அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 21, 2013

ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1


ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1
 
முன்னுரை: கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை தமிழ் கிறிஸ்தவ நண்பர்களின் உதவி கொண்டு எழுதிக்கொண்டும், ஆன்சரிங் இஸ்லாம் என்ற ஆங்கில தளத்தின் கட்டுரைகளை மொழியாக்கம்  செய்து பதித்துக்கொண்டும் இருக்கிறோம். முஹம்மது ஒரு பாவியா என்ற பெயரில் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்து கீழ்கண்ட மூன்று பாகங்களை வெளியிட்டு இருந்தோம்.
 
மேற்கண்ட கட்டுரைகளுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஜியா என்பவர் ஒரு கட்டுரையை பதித்து இருந்தார், அதனை இங்கு படிக்கலாம் -  "முஹம்மது ஒரு பாவியா ?".
 
இப்போது அவர் எழுதிய மறுப்பை நாம் ஆய்வு செய்யப் போகிறோம். இஸ்லாமியர்கள் பதில் என்ற பெயரில் எழுதும் வரிகளை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வரிகள் எப்படி இஸ்லாமை இன்னும் பரிதாபமான நிலைக்கு கொண்டு போகிறது என்பதை நாம் காண்போம்.
 
ஜியா அவர்கள் எழுதியது:
 
உமர் அவர்களே உங்கள் வலைதளத்தில் "முஹம்மது ஒரு பாவியா ?" என்ற தலைப்பில் பாகம் 1 , 2 , 3 என்று கட்டுரைகள் இடம் பெற்று இருக்கிறது. அதனை இன்னும் பல இணையதளங்களில் பிரசுரித்து இருக்கிறீர்கள். அதற்கு ஆதரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஸஹிஹ் ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டி இருந்தீர்.
 ஈஸா குர்-ஆன் உமர்:
 
அன்பான சகோதரர் ஜியா அவர்களுக்கு, ஆம், மூன்று பாகங்களை நான் வெளியிட்டு இருந்தேன்.
 
கிறிஸ்தவ கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்க நடுங்கும் இஸ்லாமிய அறிஞர்கள்:
 
உங்கள் கட்டுரைகளுக்கு பதில் கொடுக்கும் போது, எப்போதும் நான் கேட்பது போல, இப்போதும் கேட்கிறேன்.  நீங்கள் குறிப்பிடும் அந்த மூன்று கட்டுரைகளின் தொடுப்புக்கள் எங்கே? அனேக தளங்களில் பதித்துள்ளீர்கள் என்று சொல்கின்ற நீங்கள், ஏதாவது ஒரு தளத்தின் தொடுப்புக்களை கொடுக்க பயப்படுவது ஏன்? உங்கள் தளத்தில் வந்து உங்கள் கட்டுரைகளை படிக்கும் வாசகர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? உங்கள் பதிலை படிப்பதற்கு முன்பாக, நான் என்ன எழுதினேன், என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்க்க வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க மறுப்பது ஏன்?
 
உங்கள் இஸ்லாம் பற்றி உங்களுக்கு நம்பிக்கையில்லையா? இஸ்லாமியர்கள் என் கட்டுரைகளை படித்து விட்டு, அதன் பிறகு உங்கள் பதிலை படிக்க நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை?
 
எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் மத்தியிலே இஸ்லாம் தோற்றுவிடும் என்ற பயமா? எங்கள் கட்டுரைகளை வாசகர்கள் படித்தால், அதன் தரத்தை கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்கள் அறிந்துக்கொள்வார்களோ என்ற பயமா? எங்கள் கட்டுரைகளினால், இஸ்லாமின் அஸ்திபாரங்கள் ஆட்டங்காணுகின்றதோ?
 
எத்தனை முறை எச்சரித்தாலும், எடுத்துச் சொன்னாலும், முகத்தை துடைத்துக்கொண்டு, பழையபடியே, மறுபடியும் எங்கள் மூல தொடுப்பை கொடுக்காமல் எழுதுகின்றீர்கள் என்றுச் சொன்னால், எவ்வளவு கீழ்தரமாக நீங்கள் இஸ்லாமை வெளிக்காட்டுகிறீர்கள்! வெட்கம்… வெட்கம். உங்களைப் போன்றவர்களால் இஸ்லாமுக்கு இழுக்கு.
 
இனி பதில்கள் எழுதும் போது, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், முஹம்மது ஒரு பாவி அல்ல என்ற திடநம்பிக்கை இருந்தால், எங்கள் தொடுப்புக்களை கொடுத்து எழுதுங்கள், இஸ்லாமை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
 
சரி, இப்போது உங்கள் கட்டுரைக்கு மறுப்பை காண்போம்.
 
முஹம்மது ஒரு பாவி தான் – குர்-ஆன்/ஹதீஸ்களின் சாட்சி
 
ஜியா அவர்கள் எழுதியது:
அவற்றில் சில...
 
Sahih Bukhari Volume 8, Book 75, Number 335  : . . . .
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306 : . . . .
 
ஈஸா குர்-ஆன் உமர்:
திரு ஜியா அவர்களே, நான் கீழ்கண்ட நான்கு ஹதீஸ்களை மேற்கோள் காட்டினேன், அதிலிருந்து ஒரு ஹதீஸை எடுத்துக்கொண்டு அதனை நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்? 
  1. பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306
  2. பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368
  3. பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398
  4. பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399
 
வாசகர்கள் கொஞ்சம் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், ஏன் இப்படி திரு ஜியா அவர்கள் செய்திருப்பார்கள்? இதன் பின்னணி என்னவாக இருக்கும்?  எடுத்துக்காட்டுக்காக ஒன்றை மட்டுமே நான் காட்டினேன் இதில் என்ன தவறு என்று திரு ஜியா அவர்கள் ஒன்றுமே தெரியாவதர் போல கேட்கலாம்?  நான் கேட்கும் கேள்வி, அந்த ஒன்று ஏன் புகாரி ஹதீஸ் 6398 அல்லது 6399 ஆக இருக்கக்கூடாது?
 
 மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்கும்
தானே வழக்கமாக தினமும் செய்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது
 
திரு ஜியா அவர்கள் புகாரி 6306ஐ மட்டும் மேற்கோள் காட்டுவதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஹதீஸில் அந்த "பாவமன்னிப்பு ஜெபத்தை" மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது போல அமைந்துள்ளது. இதனை மட்டும் மேற்கோள் காட்டிவிட்டால், "முஹம்மது அந்த பாவஜெபத்தை தனக்காக செய்யவில்லை, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்" என்றுச் சொல்லி சமாளித்துவிடலாம் என்று நினைத்துவிட்டார். ஆனால், நான் அந்த பாவமன்னிப்பு ஜெபம் பற்றிய நான்கு ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டினேன்.
 
புகாரி எண் 6368 ஹதீஸானது, 6306ஐ போலவே இருக்கிறது. ஆனால், புகாரி எண் 6398, மற்றும் 6399 ஹதீஸ்கள் வேறுவிதமாக கூறுகின்றது, அவைகளை இப்போது மறுபடியும் காண்போம், அப்போது தான் திரு ஜியா ஏன் இவைகளை மறைத்தார் என்ற உண்மை புரியும்.
 
 
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
 
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ . . . . ..
 
(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
 
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399
 
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:
 
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் . . . . ..
 
(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)
 மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களின் படி, முஹம்மது மற்றவர்களுக்கு இந்த பாவ ஜெபத்தை கற்றுக்கொடுக்கவில்லை, அவரே இந்த பாவமன்னிப்பு ஜெபத்தை செய்வது அவரது வழக்கமாக கொண்டு இருந்தார்.
 
ஆக, அல்லாஹ்விடம் முஹம்மது வேண்டிக்கொள்ளும் வழக்கமான ஜெபமாக இது இருக்கிறது.
 
"நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: . . . . . .
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள்: . . . ."
 
 
இந்த இரண்டு ஹதீஸ்கள் மேற்கண்ட வரிகளால் ஆரம்பிக்கிறது. இதனை மக்கள் படித்தால், "ஓஹோ, முஹம்மதுவும் நம்மைப்போல ஒரு பாவியான மனுஷன் தான், அவரும் நம்மைப்போலவே அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்துள்ளாரே" என்று நினைப்பார்கள். ஆனால், இதனை மறைக்க வேண்டும் என்று விரும்பிய இஸ்லாமியர் திரு ஜியா அவர்கள்,  தனக்கு சாதகமாக இருக்கும் ஹதீஸை மட்டுமே மேற்கோள் காட்டினார், தன் வாதத்திற்கு எதிராக இருக்கும் ஹதிஸை காட்ட பயந்துவிட்டார். ஆனால் நான் பதித்த கட்டுரையில் மேற்கண்ட நான்கு ஹதீஸ்களையும் பதித்தேன், ஏனென்றால், வாசகர்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.
 
ஆக, மேற்கண்ட பாவ மன்னிப்பு வேண்டுதலை, முஹம்மது மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளார், மேலும் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதல்களிலும் அவைகளைச் சொல்லி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார். இதனை குர்-ஆன் வசனங்கள் கூட உறுதிப்படுத்துகின்றன.
 
மண்ணறைகளில் வேதனையை அனுபவிக்கும் பாவிகள்:
 
இஸ்லாமியர்கள் அதிகாரபூர்வமானதாக கருதும் ஹதீஸ்களில் புகாரியும், முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பும் அடங்கும். இப்போது சஹீ முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில விவரங்களைக் காண்போம்.
இஸ்லாமிய நபி முஹம்மதுவின் கருத்துப்படி பாவிகள் மரிக்கும் போது அவர்கள் மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பார்களாம். கீழ்கண்ட  முஸ்லிம் ஹதீஸ்களை படிக்கவும்:
 
இந்த ஹதீஸின் படி, கோள் சொல்லித் திரியும் நபரும், சிறு நீர் கழிக்கும் போது மர்ம உறுப்பை மறைக்காதவரும் அல்லது சுத்தம் செய்துக்கொள்ளாதவரும் மண்ணறையில் வேதனை அனுபவிப்பதாக முஹம்மது கூறுகிறார். (மேலும் யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு சிறிய செயலையும் செய்துகாட்டுகிறார் முஹம்மது. பேரிச்ச மட்டைகளை கொண்டுவந்து அதனை பிளந்து இரண்டு பேருடைய தலைப் பாகத்தில் ஊண்றுகிறார்.)
 
