அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 10, 2008

நாத்திகர் ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

இங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

0 comments: