அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 28, 2011

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா? - பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

பீஜே அவர்கள் கூறியது உண்மையா?

அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?

அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?

முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?

அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

இவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள்,  மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.


இஸ்லாமியர்களுக்கு சவால்

முஹம்மது மரித்த ஆண்டில் இருந்த "குர்‍ஆன் கையெழுத்துப்பிரதி" முழுவதுமாக இன்னும் தங்களிடம் உள்ளது என்ற மாயையை முஸ்லிம்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், விஞ்ஞான உண்மைகள் இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்கைக்கு எதிராக சாட்சி சொல்கிறது.

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்:

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)

உண்மை என்ன?

முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது.

இரண்டு பழங்கால குர்‍ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான‌ முஸ்லிம்க‌ளுக்கு தெரியாத‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இந்த‌ இர‌ண்டு கையெழுத்துப் பிர‌திக‌ளும் "க்யூபிக் (Kufic)" என்ற‌ எழுத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989)

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்‍ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script).

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்‍ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்‍ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".

இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்‍ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷய‌ம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிர‌தி ப‌ற்றி கேட்டால், இந்த‌ பிர‌தியில் எந்த‌ ஒரு ஆராய்ச்சியும் ந‌ட‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த‌ தாப்காபி கையெழுத்து பிர‌தியில் இருக்கும் விவ‌ர‌ங்க‌ளை வெளியிட‌, உலக மக்கள் அவைகளை பார்வையிட‌ இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? குர்‍ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிற‌த‌ல்ல‌வா? இதை இஸ்லாமிய‌ர்களே ஏன் செய்ய‌க்கூடாது?

மிகவும் பழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான்.

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது.

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தின், "குர்‍ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

இஸ்லாமியர்களுக்கு சவால்

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

ஆசிரியர்: சகோதரர் ஆன்ட்ரூ

ஆங்கில மூலம்: Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!


October 25, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3

     

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வசனங்களும் பாகம் 3

(தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)

முன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1

2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

ஸுயூதியின் இத்கான் புத்தகத்திலிருந்து:

பாக‌ம் 3, ப‌க்க‌ம் 73ல் ஸுயூதி கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்களை த‌ருகிறார்:

"அபீ யூனிஸ் என்ப‌வ‌ரின் ம‌க‌ள் ஹமீதா அறிவித்த‌தாவ‌து, "என் த‌ந்தை 80 வ‌ய‌து உடைய‌வ‌ராக‌ இருந்தபோது, ஆயிஷா அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ குர்‍ஆனை படிப்பவராக இருந்தார்: "இறைத்தூத‌ர் மீது அல்லாஹ்வும் அவ‌ர‌து தூத‌ர்க‌ளும் வேண்டுத‌ல் செய்கிறார்கள், ஓ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளே, அவ‌ர் மீதும் முத‌ல் வ‌ரிசையில் நின்று தொழுது கொள்ப‌வ‌ர்க‌ள் மீது ஆசீர் கூறுங்க‌ள்". மேலும் ஹமீதா கூறியதாவது "இது உஸ்மான் குர்‍ஆனின் பிர‌திக‌ளை மாற்றுவ‌த‌ற்கு முன்பாக‌ குர்‍ஆனில் இருந்ததாகும் ".

பக்கம் 74ல், நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

"அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் அவர்களிடம் உமர் கூறியதாவது, குர்‍ஆன் வசனங்களில் "நீ முதலாவது வந்ததுபோல முயற்சி செய்" என்ற‌ வசனத்தை கண்டாயா? இதை நான் கு‍ர்‍ஆனில் காணமுடியவில்லை. அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் உமரிடம் "குர்‍ஆனிலிருந்து நீக்கபப்ட்ட இதர வசனங்களோடு இந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது " என்று கூறினார்.

அப்துல் ரஹ்மான் இப்னு ஒஅப் என்பவர் சிறந்த நபித்தோழராக இருந்தவர் மற்றும் கலிபா பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.

இத்கான் புத்தகத்தில், அதே பக்கத்தில் (பாகம் 3, பக்கம் 74), நாம் கீழ்கண்ட விவரங்களை படிக்கிறோம்:

"முஹம்மதுவின் தோழர்களிடம் மஸ்லமா அல் அன்ஸார் கூறியதாவது: "உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத இரண்டு குர்‍ஆன் வசனங்களை என்னிடம் யாராவது கூறுங்கள்? ". அவர்களால் அவ்வசனங்களை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை. அதன் பிறகு மஸ்லமா கூறியதாவது:

"ஓ நம்பிக்கையாளர்களே! சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு குடியேறியவர்களே, அல்லாஹ்விற்காக உங்கள் உடைமைகளோடு போராடுகிறவர்களே, உங்களுக்கு நன்மை உண்டாகும், நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். மற்றும் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களிடமிருந்து இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்களே, தங்க இடம் அளித்தவர்களே, உதவி செய்பவர்களே நீங்கள் பாக்கியமுள்ளவர்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய அவர்களின் ஆத்துமாவிற்கு அவர்கள் செய்த செய்கைக்கு தக்க பலன் காத்துக்கொண்டு இருக்கிறது."

ஸுயூதி தம்முடைய இத்கான் புத்தகத்தின் பாகம் 3ல், 73 மற்றும் 74ம் பக்கங்களில், முஹம்மதுவின் தோழர்களின் எல்லா விமர்சனங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று நம்மிடம் இருக்கும் உஸ்மான் தொகுத்த குர்‍ஆனில் காணப்படாத வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் கொடுத்த விமர்சனங்களை அவர் குறிப்பிடுகிறார். அவ்வசனங்கள் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் காணப்படுவதில்லை. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நாங்கள் மேற்கோள் காட்டும் மேற்கோள்கள் அனைத்தும், இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆன் விரிவுரையாளர்களும் "சிறந்தவர்கள்" என்று கருதும் அலி, உஸ்மான், அபூ பக்கர் மற்றும் முஹம்மதுவின் மனையாகிய ஆயிஷா, இப்னு மஸூத் மற்றும் இப்னு அப்பாஸ் போன்றவர்களின் மேற்கோள்களாகும். இவர்களின் மேற்கோள்களை எல்லா இஸ்லாமியர்களும் நம்பகமானது என்று கருதுகிறார்கள். குர்‍ஆனை விவரிக்கவேண்டுமென்றால், முஹம்மதுவின் வாழ் நாட்களில் குர்‍ஆனின் வசனங்கள் எப்பொது எங்கே வெளிப்பட்டது என்பதை அறிய இந்த நபித்தோழர்களின் உதவி நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களை போல இஸ்லாமின் கோட்பாடுகளை விவரிக்க வேறு யாரால் முடியும்?

ஸுயூதியின் இத்கான் புத்தகத்தின் முதல் பாகத்தை நாம் படித்தால், கீழ்கண்ட விவரங்களை அறியலாம் (பக்கம் 184):

குர்‍ஆனின் தலைந்த 157 வசனங்கள்

"மாலிக் கூறியதாவது: ஆரம்பத்தில் 9வது (தௌபா) அத்தியாயத்திலிருது அனேக வசனங்கள் விடுபட்டுவிட்டது. அவைகளில் ஒரு வசனம்: "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்" என்பதாகும். ஸூரா பகராவிற்கு நிகரான வசனங்கள் இந்த தௌபா ஸூராவில் இருந்தன என்பது நம்பகமான விவரமாகும்.

இதன் பொருள் என்னவென்றால், இந்த அதிகாரத்திலிருந்த 157 வசனங்கள் தொலைந்துவிட்டன. மற்றும் ஸுயூதி (பக்கம் 184ல்) கூறும் போது, "இப்னு மஸூத்தின் குர்‍ஆன் பிரதியில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ..." என்ற வசனம் இந்த அதிகாரத்தில் காணப்பட்டது. நம்மிடமுள்ள குர்‍ஆனை பிரதி எடுக்கும் சமயத்தில், உஸ்மான் "இப்னு மஸூத்தின்" குர்‍ஆன் பிரதியை பறிமுதல் செய்து எரித்துவிட்டார்.

குர்‍ஆனிலிருந்து வெறும் வசனங்களை மட்டும் உஸ்மான் விட்டுவிடவில்லை, முழு ஸூராக்களும் நீக்கப்பட்டுள்ளது. இப்படி ஸூராக்கள் நீக்கப்பட்ட குர்‍ஆன் தான் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ளது. ஸூயூதி மற்றும் இதர இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சிகளின் படி, உபை மற்றும் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன, அதாவது "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்ற இரண்டு ஸூராக்கள் காணப்பட்டன. அவைகள் அஸ்ர் என்ற 103வது ஸூராவிற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டு இருந்தன. (பார்க்கவும் பக்கம் 182 மற்றும் 183)

இன்றைய குர்‍ஆனில் காணப்படாத அத்தியாயங்களை தொழுகையில் ஓதுதல், உமரின் வழக்கமாக இருந்தது

ஸுயூதி மேலும் கூறும் போது "அப்துல்லாஹ் இப்னு மஸூத் அவர்களின் குர்‍ஆன் பிரதியில், ஸூரா 113 மற்றும் 114 என்ற அத்தியாயங்கள் காணப்படவில்லை. இத்கான் 184வது பக்கத்தில், ஸுயூதி கூறும் போது, "உபை இப்னு கஅப்" என்பவரின் குர்‍ஆன் பிரதியில் இரண்டு அத்தியாயங்கள் காணப்பட்டன. இந்த அதிகாரங்கள் "ஓ இறைவா, உன்னுடைய உதவியை நாங்கள் கேட்கிறோம்" மற்றும் "ஓ இறைவா, உன்னையே நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களின் பெயர்கள் "ஹஃப்த்" மற்றும் "க்ஹல்" என்பதாகும். ஸுயூதி, 185வது பக்கத்தில் இறைத்தூதரின் மிகவும் புகழ்பெற்ற தோழராகிய "அலி இப்னு அபி ஸாபித்" என்பவரும் இந்த இரண்டு அத்தியாயங்களை அறிந்திருந்தார் என்பதை தெரிவிக்கிறார். உமர் இப்னு அல் கத்தாப்பும் தமது தொழுகையில் இவ்வதிகாரங்களை ஓதுவது வழக்கமாக கொண்டு இருந்தார் .

"இப்னு அப்பாஸ்ஸின் குர்‍ஆன் பிரதி, அல்லது இப்னு மஸூத் என்பவரின் குர்‍ஆன் பிரதி, ...ஆயிஷா அவர்களின் குர்‍ஆன் பிரதி " என்றெல்லாம் கூறுகின்றீர்களே, இதன் பொருள் என்ன? "அனேக குர்‍ஆன்கள் இருந்தன என்றுச் சொல்கிறீர்களா?" என்று வாசகர்கள் கேட்கலாம்.

இந்த கேள்விக்கான பதிலை நான் சொல்லப்போவதில்லை. இதற்கான பதிலை இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களிடமும் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், குர்‍ஆனின் மூல பிரதிகள் எப்படி எரிக்கப்பட்டன, மற்றும் எப்படி ஒரே ஒரு பிரதியை தயார்படுத்தி மற்ற குர்‍ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் அலசி இருக்கிறோம்.

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.

குர்‍ஆனிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு அத்தியாயங்களை தமிழிலும், அரபியிலும் படிக்க:

 சூரா ஹப்த் மற்றும் க்ஹல் - (உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்)

 

http://isakoran.blogspot.com/2011/10/3.html

October 22, 2011

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2


           

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2

[கிறிஸ்தவ போதகரும் உமரும் சந்தித்து உரையாடிய முதல் பாகத்தை இந்த தொடுப்பில் ("கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1") படிக்கவும்.

இப்போது இந்த கிறிஸ்தவ போதகர் தன் சபையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, தன் சபை விசுவாசிகளுடன் உமர் மற்றும் அவருடைய நண்பன் ஜான்சன் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இனி அந்த சபையின் விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை இந்த கட்டுரையில் காண்போம். அந்த போதகர் அறிமுக உரையை முடித்துவிட்டு, நேரடியாக கேள்வி பதில்களுக்கு மீதமுள்ள நேரத்தை கொடுத்துவிட்டார்.]

புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு


உமர்: கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தில் எங்கள் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்னோடு சகோதரர் ஜான்சன் அவர்கள் வந்துள்ளார்கள், அவரும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். உங்கள் போதகர் ஏற்கனவே அறித்தபடி, இன்று நாம் முஹம்மது மற்றும் அவரது நபித்துவம் பற்றிய கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கூட்டத்தில் நாம் இதர தலைப்புகளில் பேசுவோம்.

இப்போது நாம் நேரடியாக முதல் கேள்விக்குச் செல்வோம். உங்களில் யார் முதல் கேள்வியை கேட்கப்போகிறீர்கள்?

[முதல் கேள்வியை கேட்பதற்கு, ஒரு கரம் மேலே எழும்புகிறது, முதல் கேள்வி கேட்கப்படுகின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகும்.]

கேள்வி 1: என் பெயர் ஜெபராஜ். நான் ஒரு கிளைச் சபையின் போதகராக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாமியர்களுக்காக ஜெபித்தால் மட்டும் போதாதா? அவர்களுக்கு சுவிசேஷத்தை அதாவது நற்செய்தியை கூறினால் போதாதா? ஏன் நாம் அவர்கள் வேதமாகிய குர்‍ஆனை படிக்கவேண்டும் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை படித்து இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்? இஸ்லாமை கற்க நாம் ஏன் நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டும்?

உமர்: முதலாவது சில கேள்விகளுக்கு நம்முடைய சகோதரர் பதில் அளிப்பார்கள், ஏனென்றால், அவர் அனேக இஸ்லாமியர்களோடு நேரடியாக உரையாடியுள்ளார், அவருக்கு இந்த விஷயத்தில் அதிக அனுபவம் உண்டு. சகோதரர் ஜான்சன் வாங்க‌.{சகோ. ஜான்சன் பதில் அளிக்கிறார்]

சகோதரர் ஜான்சன்:

கர்த்தருடைய நாமத்தில் உங்கள் அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

நீங்கள் ஒரு அடிப்படையான கேள்வியைத் தான் கேட்டு இருக்கிறீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் இஸ்லாம் பற்றி ஓரளவாவது கற்றுக்கொள்ளுங்கள் என்று போதகர்களுக்கு சொல்லுகிறோமோ! அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

கிறிஸ்தவ போதகர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது, நீங்கள் இஸ்லாமியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் போது, அவர்கள் எதிர் கேள்விகளை கேட்பார்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாட வேண்டுமென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இமாம்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பைபிளுக்கு எதிரான அனேக கருத்துக்களை இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இது மட்டுமல்லாமல், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்ஆன் மறுக்கிறது. உதாரணத்திற்கு கீழ்கண்டவைகளைச் சொல்லலாம்:

1) இஸ்லாமின் படி, இயேசு மற்ற தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவர் தேவகுமாரனல்ல.

2) இஸ்லாமின் படி, இயேசு பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் இரட்சகர் அல்ல (அ) அவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை.

3) இஸ்லாமின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக, தேவன் முஹம்மதுவை அனுப்பினார், எனவே, முந்தையை தீர்க்கதரிசிகள் சொன்ன போதனைகளின் படி வாழும் மக்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ), இப்போது அந்த வரிசையில் வந்த முஹம்மதுவை நம்பவேண்டும். அவரை தம்முடைய வழிகாட்டியாக பாவித்து வாழவேண்டும், வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடவேண்டும்.

இஸ்லாமியர்களின் சிறுவயது முதற்கொண்டு அவர்களுக்கு மேற்கண்ட விதமான போதனைகள் போதிக்கப்படுவதினால், அவர்களுக்கு நற்செய்தியை சொல்லும் போது, அவர்கள் ஒரு சில கேள்விகளையாவது கேட்பார்கள். ஆகையால், குறைந்தபட்சமாக, போதகர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறவேண்டும், இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எவைகள், வேற்றுமைகள் எவைகள் என்பதை அறியவேண்டும்.

ஆகையால், முதலாவது இஸ்லாமியர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும், அதன் பிறகு அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்ல நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். இயேசுவின் நற்செய்தி இஸ்லாமியர்களை சென்றடைய அனேக தடைகள் உள்ளன, அவைகளில் ஒரு தடை, "இயேசு பற்றியும், பைபிள் பற்றியும்" அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தவறான விவரங்களாகும். ஆகவே, அவர்கள் தவறாக புரிந்துவைத்துக்கொண்டுள்ள விவரங்களுக்கு நாம் பதில்களைக் கொடுத்தால், அவர்களின் சந்தேகங்களை நாம் தீர்த்துவைத்தால் தான் சுவிசேஷம் அவர்களை சென்றடையும், அவர்களும் தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக மாறுவார்கள்.

இஸ்லாமை கற்க போதகர்களாகிய நீங்கள் செலவிடும் நேரம் வீணான நேரமல்ல, அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக செலவிடப்படும் சிறந்த முதலீடு ஆகும். எனவே, உங்கள் ஜெப அறையில் அந்தரங்கத்தில் அவர்களுக்காக ஜெபியுங்கள், அதே நேரத்தில் வெளியரங்கமாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து, நற்செய்தியை கூறுங்கள்.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 2: என் பெயர் தாமஸ். நான் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "என்னுடைய முஸ்லிம் நண்பர் "முஹம்மது கடைசி தீர்க்கதரிசி" எனவே, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரை நபி (தீர்க்கதரிசி) என்று ஏற்கவேண்டும் மற்றும் அவரை பின்பற்ற வேண்டும்" என்று கூறுகிறார். முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா? முஹம்மது பற்றிய பைபிளின் கருத்து என்ன?

சகோதரர் ஜான்சன் - பதில் 2:

இது மிகவும் முக்கியமான கேள்வி, அதே நேரத்தில் பைபிளை படிக்கும் ஒரு நபர் சுலபமாக பதில் தரக்கூடிய கேள்வியும் இதுவே. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை தொடர்ந்து படிக்கும் ஒரு நபர் இந்த கேள்விக்கு சுலபமாக பதில் அளித்துவிடமுடியும். இக்கேள்விக்கான பதிலை நான் விவரிக்கும் போது, பைபிளிலிருந்து சில கேள்விகளை உங்களிடம் கேட்பேன், அதற்கு உங்களில் சிலர் பதில் கூறலாம். நீங்கள் கூறும் பதிலே இந்த கேள்விக்கான பதிலாக அமையும்.

இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வந்தாரா?

1) என் முதல் கேள்வி என்னவென்றால், "புதிய ஏற்பாட்டில்" இயேசு எங்கேயாவது தனக்கு பின்பாக ஒரு "தீர்க்கதரிசி" வருவார் அவரை நீங்கள் (கிறிஸ்தவர்கள்) பின் பற்றவேண்டும் என்று கூறியுள்ளாரா?

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று: இயேசு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று கூறவில்லை, ஆனால், தனக்கு பின்பு "ஒரு தேற்றரவாளனை" அனுப்புவதாக கூறியுள்ளார் என்று பதில் அளித்தார்.

சகோதரர் ஜான்சன் : சரியாகச் சொன்னீர்கள், இப்போது அடுத்த கேள்வி: "அந்த தேற்றரவாளன்" வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று இயேசு கூறினார்? 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் அல்லது 600 ஆண்டுகள் என்று இயேசு கூறினாரா?

கூட்டத்திலிருந்து ஒருவர் பதில் கூறுகிறார்: இயேசு எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை, ஆனால், தம்முடைய சீடர்கள், அந்த தேற்றரவாளன் வரும்வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார், அதன் பின்பு தான் "நீங்கள் எனக்கு சாட்சிகளாக ஊழியம் செய்யலாம்" என்று இயேசு கூறியுள்ளார்.

சகோதரர் ஜான்சன்: ஆக, தம்முடைய சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தேற்றரவாளன் வருவார் என்பது தெளிவு. அடுத்த கேள்வி: இயேசு கூறியபடி அந்த தேற்றரவாளன் வந்தாரா? இல்லையா?

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று பதில் கூறுகிறார்:

இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு பல சந்தர்பங்களில் தன்னை உயிரோடு இருப்பவராக காண்பித்து, 40 நாட்கள் அவர்களோடு சம்பாஷித்தார், அதன் பிறகு பரமேரிச் சென்றார், பரிசுத்த ஆவியாவர் வரும்வரை எருசலேமில் காத்திருங்கள் என்றார். அதே போல, சீடர்கள் காத்திருந்தார்கள், 10 நாட்கள் கழித்து பரிசுத்த ஆவியானவர் வந்தார். அதன் பின்பு சீடர்கள் ஊழியம் செய்தார்கள். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.

சகோதரர் ஜான்சன்: ஆக, இயேசு தனக்கு பின்பு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று சொல்லவில்லை, மற்றும் அவர் வருவார் என்றுச் சொன்னவர் "பரிசுத்த ஆவியானவரைத் தான்". பரிசுத்த ஆவியானவரும் சில நாட்களுக்குள்ளேயே வந்தார். இப்படி இருக்கும் போது "தேற்றரவாளன்" என்று இயேசு குறிப்பிட்டது "முஹம்மதுவைத் தான்" என்று இஸ்லாமியர்கள் சொல்வது எல்லாம் சுத்தப் பொய்யாகும். நம்முடைய வேதத்தில் உள்ள விவரங்களை திருத்திச் சொல்லி, நம்மையே வஞ்சிக்க இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் .

இரண்டாவதாக, இன்னொரு கோணத்தில் "முஹம்மது கடைசி நபியா?" என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து காண்போம்.

இயேசு இரட்சிப்பை (அ)  தம் மார்க்கத்தை அறைகுறையாக விட்டுச் சென்றாரா? அல்லது முழுமைப்படுத்திச் சென்றாரா? அதாவது இயேசு "இரட்சிப்பை" முழுவதுமாக முடித்துச் சென்றாரா? அல்லது "நான் பாதியை முடித்தேன், எனக்கு பின்பு ஒரு தீர்க்கதரிசி வருவார் அவர் மீதியை முடிப்பார்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரா?

புதிய ஏற்பாட்டை தன் தாய் மொழியில் அல்லது தனக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர் இதற்கு சுலபமாக பதிலைக் கூறுவார்.

நீங்கள் எல்லாரும் புதிய ஏற்பாட்டை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால், இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று "இயேசு சிலுவையில் மரிக்கும் போது 'முடிந்தது' என்றுச் சொல்லி மரித்தார், அதாவது தாம் எதற்காக வந்தாரோ அதை முடித்துவிட்டேன், எதையும் மீதி வைக்கவில்லை என்றுச் சொல்லி மரித்தார், ஆகையால் இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்தியே சென்றார்" என்று கூறினார்.

சகோதரர் ஜான்சன்: சகோதரரே சரியாகச் சொன்னீர்கள். இது ஒரு முக்கியமான விவரம். அடுத்த விவரத்தை யார் கூறப்போகிறீர்கள்?

இன்னொரு சகோதரர் எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "இயேசு நமக்காக மரித்தது மாத்திரமல்ல, மூன்றாம் நாளில் தாம் சொன்னதுபோலவே உயிர்த்தெழுந்தார். இதோடு நின்றுவிடாமல், தமக்கு அடுத்து "எப்படி ஊழியம் செய்யவேண்டும்?" போன்ற விவரங்களை தம்முடைய சீடர்களுக்கு கூறிவிட்டுச் சென்றார். அவர் பரமேரிச்சென்ற போது, தூதர்கள் "இயேசு எப்படி சென்றாரோ அதே போல வருவார்" என்றுச் சொல்லி "மறுபடியும் இயேசு வருவார்" என்பதை உறுதிப்படுத்தினார்கள், இன்னொரு தீர்க்கதரிசி முஹம்மது என்ற பெயரில் வருவார் அவருக்காக காத்திருங்கள் என்று தேவதூதர்கள் கூறவில்லை. ஆகையால், இயேசு தம்முடைய இரட்சிப்பை அறைகுறையாக விட்டுவிட்டுச் செல்லவில்லை, அதனை முழுமைப்படுத்திச் சென்றார்."

சகோதரர் ஜான்சன்: இதுவும் ஒரு சரியான பதில் தான். மேலும் யாராவது எதையாவது கூறவிரும்புகிறீர்களா?

ஒரு சகோதரி எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "நாம் அப்போஸ்தலர் நடபடிகளை படித்தால், அதில் இயேசு தம் சீடர்கள் ஊழியம் செய்யும் போது எப்படி தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார், எவ்விதம் அற்புதங்கள் அடையாளங்கள் மூலமாக, தம்முடைய இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை பார்க்கலாம்". இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற ஒரு கோட்பாடு அல்லது எதிர்பார்ப்பு வேண்டும் என்று பைபிள் எங்கும் கூறவில்லை. மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எல்லாவற்றையும் முத்தரித்து விடுகின்றது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள், இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது. ஆக, இன்னொரு தீர்க்கதரிசி இல்லை.. வரவேண்டிய அவசியமும் இல்லை. இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார், இன்னொருவர் வந்து இடையில் நுழைவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் பைபிள் அனுமதிக்கவில்லை, முக்கியமாக "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற நூல் அனுமதிப்பதில்லை.

சகோதரர் ஜான்சன்:

நீங்கள் அனைவரும் கூறிய விவரங்கள் சரியான விவரங்களாகும். இதனை தொகுத்து நான் இப்போது சுருக்கமாக கூறுகிறேன்.

இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், இஸ்லாமியர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், "இயேசு தம் மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார்", அதனை அறைகுறையாக விட்டுச் செல்லவில்லை. இதனை நாம் புதிய ஏற்பாட்டில், கீழ்கண்ட விவரங்களை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்.

1) இயேசுவின் சிலுவை மரணம்

2) அவரது உயிர்த்தெழுதல்

3) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தமது சீடர்களுடன் அவர் பகிர்ந்துக்கொண்ட விவரங்கள்

4) தம் சீடர்கள் உலகமனைத்திற்கும் நற்செய்தி கூறுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவருக்காக எருசலேமில் காத்திருக்கும் படி இயேசு கூறிய கட்டளை. இயேசு கூறியபடியே பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வருதல்

5) அதன் பிறகு, அப்போஸ்தலர்கள் தம் ஊழியத்தை செய்தல், சீடர்கள் மூலமாக இயேசு அற்புதங்கள் செய்து அந்த ஊழியத்தை ஆசீர்வதித்தல்.

6) கடைசியாக, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உலகத்தின் முடிவு, மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை, கடைசி நியாயத்தீர்ப்பு போன்றவிவரங்களை தீர்க்கதரிசனங்களாக இயேசு கூறுதல்.

இந்த மேற்கண்ட அனைத்து விவரங்களை நாம் கூர்ந்து கவனித்தால், இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார் என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். இதனை அறிய பெரிய பட்டப்படிப்போ, பல ஆண்டுகால பைபிள் கல்லூரி படிப்போ தேவையில்லை. புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை தனக்கு புரியும் மொழியில் படிக்கும் எந்த ஒரு சராசரி மனிதனும் (முஸ்லிமும்) புரிந்துக்கொள்வான்.

இப்போது நாம் இரண்டு விவரங்களைக் கண்டோம்:

முதலாவது, இயேசு தமக்கு பிறகு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று கூறவில்லை, அதற்கு பதிலாக‌ அவர் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று கூறினார். பரிசுத்த ஆவியானவரும் அவர் கூறியபடியே வந்தார். இரண்டாவதாக, இயேசு தம் இரட்சிப்பை முழுவதுமாக 100 சதவிகிதம் முழுமைப்படுத்தியே சென்றார்.

எனவே, புதிய ஏற்பாட்டின் படி:

1) முஹம்மது என்ற பெயரில் ஒருவர் வருவார் என்று புதிய ஏற்பாடு கூறவில்லை, இயேசுவும் கூறவில்லை.

2) புதிய ஏற்பாட்டில் முஹம்மது பற்றி கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினால் அது மிகப்பெரிய பொய்யாகும். கிறிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தான் செய்யும் சூழ்ச்சியாகும்.

3) இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி உலக மக்களை வழிநடத்த அவசியமில்லை.

4) நம்முடைய தேவன் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி முஹம்மது அல்ல.

5) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பவேண்டிய அவசியமும் இல்லை. கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பினால் தங்கள் இரட்சிப்பை இழந்துவிடுவார்கள்.

எனவே அருமை சகோதர சகோதரிகளே, முஹம்மது கடைசி தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறினால் அது "பொய்" என்பதை அறியுங்கள். உங்கள் பைபிள் முஹம்மது பற்றி கூறுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறினால், "நம்முடைய தாய் மொழியில் பைபிளை படிக்கும் நம்மிடமே வந்து நம்மை வஞ்சிக்க" அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை அறியுங்கள். தன்னுடைய வேதத்தை (குர்‍ஆனை) தன் தாய் மொழியில் படிக்க அவ்வளவாக விரும்பாத இஸ்லாமியர்கள் நம் தாய் மொழியில் நாம் படிக்கும் வேதத்தை நமக்கு கற்றுக்கொடுக்க‌ வருவது என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை கவனியுங்கள்.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 3: என் பெயர் சாமுவேல், என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் படி "முஹம்மது ஒரு தீர்க்கதரிசி" இல்லை என்பது உண்மை, அப்படியானால், புதிய ஏற்பாடு முஹம்மதுவை எப்படி காண்கிறது? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டின் படி நாம் "முஹம்மதுவை" எப்படி அழைக்கலாம் அல்லது புதிய ஏற்பாட்டின் படி "அவர் யார்?".

சகோதரர் ஜான்சன்:

மிகவும் அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு விடையை காண்பதற்கு முன்பாக, நான் உங்களிடம் ஒரு 100 ரூபாய் நோட்டை தருகிறேன், அதனை உங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்து நான் உங்களிடம் கொடுத்த நோட்டு நல்ல நோட்டா? என்பதை பார்த்துச் சொல்லுங்கள்.

[சகோதரர் ஜான்சன் ஒரு 100 ரூபாய் நோட்டை கேள்வி கேட்டவரிடம் தருகிறார், அதனை அவர் வாங்கி தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிடுகிறார், இப்போது சகோதரர் ஜான்ச‌ன் ம‌றுப‌டியும் பேசுகிறார்..]

ஜான்சன்: நான் கொடுத்த நோட்டுடன் உங்கள் நோட்டை ஒப்பிட்டீர்களா?

சாமுவேல்: ஆம் நான் ஒப்பிட்டேன்.

ஜான்சன்: சரி, முடிவு என்ன?

சாமுவேல்: நீங்கள் கொடுத்த நோட்டு, இந்திய அரசாங்கம் அச்சடித்த நோட்டு அல்ல.

ஜான்சன்: சரி, இதனை எப்படி கண்டுபிடிச்சீங்க?

சாமுவேல்: என்னிடமுள்ள நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஆகையால் அது அரசாங்கம் அச்சடித்த நோட்டு இல்லை என்பதை கண்டுபிடித்தேன்.

ஜான்சன்: சரி, அது நல்ல நோட்டு இல்லை என்றுச் சொல்லிவிட்டீர்கள், அதற்கு இன்னொரு பெயர் என்ன?

சாமுவேல்: ம்ம்ம்ம்ம் நல்ல நோட்டு இல்லையானால், அதற்கு பெயர் "கள்ள நோட்டு"...

ஜான்சன்: சரியாக பதில் சொன்னீங்க. இப்போது பைபிளின்படி முஹம்மது "தீர்க்கதரிசி" இல்லை என்று நிருபணமாகிவிட்டதால், அவரை பைபிள் எப்படி அழைக்கும்?

சாமுவேல்: ம்ம்ம்ம்.... "கள்ளத் தீர்க்கதரிசி" என்று பைபிள் அழைக்கும்... 

ஜான்சன்: சரியாகச் சொன்னீர்கள். பைபிளின் படி முஹம்மது ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" ஆவார்.

இயேசு தமக்கு பின்பு அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று எச்சரித்துள்ளார். அவர்கள் கூடுமானவரை கிறிஸ்தவர்களையும் ஏமாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார். புதிய ஏற்பாடு அனேக இடங்களில் இப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள், அவர்களை விசுவாசிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறது. 

முதலாவதாக, பைபிள் "முஹம்மதுவை" கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கிறது: 

முதலாவது புதிய ஏற்பாடு முஹம்மதுவை "கள்ளத் தீர்க்கதரிசி" அல்லது "பொய் தீர்க்கதரிசி" என்று பட்டம் சூட்டுகிறது என்பதை எல்லா கிறிஸ்தவர்களும் மனதில் வைக்கவேண்டும்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். (2 கொரிந்தியர் 11:13-15)

இரண்டாவதாக, பைபிள் அவரை "பொய்யர்" என்று கூறுகிறது:

பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்று வேதம் கூறுகிறது. முஹம்மது "பிதாவையும் குமாரனையும் மறுதலித்தார்", ஆகையால், இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், பைபிள் முஹம்மதுவை "பொய்யன்" என்ற பெயரையும் சூட்டுகிறது.

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.  ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.  நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.  உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன் . (1 யோவான் 2: 22-26)

மூன்றாவதாக, பைபிள் அவரை "சபிக்கப்பட்டவன்" என்று அழைக்கிறது

கீழ்கண்ட வசனங்களின் படி, பைபிள் கூறும் நற்செய்தியை அல்லாமல் "வேறு ஒரு நற்செய்தியை", "வேறு ஒரு இயேசுவை" மனிதர்களுக்கு போதிக்கிறவன், அவன் மனிதனாக இருந்தாலும் சரி, வானத்திலிருந்து வருகின்ற தூதனாக இருந்தாலும், "அவன் சபிக்கப்பட்டவன்" என்று பைபிள் கூறுகிறது.

 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;  வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் . கலாத்தியர் 1:6-9.

ஆக, புதிய ஏற்பாட்டின் படி முஹம்மது "ஒரு பொய்யர்", "கள்ள தீர்க்கதரிசி" மற்றும் "சபிக்கப்பட்டவர்" ஆவார். இஸ்லாமியர்களின் மனம் புண்படும் என்று நாம் இவைகளை மறைத்துவைத்தால், சாத்தான் நம்மை வஞ்சிக்க நாமே அவனுக்கு வழி வகுத்து கொடுக்கிறவர்களாக கர்த்தரின் பார்வையில் காணப்படுவோம்.

முஸ்லிம்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, நம்முடைய வேதம் கூறுவதை நாம் நம்பவேண்டாமா? "இயேசு தேவகுமாரன் இல்லை" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் துக்கப்படுவார்களே என்று அவர்கள் நினைத்து, நம்மிடம் "இயேசு இறைவன் தான்" என்று கூறுகிறார்களா என்ன? இல்லையல்லவா? அதே போலத்தான், சத்தியம் சத்தியமே. அதனை சொல்வது நம்முடைய கடமை.

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 4: என் பெயர் எஸ்தர். எனக்கு ஒரு இஸ்லாமிய தோழி இருக்கிறாள், அவள் என்னிடம் "முஸ்லிம்களாகிய நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம், அதே போல நீங்கள் ஏன் முஹம்மதுவை மதிப்பதில்லை, கவுரப்படுத்துவதில்லை" என்று கேட்கிறாள்? இதற்கு நான் எப்படி பதில் கூறுவது?

சகோதரர் ஜான்சன்: உங்கள் தோழியிடம், "மதிப்பு, மரியாதை, கவுரவம்" என்றால் என்ன? என்று கேளுங்கள்.

இயேசுவை அவர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொல்வது "மிகப் பெரிய வஞ்சகமாகும்". "ஒருவரை நாங்கள் மதிக்கிறோம்" என்பது எப்படி வஞ்சகமாகும்? என்ற கேள்வி முஸ்லிம்களுக்கு எழலாம், இதனை நான் இப்போது விளக்குகிறேன்.

இயேசுவிற்கு கவுரவம் எது?

முதலாவதாக, ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றுச் சொன்னால், அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை மதிக்கவேண்டும். அதாவது, இயேசுவை இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொன்னால், "இயேசு இறைக்குமாரனாக இருக்கிறார், அந்த ஸ்தானத்தில் அவரை மதித்தால்" அது உண்மையாக கவுரமாகும். இயேசு தேவகுமாரன் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகள் பொய் என்றுச் சொல்லி குற்றப்படுத்திவிட்டு, கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக, "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்று இஸ்லாமியர்கள் கூறுவது எப்படி உண்மையான கவுரமாகும்? இது வஞ்சகம் அல்லவா?

முஹம்மதுவிற்கு கவுரவம் எது?

இன்னொரு உதாரணத்தை இஸ்லாமிய நிலையிலிருந்து பார்ப்போம். அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் கீழ்கண்டவாறு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், இதனை இஸ்லாமியர்கள் எப்படி காண்பார்கள்? " எங்கள் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எவ்வளவாக மதிக்கிறார்கள் பார்த்தீர்களா?" என்று சந்தோஷப்படுவார்களா? அல்லது வஞ்சகம் என்பார்களா?

1) கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உங்கள் முஹம்மதுவை உங்களைவிட அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

2) முஹம்மது ஒரு நல்ல மனிதர், நேர்மையானவர்.

3) முஹம்மது ஒரு இறைத்தூதர் அல்ல, அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே.

4) முஹம்மதுவை ஜிப்ராயீல் தூதர் சந்திக்கவில்லை.

5) முஹம்மதுவிற்கு இறைவனிடமிருந்து தூதுகள் வரவில்லை.

6) முஹம்மதுவிற்கு குர்‍ஆன் இறங்கியது என்று இஸ்லாமியர்கள் சொல்வது சுத்தப் பொய்யாகும், முஹம்மதுவிற்கு அப்படிப்பட்ட வெளிப்பாடு ஒன்றும் வரவில்லை.

7) முஹம்மதுவை நாங்கள் அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

மேற்கண்ட விதமாக கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பற்றி கூறி, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு அதிகமாக முஹம்மதுவை மதிக்கிறோம் என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று நம்பி, பிறகு அவரை நாங்கள் மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் அது உண்மையான கவுரமாக இருக்குமே ஒழிய, முஹம்மதுவின் "நிலையை" அதாவது அவரது நபித்துவத்தை மறுத்துவிட்டு, குர்‍ஆனை மறுத்துவிட்டு, அவரை மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால், அது எப்படி மரியாதை செலுத்துவதாகும்? என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

இதே போலத்தான், இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்துவிட்டு, அவர் உண்மையாக யாராக இருந்தார் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகளை உள்ளடக்கிய‌ பைபிளை குற்றம் கூறிவிட்டு, பலவீனமான கிறிஸ்தவர்களிடம் வந்து "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்றுச் சொல்வது எப்படி உண்மையான மரியாதையாக கருதப்படும்?

கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை...எச்சரிக்கை...

சாத்தனுடைய சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்தவர்களாக, இப்படிப்பட்ட இஸ்லாமிய வாதங்களை நம்பவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன்.

உங்களுடைய நித்தியம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இனி எந்த இஸ்லாமியராவது , "நாங்கள் உங்கள் இயேசுவையும், அவரது தாயாகிய மரியாளையும், உங்களை விட அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று உங்களிடம் கூறினால். அதற்கு நீங்களும், "ஆமாம், நாங்களும் உங்கள் முஹம்மதுவை மதிக்கிறோம், அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால், இறைத்தூதர் அல்ல, அவருக்கு குர்‍ஆன் இறங்கவில்லை, ஆனாலும்,அவர் நல்ல மனிதர், நாங்கள் அவரை அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று  சொல்லிப் பாருங்கள். மரியாதை என்றால் என்ன கவுரவம் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

இயேசுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால்,  பைபிள் "அவரை" எப்படி அடையாளம் காட்டுகிறதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.

முஹம்மதுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால், குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவரை எவ்விதம் அடையாளம் காட்டுகின்றதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.

இவ்விருவருடைய மூல ஆதாரங்களை மறுதலித்துவிட்டு, தங்கள் சொந்த நூல்களின் படி அவரை கவுரப்படுத்த முயன்றால், அது "வஞ்சகமாகும்". இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன், "கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை "முஹம்மது நபி (Prophet Muhamamd)" என்ற நிலையில் மதிப்பதில்லை, முஹம்மதுவை "திரு. முஹம்மது (Mr. Muhamamd)" என்ற நிலையில் மதிக்கிறோம்" அவ்வளவே.

முடிவுரை:

இந்த பாகத்தில் "புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் (கேள்வி பதில்களாக) கண்டோம், அடுத்த பாகத்தில் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றி இன்னும் மேலதிக விவரங்களைக் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம்... „

தமிழ் கிறிஸ்தவ உலகமே... கடைசி காலங்களில் அனேக வஞ்சகர்கள் எழும்பி, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது... இஸ்லாமியர்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... ஒருவேளை இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ போதகராக இருப்பீர்களானால், "உங்கள் மீது உங்கள் ஆடுகள் பற்றிய கணக்கு கேட்கப்படும் என்பதையும், ஆடுகளை மேய்ப்பதில், அவர்களை சரியான ஞானத்தில் நடத்துவதும் உங்கள் கடமை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்". இஸ்லாம் பற்றி உங்கள் சபை விசுவாசிகளுக்கு எச்சரிக்கையிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் கேள்விகள் தொடரும்..

 

http://isakoran.blogspot.com/2011/10/2_16.html

October 14, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2



பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2


(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

இப்னு ஹஜ்ம் (Ibn Hazm) தம்முடைய புத்தகத்தில் தொகுப்பு 8, பாகம் 2, பக்கங்கள் 235 மற்றும் 236ல் கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்:

"கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனமும், மார்பக பாலூட்டுதல் வசனமும் ஆயிஷா அவர்களிடம் இருந்த குர்‍ஆன் பிரதியில் இருந்தது. முஹம்மது மரித்த சமயத்தில், மக்கள் அவருடைய அடக்கத்திற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டு மிருகம் வீட்டில் நுழைந்து அந்த குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது ".

"The verses of stoning and breast feeding were in the possession of A'isha in a (Qur'anic) copy. When Muhammad died and people became busy in the burial preparations, a domesticated animal entered in and ate it ."

ஆயிஷா அவர்களும் தம்முடைய வசத்தில் இருந்த வசனங்கள் எவைகள் என்பதை அறிந்திருந்தார்கள். ஜமக் ஷாரி(Zamakh-Shari) என்பவரின் "al-Kash-shaf" என்ற புத்தகத்தை, பரிசீலித்து சீர்படுத்திய "முஸ்தபா ஹுசைன்" என்பவரும் இந்த விவரத்தை தம்முடைய புத்தகத்தின் பாகம் 3, பக்கம் 518ல் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் போது, "ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்ட நிகழ்ச்சியை அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள்" என்றும் அவர்களில் "அப்துல்லாஹ் இப்னு அபூ பக்கர் ம‌ற்றும் ஆயிஷா" அவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியை "Dar-al-Qutni", "al-Bazzar" மற்றும் "al Tabarani" போன்றவர்கள் முஹம்மது இப்னு இஷாக் என்பவரிடமிருந்து கேட்டதாக கூறியுள்ளார்கள். மேலும் முஹம்மது இப்னு இஷாக் என்பவர் இந்நிகழ்ச்சியை அப்துல்லாஹ்விடமிருந்து கேட்டதாகவும், அப்துல்லாஹ் இதனை ஆயிஷாவிடமிருந்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பேராசிரியர் முஸ்தபா "இந்த குர்‍ஆன் வசனங்களை வீட்டு மிருகம் சாப்பிட்ட நிகழ்ச்சிக்கு முன்பே இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருக்ககூடும்" என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட விவரங்களை நாம் படிக்கும்போது, சில கேள்விகள் நமக்கு எழுகின்றன:

1) "அந்த கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏன் உமர் அவர்கள் அதனை குர்‍ஆனில் சேர்க்கவேண்டும் என்று மறுபடியும் கொண்டுவருகிறார்?" (முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1).

2) இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், முஹம்மது மரித்துவிட்ட பிறகும் மக்கள் ஏன் "மார்பக பாலூட்டுதல் குர்‍ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டு இருந்தார்கள்"?

3) இந்த பாலூட்டுதல் வசனங்களை மக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக ஓதிக்கொண்டே இருக்கும் போது முஹம்மது மரித்துவிட்டதால், அவரது மரணத்திற்கு பின்பு இவ்வசனங்களை "அதிகார பூர்வமாக இரத்து செய்தவர்கள் யார்?". ஒருவேளை அந்த வீட்டு மிருகம் அவ்வசனங்களை இரத்து செய்துவிட்டதா?

இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதற்கு, முஹம்மதுவின் தோழர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஆயிஷா அவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

முடிவுரை: முதல் பாகத்தில் நாம் கண்டது போல, நூற்றுக்கும் அதிகமான குர்‍ஆன் வசனங்கள் தொலைந்துவிட்டன. இந்த இரண்டாம் பாகத்தில் நாம் கண்டோம், ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது. குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திய வசனங்கள் அப்படியே நம்மிடம் உள்ளது என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது பொய். முஹம்மதுவின் தோழர்கள், மற்றும் அவரின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சியின் படி நம்மிடம் உள்ள குர்‍ஆன் "பாதுகாக்கப்பட்ட ஒரு வேதமல்ல" என்பது தெளிவாக புரிகிறது.

இப்னு உமர் அல்கத்தாப்பின் கூற்றுப்படி, எந்த ஒரு இஸ்லாமியரும் "தன்னிடம் முழு குர்‍ஆன் உள்ளது என்று கூறக்கூடாது", ஏனென்றால், மூல குர்‍ஆனில் உள்ள அனேக வசனங்கள் காணாமல் போய் உள்ளன.

இன்னும் "தொலைந்த குர்‍ஆன் வசனங்கள்" தொடரும்....

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.


 



October 5, 2011

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்

1.கல்லை வணங்குதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் "நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்" என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.

2.கும்பாபிஷேகம்
யாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது " யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்" இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் "நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே". கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.

3.பூசாரிமார்கள்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 "ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்." இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.

4.கற்ப கிரக பிரவேசம்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 "ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக." என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.

5.பூஜையில் மணி அடித்தல்
பூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 "அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்."

6.பலி செலுத்துதல்
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 "ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்" யாத்திராகமம்:24:5,8 "கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்"

7.நந்தி வழிபாடு
இன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

8.குத்துவிளக்கு
ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.

9.புனித நீராடல்
இந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

10.மாதவிலக்கு முறைமை
சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை "தூரமானாள் உள்" என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

 

 

http://www.thewayofsalvation.org/2011/05/blog-post_05.html?showComment=1316604656119#comment-c859660790133803902

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? - ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


      

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

இப்னு உமர் அல் கத்தாப்:

குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்? குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் "குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72)

"Let no one of you say that he has acquired the entire Qur'an for how does he know that it is all? Much of the Qur'an has been lost , thus let him say, 'I have acquired of it what is available" (Suyuti: Itqan, part 3, page 72).

இப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:

"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், " கூட்டங்கள் (Parties)" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)"

"During the time of the prophet, the chapter of the Parties used to be two hundred verses when read. When Uthman edited the copies of the Qur'an, only the current (verses) were recorded " (73 verses).

முஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.

ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:

"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ' கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌?'. இதற்கு அந்த முஸ்லிம் '72 அல்லது 73 வசனங்கள்' என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், 'அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த 'கூட்டங்கள் (Parties)' அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் 'அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன?' என்று கேட்டார். உபை அவரிடம், 'அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்' என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார்.

"This famous companion asked one of the Muslims, 'How many verses in the chapter of the Parties?' He said, 'Seventy-two or seventy-three verses.' He (Ubay) told him, 'It used to be almost equal to the chapter of the Cow (about 286 verses) and included the verse of the stoning .' The man asked, 'What is the verse of the stoning?' He said, 'If an old man or woman committed adultery, stone them to death."'

நபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):

"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.).

"'Ali Ibn Abi Talib said this has a reliable chain of authority (The Sweetest [Al Mohalla] vol. 8.)."

இதனை "al-Kash-Shaf" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518).

முஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் "இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்" என்பவர்கள் ஆவார்கள்.

இப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.

ஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் "கூட்டங்கள் (Parties)" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,

இதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிப் பற்றி ஸுயூதி தன் "இத்கான்" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):

குர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். "அல் தவ்பா" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் "குஜைமா இப்னு தாபித்" என்பவரிடம் மட்டுமே இருந்தது. 'இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்' என்று ஸைத் கூறினார். உமரும் "கல்லெரிதல்" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்".

"During the collection of the Qur'an, people used to come to Zayd Ibn Thabit (with the verses they memorized). He shunned recording any verse unless two witnesses attested to it. The last verse of chapter of Repentance was found only with Khuzayma Ibn Thabit. Zayd said, 'Record it because the apostle of God made the testimony of Khuzayma equal to the testimony of two men.' 'Umar came with the verse of the stoning but it was not recorded because he was the only witness to it."

மேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:

"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா?"

"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா?".

அதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், 'உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் "Skiek Kishk" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம்.

ஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:

"இறக்கப்பட்ட வசனங்களில் "பத்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனத்தை "ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனம் இரத்து செய்துவிட்டது. இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63)

"Among the (verses) which were sent down, (the verse) of the ten breast feedings was abrogated by (a verse which calls for five breast feedings. The apostle of God died and this verse was still read as part of the Qur'an. This was related by Abu Bakr and 'Umar" (refer to Suyuti's qan, part 3, pages 62 and 63).

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.



Answering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத்தகத்திற்கு மறுப்பு - 1

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

திரு பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இது தான் பைபிள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் பைபிளை தாக்கி அனேக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை நாம் தொடர் கட்டுரைகளாக காணப்போகிறோம். இவர், "இயேசு இறைமகனா?" என்ற இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதற்கு சில பதில்களை நாம் அளித்துள்ளோம், ஆனால், அவைகளுக்கு அவர் மறுப்போ அல்லது பதிலோ அளிக்கவில்லை.

குறைந்த பட்சம் இந்த "இது தான் பைபிள்" என்ற புத்தகத்திற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில்களுக்காகவது அவர் மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இந்த தொடர் பதில்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உண்மை என்ன என்பது விளங்க ஆரம்பிக்கும். என்னிடமுள்ள பதிப்பு, "இது தான் பைபிள்" ஒன்பதாம் பதிப்பாகும், இது ஜனவரி 2010ல் வெளியானது.

நூலின் பெயர்: இது தான் பைபிள்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு, ஜனவரி 2010

வெளியீடு: நபிலா பதிப்பகம்.


பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - பாகம் 1

இந்த கட்டுரையில் பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தின் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களை பார்ப்போம்.

பீஜே அவர்கள் எழுதியது:

முன்னுரை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று. (பக்கம் 2-3)

கிறிஸ்தவன் (உம‌ர்) எழுதியது:

முந்தினவரும் பிந்தினவருமாகிய கர்த்தரின் ஈடு இணையற்ற பெயரில் உங்களுக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்களே, உங்களின் இந்த புத்தகத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களின் சமீப கால முன்னேற்றம் மற்றும் தமிழ் எழுத்து உலகில் கிறிஸ்தவர்கள் காட்டும் ஆர்வம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் எழுதும் மறுப்புக்கள் உங்களை ஆச்சரியப்பட வைப்பதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ அல்ல, மாறாக, உங்கள் கண்கள் தெளிவாக்கப்படவேண்டும் என்றும், அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, பைபிள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை கேட்டு எந்த வகையில் உங்களுக்கு பதில்களைத் தரலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்குமே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆக, தமிழ் பேசும் முஸ்லிம்களை புண்படுத்துவது எங்கள் நோக்கமன்று, இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

பல விஷயங்களில் உங்களுக்கும் முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்.

முஸ்லிம்கள் மற்றும் உங்களைப் போல உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறுப்புக்களை எழுதுகின்றோம். இந்த மறுப்புக்கள் எழுதும் வேளையில், தேவையான இடத்தில் குர்‍ஆன் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் விவரங்களையும் நாங்கள் குறிப்பிடுவோம். நீங்களும் உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி எழுதுகிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும் நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

ஆம் பீஜே அவர்களே. கர்த்தரின் முன்னிலையில் (அல்லாஹ்வின் முன்னிலையில் அல்ல) நாம் அனைவரும் அந்நாளில் நிற்போம். நம்முடைய இவ்வுலக நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் நடத்தைகள் மீது ஆதாரப்பட்டு அந்நாளின் நியாயந்தீர்ப்பு இருக்கும்.

அந்த நாளின் நியாயத்தீர்ப்பில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு (இதனை கிறிஸ்தவர்கள் வழக்கப்படி „இரட்சிப்பின் நிச்சயம்" என்றுச் சொல்வார்கள்). அந்த நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது. நாம் மரித்த பிறகு நமக்கு மோட்சத்தை கொடுப்பது அல்லது மறுப்பது அந்த இறைவனின் அப்போதைய விருப்பம் போன்ற கோட்பாடு எங்களுக்கு இல்லை. இந்த உலகிலேயே எங்களுக்கு 100% இரட்சிப்பின் நிச்சயம் உண்டு. இதனால் தான் நாங்கள் உங்களுக்கு மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கிறோம், வாழ் நாள் எல்லாம் பயத்தோடும், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் அளிப்பானா இல்லையா? என்ற சந்தேகத்தோடும் வாழாமல் இருக்கும்படியான ஒரு வழியை இயேசு திறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த இடுக்கமான வாசல் வழியாக செல்ல உங்களுக்கு விருப்பமா?

பீஜே அவர்கள் எழுதியது:

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தறவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுளளோம்.

கிறிஸ்தவன் எழுதியது:

உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த இஸ்லாமிய அறிஞருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாங்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு, அதே நேரத்தில் பைபிள் பற்றியும் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களும் உண்டு. நித்திய ஜீவனை அடைய உலக மக்களுக்கு பைபிள் போதும், குர்‍ஆன் அதற்கு உதவாது என்பதை இந்த உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் மறுப்பை கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே அனேக இஸ்லாமியர்கள் அறிந்துக்கொள்வார்கள். எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பரிசுத்த வேதம் எங்களை பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையச் செய்யும், இதில் அணு அளவேனும் சந்தேகமில்லை.

பீஜே அவர்களே உங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் கொண்டுள்ள அன்பினிமித்தம் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், "உங்கள் குர்‍ஆனும், உங்கள் முஹம்மது மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை வெற்றியடையச் செய்யாது, உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்காது என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்".

எங்கள் மத குருமார்கள் எங்களை தவறான வழியில் இழுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இது முழுக்க் முழுக்க மிகப் பெரிய பொய்யாகும். பைபிள் என்பது உலகத்தை படைத்த இறைவனால் எங்களுடைய வழிகாட்டுதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இது மட்டுமல்ல, எங்களை வழி கெடுக்க எந்த ஒரு மத குருவாலும் முடியாது ஏனென்றால், நாங்கள் எங்கள் வேதத்தை எங்கள் தாய் மொழியில் படிக்கிறோம். உங்களைப் போன்று குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்ற "தவறான" கோட்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ சபையிலாவது "நீங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படித்தால் தான், நன்மை" என்று எந்த ஒரு போதகரும் சொல்வதில்லை, இப்படிச் சொன்னால் அது முட்டாள் தனம். இப்படிபட்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.

குர்‍ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதமல்ல, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற உண்மையை நாங்கள் சில ஆண்டுகளாக ஆதாரங்களோடு எழுதி வருகிறோம். அதே வரிசையில் உங்கள் இந்த புத்தகத்திற்கு நாங்கள் தரவிருக்கும் மறுப்புகள் "உண்மை எது பொய் எது" என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வழி வகுக்கும். எனவே, நீங்கள் சொன்ன அதே பைபிளைக் கொண்டு "நீங்கள் சொல்வது பொய், உங்கள் குற்றச்சாட்டுக்கள் பொய்" என்பதை நாங்கள் நிருபிக்கப்போகிறோம், மட்டுமல்ல, குர்‍ஆன் ஒரு வேதமல்ல என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

பீஜே அவர்கள் எழுதியது:

எழுதியவன் யார்? என்பதைப் புறக்கணித்துவிட்டுக் காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்கள், "யார் எழுதினான்? அவன் முகவரி என்ன? அவன் பெயர் என்ன?" போன்ற விவரங்களை கேட்காமல், "அவன் சொன்னதில் உண்மை உண்டா? அவன் ஆதாரங்களை முன்வைக்கின்றானா?" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ந்தால் சத்தியம் எது அசத்தியம் எது என்பது விளங்கும். ஆனால், இன்றைய தமிழ் இஸ்லாமியர்களின் நிலை எப்படி உள்ளது என்றால் (பீஜே அவர்களே உங்கள் நிலையும் கூட), 'பெயரைச் சொன்னால் மட்டுமே, முகவரியை கொடுத்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அவன் எழுதியதில் உண்மை இருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அதனை நாங்கள் பார்க்கமாட்டோம் படிக்கமாட்டோம்' என்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பீஜே அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், "கர்த்தரின் போதனைக்கு முரணாக எங்கள் மதகுருக்கள் போதிக்கவில்லை, ஆனால், அதே கர்த்தரின் போதனைக்கு விரோதமாகவும், முரணாகவும், போதித்தவர் உங்கள் முஹம்மதுவும், அவரது அடிச்சுவடியில் நடந்துக்கொண்டு இருக்கும் உங்களைப்போல இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுமேயாவார்கள்".

இன்று கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், "உங்களைப் போல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும், மத நல்லிணக்கனம் என்ற போர்வையில், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற போர்வையில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் குடிக்கும் பாலில் (மக்களின் மனதில்) கலக்கும் இஸ்லாமிய போதனையை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும்".

எங்களுக்கு எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது இருக்கும் அந்த அளவு கடந்த மரியாதை என்பது, அவர் எந்த அளவு பைபிளுக்கு சார்ந்து போதிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கும். எந்த ஒரு கிறிஸ்தவ போதகராவது, பைபிளுக்கு எதிராக எதையாவது போதித்தால் நாங்கள் அவரை ஒதுக்கிவிடுவோம், எங்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது, நாங்கள் சுதந்திர பறவைகள். நீங்கள் உங்கள் முஹம்மது மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை எங்களுக்கு இல்லை. தவறு செய்தால் நீ நபியாக இருந்தாலும் சரி தவறு தவறு தான் , அதே நேரத்தில் நன்மை செய்து, கர்த்தருக்கு ஊழியம் செய்தால், "கர்த்தரின் ஊழியர்" என்ற மரியாதை நிச்சயம் உண்டு. (இந்த மரியாதை பட்டியலில், மக்களை ஏமாற்றும் ஊழியர், கொல்லையடிக்கும் ஊழியர் வரமாட்டார்).

ஆக, பீஜே அவர்களே, எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது நீங்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சவாலை நான் ஏற்கிறேன், உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை அல்லது மறுப்பை தருகிறேன். பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் எடுத்த முடிவு மீது உங்களுக்கு முழு நிச்சயம் இருந்தால், நான் எழுதப்போகும் பதில்களை படியுங்கள், ஆதாரங்களை சரிபாருங்கள், என் வரிகள் பற்றிய உங்கள் மறுப்பை எழுதுங்கள், எங்கள் ஆதாரங்களையும், உங்கள் ஆதாரங்களையும் மக்கள் படிக்கும்படி மக்களின் முன்னிலையில்கொண்டு வாருங்கள். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக எங்கள் முடிவிற்கு நீங்கள் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன் "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகவே இருக்கவே முடியாது, இதற்கு ஒரு கடுகளவும் வாய்ப்பில்லை". ஆனால், பைபிள் இறைவனின் வேதமாகும், இதனை கொஞ்ச கொஞ்சமாக நான் என் மறுப்புக்களில் விளக்குவேன், இதனை என் கட்டுரைகளை படிக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவரோ அதனை அவர் அறிந்துக்கொள்வார்". உங்கள் வரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் தளத்தில் என் மறுப்புக்களின் தொடுப்பை கொடுப்பீர்களா? " நீங்கள் முன்வைத்த வாதங்கள் சரியானவை தான்" என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், என் தொடுப்புக்களை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு மறுப்போ அல்லது பதிலோ எழுதுவீர்களா? இணைய வாசகர்கள் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், அவைகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதில்களையும் படிக்க உதவுவீர்களா? அப்படி உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும் நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்கள், தோற்றுப்போனவர்கள், சத்தியத்தில் நிலை நிறகாதவர்கள். ஏனென்றால், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதினீர்கள், அதற்கு நான் சில பதில்களைக் கொடுத்துள்ளேன். இதுவரை என் பதில் கட்டுரையை குறிப்பிட்டு, அவைகளுக்கு தகுந்த பதிலை கொடுத்துள்ளீர்களா? (எனக்கு தெரிந்தவை நீங்கள் என் மறுப்புக்களுக்கு பதிலை தரவில்லை, என் கண்களில் படாமல் இருந்தால், உடனே அவைகளை எனக்கு தெரிவிக்கவும்).

குறைந்த பட்சம் இந்த உங்களின் புத்தகத்திற்கு நான் அளிக்கும் மறுப்புக்களை உங்கள் தளத்தில் பதித்து மறுப்பு எழுதுவீர்களா?

உங்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்ப்பது:

1) எங்கள் மறுப்பு கட்டுரையின் தொடுப்பை உங்கள் தளத்தில் தாருங்கள் (ஏனென்றால், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு தான் நாங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம், மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அல்ல, எனவே பொறுப்பு உங்களுக்கு உண்டு).

2) தொடுப்பை கொடுத்து, உங்கள் மறுப்பையும் எழுதுங்கள் அல்லது வீடியோவில் பேசியாவது பதியுங்கள்.


இப்படி செய்வதை விட்டுவிட்டு, நேரடியாக உமர் வந்தால் தான் நான் பதில் தருவேன் என்ற வாதத்தை மட்டும் முன் வைக்கவேண்டாம். இப்படி நீங்கள் செய்தால், மக்கள் உங்களிடம் இப்படியாக கேட்பார்கள் "பின் எந்த தைரியத்தில் நீங்கள் மட்டும் கிறிஸ்தவத்திற்கு எதிராக புத்தகத்தை வெளியிடுகிறீர்கள்? எழுத்து வடியில் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்?".

நீங்கள் உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாக்கு கொடுத்துள்ளீர்கள், அதனை நிறைவேற்ற தவறவேண்டாம்.

கடைசியாக பீஜே அவர்களே, நீங்களும், இதர இஸ்லாமியர்களும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவலும் கூட, முக்கியமாக என்னுடைய ஆவல், ஏனென்றால், நானும் ஒரு இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், என் ஜனங்கள் (இஸ்லாமியர்கள்) மீது எனக்குள்ள அக்கரையே இந்த எழுத்து ஊழியத்தை நான் கையில் எடுக்க காரணமாக உள்ளது.

உங்களை என் அடுத்த மறுப்பில் சந்திக்கும் வரை...

அன்புடன்

தமிழ் கிறிஸ்தவன்

பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்களில் சில‌:

1. இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

2. பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

3. உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

4. ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

5. பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

6. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

7. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

8. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

9. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)