அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 28, 2015

நியாயத்தீர்ப்பு நாளில் யார் "இறைவன்" என்று அழைக்கப்படுபவர்

நியாயத்தீர்ப்பு நாளில் யார் "இறைவன்" என்று அழைக்கப்படுபவர்?

இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில்  கீழ்கண்டவாறு சொல்கிறார்: (மத்தேயு 7:21-23)
7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 
7:22  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 
7:23  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மேற்கண்ட 22ம் வசனத்தில் "அந்நாளில்" என்ற சொல் "நியாயத்தீர்ப்பு நாளை குறிக்கிறது". உலகமனைத்தையும் நியாயத்தீர்ப்பு செய்பவருக்கு முன்பாக அந்த நாளில் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைப் பற்றிய கணக்கை ஒப்புவிக்கவேண்டும்.
இயேசு அந்த நியாயத்தீர்ப்பு நாளின் "நியாயாதிபதி" என்று இங்கு பறைச்சாற்றுகிறார்.
ஒரு நாள் வரும், அந்த நாளில் ஒவ்வொருவருக்கும் "யார் இறைவன் (கர்த்தர்)" என்று தெளிவாக தெரியவரும். இதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் யாருக்கும் வராது [1].
அந்த நாளில் எல்லோரும் தம்மை "கர்த்தாவே / ஆண்டவரே" என்று அழைப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். இப்படி மக்கள் அழைக்கும் போது அவர் அதனை மறுக்கவில்லை. இப்படி அழைப்பவர்களைப் பார்த்து "ஏன் எனக்கு இப்படிப்பட்ட தெய்வீகத்தன்மையான பட்டத்தைக் கொடுத்து அழைக்கிறீர்கள்" என்றுச் சொல்லி, அவர்களை குற்றப்படுத்தமாட்டார், அதற்கு பதிலாக அவர்களின் கீழ்படியாமைப் பற்றி கேள்வி எழுப்புவார். கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டவர்களையும், அவரது ஊழியம் செய்து, அவருடைய பெயரில் பல காரியங்களை செய்தவர்களையும் அவர் கேள்வி கேட்பார், அவர்களின் கீழ்படிதல் பற்றி குற்றம் சாட்டுவார் [2]. இப்படிப்பட்ட ஊழியம் செய்த இவர்கள் இயேசுவிற்கு முழு இருதயத்தோடும் கீழ்படிந்தார்களா? அவரோடு தனிப்பட்ட விதத்தில் உறவுமுறையை வைத்திருந்தார்களா? அல்லது மத சடங்காச்சாரங்களை மட்டும் பின்பற்றிக்கொண்டு, அவர் மீது சாராமல் வாழ்தார்களா என்று கேள்வி எழுப்புவார்.
அந்த நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு மட்டுமே நியாயாதிபதியாக இருப்பார், எனவே, இன்று அவரை ஆண்டவர் என்று அழைப்பதும் சரியான ஒன்று தான். 
நாமும் எச்சரிக்கையாக இருப்போம், இயேசுவை (உதட்டளவில்) பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லிக்கொண்டு, அவரை முழுமனதோடு நேசிக்காமல், கீழ்படியாமல் இருந்தால், நம்மிடமும் அந்த நாளில் கேள்விகள் கேட்கப்படும்.
மேற்கண்ட வசனங்களில் மக்களிடம் காணும் பிரச்சனை எதுவென்றால் "அவர்கள் இயேசுவை எப்படி கூப்பிட்டார்கள் என்பது பற்றியது அல்ல, அதற்கு பதிலாக, அவர்கள், அவருக்கு முழுமனதோடு கீழ்படிந்தார்களா?" என்பது தான். 
குர்-ஆனின் 5:116-118 வசனங்கள் சொல்வது போல, இயேசு அந்த நாளில் கேள்விகள்  கேட்கப்படமாட்டார். அதற்கு பதிலாக, அந்த நாளில் நியாயாதிபதியாக அவரே இருப்பார். இவருக்கு முன்பாகத்தான், உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் புரிந்த செயல்களுக்கு கணக்கை ஒப்புவிக்கவேண்டும். இயேசுவை எப்படி இவர்கள் கண்டார்கள், என்னவென்று அழைத்தார்கள் என்பதும் கேட்கப்படும், கடைசியாக நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும்.
மத்தேயு 7:21-23ல் இயேசு கூறியவற்றோடு, முஹம்மது கூறியதாக புகாரி ஹதீஸில் வரும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் [3]
அடிக்குறிப்புக்கள்
[1] பார்க்க பிலிப்பியர் 2:5-11
[2] பார்க்க "The Easy Sinful Nature Of Christianity".
[3] புகாரி ஹதீஸ்கள்:
6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :7 Book :81
6586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.  . . .Volume :7 Book :81
6587. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :81

"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

(The "Incarnation Fallacy")

இது மிகச் சிறிய கட்டுரையாகும். கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் "இயேசு இறைவனாக இருக்கிறார் என்றும் அவரே மனிதனாக வந்தார் என்றும்" நம்புகிறார்கள். (மனித அவதாரம் பற்றிய மற்றொரு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.)
பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, "இயேசுவை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி இயேசு ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல" என்றுச் சொல்வார்கள்.
தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், "இயேசு ஒரு மனிதனாகவும் இருக்கிறார்" என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் "பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்" என்பதாகும். ஆனால், இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு கிறிஸ்தவர்கள் பொருள் கொள்வதில்லை. இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. "இதோ இவ்வசனங்கள் இயேசுவை மனிதனாக காட்டுகின்றன" என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்வது, அவரைப் பற்றிய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை. 
உண்மையை உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியது "இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை அல்ல, இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களைத் தான்".  இப்படி ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை ஆய்வு செய்வதினால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
முஸ்லிம்கள் இந்த "மனித அவதார வாதத்தைத்" தான் பெரும்பான்மையாக தங்கள் விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரிந்த விஷயத்தை நம்மிடமே வந்து "ஒரு புதிய விஷயமாக முஸ்லிம்கள்   சொல்வது" வேடிக்கையானதாகும். ஆதாவது நம்முடைய தாய் மொழியிலும், இன்னும் நமக்கு தெரிந்த ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பைபிளை படிக்கும் நம்மிடம் வந்து "இதுவரை இவ்வசனங்களை நீங்கள் பார்க்கவில்லை, இதோ நாங்கள் முதல் முறையாக இந்த வசனங்களை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம்" என்று முஸ்லிம்கள் சொல்வது வேடிக்கை என்றுச் சொல்லாமல் என்னவென்றுச் சொல்வது?
இதே போல, இன்னொரு பிழையான வாதத்தையும் முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். அது திரித்துவத்தைப் பற்றிய வாதமாகும். தேவன் திரித்துவராக இருக்கிறார் என்றும், அதே நேரத்தில் தேவன் ஒருவரே என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்களின் நம்பிக்கை இப்படி இருக்கும் போது, முஸ்லிம்கள் நம்மிடம் வந்து "தேவன் ஒருவர் என்பதை வெளிக்காட்டும் பைபிளின் வசனங்களை மட்டும் தனியாக எடுத்து மேற்கோள் காட்டி, பார்த்தீர்களா? தேவன் ஒருவர் தான்" என்று சொல்கிறார்கள்.  இவ்வசனங்கள் எவ்விதத்திலும் நமக்கு முரண்படுவதில்லை. தேவன் ஒருவரே என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இதில் ஆச்சரியமோ அல்லது முரண்பாடோ இல்லை. 
உண்மையாகவே முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்யவேண்டுமென்றால், பைபிளில் "இயேசுவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும், பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும் ஆய்வு செய்யவேண்டும்".  தேவனுக்கு தெய்வீகத்தன்மை இருப்பது போலவே, இயேசுவிற்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை விளக்கும் பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் ஆய்வு செய்து, தங்கள் முடிவைச் சொல்லவேண்டும். 


குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்வது என்பது இறைவசனங்களை திருத்துவதற்கு சமம் என்று ஒருவர் கூறினார், அதற்கு ஒரு முஸ்லிம் கீழ்கண்டவிதமாக பதில் அளித்தார்:
"அல்லாஹ் தன் வசனங்களை இரத்து செய்வது" பற்றி விமர்சனம் செய்த சகோதரருக்கு இந்த பதிலை தருகிறேன்.
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீங்கள் ஒரு அலுவலகத்தின் மேலாளர் (Manager) என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சில கட்டளைகளை நீங்கள் தரவேண்டியுள்ளது. இதற்காக உங்கள் செயலாளரிடம் (Secretary) கட்டளைகளைக் கொடுத்து, இவைகளை அப்படியே டைப் செய்யும் படி கேட்டுக் கொள்கிறீர்கள். இந்த செயலாளர் உங்கள் அனுமதியில்லாமல், அந்த கட்டளைகளோடு சிலவற்றை கூட்டுகிறார், சிலவற்றை நீக்கிவிடுகிறார். இந்த செயலாளர் செய்தது என்ன? மேலாளர் கொடுத்த மூல கட்டளைகளை இவர் திருத்திவிட்டார். இது தவறாகும். ஆனால், இப்போது இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். 
மேலாளராகிய நீங்கள் உங்கள் கைகளாலேயே அக்கட்டளைகளை டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டைப் செய்யும் போது, சிலவற்றை புதியதாக சேர்க்கிறீர்கள், சிலவற்றை நீங்களே நீக்கிவிடுகின்றீர்கள். அதன் பிறகு  உங்கள் செயலாளரிடம் கொடுத்து வேலையாட்களிடம் சேர்க்கும்படி சொல்கிறீர்கள். இந்த எடுத்துக்காட்டில்,  மேலாளராகிய நீங்கள் செய்ததை "மூலத்தை திருத்திவிட்டார்" என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. இக்கட்டளைகள் உங்களிடமிருந்து நேரடியாக வந்தபடியினால், உங்கள் அலுவலகத்தின் வேலையாட்களும், செயலாளரும் அவைகளை "மூலம்" என்று தான் சொல்வார்கள், திருத்தப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். இதே போலத்தான் அல்லாஹ் தன் வசனங்களை மாற்றுகிறார், அது மாற்றப்படாத மூலம் என்றே கருதப்படும். சிறந்த உவமைகள் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். 
கிறிஸ்தவனின் பதில்:
நீங்கள் ஒரு அருமையான உவமையைச் சொல்லியுள்ளீர்கள். எனக்கு உவமைகள் என்றால் அதிகமாக பிடிக்கும், ஏனென்றால், பல வரிகளில் விளக்கவேண்டிய விவரங்களை நச்சென்று நான்கு வரிகளில் அது விளக்கிவிடும். 
ஆனால், உங்கள் உவமையில் அனேக இறையியல் பிரச்சனைகள் இருப்பதை நான் காண்கிறேன்.
ஒரு மேலாளர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, கட்டளைகளை மாற்றுவதைப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த மேலாளர் தன்  செயலாளரிடம் தன் கட்டளைகளை கொடுத்துவிட்ட பிறகும், தன் மனதை மாற்றிக்கொண்டு கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை அல்லது செயலாளரிடம் கொடுப்பதற்கு முன்பாகவே கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை. இந்த மேலாளருக்கு தன் கட்டளைகளை மாற்றும் அதிகாரம் உள்ளது, அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது. 
ஆனால், ஒரு முக்கியமான விவரத்தை  இங்கு கவனிக்கவேண்டும், அதாவது, இந்த மேலாளர் ஒரு சாதாரண மனிதர் ஆவார், இவர் இப்படிப்பட்ட தவறுகளை செய்யத் தான் செய்வார்.  இவர் ஏன் தன் கட்டளைகளை மாற்ற விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால்,  தன் கட்டளைகளில் தவறு இருப்பதாக  இவர் உணருகிறார், அந்த தவறு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். தன் தவறை இவர் உணரும் தருணத்தில் உடனே தன் முந்தைய கட்டளைகளை மாற்ற முயலுகிறார். தான் முன்பு எழுதிய கட்டளைகளை மாற்றுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது, அதனால் அவர் மாற்றுகிறார். 
இப்போது உங்களால் இந்த உவமையில் உள்ள பிரச்சனையை காணமுடியும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தன் முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, அவைகளுக்கு பதிலாக புதிய கட்டளைகளை கொடுக்க முடிவுசெய்துவிட்டால், இதன் அர்த்தம் என்ன? தாம் தவறு செய்துவிட்டதாக அல்லாஹ்வே சுய ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று  அர்த்தமாகுமல்லவா? வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், தாம் முன்பு இறக்கிய கட்டளைகள் "பிழையற்ற கட்டளைகள் அல்ல, அவைகளில் தவறு இருக்கிறது, எனவே அவைகளுக்கு பதிலாக புதிய பிழையில்லாத கட்டளைகள் தேவைப்படுகிறது" என்று அல்லாஹ் சொல்வது போல இருக்கிறது.
அன்பான இஸ்லாமிய சகோதரரே, உங்களுடைய உவமையின் மூலமாக, "அல்லாஹ் தவறு செய்துவிட்டார்" என்று நீங்கள் அவரை குற்றப்படுத்துகிறீர்கள்.
ஆனால், இறைவன் சர்வ ஞானியாக இருக்கிறார். புதிய சூழ்நிலைகளைப் பார்த்து, மக்களின் புதிய செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை, அவருக்கு சர்வமும் தெரியும். நடந்துவிட்டதும், நடந்துக் கொண்டு இருப்பதும், நடக்கப்போவதும அவருக்குத் தெரியும்.  இறைவன் தன் முந்தையை கட்டளைகளை இரத்து செய்துவிட்டார் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய கோட்பாடு, இறைவனின் தகுதிக்கும், இலக்கணத்துக்கும் இழுக்கை கொண்டு வருகிறது. 
ஒருவேளை அல்லாஹ் குர்-ஆன் வசனங்களை இறக்குவதற்கு முன்பாக மாற்றி இருந்திருந்தால், "இந்த மாற்றத்தைப் பற்றி" நாம் அறிந்திருக்கமாட்டோம். இப்போது நாம் "இரத்து செய்த வசனங்களையும், இரத்து செய்யப்பட்ட வசனங்களையும்" அறிந்திருக்கிறோம்.  இதன் மூலம் இரண்டு விவரங்களை நாம் அறிகிறோம், "முதலாவது, அல்லாஹ் தம்முடைய முந்தையை வசனங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இரண்டாவதாக, தம்முடைய முந்தைய வசனங்களில் உள்ள தவறை உணர்ந்துக் கொள்ள அவருக்கு அதிக நாட்கள் பிடித்துள்ளது என்பதாகும்". 
முஸ்லிம்களின் படி, குர்-ஆன் என்பது படைக்கப்பட்ட ஒன்று அல்ல, அது நித்திய நித்தியமாக அல்லாஹ்வுடன் இருந்துள்ளது. இப்போது நமக்கு தோன்றும் கேள்வி என்னவென்றால், "முஹம்மதுவிற்கு குர்-ஆன் வசனங்களை இறக்கிவிட்ட பிறகு, எப்படி  அல்லாஹ்விற்கு தன் முந்தைய வசனங்களை மாற்றவேண்டும் என்ற ஞானம் வந்தது? அல்லது தன் முந்தைய வசனங்கள் கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது?".
என்னை பொருத்தமட்டில், "குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல்" என்ற கோட்பாடு அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த கோட்பாடு பரிசுத்தமான மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு மிகப்பெரிய அவமரியாதையாகும். இந்த கோட்பாடு, "இறைவன் தவறு செய்பவன்" என்று அவனை குற்றப்படுத்துகிறது. அதாவது முதல் முறை ஒரு காரியத்தை செய்யும் போது (வசனங்களை இறக்கும்போது) அதனை சரியாக செய்யத் திராணியில்லாதவனாக இறைவன் இதன் மூலம் சித்தரிக்கப்படுகின்றான். அதன் பிறகு, தன் பிழையை சரி செய்ய, முந்தைய வசனங்களை இரத்து செய்கிறான். இப்படிப்பட்ட கோட்பாட்டை நிச்சயமாக என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இஸ்லாமின் இரத்து செய்தல் பற்றிய இதர கட்டுரைகளை படிக்க சொடுக்கவும் "Index to Islam (ஆங்கிலம்)" and "Quran section (தமிழ் மற்றும் ஆங்கிலம்)".
இக்கட்டுரைக்கு ஒரு முஸ்லிம் சகோதரர் பதில் கொடுத்துள்ளார். இவருக்கு கிறிஸ்தவர்கள் இரண்டு பதில்களை கொடுத்துள்ளார்கள், அதனை இங்கு படிக்கவும்: 

December 11, 2015

மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது

முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

முந்தையை கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம்123, 45, & 6.
குர்-ஆனிக் ஜியோகிரஃபி (Quranic Geography) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிப்சன் அவர்கள், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா நகரமாகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார், அவைகளில் சிலவற்றை மேற்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம். 
இக்கட்டுரையில் அவர் கூறும் இன்னொரு ஆதாரத்தைப் பார்ப்போம், அதாவது "இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல, ஏனென்றால், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை உருவாக்கும் சக்தி அதற்கு இல்லை" என்பது தான் அது. 
இஸ்லாமிய புனித நகரமும் அதன் ஜனத்தொகையும்:
ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரம் பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்களையும், வியாபாரிகளையும் உருவாக்கியுள்ளது. அதாவது, புனித நகரத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் போருக்காகவும், வியாபாரத்திற்காகவும் சென்று இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், புனித நகரில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால், "7ம் நூற்றாண்டின் மக்காவில் இது சாத்தியமா?" என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.
சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், தம் புத்தகத்தின் 234ம் பக்கத்தில் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரியின் "சரித்திர புத்தகத்திலிருந்து" இந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், இவைகளை ஹதீஸ்களிலும் காணலாம். மக்காவினர் முஸ்லிம்களோடு புரிந்த போர்களில் கலந்துக்கொண்ட வீரர்களின் எண்ணிக்கை, மேலும் மக்காவினரின் வணிக கூட்டங்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை, இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், நமக்கு அக்கால புனித நகரின் ஜனத்தொகைக்கான அடிப்படை எண்ணிக்கை கிடைத்துவிடும்.
மூல நூல் ஹிஜ்ரி வருடம் / நிகழ்வுமக்கா இராணுவத்தின் / வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கை
தபரி, தொகுப்பு 7, பக்கம் 13ஹிஜ்ரி 1, அல் அப்வா என்ற இடத்தில் நடந்த சண்டை300 குதிரை வீரர்கள்
தபரி, தொகுப்பு 7, பக்கம் 15-16ஹிஜ்ரி 2, மக்கா வணிக கூட்டம் மீது வழிப்பறி100 நபர்கள் கொண்ட வணிக கூட்டம், 2500ஒட்டகங்கள்
தபரி தொகுப்பு 7, பக்கம் 33ஹிஜ்ரி 2, பத்ரு போர்மக்காவின் போர் வீரர்கள் 1000 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 90ஹிஜ்ரி 2, சாவிக் (Sawiq) போர்மக்காவின் போர் வீரர்கள் 200 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 98ஹிஜ்ரி 3, அல்கரதா என்ற இடம், மக்கா வணிக கூட்டம்மக்காவின் வணிக கூட்டத்திடமிருந்து 20,000திர்ஹம் கொள்ளையடிக்கப்பட்டது.
தபரி தொகுப்பு 7, பக்கம் 110ஹிஜ்ரி 3, உஹுத் போர்மக்காவின் போர் வீரர்கள் 3000 பேர், 200குதிரைப்படை வீரர்கள்
தபரி தொகுப்பு 8, பக்கம் 13ஹிஜ்ரி 5, அகழ்ப்போர், மக்காவினரும் இதர கூட்டங்களும்போர் வீரர்கள் மொத்தம் 10,000 பேர் (மக்காவின் காலாட்கள் மட்டும் 4000 பேர்) [1]
(மூலம்: Quranic Geography, பக்கம் 234) 
முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு மக்காவினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் மக்காவினரிலிருந்து அனேகர் மரித்துப் போயினர். இந்த நஷ்டத்திற்கு பிறகும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபாரிகளையும் இஸ்லாமிய புனித பூமி ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டே இருந்துள்ளது.  மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு போரின் போதும், இரண்டு தரப்பிலிருந்தும் மக்கள் மரித்தனர். இருந்தபோதிலும், மக்காவிலிருந்த குறைஷி மக்கள்  பல ஆயிர போர் வீரர்களைக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டனர். 
உதாரணத்திற்கு, பத்ரு போரில் 1000 பேர், உஹுத் போரில் 3000 பேர், அகழ்ப்போரில் 4000 பேர் மக்காவின் சார்ப்பில் கலந்துக் கொண்டனர். 
இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, இவர்களின் வியாபார கூட்டமும் மிகவும் பெரியது, இவர்களை முஸ்லிம்கள் தாக்கி பொருட்களை கொள்ளையிட்டனர். உதாரணத்திற்கு, மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளதின் படி, ஹிஜ்ரி 3ம் ஆண்டில் அல்கரதா என்ற இடத்தில் மக்காவின் வணிக கூட்டத்தை முஸ்லிம்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்வங்களை கொள்ளையடித்தனர், கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கு சொந்தமானதாகும். இந்த ஒரு பங்கு மட்டும் 20,000 திர்ஹம் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியானால், அந்த வியாபார கூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த வழிப்பறிக் கொள்ளையின் போது, மக்காவினரின் வணிக கூட்டத்திடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை 2500 ஆகும். அப்படியானால், வணிக கூட்டத்தின் சிறப்பைப் பாருங்கள். 
இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி ஒரு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபார கூட்ட மக்களையும் உருவாக்கும் அளவிற்கு விசாலமான பட்டணமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்கால புனித பூமி என்று கருதப்படும் மக்காவைப் பற்றிய தொல்லியல் ஆதாரங்களின் படி மக்கா என்பது ஒரு வறண்ட இடமாகும். அதிக மக்கள் வாழ்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் மக்காவிற்கு இல்லை. இப்படிப்பட்ட இடத்திலிருந்து எப்படி இத்தனை போர் வீரர்கள் மற்றும் வியாபாரிகள் எழும்பமுடியும்?  இது தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களின் மற்றொரு சந்தேகம். 
இஸ்லாமிய ஆதார நூல்கள் சொல்லும் விவரங்களின் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புரியும். 
இஸ்லாமியர்களின் படி, ஏழாம் நூற்றாண்டில்:
  • மக்கா ஒரு பெரிய நகரம்
  • குர்-ஆனின் படி நகரங்களின் தாய் (உம்முல் குர்ரா)
  • செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம்
  • பல ஆயிர போர் வீரர்களைப் பெற்றிருந்த நகரம்
  • சுற்றுப்புற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நகரம்.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரம் ஒரு சிறிய கிராமம் போல சில நூறு மக்களை மட்டும் கொண்ட கிராமமாக இருக்கமுடியாது. 
புனித நகரத்தின் ஜனத்தொகை கணக்கு - ஏறக்குறைய 48,000 பேர்
மக்காவின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று நம்மிடம் கணக்கெடுப்பு இல்லை. முஸ்லிம்களிடம் இந்த எண்ணிக்கை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். மேற்கண்ட போர் வீரர்கள் மற்றும் வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் புனித நகரின் ஜனத்தொகையை ஓரளவிற்கு கணக்கிடலாம். இது நூறு சதவிகிதம் சரியான கணக்கீடு என்று கருதமுடியாது, ஆனால்,  இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் புனித நகரில் ஜனத்தொகை இருந்திருக்கமுடியும் என்ற முடிவிற்கு நாம் நிச்சயமாக வரலாம்.
நான் (உமர்) எப்படி புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை 48,000 என்று கணக்கிட்டேன் என்ற விவரங்கள் இக்கட்டுரையின் கடைசியில் "அடிக்குறிப்புகள் & மேலதிக ஆய்வுகள்" என்ற பகுதியில் இரண்டாம் [2] எண்ணில் கொடுத்துள்ளேன், அதனை படித்துக் கொள்ளவும்.
மக்காவும் அதன் வேளாண்மையும்:
மக்காவின் 48,000 ஜனங்களுக்கு உணவுகளை கொடுக்கும் அளவிற்கு மக்காவில் வேளாண்மை இல்லை. 
இதற்கு சில காரணங்களை நாம் கொடுக்கமுடியும்:
1) ஆசிரியர் கிப்சன் அவர்கள் சொல்வதின் படி, மக்கா ஒரு நகரமாக இருந்ததற்கான எந்த ஒரு தொல்லியல் ஆதாரமும் கி.பி. 900க்குள் கிடைக்கவில்லை.   
பார்க்க கட்டுரைகள்: 
2) மக்காவில் திராட்சை, மாதுளை, அத்தி போன்ற கனிவகைகள் மற்றும் இதர காய்கறி, தானியங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல்  இல்லை. மக்கா ஒரு வறண்ட பிரதேசம், அங்கு வேளாண்மை நடப்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. பேரிச்சை தவிர வேறு வகையான வேளாண்மை அங்கு இல்லை. 
3) மக்காவின் மழையின் அளவு (பொழிவு) வருடத்திற்கு 11.1 cm or 4.4 inch ஆகும் [3]. இந்த அளவு மழையின் பொழிவுள்ள இடங்களில் எந்த ஒரு பயிர் வகையின் வேளாண்மையும் நடைப்பெறாது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் கனிவகைகள் போன்றவைகளின் விவசாயம் நடைப்பெறாது. மக்காவில் பேரிச்சைத் தவிர வேறு எந்த ஒரு வகையான விவசாயமும் நடைப்பெற வாய்ப்புக்கள் இல்லை.
ஆக, இதன் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல அது வேறு ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வருகிறது. சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், அந்த நகரம் பெட்ரா என்று கூறுகிறார்.
முடிவுரை:
இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல என்பதற்கு "இஸ்லாமிய நூல்கள் கொடுக்கும் அதன் ஜனத்தொகை விவரங்களும்" ஒரு காரணம் என்பதை இக்கட்டுரையில் கண்டோம். நம் கணக்கின் படி, குறைந்தபட்சம் 48,000 மக்களைக் கொண்ட நகரமாக புனித பூமி இருந்திருக்கவேண்டும். 
ஆனால், மக்காவின் தொல்லியல் விவரங்களின் படி, ஏழாம் நூற்றாண்டின் மக்கா, வறண்டதும் மக்கள் நடமாற்றமற்ற இடமாகவும் இருந்துள்ளது.  
இஸ்லாமிய நூல்கள் மக்காவின் ஜனத்தொகை 48,000 ஐ விட அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கின்றன, ஆனால் தொல்லியல் விவரங்கள் இதற்கு சாத்தியமில்லை என்றுச் சொல்கின்றன.  அப்படியானால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புலனாகிறது.
இரண்டாவதாக, மக்காவின் பொழிவு (வருடாந்திர சராசரி மழையின், ஈரப்பதத்தின் அளவு) 11 சென்டிமீட்டர் ஆகும். இது வேளாண்மைக்கு ஏற்ற சூழல் அல்ல. இப்படி இருக்க, இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு எப்படி உணவுகளை வழங்க மக்காவினால் முடிந்திருக்கும்? இது சாத்தியமில்லை. அக்காலத்தில் இத்தனை ஆயிர மக்களின் உணவுத் தெவையைப் பூர்த்திச் செய்ய, அதிகமாக வேளாண்மையுள்ள இடம் தான் தேவை, மக்காவைப் போல உள்ள ஒரு வறண்ட பூமியில் இது சாத்தியமில்லை.
குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் சொல்லும் புனித பூமி "இன்று புனித பூமி என்று முஸ்லிம்கள் கருதும் மக்கா அல்ல" என்பது தெளிவாக விளங்குகிறது. 
அடுத்த தொடர் கட்டுரையில் சந்திப்போம்.

அடிக்குறிப்புகள் & மேலதிய ஆய்வுகள்
The bulk of the Confederate armies were gathered by the pagan Quraysh of Makkah, led by Abu Sufyan, who fielded 4,000 foot soldiers, 300 horsemen, and 1,000-1,500 men on camels.[14]
[2] ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித பூமியின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்?
ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு என்ற விவரம் என்னிடம் இல்லாததால், அதனை நான் கணக்கிட முயன்றுள்ளேன். முஸ்லிம்களிடம் இந்த விவரம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.
மேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் படி, அகழ்ப்போரில் தான் அதிகமான மக்காவினர் பங்கு பெற்றனர். எனவே, அதனையே நம் கணக்கிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு போரில் ஈடுபட்டவர்களை நாம் கூட்டத்தேவையில்லை, காரணம் என்னவென்றால், ஒவ்வொரு போரிலும் புதியவர்களே ஈடுபட்டனர் என்றுச் சொல்லமுடியாது. அதே வேளையில், ஒவ்வொரு போரிலும் சில புதிய முகங்கள் பங்குபெற்று இருந்திருக்கலாம். நம் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையில் போர்வீரர்கள் ஈடுபட்ட போரையே நாம் கருத்தில் கொள்ளலாம்.
அகழ்ப்போரில் 4000 காலாட்கள், 300 குதிரை வீரர்கள், 1,000 – 1500 வரை ஓட்டகத்தின் மீது வந்த வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்[1]. இதில் ஒட்டகத்தின் மீது வந்தவர்கள் 1000 லிருந்து 1500 வரை இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதில் நாம் மத்திய எண்ணை எடுத்துக் கொள்வோம், அதாவது 1250ஐ நம் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம் (1000க்கும் 1500க்கும் இடையே இருக்கும் மத்திய எண் 1250 ஆகும்)
மக்காவிலிருந்து வந்த மொத்த வீரர்கள்: 5550 (4000+300+1250 = 5550). 
வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை இதில் பாதியாக கருதலாம், அதாவது 2500 என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகரத்தின் பொருளாதார வளர்ச்சி வியாபாரிகள் மீதும், விவசாயிகள் மீதும், வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீதும்  சார்ந்திருக்கும். நகரத்தில் உள்ள அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், வியாபாரம் செய்வது யார்? எனவே, வியாபார கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்வோம். 
இவ்விரண்டையும் கூட்டினால் 8050 வருகிறது (5550 போர் வீரர்கள் + 2500 வியாபாரிகள்). இந்த எண்ணிக்கையை ரவுண்ட் செய்து 8000 என்று கணக்கிட்டுக் கொள்வோம் (50ஐ குறைத்துக் கொண்டோம்).
இந்த 8000 பேரில் ஆண்கள் மட்டுமே இருப்பதாக கருதுவோம். இப்போது இவர்களின் குடும்ப நபர்களையும் கணக்கில் கொண்டு, குறைந்த பட்சம் இஸ்லாமிய புனித நகரின் ஜனத்தொகையை கணக்கிடுவோம். 
உமராகிய நான் என் கட்டுரைக்காக, எண்களை வேண்டுமென்றே அதிகரித்து காட்டுகிறேன் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, சில அனுமானங்களை (Assumptions) நாம் விதித்துக் கொள்வோம், அதாவது சில விதிகளை தளர்த்திக் கொள்வோம். 
தளர்த்தப்படும் விதி 1: முஸ்லிம்களின் படி, இஸ்லாம் வருவதற்கு முன்பாக, மக்காவின் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததாம். இஸ்லாம் வந்து "ஒரு ஆண் நான்கு பெண்களை மட்டும்" திருமணம் செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்ததாம். மக்காவினர் இஸ்லாமை ஏற்காதவர்களாக இருந்தபடியினால், நான்கை விட அதிக திருமணங்கள் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். இருந்த போதிலும் மக்காவின் ஜனத்தொகை கணக்கிற்காக, நாம் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
தளர்த்தப்படும் விதி 2: ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால், ஒரு மனைவிக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டாலும் எண்ணிக்கை எங்கேயோ சென்றுவிடும், இருந்தபோதிலும், நம் கணக்கில் ஒரு ஆணுக்கு இரண்டு பிள்ளைகள் (நாம் இருவர் நமக்கு இருவர்) என்றே எடுத்துக் கொள்வோம். 
தளர்த்தப்படும் விதி 3: ஒவ்வொரு போரின் போதும் அனேக மக்கா போர் வீரர்கள் மரித்தார்கள். இவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அது தான் சரியானது. இருந்தபோதிலும், இவர்களையும் நான் என் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 
ஏன் இந்த தளர்த்தும் விதிகள்:
இப்படி தளர்த்தும் விதிகளை நான் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெற்றோர்கள் இருவர் (தாய் தந்தை) என்று நாம் கணக்கிடப்போகிறோம்.  பல நேரங்களில் ஒரே பெற்றோருக்கு இரண்டு/மூன்று/நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த நான்கு பேரும் போரில் பங்கு பெற்று இருந்திருக்கலாம். இருந்த போதும், நாம் ஒவ்வொரு வீரருக்கும் பெற்றோர்கள் இருவர் என்று கணக்கிடப்போகிறோம். இது எப்படி சரியான எண்ணிக்கையாக இருக்கும்? என்ற கேள்வி எழும். நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை, புனித நகரில் எத்தனை ஆண்கள், பெண்கள் அப்போது இருந்தார்கள் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. எனவே, மேற்கண்ட தளர்த்தும் விதிகளை நான் கொடுத்துள்ளேன். ஒரு கணக்கில் தளர்த்துகிறோம், அடுத்த கணக்கில் சில அதிகபடியான எண்ணிக்கையை விட்டுவிடப்போகிறோம். நம்முடைய ஜனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பக்கமாக சார்ந்து வேண்டுமென்றே தவறாக கணக்கிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக, சில தளர்த்தும் விதிகளை நாம் வைத்துள்ளோம். நமக்கு ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை தெரிந்திருந்தால், இந்த கணக்கை நாம் செய்யவேண்டிய அவசியமிருக்காது. 
மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, கீழ்கண்ட கணக்கெடுப்பை பார்க்கவும்.
நம்முடைய முந்தைய கணக்கின் படி, மொத்தம் 8000 ஆண்கள் (போர் வீரர்கள் + வியாபாரிகள்) என்று நாம் கணக்கிட்டோம். இந்த 8000 பேருக்கு குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள், பெற்றோர்கள் இருவர் என்று கருதினால், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 5 பேர் குடும்ப நபர்கள் என்று வருகிறது. ஆக, 8000 பேர்களின் குடும்ப நபர்களை கணக்கிடும் போது = 8,000 X 5 = 40,000 என்று வருகிறது. 
  • ஆண்கள் 8000 பேர்
  • அவர்களின் குடும்ப நபர்கள் 40,000 பேர் 
  • மொத்தம் 48,000 என்று கணக்கு வருகிறது. 
ஆக, முஹம்மதுவின் காலத்தின் புனித பூமியில் குறைந்த பட்சம் 48,000 மக்கள் இருந்திருக்கவேண்டும் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான மக்கள் புனித நகரத்தில் இருந்திருக்கவேண்டும். (யாராவது இந்த கணக்கெடுப்பை இன்னும் மேம்படுத்த விரும்பினால், வேறு ஒரு கணக்கை கொண்டுவந்தால், எனக்கு தெரிவிக்கவும்).

http://isakoran.blogspot.in/2015/11/7.html

மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா

முன்னுரை:

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 
இதுவரை பதித்த கட்டுரைகளை இங்கு படிக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம்123, 4 & 5
இக்கட்டுரையின் பின்னணியை அறிந்துக் கொள்ள, மேற்கண்ட அறிமுக கட்டுரையை படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

மக்காவின் பிரச்சனை 6

சரித்திர ஆசிரியர் கிப்சன், தம்முடைய "குர்-ஆனிக் ஜியோகிரஃபி" என்ற புத்தகத்தில், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது ஜோர்டானின் உள்ள பெட்ரா ஆகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார். மக்காவைப் பற்றி இதுவரை ஐந்து பிரச்சனைகளை பார்த்து இருக்கிறோம், இப்போது அவர் முன்வைத்த மற்றொரு பிரச்சனையை பார்ப்போம்.
மக்கா ஒரு வறட்சியான இடம், அங்கு திராட்சை போன்ற கனிவகைகள் பயிரிடப்படுவதில்லை, ஆனால், புகாரி ஹதீஸ் "மக்காவில் திராட்சை பயிரிடப்படுவதாக" சொல்கிறது. இது எப்படி சாத்தியம் என்று சரித்திர ஆசிரியர் கிப்சன் கேட்கிறார். மேலும், இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமின் பிறப்பிடம் மக்காவாக இருக்கமுடியாது என்று அவர் கருதுகிறார். இதற்காக அவர் கீழ்கண்ட ஆதாரத்தைத் தருகிறார்.
10. உண்மையான புனித நகரத்தில் திராட்சை பயிரிடப்பட்டு இருந்தது:
3045. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
. . . அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்ததிராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. . . . (ஸஹீ புகாரி எண்: 3045)
இந்த ஹதீஸின் படி, புராதன புனித பூமியிலும், அதைச் சுற்றிலும் மரங்கள் இருந்ததாகவும், பழங்கள் விளைந்ததாகவும் பார்க்கிறோம். ஆனால், இன்று நாம் காணும் மக்காவில், இப்படிப்பட்ட விவசாயம் நடந்ததாக  கற்பனை செய்து பார்ப்பதும் கடினமே!
இதன் மூலம் ஆசிரியர் சொல்லவருவது என்னவென்றால், இஸ்லாம் பிறந்த பூமியில், முஹம்மது வாழ்ந்த காலத்தில் விவசாயம் நடந்துள்ளது, திராட்சை பழங்கள் பயிரிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால், தொல்பொருள் ஆய்வின்படியும்,  மக்காவின் புவியியல் விவரங்களின் படியும், மக்காவில் திராட்சை பயிராகுதல் சாத்தியமில்லை.  ஆனால், நாம் பெட்ராவை இஸ்லாமின் புனித பூமியாக கருதினால், மேற்கண்ட ஹதீஸ் சரியாக பொருந்துவதைக் காணமுடியும். எனவே, பெட்ரா தான் இஸ்லாமின் பிறப்பிடமாக கருதலாம் என்று ஆசிரியர் கிப்சன் கூறுகிறார். இவர் சொல்வதை அனைவரும் அப்படியே நம்பவேண்டிய அவசியமில்லை, இவர் முன்வைத்த ஆதாரங்களை ஆய்வு செய்து நாம் முடிவு செய்யலாம். 
நான் (உமர்) இந்த தலைப்பு பற்றி மேலதிக விவரங்களை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சேகரித்து, கீழ்கண்ட தலைப்புகளில் வாசகர்களின் பரிசீலனைக்காகத் தருகிறேன். இஸ்லாமில் காணப்படும் ஆதாரங்களை கவனித்தால், மக்காவின் மீதுள்ள நம்முடைய சந்தேகம் இன்னும் வலுப்பெறுகிறது. முஸ்லிம்கள் இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து, தங்களின் பதிலை நம்முன் வைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். 
இக்கட்டுரையில் பதித்த அனைத்து குர்-ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
மக்காவின் கனிவகைகள்:
1) கனிகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
2) சோதிக்கமுடியாத விஷயங்களை சோதிக்கச் சொல்லும் அல்லாஹ்
3) தெளிக்காத இடத்தில் சேர்ப்பதென்றால், விதைக்காதவற்றை அறுப்பதென்றால் இது தானா?
4) மக்காவினருக்கு திராட்சை தோட்டங்கள் இருந்தனவா?
5) அத்தி எங்கே? ஒலிவம் எங்கே? ஸீனாய் எங்கே?
6) மக்காவின் திராட்சை அறுவடையின் பருவகாலம் எது?
முடிவுரை

1) கனிகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?

குர்-ஆன் கீழ்கண்ட கனிவகைகள் பற்றி பேசுகிறது.
  1. திராட்சை
  2. மாதுளை
  3. ஒலிவம்  
  4. அத்தி
  5. பேரிச்சை
  6. வாழை
வாழை: முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் வாழைப்பழம் கிடைக்கும் என்று  அல்லாஹ் சொல்கிறான். சொர்க்கத்தில் முஸ்லிம்கள் குலை குலையாக தொங்கும் வாழை மரத்தின் கீழ் இளைப்பாறுவார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது: 
குர்-ஆன் 56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடையவாழை மரத்தின் கீழும்;
இது மக்காவிற்கு சம்மந்தமில்லாத கனி என்பதால், நம் ஆய்விலிருந்து இதனை நீக்கிவிடுகிறோம். 
இதர கனிகள் பற்றி பேசும் குர்-ஆன் வசனங்கள்:
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. (குர்-ஆன் 16:11)
அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.(குர்-ஆன் 36:33-34)
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த ரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை,ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. (குர்-ஆன் 6:99)
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- (குர்-ஆன் 95:1)
மேலே தரப்பட்ட ஐந்து கனிகளில், பேரிச்சையைத் தவிர மீதமுள்ள நான்கு கனிகள் மக்காவில் பயிரிடப்படுவதில்லை.

2) சோதிக்கமுடியாத விஷயங்களை சோதிக்கச் சொல்லும் அல்லாஹ்

பல முறை முஸ்லிம்கள் இவ்வசனங்களை படித்து இருப்பார்கள், ஆனால், இந்த முறை இவைகளை படிக்கும் போது, மக்காவை தங்கள் மனதில் கற்பனை செய்துக் கொண்டு படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த ரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை,ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்);அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.(குர்-ஆன் 6:99)
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (குர்-ஆன் 39:21)
இவ்வசனங்களில் சொல்லப்பட்ட கனிகளும் இதர பயிர் வகைகளும் மக்காவில் பயிரிடப்படுவதில்லை. இந்த கனிகள் (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் பார்க்கவேண்டுமென்றால், முஹம்மது பக்கத்து நாட்டிற்குச் செல்லவேண்டும். அதாவது,  முஹம்மது குறைந்தபட்சம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜோர்டான் நாட்டிற்குச் சென்றால் மட்டுமே, மேலே குர்-ஆன் சொல்லும் விதமாக, பூக்களையும், அவைகள் கனிகளாக மாறுவதையும், மஞ்சல் நிறமாக மாறுவதையும் பார்க்கமுடியும்.  மேலும்  ஒரே நாளில் குர்-ஆன் சொல்லும் கனிகளின் வளர்ச்சி பற்றிய அனைத்து நிலைகளையும் பார்க்கமுடியாது. பல நாட்கள் தொடர்ச்சியாக வேளாண்மை நடக்கும் இடத்தில் இருந்தால் மட்டுமே பார்க்கமுடியும். 
குர்-ஆன் 39:21ல், "நீர் பார்க்கவில்லையா?" என்று முஹம்மதுவிடம் ஒரு கேள்வியை அல்லாஹ் கேட்கிறான், அல்லது தினந்தோறும் முஹம்மது பொதுவாக பார்க்கும் விஷயத்தைத் தான் அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளான் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியலாம். இதே வசனத்தில் "நீர் பார்க்கிறீர்" என்றும் சொல்கிறான். இதே போல குர்-ஆன் 6:99ல், "நீங்கள் உற்று நோக்குவீர்களாக"  என்று முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். மக்காவில் நடைப்பெறாத நிகழ்வுகளை (கனிகளின் நிலைகளை) உற்று நோக்கும்படி ஏன் அல்லாஹ் சொல்கிறான்? இவ்வசனங்களை சரியாக புரிந்துக் கொண்டால்,  இவைகள் மக்காவில் அல்லாமல், நன்றாக கனிகள் பயிராகும் நாட்டில் அல்லாஹ் இறக்கியிருக்கவேண்டும் என்று தெரிகின்றது. எனவே, மக்காவின் மீது நமக்கு சந்தேகம் இன்னும் அதிகரிக்கிறது. 
பொதுவாக, வேதங்களில் வரும் உரையாடல்களை கவனித்தால், அக்காலத்தில் கேட்கும் மக்களுக்கு புரிந்துக் கொள்ளும் வகையில் அவைகள் இருக்கும். உதாரணத்திற்கு, இயேசு கூறிய உவமைகளை எடுத்துக் கொண்டால், அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சராசரி யூதனுக்கு புரியும் வகையில் எடுத்துக் காட்டுக்கள் இருந்தன.  இயேசுவின் நிலம் மற்றும் குத்தகை பற்றிய உவமைகள், திராட்சை தோட்டம், நல்ல மேய்ப்பன் போன்ற உவமைகள் அனைத்தும் அக்கால  மக்கள் அனுதினமும் பார்க்கும் பொதுவான விவரங்களாகவே இருந்தன. 
மாம்பழம் விளையாத நாட்டு மக்களிடம் வந்து "ஒரு பூவிலிருந்து மாம்பழம் எப்படி வளருகின்றது என்று நீங்கள் பார்க்கவில்லையா?" என்று சொன்னால், அவர்கள் "ஆம், நாங்கள் பார்க்கவில்லை" என்று தான் சொல்வார்கள்.
மக்காவில் விளையாத கனிகள் பற்றி "அவைகள் எப்படி வளருகின்றன என்பதை பாருங்கள்?" என்று அல்லாஹ் ஏன் கூறுகின்றான்?  இதற்கான பதில் மிகவும் சுலபமானதாகும். உண்மையில், இவ்வசனங்கள் வறட்சி பிரதேசமான மக்காவில் அல்ல, அதற்கு பதிலாக, கனிகள் விளையும் பெட்ராவில் இறக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும். அப்போது தான் ஒவ்வொரு வசனத்தை முஹம்மது செல்லும் போதும் மக்கள் அதனை சரியாக புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அனுதினமும் தாங்கள் வயல்வெளிகளில் தோட்டங்களில் காணும் விவரத்தைத் தான் அல்லாஹ் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.  இன்றுள்ள மக்காவில் இவ்வசனங்கள் இறங்கியிருந்தால், முஸ்லிம்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, நாம் வாழும் இடத்தில் இல்லாத ஒன்றை எப்படி அல்லாஹ் உற்று நோக்கும்படி சொல்கிறான் என்று கேள்வி கேட்டு இருந்திருப்பார்கள்.

மக்கீ வசனங்கள்:

ஸூரா 6 மற்றும் 39, இவை இரண்டும் மக்கீ ஸூராக்கள் ஆகும், அதாவது முஹம்மது மக்காவில் இஸ்லாமை போதனை செய்துக் கொண்டு இருந்தபோது அல்லாஹ் இறக்கிய அத்தியாய வசனங்களாகும், எனவே, இவ்வசனங்களில் மக்காவினரிடம் தான் அல்லாஹ் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை அறிந்துக் கொள்ளமுடியும். மேலும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கனிகள் பற்றிய வசனங்களை மேற்கோள் காட்டினோம். அவைகள் ஸூராக்கள் 16, 17, 36 ஆகும். இவைகளும் மக்கீ ஸூராக்கள் தான். சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு 16வது ஸூரா மக்கீயா அல்லது  மதனியா என்று சந்தேகம் உண்டு. 

3) தெளிக்காத இடத்தில் சேர்ப்பதென்றால், விதைக்காதவற்றை அறுப்பதென்றால் இது தானா?

மக்காவின் மீதுள்ள சந்தேகத்தின் உச்சக்கட்டம் இது!
இப்போது ஒரு முக்கியமான வசனத்தைக் காண்போம். மக்காவின் மீதுள்ள நம் சந்தேகத்தை இவ்வசனம் உறுதிச் செய்கிறது. 
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும்படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (குர்-ஆன் 6:141)
மக்காவின் தட்பவெப்ப நிலையின் படி, பேரீச்சம் தவிர வேறு கனிவகைகள் விளைவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், இவ்வசனத்தில் "படரவிடப்பட்ட கொடிகள், படரவிடப்படாத செடிகள், பேரிச்சை தோட்டங்கள், புசிக்கும் காய் கறி தானியங்கள், ஒலிவம் மற்றும் மாதுளை" போன்றவைகள் நன்றாக விளையும் போது இவைகளிலிருந்து ஸகாத் என்னும் கடமையை செலுத்துங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.  இந்த வசனம் மக்கா மக்களுக்கு இறக்கப்பட்ட நாளில் அவர்கள் நன்றாக சிரித்து  இருந்திருப்பார்கள், ஏனென்றால், 'அல்லாஹ் சொல்லிய  கனிகளில், தானிய வகைகளில், பேரிச்சம் தவிர வேறு எந்த ஒரு கனியும் விளையாத எங்களிடம், எப்படி அல்லாஹ் ஜகாத் கேட்கிறார்?" என்று கேள்வி எழுப்பியிருப்பார்கள். 
ஆனால், இதே வசனத்தை, பெட்ரா நகரத்தில் உள்ள குறைஷி மக்களுக்கு இறக்கப்பட்டு இருந்திருந்தால், இவ்வசனம் அம்மக்களுக்கு சரியாக பொருந்தும், மேலும் இதன் பொருளை அவர்கள் சரியாக புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள். 
வாசகர்களே! இவ்வசனம் மக்காவின் புவியியலுக்கு பொருந்தாமல் எப்படி மாட்டிக்கொண்டு தவிக்கிறது என்பதையும், பெட்ராவின் புவியியலுக்கு எப்படி இவ்வசனம் பொருந்துகிறது என்பதையும் கவனிக்க முடிகின்றதா?
"உங்கள் அறுவடைகளாகிய திராட்சைகள், மாதுளைகள், ஒலிவம் மற்றும் இதர கனிகளிலிருந்து ஜகாத்தை கொடுங்கள் என்று அல்லாஹ் மக்கா முஸ்லிம்களிடம் கேட்பது எப்படி இருக்கின்றதென்றால், தமிழ் நாட்டு மக்களிடம் அரசாங்கம் வந்து 'உங்கள் வயல்களில்  அபரிதமாக விளைந்துள்ள கிவி பழத்திற்கான வரியை செலுத்துங்கள்" என்று சொல்வது போல இருக்கிறது. தமிழ் நாட்டில் கிவி பழம் விளையுமா? அதனை தமிழ் மக்கள் அறுவடை செய்யமுடியுமா? ஒரு பாமரன் கூட இப்படி கேட்கமாட்டான். 
மக்காவினரைப் பார்த்து, உங்கள் பேரிச்சை பழ தோட்டங்களின் அறுவடையிலிருந்து ஜகாத் கொடுங்கள் என்றுச் சொல்வது நியாயமானதாக இருக்கும், ஆனால், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சொல்வது மக்காவிற்கு 100% பொருந்தாது. கனிகள் மக்காவில் விளைந்தால் தானே அறுவடை செய்வதற்கு, அறுவடை செய்தால் தானே ஜகாத் கொடுப்பதற்கு? அஸ்திபாரமே ஆட்டம் காணும்போது, மாளிகை எப்படி நிலைத்து நிற்கும்?
இந்த வசனத்தை இறக்கும் போது முஹம்மது மக்காவில் தான் இருக்கிறார் என்று அல்லாஹ்விற்குத் தெரியாதா? தெளிக்காதவற்றை எப்படி சேகரிக்கச் சொல்கிறார்? விதைக்காத ஒன்றை எப்படி அறுவடை செய்யச் சொல்கிறார்? மக்காவில் விளையாதவற்றின் மீது வரி கேட்பது அறிவுடமையா? உண்மையில், இந்த குர்-ஆன் வசனம் மக்காவில் அல்லாமல், பெட்ரா போன்ற வளமான வேளாண்மையுள்ள நகரில், திராட்சையும், மாதுளையும், ஒலிவமும், இதர தானிய வகைகளும் அபரிதமாக விளைகின்ற நகரில் இறக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும்.  இவ்வசனத்திற்கு இவ்விளக்கம் அல்லாமல், வேறு விளக்கத்தை முஸ்லிம்கள் தர முன்வந்தால், நன்றாக இருக்கும்.

4) மக்காவினருக்கு திராட்சை தோட்டங்கள் இருந்தனவா?

இப்போது இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். கீழ்கண்ட வசனங்களை உற்று நோக்குங்கள். மக்காவினருக்கு திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருப்பதாக அல்லாஹ் இங்கு சொல்கிறான். பலவகையான கனிகளை இம்மக்கள் புசிக்கிறார்கள் என்று நிகழ்காலத்தில் சொல்கிறான்.
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).(குர்-ஆன் 23:19,20)
மக்காவில் திராட்சை தோட்டங்களை யார் வைத்திருந்தார்கள்? மக்காவில் திராட்சை தோட்டங்களையும், இதர கனிவகைகள் விளையும் தோட்டங்களையும் வைத்து வேளாண்மை செய்யும் அளவிற்கு, அதன் தட்பவெட்ப நிலை அனுமதிக்குமா? இவ்வசனங்களில் அல்லாஹ் பொதுவாக சொல்கிறாரா அல்லது மக்கா மக்களுக்குச் சொல்கிறாரா என்பதை அறிய இப்னு கதீர் அவர்களின் விரிவுரையை படித்தேன், அதில் இந்த விவரங்களில் அல்லாஹ் குறிப்பிடுவது மக்காவினரைத் தான் என்று சொல்லப்பட்டுள்ளது:
(of date palms and grapes,) These were the kinds of gardens that were known to the people of the Hijaz, but there is no difference between a thing and its counterpart. The people of each region have fruits which are the blessing of Allah given to them, and for which they cannot properly thank Allah enough. (source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2479&Itemid=78)
இந்த வசனம் தற்போதைய மக்காவில் இறக்கப்பட்டு இருக்கமுடியாது, திராட்சை தோட்டங்களையும், இதர கனிவகை தோட்டங்களையும் அமைத்து வேளாண்மைச் செய்யும் மக்களுக்குத் தான் இறங்கி இருக்கமுடியும்! இதில் சந்தேகமில்லை.  மேலும், மக்காவிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஸீனாய் மலையைப் பற்றி மக்காவினரிடம் ஏன் அல்லாஹ் பேசுகின்றான்? ஸீனாய் மலையில் ஒலிவம் விளைந்தால், வறட்சி பிரதேசமான மக்காவில் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? இந்த மலைக்கு அருகாமையில் வாழும் மக்களுக்குத் தான் அதன் முழு பயமும் கிடைக்கும். இவ்வசனத்தை (23:20) பார்த்தால், மக்காவினருக்கு அருகாமையில் ஸீனாய் மலை இருப்பதாகவும், அதில் விளையும் ஒலிவத்தினால்  மக்காவினருக்கு எண்ணையாகவும், சாப்பிடுவதற்கு உபயோகமானதாகவும் ஒலிவம் இருப்பதாக தெரிகின்றது. 
முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தில் அடைப்பு குறிக்குள் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) என்று எழுதியுள்ளார். வசனம் சொல்லப்பட்ட சூழலைப் பார்த்தால், மக்காவினருக்காகத் தான் அல்லாஹ் இவைகள் அனைத்தையும் படைத்ததாக சொல்லிக் கொண்டு வருகிறான். 
இது உண்மையானால், இவ்வசனங்கள் ஸீனாய் மலைக்கு அருகாமையில் உள்ள நாடு அல்லது நகரத்தில் இறக்கப்பட்டு இருக்கவேண்டும். ஸீனாய்க்கு அருகாமையில் இருக்கும் நாடு எது? நகரம் எது? அது தான் தற்போது ஜோர்டான் நாட்டிலுள்ள பெட்ரா நகரம்.

5) அத்தி எங்கே? ஒலிவம் எங்கே? ஸீனாய் எங்கே?

கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள், அல்லாஹ் சத்தியம் செய்யும் விதத்தையும், புவியியல் விவரங்களையும் பாருங்கள்:
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2. "ஸினாய்" மலையின் மீதும் சத்தியமாக-
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
அத்தி மக்காவில் விளைவதில்லை, ஆனால் பெட்ராவில் விளைகிறது.
ஒலிவம் மக்காவில் விளைவதில்லை, ஆனால், பெட்ராவில் விளைகிறது.
ஸீனாய் மலை மக்காவில் இல்லை, ஆனால், ஜோர்டானில் உள்ளது.
அப்படியானால், அபயமளிக்கும் நகரம் நிச்சயமாக இவைகள் அனைத்தும் இருக்கும் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்று தெரிகின்றது. குர்-ஆனின் புவியியல் விவரங்கள் மற்றும் கனிகள் பற்றிய வசனங்கள் அனைத்தும் அரேபியாவின் வடக்கு நோக்கியே விரல்களை நீட்டுகின்றன.

6) மக்காவின் திராட்சை அறுவடையின் பருவகாலம் எது?

கடைசியாக, சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள் மேற்கோள்காட்டிய ஹதீஸுக்கு வருவோம். 
இந்த ஹதீஸை நான் புகாரியில் மூன்று எண்களில் கண்டேன்.  இதன் படி, மக்காவில் திராட்சை அறுவடைக்கென்று ஒரு காலம் இருந்துள்ளது என்று தெரியவருகிறது. 
நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி இதுதான்:
மக்காவில் திராட்சை கனியின் அறுவடை காலம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?  "மக்காவில், திராட்சை வேளாண்மை நடந்ததில்லை" என்பது உங்கள் பதிலாக இருந்தால், கீழ்கண்ட நிகழ்ச்சி எங்கு நடந்திருக்கும் என்று உங்களால் சொல்லமுடியுமா?
இந்த ஹதீஸில் வரும் அடிமை, உலர்ந்த திராட்சைகளை அல்ல, உலராத திராட்சைகளை உண்டுக் கொண்டு இருந்தார், மேலும் அந்த சமயம் திராட்சையின் அறுவடைக் காலம் அல்ல என்றும் இந்த ஹதீஸ்கள் தெளிவாக கூறுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
புகாரி 3045. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. . . .
புகாரி 3989. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
. . .'குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றை தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.(அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. 'அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு" என்று அந்தப் பெண் கூறி வந்தார்.. . .
புகாரி 4086. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)" அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு" என்று அந்தப் பெண் கூறிவந்தார்.
இஸ்லாமின் புனித பூமி மக்கா தான் என்று நம்பும் முஸ்லிம்கள் மக்காவின் திராட்சை அறுவடைக்காலம் எது என்றுச் சொல்லவேண்டும்.
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இடம் நிச்சயமாக மக்காவாக இருக்கமுடியாது, இது பெட்ராவாகத்தான்  இருக்கவேண்டும்.
முடிவுரை:
இதுவரை மக்காவின் திராட்சை மற்றும் இதர கனிவகைகளின் அறுவடை என்ற தலைப்பில் பல குர்-ஆன் வசனங்களைக் கண்டோம், சில ஹதீஸ்களையும் கண்டோம். இவைகள் அனைத்தும் மக்கா இஸ்லாமின் புனித பூமியாக இருக்கமுடியாது என்பதைச் சொல்கின்றன. இஸ்லாமின் புனித பூமியாக பெட்ரா இருக்க பல சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து குர்-ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வை செய்யும் படி முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமையும் மக்காவையும் வேறு பிரித்து பார்க்க எனக்கும் விருப்பமில்லை தான், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள் என்னைப் பார்த்து "நீ விருப்பம் கொள்" என்றுச் சொல்வதாக தெரிகின்றது.
நாம் அடுத்த மக்காவின் பிரச்சனையில் சந்திப்போம்.
இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - தொடர் கட்டுரைகள்:
  1. மக்காவின் பிரச்சனைகள்: அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
  2. மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
  3. மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
  4. மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் "மக்காவின்" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
  5. மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
  6. மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?