அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 10, 2009

பெண்களுக்கு அடையாள அட்டையை கொடுத்தால் கடும்விளைவுகள் ஏற்படுமாம் !!

தீவிரவாதிகள் எதற்குதான் எச்சரிக்கை விடுப்பது என்பதற்கு வரைமுறையோ இல்லாமல் போயிற்று. தற்போது பெண்கள் எல்லாதுறையிலும் ஒரளவுக்கு முன்னேறி வருவது மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்கவில்லையாம். அதற்கு அவர்கள் சொல்லும் தகுந்த காரணம் எதுவுக் சொல்வதில்லை. மாறாக அது மதத்திற்கு எதிரானாது என்கிறார்கள்.

ஆம் பாகிஸ்தானிலும் அதுதான் நடந்து வருகிறது. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் ஒன்றுதான் இந்த சம்பவம் அந்த நாட்டில் எல்லா குடிமக்களுக்கும் கொடுப்பதுபோல பெண்களுக்கும் அடையாள அட்டை கொடுக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் இது நமது இஸ்லாமிய மதநெரிகளுக்கு எதிரானது என தெரிவித்துடன் மீறி வழங்கினால் அந்த அலுவல‌ங்கள் தகர்க்கபடுவதுடன் அந்த அட்டையை பெறமுயற்சிக்கும் பெண்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

பெண்களே கொஞ்சம் பெருமூச்சு விட்டுகொள்ளுங்கள். நீங்கள் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய நாட்டில் பிறக்காமல் இருந்ததிற்காக..

இறைவா அப்படிப்பட்ட நாடுகளின் பெண்கள் பாதிக்கபடாமல் இருக்கவேண்டுமே.....

http://www.dailythanthi.com/article.asp?NewsID=474059&disdate=3/10/2009

0 comments: