அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 28, 2008

அனானி சகோதரரிடமிருந்து வந்த பின்னுட்டமும் உமரின் பதிலும்

இதுதான் முகமது நம்பதகுந்தவரா என்ற உமரின் கட்டுரைக்கு வந்த அந்த பின்னுட்டம்
 
can you tell me an another referance othar than answering-islam.com, since it is site maintained with an objectives that spoil the belivers of allah.

 


 
இந்த பின்னூட்டத்திற்கு ஈஸா குர்‍ஆனின் பதில்:

அருமையான அனானிமஸ் அவர்களே,

நீங்கள் கேட்டுள்ளீர்கள், ஆன்சரிங் இஸ்லாம் தவிர வேறு ஏதாவது தளத்திலிருந்து அல்லது வேறு ஒரு தளத்தை காட்டமுடியுமா என்று?
 

முகமது நேர்மையானவரா என்ற கட்டுரையில் பயன்படுத்திய விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய விவரங்கள், அதாவது:

1) உங்கள் குர்‍ஆன் வசனங்கள்
2) உங்கள் சஹி ஹதீஸ்கள் என்றுச் சொல்லும் அல்புகாரி, அல்முஸ்லீம் போன்ற ஹதீஸ்கள்.
3) உங்கள் புகழ் பெற்ற இஸ்லாமிய உரையாளர் இபின் கதிரின் உரை
4) இஸ்லாமிய அறிஞர் இபின் இஷாக்கின் முகமதுவின் வாழ்க்கை சரிதை

என்று எல்லாமே இஸ்லாமிய ஆதாரங்கள் அல்லது விவரங்கள் தான்.

இந்த கட்டுரையில் முகமது இப்படிப்பட்டவர் என்று யாராவது ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் புத்தகத்திலிருது மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா? இல்லை, எலலாமே இஸ்லாமிய ஆதாரங்கள் என்று இருக்கும் போது, அதை மறுக்கமுடிந்தால் மறுத்து பதில் அளியுங்கள், அதை விட்டு விட்டு இந்த தளம் விட்டு வேறு தளம் காட்டமுடியுமா என்று கேட்டால் என்ன பொருள்?

ஒரு வேளை வேறு ஒரு தளத்திலிருந்து ஒரு கட்டுரையை கொடுத்துவிட்டால், உடனே அதை ஏற்றுக்கொள்வீர்களா என்ன? அதுவும் அவதூறு செய்யும் தளம் தான் என்பீர்கள், அவ்வளவு தானே?

சொல்லப்பட்ட விவரங்கள் சரியா தவறா என்று பாருங்கள்.
கொடுக்கப்பட்ட வசனங்களுக்கு சரியாக பொருள் சொன்னார்களா இல்லையா என்று பாருங்கள்.

உங்க‌ளுக்கு இந்த‌ க‌ட்டுரையில்  மேற்கோள் காட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ள் த‌வ‌றாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அதை விள‌க்கி ம‌றுப்போ ப‌திலோ எழுதுங்க‌ள், அதை விட்டுவிட்டு, இந்த‌ த‌ள‌ம் இஸ்லாமை விம‌ர்சிக்கும் த‌ள‌ம் என்றுச் சொன்னால் எப்ப‌டி?

ச‌ரி, நான் கேட்கிறேன், உங்க‌ள் எதிர்ப்பார்ப்பு என்ன‌? ஏதாவ‌து கிறிஸ்த‌வ‌ த‌ள‌ங்க‌ள், இஸ்லாமை ஆத‌ரித்து, முக‌ம‌து ஒரு ந‌பி தான் என்று சொல்வார்க‌ள் என்று எதிர்ப்பார்க்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், உங்க‌ள் இஸ்லாமிய‌ த‌ள‌ங்க‌ள் அனைத்தும், பைபிளுக்கு எதிராக‌ அவ‌தூறை தூற்றும் த‌ள‌ங்க‌ள் தானே? ஏதாவ‌து ஒரு இஸ்லாமிய‌ த‌ள‌த்திலாவ‌து, பைபிள் இறைவ‌னின் வேத‌ம் தான், இயேசு இறைவ‌ன் தான் என்று சொல்வார்க‌ளா?

சரி, நீங்கள் ஆசைப்படுவதால், ஒரு சில தளங்களைத் தருகிறேன், அதில் சென்றுப் பாருங்கள். கட்டுரைகளை படியுங்கள்.

1. MuslimHope.com : http://www.muslimhope.com/TopicalStudies.htm

Jesus and Muhammad: Fifteen Major Differences  

  Insulting and Threatening Jesus and Muhammed  

  Jesus and Muhammad in Bible Prophecy  

  Jesus and Muhammad on Wealth  

  Jesus and Muhammad: Their Roles and Natures  

  Were Jesus and Muhammad Sinless?  

2. இத்தளம் இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக பதில் சொல்ல அமைக்கபப்ட்டதில்லை, பொதுவான கேள்விகளுக்கு பதில் சொல்ல அமைக்கப்பட்டது, ஆனாலும், நீங்கள் கேட்டீர்கள் என்பதால், இத்தளத்தில் தரப்பட்ட சில கட்டுரைகள்: http://www.tektonics.org

http://www.tektonics.org/guest/monono2.html ( An Evaluation of Prominent Claims Made by Muslim Apologists that Assert that Muhammad was Foretold in the Bible )

http://www.tektonics.org/guest/qstraw.html (Qur'anic Straw Men About Christianity)

3. ChristianAnswers.net

http://christiananswers.net/islam.html (What is Islam ? )

What does the Qur'an say about Isa al Masih (Jesus)? (http://christiananswers.net/q-eden/quran-jesus.html)


Are most Muslims terrorists? (http://christiananswers.net/q-eden/islamterrorism.html)

இந்த தளங்கள் போதுமா? இன்னும் ஏதாவது தளம் தேவையா?  நீங்க‌ள் கேட்டீர்க‌ள் என்ப‌தால் சில க‌ட்டுரைக‌ளைக் கொடுத்தேன்.


என‌வே, யார் சொன்னார்க‌ள் என்று பார்க்காம‌ல், என்ன‌ சொன்னார்க‌ள் என்று பார்ப்ப‌தே சிறந்த‌து.

ந‌ன்றி.

ஈஸா குர்‍ஆன், உமர்

August 26, 2008

இது நியாயமா???? இது நியாயமா???? மனசாட்சியை தொட்டு சொல் இது நியாயமா??????


ஒரிசாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவாக்களின் கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல்.

காரணம் என்னவாம் மாவோ தீவீரவாதிகளால் வி எச் பி தலைவர்கள் கொல்லப்பட்டதுதானாம். இப்படுகொலைகளை நாமும் ஆதரிக்கவில்லை. வருந்துகிறோம். இப்படிப்பட்ட கோழைதனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆனால் அதற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் சிறுபான்மை கிறிஸ்தவ்ர்களுக்கெதிராக நடக்கும் கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வரை இரண்டுபேரை கொலை செய்துள்ளனர். இதில் ஒருவர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஆவார். இங்கு சிறுபான்மை கிறிஸ்தவ்ர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அரசாங்கமும் தகுந்த நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை. இறைவன் தான் நியாயம் செய்யவேண்டும். அங்கு அமைதி நிலவ இறைவனிடம் இறைஞ்சுவோமா?? இதை கண்டித்து உங்களுடைய தளத்திலும் உங்கள் கண்டனத்தை தெரிவிக்கலாமே....




Firefighters douse the flames at an orphanage at Khuntpalli village in Orissa where protesters burnt alive a 20-year-old woman.

Orissa: 2 arrested for VHP leader's killing


: VHP activists burn tyres and clash with police during a protest against the killing of Swami Laxmananand in Bhubaneshwar on Sunday.-PTI

August 25, 2008

முகமது நம்பத்தகுந்தவரா? ( Al-Amin - Trustworthy?) - Part 1


முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்)
 
 
உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் 
 
 
 
Muhammad as Al-Amin (the Trustworthy)
 
 
 
How His Enemies Really Viewed Him
 
 
 Sam Shamoun
 
 
இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின் நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து, முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும். அல்-அமின் என்றால், "நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர் முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார் என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால் இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த வாதத்திற்கு கீழ் கண்ட ஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:
 
 
'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்]. நான் இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். ………. இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். …. அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )

 
ஆங்கிலத்தில்:

"… He [Heraclius] said, 'Had you ever blamed him for telling lies before he claimed what he claimed?' I replied, 'No.' … He said, 'Does he break his promises?' I replied, 'No, but we are now at truce with him and we are afraid that he may betray us.' … . 'When I asked you whether he was ever blamed for telling lies, your reply was in the negative, so I took it for granted that a person who did not tell a lie about (others) the people could never tell a lie about Allah. I asked you whether he had ever broken his promise. You replied in the negative. And such are the apostles; they never break their promises…'" (Sahih al-Bukhari, Volume 4, Book 52,
Number 191)
 
 
 
இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம் ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும் பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராக இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.

 
முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது, இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும் யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.
 
 
 
இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால், "உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசில குழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின் நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி, உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்: உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள். முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும் அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபு உடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார், அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள். அவர்(நபி):ஒருவேளை இந்த மலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு பொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது, வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப் கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச் சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம் இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும் (111:1)". அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (Sahih Muslim, Book 001, Number 0406 In English)
 
 
 
மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்கு ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்(*). இறைவன் தன் நபியாக அல்லது தூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்க மாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

 
முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாக முகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records) ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின் மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

 
மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால், முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராக காட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள். குர்‍ஆன் முகமதுவை எப்படி காட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சி செய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றி மிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாக இருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 
இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது. அதாவது, குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம் வைத்துள்ளது.
 
 
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33


உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41

 
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6

 
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

 
"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

 
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். குர்‍ஆன் 35:4
 
 
 
ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யான கூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ள முரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது. ஆனால், உண்மையில் இதே முஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்கு முஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பது" (After all, they are the ones appealing to the statements of the disbelievers to prove that Muhammad was a trustworthy person).

 
ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமது ஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்று முகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்று நம்பலாம் அல்லவா? இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்று இருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது (But if their testimony is reliable enough to support Muhammad's integrity then the unbelievers are also a good enough source to call his character into question. It is apparent that the Muslims want to have their cake and eat it too).

 
சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள், அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதே போலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்ப மாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்து மிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
 
 
முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாக பேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார். இதன் காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்று நிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும் செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் (Muhammad, on the other hand, failed to provide any supernatural confirmation that he was speaking on behalf of God).

 
இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள் முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின் வாதம் உண்மையானதா என்பதாகும்". குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கை இல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவே இருந்தது. (Secondly, the issue here is not whether what the unbelievers said was correct, but whether the Muslim assertion that even the disbelievers praised Muhammad's honesty is true. As the Quran testifies, their comments were anything but flattering to Muhammad.)

 
 
 
 
மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும் நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள் போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன. முஸ்லீம்கள் நினைப்பது போல‌ முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (He wasn't the beacon of virtue and honesty that Muslims make him out to be).
 
 
ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூட சொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின் பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.
 
 
 

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.(Muhammad bin Maslama said, "Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab)." The Prophet said, "You may say it.") …… ….
….

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59,
Number 369 in English)

 
 
மற்றும்
 
 

கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல் பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என் மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது, (இவர்கள் இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள் பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அனுமதி பெற்றுக்கொண்டு, மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார். அல் ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில் சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும் முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிக பாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ் பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எங்களிடம் சொல்லவும், ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறி கொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்ற பட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்". நான் "நீங்கள் சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என் ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்" என்றார்கள். நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர் தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டு மரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்". கெய்பரின் மக்கள், "நாம் இவரை கொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்கா மக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோ ஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்". நான் "என் பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான் மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரது தொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன்". அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம் அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும் இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது. நான் என் ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான் கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும் என்றேன். அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும் கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின் ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார். நான் அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒரு விஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாக வைப்பேன் என்று சொன்னார். நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான் வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரை காத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார். எனக்கு மக்காவில் வரவேண்டிய பணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்ல முடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது, "நான் சொல்லும் செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள் சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்". அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான் சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவை திருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள் இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன். அவர் கேட்டார் "ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது. என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடைய பணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன். மூன்று இரவுகள் கடந்த பின்பு, இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன். மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு, நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம் சென்று அதை சுற்றினார். மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல், இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள் சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார், மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச் சொன்னார். முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார், இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டது என்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?". அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரே தான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல் செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம் சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்" என்றார். அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரி தப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால், வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒரு உண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது. (The Life of Muhammad: A Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah, with introduction and notes by Alfred Guillaume [Oxford University Press, Karachi, Tenth impression 1995], pp. 519-520; capital and underline emphasis ours).

 
 
முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனை இருந்தது இல்லை:
 
 

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். 'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல் உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து) 'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தர மாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67,
Number 427 in English)

 
 
முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும் முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:
 
 

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது... (Sahih al-Bukhari, Volume 9, Book 89,
Number 260 in English)

 
 
 
ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்பு இருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்த சத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத் தகுந்தவரா சொல்லுங்கள்? இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கை கொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லது நேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாத போது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?
 
 
முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்ல என்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.
 
 
 
முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும் எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை. ஆனால், உண்மையில், முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரது நடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது, எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களை ஒதுக்கிவிடும் போது(In fact, the reports which reflect poorly on Muhammad's character have a greater chance of being true precisely because the Muslim tendency was/is to portray him in a more favorable manner while omitting any negative statements).

 
இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாக மாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்று முஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம் இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாக அர்த்தமாகிறது".

 
What makes this rather ironic is that if this Muslim assertion is true, that Muhammad was known for being trustworthy prior to his prophethood, this means that he was more honest before he became a "prophet" than afterwards!

 
நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்கு கொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமது பொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா? என்று கேள்விகள் கேட்டுள்ளார். இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(another version) காண்போம்:
 
 
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7

….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார். நான் இல்லை என்றேன்.

'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ..... இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

 
"… Heraclius said, 'Have you ever accused him of telling lies before his claim (to be a Prophet)?' I replied, 'No.'
Heraclius said, 'Does he break his promises?'
I replied, 'No. We are at truce with him but we do not know what he will do in it.' I could not find opportunity to say anything against him except that… 'I further asked whether he was ever accused of telling lies before he said what he said, and your reply was in the negative. So I wondered how a person who does not tell a lie about others could ever tell a lie about Allah.'" (Sahih al-Bukhari, Volume 1, Book 1,
Number 6)
 
 
 
நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன் உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூ சுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லை என்றுச் சொல்கிறார்! ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத் தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும் நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார். குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.
 
 
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். குர்‍ஆன் 66:1-2

 
மற்றும்:

 
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28
 
 
இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறு பொருள் கூறுகிறார்:
 
 
 

நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:


 
 
இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள் நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லது முஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பை கொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு எதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார்.

<And whoever does that, will never be helped by Allah in any way> இதன் பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும் தள்ளிவிடுவார். இதே போல அல்லா சொல்கிறார்...

<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;> மற்றும்…

<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவற விட்டு விட்டார>[60:1]. அல்லா சொல்கிறார் ….

<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?>[4:144],

மற்றும் …

<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்.>[5:51].
 
 
நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார் மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு, அல்லா சொல்கிறார்...
 
 
<நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.>[8:73]
 
 
மறுபடியும் அல்லா சொல்கிறார்...
 
 
<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமை ஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டிய தில்லை. அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை இல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரி காண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது. அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது, "நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம், ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்". அல்புகாரி சொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார், "உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source; underline emphasis ours)
 
 
இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான். இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!

 
இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீது விழும்படியாக செய்ததும் அல்லா தான். அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன் முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:
 
 
மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்." எண் 30:1-2

 
"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?" பிரசங்கி 5:2-6
 
 
 
ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில் வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள் அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய் சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார். இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்று கண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட கதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்; அல்லது ஒரு வேளை இந்த புகழாரம் உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்த புகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை, முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

 
ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார், ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து, பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி.
 
 
 
"அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

 
"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்." யோவான் 6:68-69

 
"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18

 
"என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29

 
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

 
"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக் கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-15

 
"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:21

 
"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர் 4:15

 
"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

 
"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரேயர் 9:14

 
"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை….. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1 யோவான் 3:1-3, 5, 7

மேலும் அறிய படிக்கவும்:

http://answering-islam.org/Books/Gairdner/camouflage.htm
http://answering-islam.org/Authors/Arlandson/sinless.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinful_mo.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinless_jesus.htm
http://answering-islam.org/Silas/mo-sinner.htm
http://answering-islam.org/Muhammad/treaties.html
http://answering-islam.org/Shamoun/compromise_doubt.htm
http://answering-islam.org/Responses/Osama/zawadi_s10_94.htm
http://answering-islam.org/Authors/Arlandson/insult_responses.htm

மூலம்:
http://www.answering-islam.org/Shamoun/mhd_amin.htm

இக்கட்டுரையின் பாகம் இரண்டை படிக்கவும்: முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்

source :  http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/mhd_amin.html

 

August 22, 2008

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்


பைபிளில் பெண்கள் பாகம் 2

சில எதிர்வாதங்களுக்கு பதில்கள்

சாம் ஷமான்

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்

 
பரிசுத்த வேதாகமத்தில் பெண்களின் நிலையைப் பற்றிய ஆராய்ச்சியை நாம் தொடர்வோம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிள் பெண்களை மட்டுப்படுத்துகிறது என்று நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலை நாம் இக்கட்டுரையில் காண்போம். ஏன் அவர்கள் இப்படி குற்றம்சாட்டுகிறார்கள் என்றால், பைபிள் தேவனின் வார்த்தை இல்லை அல்லது பைபிளில் சொல்லப்பட்ட அனைத்தும் தேவனிடமிருந்து வரவில்லை என்பதை நிருபிப்பதற்குத் தான் அவர்கள் இப்படி கேள்வியை எழுப்புகிறார்கள். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து அனுமதித்தது போல, ஏதாவது புதுவகையான குற்றச்சாட்டு எழும்புமானால், அதனை நாம் நேர்த்தியாக பகுத்து, ஆராய்ந்து நம்முடைய பதிலை இக்கட்டுரையில் தருவோம். இப்போது நாம் எட்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை நம் பதிலுக்காக எடுத்துக் கொள்வோம். மற்றும் நாம் கொடுத்த முதல் மறுப்புப்போல இந்த பதிலும் பரிசுத்த வேதம் பெண்களை கவுரவப்படுத்துகிறது, மற்றும் அவர்களை கண்ணியப்படுத்துகிறது என்பதை ஆதாரத்தோடு நிருபிக்கிறது.

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1

ஆதியாகமம் 3ம் அதிகாரத்தின் அர்த்தத்தை முஸ்லீம்கள் திருத்தி, ஏவாள் தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்து, அவள் தான் முழு உலகத்தையும் பாவத்தில் தள்ளினாள் மற்றும் ஆதாமையும் பாவம் செய்ய தூண்டினாள் என்ற பொருள் வரும் படி, முஸ்லீம்கள் பொருள் கூறுகிறார்கள். இதனால் தான் பெண் சபிக்கப்பட்டாள் மற்றும் பிரசவ நேரத்தில் வரும் வேதனைக்கும், கஷ்டத்திற்கும் இது தான் காரணம் என்று இவர்கள் திருத்தி பொருள் கூறுகிறார்கள். பிறகு இதே முஸ்லீம்கள் "பைபிளைப் போல மொத்த குற்றச்சாட்டை ஏவாள் மீது சுமத்தாமல், குர்‍ஆன் இந்த பாவத்திற்கு இருவரும் சமமாக பொறுப்பு வகிக்கிறார்கள் என்றுச் சொல்கிறது என்று" சொல்கிறார்கள். ஆனால், ஏவாள் அந்த மரத்தின் கனியை புசித்தாள் என்று குர்‍ஆன் சொல்வதுமில்லை அல்லது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டையும் பைபிள் மீது சுமத்துவதுமில்லை.

முதல் முதலாக நாம் அறியவேண்டியது என்னவென்றால், "தேவன் சபித்ததால் தான் பெண்கள் கர்ப்பமாகிறார்கள், மற்றும் பிள்ளை பெறுகிறார்கள்" என்று பரிசுத்த பைபிள் சொல்வதில்லை. ஆனால், இதற்கு எதிர்மறையாக இருப்பது தான் உண்மையானது. அதாவது, பெண்கள் பிள்ளைகளை பெறுவதும் அதன் மூலம் மனித இனம் பெறுகவேண்டும் என்பது தான் ஆரம்பமுதலே தேவன் நியமித்த சட்டம் அல்லது நியதியாகும். இந்த நியதியை அவர் இவர்களின் வீழ்ச்சிக்கு முன்பே திட்டமிட்டுள்ளார்:

"பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,( 'Be fruitful and multiply, and fill the earth and subdue it;) சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம்." 1:28-31

வேத வசனங்கள் சொல்கின்றன, அதாவது பிள்ளைகள் கர்த்தரால் கிடைத்த ஆசீர்வாதங்கள், இதனால் பெண்கள் இரட்சிப்பை பெறுவார்கள்.

"இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்." சங்கீதம் 127:3-5

"கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்." சங்கீதம் 128:1-4

"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்." 1 தீமோத்தேயு 2:15

இதுவரை நாம் பார்த்த விவரங்களின் படி பிள்ளைபேறு என்பது சாபத்தினால் வந்த ஒரு தண்டனை அல்ல என்பது தெளிவாகும். இதற்கு பதிலாக, அந்த சாபம் எப்படிப்பட்டது என்றால், ஏவாளின் இந்த பாவத்தினால், பெண்கள் பிள்ளைபெறுகின்ற நேரத்தில் கஷ்டப்படுவார்கள் என்பது தான் உண்மை. அதாவது கர்ப்பமாவது சாபமல்ல, பிள்ளைபெறுவது சாமபல்ல ஆனால், அந்த வலி மட்டும் தான் சாபத்தின் மூலம் வந்தது.

இரண்டாவதாக, ஆதியாகமம் 3ம் அதிகாராம் ஏவாளை மட்டுமல்ல, ஆதாமையும் குற்றப்படுத்துகிறது, அதனால் ஆதாமுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது:

"பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்." ஆதியாகமம் 3:17-19

"To Adam he said, 'Because you listened to your wife and ate from the tree about which I commanded you, "You must not eat of it," Cursed is the ground BECAUSE OF YOU; through painful toil you will eat of it all the days of your life. It will produce thorns and thistles for you, and you will eat the plants of the field. By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return.'" Genesis 3:17-19

மூல மொழியாகிய எபிரேய மொழியில் இந்த வசனங்கள் ஆதாம் மற்றும் ஏவாள் இருவரும் சரி சமமாக தங்கள் செயல்களுக்கு பொறுப்பு வகிக்கும் படி எழுதப்பட்டுள்ளது:

பிள்ளைப்பெறும் போது ஏற்படும் வலி, அதாவது ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட சாபம் என்றுச் சொல்லும் அந்த வலியானது, மூல மொழியிலும் அல்லது ஆரம்பகால யூத விவரங்களிலிருந்தும் சரியான முறையில் ஆராயப்படவில்லை. ஆதியாகமம் 3:16ஐ ஆதாரமாகக் கொண்டு அந்த வலியானது தவிர்க்க முடியாதது, அதை ஏவாளின் பாவத்திற்காக படைத்தவர் தண்டனையாக கொடுத்தார் என்றுச் சொல்கிறார்கள். எபிரேய மொழியில் உள்ள "etzev" என்ற வார்த்தைக்குத் தான் மொழிபெயர்ப்புகளில் "வலி" என்றும் "வேதனை" என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். எபிரேய வார்த்தையாகிய "etzev" என்ற வார்த்தை ஆதியாகமம் 3:17ல் ஆதாமுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மையைத் தான் பல மொழி பெயர்ப்பாளர்கள் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்! எபிரேய பைபிள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கீழ் கண்டவாறு இருக்கிறது:

"Unto the woman he said, I will greatly multiply thy sorrow (etzev) and thy pregnancy: in pain (etzev) thou shall bear children… And unto Adam he said,… cursed is the ground for thy sake; in toil (etzev) shalt thou eat of it all the days of thy life." (Hebrew Bible, 1965)

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை(etzev) மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே(etzev) பிள்ளை பெறுவாய்; ……... பின்பு அவர் ஆதாமை நோக்கி: …… பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே(etzev) அதின் பலனைப் புசிப்பாய். ஆதியாகமம் 3:16-17

இந்த வார்த்தை பெண்ணுக்கு(ஏவாளுக்கு) பயன்படுத்தும்போது, பைபிள் மொழிப்பெயர்ப்பாளர்கள் "வேதனை – Pain " என்றும், அதே வார்த்தை ஆணுக்கு(ஆதாமுக்கு) பயன்படுத்தும் போது "வருத்தம் - Toil" என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து நாம் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும், மொழிபெயர்ப்பாளர் தன் சமூக‌ கலாச்சார நம்பிக்கையின் படி மொழிப்பெயர்த்துள்ளார். மிகவும் சரியான பொருள் கூறவேண்டுமானால், குழந்தை பெறும் போது ஏற்படுவது வருத்தம்(Toil) அல்லது வேலை(Labour) என்று நாம் நிதானிக்கலாம்(The best description of giving birth is toil, or labor). ஏவாளுக்கு முதல் குழந்தையாகிய காயின் பிறந்த போது, எந்த வேதனையும், மற்ற எந்த பிரச்சனையையும் பற்றிச் சொல்லாமல், ஒரு மகிழ்ச்சியான வாசகமே குறிப்பிடப்பட்டுள்ளது, "...காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்"(ஆதியாகமம் 4:1). "தல்மத் (Talmud)" தில் ஏவாளின் "சாபத்தை" 10 பாகங்களாக ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் தொடர்வது போல பிரிக்கப்பட்டுள்ளது, அதே போல, ஆதாமின் "சாபத்தையும்", ஏவாளுக்காக பிரிக்கப்பட்டது போலவே 10 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. (Helen Wessel, "Biblical and Talmudic Images of Childbirth", in "The Encyclopedia of Childbearing", ed. Barbara Katz Rothman, 1993, p. 29)

எபிரேய பைபிளின் கிரேக்க மொழிப்பெயர்ப்பை 70 வேத பண்டிதர்கள் ஒன்றாக சேர்ந்து இயேசுவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த பண்டிதர்கள், ஆதியாகமம் 3:16ல் வரும் "etzev" என்ற வார்த்தைக்கு, கிரேக்க வார்த்தையாக "lupe" என்ற வார்த்தையை பயன்படுத்தி மொழிபெயர்த்துள்ளார்கள். Lupe என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் "மனவெழுச்சி or உணர்ச்சிவேகம் – Emotion " என்பதாகும். "chul" , "yalad" என்ற எபிரேய வார்த்தைகளை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க மூன்று வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த மூன்று வார்த்தைகள் gennao, tikto மற்றும் odino என்பவைகளாகும். "Gennao" என்ற வார்த்தைக்கு பொருள் "பிள்ளையை பெற்று இருப்பதாகும்", இந்த வார்த்தை பெற்றோர் இருவருக்கும் பயன்படுத்துவர். Tikto என்ற வார்த்தைக்கு பொருள் "பிள்ளையை பெறுவது(To Give Birth)" என்பதாகும். Odino என்ற வார்த்தைக்கு பொருள், குழந்தை பெறும் போது ஏற்படும் கஷ்டமாகும்(Labor in Birth). இந்த மூன்று சாதாரண வார்த்தைகள் கிரேக்க புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. ஆனால் மறுபடியும், பிள்ளை பெறுவது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான ஒரு அனுபவம் என்று பைபிள் கூறினாலும், மொழிபெயர்ப்பாளர்கள், பிள்ளை பெறும் போது ஏற்படும் வலியாக நினைத்துக்கொண்டே மொழி பெயர்க்கின்றனர். (Source)

ஏவாள் தான் முதன் முதலாக பழத்தை சாப்பிட்டாள் என்றும், அல்லது ஆதாமை ஏவாள் தான் சாப்பிடும் படி ஏவினாள் என்றும் குர்‍ஆன் சொல்லாவிட்டாலும், இது குர்‍ஆன் சரியாகச் சொன்னது என்று அர்த்தமாகாது. உண்மையில், முஸ்லீம்கள் நினைப்பது போல "குர்‍ஆன் ஒரு முழுமையான வழிகாட்டி" என்பதற்கு எதிராக இது உள்ளது.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், பைபிளைப் போல அல்லாமல் குர்‍ஆன் பல முக்கியமான விவரங்களைச் சொல்வதில்லை. அதனால் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன, புரியாமல் போகின்றன. அதாவது, யார் முதலாவது பழத்தை உண்டார்கள் என்ற மிக முக்கியமான விவரத்தை குர்‍ஆன் சொல்லவில்லை, அதனால் குழப்பம் நீடிக்கிறது. யார் முதலில் சாப்பிட்டார்கள் என்று சொல்லாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், ஏவாளின் பெயரையும் குர்‍ஆன் சொல்லவில்லை!

இப்படி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் ஒரு தெளிவு இல்லாமல், விவரங்கள் முழுமை பெறாமல் இருப்பதினால், இஸ்லாமியர்கள் எந்த ஒரு விவரத்திற்கும் பைபிளை சார்ந்து இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு குர்‍ஆன் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ள முடிகிறது. குர்‍ஆன் என்பது தெளிவாக இல்லை என்றும் அது குழப்பம் தரக்கூடியதாக உள்ளது என்றும் முஸ்லீம்களும் உணர்ந்துள்ளார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை குர்‍ஆனில் உள்ளது என்று உணர்ந்து மற்றும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டும் உள்ள நபர் முஹமத் எம். அய்யூப்(Mahmoud M Ayoub) என்பவர் ஆவார். இவரது குர்‍ஆன் உரை 2:30-38 இவ்விதமாக கூறுகிறது.

முந்தைய சூராக்களில் சொல்லப்பட்ட ஆதாமின் கதை(30-38), மக்காவின் பிந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்டவைகளாகும். ஆதாமை உண்டாக்கிய விவரங்கள், தேவதூதர்கள் அவருக்கு தலைவணங்கியது, ஆதாம் தோட்டத்தில் வாழ்ந்தது, மற்றும் அடுத்தபடியாக அவரை தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பிய விவரங்கள் அனைத்தும் சிறிது விவரமாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே நன்றாக தெரிந்த கதைக்கு இந்த வசனங்கள் உரையாக உள்ளன, ஏனென்றால், அவைகள் புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றன, மற்றும் அவைகள் மற்ற வசனங்களுக்கு முன்பாக வருகின்றன, மற்றும் இவைகள் வெளிப்படையாக பொருள் கூறும் வசனங்களாகும். இந்த ஒன்பது வசனங்கள் பல கேள்விகளையும் மற்றும் கருத்து வேறுபாட்டிற்கு இடமான பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளது. ஏன் இறைவன் தான் ஒரு பிரதிநிதியை பூமியில் உருவாக்கும் திட்டம் பற்றி தேவதூதர்களிடம் சொல்லவேண்டும்? ஆதாமின் முத‌ல் ச‌ந்த‌தி ஒரு தீமையான‌ வேலையை செய்வான் என்று தேவ‌தூத‌ர்க‌ளுக்கு எப்ப‌டி தெரிந்த‌து? தேவ‌தூத‌ர்க‌ள் இறைவ‌னின் சித்த‌ம் ம‌ற்றும் ஞான‌ம் ப‌ற்றி எப்ப‌டி கேள்வி கேட்க முடிந்தது? எப்படி இறைவனின் இந்த பிரதிநிதி உருவாக்கப்பட்டான், மற்றும் அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் அவன் இறைவனின் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டான்? அந்த தடைசெய்யப்பட்ட மரம் எப்படிப்பட்ட பழத்தை தந்தது? அந்த சாத்தான்(இப்லீஷ்) என்பவர் யார்? எப்படி அவன் அந்த தோட்டத்தில் நுழைந்து, களங்கமில்லாத ஆதாம் மற்றும் அவன் மனைவியை இறைவனின் கட்டளையை மீறச்செய்தான்? ஆதாம் எவ்வளவு காலம் பரதீசில் இருந்தார்? அவரது துணையான ஏவாள் எப்போது உருவானாள், மற்றும் அவர்களது பாவம் மற்றும் அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறிய விவரங்கள் அனைத்தும் மிகவும் சுருக்கமாக குர்‍ஆனில் சொல்லப்பட்டுள்ளது. குர்‍ஆன் பல கோள்விகளுக்கு பதிலே சொல்லாமல் அப்படியே விட்டுள்ளது . உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஏவாளின் பெயரையும் குர்‍ஆன் சொல்வதில்லை, மற்றும் ஏவாள் எப்படி உருவாக்கப்பட்டாள் என்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இந்த எல்லா கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் இதர கேள்விகளுக்கு பதில் தேவையானால், குர்‍ஆனுக்கு உரை எழுதுபவர்கள் "வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும்"... The Qur'an leaves many other questions UNANSWERED. It does not, for example, MENTION EVE BY NAME, or the manner in which she was created. For the answers to these and other questions, commentators HAD TO RESORT TO THE PEOPLE OF THE BOOK… (Ayoub, The Qur'an and Its Interpreters - Volume 1 [State University of New York Press, Albany 1984], p. 73; bold and capital emphasis ours)

ஒருவர் ஆதாம் மற்றும் ஏவாளின் கதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்களை அணுகினால், அவர்கள் அனைவரும் பைபிள் சொல்லும் நிகழ்ச்சி விவரங்களை பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்கின்றனர்:

(35) டபரி என்பவர் தன் தஃப்சீருக்காக‌ ஆரம்பகாலத்தில் அதிகாரபூர்வமாக சொன்னவர்கள் வரை சென்று தன் விவரங்களை சேகரித்துள்ளார். நபியின் தோழர்களாகிய இபின் அப்பாஸ் இபின் மசூத் மற்றும் இதர தோழர்களின் அதிகாரபூர்வமாக சொல்லப்பட்ட ஹதீஸாக கீழ்கண்டவாறு கூறுகிறார், "பரதீசில் ஆதாம் தனிமையில் இருந்தார், அவருக்கு துணையாக யாரும் அவருக்கு இல்லாமல் இருந்தது. அவர் தூங்கச்சென்றார் மற்றும் அவர் விழித்து பார்க்கும் போது ஒரு பெண் தன் பக்கத்தில் இருப்பதைக் கண்டார், அந்த பெண்ணை இறைவன் ஆதாமின் விலா எலும்பினால் உருவாக்கியிருந்தார்". ஆதாம், ஏவாளை நோக்கி, "நீ யார்?" என்றார், அதற்கு ஏவாள் "நான் ஒரு பெண்" என்றார். "நீ ஏன் உருவாக்கப்பட்டாய்?" என்று ஆதாம் கேட்டார். "உங்களுக்கு ஒரு துணையாக இருக்கும் படியாக நான் உருவாக்கப்பட்டேன்" என்று ஏவாள் கூறினார் (Tabari, I, p. 513). இபின் அப்பாஸ் சொன்னதாக பல ஹதீஸ்கள் உண்டு, அதாவது, 'இறைவன் ஏவாளை ஆதாமின் இடது விலா எலும்பினால் உருவாக்கினார்' என்று இபின் அப்பாஸ் சொன்னார். இந்த விவரம் அவர்களுக்கு வேதத்திற்கு உரியவர்களிடமிருந்து கிடைத்ததாகவும், முக்கியமாக யூதர்களிடமிருந்து கிடைத்ததாக அவர்கள் கூறினார்கள். ஆதாம் பரதீசில்(தோட்டத்தில்) வாழ்வதற்கு முன்பாக ஏவாள் உருவாக்கப்பட்டாரா அல்லது அதற்கு பின்பு உருவாக்கபப்ட்டாரா என்று அவர்களுக்குள் பல கருத்துக்கள் உடையவர்களாக இருந்தனர். ஆதாமின் மனைவியின் விவரம் பற்றி டபரி சொல்லும் போது, "தேவதூதர்கள், ஆதாமின் அறிவை சோதித்து அறிய விரும்பினர், அதனால், ஆதாமிடம் தேவதூதர்கள் 'ஓ ஆதாமே, உன் மனைவியின்(அவளின்) பெயர் என்ன?' என்றனர். அதற்கு ஆதாம், 'இவள் ஏவாள்(ஹவா)' என்றார். அவர்கள் 'ஏன் அவளை ஏவாள்(ஹவா) என்று அழைக்கிறாய்?' என்று கேட்டனர், அதற்கு ஆதாம், 'ஏனென்றால், அவள் உயிருள்ளவளாக இருப்பதினால்' என்று பதில் அளித்தார்" Because she was created of a living thing'" (Tabari, I, p. 518). (Ayoub, p. 82; bold emphasis ours)

ஏவாளுக்கு பெயர் வந்த முறைப் பற்றி ஆதாம் சொன்னதற்கும், இதைப்பற்றி பைபிள் சொன்னதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் கவனிக்கவேண்டும். இந்த இடத்திலே, ஏவாள் என்று ஏன் அவளுக்கு பெயர் வந்தது என்றால், அவள் "உயிருள்ளவள் ஆவாள்" என்பதாக சொல்லப்பட்டுள்ளது. (ஆதாம் தன்னை ஏவாளை விட ஒரு படி அதிகமாக எண்ணி, தான் ஒரு மூலம் என்றும், தன் மூலமாக அவள் வந்தாள் என்றும் கூறுகிறார்). ஆனால், பரிசுத்த பைபிள் சொல்கிறது, ஏவாளுக்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம், அவள் "உயிருள்ளவர்கள் அனைவருக்கும் தாயாக இருக்கிறாள்" என்பதாக.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்." ஆதியாகமம் 3:20

"The man called his wife's name Eve, BECAUSE she was the mother of all living." Genesis 3:20

பரிசுத்த பைபிளில் ஏவாளுக்கு கொடுத்த மேன்மை மற்றும் கௌரவம், இஸ்லாமில் ஏவாளுக்கு கொடுத்ததை விட பலமடங்கு அதிகமாகவே உள்ளது என்பதை மிகவும் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

சுன்னி சரித்திர ஆசிரியரும் மற்றும் உரையாளருமான அல் டபரி இன்னும் சிறிது முன்னுக்குச் சென்று, 'ஏவாளின் பாவத்தின் காரணமாக அல்லா பெண்களை முட்டாள்களாக‌ ஆக்கினார்!" என்றுச் சொல்கிறார்.

யூனுஸ் இபின் வஹப் இபின் ஜைத் என்பவரின் படி(இறைவனின் வார்த்தையின் உரையின்படி: "மற்றும் அவன் மெல்லியதாக பேசினான்"): சாத்தான் அந்த மரத்தைப் பற்றி ஏவாளிடம் மெல்லியதாகச் சொன்னான் மற்றும் ஏவாளை அந்த மரத்தினிடம் கொண்டுவருவதில் வெற்றிப்பெற்றான்; மேலும் ஆதாமுக்கு அம்மரம் நல்லதாக தென்படவைத்தான். அவர் தொடர்ந்தார். ஆதாமுக்கு ஏவாளிடம் ஒரு தேவை ஏற்பட்டப்போது, அவளை அழைத்தான், அவள் சொன்னாள்: நீங்கள் அந்த இடத்தில் போகாதவரையில் என்னால் முடியாது என்றாள். ஆதாம் அந்த இடத்தில் சென்ற போது, அவள் மறுபடியும் அவள்:"இல்லை, நீங்கள் அந்த மரத்தின் கனியை சாப்பிடாதவரையில் என்னால் முடியாது என்றாள்". அவர் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் கனியை புசித்தார்கள், மற்றும் அவர்கள் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய உணர்வை பெற்றார்கள்(வெட்கமடைந்தார்கள்). அவர் தொடர்ந்தார். ஆதாம், வெகுசீக்கிரமாக பரதீசுக்கு(தோட்டத்திற்கு)ச் சென்றார். அவரது இறைவன் அவரை அழைத்தார்: ஆதாமே! நீ என்னைவிட்டா ஓடப்பார்க்கிறாய்? ஆதாம் மறுமொழி அளித்தார்: இல்லை இறைவனே, ஆனால், உங்கள் முன்பாக நிற்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். இறைவன் ஆதாமை நோக்கி, இப்படி உனக்கு ஆவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ஆதாம் சொன்னார்: 'ஏவாள் தான் காரணம் என் இறைவனே'. பின்பு இறைவ‌ன் சொன்னார்: 'அவள் செய்த செயலுக்காக, இனி அவ‌ளுக்கு ஒவ்வொரு மாத‌மும் உதிர‌ப்போக்கு உண்டாகும்ப‌டி செய்வ‌து என் க‌ட‌மையாகும்'. நான் அவளை அறிவுள்ளவளாக(halimah) உருவாக்கியிருந்தாலும், இப்போது அவ‌ளை ஒரு முட்டாளாக‌ ஆக்குகிறேன். மற்றும் அவள் கர்ப்பமாவதும், பிள்ளைபெறுவதும் மிகவும் சுலபமாக இருந்தாலும், இனி அவள் கர்ப்பமாகும் போது க‌ஷ்ட‌ப்ப‌டும்ப‌டிச் செய்வேன், பிள்ளை பெறும்போது வேத‌னை அடையும்ப‌டிச் செய்வேன். இபின் ஜையத் கூறினார்: ஏவாளை தாக்கிய இந்த வேதனை தான் உலகத்தில் உள்ள பெண்களையும் தாக்கியது (Ibn Zayd said: Were it not for the affliction that affected Eve, the women of this world would not menstruate, AND THEY WOULD BE INTELLIGENT and, when pregnant, give birth easily) .

ஆகையால், மறுபடியும் குர்‍ஆனை விட பரிசுத்த பைபிள் மிகவும் தெளிவாகவும், மேன்மையாகவும் விவரங்களைச் சொல்கிறது. ஏனென்றால், குர்‍ஆன் முக்கிய‌மான‌ விவ‌ர‌ங்க‌ளைச் சொல்ல‌ த‌வ‌றிய‌து, அதே நேர‌த்தில் அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை பைபிள் விள‌க்கித்த‌ருகிற‌து.

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/women_in_bible2.htm


இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் பெண்கள்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/womeninbible21.html 

 

August 9, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது என்பதற்கு முகமது எழுதிய கடிதமே சாட்சி


இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 



--