அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 25, 2008

பெருமையின் முடிவு


பெருமையின் முடிவு தோல்வி....

ஸ்பானிய தேசத்து அரசன் பிரான்ஸ் தேசத்தை ஜெயிக்க புறப்பட்டான்.பத்திரிகை நிருபர்களை வரவழைத்தான்.

"பிரான்சு தேசத்தின்மீது படையெடுக்கப் போகிறோம்;நான் நிச்சயம் அதை ஜெயிப்பேன். யுத்த செய்திகளை வரிசைக் கிரமமாய் எழுதும்படி போதுமான கடிதாசிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பெருமையுடன் கூறினான்.

"என்னை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் ஒருவருமேயில்லை" என கர்வத்தோடு மேன்மை பாராட்டினான்.

சேனைகளைத் திரட்டிக்கொண்டு போனபோது வழியில் கொள்ளைநோய் வந்து சேனையில் ஏராளமானோர் மாண்டனர்.எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!

அகந்தையின் முடிவு அழிவு.

-----------------------------------------------------------------------------------
பட்டம் பெற்ற பாதிரியார் ஒருவர் முதல் தடவையாகப் பிரசங்க மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யப் போகிறார். பெருமையோடும், கர்வத்தோடும் பிரசங்க மேடைமீது ஏறினார்.

பிரசங்க வாக்கியம் ஞாபகத்திற்கு வரவில்லை. பிரசங்கக் குறிப்பை அங்கி அறையில் மறதியாக வைத்துவிட்டார். திண்டாடி ஏதொ சொல்லிவிட்டுப் பத்து நிமிடத்தில் தலை கவிழ்ந்து தாழ்மையுடன் இறங்கினார்.

ஆலயத்திலிருந்த பெரியவர் ஒருவர் வந்து, "சகோதரரே, நீர் இறங்கும்போது என்ன நிலைமையிலிருந்தீரோ, அதே நிலையில் நீர் ஏறிப்போயிருந்தால் சந்தோசத்துடன் இறங்கியிருப்பீர்"என்றார்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.


-------------------------------------------------------------------------------------

நூற்று முப்பது ஸ்பெயின் போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்கு விரொதமாய் படை எடுத்துச் சென்றன. இங்கிலாந்தின் கப்பல்கள் எண்பது தான். அவைகளில் யுத்தத்திற்குப் பயன்படக்கூடியது முப்பதுதான். ஸ்பெயின் கப்பல்களை நிலவு போன்று

வளைவாக விட்டுக்கொண்டு இங்கிலாந்துக் கப்பல்களை சுற்றிவளைத்தனர்.

ஆங்கில நாட்டுக் கப்பல்கள் பின்வாங்கி ஓடின. ஸ்பெயின் கப்பல்கள் மிகுந்த அகந்தையோடு ஆங்கிலக் கப்பல்களைத் துரத்திச் சென்றன.

ஸ்காட்லாந்தின் பக்கம் குன்றுகளடர்ந்த தீவுகள் பல இருந்தன. அக்குன்றுகளில் ஸ்பெயின் கப்பல்கள் மோதி உடைந்தன. ஐம்பத்து நான்கு சேதப்பட்ட கப்பல்கள்தான் ஸ்பெயினுக்குத் திரும்பின.

வீண் டம்பம் கொண்ட ஸ்பெயின் வீரர்கள் வெட்கி நாணினார்கள்.

எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!
நெஞ்சித்திமிர் என்றும் சஞ்சலமே
!

-------------------------------------------------------------------------------------

நீதிமொழிகள் 8:13.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

I பேதுரு 5:5
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

source : http://www.thewayofsalvation.org/2008/01/blog-post.html

0 comments: