அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 28, 2010

பீஜேவிற்கு மறுப்பு: இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு

முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு மறுப்பாக இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. இறைக்குமாரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களை விட இயேசு எவ்விதம் விசேஷித்தவர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

இந்த புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட கடைசி இரண்டு மறுப்புக்களை கீழே தரப்பட்டுள்ள தொடுப்புக்களில் காணலாம்.

1. "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு:இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

2. இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே


இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்

JESUS IS THE UNIQUE SON OF GOD

ஆசிரியர்: சைலஸ்

அறிமுகம்:

"தேவ குமாரன் (இறைக்குமாரன்)" என்ற சொற்றொடர் பைபிளில் பல முறை வருகிறது. இவ்வார்த்தை பல நபர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த சொற்றொடர் இயேசுவிற்கு பயன்படுத்தப்படும் போது மட்டும், இதற்கு தனிப்பட்ட பொருள் உண்டு. கிறிஸ்து யார்? அவர் எவ்விதம் மற்றவர்களை விட வித்தியாசமானவர், பிதாவாகிய தேவனோடுள்ள அவரது உறவு எப்படிப்பட்டது என்பதை இந்த சொற்றொடர் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.

பைபிளில் அனேகர் "தேவ குமாரர்கள்" என்று அழைக்கப்பட்டு இருப்பதினாலே, இயேசுவும் தன்னை தேவகுமாரன் என்றுச் சொல்லும் போது, அது மற்றவர்களை குறிப்பது போல பொருள் கொள்ளவேண்டும் என்று இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள். அதாவது மற்றவர்களைப் போல, இயேசுவும் இறைக் குமாரன் என்று அழைப்பதற்கு காரணம், அவர் நல்ல செயல்களைச் செய்தார், இறைவனை மகிமைப்படுத்தினார், மற்றும் தாழ்மையுள்ளவராக இருந்தார் இன்னும் பல நற்செயல்களைச் செய்தார். ஆக, நல்ல செயல்கள் செய்யும் மனிதர்களை எப்படி தேவகுமாரர்கள் என்றுச் சொல்கிறோமோ, அது போலவே, இயேசுவும் இந்த வகையில் "தேவகுமாரன்" என்று அழைக்கப்பட்டார் என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்துக் கொண்டுள்ளார்கள். இஸ்லாமிய போதனையின் படியும், இஸ்லாமியர்களின் படியும், இயேசு தேவனின் தனிச்சிறப்பு மிக்க குமாரன் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இஸ்லாமிய விவாதம் புரியும் ஒரு இஸ்லாமியர், யோவான் 10ம் அதிகாரம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"இயேசுவும் 'தேவகுமாரன்' என்பதை ஒரு உருவகமாகவே பேசியுள்ளார், இதனை உருவகமாக எடுத்துக்கொள்ளாததினாலே, கிறிஸ்தவ சபை தங்கள் மத அடிப்படையை தகர்த்து இருக்கிறது" [அலி, த ரெலிஜியன் ஆஃப் இஸ்லாம், பக்கம் 40]

இந்த சொற்றொடர் பற்றி பைபிளில் வரும் வசனங்கள் பற்றி நாம் அலசுவதற்கு முன்பாக, ஒரு விவரத்தை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது, இந்த சொற்றொடர் குறிப்பிடப்படும் இடத்தில் வரும் இதர வசனங்களைப் பொருத்து (Context) இதன் அர்த்தம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, உதாரணத்திற்கு:

"சரி, இப்போது நான் சாலையை அடிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று நான் கூறினால், இதன் பொருள் என்ன?
(If I say, "Okay, it's time for me to hit the road", what does that mean?)

அல்லது

நான் எகிப்து நாட்டில் இருக்கும் போது, "நான் இரும்புத் துண்டு மீது உள்ளேன்" என்றுச் சொன்னால், இதன் அர்த்தம் என்ன?
(Or if I were in Egypt, and I said "I'm on a piece of iron", what would that mean?)

நான் கூடைப்பந்து விளையாட்டைப் பற்றி பேசும் போது, மைகேல் ஜோர்டனிடம் "BAD" என்றுச் சொன்னால் இதன் அர்த்தம் என்ன?

ஆக, அனேக நேரங்களில், அவ்வார்த்தை சொல்லப்பட்ட இடம், சூழல் மற்றும் நேரம் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயேசு தேவனின் "தனிச் சிறப்பான" குமாரன் என்பதற்கான ஆதாரங்கள்:

புதிய ஏற்பாடு, இயேசு, ஒரு "தனிச் சிறப்பான தேவ குமாரன்" என்றுச் சொல்கிறதா? அல்லது இதர மக்களை உருவகமாக கூறுவது போல இவரும் ஒரு "தேவகுமாரன்" என்ற தோரணையில் சொல்கிறதா?

புதிய ஏற்பாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் வசனம் யோவான் 3:16 ஆகும். இந்த வசனத்தில் இயேசு தன்னைத் தானே தேவ குமாரன் என்று குறிப்பிடுகின்றார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

"For God so loved the world that he gave his one and only Son that whosoever believes in him shall not perish but have eternal life." (John 3:16)

இந்த வசனத்தில் "ஒரே பேரான (one and only)" என்ற தமிழ் வார்த்தை கிரேக்க மூல மொழியில் "monogenes" என்ற வார்த்தையாகும். இதன் பொருள் "ஒருவரே பிறந்தார் (only born)" அல்லது "தனிப்பட்ட (sole)" என்பதாகும். "Vine's Expository Dictionary of N.T." என்ற புதிய ஏற்பாட்டு அகராதி, இதன் பொருளை இவ்விதமாக கூறுகிறது, அதாவது "இது ஒரு புகழ்ச்சிக்குரிய மற்றும் ஒருமையைக் குறிக்கும் வார்த்தையாகும்".

"Strong Concordance" என்ற அகராதி கூறும் போது, "Monogenes" என்ற இந்த வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன, அதாவது "Monos" மற்றும் "ginomai" என்பதாகும். Monos என்றால், ஒரே பேரான (only) என்பதாகும், "ginomai" என்றால், "உருவாக்குதல், பிறத்தல், ஆகுதல், மனிதனாக வருதல்" என்பதாகும்.

இதே வார்த்தை லூக்கா 7:12ல், ஒரு பையனை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது:

"அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்".

இந்த வசனத்திலும், "மோனோஜினஸ்" என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "ஒரே பேரான (only)" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல, லூக்கா 9:38ம் வசனத்திலும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

இயேசுவிற்கு கீழ்கண்ட வசனத்திலும் "மோனோஜினஸ்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

யோவான் 1:14 - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

ஒரு நிமிடம் யோவான் என்ன சொல்கின்றார் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மகியையும், மாட்சிமையையும் யோவான் எவ்விதம் குறிப்பிடுகின்றார் என்பதை கவனியுங்கள். இப்படிப்பட்ட ஒரு புகழ்ச்சி ஆதாமுக்கு கிடைக்கவில்லை. தாவீதும் புகழப்பட்டாரே ஒழிய ஆனால், இயேசு புகழப்பட்டது போல இந்த அளவிற்கு அவர் புகழப்படவில்லை. இயேசு மட்டுமே இந்த மகிமையும், புகழ்ச்சியும் பெற்றார். மேலும், "Vine's Expository Dictionary of N.T." இந்த வசனம் பற்றி கூறும் போது, இந்த கிரேக்க வசனம் இயேசுவிற்கு சூட்டிய இந்த மகிமை அவருக்கு தேவனோடுள்ள தனிச்சிறப்பான உறவுமுறையை குறிக்கிறது என்கிறது.

யோவான் 1:18 "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்".

இங்கு, இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரராக இருந்து, பிதாவின் மடியில் (Father's side) இருப்பதாக வெளிப்படுத்தப்படுகிறார். தேவனின் குமாரன் என்று அழைக்கப்பட்ட வேறு யாரும் இப்படி பிதாவின் மடியில் இருப்பதாக வெளிப்படுத்தப்படவில்லை.

இதே போல, யோவான் 3:18 மற்றும் 1 யோவான் 4:9ம் வசனங்களிலும் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி, எப்போதெல்லாம் இயேசு தேவகுமாரன் என்று அழைக்கப்படுகின்றாரோ அப்போதெல்லாம், அவர் தேவனின் தன்னிகரற்ற குமாரன் என்று பொருளாகும். தேவ குமாரன் என்ற முறையில் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2) எபிரேயர் முதல் அதிகாரம் உண்மையில் இயேசு யார் என்பதை விளக்குகிறது. இந்த முழு அதிகாரமும் இயேசுவின் தெய்வீகத் தன்மையை விளக்குகிறது, உதாரணத்திற்கு வசனம் 3ஐ கூறலாம்.

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.

"The Son is the radiance of God's glory and the exact representation of his being, sustaining all things by his powerful word. After he had provided purification for sins, he sat down at the right hand of the Majesty in heaven." (Hebrew 1:3)

3) இயேசு பிலாத்துவிற்கு முன்பு கொண்டு வரப்பட்டபோது, யூதர்கள் இவ்விதமாக கூறினார்கள்:

"யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்." (யோவான் 19:7)

இயேசு வெறும் உருவகமாக தன்னை தேவகுமாரன் என்று கூறியிருந்தால், யூதர்கள் அவரை "தேவதூஷணம் சொன்னான்" என்றுச் சொல்லி குற்றப்படுத்தி இருக்கமாட்டார்கள் [தேவதூஷணத்திற்கு தண்டனை மரணதண்டனையாகும், பார்க்க லேவியராகமம் 24:16]. யூதர்களுக்கு சங்கீதம் 82:6ம் வசனம் பற்றி நன்றாகத் தெரியும். ஒருவன் உருவகமாக தன்னை தேவனின் குமாரன் என்றுச் சொன்னால், யூதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவனை அவர்கள் தொந்தரவு செய்யமாட்டார்கள். யூதர்கள் ஏன் இயேசு மீது குற்றம் சுமத்தினார்கள் என்று கவனித்தால், அவர் தன்னை தன்னிகரற்ற, நித்திய தேவனின் குமாரன் என்று சொன்னதினால் தான் அவர்கள் அவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.

4) இயேசு மறுபடியும் தன்னை தேவகுமாரன் என்று கூறுகிறார், மற்றும் இதன் மூலம் தன்னுடைய தன்னிகரற்ற குமாரத்துவத்தை வெளிப்படுத்தினார், மத்தேயு 11:27:

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

கிறிஸ்து, யோவான் 5:22ல் தன்னை தேவனுடைய குமாரன் என்று மறுபடியும் கூறுகிறார், மற்றும் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

5) இயேசு, மத்தேயு 21:33-43ம் வசனங்களில், குத்தகைக்காரன் பற்றிய ஒரு உவமையை கூறினார். இந்த உவமையில் அந்த தோட்டத்தின் எஜமான் கடைசியாக தன் மகனை அந்த குத்தகைக்காரனிடம் அனுப்பி, தனக்கு வரவேண்டிய பாகத்தை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்புகிறார். அந்த குத்தகைக்காரனும் அவனது வேலைக்காரர்களும், இந்த எஜமான் அனுப்பிய அனேக வேலைக்காரர்களை தாக்கி சிலரை கொன்று விடுகின்றனர். கடைசியாக, அந்த எஜமானின் மகன் வந்த போது, அவனையும் கொன்றுவிடுகின்றனர்.

இந்த உவமையின் பொருள் என்னவென்றால், தேவன் அனேக தீர்க்கதரிசிகளை இஸ்ரவேல் மக்களிடத்தில் அனுப்பினார், இஸ்ரவேல் மக்கள் நீதியின் கனிகளை தரும்படி அழைக்க வேண்டி தீர்க்கதரிசிகள் வந்தார்கள். ஆனால், வந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் தாக்கி, அவமானப்படுத்தினார்கள். கடைசியாக, தேவன் தன் குமாரராகிய கிறிஸ்துவை அனுப்பினார், அவரையும் யூதர்கள் கொன்றார்கள். இந்த உவமையின் மூலமாக, இயேசு தன் எதிர்கால சிலுவை மரணத்தைப் பற்றி கூறினார்.

இந்த உவமையில் கூறப்பட்ட விவரத்தை கவனமாக பாருங்கள். அந்த எஜமானனுக்கு இருந்த இதர வேலைக்காரர்களை விட வித்தியாசமான உறவை இயேசு கொண்டுள்ளவர் என்பதைக் காட்ட தன்னை "குமாரன்" என்று கூறினார். இந்த உவமையின் படி, அந்த எஜமான அனுப்பிய வேலைக்காரர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள், ஆனால், கடைசியாக‌ வந்தவர் "மகனாக" இருந்தார்.

இயேசு தன்னிகரற்ற தேவகுமாரன் என்பதை புதிய ஏற்பாட்டில் இன்னும் அனேக வசனங்கள் உண்டு. இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரன் என்பதை நிருபிப்பதற்கு மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டு வசனங்களே போதும்.

தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் வசனங்கள்:

இங்கு, இஸ்லாமியர்கள் தங்கள் பொதுவான வாதங்களுக்கு ஆதாரமாக பயன்படுத்தும் வசனங்களை இங்கு பார்ப்போம். [இஸ்லாமியர்களின் கேள்விகளும், எனது பதில்களும் கீழே தரப்படுகிறது].

கேள்வி 1: இயேசு "மனுஷ குமாரன்" என்று அழைக்கப்பட்டார். இதன் பொருள் அவர் ஒரு வெறும் மனிதன் என்பதாகும். இயேசுவும் தன்னை அடிக்கடி "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டார் (உதாரணத்திற்கு மத்தேயு 8:20).

பதில் 1: "மனுஷ குமாரன்" என்ற சொற்றொடர், தானியேல் 7:13ம் வசனத்தில் சுட்டிக்காட்டப்படும் "மனுஷ குமாரன்" என்ற மேசியாவை (மஸிஹாவை) குறிப்பதாகும். குர்‍ஆன் கூட இயேசுவை மஸிஹா என்று அழைக்கிறது (குர்‍ஆன் 3:45 ஐ பார்க்கவும்).

கேள்வி 2: பலர் தேவனின் குமாரர்கள் என்று இயேசு கூட சொல்லியுள்ளார்:

யோவான் 10:34-36ம் வசனங்களில், இயேசு இவ்விதமாக கூறினார்: "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?" (பார்க்க சங்கீதம் 82:6). தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?


ப‌தில் 2: பழைய ஏற்பாடு, மக்களை தேவர்கள் அல்லது தேவ குமாரர்கள் என்றுச் சொல்வது அவர்கள் தேவனுடைய பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதால் தான் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இந்த இடத்தில், இயேசு தன்னையும் சேர்த்து தான் இப்படி உருவகமாக "தேவனுடைய குமாரர்" என்றுச் சொல்கிறார் என்று இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். ஆனால், இயேசு தன்னைப் பற்றி பேசும் போது, தனக்கும் பிதாவிற்கும் இடையே இருக்கும் உறவுமுறையைப் பற்றி பேசும் போது, அவரது தனித்தன்மை வாய்ந்த "குமாரத்துவம்", உருவகமாக சொல்லும் குமாரத்துவத்தைக் காட்டிலும் உயர்ந்தது, சிறந்தது என்று கூறுகிறார்.

கேள்வி 3: அனேகர் தேவனின் சேஷ்டபுத்திரர்கள் (மூத்த குமாரர்கள்) என்று அழைப்பட்டுள்ளார்கள். இதே நிலையில் தான் இயேசுவும் அழைக்கப்பட்டார் என்று நாம் கருதலாம் அல்லவா?

பதில் 3: ஒருவரை சேஷ்டபுத்திரன் என்று அழைத்தால், அதில் அனேக விவரங்கள் உள்ளடங்குகின்றன. யூத சட்டத்தின் படி ஒருவர் " சேஷ்டபுத்திரன் (மூத்த மகன்)" என்று அழைத்தால், அவனுக்கு பரம்பரை சொத்தில் சிறப்பான பாகம் கிடைக்கும், அதாவது மற்ற மகன்களுக்கு கிடைக்கும் பாகத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான சொத்து கிடைக்கும். அதே போல, தன் தந்தை இல்லாத காலங்களில் அல்லது மரணித்த பிறகு, அந்த குடும்பம் அனைத்திற்கும் இந்த மூத்த மகனே ஒரு ஆசாரியனாக (ஆன்மீக தலைவனாக) செயல்படுவான் (இந்த முறை லேவி என்ற வம்சத்திற்கு ஆசாரியத்துவம் (தேவாலய வேலைகள் செய்ய அனுமதி) கொடுத்த பிறகு, நிறுத்தப்பட்டுவிட்டது.)

பழைய ஏற்பாட்டில் "மூத்த குமாரன்" என்பது உருவகமாக கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 14:30ம் வசனத்தில் வரும் "தரித்திரரின் தலைப்பிள்ளைகள்" என்ற சொற்றொடர், யாரை குறிக்கிறது? இது ஏழைகள் எல்லாரிலும் அதிக ஏழையாக இருக்கும் நபர்களைக் குறிக்கிறது. யோபு 18:13ம் வசனத்தில் "மரணத்தின் மூத்தமகன்" என்றுச் சொல்வது, எதனை குறிக்கிறது? அது யோபுவிற்கு வந்த அந்த பயங்கரமான வியாதியைக் குறிக்கிறது. (தமிழாக்கத்தில் இந்த வியாதியை பயங்கரமான மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது). இந்த இடத்தில், இந்த சொற்றொடர் சொல்லப்பட்ட இடத்தையும், சூழ்நிலையையும் பொருத்து அர்த்தம் மாறுகிறது என்பதை கவனிக்கவும்.

இயேசு "சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் - First born over all creation" என்று அழைக்கப்படுகிறார் (கொலோசெயர் 1:15). இந்த அதிகாரம் அனைத்திலும், இயேசுவின் முக்கியத்தும், அவரின் ஆதிகால மேன்மை மற்றும் எல்லா படைப்பிற்கும் மேலுள்ள சர்வாதிகாரம் போன்றவைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன‌, ஏனென்றால், எல்லா படைப்பும் அவர் மூலமாக உண்டானது (பார்க்க வசனம் 16).

கேள்வி 4: யாத்திராகமம் 4:22,23 - "அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்".

இந்த‌ வ‌சன‌ங்க‌ள், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் கூட‌ தேவ‌னின் "சேஷ்ட (மூத்த‌) குமார‌ர்க‌ள்" என்று சொல்வ‌தாக‌ தெரிய‌வில்லையா?


ப‌தில் 4: தேவ‌ன் இஸ்ரேல் ம‌க்க‌ளை த‌ன்னுடைய‌ சேஷ்ட‌ புத்திர‌ர்க‌ள் என்று கூறுகிறார், ஏனென்றால், அவ‌ர்க‌ள் தேவ‌னால் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌ங்க‌ள் என்ப‌தினால் தான். ஆபிரகாமின் சந்ததிகளை குறித்து தேவ‌ன் வாக்கு செய்தார், அந்த‌ ச‌ந்த‌திக‌ளை எகிப்திலிருந்து விடுத‌லை அளிப்ப‌த‌ற்கு அனேக‌ அற்புத‌ங்க‌ளைச் செய்துக்காட்டினார், ம‌ற்றும் இஸ்ர‌வேல் என்ற‌ புதிய‌ நாட்டை உருவாக்கி த‌ன் மூத்த‌ குமார‌னாகிய‌ இஸ்ர‌வேலுக்கு அளித்தார்.

மேலும் விளக்கத்திற்கு ஓசியா 11:1ம் வசனத்தை கவனிக்கவும், "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்".

இந்த வசனத்தில் இஸ்ரவேல் நாட்டை தன் குமாரன் என்று அழைக்கிறார். இதே போல அனேக வசனங்கள் உண்டு. இந்த இடத்தில், தனக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையை உருவகமாக கூறுகிறார்.

கேள்வி 5: 2 சாமுவேல் 7:14 - "நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்;" இந்த வசனத்தில் தேவன், நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இயேசுவும் இதே நிலையில் வருகிறார் அல்லவா? அதாவது ஒருவர் தேவனின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் இருந்தால், அவர் தேவனின் குமாரன் என்று அழைப்படலாம் அல்லவா?

பதில் 5: இந்த வசனம் இடம்பெற்ற அனைத்து வசனங்களையும் படிக்கவும். பதினோராவது வசனத்திலிருந்து பதினேழாவது வசனம் வரை படித்துப்பாருங்கள். தேவன் "நான் பிதாவாக இருப்பேன்" என்றுச் சொல்கிறார், அப்படியானால், குமாரன் யார்? இந்த மொத்த வசனங்களையும் படிக்கும்போது, "குமாரன்" என்பது தாவீதுக்கு வரப்போகும் காலங்களில் பிறக்கும் வம்சத்தைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் சொல்லப்படும் போது, சாலோமோன் இன்னும் பிறக்கவில்லை, அதாவது அவர் கர்ப்பத்திலும் இல்லை. எல்லா வசனங்களையும் பார்க்கும்போது, சாலோமோன் மட்டுமல்ல, தாவீதின் சந்ததியில் பிறக்கும் அனைத்து ஆட்சி செய்யும் நபர்கள் அனைவரும் தேவனின் குமாரர்கள் தான். அதாவது, இந்த வசனங்களில் அவர் கொடுப்பேன் என்றுச் சொன்ன தண்டனைகள் அனைத்தும், சாலொமோனுக்கு மட்டுமல்ல, அவனுக்கு பின்பாக வரும் அனைத்து தாவீதின் வம்ச அரசர்களுக்கும் தான்.

தேவன் தாவீதோடு ஒரு தனிப்பட்ட வாக்குறுதியை செய்தார், இந்த வாக்குறுதியை தாவீதின் வம்சங்களோடு நிலை நிறுத்துவேன் என்று கூறினார். இந்த இடத்திலும்,அவர் உருவகமாக தாவீதின் அனைத்து வம்ச மக்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டதாக, உறவுமுறையை கொண்டுள்ளதாக கூறிகிறார் (இதன் விளக்கத்தை இங்கு படிக்கவும் - சங்கீதம் 89:26-37).

இயேசுவும் தாவீதின் வம்சத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 6: 1 நாளாகமம் 22:10 - "அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; ..."

இந்த வசனத்தில் கூறப்பட்டது போல, இயேசுவிற்கும் இது பொருந்துமல்லவா? அதாவது தேவனின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் இருப்பவர்கள் தேவனுக்கு குமாரர்களாக தனிப்பட்ட உறவுமுறையை உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? இயேசுவும் இதே போல தனிப்பட்ட உறவுமுறையைக் கொண்ட ஒரு நபி அல்லவா?


பதில் 6: இந்த வசனம் 2 சாமுவேல் 7:14ம் வசனத்தோடு சம்மந்தப்பட்டது. இதில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பிட்டு சாலொமோனுக்கு (தாவீதின் குமாரன்) சொல்லப்பட்டது. ஒன்பதாம் வசனத்தின் கடைசி பாகத்தை பார்க்கும் போது, "அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்" என்று தேவன் குறிப்பிட்டு சாலொமோனின் ஆட்சி காலத்தை குறித்துச் சொல்கிறார்.

இந்த வசனம் குறிப்பிடும் சூழ்நிலையை கவனித்தால், இது சாலொமோனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையைக் குறிப்பிடுகிறது. சாலொமோன் தாவீதின் குமாரன், மற்றும் சீக்கிரமாகவே இஸ்ரவேலுக்கு இராஜாவாக மாறப்போகிறார். அடுத்த வசனத்தை (11) பார்க்கும்போது, தாவீது சாலொமோனை குமாரன் என்று அழைக்கிறார். மகன் என்ற சொல்லின் அர்த்தம் புரியவேண்டுமானால், அந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை பார்க்கவேண்டும்.

கேள்வி 7: எரேமியா 31:9 - "...இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்".

இந்த வசனத்தில் யாக்கோபு (இஸ்ரவேல்) மற்றும் எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரன் என்று அழைக்கப்படுகின்றார்கள். இரண்டு பேர் எப்படி சேஷ்ட புத்திரராக இருக்கமுடியும், மற்றும் இயேசு மூன்றாவது சேஷ்டபுத்திரரா?


பதில் 7: முதலில், தேவன் இஸ்ரவேலுக்கு பிதாவாக இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலே எப்பிராயீம் இஸ்ரவேல் நாட்டை குறிக்கிறது. ஏழாம் வசனத்தை பார்க்கும்போது, "யாக்கோபை" இஸ்ரவேல் நாடு என்கிறார். [எப்பிராயீம் (இஸ்ரவேல் நாடு) தேவனோடுள்ள உறவுமுறைக்காக குறிப்பிடப்படுகிறது].

கேள்வி 8: சங்கீதம் 2:7 - இந்த சங்கீதத்தில் தாவீது தன்னை தேவன் பெற்றார் (ஜெநிப்பித்தார்) என்றுச் சொல்கிறார். தாவீதைப்போல, இயேசுவும் தேவன் ஜெநிப்பிக்கப்பட்ட இன்னொரு குமாரன் என்று ஏன் கருதக்கூடாது.

பதில் 8: இந்த சங்கீதத்தில் அனேக தத்துவங்கள் அடங்கியுள்ளன. தேவன் தாவீதை குமாரன் என்று அழைப்பதை புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அக்காலத்தில் உருவகம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். அக்கால கிழக்கத்திய உறவு முறைகளில், ஒரு பெரிய அரசன் மற்றும் அவனுக்கு கீழாக இருக்கும் குருநில அரசனுக்கும் இடையே இருக்கும் உறவு முறை என்பது, எஜமான் மற்றும் வேலைக்காரன் என்ற உறவுமுறையோடு மட்டும் நின்றுவிடாமல், தந்தை மகன் என்ற உறவுடனும் அழைக்கப்பட்டது. தாவீது, எஜமானனாகிய தேவனின் ஊழியக்காரன் மற்றும் அதே நேரத்தில் தேவனின் "மகன்" ஆவார். இதனை 2 சாமுவேல் மற்றும் 1 நாளாகத்தில் நாம் காணலாம்.

கேள்வி 9: இயேசுவிற்கு உலகப்படியான தந்தை இல்லை, ஆகையால் அவர் இறைக்குமாரன் என்றுச் சொன்னால், ஏன் ஆதாமையும் நாம் இறைக்குமாரன் என்றுச் சொல்லக்கூடாது?

பதில் 9: லூக்கா 3:38ன் படி, ஆதாம் தேவனின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். தேவன் படைத்த முதல் மனிதன் ஆதாம் என்று எங்களுக்குத் தெரியும் (ஆதியாகமம் 5:1). ஆதாம் தேவன் படைத்த முதல் மனிதனாக இருந்ததினாலே அவரை உருவகமாக தேவனின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார். உபாகமம் 32:6ம் வசனத்தில் இந்த விவரம் தெளிவாக்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் தான் படைத்த தேவன் பிதாவாக சித்தரிக்கப்படுகிறார்.

ஆதாமுக்கும் இயேசுவிற்கும் அனேக வித்தியாசங்கள் உண்டு, அவைகளில் ஒன்று, ஆதாம் பாவியாக இருந்தார், ஆனால், இயேசு பாவம் செய்யவில்லை. ஆதாம் படைக்கப்பட்டார் ஆனால், இயேசு தன்னைப் பற்றி கூறும் போது: "உலகம் உண்டாவதற்கு முன்பே தான் இருப்பதாக கூறினார்" (யோவான் 17:5). இன்னும் அனேக வித்தியாசங்கள் உண்டு. இயேசு ஆதாமைப் போல அல்லாமல் அவர் பலவகைகளில் வித்தியாசமானவர்.

கேள்வி 10: எபிரேயர் 7:3ஐ பற்றி என்ன கூறுகிறீர்கள்? - "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், ...." என்று மெல்கிசேதேக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், இயேசுவும் மெல்கிசேதேக்கைப் போல ஒரு தேவகுமாரனாக ஏன் இருக்கமுடியாது.

பதில் 10: மெல்கிசேதேக்கு பற்றிய இந்த விவரங்கள் மிகவும் முக்கியமானவைகளாகும். மெல்கிசேதேக்கு என்பவர் யார் என்பதைப் பற்றிய அனேக விளக்கங்கள் உள்ளன, ஆனால், எல்லா விளக்கங்களும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதில்லை. பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட மெல்கிசேதேக்கு கிறிஸ்து தான் என்று சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் அவர் தேவனால் படைக்கப்பட்ட சிறப்புமிக்க ஒரு நபர் என்று கூறுகிறார்கள். பைபிளில் மெல்கிசேதேக்கு உண்மையில் யார் என்று அறிய அதிகமான விவரங்கள் இல்லை. ஆகையால், நான் கீழ்கண்ட‌ முடிவிற்கு வருகிறேன்.

என்னுடைய கருத்தின் படி, அவர் முழுமையான ஒரு மனிதனாக இருந்தார், பிறந்தார் வாழ்ந்தார் மற்றும் மரித்தார் என்பதாகும். எபிரேய நிருப ஆக்கியோன், "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" என்று சொல்லும் போது, மெல்கிசேதேக்கைப் பற்றி இரண்டு வகையான விவரங்களைச் சொல்கிறார்.

1) இவரைப் பற்றிய வம்ச வரலாற்று விவரங்கள் அல்லது பின்னணி விவரங்கள் எதுவும் தரப்படவில்லை.

2) இவரது ஆசாரியத்துவம் நிரந்தரமானது. எபிரேய நிருபம், மெல்கிசேதேக்கு என்பவர் ஒரு தெய்வீக அழிவில்லாத மனிதர்/அரசர்/ஆசாரியர் என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக பழைய ஏற்பாட்டில் வரும் அனேக முக்கியமான் நபர்கள் பற்றிய பின்னணி விவரங்கள், வம்சா வழி விவரங்கள் தரப்படுவது போல, இவருக்கு தரப்படவில்லை என்பதைச் சொல்கிறது.

கடைசியாக, இயேசுவின் ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கைப் போல நிரந்தரமானவது என்பதை எபிரேய நிருபம் சொல்கிறது.

இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், எபிரேய நிருபத்தின் ஆசிரியர், இயேசுவின் தெய்வீகத் தன்மையையும், அவர் உண்மையாக யாராக இருக்கிறார் என்பதை நிருபிப்பதற்காகவே இந்த நிருபத்தை எழுதியுள்ளார். எபிரேய நிருபத்தின் சுருக்கம், இயேசுவின் உன்னத்தன்மை மற்றும் தேவனின் கிருபைக்கு மத்தியஸ்தராக இயேசு வெளிப்படல் போன்றவற்றை சொல்கிறது. இந்த நிருபத்தின் முதல் அதிகாரம் இயேசுவின் தனித்தன்மை வாய்ந்த குமாரத்துவத்தைப் பற்றி விவரிக்கிறது. இந்த எபிரேய நிருபம் மற்ற எல்லா மனிதர்கள் மற்றும் தேவதூதர்கள் அனைவரையும்விட இயேசு எவ்விதம் உயர்ந்தவர் சிறந்தவர் என்பதை காட்டுகிறது.

கேள்வி 11: இயேசு உண்மையாகவே தேவகுமாரனாக இருந்தால், ஏன் பிசாசுக்கள் அதைக் குறித்து சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டார்(லூக்கா 4:41ஐ பார்க்கவும்). இப்படி அவர் கட்டளையிட்டதினால், அவர் தேவகுமாரன் என்பதை மறுக்கிறார் என்பது விளங்குகிறதல்லவா?

பதில் 11: முதலாவதாக, இயேசு எந்த சமயத்திலும் தான் தேவகுமாரன் இல்லை என்று சொல்லவில்லை, அதனை மறுக்கவும் இல்லை. மத்தேயு 26:63,64ம் வசனங்களில், பிரதான ஆசாரியர் கேள்வி கேட்டபோது, அதற்கு இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்:

".... அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; ..." என்று கூறினார்.

யோவான் 3:16ல், இயேசு தன்னைத் தானே ஒரு தனிச்சிறப்பு மிக்க குமாரன் என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவதாக, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை பிசாசுக்களும் அறிந்திருந்தன. அவைகள் அவருக்கு கீழ்படிந்தன (மாற்கு 1:25).

மூன்றாவதாக, இந்த நிகழ்ச்சி, இயேசு செய்த ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் நடைபெற்றது. இயேசு தன்னுடைய நற்செயல்கள் மூலமாக தான் உண்மையான மேசியா (மஸிஹா) என்பதை நிலைநாட்ட விரும்பினார். அந்த சமயத்தில் யூதர்கள் தங்களை ரோமர்களின் ஆட்சியிலிருந்து விடுதலையாக்க மேசியா வர காத்திருந்தனர். ஆனால், இதனை இயேசு செய்யப்போவதில்லை (இராணுவத்தின் மூலம் இரட்சிப்பை யூதர்களுக்கு தரப்போவதில்லை). ஆனால், அதற்கு பதிலாக தன்னுடைய நற்செயல்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக தான் மேசியா என்பதை சாதாரண மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்பினார். நற்செயல்கள் மூலமாகத் தான் மேசியா அறியப்படவேண்டும். இப்படிப்பட்ட ஆரம்பகால ஊழியத்தின் நேரத்தில் பிசாசுக்கள் சத்தமிட்டு, இவர் தான் தேவகுமாரன் என்று அறிக்கையிட அவர் விரும்பவில்லை. ஆனால், இதே நேரத்திலும், இயேசு தன் சீடர்களுடன் தனிமையாக பேசும் போதும், மற்றும் சத்தியத்தை அறியவேண்டும் என்று விரும்புகின்ற தனிமனிதர்களிடத்திலும், தான் தேவகுமாரன் என்பதை அவர் அங்கீகரித்தார், மறுக்கவில்லை (பார்க்க யோவான் 3ம் அதிகாரம்).

அதிகபடியான விவரங்கள்: இயேசு தன்னைத் தானே தேவகுமாரன் என்று சொன்ன வசனங்கள், அல்லது பிதாவினால் "இவர் என் குமாரன்" என்றுச் சொன்ன வசனங்கள்

யோவான் 17:1-5
கவனிக்கவும், இயேசு கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்த விண்ணப்பம் இதுவாகும். உலகம் உண்டாவதற்கு முன்பாக இயேசு தேவனோடு இருந்தார் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.

யோவான் 5:18-27 இந்த வசனங்களில் இயேசு தான் தேவகுமாரன் என்று 10 முறை கூறுகிறார்.

யோவான் 8:36, யோவான் 10:36 மற்றும் யோவான் 11:4

மத்தேயு 17:5 "இயேசு தன் குமாரன்" என்று தேவன் தாமே இங்கு கூறுகிறார்

மத்தேயு 22:2 இயேசு, தான் "ஒரு இராஜாவின் குமாரன்" என்று உவமையாக கூறுகிறார்.

மத்தேயு 26:63, 64 இயேசு பிலாத்துவிடம் "தான் தேவகுமாரன்" என்று பதில் அளிக்கிறார்.

லூக்கா 3:22 இயேசுவை தேவன் தம்முடைய குமாரன் என்று அழைக்கிறார்.

லூக்கா 1:35 மரியாளிடத்தில் பேசும் போது கூட, தேவ தூதன் "இவர், தேவனுடைய குமாரனாவார்" என்று கூறுகிறார்.

ஒரு எடுத்துக்காட்டு:

நம்முடைய நாடு ஒரு மனிதனால் ஆளப்படுகின்றது, அவரை நாம் ஜனாதிபதி (பிரசிடென்ட்) என்கிறோம். இதே போல, அனேக நிறுவனங்களின் தலைவர்கள் தனி மனிதர்களாக (ஆண்கள் (அ) பெண்கள்) இருக்கிறார்கள், அவர்களையும், நாம் பிரசிடென்ட் என்றே அழைக்கிறோம். இந்த இரண்டு வகையான பிரசிடென்ட்களும் சமமானவர்களா? இல்லை. வெள்ளை மாளிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு நபரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும், அதே போல ஒரு நிறுவனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும் இரண்டும் ஒன்றா? இல்லை. அதாவது எபிசி நிறுவனத்தின் பிரசிடென்ட்க்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரசிடென்ட்க்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதா? ஆம் என்பது தான் பதில்.

இதே போலத்தான், "தேவ குமாரன்" என்று பலருக்கு பைபிள் சூட்டும் போதும், "தேவகுமாரன்" என்று இயேசுவை அழைக்கும் போதும், மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

முடிவுரை:

பைபிள் அனேகரை தேவக்குமாரர்கள் என்று உருவகமாக அழைப்பது உண்மை தான். ஆனால், இதே பொருளில் இயேசுவையும் அழைக்கிறது என்று கருதுவது தவறாகும். வேத வசனங்களின் அடிப்படையில், உருவகமாக தேவகுமாரன் என்று மற்றவர்களை அழைப்பதற்கும், அதே போல இயேசுவை தேவகுமாரன் என்று அழைப்பதற்கும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள உயரத்தின் அளவிற்கு வித்தியாசம் உள்ளது. இயேசுவை தேவகுமாரன் என்று பைபிள் அழைப்பது போல, வேறுஒருவரையும் பைபிள் இப்படி அழைப்பதில்லை.

ஆங்கில மூலம்: JESUS IS THE UNIQUE SON OF GOD

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/silas/sonofgod.html


http://isakoran.blogspot.com/2010/07/blog-post_7469.html

July 27, 2010

நோம்பு குறித்து இயேசுக் கிறிஸ்து என்ன கூறினார்


இஸ்லாமிக் இன்பர்மேஷனுக்கு மறுப்புக்கள்


நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ன கூறினார்

ஷப்பீர் அலி கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

இயேசு "நாற்பது நாட்கள் இரவும் பகலும் நோம்பு (உபவாசம்) இருந்தார்" என்று மத்தேயு சுவிசேஷம் சொல்கிறது (மத்தேயு 4:21). லூக்கா சுவிசேஷம் இந்த உபவாசம் பற்றி இன்னும் சில விவரங்களைக் கூறுகிறது "அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று" (லூக்கா 4:2). இயேசு உபவாசம் இருந்தார், ஆகையால் அவரை உண்மையாக பின்பற்றுபவர்கள், அவரது போதனையின்படி அவர்கள் கூட உபவாசம் இருக்கவேண்டும். இயேசு கூறினார்: "நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;" (யோவான் 8:31).

இயேசுவிடம் சீடர்கள் பற்றி மக்கள் குறைகூறினார்கள் "யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்." (லூக்கா 5:33). ஆனால், இயேசு நான் அவர்களோடு இருக்கும் போது சீடர்கள் உபவாசம் செய்யமாட்டார்கள், ஆனால், தான் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அவர்கள் உபவாசம் செய்வார்கள் என்று கூறினார், "அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்" (லூக்கா 5:35). இதனால், தான் தேவனுக்காக எப்படி உபவாசம் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் ( மத்தேயு 6:16-18). அவர்கள் உபவாசம் செய்யவில்லையானால், இயேசுவின் இந்த கட்டளைகள் வீணாக இருக்கும்.

அதன் பிறகு சீடர்கள் உபவாசித்ததாக பைபிள் கூறுகிறது: "அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி" (அப்போஸ்தலர் 13:3), மற்றும் அவர்கள் "உபவாசித்து ஜெபம்பண்ணினார்கள்" (அப்போஸ்தலர் 14:23). உபவாசம் என்பது தேவனுடைய ஊழியர் செய்யவேண்டியது என்று பைபிள் கூறுகிறது (2 கொரிந்தியர் 6:5). அடிக்கடி உபவாசம் செய்வது இயேசுவின் சீடருக்கு அடையாளமாகும்.

நாம் மேலே காட்டிய லூக்கா 5:33ம் வசனத்தின்படி, 1) உபவாசம் என்பது உணவையும் தண்ணீரையும் தவிர்ப்பதாகும், 2) இயேசு சீடர்களோடு இருக்கும் போது சீடர்கள் உபவாசம் செய்யவில்லையானாலும், இயேசு மட்டும் உபவாசம் இருந்தார், அப்படி இல்லாமல் இருந்திருந்தால், இயேசு மீது கூட குற்றம் சுமத்தியிருப்பார்கள். இதுமட்டுமல்ல, யூத ரபிக்கள் கூட உபவாசம் இருந்தார்கள் (மத்தேயு 9:14 மற்றும் மாற்கு 2:18). இயேசுவை கூட ரபி என்று அழைத்தார்கள் (பார்க்க யோவான் 1:38, 3:2, 6:25 மற்றும் மத்தேயு 23:8). ஆக அவர் கூட உபவாசம் இருந்திருக்கிறார்.

ஒரு பையனிடமிருந்து பிசாசை துரத்த சீடர்களால் முடியவில்லை, ஆனால், இயேசு அதை துரத்தினார். இதைப் பற்றி இயேசுவிடம் சீடர்கள் கேட்ட போது, இப்படிப்பட்ட பிசாசு, ஜெபத்தினாலும் உபவாசத்தினாலே மாத்திரம் துரத்தமுடியும் என்று இயேசு பதில் அளித்தார் (மாற்கு 9:29).

இது நமக்கு எதைக் காட்டுகின்றது என்றால், சீடர்கள் உபவாசம் இருப்பதில்லை, அதனால் அவர்களால் பிசாசை துரத்தமுடியவில்லை, இயேசு உபவாசம் செய்ததினால், அவரால் துரத்தமுடிந்தது. பைபிளை பிரதி எடுப்பவர்களில் சிலர், "உபவாசம்" என்ற வார்த்தையை விட்டுவிட்டு பிரதி எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு ஆர் எஸ் வீ மொழியாக்கத்தில் இப்படி உள்ளது, அதாவது இதன்படி பார்த்தால், இயேசுவின் சீடர்கள் ஜெபம் கூட செய்யவில்லை என்றுச் சொல்வதாக பொருள் படுகின்றது, இது முடியாத காரியமாகும். இதனால் தான் கத்தோலிக்க மொழியாக்கத்தில் (ஆர் எஸ் வீ) "உபவாசம்" என்ற வார்த்தை பழையபடி சேர்க்கப்பட்டது. ஆன்சியன்ட் ஈஸ்டன் டெக்ஸ்டின் புதிய ஏற்பாட்டிலும் உபவாசம் என்ற வார்த்தை உள்ளது (மாற்கு 9:29)
.

உபவாசம் என்பது வெறும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மட்டும் சொந்தமான ஒரு பழக்கமல்ல, அனேக பழங்குடி மதங்களிலும் உபவாசம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த கட்டளையைப் பொருத்தவரையில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இதனை சரியாக பின்பற்றுவதில்லை என்றே சொல்லவேண்டும். ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோம்பு (உபவாசம்) இருக்கவேண்டும் என்று குர்‍ஆன் சொன்னாலும், பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் மட்டுமே அளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ளப்படுகிறது. இது ரமலான் அல்லாத இதர மாதங்களில் தனிப்பட்ட முறையில் உட்கொள்ளப்படும் உணவை விட அதிகமாக உள்ளது. நான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற பாகிஸ்தானிய உணவு விடுதியில் ரமலான் மாதத்தில் கண்டு இருக்கிறேன், அதாவது இஸ்லாமியர்கள் எப்போது மாலை வரும் என்று மிகவும் ஆவலுடன், பொறுமையிழந்து உணவு விடுதியில் சோர்வாக உட்கார்ந்து இருப்பார்கள், எப்போது சூரியன் அஸ்தமிக்கும், எப்போது சாப்பிடலாம் என்று காத்திருப்பார்கள்.

ஷப்பீர் அலி:

இந்த குழப்பத்திலிருந்து இறைவன் நம்மை காப்பாற்றியிருக்கின்றான், அதாவது அவரது கடைசி வேதமாகிய திருத்தப்படாத குர்‍ஆனில் உடல் நலம் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையாளரும், வருடத்தில் ஒரு மாதம் நோம்பு இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். இன்று இயேசுவின் உண்மை சீடர்கள் இறைவனின் கட்டளையின்படி நோம்பு இருக்கிறார்கள். முஸ்லீம்கள் இயேசுவின் மற்றும் இதர எல்லா தூதர்களின் உண்மையான சீடர்கள் ஆவார்கள்
.

இந்த இஸ்லாமியர் சொல்லும் விவரங்களில், முடிவுரையில் அனேக பிரச்சனைகள் உள்ளது:

1. மக்கள் வெளிப்படையாகவோ அல்லது தனிமையிலோ உபவாசம் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறானதாகும். இப்படிப்பட்ட விதத்தில் உபவாசம் இருந்த அக்கால மத ஏமாற்றுக்காரர்களை இயேசு சரியாக விமர்சித்துள்ளார். ஒரு சமுதாயம் (அரசாங்கம் அல்லது மத சமுதாயம்) மக்கள் உபவாசம் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், உண்மையாகவே அந்த சமுதாயம் மக்களின் மகிழ்ச்சியை அபகரித்துவிடுகிறது என்று பொருளாகும், அதாவது இறைவனின் மீது அன்பு கூர்ந்து செய்யக்கூடிய உபவாசம் என்பது சட்டத்திற்கு பயந்து கடமைக்காக செய்யக்கூடியதாக மாறிவிடுகின்றது. இப்படி பயப்பட்டு உபவாசம் செய்வது இறைவன் மீதுள்ள அன்பினால் செய்யப்பட்டதாக கருதப்படாது. இப்படி கட்டாயப்படுத்தப்பட்டு செய்யப்படும் உபவாசம், இயேசு சொன்ன உபவாசம் போன்றதல்ல, இஸ்லாமியர்களின் உபவாசம் இயேசுவின் போதனைக்கு முரணானது.

2. தேவனுக்கு மட்டுமே நம் உபவாசம் (நோம்பு) தெரியவேண்டும் என்று இயேசு கூறினார். அந்தரங்கத்தில் அல்லாமல், அம்பளத்தில் உபவாசம் இருந்தால் (நாம் உபவாசம் இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு தெரியும் படி செய்தால்), அதன் பலனை நாம் அடைந்துவிட்டோம் என்று பொருள், அதாவது சமுதாயத்திற்கு நாம் உபவாசம் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம், பலனை பெற்றுவிட்டோம் என்று பொருளாகும். ஆனால், நாம் இரகசியமாக உபவாசம் இருப்போமானால் (அதிகமாக தம்பட்டம் அடிக்காமல் உபவாசித்தால்) சொர்க்கத்தில் இறைவனுடன் நமக்கு அதன் பலன் கிடைக்கும். ஆக, இன்னொரு முறைச் சொல்கிறேன், ரமலான் நோம்பு என்பது யாருக்கும் தெரியாமல், இறைவனுக்கு மட்டும் தெரியும் படி செய்யப்படாமல், ஊர் மக்கள் அறியும் படி செய்யப்படுவதினால், இது இயேசுவின் போதனையின் படி செய்யப்பட்ட நோம்பு அல்ல.

3. நாம் நோம்பு இருப்பதின் நோக்கமென்ன? நாம் நோம்பு இருப்பதினால் இறைவனை திருப்திப்படுத்தி நம்முடைய பாவங்களை அதன் மூலம் கழுவிக்கொள்ளலாமா? இல்லை. நம்முடைய பாவங்களை இயேசுக் கிறிஸ்து மட்டுமே நீக்கமுடியும். நோம்பு இருப்பதோ அல்லது இதர நல்ல காரியங்களை செய்வதோ, மகா பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நம்மை பிழையற்றவர்களாக மாற்றமுடியாது. நம்மை பிழையற்றவர்களாக மாற்றுவது இயேசுவின் இரத்தம் மட்டுமே. நாம் இயேசுவை நம் உள்ளத்தில் அங்கீகரித்துவிட்டால், பிறகு உபவாசம் மூலமாக நாம் தேவனுடனான நம்முடைய உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். எனினும், இயேசு சொன்னவற்றை நாம் பின்பற்றவேண்டும், அதாவது நம்முடைய உபவாசம் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு மட்டும் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும், இது தேவன் மீது நாம் வைத்துள்ள அன்பின் அடையாளமாகவும், சக மனிதர்கள் மீதுள்ள நம்முடைய அன்பின் அடையாளமாகவும் இருக்கவேண்டும். ஆக, யார் யாரெல்லாம் இயேசுவை தங்கள் இறைவனாக இரட்சகராக அங்கீகரித்துள்ளார்களோ,யார் யாரெல்லாம் இயேசுவின் போதனைகளை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் மட்டுமே இயேசுவின் "உண்மையான சீடர்களாக" கருதப்படுவார்கள்.

ஆன்ட்ரூ வார்கோ

ஆங்கில மூலம்: Responses to "Islamic Information" - What Jesus on whom be peace said about Fasting?

ஷப்பீர் அலி மற்றும் இஸ்லாமிக் இன்பர்மேஷனுக்கு அளித்த மறுப்புக்கள்


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/responses/shabir-ally/fasting.html




July 26, 2010

பேராசிரியரை தாக்குதல் நடத்தும் பிஎப்இயின் திட்டம் 3 முறையும் தோல்வி.: ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பேராசிரியரை தாக்க நாங்க மூணு முறை முயற்சி செய்த்தது தோல்வியில் முடிந்தது. நான்காவது முறைதான் வெற்றிபெற்றோம் என கைது செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்டை சேர்ந்த முக்கிய குற்ற்வாளி யூனிஸ் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அது வெற்றிபெறாததால் நான்கு சக்கர வாகனம் வாங்கி தங்களது திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறியுள்ள இவர் பாப்புலர் ப்ரண்ட்தான் இத்தாக்குதலுக்கு பின்னால் என்பதையும் ஒப்புகொண்டுள்ளார்.

சட்டம் எதையோ சொல்லட்டும்.. நாங்க நினைப்பதைதான் செய்வோம் என்று திட்டமிட்டு செயல்படும் இப்படிப்பட்ட இயக்கங்களால் நாட்டுக்கு கேடு வராதிருக்க எல்லோரும் இறைவனை இறைஞ்சுவோம்

July 24, 2010

யானைக்கு மதம் பிடித்தால்...(விடியோ)

மனிதனுக்கு எந்த மதம் பிடித்திருக்கிறதோ அந்த மத்தை போல தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான். ஆனால் யானைக்கு மதம் பிடித்தால் சொல்லவே வேண்டாம். ஊரே அல்லோல கல்லோலம் பட்டுடும். அப்படிதான் கடந்த வாரம் கோயிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு யானைக்கு மதம் பிடித்தது.கடவுள் சேவைக்கு பக்குவபடுத்தவேண்டும் என்ற பெயரலால் யானைக்கு கொடுக்கும் துன்புறுத்தல் கொஞ்சம் அதிகமாக போகும்போது இப்படிதான் தலைகெட்டு திறிய நேரிடும். மதம் பிடித்த யானைக்கு பயந்து பொதுமக்களும் ஓட்டம். யானை பாகனும் ஓட்டம். என்ன செய்ய உயிர் பயம்.. இரயில் நிலையம், சாலை வழி என எல்லா இடங்களையும் இந்த யானை கதி கலங்க வைத்துவிட்டது. இறுதியில் ஒரு வழியாக மயக்க ஊசி போட்டு அதை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர் வனதுறையினர். மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனியேனும் இவைகளை துன்புறுத்துவது கொஞ்சம் நிறுத்தப்பட்டும்.

July 23, 2010

இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!.


இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...


முன்னுரை:  முஹம்மதுவை அவமதித்ததற்காக ஒரு பேராசியரின் கைகளை இஸ்லாமியர்களில் சிலர் வெட்டினார்கள். அதைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையை கீழே முதல் கட்டுரையாக படிக்கவும், அதற்கு வந்த பின்னூட்டத்திற்கான பதிலை இரண்டாம் கட்டுரையாக படிக்கவும்.

1) முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்

2) வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்

வெட்டப்பட்ட ஜோசப் அவர்களுக்கு இன்னொரு இஸ்லாமிய குழு இரத்ததானம் செய்ததாக ஒரு செய்தியை தினமலரில் படித்தேன்.  மக்கள் மனதில் இப்போது தான் குழப்பம் ஆரம்பமாகிறது. அதாவது குழந்தையை கிள்ளியும் விட்டுவிட்டு, அழுதுக்கொண்டு இருக்கும் குழந்தையை தாலாட்டவும் வந்துவிட்டார்கள் என்றுச் சொல்லும் சொற்றொடருக்கு ஏற்ப ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.

முதலில் தினமலர் செய்தியை படிக்கவும்:

கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.




இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள் உரித்தாகுக.

அனேக தானங்களில் இரத்ததானம் மிகவும் சிறந்தது, அதாவது தங்கள் உடலில் உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் இரத்தத்தை கொடுப்பது என்பது மிகவும் போற்றுவதற்குரியது. ஆகையால், இரத்த தானம் செய்து காயப்பட்ட ஜோசப்பிற்கு உதவிய இஸ்லாமியர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் அனேகம் உள்ளன. அதாவது, 

1) தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவை அவமதித்த ஒருவருக்கு, இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்து இருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.  (ஆம, இதை நான் சிந்துப்பார்க்கவே இல்லையே என்று சிலர் இப்போது தலையை சொறிந்துக்கொள்வார்கள்)


2) இப்படி தங்கள் மார்க்கத்தலைவரை தாக்கி எழுதியவருக்கே இரத்ததானம் செய்தவர்களாகிய இவர்களைக் கண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது (அன்பான மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா? அல்லது சட்டத்தின் படி தண்டனை பெற விட்டுவைக்காமல் கைகளை வெட்டிய அந்த இஸ்லாமியர்களைக் கண்டு இஸ்லாம் இப்படிப்பட்டது (அடாவடி மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா?

இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, இஸ்லாமை தோற்றுவித்தவரும், இஸ்லாமின் ஆணிவேராக இருப்பவரும், இஸ்லாமியர்கள் வழிகாட்டியாக இருப்பவருமான முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது என்று தீர்மானித்தால், அது மிகச்சரியாக இருக்கும். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திற்கும் பொருந்தும், அதாவது தோற்றுவித்தவர் எவ்வழியோ தொடர்பவர்களும் அவ்வழியே (சிலர் வேறு மாதிரியாக நடந்துக்கொண்டாலும் சரி).

இஸ்லாமியரல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்: முஹம்மதுவின் வழிகாட்டல்: ஒரே ஒரு உதாரணம்

இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று அனேக விவரங்களைச் சொல்லியுள்ளார், அவைகளில் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் ஹதீஸ்களிலிருந்து, முஹம்மது சொன்ன ஒரு கட்டளை அல்லது அறிவுரை: அதாவது யூதர்கள் கிறிஸ்தவர்களை வழியில் கண்டால், அவர்கள் நெருக்கமான வழியில் செல்லும்படி செய்யுங்கள், அல்லது கட்டாயப்படுத்துங்கள் என்று முஹம்மது இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறார். அவர் எதைச் சொல்வாரோ அதை ஒரு மயிரிழையும் பிசகாமல் இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள், இதற்கு சந்தேகமே இல்லை.

ஒரே வழியில் செல்பவர்கள் அவரவர் வழியில் செல்ல விட்டுவிடவேண்டியது தானே! முஹம்மது அவர்களே... ஏன் இப்படி மக்களின் மனதிலே வெறுப்புணர்ச்சியை ஊட்டுகிறீர்கள்?

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

இப்போது சில விவரங்களை அலசுவோம் வாருங்கள்.

இரத்த தானம் செய்த முஸ்லீம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களா?

மேலே படித்த முஹம்மதுவின் கட்டளையை படிக்கும்போது, சில விவரங்கள் தெளிவாக புரிகின்றது, அதாவது

1) இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் கடுமையான நடந்துக்கொள்ளவேண்டும்.
2) அவர்களை இடுக்கமான வழியில் செல்லும்படி கட்டாயப்படுத்தவேண்டும்,
3) அந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் வழியில் செல்லும் இஸ்லாமியர்களுக்கு எந்த கெடுதியும் செய்யவில்லையானாலும் சரி, அவர்களை இடுக்கமான வழியில் செல்லச் செய்யவேண்டும், அதாவது இஸ்லாமியர்களின் கை உயர்ந்து இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்துத் தான் செல்லவேண்டும் என்று காட்டவேண்டும்.
4) முஸ்லீம்களின் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டு, மற்ற மார்கத்தவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை போதிக்காமல், ஒற்றுமையை குலைக்கும் விதமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய நபி கூறியுள்ளார்.

ஆனால், 

1) இன்று, தங்கள் நபி பற்றி அவதூறாக எழுதியவருக்கு இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்துள்ளார்கள்.
2) இப்படி கைகளை வெட்டுவது தவறு என்று கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்

நாம் என்ன முடிவு எடுக்கப்போகிறோம்?

இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்கள் முஹம்மது சொன்னது போல செய்யாமல், முஹம்மதுவையே அவதூறாக பேசியவருக்கே இரத்ததானம் செய்து இருப்பதினால், இந்த இஸ்லாமியர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா?

ஒரு வேளை முஹம்மது இப்போது இருந்திருந்தால், இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களிடம் என்ன சொல்லியிருப்பார். என்னை திட்டியவருக்கே நீங்கள் உதவி செய்ய சென்றுவிட்டீர்களோ? இரத்தம் கொடுக்க முன் வந்துவிட்டீர்களோ? நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யாமல், அவரின் எதிரிகளுக்கு உதவி செய்துவிட்டீர்களே என்று கூறியிருப்பார்.

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்:

 நாம் இதுவரை மூன்று வகையான விவரங்களை (நபர்களைக்) கண்டோம்:

1)முஹம்ம்துவை அவமானப்படுத்தியதற்காக வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

2)பாதிக்கப்பட்டவருக்கு மனமுவந்துச் சென்று இரத்த தானம் செய்த இஸ்லாமியர்கள்

3)மாற்று மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்புணர்ச்சியை தூண்டிய முஹம்மது.


இப்போது இஸ்லாம் எப்படிப்பட்டது என்று யாரைக் கொண்டு தீர்மானித்தால் சரியாக இருக்கும்?


முஹம்மதுவைக் கொண்டா?  ------> இஸ்லாமை தோற்றுவித்தவர்

கைகளை வெட்டியவர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்

இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்


முஹம்மதுவைக் கொண்டே இஸ்லாம் எப்படிப்பட்டது என்று முடிவு எடுக்கவேண்டுமே ஒழிய, இரத்ததானம் செய்தவர்களைக் கொண்டு அல்ல.

அது எப்படி என்று கேட்பீர்களானால், முஹம்மது சொன்னது தவறு, அவருக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது, நாங்கள் செய்தது தான் சரியானது, அது தான் இஸ்லாம் என்று இரத்ததானம் கொடுத்தவர்கள் சொல்வார்களானால், இது எடுபடாது. அதாவது,முஹம்மதுவின் ஒவ்வொரு அசைவும் இஸ்லாம், ஒவ்வொரு வார்த்தையும் இஸ்லாம், ஒவ்வொரு மூச்சும் இஸ்லாம், முஹம்மதுவே இஸ்லாம்.

எந்த ஒரு முஸ்லிம், முஹம்மது சொன்னது தவறு என்றுச் சொல்வானோ அப்போதே அவன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக அர்த்தம். அல்லாஹ்வையும்,அவரது தூதரையும் மதிக்காதவன் முஸ்லீமில்லை, இதை எல்லாரும் (இஸ்லாமியர்கள்) அங்கீகரிப்பார்கள்.

ஆக, இஸ்லாமியரல்லாதவர்கள், இரத்த தானம் கொடுத்தவர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்றுச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது. 

எப்போது நாம் இப்படிச் சொல்கிறோமோ, அப்போதே அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக பொருள்,முஹம்மதுவை விட நல்லவர்களாக முஸ்லீம்கள் ஆகிவிடுவார்களா? அய்யோ இது முடியாத காரியம், முஹம்மதுவை விட அவர் காட்டிய வழியை விட நல்லவழியை ஒரு இஸ்லாமியன் காட்டமுடியுமா, கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியாது.

அப்படியானால், கைகளை வெட்டியவர்கள் தான் இஸ்லாமை முழுவதுமாக முஹம்மது சொன்னது போல செய்தவர்களா என்று கேட்கிறீர்களா? இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு. 

எந்த ஒரு குற்றமும் இழைக்காதவனுக்கே வழியை கொடுக்காதே என்று வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடுகிறார் முஹம்மது, அப்படி இருக்கும்போது, அவதூறாக எழுதியவருக்கு என்ன கதி? அதைத் தான் கேரளாவின் இஸ்லாமியர்கள் சிலர் செய்து காட்டினார்கள்.  தலைவன் எவ்வழியோ... தொண்டன் அவ்வழி.

அப்படியானால், இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களின் செயல்.... வெறும் ஏமாற்று வேலை... ஒரு புறம் இஸ்லாமியர்கள் வெட்டிச் சாய்ப்பார்கள்...இன்னொரு புறம் இரத்ததானம் செய்வார்கள்...

கேரளாவின் கோரச் செயலை கண்டித்த இஸ்லாமியர்கள், முஹம்மதுவின் கோரச் செயல்களை கண்டிப்பார்களா?  அவரின் வாயிலிருந்து விழுந்த ஹதீஸ்களை கண்டித்து அறிக்கையிடுவார்களா? 

இதை தான் "தக்கியா" என்பார்கள், அதாவது பொய் சொல்லியாவது, ஏமாற்றியாவது இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வர முயற்சிப்பது.  இது தான் நடந்தேறியுள்ளது.

முடிவுரை:
இந்த நாடகத்தினால் இஸ்லாமுக்கு இரண்டு நன்மைகள்:

1) இனி யாராவது பொதுவாக கூட, மறந்தும் முஹம்மது பற்றி தவறாக எழுதாமல் இருக்க ஒரு நல்ல ஏற்பாடு (ஒருவரின் கைகளை வெட்டியது)

2) அதே நேரத்தில் நாங்களும் இரத்ததானம் செய்கிறோம், அறிக்கையிடுகிறோம், இஸ்லாம் மன்னிக்கின்ற மார்க்கம் (அப்படியா..) என்று சொல்லிக்கொள்ள ஒரு ஏற்பாடு (இரத்த தானம் செய்வது)

ஒருவேளை இரத்ததானம் செய்த சகோதரர்கள், "அய்யா எங்களுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது... நாங்கள் வேதனை அடைந்து தான் இந்த தானத்தைச் செய்தோம். முஹம்மது சொன்னது போல நாங்கள் செய்யவில்லையே" என்று உண்மையாகவே வேதனை அடைந்து கூறுவார்களானால்,......அப்படிப்பட்டவர்களின் கால்களை கழுவி துடைக்க நான் கடனாளியாக இருக்கிறேன்.



முஹம்மது இஸ்லாமியர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்? கீழே உள்ள தமிழ் கட்டுரையை படிக்கவும்:

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்  

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் 

ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முஹம்மது ஒரு தீவிரவாதியா?

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் 

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்



source : http://isakoran.blogspot.com/2010/07/blog-post_22.html

July 22, 2010

வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்



மிஸ்ட் என்ற இஸ்லாமிய சகோதரர்என்னுடைய "முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (http://isakoran.blogspot.com/2010/07/blog-post.html)" என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்டு இருந்தார்அதற்கான பதிலை இங்கு காண்போம். ஒரு தீவிரவாத கும்பளுக்கு இஸ்லாமியர்கள் எப்படி உதவிக்கரம் நீட்டுகின்றார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணமுடியும்.

------------------

 

 

Mist Said:

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கேபார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையாகொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.சரி மேட்டருக்கு வருவோம் . 


உமர் பதில்:

அருமையான மிஸ்ட் அவர்களே,

 உங்க வருகைக்கு நன்றி.

 எனக்கும் அதிக வேலை பளுவினால்முன்பு போல அதிகமாக எழுத நேரமிருப்பதில்லை. உங்களின் வரிகளை பார்த்தவுடன், அன்றைய நட்பு ஞாபகத்திற்கு வந்துவிட்டது, எனவே உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். சரி வாங்க விஷயத்திற்கு வருவோம்.

 

//

Umar said:

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காகஉங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால்முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானதுநியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களாஇல்லையா?

Mist said:

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சுமக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத்அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கேஉதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலைமேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?//

உமர் பதில்:

ஓஹோ அப்படியா... உங்கள் தெய்வங்களை வணங்குவதினால்எந்த பிரயோஜனமும் இல்லை என்று மட்டும் தான் சொன்னாரா?

அப்படியானால்,  நீங்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு சென்று வரும்போதுயாராவது வேற்று மதத்தவர்கள் வந்து,

"அல்லாஹ்வை வணங்குபவர்களேஉங்களுக்கு இதனால் எந்த உபயோகமும் இல்லைமுஹம்மது ஒரு நபி அல்லஅவரை பின்பற்றுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லைஆகையால்பொய்யை நம்புவதை விட்டுவிட்டுபொய் நபியை நம்புவதை விட்டுவிட்டுவெளியே வாருங்கள்உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். அல்லாஹ்வை வணங்குவதினால் ஒரு நன்மையும் இல்லை"

 என்றுச் சொன்னால்அதனை என்னவென்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

ஆரம்பத்தில்முஹம்மது அல்லாஹ்வைப் பற்றி சொல்லும் போது மக்காவினர் ஒன்றும் செய்யவில்லைஅவரை தாக்கவில்லை. எப்போது அவர் தங்கள் இதர தெய்வங்களை தாக்க ஆரம்பித்தாரோஅவர்களது மூதாதையர்கள் வழிதவறிவிட்டார்கள் என்றுச் சொன்னாரோ அப்போது தான்மக்காவினர் கொதித்து எழுந்தனர்.

உதாரணத்திற்கு:

இன்று இஸ்லாமியர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஒருவர் வந்துநான் தான் நபிஎன்னை இறைவன் அனுப்பினான். உங்கள் கலிபாக்கள் எல்லாரும் வழி தவறியவர்கள்அவர்களுக்கு தெரியாத ஒன்றை வணங்கினார்கள்அவர்கள் பொய்யான தெய்வத்தை வணங்கினார்கள்,முஹம்மதுவும் இப்படித்தான் பொய்யான் தெய்வத்தையே பிரச்சாரம் செய்தார் என்றுச் சொன்னால்உங்கள் பதில் என்னவாக இருக்கும்?  இவர் உண்மையைச் சொல்கிறார் என்று நினைப்பீர்களா அல்லது அப்படியே விட்டுவிடுவீர்களா?

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இதைப் பற்றி கீழகண்டவாறு கூறுகிறார்: 

அபூ தலீப்பிடம் குறைஷிகள் ஏன் வந்தார்கள்வந்து முஹம்மது பற்றி என்ன சொன்னார்கள்போன்றவற்றை படிக்கவும்.  இந்த கட்டுரையை முழுவதுமாக படித்துப்பாருங்கள் (Source: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm)

In regards to Muhammad's early preaching in Mecca, Al-Tabari notes:

Ibn Humayd- Salamah- Ibn Ishaq: The Messenger of God proclaimed God's message openly and declared Islam publicly to his tribesmen. When he did so, they did not withdraw from him or reject him in anyway, as far as I had heard, UNTIL he spoke of their gods and denounced them. When he did this, they took exception to it and united in opposition and hostility to him, except for those of them whom God had protected from error by means of Islam. The latter were few in number and practiced their faith in secret. His uncle Abu Talib was friendly to him, however, and protected him and shielded him from them. The Messenger of God continued to do God's work and to proclaim his message, undeterred by anything. When Quraysh saw that he would not give them any satisfaction, they objected to his departing from their ways and denouncing their gods, and seeing that Abu Talib protected him, shielded him from harm, and would not hand him over to them, a number of the nobles of Quraysh, consisting of such men as 'Utbah b. Rabi'ah, Shaybah b. Rabi'ah, Abu al-Bakhtari b. Hisham, al-Aswad b. al-Muttalib, al-Walid b. al-Mughirah, Abu Jahl b. Hisham, al-'As b. Wa'il and Nubayh and Munabbih, the sons of al-Hajjaj, went to Abu Talib and said, "Abu Talib, your nephew has reviled our gods, denounced our religion, derided our traditional values and told us that our forefathers were misguided. Either curb his attacks on us or give us a free hand to deal with him, for you are just as opposed to him as we are, and we will deal with him for you." Abu Talib gave them a mild answer and declined courteously, and they left him. The Messenger of God continued as before, proclaiming the faith of God and summoning people to it.

மக்காவினரின் தெய்வங்களைப் பற்றி கேவலமாக பேசுவதும்அவர்களின் பாரம்பரியங்களை தாக்குவதையும்அவர்கள் முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்வதையும் தாங்க முடியாமல் தான்அவரை கொல்ல முயற்சித்தனர்.

ஆனால்முஹம்மது செய்தது போலஇன்று இஸ்லாமிய தெய்வத்திற்குச் செய்தால்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு ஒரு நியாயம்மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

//

Umar said:

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும்அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும்இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆகஇஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

Mist said:

உமரண்ணா இஸ்லாம்மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதாஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள்எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பிநீங்களும் குழம்பிஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?//

 

இங்கு கேட்ட கேள்விமக்காவின் குறைஷிகள் செய்தது சரியா தவறா

தவறு என்றுச் சொன்னால்இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்கொடுமை வாதிகள்முஹம்மதுவை பின்பற்றுகிறவர்கள் செய்தது கூட தவறு தானே. இதனை அங்கீகரிக்கிறீர்களா?

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுமுஹம்மது செய்தது போலவன்முறையில் ஈடுபட்டவர்களாகிய அந்த சிலர் இஸ்லாமியர்களா அல்லது காபிர்களா?

உங்களுக்கு எப்படியோமற்றவர்களுக்கு மட்டும்அன்று முஹம்மதுவை தாக்கிய குறைஷிகளும்இன்று மற்றவர்களை தாக்கிய இஸ்லாமியர்களும் ஒன்று தான்.

ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக வந்து எழுதுகிறீர்களே தவிரஅந்த கொலைபாதகர்கள் செய்தது தவறு தான்... அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல... அவர்களை நாங்கள் இஸ்லாமியர்களாக பாவிப்பதில்லை என்று பேச்சுக்காவது சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அப்படியானால்அவர்களின் பின்னால் இருப்பவர்கள் உங்களைப்போன்றவர்கள் தான் என்பது விளங்குகிறது.

என்ன செய்ய?  அவர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டால்கடைசியாக முஹம்மது செய்ததும் தவறு என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வருமே என்ற பயம் உங்களுக்கு இருப்பது நியாயமே..

மற்ற மதத்தவர்களின் தெய்வங்களை திட்டவேண்டாமென்று அல்லாஹ் சொல்லியிருந்தும்,ஏன் இஸ்லாமியர்கள் அதனை பின்பற்றுவதில்லை. ஏன் முஹம்மதுவும் பின்பற்றவில்லை. ஏன் அவர் இயேசுவைப் பற்றி பேசினார்அவர் இறைவன் இல்லை என்றுச் சொன்னார். அதே போலஇன்று நாங்கள் அல்லாஹ் ஒரு இறைவன் அல்ல  என்றுச் சொன்னால்உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது?

 

இன்று ஏன் இஸ்லாம் அதிகமாக நாறுகிறது தெரியுமாஏன் இன்று முஹம்மது பற்றி எல்லாரும் அதிகமாக கற்றுக்கொண்டுஅவரது வண்டவாளத்தையெல்லாம் வெளியே சொல்கிறார்கள் தெரியுமா?  அவர் சும்மா இருக்காமல்மற்ற தெய்வங்களை விமர்சித்ததால் தான்.. இஸ்லாமிய அறிஞர்கள் அவர் செய்தது போலவே செய்வதினால் தான்இஸ்லாமை கற்றுக்கொண்டுகுட்டை கலக்கிக்கொண்டு இருக்கிறோம்.  அப்போது தானேஅந்த குட்டையில்(இஸ்லாமில்) அடிபாகத்தில் இருக்கும் உண்மைகள் வெளியே வரும்.

 

//umar qouted:

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம்அதுவே போதும்