அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 7, 2010

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு மறுப்புக்கள் கொடுத்துக்கொணடு இருக்கிறோம்.  பீஜே அவர்கள்  "கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்" என்ற தலைப்பில்  தங்கள் திருத்தல் வேலையை அரங்கேற்றியுள்ளார்.  இந்த மறுப்புக் கட்டுரை பீஜே அவர்களின் திருத்தல் வேலையை உலகிற்கு வெளிச்சம் காட்டும்.  பைபிள் சொல்லாத ஒன்றை தானாகவே கற்பனை செய்துக்கொண்டு தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களும் புரிந்துக் கொள்ளலாம். 

பீஜே எழுதியவைகளின் சுருக்கம்:

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்கவிபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

 

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். (பீஜேவின் கண்டுபிடிப்பு 1)

 

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்! (பீஜேவின் கண்டுபிடிப்பு 2)

 

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (பீஜேவின் கண்டுபிடிப்பு 3).

 

5) இது தான் கடவுளின் இலக்கணமாஎன்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்.

 

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால்ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்

இதனை படிக்கும் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால்இப்படியெல்லாம் நாங்கள் பைபிளில் படிக்கவில்லையே என்று எண்ணுவீர்கள். உங்கள் சந்தேகம் உண்மை தான்ஆனால்பீஜே அவர்கள் மிகப்பெரிய ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இக்கட்டுரையில் அவைகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

2) மோசே சொன்னது போலவிபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசு ஏன் தண்டிக்கவில்லை?

 

 

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

பீஜே அவர்கள்இயேசு இறைமகனா புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.

(நீதிமொழிகள் 6:29)

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமாஇயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

 

 

இன்னொரு முறை அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

 

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்கவிபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம்.

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்?

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (இதனை பீஜே எப்படியோ கண்டுபிடித்து இருக்கிறார்).

5) இது தான் கடவுளின் இலக்கணமாஎன்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால்ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்.

 

பீஜே அவர்களின் வரிகளுக்கு செல்வதற்கு முன்பாகஅவர் மேற்கோள் காட்டிய நிகழ்ச்சி பற்றி சுருக்கமாக நாம் பார்ப்போம்.

 

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்அக்கால யூதகுருக்கள்  விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் சட்டத்தின்படி இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும்நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

 

இது சாதாரண கேள்வி அல்லஇதில் அனேக பிரச்சனைகள் உள்ளது. அதாவது,அக்காலத்தில் ரோமர்கள் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தார்கள்ரோம சட்டம் அமுலில் இருந்தது.

 

மோசேயின் சட்டத்தை ஆதரித்துரோம சட்டத்தை மீறலாமா அல்லது ரோம சட்டத்திற்கு கீழ்படிந்து மோசேயின் சட்டத்தை மீறலாமா? (இதில் எதை இயேசு செய்வார் என்று அவர்கள் காத்திருந்தார்ஆனால்,இயேசு வேறு ஒன்றை செய்தார்).

 

 மோசேயின் சட்டத்தை ஆதரிக்கலாமா:

 

ஆம்மோசேயின் சட்டத்தின் படிஇப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும் என்று இயேசு சொன்னால்உடனே யூத தலைவர்கள்இவர் "ரோம சட்டத்தை மீறிவிட்டார்" என்றுச் சொல்லிஅரசாங்கத்திடம் இயேசுவை சிக்கவைத்துவிடுவார்கள். ஏனென்றால்ரோமர்களின் ஆட்சியில்மரண தண்டனை விதிக்கும் உரிமை ரோம அரசாங்கத்திற்கே தவிரதனி மனிதனுக்கு இல்லை. எனவே இயேசுமக்களிடத்தில் கலகத்தை உண்டாக்கிசட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்று ரோம அரசாங்கத்திடம் சொல்லிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

ரோம சட்டத்தை ஆதரிக்கலாமா:

 

ஒருவேளைஇவளுக்கு மோசேயின் சட்டத்தின்படி தண்டனை இல்லை என்றுச் சொல்லிவிட்டால்,  பொது மக்களிடம் இயேசுவிற்கு இருக்கும் செல்வாக்கை அல்லது நற்பெயரை கெடுப்பதற்கு இந்த பதில் யூத குருக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவதுநம்முடைய மோசேயின் சட்டத்தை இவர் மீறிவிட்டார்,அல்லது அதனை அவமதித்துவிட்டார் என்றுச் சொல்லிமக்களிடையே இயேசு பற்றி சொல்லலாம் என்று யூதகுருக்கள் நினைத்தனர்.

 

இந்த இரண்டு தெரிவுகளையும்இயேசு செய்யாமல்கீழ்கண்டவாறு கூறினார் யூத குருக்கள் தோல்வி அடைந்தார்கள், (இதே போலபீஜே அவர்களும் தோல்வி அடைந்துவிட்டார்).

 

யோவான் 8:4 லிருந்து 11 வசனங்கள் வரை:

 

போதகரேஇந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.  இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசேநியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரேநீர் என்னசொல்லுகிறீர் என்றார்கள்.  அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம்உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்துவிரலினால் தரையிலே எழுதினார்.  அவர்கள் ஓயாமல்அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

 

அவர் நிமிர்ந்து பார்த்துஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவதுகல்லெறியக்கடவன் என்று சொல்லி,

 

அவர் மறுபடியும் குனிந்துதரையிலே எழுதினார்.  அவர்கள் அதைக் கேட்டுதங்கள்மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டுபெரியோர்முதல்சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்இயேசுதனித்திருந்தார்அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

 

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்:ஸ்திரீயேஉன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கேஒருவனாகிலும் உன்னைஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.  அதற்கு அவள்இல்லை,ஆண்டவரேஎன்றாள்.

 

இயேசு அவளை நோக்கிநானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போஇனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

 

 

இந்த வரிகளை படித்துவிட்டுத் தான் பீஜே அவர்கள் மேலே நாம் படித்தது போல எழுதியுள்ளார்.

 

மேலேயுள்ள வசனங்களை படித்த நீங்கள்பீஜே அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

 

 

பீஜே அவர்கள் எழுதியவைகளை ஒரு முறை படிப்பது நல்லது:

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

 

1)       ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்களே, "விபச்சாரம்" செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்னாரா அல்லது  "பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன்" என்றுச் சொன்னாரா?

2)       "பாவம்" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி "விபச்சாரம்" என்று தெரிந்தது?

3)       உங்களுக்கு ஏன் இந்த திருத்திச் சொல்லும் வேலைஉள்ளதை அப்படியே சொல்லி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் அல்லவா?

4)       "பாவம்" என்ற வார்த்தை பொதுவான வார்த்தைஎல்லா வித தீய செயல்களை குறிக்க பொதுவாக "பாவம்" என்று பயன்படுத்தலாம்.அதாவது பொய் சொல்லுதல்,  ஏமாற்றுதல்திருடுதல்கொலை செய்தல்,விபச்சாரம் செய்தல்தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் என்று அனேக தீய செயல்களை நாம் பொதுவாக பாவம் என்று அழைக்கிறோம். இந்த சாதாரண விஷயம் கூடவா உங்களுக்கு தெரியவில்லைஅல்லது வேண்டுமென்றே பைபிள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் செயலாஎது எப்படியோ உங்கள் திருத்தல் வேலை உலகிற்கு காட்டப்பட்டுவிட்டதுசாயம் வெளுத்துவிட்டது.

 

விபச்சாரம் செய்யாதவன் கல்லெரியவேண்டும் என்று இயேசு கூறவில்லை, "பாவம்" செய்யாதவன் கல்லெரியட்டும் என்று தான் கூறினார்இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

"பாவம்" என்று இயேசு சொன்னதை ஏன் நாம் "விபச்சாரம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள்:

 

இந்த கேள்விக்கு இடமே இல்லைகாரணங்களை கீழே படிக்கவும்:

 

அ) பாவம் என்ற வார்த்தை பைபிள் முழுவதும் "விபச்சாரத்திற்கு" மட்டும் பயன்படுத்தப்படவில்லைஎல்லா வித தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (குர்‍ஆனிலும் இதே நிலைதான்யாராவது மறுக்க தயாரா?)

 

ஆ)  உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும் என்று இயேசு சொன்னதைஅந்த பெண்ணை கொண்டு வந்த எல்லாருக்கும் புரிந்தது (பீஜேவிற்கு மட்டும் புரியாது). நான் எப்படி இதை அவ்வளவு நிச்சயமாக சொல்லமுடியும்?   அதாவதுபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவராக ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டனர்அதாவது பெரியவர்கள் மட்டுமல்லஅவர்களோடு வந்திருந்த சிறியவர்கள் கூட சென்று விட்டனர். பீஜேவின் கூற்றுப்படி சிறியவர்கள் கூட விபச்சாரம் செய்ததாக நாம் அர்த்தம் கொள்ளவேண்டும்இது  சாத்தியமில்லையல்லவாஆனால்சிறுவர்கள் பொய் சொல்வார்கள்இதர சிறிய சிறிய தவறுகளைச் செய்வார்கள்இது சாத்தியம்.

 

இ) சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்றுச் சொல்வதினால்இயேசு கூறியது,சிறிய சிறிய தவறுகளாகிய பெற்றோர்களிடம் பொய் சொல்லுதல்இன்னும் பல தீய செயல்களை செய்தலை கூட‌ குறிக்கும் என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துக்கொண்டதினால்அவர்கள் சென்றுவிட்டனர்.

 

 

ஈ) சரிஇயேசு சொன்னது "பொதுவான தீய செயல்களைக் குறிக்கும் பாவம்" என்பதாக இருந்தாலும்ஏன் ஒரு யூத குருவும்அல்லது பெரியவர்களும்அல்லது சிறியவர்களும் கல்லெரியவில்லை?

 

பாவமில்லாதவன் ஒருவனுமில்லைஏதோ ஒரு சிறிய பாவத்தையாவது செய்து இருப்பார்கள்பொய் சொல்லியிருக்கலாம், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருந்திருக்கலாம்கெட்ட வார்த்தைகளை கோபத்தில் சொல்லியிருக்கலாம்ஒரு சிலர் விபச்சாரமும் செய்து இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால்யாருக்கு தெரியப்போகுதுஒரு கல்லை எடுத்து அந்த பெண்ணின் மீது வீசிவிட்டால் போதுமே என்று ஏன் யாருமே நினைக்கவில்லை?இதற்கும் வாய்ப்பு இல்லை.

 

 

சாதாரண பாவம் செய்து இருந்தாலும் அதனை மறைத்துஅப்பெண்ணின் மீது கல்லெரிய யாருக்கும் தைரியமில்லை ஏன்?  ஏனென்றால்அங்கு உட்கார்ந்து தரையில் எழுதிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமாஏதோநான் தான் நபி என்னை நம்புங்கள் என்றுச் சொல்லுகின்ற பொய் தீர்க்கதரிசி அல்ல, தேவைப்படும் போதுதனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லி அல்லாஹ்விடமிருந்து வசன பொட்டலங்களை வாங்கித் தருபவர் அல்ல.

 

 

இயேசு மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களைச் செய்துள்ளார்யூத தலைவர்களின் மடங்கடிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லியுள்ளார்,அவர்கள் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே சொல்லியுள்ளார். எனவே,யாராவது உண்மையாகவேதான் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லி,இயேசுவை ஏமாற்றலாம் என்று நினைத்து ஒரு கல்லை எரிந்து இருந்தால்,உடனேஇயேசு அந்த கல்லை எரிந்தவனிடம்நீ இந்த நாள் இந்த நாழிகையில் இந்த பாவத்தைச் செய்தாயே என்றுச் சொல்லிவிட்டால் என்ன செய்வது? இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுவிடுமேஊரே சிரிக்குமே! நமக்கு ஏன் வம்பு என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு மூச்சு விடாமல் சென்றுவிட்டனர்.  எனவேயாரும் ஏமாற்றமுடியாதுதான் ஒரு சிறிய பாவமும் செய்யவில்லை என்றுச் சொல்லி கல்லை எடுக்கமுடியாது.  ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்றுச் சொல்லிஇயேசு தலை குனிந்து இருந்தார். இது தான் வாய்ப்பு என்று முகத்தில் அசடு வழிந்தவர்களாக‌ ஒவ்வொருவராக சென்றுவிட்டனர்.

 

ஆகஇயேசு சொன்னது "சிறிய பெரிய பாவங்களை,தவறுகளை உள்ளடக்கிய" பாவம் என்ற வார்த்தையே தவிரகுறிப்பிட்டுச் சொல்லக்கூடிய "விபச்சார பாவத்தை" அல்ல. இனியும்,ஏதாவது விளக்கம் தேவையா?

 

சரிஇனி பீஜே அவர்களின் அடுத்தடுத்துள்ள வரிகளுக்குச் செல்வோம்:

 

பீஜே எழுதுகிறார்:

 

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை.

 

 

பீஜ அவர்களேநீங்கள் முதலாவது கொடுத்த விளக்கமே தவறுஅதாவது "எந்த ஒரு சிறு பாவமும் செய்யாமல் இருப்பவன் கல்லெரியவேண்டும்" என்று இயேசு சொன்னதைநீங்கள் திருத்தி "விபச்சாரம்  செய்யாதவன்" என்று பொருள் கொடுத்து இருக்கிறீர்கள்.

 

இரண்டாவதாகஅந்த பெண்ணை கொண்டு வந்த கூட்டமக்கள்இயேசு சொன்னதின் பொருளை அறிந்தவர்களாக திரும்பிச் சென்றுவிட்டனர். இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டத்தினர் திரும்பிச்சென்று இருக்கும் போது, "அந்த சமுதாயமே" விபச்சாரம் செய்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

 

எருசலேமில் இருக்கும் எல்லா யூதர்களும் ஒன்று கூடி வரவில்லை பீஜே அவர்களேஇயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வந்தார்கள். ஏன் இப்படி ஒரு சமுதாயமே அப்படி செய்தது என்றுச் சொல்கிறீர்கள்உலகத்தில் ஒரு கூட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள்மனைவிகளை கொடுமைபடுத்துபவர்களாக இருக்கிறார்கள்இதனால்உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் அதே போல இருக்கிறார்கள் என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களோ?

 

எனவேஉங்களின் இப்படிப்பட்ட திருத்தல் வேலை இனி தமிழ் கிறிஸ்தவர்களிடம் பலிக்காதுஇனியாவது இப்படி சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,நிறுத்தமாட்டேன் என்றுச் சொல்வீர்களானால்இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

எனவேமேலே நீங்கள் சொன்னது மிகப்பெரிய  இஸ்லாமிய பொய்யாகும்.

 

 

பீஜே எழுதுகிறார்: 

இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர்.

 

 

 

பீஜே அவர்களேஇந்த நிகழ்ச்சியின் போதுஇயேசுவின் சீடர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் படித்த வசனங்களில் உள்ளதா?  பீஜே அவர்களே வேண்டாம்,  உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இப்படியெல்லாம் கீழ்தரமாக பொய்யைச் சொல்வது தகுதியாக இருக்காதுஇது உங்களுக்கு அடுக்காதும் கூட.

 

ஒரு வேளை சீடர்கள் அங்கு இருந்திருந்தாலும்:

 

அந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் அப்போது அங்கே இருந்தார்களா இல்லையா என்று வசனங்கள் சொல்லவில்லை. உங்கள் பேச்சுக்கே வருகிறேன்ஒரு வேளை,சீடர்கள் அங்கு இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி அவர்கள் இருந்திருந்தாலும்இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யூத மத தலைவர்கள் மற்றும் அவர்களோடு வந்தவர்களாவார்கள். ஆகஇயேசு சொன்னது தன் மீதுகுற்றம் சுமத்த வந்தவர்களிடமே தவிரதன் சீடர்களிடமில்ல


(SELECTED)
SOURCE : http://isakoran.blogspot.com/2010/08/blog-post.html

0 comments: