அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 26, 2007

இஸ்லாம் தளத்திற்கு விளக்கம் ‍எண் -3 பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல பாகம் - I

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=339

பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 1 (Part 1 of 4)


இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

Quote:
1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.


இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.


1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?
3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.

இஸ்லாமிய அறிஞர்கள் "முகமதுவை" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க, மாற்று மத வேதங்களின் வசனங்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு முயற்சியே இந்த வாதம். அதாவது, பைபிளில் வரும் "பாரான் வனாந்திரம்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" என்று சொல்கிறார்கள். எனவே, பாரான் குறித்து வரும் சில வசனங்கள், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இவர்களின் இந்த வாதம் அல்லது நம்பிக்கை சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

1. திருத்தப்பட்ட வேதம் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் "பைபிளின்" வசனங்களை ஆதாரமாக இஸ்லாமியர்கள் முன் வைப்பது ஏன்?

பைபிளில் (தோரா, ஜபூர், இஞ்ஜில்) நேர்வழியும், வெளிச்சமும் உண்டு என்று குர்-ஆன் வசனங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் "பைபிள்" மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள். பைபிள் இறைவனின் வார்த்தை இல்லை, அது மாற்றப்பட்டது என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் "முகமது" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க "பைபிளின்" வசனங்களை ஆதாரங்களாக காட்டுகிறார்கள்.

உண்மையாகவே அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்பினால்:

a) முகமதுவை "நபி" என்று நிருபிக்க ஏன் பைபிள் வசனங்களை நம்புகிறார்கள்?
b) ஒரு புத்தகம் வேதம் இல்லை என்று அடித்துச் சொல்லும் நீங்கள் ஏன் அதன் சில (உங்களுக்கு சாதகமாக தென்படுகின்ற) வசனங்களை நம்புகிறீர்கள்?
c) பைபிள் வசனங்கள் மாற்றப் பட்டது என்றுச் சொன்னால், நீங்கள் காட்டும் வசனங்கள் மட்டும் எப்படி திருத்தப்படாமல் இருக்கும்?

எனவே, ஒரு புத்தகம் வேண்டமென்றால், அதன் எல்லா வசனங்களும் வேண்டாம் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, சில வசனங்களை மட்டும் நம்பவேண்டியது, அடுத்த வசனத்தை நாங்கள் ஆதரமாக காட்டினால், அது திருத்தப்பட்டது என்றுச் சொல்வது, சரியான வாதமாக அல்லது ஆதாரமாக இருக்காது. ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. நாங்கள் பைபிளை மட்டும் வேதம் என்று நம்புகிறோம். பைபிளில் வரும் செய்திகளை திருத்தி எழுதப்பட்டது குர்-ஆன் என்று நம்புகிறோம். இருந்தாலும், ஏன் அதன் வசனங்களை சிலவற்றை ஆதாரமாக கொடுக்கிறோம் என்றால், பைபிளின் செய்திகளை தவறாக புரிந்துக்கொண்டு எழுதியதால், தவறுதலாக சில பைபிள் செய்திள்கள் அப்படியே குர்-ஆனில் வந்துவிட்டது என்று சொல்கிறோம். குர்-ஆன் "வேதம்" என்று நம்பி நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பைபிளும் தனக்கு பின் ஒரு நபி வருவார், ஒரு வேதம் வரும் என்று சொல்வதில்லை.

2. பாரான் வனாந்திரம் வரைபடம்(Map) மற்றும் மக்காவின் வரைபடம்(Map): கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

இதில் "பாரான் வனாந்திரம்" மற்றும் "மக்கா" எங்குள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

Source : http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது தங்கிய 18 இடங்களை இந்த படத்தில் காணலாம். கானானுக்கும் பாரானுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றும், மக்காவிற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்றும் இப்படங்களின் முலமாக தெரிந்துக்கொள்ளலாம். கீழே உள்ள கூகுல் யர்த்( Google Earth) வரைபடத்தைப் பார்க்கவும். இதில் எருசலேம், மற்றும் மக்கா எங்குள்ளது என்று சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். மற்றும் தமிழில் எழுதி, கோடுகள் வரைந்துள்ளேன்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/makkaatgoogle.JPG

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/makkaatgoogle.JPG

இப்படத்தை கூகுல் யர்த்தில்(Google Earth) பார்க்கவேண்டுமானால், பூமியிலிருந்து 1528.20 மைல்கள்(Eye alt 1528.20 mi) உயரத்திலிருந்து பார்க்கவேண்டும். மற்றும் படத்தின் இடது பக்கம் அடியில் காட்டியபடி அளவு கோள் 531 மைல்கள் (Scale 531 mi) காட்டப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த படத்தில் காணலாம்.

source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/JerusalemMakka.jpg

3. பாரான் வனாந்திரமும், மக்காவும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள்:

3.1. ஈசாக்கும், இஸ்மவேலும் சேர்ந்தே ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் ( 89 வயது இஸ்மவேல் மக்காவின் இருந்திருந்தால், ஆபிரகாமின் அடக்கத்திற்கு இஸ்மவேல் எப்படி வந்தார் ?) ஆகாரும் இஸ்மவேலும் பாரானில் குடியிருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆபிரகாம் மரித்த போது, ஈசாக்கும், இஸ்மவேலும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை அடக்கம் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது, அதையும் இஸ்லாமியர்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் தள அன்பர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆதியாகமம்: 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
ஆதியாகமம்: 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள் .
ஆதியாகமம்: 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி ஒரு வேளை இஸ்லாமியர்கள் சொல்வது போல, ஆகாரும் இஸ்மவேலும் மக்காவில் வாழ்ந்ததாக வைத்துக்கொண்டால், ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் எப்படி மக்காவிலிருந்து, கானானுக்கு இவ்வளவு சீக்கிரமாக வரமுடியும். "பாரான் வனாந்திரம்" மக்காவை குறிக்கும் என்று இஸ்லாமியர்களின் வாதம் இங்கு பலவீனமாகிவிடுகிறது. எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று www.timeanddate.com என்ற தளம் ஆகாயமார்க தூரத்தை கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151 or http://www.timeanddate.com/worldclock/distance.html
Distance from Jerusalem to Makkah Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.

ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள், பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும். ஆபிரகாம் மரித்தது பெயர்செபா என்பதால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம்.

ஆபிரகாம் மரிக்கும் போது, இஸ்மவேலுக்கு 89 வயது

ஆதியாகமம்16:16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் .
ஆதியாகமம்: 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

இஸ்மவேலை ஆபிரகாம் பெற்ற போது, ஆபிரகாமுக்கு 86 வயது, மற்றும் மரிக்கும் போது ஆபிரகாமின் வயது 175. ஆக, ஆபிரகாம் மரிக்கும் போது இஸ்மவேல் கிட்டத்தட்ட 89 வயது முதியவராக இருந்திருப்பார்.


a) 89 வயது முதியவராகிய இஸ்மவேல், ஆபிரகாம் மரிக்கும் போது மக்காவிலிருந்து, பெயர்செபாவிற்கு எப்படி ஓரிரு நாட்களில் 1000 கிலோ மீட்டரை தாண்டி வரமுடியும்?

b) அல்லது அண்ணன் வரும் வரை தம்பியாகிய ஈசாக்கு ஆபிரகாமின் உடலை பத்திரமாக எப்படி அழுகாமல் வைத்து இருக்கமுடியும்? (அந்த காலத்தில் மரித்த உடலை பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர் சாதனப் பெட்டி போன்ற வசதி இருந்ததா?)

c) இஸ்மவேல் 1000 KM எப்படி வந்தார்? குதிரையில், ஒட்டகத்தில் வந்தாலும் ஓரிரு நாட்களில் வர முடியாது?

d) இஸ்மவேலுக்கு செய்தியைச் சொல்ல ஒருவர் மக்காவிற்கு(இஸ்லாம் படி பாரானுக்கு) சென்று இருக்கவேண்டுமல்லவா? அப்படி செல்வதற்கும் அதிக நாட்கள் ஆகுமே?

சரி இதற்கு சரியான பதில் என்னவென்றால், ஆகாரும் இஸ்மவேலும் வாழ்ந்தது இப்போதுள்ள மக்காவில் அல்ல, பாரான் வனாந்திரம் என்பது பெயர்செபாவிற்கு தெற்காக, எகிப்திற்கு கிழக்கிலே உள்ளது என்பது தான் உண்மை. எகிப்திற்கு அருகாமையில் இருப்பதால் தான், ஆகார் தன் மகனுக்கு எகிப்திய பெண்ணை திருமணம் செய்தார்கள்.

இல்லை, பாரான் என்பது மக்கா தான் என்று சொல்வீர்களானால், இதற்கு பதில் சொல்லுங்கள்: ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் வந்தாரா இல்லையா? வந்தார் என்று சொல்வீர்களானால், எப்படி 89 வயது உள்ள ஒரு மனிதன், 1000 KM லிருந்து ஓரிரு நாட்களில் வரமுடியும்? சொல்லுங்கள்? 1000 KMக்கு அதிகமான தூரத்தில் இருப்பவருக்கு ஆபிரகாம் மரித்த செய்தி எப்படி சென்று அடைந்தது?

எஸ்றா என்பவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு, யூப்ரடீஸ் டைக்ரீஸ் வழியாக (900 மைல்கள்) வருவதற்கு 4 மாதங்கள் ஆனது என்று பைபிள் சொல்கிறது ( பார்க்க எஸ்றா அதிகாரம் 7:9). இஸ்மவேலுக்கு மக்காவிலிருந்து பெயர்செபாவிற்கு வர எத்தனை நாட்கள் பிடித்திருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் (சுமார் 750 மைல்கள் ஆகாய மார்க்கமாக, தரை மார்க்கமாக இன்னும் அதிகம்).

மேலே பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், பாரானும் மக்காவும் ஒன்றல்ல. பைபிள் சொல்லும் பாரான், பெயர்செபாவிற்கு அருகாமையில் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம். நான் காட்டிய விவரங்கள் தவறு என்றுச் சொன்னால், எங்கே தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் "நீங்கள் சொல்வது தவறு என்று" சொல்லக்கூடாது. இது படித்தவர்களுக்கு அழகல்ல.

கட்டுரை மேலும் தொடரும்....

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=339

0 comments: