அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 26, 2007

இஸ்லாம் தளத்திற்கு விளக்கம் ‍எண் -3 பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல பாகம் - I

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=339

பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 1 (Part 1 of 4)


இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

Quote:
1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.


இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.


1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?
3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.

இஸ்லாமிய அறிஞர்கள் "முகமதுவை" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க, மாற்று மத வேதங்களின் வசனங்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு முயற்சியே இந்த வாதம். அதாவது, பைபிளில் வரும் "பாரான் வனாந்திரம்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" என்று சொல்கிறார்கள். எனவே, பாரான் குறித்து வரும் சில வசனங்கள், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இவர்களின் இந்த வாதம் அல்லது நம்பிக்கை சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

1. திருத்தப்பட்ட வேதம் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் "பைபிளின்" வசனங்களை ஆதாரமாக இஸ்லாமியர்கள் முன் வைப்பது ஏன்?

பைபிளில் (தோரா, ஜபூர், இஞ்ஜில்) நேர்வழியும், வெளிச்சமும் உண்டு என்று குர்-ஆன் வசனங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் "பைபிள்" மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள். பைபிள் இறைவனின் வார்த்தை இல்லை, அது மாற்றப்பட்டது என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் "முகமது" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க "பைபிளின்" வசனங்களை ஆதாரங்களாக காட்டுகிறார்கள்.

உண்மையாகவே அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்பினால்:

a) முகமதுவை "நபி" என்று நிருபிக்க ஏன் பைபிள் வசனங்களை நம்புகிறார்கள்?
b) ஒரு புத்தகம் வேதம் இல்லை என்று அடித்துச் சொல்லும் நீங்கள் ஏன் அதன் சில (உங்களுக்கு சாதகமாக தென்படுகின்ற) வசனங்களை நம்புகிறீர்கள்?
c) பைபிள் வசனங்கள் மாற்றப் பட்டது என்றுச் சொன்னால், நீங்கள் காட்டும் வசனங்கள் மட்டும் எப்படி திருத்தப்படாமல் இருக்கும்?

எனவே, ஒரு புத்தகம் வேண்டமென்றால், அதன் எல்லா வசனங்களும் வேண்டாம் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, சில வசனங்களை மட்டும் நம்பவேண்டியது, அடுத்த வசனத்தை நாங்கள் ஆதரமாக காட்டினால், அது திருத்தப்பட்டது என்றுச் சொல்வது, சரியான வாதமாக அல்லது ஆதாரமாக இருக்காது. ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. நாங்கள் பைபிளை மட்டும் வேதம் என்று நம்புகிறோம். பைபிளில் வரும் செய்திகளை திருத்தி எழுதப்பட்டது குர்-ஆன் என்று நம்புகிறோம். இருந்தாலும், ஏன் அதன் வசனங்களை சிலவற்றை ஆதாரமாக கொடுக்கிறோம் என்றால், பைபிளின் செய்திகளை தவறாக புரிந்துக்கொண்டு எழுதியதால், தவறுதலாக சில பைபிள் செய்திள்கள் அப்படியே குர்-ஆனில் வந்துவிட்டது என்று சொல்கிறோம். குர்-ஆன் "வேதம்" என்று நம்பி நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பைபிளும் தனக்கு பின் ஒரு நபி வருவார், ஒரு வேதம் வரும் என்று சொல்வதில்லை.

2. பாரான் வனாந்திரம் வரைபடம்(Map) மற்றும் மக்காவின் வரைபடம்(Map): கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

இதில் "பாரான் வனாந்திரம்" மற்றும் "மக்கா" எங்குள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

Source : http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது தங்கிய 18 இடங்களை இந்த படத்தில் காணலாம். கானானுக்கும் பாரானுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றும், மக்காவிற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்றும் இப்படங்களின் முலமாக தெரிந்துக்கொள்ளலாம். கீழே உள்ள கூகுல் யர்த்( Google Earth) வரைபடத்தைப் பார்க்கவும். இதில் எருசலேம், மற்றும் மக்கா எங்குள்ளது என்று சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். மற்றும் தமிழில் எழுதி, கோடுகள் வரைந்துள்ளேன்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/makkaatgoogle.JPG

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/makkaatgoogle.JPG

இப்படத்தை கூகுல் யர்த்தில்(Google Earth) பார்க்கவேண்டுமானால், பூமியிலிருந்து 1528.20 மைல்கள்(Eye alt 1528.20 mi) உயரத்திலிருந்து பார்க்கவேண்டும். மற்றும் படத்தின் இடது பக்கம் அடியில் காட்டியபடி அளவு கோள் 531 மைல்கள் (Scale 531 mi) காட்டப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த படத்தில் காணலாம்.

source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/JerusalemMakka.jpg

3. பாரான் வனாந்திரமும், மக்காவும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள்:

3.1. ஈசாக்கும், இஸ்மவேலும் சேர்ந்தே ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் ( 89 வயது இஸ்மவேல் மக்காவின் இருந்திருந்தால், ஆபிரகாமின் அடக்கத்திற்கு இஸ்மவேல் எப்படி வந்தார் ?) ஆகாரும் இஸ்மவேலும் பாரானில் குடியிருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆபிரகாம் மரித்த போது, ஈசாக்கும், இஸ்மவேலும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை அடக்கம் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது, அதையும் இஸ்லாமியர்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் தள அன்பர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆதியாகமம்: 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
ஆதியாகமம்: 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள் .
ஆதியாகமம்: 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி ஒரு வேளை இஸ்லாமியர்கள் சொல்வது போல, ஆகாரும் இஸ்மவேலும் மக்காவில் வாழ்ந்ததாக வைத்துக்கொண்டால், ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் எப்படி மக்காவிலிருந்து, கானானுக்கு இவ்வளவு சீக்கிரமாக வரமுடியும். "பாரான் வனாந்திரம்" மக்காவை குறிக்கும் என்று இஸ்லாமியர்களின் வாதம் இங்கு பலவீனமாகிவிடுகிறது. எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று www.timeanddate.com என்ற தளம் ஆகாயமார்க தூரத்தை கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151 or http://www.timeanddate.com/worldclock/distance.html
Distance from Jerusalem to Makkah Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.

ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள், பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும். ஆபிரகாம் மரித்தது பெயர்செபா என்பதால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம்.

ஆபிரகாம் மரிக்கும் போது, இஸ்மவேலுக்கு 89 வயது

ஆதியாகமம்16:16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் .
ஆதியாகமம்: 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

இஸ்மவேலை ஆபிரகாம் பெற்ற போது, ஆபிரகாமுக்கு 86 வயது, மற்றும் மரிக்கும் போது ஆபிரகாமின் வயது 175. ஆக, ஆபிரகாம் மரிக்கும் போது இஸ்மவேல் கிட்டத்தட்ட 89 வயது முதியவராக இருந்திருப்பார்.


a) 89 வயது முதியவராகிய இஸ்மவேல், ஆபிரகாம் மரிக்கும் போது மக்காவிலிருந்து, பெயர்செபாவிற்கு எப்படி ஓரிரு நாட்களில் 1000 கிலோ மீட்டரை தாண்டி வரமுடியும்?

b) அல்லது அண்ணன் வரும் வரை தம்பியாகிய ஈசாக்கு ஆபிரகாமின் உடலை பத்திரமாக எப்படி அழுகாமல் வைத்து இருக்கமுடியும்? (அந்த காலத்தில் மரித்த உடலை பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர் சாதனப் பெட்டி போன்ற வசதி இருந்ததா?)

c) இஸ்மவேல் 1000 KM எப்படி வந்தார்? குதிரையில், ஒட்டகத்தில் வந்தாலும் ஓரிரு நாட்களில் வர முடியாது?

d) இஸ்மவேலுக்கு செய்தியைச் சொல்ல ஒருவர் மக்காவிற்கு(இஸ்லாம் படி பாரானுக்கு) சென்று இருக்கவேண்டுமல்லவா? அப்படி செல்வதற்கும் அதிக நாட்கள் ஆகுமே?

சரி இதற்கு சரியான பதில் என்னவென்றால், ஆகாரும் இஸ்மவேலும் வாழ்ந்தது இப்போதுள்ள மக்காவில் அல்ல, பாரான் வனாந்திரம் என்பது பெயர்செபாவிற்கு தெற்காக, எகிப்திற்கு கிழக்கிலே உள்ளது என்பது தான் உண்மை. எகிப்திற்கு அருகாமையில் இருப்பதால் தான், ஆகார் தன் மகனுக்கு எகிப்திய பெண்ணை திருமணம் செய்தார்கள்.

இல்லை, பாரான் என்பது மக்கா தான் என்று சொல்வீர்களானால், இதற்கு பதில் சொல்லுங்கள்: ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் வந்தாரா இல்லையா? வந்தார் என்று சொல்வீர்களானால், எப்படி 89 வயது உள்ள ஒரு மனிதன், 1000 KM லிருந்து ஓரிரு நாட்களில் வரமுடியும்? சொல்லுங்கள்? 1000 KMக்கு அதிகமான தூரத்தில் இருப்பவருக்கு ஆபிரகாம் மரித்த செய்தி எப்படி சென்று அடைந்தது?

எஸ்றா என்பவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு, யூப்ரடீஸ் டைக்ரீஸ் வழியாக (900 மைல்கள்) வருவதற்கு 4 மாதங்கள் ஆனது என்று பைபிள் சொல்கிறது ( பார்க்க எஸ்றா அதிகாரம் 7:9). இஸ்மவேலுக்கு மக்காவிலிருந்து பெயர்செபாவிற்கு வர எத்தனை நாட்கள் பிடித்திருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் (சுமார் 750 மைல்கள் ஆகாய மார்க்கமாக, தரை மார்க்கமாக இன்னும் அதிகம்).

மேலே பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், பாரானும் மக்காவும் ஒன்றல்ல. பைபிள் சொல்லும் பாரான், பெயர்செபாவிற்கு அருகாமையில் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம். நான் காட்டிய விவரங்கள் தவறு என்றுச் சொன்னால், எங்கே தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் "நீங்கள் சொல்வது தவறு என்று" சொல்லக்கூடாது. இது படித்தவர்களுக்கு அழகல்ல.

கட்டுரை மேலும் தொடரும்....

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=339

December 16, 2007

இஸ்லாம் தளத்திற்கு விளக்கம் ‍எண் -2. 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் - I

இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்
source : http://isakoran.blogspot.com/
                            
இஸ்லாம் கல்வி என்ற தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும்" என்ற கட்டுரையை படித்தேன். இதை நெல்லை இப்னு கலாம் ரசூல் என்ற சகோதரர் எழுதியிருந்தார். இக்கட்டுரையில் அல்லாவைப் பற்றி பல விவரங்களை சொல்லியிருந்தார், அதே நேரத்தில், பைபிளைப் பற்றியும், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.
நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் எழுதியது : இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய் இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும்
உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும் பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது: அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5) ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9)

Source: http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm

முஸ்லீம் அறிஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ பைபிளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதிவிடுகிறார்கள், அதற்காக அவர்கள் சரியான முறையான ஆராய்ச்சி கூட செய்வதில்லை. குறைந்தபட்சம், அவர்கள் எடுத்துக்காட்ட விரும்பும் வசனத்தின் பொருளை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் எழுதிவிடுகிறார்கள். இப்படித் தான் இக்கட்டுரையிலும் வசனங்கள் எடுத்தாளப்பட்டுள்ளது.

இக்கட்டுரையை எழுதியவர் கீழ்கண்ட விவரங்களைச் சொல்லவருகிறார்:

1. இறைவன் ஒருவனே
2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5)
3. இயேசு தன்னை வணங்கக்கூடாது என்று இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் மத்தேயு 15:9)

ஒரு செய்தியை சொல்வது தவறில்லை, அதற்கு சரியான வசன ஆதாரங்களை தரவேண்டும், அதற்கு பதிலாக சரியாக பொருந்தாத வசனத்தை ஆதாரமாக தரக்கூடாது, தன் வாதத்தை நிருபிப்பதற்காக பைபிள் வசனத்தை மாற்றக்கூடாது.

இனி என் பதிலைத் தருகிறேன் .

1. இறைவன் ஒருவனே: இறைவன் ஒருவனே என்பதை நிருபிப்பதற்கு பைபிளில் பல வசனங்கள் உள்ளது, ஆனால், நம் நண்பர் அவைகளை விட்டுவிட்டு, 1 தீமோத்தேயு 2:5ம் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டார். இந்த வசனத்தை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தன் விருப்பப்படி பொருள் கூறியுள்ளார். கிறிஸ்தவர்களும் மூன்று வித்தியாசமான கடவுள்களை வணங்குவதில்லை, ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள். ஒரே இறைவன் மூன்று விதங்களில் செயல்படுவதையே திரித்துவம் என்றுச் சொல்கிறோம். திரித்துவத்தை விளக்குவது இப்போதைக்கு இக்கட்டுரையின் நோக்கமல்ல.

திரித்துவத்தை பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும். An Explanation of the Trinity for Muslims
THE TRINITY - From Biblical Reason and from the Old Testament
Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims
The Trinity – More than 50 Articles

2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5) மாற்று மதவேதங்களின் வசனங்களை நாம் கட்டுரைகளில் பயன்படுத்தும் போது, அவைகளை அப்படியே மேற்கோள் காட்டவேண்டும், அதை மாற்றி நாம் எழுதக்கூடாது. இதை எல்லாரும் கவனித்தில் கொள்ளவேண்டும்.

2.1 பைபிள் வசனத்தை மாற்றிய நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள்: கலாம் ரசூல் அவர்களே நீங்கள் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அதை பைபிளில் உள்ளது போலவே அதை கட்டுரைகளில் எழுதவேண்டுமே தவிர, அதை மாற்றி எழுதவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதோ நீங்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5) ஆனால், உண்மையில் இந்த வசனம் கீழ் கண்டவாறு உள்ளது :
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

நீங்கள் "தேவன்" என்ற வார்த்தையை "அல்லாஹ்" என்று எழுதுகிறீர்கள் . 1. முதலாவது பைபிளில் இருக்கும் வசனத்தை அப்படியே மேற்கோள் காட்டுங்கள். பிறகு அதன் கீழே "தேவன்" என்பவரை முஸ்லீம்கள் "அல்லாஹ்" என்றுச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுங்கள். அல்லது, 2. தேவன் என்ற வார்த்தையின் பக்கத்தில் (அல்லாஹ்) என்று எழுதுங்கள். வசனத்தின் கீழே அடைப்பு குறிக்குள் உள்ள (அல்லாஹ்) என்ற வார்த்தையை எழுதியது நான் என்று எழுதுங்கள். மேலே சொன்ன இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள். இப்படி செய்தால், தான் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு, உங்கள் விருப்பப்படி சில வார்த்தைகளை எடுத்துவிடுகிறீர்கள், அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை எழுதுகிறீர்கள்.

உங்கள் குர்ஆனில் எவனாவது ஒருவன் "அல்லாஹ்" என்று வார்த்தை வரும் இடங்களில் "இயேசு" என்று எழுதி, குர்‍ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினால், நீங்கள் சும்மா இருப்பீர்களா? இல்லை அல்லவா. அதே போலத்தான் மற்றவர்களுக்கும். இஸ்லாம் அறிஞர்கள் செய்யும் ஒரு யுக்தி: நானும் பல தமிழ் முஸ்லீம் அறிஞர்களின் கட்டுரைகளையும் படித்துள்ளேன். எல்லாரும் சொல்லி வைத்தது போல, ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். அதாவது, தங்களுக்கு சாதமாக தோன்றும் பைபிள் வசனம் ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டியது, அதில் வரும் "தேவன்" (அ) "கர்த்தர்" என்ற வார்த்தையை இவர்கள் "அல்லாஹ்" என்று மாற்றுவது, அதை அப்படியே தங்கள் கட்டுரைகளில் எழுதுவது. "இன்னும் நன்றாக வசனம் புரியும் என்பதால், இந்த மாற்றத்தை நாங்கள் செய்துள்ளோம்" என்று ஒரு குறிப்பு கூட எழுதுவதில்லை. வேறு ஒரு வேதத்தை கையாளும்போது, அல்லது வேறு ஒரு ஆசிரியர் எழுதியதை தங்கள் கட்டுரைகளில் பயன்படுத்தும் போது, பின்பற்றவேண்டிய குறைந்தபட்ச வழிமுறைகளும் இவர்கள் செய்வதில்லை.

கலாம் ரசூல் அவர்களுக்கும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் கேள்வி :
உங்களுக்கு சாதமான வசனத்தில் வரும் "தேவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அல்லாஹ்" என்று எழுதினீர்கள். அப்படியானால், பைபிளில் "தேவன்" என்று வரும் எல்லா இடங்களிலும் "அல்லாஹ்" என்று எழுதி படித்துப்பார்ப்போமா? உதாரணத்திற்கு, யோவான் 3:16-17 ம் வசனங்களில் "தேவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அல்லாஹ்" என்று எழுதி படிப்போமா? அதை அப்படியே நம்புவோமா?

யோவான்: 3:16. (அல்லாஹ்), தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி (அல்லாஹ்) தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

மேலே உள்ளதை மறுபடியும் படித்துப்பாருங்கள், உலகம் இரட்சிக்கப்பட அல்லாஹ் இயேசுவை அனுப்பினாராம். உலக மக்கள் மீது அல்லா வைத்த அளவில்லாத அன்பை காட்டுவதற்கு இயேசுவை அல்லாஹ் அனுப்பினாராம். இப்படி எழுதினால், குர்‍ஆனின் அஸ்திபாரமே ஆட்டம் காணும்படி உள்ளதல்லவா? எனவே, தான் நான் சொல்கிறேன், இனி இப்படி செய்யாதீர்கள். பைபிளின் தேவனை நீங்கள் அல்லா என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படலாம், ஆனால், அல்லாவை எங்கள் தேவனுக்கு சமமாக அல்லது இருவரும் ஒருவராக கருதினால், அது யேகோவா தேவனுக்கு அவமானமாகும். இருவரும் ஒருவரல்ல. பைபிளின் தேவனும் அல்லாவும் ஒன்றல்ல என்பதை அறிய இந்த (IS ALLAH THE GOD OF BIBLE?) கட்டுரையை படிக்கவும்.

2.2 "இஸ்ரவேலர்களுக்கும்" என்ற வார்த்தையை நிழைத்த நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள்: இஸ்லாம் என்னும் கண்ணாடியை போட்டுக்கொண்டு பைபிளை படித்தால், இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு பைபிளை படித்தால், இப்படித் தான் "பொதுவாக மனுஷர்கள்" என்று குறிப்பிட்டு இருப்பதை, இவர்கள் "இஸ்ரவேல் மக்களைத் தான்" இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று தவறாக புரிந்துக்கொள்கிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கல்வி தள சகோதரரும் புரிந்துக்கொண்டுள்ளார். அவர் மேற்கோள் காட்டிய வசனத்தைப் பாருங்கள், "மனுஷருக்கும்" என்ற வார்த்தை தான் பைபிளில் வருகிறது, அதன் பக்கத்திலே இவர் "இஸ்ரவேலர்களுக்கும்" என்று எழுதியுள்ளார்.

கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம்:
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)


ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே . இப்படி வசனத்தின் ஒரு வார்த்தைக்கு வேறு பொருள் கூற வேண்டுமானால், அதன் பக்கத்தில் அடைப்பு குறியிட்டு"( )" அதன் உள்ளே அவ்வார்த்தையை இடலாம். மட்டுமல்ல, அவ்வசனத்தின் கீழே "அடைப்பிற்குள் இருக்கும் வார்த்தைகள் நான் எழுதியது என்று - All formats or Bracketed Text are mine" குறிப்பிடவேண்டும். இதை இவர் செய்யாமல் விட்டுவிட்டார்.

2.3 இவ்வசனத்தில் வரும் "மனுஷருக்கும்" என்ற வார்த்தை "இஸ்ரவேலர்களை மட்டும் குறிக்காது" என்பதற்கான ஆதாரங்கள்: இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தூதராக வந்தார் என்பதை நம்பும் இவர், "மனுஷருக்கும்" என்று இவ்வசனம் குறிப்பிடுவது, இஸ்ரவேலர்களை என்று தவறான புரிந்துக்கொண்டுள்ளார்.

இவரின் புரிந்துக்கொள்ளுதல் தவறானது என்பதற்கான ஆதாரங்கள்:
1. இக்கடிதத்தை எழுதியர் "அப்போஸ்தலர் பவுல் ஆவார்". இவர் இஸ்ரவேல் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர் அல்ல, இவர் இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு(Other Nations – புறஜாதிகளுக்கு) இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர். இந்த விவரத்தை இதே அதிகாரத்தில் 7ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
1 தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

2. "எல்லா மனுஷருக்கும்" என்ற பொருள் வரும் வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது: கலாம் ரசூல் அவர்கள் குறிப்பிட்ட 5ம் வசனத்தின் முந்தைய வசனங்களையும் பிந்தைய வசனங்களையும் நாம் பார்க்கும் போது:
1 தீமோத்தேயு: 2:1 ல் --> எல்லா மனுஷருக்காகவும் 1 தீமோத்தேயு: 2:1 ல் --> அதிகாரமுள்ள யாவருக்காகவும் 1 தீமோத்தேயு: 2:4 ல் --> எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் 1 தீமோத்தேயு: 2:5 ல் --> மனுஷருக்கும் 1 தீமோத்தேயு: 2:6 ல் --> எல்லாரையும் போன்ற வார்த்தைகள் வருவதை காணலாம். இவைகள் பவுல் ஊழியம் செய்த மக்களை மட்டுமல்ல, யூதர்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் குறிக்கும்.

1 தீமோத்தேயு: 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

பவுல் தான் ஸ்தாபித்த சபைகளை பார்த்துக்கொள்ளும்படி தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறுகிறார், எப்படி போதகர்களை நியமிப்பது, எப்படி எல்லாருக்காக ஜெபிப்பது போன்ற அறிவுரைகளை தருகிறார். இவர்கள ஊழியம் செய்த புறஜாதி நாடுகளில் ரோமர் அரசர்களினால், அதிகாரிகளால் கிறிஸ்தவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். சிலர் தங்களுக்காக தங்கள் நண்பர்களுக்காக மட்டுமே ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள், அப்படி செய்வது கிறிஸ்தவத்திற்கு ஏற்றது அல்ல, எல்லாருக்காகவும் நாம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்று இவ்வசனங்கள் சொல்கின்றன‌. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்து கின்றவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளவேண்டும் என்று பைபிள் சொல்கிறது. எல்லாரும் தேவனை அறியவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், இஸ்ரவேலர்களை மட்டுமல்ல என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது.

கடைசியாக, இவ்வசனங்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் குறிக்குமே தவிர, இஸ்லாம்கல்வி தள கட்டுரை சொல்வது போல "இஸ்ரவேலர்களை" மட்டுமே குறிக்காது.
இந்த அதிகாரம் அல்லது வசனத்தைப் பற்றி இன்னும் கேள்விகள் இருந்தால், எனக்கு மெயில் அனுப்பவும், அதற்கு நான் பதில் தருகிறேன்.

இப்போதைக்கு, நான் மற்றவிவரங்களுக்கு கடந்துப் போகிறேன்.

2.4 "மத்தியஸ்தர்" என்ற வார்த்தை "தூதராக" எப்படி மாறியது: நம்முடைய தமிழ் நாட்டு முஸ்லீம்கள் புத்திசாலிகள். தாங்கள் குறிப்பிட நினைத்த வசனத்தில் " மத்தியஸ்தர்" என்ற வார்த்தையை அப்படியே பயன்படுத்தினால், தாங்கள் சொல்லவந்த விவரத்தை சரியாகச் சொல்லமுடியாது என்பதால், அந்த வார்த்தை இருந்த இடத்தில் "தூதர் " என்று எழுதிவிட்டார்கள். ஏனென்றால், தூதர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், ஆனால், மத்தியஸ்தர் என்றால் ஒருவர் தான், அதிலும் பைபிள் இயேசுவையே சொல்கிறது. எனவே, இதனை மிகவும் அழகாக "தூதர் " என்று மாற்றி எழுதிவிட்டார் நம் அருமை நண்பர் அவர்கள்.

கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)


ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே

ஆங்கிலத்தில் "Mediator" என்ற வார்த்தை அல்லது தமிழில் "மத்தியஸ்தர்" என்ற வார்த்தை எப்படி "தூதர் " என்று மாறியது.

இந்த கட்டுரையின் ஆசிரியர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம் :

1. இயேசு ஒரு தூதர் தான், அவர் இறைவன் இல்லை என்று காட்ட முடிவு செய்துள்ளார்.
2. இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராக வந்தார் என்பதை காட்ட முடிவு செய்துள்ளார்.
3. அதனால், தான் "மனுஷருக்கும்" என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, இவராகவே "இஸ்ரவேலர்கள்" என்று மாற்றிவிட்டார்.
4. மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு பதிலாக "தூதர்" என்று மாற்றிவிட்டார் .

ஆங்கில மொழி பெயர்ப்பிலும் கூட, மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு "Mediator" என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் எங்கிருந்து இதை மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், தமிழ் மொழிபெயர்ப்பு பைபிளில் 6ம் வசனத்தில் வரும் வார்த்தையை எடுத்து, 5ம் வசனத்தோடு இவர் சேர்த்துவிட்டார். அதாவது "எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த " என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, அதன் பிறகு உள்ள " அம்மனிதர் இயேசு கிருஸ்த்து" என்று எழுதிவிட்டார்.

1 தீமோத்தேயு 2:6ம் வசனம் முழுவதுமாக எழுதினால், இவர் சொல்லவந்த நோக்கமே கெட்டுவிடும், அதாவது, 6ம் வசனம் " எல்லாரையும் " மீட்பதற்காக இயேசு வந்தார் என்று சொல்கிறது. எனவே, எல்லாரையும் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு, அதன் கடைசி பாகத்தை மட்டும் பயன்படுத்தியுள்ளார். எவ்வளவு திருத்தல் வேலையை செய்துள்ளார்கள் என்று இப்போது புரிகிறதா?

கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :

அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)

ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .

1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

கடைசியாக நான் இஸ்லாமிய அறிஞர்களிடம் வேண்டிக்கொள்வது:

1. ஒரு வசனத்தை பைபிளிலிருந்து எடுத்து எழுதும் போது, அதை அப்படியே மாற்றாமல் எழுதுங்கள்.
2. அதன் பிறகு அவ்வசனத்திற்கு உங்கள் விளக்கத்தை அதன் கீழே எத்தனை பக்கங்களாவது எழுதுங்கள். அவ்வசனத்தில் மட்டும் கைவைக்கவேண்டாம்.
3. தேவைப்படுமானால், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து வசனத்தை காட்டி, அதிகபடியான விளக்கமளியுங்கள்.
4. இன்னும் அதிக விளக்கமளிக்க விரும்பினால், பைபிளின் மூல மொழி எபிரேய, கிரேக்க மொழிகளிலிருந்து விளக்கமளியுங்கள்.
5. தற்போது, ஆங்கிலத்தில் இருக்கின்ற பல மொழிபெயர்ப்புக்களை பயன்படுத்துங்கள், சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பை நீங்களாகவே உருவாக்காதீர்கள்.
6. ஒரு வசனத்தின் பாதியை தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்து, மீதி பாதியை ஆங்கிலத்திலிருந்து எடுத்து ஒன்றாக சேர்த்து எழுதவேண்டாம்.
7. நான் குறிப்பிட்டது வசனத்தை அல்ல, அதன் பொருளைத் தான் என்றுச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது மத்தேயு 15:9க்கு வேண்டுமானால் பொருந்தும்.
8.நீங்கள் முன்வைத்த வசனம் 1 தீமோத்தேயு 2:5, நீங்கள் சொல்லுகின்ற பொருளை தருவதில்லை, அது எல்லா மக்களையும் குறிப்பிடுகிறது, இஸ்ரவேலர்களை மட்டும் அல்ல.
9. நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்ற இயேசுவின் கூற்றுப் படி தான் இவ்வசனம் அவரை "மத்தியஸ்தர்" என்றுச் சொல்கிறது. தேவன் பல தூதர்களை அனுப்பினார், ஆனால், ஒருவர் தான் "தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர்". அவர் தான் இயேசு கிறிஸ்து.
10. பெரும்பாலும் முஸ்லீம்கள் இப்போதுள்ள நற்செய்தி நூல்களை இஞ்ஜில் என்று நம்புவதில்லை, அதிலும், பவுல் எழுதிய கடிதங்களை மொத்தமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நீர் 1 தீமோத்தேயு கடிதத்தை "இஞ்ஜில்" என்று சொல்கிறீர், உண்மையில் இது இஞ்ஜில் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

கலாம் ரசூல் அவர்கள்: அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது : அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)

இந்த வசனத்தைப் பற்றியோ அல்லது இக்கட்டுரைப் பற்றியோ சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், எனக்கு தெரிவிக்கவும், முடிந்த அளவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்வேன். நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 15:9ம் வசனத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

Email: isa.koran@gmail.com Or Isa_koran@yahoo.co.in
Isa Koran Home Page
Back - Islam Kalvi Rebuttals Index

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/ik1thimothy2-5.htm

December 13, 2007

இஸ்லாம் தளத்திற்கு விளக்கம் ‍எண் -1. மத்தேயு 15:9: ஈஸா குர்‍ஆன் பதில்

இஸ்லாம் தளங்களில் கிறிஸ்தவத்தை தாக்கி எழுதுவதே வேலையாக போய் விட்டது. அதுவும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை எடுத்து அவர்களின் கட்டுரைகளுக்கு அது ஒத்து போவது போல காட்டியுள்ளனர். இதைப்படிப்பவர்களும் ஓ இப்படியா வேதாகமத்தில் உள்ளது என்று தப்பாக நினைக்க வாய்ப்புள்ளது.

இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவேன்றால் பரிசுத்த வேதாகமத்திலிருந்து வசனத்தை எடுத்து எழுதும் போது அதில் உள்ளது உள்ளப்படியே எடுத்து எழுதால் தங்கள் சொந்த இஷ்டத்துக்கு வசனத்தை மாற்றி எழுதுவதும் முழுவதும் படிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விளக்கம் சொல்வதுமாக உள்ளனர்.

இப்படிதான் ஒருவசனத்தை எடுத்து அதை தங்கள் சொந்த இஷ்டத்திற்கு விளக்கம் சொல்லி கடைசியில் வசமாக மாட்டிகொண்டனர். கீழ்கண்ட கட்டுரையில் விரிவாக அதை காணலாம். இவர்களுக்கு தக்க பதிலளித்துள்ள உமர் அவர்களுக்கு நன்றிகளும் பார‌ட்டுக‌ளும். பார்ப்போம் இத‌ற்கு என்ன‌ சொல்ல‌போகிறார்க‌ள் என்று.

இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்
Source : http://isakoran.blogspot.com/

(குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

இஸ்லாம் கல்வி தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும் " என்ற கட்டுரை பதியப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இயேசு சொல்லாத ஒரு விவரம் அவர் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாம் கல்வி எழுதியது: ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9)

Source : http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm

இஸ்லாம் கல்வி தளத்திற்கு ஈஸா குர்‍ஆனின் முந்தைய பதிலை இங்கு ( இஸ்லாம்கல்வி தளமும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் ) படிக்கலாம்.

ஈஸா குர்‍ஆன் பதில்:
"இயேசு தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னாராம், ஆனாலும் மக்கள் அவரையே வணங்கினார்களாம்" இது தான் இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்லும் செய்தி. இதற்கு ஆதாரமாக இக்கட்டுரை மேற்கோள் காட்டும் வசனம் மத்தேயு 15:9 ஆகும். இஸ்லாம்கல்வி சொல்லும் தகவல் தவறானது என்பதையும், இவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் சொல்லும் செய்தி வேறு என்பதையும் இந்த பதிலில் நாம் பார்க்கலாம்.

1. மேற்கோள் காட்டப்பட்ட வசனமும், அதன் பொருளும்:

இஸ்லாம் கல்வி மேற்கோள் காட்டிய மத்தேயு 15:9 வசனத்தை முதலாவது படிப்போம்.
மத்தேயு: 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொன்னார் என்று இஸ்லாம் கல்வி தளம் சொல்கிறது. முதலாவது இக்கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் இந்த மத்தேயு 15ம் அதிகாரத்தை படித்தாரா இல்லையா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது . இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, மனிதர்களின் சடங்குகளை குப்பையில் போடுங்கள் என்றுச் சொல்கிறார். முதலில் இறைவனின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றுச் சொல்கிறார்.
மனிதர்களின் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தால், உங்கள் பக்தி, தொழுகை எல்லாம் வீண் என்றுச் சொல்கிறார் .

2. இவ்வசனம் சொல்லப்பட்ட சூழ் நிலை:

இஸ்லாம் கல்வி கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் மத்தேயு 15ம் அதிகாரம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை ( 1- 9) ஒரு முறை படித்து இருந்தால், இப்படியெல்லாம் அவர் எழுதியிருக்கமாட்டார்.

மத்தேயு 15:1-9 வரை சொல்லப்பட்ட செய்தி:
1. இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று யூத குருக்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஏன் சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை (சடங்குகளை) மீறி நடக்கிறார்கள் என்று இயேசுவிடமே அவர்களைப் பற்றி குற்றம் சாட்டுகிறார்கள். 2. இயேசு அதற்கு பதிலாக, உங்கள் சடங்குகளுக்காக ஏன் தேவனின் கட்டளைகளை நீங்கள் மீறி நடக்கிறீர்கள்? எது முக்கியம் மனித சடங்குகளா? தேவனின் கட்டளைகளா? என்று கேள்வி கேட்கிறார். 3. இப்படி இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல், மனித சடங்குகளுக்கு (கை கழுவுதல்) முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் இறைவனுக்காக செய்யும் தொழுகையினால் ஒரு நன்மையும் இல்லை, அது வீண் என்று இயேசு சொன்னார். 4. நீங்கள் இறைவனை தொழும் போது உங்கள் வாய் (உதடுகள்) மட்டும் தான் தொழுகிறதே தவிர உங்கள் இதயம் இறைவனுக்கு தூரமாக இருக்கிறது என்றுச் இயேசுச் சொன்னார்.

இதை படிக்கும் சகோதரரே, நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட மத்தேயு 15:1-14 வசனங்களை படித்துவிட்டு, நான் மேலே சொன்னது போல இவ்வசனங்கள் சொல்கிறதா, அல்லது கலாம் ரசூல் அவர்கள் சொல்வது போல "இயேசு தன்னை வணங்காதீர்கள்" என்று சொன்னதாக பொருள் வருகிறதா என்று நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். [இதை தெரிந்துக்கொள்ள பைபிள் கல்லூரியின் பட்டமோ, குர்‍ஆன் படிப்போ தேவையில்லை. கீழுள்ள வசனங்களை மேலோட்டமாக படித்தாலே போதும்]

மத்தேயு: 15:

  1. அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து,
  2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள் .
  3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
  4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
  5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,
  6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
  7. மாயக்காரரே, உங்களைக்குறித்து,
  8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.
  9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
  10. பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் கேட்டு உணருங்கள்.
  11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
  12. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள்.
  13. அவர் பிரதியுத்தரமாக, என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
  14. அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடறாயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

3. யூதர்களின் விபரீத சடங்குகள்:

இறைவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்யும் போது, மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று பழைய எற்பாட்டில் பல கட்டளைகள் உள்ளது. ஆனால், யூதர்கள் சொந்தமாக சில சடங்குகளை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒன்று தான் " சாப்பிடும் முன்பு, பின்பு கைகளை கழுவுதல் " என்பது. இப்படி கை கழுவாதவர்கள் பெரிய பாவம் செய்ததாகவும், அவர்கள் குற்றம் சுமத்தினர். இதைத் தான் இயேசு எதிர்த்தார். அதாவது, சுத்தம் முக்கியம் ஆனால், ஒருவன் கை கழுவாததற்காக அவனுக்கு தண்டனை அளிப்பது என்பது சரியானது அல்ல என்று இயேசு சொன்னார்.

கைகழுவுதல் பற்றிய யூத சடங்குகள் :

  1. கைகழுவாமல் ஒருவன் சாப்பிட்டால், அவன் பன்றியின் கறியை சாப்பிட்ட குற்றத்திற்கு ஏற்ற குற்றம் செய்பவன் ஆவான்.
  2. கைகழுவாமல் சாப்பிடுபவன் இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் தண்டிக்கப்படுவான்.
  3. கைகழுவாமல் சாப்பிடுபவன் மரண தண்டனைக்கு உரியவன் .
  4. கைகழுவாமல் சாப்பிடுபவன் ஏழ்மையில் வாழ்வான், அவன் விபச்சாரம் செய்த குற்றம் செய்ததற்கு சமமாவான்.
  5. கைகழுவாமல் சாப்பிடுவதை விட 4 மைல்கள் நடந்துப்போய் கைகழுவி வருவது தான் சிறந்தது.
  6. சாப்பிட்ட பிறகு கைகளை கழுவாதவன், கொலை குற்றம் செய்தவனாவான் .

"The legal washing of the hands before eating was especially sacred to the Rabbinist; not to do so was a crime as great as to eat the flesh of swine. 'He who neglects hand-washing,' says the book Sohar, 'deserves to be punished here and hereafter.' 'He is to be destroyed out of the world, for in hand-washing is contained the secret of the ten commandments.' 'He is guilty of death.' 'Three sins bring poverty after them,' says the Mishnah, 'and to slight hand-washing is one.' 'He who eats bread without hand-washing,' says Rabbi Jose, 'is as if he went in to a harlot.' The later Schulchan Aruch, enumerates twenty-six rules for this rite in the morning alone. It is better to go four miles to water than to incur guilt by neglecting hand-washing,' says the Talmud. 'He who does not wash his hands after eating,' it says, 'is as bad as a murderer.' The devil Schibta sits on unwashed hands and on the bread. It was a special mark of the Pharisees that 'they ate their daily bread with due purification,' and to neglect doing so was to be despised as unclean. . . ." (The Mortal Messiah: From Bethlehem to Calvary, 2: 400.) Source: http://www.gospeldoctrine.com/NewTestament/Matt15.htm


யூதர்களின் இந்த கைகழுவுதல் சடங்கைப் பற்றி "தானியேல் ரெஃபர‌ன்ஸ் வேதாகமம்" பக்கம் 1021 இப்படியாகச் சொல்கிறது : "…குன்றுபோன்ற அந்தப் பழக்கத் தொகுப்புக்களில் ஒன்று தான் கழுவுதல் சடங்குகள். இந்த கழுவுதல், உணவு உண்ணும் முன்பு மட்டும் போதாது. சந்தையிலிருந்து வரும்போதும் கழுவவேண்டும். கழுவுதல் சட்டங்கள் மனிதருக்கு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களும் கோப்பைகளும் செப்புப்பாத்திரங்களும் மேசைகளும் கழுவப்படவேண்டும். கழுவுதலுக்கு சில முறைகள் உண்டு, அதற்காகப்பயன்படுத்தும் நீருக்கு அளவு உண்டு கழுவும் போது எத்தனை பாத்திரங்களப் பயன்படுத்தவேண்டும் எத்தனை தடவை கழுவவேண்டும். கழுவும் போது எத்தனை தடவை தண்ணீரை மாற்றவேண்டும், என்பதற்கெல்லாம் சட்டங்கள் உண்டு. இந்தக் குப்பைச் சடங்குகளை இயேசு செய்யவில்லை என்பதே பரிசேயர் மற்றும் சதுசேயரின் குற்றச்சாட்டு. கைகழுவுவது நல்லது தான், அதற்காக செய்யாதவனுக்கு தண்டனை கொடுப்பது என்பது, காட்டுமிராண்டித் தனம் என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட எண்ணங்களை யூத ஆசாரியர்கள் உடையவர்களாக இருந்ததினால், தான் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதை மிகப்பெரிய குற்றமாக வந்து அவரிடம் முறையிடுகின்றனர். இந்த சடங்குகளை செய்யும்படி, இதற்கு இவ்வித தண்டனை கொடுக்கும்படி தேவன் சொல்லவில்லை. இறைவன் வெளிப்புற சுத்தத்தை மட்டும் பார்க்கிறவர் இல்லை. அவர் முதலாவது, நம் உள்ளம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறார். இப்படி வெளிப்புற சுத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை மீறிவிட்டீர்களே என்று இயேசு வேதனைப்படுகிறார்.

பெற்றோரை உதவி செய்யாமல் தடுத்த யூத சடங்குகள்(கொர்பான் - CORBAN):

தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் ஒரு கட்டளை " உன் தாயையும் தந்தையையும் கனம் செய்வாயாக " என்பது. அப்படி கனம்செய்யாமல், பெற்றோரை நிந்திக்கிறவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார். ஆனால், யூதர்களின் ஒரு குறிப்பிட்ட சடங்கு, இக்கட்டளையை மனிதன் மீறும் படி செய்துள்ளது என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். (மற்றும் பார்க்க மாற்கு 7:11ம் வசனம்)


மத்தேயு: 15:

  • 3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
  • 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
  • 5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,
  • 6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.


யூதர்களின் ஒரு சடங்கு இருந்தது, அது என்னவென்றால், ஒரு மனிதன், தன் சொத்தை எல்லாம், தேவாலயத்திற்கு என்று நேர்ந்துக்கொள்ளவேண்டுமாம், ஆனால், தேவாலயத்திற்கு அதை கொடுக்கமாட்டான், தான் மற்றும் தன் குடும்பம் (மனைவி பிள்ளைகள்) மட்டும் அந்த சொத்தை அனுபவிப்பார்கள். பெற்றோர்கள் அந்த சொத்தைக்கொண்டு தங்களை போஷிக்கவேண்டும் என்று தன் பிள்ளைகளிடம் கேட்டால், " இல்லை இல்லை, இந்த சொத்து தேவாலயத்திற்கு நேர்ந்துக்கொள்ளப்பட்டது, உங்களுக்கு தரக்கூடாது" என்றுச் சொல்லி, தங்கள் பெற்றோரை போஷிக்காமல் விட்டுவிடுவார்கள் [1][2][3].

இந்த சடங்கை பற்றித் தான் இயேசு அந்த ஆசாரியர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். உங்கள் சடங்குகளினால், பெற்றோருக்கு தீமை செய்கிறீர்களே என்று கேட்கிறார். இதனால், தான் இயேசு பழைய ஏற்பாட்டு வசனம் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறார். இப்படியெல்லாம், இறைவனுக்கு விரோதமான சடங்குகளை பின்பற்றிக்கொண்டு நீங்கள் தொழுதுக்கொண்டால், உங்கள் வாய் அல்லது உதடுமட்டும் தான் இறைவனை தொழுதுக்கொள்ளும், உங்கள் இதயமோ அவரது கட்டளையை பின்பற்றாததினால் தூரமாக உள்ளது. இப்படிப்பட்ட "தொழுகை வீண்" என்றுச் சொல்கிறார்.

4. குருடருக்கு வழி காட்டும் குருடர்கள்:

இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரை சொல்லும் விவரம் தவறானது எனபதை அறிய, மத்தேயு 15:12-14ம் வசனங்களைப் படித்தால் தெரிந்துவிடும்.

இயேசு ஆசாரியர்களின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் பற்றி கடிந்துக்கொண்டதை இயேசுவின் சீடர்கள் கண்டு, உம்முடைய இந்த வார்த்தையினால், அவர்கள் "இடறல்-கோபம்" அடைந்தார்கள் என்று உமக்கு தெரியுமா என்று கேட்கிறார்கள்.ஏன் அவர்கள் இடறல் அடைந்தார்கள் என்று கேள்வி எழுப்பினால்? இதற்கு பதில், "இயேசு அவர்களின் பாரம்பரிய சடங்குகள் தவறானது " என்று சொன்னார் என்பதினால் தான் என்று புரியும்.


தன்னை வணங்கவேண்டாம் என்று ஆசாரியர்களிடம் ஏன் இயேசு சொல்லப்போகிறார்? அவர்கள் தான் ஏற்கனவே அவரை தேவகுமாரன் என்று நம்பவில்லையே?அவர்களிடம் எப்படி என்னை வணங்கவேண்டாம் என்று இயேசு சொல்லப்போகிறார்?
[ஏதாவது விவரம் மனதில் உதிக்கிறதா, கலாம் ரசூல் அவர்களே. முஸ்லீம்களிடம் சென்று, "நீங்கள் இயேசுவை வணங்காதீர்கள்" என்று நான் சொன்னால், எனக்கு என்ன பதில் கிடைக்கும்? " நாங்கள் தான் அவர் நபி என்று மட்டும் சொல்கிறோமே, பின் எப்படி எங்களிடம் வணங்கவேண்டாம் என்றுச் சொல்கிறாய் நீ? என்று கேட்கமாட்டார்களா?" அதே போலத்தான், யூத ஆசாரியர்களும் இயேசுவை தேவகுமாரன் என்று நம்பவில்லை. ]


அதற்கு இயேசு சொல்கிறார், அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள், அவர்களை (இப்படிப்பட்ட சடங்குகளை) பின்பற்றுகிறர்கள், குழியிலே விழுவார்கள் என்றுச் சொல்கிறார். ஏனென்றால், சடங்குகள் தான் முக்கியம் என்று சொல்கிறவர்கள் " குருடர்கள்" என்று இயேசு சொல்கிறார்.

எனவே, கலாம் ரசூல் அவர்கள் சொல்லும் விவரம் தவறானது, இயேசு தன்னை வணங்காதீர்கள் என்று சொல்லவில்லை என்பது இப்போது எல்லாருக்கும்(கலாம் ரசூல் அவர்களுக்கும்) புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

5. கலாம் ரசூல் அவர்களின் தவறான புரிந்துக்கொள்ளுதல்:

இஸ்லாம் கல்வி தளத்திற்கும், கட்டுரையின் ஆசிரியர் கலாம் ரசூல் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான். ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, தலையும் புரியாமல், காலும் புரியாமல் புரிந்துக்கொண்டு, உங்கள் விருப்பப்படி வியாக்கினம் செய்யாதீர்கள். இயேசு தன்னை வணங்காதீர்கள் என்றுச் சொல்லவில்லை வெளிப்புறம் சுத்தம் மட்டும் இறைவனை தொழுதுகொள்வதற்கு போதுமானது இல்லை. நம் உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லவே அவர் அவ்விதம் சொன்னார். இந்த வசனத்திற்கு நான் அளித்த விளக்கம் தவறாக இருக்கும் என்று நீங்கள் (மூஸ்லீம்கள், முஸ்லீம் அறிஞர்கள்) நினைத்தால், இவ்வசனங்களுக்கு உங்கள் விளக்கத்தை எனக்கு அனுப்புங்கள். நான் மேலும் விவரிக்கிறேன்.

6. இஸ்லாமில் சடங்குகள்:

யூதர்களைப் போல இஸ்லாமிலும் பல சடங்குகள் உண்டு. அல்லாவை தொழுதுக்கொள்ள போவதற்கு முன்பு, கைகளை கழுவுதல், கால்களை கழுவுதல், மூக்கை கழுவுதல், காதுகளை கழுவுதல், அதுவும் இத்தனைமுறை கழுவவேண்டும், இப்படி கழுவவேண்டும் என்று இன்னும் பல சடங்குகள் முஸ்லீம்கள் பின்பற்றுகின்றனர். நாமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விரலை ஆட்டவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். சிலர் அப்படி அந்த விரலை ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த விரல் சடங்கு போல, இன்னும் பல சடங்குகளினால் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள், சண்டைகள் போன்ற பல நிகழ்வுகள் நடக்கிறதை பார்க்க, உலகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டாம், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய சொற்பொழிவுகளை பார்த்தாலே போதும் எல்லாரும் புரியும்.

முடிவுரை:

சுத்தமாக இருப்பது தவறல்ல. வெளிப்புறம் சுத்தமாக இருப்பது மட்டும் போதும் என்றுச் சொல்லி, இறைவனின் கட்டளைகளை பின்பற்றாமல் போவது தான் தவறு. இதைத் தான் இயேசுவும் யூதர்களிடம் சொல்கிறார். இதைத் தான் இயேசு சொன்னார், கைகழுவாமல் சாப்பிட்டால், அது வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி கழிவாக சென்றுவிடும், ஆனால், இதயத்திலிருந்து வரும் கெட்ட சிந்தனைகளே மனிதனை இறைவனிடமிருந்து வேறுபடுத்தும். எனவே, முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார்.

அருமையான இஸ்லாமிய அறிஞர்களுக்கு: நீங்கள் பைபிளை நன்றாக படித்து, நீங்கள் குறிப்பிட விரும்பும் வசனத்தின் முந்தைய வசனங்களை, பிந்தைய வசனங்களை படித்து தெரிந்துக்கொண்டு, பிறகு அவற்றை உங்கள் கட்டுரைகளில் பதிக்க முயற்சி செய்யுங்கள். இயேசு சொன்னது போல, இறைவனை ஆவியோடும், உண்மையும் தொழுதுக் கொள்ளுங்கள். உடல் சுத்திகரிப்பு முக்கியம், அதை விட உள்ளம் சுத்திகரிப்பு மிக மிக முக்கியம். அப்படி இல்லையானால், நம்முடைய வாய் மட்டும் தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கும், இருதயமோ.... தூரமாக..... இருக்கும். நம்முடைய தொழுகையும், வணக்க வழிபாடுகளும், ஆராதனைகளும் "வீண்" என்று இயேசு சொல்லியுள்ளார்.


ஏசாயா: 29:

  • 13. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
  • 14. ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 15. தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து, நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!

பின் குறிப்புகள்:

[1] BIBLE DICTIONARY : CORBAN = given to God. The word describes anything dedicated to God, and therefore not available for ordinary uses. The utterance of it was held to constitute a binding vow, and the fulfillment of a vow was regarded by the Pharisees as of deeper obligation than the duty even to parents. See Matt. 15: 5 and Mark 7: 11, where it appears that the Pharisees misused the opportunity of dedicating their material possessions to God, in order to avoid responsibility to care for their parents. Source : http://scriptures.lds.org/bd/c/91

[2]Christ's devastating counter Jesus raised the issue of "corban," a transliteration of a Hebrew word which means "gift," but carries the connotation of a vow. Once a person designated something corban, it became the property of God and could not be restored to secular use, although it was retained by the owner until the time of his death. In this instance, the corban refers to a Pharisaic practice of dedicating to the temple assets which might have gone to support one's elderly parents. This way they got "credit" for making a big contribution to the Temple treasury (Mt. 6:2) but continued their use of the resource (as a building for their business, for example). Once he had designated money or property corban, a Pharisee could not help his parents with it even if they became desperately poor, although using it himself. Thus, Jesus accused them of violating the fifth commandment for the sake of their tradition. Source: http://www.tidings.org/studies/legalism0999.htm

[3] Corban: A Hebrew word adopted into the Greek of the New Testament and left untranslated. It occurs only once (Mar 7:11). It means a gift or offering consecrated to God. Anything over which this word was once pronounced was irrevocably dedicated to the temple. Land, however, so dedicated might be redeemed before the year of jubilee (Lev 27:16). Our Lord condemns the Pharisees for their false doctrine, inasmuch as by their traditions they had destroyed the commandment which requires children to honour their father and mother, teaching them to find excuse from helping their parents by the device of pronouncing "Corban" over their goods, thus reserving them to their own selfish use.

Source: http://www.sacred-texts.com/bib/ebd/ebd089.htm

Email: isa.koran@gmail.com Or Isa_koran@yahoo.co.in

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/ikmatthew15-9.htm
Source : http://isakoran.blogspot.com/

December 11, 2007

ஒரு தீவிர முஸ்லீமை இயேசுகிறிஸ்து சந்தித்தார்

ஒரு தீவிரமான இஸ்லாமிய பிண்ணணியில் இருந்த முகமது சினிராஜ் அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை கண்டு கொண்ட விதத்தை பற்றி நம்மோடு பகிந்து கொள்ளுகிறார் .அதை நாம் வாசிப்போம்.
இந்தக்கட்டுரை சகோதரர் பால் முகமது அவர்களின் அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடபடுகிறது,மிகச்சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியாடு.கட்டுரையின் மையக்கருத்து சரியாகவே உள்ளது

http://unmaiadiyann.blogspot.com/2007/12/blog-post_3436.html[/url]

இந்தக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க http://salemvoice.org/ciniraj.html

ஒரு தீவிர முஸ்லீமை இயேசுகிறிஸ்து சந்தித்தார்
(திரு.சினிராஜ் முகமதுவின் (பால் முகமது) சாட்சி


என்னுடைய பின்ணணி
http://d15304262.w35.websuvidha.in/images/cinirajfamily2.jpg

தென் இநதியாவின் ஒரு நல்ல உயர்ந்த இஸ்லாமியக் குடுபத்தில் பிறந்து வளர்ந்தேன்.என்னுடைய தகப்பனார் "காசிம் பிள்ளை லப்பா" ஒரு ஓய்வு பெற்ற பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இஸ்லாமிய அறிஞராயுமிருந்தார்.என் அம்மா பாத்திமா பீவி ஒரு இல்லத்தலைவியாய் இருந்தார்.வழக்கத்தின் படி எங்கள் குடும்பன் " லப்பா குடும்பம்" என்று அழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய ஆசாரியக்குடும்பம்.
எங்கள் சமுதாயத்தில் லப்பாக்கள் ஆசாரியர்களைப் போல உயர்ந்தவர்கள்.

என்னுடைய குழந்தை பருவத்திலேயே நான் அரபி மொழியையும்(என் தாய் மொழியாக இல்லாவிட்டாலும் ) குரானையும் கற்றுக்கொண்டேன்.நான் குரானை பற்றிய புத்தகங்களை கூட எழுதி அச்சிட்டு இருக்கிறேன். ஆனால் பல வருடங்களுக்கு முன்பாக நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஆண்டவரும்,இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபைக்குள் வந்தேன்.

இயேசுகிறிஸ்து யார் என்பதைக்குறித்து விளக்கப்பட்டிருந்த கைப்பிரதிகளை சில வாலிபர்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு முஸ்லீமாக இருந்த நான் அவர்கள் செயலுக்கு எதிர்பாளனாக இருந்தேன். அவர்களை மிரட்டுவதும் சிலநேரங்களில் சரீரபிரகாரமாகவும் , மனதளவிலும் அவர்களுக்கு வேதனை கொடுத்து வந்தேன்.ஒரு இளைஞனாக ,என்னுடைய பார்வைக்கு சரியானவனாக இருந்த எனக்கு அவர்களை அவமானப்படுத்துவதும் ,காயப்படுத்துவதும் தான் சரி என்ற எண்ணம் இருந்தது .

இயேசு என்னுடைய பாவங்களை எடுத்துப்போட்டார்

http://d15304262.w35.websuvidha.in/images/GCIC3.jpg

ஒரு துண்டு கைப்பிரதி ;ஒரு நாள் என்னுடைய நோட்டுபுத்தகத்தில் ஒரு துண்டு கைபிரதி இருப்பதைக்கண்டேன் .அது எப்படி என் புத்தகத்தில் வந்த்து என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது .நான் அதை குப்பைத்தொட்டியில் போடப்போகும்போது என் கண்கள் இந்த வார்த்தையை கவனித்தது." பாவத்தின் சம்பளம் மரணம்,ஆனால் தேவனுடைய கிருபை வரமோ கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் நித்திய ஜீவன்"(ரோமர் 6;23).இந்த வார்த்தைகள் ஏதோ நெருடலை என் உள்ளத்துக்குள் ஏற்படுதியதை உணரமுடிந்தது. தொடர்ந்து அந்த வார்த்தையை வாசித்தேன் ."இந்த வார்த்தை உண்மையும் ,எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமாயுமிருக்கிறது, பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்,அவர்களில் பிராதான பாவி நான்(1 தீமோத்தேயு 1;15)

இந்த நேரம் வரை ,நான் ஒரு கெட்ட மனிதன் இல்லை.என்னுடைய வாழ்க்கையை நான் சிறந்த வழியிலேயே வாழ்ந்திருக்கிறேன் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன் .ஆனால் இப்போது திடிரென்று என்னுடைய நடத்தை மற்றும் எண்ணங்கள் எனக்கே சந்தேகம் வலுத்தது
.
அந்த தரிசனம்(சொப்பனம் );நான் என்னுடைய படுக்கைக்கு சென்றேன் .நீண்ட நேரம் வரைக்கும் அமைதியில்லாமல் ,தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.மிகவும் விநோதமான மற்றும் என்னைத் தொல்லை பண்ணுகிற அந்த தரிசனத்தைப் பார்த்தேன் . சினிமாவில் உள்ள காட்சிகளை போல ஒன்றன் பின் ஒன்றாக என்னுடைய சிறுவயதிலிருந்து நான் செய்த மிறுதல்கள் மற்றும் கொடுமைகள் எனக்கு முன்பாக திரையில் ஓடுவது போல் இருந்தது.
அதன் பின் என் உடல் முழுவதும் என் மிறுதல்கள் மற்றும் கொடுமைகள் ஒவ்வொன்றும் புண்களை போல கொப்புளங்களாக என் மீது படர்ந்தது.
என்னால் தாங்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.என்னையே அறியாமல் "தேவனே செவிகொடும்! என்னை இரட்சியும்"என்று அழுதேன்.
அப்பொழுது பிரகாசமான வெளிச்சத்தால் சூழப்பட்ட ஒருவர் கீழே இறங்கி வந்து என்னைத்தொட்டார்.அவர் தான் இயேசு என்பதை உணர்ந்து கொண்டேன்.அவருக்கு விரோதமாய்தான் நான் போர் செய்துவந்தேன்.அவருடைய தொடுதல் என்னுடைய சரீரத்தையும் , மனதையும் குளிர செய்தது.நான் என் கண்களை மூடியிருந்தேன் .பரலோகத்தின் சந்தோசம் என்னை நிரப்பியது .நான் என் கண்களை திறந்து பார்தபோது அந்த கொப்புளங்களும் ,புண்களும் என் சரீரத்தில் இருந்து மறைந்தது.ஆனால் பிரகாசமாக வந்திருந்த இயேசுவின் மீது அந்த கொப்புளங்களும்,புண்களும் பரவி இருந்தது.
உடனடியாக என் தரிசனத்தின் அர்த்தம் புரிந்து கொண்டேன். பின் நாட்களில் அந்த வசனத்தை வேதத்தில் வாசித்தேன்."நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படி பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்.(2 கொரி 5;21)
நான் புதிய மனிதனாக எழும்பினேன் .உடனடியாக என்னுடைய அனுபவத்தை என் தந்தையிடத்திலும்,தாயிடத்திலும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டேன் .ஆனால் என் தாயார் சொன்னார்கள் ,இது கடவுளிடத்திலிருந்து வந்ததில்லை .இது இப்லீஸீன்(சாத்தான் ) தந்திரமாக இருக்கும் என்று.ஆனால் பிதாவாகிய பரலோக தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் அவருடைய ஒரே பேறான குமாரன் இயேசுகிறிஸ்துவை இரட்சிப்பின் வல்லமையினால் என்னை புது சிருஷ்டியாகவும் ,அவருடைய சொந்த மகனாகவும் மாற்றிவிட்டார் என்பதில் பூரண நம்பிக்கையை அடைந்தேன் .
இப்படித்தான் நானும் பிறகு என் குடும்பமும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தோம்.

குடும்பதிற்கும் குழந்தைகளுக்கும் உபத்திரவங்கள்

[img]http://d15304262.w35.websuvidha.in/images/cinirajfamily.jpg[/img][b]உக்கிரத்தை எதிர்கொள்ளுதல் : [/b]

என்னுடைய பிராயணம் எந்த வகையிலும் இலகுவானதாக இல்லை. நான் முன்பு சார்ந்திருந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் , நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை, காட்டிக்கொடுக்கும் துரோகம் என்று எண்ணினார்கள் . அதற்காக என்னைப் பழிவாங்கவும் முயற்சித்தார்கள்

.
ஒருமுறை யாரோ என் மீது கந்தக அமிலத்தை தெளித்தார்கள். ஆனால் தேவனுடைய கிருபையால் அவை எந்த பயங்கர பாதிப்பையும் உண்டாக்கவில்லை . மற்றொரு முறை ஒரு கொலைகாரன் என்னை கொல்லுவதற்காக கத்தியால் தாக்கினான். என்னுடைய கீழ்த்தாடை மோசமாக பாதிக்கப்பட்டது , அநேக பற்களை இழக்கவேண்டியிருந்தாலும் ஆண்டவரின் கிருபையால் நான் உயிர் தப்பினேன் .
குழந்தைகளும் விட்டுவைக்கப்படவில்லை
எனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு .ஒரு ரகசிய தீவிரவாதக் குழு என் முழுக்குடும்பத்தையும் அழிப்பதற்கு ஒரு மனிதனை அனுப்பி இருந்தார்கள் .
அவன் எப்படியோ என் மூன்று குழந்தைகளையும் விஷத்தை சாப்பிட வைத்துவிட்டான்.அவர்கள் மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.கர்த்தருடைய பிள்ளைகள் அவர்களுக்காக ஊக்கமாக ஜெபித்தவந்தார்கள் . ஒருவர் பின் ஒருவராக அவர்கள் சுகமடையதுவங்கினார்கள்
.
30 நாட்கள் என்னுடைய மகள் கோமா நிலையிலிருந்து சுகம் அடைந்து எழும்பினாள்.அவளுடைய சுகம் மரித்துப் போய் ஒருவர் மீண்டும் எழுவது போல் இருந்தது.
என் குழந்தகளுக்கு விஷத்தைகொடுத்தவர் தேவனுடைய வல்லமையான செயல்களை கண்டு ஆடிப்போய் விட்டான்.பின்பு அவரும் இயேசுவை பின்பற்றுகிறவராக மாறி முகமதியர்களுக்கு மத்தியில் அதிலும் குறிப்பாக பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்தார் .

[img]http://d15304262.w35.websuvidha.in/images/persecution1.jpg[/img]

போன வருடத்தில் என் சக ஊழியர் கிறிஸ்தவ எதிர்பாளர்களால் தாக்கப்பட்டார்.அவருடைய ஜெபவிட்டையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.சமீபத்தில் என்னை கொல்ல நடந்த திட்டத்தில் கர்த்தர் அற்புதமாக காத்துக்கொண்டார்எனக்கு ஒரு வித்தை நேரிடப்பண்ணி என்னை ஒருவர் கொல்ல முயற்சித்தார் .நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் குழந்தைகளையும்,மனவியையும் கொல்ல முயற்சி செய்தார்கள்.கர்த்தர் தாமே அவர்களை அற்புதமாக காத்துக்கொண்டார்.

பெற்றோரும்,சகோதரர்களும் மீண்டும் இணைந்தார்கள்

[img]http://d15304262.w35.websuvidha.in/images/cinirajfamily1.jpg[/img][b]குடும்பம் மீண்டும் இணைந்தது ;[/b]
என்னுடைய பெற்றோரும்,சகோதரர்களும் , சகோதரிகளும் தீவிர இஸ்லாமியர்கள் என்பதை உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.அதிகமான பேர் ஹாஜிஸ் ,ஹாஜீமாஸ்(மெக்காவிற்கு புனிதப்பயணம் செய்த ஆண்கள்,பெண்களை இப்படி அழைப்பார்கள்)
நான் இயேசுவை என் வாழ்க்கையில் அனுமதித்து இருந்தபடியால் என் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்தேன்.என் பெற்றோடுடனோ,அல்லது உடன் பிறந்தவர்களுடனோ எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. நானும் , என் மனைவியும் இதைகுறித்து மிகவும் விசனப்பட்டோம்,ஜெபத்தின் மூலமாக தேவனுக்கு தெரியப்படுத்தினோம் .
மெதுவாக என் குடும்பத்தாரோடு கடிதம் மூலமாகவும்,தொலைபேசி மூலமாகவும் தொடர்பு வைக்க ஆரம்பித்தோம் . இறுதியாக ஒரு நாள் வந்தது அவர்கள் நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உண்மையை ஒத்துக்கொண்டார்கள் .எங்களுடைய இடத்துக்கு வந்து எங்களுடன் தங்கினார்கள்.நானும் இயேசுவின் அன்பை குறித்து பேசினேன் .அவர்கள் கடந்து போய் விட்டார்கள் .அதன் பின் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பை வளர்த்து வருகிறோம்.
பிறகு நான் கேள்விப்பட்டேன் என் தகப்பானார் இறப்பதற்கு இரண்டு நாளுக்கு முன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் என்று.ஏன் என்றால் அவர் ஒரு தரிசனத்தில் கை , கால் களில் ஆணிகள் பாய்த தழும்புகளுடன் இயேசுகிறிஸ்துவை கண்டதாக சொல்லியிருக்கிறார்.
என் தாயும் மரிப்பதற்கு கொஞ்சக்காலத்துக்கு முன் விசுவாசியாக மாறினார்கள் .


மரணத்தருவாயை அனுபவித்தப்போதும் பின்மாற்றம் இல்லை
அன்பின் செய்தியை பரப்புவதே கடன்

என்னுடைய பாவங்களை எடுத்துப்போட்டவர்களுக்காக நான் தற்போது பணி செய்கிறேன் .என் குடும்பம் எனக்கு இந்த ஊழியத்தில் துணையாயிருக்கிறது .எங்கள் ஊழியத்தின் பெயர் "சாலேம் தொனி ஊழியம்" அதாவது இயேசு கிறிஸ்து சாலேமின் ராஜா (சமாதானத்தின் ராஜா )மற்றும் உன்னதமானவருடைய ஆசாரியன் (எபிரேயர் 7;1)நாம் அவருடைய சத்தத்தை( சுவிஷேசத்தை)அறிவிக்கிறோம்.அது தான் "சாலேமின் தொனி"

நமது ஆண்டவர் எனக்கு பரிசுத்த ஆவியினால் வெளிபாடுகளை கொடுத்து வேதம் தொடர்பான அநேக புத்தகங்களை மலையாளத்தில் எழுதி, அச்சிட உதவி செய்திருக்கிறார்கள்.தேவனுடைய கிருபையால் அந்த புத்தகங்கள் மூலம் அநேகர் ஏவப்பட்டு ஆண்டவரை அறிந்துள்ளார்கள் .
இந்திய ஆர்தோடக்ஸ் சபைகளின் பிஷப் ஆலோசனைக் குழு மூலமாக நான் "மலங்கார சபா மிஷனரி "என்று கௌரவப்படுத்தப்பட்டுள்ளேன்." தாஷி " மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்க இந்திய வேதாகம சங்கத்திற்கு உதவி செய்து வருகிறேன்.

அன்பு நன்பர்களே இதுவரை நமது அன்புக்குரிய நண்பர் பால் முகமது சினிராஜ் அவர்களின் சாட்சியை படித்தீர்கள்.ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து அவரை சந்தித்த விதம் மிகவும் அற்புதமானது.அது போல் இன்று வரை அவர்கள் குடும்பத்தை அற்புதமாக பாதுகாத்து வருகிறார் .இவர் மூலம் அநேக காரியங்களை தொடர்ந்து ஆண்டவர் நடத்தும் படியாகவும்,இவர்கள் பாதுகாப்புக்காகவும் நீங்கள் அனைவரும் ஜெபித்துக்கொள்ளுங்கள்
.
http://salemvoice.org/index.html[/url]

கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொள்ள; email: salemvoice@gmail.com[url]

http://unmaiadiyann.blogspot.com/2007/12/blog-post_3436.html[/url]

December 8, 2007

பாடல்களின் வரலாறு

சபையில், ஆலய ஆராதனைகளில் பாடல்களின் பங்கு என்ன என்று கேட்டால் பாடல்களே பல சபைகளில் ஜீவாதாரமாக இருக்கிறது என சிலர் கூறுவர். இந்த சபையில் பாடல் நன்றாக இருக்கும். ஆகவே நான் இங்கு செல்கிறேன் என்று கூறுவோர் ஏராளம். பாடல்கள் உண்மையிலேயே நம் சிந்தனைகளையும் சொல்லப்போனால் விசுவாசத்தையும் தட்டி எழுப்பி விடுபவையாகவும்,விசுவாசத்தை அறிக்கை செய்பவையாகவும் உள்ளன. தாவீதைப் போல எல்லா சூழ்நிலைகளிலும் நாம் பாடுகிறவர்களாக இருப்போமாயின் நம் சூழ்நிலைகள் நம்மை நிச்சயமாக அசைக்க முடியாது. சங்கீதங்களின் துவக்கத்தில் பாடல்கள எழுதப்பட்ட சூழ்நிலைகளை நாம் வாசிக்கிறோம். இந்த சூழ்நிலையிலும் கூட பாடல் பாட முடியுமா என்று நாம் ஆச்சரியப்படுமடியாக் தாவீது நமக்கு சவாலாக இருக்கிறார்.

நாமும் இக்காலத்தைய பாடல்களின் பிண்ணனியத்தை அறிந்து கொள்ளும் போது அது நமக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏசுவையே துதி செய்-
நீ மனமே ஏசுவையே துதிசெய்

இந்த பாடல் தெரியாத தென் தமிழக கிறிஸ்தவர்களை காண்பது அரிது. இந்த பாடலை இயற்றியவர் கிறிஸ்தவக் கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியார் ஆவார். இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அவர்களின் அரசவைக் கவிஞராகவும் இருந்தார். வேதநாயகம் சாஸ்திரியாரின் கவித்திறமையை நன்கறிந்த சரபோஜி மன்னர் அவரை தன் தெய்வத்தைப் புகழ்ந்து ஒரு பாடலை படிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் வேதநாயகம் சாஸ்திரியாரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அப்போது அரசர் சரி பிள்ளையாரை புகழ்ந்து ஒரு சிறிய பாடலாவது படியும் என்று உத்தரவிட்டாராம். வீட்டிற்கு வந்து ஆழ்ந்து யோசித்த சாஸ்திரியார் மன்னரிடம் சென்று என்னால் பிள்ளையாரையெல்லாம் புகள்ந்து பாட முடியாது, யேசுவையே துதிபேன் என்று இந்த பாடலைப் பாடினாராம். இதைக்கேட்ட அவையோர் பயந்தனர். ஏனெனில் அரசர் உத்தரவை மீறுவது பெருங்குற்றமாகும். ஆனால் சரபோஜி மன்னர் சிறுவயது முதலே வேதநாயகம் சாஸ்திருயாருடன் ஸ்வார்ட்ஷ் ஐயரிடம் வளர்ந்தவராதலால் அவரை ஒன்றும் செய்யாமல் நீர் யேசுவையே புகழ்ந்து பாடும் என்று கூறி ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டாராம்.

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=330
அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் (யோவான் 4:42)