அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 31, 2009

முத்துகுமாரை புறக்கணிக்கும் தமிழக பத்திரிக்கைகளும் தமிழக தொலைகாட்சிகளும்

நேற்று ஏதோ தெரியாமல் தினகரனில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு விட்டார்கள். அதன்பின் தான் தெரிந்தது அவரின் கடித்தத்தில் தமிழக அரசியல் தலைவர்களை ஒரு வாங்கு வாங்கியிருந்தார். இதனால் அநேகரின் டவுசர் கழண்டுவிட்டது. அதன் எதிரொலியாக நேற்றும் இன்றும் தினகரன், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முத்துகுமாரின் செய்தியை இருட்டடிப்பு செய்து வருகிறது. மேலும் சன் செய்தியிலும் கலைஞர் செய்தியிலும் ஜெயா செய்தியிலும் முத்துகுமாரின் செய்தியை புறக்கணித்துவருகிறார்கள்.
ஆனாலும் முத்துகுமாருக்கு ஆதரவு பெருகிவருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது என நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

0 comments: