அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 12, 2009

இந்தியருக்கும் ஈழதமிழருக்கும் நல் அரசாக அமையட்டும் புதிய அரசு

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கட்டும். ஏனோ தனோ என்று இருந்துவிடாமல் பொருப்பை உணர்ந்தவர்களாக நமது வாக்குரிமையை நேரமே சென்று வாக்களிப்போம். நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்ப‌டட்டும். ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ள் தீட்டுப‌வ‌ர்க‌ள் ( நாட்டுக்காக‌) நாடாள‌ம‌ன்ற‌த்துக்கு வ‌ர‌ட்டும். ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வு இல்லாம‌ல் அமைதியாக‌ ந‌ட‌க்க‌ட்டும் ந‌ம‌து பாராள‌ம‌ன்ற‌ம். நாள்தோறும் செத்துகொண்டிருக்கும் ந‌ம் அண்டை நாட்டில் வாழும் த‌மிழ‌ர்க‌ள் வாழ்வு ம‌ல‌ர‌ உரிமைக‌ள் காக்க‌ப்ப‌ட‌ எல்லா உத‌விக‌ளும் கிடைக்க‌ செய்வ‌தே புதிய‌தாக‌ அமையும் அர‌சின் த‌லையாய‌ ப‌ணியாக‌ அமைய‌ட்டும். வெறும் வெட்டி பேச்சு பேசி கால‌த்தை க‌ட‌த்துவ‌தும் த‌ந்தி அனுப்பி த‌பால் துறைக்குக்கு ம‌ட்டும் இலாப‌த்தை த‌ந்த‌தும் உண்ணாவிர‌த‌ம், ப‌ந்த் பொன்ற‌வை ந‌ட‌த்தி ந‌ம் ம‌க்க‌ளுக்கும் இன்ன‌ல் த‌ரும் அர‌சாக‌ அமையால் உறுதியான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் அர‌சாக‌ அமையா வாழ்த்துகிறோம் அதுவே என‌து இறைவேண்ட‌லாக‌வும் இருக்கிற‌து..

0 comments: