அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 29, 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)



 
ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை


அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 

அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 

முன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.

 


அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).

 
பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.
 
 
 
 
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
 
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …

Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
 
 
1) "மறைத்த உண்மை எது?"

 
அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.

 
அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.

 
இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
 
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

 
 
எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே?

 
வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.
 
 
 
2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு!

 
நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. "if you embrace Islam, you will find safety" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.

 
உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.
 
 
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
 
 
அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா?

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
 
 
அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்?

 
ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்?

 
இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் "இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"?

 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
 
 
3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா?

 
அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா?

 
தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே?

 
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

 
"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?,

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்?

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள்.

 
உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள்.

 
அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 
இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
 
4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே!

 
ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.

 
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
 
மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.
 
 
"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்"
 
என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.
 
5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன?

 
முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم)
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….

References in Hadith

Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..

Critical responses

In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]

["lan astaslem" (Arabic: لن استسلم )

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]


On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI

இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]


Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam

 
 
முடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா?

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


 

 
 

September 26, 2008

ஹிதேந்திரன் : 'இதயத்தை கொள்ளை கொள்பவன்'!

 
ஹிதேந்திரன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்'இதயத்தை கொள்ளை கொள்பவன்'!
ஹிதேந்திரன் என்ற பெயர் கடந்த இரண்டு நாட்களாக அனைவரின் வாயிலும் உச்சரிக்கும் ஒரு பெயராக இருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று நடந்த சாலைவிபத்தில் மூளைசாவு அடைந்து இனி காப்பாற்றமுடியாது என்ற நிலைவந்த போது அவனுடைய பெற்றோர் எடுத்த முடிவுதான் இன்று அனைவரையும் பேச வைத்திருக்கிறது. ஆம் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வது என்ற ஒரு சிறந்த முடிவை எடுத்து இன்று அநேகருக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குகின்றனர். ஒரு வேளை அவர்கள் மருத்துவர்களாக இருப்பதினால் தனது மகனின் சூழ்நிலையை அறிந்திருப்பார்கள். அதினால் ஒரு உறுதியான முடிவுக்கு வரமுடிந்திருக்கும். சாதாரண பெற்றோராக இருப்பின் தனது மகனை இழந்தது மாத்திரமல்லாமல் மருத்துவமனையின் (இறந்த மகனை கடைசி வரை மகன் உயிருக்காக காப்பாற்றி கொண்டு இருப்பதாக சொல்லி) ஒரு பெரிய பில்லை கட்டமுடியாமல் மயங்கியும் விழுந்திருப்பார்கள்.

 


இங்கு காவ‌ல் துறையின் துரித‌ ந‌ட‌வ‌டிக்கையின் கார‌ண‌மாக‌ போக்குவ‌ர‌த்து சீர் செய்ய‌ப்ப‌ட்டு 20 நிமிட‌த்தில் ஹிதேந்திரனின் இத‌ய‌த்தை அபிராமி என்ற‌ சிறுமிக்கு மாற்றமுடிந்த‌து. இத‌ற்கு உறுதுணையாக‌ இருந்த‌ சென்னை கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் அவ‌ர்க‌ளுக்கும் காரை ஓட்டிய கான்ஸ்டபிள் மோகன் அவ‌ர்க‌ளுக்கும் ந‌ம் ந‌ன்றிக‌ளை சொல்வ‌துட‌ன் அரசாங்க‌மும் அவ‌ர்க‌ளுக்கு விருதினை வ‌ழ‌ங்கி கெள‌வ‌ர‌ப்ப‌டுத்த‌வேண்டும். மேலும் இத‌ற்கு கார‌ண‌மாக‌ விள‌ங்கிய‌ ஹிதேந்திரனின் பெற்றோருக்கும் ந‌ம‌து பார‌ட்டுக‌ளையும் அவ‌ர்க‌ளின் ம‌க‌னின் ம‌றைவுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லியையும் தெரிவித்துகொள்கிறோம். இறைவ‌னின் ஆறுத‌ல் அவ‌ர்க‌ளுக்கு உண்டாகுவ‌தாக‌. ஆமென்.

 கிறிஸ்துநேசன்

September 23, 2008

கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டு கொள்ளாத முதலைமைச்சர் கண்டு மனம் வேதனையடைந்த‌ ஆர்ச் பிஷப்

கர்நாடாகாவில் ஒவ்வொரு நாளும் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நட்ந்து கொண்டிருக்கும் வன்முறையை அங்குள்ள அரசாங்கம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. தற்போது மத்திய அரசாங்கத்தின் (காலந்தாழ்ந்த) நிர்பந்தம் காரணமாக (ஒரிசாவில் அதுகூட இல்லை) தற்போது கர்நாடக அரசு கிறிஸ்தவர்களை சமாதன படுத்தவும்( ஆனால் நடப்பது வேறு) கிறிஸ்தவர்களின் மனகுமுறலை கேட்பதாவும் காட்டி கொள்ள அம்மாநில முதலமைச்சர் ஆர்ச் பிஷப்பை சந்திக்க சென்றார். அவரை கண்ட ஆர்ச் பிஷப் தன்னுடைய மனவேதனையை கொட்டி தீர்த்துள்ளார். (முழுவதுமாக அல்ல). அவரின் மனவேதனையை இறைவன் அறிந்துள்ளார். அவரே பாதிக்கபடும் மக்களை காக்க நடவடிக்கை எடுப்பாராக‌















விடியோவில் http://broadband.indiatimes.com/videoshow/3513621.cms

September 20, 2008

பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN



பல விதமான அரபி குர்‍ஆன்கள்

(THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

(இக்கட்டுரையின் முந்தைய பெயர் "குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்")

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

 
 
நான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.
 
 

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

 
 
மேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் "எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் "இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் ". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.
 
 
தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:
 
 
  1. முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
  2. பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
  3. கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.
 
 
நம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:
 
 

"... முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது".

... owing to the fact that the kufic script in which the Koran was originally written contained no indication of vowels or diacritical points, variant readings are recognized by Muslims as of equal authority. (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books, 1983, p. 10, bold added)

 
 
இந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு "ஓதுபவர்கள்– The Readers" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த "குர்‍ஆனை ஓதுபவர்கள் " ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் "செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)" என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a "transmission" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான "குர்‍ஆன் ஓதுபவரும்" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு "குர்‍ஆன் ஓதுபவரின்" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த "ஓதும் முறைப்படித்தான்" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு "ஓதும் முறையிலும்" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான "குர்‍ஆன் ஓதும் முறையை" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
நான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:
 
 
குர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. ... நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்("readers" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', "the seven readings") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது... அதிகார பூர்வமாக "குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது".
 
 
நஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)
இபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)
அபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)
இபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)
ஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)
அல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)
அபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)

 
(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 324, bold added)
 
 
மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.
 
 
 
The Reader The Transmitter Current Area of Use
"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை"
நஃபி
The Qur'an according  to the Warsh transmissionவர்ஷ் அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.
The Qur'an according  to the Qalun transmissionகலுன் லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்
இபின் கதிர்
அல் பஜ்ஜி
குன்புல்
அபூ அமர் அல்-அலா The Qur'an according  to the al-Duri transmissionஅல்துரி சூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.
அல்சுரி
இபின் அமிர் ஹிஷம் யெமன் நாட்டின் சில பகுதிகள்
இபின் தக்வான்
ஹம்ஜா கலஃப்
கல்லத்
அல்கிசய் அல்துரி
அபுல் ஹரித்
அபூ பக்கர் அசிம் The Qur'an according  to the Hafs transmissionஹஃப்ஸ் உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்
இபின் அய்யஷ்
"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை"
அபூ ஜப்பர் இபின் வர்தன்
இபின் ஜமஜ்
யாகூப் அல்- ஹஸிமி ருவய்ஸ்
ரவ்
கலஃப் அல்- பஜ்ஜர் இஷாக்
இத்ரிஷ் அல் ஹட்டட்
Abu Ammaar Yasir Qadhi, An Introduction to the Sciences of the Qur'aan, United Kingdom: Al-Hidaayah, 1999, p. 199.
 
 
மேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
 
 
இந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது "Hafs Transmission" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் "Warsh Transmission" வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.
 
 
 
The Qur'an according  to the Hafs transmission
இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.
 
  1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)
  2. வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)
  3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)
The Qur'an according  to the Warsh transmission
 
 
இந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.
 
 
அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES: இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH

சூரா 2:132 (wawassaa)

சூரா 2:131 (wa'awsaa)

சூரா 91:15 (wa laa yakhaafu)

சூரா 91:15 (fa laa yakhaafu)

சூரா 2:132 (himu)

சூரா 2:131 (hiimu)

சூரா 3:133 (wasaari'uu)

சூரா 3:133 (saari'uu)

சூரா 5:54 (yartadda)

சூரா 5:56 (yartadid)
 
 
 
மேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.
 
 
 
 
வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences): அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:

baa', taa', thaa', nuun, yaa'.

 
இருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் "அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 
குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH

சூரா 2:140 (taquluna)

சூரா 2:139 (yaquluna)

சூரா 3:81 (ataytukum)

சூரா 3:80 (ataynakum)

சூரா 2:259 (nunshizuhaa)

சூரா 2:258 (nunshiruhaa)
 
 
மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.
 
 
உயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH

சூரா 2:214 (yaquula)

சூரா 2:212 (yaquulu)

சூரா 2:10 (yakdhibuuna)

சூரா 2:9 (yukadhdhibuuna)

சூரா 2:184 (ta'aamu miskiinin)

சூரா 2:183 (ta'aami masakiina)

சூரா 28:48 (sihraani)

சூரா 28:48 (saahiraani)
 
 
 
சில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, "அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு "அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.
 
 
 
இந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.
 
 

இந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. ... (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்துவிடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக்கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)

 
 
நாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.
 
 

Translation

Making Easy the Readings of What Has Been Sent Down

Author
Muhammad Fahd Khaaruun
The Collector of the 10 Readings
From al-Shaatebeiah and al-Dorraah and al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar al-Beirut

இந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது

Copyright is for the publisher.
First Print
1420 - 1999

Can be acquired from Daar al-Beirut Bookshop.
Halabouny, Damascus, Ph: 221 3966
PO Box 25414

 
 
(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)
 
 
இந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.
 
 
 
இந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).
 
 

 
 
எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].
 
 
  1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
  2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.
  3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
  4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.
  5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.
  6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.
  7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.
 
 
மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
 
 
முடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:
 
 
 

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

 
 
நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகிவிட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.

பின் குறிப்புக்கள்:
[1] How and Why Uthman Standardized the Qur'an.
[2] The Origin of the Different Readings of the Qur'an.
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:
மூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன் ஒரு ஒப்பீடு - பாகம் 1
Grammatical errors in the Hafs transmission of the Qur'an.
Sunan Abu-Dawud Book 30: Dialects and Readings of the Qur'an
ஆசிரியர் உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறார், தொடர்பு கொள்க:
Copyright © Samuel Green 2005.
சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்

குர்‍ஆன் சம்மந்தப்பட்ட இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/authors/green/seven.htm



ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களின் கட்டுரைகள் தமிழில்:

1. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

2. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?(COMPARING THE BIBLE AND THE QUR'AN(How to do it Accurately)
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்


Isa Koran Home Page Articles Index Author Samuel Green's Index

சமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு - பின் இணைப்பு A - பாகம் 1


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பின் இணைப்பு: A

பக்கம் #50

-முதல் வரியில், மூல குர்‍ஆனின் 2:142ம் வசனத்தை, நம்முடைய தற்போதைய குர்‍ஆனோடு ஒப்பிடும் போது இரண்டு இடங்களில் வேறுபடுகிறது. [சதுர குறியீடு, விடுபட்ட பகுதியை காட்டுகிறது.]

பக்கம் #62:

-இரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:170 வசனத்தில் "வாவ்" என்று வந்திருக்கிறது, ஆனால், இப்போது நம்மிடமுள்ள குர்‍ஆன்களின் பதிப்புகளில் "லாம்" என்பதை சேர்த்துள்ளன்ர்.

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:171ம் வசனத்தில் ஒரு வார்த்தை, இப்போதுள்ள குர்‍ஆன்களில் இருப்பதோடு வித்தியாசமாக உள்ளது.

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் மெய் எழுத்தாகிய "நூன்" என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இந்த வார்த்தை வசனம் 2:172ல் சொறுகப்பட்டுள்ளது.



 

பக்கம் #64:

-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:177ம் வசனத்தில் "லாம்" என்ற மெய் எழுத்தை நாம் காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.



 

i


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #74:

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இருக்கவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அதனை காணலாம்.

பக்கம் #76:

-இரண்டாம் மூன்றாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "" என்ற மெய் எழுத்து இல்லை, ஆனால், தற்போது நம்மிடம் உள்ள குர்‍ஆனில் அவ்வெழுத்து உள்ளது.


 

பக்கம் #88:

-ஆறாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:282ம் வசனத்தில் "ட-அலிப் (ta-alif)" என்ற எழுத்துக்கள் இல்லை, ஆனால், நம்மிடமுள்ள தற்போதைய குர்‍ஆனில் இவ்வார்த்தைகள் உள்ளது.

பக்கம் #120:

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் வசனங்கள் 3:113 மற்றும் 114 இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அதனை விட்டு விட்டார்கள்.

ii


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #89:

-பத்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:283ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து இருக்கிறது. மட்டுமல்ல, மூல குர்‍ஆனில் "காம்பு" போன்ற ஒரு குறியீடும் அதிகமாக உள்ளது.

பக்கம் #134:

-இரண்டாவது வரியில் மூல குர்‍ஆனில் 3:146ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் "அலிஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் வசனம் 3:147ல் உள்ளது.

பக்கம் #232:

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:95ம் வசனத்தில், தற்கால குர்‍ஆனோடு ஒப்பிடும் போது, அதிகபடியான "அலிஃப்" என்ற எழுத்து உள்ளது.

iii


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் #182:

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆனில் 4:36ம் வசனத்தில் நாம் "அலிஃப்" இருப்பதை காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அது "யா" என்று உள்ளது.

-பதினோராவது-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் அதே வசனத்தில் "மீம்-நூன்" இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்துக்கள் இருக்கின்றன.

பக்கம் # 238:

-ஐந்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:99ம் வசனத்தில் "அலிஃப்" உள்ளது, ஆனால், இப்போதுள்ள குர்‍ஆனில் "யா" என்று உள்ளது.

பக்கம் #244:

-தற்கால குர்‍ஆன் 5:109ம் வசனத்தில் "சீன்-லாம்" என்ற எழுத்துக்கள் உள்ளன, ஆனால், மூல குர்‍ஆனில் ஒன்பதாவது வரியில் இவ்வெழுத்துக்கள் இல்லை.


 

iv


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #245:

-எட்டாவது வரியில் "அலிஃப்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 5:110ம் வசனத்தில் வருகிறது, ஆனால், இப்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து இல்லை.

-வரிகள் பத்து-பதினொன்றில், மூல குர்‍ஆனில் "லாம்-அலிஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அதே வசனத்தில் இவைகள் உள்ளன.

பக்கம் #257:

-முதலாவது வரியில், "மீம்" என்ற எழுத்துக்கு முன்னால், "லாம்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 6:11ம் வசனத்தில் வருகிறது. ஆனால், தற்கால குர்‍ஆனில் "" என்ற எழுத்து வருகிறது.

பக்கம் #262:

-தற்கால அரபிக் குர்‍ஆனில் 6:25ம் வசனத்தில், "நிஹின் (நூன்-ஹ-மீம்)" என்ற வார்த்தை வருகிறது, ஆனால், இந்த வார்த்தை அல்லது மூன்று எழுத்துக்கள் மூல குர்‍ஆனில் 9-10 வரிகளில் காணப்படுவதில்லை.

பக்கம் #263:

-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:26ம் வசனத்தில் "அலிஃப்" என்ற குறியீடு அல்லது எழுத்து வருகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, "ஹம்ஜா" என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.

v


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் # 268:

-எட்டாவது வரியில் மூல குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து குர்‍ஆன் 6:36ம் வசனத்தில் இருக்கின்றது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "யா" என்ற எழுத்துக்கு ஒரு தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால் "லாம்" இல்லை.

பக்கம் #269:

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆன் 6:39ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்லது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

 
பக்கம் #276:

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆன் 6:54 ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

 
பக்கம் # 289:
 
 
-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:80ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் "காஃப்" என்ற எழுத்து உள்ளது.


 
ஆங்கில மூலம் பாகம் 1: http://www.answering-islam.org/PQ/A1.htm#AppendA
 
 
இதன் தொடர்ச்சியாக பாகம் 2, பாகம் 3 மற்றும் பாகம் 4ஐ படிக்கவும்.

 

 
குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
 
 

© Answering Islam, 1999 - 2008. All rights reserved.