அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 30, 2009

இந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?

இந்த தேர்தலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. யாரை ஆதரிக்கலாம்? யாருக்கு ஓட்டு போடலாம் என்று ஒரு குழப்பம் உள்ளது.
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை பொருத்தவரை இந்த தேர்தலில் சில தெளிவான உறுதியான தீர்மானங்களை எடுத்துள்ளார் . அதில் முக்கியமானது இலங்கையில் தனி ஈழம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கடுமையான தனது எதிர்ப்பை தெரிவித்து தனி ஈழம் அமைந்தே தீரும். இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கு தனி ஈழம் அமைத்தே தீருவோம் என உறுதியாக சொல்லியுள்ளார்.
எல்லா அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ஆனால் அதை செயல்படுத்துவார்களா என்பது சந்தேகமே... ஆனால் எல்லா அரசியல் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் அநேக வாக்குறுதிகள் தருகிறார்கள். தந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ஆகவே ஏதாவது ஒன்றை நாம் ஏற்றுகொள்ளதானே வேண்டும்.
இன்னும் ஒரு வாக்குறுதியை தெளிவாக‌ கூற‌வேண்டும். அதாவ‌து தேர்த‌லுக்கு பின் ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளுட‌ன் கூட்ட‌ணி சேர‌க்கூடாது என்று. ஏற்க‌ன‌வே மோடியுட‌ன் அம்மையார் வைத்துள்ள‌ அர‌சிய‌ல் தொட‌ர்பை கூட்ட‌ணி அமைக்க‌ ப‌ய‌ன்படுத்த‌ கூடாது என்ப‌தே என் போன்றோர் விருப்ப‌ம்.
எப்ப‌டியும் மே 13க்கு பிற‌கு இந்த‌ குழ‌ப்ப‌ம் இருக்காது. அதுவ‌ரை ஒரே குழ‌ப்ப‌ம்தான்.. பார்ப்போம். தெளிவான‌ முடிவெடுத்த‌வ‌ர்க‌ளுக்கோ என் வாழ்த்துக்க‌ள்

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?



யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

 


கேள்வி:

இதோ இங்கு என் கேள்வியை முன்வைக்கிறேன், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். யூதாஸும் அவருடைய‌ செயல்களும் என்னதான் தீயதாகக் காணப்பட்டாலும், கிறிஸ்தவம் தோன்ற தவிற்கமுடியாத காரணி இல்லையா? யூதாஸ் இல்லை என்றால், அதிகாரிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் கேவலமான‌ செயலை யார் செய்திருப்பார்? என்னைப் பொருத்தவரை கிறிஸ்தவம் முழுமையடைய யாராவது இதனைச் செய்திறுக்க வேண்டும். யூதாஸ் இந்த 'கடமையை' செய்ய முன்விதிக்கப்பட்டிருந்தாரா? அவர் காட்டிக் கொடுக்காதிருந்தால் எப்படி கிறிஸ்தவம் உருபெற்றிருக்கும்? நீங்கள் சொல்கிறபடி இயேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பாரா?
 
 
பதில்:

இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டது யூத மத அமைப்பே ஆகும். இயேசுவின் ஒரு சீடரே காட்டிக்கொடுக்க முன்வரும் போது அவர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால் யூதாஸ் முன்வராதிருந்திருந்தால் அவர்கள் வேறு வகையில் இயேசுவை ஒழிக்கத் திட்டமிட்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன். சுவிஷேத்தில் பல இடங்களில் யூதாஸ் காட்டிக் கொடுக்கும் முன்பே அவர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டமிடுவதைக் காணலாம்.


நீங்கள், ஒரு முஸ்லிமாக இதே போல இருக்கும் மற்றும் இதை விட‌ இன்னும் சிக்கலான விஷயமான "குர்‍ஆன் சூரா அபூ லஹப்" பற்றிய பிரச்சனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? குர்‍ஆன் படைக்கப்படாத நித்தியமான ஒன்று என்றும், அது முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்? அபூ லஹப் பிறக்கும் முன்பே அவரை நித்திய கண்டனத்திற்கு/தண்டனைக்கு உள்ளாவதாக இந்த சூரா குறிப்பிடுகிறதே! அபூ லஹப் இதில் மாறுபட்டு நடக்க வாய்ப்பிருந்ததா? அவர் நித்திய கண்டனத்திற்கு முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

 
இது விளையாட்டல்ல. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். முன்விதிக்கப்படுதல் (Predestination) ஒரு கடினமான இறையியல் பிரச்சனையாகும். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இதர ஒரிறைக்கொள்கை உள்ள மதங்களுக்கும் பொருந்தும். எவ்வாறு இறைவன் அனைத்தையும் கட்டுப்படுதுபவராக இருந்தும், அதே சமயம் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் இருக்க முடியும்? மிகவும் உயரிய தேவன் இதைச் செய்வாரா? இறைவனின் விருப்பத்திற்கு எதிராக மனிதர்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் எப்படி சர்வ வல்லவராக (எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக) இருக்கமுடியும்? அல்லது மனிதர்கள் தவறுகள் செய்வது இறைவனின் சித்தமானால், பின் ஏன் அவர் மனிதர்களை தண்டிக்கிறார்?

 
இதைக்குறித்து நல்ல ஆழமான இறையியல் புத்தகங்கள் உள்ளன. இந்த கேள்விக்கு சில வரிகளில் பதிலளிக்க முடியாது. நான் இதை முழுமையாகப் புரிந்து கொண்டதாக‌ காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

 
இந்த பதில் ஒரு முழுமையான பதிலாக இல்லாமலிருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது ஒரு நேர்மையான பதிலாகும். மற்றும் இது கிறிஸ்தவத்தின் பிரச்சனை அல்ல, இது ஒரு பொதுவான இறையியல் தத்துவரீதியான பிரச்சனையாகும்.

 
ஆங்கில மூலம்: Was Judas predestined to do evil?

 

April 27, 2009

இலங்கையில் அமைதி : உலக நாடுகளின் நிர்பந்ததுக்கு அடிபணிந்தது.

இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டுவிட்ட நிலைமையில் உலக நாடுகளின் நிர்பந்த குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியது. அமெரிக்க வெளி விவகார துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். ஐ நா சபையும் தனது கணடனத்தை தெரிவித்திருந்தது.
வரும் 29ந்தேதி இங்கிலாந்து வெளியுறவுதுறை அமைச்சர் டேவிட் அவர்களும் பிரான்ஸ் வெளியுறவுதுறை அமைச்சர் பெர்னார்ட் அவர்களும் சுவீடன் வெளியுறவுதுறை அமைச்சர் கார்ல் பில்ட் அவர்களும் வர இருக்கும் நிலையில் சண்டை நிறுத்தம் அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் கார்டன் இலங்கை அதிபருடன் தொலைபேசியில் பேசி நிர்பந்திதிருந்தார்.

http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aGk_OuTLuXNo&refer=home

உலக நாடுகள் எல்லாம் கடுமையான கண்டனம் தெரிவிக்க காரணம் ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு சமீபத்திய படையெடுப்பில் கொன்று குவித்தது. விடுதலை புலிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் தமிழனத்தையே அழிக்க முற்பட்டு அதற்கான முயற்சியும் செய்துவந்தது. இந்தியாவும் இங்கு இலங்கைக்கு ஆதரவான நிலையையே கொண்டிருந்தது. இதனால் பார்த்து பொருமையிழந்த உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்தன.

இந்நிலையில் விடுதலைபுலிகளும் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு இலங்கை வந்துள்ளது. தனக்கு நெருக்கடி அதிகரிப்பதை அறிந்த இலங்கை இனியும் உலக நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போர்நிறுத்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாகதான் இன்று போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஒன்றுமறியா அப்பாவி மக்களின் இரத்ததை குடித்த இலங்கை அரசு இனியாவது இப்படிப்ப‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌டாது அமைதி வ‌ழியில் த‌மிழ‌ர்க‌ளை வாழ‌ வ‌ழிவ‌கை செய்துத‌ர‌வேண்டும் என்ப‌தே இறைவ‌னிட‌ம் நாங்க‌ள் வைக்கும் ம‌ன்றாட்டு.

இல‌ங்கையில் அமைதி திரும்ப‌ உத‌விய‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு உள்ள‌மெல்லாம் நிறைந்த‌ ந‌ன்றி க‌ல‌ந்த‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்.

April 25, 2009

சிதம்பரத்தின் சாயம் வெளுத்துபோச்சு

அட இந்த இலங்கை அரசு சும்மா இருக்ககூடாதா அதுக்குள்ள இப்படி போட்டு வாங்கனும்மா..

ஆமா இங்க சென்னையில நேற்று முதல்வரும் சிதம்பரமும் இலங்கைக்கு சென்ற தூதர்கள் போரை நிறுத்த வலியுறுத்தினார்கள் என்று நிருபர்களிடம் சொன்னார்கள். அதற்கு நிருபர்கள் டெல்லி வந்து சேர்ந்த தூதர்கள் அப்படி சொன்னத தகவல் இல்லையேன்னு திரும்ப முதல்வரிடம் கேட்டதுக்கு இல்லையில்லை டெல்லியில் அழகா அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் போரை நிறுத்த சொல்லி இந்தியா வற்புறுத்தியது என்று அடித்து சொன்னார்.

சொல்லி இப்படி திரும்புவதற்குள் இலங்கையிலிருந்து செய்தி வருகிறது. இந்தியா போரை நிறுத்த சொல்லவில்லையென்று.

* India did not call for ceasefire, Sri Lanka government says
Saturday, April 25, 2009, 12:40 GMT, ColomboPage News Desk, Sri Lanka.


Apr 25, Colombo: Sri Lankan government today said that the government of India did not call for a ceasefire during the talks with President Mahinda Rajapaksa held yesterday.

President's Secretary Lalith Weeratunga confirmed to the media that the discussion between Indian National Security Advisor M.K. Narayanan, External Affairs Secretary Shivshankar Menon and President Mahinda Rajapaksa focused only the provision of relief for civilians fleeing the 'no fire zone' in Mullaitivu.

"Both parties did not discuss anything about a ceasefire or halting military operations in the North," he added.

Meanwhile, the Indian External Affairs Ministry announced that the emissaries had expressed concerns over the evolving situation in the North during the talks, especially over the casualties among Tamil civilians as a result of ongoing operations.

India Foreign Secretary Shivshankar Menon and its National Security Advisor M.K. Narayanan met with Sri Lanka President Mahinda Rajapaksa yesterday at the Temple Trees to discuss the catastrophic situation in the Northeast of the country.
http://www.colombopage.com/archive_09/April25124014RA.html

ஐய்யகோ யாரை திருப்திபடுத்த இப்படி இங்கு நாடகம் ஆடப்படுகிறதோ இறைவனுக்கே வெளிச்சம்..

ஈழம் நம் நாடு : நடிகர் சத்யராஜ்

April 24, 2009

ஈழத்திற்காக கொதிக்கும் ஒர் கவிஞர் -சகோதரி தாமரை. விடியோவில்

நடிகை ரோகிணியின் உணர்வு மிகு பேச்சு விடியோவில்

அவங்க சொல்லுவாங்களாம் இவங்க செய்வாங்களாம் கொதிக்கும் கவிஞர் தாமரை பாகம் 2

அவங்க சொல்லுவாங்களாம் இவங்க செய்வாங்களாம் கொதிக்கும் கவிஞர் தாமரை பாகம் 1

தினகரனும் சன் நியூஸும் இரட்டடிப்பு செய்யும் திரைப்படதுறையினரின் உண்ணாவிரதம்

திரைப்படத்தினரை விமர்சிக்கும் மக்கள் தொலைகாட்சியில் கூட அந்த செய்தி வந்துள்ளது ஆனால் சினிமா சினிமா என்று மக்களை சினிமாவை விட்டு வெளியே வரமாக செய்யும் சன் நெட்வெர்க்கில் நேற்று சினிமாதுறையின் உண்ணாவிரசெய்தியை குறித்து மூச் விடவில்லை. பத்திரிக்கையில் சிறியதாக போட்டுள்ளனர். ஆமா பின்ன மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அல்லவா தீர்மானம் போட்டுள்ளனர். இதில் திமுகாவும் ஒர் அங்கமள்ளவா.. பின்ன வரதா கோபம். இங்குள்ளவர்களை எதிர்க்காமல் இலங்கை பிரச்சனை பற்றி மட்டும் பேசினால் அவர்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இங்குள்ளவர்களைபற்றி குற்றமாக பேசினால் அவ்வோளாதான். த‌மிழாவ‌து ஒன்னாவ‌து....ம்ம்..... கூம்...
.

திரைப்படத்துறையினரின் உருப்படியான தீர்மானம்

நேற்று நடந்த திரைப்படத்துறையின் உண்ணாவிரதம் சற்று உணர்வு பூர்வமாக இருந்தது. அதில் பேசியஅணைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே காணப்பட்டனர்.

இறுதியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா மூன்று முக்கிய தீர்மானங்களை அறிவித்தார்

போர்நிறுத்தத்திற்கு போதுமான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ் தலைமை தமிழகம் வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் இங்கு வாய் மூடி அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம், இளங்கோவன் ம்ற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் போட்டியிடும் இடங்களின் எதிராக வாக்களிக்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்றும்
அடுத்து தனக்கு மத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட பத்மஸீரி விருதினை திரும்ப தருவது என்றும் அறிவித்தார்.

இது சரியான தீர்மானாமாக தான் தெரிகிறது. இதற்கு அனைத்து தமிழக மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென்பதே நடுநிலையாளர்களின் ஆவல்

April 23, 2009

வேடிக்கையான தமிழக அரசியலும் இலங்கை பிரச்சனையும்

எல்லோரும் இலங்கை தமிழனை அரசியல் ஆதாயத்துக்காக பார்க்கிறார்களே என ஒரே வேதனை என் உள்ளத்தில். இப்படியும் சுயநல அரசியல்வாதிகள் நம் நாட்டில் மட்டும் தான் இருப்பார்கள்.

இதுவரை மத்திய அரசாங்கத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்த சக்தி கொண்ட கலைஞர் இனி இப்படியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா எனதெரியவில்லை. ஆனா சும்மா பேசியே காலத்தை ஓட்டி விட்டுட்டார். நம்ம மருத்துவர் ஐய்யாவோ யாருடன் கூட்டணி சேர்த்துள்ளார் என பார்த்தீர்களா. இராஜபக்சேவுடன் கூட்டணி சேர்ந்ததிற்கு சமம். டாஸ்மாக்கை ஒழிக்கவேண்டும் எனகூக்குரலிட்டவர் டாஸ்மாக்கை கொண்டுவந்தவருடனே கூட்டு சேர்ந்துள்ளார்.

இப்ப தமிழக அரசியலில் தந்திகொடுப்பது, பிறகு ஊர்வலம் நடத்துவது, பொதுகூட்டம் நடத்துவது பிறகு ஒரு வேலைநிறுத்த போரட்டாம் அறிவிப்பது இது தான் இன்றை ஸ்டைலாக போய் விட்டது. எல்லோரும் சுயநலவாதிகள்... பக்கா சுயநலவாதிகள்

இப்படி எல்லோருமே சுயநலமா இருந்துட்டு தேவை படும்போதுமட்டும் இலங்கை பிரச்சனையை கையிலெடுக்கிறீர்களே இது உங்களுக்கே நல்லாயிருக்கா. எது எப்படியோ அங்கு கொத்து கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களை இறைவன் மட்டுமே காக்கமுடியும்..

April 20, 2009

உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு



இயேசுவா? முஹம்மதுவா?



உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு

 

 
ஆசிரியர்: சைலஸ்
 
முன்னுரை
 

கிறிஸ்துவ‌த்தை இயேசுவும் இஸ்லாமை முஹம்மதுவும் ஸ்தாபித்தார்க‌ள். இவ்விர‌ண்டும் முறையே 180 கோடி ம‌ற்றும் 110 கோடி உறுப்பின‌ர்க‌ளைக் கொண்ட‌ இரு மாபெரும் ம‌த‌ங்க‌ளாகும். என‌வே சந்தேக‌மின்றி இவ்விருவ‌ரும் மனிதர் மத்தியில் மிக வ‌ல்ல‌மையானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் ம‌னித‌ வாழ்க்கைக்காக பல கோட்பாடுகளை முன் வைத்துள்ள‌ன‌ர்.
 

இவ்விரு மார்க்கங்களிலும் பல விஷயங்கள் பொதுவாக உள்ளன. ஆனால், ஏனைய காரியங்களில் முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை ஸ்தாபித்தவர்களின் குணாதிசயங்கள் எவ்விதமாய் உள்ளன? அவர்களின் ஒப்பீடுகள் எவ்வண்ணம் உள்ளன? இயேசுவைப் பற்றி குர்‍ஆனும் பைபிளும் சொல்வது என்ன? அவர்களின் போதனைகளும் செய்கைகளும் அவர்களைப் பின்பற்றுவோரை எவ்விதம் நடக்கத் தூண்டுகின்றன? இந்தக் கட்டுரை அவர்களின் சில போதனைகளையும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு அவைகளின் வேறுபாடுகளை ஆராய்ந்து இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
 
குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்திய பைபிள் வசனங்கள் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிளாகும்[1]. குர்‍ஆன் தமிழாக்கம் ஜான் டிரஸ்ட் வெளியிட்ட மொழியாக்கமாகும்[2]. ஹதீஸ்களாகிய புகாரி[3], முஸ்லீம்[4] போன்றவைகளிலிருந்தும், இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ்[5]" மற்றும் தபரியின் சரித்திரத்திலிருந்தும்[6], சுனன் அபூ தாவுத்[7] போன்றவைகளிலிருந்தும் மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய ஹதீஸ்களாகிய புகாரி மற்றும் முஸ்லீமை இஸ்லாமிய அறிஞர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதுகிறார்கள். அதே போல, இபின் இஷாக்கின் "சீரத் ரசூலுல்லாஹ் - முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை" மற்றும் தபரியின் "சரித்திரம்" போன்றவைகள் இஸ்லாமிய சமுதாயத்தினால் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.
 
அவர்களின் இறுதி வார்த்தைகளில் சில:


இயேசு: தாம் காட்டிக் கொடுக்கப்பட்டு தக்க காரணமின்றி மரண தண்டன வழ‌ங்கப்பெற்று கல்வாரிச் சிலுவையில் மரணமடையும் போது அவ‌ர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23:34) என‌க் கூறினார்.


முஹம்மது: நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது ".....இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!" எனக் கூறினார்…" புகாரி, (பாகம் 1, அத்தியாயம் 8, எண் 435)


[பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களால் கொலைசெய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு யூதப் பெண்மணியால் முஹம்மதுவிற்கு விஷம் வைக்கப்பட்டது, அந்த விஷ‌ம் சிறிது சிறிதாகத் தன் வேலையைச் செய்தது. தமது மனைவி ஆயிஷாவின் மடியில் அவர் உயிரை விடும் போது அவர் இவ்விதம் கூறினார்].


விளக்கம்


இவ்விருவ‌ரின் வாழ்க்கையை நான் ஆராய்ந்து பார்க்கும் போது அவ‌ர்க‌ளின் குணாதிச‌ய‌ங்க‌ளில் சில உறுதியான‌ வித்தியாசங்களைக் காண்கிறேன். அவ‌ர்க‌ளின் இறுதி நிலைப்பாட்டினை எடுத்துண‌ர்த்தும் ம‌ர‌ண‌ வாக்குமூல‌ம் இது தான். அதில் கிறிஸ்து த‌ம‌து ப‌கைவ‌ர்க‌ளை ம‌ன்னிக்கும்ப‌டி தேவ‌னிட‌ம் வேண்டிக்கொள்கிறார், ஆனால் முஹம்மதுவோ அவரது நபித்துவத்தினை நிராக‌ரித்தோர் மீது க‌ச‌ப்பான‌ சாப‌ங்க‌ளை உச்ச‌ரிக்கின்றார். முஹம்மது, தாம் சாகும்போது அல்லாஹ்விடம் கிறிஸ்துவ‌ர்க‌ளையும் யூத‌ர்க‌ளையும் ந‌ல்வ‌ழியில் ந‌ட‌த்த‌ வேண்டிக் கொண்டிருந்தால் அது மிக‌வும் பொருத்த‌மான‌தாய் இருந்திருக்கும‌ல்ல‌வோ?
 
அடிமைத்தனம்


இயேசு அடிமைகள் யாரையும் வைத்திருக்கவில்லை. அவர், பிறர் நமக்கு என்ன செய்யவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அவைகளையே பிறருக்குச் செய்ய வேண்டும் எனப் போதித்தார். அவரிடம் அடிமைகள் இல்லை. எனவே அவரது போதனைகளின்படி அவர் ஒருபோதும் அடிமைகளை வைத்திருக்க மாட்டார் என்பது வெளிப்படை. அவர் மனிதர்களை அடிமைப்படுத்தாமல் அவர்களை விடுவித்தார். ஒருவரும் அடிமைத்தனத்தை விரும்புவதில்லை.


1 தீமத்தேயு 1: 8-10 வசனங்களில் பவுல் இவ்வண்ணமாய்க் கூறுகிறர்:


"ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண் புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும் (Slave Traders), பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,".
 
இந்த வசனங்களினின்று, பலாத்காரமாய் மக்களை அடிமைப் படுத்துதல் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரானவை எனக் காண்கிறோம்.


முஹம்மது ஒரு அடிமைப்ப‌டுத்துப‌வ‌ர். அவ‌ர் ஆண்க‌ளும் பெண்க‌ளுமான‌ ப‌ல‌ அடிமைக‌ளை வைத்து இருந்தார், அவ‌ர்களை விற்க‌வும் செய்தார். மேலும் அவர், அல்லாஹ் அவ‌ரையும் அவ‌ர‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் பெண் அடிமைக‌ளுட‌ன் தாங்கள் விரும்பும்போது உட‌லுற‌வு வைத்துக்கொள்ள‌ அனும‌தித்து இருந்தார் என‌க் கூறியுள்ளார், ஆதார‌ம் சூரா 33:50, 52, 23:5, ம‌ற்றும் 70:30. இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு போர் (raids) அடிமைக‌ள் கொள்ளைப் பொருளாக‌க் க‌ருத‌ப்ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் அவ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ரின் உட‌மைக‌ளாக‌க் கருதப்பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அடிமைப் ப‌டுத்தி முஹம்மது பெருமை பாராட்டிக்கொண்டார்.


மாபெரும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி, முஹம்மது தம்முடைய அடிமைப் பெண்ணாகிய மரியாவுடன் உடலுறவு கொண்டதாக எழுதியுள்ளார். "அவள் அவரது உடமையாக (சொத்தாக) இருந்தபடியினால் அவளுடன் உடலுறவு கொண்டார்" என தபரி வால்யூம் 39, பக்கம் 194ல் காண்கிறோம்.


முஹம்மது தாம் எதிர்த்துப் போரிட்டவர்களை அடிமைகளாக்கினார். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பானுகுரைதா யூதர்களில் பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டு, எஞ்சிய‌ 800 ஆண்களை (இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை) படுகொலை செய்த நிகழ்ச்சியாகும், சூரா 33:26. சீரத் ரசூலுல்லா என்ற முஹம்மதுவின் ஆர‌ம்ப‌கால‌ வாழ்கை வ‌ர‌லாறு இது ப‌ற்றி ப‌க்க‌ம் 461 முத‌ல் மேலும் த‌க‌வ‌ல்க‌ளைத் த‌ருகின்ற‌து. ப‌க்க‌ம் 466 ல், இபின் இஷாக், இப்ப‌டுகொலைக்குப் பின் நடந்த‌ன‌வ‌ற்றை எழுதுகிறார்:


"பின்பு இறைத்தூதர், பானுகுரைஷாவினரின் உடமைகளையும் மனைவியினரையும் பிள்ளைகளையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்கள். அந்நாளில், குதிரைகளிலும் மனிதர்களிலும் தாம் ஐந்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொண்டதற்கான அறிவிப்பினைச் செய்தார்கள். (போரின் அனைத்துக் கொள்ளையிலும் முஹம்மதுவும் அவரது குடும்பத்தினரும் ஐந்தில் ஒரு பங்கினைப் பெற்றார்கள்).... பின்பு இறைத்தூதர் சையத்திடம் . . .உடன் தாம் கைப்பற்றிய பானுகுரைஷிய பெண்களை நஜ்ஜுக்கு (Najd) அனுப்பி அவர்களை குதிரைகளும் ஆயுதங்களும் வாங்குவதற்காக விற்றார்கள்".


முஹம்மது ஏராளமான அடிமைகளை வைத்திருந்ததாக புகாரி பதிவு செய்துள்ளார் (தொகுப்பு. 5, # 541 & தொகுப்பு. 7, # 344) முஹம்மதுவிடம், நீக்ரோ, அரேபிய, எகிப்திய, யூத, கிறிஸ்தவ மற்றும் அராபிய மாற்று மத ஆண், பெண் அடிமைகள் இருந்தனர்.


அடிமைகள் கொடூரமாக அடிக்கப்பட முஹம்மது அனுமதித்தார். அவரது மனைவி விபச்சாரக் குற்றச்சாட்டில் பரிசோதிக்கப்பட்ட நேரத்தில், முஹம்மதுவின் மருமகன் அலி, முஹம்மதுவின் முன்னிலையில் ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை ஆயிஷாவினைப் பற்றிய உண்மையினைச் சொல்லும்படியாக மிருகத்தனமாக அடித்தார். இபின் இஷாக்கின் "Sirat Rasulallah" விலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட, "The Life of Muhammad by A. Guillaume", பக்கம் 496 லிருந்து:


"எனவே இறைத்தூதர், விசாரிப்பதற்காக புரைராவை (Burayra - ஆயிஷாவின் அடிமைப் பெண்ணை) கூப்பிட்டார். அப்போது அலி எழுந்து, "இறைத்தூதரிடம் உண்மையைச் சொல்...." எனக்கூறி அவளை பலமாக அடித்தார்".


அலி அந்த அடிமைப் பெண்ணை அடிப்பதை முஹம்மது தடுக்கவில்லை.


புதிதாய்ப் பிடித்த பெண் போர்க் கைதிகளை உடலுறவிற்காய் பயன்படுத்திக் கொள்வதை முஹம்மது அனுமதித்தார்.


சஹீஹ் முஸ்லீம் (தொகுப்பு 2, #3371) ஹதீஸிலிருந்து:

 
அபூ சைய்து அல்குத்ரி அபூ சிர்மாவிடம் கூறியதாவது. "அபு சைய்துவே, அல்லாவின் தூதர், பெண்ணிடம் உறவுகொள்ளும்போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல் (al-azl - coitus interruptus) பற்றிக் கூறியதை அறிவீரோ?" அதற்கு அவன் ஆம் என்று கூறி மேலும் சொன்னதாவது: "நாம் அல்லாவின் தூதருடன் மஸ்தலிக்கு போரிடச் சென்று அற்புதமான அரேபியப் பெண்கள் சிலரைச் சிறையெடுத்து வந்தோம். நங்கள் எங்க‌ளின் மனைவியர் இல்லாததினால் ஏற்பட்ட‌ மோகத்தினால் அவதியுற்று அவர்களுடன் உறவுகொள்ள விரும்பினோம். (அதே நேரத்தில்) நாம் அவர்களை விற்று அப் பணத்தை அடையவும் விரும்பினோம். எனவே அவர்களுடன் al-azl (coitus interruptus, பெண்ணிடம் உறவுகொள்ளும் போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல்) முறையில் உடலுறவு கொள்ளத் தீர்மானித்தோம். ஆயினும் நாங்கள் சொல்லிக்கொண்டோம்,"நாம் ஒரு செயலைச் செய்கிறோம், ஆனால் நம்முடன் இறைத்தூதர் இருக்கிறார்; எனவே நாம் அவரிடம் கேட்டால் என்ன?" அல்லாவின் தூதரைக் கேட்டபோது அவர் சொன்னார், " நீங்கள் அதனைச் செய்யாவிடினும் பரவாயில்லை; ஏனெனில் இறுதித் தீர்ப்பின் நாள் வரை பிறக்க வேண்டிய‌ ஒவ்வொரு உயிரும் பிறந்தே தீரும்".
 
சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 3, #3432 என்ற ஹதீஸிலிருந்து:

 
ஹுனைன் போரில் (Battle of Hunain), அல்லாஹ்வின் தூத‌ர் அடஸுக்கு (Autas) ஒரு ப‌டையை அனுப்பி எதிரிக‌ளைச் சந்தித்து அவ‌ர்க‌ளுட‌ன் போரிட்டார் என‌ அபூ சைய்து அல்குத்ரி தெரிவித்தார். அவ‌ர்க‌ளை வென்று அடிமைக‌ளாக‌ப் பிடித்த‌ பின்பு, அல்லாஹ்வின் தூத‌ருடைய‌ தோழ‌ர்க‌ள், பிடிக்க‌ப்ப‌ட்ட‌ அடிமைப் பெண்க‌ளுட‌ன் உட‌லுற‌வு கொள்வ‌தைத் த‌விர்த்து இருந்தார்க‌ள். ஏனெனில் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ன்மார் பல மாற்று தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளாய் இருந்தார்கள். அத‌ன் பின்பு மேன்மைமிகு அல்லாஹ் அது ப‌ற்றிய‌ வ‌ச‌ன‌த்தை இற‌க்கினார்:


"இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது." (குர்‍ஆன்: 4:24)


(அதாவ‌து அவ‌ர்க‌ளது இத்தா (Idda) மாத‌வில‌க்கு நாட்க‌ள் முடிந்த‌பின்பு அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்).


விளக்கம் :


இயேசுவினுடைய போதனைகள் மக்களை பலவந்தமாக அடிமையாக்குவதைத் தடுத்தன. லூக்கா 6:31 ல் "மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." எனச் சொல்லப்படுகிறது. இதற்கு நேர் எதிராக‌, முஹம்மதுவும் அவரின் படை வீரரும் வலியச் சென்று பலரைத் தாக்கி, பலவந்தமாக அடிமைப்படுத்தினர். அதிலும் மோசமாக, முஹம்மது, அடிமைகளின் குடும்பங்களைப் பிரித்து அவரது படை வீரர்களிடையே பங்கிட்டுக்கொடுத்து பெண் அடிமைகள் அவர்களால் கற்பழிக்கப்பட அனுமதித்தார்.
 
 
பாவம்:


இயேசு: பாவமின்றிப் பிறந்தார்; பாவமற்ற வாழ்கை வாழ்ந்தார். அவரது பாவமற்ற வாழ்வினை உறுதி செய்தார். யோவான் 8:46 - "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்றார். மேலும் 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5, மற்றும் எபிரேயர் 4:15 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

 

முஹம்மது: ஒரு பாவியாகப் பிரகடனப் படுத்தப்படுகிறார், சூரா 40:55 - "ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!".


சூரா 48:1,2 - "(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்….".


முஹம்மதுவும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட இறைவனை வேண்டினார்.
 
புகாரி தொகுப்பு 9, #482: "ஓ அல்லாஹ், என் கடந்தகாலப் பாவங்களையும் அல்லது வருங்காலங்களில் செய்யும் பாவங்களையும், இரகசியத்திலோ அல்லது வெளிப்படையாகவோ செய்யும் பாவங்களையும் மன்னித்தருளும்."


"...O Allah! Forgive me the sins that I did in the past or will do in the future, and also the sins that I did in secret or in public."
 
மேலும், முஹம்மது, தான் நியாயமற்ற முறையில் மனிதர்களை சபித்தும், பாதிப்படையச் செய்தும் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.


சஹீஹ் முஸ்லீம் தொகுப்பு 4, "The Book of Virtue and Good Manners, and Joining the Ties of Relationship, chapter MLXXV" என்ற புத்தகத்திலிருந்து:
 
அல்லாஹ்வின் தூத‌ர் எவ‌ர்மீது சாப‌ங்க‌ளைக் கொடுத்தாரோ அவ‌ர் அத‌ற்குத் த‌குதியாய் இல்லாத‌ ப‌ட்ச‌த்தில், அவ‌ருக்கு அது க‌ருணையாயும் வெகும‌தியின் ஊற்றாயும் இருக்கும்.


"HE UPON WHOM ALLAH'S APOSTLE INVOKED CURSES WHEREAS HE IN FACT DID NOT DESERVE IT, IT WOULD BE A SOURCE OF REWARD AND MERCY FOR HIM".
 
ஹதீஸ் #6287 அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அபு ஜுரைரா சொன்னது: "ஓ அல்லாஹ், நான் ஒரு மனிதன். முஸ்லிம்களில் ஏதாவது ஒரு மனிதனை நான் சபித்து இருந்தாலோ அல்லது கசையடி கொடுத்து இருந்தாலோ அதனை தூய கருணையின் ஊற்றாக மாற்றுவீராக."
 
 
விளக்கம்


இயேசு பாவமற்றவர் தேவனின் குமாரன். முஹம்மது, தான் ஒரு தீர்க்கதரிசி என்று சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு இறைவாக்கினர். அதாவது நல்ல மற்றும் தீய பண்புகளைக் கொண்ட, தவறுகளையும் பாவங்களையும் செய்யத்தக்க ஒரு மனிதன். சில சம‌யங்களில் அவர் கருணை உள்ளம் கொண்டவராகவும் சில சமயங்களில் சபிக்கவும் பலரை காயமடையச் செய்பவராகவும் இருந்தார். இவர்களின் இயல்பும் பண்பும் எந்த அளவிற்கு அவர்களின் மார்க்கங்களுக்குள் ஊடுருவியிருக்க முடியும்? இயேசு பாவமற்ற பரிசுத்தர். முஹம்மதுவோ தாம் தமது பாவங்க‌ளுக்காக மன்னிப்பை ஒரு நாளைக்கு 70,000 முறை வேண்டிக்கொண்டதாக அவ‌ரே சொல்லியுள்ளார்! நீங்கள் யாரைப் பின்பற்றுவீர்கள்?
 
 
மனம் திரும்ப விரும்புகின்ற‌ பாவிகளைத் தண்டித்தல்
 
 
இயேசு
 

யோவான் 8: 2 முதல் 11 வரை:
 

மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

 
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

 
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

முஹம்மது

 
ஹதீஸ் அபூ தாவூத் (Abu Dawud) எண் #4428

 
புரைதா (Buraidah) சொன்னது: "காமித்தைச் சேர்ந்த ஒரு பெண் நபியிடம் சொன்னாள், "நான் விபச்சாரம் செய்துவிட்டேன்." அதற்கு அவர், "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் மறுபடியும் வந்து, நீங்கள் ஒருவேளை மயிஜ் பி மாலிக்குச் செய்தது போலவே என்னையும் திருப்பியனுப்பவே விரும்பலாம். ஆனால் நான் கர்ப்பமாய் இருக்கிறேன் என அல்லாஹ்வின் நாமத்தில் உறுதியாகச் சொல்கிறேன்" என்றாள். அதற்கு அவர் "திரும்பிப்போ" என்றுச் சொன்னார். அவள் மறு நாள் திரும்பவும் அவரிடம் வந்தாள். அவர் அவளிடம் சொன்னார், "நீ பிள்ளை பெறும்வரை திரும்பிப் போ". அவள் திரும்பிச் சென்றாள்.

 
அவள் ஒரு பிள்ளையைப் பெற்ற போது அந்தப் பிள்ளையை அவரிடம் கொண்டு வந்தாள். அவள்,"இதோ, நான் பிள்ளையைப் பெற்றுவிட்டேன்" என்றுச் சொன்னாள். அதற்கு அவர், "நீ திரும்பிச் சென்று அது பால்குடி மறக்குமட்டும் அதற்குப் பால் கொடு" என்றுச் சொன்னார். அவள் அவனைப் பால்குடி மறக்கப் பண்ணின பின்பு, அவன் கையில் ஒரு பண்டத்தைச் சாப்பிடக்கொடுத்து, அவரிடம் அவனைக் கொண்டு வந்தாள். அந்தப் பையன் ஒரு முஸ்லிம் ஆளிடம் ஒப்படைக்கப்பட்டான்.

 
நபி அவளைக் குறித்துக் கட்டளையிட்டார். அவளுக்காக ஒரு குழி வெட்டப்பட்டது. அவள் சாகும் வரை கல்லெறியப்படவேண்டும் என்று நபி கட்டளையிட்டார். காலித் என்பவன், அவளைக் கல்லெறிந்தவர்களுள் ஒருவன். ஒரு கல்லை அவன் அவளை நோக்கி எறிந்தபோது, ஒரு துளி இரத்தம் அவன் கன்னத்தில் பட்டது,அவன் அவளைச் சபித்தான். அதற்கு நபி அவனிடம் சொன்னார்,"நிதானமாக‌ச் செய் காலித். அவள் மனம் திரும்பிவிட்டாள். அவளை அதிகமாக தண்டிப்பவர் அவளைப் போன்றே அதற்காக மனம் திரும்பும்போது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்." பின்பு அவர் அவளைக் குறித்துக் கட்டளையிட்ட பின்பு அவளின் உடல்மீது பிரார்த்தனை பண்ணினார். அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.
 
 
விளக்கம்

 
இவ்விருவரிடமும் (இயேசு, முஹம்மது) காணப்படும் தெளிவான வித்தியாசம் இதுதான். இயேசு விபச்சாரப் பெண் குறித்த நடவடிக்கையில், அவளைத் தண்டிக்கவில்லை. அவள் திரும்பிச்சென்று பாவமற்ற வாழ்கை வாழும்படி ஆணையிட்டார், அவள் மீட்கப்பட ஒரு வாய்ப்பளித்தார். கருணையின் உதாரணம் இதுவே.

 
எத்தனை பேர் தவறான பாதையில் சென்று பின்பு பல ஆண்டுகளுக்குப் பின் தங்க‌ள் வாழ்கையை முற்றிலுமாக மாற்றி நல்லவர்களாக வாழ்ந்துள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அது மட்டுமின்றி, மற்றவர்களும் தங்களின் வாழ்வினை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் உதவியுள்ளனர்? இயேசு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தினை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். சட்டத்தின்படி, யூதர்கள் அவளை கல்லெறிந்து கொன்றிருக்கலாம்; ஆனால் இயேசுவின் அன்பும் கருணையும் அதைவிட மகத்தானது.

 
முஹம்மதுவின் அனுகுமுறை முற்றிலும் மாறுப‌ட்ட‌து. முத‌லாவ‌து அந்த‌ விப‌ச்சார‌ப் பெண்ணை விர‌ட்டிவிட்டார். அவ‌ள் அவ‌ள‌து பாவ‌த்தினை அவ‌ரிட‌ம் அறிக்கையிட்டாள். அவ‌ரோ அத‌னைக் கேட்க‌வோ அது குறித்து எதுவும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வோ ம‌றுத்தார். மாறாக‌ அவ‌ளை விர‌ட்டிய‌டித்தார். மூன்று முறை இவ்வித‌ம் ந‌டைபெற்ற‌து. மூன்று த‌ர‌ம் இந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் தவிர்க்க‌ முஹம்மது முற்ப‌ட்டார். இறுதியாக‌ அப்பெண்ணின் பிடிவாதமான ஒப்புக்கொடுத்தலின் பேரில், முஹம்மது அவளது பாவப் பிரச்சினையை எதிர்கொள்ள முடிவெடுத்தார். அவ‌ள் பிள்ளை பெற‌வும் அத‌ற்குப் பால் குடி ம‌ற‌க்க‌ப்ப‌ண்ணும் வ‌ரையிலும் அனும‌தித்தார். இத‌ற்கு ஒன்று முத‌ல் மூன்று ஆண்டுக‌ளாவ‌து ஆகியிருக்கும். அத‌ன் பின்பு திரும்பிய‌ அவ‌ளை கொலை செய்ய‌ப்ப‌ட‌ முஹம்மது ஒப்புக்கொடுத்தார்.

 
இந்த‌ப்பெண் குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌துட‌ன் ம‌ட்டுமின்றி அத‌ற்காக‌ ம‌ன‌ம் வருந்தினாள். அவ‌ள் அவ‌ள‌து பிள்ளைக்கு ஒரு ந‌ல்ல‌ தாயாக‌வும் ச‌மூக‌த்தில் ஒரு பொறுப்பான குடிம‌க‌ளாக‌வும் காண‌ப்ப‌டுகிறாள். முஹம்மது அவ‌ளுக்கு, அவ‌ர், ப‌ல‌ பேர்க‌ளுக்கு ப‌ல‌வித‌மான பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ன்னித்த‌து போல‌ ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கியிருக்க‌ முடியாதா? முஹம்மது ப‌ல‌ரின் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட‌ அனும‌தித்துள்ளார். த‌ங்க‌ளின் சொந்த‌ குடும்ப‌த்தினையே கொலை செய்த‌வ‌ர்க‌ள் கூட‌ முஹம்மதுவின் ந‌பித்துவ‌த்தினையும் கடவுளின் ஏகத்துவத்தினையும் ஒப்புக்கொண்ட‌தின் பேரில் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் முஹம்மதுவினால் இந்த‌ப் பெண்ணிட‌ம் க‌ருணையுட‌ன் நடந்து கொள்ள‌ முடிய‌வில்லை. அவ‌ர் குறுகிய‌ பார்வை கொண்ட‌வ‌ர். அவ‌ள் வாழ்கையை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்ட‌வ‌ள் என்றும் முறையாகத் தன் குழந்தையை வளர்த்துள்ளவள் என்றும், சரியானதையே செய்தாள் என்றும் காணத் தவறிவிட்டார். முஹம்மதுவின் குறுகிய‌ க‌ண்ணோட்ட‌ம் அவ‌ள‌து சாவிற்குக் கார‌ண‌மாயிற்று.

 
இதை முஹம்மது யூதச் சட்டத்தின்படிக் கூட அனுகவில்லை. மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி விபச்சாரம் செய்தவர் கல்லெரிந்து கொல்லப்படுதல் வேண்டும். முஹம்மது இவ்விதம் செய்யவில்லை. அவளை, முஹம்மது , பல ஆண்டுகள் வாழ அனுமதித்தார். அவள் பிள்ளை பெறும்படி தாற்காலிகமாக அவளை அனுமதித்து இருந்தாலும் கூட முஹம்மது அந்தப் பிள்ளை பால் குடி மறக்குமட்டும் பொறுத்திருந்தார். நிச்சயமாகவே அக்குழந்தையைப் பராமரிக்க வேறு பெண்கள் இருந்திருக்கக் கூடும். முஹம்மது அவருக்குத் தெரிந்த விதத்தில் நலமாகவோ அல்லது மாறாகவோ இந்த நிலைமையைக் கையாண்டிருக்கிறார். அவர் போகிற போக்கில் அவ்வப்போது அவரது சட்டங்களை உருவாக்கியுள்ளார்.
 
 
போர் - பகைவர்களை எதிர்கொள்ளுதல்
 
 
இயேசு, லூக்கா 9:54,55 ல், அவரை நிராக‌ரித்த‌ ந‌க‌ர‌த்தை நிர்மூல‌மாக்க‌ விரும்பிய‌ த‌ம‌து சீஷ‌ர்க‌ளைக் கடிந்து கொண்டார். மேலும் லூக்கா 22:52 ல், சீஷ‌ர்க‌ள், இயேசுவைக் கைது செய்ய‌ வந்த‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிட்ட‌ போது அவ‌ர்க‌ளைத் த‌டுத்து அந்த‌ கைக‌ல‌ப்பில் காய‌முற்ற‌ ஒரு ம‌னித‌னைக் குண‌ப்ப‌டுத்தினார்.

முஹம்மது, சூரா 9:5 ம‌ற்றும் 9:29 ல், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது க‌டும் போர் புரியும்படிச் சொல்லியுள்ளார். சூரா 9 என்பது முஹம்மது இறுதியாகக் கொடுத்த சூராக்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் கூட்டத்தின‌ர் மிக‌வும் ப‌ல‌வீனமாக‌ இருந்த‌போது, அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இசைந்து வாழும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டு இருந்தார். ஆனால் பிற்கால‌த்தில் முஸ்லீம்கள் ப‌ல‌மடைந்த‌போது, இஸ்லாமை, பலாத்காரத்தின் மூல‌ம் ப‌ர‌ப்ப‌ ஆணையிட்டார். அபுப‌க்க‌ர், உம‌ர் ம‌ற்றும் உத்மான் ஆகியோர் அவ‌ர‌து ஆக்கிர‌மிப்புப் போர்களைத் தொடர்ந்து நடத்தினர். முஹம்மதுவின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் சில‌:

 
800 யூத‌ ஆண் போர்க் கைதிக‌ளை ப‌டுகொலை செய்த‌து (சூரா 33:26 ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து)

 
மெக்காவைக் கைப்ப‌ற்றிய‌போது, அவ‌ர், 10 பேர்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்யும்ப‌டி ஆணை பிற‌ப்பித்தார். அதில் மூவ‌ர், முன்பு முஹம்மதுவைக் கேலி செய்த‌ அடிமைப் பெண்க‌ள். (பார்க்க‌: "முஹம்மதுவின் வாழ்கை - The Life of Muhammad" பக்கங்கள் 551, 52)
 
அவர் யூதப் பட்டணமான கைபர் மீது தாக்குதல் நடத்தியபோது, யூதத்தலைவர்களில் ஒருவரை எங்கோ புதைக்கப்பட்டிருந்த பணத்தின் இருப்பிடத்தைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தார். அந்த மனிதன் அதைச் சொல்ல மறுத்தபோது அவன் மரணிக்கும் தருவாயில் அவனது தலையை வெட்ட ஆணையிட்டார். "முஹம்மதுவின் வாழ்க்கை, (The Life of Muhammad)" ப‌க்க‌ம் 515 ஐப் பார்க்கவும்
 
விளக்கம்

 
பல ஆண்டுகளுக்கு முன்பு, தம்மைக் கேலி செய்த பெண் அடிமைகளைக் கொல்லும் காரியத்தில், இயேசுவை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர் மிகவும் மேலான செய்திகளையும் நலமான வாழும் முறையினையும் கொண்டு வந்தவர். புதைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொணர ஒரு மனிதனை சித்திரவதை செய்பவ‌ரென இயேசுவை ஒருவரும் கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. அவரது வாழ்க்கை பேராசைகள் அற்ற ஒரு வாழ்க்கையாக இருந்தது.

 
முஹம்மது ஒரு மூர்க்க குணமுடைய‌ நபராக‌ இருக்கக் கூடும். தம்மைக் கேலி செய்த பெண்ண‌டிமைகளைக் கொலை செய்தல் நியாயமானதா? அவர்களைக் கொலை செய்வித்தல் ஏற்புடையதா? அது நாகரீகமானதா அல்லது அறிவுடமைதானா? வெறும் பணத்தை அடைவதற்காக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்தார் முஹம்மது. இப்படிப்பட்ட நபரை ஒரு சமுதாயம் கீழ்படியவும், அவரை ஒரு முன்னோடியாக ஏற்றுக்கொள்ளவும் இவர் தகுதியுடையவராக இருப்பாரா?
 
 
பெண்களும் திருமணமும்
 
 
இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பெண்களை குணப்படுத்தினார். அவர்களை மன்னித்து ஆறுதல் படுத்தினார். ஆண்கள் அவரவரின் மனைவிமார்களை நேசிக்கவும் அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளா வண்ணமும் இருக்க புதிய ஏற்பாடு கற்றுக்கொடுக்கிறது: கொலோசெயர் 3:19, எபேசியர் 5:25.

கலாத்தியர் 3:28, "ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்" என்றும் 1 பேதுரு 3:7, "புருஷர்களே,.........நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து,.....அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்" என்றும் போதிக்கின்ற‌ன‌.
 
 
முஹம்மது அவரைப் பின்பற்றும் ஆண்கள், அவர்களின் அடங்காத மனைவிகளை அடிக்கக் கட்டளை கொடுக்கிறார். தொடர்ந்து கீழ்படிய மறுக்கும் தமது மனைவிகளை அடிக்கும் உரிமையை ஆண்களுக்கு வழங்குகிறார்.

சூரா 4:34 "…அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள்…".

 
மேற்படி வசனம் ஒரு பெண் தனது கணவன் தன்னை முகத்தில் அடித்ததாகவும் அதன் தடம் முகத்தில் இருப்ப‌தாகவும் முஹம்ம்துவிடம் புகார் செய்ததாகக் கூறும் சம்பவத்தின் தொடர்பாக இறக்கப்பட்டது. முதலில் முஹம்ம்து "அவனுடன் சமாதானமாக இரு" என்றுச் சொல்கிறார், பின்பு, "நான் இதுபற்றிச் சற்றுச் சிந்திக்கும்வரை பொறுத்திரு" என்றார். பின்பு தான் இவ்வசனம் இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முஹம்ம்து , "நாம் (தாமும், அப்பெண்ணும்) ஒன்றை விரும்பினோம் ஆனால் அல்லாஹ் வேறொன்றை விரும்பினான்" என்றுச் சொன்னார்.

இந்த ஹதீஸ் பெண்களைப்பற்றி மேலும் அதிகமாகச் சொல்கிறது:

 
முஹம்மது, "பெண்கள் பொதுவாகத் தீமையுள்ளவர்களே; நரகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே," எனச் சொல்கிறார். புகாரியைத் தொடர்வோமானால்:
 
தொகுப்பு 1, #301: "பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்;..."

புகாரி தொகுப்பு 1, #28: ந‌பி சொன்னார், "எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்..."
 
அவ‌ர்க‌ள் சொர்க்க‌த்தில் சிறுபான்மையின‌ரே என‌ சஹீஹ் முஸ்லிம் சொல்கிற‌து‌

தொகுப்பு 4, #6600: "அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இம்ரான் உசேன் அறிவித்தார்,"சொர்கத்தில் வசிப்பவர்களில் பெண்கள் சிறுபான்மையினரே ஆவார்கள்"

 
இவ்விர‌ண்டு ஹ‌தீஸ்க‌ளையும் ஒன்றாக்கிப் பார்ப்போமானால், பெண்க‌ள் சொர்க்க‌‌த்தில் சிறுபான்மையின‌ராகவும் ந‌ர‌க‌த்தில் பெரும்பான்மையான‌வ‌ர்க‌ளாயும் இருக்கின்ற‌ன‌ர் என‌ முஹம்மது சொன்ன‌தாக‌ விள‌ங்கும். இது ஒரு க‌ண‌க்கீட்டின் படியான விகிதாச்சாரமாக இருப்பதாகத் தோன்றவில்லை, அதாவது, அதிக பெண்கள் மற்றும் குறைவான ஆண்கள் உலகத்தில் இருக்கக்கூடும் எனவே, தான் இந்த கணக்கு என்பதல்ல. மாறாக, முஹம்மது பெண்களை ஆண்களைவிட அதிகம் பாவம் செய்யக்கூடியவர்களாகக் கருதினார் என்பதாகவே காணப்படுகிறது. ந‌ர‌க‌த்தில் அதிக‌ம் பெண்க‌ள் காண‌ப்ப‌டக் கார‌ண‌ம், முஹம்மதுவின் வாக்கின் படி பெண்க‌ள் பெரும்பாலும் த‌ம் க‌ண‌வ‌ருக்கு துரோக‌ம் செய்யும் இயல்பினர் என்ப‌தே!

 
பெண்கள் ஆண்களைவிட அறிவில் குறைந்தவர்கள் எனவும் முஹம்மது அறிவித்துள்ளார்:

புகாரி தொகுப்பு 1, #301:
 
"……நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;…"
 
விளக்கம்

 
தேவனின் பார்வையில் பெண்ணும் ஆணும் சரிசமம் என இயேசுவின் போதனை சொல்கிறது."ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்". சமுதாயக் கண்ணோட்டத்தில் தேவனின் கிருபையின் படி இயேசு அவர்களைக் கையாண்டார்.

 
முஹம்மது, பெண்களை, அடிமைக்கும் சுதந்திரமான மனிதருக்கும் இடையில் வைத்தார். இன்றும் கூட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் இரண்டாந்தர மக்களாகவே ஆண்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறார்கள். இது முஹம்மதுவின் போதனைகளில் பெண்களுக்கு அவர் அளித்த இடம் கருதியே ஆகும்.
 
 
கிறிஸ்துவின் அடையாளம்
 
 
இயேசு தாம் தேவ குமாரன் எனச் சொன்னார், காண்க‌: யோவான் 5:18-27, 10:36, மத்தேயு 26:63, 64.

 
அப்பொழுது அவர் (இயேசு) நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு 16: 15-17)

தேவனின் வார்த்தையே இயேசு

 
"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." (யோவான் 1:14)

இறைவனாகிய இயேசு

 
"கிறிஸ்து இயேசு…அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2:5-7)
 
 
முஹம்மது, இயேசு தேவ குமாரன் அல்ல என்றுச் சொல்லியிருக்கிறார். நபிகளுக்குள் குர்‍ஆன் வேறுபாடு காணவில்லை; இயேசுவும் ஒரு நபியை விட மேன்மையானவர் இல்லை:

சூரா 5:75 "மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர்...."

 
இயேசுவின் தெய்வீக ஆதாரத்தினை குர்‍ஆன் மறுக்கிறது:

சூரா 43:59: "அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.."

சூரா 3:59: "அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்."

விளக்கம்

 
இயேசு ஒரு பெரிய தீர்க்கதரிசியாக, ஒரு போதகராக, தாம் தேவகுமாரனென்றும், தேவனின் வார்த்தை என்றும், மேசியா என்றும் மனிதனாக வந்த இறைவன் என்றும் போதித்தார். முஹம்மது இதனை மறுத்தார். இயேசு ஒருவேளை உண்மை சொல்லியிருக்கவேண்டும் அல்லது அவர் ஒரு பொய்யராகவோ பைத்தியக்காரராகவோ இருக்கவேண்டும். அவர் யார் என்ற அடையாளத்தைக் குறித்து இருவரும் (இயேசு, முஹம்மது) சொல்வதும் சரியாக இருக்க முடியாது. ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். முஹம்மது இயேசுவிற்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் பாலைவனங்களில் அலைந்து திரிந்து கொண்டு வெளிப்பாடுகளைச் சொல்லி வந்தார். அவர் கூறுவது பற்றிய‌ ஆதாரம் சிறிதளவும் இல்லை. இறைவனின் வார்த்தை தான் என அவர் ஒப்புக்கொள்ளும் பைபிள் கூறுவனவற்றிற்கு எதிராக அவர் பல கருத்துக்களைச் சொல்லுகிறார்.
 
 
இயேசு வணங்குதற்குரியவர்
 
ஒரு மனிதன் இயேசுவை வணங்கினான். அதனை இயேசு அனுமதித்துவிட்டு தேவன் ஒருவரே வணக்கத்திற்கு உரியவர் எனப் போதித்தார், மத்தேயு 4:10

 
அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார்.

 
எனினும் இயேசு மக்கள் தம்மை வணங்குவதை அனுமதித்தார். "அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து..." மத்தேயு 8:2

இயேசுவை வணங்கும்படி பைபிள் ஆணையிடுகிறது

 
"குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்." யோவான் 5:23

 
"... தூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக் கடவர்கள்." எபிரேயர் 1:6

 
"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." பிலிப்பியர் 2:10, 11
 
 
முஹம்மது: இயேசு வணங்கத்தக்கவர் அல்ல என்றார்

 
இயேசு வணங்கத்தக்கவரில்லை என குர்‍ஆன் சொல்கிறது:

சூரா 43:81: " (நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"

விளக்கம்

 
தேவ‌ன் ஒருவ‌ரே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர். ம‌னித‌ர்க‌ள் ஆட்சியாள‌ர்கள் என்ற வகையில் வ‌ண‌க்க‌த்தைப் பெற்றார்க‌ள். ஆனால் தேவ‌ன், அவ‌ர் ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌த்த‌க்க‌வ‌ர் என்கின்ற‌ உரிமையை க‌ட்டளையின் மூலம் நிலை நாட்டினார். இயேசு அத‌னைப் போதித்தார்; வ‌ண‌க்க‌த்தினையும் பெற்றார். இயேசு யார் என்று முஹம்மதுவுக்குத் தெரிய‌வில்லை; என‌வே தேவ‌ மைந்த‌னை வ‌ண‌ங்க‌ ம‌றுத்தார்.
 
 
ஜெபம்
 
 
இயேசு தம் சீஷர்களுக்கு எளிய முறையில், இதயத்தின் ஆழத்தினின்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். தேவன் இதயத்தினின்று வருவனவற்றையே கவனிக்கிறார் - வெளிப்படையானவைகளை அல்ல‌ என போதித்தார்.
 
"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்…" மத்தேயு 6:5-13
 
 
பரலோகப் பிதாவுடனான உறவினை வெளிப்படுத்தும் தொடர்பே உண்மையான ஜெபம் என இயேசு கற்றுக்கொடுத்தார்.
 
 
முஹம்மது வெளியரங்கமான தொழுகை முறைகளையே போதித்தார்: (புகாரி தொகுப்பு 1 ன் படி)
 
488 - தொழும் ந‌பரின் குறுக்கே செல்லுதல் அவனின் தொழுகையை பயனற்றதாக்கும்.

 
489 - ஒருவர் தொழும்போது அவரின் குறுக்கே செல்லுதல் பாவமாகும்

 
660 - இமாம் (வெளியர‌ங்கமான தொழுகை முறைகளை நடத்தும் இஸ்லாமிய மார்க்கத்தலைவர்) தொழுகையிலிருந்து எழும் முன்பு எழுவது கூடாது. அவ்வாறு செய்தால் கடவுள் அவனின் முகத்தை கழுதையின் முகத்தைப் போலாக்குவார்.

 
685 - தொழுபவர்களின் வரிசை (ஆண்கள்) நேராக இல்லாவிட்டால், கடவுள் உங்கள் முகத்தை மாற்றுவார்.

 
690 - தொழுபவர்களின் வரிசை நேராக இல்லாவிட்டால் அது நல்லதொரு தொழுகை அல்ல‌.

 
717 - தொழுகையின்போது மேலே பார்த்தால் உங்களின் கண் பார்வை போய்விடும்.

 
759 - குனிந்து நிமிர்தலைச் சரியாகச் செய்யாவிட்டால் உங்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
 
இந்த மனித‌ர்கள் (இயேசு, முஹம்மது) முற்றிலும் மாறுபட்டவர்கள். இருவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். கிறிஸ்துவர்கள் இயேசுவையும் இஸ்லாமியர்கள் முஹம்மதுவையும் பின்பற்றுகின்றனர். இருவரும் கடவுளிடத்தினின்று வந்தவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்களின் போதனைகளாளும் நடத்தையாலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருக்கின்றனர். எனவே ஒருவர் மட்டுமே தேவனிடம் இருந்து வந்திருக்க முடியும்.

கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள் என இயேசு சொன்னார்: "அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் ". மத்தேயு : 24:11

 
முஹம்மது இத்தகைய கள்ளத்தீர்க்கதரிசி என்கின்ற வரிசையில் பட்டியலில் வர வாய்ப்புள்ளதா?
 
 
ஆதார நூற்ப்பட்டியல்:


[1] இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட தமிழ் பைபிள்
[2] ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்‍ஆன் தமிழாக்கம்
 
[3] "Sahih Al-Bukhari" - "The Translation of the Meanings of Sahih Al-Bukhari", translated by Dr. M Khan, pub. by Kitab Bhavan, New Delhi, India.
[4] "Sahih Muslim", translated into English by A. Siddiqi, pub. by International Islamic Publishing House, Riyadh, Saudi Arabia.
[5] "Sirat Rasulallah" - "The Life of the Prophet of God", translated as "The Life of Muhammad" by A. Guillaume, pub. by Oxford University Press, London, England.
[6] "The History of Tabari", published by SUNY, Albany, New York, USA.
[7] "Sunan of Abu Dawud", published by Al-Madina Publications, New Delhi, India.


 

 

April 18, 2009

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)


ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

 
இஸ்லாமியரல்லாதவர்கள் கேட்கும் பொதுவாக கேள்விகளுக்கு பதில்கள்
 
 
பல தார மணம் (Polygamy)


இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
 
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?

பதில்:

1. பலதார மணம் என்றால் என்ன?

பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக‌ தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள‌ ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
 
டாக்டர் ஜாகீர் நாயக்கின் வரையறையை (விளக்கத்தை) நான் ஏற்றுக்கொள்கிறேன்.
 
2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.
 
இது ஒரு பொருந்தாத வாதமாகும். பைபிளுக்கு ஒவ்வாத வாதத்தை ஜாகிர் நாயக் முன்வைத்திருக்கிறார். ஆனால், இவர் சொல்வதற்கு எதிர்மறையாக‌, தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திட்டத்தைத் தான் உருவாக்கி வைத்து இருந்தார். இதைத்தான் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காண்கிறோம்.
 
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)

"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)
 
இயேசுவும் இவ்விதம் சொல்லியுள்ளார்...

"இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் எனறார். அதற்கு அவர்கள்; அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவனை தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை". (மத்தேயு 19:6-8)
 
பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.
 
வேதாகமத்திலேயே தேவனுடைய திட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என தெளிவாக கூறப்பட்டுள்ள போது, திருச்சபையானது எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திருக்க முடியும்? இந்து திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் வரமுடியும்? என்று நான் வியப்படைகிறேன். டாக்டர் நாயக் தான் உண்மையானது என கருதும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்த, தான் தவறானது என கருதும் மற்றொரு மதத்தின் திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் நுழைக்க முடியும்?
 
இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் தனது மூதாதையரின் மதத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆண் வாரிசை பெறுவதற்காக தசரதன் மூன்று பெண்களை திருமணம் செய்தார். தசரதனுக்கு மகள் இருந்தாள் ஆனால் தனது அரியணையை அலங்கரிக்க ஆண் வாரிசு வேண்டும் என விரும்பினார். கௌசல்யை மகனை பெறாததால் சுமித்திரையை திருமணம் செய்தார், அவரும் ஆண் வாரிசை பெற தவறியதால் கைகேயியை திருமணம் செய்தார். இவ்வாறு இருந்த சூழ் நிலையிலும் இந்து மதத்தில் ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்ததில்லை. ராமன், லஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோர்கள் ஒரு மனைவியை மாத்திரம் திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணரும் பல பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பியதால் அவர்களை திருமணம் செய்தார். இந்து மதத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் பழக்கத்தையும் திரௌபதியின் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நான் மறுபடியும் டாக்டர் நாயக்கை வினவுகிறேன், ஏன் தனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த இந்து புராணங்களை இழுக்கிறார். இந்து மத பாத்திரங்கள் எங்ஙனம் இஸ்லாமிய முறைமைகளை உறுதிப்படுத்த முடியும். நம்பிக்கையற்றவர்களின் பழக்கவழக்கங்களைக்கொண்டு தனது மதத்தை ஏன் அவர் நியாயப்படுத்த முயல்கிறார்.
 
பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.
 
இல்லை, பவுல் அப்போஸ்தலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கிறிஸ்தவ சபையின் தொடக்க காலத்திலேயே பிரசங்கித்து வந்தார்.
 
"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2

"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12

"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6

"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31
 
டாக்டர் நாயக்:

ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் சாலொமோனின் வரலாறை கூறியுள்ளார். சாலொமோனின் வாழ்க்கை வரலாறு நமக்கு போதிக்கும் பாடம், நம் சொந்த விருப்பத்தின் படி நடந்து, தேவனுடைய திட்டத்தின் படி நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதின் மிகச்சிறந்த உதாரணமாகும்.
 
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)
 
தனது தெய்வீக திட்டத்திற்கு முரண்பட்ட சமுதாய அமைப்பை தேவன் அங்கீகரிக்கவேண்டுமென்று அவரை கட்டாயப்படுத்தமுடியாது. முகமதுவின் பலதாரமண கொள்கை அமைதியான குடும்ப வாழ்விற்கான அமைப்பாக இருந்ததில்லை. அவரது மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் மனக்கசப்புகள், போராட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருமுறை தனது வீட்டில் சமாதானத்தை நிறுவச்செய்ய இறைவனிடமிருந்து வெளிப்பாடுகள் அவருக்கு தேவைப்பட்டது. மேலும் விபரங்களுக்கு "தன் பாலியல் காரணங்களுக்காக தான் செய்த சத்தியத்தை உடைத்த நபி - Sex, Oaths, and the Prophet (சூரா 66)" என்ற கட்டுரையை படிக்கவும்.

 
தேவன் ஆதாமை படைத்து அவனது துணையாக ஏவாளையும் படைத்தார், இதுவே மனுக்குலத்திற்கு தேவன் அமைத்த சரியான குடும்ப முறையாகும். ஒரு மனுஷனும் மனுஷியும் இணையும் திருமணம் என்ற அமைப்பை தேவன் மதித்து அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகினால் (அஃதாவது ஒருவன் பல பெண்களை திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தல், விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய தொடர்புகள், ஓரினச்சேர்க்கை.. போன்றவைகளை நாம் செய்தால்) வாழ்க்கையிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலும் எதிர்மறையான விளைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.
 
ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.
 
ரபி கெர்சோம் பென் யெகுதா தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது
 
3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.
 
மறுபடியுமாக ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அது என்னவெனில் டாக்டர் நாயக் அவர்கள் தனது மத பழக்கவழக்கங்களை நியாயப்படுத்த ஏன் தான் போலி சமயமாக கருதும் இந்து மதத்தை குறிப்பிடுகிறார்? ஏன் 19ம் நூற்றாண்டு மோர்மொன்கள், பல்வேறு நாடுகளில் இருந்த மதங்கள் பலதார மணம் என்ற பழக்கத்தை கொண்டிருந்தது தெரியவில்லையா? அவைகள் பற்றி ஏன் அவர் குறிப்பிடவில்லை? டாக்டர் நாயக் அவர்கள் "பொய்யான" மார்க்கம் எனக்கருதும் ஒரு மதத்தின் பழக்கங்கள் எப்படி அவர் "சரியான மார்க்கம்" எனக் கருதும் இஸ்லாம் சரியானது என நிருபிக்க உதவும்? வட இந்தியாவிற்கு எனது வாழ் நாளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், நான் பார்த்த வரை எந்த ஒரு இந்து மனிதனும் பலதார மணம் புரிந்தவராக இருந்ததில்லை.
 
சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.

4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.

1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டது

பலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 
முகமது ஏன் 4 மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்?
 
5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.

சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.
 
இவ்வாறு இருப்பினும் பால் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, மூலம் (2000 est.).

இதை பகுத்து பார்த்தால்

 
பிறப்பின் போது : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 வயதுக்கு கீழ் : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 முதல் 64 வயது வரை : 1.02 ஆண்கள்/பெண்கள்

65 வயதுக்கு மேல் : 0.78 ஆண்கள்/ பெண்கள்

 
எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.
 
6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்
 
சரி இப்போது புள்ளிவிவரத்திற்கு வருவோம்.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது.

 
கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

 
பஹ்ரைன் 1.03 ஆண்கள்/பெண்கள்

 
ட்ஜிபௌடி 1.07 ஆண்கள்/பெண்கள்

 
ஜோர்டான் 1.1 ஆண்கள்/பெண்கள்

 
குவைத் 1.5 ஆண்கள்/பெண்கள்

 
ஓமன் 1.31 ஆண்கள்/பெண்கள்

 
கத்தார் 1.93 ஆண்கள்/பெண்கள்

 
சவுதி அரேபியா 1.24 ஆண்கள்/பெண்கள்

 
ஐக்கிய எமிரேட் 1.51 ஆண்கள்/பெண்கள்

 
டாக்டர் நாயக் அவர்களே இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் இதே நிலை உள்ளது.
 
7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
 
உலக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவே. உலகத்தில் 3,059,307,647 ஆண்களும் 3,019,466,887 பெண்களும் உள்ளனர் (மூலம்). அதாவது உலகத்தில் பெண்களை விட 40 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.
 
இல்லை, அமெரிக்காவில் 134,774,894 ஆண்களும் 140,787,779 பெண்களும் உள்ளனர், அஃதாவது 6 மில்லியன் பெண்கள் அதிகம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 5.9 மில்லியன் பெண்கள் 65 அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாவார்கள். (மூலம்)
 
நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.
 
நியூ யார்க் நகரத்தில் 3,437,687 ஆண்கள் மற்றும் 3,884,887 பெண்களும் உள்ளனர். அஃதாவது 447,000 பேர் பெண்கள் அதிகம் ( மூலம்). ஆனாலும் இதில் அதிக பட்சம் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உள்ளனர். நியூ யார்க் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்கள் என டாக்டர் நாயக் எப்படி முடிவு கட்டினார் என எனக்கு புரியவில்லை. 3,437,687 ஆண்கள் நியூயார்க்கில் உள்ளனர், இதில் 1,113,888 ஆண்களில் (32% ) திருமணமே ஆகாதவர்கள், மற்ற்வர்கள் திருமணமானோர்,விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோர். டாக்டர் நாயக்கின் கணக்கை அடைய வேண்டுமானால் நியூயார்க்கில் திருமணமாகாத ஆண்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவரே என்று சொல்லவேண்டும்d, இந்த கணக்கில் ஏனைய திருமணமானோர், விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோரும் அடங்குவர். டாக்டர் நாயக் இதை யோசித்து இருக்க மாட்டார், அதாவது பெண்களில் கூட ஓரினச்செர்க்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நியூயார்க்கில் 1,080,026 திருமணமாகாத பெண்கள் உள்ளனர். இதில் சிலர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடியவர்களாகவும் இருக்கலாம்!
 
அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.
 
இந்த புள்ளி விவரத்திற்கு என்ன ஆதாரம்? ஓரினச்சேர்க்கை ஆண்களை பற்றி பேசும் டாக்டர் நாயக் ஓரினச்சேர்க்கை பெண்களை பற்றி கவனிக்க மறுக்கிறார்.
 
பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
பிரிட்டனில் 29,303,077 ஆண்களும் 30,208,387 பெண்களும் உள்ளனர், அதாவது 1.6 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர், இவர்கள் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.
 
ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
ஜெர்மனியில் 40,451,865 ஆண்களும் 42,345,543 பெண்களும் உள்ளனர். அஃதாவது 1,893,678 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். இருப்பினும் ஆண்களைவிட அதிகமாக உள்ள 3 மில்லியன் பெண்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்! (மூலம்).
 
ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.
 
இதிலும் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவரே.
 
8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
 
அமெரிக்காவில் 28,200,083 ஆண்களும் 23,434,118 பெண்களும் திருமணமே ஆகாதவர்களாக உள்ளனர்! (மூலம்). இந்த வேறுபாட்டைக்கொண்டு எப்படி பலதார மணத்தை அங்கீகரிக்க முடியும்? டாக்டர் நாயக் அவர்களின் இந்த ஓரினச் சேர்க்கை பற்றிய அவரது புள்ளிவிவரத்திற்கு ஆதாரத்தை கொடுக்கும் படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களை குறித்து டாக்டர் நாயக் அவர்களின் புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் வெறும் 3 மில்லியன் பேரே ஓரினச்சேர்க்கை பழக்கம் இல்லாத வாலிபர்களாக இருப்பார்கள்.
 
ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.
 
என்னது பொது உடைமையா??!! (Public property!??!), டாக்டர் நாயக் அவர்களின் தங்கையோ அல்லது வேறு எவரின் தங்கையோ யாருக்கும் பொது உடமையாக இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. வேதம் நமக்கு இப்படி கூறுகிறது.
 
"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4
 
உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.
 
மனிதனின் பால் உறவு வேட்கையை காரணம் காட்டி, பல தாரமணத்தையோ அல்லது தவறான பால் உறவின் தீய செயல்கள் செய்வதையோ நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் நமக்கு பால் உறவு வேட்கையையும் கொடுத்திருக்கிறார் அதேபோல் இந்த பால் உறவு வேட்கையை தணித்துக்கொள்ள திருமணம் என்ற அருமையான எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். எப்போதெல்லாம் நாம் தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகி பலதாரமணம் என்ற வகையிலோ அல்லது வேறு தவறான இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தாலோ நாம் அதன் பலனை அனுபவிக்கவேண்டும். இதைத்தான் வேதம் இவ்வாறு சொல்கிறது.
 
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)
 
மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
ஆண்கள் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்பதை டாக்டர் நாயக் எப்படி, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார்? பெண்களும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துள்ளார்கள் என்பதை டாக்டர் நாயக் புறந்தள்ளிவிடுகிறார். ஒரு மனிதன் தானாகவும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளமுடியாது. பல மனைவிகள் வைத்துள்ள மனிதன் ஒருவன் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதையும் டாக்டர் நாயக் மறந்துவிடுகிறார். மறுபடியும், பெண்கள் "பொது உடமைகள்" என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விவரத்தை நாயக் சொல்லியுள்ளார்.

 
குர்ஆனிலும் பெண்கள் எவ்வாறு "மதிப்பாக வைக்கப்படுகின்றனர்" என்பதை கீழ்க்கண்ட வாசகத்தில் காணலாம்.
 
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!  (2:223)
 
Polyandry

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
 
மேற்கண்ட குர்‍ஆன் வசனமானது, இக்கேள்விக்கான பதிலை தருகிறது: குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.

1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
 
சரி அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துள்ளவர் வீடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்குமா? முக்கியமாக வாலிப பெண் பிள்ளைகளுக்கு?
 
2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.
 
மனிதன் இயல்பாகவே பாவ சுபாவ உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால் அதற்காக நம் பாவமான சுபாவங்களை நியாயப்படுத்த‌ பலதார மனம் போன்ற பாவமான அமைப்பை நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை விட லேசானது என ஏற்றுக்கொள்வாரா?
 
3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.
 
டாக்டர் நாயக் இந்த விஷயத்தை மேலும் தெளிவு படுத்தியிருக்கலாம், உண்மையாகவே, இதில் எந்த தெளிவும் இல்லை.
 
4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.
 
இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஒரு வேளை இவ்வித அமைப்பில் உள்ள மக்கள் வேறு எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்தாலும் எங்ஙனம் பால் ரீதியான நோய்கள் பரவுகின்றன?

 
ஆக மொத்தத்தில் ஒரு தார மணம் என்ற வழக்கமே மனுக்குலத்திற்கு கடவுள் காட்டியுள்ள வழியாகும். இதிலிருந்து நாம் மாறுபட்டால் பாடுபடவேண்டியதுதான். மற்ற மத வழக்கங்களில் உள்ள பலதார மணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாமில் உள்ள பலதார வழக்கத்தை நாம் நியாயப்படுத்த முடியாது. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, இச்சை போன்ற பாவங்களை மேற்கொள்ள ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதம் தேவனுடைய பரிசுத்தத்தையும் ஞானத்தையும் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்.


ஆங்கில மூலம்: Response to Zakir Naik - Polygamy

ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்




 

 

April 17, 2009

சகோதரர் இப்ராஹிம் மனம் திறந்து சொல்கிறார்


சமாதானம்

இந்தியாவில் பிறந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" தனக்கு ஆறு வயதிருக்கும் போது குடும்பத்துடன் குவைத் தேசத்துக்கு குடிபெயர்ந்தவ‌ர். தனது சிறுவயது முதலே அவரது மூத்த சகோதரனுடன் வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் சுமார் 20 வயதிலேயே பல சொத்துக்களுக்கு அதிபதியானார். குவைத் தேசத்திலேயே அதிகமாக தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் அவருக்கு சொந்தமானதாக இருந்தது.

 
கட்டுக்கோப்பான இஸ்லாமிய பின்னணியில் வளர்ந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" முறைப்படி "குர்‍ஆனை" பயின்றதுடன் பாரம்பரிய இஸ்லாமியக் கடமைகள் அனைத்தையும் கடைபிடித்து வந்தார். ஏழைகளுக்கு தான தருமங்கள் செய்ததுடன் "மெக்கா" புனித யாத்திரைக்கும் பலமுறை சென்று வருவார்.

 
அனைத்திலும் வெற்றியாளராக விளங்கியபோதிலும் ஒரு விஷயத்தில் தோற்றுப்போனார், அதாவது தற்கொலை செய்துகொள்ள முயன்றார், அதிலும் நான்குமுறை தோல்வி ஏற்பட சமாதான‌மும் கிடைக்காமல் தவித்தவர். தனது புனித வேதமான "குர்‍ஆனில்" தனது பிரச்சினைகளுக்கான பதிலைத் தேடினார்; ஆனால் "குர்‍ஆன்" மூலம் அவரால் சரியான பதிலைப் பெறமுடியவில்லை.

 
இந்த நிலையில் 'எலக்ட்ரானிக் இஞ்சினியரிங்' (மின்னணு தொழில் நுட்ப) கல்வி கற்க இங்கிலாந்து தேசத்துக்குச் சென்றார். ரமலான் நோன்பு காலத்தின் கடைசி வாரத்தில் "இன்ஸோம்னியா" எனும் உறக்கம் வராத வியாதியினால் பீடிக்கப்பட்டார். தூங்குவதற்கு அவர் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் தனது ஓட்டல் அறையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது தனது கண்களில் பட்ட "பைபிளை" எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்த போது "தேவையின் போது தேடி வாசிக்க" எனும் வரிசைக் குறிப்பிலிருந்து "உறக்கம் தேவை" எனும் தலைப்பின் கீழிருந்த "சங்கீதம் நான்காம் அதிகாரத்தினை" எடுத்து வாசித்தார்.
 
 

பின்னர் இவ்வாறாக பிரார்த்தனை செய்தார்,"இது (பைபிள்) தான் உண்மையான தெய்வத்தின் வேதமானால் அதற்கு அடையாளமாக என்னை தூங்கச் செய்யும்". இப்படியாக பிரார்த்தனை செய்தபின் தனது கட்டிலின் குறுக்காக அப்படியே சாய்ந்தவர் தன்னையுமறியாமல் தூங்கிப்போனார். அது கனவுகள் கூட இல்லாத ஆழ்ந்த உறக்கம்! அடுத்த நாள் காலையில் பைபிளையும் ஆண்டவரையும் மற‌ந்து போனார்.
 

பின்னர் அதே வாரத்தில் ஒருவர் "இயேசு ஒருவரே இறைவனை அடையும் வழி" என தெருவில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட இப்ராஹிம் தனது மனதில், "இதெல்லாம் வெறும் குப்பை, இயேசு தேவனுக்கு குமாரனாக இருக்க‌முடியாது, தேவனுக்கு குமாரனும் கிடையாது" என சொல்லிக் கொண்டார். ஏற்கனவே ஒரு அமெரிக்க தம்பதி இப்ராஹிமிடம் "உனது கேள்விகளுக்கான பதில்களை தேவனிடம் கேள், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார், உன்னுடன் பேசுவார்" என‌க் கூறியிருந்தனர். 'தேவன் நம்முடன் பேசுவார்' என்பதை இதுவரை ஒருவரும் இப்ராஹிமுக்கு சொன்னதில்லை. ஐந்து இரவுகளுக்குப் பிறகு ஓர் இரவில் இப்ராஹிமின் கனவில் பேரொளி ஒன்று சிலுவை வடிவில் தோன்றி அதிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு, "இதுவே என் வழி, இயேசுவானவர் என்னுடைய குமாரன், நான் என்னுடைய சமாதான‌த்தையே உனக்குக் கொடுக்கிறேன், எனது சந்தோஷத்தினால் உன்னை நிரப்புகிறேன்" என உரைத்தது.
 

இப்ராஹிம் தேவனால் கேட்கப்பட்டு, இயேசுவானவரைப் பின்பற்றுவதன் விளைவுக‌ளைக் குறித்து ஒரு நாள் முழுவ‌தும் யோசித்தார். தான் குடும்பத்தாரால் முற்றிலும் புற‌க் க‌ணிக்க‌ப்ப‌டுவோம் என்ப‌த‌னை அறிந்திருந்தும் இயேசுவைக் குறித்து அறியும் ஆவல் அவருக்குள் இன்னும் இன்னும் அதிக‌ரித்துக்கொண்டே இருந்த‌து. ஒரு நாளில் கிறிஸ்த‌வ‌ பெண்ம‌ணி ஒருவ‌ரை ச‌ந்தித்து இயேசுவான‌ரைக் குறித்து முழுவ‌தும் கேட்ட‌றிந்தார். அன்று ம‌ன‌ம் விட்டுக் க‌த‌றி அழுது த‌ன் வாழ்க்கையினை க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார். உட‌னே அவ‌ர் செய்த‌ முத‌ற் காரிய‌ம் த‌ன‌து ந‌ம்பிக்கையினை - ம‌ன‌மாற்ற‌த்தினை த‌னது குடும்ப‌த்தாருக்கு தெரிவித்த‌து தான். எதிர்பார்த்த‌ப‌டியே அவர்கள் க‌டுங்கோப‌த்துட‌ன் எச்ச‌ரித்த‌துட‌ன் இனி அவ‌ரிட‌மிருந்து இது போன்ற‌ காரிய‌ங்க‌ளை ஒருபோதும் கேட்க‌ விரும்பவில்லை என‌க் கூறிவிட்ட‌ன‌ர்.
 

இப்ராஹிமோ பைபிளைத் தீவிர‌மாக‌க் க‌ற்க‌த் துவ‌ங்கிய‌துட‌ன் ஒரு கிறிஸ்த‌வ‌ப் பெண்ணையும் திரும‌ண‌ம் செய்துகொண்டு புதிய‌ வாழ்க்கையை துவ‌ங்கினார்; அவருடைய குடும்பத்தாரோ அவரை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்த‌ நிலையில் அவருடைய சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள அழைத்து ஒரு த‌ந்தி வ‌ந்த‌து, "உன்னை ம‌ன்னித்து விட்டேன், அவ‌சிய‌ம் வ‌ர‌வும்" என‌ அவ‌ர‌து த‌ந்தை அழைத்திருந்தார்.
 

இந்த எதிர்பாராத அழைப்பைக் குறித்து ஆண்டவ‌ரிடம் கேட்டபோது இப்ராஹிம் தனது மனைவியை அழைத்துச் செல்லவேண்டாம் என ஆண்டவரால் எச்சரிக்கப்பட்டதால் தனியாகவே தன‌து குடும்பத்தார் தற்சமயம் வசிக்கும் இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்றார். அவரது நண்பர்களும் உறவினர்களும் அன்போடு வரவேற்றனர். ஆனால் இது அவரது தகப்பனாரின் கண்மூடித்தனமான தாக்குதல் துவங்கும் வரையில்தான். ஆம், இப்ராஹிமின் தகப்பனார் தனது கோபமெல்லாம் தீரும் வண்ணம் அடித்தும் உதைத்தும் மிதித்தும் வெறித்தனமாக - இரத்தக்களறியாகும்வரை தனது மகனைத் தாக்கினார். குடும்பத்தார் அனைவரும் அவ‌ருடைய செயலுக்குத் துணை நின்றன‌ர். ஆனாலும் இத்தனை உடல் - ‍மன வேதனையிலும் இப்ராஹிம் மன உறுதியுடனிருந்து "நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்" எனக் கூறிக் கொண்டே இருந்தார்.
 

அவ‌ருடைய தகப்பனார் கடுங்கோபத்துடன் துப்பாக்கியினால் அவரை சுட்டுத் தள்ள ஆவேசத்துடன் எழும்பி விசையினைத் தட்டும் வேளையில் இப்ராஹிமின் மாமா அதைத் தடுத்து அந்த துப்பாக்கியினை தகப்பனாரின் கரத்திலிருந்து பிடுங்கி எறிந்தார். இப்ராஹிம் தொடர்ந்து வீட்டிலேயே கைதியைப் போல் அடைபட்டிருந்தார். அவரது திருமண புகைப்படங்களையும் வேதாகமத்தையும் கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் அவ‌ருக்குப் பிரியமான ஒலிநாடாக்களையும் அழித்தன‌ர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல அவருடைய தகப்பனாருக்கு இப்ராஹிம் மனம் மாறிவிட்டது போல‌த் தோன்றிய‌து. ஆனாலும் அவ‌ரை கைதி போல‌வே வைத்திருந்து அவ‌ர் த‌ப்பியோட‌ முய‌ற்சித்தால் அவரை சுட்டுத் த‌ள்ள‌ பாதுகாவ‌ல‌ர்க‌ளுக்கு உத்த‌ர‌விட்டிருந்தார். இன்னும் கொஞ்ச ‌நாள் சென்ற‌தும் பாதுகாவ‌ல‌ர்க‌ளுடனே அவர‌து ந‌ண்ப‌ர்க‌ளைப் பார்த்துவ‌ர‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டார்.
 

ஒரு நாள் த‌ன‌து பள்ளித் தோழ‌னைப் பார்த்துவர ‌வேண்டுமென‌ கேட்க‌வும் அவ‌ர‌து த‌க‌ப்பனார் அவ‌ரை வெளியே அழைத்துச் சென்றார். ஆண்ட‌வ‌ர் இப்ராஹிமிட‌ம்,"நீ உன் குடும்ப‌த்தை விட்டு வெளியேறும் நாள் இதுவே" என்று சொன்னார். அவ‌ர‌து தகப்பனாரும் போகும்வ‌ழியில் ஏதோ வேலையிலிருந்ததால் இப்ராஹிமை த‌னியே சென்றுவ‌ர‌ அனும‌தித்தார். இந்த‌ அருமையான‌ வாய்ப்பினை இழ‌க்க‌ விரும்பாத‌ இப்ராஹிம் நேராக‌ ஒரு கிறிஸ்த‌வ‌ப் போத‌க‌ரிட‌ம் சென்று அவ‌ருடைய‌ உத‌வியுட‌ன் ப‌த்திர‌மாக‌ வெளியேறி த‌ன‌து தேச‌த்துக்குச் சென்று ம‌னைவியுட‌ன் சேர்ந்தார்.
 

ச‌மீப‌த்தில் இப்ராஹிம் தொலைபேசி மூல‌ம் த‌ன‌து த‌க‌ப்ப‌னாருட‌ன் பேசிய‌போது அவ‌ர் சொன்ன‌து, "நீ வ‌ண‌ங்கும் தெய்வ‌மே உண்மையான‌ தெய்வ‌ம், கார‌ண‌ம்.உன்னைத் துன்புறுத்த க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ எடுத்த‌ முய‌ற்சிக‌ள் தோற்றுப் போய்விட்டது".


ஆங்கில மூலம்: http://net-burst.net/hot/muslim.htm#ibrahim


The Price of Peace, an article published in The Believer's Voice of Victory' Magazine, April 1998, published by Kenneth Copland and Gloria Copland from the UK. Ibrahim's story took place around the year 1986-87.

 

 


 

 

 
 

முஸ்லீம்களோடு பகிர்ந்து கொள்ள சில வசனங்கள்.

 

September 2003 version

தேவனின் வார்த்தையை பாதுகாக்க அவரின் வாக்குத்தத்தங்கள்

நீதிமொழிகள் 30:5-6 'தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார், நீ பொய்யனாவாய்."

ஏசாயா 59:21 'உன் மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இது முதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்."

குர்‍ஆன் 5: 46 - குர்‍ஆனில் ஒரு குறிப்பிடத்தக்க வசனம்

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை , அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (சூரா 5:46)

குர்‍ஆனின் இந்த வசனம் விசேஷமானது. இறைவன் தோரவை (பழைய ஏற்பாட்டு வேதபுத்தகத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) உறுதிபடுத்துவதற்காக இயேசுவை அனுப்பியிருப்பாரென்றால் இயேசுவின் காலத்தில் மக்கள் வாசித்த மற்றும் இயேசுவால் உண்மைபடுத்தப்பட்ட தோரா தான் இறைவன் அனுப்பித்தந்த தோராவாக இருக்க முடியும்.

மேலும் சூரா 5: 47 '(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; …." (5:47) என்று கூறுகிறது. இன்ஜீலையுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் போது, இன்ஜீலை உடையவர்களிடத்தில் உள்ள இன்ஜில், அல்லாஹ் அவர்களிடம் வைத்து தீர்ப்புக் கூறச் சொன்ன இன்ஜீல் இல்லை என்று எப்படி கூற முடியும்?

சூரா 5:48 ல் "மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்…..".

வசனங்களை கொடுக்க இறைவனுக்கு வல்லமையிருக்கும் போது, அதை பத்திரமாக பாதுகாக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?

இயேசுவின் உன்னத நிலை

அப்போஸ்தலர் 4:12 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை...."

பிலிப்பியர் 2:5-12 'கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்".

1 பேதுரு 3:15-16 'கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல் மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். (18) ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார், அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1 யோவான் 5:12-13 'குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்."

யோவான் 14:6 'அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்".

1 யோவான் 2:22-23 'இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்."

யோவான் 8:24 'ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்".

சமாதானமும் யுத்தமும்

யோவான் 16:2-3 '.......மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள் (இயேசு கூறியது)

எரேமியா 8:11-12 'சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள் நாணவும் அறியார்கள்;,......"

வெளி 17:5-6 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன் , அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

செய்தியிலும் தொனியிலும் உள்ள வித்தியாசம்

லூக்கா 6:27-28 'எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.

சமாதான பிரபுவாகிய இயேசுவின் இந்த வார்த்தைகளை கடைபிடிக்கிறீர்களா?

1 கொரிந்தியர் 13:1-7 'நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது , அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்";

Source: Some Verses to Share with Muslims , http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/VersesToShare.html