அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 1, 2009

"பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.1


கிறிஸ்தவன் பார்வையின்:

"பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.1


முன்னுரை:



கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை இரண்டு பதில்கள் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கவும்: பாகம் 1 மற்றும் பாகம் 2.


இப்போது இவர்களின் மூன்றாம் பாகத்திற்கான பதிலை பார்க்கலாம். முதலில், கிறிஸ்தவம் பார்வை தளத்தின் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.


அபூ அப்திர்ரஹ்மான்


பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)


"நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ? பைபிளின் படி பல கடவுள்களை வணங்குபவர் கொலை செய்யப்படவேண்டும்


அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், "பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.


நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் - 17:2-5)


இஸ்லாம் வாளால் நிர்பந்தத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று உண்மைக்குப் புறம்பாக கூப்பாடு போடும் கிறிஸ்தவர்கள், மேற்கண்ட பைபிளின் கட்டளை குறித்து என்ன கூறப் போகிறார்கள்? அது பழைய ஏற்பாடு, அது செல்லாது என்று கூறினால் பழைய ஏற்பாட்டை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? அதையும் சேர்த்துத் தானே பரிசுத்த வேதாகமம் என்று கூறுகின்றனர்? ஒரு வாதத்துக்காக பழைய ஏற்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று கூறினால், "நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்" என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்? ….




Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/3.html


இக்கட்டுரையில் அவர், முதலில் பழைய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை குறிப்பிட்டும், பிறகு புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இந்த பதிலில், நாம் பழைய ஏற்பாட்டின் வசனம் பற்றிய அவரது விமர்சனத்தை அலசுவோம், அடுத்த கட்டுரையில், புதிய ஏற்பாட்டின் வசனம் பற்றி காண்போம்.


பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில வசனங்களை எடுத்துக்கொண்டு, தலையும் புரியாமல், காலும் புரியாமல் விரிவுரை கொடுத்துள்ளார், அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள்.


அவர் வாதத்தில் பொதிந்துள்ள கேள்விகள்


1) பழைய ஏற்பாட்டிலிருந்து சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இதைப் பற்றி ஏன் கிறிஸ்தவர்கள் மூச்சு விடுவதில்லை? என்று கேட்கிறார்.


2) "அக்கட்டளைகள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது, அவைகள் சரித்திரம்" என்று கிறிஸ்தவர்கள் கூறினால்? பின் ஏன் அதனை இன்னும் படிக்கிறீர்கள்? அந்த பழைய ஏற்பாட்டையும் சேர்த்துத் தானே நீங்கள் "வேதம்" என்று கூறுகிறீர்கள்? என்று கேட்கிறார்? "பின்பற்றாத கட்டளைகளை" ஏன் உங்கள் வேதத்தில் வைத்துள்ளீர்கள் என்று கேட்கிறார்.

3) இவரது அறியாமையின் உச்சகட்டம், புதிய ஏற்பாட்டிலிருந்தும் அவர் பயங்கரவாதம் கட்டளைகளை கண்டுபிடித்து விட்டது தான்! இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.


சுருக்கமாக சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டையும், சரித்திரத்தையும், இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளைகளையும் இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தில் வைத்துள்ளார்கள்? என்று கேட்கிறார்.


குர்‍ஆனை நம்பும் முஸ்லீம்கள், ஒவ்வொரு முறை பைபிளைப் பற்றி அறியாமையில் விமர்சிக்கும் போதெல்லாம், பாவம், குர்‍ஆனினால் அவர்கள் அதிக பிரச்சனைக்குள்ளாகிவிடுகிறார்கள், இதற்கு ஒரு சான்று தான் இந்த கட்டுரையும்.


அபூ அப்திர்ரஹ்மான்


அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், "பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.


இவர் சொல்வதை சரியாக படித்துப்பாருங்கள்,


"பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை".


பல தெய்வ வழிப்பாடு செய்யும் அனைவரையும் கொல்லவேண்டுமென்றா பழைய ஏற்பாடு சொல்கிறது? உங்கள் முஹம்மது சும்மா இருந்த பக்கத்து நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதி "இஸ்லாமை ஏற்றுக்கொள் இல்லையானால், கொல்லப்படுவாய்" என்று சொன்னது போலவா நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் உள்ளது?


நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை மறுபடியும் அப்படியே தருகிறேன்:


நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் - 17:2-5)


உலகத்தில் மற்ற நாடுகளில் இருக்கும் பல தெய்வ வழி பாடு செய்யும் நபர்களை கொல்லச் சொல்கிறதா இந்த வசனம்? அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே கொஞ்சம் நிதானம் இழக்காமல் படித்துப்பாருங்கள்.


நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் கீழ் கண்ட‌ இவ்வார்த்தைகள் உள்ளதா? கொஞ்சம் பார்த்துச் சொல்கிறீர்களா?


"அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்"


அந்த அருவருப்பு எங்கு நடந்தால், இந்த தண்டனை என்று இவ்வசனம் சொல்கிறது?


"இஸ்ரவேலில் நடந்தால் இஸ்ரவேல் மக்கள் இப்படி செய்தால்", அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமென்று தேவன் சொல்லியுள்ளார். இந்த கட்டளை மற்ற உலக நாடுகளுக்காக தரப்படவில்லை. ஆனால், நீங்கள் ஏன் அதனை அப்படியே "எல்லாருக்கும்" என்று பொதுப்படையாக சொல்லி இப்படி திருத்திச் சொல்கிறீர்கள்? இங்கு வசனத்தின் பொருளை மாற்றிச் சொல்லி, உலக மக்களை ஏமாற்றப் பார்ப்பது அபூ அப்திர்ரஹ்மான் அவர்களா? அல்லது கிறிஸ்தவர்களா?


ஆக, அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே, உங்கள் முஹம்மது செய்தது போல, பல நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதி, "அஸ்லிம் தஸ்லம்" என்றுச் சொல்லவில்லை, மற்றவர்களை பயமுறுத்தி, "வன்முறையை" பயன்படுத்தி தன் மார்க்கத்தை பரப்பினாரே முஹம்மது அது போல நடக்கவில்லை. [முஹம்மதுவின் வன்முறை கடிதங்கள் பற்றிய தமிழ் கட்டுரைகளின் தொடுப்புக்கள் இக்கட்டுரையில் கடைசியில் தரப்பட்டுள்ளது, படித்துப்பார்த்து, யார் தன் மார்க்கத்தை பரப்ப வன்முறையை தன் ஆயுதமாக பயன்படுத்தினார் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்].


அப்படியானால், இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லச் சொல்லும் இஸ்லாம் சட்டம் போலத்தானே இந்த பழைய ஏற்பாட்டின் சட்டமும் என்ற கேள்வி எழும்பும்:


மேலே காட்டப்பட்ட வசனம், இஸ்ரவேல் அல்லாத மக்களை கொல்லச் சொல்லவில்லை என்பதை அறிந்துக்கொண்டோம், ஆனால், தன் தேவனை விட்டு வேறு தெய்வங்களை வணங்குபவர்களை கொல்லச் சொல்வது, இஸ்லாமில் உள்ள ஷரியா சட்டத்திற்கு சமம் இல்லையா என்று சிலர் கேட்கலாம். இது இப்படி இருக்கும் போது, "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை ஷரியா சட்டம் கொல்வதை மட்டும்" ஏன் பெரிது படுத்தி காட்டுகிறீர்கள் என்று கேட்கலாம்.


மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமின் ஷரியா சட்டமும் (வெளியேறுபவனை கொல்லச் சொல்லும் சட்டமும்), இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரமும் ஒன்றாகத்தெரியும், ஆனால், அதன் பின்னணியை கவனித்தல் சில உண்மைகள் புரியும்.

  • எகிப்திலே அடிமைகளாக இருந்தவர்களை, தன் வல்லமையை காண்பித்து, அற்புதங்களோடும், அடையாளங்களோடும் அவர்களை கொண்டு வந்தார் தேவன்.
  • இது மட்டுமல்ல, அக்காலத்தில் இஸ்ரவேலரை சுற்றியிருந்த பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள், இன்றுள்ள பல தெய்வ வழிபாடு செய்யும் மக்களைப்போல அல்ல. அக்காலத்தில் அவர்களின் வழிபாடுகளில், "விபச்சாரம்" ஒருபாகமாக இருந்தது. அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பலியிட்டு வந்தார்கள். இதைப் பற்றிய எச்சரிப்பு வசனங்களை காணவும்:

உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. (உபாகமம் 12:31)


நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். (லேவி 18:21)


கர்த்தர் மோசேயை நோக்கி: பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். (லேவி 20:1-2)


தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோடும் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. (எரேமியா 7:31)


அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும், தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. (எரேமியா 19:4-5)
  • இதனால் தான் இப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடக்கக்கூடாது என்று தேவன் விரும்பினார், அந்த மக்களைப் போல நடந்துக்கொள்ளவேண்டாம் என்றார், அவர்களின் பழக்கங்களை பின் பற்றவேண்டாமென்றார்.
  • இந்த கட்டளை இஸ்ரவேல் சமுதாயத்திற்கு தரப்பட்ட கட்டளை. இது புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது.


ஏன் பொருந்தாது? என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள், இப்படிப்பட்டவர்கள் கீழ்கண்ட வசனங்களை படிக்கவும்.


உதாரணத்திற்கு கீழ்கண்ட கட்டளைகளை கவனிக்கவும், இக்கட்டளைகள் இஸ்ரவேல் மக்களுக்காகவா, கிறிஸ்தவர்களுக்காகவா?


அ) பழைய ஏற்பாட்டு கட்டளை: பலிபீடத்தின் அக்கினி எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும்:


லேவி 6:12-13 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.


ஆ) பழைய ஏற்பாட்டு கட்டளை: ஆசாரியர்களின் விசேஷித்த உடைகள்: யாத் 28:2-43


யாத் 28:4-5 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. …


மோசேயின் மூலமாக நூற்றுக்கணக்கான கட்டளைகளை தேவன் கொடுத்தார், நாட்டை ஆளும் கட்டளைகள், தேவனுடையை ஆலயம் சம்மந்தப்பட்ட கட்டளைகள், தேவனுடைய ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் பற்றிய கட்டளைகள் என்று அனேக கட்டளைகளைக் கொடுத்தார்.


மேலே காட்டப்பட்ட கட்டளைகள், இஸ்ரவேல் மக்களுக்கு முக்கியமாக ஆசாரிய ஊழியம் செய்யும் நபர்களுக்கு கொடுக்கப்பட்டது, அதாவது தேவனுடைய பலிபீடத்தில் அக்கினி எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும், ஆசாரியர்களுக்கென்று விசேஷித்த உடைகளை தயார்படுத்தி உடுத்தவேண்டும் என்ற கட்டளைகள், இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் அல்ல, முக்கியமாக தேவனின் ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமே. இன்று உலகத்தில் எந்த கிறிஸ்தவ சபை இப்படி கட்டைகளை போட்டு காலை முதல் மாலை வரை பலிபீடத்தில் கட்டைகளை எரித்துக்கொண்டு இருக்கிறார்கள்? இயேசுவின் சீடர்கள் இப்படி செய்தார்களா? இல்லையே? ஏன் செய்யவில்லை, காரணம், இது யூத ஆசாரியர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், கிறிஸ்தவர்களுக்கு அல்ல.


கிறிஸ்தவ ஊழியர்கள் ஏன் இப்படி பலிபீடத்தின் அக்கினி அவியாமல் பார்த்துக்கொள்வதில்லை, ஏன் கிறிஸ்தவ பாஸ்டர்கள், தேவன் சொல்லியபடி, உடைகளை அணிவதில்லை என்று எந்த ஒரு இஸ்லாமியரும் கேட்பதில்லை. ஆனால், கொலை சம்மந்தப்பட்ட வசனத்தை மட்டும் குறிப்பிட்டு கேள்வி கேட்பார்கள், ஏனென்றால், இஸ்லாமுக்கு இருக்கும் பிரச்சனை எதுவோ, அதில் தான் அவர்கள் கண்ணோட்டம் இருக்கும். இஸ்லாமின் வன்முறையை நியாயப்படுத்த, முஹம்மதுவின் வன்முறையை நியாயப்படுத்த இப்படி செய்வார்கள்.


எனவே, அருமை இஸ்லாமியர்களே, கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், பழைய ஏற்பாட்டை ஏன் படிக்கிறோம், அவைகளில் எவைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.


இக்கட்டுரையின் தலைப்பிற்கு வருகிறேன், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல தெய்வ வழிபாடுகளை செய்யும் மக்களிடம் இருந்த பழக்கவழக்கங்கள் போல இப்போது உள்ளதா? இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியெறினால் அவன் தன் பிள்ளைகளை தெய்வங்களுக்கு பலியிடுகின்றானா? இன்னும் சொல்லப்போனால், அனேக இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாமை விட்டு வெளியேறி நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள். நல்ல மனிதர்கள் கூட இஸ்லாமுக்கு மாறும் போது, சிலர் தீவிரவாதிகளாக மாறி மனிதர்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட பலபேர், இஸ்லாமுக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (படிக்கவும்: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நான்கு பேர் சிறைச்சாலையில் இஸ்லாமுக்கு மாறி, தீவிரவாதிகளாக மாறியிருக்கிறார்கள், சொந்த நாட்டையே தாக்குகிறார்கள். )


ஆக, அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே, இஸ்ரவேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்ட சட்டத்தை கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள், மற்றும் இஸ்லாமின் வன்முறையை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இந்த யூக்தி உங்களுக்கு வேலை செய்யாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அப்படியானால், ஏன் பின்பற்றாத விவரங்களை, சரித்திரங்களை வைத்துக்கொண்டு, இன்னும் அதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? என்ற கேள்வி அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கேட்பார்கள்.


சரித்திரம் ஏன் படிக்கவேண்டும் சொல்லுங்கள்?


சரித்திரம் எழுதப்படுவது, அதில் உள்ள‌ ஒவ்வொரு வரியையும் பின்பற்றுவதற்காகவா? இல்லை, இல்லவே இல்லை. சரித்திரம் படிப்பது, நம் முன்னோர்களின், அரசர்களின், தலைவர்களின் நல்ல மற்றும் தீய குணங்களை தெரிந்துக்கொண்டு, நல்லவற்றை பின்பற்றவும், தீயவற்றை பின்பற்றாமல் இருக்கவுமேயாகும்.


1) ஆதாமும் ஏவாளும் இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல், கனியை புசித்தார்கள் என்று கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் படிக்கிறோமே எதற்காக? நாமும் அப்படியே இறைவனுக்கு கீழ்படியாமல் நடக்கவேண்டும் என்பதற்காகவா? இல்லை, நாமும் அவர்களை போல செய்யாமல் இருப்பதற்கு.


2) பார்வோன் இஸ்ரவேல் மக்களை அனுப்பாமல் இருந்ததால், இறைவன் பல அற்புதங்களின் மூலமாக, தன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்தார் என்று நாம் படிப்பது, நாமும் பார்வோனை போல கீழ்படியாமல் இருக்கவா? "இல்லை", நாமும் பார்வோனைப்போல செய்யாமல் இருப்பதற்காக.


3) உலகத்தில் மிகவும் கொடுமையான அரசர்களின், தலைவர்களின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக பதித்து, கடைகளில் விற்பது, அதனை மக்கள் படித்து அவர்களைப் போல மக்களும் கொடுமைகளை செய்யவேண்டும் என்பதற்காகவா? இல்லை, அவர்களைப் போல செய்யாமல் நாம் எச்சரிப்பை அடைவதற்காக.


இதனையே பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது:


வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,


அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16-17)


வேதவாக்கியங்கள் இருப்பது,


1) உபதேசம் செய்வதற்கும்,


2) தவறான வழியில் நடக்கும் போது, அவனுக்கு சரித்திரத்தைச் சொல்லி, எடுத்துக்காட்டுச் சொல்லி, கடிந்துக்கொள்வதற்கும்,


3) திருந்தாதவர்களை சீர்திருத்துவதற்கும்,


4) நீதியாகவும், நேர்மையாகவும் நடக்க அறிவுரை சொல்வதற்குமேயாகும்.


எனவே, அருமை இஸ்லாமிய நண்பரே, பழைய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் படிப்பது, தங்களை சீர்திருத்திக்கொள்ளவும், நீதியை கற்றுக்கொள்ளவும் படிப்பினை பெறுவதற்காகவே தவிர, மற்றவர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து கட்டளைகளையும், தனக்கே சொல்லப்பட்டது போல நினைத்துக்கொண்டு வாழ்வதற்காக அல்ல.


நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், வேதம் என்றுச் சொன்னால், அதில் பின்பற்றப்படாத கட்டளைகள் இருக்கக்கூடாது. மற்றவர்களுக்குச் சொன்ன கட்டளைகள், மற்றவர்களின் சரித்திரம் இருக்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் பிடிவாதம் பிடித்தால், கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்.


குர்‍ஆனும் பழைய ஏற்பாட்டு சரித்திர நிகழ்வுகளும்:


பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை ஏன் இன்னும் பைபிளில் வைத்து படிக்கிறீர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக தங்களின் விரல்களை நீட்டும் இஸ்லாமியர்கள், கொஞ்சம் தங்கள் குர்‍ஆனை திருப்பிப்பார்த்தால் நலமாக இருக்கும்.


குர்‍ஆனில் ஆதாமின் சரித்திரம் உண்டு, அவரின் சந்ததிகள் பற்றிய சரித்திரம் உண்டு. மோசேயின் சரித்திரம் உண்டு, அவரிடம் அல்லாஹ் பேசிய வசனங்கள் உண்டு. மோசே இஸ்ரவேல் மக்களிடம் பேசிய வசனங்கள் உண்டு. இன்னும் அனேக பழைய ஏற்பாட்டு உரையாடல்கள், நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் உண்டு. எனவே, பைபிளில் பழைய ஏற்பாட்டு சரித்திரம் இருக்கக்கூடாது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் தங்கள் குர்‍ஆனில் உள்ள பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை நீக்க தயாராக இருக்கிறீர்களா?


ஏனென்றால்,


அல்லாஹ் ஆதாமிடம் பேசிய வசனங்கள் உங்களுக்கு எதற்கு?


அல்லாஹ் மோசேயிடம் பேசிய வசனங்களை இன்றுள்ள இஸ்லாமியர்கள் ஏன் படிக்கவேண்டும்?


மோசே இஸ்ரவேல் மக்களிடம் பேசிய சரித்திரம் உங்களுக்கு எதற்கு?


இயேசுவின் நிகழ்ச்சியும், மரியாளின் நிகழ்ச்சியும் சரித்திரம் தானே! அது எதற்கு இப்போது குர்‍ஆனில் இருக்கவேண்டும்?


முஹம்மதுவிடம், சரித்திர நிகழ்வுகளை பயன்படுத்தி, அவருக்குச் சொல்லி, ஏன் அல்லாஹ் மக்களை எச்சரிக்கவேண்டும்? இவைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது என்றுச் சொல்லவேண்டும்?


பைபிளில் சரித்திரம் வேண்டாம் என்று அறிவுரைச் சொல்லும் அறிஞர்கள் தங்கள் குர்‍ஆனில் சரித்திரத்தை நீக்குவார்களா? இஸ்லாமியர்கள் ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, மற்றும் இயேசுவைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சிகள் பற்றி வசனங்கள் குர்‍ஆனில் வரும் போது அவைகளை படிக்காமல், அடுத்த பக்கம் திருப்பிவிடுவீர்களா?


இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்கள்:


சரித்திர நிகழ்ச்சியை விடுங்கள், இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்கள் ஏன் இன்னும் குர்‍ஆனில் இருக்கிறது?


பல குர்‍ஆன் வசனங்கள் இரத்து செய்யப்பட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.


காலத்திற்கு ஏற்ப சில சட்டங்களை அல்லாஹ் மாற்றுவார், இதனை இரத்து செய்தல் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள். அப்படியானால், முதன் முதலில் சொல்லப்பட்ட வசனங்களுக்கு பதிலாக புதிய வசனங்கள் வந்துவிட்டதால், பழைய வசனங்களை, பின் பற்றத் தேவையில்லாத வசனங்களை இன்னும் ஏன் இஸ்லாமியர்கள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.


முக்கியமாக, அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே, குர்‍ஆனை நீங்கள் படிக்கும் போது, இரத்து செய்யப்பட்ட வசனங்கள் வருமிடத்தில், அவைகளை விட்டு வேறு வசனங்களை படிப்பீர்களா? அல்லது அவைகளையும் படிப்பீர்களா?


நான் படிப்பேன் என்றுச் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும், அப்படியானால், பின்பற்ற வேண்டாத வசனங்களை ஏன் படிக்கிறீர்கள்? ஏன் இன்னும் குர்‍ஆனில் அவ்வசனங்களை வைத்திருக்கிறீர்கள்?


ஏன் இன்னும் பழைய ஏற்பாட்டை படிக்கிறீர்கள் என்று கிறிஸ்தவர்களை கேட்கும் இஸலாமியர்களே, ஏன் இன்னும் பழைய ஏற்பாட்டு சரித்திர நிகழ்ச்சிகளை நீங்கள் குர்‍ஆனில் வைத்திருக்கிறீர்கள்? அவைகளைப் பற்றி ஏன் பிரசங்கங்கள் செய்கிறீர்கள்? 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த‌ சரித்திரம் உங்களுக்கு எதற்கு?


அபூ அப்திர ரஹ்மான் அவர்களிடம் கேட்கிறேன்: பழைய ஏற்பாடு முதற்கொண்டு, இயேசு கிறிஸ்து வரை அனேக நபிகளின் பெயர்கள், நிகழ்வுகள், உரையாடல்கள் உங்கள் குர்‍ஆனில் உண்டு. அவைகள் சரித்திரங்கள் ஆகும், அவைகளை எப்போது நீக்கப்போகிறீர்கள்? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், எங்கள் வேதத்தில் எது இருக்கக்கூடாது என்றுச் சொல்கிறீர்களோ, அதே விவரம் நீங்கள் வேதமாக கருதும் புத்தகத்தில் மட்டும் ஏன் உள்ளது?


பழைய ஏற்பாட்டு அனைத்து விஷயங்களையும் குர்‍ஆனிலிருந்து நீக்கிவிட்டால், எவ்வளவு பக்கங்கள் வசனங்கள், அதிகாரங்கள் மிஞ்சும்? "ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, ... மரியாள், யோவான் மற்றும் இயேசு" போன்ற பெயர்கள் வரும் அனைத்து வசனங்களையும் நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்? அவைகள் பழைய கதைகள் ஆயிற்றே உங்களுக்குத் தேவையில்லை அல்லவா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?


கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், எங்களுக்கு பழைய ஏற்பாட்டு நபர்களின் வாழ்க்கை வரலாறு தேவை, அவைகள் எங்களுக்கு எச்சரிக்கையாகவும், சில நேரங்களில் சவாலாகவும் இருக்கின்றன. மற்றும் பழைய ஏற்பாடு படிப்பதினால், எங்கள் தேவன் எப்படிப்பட்டவர், அவரின் வல்லமை என்ன? அவர் எப்போது நம்மை தண்டிப்பார், எப்போது உதவி செய்வார், அவருக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ்ந்தவர்களின் முடிவு என்ன? துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்தவர்களின் முடிவு என்ன என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டு, எங்களை நாங்கள் திருத்திக்கொள்கிறோம்.


எனவே, எங்களுக்கு பழைய ஏற்பாடு தேவை, அதே நேரத்தில் இயேசுவின் போதனையையும் நாங்கள் புதிய ஏற்பாட்டில் கண்டு மகிழ்கிறோம்.


ஆனால், உங்களின் நிலை என்ன? உங்களிடம் இருக்கும் சரித்திரங்கள் உங்களுக்கு எதற்கு உதவுகின்றன? நாங்கள் சொல்லும் இதே காரணத்தை நீங்களும் சொல்லப்போகிறீர்களா?


அதாவது, குர்‍ஆனில் உள்ள பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை, உரையாடல்களை படித்து, நாங்கள் எச்சரிக்கை அடைகிறோம், படிப்பினை பெறுகிறோம்., சில நேரங்களில் உற்சாகமடைகிறோம் என்றுச் சொல்லப்போகிறீர்களா? இப்படி நீங்கள் சொல்வதாக இருந்தால், கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தை படித்து ஏன் படிப்பினை பெறக்கூடாது?


முடிவுரை:அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலில் பழைய ஏற்பாட்டில் என்ன உள்ளது? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்தும் கட்டளைகள் என்ன? போன்றவற்றை தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். மோசேயின் மூலமாக தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த நூற்றுக்கணக்கான கட்டளைகளில் எந்த கட்டளைகள் கிறிஸ்தவர்கள் பின் பற்றவேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். முஹம்மது யூதர்களை வெறுத்தாரா? நாமும் வெறுப்போம், அவர் இப்படி செய்தாரா நாமும் இப்படி செய்வோம் என்று இஸ்லாமியர்களில் சிலர் ந‌டந்துக்கொள்வது போல கண்மூடித்தனமாக கிறிஸ்தவர்கள் நடக்கமாட்டார்கள்.


இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, "நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும், இஸ்லாமையும் வன்முறையையும் உங்களால் பிரிக்கமுடியாது, உங்கள் நபியின் வாழ்க்கை வரலாறு நம்மிடம் இருக்கும் வரை, குர்‍ஆன் இருக்கும் வரை, ஹதீஸ்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்னும் நாணயத்தின் இன்னொரு பக்கத்தில் "வன்முறை" இருந்துக்கொண்டே இருக்கும்".


புதிய ஏற்பாட்டு வசனம் பற்றி அபூ அப்திர் ரஹ்மான் அவர்களின் வரிகளுக்கு அடுத்த கட்டுரையில் பதிலைத் தருகிறேன்.


முஹம்மதுவும் வன்முறையும்:


முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்


ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - அபுமுஹை கட்டுரைகளில்


Muhammad and his personal enemies


Muhammad's excessive cruelty


Torture in the Quran and early Islam - Where is Islamic justice and human rights?

Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/abunoora/cpaarvai_violence31

3 comments:

rooto said...

மதத்தை பற்றி கதைக்க ஆரம்பித்துவிட்டால் நீரும் பயங்கரவாதிதான். நீங்கள் எல்லாம் இலங்கையில் வந்திருந்து கதைத்துபாருங்களேன். மதம் சார்பாக, இனம் சார்பாக பெளத்தம் செய்யும் அக்கிரமங்கள் டெரியும். மதத்தால் என்னத்தை அடைந்துவிட்டீர்கள். எந்தமதமாக இருந்தாலும் அது கேவலமானதே. உங்கள் மதத்தில் தந்தை மகளுடன் புணர்ந்ததை அறியமாட்டீர்களா? அல்லது இந்துமத கடவுள்கள் கையில் ஆயுதம் வைத்திருப்பதை அறியமாட்டீர்களா? அல்லது புத்தர் பன்றி இறைச்சி திண்டதால்தான் இறந்தார் என்பதை அறிய மாட்டீர்களா>????

Anonymous said...

rooto தாங்கள் சோல்வதைவைத்து பார்த்தால் பைபிள் தந்தை மகளுடன் புணர்ந்ததை அதரித்து சோல்லபட்டுள்ளது போல் அல்லவா குறுகிரிர்கள். பைபிளில் அந்த சம்பவம் சோல்லபட்டுள்ளதே தவிர அதரிக்கவில்லை. பைபிளை வாசிக்காமல் ஏனோ தனோ என்று குராதிர்கள்.

christhunesan said...

நன்றி அனானி சகோதரரே