அத்தியாயம்: 2, பாடம்: 2.34, எண் 439
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது, "அறிந்து கொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்விருவரும் பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது மறையுறுப்பை) மறைக்க மாட்டார்" என்று கூறினார்கள்.
 
பிறகு பச்சை பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒருவர் (மண்ணறை) மீது ஒரு துண்டையும் இன்னொருவர் (மண்ணறை) மீது இன்னொரு துண்டையும் ஊன்றி வைத்தார்கள். பிறகு, "இவ்விரண்டின் ஈரம் உலராதவரைக்கும் இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்" என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).
குறிப்பு: அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பில், "... மற்றொருவரோ சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்ய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
 
இப்போது அடுத்த ஹதீஸை காண்போம், இந்த ஹதீஸில் கூட மண்ணறைகளில் மக்கள் வேதனை அடைவார்கள் என்பதைப் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த  நிகழ்ச்சி நடைப்பெற்ற பிறகு, முஹம்மது செய்யும் தொழுகையில், அந்த மண்ணறைகளில் சந்திக்கவிருக்கும் வேதனையிலிருந்து தப்பும்படி அவர் தொடர்ந்து அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது அவரது வழக்கமாக மாறிவிட்டதாம்.
 
அத்தியாயம்: 5, பாடம்: 5.25, எண் 922
 
மதீனத்து யூதமூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது), "மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்பவில்லை. அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம்தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! மதீனத்து யூதமூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர்" என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அவர்கள் சொன்னது உண்மையே! (மண்ணறைகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(ஓலங்)களை மிருகங்கள் செவியேற்கின்றன" என்று கூறினார்கள்.
 
அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
 
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், "... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குப் பிறகு தொழுத எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை" என்று இடம் பெற்றுள்ளது.
 முஹம்மது மண்ணறையில் வேதனையை அனுபவிப்பார். . .  என்று வெளிப்படுத்திய அல்லாஹ்
 
 
 இப்போது திரு ஜியா போன்ற ஒரு சில இஸ்லாமியர்கள் "இல்லை.. இல்லை… முஹம்மது வேண்டிக்கொண்டது, மற்றவர்களுக்காகத் தான் தனக்காக அல்ல என்று" சொல்வார்கள். உண்மை என்னவென்றால், இப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாம் பற்றி அனைத்து உண்மைகளும் தெரிவதில்லை. அடுத்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்பதை சிறிது படித்துப்பாருங்கள்.
 
ஒரு யூதப்பெண், ஆயிஷா அவர்களிடம், உங்களுக்கு மண்ணறையில் வேதனை உண்டு என்று கூறுகிறாள். அப்போது தான் அங்கு வந்த முஹமம்து இதனைக் கேட்டு திடுக்கிடுகிறார். உடனே சவாளித்துக்கொண்டு, யூதர்கள் தான் மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பார்கள் என்று ஆவேசத்தில் கூறிவிடுகிறார். ஆனால், சில நாட்கள் கழித்து இவருக்கு அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை தருகிறார், அதாவது அந்த யூதப்பெண் சொன்னது உண்மையே என்று அல்லாஹ் ஆமோதிப்பதாக அந்த வெளிப்பாடு இருந்தது. இதன் பிறகு, பயந்துப்போன முஹம்மது அல்லாஹ்விடம் அந்த வேதனையிலிருந்து காக்கும் படி வேண்டிக்கொள்கிறார்.
 
அத்தியாயம்: 5, பாடம்: 5.25, எண் 920
 
என்னிடம் யூதப்பெண் ஒருவர், "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவீர்கள்" என்று கூறிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும், "யூதர்கள்தாம் (மண்ணறைகளில்) வேதனை செய்யப்படுவார்கள்" என்றார்கள்.
 
சிலநாட்கள் கழிந்தபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியுமா? மண்ணறைகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று என்னிடம் கூறினார்கள். அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.
 
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
 முஹம்மது ஒரு பரிசுத்தமான மனிஷன் என்ற நம்பிக்கை அவருக்கே இருந்திருந்தால், அவர் ஏன் பயப்படவேண்டும்? ஏன் அவர் தொடர்ந்து வேண்டிக்கொள்ளவேண்டும்? 
 
மேற்கண்ட ஹதீஸில் ஆயிஷா பற்றி தான் முஹம்மது வேண்டிக்கொண்டார், என்று சிலர் சொல்லக்கூடும், ஆனால், மேற்கண்ட ஹதீஸில் "இரைத்தூதர் அவர்கள் எனக்காக வேண்டிக்கொண்டார்கள்" என்று ஆயிஷா கூறவில்லை. அதற்கு பதிலாக, "அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்" என்று ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். இது முஹம்மதுவின் தனிப்பட்ட சொந்த வேண்டுதலாகும், அதனை ஆயிஷா அவர்கள் செவியுறுகிறார்கள்.
ஆக,  தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்குத் தெரியும். தனக்கும் அல்லாஹ்விடமிருந்து பாவ மன்னிப்பு வேண்டும் என்றும் அவர் அறிந்திருந்தார். அதற்காகவே அவர் இப்படியாக பயந்து வேண்டுகிறார்.
 
முதன் முதலில், அந்த யூதப்பெண் சொல்வதைக் கேட்டு, "யூதர்கள் தான் வேதனை அடைவார்கள்" என்று கூறினார். இதன் அர்த்தம் என்ன? அவர் சொல்ல வருவது என்ன? முஸ்லிம்களாகிய நாங்கள் அல்ல, யூதர்களாகிய நீங்கள் தான் அப்படிப்பட்ட வேதனையை அனுபவிப்பீர்கள் என்று கூறுகிறார். ஆனால், முஹம்மதுவை அல்லாஹ் பொய்யராக்கிவிட்டார். அதாவது முஹம்மதுவிற்கு அல்லாஹ் வெளிப்படுத்துகிறார் "முஸ்லிம்களாகிய நீங்கள்  மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பீர்கள்".   சரி, இந்த வேதனை முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது இறைத்தூதர் முஹம்மதுவிற்குமா? என்று கேட்டால், மேற்கண்ட ஹதீஸ்களின்படி, முஹம்மதுவும் அந்த வேதனைக்கு பயந்து வேண்டிக்கொள்கிறார்.
 
இதன் மூலம் அறிவது என்ன? மரித்தபிறகு கல்லறைக்குள் அனுபவிக்கும் வேதனையின் பயம் முஹம்மதுவை பீடித்தது? ஏன் ஒரு பரிசுத்தமான மனுஷனையும் இந்த பயம் பீடிக்கவேண்டும்?  இதற்கு இஸ்லாமியர்களிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் சொல்லட்டும். 
 
  • குர்-ஆனின் படி முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் அல்ல.
  • ஹதீஸ்களின்படி முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் அல்ல.
  • முஹம்மதுவின் படி "தான் ஒரு பரிசுத்தர் அல்ல"…
 
ஆனால், தற்கால இஸ்லாமியர்கள் மேற்கண்ட மூன்றையும் புறம்பே தள்ளிவிட்டு, நம் இறைத்தூதர் பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்… இஸ்லாமுக்கு வந்த கேடுகெட்ட காலத்தை பார்த்தீர்களா?  அல்லாஹ்வின் வார்த்தைகளையும் புறக்கணிக்கும் நிலையில்  முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதோ குர்-ஆன் சொல்லும் சாட்சியை இப்போது படியுங்கள்: இந்த வசனங்களை திரு ஜியா அவர்களும் மேற்கோள் காட்டியிருந்தார்கள்.
 
  நம்மைப்போல முஹம்மது ஒரு பாவி என்று சாட்சி கூறும் குர்-ஆன் வசனங்கள்:
 
குர்-ஆன் 40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
 
குர்-ஆன் 48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
 
குர்-ஆன் 47:19 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
 
முஹம்மதுவைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறார் "உம்முடைய பாவத்திற்காக…. மன்னிப்பு தேடுவீராக"…. ஆனால், முஸ்லிம்கள், "அல்லாஹ் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது… முஹம்மது பாவமே செய்ததில்லை, அப்படியிருக்க, எப்படி அவர் மன்னிப்பு கோரமுடியும்?" என்று சொல்கிறார்கள். 
 
முஹம்மதுவைப்  பார்த்து அல்லாஹ் சொல்கிறார் "உம்முடைய முந்தைய பிந்தைய பாவங்களை நான் மன்னித்தேன்"…. ஆனால், முஸ்லிம்கள் சொல்கிறார்கள் "அடக்கடவுளே, முஹம்மது பாவமே செய்ததில்லை, செய்யவில்லை என்று திரும்பி திரும்பி நாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் நீங்க வந்து, நான் முஹம்மதுவின் முந்திய பிந்திய பாவங்களை மன்னித்தேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீ சும்மா இருக்கமாட்டீயா?" (அல்லாஹ்வை நீ என்று முஸ்லிம்கள் அழைக்கலாம்). 
 
அல்லாஹவையே குழப்பும் இந்த இஸ்லாமியர்கள், சாதாரண முஸ்லிம்களை குழப்பமாட்டார்களா என்ன? இதைத் தான் சகோதரர் ஜியா அவர்கள் தன் கட்டுரையில் செய்துள்ளார்கள். ஆனால், நான் விடுவேனா என்ன? ஒரே கட்டுரையில் அனைத்து பாயிண்டுகளுக்கும் பதிலைச் சொல்லாமல், ஒவ்வொன்றாக நிதானமாக வருவேன்.
 
சரி, திரு ஜியா அவர்களின் அடுத்த விளக்கத்திற்கு வருவோம்
 
 ஜியா அவர்கள் எழுதியது
 
அந்த கட்டுரையின் வாயிலாக உலகத்தாருக்கு நீங்களும் உங்கள் கிறிஸ்தவமும் தெரிவிக்க விரும்புவது:
அல்லாஹ் (சுபஹனவதாலா) - இறைவன்,
முஹம்மது (ஸல்) - இறைதூதர்
இறைதூதர் முலம் அருளாக பெற்ற இறை வேதம் - குர்ஆன்.
 
உங்களுடைய கருத்து:
1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி
 
ஈஸா குர்-ஆன் உமர்:
முஹம்மது "மற்றவர்களுக்கு மட்டும்" பாவமன்னிப்பு ஜெபத்தை கற்றுக் கொடுக்கவில்லை, தானும் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதல்களில் தன் பாவங்களை மன்னிக்கும் படி கேட்டுள்ளார். எனவே, வெறும் "முஹம்மது சொல்லித்தான் கொடுத்தார்" என்றுச் சொல்வது, இஸ்லாமை தவறாக விளக்குவதாகும். இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள்.
 
ஜியா அவர்கள் எழுதியது
 
2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் – பாவி
 
ஈஸா குர்-ஆன் உமர்:
ஒருவர் இறைவனிடம் வேண்டும் போது "நான்  ஒரு பாவி என் பாவங்களை மன்னியும்" என்று வேண்டிக்கொண்டால், அவரை பாவி என்றுச் சொல்லாமல் "பரிசுத்தர் என்றுச் சொல்வார்களா என்ன?".
 
திரு ஜியா அவர்களே, நீங்கள் சொல்வது எப்படி உள்ளது தெரியுமா? கீழ்கண்ட உரையாடல் அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் இடையே நடந்தது போல இருக்கிறது, பொறுமையோடு படித்துப் பார்த்து சிந்தியுங்கள். இந்த உரையாடலில் அல்லாஹ் கொடுத்த அறிவுரையைப்போல நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சரித்திரத்தில் அப்படி நடக்கவில்லையே (உரையாடலின் கடைசி பகுதியை படிக்க மறக்கவேண்டாம்)
 
 
முஹம்மது: அல்லாஹ்வே, நான் ஒன்றை கேட்கிறேன்.
 
அல்லாஹ்:  சொல், நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
 
முஹம்மது: நான் ஒரு பரிசுத்தன், உங்களைப்போல, நான் ஒரு பாவமும் இதுவரை செய்யவில்லை, மரணிக்கும் வரைக்கும் இனிமேலும் செய்யப்போவதில்லை.
 
அல்லாஹ்: உண்மை தான், இப்போது அதற்கு என்ன?
 
முஹம்மது:  நான் எல்லாருக்கும் பாவமன்னிப்பு வேண்டுதலை கற்றுக்கொடுப்பேன்.
 
அல்லாஹ்: சரி, நல்லது தான்.
 
முஹம்மது: நானும் என் தனிப்பட்ட வேண்டுதல்களில் "நான் ஒரு பாவி, என் பாவங்களை மன்னியும் என்று உங்களிடம் வேண்டுவேன்".
 
அல்லாஹ்: நீ தான் பாவம் செய்யவில்லையே,  பின்பு ஏன் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டுகிறாய்?
 
முஹம்மது: அது அப்படித் தான், நீங்களும் ஒன்று செய்யுங்கள், "முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று வசனங்களையும் இறக்குங்கள்.
 
அல்லாஹ்: குழப்பமாக இருக்கின்றதே! நீ பாவம் செய்யவில்லை. நான் உன்னை மன்னிக்கத்தேவையில்லை. இப்படி இருக்க, "நீ பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று நான் ஏன் வசனங்களை இறக்கவேண்டும். மேலும் நீ ஏன் "என் பாவங்களை மன்னியுங்கள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும்?
 
சரி, நீ என்ன சொல்லவருகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!
 
முஹம்மது:  நான் பாவம் செய்யாதவர் என்று இஸ்லாமியர்கள் மற்றும் உலகம் நம்பவேண்டும். இது தான் என் வேண்டுதல்.
 
அல்லாஹ்: இவ்வளவு தானா! இதற்கு ஏன் நாம் சுற்றி வளைத்து வரவேண்டும். இதற்கு சுலபாமான நேரான வழி ஒன்று இருக்கிறது.
 
அதாவது, மேற்கண்ட  இரண்டையும் நாம் செய்யக்கூடாது.
 
முதலாவதாக, "உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு, உன் முந்தைய பிந்தைய பாவங்களை நான் மன்னித்தேன்" போன்ற வசனங்களை நான் குர்-ஆனில் இறக்கமாட்டேன்.  அதற்கு பதிலாக, முஹம்மது ஒரு பாவமும் செய்யாதவர் என்று அனேக வசனங்களை நான் குர்-ஆனில் இறக்குவேன். இதன் மூலம் மக்கள் அனைவரும் "நீ பரிசுத்தர்" என்று அறிந்துக்கொள்வார்கள். மேலும் குர்-ஆனே "நீ பரிசுத்தவான்" என்று சாட்சி சொன்னால் இன்னும் உன் மதிப்பு உயரும்.
 
இரண்டாவதாக, நீயும், என் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டிக்கொள்ளவேண்டாம்.  ஆனால், மற்றவர்களுக்கு மட்டும் அவர்கள்  பாவங்களை மன்னிக்கும் படி நீ கற்றுக்கொடுத்தால் மட்டும் போதுமானது. 
 
இந்த இரண்டையும் செய்தால்  போதும், நீர் பரிசுத்தமானவர் என்று மக்கள் அறிந்துக்கொள்வார்கள், மேலும் குர்-ஆனிலும் நீர் பரிசுத்தர், பாவம் செய்யாதவர் என்று நான் வசனங்களை இறக்குவதினால்,  மக்களுக்கு அதிக அதிகார பூர்வ ஆதாரமாக இருக்கும்.
 
முஹம்மது: இந்த ஆலோசனை ரொம்பவும் நன்றாக இருக்கிறதே. இப்படியே செய்வோம்.
 
[இதுவரை நடந்த உரையாடல் மிகவும் சீரியஸானது. அதாவது முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தமானவர் என்பதை நிலைநாட்ட மேலே அல்லாஹ் கூறிய ஆலோசனை தான் சரியானது.  இது போல இருந்திருந்தால்,  மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை  ஓரளவிற்கு இஸ்லாமியர்கள் சமாளித்து இருந்திருக்கலாம்.]
 
கட்டுரை மிகவும் சீரியஸாக போகிறது என்பதற்காக கொஞ்சம்  நகைச்சுவையை சேர்த்துள்ளோம். அதனை இப்போது படியுங்கள்.
 
[இந்த உரையாடல் நடந்துக்கொண்டு  இருக்கும் போது, கதவை யாரோ தட்டினார்கள், உடனே முஹம்மது எழுந்துச் சென்று கதவை திறந்தார்]
 
முஹம்மது: ஓ ஜிப்ராயீல் தூதரா… வாங்க வாங்க…
 
ஜிப்ராயீல் தூதன்: நான் வந்து சில நிமிடங்கள் ஆனது.  உங்கள் இருவரின் உடையாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்.
 
முஹம்மது: ஓ அப்படியா?
 
அல்லாஹ்: எனக்கு ஏற்கனவே தெரியும். அனைத்தையும் அறிந்தவன் நான். சரி, ஜிப்ராயீலே, நீ ஏன்  ஆரம்பத்திலேயே கதவை தட்டியிருக்கக்கூடாது?
 
ஜிப்ராயீல்: நீங்கள் அதி முக்கியமான விஷயத்தை பேசுகிறீர்கள் என்பதை அறிந்து,  உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதினால் சும்மா கேட்டுக்கொண்டு இருந்தேன்.
 
அல்லாஹ்: சரி, நாங்கள் பேசியதைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?
 
ஜிப்ராயீல்: மன்னிக்கவேண்டும், அல்லாஹ். நீங்கள் பேசியது போல நடக்க வாய்ப்பு இல்லை.
 
முஹம்மதுவும் அல்லாஹ்வும் ஒரே மூச்சில்:  ஏன், ஏன் நடக்க வாய்ப்பு இல்லை.
 
ஜிப்ராயீல்: அல்லாஹ்வே, நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும். நாளைக்கு நீங்கள்  முஹம்மதுவின் உயிரை கைப்பற்றப் போகிறீர்கள். முதல் குர்-ஆன் வசனம் இறக்கப்பட்டு கிட்டத்தட்ட  இன்றோடு 23 ஆண்டுகள் ஆகிறது.
 
உங்களின் ஆலோசனையின் படி  நான் குர்-ஆன் 40:55, 48:2 மேலும் 47:19ம் வசனங்களை ஏற்கனவே  முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திவிட்டேன். அவரும் அவைகளை தன் மக்களுக்கு அறிவித்துவிட்டார்.  மேலும் அவரும்  தன் தனிப்பட்ட வேண்டுதல்களில் தன் பாவங்களுக்காக உம்மிடம் பாவமன்னிப்பு கோரிவிட்டார். இன்னும் அனேக ஆண்டுகளுக்கு பிறகு புகாரி, முஸ்லிம்  போன்றவர்களால் இந்த விவரங்கள் ஹதீஸ்களாக தொக்குக்கப்படப்போகிறது. இந்த ஆலோசனையை நீங்கள் இருவரும் 23 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருந்திருந்தால், பிரயோஜனமாக இருந்திருக்கும். இப்போது என்ன செய்வது?
 
முஹம்மது: கவலையை விடுங்கள். என் தோழர்கள் என்னை பின்பற்றுபவர்கள் இதனை சமாளித்துக் கொள்வார்கள் (திரு ஜியா போன்றவர்களைத் தான் முஹம்மது இங்கு குறிப்பிடுகிறார்)
 
அல்லாஹ்: ஆம், என் அடியார்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்.  என் பங்கை நான் முடித்தேன், முஹம்மது தன் பங்கை முடித்தார். இதோ என் அடியார்கள் இருக்கிறார்கள், உலக முடிவு வரை அவர்கள் மீதமுள்ளதை பார்த்துக்கொள்வார்கள்.
 
[உரையாடல் முடிவு பெறுகிறது]
 
ஆக,  திரு ஜியா அவர்களே, உங்களை துக்கப்படுத்த நான் மேற்கண்ட கற்பனை உரையாடலை எழுதவில்லை. குர்-ஆனும், ஹதீஸ்களும் தெளிவாக சொல்லும் ஒரு விஷயத்தை மறுத்து, என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள்? இது தான் என் வேதனையும், வேண்டுதலும்.
 
