அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 27, 2008

குரான் முரண்பாடுகள்-1


குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும்
அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும்,
ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும்,
தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே
உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின்
தாயை "ஆரோனின் சகோதரியே" என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு
அரசனின் மந்திரியாக இருந்த "ஆமான்" என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு
சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.

சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று
எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-
ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக
உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும்,
ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை
பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி
சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.

குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள்
பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். | Inheritance in Koran |
Koran Contradictions |

இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும்
உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.
இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். ( ai url )

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part1.html



 

0 comments: