அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label பாப்புலர் பிரண்டு. Show all posts
Showing posts with label பாப்புலர் பிரண்டு. Show all posts

July 10, 2010

பாப்புலர் பிரண்ட் எதிரான விசாரணையை தேசிய புலான்ய்வு துறை ஏற்றுகொள்ள இருக்கிறது

காவல்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பாப்புலர் பிரண்டு என்ற அமைப்புக்கு எதிராண விசாரனை மத்திய புலான்ய்வு துறையிடம் ஒப்படைக்க கேரள காவல் துறை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. தேசப் பற்று போர்வையில் உலாவி வந்த இந்த பாப்புலர் பிரண்டு என்ற அமைப்பு தலைவர்கள் வீட்டில் கைபற்றபட்ட அல்கொய்தா மற்றும் தாலிபான் ஆதரவு சிடிக்கள், லேப் டாப்கள், தீவிரவாத ஆதரவு புத்தகங்கள் போன்றவையும் மேலும் அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட தூப்பாக்கி போன்ற ஆயுதங்களும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று காவல் துறை நினைக்கிறது. எனவே இந்திய அளவில் விசாரணை நடத்த இந்த புலன் விசாரணையை தேசிய புலானய்வு துறைக்கு ஒப்படைக்க கேரள போலிஸ் தீர்மானித்துள்ளள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.