ஜியா அவர்கள் எழுதியது
 
3. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி
 
ஈஸா குர்-ஆன் உமர்:
ஒரு இறைத்தூதர், "பாவமன்னிப்பு கோரும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டால்"  அவர் பாவியாக மாட்டார், இதனை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், முஹம்மதுவை பொறுத்தமட்டில், அவர் மற்றவர்களுக்கு சொல்லியும் கொடுத்துள்ளார். தானும் வேண்டிக்கொண்டுள்ளார். மேலும், இஸ்லாமிய சரித்திரம் முஹம்மது ஒரு பரிசுத்தர் இல்லை என்றே சொல்கிறது. நம்மைப் போல பாவங்கள் செய்யக்கூடிய சாதாரண மனிதர் என்றே கூறுகிறது. ஆனால், இஸ்லாம் பற்றிய முக்கியமான பொறுப்புக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது என்று சொல்கிறது. ஆனால், அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற "இறைவனைப் போல ஒரு பரிசுத்த மனிதனாக அவர் இருக்கவேண்டும்" என்று நீங்கள் நினைப்பது தான் தவறானது.
 
ஜியா அவர்கள் எழுதியது
 
4. ஒரு இறை தூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால், தான்வாழ்நாளில் பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்து கட்டினால் அவர் – பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
நான் ஏற்கனவே சொல்லியது போல, மற்றவர்களுக்கு பாவமன்னிப்பு கோருங்கள் என்று அறிவுரை கூறுவதினால், ஒரு இறைத்தூதர் பாவியாக மாட்டார். ஆனால், முஹம்மதுவின் விஷயத்தில் அவர் ஒரு பாவி என்றும், அவர் தன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், அவரது முந்தைய பிந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் என்றும் குர்-ஆன் கூறுவதினால், அவர் ஒரு பாவியாக இருக்கிறார். மேலும் முஹம்மதுவே தன் தனிப்பட்ட வேண்டுதல்களில் "பாவ மன்னிப்பு கோரினார்" என்று ஹதீஸ்கள் சொல்லும்போது, அவர் எப்படி ஒரு பாவியில்லாமல் இருக்கமுடியும்?
 
முஹம்மது அல்லாஹ்விடம் சென்று "அல்லாஹ்வே நான் பாவம் செய்யவில்லை, இருந்தபோதிலும், "என் பாவங்களை மன்னியுங்கள் என்று நான் கேட்பது போல கேட்பேன், நீங்களும் கேட்டும் கேளாதவர் போல இருந்துவிடுங்கள், ஏனென்றால், நான் பாவமே செய்யவில்லை என்று உமக்கும் தெரியும், ஆனால், இந்த என் வேண்டுதலை கேட்பவர்கள் என்னைப்போலவே அவர்களும் வேண்டிக்கொள்ள கற்றுக்கொள்வார்கள்" என்றுச் சொல்லி, அல்லாஹ்வும்  முஹம்மதுவும் ஒரு ஒப்பந்தம் புரிந்ததைப்போல ஜியா போன்ற இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள். இது அறிவுப்பூர்வமானதாக உங்களுக்குத் தெரிகின்றதா?
 
முஹம்மது இப்படி பாவ மன்னிப்பு கோருங்கள் என்று மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் போதாதா? அவர் பாவமே செய்யவில்லையானாலும் அல்லாஹ்விடம் சென்று "நான் பாவி, நான் பாவி என்னை மன்னியுங்கள்" என்று தேவையில்லாமல் முஹம்மது சொன்னர் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்படி முஹம்மது தினமும் செய்யும் போது, அல்லாஹ்விற்கே அருவறுப்பாக இருந்திருக்காதா?  சிந்தியுங்கள்.
 
ஜியா அவர்கள் எழுதியது
 
5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி
 
ஈஸா குர்-ஆன் உமர்:
நிச்சயமாக, அவர் பாவி தான்,  என்ன இறைவனிடம் விளையாடுகிறீர்களா?
இறைவன் ஒருவனைப் பார்த்து "உன் பாவங்களை நான் மன்னித்தேன்" என்றுச் சொன்னால், அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா?   இறைவன் உன் முந்தைய பாவங்களை, பிந்தைய பாவங்களை மன்னித்தேன் என்று குர்-ஆனில் சொல்லும் போது, அதற்கு வேறு அர்த்தம் என்றுச் சொன்னால் அந்த வசனத்தை எந்த நோக்கத்திற்காக அல்லாஹ் இறக்கினான் சொல்லுங்கள்?
 
  • அல்லாஹ் ஒன்றைச் சொன்னால், நாம் வேறு ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டுமா?
  • அல்லாஹ் உன்னை தண்டிப்பேன் என்று ஒருவனைப்பார்த்து கூறினால். அதற்கு அர்த்தம் "அல்லாஹ் ஆசீர்வதிப்பார்" என்று அர்த்தமா?
  • அல்லாஹ தீயவர்களை மன்னிக்க மாட்டான் என்று சொன்னால், அதன் அர்த்தம் "அல்லாஹ் தீயவர்களை மன்னிப்பார்" என்று அர்த்தமா?
 
என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் பைத்தியத்திற்கு ஒரு எல்லையே இல்லையா? உங்கள் அறியாமைக்கு ஒரு எல்லையே இல்லையா?
 
ஜியா அவர்கள் எழுதியது
 
6. இறைவன் ஒரு இறை தூதரை பாவ மனிப்பு கேற்க பணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
 
நீங்களே சொல்லுங்கள், உன் பாவத்திற்காக நீ மன்னிப்பு கோரு என்று அல்லாஹ் கேட்டால் அதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள நமக்கு பட்டப்படிப்பு தேவையா? இறைவன் என்ன சும்மா உடகார்ந்து இருக்கிறாரா? அவர் ஒன்று சொல்லுவாராம், மக்கள் வேறு ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டுமாம்? நல்லா இருக்கு உங்க லாஜிக்.
 
"அல்லாஹ் மன்னிப்பு கேள்" என்று கட்டளையிட்டால், அதன் அர்த்தம் "மன்னிப்பு கேள்" என்பது தானே!
சகோதரர் ஜியா அவர்கள் சொல்வதைப் பார்த்தால்,

• அல்லாஹ் ஒன்று சொல்லுவார், ஆனால், அதன் அர்த்தம் அது அல்ல.
• அல்லாஹ் வேறு ஒன்று சொல்லுவார், ஆனால், அதன் அர்த்தமும் வேறு ஒன்றும் அல்ல.
• அல்லாஹ் இன்னொன்று சொல்லுவார், அதன் அர்த்தமும் இன்னொன்றும் அல்ல.
 
இப்படி போய்க்கொண்டே இருக்கும். என்னங்கைய்யா உங்க லாஜிக்?
 
சரி, ஜியா அவர்களின் வழிக்கே நாம் போவோம். இப்போது கீழ்கண்ட வசனத்தின் படி அல்லாஹ் முஹம்மதுவை பாவ மன்னிப்பு தேடச் சொல்கிறாரா இல்லையா? 
 
குர்-ஆன் 47:19 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
 
உங்களின் லாஜிக்கின் படி, இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால்,
 
• முஹம்மது தன் பாவத்திற்காக பாவ மன்னிப்பு கோரக்கூடாது என்று புரிந்துக்கொள்ளவேண்டும்,
• ஆனால், முஃமீன்களான ஆண்கள், பெண்களுக்காக பாவ மன்னிப்பை முஹம்மது கோரவேண்டும் என்று புரிந்துக்கொள்ளவேண்டும்.
 
ஒரே வசனம், ஒரே விஷயம், ஆனால் நாம் புரிந்துக்கொள்ளும் போது முஹம்மது என்று வந்தால் ஒரு மாதிரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், இதர மக்கள் வந்தால், வேறு வகையாக புரிந்துக்கொள்ளவேண்டும்.
 
இப்படியா இந்த வசனத்தை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறார்?  இந்த கேள்விக்கு, தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் பதில் சொல்லி, உலக மக்களின் கண்டகளை திறக்கட்டும்.
 
முடிவுரை: இதுவரை திரு ஜியா அவர்களின் பதிலில் கொடுக்கப்பட்டு இருந்த முதலாவது பகுதிக்கு பதிலைக் கண்டோம். அதாவது முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களில் கண்டோம். அடுத்த பாகத்தில், திரு ஜியா அவர்கள் முன்வைத்த "இயேசுவின் சீடர்கள்" பற்றிய விவரங்களுக்கு நம் பதிலை காண்போம்.
 
அவர் எழுதிய அந்த ஒரு கட்டுரைக்கு நான் ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதிலை கொடுக்கப்போகிறேன். இது ஒரு மெகா தொடராக பல தொடர் கட்டுரைகளாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால், அவ்வளவு விவரங்களை அவர் ஒரே கட்டுரையில் கொடுத்துள்ளார்.
 
முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள் தங்கள் வாயினால் அறிக்கையிடும் காலம் வெகுதூரமில்லை.
 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
 
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)  (புகாரி Volume :6 Book :80, எண் 6307)
 
கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்…..
 
கர்த்தரின் நாமம் மட்டுமே மகிமைப்படட்டும்.

March 14, 2013

நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?


நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?

 

[உமர் தம்முடைய தம்பியுடன் செய்த நச்சென்று நாலு கேள்விகள் தொடரின் முதல் உரையாடலை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

 

1)       நச்சென்று நாலு கேள்விகள்- 1 : இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

 

சௌதி அரேபியாவிலிருந்து வந்த தன் தம்பி, இன்று உமரிடம் இன்னொரு கேள்வியை கேட்கிறார், இயேசு மன்னித்தது போல மன்னித்துக்கொண்டுச் சென்றால், நாட்டில் எப்படி சட்ட ஒழுங்கு நிலைநிற்கும்? தண்டனை கொடுக்கவில்லையானால் நாட்டில் குற்றங்கள் எப்படி குறையும்?  இவைகள் தான் பொதுவாக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகளாகும். இந்த உரையாடல், மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளை தருகின்றது.]

 

உமரின் தம்பி அப்துல்லாஹ், இன்று ஞாயிறு ஆராதனைக்கு தன் குடும்பத்தோடு சென்றார்.  அவர் எல்லோரோடும் உடகாராமல் சபையின் கடைசி நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு கவனித்துக்கொண்டு இருந்தார். அவர் ஜெபிக்கவில்லை, ஆராதிக்கவில்லை சபை ஆராதனை முதற்கொண்டு கடைசி வரை ஏதோ முனுமுனுத்துக்கொண்டு இருந்தார். அவரது உதடுகள் மட்டும் அசைந்துக்கொண்டு இருந்தன. அடிக்கடி ஜன்னலின் பக்கம் திருப்பி ஜன்னலுக்கு வெளியே இருக்கும் தோட்டத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார். ஆராதனை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டார்கள். மாலை நேரத்தில் அப்துல்லாஹ் உமரிடம் பேசுவதற்கு செல்கிறார். இனி என்ன நடந்தது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

அப்துல்லாஹ்: உமரண்ணா, நீங்க ஃபிரியா இருக்கீங்களா?

 

உமர்: தம்பி வா வா. நான் ஃபிரியா தான் இருக்கேன். இப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

 

அப்துல்லாஹ்: சில நிமிஷங்கள் நாம் பேசலாமா?

 

உமர்: நானும் உன்னோடு இன்று பேசலாம் என்று நினைத்தேன். இன்று நீ சபைக்கு வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒருவன் இஸ்லாமை தழுவிவிட்டால், அவன் கிறிஸ்தவ சபையின் ஆராதனைக்குச் செல்லமாட்டான், ஆனால், நீ கொஞ்சம் வித்தியாசமானவன். இந்தியாவிற்கு வந்த முதல் வாரத்தின் ஆராதனையில் நீ கலந்துக்கொண்டது அப்பாவிற்கும் ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது.

 

அப்துல்லாஹ்: நான் சபைக்கு இன்று வந்தது உண்மை தான், ஆனால், நான் உண்மையாகவே ஆராதனையில் ஈடுபடவில்லை, நான் ஜெபிக்கவில்லை, பாடவில்லை, எதையும் செய்யவில்லை. வெறும் உட்கார்ந்துக்கொண்டு பிரசங்கத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீங்க ரொம்ப சந்தோஷப்படாதீங்க!

 

உமர்: நீ இவைகளையெல்லாம் செய்யவில்லை என்று எனக்கும் தெரியும்.

 

அப்துல்லாஹ்: ஆனால், ஒன்றைமட்டும் நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதாவது, ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவிவிட்டான் என்று தெரிந்தும், நீங்கள் அனைவரும் என்னை சபையில் அனுமதித்து, சர்வ சாதாரணமாக நடந்துக்கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

 

உமர்: இது தாண்டா கிறிஸ்தவம். இந்த சுதந்திரம் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்குமா? அதாவது ஒரு முஸ்லிம் கிறிஸ்தவனாக மாறிவிட்டபிறகு, அவனிடம் இஸ்லாமியர்கள் நடந்துக்கொள்ளும் விதம் எப்படி இருக்கும்? இன்னும் முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் அவனின் நிலை அந்தோ பரிதாபம்.

 

அப்துல்லாஹ்: சரி போகட்டும், அத விடுங்க, சில முக்கியமான கேள்விகளை இப்போது உங்களிடம் கேட்கவேண்டுமென்று, மதியத்திலிருந்து தூங்காமல் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

 

உமர்: இன்று பாஸ்டர் கொடுத்த செய்திலிருந்து தான் கேள்விகளை நீ கேட்கப்போகிறாய் என்று நினைக்கிறேன்.

 

அப்துல்லாஹ்: உங்களை யார் ஏமாற்ற முடியும்? நிச்சயமாக அந்த பிரசங்கத்திலிருந்து தான் கேள்விகள், ஆனால், நடைமுறைக்கு எப்படி இயேசுவின் போதனைகள் ஒவ்வாததாக இருக்கிறது என்பதை உங்களுக்கு விவரிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கு ஆசை. அந்த ஆசை இன்று பூர்த்தியாகும் என்று நினைக்கிறேன். 

 

உமர்: உன் ஆசையின்படி ஆகக்கடவது. இதோ டீ வந்துவிட்டது,  டீயை குடித்துவிட்டு நாம் பேசலாம்.

 

[இருவரும் டீயை ருசி பார்க்கிறார்கள், உரையாடல் தொடர்கிறது]

 

அப்துல்லாஹ்: இதோ என் கேள்விக்கணைகள். இன்று உங்க பாஸ்டர் செய்தி கொடுக்கும் போது, மத்தேயு 18ம் அதிகாரத்திலிருந்து மன்னிப்பு என்ற தலைப்பில் பேசினார். மத்தேயு 18:21, 22ம் வசனங்கள் இப்படி கூறுகின்றன:


அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.   அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.  (மத்தேயு 18:21,22)

 

மேலும் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இயேசு தண்டனை கொடுக்காமல் மன்னித்ததாக கூறினார்.

 

இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

  • குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடுக்காமல் மன்னித்துக்கொண்டு இருந்தால், நாடு உருப்படுமா?
  • சட்டத்திற்கு விரோதமாக விபச்சாரத்தை செய்த பெண்களை மன்னித்தால், நாட்டில் எப்படி ஒழுக்கம் நிலை நிற்கும்?
  • இயேசுவின் மன்னிப்பு சம்மந்தப்பட்ட மேற்கண்ட போதனைகள் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? 

 

எப்படி சரியாக மடக்கினேன், பாத்தீங்களா? இது தான் நெத்தியடி என்றுச் சொல்வது? ஹா… ஹா.. ஹா..

 

உமர்: அடடே - ஒரு முஸ்லிமுக்கு கூட நகைச்சுவையாக பேசுமுடிகிறதே! தம்பி நீ தங்கக்கம்பி.

 

அப்துல்லாஹ்: ஐஸ் வெச்சது போதும், பேச்சை மாத்தாம விஷயத்துக்கு வாங்க.

 

உமர்: அதாவது சின்ன பசங்களை மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்லும் போது, ஊசி போடுவதற்கு முன்பாக, மருத்துவர் கொஞ்சம் அத இத பேசி, அந்த பையனை குஷி படுத்துவார், பேசிக் கொண்டேஇருந்து, ஊசி போட்டுவிடுவார். அதே  போலத்தான், கொஞ்சம் உன்னை குஷி படுத்துவிட்டு, ஊசி போடலாம் என்று நினைக்கிறேன்.

 

அப்துல்லாஹ்: பேசியது போதும், ஊசி போட ஆரம்பியுங்க. ஒருவேளை நான்  போட்ட ஊசி உங்களுக்கு அதிகமாக வலிக்குதா?

 

உமர்: எனக்கு பிரச்சனை இல்லை, நீ போடுவதெல்லாம் பொம்மை ஊசி தானே, எனக்கு வலிக்காது.

 

சரி விஷயத்திற்கு வருகிறேன். தன் சகோதரன் தனக்கு விரோதமாக தவறு செய்தால், எத்தனை முறை மன்னிக்கவேண்டும், ஏழுமுறையாக என்று பேதுரு  கேட்டார். அதற்கு இயேசு ஏழு எழுபது முறை என்றுச் கூறினார்.  இதனை அடிப்படையாக வைத்து, நாடு எப்படி உருப்படும்? சட்ட ஒழுங்கு எப்படி நிலைநிற்கும் என்று கேட்கிறாய். சரி, இப்போது உன்னுடைய கேள்விக்கான பதிலை காண்போம்.

 

இயேசுவிடம் கேள்வி கேட்டது யார்?

 

அப்துல்லாஹ்: பேதுரு என்று பெயர் கொண்ட இயேசுவின் சீடர்.

 

உமர்: தனக்கு விரோதமாக யார் தவறு செய்வதாக, பேதுரு கூறுகிறார்?

 

அப்துல்லாஹ்: இதைத்தான் வசனம் தெளிவாக சொல்கிறதே – "பேதுருவின் சகோதரன்" என்று?

 

உமர்: இப்போது என் கேள்வி என்னவென்றால் – பேதுரு தன் சகோதரன் செய்த குற்றம் பற்றி கேள்வி கேட்கும் போது, இயேசு அதற்கு பதில் அளித்த போது, இந்த நிகழ்ச்சியில் நாடு எங்கேயிருந்து வந்தது?

 

நான் கேட்பது உனக்கு புரியுதா? அதாவது தன் சகோதரன் தனக்கு எதிராக குற்றம் செய்யும் பொது, அதனை ஏழு முறை மன்னிக்க தயாராக இருப்பதாக பேதுரு கூறுகிறார். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், அதிகபட்சம் ஏழு முறை மன்னித்தால் போதும் என்று நினைக்கிறேன் என்ற தோரணையில் பேதுரு கேள்வி கேட்கிறார், அதற்கு இயேசு பதில் சொல்கிறார். இந்த உரையாடலில் நாடு எங்கே வந்தது? குடும்ப நபர்களின் மத்தியில் தவறுகள் செய்தால், அதனை இத்தனை முறை நான் மன்னித்தால் போதுமா? என்று கேள்வி கேட்கப்பட்டால், இல்லை ஏழு எழுபது முறை என்று இயேசு பதில் அளிக்கிறார். குடும்ப சங்கதிகளில் நாடு எப்படி வந்தது?

 

நாட்டின் அரசியல் சாசனம் அல்லது குற்றவியல் சட்டம் பற்றி இயேசு பேசியதாக நீயாகவே எப்படி கற்பனை செய்துக்கொள்கிறாய்?

 

பதில் சொல் இது தான் வசனங்களை படிக்கின்ற இலட்சனமா?

 

அப்துல்லாஹ்: ம்ம்ம்ம்ம்ம்

 

உமர்: என்ன பதிலைக்காணோம்… கேள்விக்கணைகள் என்று சொன்னாயே! என்ன ஆனது?

 

இயேசுவின் முதல் வருகை ஒரு இராஜ பவனியாக இருக்கவில்லை, அது ஒரு தாழ்மையான ஆட்டுக்குட்டியைப் போல சாந்தமாக இருந்தது. அவர் முதல் வருகையில் மக்களை நியாயம் தீர்க்க,  தண்டனை கொடுக்கவரவில்லை, அதற்கு பதிலாக தன்னையே தியாகம் செய்து,  அவர்களுக்காக மரிக்க வந்தார்.

 

அப்துல்லாஹ்: சரி, இயேசு மற்றும் பேதுருவின்  இந்த உரையாடல் அரசாங்கம் கடைபிடிக்கவேண்டிய சட்டத்தைப் பற்றி பேசவில்லை, இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லெரிந்து கொல்லவேண்டும் என்ற தோராவின் அல்லது மோசேயின் சட்டத்தையும் மீறி இயேசு மன்னித்தாரே, இது எப்படி சரியானதாக இருக்கும்? சட்டத்தை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, அதனை கையில் எடுத்துக்கொண்டு, அந்த பெண்ணையும் மன்னித்துவிட்டாரே, இது நியாயமா? இப்படி சட்டத்திற்கு விரோதமாக விபச்சாரம் செய்யும் நபர்களை மன்னித்தால் நாட்டில் ஒழுக்கம் எப்படி இருக்கும்? இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீங்க…. அண்ணே!?

 

உமர்: குற்றம் செய்தால், ஒரு இராஜாவாக அல்லது அரசாங்கமாக இருந்து எப்படி இயேசு தண்டனை கொடுப்பார் என்பதை உனக்கு பிறகு விளக்கமாக சொல்கிறேன், இப்போது இந்த பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியைப் பற்றி கொஞ்சம் உனக்கு நான் விளக்குகிறேன்.

 

முதல் நூற்றாண்டு சரித்திர பின்னணியையும், இயேசுவிடம் அவர்கள் கேட்ட கேள்வியின் உள் அர்த்தத்தையும் உனக்கு நான் விளக்குகிறேன், அப்போது தான் உன் மூளையில் விஷயங்கள் சரியாக சென்று அடையும்.

 

இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யார்?

 

அப்துல்லாஹ்: யூத தலைவர்கள், இதில் என்ன சந்தேகம்.

 

உமர்: இந்த யூத தலைவர்கள் யார், மத தலைவர்களா? அல்லது அரசியல் தலைவர்களா?

 

அப்துல்லாஹ்: இவர்கள் யூத மத தலைவர்கள், அதாவது வேதபாரகர்கள் என்றும் பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட மத தலைவர்கள் (யோவான் 8:3)

 

உமர்: ஆக, இவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல.

 

விபச்சாரத்தை செய்ய குறைந்தபட்சம் எத்தனை பேர் வேண்டும்? மற்றும் அவர்கள் குறைந்தபட்சம் யாராக இருக்கவேண்டும்?

 

அப்துல்லாஹ்: இது என்ன வேடிக்கையாக இருக்கிறதே! ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும்.

 

உமர்: அப்படியானால், அந்த யூத மத தலைவர்கள் ஆணையும், பெண்ணையும் கொண்டு வந்தார்களா?

 

அப்துல்லாஹ்: இல்லை, பெண்ணை மட்டும் கொண்டு வந்தார்கள்.

 

உமர்: ஏன் பெண்ணை மட்டும் கொண்டு வந்தார்கள்?

 

இவர்கள் உண்மையாக சட்ட ஒழுங்கை காப்பாற்றவேண்டும் என்ற ஆவலோடு அந்த பெண்ணை கொண்டுவரவில்லை, அதற்கு பதிலாக இயேசுவை பிரச்சனையில் சிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்துள்ளார்கள் என்பது தெளிவாக புரிகிறது அல்லவா? இன்னொரு முறை இதே போல அரசாங்கத்திற்கு வரி தருவது  நியாயமா இல்லையா என்று இயேசுவிடம் கேட்டார்கள். ஒரு உண்மையான யூதன் நிச்சயமாக ரோம அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது தவறு என்றுச் சொல்லுவான், இதே போல இயேசு சொன்னால், அரசரிடம் இவர் பற்றி புகார் கூறலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

அப்துல்லாஹ்: சரி, இன்னும் தெளிவாக சொல்லுங்க. அந்த தலைவர்கள் தான் மோசேயின் சட்டத்தின் படி கல்லெரிய வேண்டும் என்று சொன்னார்களே! அதனை ஏன் இயேசு நிறைவேற்றவில்லை?

 

உமர்: சொல்கிறேன் இரு.  இயேசுவிற்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாக இருந்தது, அனேக அற்புதங்கள் செய்து, சமுதாயத்தின் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களோடு அவர் சேர்ந்து இருந்ததினால், அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே சென்றது.  மேலும் யூத தலைவர்களின் செல்வாக்கிற்கு, பணத்திற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணமாக இயேசுவின் போதனைகள் அனேகரை கவர்ந்தது.

 

யூத மத தலைவர்கள், இயேசுவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

முதலாவது இயேசு மோசேக்கு எதிராக பேசுபவராக செயல்படுபவராக காட்டிவிட்டால், மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையும். அதே போல, அரசாங்கத்திற்கு எதிராக இயேசு செயல்படுபவர் என்று நிருபித்துவிட்டால், ரோம அரசாங்கம் தானாக இவரை சிறையில் அடைத்துவிடும். எனவே யூத தலைவர்கள்,  மேற்கண்ட காரணங்களுக்காக, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மட்டும் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு சிக்கலான கேள்வி கேட்டனர்.

 

அப்துல்லாஹ்: இதில் என்ன சிக்கல் இருக்கிறது? மோசேயின் சட்டம் சொல்வதின் படி தண்டனை கொடுங்கள் என்று கேட்டனர், இது எப்படி சிக்கலான கேள்வியாக்கும்?

 

உமர்: இங்கே தான் ஒரு உண்மையான சிக்கல் இருக்கிறது.

 

ஒரு உண்மையான  யூதன் மோசேயின் சட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்யமாட்டான். இயேசு தண்டனை கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தால், "பார்த்தீர்களா! நம்முடைய மோசேயின் சட்டத்தையே மீறும்படி இவர் பேசுகிறார்" எனவே, இவரை நம்பாதீர்கள்! இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றுச் சொல்லி மக்களின் மனதில் இயேசுவிற்கு இருக்கும்  செல்வாக்கை குறைக்க முயற்சி எடுத்து இருப்பார்கள் யூத தலைவர்கள்.

 

ஒரு வேளை, ஆம், மோசேயின் சட்டத்தின் படி தண்டனை கொடுங்கள் என்றுச் சொல்லி, இயேசுவும் சேர்ந்து கல்லெரிந்து அப்பெண்ணை கொன்று இருந்தால், அரசாங்கத்திடம் இவரை ஒப்புக்கொடுத்து இருப்பர்கள். ஏனென்றால், அந்த காலத்தில் இஸ்ரவேல் நாட்டை ரோமர்கள் ஆட்சி புரிந்தார்கள். ரோமர்களின் சட்டம் தான் நாட்டில் அமுலில் இருந்தது.  யூதர்களின் நியாயப்பிரமாணத்தின் சட்டம் அமுலில் அன்று இல்லை. இயேசுவை அவர்கள் கைது செய்யும் போது கூட, அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களே தவிர தாங்களாகவே தண்டனை கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

 

இயேசு அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தி, அவரை அரசரிடம் ஒப்புக்கொடுக்க அவரது வாயிலிருந்து எப்போது வார்த்தைகள்வரும் என்று காத்திருந்தனர்.

 

எனவே, இயேசு ஆம் என்றாலும் பிரச்சனை, இல்லை என்றாலும் பிரச்சனை. ஆனால், இயேசு ஆமுக்கும் இல்லையிக்கும் இடையே இன்னொறு ஆமேன் போட்டார்.

 

அதாவது, உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல்லை இப்பெண்ணின் மிது எறியட்டும் என்றார். எல்லாரும் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக, முக்கியமாக அந்த யூத மத தலைவர்கள் தங்களின் யுக்தி தோல்வி அடைந்துவிட்டதை உணர்ந்தவர்களாக சென்றுவிட்டார்கள்.

 

ஆக, இந்த நிகழ்ச்சியிலும் இயேசு நாட்டின் சட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. தன்னை பிரச்சனையில் சிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர்களின் யுக்திகளை அழித்துவிட்டார். அவ்வளவு தான்.

 

அப்துல்லாஹ்: ம்ம்…..இப்போது தான் கொஞ்சம் புரியுது.

 

உமர்: புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பதில் நீ கில்லாடியாச்சே, எப்படி உண்மையை  ஒப்புக்கொள்வாய்?

 

அப்துல்லாஹ்: சரி, எனக்கு இதைச் சொல்லுங்கள். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமா இல்லையா? இதைப் பற்றி இயேசு என்ன கூறுகிறார்?

 

உமர்: இயேசு தம்முடைய முதல் வருகையில் தண்டிக்க வரவில்லை, தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தார். காணாமல் போன ஆடுகளை தேடவந்தார். நமக்காக தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து, நம் தண்டனையை தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்கு சாந்தியையும், இறைவனிடம் ஒன்று சேருகின்ற வழியையும் கொடுக்க வந்தார்.

 

ஆனால், அவரது இரண்டாவது வருகை எப்படி இருக்கும் என்று உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நம்புகிறேன். அவர் இராஜாதி இராஜாவாக வருவார். மேகங்கள் மேல் தம்முடைய தூதர்களோடு வருவார், அனைவரையும் நியாயந்தீர்ப்பார் (தம்பி நீ நபி என்று நம்புகிற முஹம்மதுவும் இயேசு சிங்காசனத்தில் உட்கார்ந்து இருக்கும்போது, அவருக்கு முன்பாக தீர்ப்பிற்காக நிற்பார்).

 

அப்போது குற்றம் புரிந்த ஒவ்வொருவனுக்கு தண்டனை அளிப்பார். உனக்கு நேரமிருந்தால், வெளிப்படுத்தின  விஷேஷத்தை ஒரு முறை படி.

 

அப்துல்லாஹ்: இயேசு இரண்டாம் வருகையில் இராஜாவாக வரட்டும், இராஜாதி இராஜாவாக வரட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர் முதல் வருகையில் வந்திருக்கும் போது அரசாங்கம், அரசு, குற்றம் புரிந்தவர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனைகள் போன்றவைகள் பற்றி என்ன கூறினார்?  எங்கள் நபி முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அனேக சட்டங்களை கொடுத்துள்ளார்.

 

என்னை கேட்டால், இயேசு நாடு பற்றி அக்கரை கொள்ளவில்லை, சட்டம் பற்றி அக்கரை கொள்ளவில்லை, குற்றம் புரிவபர்களை தண்டித்து, நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்யவேண்டும் என்று அவர் ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் மன்னிப்பு, மன்னிப்பு என்று சொல்லிக்கொண்டே இருந்தால், நாடு எப்படி முன்னுக்கு வரும், நாட்டில் எப்படி குற்றம் குறையும்?

 

உமர்: மறுபடியும் வேதாளம் மரம் ஏறிவிட்டதா? இவ்வளவு சொல்லியும் நீ மறுபடியும் பழைய கதைக்கே வருகிறாயே. சரி உன்னுடைய கடைசி விமர்சனத்திற்கும் பதில் தருகிறேன். அதாவது…..

 

அப்துல்லாஹ்: போதும்.. போதும்… இப்போது வேண்டாம், இன்னொருமுறை பார்ப்போம். நான் போய் என் நண்பர்களை பார்க்கவேண்டும். நான் வருகிறேன். நல்ல  சிந்திச்சு வையுங்க, நான் மேலே சொன்ன கேள்விகளுக்கு உங்களால் புதிய ஏற்பாட்டு சுவிசேஷங்களில் ஒரு பதிலும் கிடைக்காது.  உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…

 

உமர்: தம்பி இருடா……

போயிட்டானா…. ம்ம்ம்…  ஒரு நாள் நீ திரும்புவருவாய்.

 

[உமர் கண்களை முடி ஜெபிக்கிறார்]

 

அன்பான பிதாவே, என் தம்பியை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். அவனை சுகபத்திரத்தோடு காத்துக்கொள்ளும். உம் அன்பை அவன் மறுபடியும்  ருசி பார்க்க இன்னொரு வாய்ப்பை அவனுக்குத் தாரும். அவன் நல்ல நண்பர்களிடம் நட்பு கொள்ள உதவி புரியும்.  அவனை பிரச்சனையில் மாட்டவைக்கும் நட்பிலிருந்து அவனை காத்துக்கொள்ளும், அவனுக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தை மறுபடியும் தாரும். இயேசுவின் இனிய பெயரில் வேண்டிக்கொள்கிறேன், ஆமென்.

 

அடுத்த "நச்சென்று நாலு கேள்வி" தொடரில் சந்திப்போம்.


Tamil Source : http://isakoran.blogspot.in/2013/03/2.html

March 9, 2013

நச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

 

நச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

[உமரின் சகோதரர் சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார், அவர் கடந்த வருடம் இஸ்லாமை தழுவினார். கடந்த வருடம் ரமளான் மாதத்தில் உமர் தன் சகோதரனோடு புரிந்த 30 கடித உரையாடல்களை இங்கு படிக்கலாம். உமரின் சகோதரன் சௌதி அரேபியாவிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தாய் நாட்டிற்கு திரும்பினார். உமரின் தம்பி, எப்படியாவது தன் குடும்பம் இஸ்லாமை தழுவவேண்டும், இந்த ஒரு மாத காலம், இஸ்லாம் பற்றி தன் குடும்பத்திற்கு அறிவிக்க தனக்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணி மகிழ்கிறார்.இதே போல, உமரும் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார். உமரின் தம்பி ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உமரும் அவரது தம்பியும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதோ அந்த வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்துள்ளது. உமரும் அவரது தம்பியும் உரையாடும் அனேக உரையாடல்களை கேள்வி பதில் தொடர்களாக காண்போம். உமரின் தம்பியின் பெயர் அல்துல்லாஹ் என்று மாற்றப்பட்டுள்ளது,]

அப்துல்லாஹ்: அண்ணே, கடந்த இரண்டு நாளா உங்களோடு பேசலாம் என்று நினைத்து காத்திருக்கிறேன்.இன்று நீங்க கொஞ்சம் ஃபிரீயா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

உமர்: தம்பி,நீ சொல்லிட்டே நான் சொல்லலே அது தான் வித்தியாசம். சரி, நாம் பேசலாம்.

அப்துல்லாஹ்: அண்ணே நாம் பேசப்போவது கொஞ்சம் அதிகபடியாக இருக்கலாம், இருந்தாலும், நீங்க கோபித்துக் கொள்ளக் கூடாது.

உமர்: இல்லை, நான் கோபம் கொள்ளமாட்டேன். நாம் இருவரும் அண்ணன் தம்பி, நம்மிடையே என்ன விரிசல் உண்டாகப்போகிறது சொல்? நானும் ஏதாவது தர்மசங்கடமான கேள்வி கேட்டுவிட்டால், நீயும் சாந்தமாக இருக்கவேண்டும்,என் மீது கோபம் கொள்ளக்கூடாது.

அப்துல்லாஹ்: அண்ணே, முதலாவது நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 'உங்களுக்கு சத்தியம் எது என்று தெரிந்திருந்தும், இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என தெரிந்திருந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, நீங்கள் இன்னும் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

உமர்: இந்த சந்தேகம் உனக்கு எப்படி வந்தது? ஏன் இப்படி கேட்கிறாய்?

அப்துல்லாஹ்: நீங்க, அனேக இஸ்லாமிய நூல்களை படித்து இருக்கிறீங்க, குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படித்து இருக்கீங்கள். கடந்த வருடம் மெயில் மூலமாக நாம் இருவரும் பேசிய உரையாடல்கள் மூலமாக நான் இதனை அறிந்துக்கொண்டேன். எனவே,வேண்டுமென்றே நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்: தம்பி,வெறும் இஸ்லாமிய நூல்களை படித்துவிட்டால், ஒருவன் நிச்சயமாக இஸ்லாமியனாக மாறிவிடுகிறான் என்பது ஒரு பலவீனமான நம்பிக்கையாகும். அனேகர் இஸ்லாமை அதிகமாக அறிந்ததினாலேயே இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கிறார்கள், அனேகர் இஸ்லாமை முழுவதுமாக புரிந்துக்கொண்டதினால் நாத்தீகர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் அனேகர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொண்டும், உயிருக்கு பயந்து, கேள்வி கேட்காமல், இஸ்லாமை விட்டு வெளியேறாமல் ஒரு போலியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஒருவன் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களை படித்து, புரிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமுக்கு மாறிவிடமுடியாது.

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதை ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், உங்களை பொறுத்தமட்டில், நீங்கள் ஏதோ ஒரு உள்காரணத்திற்காக அல்லது உள் நோக்கத்திற்காக உண்மையை ஏற்க மறுப்பதாக நான் உணருகிறேன்.

உமர்: அப்படியா? அது என்ன உள்காரணம் / உள்நோக்கம்? எவைகளை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுகிறாய்?

அப்துல்லாஹ்: நான் உள்நோக்கம் என்றுச் சொல்வது, இதைத் தான். அதாவது இப்போது உங்களுக்கு சர்ச்சில் நல்ல பெயர் இருக்கிறது, மதிப்பு மரியாதை இருக்கிறது. நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இந்த பெயர் புகழ் எல்லாம் அழிந்துவிடுமே என்று நினைத்து, நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், நான் இப்போது சொல்வதை கேட்டு நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது,அதாவது சர்ச்சில் ஒரு சில ஊழியங்கள் செய்யும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ, இந்த பணத்தையும் விட்டுவிட மனமில்லாதபடியினால், நீங்கள் அதிகமாக இஸ்லாமை அறிந்திருந்தாலும், அதனை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். என்னடா இவன், நச்சென்று கேள்விகளை கேட்கிறானே என்று நீங்கள் கோபம் கொள்ளவேண்டாம்.

உமர்: ஓ, இது தான் உன் சந்தேகமா? பணமும், பெயர் புகழும் இஸ்லாமை ஏற்க எனக்கு தடைக்கற்களாக இருக்கிறது என்று நீ நினைக்கிறாய். முதலாவதாக, நீ நினைப்பது போல, நான் செய்யும் ஒரு சில சின்ன ஊழியத்திற்காக யாரிடமிருந்தும் பணத்தை பெறவில்லை. நீ இங்கு இருக்கும் போது நாம் இருவரும் சேர்ந்து தான் கடந்த பல ஆண்டுகளாக சபைக்கு உதவியாக இருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் நாம் ஏதாவது பண உதவியை சபையிடமிருந்து பெற்றோமா? நீ பதில் சொல்லு?

அப்துல்லாஹ்: இல்லை, நாம் பண உதவி எதையும் பெறவில்லை, மட்டுமல்ல, நாம் பணத்தை எதிர்ப்பார்த்து ஊழியமும் செய்யவில்லை.

உமர்: விஷயம் இப்படி இருக்க, இப்போது மட்டும் ஏன் உனக்கு இந்த விதமான பணம் சம்மந்தப்பட்ட சந்தேகம் வந்துள்ளது? உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கேட்ட கேள்விகளை, உன் உள்ளத்தில் போட்ட சந்தேகங்களை, அப்படியே என்னிடம் கேட்கிறாயா என்ன? உன் அண்ணனுடைய குணத்தை நீ அறியமாட்டாயா? மேலும், உனக்கு ஏற்கனவே தெரியும், நம் குடும்பத்தில் நாம் சம்பாதிக்கும் செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அப்படியே சபைக்கு தருகிறோம், மேலும் இந்த பண விஷயத்தில் நம் அப்பா எவ்வளவு கண்டிப்பாக உன்னையும், என்னையும் வளர்த்துள்ளார் என்பதை அறியமாட்டாயா?

அப்துல்லாஹ்: நான் கேட்டதற்கு காரணம், அனேகர் இப்படி செய்வதினால் தான்.

உமர்: ஒன்றும் பிரச்சனை இல்லை தம்பி, குறைந்தபட்சம் உன் சந்தேகத்தை தயங்காமல் என்னிடம் கேட்டாயே இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சி. மேலும் பெயர் புகழ் என்றெல்லாம் பேசினாய். தம்பி, பெயரும் புகழும் நித்திய ஜீவனை விட பெரியதா என்ன? நிச்சயமாக இல்லை. நமக்கு நித்திய ஜீவன் தான் முக்கியம், எது சத்தியமோ அதனை நாம் பின்பற்றவேண்டும். நாம் இந்த உலகில் வாழும் போது எடுக்கும் முடிவுகள், நம் நித்தியத்தை பாதிக்கும் என்பதால் தான் நீயும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய், நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே, பெயரும் புகழும் இன்று இருக்கும், நாளைக்கு சென்றுவிடும், நாம் நம்முடைய நித்திய ஜீவனை இழக்கும் எவைகளையும் விட்டுவிடவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில், நமக்கு நித்திய ஜீவனை இயேசு தருகிறார், முஹம்மது அல்ல என்பதாகும்.

அப்துல்லாஹ்: நீங்கள் இஸ்லாமை ஏற்று அல்லாஹ்வோடு சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்பது தான் என் ஆவள், அதற்காகத் தான் நானும் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: தம்பி உன் கேள்வி, எதனால் வெளியானது என்பதை என்னால் உணரமுடிகிறது. இதுவரை நீ படித்த இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உனக்கு இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்-ஆன் மற்றும் அல்லாஹ் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதனால், இந்த விஷயங்களை அறிந்த என் அண்ணன் மட்டும் ஏன் இவ்வளவு நல்ல மார்க்கத்தை ஏற்க மறுக்கிறார் என்று நீ ஆச்சரியப்படுகிறாய். அதனால் தான் இந்த கேள்விகளை நீ கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: அண்ணன் என்றால் இப்படித்தான் இருக்கனும், நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்களே!

உமர்: டேய், நான் உன் அண்ணனாக்கும். சரி, விஷயத்திற்கு வருகிறேன், நல்லா கவனி. நீ இஸ்லாம் பற்றிய ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்துள்ளாய். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாமுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தை மட்டும் அறிந்துக்கொண்டு, உலகம் ஏன் இப்படி இஸ்லாமை கறைச்சு குடிக்கிறது, அதனை ஏற்க மறுக்கிறது என்று வேதனை அடைந்தால் எந்த பயனும் இல்லை. இரண்டு பக்கங்களையும் நீ அறியவேண்டும்.

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. நீங்க சொல்வது போல நான் இஸ்லாமில் அறைகுறை அல்ல! எனக்கு இஸ்லாம் முழுவதுமாக தெரியும்!

உமர்: அடப்போடா பைத்தியக்காரா! 50 ஆண்டுகளாக இஸ்லாமியர்களாக இருந்தவர்களுக்கே இன்னும் இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியாது. 20 ஆண்டுகளாக மௌலவிகளாக, இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களுக்கே இன்னும் எந்த ஹதீஸ்கள் உண்மை எந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. நேத்து பெய்ந்த மழையில் முளைத்த காளான் நீ, ஓரிரு ஆண்டுகள் சௌதி அரேபியாவில் வாழ்ந்துவிட்டால் நீ இஸ்லாமை முழுவதுமாக அறிந்துவிடமுடியுமா? 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் ஒரு சரியான முடிவிற்கு வராமல் இஸ்லாமிய அறிஞர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு டஜன் இஸ்லாமிய புத்தகங்களை படித்த உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா?

அப்துல்லாஹ்: அண்ணே, அத விடுங்க! என் கேள்விக்கு என்ன பதில்?

உமர்: சரி, இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். மறுபடியும் நல்லா கவனி. நான் மூன்று விஷயங்களை உன் முன் வைக்கிறேன்:

1) நபர்கள் – இயேசுக் கிறிஸ்து மற்றும் முஹம்மது

2) கோட்பாடுகள் – பைபிள் மற்றும் குர்-ஆன்

3) மூலங்கள்: யெகோவா தேவன் மற்றும் அல்லாஹ்

தம்பி, நான் முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன், ஹதீஸ்கள் மற்றும் குர்-ஆனில் காணப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை குறிப்புக்களையும் ஆராய்ந்தேன். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் சொல்லும் செயலும் என்னை கவர்ந்ததை போல, முஹம்மதுவின் சுன்னா (முஹம்மதுவின் சொல்லும் செயலும்) என்னை கவரவில்லை. உண்மையைச் சொல்கிறேன், குறைந்த பட்சம் முஹம்மது ஒரு நல்ல ஆன்மீகதலைவர் என்ற நிலையிலும் அவரை நான் ஏற்கமுடியாது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு ஒரு எதிர்மறையான தாக்கத்தை என்னில் உண்டாக்கியுள்ளது. என்னில் மட்டுமல்ல முஹம்மதுவின் உண்மை வாழ்க்கையை படிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இந்த எதிர்மறை தாக்கம் தான் உண்டாக்கும். முஹம்மதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்கும் உன்னைப்போல இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இப்படி எதிர்மறை தாக்கம் வர வாய்ப்பு இல்லை.

இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்திருந்தும் ஏன் இஸ்லாமை மக்கள் ஏற்பதில்லை என்று கேள்வி கேட்கிறாயே, இதற்கு இது முதலாவது காரணமாகும்.

அப்துல்லாஹ்: அப்படியானால், முஹம்மது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

உமர்: அவர் முழுவதுமாக ஒரு தீய பிம்பம் என்று நான் சொல்லவரவில்லை, மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆன்மீக தலைவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் அவரில் காணப்படவில்லை என்றே சொல்கிறேன். இதைப்பற்றி வேண்டுமானால், நாம் அடுத்த முறை எப்போதாவது பேசலாம், இப்போது உன் கேள்விக்கான இரண்டாவது பாயிண்டை நான் சொல்கிறேன்.

இரண்டாவதாக,பைபிள் என்னில் உருவாக்கிய ஒரு நல்ல மாற்றத்தைப் போல, குர்-ஆன் என்னில் மாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். அதாவது இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நீதி, நியாயத்தீர்ப்பு போன்ற பைபிளின் கோட்பாடுகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டாக்குகிறது. ஆனால்,குர்-ஆனின் கோட்பாடுகள் என்னில் அவ்வளவாக மாறுதல்களை உண்டாக்கவில்லை. என்னில் மட்டுமல்ல எந்த மனிதனின் வாழ்விலும், குர்-ஆன் ஒரு நம்பிக்கையை உண்டாக்க முடியாது என்பது என் கருத்தாகும்.

உன்னிடம் ஒரு கேள்வி: நீ அல்லாஹ்வையும் குர்-ஆனையும் நம்புகிறாயா?

அப்துல்லாஹ்: ஆம், நிச்சயமாக அல்லாஹ்வை நம்புகிறேன், குர்-ஆனையும் நம்புகிறேன்.

உமர்: இன்று நீ மரித்தால், உனக்கு அல்லாஹ் சொர்க்கம் தருவாரா? இதன் நிச்சயம் உனக்கு உண்டா?

அப்துல்லாஹ்: அல்லாஹ் சொர்க்கம் தருவார் என்று நிச்சயமாக நான் சொல்லமுடியாது, அதை நான் இப்போது முடிவும் செய்யக்கூடாது. ஆனால், அவரிடமிருந்து நல்லதை எதிர்ப்பார்க்கலாம்.

உமர்: நிச்சயம் இல்லாமல் 'அல்லாஹ் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம், ஆனால் நான் மட்டும் மார்க்கத்தை முழுவதுமாக கடைபிடிக்க முயற்சி எடுப்பேன்" என்றுச் சொல்லி நீ இவ்வுலகில் வாழவேண்டும். ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு உன்னைப்போல சந்தேகம் இல்லை, இன்று மரித்தாலும் அவன் கிறிஸ்துவுடன் வாழும் அந்த நித்திய ஜீவன் அவனுக்கு உண்டு என்ற முழு நிச்சயம் இவ்வுலகில் வாழும் போதே அவனுக்கு பைபிள் கொடுத்துவிடுகிறது. எனவே தான் நான் சொல்கிறேன், குர்-ஆனை முழுவதுமாக அறியும் எந்த ஒரு மனிதனுக்கும், நித்திய ஜீவனின் ஒரு நிச்சயம் இல்லை, ஆதனால் தான், நான் குர்-ஆன் ஒரு இறைவேதம் என ஏற்க மறுக்கிறேன்.

மூன்றாவதாக, யெகோவா தேவன் என்னோடு ஒரு தந்தையைப் போல நல்லுறவு கொண்டுள்ளார். ஆனால், அல்லாஹ்வோ,என்னோடு ஒரு அடிமை எஜமானன் என்ற நிலையில் இருக்க அழைக்கிறார். யாராவது அப்பாவை விட்டுவிட்டு,ஒரு மகா ராஜாவிற்கு மகனாக மகளாக இருப்பதை விட்டுவிட்டு, ஒரு அடிமையைப்போல வாழ தன்னை ஒரு எஜமானனுக்கு விற்றுவிடுவானா? உன் அண்ணன் அவ்வளவு பெரிய அடிமுட்டாள் என்று நீ நினைத்தாயா தம்பி?

கிறிஸ்தவம் என்பது அப்பாவிற்கும் அவன் மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு உறவுமுறையாகும். இஸ்லாம் என்பது ஒரு எஜமானனுக்கும் அடிமைக்கும் இடையே இருக்கும் ஒரு அக்ரிமெண்டு அதாவது ஒரு நபந்தனைப் பத்திரம் ஆகும்.

எனவே அனேக காரணங்களில் இந்த மூன்று முக்கிய காரணங்கள் தான் என்னை இன்னும் இஸ்லாம் பக்கம் இழுக்காமல் வைத்திருக்கிறது.

இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா?

அப்துல்லாஹ்: அப்படியானால் நான் ஒரு அடிமை என்றுச் சொல்கிறீங்களா?

உமர்: அடிமையில்லாமல் நீ என்ன அல்லாஹ்வின் குமாரனா? இஸ்லாம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமலா நீ இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய்? அல்லாஹ் உன்னை எந்த நாளிலும் ஒரு குமாரனாக ஏற்றுக்கொள்ளமாட்டார். குறைந்த பட்சம் ஒரு மகனாக கூட உன்னை தத்து எடுத்துக்கொள்ளமாட்டார்.

அப்துல்லாஹ்: உங்களை நாளைக்கு பார்த்துக்கொள்கிறேன். இன்னிக்கு உங்களை இப்போதைக்கு போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

அம்மா… எனக்கும் அண்ணாவிற்கு காபி கொண்டு வாங்க.

உமர்: (உமர் மனதுக்குள் நினைக்கிறார்: அடப்பாவமே, என் தம்பி ஒரு முஸ்லீமைப் போலவே நடந்துக்கொள்கிறானே! அவனால் பேசமுடியவில்லையானால், உடனே பிளேட்டை மாத்துரான்… இந்த விஷயத்தில் என் தம்பி கெட்டிக்காரன்…. )

அடுத்த "நச்சென்று நாலு கேள்வி" தொடரில் சந்திப்போம்.


Tamil Source : http://isakoran.blogspot.in/2013/03/1.html