அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 29, 2008

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?????? : ஒரு டிப்ஸ்

தத்துவ இயல் வகுப்பு நடத்துவதற்காக அத்துறை பேராசிரியர் சில பொருட்களுடன் வகுப்பறையில் நுழைந்தார்.

மாணவர்கள் முன்பாக தனது பாடத்தை நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் எதுவும் பேசாமல் தனது கையிலிருந்த கண்ணாடி ஜாடியில் சிறிய பந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அந்த ஜாடியை நிரப்ப ஆரம்பித்தார். அந்த ஜாடி நிறைய பந்துகளை போட்டபின் மானவர்களைப் பார்த்து, இந்த ஜாடி நிரம்பிவிட்டதா? என்று கேட்டார். மாணவர்கள் எல்லாரும் ஆம் என்றனர்.

அதன்பின்பு ஆசிரியர் சிறு சரளை கற்களை எடுத்து அந்த ஜாடியில் போட்டு அந்த ஜாடியை சற்றே குலுக்கினார். அப்போது அந்த சிறு கற்கல் பந்துகளுக்கிடையே உள்ள இடைவெளியுள்ள இடங்களில் சென்று இடத்தை நிரப்பியது.

அதன்பின்பு அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து, இப்போது இந்த ஜாடி நிரம்பிவிட்டதல்லவா? என்று கேட்டார். அப்போது மாணவர்கள் மொத்தமாக ஆம் என்றனர்.

அப்போது அவர் பொடிமணல் உள்ள ஒரு பையை எடுத்து அதை அந்த ஜாடியில் கொட்டினார்.அந்த மணல் எங்கும் இடைவெளியில்லாதவாறு எல்லா இடங்களையும் அடைத்துக் கொண்டு அந்த ஜாடியை நிரப்பியது. என்றாலும் அவர் மீண்டுமாக மாணவர்களைப் பார்த்து இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா? என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒட்டுமொத்தமாக கோரசாக ஆம் நிரம்பிவிட்டது என்றன.

அப்போது அந்த ஆசிரியர் தனது மேஜையின் கீழே இருந்து இரண்டு கப் காபியை எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். அப்போது அந்த காபியானது மணலுக்கு இடையே உள்ள சிறு துவாரங்களையும் அடைத்து முழுவதுமாக அந்த ஜாடியை நிரப்பிற்று. இதைக் கண்ட எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தனர். அந்த சிரிப்பொலியின் மத்தியில் பேச ஆரம்பித்த அந்த ஆசிரியர்,இந்த கண்ணாடி ஜாடி உங்கள் வாழ்க்கையை விளக்கும் ஒரு உதாரணமாய் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறி தனது விளக்கத்தை தொடர்ந்தார்.


அந்த சிறு பந்துகள் - கடவுள்,உங்கள் குடும்பம், குழந்தைகள், உங்கள் தேக சுகம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது - மிகவும் முக்கியமானவை ஆகும். இவை மாத்திரம் உங்களிடம் இருக்குமென்றால் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் வாழமுடியும். வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

சிறு சரளைகற்கள் உங்கள் வாழ்க்கையிலுள்ள மற்ற காரியங்களான உங்கள் வேலை, உங்கள் வீடு மற்றும் உங்கள் கார் போன்ற சொத்துகளை குறிக்கிறது.

பொடிமணலானது உங்கள் வாழ்க்கையிலுள்ள லொட்டு லொசுக்கு காரியங்களான சின்ன சின்ன காரியங்களைக் குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் முதலிலேயே ஜாடியில் இந்த மணலை போட்டிருப்பீர்களெனில், சிறு பந்துகளையும் சரளை கற்களையும் போட இடம் இருந்திருக்காது.

இந்து போலத்தான் உங்கள் வாழ்க்கையும். நீங்கள் உங்கள் வாழ்வில் சின்ன சின்ன காரியங்களுக்கு உங்கள் நேரத்தையும் சக்தியயும் செலவழித்துக் கொண்டிருப்பீர்களெனில், முக்கியமான காரியங்களுக்கு உங்கள் வாழ்வில் இடமில்லாமல் போய்விடும்.ஆகவே உங்கள் மகிழ்ச்சிக்கு தேவையான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள். கடவுளோடு நேரம் செலவழியுங்கள், குழந்தைகளோடு விளையாடுங்கள். உங்கள் மனைவி அலது குடும்பத்தாரோடு நேரம் செலவழித்து அவர்களோடு வெளியே செல்லுங்கள். உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்ற எப்போதுமே நேரம் இருக்கட்டும்.

மிக மிக முக்கியமான காரியம் என்னவெனில் பந்துகளால்(அதாவது முக்கியமானவைகளால்) முதலில் நிரப்ப வேண்டும். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாம் எளிதாகிவிடும் என்று கூறி தனது விளக்கத்தை முடித்தார்.

அப்போது ஒரு மாணவன் தனது கையை உயர்த்தி,
அப்படியானால் காபி எதைக் குறிக்கிறது? என்று கேட்டார். அப்போது புன்னகைத்த அந்த பேராசிரியர் அந்த மாணவரைப் பார்த்து நீ இந்த கேள்வியை கேட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் எவ்வளவுதான் அலுவல்கள் நிறைந்திருந்தாலும் உன் நண்பனோடு அமர்ந்து காபி குடிப்பதற்கும் நேரமும் இடமும் இருக்கிறது என்பதைத்தான் காபி குறிக்கிறது என்றார் அந்த பேராசிரியர்.
 
Arputham

1 comments:

Unknown said...

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?????? : ஒரு டிப்ஸ் என்று
தலைப்பு கொடுத்தற்க்கு, பதில் பயனுள்ள தத்துவம் என்று தலைப்பு
கொடுத்திற்க்காலமே ,, இது எனது டிப்ஸ், ............