அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 13, 2008

சட்டம் பயிலும் மாணவர்களும்..சட்டத்தை காப்பாற்றும் காவல்துறையும்.. சட்டத்தை மீறினார்கள்..

இந்த வீடியோவை பாருங்கள். இவர்கள்தான் இந்தியாவின் எதிர்கால தூண்களா வேதனை... வெட்கம்.. சென்னை அம்பேத்கார் சட்ட கல்லூரியில் நேற்று அரகேறிய கோர சம்பவம்தான் இது.. கல்லூரி மாணவர்களுக்கிடைய ஏற்பட்ட கோஷ்டி மோதலே இதற்கு காரணமாம். அதாவது தேவர் ஜெயந்தி விழா அழைப்பிதலில் அம்பேத்கார் பெயர் இடம்பெறவில்லையாம். இதற்காக நண்பர்களாக பழகவேண்டிய கல்லூரி வாழ்க்கையில் கோஷ்டிகளாக பிரிந்து தங்களுக்குள்ளே கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளனர். பாடபுத்தகத்தையும் சட்டபுத்தகத்தையும் கையிலேந்தவேண்டிய இந்த மாணவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமேந்தியது கொடுமையிலும் கொடுமை. இதிலும் கொடுமை சட்டத்தை காப்பாற்ற இரவு பகல் பாராது உழைக்கும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இது அரங்கேறியுள்ளதை என்னவென்று சொல்ல..
நாங்க‌ள் புகார்ம‌னுவை பெற்றால் தான் ந‌ட‌வ‌டிக்கை எடுப்போம் அதுவ‌ரை எதுந‌ட‌ந்தாலும் நாங்க‌ள் க‌ண்டுகொள்ள‌மாட்டோம் என்று சொல்லுவ‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்...

இறைவா எங்க‌ள் மாண‌வ‌ர்க‌ளை நேர்வ‌ழிப‌டுத்துங்க‌.. காவ‌ல்துறையினரின் பொறுப்பை உண‌ர்த்துங்க‌...

கிறிஸ்துநேச‌ன்


4 comments:

SurveySan said...

கேடுகெட்ட ஜென்மங்கள்.

இந்த கேடு கெட்டத் தனம் இந்த வயசிலையே இப்படி இருந்துதுன்னா, இன்னும் என்னென்ன செய்வானுங்களோ இந்த நாதாரிப் பசங்க.

வேடிக்கை பாத்த போலீசும், ப்ரஸ்ஸும், பொதுஜனமும், நம்ம நாட்டின் சாபக்கேடு!

Anonymous said...

The reason for this is Thevar Community Castism:

http://thatstamil.oneindia.in/news/2008/11/13/tn-2-law-college-students-brutally-beaten-by-collegues.html
///
சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தியையொட்டி மாணவர்களில் ஒரு தரப்பினர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது மாணவர்கள் ஓட்டிய போஸ்டர்களில் கல்லூரியின் பெயரில் உள்ள அம்பேதகர் என்ற பெயரை சேர்க்கவில்லையாம்.
///

If they don't like the name Ambedkar being mentioned in the poster why do they study in that college?

If something has to be condemned it has to be the Upper castism. I believe Surveysan will condemn that.

CholiyanKudimi

christhunesan said...

//வேடிக்கை பாத்த போலீசும், ப்ரஸ்ஸும், பொதுஜனமும், நம்ம நாட்டின் சாபக்கேடு!//

இதைபார்த்தாவது இனி திருந்தனுமே என்பதுதான் என் ஆதங்கம். நன்றி சகோதரர் சர்வேஸ்வரன் அவர்களே தங்களின் கருத்துக்கும் வருகைக்கும்

christhunesan said...

//If they don't like the name Ambedkar being mentioned in the poster why do they study in that college? //

இந்த தவறை அறிந்தே செய்திருந்தாலும் இந்த முடிவை மாணவர்கள் எடுத்திருக்கவேண்டாமே சகோதரர் சொலியன்குடிமி. நன்றி தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும்