அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 28, 2008

எறையூரில் மதம்மாறவிரும்பும் கிறிஸ்தவர்களே உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன்

எறையூரில் மதம்மாறவிரும்பும் வன்னிய கிறிஸ்தவர்களே உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன்

ஏனய்யா உங்கள் ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்களை ஏற்றுகொள்ளமுடியாதா??     அவர்களையும் உங்க சகோதரர்களா அங்கிகரிக்கமுடியவில்லையா???

ஆண்டவரே எல்லோரையும் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுகொள்ளும் போது அவரை வழிபடுகிறோம் என்று சொல்லுகிற  நீங்கள்  மட்டும் ஏற்றுகொள்ளமாட்டோம் என்கிறீர்களே.....

இயேசு கிறிஸ்துவின் பிற‌ப்பு ஏற்க‌ன‌வே தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ப‌டியால் அவ‌ர் எப்ப‌டியும் என் வ‌யிற்றில் பிற‌க்க‌வேண்டும் என‌ எத்தனையோ அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரை பெண்க‌ள் த‌வ‌மிருந்த‌போதும் அவ‌ர் சாதார‌ண குடும்ப‌த்தை சேர்ந்த‌ மரியாளிட‌ம் பிற‌ந்தாரே.. அப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கிற‌ நீங்க‌ளா இப்ப‌டி சொல்வ‌து

எனவே  உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன் தயவு செய்து கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுங்கள்.

அவ‌ரின் பிற‌ப்பு முத‌ன்முத‌ல் யாருக்கு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து தெரியுமா..இராஜாக்களுக்கு அல்ல மததலைவர்களுக்கல்ல. சாதாரண ஆடுக‌ளை மேய்த்துகொண்டிருந்த மேய்ப்ப‌ர்க‌ளுக்குதான்!!!! அப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கிற‌ நீங்க‌ளா இப்ப‌டி சொல்வ‌து???

இந்தியாவில் காண‌ப்ப‌ட்ட ச‌தி கொடுமைக‌ள் ம‌ற்றும் தீண்டாமை கொடுமைக‌ள் ஒழிய‌ கார‌ண‌மாயிருந்த‌ இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

எல்லோருக்கும் க‌ல்வி செல்வ‌த்தைத‌ந்து எல்லொரையும் ம‌னித‌னாக‌வும் சிந்திக்கிற‌வ‌னாக‌வும் மாற்றின‌   இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

இந்து ம‌னுத‌ர்ம‌ சாஸ்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து போல‌வா உங்க‌ளை ஆண்ட‌வ‌ர் ப‌டைத்தார் என்று வேத‌ம் போதிக்கிறது????. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தை திற‌ந்து வாசியுங்க‌ள். உங்க‌ள் அறிவு க‌ண்க‌ள் திற‌க்க‌ப்ப‌டும்.  அங்கே ஆணும் பெண்ணுமாக‌ சிருஷ்டித்தார் என்று சொல்லும்  இந்த‌ கிறிஸ்த‌த்திலிருந்தா இப்ப‌டி பேசுகிறீர்க‌ள்????

உல‌கிலே அன்பை போதிக்கிற‌ ஒரே தெய்வ‌ம் இயேசு கிறிஸ்து . அவ‌ரின் அவ‌தார‌ம் யாரையும் ப‌லிவாங்க‌ அல்ல‌ த‌ன்னையே ப‌லியாக்க‌ வ‌ந்தார். இப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கும் நீங்க‌ளா இப்ப‌டி சொல்லுவ‌து?????

எத்த‌னையோ பேர் க‌ட‌வுளை கண்டுகொள்ளவும் தொழுதுகொள்ளவும் எத்த‌னை பிராய‌ச‌ங்க‌ள் முய‌ற்சிக‌ள் அப்பப்பா... சரிர‌த்திலே எத்த‌னை வேத‌னையை ச‌கிக்கிறார்க‌ள். ஆனால் இப்ப‌டி எதுமே செய்யாம‌ல் இல‌வ‌ச‌மாய் கிருபையாய் நாம் அவரை தொழுதுகொள்ளவும் க‌ண்டுகொள்ள‌வும் செய்கிறாரே!!!!   இப்ப‌டிப்ப‌ட்ட‌ தெய்வ‌த்தை சேவிக்கும் நீங்க‌ளா இப்ப‌டி சொல்லுவ‌து?????

வாழ்வது ஒரே வாழ்வு அதுவும் அவருக்காக  என உங்களுக்கு முடிவெடுக்கமுடியாதா???
இல்லையில்லை எனக்கு ஜாதி தான் முக்கியம் எல்லோரையும் என்னால் சகோதரர்களாக அங்கிகரிக்கமுடியாது என சொல்கிறாயா???
 
அப்படியானால்...அப்படியானால்..  உங்க காலைபிடிச்சு கேட்டுக்கிறேன் தயவு செய்து கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுங்கள்.

 

 

3 comments:

Anonymous said...

வேறு வேலையே உணக்கு கிடையாதா? உண்ணை மாதிரி அரை லூசுகளால் எத்தணை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? இறையூரில் மட்டுமா இது நடக்கிறது. தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் போய் பார் அங்கே தலித் சர்ச், நாடார் சர்ச் என்று பல காலங்களாக உள்ளது. யாரோ காசு சம்பாதிப்பதற்காக சாமி பெயரை சொல்லி அப்பாவி ஏழை மக்களை மத மாற்றம் என்ற பெயரால் அவர்கள் நிம்மதியை கெடுத்தது போதும்.

உணக்கு ஒரு கேள்வி? நீ பிறக்கும் போது உணக்கு நீ என்ன மதம் சாமி எதை பற்றியாவது தெரியுமா? நீ என்ன பரம்பரை கிறிஸ்துவனா? சமீபத்தில் தான் கிறிஸ்துவன் ஆகியிருப்பாய். ஏன் என்று கேட்டால் அந்த சாமி நான் கேட்டதை கொடுக்கவில்லை இந்த சாமி கொடுத்தது அதனால் மதம் மாறினேன் என்று சொல்வாய். நான் உண்னை கேட்கிறேன் உன் தாய், தந்தை உனக்கு ஏதும் செய்யவில்லை என்றால் வேறு தாய் தந்தை மாற்றிக் கொள்ள முடியுமா?

இந்த 21ம் நூற்றான்டில் ஏதாவது சாதிக்க பார் அதை விடுத்து காலை பிடிக்கிறேன் கையை பிடிக்கிறேன் என்று இணையத்திலும் வந்து ஏன் தமிழனின் மாணத்தை வாங்குற?

நீ இந்த கமென்டை போடலைனாலும் பரவாயில்லை ஒரு குவாட்டர் சரக்கு அடித்து விட்டு நான் சொன்ன விஷயத்தை பற்றி யோசித்து பார்.

Anonymous said...

அருமையான கருத்து, இப்படி சாதி பார்க்கும் கிறிஸ்தவர்களை ஏன் காலை பிடித்து கேட்க்கவேண்டும். அடித்து சொல்லுங்கள். மேலே கமென்ட் எழுதிய நண்பருக்கு ஒரு தகவல். நான் உன்னோட மதத்தில் கிடைக்காத சந்தோசத்தையும் சமாதானத்தையும் கிறீஸ்தவ மதத்தில் காண்கிறேன். உன் மதத்தில் இருந்து இப்படி மக்கள் மாறுகிறார்களே என்று உங்களுக்கு தான் இருக்கணும். சும்மா வேலையில்லாம ஒரு கமெண்ட் எழுதி நேரத்தை வீண் ஆக்காதே. குவாட்டேர் அடிச்சிட்டு பேசும் அவன் பேச்சும் அவன் மதமும் அவன் கடவுளும் அது மாத்ரி தான் இருக்கும்.
உயிர் இருக்கிற மதத்தை யாராலும் அழிக்க் முடியாது. நாங்க எல்லாம் மாறிட்டோம். இயேசு கிறிஸ்து உன் குடிபழக்கத்தை மாற்றி நல்ல புத்தியை தருவார்.

christhunesan said...

அருமை சகோதரர் இராஜன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி. உங்களின் மேலான கருத்துகளை தொடர்ந்து பதியுங்கள். இயேசுவின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.