அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label சந்த்ராயன். Show all posts
Showing posts with label சந்த்ராயன். Show all posts

November 14, 2008

நிலவில் இந்தியாவின் கொடி தடம்பதிக்க‌ இன்னும் சிலமணி நேரமே.........

 

அனைத்து இந்தியரும் பெருமையடையும் நேரத்திற்கு இன்னும் சில மணிநேரமே உள்ளது. ஆம் இது வரை நிலவில் அமெரிக்காவின் கொடி நாட்டப்படிருந்தது. இரஷ்யாவின் கொடி நாட்டப்பட்டிருந்தது. ஜ்ப்பானின் கொடி நாட்டப்பட்டிருந்தது. இந்த வரிசையில்  இன்னும் சில மணிநேரத்தில் நான்காவ‌து நாடாக இந்தியாவின் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட தனது மூவர்ண கொடியை தடம்பதிக்க உள்ளது. இது நமக்கு மட்டும் அழகல்ல நிலவுக்கே ஒரு அழகு.