்ன?

அல்லேலுயா(Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது:

1. Halelu -- அல்லேலு

2. Yah -- யா


"Halelu" என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise) என்று பொருளாகும்.

"Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும். "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்பது.

இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் " யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh " என்பதாகும்.

[இயேசுவின் (Yeh oshua) பெயரிலும் "Yah" இருப்பதை கவனிக்கலாம். இயேசு என்றால், "யேகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். Source: http://en.wikipedia.org/wiki/Jesus ]

இந்த விவரங்களோடும் இன்னும் மேலதிக விவரங்களுக்கு "விகிபீடியா" என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள். Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah


Hallelujah, Halleluyah, or Alleluia , is a transliteration of the Hebrew word הַלְלוּיָהּ (Standard Halləluya, Tiberian Halləlûyāh) meaning "[Let us] praise (הַלְּלוּ)." It is found mainly in the book of Psalms. The word is used in Judaism as part of the Hallel prayers, and in Christian praise. It has been accepted into the English language, but its Latin form Alleluia is used by many English-speaking Christians in preference to Hallelujah.

The word hallelujah mentioned in Psalms is the Hebrew word for requesting a congregation to join in praise. "Hallel" means to recite praise, "hallelu" is the plural form. The grammatical extension "yah" is a way of expressing magnanimity[1], hence halleluyah means "a great praise."

There are other ways of interpreting this word, as the Hebrew language does include the possibility for many meanings in the same word; thus it can also be understood to mean " Praise (הַלְּלוּ) the LORD (יָהּ) or God ." This interpretation comes from the idea that the suffix "-yah" could be a shortened form of the name "Yahweh/Jehovah," although this would make it an exception, and not typical of standard Hebrew.[2]

For most Christians, "Hallelujah" is considered the most joyful word of praise to God, rather than an injunction to praise Him. In many denominations, the Alleluia, along with the Gloria in Excelsis Deo, is not spoken or sung in liturgy during the season of Lent, instead being replaced by a Lenten acclamation.

The term is used 24 times in the Hebrew Bible (mainly in the book of Psalms (e.g. 111-117, 145-150, where it starts and concludes a number of Psalms) and four times in Greek transliteration in Revelation.
(emphasis mine)


எபிரேய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் கூறமுடியும், அதன்படி பார்த்தால், "Yah" என்ற வார்த்தைக்கு "Great" என்ற பொருளும் உள்ளது. அதன் படி இவ்வார்த்தையை "A Great Praise": என்று கூடச் சொல்லலாம் என்று விகிபீடியா சொல்கிறது.

3. தமிழ் முஸ்லீம் தள பொருளில் உள்ள குறைபாடு :

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது
.


இவர்களின் கருத்துப்படி, "அல்லேலூ யா – Hallelu yah " என்ற வார்த்தையில் உள்ள "யா - Yah " என்பது ஒரு விளி வேற்றுமைச் சொல்லாகும் . இது இவர்களின் சொந்தக்கருத்து, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..

ஆனால், உண்மையில், "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லா" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும்.

இவ்வார்த்தை ஒரு எபிரேய(ஹிப்ரு) மொழி வார்த்தை என்று தெரிந்த உங்களுக்கு, இதன் பொருள் என்ன என்று தெரியாமல் போனதென்ன? அல்லது பொருள் தெரிந்துக்கொண்டே "யார் நம்மை" கேள்வி கேட்பது என்று நினைத்தீர்களா?

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை .


உண்மை தான் இவ்வார்த்தைக்கு எபிரேய மொழியின் பொருள் "யோகோவாவை துதி - Praise Yahweh" என்று இருக்கும் வரை, இதை திருப்பிப்போட்டாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால், பிரச்சனை "யா " என்ற வார்த்தை ஒரு நபரை(Yahweh) குறிக்கும் போது, அதை ஒரு "விளி வேற்றுமை " என்று சொல்கிறீரே அது தான்.

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :


கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்

அவ்வளவுதான் வித்தியாசம்!




உண்மையில் இந்த இரண்டு வரிகளை படிக்கும் பாமர கிறிஸ்தவன் "அடடா என்ன அருமையாக சொல்லியிருக்கிறார்கள் முஸ்லீம் சகோதரர்கள், இது அல்(ல)வா ஒற்றுமை என்பது " என்று மெய் மறந்துப்போவான்.

இவ்வளவு அருமையான ஒற்றுமை அல்லது சின்ன வேற்றுமையை இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம், அல்லது மக்கள் காட்டுவார்களானால், நான் 1008 "சலாம்" சொல்வேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்:


"யா அல்லாஹ் " என்ற சொற்றொடரில்:

யா = விளி வேற்றுமை (உங்கள் கருத்துப்படி, எனக்கு அவ்வளவு இலக்கணம் தெரியாது)
அல்லாஹ் = பெயர்ச் சொல்

உண்மையில் "யா அல்லேலு" என்ற சொற்றொடரில் :

யா = பெயர்ச் சொல் (Yah, or Yahweh)
அல்லேலு = துதித்தல், Praise (வினைச்சொல்)

எவ்வளவு அழகாக " அல்லாஹ்" மற்றும் "அல்லே லு" என்ற வார்த்தைகளில் சில எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வருவதால், இவைகளை ஒன்றாக இணைத்து "இஸ்லாமிய முறையில்" தவறான ஒரு பொருளை கொடுத்து, மக்களை(உங்கள் தளத்தில் படிக்கும் வாசகர்களை, என்னோடும் சேர்த்து) முட்டாளாக்கியுள்ளீர்கள். யாருக்கு வரும் இந்த கலை.

4. சில கேள்விகள்:

உங்கள் வழிக்கே வருகிறேன். அல்லேலூயா என்றால், "யா அல்லாஹ்" என்பதற்கு சமம் அல்லது அதற்கு இணையானது(கடைசி சில எழுத்துக்கள் தான் வித்தியாசம்) என்று சொல்கிறீர்களே, அப்படி நீங்கள் சொல்வதை "நடைமுறையில்" கொண்டுவரமுடியுமா?

அதாவது,

1. உங்கள் மசூதிகளில், அல்லது நீங்கள் எங்கேயெல்லாம் "யா அல்லாஹ்" என்றுச் சொல்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "அல்லேலு யா" என்றோ அல்லது "யா அல்லேலூ" என்றோ சொல்லவேண்டும் என்று உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு கட்டளையிட முடியுமா?

2. "அல்லேலுயா – Praise to God " என்ற வார்த்தைக்கு இணையான அரபி வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - Alhamdulillah " என்று விகிபீடியா சொல்கிறது. முஸ்லீம்கள் பல செயல்களின் போதும், இன்ன பிற நேரங்களிலும் "அல் ஹம்து லில் லாஹ்" என்றுச் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் "அல் ஹம்து லில் லாஹ்" என்று சொல்வதற்கு பதிலாகவாவது, "அல்லேலூயா" என்று சொல்லமுடியுமா ?


Source http://en.wikipedia.org/wiki/Alhamdulillah

Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning "Praise to God" or "All praise belongs to God," similar to the Hebrew phrase Halelu Yah. In everyday speech it simply means "Thank God!" It is used by Muslims as well as Arabic-speaking Jews and Christians , but primarily by Muslims due to centrality of this specific phrase within the texts of the Quran and the speech/sayings of Muhammad.

3. அரபி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் "அல்(the) ஹம்து(Praise) லில்(Preposition for, to etc..) லாஹ்(God or Allah)" என்று சொல்கிறார்களாம், ஏனென்றால், அரபி பைபிளில் "தேவன்" என்ற இடத்திலே "அல்லாஹ்" என்று மொழிபெயர்த்து விட்டார்கள். எனவே, அரபி பேசும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள முஸ்லீமகள் (குறைந்தது உங்கள் தளத்தை படிக்கும் முஸ்லீம்களாவது) "அல்லேலூயா" என்று சொல்லுங்கள் என்று உங்களால் உங்கள் தளத்தில் எழுதமுடியுமா ?

5. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள் :

அன்பு சகோதரர், சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், ( கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி ) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரி, முதலில் அதை படித்து, ஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்து, உங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள் .

முடிவுரை: இனியாவது மாற்றுமத கட்டுரைகளை எழுதும் போது, சிறிது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்துக்கள் வேதங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்கள், அதில் இன்னும் என்னன்ன குழப்படிகள் செய்துள்ளீர்களோ? இறைவனுக்குத் தான் வெளிச்சம் "யா அல்லேலு" .


http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

February 8, 2008

கனிகளினாலே அந்த மரங்களை அறிவீர்கள்

சமீபத்தில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அதில் கட்டுரையாளர் தன்னுடைய அனுபவம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

ரயில் ஒன்றில் டி.டி.ஆர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த அவர் ஒரு முறை ரயிலில் டிக்கெட் பரிசோதிக்க வந்த போது முதல் வகுப்பு பெட்டியில் கழிவறைக்கு அருகில் செய்தித் தாள் ஒன்றை விரித்து உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒரு வெளிநாட்டு நபர்.
“இங்கே அமரக் கூடாது நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லையா” என்று கேட்டபோது பயணி டிக்கெட்டை எடுத்து நீட்டியிருக்கிறார்.

டிக்கெட் வாங்கிய பின் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர் என்று கேட்டபோது, “என்னுடைய இடத்தில் இன்னொரு நபர் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் சண்டை போட எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர்.

அந்த வார்த்தை அவரிடம் ஏற்படுத்திய பாதிப்பு அவருக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி அறியவும், கிறிஸ்த்தவத்தைப் புரிந்து கொள்ளவும் வேண்டிய ஆர்வத்தைத் தூண்டியது என தன்னுடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்பது நம்மை மட்டுமல்லாமல் நாம் சார்ந்த மதத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த மதத்தைச் சார்ந்தவன் இப்படித்தான் இருப்பான் என்பன போன்ற பொதுப்படையான முடிவுகளுக்குக் கூட வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளே காரணமாகி விடுகின்றன.

இயேசு சொல்கிறார்.

கனிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் காணுங்கள்” பேச்சை வைத்து மனிதர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் செயல்களை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப் படவேண்டும் என்பதையும் இயேசு கிறிஸ்து மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.

“உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” எனவே நற்செயல்களைச் செய்யுங்கள் என்கிறார் இயேசு.
“நீங்கள் மனம் திரும்பி விட்டீர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்” என்பதே இயேசுவின் போதனை. அடையாளங்கள் சொல்லும் மதம் தேவையில்லை, அர்த்தங்களைச் சொல்லும் மதமே தேவை என்பதையே இயேசுவின் போதனை தெளிவு படுத்துகிறது.

பழைய ஏற்பாடு “வந்து கேளுங்கள்” என்னும் அடிப்படையில் அமைந்திருந்தது என்றும் புதிய ஏற்பாடு “வந்து பாருங்கள்” எனும் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும் விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

இயேசுவும் “வந்து பாருங்கள்” என்றே சீடர்களை அழைத்தார். தன்னுடைய வாழ்க்கை ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடி போன்று தெளிவாக இருப்பதை வெளிப்படுத்தினார்.
மேடைகளில் சமத்துவம் முழங்கிவிட்டு, கீழே இறங்கி குழு மனப்பான்மையுடன் திரியும் இரட்டைப் போக்கை கடைபிடிக்கும் இன்றைய மனநிலை இயேசுவிடம் இருக்கவில்லை.
பணிவைப் பற்றி போதித்த இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவி துண்டால் துடைத்தார்.
“ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை “ என்று சமத்துவம் போதித்தவர், உயிர்த்தபின் பெண்ணுக்கே முதல் காட்சியளித்தார், பெண்களை சீடர்களாய் கொண்டிருந்தார்.

பெற்றோரை மதிக்க வேண்டும் என்றவர், தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்தார். தன்னுடைய முதல் புதுமையைக் கூட தாயின் விருப்பத்திற்காகவே செய்தார்.
அன்பைப் போதித்த அவர் தொழுநோயாளிகளையும் தொட்டு சுகமாக்கினார், பேய்பிடித்து அகோரமாய் இருந்தவனையும் அரவணைத்தார்.

இயேசுவின் வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடையே பள்ளத்தாக்குகள் இருக்கவில்லை.

இயேசு இதையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கை இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையின் அனுபவங்களின் வெளிச்சமாய் இருக்க வேண்டும்.
அன்னை தெரசா வார்த்தையை வாழ்ந்து காட்டினார்.

வெறும் போதனைகள் மட்டும் செய்துவிட்டு வாழ்க்கையில் சுயநலம், பொறாமை, கோபம், எரிச்சல், பகை என பட்டியலிட்டு பாவங்களை அணிந்து கொள்பவர்களை நோக்கி இயேசுவே சொல்கிறார்.

செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்

http://jebam.wordpress.com/2008/02/07/words_act/

February 5, 2008

சூடு சொரனை உள்ளதா?எனகேட்ட இஸ்லாம் இணைய பேரவைக்கு பதில்

உமருக்கு சூடு சொரனை உள்ளதா?எனகேட்ட இஸ்லாம் இணைய பேரவைக்கு பதில்

நேரடி மேடை விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு தயார் என்று நாம் சொன்னபோது, அதற்கு பதில் அளிக்கமுடியாமல், உண்மை இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அதை அப்படியே வெளிக்காட்டியுள்ளார்கள், இஸ்லமைய இணைய பேரவை அன்பர்கள்.
அவர்கள் என்ன என்ன அவதூறு வார்த்தைகள் பேசியுள்ளார்கள் என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். இருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அவர்களைப்போல வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.


நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் என்றும், ஒரு மரத்தின் கனியினால் அந்த மரம் அடையாளம் காட்டப்படும் என்றும் இயேசு சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது பாருங்கள். இஸ்லாம் என்னும் மரத்தின் அடையாளம், இஸ்லாமியர்களின் கனிகளால் அறியப்படும்.
இனி அவர்களின் வரிகளுக்கு என் பதிலை காணலாம்


[quote]
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.
அன்புள்ள இணைய வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும் நல்லலுள்ளங்களுக்கு மத்தியில், கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள், கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு, தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.


நாங்கள்: கள்ளிச்செடி, விஷவித்துக்கள்நீங்கள்: கண்ணியம் பண்பாடுகளை பேணிக்காப்பவர்கள்
தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கமில்லையா உங்களுக்கு? படித்துப்பாருங்கள், யார் விஷவித்துக்கள் என்று புரியும்


[quote]
ஜாதி மத பேதமின்றி மாமன், மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில், ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரத்த ஆறு, தீவிரவாதம் இதற்கு நாங்கள் தான் காரணம் இல்லையா? இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள்? அப்படி நடக்கக்கூடாது என்று தானே நாங்கள் எழுத்துவிவாததிற்கு அழைக்கிறோம். உங்களுக்கு நல்ல நகைச்சுவை சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன்.

[quote]இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும், இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது.

மன்னிக்கவும், "உலகம் போற்றும் உத்தமர் இறைத்தூதர் நபிகள் நாயகம்" என்று சொல்லி நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உலகம் அவரை அப்படி சொல்லவில்லை, இஸ்லாம் உலகம் என்று சொல்லிக்கொள்ளுங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
முகமதுவையும், இஸ்லாமையும் ஒருவர் புகழ்ந்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்:


1. அப்படி புகழுபவர் இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
2. அல்லது அவர் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் அடிப்படையும் தெரியாதவராக இருக்கவேண்டும்.
உலகம் போற்றும் உத்தமர் என்றுச் சொல்லி, நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.


[quote]அவைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக, நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர்.

பதில் அளித்துக்கொண்டு இருக்கிறார்களா? யார் அய்யா அது, இது வரையில் "ஈஸா குர்‍ ஆன்" தளத்திற்கு பதில் என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையையும் படிக்கவில்லையே.
தமிழ் முஸ்லீம் தளமும் ஓரிரு பதில்களை கொடுத்துவிட்டும், ஒதுங்கி விட்ட செய்தி உமக்கு தெரியாதோ?
நேசமுடம் தளம் பொய்யும் புரட்டையும் சொல்லி, மாட்டிக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி மூச்சு விடாமல் இருப்பதை உமக்கு தெரியாதோ?
பாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே தெரியமாட்டேங்கிறது.
சரி, போகட்டும், ஈஸா குர்‍ஆன் தளத்திற்கோ, உமருக்கோ யார் யார் பதில் அளித்தார்கள் என்று ஒரு பட்டியலை கொடுங்கள் பார்க்கலாம்? சரி வேண்டாம், நீங்கள் தான் பதில் அளித்து பாருங்களேன்?


[quote]தன்முகத்தை மறைத்த, தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க வக்கில்லாத, வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை நடத்துகின்றனர்.

என்ன செய்வது, இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் பெற்றோர் வைத்த பெயரையும் பயன்படுத்தாத அளவிற்கு "முஸ்லீம்களுக்கு கண்ணியத்தோடும், பண்பாடோடும்" இருப்பதால், நாங்கள் இணையத்தில் ஒளிந்துக்கொண்டு எழுதுகிறோம்.
இஸ்லாம் அல்லாத மற்ற இன மக்கள் நல்லவர்களாக இருப்பதால், நீங்கள் உங்கள் பெற்றோர் வைத்த பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? ஆனால், எங்களுக்கு அப்படி இல்லையே?
சாலையில் போகும் போது, பன்றிக்கூட்டம் எதிரே வரும் போது, நாம் தான் ஒதுங்கவேண்டும், இல்லையானால், அதன் செறு சகதி எல்லாம் நம்மீது படுமே.
நான் திருட்டு வலைப்பூவை நடத்துகிறேன் என்றுச் சொல்கிறீர்களே, யூதர்களை கொல்லையிட்டது யார்? உங்கள் முகமது அல்லவோ? பைபிளின் விவரங்களை கொல்லையிட்டது யார்? உங்கள் அல்லா இல்லையோ?
என்னவோ, யாஹூ தளமும், கூகுள் தளமும் உங்கள் அப்பாவிற்கு சொந்தமானதாகவும், அதை நான் திருடிவிட்டு பயன்படுத்திக்கொள்வதாகவும் எழுதுகிறீர்கள்?
என்ன இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் சொந்த பெயரை சொன்னால், பதில் அளித்துவிடுவீர்களோ?
நீங்கள் தான் எங்களுக்கு பெயரை வைத்துவிட்டீர்களே, கள்ளிச்செடி, விஷ ஜந்துக்கள், திருட்டு தளங்களை நடத்துபவர்கள், சூடு சொரனை இல்லாதவர்கள் என்று வைத்துவிட்டீர்கள் அல்லவா. அதுவே எங்களுக்கு போதும்.


[quote]மேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல் உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார்.

இணையத்தில் திருட்டு தளம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன். இஸ்லாம் இணைய பேரவை போல இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்களேன்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல, ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஒரு சில கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிவிட்டு, நாங்கள் பதில் அளித்தவுடம், இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கோணத்தில் காணாமல் போன இஸ்லாமிய ஆசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரைகள் எழுதும் தளங்களைப் போல இருக்குமா? சிறிது விளக்குங்களேன்.


[quote]கிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது கூட்டாளிகளையும் கடந்த 20-01-2008 அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும். நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த ஆசாமிகள், மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க, இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அய்யா! ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்களை நம்பி ஒரு சுய நினைவு உள்ள எந்த‌ மனிதனாவது மேடை ஏறுவானா?
வெறும் கட்டுரை எழுதியதற்கே:

1) பேடிகள்
2) தொடை நடுங்கிகள்
3) கள்ளிச்செடிகள்,
4) விஷ ஜந்துக்கள்
5) சூடு சொரனை இல்லாதவர்கள்
என்று அவதூறு சொல்லும் நீங்கள்.
உங்களுக்கு முன்பாக மேடையில் ஏறி பேசினால் என்னவாகும் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா?அதாவது ஒரு பைபிள் வசனம் ஞாபத்திற்கு வருகிறது.
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி(நீதிமொழிகள் 17:12 ).


[quote]
இஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும், நபிகளாரைத் திட்டியும், குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம் எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள் எழுதிய விஷயங்கள் பொய் என்றும், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம்.

ஓகோ, எழுத்து விவாதத்திற்கு எங்களோடு வந்தால், தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?
ஏனைய்யா? எழுத்துவிவாதம் பலனளிக்காது? "பலன் அளிக்காது" என்றால், இஸ்லாம் தோல்வி அடைந்துவிடும் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா?
ஏன் மேடையில் பேசப்போகும் அதே வாய், எழுதும் போது பேசாதா? மேடையில் பேச துடிக்கும் மூளை எழுதும் போது செயல் இழந்துவிடுமா?மேடையில் பேசும் போது, அசைக்கப்படும் கை, எழுதும் போது எழுத மறுக்குமா?
என்ன நண்பர்களே பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?
சராசரி இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எழுத்துவிவாதத்திற்கு வராமல் இப்படி ஏதோதோ எழுதிக்கொண்டு இருப்பதிலிருந்து, உங்கள் தோல்வியை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


[quote]
ஆனால் ஓடிவிட்டார்களே! எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள் தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

என்ன இஸ்லாமிய இணையமே உங்களுக்கெல்லாம் இதயம் என்று ஒன்று இருக்கவே இருக்காதா?
50க்கும் அதிகமாக கட்டுரைகளை நான் எழுதி பதித்து இருந்தால், ஒரு கட்டுரைக்கும் பதில் அளிக்காமல், நாங்கள் வெற்றிப் பெற்றோம், நாங்கள் வெற்றிப் பெற்றோம் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை? இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை? உங்களை எப்படி புரிந்துக்கொள்வது?


[quote]
சரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே, நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள் விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா?.
இதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும் பொய்களாகவும், இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை.


ஈஸா குர்‍ ஆன் தளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.
நான் தான் ஏற்கனவே, என் தளத்தில் பல விவாத தலைப்புக்களில் பதில் அளித்துள்ளேன்.குர்‍ ஆன் சொல்லும் விவரங்கள் பொய் என்று எழுதியுள்ளேன்.முகமது நபி இல்லை என்று சொல்லியுள்ளேன். பதில் அளித்துள்ளேன்.பைபிளின் தேவன் அல்லா இல்லை என்று சொல்லியுள்ளேன்.
பல கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். பல இஸ்லாமிய தளங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.எங்கே, உங்கள் இஸ்லாம் தளங்களில் "எங்கள் தள பெயர் எழுதி, இதற்கு மறுப்பு" என்று கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்களா?
இதோ இந்த பதிலிலேயே, என் பெயரை குறிப்பிடாமல், தளத்தின் பெயரை குறிப்பிடாமல் நீங்கள் எழுதும் போதே புரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறீர்கள் என்று.


[quote]
முதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று வெளியிடுவது அவசியமா? அறிவுடமையா? சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால், இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்கள் தங்கள் பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப் பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

மறுபடியும் பொய் சொல்கிறீர்கள். யார் என் தளத்திற்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்கள்? அந்த தளத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்?

[quote]
இஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன் அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.

உங்களுக்கு விவாத அழைப்பு அனுப்பவேண்டுமானால், மேள தாளத்தோடு, ஊரையெல்லாம் கூட்டி, முதல் மரியாதை செய்து, வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவேண்டுமா?
இப்படி எங்களுக்கு முதல் மரியாதை செய்தா நீங்கள் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எங்கு கிறிஸ்தவத்தைப் பற்றி இஸ்லாம் பொய் சொன்னாலும், ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் வலிய வந்து பதில் சொல்கிறோம். ஆனால், நீங்கள், எவ்வளவு சொன்னாலும், பதில் சொல்லாமல், உதரி தள்ளிவிட்டு, ஒளிந்துக்கொள்கிறீர்கள்
.

[quote]
உதாரணமாக இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும் பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம் மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம்.

அப்படியா? ஆச்சரியமாக உள்ளதே, எங்கே நீங்கள் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் அளித்த தொடுப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்.

[quote]
காரணம் எவரும் பதில் சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை, பொய்தான், பிராடுதான், புரட்டுதான், இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள். மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை. எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல் விட்டுவிடுகிறோம்.

ஆமாம், யார் பிராடு, யார் செய்தது பித்தலாட்டம், யார் சொல்வது பொய் என்பதை ஒவ்வொரு நாளின் செய்தித்தாள் சொல்கிறது, அதை படிப்பதில்லையா நீங்கள்?
1. நிஜாமுத்தீன் அவர்கள் ஜீமெயிலில் ஒரு தில்லுமுல்லு செய்து, இன்றுவரை மூச்சு விடவில்லை.
2. நேசமுடன் தளம் இஸ்லாமுக்கு பல இலட்சம் பேர் மாறினார் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொன்னார், கேள்வி கேட்டால், பதிலைக்காணோம்.
3. தமிழ் முஸ்லீம் தளம் என்னடா என்றால் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு மிகவும் புத்திசாலி தனமாக பதில் சொல்வதாக கட்டுரை எழுதி, கேள்வி கேட்டதால், அல்லோலப்பட்டுள்ளது.
4. இன்னும் பிஜே அவர்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு சொந்த வீட்டு பிரச்சனை(இஸ்லாம் குழுக்கள்) தீர்த்துக்கொள்ளவே நேரமில்லை, நான் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் எழுத அவருக்கு ஏது சமயம்?
கிறிஸ்தவத்தைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும்
.

[quote]
நாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட, இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள்? என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை.

அய்யய்யோ அறிவு பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களே... இறைவா எங்கு சென்று நான் முறையிட

[quote]
இதுதான் உண்மை! எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது, அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான் பாடுபட்டாலும், அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை, இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான்.

அய்யா! அந்த அல்லாவிற்கு தான் நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் மூலமாவது அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் எங்களுக்கு கொடுப்பனை இல்லை.
நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ, ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் எ(ன்)ங்கள் கட்டுரைகளை படித்தால், நிச்சயமாக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் நாளடைவில், இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.


[quote]
இவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப் பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை? என்றே சிந்திப்பார்கள்.

அதே மக்கள், இந்த உமர், இத்தனை கட்டுரைகள் எழுதினாலும் ஏன் ஒரு இஸ்லாம் தளமும், ஒரே ஒரு இஸ்லாம் தளமும் பதில் அளிக்க முன்வரவில்லை என்று சிந்திப்பார்கள்.

[quote]
இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உண்மையிலேயே இருந்திருந்தால் மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக இருப்பின், நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான் இவர்கள் சந்தித்துள்ளார்கள்.

அய்யா! முதலில் எங்களோடு எழுத்து விவாதத்திற்கு வாருங்கள். நீங்களாகவே வெற்றி பெற்றதாக கற்பனை செய்துக்கொள்ளவேண்டாம்.
எனக்கு சூடு சொரனை இருப்பதால் தான்:
1) கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யை சொல்லும் இஸ்லாமிய தளங்களை தேடி கண்டுபிடித்து பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.2) பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.3) ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாம் கல்வி தளத்திற்கு, இன்னும் உள்ள தளங்களுக்கும் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு சூடு, சொரனை எல்லாம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இவைகள் இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என் கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.
"அவன் எழுதுவது தவறு, கழிசடை" என்று சப்பை கட்டு கட்டி ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய உலகம், எல்லாரும் கட்டுரைகளை படிக்கிறார்கள். மறுப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இஸ்லாமின் மீது உள்ள நம்பிக்கை இருக்கும், நீங்கள் இப்படி ஒதுங்கி விட்டால், நாளடைவில் இஸ்லாமை காணமுடியாது.


[quote]
சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.எனவே இன்று நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய வலைப்பதிவாளர்களிடமும், தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;, உலக முஸ்லீம்களிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்யஇங்கே கிளிக் செய்யவும்.

http://www.iiponline.org/

ஏன் உங்கள் சத்திய மார்க்கம் உண்மை என்று "எழுத்து விவாதம்" மூலமாக நிருபித்தால், ஏற்றுக்கொள்ளாதா? அல்லது உங்களால் முடியாதா?

இனி நான் நிருபிக்கிறேன், கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு சூடு உள்ளது, சொரனை உள்ளது என்று உங்களுக்கே புரியும், இப்போதே புரிந்து இருக்கும்.

கடைசியாக, எழுத்து விவாதத்திற்கு வர உங்களுக்கு தைரியம், உண்மை நேர்மை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும்.

இனி, என் தளத்தில் "இஸ்லாம் இணைய பேரவையோடு விவாதம்" என்ற தலைப்பில் பல விவாத தலைப்புக்கள் கட்டுரைகள் வெளிவரும்". என் முதல் விவாத தலைப்பாக "முகமது ஒரு நபியா?" என்ற தலைப்பில் நான் கட்டுரைகளை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், பதில் தாருங்கள்.

முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை, திருமண உறவு போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவரும்.

இது, "இஸ்லாம் இணைய பேரவைக்கு ஈஸா குர்‍ஆனின் எழுத்து வடிவ விவாத அழைப்பு" . மேள தாளம் வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததாக நினைத்துக்கொண்டு, சூடு உள்ளவர்கள், சொரனை உள்ளவர்கள் பதில் அளிக்கலாம்.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=9384#9384

February 1, 2008

இஸ்லாத்தில் பெண் உரிமையை விவாதித்த மாணவருக்கு மரண தண்டனை

பொதுவாக இஸ்லாமில் கருத்து சுதந்திரமோ அல்லது பெண்ணுரிமையோ அல்லது மனித உரிமைகளோ கிடையாது என்பது பரவலாக எல்லொருடைய குற்றசாட்டாக இருந்தது. அங்கு அன்பு என்பதிற்கு இடம் கிடையாது மாறாக அதிகாரமும் அடிமைதனமும் தான் உள்ளது என்பது பெரும்பாலவர்களுடைய கருத்தாக இருந்தது இது உண்மை தான் என்பதிற்கு அடையாளமாக் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கிறது

தற்போதும் ஆப்கானிஸ்தானில் பெண் உரிமையை விவாதித்த ஒரு மாணவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று மனிதநேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.











Perwiz Kambakhsh

ஆப்கானின் வடக்கேயுள்ள மசாரே ஷெரிப் நகரில் பல்கலைக் கழகம் ஒன்றில் பத்திரிகை இயல் படித்து கொண்டிருந்த பர்வேஸ் கம்பக்ஷ் தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்களிடம் இனையத்தளத்திலிருந்து சில இஸ்லாமிய சம்பந்த‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை(மனித உரிமைகளுக்கு எதிராக‌ உள்ள‌) எடுத்து வினியோகித்தார். அதில் பெண்கள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை பற்றி அந்த கட்டுரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இது இஸ்லாமை அவ‌ம‌தித்தாக‌ கூறி 3 மாத‌ங்க‌ளுக்கு முன் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ அவ‌ருக்கு த‌ற்போது ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து


இது இஸ்லாமில் ம‌னித‌ உரிமைக‌ளோ பெண் உரிமைக‌ளோ ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌திற்கு ஒர் சாட்சியே என்று ம‌னித‌ நேய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். இப்படிப்பட்ட நிலை என்று மாறுமோ என்று கவலைகொண்டுள்ளனர்


ந‌ன்றி :
http://mulaggam.com/?p=2769

http://in.tamil.yahoo.com/News/International/0801/23/1080123048_1.htm

http://www.hindu.com/2008/01/31/stories/2008013154661400.htm

http://www.dailytimes.com.pk/default.asp?page=2008%5C01%5C31%5Cstory_31-1-2008_pg4_12

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=507