அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 28, 2008

கெளதம புத்தரும் கிறிஸ்துவும்

கெளதம புத்தர் பிறந்து 2552 வருடங்கள் ஆகிவிட்டது. நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.

கொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243

யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

In Buddhism Maitreya Buddha is the future Buddha.Maitreya is a bodhisattva who Buddhists believe will eventually appear on earth, achieve complete enlightenment, and teach the pure dharma.Maitreya , a bodhisattva, prophesied by Gautama Buddha to be the next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt.

John:141 He first found his own brother Simon, and said to him, “We have found the Messiah” (which is translated, the Christ).

source : http://www.thewayofsalvation.org/2006/05/blog-post_13.html



January 26, 2008

பிரபல இஸ்லாமிய நாதஸ்வர விதவான் இயேசுவை ஏற்றுக்கொண்டார்


பால் ஷேக் சின்ன காசிம்


PAUL SHEIK CHINNA KASIM


I was born in a small town in the southern part of India in the state called TamilNadu. Though a Muslim by birth i grew up in a family that valued Indian tradition and culture more than religion. My ancestors had devoted their lives to Indian classical Music, especially to an instrument called Nadhaswara (pipe). I was also a part of this tradition until our Lord spoke to me through LIGHTNING and THUNDER and anointed me with His Holy spirit. Just as the Lord choose David who played the harp for Him , I feel He has predestined me to Glorify Him through my music . He called me for His Ministry seven years ago and since then I have been ministering His word to His people through the music of Nadhaswaram and the power of the Gift of the Word of God. He has blessed our ministry abundantly as He has used me to travel not only in many parts of India but also to many nations which include SRILANKA , MALAYSIA, SINGAPORE, UNITED ARAB EMIRATES, QATAR, SWITZERLAND, EUROPE, LONDON CANADA AND USA .


Many people have come to know Christ through Gospel meetings held in many churches in these nations and are encouraged by the word of God.A part of my ministry is to explain the origin of Nadhaswaram and its relation to the Word of God. For ages this instrument has been forgotten by many but this instrument finds its roots in the Word of God. Indian classical music is loved through out the world and to know that God can use this instrument to Glorify Himself surprises many. I am blessed with two sons ages 12 and 14 and my wife has been a driving for my ministry. Her prayers for my salvation for 10 long years were finally answered when I had a personal encounter with Jesus Christ who transformed my life and gave me this ministry of "Lightning and thunder".


PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA

FAMILY - BACK GROUND As they say Music runs in my blood. My family has always been in the limelight for our dedication to classical music. Especially my Grand Father PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA has performed Indian traditional Nadhaswaram concerts in different part's of the World on behalf of Indian Government. Our family has been performing on Radio & Television also. A family which made India proud with its talents. My grandfather is the recipient of "PADMASHRI " the highest honor given to any Indian musician , the state Government of Tamil Nadu has honored us with DOCTORATE & KALAIMAMANI too.


http://www.paulsheik.org/index.php?option=com_content&task=view&id=14&Itemid=30

source : http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_25.html

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=9003#9003

January 25, 2008

பெருமையின் முடிவு


பெருமையின் முடிவு தோல்வி....

ஸ்பானிய தேசத்து அரசன் பிரான்ஸ் தேசத்தை ஜெயிக்க புறப்பட்டான்.பத்திரிகை நிருபர்களை வரவழைத்தான்.

"பிரான்சு தேசத்தின்மீது படையெடுக்கப் போகிறோம்;நான் நிச்சயம் அதை ஜெயிப்பேன். யுத்த செய்திகளை வரிசைக் கிரமமாய் எழுதும்படி போதுமான கடிதாசிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பெருமையுடன் கூறினான்.

"என்னை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் ஒருவருமேயில்லை" என கர்வத்தோடு மேன்மை பாராட்டினான்.

சேனைகளைத் திரட்டிக்கொண்டு போனபோது வழியில் கொள்ளைநோய் வந்து சேனையில் ஏராளமானோர் மாண்டனர்.எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!

அகந்தையின் முடிவு அழிவு.

-----------------------------------------------------------------------------------
பட்டம் பெற்ற பாதிரியார் ஒருவர் முதல் தடவையாகப் பிரசங்க மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யப் போகிறார். பெருமையோடும், கர்வத்தோடும் பிரசங்க மேடைமீது ஏறினார்.

பிரசங்க வாக்கியம் ஞாபகத்திற்கு வரவில்லை. பிரசங்கக் குறிப்பை அங்கி அறையில் மறதியாக வைத்துவிட்டார். திண்டாடி ஏதொ சொல்லிவிட்டுப் பத்து நிமிடத்தில் தலை கவிழ்ந்து தாழ்மையுடன் இறங்கினார்.

ஆலயத்திலிருந்த பெரியவர் ஒருவர் வந்து, "சகோதரரே, நீர் இறங்கும்போது என்ன நிலைமையிலிருந்தீரோ, அதே நிலையில் நீர் ஏறிப்போயிருந்தால் சந்தோசத்துடன் இறங்கியிருப்பீர்"என்றார்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.


-------------------------------------------------------------------------------------

நூற்று முப்பது ஸ்பெயின் போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்கு விரொதமாய் படை எடுத்துச் சென்றன. இங்கிலாந்தின் கப்பல்கள் எண்பது தான். அவைகளில் யுத்தத்திற்குப் பயன்படக்கூடியது முப்பதுதான். ஸ்பெயின் கப்பல்களை நிலவு போன்று

வளைவாக விட்டுக்கொண்டு இங்கிலாந்துக் கப்பல்களை சுற்றிவளைத்தனர்.

ஆங்கில நாட்டுக் கப்பல்கள் பின்வாங்கி ஓடின. ஸ்பெயின் கப்பல்கள் மிகுந்த அகந்தையோடு ஆங்கிலக் கப்பல்களைத் துரத்திச் சென்றன.

ஸ்காட்லாந்தின் பக்கம் குன்றுகளடர்ந்த தீவுகள் பல இருந்தன. அக்குன்றுகளில் ஸ்பெயின் கப்பல்கள் மோதி உடைந்தன. ஐம்பத்து நான்கு சேதப்பட்ட கப்பல்கள்தான் ஸ்பெயினுக்குத் திரும்பின.

வீண் டம்பம் கொண்ட ஸ்பெயின் வீரர்கள் வெட்கி நாணினார்கள்.

எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!
நெஞ்சித்திமிர் என்றும் சஞ்சலமே
!

-------------------------------------------------------------------------------------

நீதிமொழிகள் 8:13.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

I பேதுரு 5:5
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

source : http://www.thewayofsalvation.org/2008/01/blog-post.html

January 21, 2008

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.


ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .

தொடுப்பு;
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8694#8694


அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்
"அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டு "முகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு நாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்"என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.

அதன் தொடுப்பு;

http://www.iiponline.org/

ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது
.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .


அந்த ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).

அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.
ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை

ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்.....?


அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு

,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.


நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்
.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.

ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன் தொடுப்பு;
http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html

ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,

விளக்கம் உமர்;


நான் ஏற்கனவே "ஈஸா குர்‍ ஆன் தளத்தின்" சார்ப்பில் "ஒரு எழுத்து" விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.

ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக "உண்மையடியானுக்கு" விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:

நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.


நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:

1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் "முஸ்லீம்கள்" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.

எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):

அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:

1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்

என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.

யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.

உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?

உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று. அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?


நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,

என்னோடு "எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்".

நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?

இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், "நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை" என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.

“இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் "பணம்" கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?


"நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி" அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.

எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?[/size]

=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?

நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
=================================[/quote]

source : http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8736#8736

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html

January 16, 2008

என்ன என் ஆனந்தம்.. என்ன என் ஆனந்தம் (மலையாளம்)

இயேசு தரும் ஆனந்தம் அது நம் உள்ளத்தில் தரும் பேரானந்தம்

ஆதாரம் நீர் தானய்யா

நம் வாழ்க்கைக்குஆதாரமாய் உள்ளது இயேசுவின் மாதிரி மட்டுமே

சந்தோசம் பொங்குதே.. சந்தோசம் பொங்குதே..

நம் பாவத்தை மன்னிக்க இவ்வுலகிலே ஒரே ஒரு தெய்வம்தான் தன் ஜீவனை தந்தார் என்னும்போது சந்தோசம் பொங்கத்தானே செய்யும்

எண்ணி எண்ணி துதி செய்

அவர் செய்த நன்மைகளைப பாட மொழி ஒரு தடையல்ல..

Chennai City - ஒரு கலக்கல் பாட்டு

சென்னை அது பிரதிபளிக்கும் என்னை

குயவனே..குயவனே .. படைப்பின் காரணரே

அவர் சித்தபடி நம்மை வனைந்துகொள்ள ஒப்புகொடுப்போம்

சோர்ந்து போகாதே நண்பனே

எழும்பி ஆண்டவருக்காய் பிரகாசி

நீரே என் தஞ்சம்

அவரே நம் தஞ்சம்

ஆயத்தமா... ஆயத்தமா...

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நீ ஆயத்தமா..

January 10, 2008

இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா

இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா


(ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர் இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/akbar.shtml

இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். )


என்னுடைய வாழ்க்கை சாட்சி இந்தியாவில் இருந்து அக்பர்


என்னுடைய பெயர் அக்பர் ,




தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ "என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன்,என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் "என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் .எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும்.இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் .


என்னுடைய சாட்சி


என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன்.எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள்,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள்.இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும்,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .


தேவன் வெளிப்பட்டார்


என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்."முஸ்தபா ",முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர்". அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் .ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார். ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்றியிருந்த வல்லமை சொன்னது"இந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்".தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார்.அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .


அவருடைய கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது .இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை.ஒரு நபியாகவே நம்புகிறோம். ஆனால் என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.


ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள்,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள். ஒரு நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் " blood hemorrhage "என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள். அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்.என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள்."நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்"என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது.அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்."நீ யார்'" என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,"இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான், இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்"" உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன்.என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை. நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .


என் கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ? " ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை?முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது. சத்தியத்தை தேடுதல் திறந்த இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது

மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன்.17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்."என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன ,என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்"இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது . இந்த சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர்."அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ?கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்."என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது.இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது . இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும், உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது.சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன்.


1998 டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன்.அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன். ஊழியம் நானும் என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம்.இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது. ஆனால் நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.


என் தாயும்,தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள் "என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்"என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள். ஒரு நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார்.ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது.மருத்துவரிடம் சென்றோம்."இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாது "என்று கூறிவிட்டார்.என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார். நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும்,அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார்,"அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்".நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்."இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது.விசுவாசத்தோடு தடவுங்கள் "என்று சொன்னோம். அதை எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார்.இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது .இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.ஞானஸ்தானமும் பெற்றார் .


சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டோம் . எங்கள் பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர்.தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் .அவருக்காக பாடுபட்டதும்,இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை . எங்களுடைய பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது. முஸ்லீம்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார்.


நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் . இயேசுவுக்காக இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ; இந்த ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும்.இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும்,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும்,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.




January 8, 2008

Always look at the big picture !


Always look at the big picture !

January 7, 2008

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுகெதிரான வன்முறை : ஒர் பத்திரிக்கை செய்தி

Source : http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_6241.html

ஒரிசாவில் இந்துத்துவா சக்திகள் நடத்திய வெறியாட்டம்.

கட்டுரை வெளியீடு= குமுதம் ரிப்போர்ட்டர்,6-1-2008 இதழ்

வெட்கப்பட வேண்டாமா?

குஜராத்தில்நரேந்திரமோடி முடிசூடியதன் எதிரொலி இப்போது ஒரிசாவில் கேட்கிறது .மத்திய பிரதேசத்தில் கேட்கிறது .ஒரிசாவில் பிஜு ஜனதா தள -பி.ஜே.பி கூட்டணி ஆட்சி.மத்திய பிரஹேசத்தில் சுத்த சுயம் பிரகாசமான பி .ஜே.பி ஆட்சி.

இந்துக்கள்வசிக்கும் பகுதிகளில் தேவாலயங்கள் இருக்கலாம்.ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று ஒரிசாவில் "விஸ்வ ஹிந்து பரிஷத்" கட்டளையிட்டது.இது என்ன கொடுமை?

கிறிஸ்தவமுழுக்க ஏற்றுக்கொண்ட அமேரிக்காவில்,பிரிட்டனில்,இதர ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.அந்த விழாக்கள் தங்கள் மதத்துக்கு விரோதம் என்று எந்த கிறிஸ்த்தவரும் தீப்பந்தம் தூக்கியதில்லை.

இந்தியாவில்இருந்து குடியேறியவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டும் தான் கொண்டு சென்றார்களா?இங்கு இருப்பதாக கூறப்படும் முப்பது முக்கோடி தேவர்களையும் பரமசிவன்,பார்வதி ,முருகன்,வள்ளி,திருப்பதி வெண்கடாஜலபதி ,மதுரை மீனாட்சி என்று பல்லாயிரம் கடவுளர்களையும் அங்கே குடியேற்றியிருக்கிறார்கள்.அந்தக் கடவுளர்கள் குடிகொண்ட ஆலயங்களில் ஆறு கால பூஜை முதல் ஆண்டிற்கு ஒரு முறை வரும் விழா வரை அத்தனை வைபவங்களும் நடைபெறுகினறன .ஏன்? ஆர்.எஸ். எஸ்,இஸ்வ ஹிந்து பரிஷத் என்ற எல்லா இந்துத்துவா அமைப்புகளும் அமேரிக்காவில் செயல்படுகினறன.கனடா ,பிரிட்டனிலும் காலூன்றியிருக்கிறது. ஆனால், அந்த நாட்டு மக்கள் பைபிளுக்கு போட்டியாக பகவத்கீதையா என்று வெகுண்டெழவில்லை.இப்போது இந்தியாவை விட அமேரிக்காவில்தான் அதிக அளவில் உபந்நியாசங்கள்,காலட்சேபங்கள் நடைபெறுகின்றன. இந்துமதச் சடங்குகளை நடத்தும் புரோகிதர்களின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.ஆனால் அஸ்திரேலியாவிலும்,அமேரிக்காவிலும் குடியேறி வருகிறார்கள்.அந்த நாடுகளின் குடிமக்களாகவும் ஆகிவிட்ட அவர்கள்,அங்குள்ள இந்துக்கள் இல்லங்களில் சடங்குகளை நடத்துகிறார்கள்.அதற்காக அங்குள்ள பாதிரியார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ."இந்துமத உரிமைகள் சடங்குகள் இங்கே கூடாது"என்று அவர்கள் எழுந்தால் என்ன நிலை ஏற்படும் ?.

இஸ்லாமியர் ஆளுகையிலுள்ள நாடு மலேசியா.அங்கே பத்தாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன .ஆனால் 29 ஆயிரம் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசமரத்தைக் கண்டால் ஒரு பிள்ளையாரை வைத்து விடுகிறோம்.வேப்பமரத்தைக் கண்டால் அதன் அடியில் சூலாயுதத்தை நடுகிறோம். கட்டேரி,முனியன்,கருப்பண்ணசாமி ,வீரபத்திரசாமி,மதுரை வீரன்,குதிரை வீரன் என்று அங்கேயும் ஒரு தெய்வம் இருப்பதாகத் தெரிவிக்கிறோம் .மலேசியாவில் அந்த 29 ஆயிரம் இந்துக்கோயில்களின் பட்டியலில் இத்தகைய சாமிகள் இடம் பெறவில்லை .ஆனால் அங்கேயும் மணியோசை கேட்கிறது.மந்திர முழக்கங்கள் கேட்கின்றன .

இந்தோனேஷியா இஸ்லாதை ஏற்ருக்கொண்ட நாடு.ஆனால் பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தை -குறிப்பாக சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.அவர்களுக்குத் தேவையான தெய்வ விக்கிரகங்கள் தமிழகத்திலிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகின்றன .புதிய புதிய ஆலயங்கள் எழும்புகின்றன.அவர்கள் ஆலயம் எழுப்புவதற்கோ விழாக்கள் கொண்டாடுவதற்கோ இந்தோனேஷியா மக்கள் எந்த தடையும் விதிக்கவில்லை .
இப்படி இந்தியாவிற்கு அப்பால் வேற்று மதங்களை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்துமதம் மதிக்கப்படுகிறது. இந்துக்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன.ஆனால் இங்கே இந்து மதத்தைக் காப்பாற்றப் போவதாக இந்துத்துவா சக்திகள் போர் வெறி கொள்ளுகின்றன .சர்வதேச அரங்கில் இவர்கள் இந்தியாவைக் கேவலப்படுத்துகிறார்கள்.யானையைக் காக்கப் போகிறோம் என்று புற்றீசல்கள் ஆர்பரிக்கின்றன .


குஜராத் சட்டமனறத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் இந்துத்துவா சக்திகளுக்கு புதிய வெறி உதயமாகியிருக்கின்றது. ஒரிசாவில் தீப்பந்தங்களைத் தூக்கினார்கள்.கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக்கூடாது என்று கட்டளை பிறபித்தார்கள். மாதாகோயிலகளுக்கும்,ஜெபவீடுகளுக்கும் நெருப்பு வைத்தனர்.ஏசுவின் ஏற்றுக்கொண்ட கன்னியர்களை -அருட் சகோதரிகளை தாக்க்கினார்கள்.பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மோசமானது .

ஒரிசாவில் இப்படி தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுவது சர்வ சாதாரணம்.இதற்கு பின்னரும் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடியிருக்கின்றன .ஆனால் அந்த காட்டுமிராண்டிக் கூத்துகளெல்லாம் மலை கிராமங்களில்தான் நடந்தன.ஆனால் இன்றைக்கு நகரங்களிலேயே தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன . ஓர் இந்துத்துவா சாமியார் தாக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து தான் இந்த அராஜாகங்கள் என்று பி .ஜே.பி சமாதானம் சொல்லுகிறது. அப்படி எந்தச் சாமியாரும் தாக்கப்பட்டதாக எவரும் கைது செய்யப்படவில்லை.எவர் மீதும் வழக்கு போடவில்லை.
குஜராத் வெற்றியைத் தொடர்ந்து இந்துத்துவா சக்திகள்தான் அதிகாரத்தை கரம்பிடித்துக்கொண்டு கற்காலக் கூத்துகளை அரங்கேற்றின . அவர்களுடைய கட்டளைகளை மீறி எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு கிறிஸ்தவ மக்கள் தயாரானார்களோ, அங்கெல்லாம் அவர்களுடைய தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன.


தமிழர் திருநாளன்று பொங்கள் பானைகளை சில பைத்தியங்கள் உடைத்தால் நாம் என்ன செய்வோம் ?. இம்முறை இந்துத்துவா சக்திகள் தேவாலயங்களை மட்டும் கொளுத்தவில்லை.கிறிஸ்தவ மக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர் .அங்கே கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிச்சம் தேடி காத்திருந்த மக்கள் அந்தகார இருளில் மூழ்கடிக்கப்பட்டனர். இந்தக்கொடுமை மூன்று மாவட்டங்கள் முழுக்கப் பரவியது.இதயமுள்ள மனிதர்கள் தங்களின் உதவிக்கு வருவார்கள் என்று கிறிஸ்தவ மக்கள் எதிர்பார்த்தனர் .ஆனால் மாநில அரசின் இதயம்கூட எப்போதோ எரிந்து போனது.ந்லைமை கட்டுக்குள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் .

மையத்தில் மன்மோகன்சிங் அரசு மவுனம் காக்கிறது.மாநிலாரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் என்கிறது .மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பியிருக்கிறோம் எனைரது.ஏன் இந்த அவமானகரமான செயல் என்று கேட்க அஞ்சுகிறது .காரணம் வழக்கம் போல் மதவாத சக்திகளை பகைத்துக்கொள்ள விரும்ப வில்லை.

சிறுபான்மை இன மக்களை சித்திரவதை செய்யப்படுவதைக் கடுமையான சொற்களிலாவது கண்டிக்கவேண்டாமா ? முன்னர்,கிறிஸ்தவ மத ஊழியர் கிராகாம் ஸ்டெய்ன்சும், அவரது பிள்ளைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர்.அந்த கோரக் கொலைகளைச் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் பயங்கரவாதிகள்தான் இப்போது முன்னின்று தேவாலயங்களை எரித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால்,இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று மார்தட்டிக்கொள்கிறோம் .வெட்கப்பட வேண்டாமா?

கிறிஸ்தவ மக்கள் ஏசுவின் பிறந்த நாளை கொண்டாடத் தயாராகிறார்கள்.ஆனால் அவர்களுடைய ஆலயங்களையும் ,வீடுகளையும் கொளுத்தி இந்துத்துவா சக்திகள் தீபாவளி கொண்டாடுகின்றனர்.இவை எவ்வளவு சமூகக் கொடுமைகள் ?இந்தக் கொடுமகளின் சூத்திரதாரிகள் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை.நீதி விசாரணை நடத்தப் போவதாக ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்திருக்கிரார் .இந்த அறிவிப்பு, நடந்த கொடுரங்களை விடக் கொடுமையானது .ஏனெனில்,நீதி விசாரணைகளின் லட்சணங்களை நாடு அறியும்.

கட்டுரை வெளியீடு= குமுதம் ரிப்போர்ட்டர்,6-1-2008 இதழ்

(இஸ்லாமிய நாடுகள் குறித்து இந்தக்கட்டுரயில் சொல்லப்பட்டது புள்ளிவிவர அடிப்படையில் சரியாக இருக்கலாம்,ஆனால் உண்மையான இஸ்லாம் நாடுகள் இந்துத்துவா வெறியர்களின் மூத்த அண்ணன்மார்களே.அதாவது ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்று அர்த்தம்)

January 5, 2008

The 80 /20 Magic

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=167

INDIA YOUTH FOR CHRIST ன் இரு மாதங்களுக்கொருமுறை வெளிவரும் YOUTH TOUCH Magazine, May-June 2007 இதழில் வெளியான கீழ்க்கண்ட குறிப்பு எனக்கு ஆச்சரியமூட்டுவதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.
"Well known Economist Pareto discerned 13 principal ternds in our wide range of activities, which is now hailed as Pareto Principle. We are re-printing these findings of his, which makes interesting reading.


  1. 80 percent of results come from 20 percent of efforts.
  2. 80 percent of activity will require 20 percent resources
  3. 80 percent of usages is by 20 percent resources
  4. 80 percent of the difficulty in achieving something lies in 20 percent of the challenge
  5. 80 percent of revenue come from 20 percent of customers
  6. 80 percent of problems comes from 20 percent of causes
  7. 80 percent of profit comes from 20 percent of product range
  8. 80 percent of complaints come from 20 percent of customers
  9. 80 percent of sales come from 20 percent sales people
  10. 80 percent of corporate pollution comes from 20 percent of corporations
  11. 80 percent of work absence is due to 20 percent of staff
  12. 80 percent of road traffic accidents are caused by 20 percent of drivers
  13. 80 percent of restaurant's turn over comes from 20 percent of its menu" YOUTH TOUCH EDITORS TAKE THE LIBERTY OF ADDING ANOTHER OBSERVATION:
  14. 80 percent of Missionary work in india is done by only 20 percent of Christians (or even less !)

நானும் சந்தடிச் சாக்கில் நான் கண்ட உண்மையை இந்தப் பட்டியலில் சேர்த்திட துணிந்தேன்:

  1. 80 percent of the Indian population which lives in villages are served only by 20 percent of the Doctors.

Interstingly, the above fact which I learned from my Community Medicine subject in my UG made me think much about considering the Mission work and later helped me to choose MD (Community Medicine) as my speciality.

Dr. D. Pethuru.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=167