அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 10, 2012

மக்கள் சேவையாளரை மதியுங்கள்

கடந்த வியாழன் ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் காங்கிரஸார் நடந்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது.. ஆனால் இறுதியில் அடிப்பட்டது யாரென்றால் காவல் துறையை சார்ந்த ஒரு பெண் காவலர். அவர் என்ன தவறு செய்தார்..தன் கடமையை செய்தது தவறா... கட்சிகாரர்கள் அரசின் கொள்கைகளை தான் எதிர்க்கவேண்டுமெ ஒழிய அரசு ஊழியர்களை அல்ல.. அவர்கள் தங்களுக்கு என்ன கட்டளை இடுகிறார்களோ அதை கடமை உணர்வோடு செய்வபர்கள்... அவர்களை தாக்குவது என்பது நம்மை நாமே தாக்குவதுபோலாகும்.. இதனால் சொல்ல வந்த விஷயமும் எடுபடாமல் போய்விடும்.. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் யாராவது இது போன்ற அரசாங்க பணியில் இருப்பார்களானால் அவர்களை தாக்க மனது வருமா?? சிந்தியுங்கள்... அதிலும் காவல் துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் பாதுகாப்பு தரும் ஒரு அமைப்பு.. அவர்களூடைய தொழிலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும்.. 24 மணி நேரமும் அவர்களுக்கு பணியுண்டு. .. அவர்கள் தங்களை கடமைகளை சரியாக செய்ய அனுமதித்தால் தான் அரசாங்கத்தின் அனைத்து சக்கரமும் சரியாக சூழலும்.. ...இனியாவது அவர்களின் சேவைக்கு மதிப்பளிப்போம்.. இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடக்காவண்ணம் உறுதி ஏற்போம்..

September 4, 2012

அப்பாவி சிறுமிக்கு எதிராக செயல்பட்ட இமாம் கைது

பாகிஸ்தானில் கடந்த மாதம் குரானில் சில பிரதிகளை கிழித்து எறிந்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்  சிறுமி ரிம்ஷா மாசிஹ். இவளுக்காக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்துவந்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த சிறுமியின் பள்ளீகூட பையில் இந்த குரானின் சில கிழிந்த பிரதிகளை வைத்துள்ளார்.. எப்படியாவது சிக்கிகொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். மேலும் இப்படியாக சதிசெய்து ஓவ்வொரு கிறிஸ்தவர்களையும் வெளியேற்றவேண்டும் என்பதே இவரின் விருப்பம். இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று இந்த இமாம் எவ்வளவுக்கதிமகாக குரானை உயிரினுலும் மேலாக மதிக்கிறாரோ அவரே தான் குரான் பிரதிகளை கிழித்துள்ளார். அப்படியானால் வெளிப்படையாக எல்லோர் முன்னும் குர்ரானை மதித்தவர் யாரும் பார்க்கதாத போது அது கிழித்தார் என்றால் அதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.. இப்போது அந்த இமாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மதம் என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிராக செயல் பட்டு இப்படிப்பட்ட அப்பாவி மக்களை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கொடுரர்கள் மனந்திரும்பவேண்டும்.. பிரார்த்திப்போம்


விடியோவில் பார்ப்பதற்கு