அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 18, 2010

முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1:


 

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி


 
ஆசிரியர்: சைலஸ்

WAS MUHAMMAD A SINNER?


 

இரவின் அமைதியில், மக்களின் சத்தங்களை விட்டு தூரமாக வந்து, தன் இருதயத்தின் நினைவுகளை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் தன் மனதிற்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகளை இறைவனின் முன்பாக சமர்ப்பிக்கிறார்.


அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாக‌ச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.
 


"Oh God, I acknowledge and confess before You, all my sins, please forgive them, as no one can forgive sins except You. Forgive my mistakes, those done intentionally, or out of my ignorance, with or without seriousness. Oh God, forgive my sins and my ignorance, forgive my sins of the past and of the future, which I did openly or secretly. Forgive the wrong I have done, jokingly or seriously. I seek Your protection from all the evil I have done. Wash away my sins, and cleanse my heart, from all the sins as a white garment is cleansed from the filth, and let there be long distance between me and my sins, as You made the East and West far from each other."


இந்த ஜெபமானவது (வேண்டுதலானது) தன் இருதயத்தின் ஆழத்தில் இருக்கும் பாவங்களின் வீரியத்தை அறிந்த ஜெபமாக உள்ளது. பாவத்தின் பக்கம் சாயக்கூடிய தன் சுபாவத்தை இந்த ஜெபம் அங்கீகரிக்கிறது. தன் பாவ பிடியிலிருந்து விடுதலை ஆகவேண்டும் என்ற ஆவல் இந்த வேண்டுதலில் காணப்படுகிறது. இந்த ஜெபத்தில் அம்மனிதர் பாவத்திலிருந்து விடுபடவேண்டும் என்று போராடுகின்றதை காணமுடியும். தன்னுடைய கடந்த கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகின்றார். ஏனென்றால், தான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால், எதிர் காலத்தில் பாவம் செய்வார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இது தவிற்க முடியாதது. இவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். தான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்கவேண்டும் என்று அவர் வேண்டுகின்றார். தான் செய்த இந்த பாவங்கள் தீயவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார், ஆகையால் அவைகளை இறைவனுக்கு முன்பாக அறிக்கையிடுகின்றார். தான் செய்த பாவங்களை லேசானவைகள் என்று அவர் அவைகளைப் பற்றி லேசாக நினைக்கவில்லை. இறைவனின் பார்வையில் அவைகள் அருவறுப்பானவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார்.


இந்த மனிதர் ஒரு பாவி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


பாகம் 1: முஹம்மது பாவியாக இருந்தாரா?


இந்த வேண்டுதலை செய்தவர் முஹம்மது ஆவார். ஸஹீ புகாரி பாகம் 8: எண்கள் 335, 379, 407 மற்றும் 408 [1] என்ற ஹதீஸ்களில் காணப்படும் முஹம்மதுவின் பாவ மன்னிப்பு வேண்டுதல்களின் மொத்த சுருக்கத்தைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவர் தன் பாவங்களை இப்படி வெளியரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அடிக்கடி தான் ஒரு பாவி என்பதை அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, தன் வாயின் மூலமாக வெளிப்பட்ட குர்ஆனும் அவரை ஒரு பாவி என்றே அடையாளம் காட்டுகின்றது. இப்படி இருந்தும், தற்காலத்தில் உள்ள அனேக இஸ்லாமியர்கள் முஹம்மது ஒரு பாவி அல்ல என்றுச் சொல்கிறார்கள்.


கேள்வி: முஹம்மது தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகிறார், அப்படியிருக்கும் போது அவர் ஒரு பாவியில்லை என்று அவர் சொன்னதற்கு விரோதமாக ஏன் இன்றையை இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?


இந்த கேள்விக்கு பதிலை நான் காண்பதற்கு முன்பாக, முஹம்மது பாவியில்லை என்றுச் சொல்கின்ற தற்கால/மத்திய கால இஸ்லாமியர்களின் வாதங்களைக் காண்போம். அதன் பிறகு முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உதவி கொண்டு நிருபிப்போம்.


அ) "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு


அல்லாஹ் ஒரு சிறப்பான பாதுகாப்பை தன் தீர்க்கதரிசிகளுக்கு கொடுத்துள்ளார் அதன் மூலம் அவர்கள் "பாவிகளாக" இருக்கமாட்டார்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட‌ இந்த புதிய கோட்பாட்டைப் பற்றி ஒரு அருமையான விளக்கத்தை ஜான் கில்கிறைஸ்ட் தன் புத்தகமாகிய "முஹம்மது மற்றும் இஸ்லாமிய மதம்" என்ற புத்தகத்தில் தருகிறார் [2]. இந்த கோட்பாட்டை "இஸ்மா" என்று கூறுகிறார்கள். இந்த புத்தகத்தை இத்தொடுப்பில் படிக்கலாம்:


http://answering-islam.org/Gilchrist/Vol1/


இந்த புத்தகத்திலிருந்து நான் அனேக பத்திகளை மேற்கோள்களாக காட்டுகிறேன்.


பக்கம் 273 லிருந்து சில பத்திகள்


"தீர்க்கதரிசிகள் அனைவரும் 'இஸ்மா' என்ற பாவத்திலிருந்து பாதுகாப்பு என்ற சிறப்பான சலுகையை அனுபவித்தார்கள், அதாவது அவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு 'இஸ்மா' உதவுகிறது, இதன் மூலம் அவர்கள் பாவிகள் அல்ல என்று இன்றுள்ள முழு இஸ்லாமிய உலகமும் நம்பிக்கொண்டு இருக்கிறது. இது இஸ்லாமுக்கு முரண்பாடான கோட்பாடாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் போதிக்கும் போதனைக்கு முரணாக இந்த நம்பிக்கை இருக்கிறது.


இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்பு, இஸ்லாம் மற்றும் ஹதீஸ்கள் போதிப்பதற்கு எதிராக, இந்த புகழ்பெற்ற புதிய கோட்பாடு உருவாகி வளர்ச்சி அடைந்தது. இது முதன் முதலில் ஃபிக் அக்பர் 2 என்று அழைக்கப்பட்ட கோட்பாடாகும், இது கீழ்கண்ட விதமாக கூறுகிறது:


"எல்லா தீர்க்கதரிசிகளும் பாவத்திலிருந்து விடுபட்டவர்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி, மிகவும் கொடியதாக இருந்தாலும் சரி, நம்பிக்கையின்மையாக இருந்தாலும் சரி, தீய நடக்கைகளாக இருந்தாலும் சரி, இவர்கள் அவைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இருந்தும் போராட்டமும், சிறிய பிழைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கும்"
"All the Prophets are exempt from sins, both light and grave, from unbelief and sordid deeds. Yet stumbling and mistakes may happen on their part. Wensinck, "The Muslim Creed, p. 192."


இஸ்லாமிய மூல நூல்கள் சொல்வதை நாம் மறுக்க முடியாது. ஆகிலும், நபிகள் செய்ததாக குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் பாவங்களை, இவர்கள் வெறும் "சிறிய பிழைகள்" என்று சொல்லி அவர்களின் பாவங்களின் தன்மையை லேசாக்குகிறார்கள். இதே போல உள்ள இன்னொரு இஸ்லாமிய விவரம் "ஞாபக மறதியைப் பற்றியதாகும்". இஸ்லாமிய நூல்கள் எவ்வளவு தீவிரமாக நபிகளின் பாவங்களைப் பற்றி கூறினாலும், இன்றைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் அச்செயல்களுக்கு காரணம் ஞாபக மறதி தான் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.


இந்த கோட்பாடு இஸ்லாமில் உருவானதற்கு இரண்டு அடிப்படை காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உலகில் வாழ்ந்தவர்களில் இயேசு தான் பாவமற்ற மனிதராக வாழ்ந்தார் என்று பைபிள் சொல்வதை ஆரம்பகால இஸ்லாமியர்கள் சீக்கிரத்திலேயே கண்டுக்கொண்டனர். இதனை சமாளிக்க இஸ்லாமியரகள் கண்டுபிடித்த ஒரு கோட்பாடு "எல்லா தீர்கக்தரிசிகளும் முஹம்மதுவோடு கூட சேர்த்து பாவமற்றவர்கள்" என்ற கோட்பாடாகும். முஹம்மதுவை விட இயேசுவின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருப்பதை இஸ்லாமியர்கள் கண்டுக்கொண்டதால், அவர்களால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இயேசு அற்புதங்கள் செய்தது போல, முஹம்மது எந்த அற்புதத்தையும் செய்யவில்லையானாலும், பொய்யான சில அற்புதங்களை இட்டுக்கட்டி அவைகளை முஹம்மது செய்தார் என்று சில இஸ்லாமியர்கள் கூறுவது போல, இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ளமுடியாமல், முஹம்மதுவும் பாவமில்லாதவர் என்ற பொய்யான கோட்பாட்டை இஸ்லாமியர்கள் உருவாக்கினார்கள்.


இரண்டாவதாக
, இஸ்லாமின் படி வெளிப்பாடுகள் மூலமாக கிடைக்கும் இறைவசனங்கள் காபிரியேல் (ஜிப்ராயீல்) மூலமாக எல்லா நபிகளுக்கும் கிடைத்தது. ஆகையால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நபிகள் (தீர்க்கதரிசிகள்) பெறவேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தூய்மை நிறைந்ததாக இருக்கவேண்டும், எந்த பாவமும் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. நபிகள் பாவங்கள் செய்கின்றவர்களாக இருந்தால், அவர்களால் எப்படி இறைவசனங்களை பிழையில்லாமல் மக்களிடம் சேர்க்கமுடியும்? இப்படிப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைத் தான் நபிகள்(தீர்க்கதரிசிகள்) பாவங்கள் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டை உருவாக்க இரண்டாவது காரணமாக இருந்தது.


மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?


ஆ) முஹம்மது ஒரு பாவி என்பதற்கு குர்-ஆனிலிருந்து ஆதாரங்கள்.


முஹம்மது ஒரு பாவி அல்லது பாவம் செய்தவர் என்று குர்ஆன் அடையாளம் காட்டுகிறது: 40:55, 48:2, and 47:19:


40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும்.
உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!


48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.


குர்ஆன் 47:19ம் வசனத்தை இரண்டு தமிழ் மொழிப்பெயர்ப்புக்களிலும், ஐந்து ஆங்கில மொழியாக்களிலும் காணலாம். (குறிப்பு: இவ்வசனங்களில் முஹம்மது தன்னுடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கோறுகிறார்)


ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும்
உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)


'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக!
உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)


"Know that there is no deity but God.
Implore Him to forgive your sins and to forgive the true believers, men and women. God knows your busy haunts and resting places." Dawood [3]


"So know (O Muhammad) that there is no God save Allah, and
ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest." Pickthall [4]


"Know thou therefore that there is no god but God, and
ask forgiveness for thy sin, and for the believers, men and women. God knows your going to and fro, and your lodging." Arberry [5]


"Know, then, that there is no god but God; and
ask pardon for thy sin, and for believers, both men and women. God knows your busy movements and your final resting places." Rodwell [6]


"Know therefore that there is no god but Allah and
ask forgiveness for the fault and for the men and women who believe: for Allah knows how ye move about and how ye dwell in your homes." Ali [7]


இந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்திய வார்த்தை "தன்ப்" (dhanb or thanb) என்பதாகும். இந்த வார்த்தை அனேக முறை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹக்ஸ் இஸ்லாமிய அகராதி இவ்வார்த்தையின் பொருளை "பாவம் அல்லது குற்றம் அல்லது இவைகளைப்போல உள்ள ஒரு குற்றம்" [8] என்று வரையறுக்கிறது. (Hughes Encyclopedic Dictionary of Islam)[8]


முஹம்மது ஒரு பாவி என்று குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது. இவ்வார்த்தையை குர்ஆன், முஹம்மதுவிற்கும் சேர்த்தே சொல்கிறது. முஹம்மது ஒரு பாவியில்லை என்று வாதம் புரியும் இஸ்லாமியர்கள் இவ்வார்த்தைக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த வார்த்தை குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அல்லது அவ்வசனம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் பொருள் என்ன? இந்த வார்த்தையின் உண்மைப்பொருளை நாம் ஆரய்வோம். இறைவன் தண்டனை அளிக்கும் பாவமாக இவ்வார்த்தையின் பொருள் உள்ளதா? அல்லது இறைவன் மன்னிக்கும் அளவில் உள்ள மிகச்சிறிய பிழை என்ற பொருள் இவ்வார்த்தைக்கு உள்ளதா என்பதை நாம் ஆராய்வோம். இவ்வார்த்தையின் உண்மைப் பொருளை அறியவேண்டுமானால், இவ்வார்த்தை எங்கே எல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவ்வசனங்கள் சொல்லும் பொருள் அல்லது சூழல் என்ன என்பதை காண்போம்.


இவ்வார்த்தையின் பொருளைப் பற்றி குர்ஆனே பேச இப்போது நாம் இடம் கொடுப்போம்.


குர்ஆனில் இவ்வார்த்தை 39 இடங்களில் வருகிறது, சில இடங்களில் என்ன பாவம் என்பதைச் சொல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு 3:31ம் வசனத்தை பாருங்கள்,


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; ....


இவ்வசனத்தில் "எந்த பாவம்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், "பாவம்" என்று மட்டும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இருந்தபோதிலும், "தன்ப்" என்ற வார்த்தை வேறுபல வசனங்களில் "என்ன பாவத்தைப் பற்றி" அவ்வசனம் குறிப்பிடுகின்றது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட பட்டியலை நாம் காண்போம். நான் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட 22 இடங்களை மேற்க்கோள் காட்டப்போகிறேன், ஏனென்றால், குர்ஆன் இவ்வார்த்தையை எவ்வளவு வீரியமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன், "தன்ப்" என்ற வார்த்தையை மிகவும் லேசானதாக பொருள்படும் படி அல்லாஹ் குர்ஆனில் எங்கேயாவது பயன்படுத்தியுள்ளாரா என்று தேடிப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த "தன்ப்" என்ற பாவத்தை செய்தவருக்கு கொடுக்கப்படும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு முரண்பாடாக அல்லாஹ் மிகவும் லேசான தண்டனையை கொடுத்ததாக ஏதாவது வசனம் உங்களுக்கு தென்படுகின்றதா என்று தேடிப்பாருங்கள். நான் தேடிப்பார்த்ததில், எனக்கு கிடைக்கவில்லை.


"தன்ப் - DHANB" அல்லது பாவம் என்ற வார்த்தை வரும் குர்ஆன் வசனங்களின் தொகுப்பு:


3:11 (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.


பார்வோனின் மக்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அளிப்பதாக அல்லாஹ் கூறுகிறார், அவர்கள் செய்த "தன்ப்" என்ற பாவத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.


3:16 இத்தகையோர் (தம் இறைவனிடம்): 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம், எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!' என்று கூறுவார்கள்.


இந்த வசனத்தின்படி மக்கள் தாங்கள் செய்த "தன்ப்" காக மன்னிப்பை கேட்கின்றனர், ஏனென்றால், தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காமல் போனால், அவர்கள் நரகத்தின் அக்கினியில் விழவேண்டியிருக்கும்.


5:18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.


இங்கு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவர்களின் "தன்ப்" என்ற பாவத்தினால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆக, அவர்களின் தன்ப் என்ற பாவம் அவர்களுக்கு தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, பாராமுகமாக விட்டுவிடுவதற்கு இது ஒன்றும் சிறிய பாவமில்லை அல்லாஹ்வின் பார்வையில்.


5:49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன
இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.


இந்த வசனத்தில் "தன்ப்" என்பது ஒரு "குற்றமாக" கருதப்படுகிறது. சிந்திக்கும் சக்தியுள்ள எந்த மனிதனாவது குற்றம் புரிவது வெறும் சிறிய பிழை என்று கருதுவானா? நிச்சயமாக அப்படி கருதமாட்டான். இறைவன் குற்றங்களை எப்படி கருதுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீரகள்?


6:6 அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.


பல வம்சங்களை/சந்ததிகளை அவர்களின் "தன்ப்" காக அழித்ததாக இறைவன் கூறுகின்றான்.


7:100 பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.


மக்களின் "தன்ப்" காக தண்டிக்கப்படுகிறார்கள், அதாவது "தன்ப்" என்பது தண்டனை பெற்றுத் தருகின்ற ஒரு செயலாக இருக்கிறது.


8:52 (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.


இந்த வசனத்தில் மறுபடியும் மக்களின் "தன்ப்"காக அல்லாஹ் அவர்களை தண்டித்தார். மக்களின் "தன்ப்" என்ற பாவத்தை அல்லாஹ் ஏதோ சிறிய பிழையாக நினைக்காமல், அதற்கு தண்டனையை கொடுக்கிறார்.


8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.


இவ்வசனத்தில் மறுபடியும் மக்கள் தங்கள் "தன்ப்"காக, இறைவனால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இந்த குற்றம் செய்தவர்களை அல்லாஹ் அநியாயக்காரர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறார்.


9:102 வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.


அலி தன் பின்குறிப்பில் இவ்விதமாக கூறுகிறார்: "சில மனிதர்களிடம் நல்ல குணங்கள் இருந்தாலும், அவர்கள் பலவீனமாக இருப்பார்கள், இதனால் தீய செயல்களை செய்வார்கள். அலி அவர்கள் இந்த "தன்ப்" ஐ "தீய செயல்கள்" என்று கூறுகிறார். "தீய செயல்கள் என்பது தெரியாமல் செய்யும் பிழைகளாக ஆகுமா?"


12:29 (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.


இந்த வசனத்தில், யோசேப்பை பாவத்தில் விழவைக்க முயற்சி செய்த பெண்ணைப் பற்றி படிக்கிறோம். ஆனால், அவர் மீது கற்பழிப்பு குற்றத்தை அதே பெண் பொய்யாக சுமத்தினாள். இதனால், அப்பெண்ணின் "தன்ப்" அல்லது பாவத்திற்காக மன்னிப்பு கோறும்படி அறிவுரை தரப்படுகிறாள். ஒரு வேற்று ஆணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் இப்பெண்ணின் பாவம், அறியாமல் செய்த பிழையா? இல்லை. இது மனிதனுக்கு, இறைவனுக்கு எதிராக செய்த பாவமாகும்.


12:97 (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.


இவ்வசனத்திலும், யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் "தன்ப்" ஐ மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் செய்த அந்த பாவம் என்ன? அவர்கள் யோசேப்பை கடத்திச் சென்று, அடிமையாக விற்றுவிட்டாரகள். அதன் பிறகு தங்கள் தந்தையிடம் பொய்யையும் சொன்னார்கள். இவர்கள் செய்த இந்த செயல்கள் ஏதோ தெரியாமல் செய்த சிறிய பிழைகளா? அல்லது ஞாபகம் இல்லாமல் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை. இந்த செயல்கள் மிகவும் மோசமான பாவங்களாகும், இவைகள் பொறாமையினால் செய்த தீய செயல்களாகும்.


14:10 அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.


இந்த வசனத்தில் "தன்ப்" என்பது பல தெய்வ வழிப்பாட்டைக் குறிக்கிறது. விக்கிர ஆராதனை (பல தெய்வ வழிப்பாடு) மறதியில் செய்யும் சாதாரண செயலா? அவர்களின் "தன்ப்" பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றால் அவர்கள் நரக நெருப்பிலிருந்து தப்புவார்கள். இந்த பாவம் மன்னிக்கப்படவில்லையானால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.


26:14 "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).


இந்த வசனத்தில் மோசே பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு "குற்றம்/தன்ப்" புரிந்ததாக கூறுகிறார். அவர் செய்த அந்த குற்றம் தான் என்ன? அவர் செய்தது ஒரு கொலையாகும். கொலை என்பது அல்லாஹ் கண்டும் காணதவர் போல இருந்துவிடும் அளவிற்கு சிறிய பிழை தான் என்று எந்த ஒரு இஸ்லாமியராவது சொல்லமுடியுமா?


28:78 (அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.


இங்கு, ஒரு முழு தலைமுறையை அவர்கள் செய்த "தன்ப்" காக அல்லாஹ் அவர்களை அழித்தாராம். ஒரு சிறிய பிழைக்காகவா அல்லாஹ் ஒரு தலைமுறை மக்களை அழிப்பார்?


29:40 இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.


மக்கள் செய்த குற்றமாகிய தன்ப்காக அவர்களை அல்லாஹ் பிடித்ததாக கூறுகிறார். அவர் எப்படி அம்மக்களை அழித்தார் என்பதை பார்க்கவும்:கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினார், பேரிடி முழக்கத்தை அனுப்பினார், பூமியினுள் அழுந்தச் செய்தார், சிலரை தண்ணீரில் மூழ்கடித்தார். மக்கள் செய்த இந்த "தன்ப்" தீயசெயல்கள் இல்லையா? "தன்ப்" என்பது அல்லாஹ் காணாதவர் போல இருக்கச் செய்யும் ஒரு சிறிய பிழையா? இல்லை...இல்லவே இல்லை. தன்ப் என்பது அல்லாஹ் மிகவும் கொடுமையாக தண்டிக்கும் பாவமாகும்.


40:11,12 அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர். (40:11) . (பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."


இவ்வசனத்தில் மக்கள் தங்கள் பாவங்களை(தன்ப்) ஒப்புக்கொள்கின்றனர். இவர்களின் செய்த பாவம் எது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறார்? அல்லாஹ்வுடன் மற்றவர்களை சமமாக்கினதையே பாவம் என்று அல்லாஹ் கூறுகிறார். இப்படிப்பட்ட பாவத்தை "ஷிர்க்" என்று சொல்லப்படும். இந்த பாவம் மன்னிக்கப்படாது என்று பல இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.


40:21 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.


மக்களின் பாவங்களுக்காக (தன்ப்) அல்லாஹ் அவர்களை தண்டிக்கிறார். தன்ப் என்பது எப்படிப்பட்ட பாவம் என்றால், அல்லாஹ்விடமிருந்து இவர்களை காப்பாற்ற ஒருவர் தேவைப்படும் அளவிற்கு மிகவும் கொடுமையானது, ஆனால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இல்லை.


46:31 "எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.


அல்லாஹ் மக்களின் பாவங்களிலிருந்து (தன்ப்) மன்னிப்பு அளித்து, தண்டனையிலிருந்து தப்பிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இறைவனின் பார்வையில் பாவத்திற்கு(தன்ப்) கடுமையான தண்டனை தரப்படவேண்டி இருக்கிறது.


61:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.


இந்த வசனத்தில் அல்லாஹ் அவரகளின் பாவங்களை (தன்ப்) மன்னிப்பாராம். அதன் பிறகு சொர்க்கத்தில் அவர்களை அனுமதிப்பாராம். அதாவது, தன்ப் என்ற பாவம் மன்னிக்கப்படாவிட்டால், அந்த சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.


67:11 (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.


இம்மக்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வார்களாம். ஆனால், இவர்களுக்கு மன்னிப்பு தரப்படாது. ஆகையால் இம்மக்கள் இவர்களின் பாவங்களினால், நரகத்தில் இருப்பார்கள்.


91:14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.


மேலே உள்ள வசனத்தில், மக்கள் அந்த நபி ஒரு கள்ள நபி என்று கருதி அவரை நிராகரித்துவிட்டனர் மற்றும் அந்த விசேஷித்த ஒட்டகத்தை கொன்றுவிட்டனர். இவர்களின் இந்த "தன்ப் குற்றத்திற்காக" அல்லாஹ் என்ன செய்தார்? அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்கி முழுவதுமாக அழித்துவிட்டார். ஏன் இந்த தண்டனை அவர்களுக்கு? அவர்களின் "தன்ப்" என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை.


வாருங்கள் இப்போது சிறிது ஆராயலாம். "தன்ப்" என்ற வார்த்தை பாவம், குற்றம் மற்றும் தவறு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த "தன்ப்" என்ற பாவம்


செய்தவர்களை அல்லாஹ் என்ன செய்தார்?


அல்லாஹ் இப்படிப்பட்டவர்களை...



பூமியில் இராதபடிக்கு துடைத்துப்போட்டார்


அழித்துவிட்டார்


நரக நெருப்பில் போட்டார்


பயங்கரமான தண்டனையை அளித்தார்


கணக்கு கேட்டார்


பயங்கரமான புயலைக் கொண்டு அழித்தார்


பயங்கரமான தாக்குதலை கொடுத்தார்


பூமி அவர்களை விழுங்கும்படி செய்தார்


தண்ணீரில் மூழ்கும்படி செய்தார்


தண்டித்தார்


நரக நெருப்பில் தள்ளி வேதனையை அனுபவிக்கும் படி செய்தார்


"தன்ப்" என்ற பாவத்தை செய்தவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனைகளைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். இந்த "தன்ப்" என்ற பாவமானது அல்லாஹ் பார்த்தும் பார்க்காததுமாக விட்டுவிடக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய "பிழை", "தடுமாறுதல்"அல்லது "மறதியில் செய்த பிழை" என்று பொருள் தெரிகிறதா உங்களுக்கு?


இல்லை! நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் மேலே கண்ட தண்டனைகளை பார்த்தால், "தன்ப்" என்பது அல்லாஹ் மிகவும் தீவிரமாக தண்டிக்கும் ஒரு பாவமாக இருக்கிறது. அல்லாஹ்வின் பார்வையில் இது கண் ஜாடையாக‌ பார்த்தும் பார்க்காதது போல‌ விட்டுவிடுகின்ற சிறிய பாவமல்ல, இது மிகவும் கொடுமையான பாவமாகும். இதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா?


முக்கியமாக இதனை மறக்கவேண்டாம், அதாவது முஹம்மது "தன்ப்" என்ற பாவத்தை செய்துள்ளார். முஹம்மது தன்னுடைய அனைத்து "தன்ப்" காக மன்னிப்பு கோரும் படி அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளார். தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்தால் தான் சொர்க்கத்தில் நுழைய முடியும் என்று முஹம்மது குர்ஆனில் கூறியுள்ளார். தன்ப் பாவங்கள் மன்னிக்கப்படாதவன் நிச்சயமாக நரகத்தில் செல்வான்.


முதல் பாகத்தின் முடிவுரை:அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்‍ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா?


இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், முஹம்மதுவின் பாவங்கள் பற்றிய ஹதீஸ்களையும் அவர் செய்த பாவங்களின் பட்டியலையும் காண்போம்.


ஆதார நூற்ப்பட்டியல்


[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:

http://answering-islam.org/Gilchrist/Vol1/

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

mo-sinner.htm
Rev A: 4/26/00


ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER?


இதர கட்டுரைகள்:


இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1


முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)


முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)


முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்


March 15, 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

 

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை



முன்னுரை: பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளத்தில் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் ஒன்பதாம் பதிப்பில் வரவிருக்கும் விவரங்களில் ஒரு பாகத்தை அக்கட்டுரையில் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். அவரின் இந்த புத்தகத்திற்கு பதில்கள் தர நான் கடனாளியாக இருக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ந்து பதில்களை தந்து, பீஜே அவர்களின் பைபிள் பற்றிய விரிவுரையை மக்கள் அறியும் படி செய்வேன். 



பீஜே அவர்கள் பைபிள் விவரங்கள் பற்றி எவ்வளவு அறியாமையில், மேலோட்டமாக கட்டுரைகளை எழுதுகிறார் என்பதை நாம் தொடர் பதிலாக காணலாம். இக்கட்டுரையில் அவரது முதல் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்கப்படுகிறது, தேவைப்பட்டால், விவரமாக பதில்கள் தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



பீஜே அவர்கள் எழுதியவைகள்


இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.


அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/


"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?




கேள்வி:


கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:


என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.


"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?


அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?


மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.


நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.


உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:


"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25). என்று கூறினார்.


இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:


"இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்." (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:


1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.


2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.


3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.


தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)


இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.


எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.


இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.


யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.


உங்களின் வாதம், "நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்


இதர கட்டுரைகள்:

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

 

March 12, 2010

முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்



முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்



ஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்


சாம் ஷமான்


ஜைனப் பின்ட் ஜாஷ்ஷை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜைனப் இபின் ஹரிதா தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறார்.


(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். குர்ஆன் 33:37


இஸ்லாமிய பாரம்பரிய ஹதீஸ்கள் இன்னும் மேலதிக விவரங்களைத் தருகிறது:


சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420



அனஸ்(ரலி) அறிவித்தார்.


ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.


சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421



அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக ('வலீமா' விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: 'அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்துவைத்தான்' என்று சொல்வார்கள்


சஹீ முஸ்லீம்: அனஸ் (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அறிவித்ததாவது:



ஜைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஜையத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவை பிசைந்துக்கொண்டு இருக்கும் போது ஜையத் அங்கு சென்றார். அவர் கூறினார்: நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன். அதனால், நான் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல், வேறு திசையில் திரும்பிக்கொண்டு பேசினேன். நான் கூறினேன் "ஜைனப், அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்". இதற்கு பதிலாக அவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்துக்கொள்ளும் வரை நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். இதை சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போது தான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்.... (சஹீ முஸ்லீம், பாகம் 008, எண் 3330) (இந்த ஒரு ஹதீஸ் நம்முடைய தமிழாக்கம், ஆங்கிலத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்)


முஹம்மதுவின் மற்ற மனைவிமார்களில் யாரும் வஹி மூலமாக அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி வெளிப்பாட்டின் படி அவருக்கு திருமணம் செய்யப்படவில்லை என்று ஜைனப்பின் பெருமை பாராட்டல் காட்டுகிறது. நேரடி வெளிப்பாட்டின் படி ஜைனப் மட்டும் தான் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள்.


இருந்தபோதிலும், காபிரியேல் தூதன் முஹம்மதுவிற்கு கனவில் ஆயிஷாவை காட்டியதாக முஹம்மது சொல்லியுள்ளார்.


சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.


சஹீ புகாரி: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125



ஆயிஷா(ரலி) அறிவித்தார்


என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன்


மேலே கண்ட ஹதீஸ்களின் படி, ஆயிஷா முஹம்மதுவின் மனைவி என்று அல்லாஹ் முதலாவதாக அறிவித்ததாக சொல்லப்படுகிறது, இந்த முறை இவ்வெளிப்பாடு கனவு மூலமாக வந்தது. இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் போன்றவர்களோடு இறைவன் கனவின் மூலமாக தரிசனங்களின் மூலமாக பேசுவார் என்று குர்ஆன் சொல்கிறது:


(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். குர்ஆன் 8:43


பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." குர்ஆன் 37:102


வெளிப்பாடுகள் வெளிப்படும் விதங்களில் கனவு கூட ஒரு வகை என்பதை ஹதீஸ்கள் அங்கீகரிக்கின்றன.


சஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 1, எண் 3



ஆயிஷா(ரலி) கூறினார்.


"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.


"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். ......,


சஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 4, எண் 138



நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.


சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.


என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ஆயிஷாவை மணந்துக்கொள்ளும்படி முஹம்மதுவிற்கு வெளிப்பாடு கனவு மூலமாக கிடைத்துள்ளது.


மேற்கண்ட விவரங்கள் சில முரண்பாடுகள், பிரச்சனைகளை உருவாக்குகிறது.


1) முஹம்மதுவின் மனைவிமார்களில் எல்லாம் தன்னை மட்டுமே அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்பாடு மூலகாக திருமணம் செய்தார் என்று ஜைனப் சொன்னது தவறானதா? ஆயிஷாவை கூட முஹம்மது திருமணம் செய்யும் படி அல்லாஹ் கனவு மூலமாக தெரிவித்துள்ளார் என்பதை ஹதீஸ்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறதே.


அல்லது


2) தான் ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா?


அல்லது


3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளவேண்டி, அதை நியாயப்படுத்த குர்ஆனிலேயே ஒரு வசனத்தை சொந்தமாக புகுத்திவிட்டாரா?


அல்லது


4) ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தாரா?


குர்ஆனும் ஹதீஸ்களும் இறைத்தூதர்களுக்கு கனவு என்பது வெளிப்பாடு வரும் விதங்களில் ஒரு வகை என்று அங்கீகரிப்பதினால், இஸ்லாமியர்கள் "ஆயிஷாவின் திருமணம்" இறைவெளிப்பாட்டினால் நடைப்பெறவில்லை என்று சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆக, நாம் மேலே சொன்ன நான்கு தெரிவுகளில் ஒன்றை கட்டாயமாக தெரிந்தெடுக்கவேண்டிய நிலையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவைகளில் எந்த ஒரு தெரிவை அவர்கள் எடுத்தாலும் சரி, இவ்விவரங்களில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும்.


மூலம்: Muhammad's 'divinely appointed' marriage(s):Zaynab's and Aisha's contradictory accounts