அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 27, 2009

இலங்கை இராணுவத்தின் கோழை தாக்குதல்

எத்தனை இரத்தங்கள் சிந்தப்பட்டாச்சு ஆனா இன்னும் நிம்மதி மூச்சு எங்க தமிழ் மக்களுக்கு இல்லையே பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை தட்டி கேக்க, எதிராக குரல் கொடுக்க உலகமே முன்வரும்போது இந்த தமிழனின் உயிரை பறிக்கும் இலங்கை இராணுவத்தின் கொடுமையை தட்டிகேட்க ஒரு நாதியும் இல்லையே????
போதும் போதும் இத்துடன் நிறுத்திக்கொள் இலங்கை இராணுவமே இன்றே நீ மனந்திரும்பு இல்லையானால் அதுவே உனக்கு சாபாமாகவே மாறும். ஆம் அப்பாவி தமிழனின் இரத்தம் நிச்சயமாய் இறைவனிடம் முறையிடும். இறைவன் சும்மா இருப்பாரா?? வேண்டாம் வேண்டாம் விட்டுவிடு வீணாக நீ சாபத்தை சுமப்பானேன்???


**********************************************

4 comments:

Anonymous said...

christhunesan,
புலிகளை மனித தன்மையுடன் நடக்கும்படி கேளுங்க எல்லாம் சுபமாக முடியும்.

christhunesan said...

நன்றி சகோதரர் புலிகள் மனித தன்மையுடன் நடக்கிறார்களோ என்னவோ ஆனா இலங்கை இராணுவம் கொஞ்சம்கூட மனித தன்மையுடன் தமிழர்களிடம் நடப்பது மாதிரி தெரியவில்லை

Anonymous said...

பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் சிவிலியன்கள் மத்தியிலிருந்து இராணுவத்தின் மீது புலிகள் ஆட்லறி தாக்குதல்கள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படியான செயல்கள் சிவிலியன்களின் மரணத்தை மேலும் மேலும் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://thesamnet.co.uk/?p=6839

christhunesan said...

இலங்கையில் இராணுவத்தின் நடவடிக்கையால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து ஐ நா சபையே தன் கண்டனத்தை தெரிவித்துள்ளதே சகோதரரே..

1. http://nakkheeran.in/users/frmNews.aspx?N=1919


2. http://www.thinakkural.com/news%5C2008%5C9%5C26%5Cimportantnews_page58884.htm