அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 1, 2008

நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)

 
நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)


முன்னுரை: நான் "சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! " என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரர் RAJ பதில் அளித்து இருந்தார், அதாவது, இவர் தன்னை கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் அளித்து இருந்தார். ஆனால், இவரது வரிகள் இவர் ஒரு முஸ்லீம் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

இனி இவரது பின்னூட்டத்தையும், அதற்கு என்னுடைய பதிலையும் காணலாம்.


-----------------------------
RAJ said...
WHAT ARE YOU GOING TO DO AFTER FINDING THE ORIGINAL SOURCE.

HOW IT IS GOING TO HELP US?
-----------------------------

அன்பு நண்பர் ராஜ் அவர்களே, முதலில் நீங்கள் என் கட்டுரையை முழுவதும் படிக்காமல், நான் கொடுத்த அதே தொடுப்பை ஆதாரமாக கொடுத்தீர்கள். அதாவது, நீங்கள் ஒன்றையும் முழுவதுமாக படிக்காமல், தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் என்று தெளிவாக தெரிகிறது.

அடுத்ததாக, முஸ்லீம்கள் பொய்களை இப்படி அவிழ்த்து விடுகிறார்கள், இது உண்மையா பொய்யா என்று சில ஆதாரங்களை தேடி நான் கேள்வி கேட்டு இருந்தேன், அவர்களிடம் உண்மை இருந்தால், பதில் கொடுத்து இருப்பார்கள், இல்லையானால், "முஸ்லீம்களில் சிலர் பொய்யர்கள்" என்ற பட்டத்தை தட்டிச்சென்றுக்கொண்டு செல்வார்கள். உங்களுக்கு ஏன் கோபம் சொல்லுங்கள்.

சரி, அடுத்ததாக, "மூல தொடுப்பினால்" எனக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டுள்ளீர்கள்? அதாவது, முஸ்லீம்கள் உண்மையை சொல்லவில்லையானால், "இக்கட்டுரையை வெளியிட்ட முஸ்லீம்கள் பொய்யர்கள் என்ற உண்மை உலகம் அறியும்". சரி, இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அதாவது, பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடும் இவர்களுக்கு பைபிளைப் பற்றியோ, உண்மை நேர்மை, நீதி நியாயம் போன்றவைகளைப் பற்றி எழுத‌ என்ன தகுதி இருக்கிறது என்று, இவர்களின் கட்டுரையை படிக்கும் சராசரி முஸ்லீம்களும் அறிந்துக்கொள்வார்கள், அதே போல கிறிஸ்தவர்களும் அறிந்துகொள்வார்கள்.

எது உண்மை என்றுச் சொல்வது மட்டும் போதாது நண்பரே, எது உண்மை இல்லை என்பதையும் நாம் உலகிற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டதால், உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதாவது, இயேசு ஒரு சவுக்கை தயாரித்து தேவாலயத்தில் இருப்பவர்களை துரத்திய நிகழ்ச்சி. அதைத்தான் நானும் இன்று செய்துக்கொண்டு இருக்கிறேன், சிலருக்கு சவுக்கு தேவை, சிலருக்கு சமாதானம் தெவை.



-----------------------------
RAJ said...

CHRISTIANS GOT MUCH PRESCIOUS " NAGMA " IN CHRISTIANISM.

SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST. IS THAT RIGHT ? THAT IS HOW CHRISTIAN BLOGGERS ARE TRUMPETING IN THEIR BLOGS ABOT NAGMA.
------------------------------

அருமை நண்பரே, ஒரு விவரத்தைச் சொல்கிறேன்.

நீங்கள் கிறிஸ்டியானிசம்(CHRISTIANISM) என்று எழுதியுள்ளீர்கள், ஆனால் நாஜியிசம், இஸ்லாமிசம்(ISLAMISM) போன்று, கிறிஸ்தவத்தை கிறிஸ்டியானிசம் என்று சொல்வதில்லை, அதற்கு பதிலாக, கிறிஸ்டியானிடி(CHRISTIANITY) என்று தான் சொல்வார்கள். சரி, இதனால் இப்போது என்ன என்று என்னை கேட்கலாம், உங்களுக்கு சில விவரங்களைச் சொல்லலாம் என்று தான் சொன்னேன்.

சரி, நக்மாவின் விஷயத்திற்கு வருவோம், கிறிஸ்தவர்களுக்கு "நக்மா" இயேசுவை தன் சொந்த தெய்வமாக அங்கீகரித்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் தான் அதைச் சொல்கிறீர்கள்.

கிறிஸ்தவ ப்ளாக்கர்கள் அதிகமாக, நக்மாவின் சாட்சியை பதித்தார்கள் என்றுச் சொல்கிறீர்களே, இப்போது தான் புரிகிறது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல, ஒரு முஸ்லீம் என்பது. மட்டுமல்ல, பொய்களை அப்படியே அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய தளங்கள் பற்றி ஒன்றுமே சொல்லாமல், நக்மாவின் சாட்சியை மட்டும் கிறிஸ்தவர்கள் பதித்தால், அப்படியே கொதித்து எழும்புகிறீர்கள் நீங்கள். பொய்யான சாட்சியை எழுதி அது உண்மைப்போல தம்பட்டம் அடிக்கும் இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன, அது உங்கள் கண்களுக்கு நெருடலாக இல்லையோ, ஆனால், ஒரு உண்மைச் செய்தி அதுவும் செய்தித்தாளில் வந்தது என்று பதித்தால், உங்களுக்கு நெருடலாக உள்ளதோ?


//RAJ said: SHE IS WORTH MILLIONS OF ITALIAN PRIEST//

உங்களுக்கு வேண்டுமானால், ஒரு நக்மா ஒரு மில்லயன் இத்தாலி பாதியார்களுக்கு சமமாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை, பல கோடிபேர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு இறைவனின் இராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அது போலத் தான் இந்த செய்தியும். உங்கள் வாதம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் எவ்வளவு பொய்யைச் சொன்னாலும், மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருக்கவேண்டும் அப்படித்தானே?


-----------------------------
RAJ said...

TRY TO MAINTAIN BY POSTING GOOD ARTICLES ABOUT CHRISTIANISM RATHER THAN CHALLENGING OTHERS AS WE ALREADY HAVE ENOUGH RUBBISH IN OUR OWN YARD.
-----------------------------

உங்களை கிறிஸ்தவர் என்று வெளிப்படுத்தி எங்களை வெட்கமடையச் செய்கின்றீர்கள் நீங்கள். அப்படி என்னய்யா ரப்பிஷ் உள்ளது? ஓகோ, உங்களைப்பற்றி சொல்கின்றீர்களா? அப்படியானால் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நல்ல கட்டுரைகள் என்றால் எது என்று பட்டியல் இட்டு தரமுடியுமா? அதை எழுதுகிறோம்.

ஒரு அநியாயக்காரனுக்கு நியாயம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது, ஒரு பொய்யனுக்கு உண்மையைப் பற்றி பேச என்ன தகுதி சொல்லுங்கள், இருட்டுக்கு வெளிச்சம பற்றிப்பேச என்ன தகுதி சொல்லுங்கள். பொய்யையும், அவதூறுகளையும் அள்ளி வீசும் இஸ்லாமிய தளங்களில் முகங்களைக் கிழிப்பது உங்களுக்கு வேதனையாக உள்ளதோ?

ஜீமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, இயேசுக்கு நேர்ந்தது என்ன? என்று கட்டுரை எழுத தைரியம் எங்கே இருந்து வந்தது. பல ஆயிர மக்கள் சூடான் நாட்டில் முஸ்லீமானார்கள் என்று எழுதினார்கள், நாங்கள் எங்கே ஆதாரம் என்றுக் கேட்டோம், இன்னும் பதில் வந்தபாடில்லை, இதுவெல்லாம் அல்லாவிற்கு செய்யும் சேவையா, ஊழியமா, இஸ்லாமை பரப்புவதா... இப்படியெல்லாம் பரப்புவதைக் காட்டிலும், சும்மா இருப்பது இஸ்லாமுக்கு நன்மை பயக்கும் என்பது என் கருத்து.



-----------------------------
RAJ said...

ARE WE ABLE TO ANSWER ANY ONE OF THE ARTICLES ABOUT BIBLE PUBLISHED IN "SINDHIKKA UNMAIGAL" BLOG
CONSTRUCTIVELY WITH PROPER SENSE AND BASIS?
------------------------------


"சிந்திக்க உண்மைகள்" என்ற பெயரில் ஒரு பொய்யான பெயரில், தங்களை நாத்தீகர்கள் என்று காட்டிக்கொண்டு கட்டுரை எழுதும் முஸ்லீம்கள் இன்னும் என்னென்ன வேஷம் போடுவார்களோ கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

உங்களால் பதில் சொல்லமுடியாது என்பதால், எங்களை ஏன் சேர்த்துக்கொள்கிறீர்கள் ராஜ் அவர்களே, சரி, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி, இனி "சிந்திக்க உண்மைகள்" என்ற தளங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன், ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த தளம் ஒரு இஸ்லாம் தளம் என்ற நோக்கில் மட்டுமே என் பதில்கள் இருக்கும்.

நான் பதில்கள் அளித்தால், கண்டிப்பாக இஸ்லாமுக்கு சில கேள்விகளும் இருக்கும். எனவே, இனி சிந்திக்க உண்மைகள் தளம் இஸ்லாமிய தளம் என்று கருத்தில் கொண்டு எழுதுகின்றேன்.

பொய் முகமூடியோடு எத்தனை நாட்கள் தான் இப்படி உலாவுவீர்கள்?

சிந்திக்க உண்மைகள் என்ற தளம் ஒரு திராவிட சமய பெரியார் சிந்தனைகள் கொண்ட தளம், அதற்கு பதில் அளிக்கிறேன் என்றுச் சொல்லி, இஸ்லாமை ஏன் வம்புக்கு இழுக்கிறாய் என்று என்னிடம் யாரும் கேள்விகள் எழுப்பக்கூடாது. ஏனென்றால், இஸ்லாமை ஆதரிக்கும் ஒரு தளம், இஸ்லாம் கோட்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பாமல் இருக்கும் தளம் எந்த நாளும் ஒரு நாத்தீக தளமாக இருக்காது.

நன்றி ராஜ் அவர்களே, உங்கள் உட்சாகத்திற்கு நன்றி.

-----------------------------
RAJ said...

YOUR BLOG IS CREATING UNNECESSARY FRICTION WITHOUT SOLID BASIS.
-----------------------------


என் கட்டுரைகளில் SOLID BASIS இல்லையானால் ஏன் உங்களுக்கு FRICTION வருகிறது?

ஆமாம், என் தளம் உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தும்.

ஆதாரம் இல்லாமலா நான் கட்டுரையை எழுதுகின்றேன், வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் சிரிப்பார்கள். இஸ்லாமிய கட்டுரைகளை படித்துப்பாரும் ஒவ்வொரு கட்டுரைக்கு எத்தனை ஆதாரங்களை அவர்கள் மன்னிக்கனும் நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்று ஆராய்ச்சி செய்துப்பாரும். இப்போது நீங்கள் பின்னூட்டம் எழுதிய இந்த கட்டுரையே போதும், உங்களின் ஆதார கட்டுரைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

எனக்கு சரியாக நிச்சயமாக பதில் தெரிந்தால், அதைச் சொல்லுவேன், அப்படி சந்தேகம் மட்டும் இருந்தால், "சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்" என்று கேட்பேனே ஒழிய, ஆதாரம் இல்லாமால் எழுதமாட்டேன்.




-----------------------------
RAJ said...

APPEARS TO CHILDISH.

SOMETIMES I WONDER WHETHER YOU ARE REALLY A CHRISTIAN OR NOT?

BE A GOOD CHRISTIAN .
-------------------------------


அருமை ராஜ் அவர்களே, உங்களின் வார்த்தைகளைக் கண்டால், எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த உங்கள் வரிகளை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் உங்களைப் பற்றி சிரிப்பார்கள்.

என் கட்டுரைகள் குழந்தைத் தனமாக உள்ளதா? சொல்லுங்கள் எந்த கட்டுரை குழந்தைத்தனமாக உள்ளது?

பைபிள் வசனங்களையும், குர்‍ஆன் வசனங்களையும் திருத்தி பதில் சொல்லும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பொய் முகத்தை உலகத்திற்கு காட்டியது குழந்தைத் தனமா?

பொய்களைத் தவிர உண்மையை பேசமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டவர்களாக "இஸ்லாமுக்கு மாறிய கிறிஸ்தவ பாதிரிகள்" என்று பொய்களை ஆதாரம் இல்லாமல் எழுதும் இஸ்லாமிய தளங்களில் பொய் முகங்களை உலகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வருவது உங்களுக்கு குழந்தைத் தனமா?

உங்களைப் போன்றவர்கள் முஸ்லீமாக இருந்தும் ஒரு கிறிஸ்தவனாக காட்டிக்கொண்டு இப்படி எழுதுகிறீர்களே, உங்களின் போலி முகத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுவது குழந்தைத்தனமா?

ஒரு முறை என் தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளை படித்து எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பை மட்டும் படித்து பின்னூட்டம் எழுதுவதை இனி விட்டுவிடுங்கள், இல்லையானால், இப்படி மாட்டிக்கொள்ளவேண்டி வரும்.

"நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமா?" எங்கே சொல்லுங்கள், ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்ன என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஓகோ, நல்ல கிறிஸ்தவன் என்றால், "இயேசுவின் மீது எவ்வளவு பொய்களை முஸ்லீம்கள் சொன்னாலும், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் தான் நல்ல கிறிஸ்தவனுக்கு இருக்கும் குணம்" என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்களா?

முதலில் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருங்கள். இப்படி ஆட்டுத்தோல் போர்த்திய நரியாக இருக்கவேண்டாம்.



-----------------------------
RAJ said...

FAITH WILL GROW ON IT'S OWN MERIT.

A GOOD FAITH CANNOT BE BROUGHT DOWN BY MILLION SLANDEROUS ARTICLES.
-----------------------------

ஓகோ, ஒரு முஸ்லீம் தளம் பொய்யைச் சொன்னால் அது ஒரு நல்ல கட்டுரை ஆனால், ஆதாரம் எங்கே என்று கேட்டால், அது ஒரு அவதூறான கட்டுரையோ?

என்னுடைய கட்டுரைகள் உங்களுக்கு "SLANDEROUS ARTICLES" யாக இருக்கின்றதா? அப்படியானால், இஸ்லாமியர்கள் பைபிள் என்பது கற்பனை, அதில் உண்மை இல்லை என்றுச் சொல்வது உங்களுக்கு நல்ல கட்டுரை அப்படித்தானே. இதோ உங்கள் இஸ்லாமிய முகம் தெளிவாக தெரிகின்றது, இந்த கட்டுரையில்.


//RAJ said: FAITH WILL GROW ON IT'S OWN MERIT//

உண்மை தான், இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை பயப்படவைத்து அவனை இஸ்லாமில் இருக்கச்செய்வது என்ன நம்பிக்கையோ சிந்தித்துப்பாருங்கள்.



-----------------------------
RAJ said...

FIRST OF ALL CHANGE THE BLOG NAME FROMM ISA KORAN TO ISA BIBLE.

WHY IMITATE?
------------------------------

அய்யா நண்பரே, நான் யாரையும் காபி அடிக்கவில்லை. மற்றும் குர்‍ஆனின் பெயரை என் தளத்திற்கு இட பெருமை அடையவும் இல்லை.

நீங்கள் குர்‍ஆனை அல்லாவின் வார்த்தை என்றுச் சொல்கிறீர்கள்
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் "இயேசுவை" தேவனின் வார்த்தை என்றுச் சொல்கிறோம்.

என் தளத்தில் விவாதங்கள், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இல்லை, முகமதுவிற்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இல்லை. அதற்கு பதிலாக,

இயேசுவிற்கும் (தேவனின் வார்த்தைக்கும்), குர்‍ஆனுக்கும் (அல்லாவின் வார்த்தைக்கும்) தான் .

எனவே, தான் ஈஸா குர்‍ஆன் என்று வைத்தேன்.

இயேசு என்றாலே தேவனின் வார்த்தை, பின் எதற்கு நான் ஈஸா பைபிள் என்று வைக்கவேண்டும். அது சரி, அப்படி என்ன உங்களுக்கு என் தளத்தின் தலைப்பு உங்களுக்கு நெருடலை உண்டாக்கிவிட்டது?

-----------------------------
RAJ said...

ONE CAN FOOL MANY FOR SOMETIMES
BUT WE CANNOT FOOL EVERYBODY ALL THE TIME.
------------------------------

இது இஸ்லாமுக்கு மிகவும் நன்றாக பொருந்தும், அதாவது, இணையம் இல்லாத போது, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னது தான் உண்மை என்ற நிலையில் உலக மக்கள் இருந்தார்கள், இப்போது இணையம் பயன்படுத்தும் ஒவ்வொருவனும் இஸ்லாம் என்றால் என்ன என்று உங்களை விட நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கின்றான். முக்கியமாக, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உங்களின் பொய்களை நன்றாக அறிந்துள்ளார்கள்.



-----------------------------
RAJ said...

WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES?

THINK AND ACT SENSIBLY.

EXPECTING A GOOD CHANGE A.S.A.P.

GOD BLESS YOU TOO.
-----------------------------


என்னே வேதனை, என்னே ஒரு பைபிள் பற்றிய அக்கரை. ஆனால் ஒரு உண்மையைச் சொல்லியுள்ளீர்கள், இதற்காக உங்களுக்கு என் நன்றி.



//RAJ said: WHY SHOULD WE DEGRADE BIBLE BY CALLING IT BY OTHER NAMES? //

மேலே உள்ள உங்கள் வரியில், "OTHER NAMES" என்ற இடத்தில் "குர்‍ஆன்" என்ற பொருளில் தானே நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

உண்மைத் தான், பைபிள் இருக்கவேண்டிய இடத்தில் "குர்‍ஆன்" என்ற வார்த்தை கொடுத்தால், அது நமக்கு இழுக்கு தான்,அவமானம் தான். இதை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், என் தளத்தின் பெயர் நான் ஏற்கனவே, வைத்துவிட்டதால், அதை அப்படியே விட்டுகின்றேன்.

கடைசியாக, நீங்கள் பல குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள், மற்றும் என் கட்டுரைகள் குழந்தைத்தனமானது என்று சொல்லியுள்ளீர்கள். நீங்கள் கிறிஸ்தவர் இல்லை என்பது மட்டும் நிச்சயம், இருந்தாலும் சொல்கிறேன், என் கட்டுரைகளை படியுங்கள், உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால், பின்னூட்டம் இடுங்கள், பதில் தருகிறேன். ஒரு வேளை நான் ஒரு முஸ்லீம் என்றுச் சொல்வீர்களானால், உங்கள் இஸ்லாமிய தளங்கள் வெளியிடும் பொய்யான கட்டுரைகளினால், வெட்கமடையுங்கள், உங்கள் அல்லாவிடம் கேட்டுப்பாருங்கள், இப்படி பொய்யைச் சொல்லித் தான் உன் தீனை இவர்கள் பரப்பவேண்டுமா என்று கேட்டுப்பாருங்கள். அல்லா உங்களுக்கு என்ன பதில் சொல்வாரோ அதன் படி செய்யுங்கள்.


சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.(ரோமர் 1:18)
 

 
setstats1

0 comments: