அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

February 10, 2009

எரியும் பச்சை மரங்களும் பச்சை மனிதர்களும்

இயற்கையெல்லாம் மாறிகொண்டே வருகிறது.
இந்த வீடியோவை பாருங்கள். ம‌ரங்களும், மனிதர்களூம் பச்சையாகவே எறிந்து போவதை. நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியாவில்தான் இந்த கோர சம்பவம். இன்னும் கொளுந்துவிட்டு எறியும் தீயை அணைக்கமுடியவில்லையாம். உலகில் எல்லாமே மாறிகொண்டே இருக்கிறது. என்னைகேட்டால் இறைவன் ஒருவரை தவிர மற்ற யாவும் நாம் நம்ப முடியாத அளவுக்கு மாறிகொண்டே தான் இருக்கபோகிறது.

8888888888888888888888888888888888888888888888888888






**************************************************





*******************************************************

December 31, 2008

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் வருகிற புத்தாண்டு மகிழ்ச்சியின் ஆண்டாக அமையட்டும். அனைத்து வளங்களும் பெருகட்டும். இறைவனின் ஆசி எப்போதும் உண்டாகட்டும்.



உண்மையை தேடுவோம் பொய்களை களைவோம் மனித நேயம் காப்போம்மனிதர்களை நேசிப்போம்



தேவைகளில் இறைவனை சார்ந்து நிற்போம்
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.



இறைவனின் கதவை அனுதினமும் தட்டுவோம் அவரிடம் நமக்காக வேண்டுதல் செய்வதை குறைத்து மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்




November 19, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -1
குறிப்பு: நம் தமிழ் முஸ்லீம்கள் முக்கியமாக ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். கிறிஸ்தவத்தை உண்மையாக ஸ்தாபித்தது இயேசு அல்ல, பவுல் தான் என்ற தோரணையில் கட்டுரையை எழுதியிருந்தார்கள். அவர்களின் கட்டுரைகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வதற்கு முன்பாக, இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலரான பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். (முஸ்லீம்களின் நம்பிக்கையின் படி, இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் ஒன்று தான். ஆனால், இயேசுவிற்கும் முகமதுவிற்கும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள தொலைவு போல வித்தியாசம் உள்ளது, இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாத மாற்று மத நம்பிக்கையாளர்களும் அறிந்துள்ளார்கள்.)இஸ்லாமியர்கள் நினைப்போது போல அல்லாமல், இயேசு எதைச் சொன்னாரோ, அதையே சொல்லியிருக்கிறார் அப்போஸ்தலர் பவுலும், இக்கட்டுரையில் ஒவ்வொரு தலைப்பைப் பற்றி இயேசு எதைச் சொல்லியுள்ளாரோ, பவுலும் அதையே சொல்லியுள்ளார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பவுல் சொன்னது இயேசு சொன்னதற்கு முரண்பட்டது என்றுச் சொன்னால், பவுல் முகமதுவைப் போல, உன் எதிரிகளை கொல்லு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, உன் அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக எடுத்துக்கொள் என்று சொல்லியிருந்தால், இயேசு சொன்னதற்கு எதிராக பவுல் சொன்னார் என்று நாம் கருதலாம், பவுல் சொன்னது அப்படி இல்லையே, இத்தொடர் கட்டுரைகளை படித்து தெளிவுப் பெருங்கள்.

இந்த தலைப்பில் இது முதலாவது பாகமாகும், இதில் 35 ஒற்றுமைகளை காட்டியுள்ளோம், மீதமுள்ளதை அடுத்த தொடரில் காண்போம்.



கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
முன்னுரை:

அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இயேசு தான் மேசியா அல்லது கிறிஸ்து (Jesus is the Messiah or Christ)

இயேசு: அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு : 16:15-17)

பவுல்: மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்(அப் :18: 5).

2. இயேசு தேவனுடைய குமாரன்(Jesus is the Son of God)

இயேசு: அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். (லூக்கா 22: 70-71)

பவுல்: தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப் 9: 20)

3. இயேசுவே ஆண்டவர்(Jesus is Lord)

இயேசு: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். (யோவான் 13:13)

பவுல்: பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரி 8: 6)

4. இயேசுவே தேவன் (Jesus is God)

இயேசு: தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20: 28-29)

பவுல்: பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9: 5)

5. இயேசு மனிதர் (Jesus is Human)

இயேசு: அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8: 39-40)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

6. இயேசு ஸ்தீரியினிடத்தில் பிறந்தவர் (Jesus was born of Woman)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்: காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5)

7. தேவன் இயேசுவை அனுப்பினார்(God sent Jesus)

இயேசு: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8: 42)

பவுல்: அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8: 3)

8. இயேசுவே பிதாவனிடத்திற்கு போகும் வழி (Jesus is the way to the Father)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபே : 2: 18)

9. இயேசுவே ஒளி (Jesus is Light)

இயேசு: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8: 12)

பவுல்: அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6: 14-15)

10. இயேசுவே ஜீவன் (Jesus is Life)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோ 3: 4)
11. இயேசுவே தொடக்கம் /ஆதியுமாக இருக்கிறார் உள்ளார் (Jesus is the Beginning)

இயேசு: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13)

பவுல்: ….அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

12. இயேசு முதலாமவர் (Jesus is First)

இயேசு: .....நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், .... (வெளி 1: 17-18)

பவுல்: அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

13. இயேசு தாவீதின் சந்ததியானவர் ( Jesus is a descendent of David)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்:தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். (2 தீமோ 2: 8)

14. இயேசு மணவாளன் (Jesus is the Bridegroom)

இயேசு: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன வென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. (மாற்கு 2: 18-19)

பவுல்: நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (2 கொரி 11: 2)

15. இயேசுவே ராஜா (Jesus is King)

இயேசு: இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18; 36-37)

பவுல்: விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5: 5)

16. இயேசு பரத்திலிருந்து இறங்கினவர்(Jesus descended from Heaven)

இயேசு:பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3: 13)

பவுல்: ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? (எபே 4: 9)

17. இயேசுவே இரட்சகர் (Jesus is Saviour)

இயேசு: உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)

பவுல்:பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோ 1: 15)

18. இயேசுவே சத்தியமானவர்(Jesus is the Truth)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்:இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. (எபே 4: 21)

19. இயேசு ஏழையாக இருந்தார் (Jesus was poor)

இயேசு: அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (மத்தேயு 8: 20)

பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. (2 கொரி 8: 9)

20. தேவனின் மகிமையின் ஒளி இயேசுவின் முகத்தில் பிரகாசித்தது.
(The glory of God shines in the face of Jesus)


இயேசு: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (மத்தேயு 17: 1-2)

பவுல்: இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரி 4: 6)

21. இயேசு தேவனுடைய பந்தியை ஏற்படுத்தினார் (Jesus instituted the Lord's Supper)

இயேசு: அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14: 22-24)

பவுல்: நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி 11: 23-25)

22. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்(Jesus was betrayed)

இயேசு: .... உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். .... மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!.... (மாற்கு 14: 18, 21)

பவுல் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி 11: 23)

23. இயேசு பொந்திய பிலாத்துவுக்கு முன்பாக சாட்சியளித்தார் (Jesus testified before Pontius Pilate)

இயேசு : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18: 33-37)

பவுல்: எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 6: 14)

24. இயேசு பாடுபட்டார்(Jesus suffered)

இயேசு: அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். (மத்தேயு 16: 21)

பவுல்: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி 1: 5).

25. இயேசு மரித்தார்(Jesus died)

இயேசு: இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். (மாற்கு 15: 37)

பவுல் :இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …. (1 தெச 4: 14)

26. இயேசு அடக்கம்பண்ணப்ட்டார் (Jesus was buried)

இயேசு: அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். (மாற்கு 15: 46)

பவுல்: ..... அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

27. இயேசு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்(Jesus rose from the dead on the third day)

இயேசு: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2: 19, 22)

பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15 : 3-4)

28. இயேசு பரமேறினார்(Jesus ascended)

இயேசு: அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (லூக்கா 24: 51)

பவுல்: இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே 4: 10)

29. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். (Jesus is seated at the right hand of the Father)

இயேசு: .....மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14: 61-62)

பவுல்: எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, (எபே 1: 20)

30. இயேசு மீண்டும் வருவார் (Jesus will come again)

இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்தேயு 24: 30)

பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

31. இயேசு ஆடுகளுக்காக மரித்தார் (Jesus died for the sheep)

இயேசு:ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10: 15)

பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20:28)

32. இயேசு நம்மேலிருந்த அன்பின் நிமித்தம் மரித்தார் (Jesus died for love of us)

இயேசு:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15: 12-13)

பவுல்: ....நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன (கலா 2: 20)

33. இயேசுவின் மரணம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது (Jesus' death demonstrates God's love)

இயேசு: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16)

பவுல்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5: 8)

34. இயேசு தன்னை ஒரு பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார் (Jesus gave himself as a ransom)

இயேசு: அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 28)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

35. இயேசுவை சிலுவையிலறைந்தவர்கள் அறியாமையினாலே அப்படிச் செய்தார்கள்
(Those who crucified Jesus were ignorant and acted in ignorance)


இயேசு: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ... (லூக்கா 23: 34)

பவுல்: உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (1 கொரி 2: 7-8)

முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்களே உங்கள் கண்களால் காணுங்கள், உங்கள் காதுகளால் கேளுங்கள், மனதால் உணருங்கள். இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இயேசுவின் போதனைக்கும், நீங்கள் நபி என்று நம்பிக்கொண்டு இருக்கும் முகமதுவின் போதனைக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவிற்கு முரண்பட்டவர் பவுல் அல்ல, இயேசுவின் மற்ற சீடர்கள் அல்ல, உங்கள் முகமது தான் முரண்பட்டார், ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் இயேசுவிற்கு முரண்பட்ட எல்லா செயல்களையும் அவர் செய்தார். குர்‍ஆனையும் பைபிளையும் படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அடுத்த தொடரில் சந்திக்கும் வரை கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இயேசுவே நாங்கள் உங்களை நேசிக்கிறோம், சீக்கிரமாக வாரும். ஆமென்.


March 21, 2008

தமிழ் முஸ்லீம்களுக்கு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்

ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood) என்ற இவர் ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் "நாத்தீகர்களோடு வாதம் புரிவது". முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார்

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

இயேசுவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம். இந்த அஸ்திபாரத்தைப் பற்றி குர்-ஆன் வித்தியாசமான விவரங்களை தருகிறது, அதை அலசுவது தான் இக்கட்டுரை. தமிழில் சில வரிகள் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படிக்கும்படி வேண்டுகிறேன். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்.

ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood) என்ற இவர் ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் "நாத்தீகர்களோடு வாதம் புரிவது". முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார். தற்போது, "Problem of Evil" என்ற தலைப்பில் இவர் Ph.D செய்துக்கொண்டு இருக்கிறார். இவர் சில இஸ்லாமிய காட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரை Answering Islam.Org என்ற தளத்தில் படித்து, அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் உடனே கொடுத்ததுமன்றி, Answering-islam.org தளத்தில் உள்ள அவர் எல்லா கட்டுரைகளுக்கும் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு இஸ்லாமியரோடு முகமது யார் – Who is Muhammad" என்ற தலைப்பில் புரிந்த விவாத DVD amazon ல் கிடைக்கிறது. மற்றும் அவருடைய மற்ற விவாதங்கள், இஸ்லாமிய கட்டுரைகள், மறுப்புக்கள், நாத்தீகரோடு புரிந்த நேரடி விவாதங்கள் வீடியோக்களை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.

1. http://www.answering-islam.org/Authors/Wood/index.htm
2. http://www.problemofevil.org/
3. http://answeringinfidels.com/
4. http://www.answeringmuslims.com/





ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

அல்லாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது


ஆசிரியர்: David Wood


கிட்டத்தட்ட் இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணம் மற்றும் அவர் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லிக் கொண்டுவருகிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இஸ்லாம் தள்ளிவிட்டது மற்றும் சிலுவை நேரத்திலும், அதன் பிறகும் என்ன நடந்தது என்று வேறு வகையான நிகழ்ச்சி நிரலை சொல்கிறது. எப்படி இருந்தாலும், இஸ்லாம் தன் சொந்த விளக்கத்திகாக அதிக விலை செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த விளக்கம் "இறைவனை ஒரு கொடுமையான ஏமாற்றுக்காரராக காட்டுகிறது" மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசு "படுதோல்வி" அடைந்தவராக காட்டுகிறது. இப்படி இருந்தும், "அல்லா உண்மையுள்ளவர்" மற்றும் இயேசு அல்லாவின் தீர்க்கதரிசிகளில் எல்லாம் மிகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிறார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அவர்களின் இந்த வாதங்கள் அனைத்தும் குறையுள்ளது, ஏனென்றால், இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வாய்வழி மரபுகளாகவே வருகிறது.

Allah starts Christianity…. By Accident

(அல்லா தற்செயலாக உருவாக்கிய கிறிஸ்தவம்)



இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லா உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும், நான் சொல்வதை நம்புங்கள், இஸ்லாமியர்களோ "கிறிஸ்தவம் ஒரு தவறான மதம்" என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவம் மனிதர்களால் மாற்றப்பட்டதால், அது ஒரு பிழையான மதம் என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்கிறார்கள். இதே செய்தியைத்தான் அல்லா மரியமின் மகனான இயேசுவிற்குச் சொன்னார்.

இயேசுவை பின்பற்றியவர்கள்(சீடர்கள்) இப்போதுள்ள இஸ்லாம் போல ஒரு கோட்பாட்டை நம்பியதாக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. இது ஒரு புறமிருக்க, இஸ்லாம் படி, கிறிஸ்தவத்தை திருத்தியதே அல்லா தான் (According to Islam, Christianity was corrupted by Allah himself) இஸ்லாம் ஏன் நம்மை இப்படி நம்பச்சொல்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டுமானால், நாம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

FACT #1: இயேசு அல்லாவின் தூதர் என்றும், இஸ்லாமின் தீர்க்கதரிசி(நபி) என்றும் குர்-ஆன் கூறுகிறது:

இயேசு பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை(Islamic Theology) போதித்துவந்தார் என்று குர்-ஆன் அதிகாரம்(சூரா) 19 சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். (19:23) (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். (19:24) "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும். (19:26)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. (19:33) [2]


இயேசு தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லா தன்னை தன் அளவில் உயர்த்திக்கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார். குர்-ஆன்படி இயேசு கொண்டுவந்த இஞ்ஜில் என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. இயேசு அல்லாவின் ஊழியனாகவும், நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.(42:13) [3]

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார். (43:63) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி). (43:64) [4]

ஆக, இயேசு தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாவிடம் எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டுபோகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

FACT #2: இயேசு பல சீடர்களை சம்பாதித்தார் என்று குர்-ஆன் சொல்கிறது.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு(அ) கற்றுக்கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் இஸ்லாம் (குர்-ஆன்) இயேசுவைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது:

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். (3:52) [5]

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (5:111) [6]

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (57:26)[7]

குர்-ஆன் சொல்வது உண்மையானால், இயேசு குறைந்தபட்சம் சில இஸ்ரவேல் மக்களையாவது இஸ்லாமுக்கு மாற்றியிருப்பார். ஆனால், இப்படிப்பட்ட மாற்றம் நடந்தது என்று ஒரு சரித்திர ஆதாரமும் இல்லை. இருந்தாலும் விவாதத்திற்காக வேண்டி, இயேசுவின் இஸ்லாமிய போதனைகளை விசுவாசித்த முதல் நூற்றாண்டு யூதர்கள் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று நாம் எண்ணிக்கொள்வோம். இப்படிப்பட்ட கருத்து (Assumption), இஸ்லாமுக்காக வாதாடுபவர்களுக்கு எதிராக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இனி நாம் பார்க்கப்போகிறோம்.

FACT #3: இயேசுவின் போதனையைக்கேட்டு முதல் நூற்றாண்டு யூதர்கள் இஸ்லாமியர்களாக மாறியிருந்தாலும், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக்கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்ககளைப்பற்றி அதிகபடியான சரித்திர விவரங்கள் இன்று நம்மிடம் உள்ளது, ஆனால், முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை? இயேசுவை பின்பற்றிய கிறிஸ்தவ அல்லாத மார்க்க(இஸ்லாம் சம்மந்தப்பட்ட) எல்லா விவரங்களையும் கிறிஸ்தவம் துடைத்துவிட்டது என்று இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள் இதற்கு பதிலாக சொல்வார்கள். ஆனால், அவர்களின் இந்த பதில் வெறும் அறிவீனமான வாதமே ஒழியவேறில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும்(Christian and Non-Christian Source), ஒரு "முஸ்லீம்-கிறிஸ்தவன்" இருந்ததாக ஒரு தகவலும் இல்லை. ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது "இயேசுவின் மரணம்" பற்றிய விவரம் அந்த காலத்து அதிகாரிகளுக்கு தெரிந்தவிவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். (இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர், இது இப்போதைக்கு என் கட்டுரையின் கருப்பொருள் அல்ல) இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்துக்கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள்(அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்[8]

இயேசுவின் சீடர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புதிய ஏற்பாடு அல்லாத மற்ற கிறிஸ்தவ ஆதாரங்களும் (Early Christian Writings) இன்று நம்மிடம் உள்ளது.

உதாரணத்திற்கு: அப்போஸ்தர் பேதுரு "ரோம பேராயராக" நியமித்த "ரோம் கிளமண்ட்(Clement of Rome)" என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய "இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்" பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9]. அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப்(Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல "கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள்(Non-Christian Writings)" இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் "ஜோசபாஸ் (Josephus)" மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ்(Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11]. ஒரு கிரேக்க நகைச்சுவை(Satirist) எழுத்தாளர் "Lucian of Samosata" என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், "இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் "[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].

எனவே, குர்-ஆன் சொல்லும் (1) இயேசு மரிக்கவில்லை, (2) இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் தவறானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

உண்மை இப்படி இருந்தாலும், வாதத்திற்காக வேண்டி, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், பின்பு வந்த கிறிஸ்தவர்கள் அழித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வோம் . நாம் மேலே சொன்னது போல வித்தியாசமான கற்பனையை(Outlandish Assumption) நினைத்துக்கொண்டாலும், இதனால், முஸ்லீம்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுகின்றன:

1. இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

2. ஏன் இயேசுவின் தியாக மரணம் மற்றும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை, இஸ்லாம் நம்பிக்கையை மாற்றிவிட்டது?

3. ஏன் இயேசுவின் 33 வருடகால இஸ்லாமிய போதனை ஒரு நம்பிக்கையாக மதிக்கப்படாமல் அழிந்துவிட்டது?



இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல "கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையை மாற்றிவிட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் இயேசுவின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்துவிட்டார்கள்" என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், ஒரு உண்மையான முஸ்லீம் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான், காரணம் இது இயேசுவிற்கு என்ன நடந்தது என்று குர்-ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

FACT #4: "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார்(Deceive) என்று குர்-ஆன் சொல்கிறது

குர்-ஆனின் கூற்றுப்படி, இயேசு சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ளலாம். இருந்தாலும், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு ஏன் "ஒரு முஸ்லீம் கூட" இல்லை? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், இயேசுவை பின்பற்றிய எல்லாரும் "இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அவர் மறுபடியும் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார்" என்றும் நம்பினார்.

சரி, இவர்களுக்கு "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை(விவரத்தை) யார் கொடுத்தது? இஸ்லாம் கூற்றுப்படி, "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை ஆரம்பித்தவரே(கொடுத்தவரே) அல்லா தான்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (4:158) [14]

இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், இயேசுவின் சீடர்களும் அல்லாவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துக்கொள்ளலாம். அப்படியானால்,

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு? ( So who is responsible for the Christian belief that Jesus died on the cross?)

இஸ்லாம்(குர்-ஆன்) சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், இயேசுவின் எதிரிகள் அவரை கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லா அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தார். அதனால், " இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியா அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லா தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இயேசுவின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது "தற்செயலாக(unintentional) அல்லது ஒரு விபத்தாக நடந்தது" என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், "உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப்போகிறது" என்பதை அல்லா அறியாமல் இதை செய்தார் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லா இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தார் என்று சொன்னால், அல்லாவிற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லா, ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத்தெரியாத "அறியாமையில்" இருக்கிறார் என்று முடிவு செய்யலாம், அல்லது "அவர் தெரிந்தே ஏமாற்றக்கூடியவர்" என்ற முடிவிற்கு வரலாம். (If the deception of the disciples was unintentional, then we must conclude that God didn't realize that he was about to start the largest false religion in the world. If it was intentional, then God is in the business of starting false religions. Therefore, the God of Islam is either dreadfully ignorant or maliciously deceptive.)

முகமதுவின் கூற்றுப்படி தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசுவின் ஊழியம் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இயேசு 33 ஆண்டுகள் இஸ்லாமிய போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்தார் என்று இஸ்லாம் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் மரித்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் இயேசுவின் போதனை கேட்டவர்கள் "கிறிஸ்தவர்களாக" மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத பாவமான "ஷிர்க் - SHIRK"[15] என்ற பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் "இயேசுவின் போதனைக்கு" கீழ்படியாததினால், இவர்களும் "இறைவனின் மிகப்பெரிய தீர்க்கதரிசியை" தள்ளிவிட்ட அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, இயேசுவை நம்பினவர்கள், இயேசுவை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரகநேருப்பில் பங்கடைய அல்லாவால் தண்டனைக்கு உட்பட்டார்கள். இப்படியிருந்தும், முஸ்லீம்கள் "இயேசு தீர்க்கதரிசிகளிலேயே சிறந்தவர்" என்றுச் சொல்வது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது, இயேசு, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது "சம்பாதித்து" இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை. மட்டுமல்ல, ஒரு இஸ்லாம் தீர்க்கதரிசியாக, இயேசு, அல்லாவின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், இயேசு தன் ஊழிய நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாவிடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே "ஏமாற்றும் இறைவனாகிய" அல்லாவும், படுதோல்வி அடைந்த மஸிஹாவுமே.

Allah Spreads the False Religion He Accidentally Started

தற்செயலாக ஆரம்பித்த பொய்யான மதத்தை, அல்லா பெருகச்செய்தார்


இஸ்லாமின் போதனையை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" தெரிந்தோ அல்லது தேரியாமலோ(intentionally or unintentionally) துவக்கினார் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்-ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறார்.

FACT #5: கிறிஸ்தவ மார்கம் வளர்ச்சி அடைய அல்லா உதவியதாக குர்-ஆன் சொல்கிறது

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லா அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை(False Message) கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லா உதவினார்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராம?ீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14) [16]

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். இயேசுவின் போதனையை தள்ளிவிட்ட யூதர்களுக்கு எதிராக, அல்லா இயேசுவை பின்பற்றியவர்களுக்கு(சீடர்களுக்கு) உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி "இயேசுவின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்" என்று குர்-ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக மாறிய மற்றும் இயேசுவை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி "ஆதி கிறிஸ்தவர்கள் - orthodox Christians" தான், இவர்களின் நம்பிக்கை "இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதலிலும், அவருடைய தெய்வீக தன்மையின்" மீதும் இருந்தது. இயேசுவின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை சுவிசேஷம்(இஞ்ஜில் Gospel) துடைக்கப்பட்டது என்றும் இஸ்லாமியர்கள் இப்போது வாதிக்கமுடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்-ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்-ஆன் சொல்வது படி, முதல் நூற்றாண்டில் "முஸ்லீம்-கிறிஸ்தவ" கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை . அவர்கள் மிக சீக்கிரமாக துடைத்துவிடப்பட்டார்கள். இயேசுவை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்கள், பிரகாசித்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்-ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லா உதவியாக இருந்தார் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினார்.

பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற செய்தியை உருவாக்கியது யார்? இறைவன்(அல்லா) தான் இந்த செய்தியை கண்டுபிடித்தார்(Invented). கிறிஸ்தவம் அல்லாத சரித்திர ஆசிரியர்கள் (non-Christian historians) கூட இயேசுவின் மரணம் ஒரு நிருபிக்கப்பட்ட ஆதாரமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த செய்தி பரவியிருக்கிறது[17]. இந்த சரித்திர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்தது? அவர்கள் இதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல மக்கள் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படி செய்ய அல்லா தான் காய்நகர்த்தினார். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. தற்போதுள்ள கணக்குப்படி, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் இப்போது உலகத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமின் மீது அதிகாரம் செலுத்தும் உலக மதமாக கிறிஸ்தவம் ஆரம்பித்ததற்கு பொறுப்பு இயேசுவும், அல்லாவுமே வகிக்கவேண்டும்.

If Islam Is True . . .

(இஸ்லாம் உண்மையாக இருந்தால்...)


இஸ்லாமின் கருத்து பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இறைவன் பல பில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது. இது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படிச்செய்து அவர்கள் இறைவனின் வழியைவிட்டு விலக அல்லா காரணமானார். அல்லா மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருந்திருக்கலாம். அதனால், இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

உண்மையில் "இயேசு சிலுவையில் மரிக்காமல் இருக்கும்போது" ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அல்லா நினைத்தார்?

இயேசுவை யூதர்களின் மற்றும் ரோம அதிகாரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றவே இப்படி அல்லா செய்தார் என்று முஸ்லீம்கள் வாதம் புரியமுடியாது, ஏனென்றால், அல்லா "இயேசுவை பாதுகாப்பாக" தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்துவிட்டாரே. ஏன் இயேசுவின் எதிரிகள் "இயேசு மரித்துவிட்டார்" என்று நம்பி நிம்மதியடைய அல்லா அனுமதித்தார்? ஏன் அல்லா யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டதே!

கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது, இது நம்மால் ஜீரணிப்பதற்கு மிக கடினமாக உள்ளது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், தன் தீர்க்கதரிசிகளை நம்பின மக்களை அல்லா ஏமாற்றினார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், அல்லா ஒரு தவறான செய்தியை(கிறிஸ்தவ செய்தி) ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், இயேசு மஸிஹா, திறமையில்லாதவராகவும் இறைவன் அனுப்பாதவராகவும் இருக்கிறார், ஏனென்றால், அவரது வாழ்க்கை யின் முடிவு, பல மக்களை இறைவனின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் இயேசுவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் இஸ்லாமின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரி சிந்திக்ககூடிய மனிதன் தள்ளிவிடுகிற அளவிற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் குழப்பமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆரம்பம் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது, மற்றும் அறிவுடமை உள்ளதாக இல்லை. இஸ்லாம் என்பது உண்மையானால், கிறிஸ்தவம் இப்போது இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை - If Islam is true, the existence of Christianity makes no sense at all.

(If Islam is true, Jesus, the Messiah, was completely incompetent and should never have been sent by God, since Jesus' life ended up leading more people astray than any other life in history. Because the Muslim view is at odds with any traditional understanding of God's nature (including the Islamic understanding), Islam is an incoherent religious system, which should be rejected by all rational people. Islam has a poor and contemptible explanation for the origin of Christianity. If Islam is true, the existence of Christianity makes no sense at all.)

If Christianity Is True . . .

(கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்...)


அதே நேரத்தில், இஸ்லாம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று கிறிஸ்தவம் தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேளை கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், இஸ்லாம் ஏன் உருவானது என்பது தெளிவாகப் புரியும்.

ஏன் இப்படிப்பட்ட இஸ்லாம் போன்ற மதம் உருவானது என்று இப்போது உடனே உங்களுக்கு புரியவில்லையானால், கீழே உள்ள சில வரிகளை படியுங்கள், அப்போது புரியும்.

கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், கீழ் கண்ட வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்:

(1) மக்கள் இயேசு மூலமாகத் தான் இறைவனிடம் வருகிறார்கள்.

(2) சாத்தான் என்ற ஒரு தீயசக்தி மக்களை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறான்.


மேலே உள்ள வரிகளை மனதிலே வைத்துக்கொண்டு, "சாத்தான்" பற்றி ஏதாவது ஒரு சில விவரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று நாம் இப்போது சிந்திக்கலாம்.

சாத்தான் மக்களை இறைவனிடமிருந்து தூரப்படுத்தவேண்டும் என்று விரும்பினால், மற்றும் இறைவனிடம் செல்வதற்கு இயேசு வழி என்று அவன் தெரிந்துக்கொண்டால், சாத்தானுடைய குறி எதுவாக இருக்கும்? மக்களை அதிகமாக கெட்டவர்களாக மாற்றுவது அவனின் மிக மிக முக்கிய நோக்கமாக இருக்காது (அவன் இறைவனிடமிருந்து மக்களை பிரிக்க, இப்படியும் மக்களை அதிகமாக தீயகாரியங்கள் செய்யச் செய்வான்), இதற்கு பதிலாக, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது தள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்தை அவன் மக்களின் மனதில் பாய்ச்சுவான். இதனால், மக்கள் உண்மை இறைவனிடம் சேராமல் இருக்க வாய்ப்பு உண்டாகும்.

ஆனால், எப்படி சாத்தான் மக்கள் இயேசுவை மறுத்துவிட அவர்கள் நம்பும்படிச் செய்வான்? நாம் ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அது என்னவென்றால், இந்த உலகத்தில் "இறைவன்" பற்றி அக்கரைக் கொள்ளாத அனேகமாயிர மக்கள் உள்ளனர். சாத்தான் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டான், ஏனென்றால், இறைவன் மூலமாக வரும் இரட்சிப்பு அல்லது முக்தி பற்றி அவர்களுக்கு அக்கரை இல்லை. சாத்தான் முடிந்த அளவு எவ்வளவு மக்களை இறைவனுக்கு தூரமாக பிரிக்கமுடியுமோ என்று முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஓர் அளவிற்கு இறைவன் விஷயங்களில் அக்கரை காட்டும் மக்கள் மீது அவன் கண் எப்போதும் இருக்கும் என்று நாம் சொல்லமுடியும். மக்களை இறைவனிடமிருந்து வேறுபடுத்த சாத்தான் இரண்டுவகையான முறையை கையாள்வான்:

ஒன்று "இறைவன் நம்பிக்கை" ஒரு முட்டாள்தனம் என்று நம்பவைப்பான் (இப்போது நாம் உலகத்தில் காண்கின்ற "சமயசார்பற்ற - secularism" கொள்கையை பரப்புவான்)

அல்லது அவன் உண்மைக்கு பதிலாக வேறு ஒரு மார்க்கத்தை கொடுப்பான் (இரட்சிப்பு அல்லது முக்தி அடைய தடையாக இருக்கும் ஒரு மார்க்கம்)

கிறிஸ்தவம் உண்மையானதாக இருக்குமானால், சாத்தான் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுக்கும்படி மதங்களை நம்பும்படிச் செய்வான். சில நேரங்களில் இப்படிப்பட்ட மதங்கள் கிறிஸ்தவத்தைப் போல சில கோட்பாடுகளைக் கொண்டு இருக்கக்கூடும். கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்று நாம் இப்போது சரியாக ஊகிக்கமுடியும். இப்போது "இஸ்லாம்" நம்முடைய ஊகத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பார்க்கலாம்.

இஸ்லாமுடைய போதனை இப்படியாக இருக்கும்: "இறைவனை நம்பு, நன்மைகளைச் செய்". நீ அதிக நன்மைகள் செய்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயமாக கிடைக்கும். இயேசுவை மதிக்கவேண்டும், ஏனென்றால், அவர் அல்லாவினுடைய சிறந்த நபியாக (தீர்க்கதரிசியாக) இருக்கிறார், அவர் அல்லாவின் செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். மட்டுமல்ல, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், அவர் அனேக அற்புதங்கள் செய்தார் என்றும், அவர் தான் "மஸிஹா - Messiah " என்றும் நம்பவேண்டும். ஆனால்,நீங்கள் எதை நம்பினாலும், அவர் உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதை மட்டும் நம்பவேண்டாம். மற்றும் அவர் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும் நீங்கள் நம்பவேண்டாம். முக்கியமாக நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் என்னவாக இருக்கும் என்றால், இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்புவதாகும். இங்கு கவனிக்கவும், இஸ்லாம் இயேசுவின் மற்ற எல்லா காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறது, ஆனால், மனிதன் இரட்சிக்கப்பட தேவையான முக்கியமான விஷயத்தை மறுக்கிறது. முஸ்லீம்கள் இறைவனை நம்பவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளனர், ஆனால், சாத்தானும் அவன் கூட்டமும் இறைவனை நம்புகின்றன (For instance, Muslims are commanded to believe in God, but even Satan and his demons believe in God). நல்ல காரியங்களை செய்யும் படி முஸ்லிம்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர், மற்ற மதங்களிலும் இதே கட்டளை உள்ளது. முஸ்லீம்கள் இயேசுவின் பிறப்பு அற்புதத்தையும், அவர் ஒரு நபி என்றும் இஸ்லாம் நம்பும்படிச் சொல்கிறது, ஆனால், இந்த நம்பிக்கை ஒரு மனிதனை இரட்சிக்காது. ஆக, எப்போது நாம் இயேசுவின் மரணம் உயிர்த்தெழல் போன்ற மனிதன் இரட்சிக்கப்ட தேவையான விவரங்களை சொல்கிறோமோ, அவைகளை மிகவும் கடினமாக இஸ்லாம் எதிர்க்கிறது[19]. Islam, then, looks exactly like the religion we predicted that Satan would form, for it denies what is necessary for people to come to God.

எனவே, கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் இஸ்லாம் போன்ற மார்க்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை சுலபமாக எதிர்பார்க்கலாம். பைபிளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்களை(எதிர் காலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட வசனங்கள்) நாம் பார்க்கலாம்:

இயேசு சொன்னார்: அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்[20], பவுல் கூட இப்படி சொல்கிறார் :"…சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் ."[21] (The phrase "deceitful spirit" is reminiscent of the Qur'anic claim that Allah deceived people about the death of Jesus.) உண்மை சுவிசேஷத்தை கெடுக்க பொய் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்று, பைபிள் அடிக்கடி போதிக்கிறது. இந்த எச்சரிக்கையை முகமதுவின் காலத்தில் சிலர் கவனித்ததாக தெரிகிறது.

முடிவுரை

Final Thoughts



சரித்திரத்தை சிறிது திரும்பிபார்ப்போமானால் அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். உண்மையில் இன்று கூட தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள், நாளைக்கும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்திலே ஒரு தீர்க்கதரிசி எழும்பி, தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று சொல்வார் என்று வைத்துக்கொள்வோம்[22]. நிச்சயமாக முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசி முஸ்லீம்களைப் பார்த்து கீழ்கண்டவாறு சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வோம்.

"சகோதரர்களே, நீங்கள் முகமதுவின் போதனையை நம்புகிறீர்கள், இதோ நான் சொல்கிறேன், இஸ்லாம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்டது". ஏனென்றால், இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபியர்கள், மிகவும் கொடுமையான பழக்கங்களை கொண்டு இருந்தனர், அதாவது தங்கள் மகள்களை கொன்றுபோட்டனர், மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை திருமணம் செய்தனர். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவுசெய்தார், எனவே, அவர்களை வழிவிலகச் செய்தார், உண்மையை விட்டு பொய்யானவற்றை நம்பும்படிச் செய்தார். இதோ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் இறைவனின் மிகப்பெரிய நபியாவேன், தீமையிலிருந்து உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்.

முஸ்லீம்கள் இவரை நம்புவார்களா? நிச்சயமாக நம்பமாட்டார்கள். ஏன் முஸ்லீம்கள் இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? முஸ்லிம்கள் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள் ஏனென்றால், இறைவன் தெரிந்தே பல மில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே போலத்தான் இயேசுவின் மரணத்தின் செய்தியை நம்பினார்கள் முஸ்லீம்கள். ஆக, மக்களை மற்றும் தன் நபியை பின்பற்றிய சீடர்களையும் ஏமாற்றும் இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்தால், தங்களுக்கு நிச்சயமாக உண்மை சொல்லப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புகிறார்கள். (So if Muslims believe in a God who deceives people, even those who follow his prophets, how can Muslims be confident that they have been given the truth?)

முஸ்லீம்கள் தங்கள் இறைவனைப்பற்றியும், தங்கள் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் அதிகமாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நாம் சரியாக ஆராய்ந்துபார்ப்போமானால், இஸ்லாம் மிகப்பெரிய மதத்தின் இறைவனாகிய அல்லாவை ஏமாற்றுபவன் என்று குற்றம் சாட்டுகிறது. இப்போது நாம் சிறிது நின்று நிதானித்து சிந்திக்கவேண்டும். ஏன் தன்னைப் பற்றி கவுரவமாக பெருமைப்படும் மதம், தன் இறைவன், ஒரு பொய்யான மதத்தை ஆரம்பித்தார் என்று பறைசாற்றுகிறது. ஏன் இயேசுவை மதிக்கிறோம் என்று சொல்லும் மக்கள், அவர் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? இஸ்லாம் மிகவும் வேகமாக கிறிஸ்தவத்தை அழித்துவிட முயற்சி செய்ததாக தெரிகிறது, ஆனால், அதனால், தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றிச் சொல்லும் போது, இஸ்லாம் இறைவனை(அல்லாவை) ஒரு "ஏமாற்றுபவர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இது இஸ்லாமிய கோட்பாடு இறைவனுக்கு பொருந்தக்கூடியது அல்ல. This desperation only makes sense if Christianity is true, and if Islam was designed by Satan to keep people from being saved.

முஸ்லீம்கள் இவைகள் அனைத்தையும் மறுக்கக்கூடும். அவர்கள் தங்கள் இறைவனுக்கு காட்டும் மதிப்பும், தங்கள் தீர்க்கதரிசிக்கு காட்டும் மரியாதையும் தொடரக்கூடும். ஆனால், அவர்கள் கிறிஸ்தவத்தை விவரிப்பதிலே சில விபரீதங்களைச் சொல்கிறார்கள். இறைவன் உலகத்தை திசைதிருப்பிவிட்டான்(astray) என்று அவர்கள் சொல்வது தான், புதுமையாக உள்ளது. இஸ்லாம் உண்மையாக இருக்குமானால், அல்லாவும், இயேசுவும் தோல்வி அடைந்தவர்கள் என்பது நிச்சயம். ஆனால், கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், இறைவனும், இயேசுவும் வெற்றிப்பெற்றவர்கள். சிலுவையிலே இரட்சிகப்படுவதற்கான வாசல் திறந்தே இருக்கிறது, தங்கள் கதவுகளை திறக்கமாட்டோம் என்று மூடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் சேர்த்து.

பொய்யான தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இயேசு தன்னை பின்பற்றினவர்களுக்கு எச்சரித்தார். அவர்களை நம்பவேண்டாம் என்று கட்டளையும் கொடுத்துள்ளார். அவர்களை எப்படி நாம் கண்டுபிடிப்பது என்றுச் சொன்னால், அவர்களுடைய போதனைகள் இறைவனுக்கு தகுதியில்லாத குணத்தை இறைவனுக்கு உள்ளது போல காட்டக்கூடியதாக இருக்கும். இறைவன் உண்மையுள்ளவர், மற்றும் அன்புள்ளவர். இஸ்லாமை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த இரண்டும் இறைவனுக்கு இல்லை என்று நம்மை நம்பச்சொல்லும்.

Contact Author David Wood : wood_apologetics@hotmail.com

Notes:
1 See Qur'an, 24:25
2 Qur'an 19:23-26, 30-33,
3 Qur'an 42:13.
4 Qur'an 43:59, 63-64.
5 Qur'an 3:52.
6 Qur'an 5:111.
7 Qur'an 57:26.
8 1 Corinthians 15:3-5.
9 See 1 Clement 42:3.
10 See Polycarp, To the Philippians 1:2, 2:1-2, 9:2, 12:2.
11 See Josephus, Antiquities 18.64, and Tacitus, Annals 15.44.
12 Lucian of Samosata, The Death of Peregrine, 11-13.
13 Talmud, Sanhedrin 43a.
14 Qur'an 4:157-158. According to Muslim tradition, Allah made Judas Iscariot look like Jesus, so that Judas was crucified in Jesus' place.
15 To associate partners with God is to commit the sin of shirk.
16 Qur'an 61:14.
17 For instance, John Dominic Crossan, of the notoriously anti-Christian "Jesus Seminar," says "That [Jesus] was crucified is as sure as anything historical can ever be" (Jesus: A Revolutionary Biography [San Francisco: HarperCollins, 1991] p. 145).
18 This spirit being is not to be confused with the popular image of a harmless red figure with a pointy tail and a pitchfork!
19 One may wonder why I have not included belief in God among the doctrines necessary for salvation. I'm certainly not denying the necessity of belief in God. However, I do draw a distinction between a necessary doctrine and a necessary and sufficient doctrine. Belief in God is necessary for salvation, but it is not sufficient to produce it. In contrast, the Christian doctrines of confession of the lordship of Christ and belief in his resurrection from the dead are necessary and sufficient. That is, these doctrines are sufficient to guarantee the salvation of the Christian. Yet it is these doctrines that Islam most vehemently opposes.
20 Matthew 24:11.
21 1 Timothy 4:1.
22 Even Islam has had its share of self-proclaimed new prophets. Most notably, Mirza Ghulam Ahmad announced his prophethood towards the end of the 19th Century. He also claimed to be the second coming of Jesus. Millions of people have followed him. However, the vast majority of Muslims consider these "Ahmadiyyas" to be a heretical sect. The Ahmadiyyas, though they profess to be Muslims, aren't even allowed to take the pilgrimage to Mecca. The Ahmadiyya movement is significant in that Ahmadiyyas say that true Islam was corrupted, just as Muslims claim that Christianity was corrupted. Hence, Ahmadiyyas claim that God sent another prophet to restore the true message of God. Muslims reject this, because they don't believe that Islam has been corrupted. They conclude that Mirza Ghulam Ahmad must have been a false prophet. But this is the same reason Christians reject Muhammad. We don't believe that Christianity has been corrupted, so Muhammad must have been a false prophet.




Isa Koran Home PageBack - Author David Wood's Page page

setstats1