அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 9, 2013

கோழி முட்டையிடும் TNTJ

கோழி முட்டையிடும் TNTJ

 

பதறிப்போய் நடுநடுங்கி, என்ன பேசுகிறேன் என்றே தெரியாமல் தட்டுத்தடுமாறி, ஜெரி தோமஸ் என்ற பெயர் தவறியாவது தன் வாயில் வந்துவிடகூடாது என்று கமராவைகூட பார்க்காமல் இவ்வளவுகாலம் விவாத அழைப்பு விடுத்துவந்த, பீஜே இஸ்லாத்தின் விவாதங்களுக்கு பொறுப்பான செய்யிது இப்ராஹிம் திடீரென்று இனிய அழைப்பு விடுகிறதை கண்டு ஒருகணம் திடுக்கிட்டுவிட்டேன்.

 

ஆம், பீஜே இஸ்லாத்தின் மெகா சீரியல் பற்றி நான் எழுதிய ஒரு சிறிய கட்டுரையை வாசித்து, அச்சமடைந்து, நடுநடுங்கி, உடனேயே பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி, மெகா சீரியலில் நான் நடிகர்கள் என்று பெயர் குறிப்பிடாத சிலரையும் வைத்து, ஜெரி தோமஸ் உள்ளிட்ட சான் குழுவினருக்கு எதிராக, 'அவர்கள் தான் இப்படி கட்டுரை எழுதினார்கள்' என்று ஒவ்வொருவரும் பக்கத்திலிருந்து பார்த்தது போல், அறிக்கையிட்டு, கடைசியில் சான் குழுவின் ஒரு ஊழியரான பிரதர் வெங்கடேஷ் அவர்களிடம் மிக மிக அருமையாக வாங்கிக் கட்டிகொண்டதை இன்னும் செய்யிது இப்ராஹிம் மறக்கவில்லை என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.

 

விவாத அழைப்பு இனிய அழைப்பாக மாறியம் இரகசியம்தான் என்ன? https://www.facebook.com/photo.php?v=382765591850926&set=vb.338454826173538&type=2&theater

 

அடுத்த கட்டமாக TNTJ யின் உத்தியோகபூர்வ விவாத பேச்சாளராக டைரக்டர் செய்யிது இப்ராஹிமால் காண்பிக்கப்பட்ட ஜெய்சங்கரை நடுரோட்டில் விட்டுவிட்டதை இந்த நாடகத்தை தொடர்ந்து பார்த்த யாரும் அனுமதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பிரதர் வெங்கடேஷ் அவர்கள் "நாங்கள் தனிநபர்களுடன் விவாதிப்பதில்லை. TNTJ யின் உத்தியோகபூர்வ ஈமெயிலில் இருந்து ஈமெயில் அனுப்புங்கள்" என்று மிக மிக தெளிவாக சொல்லியும் அப்படி செய்யாமல் ஜெய்சங்கரின் தனிப்பட்ட ஈமெயில் ஐடியில் இருந்து பதில் வருகிறதை பார்த்தவுடன் ஜெய்சங்கரின் அப்பாவித்தனத்தை பார்த்து மிகவும் மனவேதனையடைந்தேன்.

சரி, பீஜே கோட்டை ஆட்டம் கண்டுவிட்டது என்று பரிதாபப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் சான் குழுவிலிருந்து அடுத்த வீடியோ வருகிறது "TNTJ யின் இன்னுமொரு நாடகம் அரங்கேற்றம்அதனை பார்த்தவுடன் ஜெய்சங்கர், துண்டைக்காணம் துணியைக்காணம் என்று ஓடிவிட்டார். டைரக்டர் செய்யிது இப்ராஹிமும் இன்றுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. பலநாட்களுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் மறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய நாடகத்துடன் மேடையேறியிருக்கிறார் இந்த மகா நடிகர்.

நான் இப்பொழுது ஒரு சவாலை TNTJ க்கு முன்வைக்கின்றேன். புலனாய்வு ரிப்போட் எடுப்பதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பில் இருக்கும் நீங்கள் உங்கள் புலனாய்வு திறமையை பயன்படுத்தி, இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் போன்ற அற்புத ஆராதனை கூட்டங்கள் நடாத்துகிற கிறிஸ்தவ அமைப்புகளுக்குள் உங்கள் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி, அந்த அமைப்புகளுக்கு நாள்தோரும் எத்தனை இஸ்லாமியர் தொலைபேசியில் பேசுகிறார்கள்? நாளுக்கு எத்தனை கடிதங்கள் வருகிறது? எத்தனை செல்வந்த இஸ்லாமியர் எத்தனை இலட்சம் ரூபாய்களை நன்கொடையாக வாரி வழங்குகிறார்கள் என்ற ஒரு அறிக்கையை செய்து, புலனாய்வு ரிப்போட்டை வீடியோவாக போடுவீர்களா?

 

அப்படி செய்வீர்களானால் உங்கள் கோட்டை மட்டுமல்ல அனைத்து இஸ்லாம்களும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. என்ன, TNTJ கோழி முட்டையிடுகிறது. கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஆமைமுட்டையிடுகின்றனர். இதுதான் இரகசியம்.

 

இப்போது சொல்வீர்கள். அப்படி ஜெபத்தேவைக்காக யாராவது இஸ்லாமியன் கால்பண்ணுவானேயானால் அவனுக்கு இஸ்லாம் சரியாக தெரியாது என்று. அதையேதான் நானும் சொல்கிறேன். யாராவது ததஜவிடம் கால்பண்ணி இஸ்லாம் சரியானது என்று யாராவது கிறிஸ்தவர் சொல்வாரேயானால் அவர் லேபல் கிறிஸ்தவரேயாவார். இறைவனின் வேதமாம் பைபிளை சரியாக ஆராய்ந்து படிக்காத காரணத்தினாலேயே இப்படி இச்சிக்கிற, போதனைகளில் சிக்குண்டு நிரந்தர நரகவாதிகளாக தங்களை தாங்களே அடையாளம் காட்டிகொள்கிறார்கள்.

இதிலிருந்து கிறிஸ்தவ ஊழியர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், தயவு செய்து இறைவார்த்தையை ஒழுங்காகவும் தெளிவாகவும் தியானித்து பிரசங்கியுங்கள். உங்கள் அஸ்திபாரம் இறைவாத்தையாம் பைபிளில் இருக்கட்டும். விதைவிதைப்பவனின் உவமையை அடிக்கடி ஞாபப்படுத்திகொள்ளுங்கள்.

 

பாமர இஸ்லாமியருக்கு நான் சொல்வது. நானும் ஒரு காலத்தில் உங்களைபோன்று இமாம்கள், உலமாக்கள், மௌலவிமார் சொல்வதையே நம்பி வாழ்ந்தேன். ஆனால் எனது பாவங்களுக்காக, நான் மரிக்கவேண்டிய இடத்தில் மரித்து, எனது பாவங்களுக்கான விலையை செலுத்தி, நரக நெருப்பிலிருந்து என்னை விடுவித்த, ஈஸா அல் மஸீஹை எனக்கு குர்ஆனிலிருந்து, தான் யார் என்பதை வெளிப்படுத்தினார். இறைவன் தன்னை வெளிப்படுத்தாவிட்டால் அவரை கண்டடைவது முடியாத விஷயம். ஆகவே அவர் தன்னை வெளிப்படுத்துமாறு உங்கள் உள்ளத்திலிருந்து வேண்டுதல்களை செய்யுங்கள். ஆசை காட்டி மோசம் போக்குகிற இந்த வழிகேடர்களான உலமாக்களிடமிருந்து உங்களை காத்துகொள்ள எப்போதும் விழிப்பாக இருங்கள்.

மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.

 

SELECTED FROM : http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2688&Itemid=287

September 2, 2013

திருமறையை விளக்கும் முறை

Subject :Re:திருமறையை விளக்கும் முறை 

5. பெயர் வழக்கங்கள்

(அ) பல அரசர்களுக்கு ஒரே பெயர் இருந்தது. 

I.  பார்வோன் : ஆபிரகாம் காலம் முதல் தானியேலின் காலம் வரை எகிப்து நாட்டின்  அரசர்களுக்       
    கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது. 

II.  பித்தொலொமி : பேரரசன் அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின் மூன்று நூற்றாண்டுகளாக எகிப்து நாட்டின
     அரசர்களுக்கு பித்தொலொமி என்ற பெயர் வழங்கப்பட்டது. 

III.  அபிமெலேக்கு : பெலிஸ்திய அரசர்களுடைய பொதுப் பெயர்  (ஆதி. 20:2 ; 26:1; சங். 34 தலைப்பு)

IV. பெனாதாத் : சீரியா நாட்டின் அரசர்களுடைய பொதுப் பெயர்  (1 இராஜா 20:1, 2 இராஜா 8:7; 13:24)

V. ஏரோது : புதிய ஏற்பாட்டில் நான்கு அரசர்களுக்கு ஏரோது என்ற பெயர்  வழங்கப்பட்டது. 


(ஆ) சிலருக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.

I. மேசேயின் மாமனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாகத் தெரிகின்றது.  எத்திரோ(யாத். 3:1) ஓபாப். (நியா 4:11)

II. லேவி. (மாற். 2:14) (மத்தேயு 9:9; 10:3)

III. திதிமு எனப்பட்ட தோமா(யோவான் 11:16; 20:24;21:2) திதிமு என்பது இரட்டைப் பிள்ளைகளைக் 
     குறிக்கும்.
 நான்காம் சுவிஷேசத்தில் மட்டும்  திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

IV. சவுல் (அப். 7:58 முதல் அப். 13:9 முடிய)
        பவுல் (அப். 13:9 முதல் இறுதி வரை)

V. சீலா (அப். 18:5 சில்வானு (2 கொரி. 1:19)


(இ) ஒரே பெயர் கொண்ட இருவர்

I.  யாக்கோபு யோவானுடைய சகோதரன் பன்னிருவரில் ஒருவன் (மத். 10:2) சிரச்சேதம் பண்ணப்பட்டவன்.
    (அப். 12:2)
    யாக்கோபு இயேசுவின் சகோதரன் (மத். 13:55; கலா. 1:19) எருசலேம் சபை மூப்பர் (அப். 15:13) நிருபத்தை 
     எழுதியவர் (யாக். 1:1)

II.     பிலிப்பு பன்னிருவரில் ஒருவன் (மத். 10:3)
        பிலிப்பு எழுவரில் ஒருவன் (அப். 6:5; 21:8) நற்செய்திப் பணி செய்தவன் (அப். 8:5; 21:8)


(ஈ) வெவ்வேறு இடங்களுக்கு ஒரே பெயர்

I. செசரியா – பிலிப்பு செசரியா மத். 16:13
கலிலேயா கடலுக்கு வடக்கே, யோர்த்தான் நதிக்கு கிழக்கே, எர்மோன் மலைக்குத் தெற்கே, செசரியா துறைமுகம் அப். 10:1; 12:19;23:23 முதலியன கடலோரமாயுள்ளது. சமாரியா நாட்டிலுள்ளது. 

தமிழ் வேதாகமப் புத்தகத்தில் மூன்றாவது தேசப்படத்தில் (பலஸ்தீனா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்) இவ்விரண்டு செசரியா பட்டணங்களும் தெளிவாக்க் காட்டப்பட்டிருக்கின்றன.)

II. அந்தியோக்கியா- சீரியா நாட்டு அந்தியோக்கியா (அப். 11:20,26: 13:1) தமஸ்குவுக்கும் தீரு சீதோனுக்கும் வடக்கே சீப்புரு தீவுக்கும் கிழக்கே உள்ளது. 

இது நான்காவது பாடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். கலாத்தியா என்ற நாட்டின் பெயருக்குப் பக்கமாகவும் "க" என்ற எழுத்துக்கும் "ல" என்ற எழுத்துக்கும் நடுவாகவும் போட்டிருக்கிற புள்ளிதான் பிசீதியா நாட்டு அந்தியோகியா


(உ) ஒரே இடத்திற்கு மூன்று பெயர்கள் 

I.  எகிப்து நாடு
       காம் (சங். 78:51; 105:23) என்றும் ராகப் (சங். 87:4; 89:10;  ஏசாயா 51:9)  என்றும் அழைக்கப்பட்டது. ஏசாயா 30:7 இல் 
       சும்மாயிருப்பது இறை மக்களுக்கப் பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
       வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய 
       திருப்புதலைப் பார்க்கவும்)

II.  எருசலேம் 
       சீயோன் (சங். 137:1 என்றும் தாவீது வாசம் பண்ணின அரியேல் (ஏசாயா 29:1) என்றும் அழைக்கப்பட்டது.

III. சீனாய்மலை
     ஓரேப் (சங். 106:19) என்றும் அழைக்கப்பட்டது.

IV. கலிலேயா கடல்
       திபேரியா கடல்(யோவான் 21:1) என்றும் கின்னரேத் கடல் (எண். 34:11)  என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 

V. சாக்கடல் (Dead Sea)
      இந்தப் பெயர் வேதத்தில் இல்லை. மாறாகச் சமபூமயின் கடல் (2 இரா. 14:25)  என்றும் கீழ்க் கடல் (எசேக். 34:3,12) 
       என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. 

VI. மத்திய தரைக்கடல்
        மத்திய தரைக்கடல் என்ற பெயர் வேதத்தில் இல்லை. வேத்த்தில்  பெலிஸ்தரின் சமுத்திரம் (யாத். 23:31) 
        என்றும் கடைசி சமுத்திரம் (உபா. 11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும்                        வழங்கப்பட்டுள்ளது. 


முதல் விதி நமக்கு கற்றுத் தருவது
இலக்கண விதிகளின்படி வசனத்திலுள்ள சொற்களின் சாதாரணப் பொருளை நாம் முதலாவது கண்டறிய வேண்டும். 
(அத்தியாயம் 2 முற்றிற்று)
(வளரும்)