அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 11, 2016

பைபிள் வழியாக அரபியை ஏன் கற்கவேண்டும்?

பைபிள் வழியாக அரபியை ஏன் கற்கவேண்டும்?


எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்

அரபியில் படிக்க மற்றும் புரிந்துக்கொள்ள

ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்வது என்பது மிகவும் சலிப்பான விஷயம்.
இதனை நாம் நம்முடைய ஆரம்ப பள்ளி காலத்திலிருந்தே அறிந்திருக்கிறோம்.
அன்று நமக்கு மொழியைக் கற்றுக்கொள்வது ஏன் கடினமாக தெரிந்தது? அதற்கு
இரண்டு காரணங்களை கூறலாம்:

1) நமக்கு மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்ததில்லை அல்லது கட்டாயத்தின்
பேரில் வேறு வழியில்லாமல் நாம் மொழியை கற்க முன் வந்தோம் (நம்
பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால் பள்ளிக்கு கட்டாயத்தின் பேரில்
அழுதுக்கொண்டே சென்றோம்).

2) நமக்கு மொழியை கற்றுக்கொடுத்தவர்களில் சிலர் பின்பற்றிய பாணியும்,
அவர்களுக்கு இருந்த ஆர்வமின்மையும் தான் காரணம். (சில அரசு பள்ளிகளில்
இதனை நாம் கண்கூடாக காணலாம்).

ஆனால், இன்று நமக்கு அரபியை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் (!)
இருக்கிறது, தேவையும் இருக்கிறது. எனவே, ஒரு புதிய மொழியை
கற்றுக்கொள்ளும் பாணியை மாற்றி இந்த பாடத்திட்டங்கள் தயார்
செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் சில
மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், சலிப்பில்லாமல் அரபியை
கற்றுக்கொள்ளவும் இப்பாடங்கள் உதவும். வாருங்கள் தொடருவோம்.

ஒரு மொழியை முழுவதுமாக நாம் கற்றுக்கொள்ள கீழ்கண்ட அனைத்தையும் நாம் கற்கவேண்டும்:

1 படிக்க (Read)

2 புரிந்துக்கொள்ள (Understand)

3 எழுத (Write)

4 பேச (Speak)

ஆனால், நம்முடைய முக்கிய நோக்கம், குர்-ஆனை அரபியில் படித்து, அதனை
புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமேயாகும். ஆகையால், இத்தொடர்
கட்டுரைகளின் மூலமாக, நாம் அரபியை படிக்கவும், புரிந்துக்கொள்ளவுமே
கற்றுக்கொள்ளப் போகிறோம், அரபி மொழியில் எழுதவோ, அல்லது சரளமாக பேசவோ
அல்ல. ஆகையால், நாம் மேற்கண்ட நான்கு தலைப்புகளில் முதல் இரண்டை
மட்டுமே கற்றுக் கொள்ளப்போகிறோம் (படிக்கவும், புரிந்துக்கொள்ளவும்).

அரபியில் பேசவும், எழுதவும் வேண்டுமென்றால் என்ன செய்வது?

நாம் அரபி மொழியை படிக்கவும், படித்ததை புரிந்துக்கொள்ளவும் செய்தால்,
தானாகவே ஓரளவிற்கு அரபியில் பேசவும் கற்றுக்கொண்டு விடுவோம். மேலும்,
விருப்பமுள்ளவர்கள் சிறிது அதிக நேரத்தை ஒதுக்கி அரபியில் எழுதவும்
கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் அரபியில் பேசவும்,
எழுதவும் விருப்பமுள்ளவர்களுக்கு தனியாக பயிற்சிகள் தரப்படும், அவைகளை
கோர்வையாக பின்பற்றினால், நாம் சரளமாக பேசலாம் மற்றும் எழுதலாம்.

ஆக, இத்தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை ஒழுங்காக நாம்
கற்றுக்கொண்டால், குர்-ஆன் வசனங்களை நாமும் அரபியில் படிக்கலாம், அவைகளை
புரிந்துக் கொள்ளலாம்.

ஏன் பைபிள் வழியாக அரபியை கற்கவேண்டும்?

நான் இத்தொடர் கட்டுரைகளுக்கு கொடுத்த உப தலைப்பை கவனியுங்கள்: "பைபிள்
வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்பதாகும். இதனை படித்தவுடன்
நமக்கு சில கேள்விகள் எழும்:

• அரபி மொழிக்கும் பைபிளுக்கும் என்ன சம்மந்தம்?

• அரபி குர்-ஆனை படிப்பதற்கும், பைபிளை படிப்பதற்கும் என்ன சம்மந்தம்?

• "பைபிள் வழி அரபி குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்றால் என்ன பொருள்?

இவைகளுக்கான பதில்களை அறிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஒரு மொழியை இரண்டு வகையாக கற்கலாம்:

1. முதலாவதாக அரபி எழுத்துக்களை கற்றுக்கொண்டு, அதன் பிறகு வார்த்தைகளைக்
கற்றுக்கொண்டு, பிறகு வாக்கியங்கள் மற்றும் இலக்கணம் என்று கோர்வையாக
கற்பது முதலாவது வகையாகும். இந்த வழிமுறையில் தான் நாம் அனைவரும்
மொழிகளை பள்ளிக்கூடங்களில் கற்கிறோம். இந்த பாணியில் ஒரு மொழியைக் கற்பது
பலருக்கு சலிப்பை உண்டாக்கும். முதல் நாள் பாடத்திலேயே எல்லா உயிர்
எழுத்துக்களை கற்றுக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தையும் பத்து முறை
வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று வாத்தியார் சொன்னால்,
பிஞ்சு உள்ளங்களுக்கு சலிப்புண்டாகாமல் இருக்குமா!

2. இரண்டாவதாக, ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, அந்த வார்த்தையில் வரும்
எழுத்துக்களை மட்டும் கற்றுக்கொள்வது. அதன் பிறகு இன்னொரு வார்த்தையை
எடுத்துகொண்டு, அதில் வரும் எழுத்துக்களை கற்றுக் கொள்வது. இவ்விதமாக,
அனைத்து எழுத்துக்களையும் கற்றுக் கொள்வது மிகவும் சுலபமான வழியாகும்.
மேலும் தேவையான இடங்களில், இலக்கணங்கள் மற்றும் இதர விவரங்களை
கற்றுக்கொள்வோம்.

இந்த இரண்டாம் வகையில் தான் நாம் இப்போது அரபி மொழியை கற்றுக்கொள்ளப்
போகிறோம். மேலும், நாம் கற்றுக்கொள்ளப் போகும் வார்த்தைகள், பைபிள்
மற்றும் குர்-ஆனில் காணப்படும் வார்த்தைகளாக இருக்கும். அதாவது A for
Apple, B for Ball என்று கற்காமல், A for Allah, B for Bethlahem என்ற
முறையில் கற்கப்போகிறோம். இதன் மூலம், பைபிள் மற்றும் குர்-ஆனில் வரும்
அரபி வார்த்தைகளை கற்றுக்கொள்வோம்.

இந்த இரண்டாம் வகையில் ஒரு மொழியை கற்றுக்கொள்வது சலிப்பை உண்டாக்காது,
மேலும் சுவாரசியமாகவும் இருக்கும். இந்த வகையில் நாம் கற்கும் போது,
ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், அதன் பலன் நமக்கு உடனே கிடைக்கும்.
அதாவது, ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் நேரத்தில் நாம் பல வார்த்தைகளை
கற்றுக்கொண்டு இருப்போம், சில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டு இருப்போம்.
அரபியில் முதல் வார்த்தையை கற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டிய
அவசியமில்லை, அரபியின் எல்லா எழுத்துக்களை கற்கவேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், நாம் பல வார்த்தைகளை சுலபமாக
கற்றுக்கொண்டிருப்போம். இதனை நீங்கள் முதலாவது அத்தியாயத்தை படித்ததும்
புரிந்துக் கொள்வீர்கள்.

ஒரு மொழியை சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அந்த மொழியை
பேசும் மக்களின் மத்தியில் வாழ்ந்தால் சீக்கிரத்தில் கற்றுக்
கொள்ளமுடியும். இந்தியாவில் இருந்துக்கொண்டு அரபிமொழியை புத்தகங்கள்
மூலமாக கற்றுக்கொள்பவர்களைக் காட்டிலும், அரபு நாடுகளில் சென்று வேலைச்
செய்பவர்கள் சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்வதை காணமுடியும். ஏனென்றால்,
எவ்வளவுக்கு அதிகமாக அந்த புதிய மொழியை நாம் கேட்கிறோமோ, படிக்கிறோமோ
அவ்வளவு சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால், கிறிஸ்தவ ஊழியர்களாகிய நம்மை பொறுத்தமட்டில், அரபியை கற்க நாம்
அரபு நாடுகளுக்குச் சென்று கற்கமுடியாது. இதனை மனதில் வைத்து தான் இந்த
"பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்ற தொடர் கட்டுரைகள்
எழுதப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பைபிளை வாசிக்கிறோம், அதனை
தியானிக்கிறோம், மற்றவர்களிடம் பேசும் போதும், சபைகளிலும் பைபிள்
வசனங்களை பயன்படுத்துகிறோம். எனவே, அரபி பைபிளை அடிப்படையாகக் கொண்டு
நாம் அரபி மொழியை கற்றுக்கொண்டால், சீக்கிரத்தில் அதனை
கற்றுக்கொள்ளமுடியும். எனவே, அரபி மொழியை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள,
குர்-ஆனை அதன் மூல மொழியில் படித்து புரிந்துக்கொள்ள இத்தொடர் கட்டுரைகள்
வகை செய்யும்.

நினைவில் வையுங்கள்

இந்த அரபி பாடங்களை கற்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை மனதில் வைக்க வேண்டும்:

1) நம்முடைய நோக்கம் அரபியில் புலமை பெற்று, முஸ்லிம்களுக்கு அரபியில்
சவால் விடவேண்டும் என்பதல்ல, அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பது
தான்.

2) அரபியைக் கற்றுக்கொண்டு, அரபி குர்-ஆனை அதற்கான இராகத்தில்
முஸ்லிம்களைப் போல ஓதவேண்டும் என்பது நம் நோக்கமல்ல. நம்முடைய
நம்பிக்கையின் படி, குர்-ஆனை நாம் இராகத்தில் ஓதுவதினால் எந்த நன்மையும்
இல்லை. இதே போல, பைபிளை எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் நாம்
படிப்பதினால், தமிழில் படிப்பவர்களைக் காட்டிலும் அதிகபடியான நன்மையை
தேவன் நமக்கு கொடுப்பது இல்லை. வேதத்தை புரிந்துக் கொண்டு அவைகளுக்கு
கீழ்படிவதையே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். எனவே, குர்-ஆனின் அரபி
வசனங்களை இராகம் போட்டு, மெட்டு போட்டு வாசிக்க நாம் முயலப்போவதில்லை,
அது நம் நேரத்தை வீணடிக்கும். ஆனால், விருப்பமுள்ளவர்கள் நேரமுள்ளவர்கள்
குர்-ஆனை இராகமாக வாசிக்க முயற்சி எடுக்கலாம் இதில் தவறில்லை. முயன்றால்
முடியாதது எதுவுமில்லை, விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்.

3) சில அரபி வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதற்கு நமக்கு மிகவும் கடினமாக
இருக்கும். ஒரு ஆசானை வைத்துக் கொண்டு அவைகளை படித்தால் தான் நாம் சரியாக
அவைகளை உச்சரிக்கமுடியும். நாம் அதிகமாக அவ்வார்த்தைகளை கேட்டு நம்
உச்சரிப்பை சரி செய்துக் கொள்ளலாம். நீ ஏன் குர்-ஆன் அரபி வசனங்களை,
பைபிள் அரபி வசனங்களை சரியாக உச்சரிக்கவில்லை என்று தேவன் நம்மிடம்
கேள்வி கேட்கமாட்டார் என்பதை மனதில் வையுங்கள். (எத்தனை முறை நம்
சபைகளில் "இயேசுவே வழியாக இருக்கிறார்" என்ற சொற்றொடரை "இயேசுவே வலியக
இருக்கிறார்" என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்காக நாம்
கோபித்துக்கொண்டு சபையை விட்டு சென்றுவிட்டோமா என்ன? அல்லது இயேசு தான்
நம்மோடு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாரா? எனவே மனம் தளராதீர்கள்! நம்
தாய் மொழியே நமக்கு பிரச்சனையென்றால், அரபி மொழி என்ன விதிவிலக்கா
நமக்கு? அரபி நம்மிடம் என்ன பாடுபடப்போகிறதோ? - அல்லாஹ் தான்
காப்பாத்தனும்!)

4) முஸ்லிம் அறிஞர்களில் சிலர் குர்-ஆன் வசனங்களை தங்கள் விருப்பத்திற்கு
ஏற்றவாறு பொருள் கூறுகிறார்கள். நம்முடைய நோக்கமெல்லாம், முடிந்த
அளவிற்கு அரபியை கற்றுக்கொண்டு, குர்-ஆனின் வசனங்களின் உண்மை பொருளை
புரிந்துக்கொள்வதாகும். இதன் மூலமாக, முஸ்லிம்களோடு நாம் புரியும்
உரையாடல்கள் பயனுள்ளதாக மாறும்.

5) இன்னும் பல இஸ்லாமிய நூல்கள் அரபி மொழியிலேயே உள்ளன, அவைகள் தமிழில்
மொழியாக்கம் செய்யப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அரபியை கற்றுக்கொண்டு,
அரபியில் புலமைப்பெற்று இந்த அரபி புத்தகங்களை தமிழாக்கம்
செய்யமுடியும். புதிய மொழிகளை கற்றுக்கொள்வதும், அம்மொழிகளில் புலமைப்
பெற்று, மொழியாக்கம் செய்வதும் கிறிஸ்தவர்களுக்கு புதிதான மற்றும்
கடினமான ஒன்றல்லவே!

6) கடைசியாக, முஸ்லிம்களை பரலோகின் பிரஜைகளாக்க, கர்த்தரின் ஊழியத்தை
அவர்களின் மத்தியில் சிறப்பாக செய்ய, அரபி மொழியைக் கற்றுக்கொள்வது
பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதை மனதில் வைக்கவும்.

இப்போது முதல் அத்தியாயத்திற்குச் செல்வோம்.

________________________________

முன்னுரை பொருளடக்கம் அத்தியாயம் 1 - ஆமீன்

________________________________
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/learn_arabic/why_arabic.html




--
Source :http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post_20.html

எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் (பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்)

New article - How to learn Arabic in easy way? for Christians.

எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் (பைபிள் வழி அரபிக்
குர்-ஆனை கற்றுக்கொள்வோம்)



முன்னுரை:

இந்த தொடர் கட்டுரைகள் மூலமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை சந்திப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன். சமீப காலமாக கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில்
"இஸ்லாம்" பற்றிய உரையாடல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் இஸ்லாமை
கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், இஸ்லாமிய நூல்களையும்,
குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களையும் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும்
சிலர் ஒரு படி மேலே சென்று "நாங்கள் அரபியில் குர்-ஆனை படிக்க
விரும்புகிறோம்" என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம்
செய்ய, அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொண்டாக வேண்டும் என்ற நிலை இல்லை
என்றாலும், அரபியை கற்றுக்கொண்டு ஊழியம் செய்தால், அதிக பலன் கிடைக்கும்
என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமியர்களின் வேத நூலாகிய "குர்-ஆன்" அரபி மொழியில் இருப்பதினாலும்,
இம்மொழிக்கு இஸ்லாமியர்கள் அதிக முக்கியத்துவம் காட்டுவதினாலும், இதனை
அறிந்துக்கொள்வது கிறிஸ்தவ ஊழியர்களுக்கு அதிக நன்மையாக இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் செலவழித்து,
அரபியைக் கற்றுக்கொண்டு, அதன் மூலமாக குர்-ஆனை சுலபமாக அறிந்துக்கொள்ள
இத்தொடர் கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன்.

சவால்களும் வழிமுறைகளும்

அரபி மொழியை கற்றுக்கொள்ள ஒரு அரபி ஆசிரியரை நியமித்து, தினமும் அவரோடு
சில மணித்துளிகள் அமர்ந்து, அவர் முலமாக அரபியைக் கற்றுக்கொண்டால், அதி
சீக்கிரமாக அரபியைக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால், உலகம் முழுவதும்
இருக்கும் தமிழ் பேசும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு அரபியை கற்றுக்கொடுக்க
எத்தனை ஆசிரியர்களை நியமிப்பது? நம் ஊழியர்களுக்கு இம்மொழியை
கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஒதுக்க நேரமிருக்கின்றதா? நாடோடிகள் போல
அங்கும் இங்கும் சென்று சுவிசேஷத்தைச் சொல்லும் ஊழியர்களை எப்படி ஒரே
இடத்தில் ஒவ்வொரு நாளும் உட்காரவைப்பது? இப்படி அனேக சவால்கள் தற்கால
ஊழியர்களுக்கு உள்ளன. எனவே, இணையத்தில் இப்படிப்பட்ட ஒரு பாடத்திட்டத்தை
சேர்த்து, ஊழியர்களுக்கு அரபியைக் கற்றுக் கொடுத்தால், நம்முடைய இலக்கை
அடைய இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இக்காலத்தில்
எல்லோரும் ஸ்மார்ட் போனை (Smart Phone) பயன்படுத்துகிறார்கள், அவைகளில்
தினமும் மெயில்களை பார்க்கிறார்கள் பதில்களை அனுப்புகிறார்கள். பிரயாணம்
செய்யும் போதும், இணையத்தில் எப்போதும் இணைந்திருக்கிறார்கள். எனவே, இதே
இணையத்தை பயன்படுத்தி அவர்கள் தமிழ் மூலமாக அரபியை கற்றுக்கொள்ள வழி
உண்டாக்கவும் மேலும் அவர்களின் அரபி மொழி தாகத்தை தீர்ப்பதும் தான்
இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

கர்த்தரின் நாள் மிகவும் சமீபமாக இருப்பதினால், அரபி மொழியை
கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியரும், இன்னொரு ஊழியருக்கு இந்த மொழியை
கற்றுக்கொடுக்கும் படி கர்த்தருக்குள் கேட்டுக்கொள்கிறேன். சபைகளில்
ஊழியர்கள் பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டும் போது, அரபி மொழியில்
வசனங்களை எடுத்துக் காட்டி, பிரசங்கங்கள் செய்யும் காலம் சமீபமாக
இருக்கிறதை நான் காண்கிறேன். நம் ஊழியர்கள், போதகர்கள் குர்-ஆன் வசனங்களை
அரபியில் எடுத்துக் காட்டி, அவ்வசனங்களின் ஒவ்வொரு வார்த்தையின் பொருளை
விளக்கி சபைகளுக்கு இஸ்லாமிய விழிப்புணர்வை கொண்டு வருவார்கள் என்று
விசுவாசிக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால் வருங்காலங்களில் சில
ஊழியர்கள் குர்-ஆனை அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தாலும் நாம்
ஆச்சரியப்படத்தேவையில்லை. கிறிஸ்தவர்களின் குர்-ஆன் தமிழாக்கங்கள்
தற்போது தமிழில் நிலவும் முஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் தமிழாக்கங்களைக்
காட்டிலும் தரத்தில் உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கிறிஸ்தவர்களுக்கு புது மொழிகளை கற்றுக்கொள்வதும், அவைகளில்
மொழியாக்கங்கள் செய்வதும் புதிதான மற்றும் அறிதான விஷயமல்லவே!

எதிர்காலத்தில் அரபி மொழிக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் பங்கு ஒரு
குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
இப்படியெல்லாம் நடக்க கிறிஸ்தவ ஊழியர்கள் செய்யவேண்டியதெல்லாம் இவைகள்
தான்: முதலாவதாக, முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்ற ஆர்வம்
இருக்கவேண்டும், இரண்டாவதாக, அரபியை படிக்க ஒவ்வொரு நாளும் சில
நிமிடங்களை ஒதுக்கவேண்டும், மீதியானதை நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர்
பார்த்துக்கொள்வார், ஆமீன்.

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்

தேதி: 20-Dec-2015

________________________________

பொருளடக்கம் ஏன் பைபிள் வழியாக அரபியை கற்கவேண்டும்?

________________________________
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/learn_arabic/intro_arabic.html




--
Source : http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post.html

குர்-ஆன் மொழிபெயர்ப்பு மோசடி 1 – ஸூரா 3:7

(இறைவனைக் காப்பாற்றும் தமிழ் முஸ்லீம் அறிஞர் பி.ஜே)

ஆசிரியர்: அற்புதராஜ் சாமுவேல்

கடவுள் மனிதனைக் காப்பாற்றுவார் என்பதுதான் மத நம்பிக்கை உள்ள அனைத்து
மக்களின் கருத்து ஆகும். மனிதன் கடவுளைக் காப்பாற்ற முடியுமா என்பது
அறிவுப் பொருத்தமற்ற, நடைபெற சாத்தியமற்ற கேள்வியாக இருந்தாலும்,
எப்படியாவது ஓட்டை உடைசல்களை சரிசெய்து அல்லது தெரியாதபடி மறைத்து
அடுத்தவர் தலையில் தன் பொருளைத் தள்ளிவிடும் திறமையான வியாபாரி போல, அனேக
முஸ்லீம் அறிஞர்கள் தங்கள் மதத்தைப் பற்றியும், மத போதனைகளைப் பற்றியும்
நயமாக மக்கள் மனதில் நல்லெண்ணத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள். இவைகளை
நாம் ஆராயும்போது அவர்கள் இத்தனை நாட்களாக செய்து வந்த பொய்
பிரச்சாரங்கள் ஒன்றுமில்லாமல் போவதையும் நாம் காண்கிறோம். முஸ்லீம்
அறிஞர்களிடம் குர்-ஆன் பற்றி நாம் எதாவது கேள்வி கேட்டால், அதற்குப்
பதில் சொல்வதற்குப் பதிலாக, "உனக்கு அரபி தெரியுமா?" எனத் திருப்பிக்
கேட்டு தந்திரமாக கேள்வியை திசை திருப்பி விடுவார்கள். ஆனால் அரபி மொழி
அறிந்தவர்கள் குர்-ஆன் அரபி மொழியில் அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த
புத்தகம் இல்லை என்றும் அதில் தவறுகள் உண்டு என்றும் சொல்கின்றனர்.
உதாரணமாக, பிரபலமான ஈரான் நாட்டு அரபி அறிஞர் அலி தஸ்தி என்பவர்,
"Neither the Qur'an's eloquence nor its moral and legal precepts are
miraculous" என்கிறார் (Dashti 57). இதன் பொருள் என்னவெனில், "குர்-ஆனின்
சொல்லாட்சியும் அதன் நல்லொழுக்க மற்றும் சட்டம் சார்ந்த போதனைகளும்
அற்புதமானவையாக இல்லை" மேலும் முஸ்லிம் அறிஞர்களும் பல விசயங்களை அரபி
மொழி தெரியாதவர்களிடம் இருந்து மறைக்கிறார்கள் என்றும் பரவலான ஒரு
குற்றச் சாட்டு உண்டு. இக்கட்டுரையில் அப்படிப் பட்டவற்றில் ஒன்றே ஒன்றை
நாம் காணப் போகிறோம்.

குர்-ஆன் மொழிபெயர்ப்பு என்பது அரபி மொழி குர்-ஆன் அதிலும் குறிப்பாக
உத்மான் அவர்கள் காலத்தில் பொதுவான குர்-ஆன் ஆக அங்கீகரிக்கப்பட்ட அரபி
குர்-ஆன் அடிப்படையிலேயே அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம்
செய்யப்படுகிறது. உத்மான் அவர்களின் உத்தரவின் பேரில் மற்ற அனைத்து
குர்-ஆன்களும் எரிக்கப்பட்டது. அதில் குர்-ஆன் தொகுப்புக்கு அதிகமாக
பயன்படுத்தப்பட்ட முதல் கலீஃபா மற்றும் முஹம்மதுவின் தோழரான அபுபக்கர்
அவர்களிடமும் அதன்பின்பு முஹம்மது அவர்களின் மனைவி ஹப்சா அவர்களிடமும்
இருந்த பிரதியும் கூட எரிக்கப்பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்புகள் மூல
மொழியின் பொருளை முழுமையாக தருவது சற்று கடினம் என்றாலும், மூல மொழியில்
இல்லாததைக் கூட இருப்பதாகவும், சொல்லாததை சொன்னது போலவும் தோன்றும் படி
மொழிபெயர்ப்புகள் உண்டு. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பீ.ஜைனுல் ஆபிதீன்
என்பவர் குறிப்பிடத் தக்கவர். சுருக்கமாக பிஜே என்று பரவலாக
அறியப்பட்டிருக்கும் இவரது குர்-ஆன் மொழிபெயர்ப்பு 11 முறை மறுபதிப்பு
செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஸூரா 3:7க்கு பின்வரும் மொழிபெயர்ப்பையும்
விளக்கக் குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

பிஜே மொழிப்பெயர்ப்பு:

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட
வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற
மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை
நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப்
பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர் களையும் தவிர
அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் ''இதை
நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறை வனிடமிருந்து வந்தவையே'' எனக்
கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

பிஜே அவர்களின் விளக்கக் குறிப்பு:

…முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, 'அல்லாஹ்வைத் தவிர யாரும்
அறிய முடியாது' என்று அவர்களில் சில அறிஞர்கள் கருதி, அதற்கேற்ப
இவ்வசனத்தை மொழி பெயர்த்துள்ளனர். 'அல்லாஹ்வையும், அறிவுடை யோரையும் தவிர
யாரும் அறிய மாட்டார்கள்' என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். இலக்கண
விதியின் படி இரு விதமாகப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின்
அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது. குர்ஆனில்
அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத
வசனங்களும் உள்ளன என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஒரே ஒரு மனிதனுக்குக்
கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில்
ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? என்று
சிந்தித்தால் இவ்வாறு கூற மாட்டார்கள். ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத
வசனங்கள் குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே
கருதப்படும்...

இந்த வசனத்தில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மட்டுமே தமிழில்,
"அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர் களையும் தவிர அதன் விளக்கத்தை
(மற்றவர்கள்) அறிய மாட்டார்கள்" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்."

இவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய
மாட்டார்கள் என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை
அறியமாட்டார்கள்." (டாக்டர் முஹம்மது ஜான் மொழியாக்கம்)

"இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள்."
(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

"எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்!"
(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

மூலம்: http://www.tamililquran.com/qurandispcmp.php?start=3#3:7

தமிழில் மட்டுமல்ல அனைத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அல்லாஹ்வைத் தவிர
வேறு எவரும் அறிய மாட்டார்கள் என்றே பொருள் படும்படி
மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதை பின்வரும் இணைப்பில் கண்டு உறுதி செய்து
கொள்ளலாம்.

http://corpus.quran.com/translation.jsp?chapter=3&verse=7

இதில் அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்த பிழை என்ன?

1. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை கல்வியில் தேர்ந்தவர்களும்
அறிவார்கள் என்று தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்.

2. குர்-ஆனில் எல்லாம் புரியும் படி உள்ளது என்றும், உளறல் இல்லை என்றும்
சொல்லி இருக்கிறார்.

3. குர்-ஆன் மொழிபெயர்த்த மற்ற (அனைத்து மொழி) அறிஞர்களை விட, தன்
மொழிபெயர்ப்பே சரி என்று புறச்சான்று அடிப்படையில் ஒரு வாதத்தை
வைக்கிறார். அகச் சான்று இல்லையா அல்லது சிறப்பு வெளிப்பாடு ஏதேனும்
பெற்றாரா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

மேலே கண்ட முக்கியமான மூன்றைப் பற்றி நாம் ஒவ்வொன்றாகக் காணலாம்.

1. மொழிபெயர்ப்பு சரியா? உண்மை vs உளறல்

ஸூரா 3:7ன் மொழிபெயர்ப்பைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன் அரபி மொழியில்
அது எப்படி இருக்கிறது என்பதைக் காண்போம்.

என் மொழிபெயர்ப்பு:

அவன் உனக்கு புத்தகத்தை வெளிப்படுத்தினான். அதில் மிகத் தெளிவான வசனங்கள்
உள்ளன. அவை புத்தகத்தின் மூலாதாரமாக (அல்லது அடிப்படையாக) உள்ளன. மேலும்
தெளிவாக புரிந்து கொள்ளமுடியாத வசனங்களும் உள்ளன. ஆயினும் அவர்கள்
இருதயத்தில் பின்வாங்குதல் (அல்லது தவறான வழி) இருப்பதால் ஒப்புமை உடைய
(அல்லது ஒத்த தோற்றமளிக்கும்) அதின் முரண்பாட்டையும் விளக்கத்தையும்
தேடி அதனை பின்பற்றுகின்றனர். மேலும் அதின் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர
வேறு எவரும் அறியமாட்டார்கள். மேலும் அறிவில் சிறந்தவர்கள், "நாங்கள்
அதில் உள்ளவைகளை நம்புகிறோம். அவை எங்கள் ரப்பிடம் (இறைவனிடம்) இருந்து
வந்தவை என்று சொல்வார்கள்", மற்றும் அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை
மனதில் கொள்ளமாட்டார்கள்.

இதில் அல்லாஹ்வைத் தவிர என்று இருப்பதற்குப் பதிலாக, "அல்லாஹ்வையும்,
கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய
மாட்டார்கள்"" என்று பிஜே குர்-ஆனில் மொழிபெயர்க்கப்பப் பட்டிருக்கிறது.

இந்த வசனத்தில் அல்லாஹ்வைத் தவிர என்று வார்த்தைக்கு அடுத்ததாக வரும்
மற்றும் அறிவில் சிறந்தவர்கள் என்ற சொற்றொடரை நாம் அதைத் தொடர்ந்து வரும்
வார்த்தைகளுடன் சேர்த்து வாசித்தால்தான் பொருள் முழுமையாக் வருகிறது.
அல்லாஹ்வும் அறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பதுதான் சரியான
மொழிபெயர்ப்பு என்றால், வரும் பிரச்சனை என்னவெனில், அதைத் தொடர்ந்து
வரும் வாக்கியத்தில் அல்லாஹ்வும் சேர்ந்து சொல்வதாக அமைந்து விடும்:
"நாங்கள் அதில் உள்ளவைகளை நம்புகிறோம். அவை எங்கள் ரப்பிடம் (இறைவனிடம்?)
இருந்து வந்தவை என்று சொல்வார்கள்." அல்லாஹ் ஏன் இப்படிச் சொல்லவேண்டும்
என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா! ஆகவே இங்கே மொழிவிளையாட்டு
மிகவும் ஆபத்தானதாகும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அறியமாட்டார்கள்
என்பதே சரியான மொழிபெயர்ப்பு ஆகும்.

இங்கே மொழிபெயர்ப்பு பிரச்சனையைத் தாண்டி, பிஜே அவர்களின்
மொழிபெயர்ப்பில் உள்ள குறை என்னவெனில், அவருடைய வார்த்தைகளிலேயே
சொல்வதானால், உள்ளங்களில் கோளாறு இருப்போர் தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே
புரியக் கூடிய வசனங்களை நாடிப் போகிறார்கள். அப்படியாயின் மதிப்பிற்குரிய
பிஜே அவர்களில் உள்ளத்தில் உள்ள கோளாறு என்ன என்பதை விளக்க வேண்டும். பல
மொழிபெயர்ப்புகளில் முதஷாபிஹாத் என்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல்
அப்படியே அம்போவென விட்டு விட்டு வாசிப்பவர்களை குழப்பி இருக்கிறார்கள்.
அண்ணல் பிஜே அவர்களோ உள்ளத்தில் வழிகேடு இருப்பதால் அதற்கு நூதனமான
விளக்கத்தைக் கொடுத்து வகையாக மாட்டி இருக்கிறார்.

2. குர்-ஆன் உளறலா, உண்மையா!

மதிப்பிற்குரிய பிஜே அவர்கள்,"ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத வசனங்கள்
குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே
கருதப்படும்" என்று விளக்கி மொழிபெயர்ப்பு மோசடியாக, அறிவில்
தேர்ந்தவர்கள் என்பதை உள்ளே திணித்திருக்கிறார் என்பதைப் பார்த்தோம். ஒரு
மனிதனுக்கும் புரியாத வசனங்கள் குர்-ஆனில் இல்லை என்று சொல்லும் பிஜே
அவர்கள் அதே ஸூராவின் முதல் ஆயத்திலேயே அவருக்கு எதிராக ஒரு பெரிய ஓட்டை
இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார். முதல் வசனத்தில் ஆலிஃப், லாம், மீம்
என்ற மூன்று அரபி மெய்யெழுத்துக்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எந்த அரபி மொழிபெயர்ப்பிலும் அதற்கான பொருள் கொடுக்கப்படவில்லை. பி.ஜே
அவர்கள் அதற்கு விளக்கமாக உயர்தர இலக்கியம் படைக்கும் அன்றைய அரபி
பண்டிதர்களிடம் அப்படி ஒரு வழக்கம் இருந்ததாக சமாளிபிகேஷன்
கொடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே பண்டைய அரபி நூல்களில் அப்படி ஒன்று இருந்தால் அதை மேற்கோள்
காட்டி அல்லவா, பிஜே அவர்கள் இவ்விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். 29
அத்தியாயங்கள் இது போல துவங்குவதாகச் சொல்லும் பிஜே அவர்கள் ஒரு இடத்தில்
கூட குர்-ஆனின் மொழி நயம் மற்றும் இலக்கிய நடை பற்றி உயர்வாக
சான்றுகளுடன் சொல்ல வில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு பொருள் விலை
மதிப்பற்றது மற்றும் ஒரிஜினல் என்பதை நிரூபிக்க தங்க முலாம் பூசி இதுதான்
சரி என்று சொல்வது கவரிங் நகையை 24 காரட் தங்கம் என்று சொல்வதற்கு
ஒப்பாகும். அலீஃப், லாம் மீம் என்பதற்கு பொருள் இல்லை என்றால் அதன்
அர்த்தம் என்ன? மொழியியலில் பொருளற்ற ஒன்றை தொடர்ந்து ஒருவர் சொல்லிக்
கொண்டிருந்தால் அது ஒரு வார்த்தையாகவே கருதப்படாது. அதற்கு பெயர் என்ன
என்பதை பிஜே அவர்களே சொல்லி இருக்கிறார்கள். சிந்திக்கிறவர்கள் இதில்
உள்ள விசயத்தை விளங்கிக் கொள்வார்கள்.

3. குர்-ஆன் வெளிப்பாடா அல்லது சுய கண்டுபிடிப்பா!

ஸூரா 3:7க்கு புறச்சான்று அடிப்படையில் மொழியாக்கம் கொடுத்திருக்கும்
அறிஞர் பி.ஜே அவர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இவர் மட்டுமே
இப்படிப் பட்ட மொழிபெயர்ப்பை என் அறிவுக்கு எட்டிய வரையில்
கொடுத்திருப்பதால் பின் வருவன மிகவும் முக்கியமானது என கருதுகிறேன்.

அ) இவர் கூறும் இலக்கண விதி மற்றும் புறச்சான்று என்ன? மற்ற அரபி மொழி
அறிஞர்கள் காணாத இலக்கண விதி என்ன என்பதை பிஜே விளக்க வேண்டும். அகச்
சான்று ஒன்றும் இல்லை ஆகவே புறச் சான்றை நான் எடுக்கிறேன் என்று
சொல்கிறாரா அல்லது தன் அறிவுக்கு அல்லது பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாக
அப்பகுதியைக் காண்பதால் அப்படி ஒரு மொழிபெயர்ப்பைத் தந்திருக்கிறாரா?

ஆ) "ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக்
காட்ட முடியாது" என்று 3:7 க்கு விளக்கம் தரும் பி.ஜே அவர்கள் 3:1 க்கு
விளக்கமாக 29 அத்தியாயங்கள் பொருள் கூற முடியாத எழுத்துக்களைக் கொண்டு
துவங்குவதாக விளக்கி(?) இருக்கிறார். இதற்குப் பெயர் விளக்கமா அல்லது
மனக்குழப்பமா என்பதையும், குர்-ஆன் மொழிபெயர்ப்புப் பிழையா அல்லது
பிழைத்திருத்தமா என்பதையும் அன்னார் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இ) முஹம்மதுவின் காலத்தில் அவருடன் இருந்த சஹாபாக்கள் எவரும் அவரை
எதிர்த்தோ அல்லது ஏன் என்றோ கேள்வி கேட்கவில்லை என்பது, முஹம்மது அவர்கள்
சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதினால் என்பது
அபத்தமான வாதம் ஆகும். ஏனெனில் ஏன் என்று கேட்டு எதிர்த்தால் என்ன
நடக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல முஹம்மது
கல்வி அறிவற்றவர் என்பதையும் அவர்கள் நம்மை விட நன்கறிவார்கள்.

ஈ) பிஜே அவர்களின் விளக்கம் சுய முரண்பாடாக இருக்கிறது என்பதையும்
அவருடைய மொழிபெயர்ப்பும் அவருடைய சொந்தக் கருத்தை உள்நுழைத்து இருக்கிறது
என்பதையும் கண்டோம். அல்லாஹ்வைக் காப்பாற்றவும், குர்-ஆன் பிழையை
மறைக்கவும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள் முயற்சி செய்திருப்பதையும்,
ஆனால் அவருடைய விளக்கத்துக்கு மாறாக அதே ஸூராவின் முதல் வசனம் இருக்கிறது
என்பதையும் நாம் காண்கிறோம்.

முடிவாக, குர்-ஆனில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒரு மோசடி அரங்கேறி
இருப்பதையும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களே அதன்
உண்மையான மறைபொருளை விளக்கி உண்மையை நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன
என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல குர்-ஆன் எளிமையானது,
தெளிவானது மற்றும் விளங்கக்கூடியது என்பது வெறும் பேச்சுதான்,
மார்க்கத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தவறான
மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத்தைக் கொடுத்ததோடல்லாமல், மற்றவர்கள்
இப்படி எல்லாம் சொல்வார்கள் என்று சொல்லிக் கொண்டு தன் மனதில் இருப்பதை
பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் விளக்கக் குறிப்பு 2 மற்றும் 86ல் கூறி
இருக்கிறார்: "முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு
இறைவேதம் என்கிறார்'', 'முஹம்மது உளறுகிறார்.' வாசிக்கிறவர்கள்
சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய முடிவுக்கே முடிவை விட்டு விடுகிறேன்.
சமயம் கிடைத்தால் இது போன்ற மற்ற குர்-ஆன் மொழிபெயர்ப்பு வசனங்களையும்,
ஏன் மூல அரபி வசனங்களையே ஆராய்ந்து பார்ப்போம்.

Books cited:

Dashti, Ali. Twenty Three Years: A Study of the Prophetic Career of
Mohammad. Trans. F. R. C. Bagley. 1st edition. Costa Mesa, Calif.:
Mazda Pub, 1994. Print.

அற்புதராஜ் அவர்களின் இதர ஆய்வு கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/arputharaj/quran_sura_3_7.html



Source :


http://www.isakoran.blogspot.in/2015/12/1-37.html