அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 23, 2011

இஸ்லாமியர்களின் மீது யுத்தம் - War on Muslims

இஸ்லாமியர்களின் மீது யுத்தம்

சாமுவேல் கிரீன்

அறிமுகம்

இஸ்லாமுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக யுத்தம் நடந்து கொண்டிருப்பதாக அநேகர் நினைக்கின்றார்கள். உலக வல்லமைகளாக இருக்கும் நாடுகளும் இதர பிரிவுகளும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி எடுக்கும்போது, உலகின் அநேகப் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்படுகிறவர்களில் நிச்சயமாக இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். இஸ்லாமுக்கு எதிராக அல்லது ஆதரவாக விவாதிக்கும் போது சில நேரங்களில் வார்த்தைப் போர்களும் நடக்கின்றன, இன்னும் அநேக முஸ்லிம்கள் மற்ற‌ முஸ்லிம்களோடு போரிடுகின்றனர். இது மிகவும் சிக்கலான‌ சூழ்நிலை. குர்‍ஆனும் சுன்னாவும் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு பங்களிக்கின்றன என்றும் மற்றும் இந்தச் சூழ்நிலையைப் பற்றி நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்) என்ன போதிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்

குர்‍ஆன்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (குர்‍ஆன் 2:278-279)

மேலே உள்ள வசனங்களின் சந்தர்ப்பமானது, சில முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்களாவதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருந்த பணத்திற்கு வரவேண்டிய வட்டியை, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்ட பிறகு வசூல் செய்துக்கொள்ள விரும்பினார்கள் என்பதாகும். அவர்கள் வட்டி வாங்க விரும்பினால் அல்லாஹ்வும் முஹம்மதுவும் அவர்கள் மீது போர் தொடுப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். இதே போல உள்ள இன்னொரு கட்டளையை நாம் குர்‍ஆன் 9:73 ல் பார்க்கிறோம்.

நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது. (குர்‍ஆன் 9:73)

இவ்வசனம் இறக்கப்பட்ட சந்தர்ப்பமானது, முஹம்மது ஜிஹாத் செய்வதற்கு முஸ்லிம்களை அழைக்கிறார். சில முஸ்லிம் இனங்கள் சண்டையிட விரும்பாமலிருந்தார்கள் (ஜிஹாத் செய்ய விரும்பவில்லை), எனவே அவர்கள் மாயக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ஜிஹாத்தில் இணையும் வரை அவர்களோடு முஹம்மது போர் புரிவார் .

மீண்டும் 49:9 ல் ஒரு முஸ்லிம் குழுவோடு அவர்கள் "அல்லாஹ்வின் கட்டளைக்குத் திரும்பும் வரை" யத்தம் செய்ய முஹம்மது கட்டளையிடுகிறார் என்று நாம் பார்க்கிறோம்.

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள் ; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (குர்‍ஆன் 49:9)

சுன்னா:

ஆல்கஹால் பயன்படுத்துவதை நிறுத்தாத முஸ்லிம்கள் மீது உண்மையான முஸ்லிம்கள் போர் தொடுக்க முஹம்மது கட்டளையிட்டார்.

தைலம் அல் – ஹிம்யரி (Daylam al-Himyari) கூறியதாவது: நான் நபியினிடத்தில் (அவர் மீது சமாதானம் உண்டாவதாக‌) கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே நாங்கள் ஒரு குளிர் பிரதேசத்தில் இருந்து கடினமான வேலைகளை செய்கிறோம் எங்கள் தேசத்தின் குளிரை சமாளிப்பதற்கும் எங்கள் வேலைக்கு தேவையான சக்தியை நாங்கள் பெறுவதற்கும் கோதுமையிலிருந்து ஒரு பானத்தை தயாரிக்கிறோம். அவர் என்னிடம் கேட்டார் : அது போதையூட்டக் கூடியதா? நான் சொன்னேன்: ஆமாம். அவர் சொன்னார்: நீ அதை தவிர்க்க வேண்டும். நான் சொன்னேன்: ஜனங்கள் அதை கைவிடமாட்டார்கள். அவர் சொன்னார்: அவர்கள் அதை கைவிடவில்லை என்றால் அவர்களோடு யுத்தம் பண்ணு (அபூ தாவுத் - Abu Dawood: book 26, no. 3675, Hasan)

பொய் முஸ்லிம்களின் மசூதிகளை அழித்துப் போடும் படி முஹம்மது உண்மையான முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் தபுக் என்ற ஊரை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எதிரி மசூதியின் உரிமையாளர்கள் அவரிடம் வந்து, " நாங்கள் வியாதியுள்ளவர்களும் தேவையுள்ளவர்களும் மோசமான சீதோஷ்ண நிலையில் இரவிலே தங்குவதற்காக ஒரு மசூதியைக் கட்டியிருக்கிறோம், நீங்கள் வந்து எங்களுக்காக தொழுகை செய்யும் படி விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அவர், தான் பிராயணத்திற்காக ஆயத்தப்பட்டிருப்பதாகவும், நேரமில்லாமலிருப்பதாகவும் கூறினார்…. மேலும் திரும்பி வரும்போது இறைவன் நாடினால் அவர்களிடம் வந்து அதில் அவர்களுக்காக தொழுகை செய்வதாகவும் கூறினார். அவர் துஅவன் என்ற இடத்திற்கு வந்த போது, அந்த மசூதியின் செய்தி அவருக்கு எட்டினது, உடனே அவர் மாலிக் பி. துக்ஷும் ... மற்றும் மஅன் பி. அதீ ஆகியோரை அழைத்து அந்த தீய‌ மனிதருடைய மசூதிக்குச் சென்று அதை அழித்து எரித்தும் போடும் படி சொன்னார்…. அந்த இருவரும் ஜனங்கள் இருந்த அந்த மசூதிக்கு ஓடிச் சென்று அதை எரித்து அழித்துப் போட்டார்கள், ஜனங்கள் அங்கிருந்து சிதறியோடினார்கள். (இபின் இஷாக் - Ibn Ishaq, Sirat Rasul Allah, p. 609)

முஹம்மது மரித்த பிறகு ஜக்காத் (வரி) கொடுக்காத முஸ்லிம்கள் மீது அபூ பக்கர் கூட‌ போர் தொடுத்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். (பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1399)

முஸ்லிம்கள் மீது முஹம்மதுவின் யுத்தம்

இஸ்லாமின் எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாத மற்ற‌ முஸ்லிம்களோடு நம்பிக்கையான முஸ்லிம்கள் போர் செய்யவேண்டும் என்று குர்‍ஆனின் மற்றும் சுன்னாவின்(ஹதீஸ்கள்) மேற்கண்ட வசனங்கள் மற்றும் விவரங்கள் தெளிவுப்படுத்துகின்றன. இது ஜிஹாத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும் (அங்கமாகும்). ஜிஹாத் என்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான போர் மட்டுமல்ல, இது முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் போருமாகும். இதனால் தான் தாலீபான், அல்கெய்தா மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் முஸ்லிம்களை தாக்குகிறார்கள். அவர்கள் தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றும், மற்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தின் (ஷரியா) எல்லா கட்டளைகளையும் கடைபிடிக்கும் வரை அவர்களோடு யுத்தம் செய்ய வேண்டியது தங்களுடைய கடமையென்றும் எண்ணுகிறார்கள்.

முஸ்லிம்கள் மீது இஸ்லாமியர்கள் போர்தொடுப்பது ஒன்றும் புதிது அல்ல. இது முஹம்மதுவின் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இஸ்லாமின் தொடக்கத்திலிருந்து முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கொன்றும் படுகொலை செய்தும் வருகிறார்கள். முஸ்லிம் அல்லாத நாடுகள் இந்த யுத்தத்தை தொடங்கவில்லை எனவே அவர்களால் இதை நிறுத்தவும் முடியாது. முஸ்லிம் அல்லாத நாடுகளின் தலைவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் எல்லா நிலைகளையும் அமுல்படுத்தாத இஸ்லாமியத் தலைவர்களை ஆதரிக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ அவர்களும் இந்த யுத்தத்தில் ஒரு பக்கத்தில் நிற்கிறார்கள்.

இந்த கட்டளைகளோடு வாழ்வது:

"சரியாக வழிநடத்தப்படும் முஸ்லிம்கள் தாங்கள் தான்" என்று நம்பும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய சட்டத்தின் எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாத மற்ற முஸ்லிம்களோடு யுத்தம் செய்ய குர்‍ஆனும் சுன்னாவும் கட்டளை கொடுக்கிறது. இந்த கட்டளையானது வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் இறைவன் உயர்த்தப்பட்டு அவருடைய வார்த்தையின் படி எல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு உன்னதமான சரியான விருப்பத்திலிருந்து வருகிறது. ஆனால், பிரச்சனை என்னவென்றால், இப்படிப்பட்ட அதிகாரத்தை மற்றவர்கள் மீது செலுத்த ஒரு தனி மனிதனுக்கு அதிகாரம் உண்டு என்று நாம் யாரையும் நம்பமுடியாது.

முஸ்லிம்கள் தாங்கள் தான் "உண்மையான முஸ்லிம்கள்" என்று நம்பும் போது அவர்களுடைய விருப்பத்தை மற்ற முஸ்லிம்கள் மீது திணிக்கிறார்கள், இது இறைவனை உண்மையாகத் தொழுது கொள்வதற்கு அல்ல மாறாக கொடூரத்திற்கும் சீர்கேட்டிற்கும் வழிநடத்துகிறது. உலகில் அநேக முஸ்லிம்கள் இந்த "தாங்களே உண்மையாக முஸ்லிம்கள்" என்று தங்களை அழைத்துக் கொள்கிற மற்ற‌ முஸ்லிம்களினால் அதிகமாக கொடூரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாகிறார்கள். (உதாரணத்திற்கு இந்த செய்திகளை படித்துப் பாருங்கள்: 1, 2, 3, 4).

அநேக இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய குழுக்கள் தங்கள் நாட்டு அரசாங்கங்கள் போதுமான அளவிற்கு இஸ்லாமிய வழியில் இல்லை என்று சொல்லி அவைகளை கவிழ்த்துவிடுகின்றன‌. அங்கே ஒரு முடிவில்லாத ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடங்காத யுத்தம் நடக்கிறது. ஒரு போதும் அடைய முடியாத ஒரு இஸ்லாமிய தூய்மையை நிறுவுவதற்காக, இதர‌ இஸ்லாமியர்களோடு ஒத்துப்போகாத "தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள்" என்று சொல்லிக்கொள்கிறவர்கள் மற்ற இஸ்லாமியர்களோடு யுத்தம் செய்கிறார்கள்.

"சரியாய் வழிநடத்தப்படும்" முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களோடு யுத்தம் பண்ண வேண்டும் என்ற இந்த கட்டளையானது இஸ்லாமுக்கும் உலகத்திற்கும் ஒரு பேரழிவு ஆகும். இந்த கட்டளையானது ஜனங்கள் இறைவனைத் தொழுது கொள்ளாமலிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை மாறாக ஏராளமான பிரச்சினைகளை உருவாக்கி இந்த உலகத்தில் இறைவனுடைய பெயர் தூஷிக்கப்படுவதற்கு வழி வகுக்கிறது.

ஏன் இந்தக் கட்டளை சரியாக வேலை செய்யவில்லை?

இறைவன் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றி என்ன கூறியிருக்கின்றார்.

இந்த அதிகாரங்களைக் கொடுத்து மனித இனத்தை நம்பமுடியாது என்று முஹம்மதுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலமாக இறைவன் வெளிப்படுத்தி விளக்கியிருக்கிறார். இஸ்ரவேல் மற்ற நாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய கட்டளைகளின் படி நடந்து அவருடைய பெயரை உயர்த்துவதற்காகவே குறிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதை நிறைவேற்றத் தவறினார்கள். இன்னும் அவர்களை தேவனுடைய கட்டளைகளுக்கு நேராக திருப்பிய அவர்களின் பெரிய இராஜாக்களான யோசாபாத், எசேக்கியேல், யோசியா போன்றவர்கள் கூட இதை வெற்றிகரமாக செய்து முடிக்கவில்லை. ஆனால், இதற்காக நாம் வெறுமனே இஸ்ரவேலை குற்றம் சாட்டக் கூடாது.

ஜனங்களாகிய நமக்குள் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், உண்மையாக நாம் இருக்கும் நிலையைவிட நம்மை சிறந்தவர்களாக எண்ணிக் கொள்வது தான். நாம் மற்றவர்களைக் காட்டிலும் நம்மை சிறந்தவர்களாகவும், நியாயத்தீர்ப்பில் நிற்கமுடியும் என்றும் எண்ணுகிறோம். ஆனால் இயேசு நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத்தேயு 7:1-4)

எனவே யூதர்கள் இறைவனுக்காக‌ வாழ முடியால் தோற்றுப்போனதை காரணம் காட்டி, அவர்கள் மீது குற்றம் சுமத்தி, நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கிறோம் என்று எண்ணக்கூடாது. நாமும் அவர்கள் வாழ்ந்ததைப் போலவே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ மற்றவர்களை இறைவனுடைய கட்டளைகளை கடைபிடிக்கும் படி கட்டாயப்படுத்திய போது தோற்றுப்போய் கொடூரத்திலும் இறைவனுடைய பெயர் தூஷிக்கப்பட்டதிலும் போய் முடிந்திருக்கின்றன என்பதை நமக்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் சரித்திரம் காட்டுகிறது.

மனிதர்கள் இந்த பூமிக்கு இறைவனுடைய ஆட்சியை கொண்டுவர முடியாது ஏனென்றால் நாம் எல்லாருமே தீயவர்களும் தோற்றுப்போனவர்களுமாக இருக்கிறோம்.

…வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, (ரோமர் 3:22,23)

என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் 20:9)

எந்த ஒரு மனிதனானாலும் சரி, அவர் முஹம்மதுவாக இருந்தாலும் சரி, அவரிடம் பாவ சுபாவம் இருக்கும் என்று குர்ஆனும், சுன்னாவும் அங்கீகரிக்கின்றன.

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; … (குர்‍ஆன் 16:61, மற்றும் பார்க்க குர்‍ஆன் 12:53).

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக ... (குர்‍ஆன் 47:19)

அபூ மூஸா(ரலி) அறிவித்தார் .

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். (சஹீஹ் புகாரி - பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398)

மேசியாவின் வாக்குறுதி:

சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. (ஏசாயா 59:15-16)

இறைவனுடைய அரசாங்கத்தை உண்மையாக கொண்டு வரக் கூடிய ஒருவனும் இல்லாததினால், மேசியாவை அனுப்புவதாக இறைவன் வாக்கு உரைத்தார்.

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந் தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். (ஏசாயா 11:2-5)

மேசியாவைப் பற்றி ஏராளமான அருமையான காரியங்களை இறைவன் சொல்லியிருக்கிறார். எனவே நீங்கள் எல்லாத் தீர்க்கதரிசனங்களையும் சுவிசேஷங்களையும் படித்து மேசியாவைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். வரும்நாட்களில் நான் அவரைக் குறித்த எல்லா வசனங்களையும் ஒன்று திரட்டிக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நம்முடைய ஒரே நம்பிக்கை அந்த மேசியா தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை இறைவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள கட்டாயப்படுத்த முடியும் என்று எண்ணி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இறைவன் அதை விரும்புவதில்லை.

இருப்பினும், நம்முடைய தோல்வியைக் குறித்தும் மேசியாவின் மகிமையான வாக்குத்தத்தைக் குறித்தும் இறைவனுடைய தெளிவான போதனைகள் இருந்தும், "சரியாக வழிநடத்தப்படும்" முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களோடு போர் செய்ய வேண்டும் என்று முஹம்மது ஓதியிருக்கிறார். இது தீர்க்கதரிசிகளும் சுவிசேஷகங்களும் சொல்லியிருக்கிறவைகளுக்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் மேல் முஹம்மதுவின் யுத்தமானது இலட்சக்கணக்கில் உள்ளோருக்கு உபத்திரவத்தை கொண்டுவந்திருக்கிறது. இவ்விதமாக பூமியிலே தன்னுடைய ஜனங்கள் தன்னுடைய அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்று இறைவன் விரும்பவில்லை. இது கடந்த காலத்தில் இப்படிப்பட்ட முயற்சியை செய்து தோற்றுப்பனவர்களுடைய நிலையை திரும்ப நடப்பிப்பது ஆகும்.

முடிவுரை

நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே அவருக்காகவே வாழவும் அவருடைய வார்த்தையின் படியே செய்யப்படுவதுமாயிருப்பது சரியானதும் ஒழுக்கமானதுமாகும், ஆனால் நாம் அதை நம்முடைய வழியில் அல்ல இறைவனுடைய வழியிலே நிறைவேற்ற வேண்டும். இறைவனுடைய வழியானது மேசியாவை அனுப்பி அவரை பின்பற்றுவதற்கு நம்மை அழைப்பதாகும். வேறு யாரையும் பின்பற்றாதீர்கள். நீங்கள் மேசியாவை பின்பற்ற முடியும். இப்படியான ஒரு ஜெபத்தை செய்யுங்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீரே உண்மையான ஜீவிக்கிற தேவனாயிருக்கிறீர், நான் உம்முடைய வழியில் வாழ வில்லை என்பதை அறிக்கையிடுகிறேன் அதற்கு உம்முடைய உதவி எனக்கு தேவை மேசியாவை நீர் அனுப்பியதற்காக‌ நன்றி அந்த மேசியாவை பின்பற்றி அவரிடத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்.

இப்போது மேசியாவிடமிருந்து கற்றுக்கொள்ள இந்த நற்செய்தி நூலையும், மற்ற எல்லா தீர்க்கதரிசிகளையும் படியுங்கள்.

நூற்பட்டியல்:

1) அபூ தாவுத் ஹதீஸ் (ஆங்கிலம் - Sulaiman Abu Dawud, Sunan Abu-Dawud (translator: Prof. Ahmad Hasan)).

2) சஹீஹ் புகாரி - தமிழ்.

3) இபின் இஷாக் - சிரத் ரசூலல்லாஹ் - Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (translator: A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.

4) குர்ஆன் - முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிடு


 
source:


March 17, 2011

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1

புத்தக அறிமுகம்:



Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1

8.5"x11", color, hard cover, 67 pages

ISBN-10: 0982964307, ISBN-13: 978-0982964309


புத்தக அட்டைப்படம்:



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8121617.jpg?401


என் பெயர் அப்துல். என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.இது என்னுடைய புதிய புத்தகம்.இந்த புத்தகம் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இஸ்லாமை சுலபமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இப்புத்தகம் உதவும் என்ற நோக்கத்தோடு இப்புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன்.




http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/9068355.png?289

இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது அதன் ஸ்தாபகர் இறைத்தூதர் முஹம்மதுவை புரிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமை புரிந்துக்கொள்ள இது ஒரு சுலபமான வழியாகும்.

ஏன்?



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4026245.png?316

இஸ்லாமைப் பற்றி மக்கள் அனேக விதமாகச் சொல்வார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் தவறாக இருக்கலாம். ஏனென்றால், அவைகள் முஹம்மது என்ன சொல்லியுள்ளாரோ எவைகளை செய்துள்ளாரோ அவைகளுக்கு எதிராக இருக்கும். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல், இவை இரண்டிற்கு எதிராக இருப்பதெல்லாம் இஸ்லாம் அல்ல.

உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்போம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8605183.png?363

ஆனால், தீவிரவாதிகள் முஹம்மது சொன்னது போலத் தான் நாங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொன்னாலும், இஸ்லாமியர்கள் இதனை மாற்றிச் சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் கூறுவது: இது உண்மையான இஸ்லாம் இல்லை. இஸ்லாம் அமைதியையும், அன்பையும் போதிக்கிறது. அந்த தீவிரவாதிகள் (இரட்டை கோபுரங்களை தகர்த்திய தீவிரவாதிகள்) இஸ்லாமை கடத்திவிட்டார்கள் அல்லது அமைதி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5711649.png?565

நீங்கள் கவனித்தீர்களா?

முஹம்மது என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் முஹம்மது மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஆகையால், யார் சொல்வது உண்மையான விவரம் என்பதை தெரிந்துக்கொள்ள நாம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிக்கவேண்டும், முஹம்மதுவை படிக்கவேண்டும்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5189545.png?363

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றி நாம் கீழ்கண்ட புத்தகங்களில் படிக்கலாம்.

1) குர்‍ஆன் (அல்லாஹ்வின் வெளிப்பாடு / இஸ்லாமியர்களின் வேதம்)
2) ஹதீஸ்கள் (முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களின் தொகுப்பு)
3) சிரத் (முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு)

இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8180786.png?366

குர்‍ஆனை படிப்பது என்பது மிகவும் சோர்வு உண்டாக்கும் செயலாகும், அதாவது ஒரு சரியான முறைப்படி கோர்வையாக குர்‍ஆன் எழுதப்படவில்லை. ஒரு விவரத்திலிருந்து இன்னொரு விவரத்திற்கு குர்‍ஆன் அடிக்கடி தாவும். ஆகையால், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் மட்டுமே நிற்கும், குர்‍ஆன் என்ன சொல்கின்றது என்பது நமக்கு புரியாது.

குர்‍ஆனை புரிந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் தஃப்ஸீர் என்றுச் சொல்லக்கூடிய "குர்‍ஆன் விளக்கவுரைகளை" படிப்பார்கள்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8186244.png?312

த‌ஃப்ஸீர் என்கின்ற குர்‍ஆன் விளக்கவுரைகள் அனேகம் உள்ளன, அதாவது இபின் கதீர் விளக்கவுரை, தபரி விளக்கவுரை, இபின் அப்பாஸ் விளக்கவுரை, ஜலாலைன் விளக்கவுரை என்று அனேக குர்‍ஆன் விளக்கவுரைகள் உள்ளன.

இதே போல, ஹதீஸ்களும் அனேக தொகுப்புக்கள் உள்ளன. ஹதீஸ்களில் புகாரி என்றும், முஸ்லிம் என்றும், அபூ தாவுத் என்றும், முவட்டா என்றும் அனேகம் உள்ளன. ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பிலும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அதே போல, சிரத் என்றுச் சொல்லக்கூடிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகள் அனேகம் உள்ளன, உதாரணத்திற்கு, இபின் இஷாக், இபின் ஹிஷாம், தபரி, இபின் ஸாத், இபின் கதீர் என்று அனேகம் உள்ளன.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/154530.png?444

இஸ்லாமை அறிந்துக்கொள்ள இத்தனை புத்தகங்களை படிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5173027.png?179

ஒரு வேளை நமக்கு நேரமிருந்தாலும், எந்த புத்தகத்தை நாம் படிப்பது?



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6950385.png?228

இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை ஒரு கோர்வையாக படக்கதைகள் மூலம் விளக்கியுள்ளேன். இஸ்லாமை அறிந்துக்கொள்ள நமக்கு முன்பாக இருக்கும் இத்தனை புத்தகங்களை படிக்க‌வேண்டும் என்ற தலைவலி இனி உங்களுக்கு இல்லை. இந்த படக்கதைகளை நீங்கள் இரசித்து படிக்கலாம்.

இது முதலாவது தொகுப்பாகும் (Volume 1)



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4434218.png?302

இந்த முதலாவது தொகுப்பில், நீங்கள் முஹம்மதுவின் வாழ்க்கையை "மக்கா தொடங்கி அவர் மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த (இடம் பெயர்ந்த) காலம்வரையிலான" விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

அதுவும், ஒரே முறை உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/7578037.png?332

இந்த புத்தகத்தை நீங்கள் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/86573.png?317

நீங்கள் இந்த புத்தகத்தை பார்க்கில் (தோட்டத்தில்) உட்கார்ந்து படிக்கலாம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/2950704.png?446

உங்கள் கணினியில் உட்கார்ந்துக்கொண்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/3838682.png?304

ஆனால், பல‌ன் ஒன்று தான், அதாவது நாம் அனேக இஸ்லாமிய புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளும் விவரங்களை ஒரே ஒரு படக்கதை புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அறிவு நமக்கு சீக்கிரமாகவும், சரியான விவரமும் இதன் மூலம் கிடைத்துவிடும்.

இஸ்லாம் பற்றி இத்தனை விவரங்கள் எனக்குதெரிந்துவிட்டதே என்றுச் சொல்லி நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6032384.png?365

இவைகளை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செலவிடவேண்டியதெல்லாம், புத்தக வடிவில் தேவையானால் $16.99 யும், கணினியில் படிக்க ஈ-புத்தகம் (e-book) என்ற வடியில் படிக்க $ 10.99 யும் ஆகும்.

இஸ்லாமை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால், அதுவும் சுவாரசியமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருந்தால் மற்றும் உங்களிடம் அதிக நேரம் இல்லை என்றால், உங்களுக்குத் தான் இந்த புத்தகம்.



http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/1560242.png?394

மேலும் அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:

http://prophetmuhammadillustrated.com/


இந்த படக்கதை புத்தகத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படக்கதையை படிக்கலாம்:

http://prophetmuhammadillustrated.com/the-killing-of-umm-qirfa.html

You tube Video:





Source: http://prophetmuhammadillustrated.com/

March 14, 2011

Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2

Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2

முன்னுரை: ஜியா என்ற சகோதரர் எழுதிய "அல்லேலூயாவும் ஈசா உமரும்" என்ற கட்டுரைக்கு கீழ்கண்ட மறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1.0 Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

    1.1 Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
    (இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை)

    1.2 Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"
    (இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?)

    1.3 Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

இதன் தொடர்ச்சியாக, "அல்லேலூ 'யா'வும் அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2" வெளியிடப்படுகிறது.

இப்போது இரண்டாம் பாக மறுப்பைக் காணலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

மொழிபெயர்ப்பு:

உமர் அவர்களே, நீங்கள் அளித்த "விகிபீடியா" விலாசத்தில் "யஹுவாவை துதித்தல்"என்பதே சரி என்று இருக்கிறது. சரி "யஹுவாவை துதித்தல்" அல்லது "யஹ்வேஹ்-வை துதித்தல்" என்ற வார்த்தையில் வரும் "யஹுவா" அலலது "யஹுவெஹ்" என்றால் என்ன? ஹிப்ரூ மொழியில் "யோத்" "ஹு" "வாவ்" "ஹு", சரியான உச்சரிப்பு அறிய போதாதலால், அதனுடன் vowels சேர்க்கப்பெற்று "யஹுவா" என்று உச்சரித்தனர்.

Source

உமரின் பதில்:

ஜியா அவர்களே, விக்கிபீடியா சொன்னதால் தான் "ஹல்லேலூயா" என்ற‌ வார்த்தைக்கு "யஹுவாவை துதித்தல்" என்று அர்த்தமில்லை, அந்த வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டாக இருப்பதினால் தான் அந்த அர்த்தம். இது விக்கிபீடியா கலைக்கலைஞ்சியத்தில் பதிக்கப்பட்டுள்ளது. ஹல்லேலூயா வார்த்தையின் பொருளை இதர பைபிள் விரிவுரை தளங்களிலிருந்து மேற்கோள் காட்டலாம், ஆனால், பொதுவான கலைக்கலைஞ்சியமாக விக்கிபீடியா இருப்பதினால், அதன் தொடுப்பை கொடுத்தேன்.

சரி, நான் கொடுத்த தொடுப்பை சொடுக்கி நீங்கள் படித்து சில விவரங்களை தெரிந்துக்கொள்ள நான் வழி வகுத்து கொடுத்துள்ளேன் இல்லையா! இதே போல, நீங்களும் தொடுப்புக்களை கொடுத்தால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமல்லவா? இஸ்லாமியர்களாகிய நீங்களும் உங்களைப் போல இணையத்தில் எழுதும் இதர இஸ்லாமியர்களும் இப்படி மூல தொடுப்புக்களைக் கொடுத்து வாசகர்களுக்கு உதவுவார்களா?

"யஹூவெஹ்" என்றால் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்?

ஜியா அவர்களே, நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், விக்கீபீடியாவை படித்தேன் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அதிலிருந்து இன்னும் சில தொடுப்புக்களுக்கு தாவி அங்கிருந்தும் சிலவற்றை பதித்து இருக்கிறீர்கள். நீங்கள் பதித்த ஆங்கில விவரங்களிலேயே "யஹூவெஹ்" என்றால் என்ன என்று சொல்லியிருக்கும்போது, மறுபடியும் எப்படி ஒன்றுமே தெரியாதவர் போல கேள்வியை கேட்கிறீர்கள்?

உங்களுடைய யுக்தி அனைத்தும் எங்களுக்குத் தெரியும். யஹூவெஹ் என்றால் "I AM" / "He is" என்று பொருள் என்று கூறியிருந்தும், உங்களுடைய சொந்த விவரத்தை நுழைக்க, கேள்வியை கேட்பது போல கேட்டு, அதற்கு உங்கள் இஸ்லாமிய முறைப்படி பொருள் கொடுக்க முனைந்துள்ளீர்கள். ஆனால், ஜியா அவர்களே, இஸ்லாமியர்களாகிய உங்களின் இப்படிப்பட்ட யுக்தி மிகவும் ஆபத்தானது என்பதை இக்கட்டுரையை முழுவதுமாக படித்த பிறகு புரிந்துக்கொள்வீர்கள்.

இருக்கிறவராகவே இருக்கிறேன் அல்லது "இருக்கிறேன்": (I AM THAT I AM OR I AM)

பைபிளின் தேவன் தன் பெயர் "இருக்கிறேன்" என்றுச் சொல்கிறார். தலைமுறை தலைமுறையாக எப்போதும் அவரை இந்த பெயரில் அழைக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

God said to Moses, "I AM WHO I AM. This is what you are to say to the Israelites: 'I AM has sent me to you.'"

God also said to Moses, "Say to the Israelites, 'The LORD, the God of your fathers—the God of Abraham, the God of Isaac and the God of Jacob—has sent me to you.'

"This is my name forever, the name you shall call me from generation to generation. (Exodus 3:14, 15)

அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். (யாத்திராகமம் 3:14,15)

பைபிளின் தேவன் தன் பெயர் "இருக்கிறேன்" என்றுச் சொல்கிறார். உலகத்தில் எந்த மனிதனும் "இருக்கிறேன்" என்று எப்போதும் சொல்லமுடியாது. உதாரணத்திற்கு, "ஜியா" என்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் "இருக்கிறேன்" (நிகழ்காலம்) என்றுச் சொல்லிக்கொள்ளலாம், ஆனால், மரித்துவிட்ட பிறகு நீங்கள் "இருக்கிறேன்" என்றுச் சொல்லமுடியாது, மற்றவர்கள் உங்களைப் பற்றி கூறும் போது, "இருந்தார் (இறந்த காலம்)" அதாவது ஜியா என்ற சகோதரர் இருந்தார் என்றுச் சொல்வார்கள்.

ஆக, எல்லா காலத்திற்கும் "இருக்கிறேன்" என்று நிகழ்காலத்தில் சொல்லக்கூடிய ஒருவர் இருந்தால் அவர் இறைவனாகத் தான் இருக்கமுடியும், ஆகையால் தான் பைபிளின் தேவன் "நான்" அல்லது "இருக்கிறேன்" என்று தன் பெயரைச் சொல்கிறார்.

அல்லாஹ்வும் பைபிளின் "இருக்கிறேன்" என்கின்ற யேகோவா தேவனும் ஒருவரல்ல:

நாம் மேலே படித்த வசனங்களில் யேகோவா தேவன், தன்னை "யேகோவா" பெயரில் அழைக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். பைபிளில் "யேகோவா" என்ற பெயர் 6000க்கும் அதிகமாக இடங்களில் வருகின்றது. தன் தீர்க்கதரிகளுக்கு தேவன் இந்த பெயர் மூலமாக வெளிப்பாடு அருளினார், அவர்களும் இந்த பெயரை பயன்படுத்தினார்கள். ஆனால், தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார், தானும் ஒரு நபி என்று சுயமாக சொல்லிக்கொண்ட முஹம்மது மட்டும் "அல்லாஹ்" என்ற பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆக, யேகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி முஹம்மது அல்ல என்பது இதன் மூலமாக நிருபனமாகும். மற்றும் எப்படி பைபிளில் தேவன் தன் பெயரை யேகோவா என்று பல ஆயிர முறை பயன்படுத்தியுள்ளாரோ, அதே போல, தன் பெயர் அல்லாஹ் என்றுச் சொல்லி, குர்‍ஆனில் "அல்லாஹ்" பயன்படுத்தியுள்ளார்.

பழைய ஏற்பாட்டில் தன் பெயர் "யேகோவா" என்று சொல்லி அறிமுகப்படுத்திய தேவன், திடீரென்று ஏழாம் நூற்றாண்டில், தன் பெயர் "அல்லாஹ்" என்று மாற்றிக்கொள்ளவில்லை. இதற்கு பதிலாக, தலை முறை தோறும் "இருக்கிறேன் (யேகோவா)" என்ற பெயராலேயே தான் அழைக்கபடவேண்டும் என்று பைபிளின் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

குர்‍ஆன் வசனங்களில் நாம் யேகோவா என்ற பெயரை நாம் காண்பதில்லை. ஆக, பைபிளின் தேவனும், குர்‍ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல. [கிறிஸ்தவர்களே, இவ்விருவரும் ஒருவரே என்று பொய் சொல்லி, இஸ்லாமியர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள்]

ஆக, இதன் மூலம் அறிவது என்னவென்றால், குர்‍ஆனின் அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் ஒருவரல்ல.

இவர் வேறு அவர் வேறு, பைபிளின் தேவன் அனுப்பிய நபி முஹம்மது அல்ல. முஹம்மது ஒரு கள்ள நபி அதாவது ஒரு பொய் நபியாவார். ஆகையால் தான் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஹம்மது ஒரு நபி என்பதை அங்கீகரிக்கவில்லை.

ஜியா அவர்கள் எழுதியவை:

ஹிப்ரூ மொழி "யஹுவா"வில் உள்ள "யா" என்றால் "ஓ!" அன்று அர்த்தம் ஆகும் அச்சிரியத்தை வெளிபடுத்த பயன்படும் சொல்லாகும், "ஹுவா" என்றால் "அவன் தான்" என்று அர்த்தம். "யஹுவா" என்றால் "ஓ! அவன் தான்" என்று அர்த்தம் ஆகும்.

முதலில், அல்லேலூயா வார்த்தையில் வரும் இரண்டு வார்த்தைகளில், "யா" என்பது யேகோவா தேவனை குறிக்கும். இந்த வார்த்தைக்கு பொருள் நேரடியாக உள்ளது, அதாவது "அல்லேலு" என்றால், துதித்தல் என்றும், "யா" என்றால் "யேகோவா" தேவனை குறிக்கும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் மட்டும் உங்கள் இஸ்லாமிய தில்லுமுல்லை வெளிக்காட்டுவதற்கு "யா" என்றால் "ஓ" என்று அர்த்தம் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நான் கேட்கிறேன்: அல்லேலூயா என்ற வார்த்தையில் "யா" என்ற வார்த்தை "ஓ" என்ற பொருள் படும்படி பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதற்கு பதில் சொல்லமுடியுமா ஜியா அவர்களே?

உதாரணத்திற்கு கீழ்கண்ட பெயர்களை கவனிக்கவும்:

பெயர் தமிழில் பெயர் பொருள்
Jeremiah எரேமியா Yahweh exalts
Isaiah ஏசாயா Yahweh is salvation
Obadiah ஒபதியா servant of Yahweh" or "worshipper" of Yahweh
Zacharia சகரியா Yahweh has remembered
Nehemiah நெகேமியா Comforted of/is the LORD (Yahweh)
Zaphaniah செப்பனியா Yahweh has concealed

இன்னும் இப்படி அனேக பெயர்கள் உள்ளன, எடுத்துக்காட்டிற்காக சிலவற்றை மட்டுமே கொடுத்தேன். இந்த பெயர்களின் வரும் "யா" என்பது யேகோவா தேவனை குறிக்குமே ஒழிய, "ஓ" என்ற ஆச்சரியத்தை குறிக்காது. இதே போல, அல்லேலூயா என்ற வார்த்தையில் இருக்கும் "யா" என்பது யேகோவாவை குறிக்கும். எனவே, உங்கள் சொந்த விளக்கத்தை குர்‍ஆனை விளக்க பயன்படுத்துங்கள்.

ஜியா அவர்கள் எழுதியவை:

"ஓ! அவன் தான்" என்றால் யார் அவன்? அவன் பெயர் என்ன?

யேகோவா என்பது தன் பெயர், இதற்கு "இருக்கிறேன்" என்பது பொருள், இந்த பெயராலேயே எல்லாரும் அழைக்கவேண்டும் என்று நான் மேலே காட்டிய வசனங்கள் தெளிவாக கூறும் போது, மறுபடியும், இதன் பொருள் என்ன என்று கேட்கிறீர்கள்? விக்கிபீடியாவிலிருந்து நீங்கள் மேற்கோள் காட்டிய விவரங்களே இதற்கு பொருள் "I AM" என்றுச் சொல்லும் போது, மறுபடியும் ஏன் இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள்?

ஏதோ.. உங்க இஸ்லாமிய லாஜிக்கை சொல்லபோகிறீர்கள், மூக்கை அறுத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது... தொடருங்கள்... பார்க்கலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

156 முறை பைபளில் "ய ஹுவா எலா ஹிம்" (Example :Genesis 2:7) என்று சொல்ல பெற்று உள்ளது, அதற்கு அர்த்தம்

"ஓ! அவன் தான் எலா ஹிம்".

"எலா ஹிம்" என்றால் என்ன? "எலாஹ்" என்றால் கடவுளின் பெயர் "ஹிம்" என்றால் மரியாதையை குறிக்கும் சொல், நம் தமிழில் "கள்" இருபது போல "விலங்குகள்" என்றால் பல விலங்கு என்று அர்த்தம் அண்ணல் "உமர் அவர்கள்" என்றால் பல உமர் என்று அர்த்தம் கிடையாது அது மரியாதையை குறிக்கும் சொல்.

நாம் மேலே கண்டது போல "யா" என்பது, நீங்கள் சொல்கின்ற படி "ஓ" என்று அர்த்தமில்லை. மற்றும் "யேகோவா எலோஹிம்" என்ற வார்த்தைகளின் அர்த்தம் "தேவ‌னாகிய யேகோவா" என்பதாகும்.

எலோஹிம் என்பது எபிரேய மொழியில் "இறைவன்" என்ற பொருள் கொண்ட பொதுப்பெயராகும். அதாவது, இறைவன் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை குறிக்காது. "இறைவன்" என்ற பொருள் படும் "எலோஹிம், எலாஹ், எல்..." போன்ற அனேக வார்த்தைகள் எபிரேய மொழியில் உண்டு, இவ்வார்த்தைகள் பைபிளில் எந்தெந்த பொருளில், யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் விளக்கியுள்ளேன்:

Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

உதாரணத்திற்கு: "உங்கள் இறைவன் அல்லாஹ்" என்ற சொற்றொடரில், இஸ்லாமிய கடவுளின் பெயர் என்ன?

"இறைவன்" என்பது இஸ்லாமிய கடவுளின் பெயரா?
"அல்லாஹ்" என்பது இஸ்லாமிய கடவுளின் பெயரா?

"அல்லாஹ்" என்பது தான் பெயர், "இறைவன்" என்பது பெயர் அல்ல என்று இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்கள்.
இதே போலத்தான், எபிரேய மொழியில் "எலோஹிம்" என்பது தமிழில் "இறைவன்" என்ற பொருள் படும் பொதுப் பெயராகும். யேகோவா என்பது தான் பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராகும்.

எனவே, ஜியா அவர்களே, உங்கள் விளக்கம் தவறானது (உண்மையில் இந்த விளக்கத்தின் உண்மை சொந்தக்காரர் காலஞ்சென்ற திரு அஹமத் தீதத் அவர்களாவார்கள், இவரது அறியாமையை (மக்களை ஏமாற்றும் யுக்தியை) அப்படியே இஸ்லாமியர்கள் இன்றும் காபி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். காபி அடிப்பது தவறல்ல ஆனால் "ஈ" அடிச்ச காபி அடிக்கக்கூடாது, சிறிது யோசிக்கனும், ஆராயனும்.)

ஜியா அவர்கள் எழுதியவை:

அதனால் தான் நபி ஈஷா (ஸல்) தான் இறக்கும் தருவாயில் "Eloh, Eloh, lama sabachthani? என்று அழுததாக பைபிள் கூறுகிறது (Mark 15:34)

இதுவரை நாம் கண்ட விளக்கத்தின் படி, மற்றும் "எலோஹிம், எல், எலோஹ்" போன்ற வார்த்தைகளின் பொருள் "இறைவன்" என்பதாகும், இது தனிப்பட்ட பெயர் அல்ல.

மேலதிக விவரத்திற்காக "எலோஹ்", "எல்", "எலோஹிம்" போன்ற வார்த்தையின் பயன்பாடு பைபிளிலிருந்தும், எபிரேய அகராதியிலிருந்தும் எடுத்து விளக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

ஜியா அவர்கள் எழுதியவை:

"யா ஹு வா எலொ ஹு" என்றால் "ஓ! அவன் தான் எலா ஹு" என்று அர்த்தமாகும்,

"யா ஹு வா எலொ ஹு" என்றால் "தேவனாகிய யேகோவா" (அ) "இறைவனாகிய யேகோவா" என்று பொருள்.

இதில் "யேகோவா" என்ற பெயரை உங்கள் விருப்பப்படி பொருள் கூறுவது தவறாகும்.

உதாரணத்திற்கு:

"இறைவன் அல்லாஹ்", என்ற வார்த்தைகளை எபிரேய மொழியில் கூறவேண்டுமானால், "இறைவன்" என்ற வார்த்தையின் மொழியாக்கம் "எல் (அ) எலோஹ் (அ) எலோஹிம்" என்பதாகும். அடுத்ததாக, அல்லாஹ் என்ற தனிப்பட்ட பெயர் அப்படியே வரும், அதாவது "அல்லாஹ் எலோஹிம்" என்று கூறலாம். "அல்லாஹ்" என்பது பெயர், "எலோஹிம்" என்பது பொதுப்பெயர். இந்த எலோஹிம், விக்கிரகங்களையும், இதர தெய்வங்களை குறிக்கவும் பயன்படுத்தலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

இதில் வரும் "ஓ!" என்ற அசிர்யத்தை குறிக்கும் சொல்லை பிரித்தால் "ஹு வா எலொஹு" என்று வரும் குர்ஆனில் உள்ளது போல "ஹு வல்ல ஹு உள்ளஜி ல இலஹா இல்ல ஹு" (quran 59 :22 )

ஏன் நீங்கள் "ஓ" என்ற எழுத்தை பிரிக்கிறீர்கள் ?

(இப்படி பிரிக்கவில்லையானால், நீங்கள் சொல்ல வந்த பொய்யை ஏமாற்று வேலையை காட்டமுடியாது என்பதால், "ஓ" என்ற எழுத்தை பிரித்து விடுகிறீர்களோ)

உங்கள் விருப்பப்படி பொருள் கொடுப்பீர்கள்,

உங்கள் விருப்பப்படி சில எழுத்துக்களை சேர்ப்பீர்கள்,

உங்கள் விருப்பப்படி நீங்கள் சொன்ன பொருளிலிருந்தே, சில எழுத்துக்களை பிரிப்பீர்கள்.. கடைசியாக, ஏதோ ஒரு குர்‍ஆன் வசனத்தில் ஒரு பகுதியின் உச்சரிப்பு போல இருப்பதைக் கண்டு, அதைச் சொல்லிவிட்டு, என்னவோ, உலகத்திலேயே ஒரு மகா பெரிய விஞ்ஞான உண்மையை கண்டுபிடித்து விட்டதுபோல, ஒரு பெருமிதம் கொள்கிறீர்கள்.

என்னே அறிவு... என்னே ஞான‌ம்.... ச‌பாஷ் இஸ்லாமிய‌ர்க‌ளே, ச‌பாஷ்

ஆனால், ஒரு நன்மையும் இல்லையே ஜியா அவர்களே... உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பொய்யையும், புரட்டையும் மக்கள் சிறிது சிறிதாக அறிந்துக்கொண்டு இருக்கிறார்களே...

ஜியா அவர்களிடம் சில கேள்விகள்:

நீங்கள் மேற்கோள் காட்டிய குர்‍ஆன் வசனம் 59:22ஐ முழுவதுமாக கீழே தருகிறேன்.

Huwa Allahu allathee la ilaha illa huwa AAalimu alghaybi waalshshahadati huwa alrrahmanu alrraheemu

1) குர்‍ஆனின் ஒரு வசனத்தில் முதல் சில வார்த்தைகளின் உச்சரிப்பு போல இருப்பதை வைத்துக்கொண்டு, பெரிய உலக மகா அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துவிட்டது போல பெருமைப்படும் இஸ்லாமியரே, இவ்வசனத்தில் உள்ள இதர வார்த்தைகளை ஏன் விட்டுவிட்டீர்கள்?

2) இந்த முழு வசனத்திற்கும் சமமான உச்சரிப்பு உள்ள பைபிள் வசனம் கண்டுபிடித்துவிட்டீர்களா?

3) பைபிளின் சில வார்த்தைகளின் உச்சரிப்பிற்கு ஏற்றாற்போல குர்‍ஆன் வசனம் இருப்பதாக அதுவும் அதில் ஒரு பாகம் இருப்பதாக நீங்கள் மேற்கோள் காட்டியதால், எதை சாதிக்கலாம் என்று நினைத்துவிட்டீர்கள்? அல்லது இதன் மூலம் அல்லாஹ் தெரிவிக்கும் தத்துவமோ அல்லது பாடமோ என்ன? அல்லது இந்த அறிய கண்டுபிடிப்பினால் உலகிற்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் தத்துவம்/பாடம் என்னவோ?

4) ஏதோ ஒரு வரியின் உச்சரிப்பு ஒரே மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், இஸ்லாம் உண்மையான மார்க்கமாகி விடுமா?

என்னடா இது, இப்படி முட்டாள் தனமாக நாம் (இஸ்லாமியர்களாகிய நாம்) சம்மந்தமே இல்லாமல் ஒப்பிடுகின்றோமே... பைபிளில் இருக்கும் இரண்டு வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் அவ்வார்த்தைகளுக்கு பொருளைக் கூறி , அந்த இரண்டு வார்த்தைகள் குர்‍ஆனின் ஒரு வசனத்தில் வரும் ஒரு சில வார்த்தைகளின் உச்சரிப்பு போல வருவதை காரணங்காட்டி, அடிமுட்டாள்தனமாக கட்டுரை எழுதுகின்றோமே... யாராவது இதனை கண்டுபிடித்து... எழுதினால் மானம் போகுமே...இஸ்லாமுக்கும் கெட்டப்பெயர் வருமே என்ற எண்ணமே உங்களுக்கு வராதா?

இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி, அமெரிக்கவின் முன்னாள் அதிபர் புஷ், இந்துக்களின் தெய்வம் "அம்மன்" போன்ற வார்த்தைகள் அல்லது இவைகளுக்கு சமமான உச்சரிப்புள்ள வார்த்தைகள் குர்‍ஆனில் உள்ளன, இதனால், இந்து தெய்வம் "அம்மன்" குர்‍ஆனில் உண்டு என்று இந்துக்கள் சொல்லலாமா?

இந்த தொடுப்பில், Islamic City Quran Transliteration Search, "Bush" என்றும், "Amman" என்றும் கொடுத்து குர்‍ஆனில் தேடிப்பருங்கள், எத்தனை வசனங்கள் வருகின்றது என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்

ஜியா அவர்கள் எழுதியவை:

இதன் அடிபடையில் "ஹல்லேளுயாஹ்" (halleluyah) என்றால் "ஓ! அவன் தான்எலொஹு, அவனையெ துதி" என்று அர்த்தமாகும்.

எதன் அடிப்படையில்?

இஸ்லாமியர்கள் உச்சரிப்பு ஒரே மாதிரியாக வரும் வார்த்தைகளை காட்டி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை கண்டோம்.

இந்த அல்லேலூயா வார்த்தைக்கு நேரடி பொருள் இருக்கும் போது, அதை திருத்தி, தங்கள் சொந்த விளக்கத்தைக் கொடுக்கும் இஸ்லாமியர்களின் யுக்தியை இக்கட்டுரையில் கண்டோம்.

இப்போது, சகோதரர் ஜியா அவர்கள் செய்த தில்லுமுல்லை சுருக்கமாக கீழ்கண்ட படத்தில் காணலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

உமர் அவர்கள்லே நிங்களும் உங்கள் தோழர்களும் இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய, அடுத்தவர் இணைய தளத்தை மொழிபெயர்க்க செலவிடும் நேரத்தில் சிறிதளவு உங்கள் மார்கத்தை அறிய செலவிட்டால் இப்படி கட்டுரை எழுதமாட்டீர்… அஸ்ஸலாமு அழைக்கும்

- ஜியா

சகோதரர் ஜியா அவர்களே, இஸ்லாமுக்கு எதிரான பொய் பிரச்சாரம் அல்ல, மெய் பிரச்சாரம். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றாகச் செர்ந்து, இஸ்லாம் பற்றிய உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லாமல் பொய்களை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். கிறிஸ்தவம் பற்றி பொய்களை அள்ளி வீசுகிறீர்கள், உங்களைப் போன்ற பொய்யர்களுக்கு சரியான பதில் தருவதும், மற்றும் இஸ்லாமின் உண்மை முகத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுவதும் எங்கள் கடமையாகும்.

இஸ்லாம் பற்றி அதிக உண்மைகளை மக்கள் இப்போது அறிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

"அடுத்தவர் இணைய தளத்தை மொழிப்பெயர்க்கும் நேரம் என்றுச் சொன்னீர்கள்" அஹமத் தீதத் அவர்களின் உழைப்பை அப்படியே காபி அடித்து, அதனை எழுதி, உங்களுக்கு பெயர் வரும்படி செய்துள்ளீர்கள், குறைந்த பட்சம் அவரது எழுத்துக்களிலிருந்து இவைகளை எடுத்தேன் என்ற ஒரு வரியையாவது எழுதினீர்களா?

அடுத்ததாக, அடுத்தவர் தளத்தை மொழியாக்கம் செய்வது பற்றி குற்றம் சுமத்தியுள்ளீர்கள். என்னுடைய ஈஸா குர்‍ஆன் தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளையும் படித்துள்ளீர்களா? பீஜே அவர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் மொழிப்பெயர்ப்புகளா? இஸ்லாம் கல்வி தளத்திற்கு கொடுத்த மறுப்புக்கள் மொழிப்பெயர்ப்புக்களா? தமிழ் முஸ்லிம் தளத்திற்கு கொடுத்த பதில்கள் மொழிப்பெயர்ப்புக்களா? இன்னும் அனேக இஸ்லாமிய தளங்களுக்கு நான் கொடுத்த மறுப்புக்கள் அனைத்தும் மொழிப்பெயர்ப்புக்களா?

எனவே, மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் சாக்கு போக்கு சொல்லமுடியாது. உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், என் அனைத்து கட்டுரைகளுக்கும் பதிலை அளியுங்கள். நானும் தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறேன், இனியும் தொடர்வேன்.

இன்னொரு முறை தமிழ் இஸ்லாமிய அறிஞர் உலகை எச்சரிக்கிறேன், நேர்மையாக எழுதுவீர்களானால், அதற்கேற்றபடி பதில் அளிக்கப்படும், பொய்களையும், அவதூறுகளையும் கிறிஸ்தவத்தின் மீது சொல்வீர்களானால், நாங்கள் வாளை எடுக்கமாட்டோம் அதை விட மிகவும் வலிமை வாய்ந்த பேனாவை எடுப்போம்... அதன் பிறகு... பாலைவன வெயிலையும், குளிரையும் தாங்க முடியாமல் தவிப்பீர்கள். எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை.

ஜியா அவர்கள் எழுதியவை:

Note: இந்த கட்டுரையை ஒரு நகல் isaaquran கும் அனுப்பி உள்ளேன், உங்களில் இ -மெயில் ஐடி இல்லாமையால், எழுத்து விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் அடுத்தவர் கட்டுரைகளை முழுமையாக பிரசுரிக்க மறுக்கிறீர்கள் என்பதால், அவர்களுக்கு ஒரு நகல் அனுப்பி உள்ளேன். இனியேனும் உங்கள் இ - மெயில் ஐடி தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முதலில், நான் விவாதத்திற்கு அழைத்த கட்டுரையில் என் மெயில் ஐடி உண்டா இல்லையா என்பதை ஒரு முறை பார்த்து எழுதுகிறீர்களா ஜியா அவர்களே. (2007ம் ஆண்டில் நான் விடுத்த எழுத்து விவாத அழைப்பு)

அடுத்தவர் கட்டுரையை முழுவதுமாக பிரசுரிக்க மறுக்கின்றேனா? அய்யோ பாவம் வாசகர்களுக்கு வந்த கேடுகாலத்தை பார்த்தீங்களா?

சிறிதும் வெட்க‌மில்லாம‌ல், எங்க‌ள் தொடுப்பையும் கொடுக்க‌ ப‌ய‌ப்ப‌டும், ந‌டுங்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் என் மீது குற்ற‌ம் சும‌த்துகிறார்க‌ள்! ஆச்ச‌ரிய‌ம் தான். முத‌லில் ரோஷ‌முள்ள‌வர்க‌ளாக‌ நீங்க‌ள் ந‌ட‌ந்துக்கொண்டு எங்க‌ள் தொடுப்புக்க‌ளை கொடுக்க‌ முன்வாருங்க‌ள்.

என் ம‌றுப்புக்க‌ளை பார்க்கும் போது:

1) மூல‌ தொடுப்புக்க‌ளை கொடுப்பேன் (இஸ்லாமிய‌ர்க‌ள் போல‌, என‌க்கு தொடுப்புக்க‌ளை கொடுக்க‌ ப‌ய‌மில்லை)

2) இஸ்லாமிய‌ர்க‌ளின் ஒவ்வொரு ப‌த்தியையும், வ‌ரியையும் ப‌தித்து ப‌தில் த‌ருவேன். இத‌ன் மூல‌ம் இஸ்லாமிய‌ர்க‌ளின் மூல‌ க‌ட்டுரை என் த‌ள‌த்தில் முழுவ‌துமாக‌ வ‌ந்துவிடும்.

3) இத‌ர‌ த‌ள‌ங்க‌ளிலிருந்து மொழியாக்க‌ம் செய்து இருந்தால், அத‌ன் தொடுப்பைத் த‌ருவேன்.

க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ இஸ்லாமிய‌ அறிஞ‌ர்க‌ள் செய்யும் பொய்யைக் க‌ண்டு, தில்லுமுல்லைக் க‌ண்டு நொந்துபோய், உல‌கிற்கு அத‌னை எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் ஒரு கட்டுரையை புதியதாக எழுதும்போது, அதனை உங்கள் இஸ்லாமிய தளங்களில் முதலில் பதியுங்கள், அதன் தொடுப்பை எனக்கு அனுப்புங்கள். நான் பதில் அளிக்கும் சமயத்தில் உங்கள் தொடுப்பை கொடுப்பேன், அதற்கான பதிலைத் தருவேன். அதை விட்டுவிட்டு, நீங்கள் எழுதும் வீணான பிரயோஜனமற்ற‌ கட்டுரைகளை முதன் முதலில் பதிக்கும் சாக்கடை என் தளமில்லையே. முதலில் உங்கள் தளத்தில் அவைகளை பதியுங்கள், அந்த சாக்கடையை நான் சுத்தப்படுத்தும்போது, என் தளத்தில் உங்கள் கட்டுரை அனைத்திற்கும் பதிலை அளிப்பேன். இது தான் முறையே தவிர, இஸ்லாமிய சாக்கடையை முதன் முதலில் பதிக்கும் இடம் என் தளமல்ல, அதற்கு பீஜே அவர்களின் தளமும், டிஎன்டிஜே தளமும், இஸ்லாம் கல்வி தளமும், இன்னும் அனேக இஸ்லாமிய தளங்கள் உள்ளன, அங்கே பதியுங்கள். சாக்கடையை சுத்தம் செய்வது மட்டும் என் கடமை என்பதை இந்திய கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். சரியாக சாக்கடையை சுத்தம் செய்யவில்லையானால், மறுபடியும் சுத்தம் செய்வேன், முழு சுத்தம் அடையும் வரை சுத்தம் செய்துக்கொண்டே இருப்பேன். நான் எப்படி சுத்தம் செய்கிறேன் என்பதற்கு இந்த தற்போதைய கட்டுரையும் ஒரு உதாரணமாகும். நீங்கள் உங்கள் கட்டுரையில் பதித்த விவரத்திற்கு மறுப்பாக நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளேன். இது போல, அனைத்து விவரத்திற்கும் பதில் அளிப்பேன், சிறிது கால தாமதம் ஆகலாம், ஆனால், தவறாமல் பதில் அளிப்பேன்.

உங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரை....

உங்கள் சகோதரன்,

உம‌ர்



March 8, 2011

நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்

1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. 

கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன். 

 
என்னை இரட்சித்த ஒரு தவறு


ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30 
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, 
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.

நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால்வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன்கிறிஸ்தவகிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடுஎன்னை மிகவும் கவர்ந்ததுஅவை ஏதோவாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன்மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்குபேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும்தோராவிலிருந்து திரித்து கேலியாகசித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்ததுகுர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும்தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில்தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும்விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தைவெளிப்படுத்தியதை உணர்ந்தேன்அவர் முழு நிச்சயமுடையவராகவும்அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களைஎதிர்க்ககூடியவராகவும் இருந்தார்அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள்ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும்உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள்அவர்கள் சொன்னார்கள் ,

 

(சுரா 17;90-93 திருப்புமுனை)

 

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன்குர்ஆனின் ஒரு வசனம்என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும்தவிடுபொடியானதுகுர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதியதுதன் இல்லைஎனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாதுநான் எனக்குவெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன்உங்களைத் தெளிவாகஎச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவுமட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை ,தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரைநான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான்கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில்முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன்இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என்ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தைபிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறதுசுவிஷேசத்தைபிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail: 
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com
 

March 1, 2011

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

"லைலா மஜுனு" என்ற காதல் கதையை நம்மில் அனேகர் கேள்விபட்டு இருப்போம். ஆனால், "லைலா முஹம்மது" என்ற கதையை கேள்வி பட்டு இருப்போமா?

இஸ்லாமிய சரித்திர அறிஞர் அல் தபரி " The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) Source

முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த "ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கை" என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் சரித்திர ஆசிரியர் பதித்த விவரங்கள் இதற்கு எதிர்மாறான விவரத்தை தருகிறது.

இதர மார்க்க மக்கள் முக்கியமாக, கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பவேண்டும், அவர் வாழ்ந்தது போல வாழவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சொல்கின்றபடி, முஹம்மது நமது வழிகாட்டியாக இருக்க தகுதியானவரா? என்று சோதிப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.

முஹம்மதுவின் கால மக்கள் அவரை ஒரு "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறும் அளவிற்கு வாழ்ந்த ஒரு நபரை எப்படி மக்கள் வழிகாட்டியாக கருதமுடியும்?

மேற்கண்ட நிகழ்ச்சியை படித்த பிறகு மக்களுக்கு எழும் கேள்விகளை இப்போது காண்போம். இதற்கு இஸ்லாமியர்கள் பதில் அளிப்பார்களா?

முஹம்மது பெண் பித்து பிடித்தவரா? (அ) பெண்ணாசை உள்ளவரா?

இந்த நிகழ்ச்சி உண்மை என்று நாம் கருதினால்...?

இப்போது நாம் மேற்கண்ட இஸ்லாமிய சரித்திர விவரம் உண்மை என்று கருதி நமது கேள்விகளை முன்வைப்போம்.

1) உலக மகா மேன்மையுள்ள ஒரு நபி (இஸ்லாமியர்களின் கருத்துப்படி) தெருவில் நடந்துச் சென்றுக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண், முஹம்மதுவின் பின்னால் தட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கும் போது, உலக வழிகாட்டியாக கருதப்படும் ஒரு நப‌ர் உடனே, உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லமுடியுமா?

2) நன்மை செய்ய சிந்திக்கத் தேவையில்லை, அவகாசம் கேட்கத் தேவையில்லை, ஆனால், ஒரு பெண் திடீரென்று வந்து திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று நடுத்தெருவில் கெட்கும் போது, முன்பின் யோசிக்காமல், தனக்கு இருக்கும் மனைவிகளிடம் ஒப்புதல் கேட்காமல், அவர்களைக் குறித்து சிந்திக்காமல் முஹம்மது "ஆம், உன்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம்" என்று கூறுவது "ஒரு நபிக்கு பொருத்தமானதாக" தெரிகின்றதா?

3) திருமணம் என்பது மிகவும் புனிதமானது என்றும், ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து இறைவன் "திருமண உறவை" அவர்கள் இருவரின் இடையில் உண்டாக்கி வைத்தார் என்று இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட திருமண‌த்தை நடுத்தெருவில் முடிவு செய்கிறார் முஹம்மது, இவரை எப்படி ஒரு நபி (தீர்க்கதரிசி) என்று மக்கள் நம்புவது?

4) இந்த விவரத்தை அப்பெண் தன் ஜனத்தாரிடம் குடும்ப நபர்களிடம் சொல்ல, அவர்கள் "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர்" என்று கூறி திருமணத்தை முறித்துவிடு என்று கூறுகிறார்கள்.

5) ஒரு வழிகாட்டி, ஆன்மீக தலைவர், உலக மகா பரிசுத்தர் என்று இஸ்லாமியர்களால் போற்றப்படும் முஹம்மது, தன் ஊர் மக்களிடம் "பெண் பித்துபிடித்தவர், பெண்ணாசை உள்ளவர்" என்ற சாட்சியை பெறுகிறார். இப்படிப்பட்டவரை கிறிஸ்தவர்களோ, இதர மார்க்க மக்களோ தங்களுக்கு வழிகாட்டியாக இவரை கருதமுடியுமா?

இந்த நிகழ்ச்சி ஒரு இட்டுக்கட்டியது/பொய்யானது என்று கருதினால்...

இஸ்லாமியர்களுக்கு என்று தனித்தன்மை உண்டு. ஒரு அறிஞர் அவர் இஸ்லாமியரோ அல்லது இஸ்லாமியரல்லாதவரோ யாராக இருந்தாலும் சரி, "முஹம்மது பற்றி உயர்வாக அவர் கூறினால்", அது பொய்யாக இருந்தாலும் சரி, அதனை அங்கீகரிப்பார்கள். ஆனால், அதே நபர் "முஹம்மது பற்றிய இருண்ட நிகழ்ச்சிகளை கூறினால்", இவர் இஸ்லாமுக்கு எதிரி, முஹம்மது மீது இட்டுக்கட்டுகிறார் (பொய் சொல்கிறார்) என்று அடித்துக் கூறுவார்கள்.

மேற்கண்ட சரித்திர ஆசிரியர் அல் தபரி ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ அல்லது இஸ்லாமுக்கு எதிரியோ அல்ல, இவர் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர். இவர் இஸ்லாமிய ஆட்சி கொடிகட்டி பறக்கும் போது வாழ்ந்தவர், இஸ்லாமியர்களால் மதிக்கப்படுபவர். இவரைப் பற்றி அறிய, இவரது குர்‍ஆன் விரிவுரை பற்றியும் அறிய இந்த (http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Jarir_al-Tabari, http://www.muslimheritage.com/topics/default.cfm?ArticleID=649 ) தொடுப்புக்களை சொடுக்கிப் பார்க்கவும். இவரது குர்‍ஆன் தப்ஸீரிலிருந்து (விரிவுரையிலிருந்து) பாகவி (Baghawi), சுய்யுதி (Suyuti) மற்றும் இபின் கதீர் (Ibn Kathir) போன்றவர்கள் தங்கள் விவரங்களை அதிகமாக சேகரித்துள்ளார்கள்.

இஸ்லாமியர்களுக்கு அல்தபரி சொன்ன 99 விவரங்கள் வேண்டும், ஆனால், அதே அல்தபரி சொன்ன 1 விவரம் தேவையில்லை.

இப்போது இஸ்லாமியர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்போகும் விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இப்போது காண்போம்.

1) இந்த நிகழ்ச்சி பற்றி இஸ்லாமியர்கள் கூறும் பதில்: "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர் (உமனைஜர்)" என்று சொன்னவர்கள் முஹம்மதுவின் எதிரிகளாவார்கள், அவர்கள் சொல்வதை எப்படி நாம் ஏற்கமுடியும்?

ஆனால், இவர்கள் எதிரிகள் என்று அல் தபரியின் விவரங்களிலிருந்து நமக்கு தெரிவதில்லை. இவர்கள் முஹம்மதுவின் எதிரியாக இருந்திருந்தால், முஹம்மது அவர்களின் கதையை எப்போதே முடித்து இருந்திருப்பார்.

2) உண்மையாகவே, முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவராக இருந்திருந்தால், அப்பெண் மறுபடியும் மறுத்தபோது அதனை அங்கீகரித்து இருந்திருக்கமாட்டாரே, ஆனால் முஹம்மது உடனே அதனை அங்கீகரித்தார் அல்லவா எனவே, அவர் ஒரு பெண் பித்து பிடித்தவர் அல்ல என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

ஒரு மனிதன் தனக்கு அனேக மனைவிகள் இருக்கும்போது, தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னால், "பெண் பித்து இல்லாதவர்" என்ன பதில் கூறுவார்?

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் மற்றும் எல்லாராலும் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மதுவிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சி உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே "ஆமாம்" என்று தலை ஆட்டுவீர்களா?

சரி, ஒரு கணக்கு போடுவோம். ஒரு ஆணை எப்போது பெண் பித்துபிடித்தவர் (பெண்ணாசை உள்ளவர்) என்று நாம் கூறுவோம்.

கேள்வி 1: ஒரு ஆண், தன் வாழ்நாள் எல்லாம் ஒரே மனைவியுடன் வாழ்க்கை நடத்தி, வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமலும், இதர பெண்களுடன் கள்ளத் தெடர்பு வைத்துக்கொள்ளாமலும் இருந்தால், இந்த ஆணை நாம் "பெண்ணாசை உள்ளவர்" என்று சொல்வோமா?

பதில் 1: சொல்லமாட்டோம், இவ‌ர் பெண்ணாசை உள்ளவர் அல்ல‌.
(1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

கேள்வி 2: ஒரு ஆண், இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், இப்படிப்பட்டவனை "பெண்ணாசை" பிடித்தவன் என்று சொல்வோமா? (அவன் வாழும் நாட்டில் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுவோம்)

பதில் 2: ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன் என்றுச் சொல்லலாம்.
(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 3: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துள்ளான், இவனை பெண்ணாசை உள்ளவன் என்று கூறலாமா?

பதில் 3: கண்டிப்பாக கூறலாம், பெண் பித்து இல்லாமலா நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டான்.
(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 4: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு, இன்னும் அனேக அடிமைப் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டும் இருக்கும் நபரை, பெண் பித்துபிடித்தவர் என்று கூறலாமா?

பதில் 4: இந்த கேள்வியையே கேட்கக்கூடாது. அதாவது, நாலு மனைவி மற்றும் அனேக கள்ளத்தொடர்புகள் அதாவது திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளுதல். இவன் பெண்ணாசை பிடித்தவனே.

(1: 4, a, b, c, p, q, r, x, y, z etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

கேள்வி 5: ஒரு ஆண், 12 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டான். இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான். மற்றும் திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்கிறான் . மற்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாகரத்து, திருமணம் என்று மாறி மாறி செய்தால், இவரை நாம் என்னவென்று அழைக்கலாம்.

பதில்: இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

ஒர் ஊர் மக்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக, ஒரு ஆன்மீகத் தலைவர் "அனேக மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டும், விவாகரத்து புரிந்துக்கொண்டும் இருந்தால், அவரை "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறமாட்டார்களா?

இதைத் தான் அந்த லைலாவின் குடும்பத்தார்களும் ஜனங்களும் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

( 1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

(1: 4, a, b, c, p, q, r, x, y, z, etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

( 1: 12, 13, 14, 15,………… = ?)

தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியில் ஒரு இறை நோக்கம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், இந்த தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் என்ன இறைநோக்கத்தை காணப்போகிறார்கள்?

இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் 12/13 திருமணங்கள் தவிர, இத‌ர பெண்களையும் முஹம்மது திருமணம் செய்ய விரும்பினார், சில பெண்கள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர்.

முஹம்மதுவின் இப்படிப்பட்ட கேள்விக்குரிய நடத்தைகள் பற்றிய இஸ்லாமிய விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்:

1) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

2) முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post.html

3) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html

4) இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html

5) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

எதிரிகளாக இருந்தாலும், தன் மீது பொய்களை கூறாதபடிக்கு முஹம்மது வாழ்ந்து இருந்திருக்கவேண்டும், ஆனால், இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள ஹதீஸ்களின், சரித்திரங்களின் படி பார்த்தாலே போதும், அன்று அம்மக்கள் சொன்னது பொய் அல்ல உண்மை என்பது விளங்கும்.

இங்கு ஒரு கேள்வியை கேட்கவேண்டும், அதாவது லைலா தன் மக்களிடம் சென்று, விவரத்தை சொன்னதும், முஹம்மது ஒரு "பெண்ணாசை பிடித்தவர்" என்று அம்மக்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதை அப்பெண் உடனே எப்படி நம்பிவிடுவாள்? இதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள் என்று அப்பெண் கேட்டு இருந்திருப்பாள் அல்லவா? தெருவில் ஒரு நபர் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, தைரியமாகச் சென்று பேசிய அதுவும் திருமணம் பற்றி பேசும் அளவிற்கு தைரியமுள்ள பெண், எப்படி அம்மக்கள் சொல்லும் பொய்யை (இஸ்லாமியர்களின் படி பொய்யை) எப்படி நம்புவாள்?

ஆனால், தபரியின் சரித்திர விவரத்தின்படி, அப்பெண் தன் மக்கள் சொன்னதை நம்பியிருக்கிறாள், அதாவது, அவர்கள் இப்பெண்ணிடம் "முஹம்மதுவிற்கு இருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையை கூறியிருப்பார்கள்", உடனே அவள் நம்பியிருப்பாள். ஆக, அம்மக்கள் சொன்னது உண்மையே... அப்படி இல்லையென்றுச் சொல்வீர்களானால், நாம் மேலே கண்ட அந்த கணக்கின் படி ஐந்தாவது கேள்வியின் பதில் என்ன என்று எங்களுக்குச் சொல்லுங்கள்.

(ஒரு கேள்வி: நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணின் முதல் மனைவியிடம் சென்று, உங்கள் கணவருக்கு பெண்ணாசை உண்டா இல்லையா? என்று கேட்டுப்பாருங்கள், மற்றும் நீங்கள் சொல்லும் விவரம் இரகசியமாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள், அந்த முதல் மனைவி என்ன சொல்லுவாள்? என் கணவருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என்று சொல்வாளோ? நிச்சயமாக சொல்லமாட்டாள், அவள் அனுபவிக்கும் வேதனையை அப்படியே கொட்டிவிடுவாள், பெண்களின் இதய வேதனை பலதார ஆண்களுக்கு புரியுமோ?)

இஸ்லாமியர்கள் "எங்கள் நபி ஒரு பரிசுத்தர்" என்று சொன்னவுடன், ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் நம்பிவிட்டு, தங்கள் மார்க்கத்தை விட்டு, உடனே இஸ்லாமை ஏற்க இங்கு யாரும் அறிவீளியாக இல்லை. எனவே, எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கவேண்டும்.

அல் தபரி சொன்னது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், இஸ்லாமியர்களுக்குத் தான் பிரச்சனை. அல் தபரி சொன்னது பொய் என்று இஸ்லாமியர்கள் கூறும் பொய்யை நாம் நம்பினாலும், முஹம்மதுவின் திருமண வாழ்க்கையின் தரத்தையும், திருமணம் எண்ணிக்கையையும் நாம் காணும் போது, லைலாவின் மக்கள் சொன்னது உண்மை என்பது விளங்கும்.